January 23, 2011

பஸ்கா தெரு பையன்கள்:போலந்து சினிமா



உலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சி யுகம் : 29. போலந்து சினிமா




போலந்தின் துவக்க கால இயக்குனர் அலெக்ஸாண்டர் கோர்டா 1952ல் பஸ்காதெருவிலிருந்து ஐந்து பையன்கள் என்ற பெயரில் இயக்கிய படம் போலந்து சினிமா வரலாற்றில் முக்கிய்மான இடத்தை பிடித்த திரைப்படம்.அதற்கு முன் வரை போலந்து இரண்டாம் உல்கப்போர் முடிவுறும் வரை ஹிட்லரிடம் மாட்டி சிக்கி சீரழிந்து சீரழிந்து உருக்குலைந்து போயிருந்தது. 1945க்கு பிறகுதான் மெல்ல தலையெடுத்த தேசம் சினிமாவை பற்றியும் கொஞ்சம் யோசிக்க துவங்கியது. அதற்காக லாட்ஸ் எனும் திரைப்பட கல்லூரியையும் துவக்கியது. துவக்கிய வேகத்தில் அதிலிருந்து மூன்று இயக்குனர்கள் வெளிப்பட்டனர். அவர்களூள் ஒருவர்தான் அலெக்ஸாண்டர் கோர்டா. கோர்டா எடுத்த பஸ்கா தெருவிலிருந்து ஐந்து பையன்களுக்கும் உல்க சினிமாவுக்கும் பெரிய தொடர்பில்லை ஆனால் அப்ப்டத்தில் உதவி இயக்குனராக ஒருவர் பஸ்காதெருவின் ஆறாவது பையனாக ஓடி ஆடி வேலை செய்துகொண்டிருந்தார். அவர்தான் போலந்து என்ற தேசத்தின் பெயரை உலக சினிமா தளத்தில் உயரபிடித்து எழுந்தவர். அவர் ஆந்த்ரே வாஜ்டா

ஆந்த்ரே வாஜ்டா
Andrzej Wajda


சினிமாவின் இலக்கணம் அதன் காட்சி மொழி.
கேமராவுக்கும் கத்திரிக்குமிடையிலான இயக்குனரின் படைப்பாக்கத்தில் அதன் புரிதலில்.இரு தொழில் நுட்பங்களும் ஒன்றை ஒன்று புரிந்து கொண்டதலின் மீதான காதலில் எழுகிறது இந்த காட்சி மொழி.
இந்த காட்சி மொழியில் பாண்டித்யமும் செய் நேர்த்தியுமிக்க மகத்தான உலக இயக்குனர்களின் பட்டியலில் அகிராகுரசேவா , ஜான் போர்ட் ஆகிய மேதைக்ளின் வரிசையில் போலந்து இயக்குனர் ஆந்த்ரே வாஜ்டாவுக்கென ஒரு சிறப்பிடம் உண்டு.

பஸ்கா தெருவிலிருந்து ஐந்து பையன்கள் படத்துக்கு பிறகு தன் சினிமாவாழ்க்கையை துவக்கிய ஆந்த்ரே வாஜ்டாவின் முதல் படம் ஜெனரேஷன் A Generation 1954ல் வெளியானது. கம்யூனிஸ்ட் சித்தாந்தை அடிப்படையாக கொண்ட இப்படத்தில் நடித்த ஜிபுவுஸ்கிக்கு போலந்தில் மிகபெரிய ரசிகர் கூட்டம் உண்டானது. இதில் நடித்த இன்னொருநடிகர் போலந்து வெளிக்கொணர்ந்த மற்றொரு உல்கசினிமா இயக்குனர் ரோமன் பொலான்ஸ்கி. ஜெனரேஷனுக்கு பிறகு வாஜ்டா இயக்கத்தில் வெளியான Kanał (கனால் மற்றும் Ashes and Diamondsஆஷஸ் அண்ட் டைமண்ஸ் என வெளியான அடுத்தடுத்த படங்களும் கம்யூனிச கருத்தையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவை. இவற்றில் கனால் படம் அவருக்கு கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த படத்துக்கான தங்கப்பனை விருதை வாங்கிதந்தது. 1968ல் இவர் எடுத்த Every thing for sale எவ்ரிதிங் பார் சேல் எனும் ப்டப்பிடிபின் போது இவரது ஆஸ்தான நாயகனும் போலந்து சினிமாவின் உச்ச கலாச்சார பிம்பமுமாக விளங்கிய ஜ்ஜிபுவுஸ்கி ரயில் பயணத்தின் போது எதிர்பாரா விபத்தில் சிக்கி மரணம் அடைய படப்பிடிப்பு பாதியில் நின்று போனது. அடுத்து என்ன செய்வது என தெரியாத நிலை. தயாரிப்பு நிர்வகம் வேறு நஷ்டகணக்கை தாங்க முடியாமல் வாஜ்டாவை தொந்தரவு செய்ய துவங்க ..ஒரு நாள் மறுநாள் ஷூட்டிங் என சட்டென குழுவினருக்கு உத்தரவிட்டார்.. அனைவரும் புருவங்களை உயர்த்தினர். இவர் இனி யாரை வைத்து படமெடுக்க போகிறார் ஆச்சர்யத்துடன் பின் தொடர்ந்தனர். பிறகு தான் அவர்களுக்கு புரிந்தது. இப்போது கதையில் நாயகன் வாஜ்டா எனும் இயக்குனர். தன் புதிய படத்தில் நடித்த ஒரு பிரபலமான நடிகன் பாதியில் இறந்து போக அதிர்ச்சியில் உறைகிறார்.பின் அந்த இயக்குனர் அனுபவிக்கும் ப்ரச்னைகளூம் இது விடயமாக யார்யாரெல்லாம் பாதிக்கிறர்கள் ,சமூகம் இதனை எப்படியாக பார்க்கிறது என்பதே மீதிக்கதை. வாஜ்டாவின் இந்த அசாத்திய யோசனை மிகச்சிறந்த திரைக்கதையாக மாறி படத்தின் த்ரத்தை பெலினியின் 81/2 அளவுக்கு உயர்த்தியது. தொடர்ந்து வாஜ்டாவின் திரைப்படங்கள் உலகசினிமாவுக்கு கலைப்பொக்கிஷங்களாக அணீவ்குத்து நின்றன.

அவற்றுள் Man of Marble (1976) - மேன் ஆப் மார்பிள் மற்றூம் The Orchestra Conductor (1980) ஆர்கஸ்ட்ரா கண்டக்டர் போன்ற்வை வாஜ்டாவின் மேதமைக்கு சான்றுகள்,இவற்றுள் மேன் ஆப் மார்பிள் இக்காலத்தில் பயன்படுத்த்படும் பின் நவீனத்துவ கதையாடல்களுக்கு முன்மாதிரி..சிறந்த திரைக்கதை வடிவத்துக்கும் உத்திகளூக்கும் இப்ப்டம் ஒரு நல்லதொரு பயிற்சி பாடம். 1981ல் இவர் இயக்கிய மேன் ஆப் ஐயர்ன் Man of Iron
பாரீசின் கான் திரைப்ப்ட விழாவில் சிறந்த படத்துக்கான் பரிசை பறித்து சென்றது


வாஜ்டாவின் படங்களூள் நான்கு படங்கள் தொடர்ந்து சிறந்த வெளிநாட்டு ப்டங்களூக்கான ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டு வந்துள்ளன என்பது உலகின் இதர இயக்குனர்கல் எவருக்கும் இல்லாத சிறப்பு .

ரோமன் பொலான்ஸ்கி (18 August 1933 - )
(Rajmund Roman Thierry Polanski)


பல உலகசினிமாக்களை மிஞ்சும் திரைக்கதையை கொண்டது பொலன்ஸ்கியின் வாழ்க்கை.போலந்து பெயரை உலக அரங்கில் வாஜ்டாவுக்குபிறகு தோளில் தூக்கி சென்றவர் பொலன்ஸ்கி.ஹிட்லரது நாஜி ஆகரமிப்பில் தன் கண் முன்னே தாய் தந்தையை ராணூவத்தினர் வதை முகம்களுக்கு இழுத்து செல்வதை க்ண்டு அங்கிருந்துதப்பித்தார்.
..க்ராக்கோ ந்கர வீதிகளீல் பத்து வயதில் சுற்றிலும் குண்டு மழை பொழிய தனி ஆளாய் அனாதையாய் திரிந்து ..ஒரு விதவைபெண்ணீன் வீட்டில் தஞ்சமடைந்து பின் இரவில் அவளது பாலியல் துய்ப்பிற்கு ஆட்பட்டார். .பின் அங்கிருந்தும் தப்பித்து வெவ்வேறு இடங்களுக்கு அலைந்து இறுதியாக மாமாவீட்டில் தங்கி படித்துவந்தவர் பொலான்ஸ்கி .

பள்ளியில் தான் யூதன் என்று தெரிந்தால் அவமானப்படுத்துவோம் என தன் பெயருக்கு முன்னால் அவர் ரொமன் என்ற வார்த்தையையும் சேர்த்துக்கொண்டார்.பின் அதுவே அவருடைய முழுபெயருமாக மாறியது.
பிறகு பொருக்கு திரும்பி வந்த தந்தையுடன் இணைந்து மீன்உம் புதிய வாழ்க்கையை துவக்கிணர். திரைப்பட் கல்லூரியில் அறிமுகமான தனக்கு மூத்த மாணவரான ஆந்த்ரேஜ் வாஜ்டவுட்ன் இணைந்து கொண்டர். அவரது ஜெனரெஷன் படத்தில் இவருக்கு நடிகராக பரிமளிக்கவும் வாய்ப்புகள் கிடைத்தது. வாஜ்டா எனும் மிகசிறந்த குருவுடன் பணியாற்றிய பொலான்ஸ்கியின் முதல் படம் Knife in the Water நைஃப் இன் தி வாட்டர் 1962ல் வெளியாகியது. கடல் ஒரு படகு இவற்றூடன் ஒரு தம்பதி புதிதாக வரும் இளைஞன் .. என மூன்று பாத்திரங்களுடன் நகரும் திரைக்கதை மனிதர்களின் உள் மன அழுக்குகளை மவ்னமாக நமக்கு படம்பிடித்து காண்பித்த்படி இறுக்கமாக நகர்கிறது. படத்தின் த்லைப்பில் வரும் கத்தியை ஆண்குறியின் குறியீடாக பார்ப்பதாக விமர்சகர்கள் இப்ப்டத்தை உச்சி முகர்ந்தனர். விமர்சனங்கள் பொலான்ஸ்கியை உல்கசினிமா அரங்குக்கு முன் மொழிந்தது . பல திரைப்டவிழக்களில் பங்கேற்ற இத்திரைப்ப்டம் சிறந்த அந்நிய தேசத்து படபிரிவில் ஆஸ்கார் விருதுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டது. அதன் பிறகு இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டு அங்கு தொடர்ந்து மூன்று திரைப்படங்கள் இயக்கிய பொலான்ஸ்கி வெற்றீ இயக்குனராக பரிணமித்தார். அவரது படங்களீல் காண்பட்ட மிதமிஞ்சிய வன்முறை மற்றும் பாலியல் காட்சிகள் ஹாலிவுட்டுக்கு சிவப்புகம்பளம் விரித்து கொடுத்தது.ஆனால் அத்ற்குமுன் அவர் வழ்க்கை சில சிக்கல்களை எதிர்கொண்டது. அங்கு அவர் இயக்கிய Rosemary's Baby (1968) ரோஸமேரீஸ் பேபி எனும் படம் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் பரிசுக்கு அவரை பரிந்துரைத்தது.

1974ல் இவர் இயக்கிய Chinatown சைனா டவுன் இவருக்கு ஆஸ்கார் பரிசையும் பெற்றுதந்தது. 1979ல் வெளியான் டெஸ் Tess திரைப்படமும் இவருக்கு பல விருதுக்ளை பெற்று தந்து உயரத்துக்கு அழைத்து சென்றது அத்ன்பிறகு இவர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் அடுத்த இருபது வருடங்களுக்கு முழுவதுமாக முடக்கின.

புதிர்களும் மர்மமும் நிறந்த பொலன்ஸ்கியின் வாழ்க்கை பக்கங்களில் முதல் மனைவியாக வந்து சேர்ந்த்வர் பார்பரா .நடிகை.இரண்டொ வருடங்களில் இவரை விவாகரத்து செய்துவிட்டு லண்டனில் தன் படத்தில் நாயகியாக நடித்த ஷ்ரோன் டேட்டை மணந்தார்.
இக்காலத்தில் மிகவும் உலகம் முழ்க்க வலுத்து வந்த கட்டற்ற ஹிப்பி வாழ்க்கையில் வீழ்ந்தார். மது மாது கட்டற்ற முறைகளற்ற பாலுறவு ஆகியவற்றில் தன் மனைவியுடன் இணைந்தே ஈடுபட்டார்.வாழ்வின் மீதான வெறுப்புதான் என்னை இந்த உயரத்துக்கு அழைத்து சென்றது என வெளிப்படையாக கூறிய இவரது இந்த கேளிக்கை வாழ்வு மனைவியின் மர்மமான மரணத்தோடு ஒரு முடிவுக்கு வந்தது. பொலான்ஸ்கி படபிடிப்புக்கு சென்ற நாளில் பூட்டிய வீட்டில் அவரது மனைவி மற்றூம் தோழிகள் இருவர் மர்ம ஆசாமிகளால் கொலை செய்ய்ப்பட்ட சம்பவம் லண்டனை உலுக்கியது. பொலன்ஸ்கி கைது செய்யப்பட்டு சிறைக்கு தள்ளப்பட்டார்.விசாரணைக்கு பிறகு அக்கொலையை செய்தவன் பொலீசாரால் சிறைபிடிக்கப்பட்டு உண்மை விவரங்கள் வெளிவர பொலான்ஸ்கி வெளிவந்தார்.இக்கொலையை செய்தவன் மிகபெரிய ராக் இசைக்கலைஞன் . பல கிரிமினல் வழ்க்குகளூக்காக புகழ் பெற்றவன் என்ப்வை அக்காலகட்டத்தின் கலாச்சார குலைவுகளை நமக்கு உணர்த்த வல்லது

பின் ஹாலிவுட்டுக்கு சென்று பெரு வெற்றி பெற்ற இயக்குனராக பவனி வந்தபின்னும் துர்பலன் அவரை விடாமல் துரத்தியது. மார்ச் 11 ,1977 அன்று புகழ்பெற்ற வாக் எனும் இதழ் அத்ன் அட்டைபடத்துக்காக பொலன்ஸ்கியை அனுகியது, மாடலாக வந்த பெண் சமந்தா. 13 வயது. ஆனாலும் தோற்றத்தில் ஆளுமை. பிரான்ஸில் ராபர்ட் டி நீரோ வின் நீச்சல்குளம் கொண்ட பிரம்மாண்ட வீட்டில் அனுமதி வங்கி பொலான்ஸ்கி அவ்ளை கவர்ச்சியான புகைப்படங்கள் எடுத்தார்.

இரண்டம் நாள் நடிகையின் அம்மா பாரிஸ் போலீசில் தன் மகளை
பொலான்ஸ்கி வன்புணர்ச்சி செய்து விட்டார் என குற்றச்சாட்டு வீச
அடுத்த நாள் உல்க பத்திரிக்கைகள் அனைத்திலும் பொலான்ஸ்கி செய்தியானார்.இவ்வழ்க்கைல் கலிபோர்னியா சிறையில் 90 நாட்கள் வசித்த பொலான்ஸ்கியின் திரையுலக வாழ்க்கை பெரும் இருளை சந்தித்தது. அதன் பின் அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டு
சுவிட்சர்லாந்து வந்து தன் மண்ணில் தஞ்சம் புகுந்தார்.இப்பவும் அந்தவழக்கு நிமித்தம் அமஎரிக்க கோர்ட்டு அவரை கைது செய்ய உத்தரவிட்டபோது சுவிட்சர் லாந்து அரசாங்கம் மறுத்துவிட்டது.
இவ்வழக்கிலிருந்து மீண்டு வர பொலான்ஸ்கிக்கு வெகுநாட்கள் பிடித்தது. அத்ன்பிறகு மீண்டும் இயக்குனராகிய பொலான்ஸ்கி 1989ல் பிராண்டிக் Frantic எனும் படத்தில் நடித்த நாயகியை மூன்ற்வாதாக திருமண்ம் செய்து கொண்டார்.

என்னதான் போலந்து தேசத்திலிருந்து பொலான்ஸ்கி சென்றாலும் அங்கு அவருக்கு வெகுநாட்கள்வரை போதிய மதிப்பளிக்கபடவிலை. காரணம் ஒரு யூத்னாக அவர் பட்ட கஷ்டங்கள் பல இருந்தும் அவர் தன் வாழ்க்கைக்கு படத்தின் மூலம் உண்மையாக இருக்கவில்லை என்ற குற்றாச்சாட்டு .நெடுநாட்களாக தன்மீதிருந்த இக்குற்றசாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் 2002 ல் இவர் இயக்கிய திரைப்டம் The Pianist பியானிஸ்ட்.அந்த ஒருபடம் அவர் மீதிருந்த அனைத்து குற்றசாட்டுகளையும் கழுவி எடுத்து மீன்உம் அவரை உலகசினிமாவின் நட்சத்திரமாக பிரகாசிக்க செய்தது.கேன்ஸ் திரைப்ப்ட விழவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த படத்துக்கான் ஆஸ்கார் விருது என எண்ணற்ற விருதுகளை அவருக்கு வாங்கி தந்து இழந்த பெருமைகளை மீட்டுகொடுத்தது.அதன்பிறகு 2005ல் ஆலிவர் ட்விஸ்ட் Oliver Twist எடுத்து தன் புகழை தக்க வைத்துக்கொண்ட பொலான்ஸ்கியின் சமீபத்திய படம் 2010ல் வெளியான The Ghost Writerகோஸ்ட் ரைட்டர். தன்னுடைய 83 வய்தில் அவர் இயக்கி வெளியிட்ட இப்படத்திற்கு பெர்லின் திரைப்ப்ட விழாவில் தங்க கரடி பரிசு பெற்றிருப்பது நாம் அனைவரும் உட்கார்ந்து சிந்திக்க வேண்டிய விடயம்.

January 19, 2011

நாளைய சினிமா



(சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் நாளைய சினிமா கருத்தரங்குக்காக வாசிக்க எழுதபட்ட கட்டுரை இது அரங்கில் நேரம் கருதி சுருக்கி பேச வேண்டியதாகிப்போனது)


இன்றைய சினிமாவையும் நேற்றைய சினிமாவையும் பற்றி சொல்லாமல் வெறுமனே நாளைய சினிமாவை பேச முடியாது .

அப்படி பேசினால் அது வெறும் கற்பனாவாதமாக மட்டுமே மிஞ்சும்

தமிழ் சினிமாவுக்கு இது இரண்டாவது அலை என்று சொல்லலாம்

முந்தைய அலை

1977 துவங்கி 1982 வரையிலான ஏழு வருடங்களை கொண்டது. இதனை நவீனத்துவ அலைன்னு கூட சொல்லலாம் . நவீன இலக்கியம் தமிழகத்துல உண்டாக்குன பாதிப்புக்கும் இந்த அலைக்கும் நிறைய தொடர்பு இருக்கு.

குறிப்பா புது கவிதைகள் வந்த காலம் அது . அது சினிமா ஆர்வமிக்க இளைஞர்களை நிறையவே பாதிச்சுது. இலக்கியத்துல அந்த அலை ஓய்ஞ்சு சினிமாவுல அது ஆரம்பிச்சுது

திட்டமான வரைவுக்காக சொல்றதா இருந்தால் பதினாறு வயதினிலே தொடங்கி மூன்றாம் பிறை வரைன்னு சொல்லலாம்


1977ல் பதினாறு வயதினிலேதான் இந்த அலையொட முதல் படம்னா அதுக்குமுன்னாடியே அன்னக்கிளி, சில நேரங்களில் சில மனிதர்கள், படத்தையும் கணக்கில் எடுக்கலாம் தப்பில்லை. ஆனா பதினாறுவயதினிலே தான் சமூகத்தை பிரதிபலிச்ச அதிகமா பாதிச்ச படம் .தொடர்ந்த இயக்கத்துக்கும் அது பாதை போட்ட படம்.இதுக்கு அடுத்தவருடமே வெளியான முள்ளும் மலரும்,அழியாத கோலங்கள் ,ரோசாப்பூ ரவிக்கைகாரி, உதிரிப்பூக்கள், ஒரு தலைராகம், அவள் அப்படித்தான், நெஞ்சத்தை கிள்ளாதே, வறுமையின் நிறம் சிகப்பு ,ஜானி, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், பசி, சுவர் இல்லாத சித்திரங்க்ள், ஒரு கிராமத்து அத்தியாயம், மூடுபனி, கிளிஞ்சல்கள், பாலைவனச்சோலை, பன்னீர் புஷ்பங்கள், தண்ணீர் தண்ணீர் எச்சில் இரவுகள், ஏழாவது மனிதன், மெட்டி, மூன்றாம் பிறை என அடுத்தடுத்து படங்கள் தொடர்ந்து 5 வருடங்கள் 1982 வரை வித்தியாசமன கோணத்தில் அதே சமயம் தரத்திலும் அதனதன் அளவில் சற்றும்குறையாமல் வந்துகொண்டிருந்தன.

இதுக்கடுத்து வந்த இரண்டாவது அலை இப்ப சமீபமா வந்துகிட்டிருக்கு. இதை ஒரு அடையாளத்துக்காக பின் நவீனத்துவ அலைன்னு சொல்லலாம்.

முன்ன சொன்ன நவீனத்துவ இலக்கியம் உண்டாக்குன பாதிப்புல உருவான மாதிரி இலக்கியத்தில் அடுத்து உருவான பின் நவீனத்துவ இயக்கத்துக்கும் இந்தபடைப்புகளுக்கும் நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும் மறைமுகமான தொடர்புகள் நெறயவே இருக்கு. உதாரணத்துக்கு பின் நவீனத்துவம் முன் வச்ச அதிகாரமற்ற மொழி நடை திரைப்பட உருவாக்கத்துல வர ஆரம்பிச்சது. நேர்கோட்டு கதைகளா இல்லாம முன்ன பின்ன கதையை அங்க அங்க தையல் போட்டு கதை சொல்ற உத்தி அப்புறம் நாட்டார் வழக்காற்றில், விளிம்பு நிலைமக்களின் வாழ்க்கை இதையெல்லாம் வச்சி இந்த இரண்டாவது துவங்கின அலையை பின் நவீனத்துவ அலைன்னு சொல்லலாம் ..

இந்த இரண்டாவது அலை முதல் அலைமாதிரி தொடர்ச்சி இல்லாம விட்டு விட்டு வர ஆரம்பிச்சுது . முதல் அலையில் மொத்தமா காட்டற்று வெள்ளம் மாதிரி ஒரு பாய்ச்சல் இருந்தது. ஆனால் இரண்டாவது அலையில் அது இல்லை. கிட்டத்தட்ட துவக்கத்துல ரெண்டு வருஷத்துக்கு ஒருமுறையா படங்கள் வெளியானது.


..இந்த அலையின் முதல் படம் 1999ன் இறுதியில் வந்த சேது தான் இதன் முதல் படம் .. அடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு அழகி... .அதன்பிறகு இரண்டு வருடங்களுக்குபிறகு 2004ல் .ஆட்டோகிராப் அந்த வருட இறுதியில் காதல்.அதன் பிறகு இரண்டுவருடம் கழித்து 2006ல் சித்திரம் பேசுதடி ..வெயில் பிறகு 2007ல் பருத்தி வீரன் ..சென்னை 28, மொழி..
2008ல் சுப்ரமணியபுரம் 2009ல் பசங்க, நாடோடிகள், வெண்ணிலாகபடி குழு, 2010ல் அங்காடித்தெரு, மைனா, களவாணி மதராச பட்டினம், நந்தலாலா, தென் மேற்கு பருவக்காற்று - ன்னு இந்த எண்ணிக்கை அதிகமாயிருக்கு..

உண்மையில தமிழ் சினிமாவுக்கு இது உச்சகட்ட நேரம்
இன்னும் ஒரு அடி முன்ன வச்சா தமிழ் சினிமா ஈரான், கொரியா போல தொடர்ந்து உலக சினிமாக்களை தரமுடியும் தமிழ் சினிமா வர ஆண்டுகளில் இன்னும் அதிகமான நல்ல படங்களை தரவும் வாய்ப்பிருக்கு ..ஆனா அது கனாவா அடுத்து எந்திரன் மாதிரி இன்னொரு தந்திரன் வந்து அது முழுசா வெற்றியடைஞ்சா அதுவே இன்னொரு சகலகலாவல்லவனா மாறவும் வாய்ப்பு இருக்கு நம்ம கிட்ட அதுக்கான எல்லாதகுதியும் இருக்கு

உலகசினிமான்னா ஒண்ணும் இல்லை
நல்ல சினிமா அவ்வளவுதான்


உண்மையில் உலகசினிமான்னா வெளிநாட்டுல எடுக்கிறா மாதிரியான படம்னு ஒரு தப்பான கணிப்பு நம்ம கிட்ட இருக்கு.

அது அப்படி இல்லை

உள்ளூர் படத்தை உண்மையா ஒழுங்கா வியாபாரத்துக்காக லுங்கியை ,பாவாடைய உயர்த்தாம ஒரு கதைக்கு உண்மையா திரைக்கதை இருந்து அதை தேர்ந்த சினிமா காட்சி மொழியில படைப்பாக்க தொழில் நுட்பத்தோட வெளியிட்டாலே போதும். அதுக்கு யாரும் போஸ்டர் ஒட்டாம பிரபலங்களின் பேட்டி இல்லாம உலக சினிமாவா அடையாளம் பெறும்.


தமிழ் சினிமாவில் பல அவலங்கள் உள்ளது அதில் ஒரு முக்கிய அவலம் சினிமாவை சினிமா மொழியினூடக புரிந்து கூர்மையாக விமர்சனம் எழுதும் விமர்சகர்கள் இல்லை .நான் சினிமக்காரனகவும் இருந்துட்டு நானே விமரசனம் எழுதறது எனக்கு கூச்சமா இருக்கு பாராட்டி எழுதுனா வாய்ப்புக்கு அலையறான்னு நெனச்சிடுவாங்க .ஆனா சினிமாதெரிஞ்சு நல்ல பத்திரிக்கையாளர்கள் எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள் இருக்காங்க .அவங்க எல்லாம் எழுதவரணும்.


அமெரிக்காவின் பாலின் கேல் பெண் ..கடுமையான விமர்சனங்களை எழுதியவர்.அமெரிக்காவில் வசித்தவர். இறந்துட்டாங்க .. அங்கிருந்து கொண்டு ஐரோப்பிய இயக்குனர்களுக்கு எனிமா கொடுத்தவர். விமர்சகர்களாக இருந்து பின் படைப்பாளிகளாக மாறிய பிரெஞ்சு நியூவேவ் இயக்குனர்களின் படங்களையே கிழிகிழி என கிழித்தவர். அவரது விமர்சனங்களே கிட்டதட்ட இலக்கியமாகவும் இருக்கும்
அதே போல அவங்களோட இடையீடு (interpretations )களால் படத்துக்குள்ள இருந்த பல இலக்கிய பிரதிகளை உருவாக்கி இயக்குனர்கள் யோசிக்காத கோணத்துலருந்து படத்தை ஆய்வு செய்வாங்க. ஒரு இயக்குனர் தான் இயக்குன படத்தை பாக்குறானோ இல்லையோ ஆனா அதுக்கு முன்னாடி அடுத்தா நாள் அவங்க என்ன விமர்சனம் எழுதுவாங்கன்னு தாவிபோய் பேப்பரை வாங்குவான்.

அதே போல

ரோஜர் எட்பர்ட்ஸ் டெக்கன் கிரானிக்கல்ல எழுதுறவர்
வின்சண்ட் கேண்ட்பீ நீயூஸ் வீக் எழுதுறவர்
வட இந்தியாவுல காலித் மொக்கம்மத்
இவங்க விமர்சனங்கள் ஒரு படம் பற்றிய மதிபீட்டை அப்படியே தலைகீழாக மாற்ற வல்லவை...

சினிமாசூழல் வளரணும்னா இது போன்ற விமர்சகர்கள் விமர்சனங்கள் அவசியம்.

ஒருத்தன் நல்ல படம் எடுத்தா அடுத்து வரப்போற காலச்சுவடு, உயிர்மை போன்ற இதழ்களையே எதிர்பார்க்க வேண்டியது ஒரு நல்ல விடயம்தான் ஆனா அதுகேத்தாமாதிரி அதுலவிமர்சனம் வர்ரதில்லை .


தமுஎகச போன்ற அமைப்புகள் சினிமா விமர்சனங்களுக்கான பயிலரங்கங்கள் நடத்தலாம்


அது போல இதுவரை வந்த சினிமாக்கள் பற்றிய பரந்துபட்ட ஆய்வுகள் நமக்குதேவை வேறு இலக்கியவாதிகள் ஏன் சினிமாவை ஒதுக்கணும் அவங்களும் எழுதணும் . எல்லோரும் அவங்க அவங்க பார்வையை கொண்டுவரலாம். சினிமா நமக்கு சம்பந்தம் இல்லன்னு அவ்வளவு சீக்கிரம் ஒதுக்கிட முடியாது

இன்னைக்கு அது நம்ம வாழ்க்கையை தீர்மானிக்கிறதா இருக்கு
மூணு முதலமைச்சர்கள் மட்டுமல்லாம எதிர்காலத்துல அதுபற்றி கனவுகளோடவும் பல சினிமாக்காரங்க இருக்காங்க.

அதனால மக்கள் தவறான நடிகனுக்கு ஓட்டுபோட்டா அதுல விமர்சனம் எழுதாத எழுத்தாளனுக்கும் பங்கு இருக்கிறாதாதன் அர்த்தம் .

மற்ற நாடுகளில் யாரும் உலகசினிமான்னு சொல்லிகிட்டு எடுக்கறதில்லை தங்ககளோட வாழ்க்கையை, கலாச்சாரத்தை, வலியை எந்த நிர்பந்ததுக்கும் ஆட்படாம எடுக்க்கிறாங்க

ஆனா இப்பவும் நாம படம் எடுத்தா எந்த டிவி வங்கும்னு யோசிக்க வேண்டியதா இருக்கு

அதே மாதிரி டிவிக்களுக்கும் நல்ல படம் பத்தி கொஞ்சமும் அக்கறை இல்லை

நல்ல வேளையா மைனா அந்த ஆபத்துல தப்பிச்சுது

ஆனா இந்த நிலைமை மாறனும்

இதுக்கு வெறுமே சினிமா இயக்குனர்கள் மட்டும் பத்தாது
அதுக்கு பத்திரிக்கை இலக்கியவாதிகள் சமூக ஆர்வலர்கள் பார்வையாளர்கள் அனைவரது ஒத்துழைப்பும் தேவை ..
திரைத்துறையில் ஒரு புதிய அலை உருவாகும் போது அதுக்கு இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்களுக்கும் பங்கிருக்கு..


அதே போல சினிமா என்பது மூன்று துறை சார்ந்தது
தயாரிப்பு , வெளியீடு , திரையீடு எனும் மூன்று புறக்கட்டுமானங்களை சார்ந்தது

மாறிவரும் புறகட்டுமானங்களையும் அதனால் வரும் லாப நஷ்ட கணக்குகளையும் வைத்தே நாளைய சினிமா பற்றி கனவு காண முடியும்
இன்னைக்கு இருக்கிற இந்த தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் மாறினா ஒழிய நாளைய சினிமா உயர்ந்த நிலைகளை அடைய வாய்ப்பே இல்லை..

January 16, 2011

ஆண்டே ஆண்டே நற்றமிழாண்டே





கொடி போல் செங் கொடி போல
ளீறு நீராயிரம்
மாமலர் கொடைத்திடும் வள்ளல்
வாழ்ந்த எம் பூமி காண்
மாமலை மேறு மதிலேறு
கண்டனனடி தடி தரதிரடி
சண்ட மாமண்ட மா
மருத மேகு வெகு தானதரும
மேகு மொரு நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
எம் நாடெனுந் தமிழ் நல்ல நல்ல
களி பொங்கிடும் ஒளி சிந்திடும்
திருநாளது தை தத் தத தைதை
தகதிமிதகதிமி தைதை என
கொண்டாடும் ஆகரமெனுமொரு
இளவல் புகழ் சீறார் சிறப்புமிக்கதொரு
நன்றேதொழல் வென்றேகட்டுமொரு
ஆண்டே ஆண்டே ஆண்டே
நற்றமிழாண்டே
- அஜயன்பாலா

January 8, 2011

விருது எனும் வசீகரப் பெண் : சென்ன ரஷ்ய கலாச்சாரமையத்தில் நாஞ்சில் நாயகனுக்கு நடந்த பாராட்டுவிழா


(ஜனவரி 7ம் தேதி தினமணி கண்ணோட்டத்தில் வெளியான கட்டுரை)

ஆண்டு துவக்கத்தில் புத்தக கண்காட்சி நெருக்கத்தில் வழக்கமாக நடக்கும் சம்பிராதாயமான விழாக்களுக்கு நடுவே ஒருவித்தியாசாமன விழா நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகதாமி விருது கிடைத்தமைக்கு பாராட்டுவிழா .சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் விஷ்ணுபுரம் இலக்கிய கூட்டத்தால் நடத்தப்பட்டது.

கடந்தசில வருடங்களாகவே சாகித்ய அகாதமி தமிழ் எழுத்தாளர்களிடம் கடுமையான வசவுகளை வாங்கிக்கொண்டிருந்தது. .இந்த வருடம் அதற்கெல்லாம் பரிகாரமாக நாஞ்சில் நாடனுக்கு கொடுத்து தன் கற்பை காப்பாற்றிக்கொண்டது..

நிகழ்ச்சி துவங்குவதற்குமுன்பே அரங்கு நிரைந்திருந்தது
அனைவரது முகத்திலும் தங்களது வீட்டு நிகழ்வொன்றில் கலந்து கொள்ளும் மகிழ்ச்சியும் பெருமிதமும் காணப்பட்டது.
நாஞ்சில் சாதரண மக்களின் வாழ்க்கையை பாசாங்கில்லாமல் எழுதியவர். வாழ்வு குறித்த சில ரகசியங்களை வரிகளுக்கிடையே அவ்வப்போது ஆபிசுக்கு போகும் அவசரத்தில் அம்மாவுக்கு தெரியாமல் அப்பா கொடுக்கும் காசு போல ஜாடையக வாசகனுக்கு கீழே சிந்திவிட்டு தன் இலக்கில் கதையை நகர்த்தி செல்பவர் ..ஒரு நல்ல வாசகன் அவர் எப்போது கீழே போடுகிறார் என்பதை கூர்ந்த அவதானத்துடன் கண்டெடுத்து விடுவான். நாஞ்சிலின் ஆழத்தை அவரது உணர்ச்சிகளின் ஆரம்பத்தை நேரடியாக சந்தித்து விடக்கூடிய இடம் அது . நாம் வாழ்வில் என்றோ பட்ட அவமனங்கள் துக்கங்க்ள் வலிகள் நாஞ்சிலின் கதைகளை படிக்கும் போது மீண்டெழும் ..பெரும் உணர்ச்சி நம்மை அடுத்த வரிக்கு நகரவிடாமல் புத்தகத்தை மூடச்செய்யும் ..அப்படி பாதிப்புக்குள்ளானவர்கள் முகங்களாகத்தான் அரங்கம் முழுக்க நிறைந்திருந்தனர்.

துவக்கத்தில் பேசிய ராமகிருஷ்ணன் ஒரு ஆர்மேனியனின் கதையை கூறினார். தன் பூமியில் விளைந்த மாதுளைபழத்தை எடுத்து செல்ல அந்த ஆர்மேனியனுக்கு விமான நிலையத்தில் தடை விதிக்கபடுகிற போது அவன் அந்த மாதுளை பழத்தை சாப்பிட்டு தன் உடலோடு எப்படி எடுத்துசெல்கிறானோ அது போல நாஞ்சில் தான் பிறந்த மண்ணையும் கலாச்சாரத்தையும் மொழியையும் வாழ்வியலையும் தான் செல்லும் இடங்கள் தோறும் எடுத்து செல்கிறார்.என்றார். பாலுமகேந்திரா படைபாளிக்கு புகழ்ச்சியும் பாராட்டும் அவசியம் அதை வேண்டாம் என்று யாராவாது சொன்னால் அதை நான் நம்பமாட்டேன் என்றும் சொன்னார்
மேலும் தன்னால் நாஞ்சிலின் சிறுகதைகளை குறும்படமாக எடுக்க முடியாமைக்கான காரணமாக அவரது அடர்ந்த இலக்கிய செறிவான மொழியும் ஒரு காரணம். அது எனக்கு சவாலாக இருக்கிறது..அதைவிட்டு விட்டு அவரது கதைகளை படமாக எடுப்பது அவரது படைப்புக்கு நான் செய்யும் அவமானமாக கருதினேன் என்றும் கூறினார் .

நிகழ்ச்சியில் அடுத்ததாக பேசவந்த ஞானி மற்ற பிரலா விருது ஞானபீட விருது சரஸ்வதி சம்மான் ஆகிய விருதுகளை விட சாகித்ய அகாதமி மிக முக்கியமான விருது காரணம் அது மட்டும்தான் அரசு கொடுக்கும் விருது.அரசாங்கம் என்பது மக்களை பிரதிநிதித்துவ படுத்துகிறது. மற்ற விருதுகள் தனியார் கொடுக்கும் விருது ஆனால் இதுமட்டும்தன் மக்களே கொடுக்கும் விருது .அதனால் ஆட்சி எதுவாக இருந்தாலும் சாகித்யஅகாதமி விருது மிக முக்கியமானது. என்றார் அது போல தன் வரலாற்று கடமையை சரியாக நிறைவேற்றாத யாரும் தன்னை சிறந்த எழுத்தாளன் என சொல்லிக்கொள்ள முடியாது என்றவர். நஞ்சில் நாடன் படைப்புகளை காட்டிலும் அவரது கட்டுரைகளில் அந்த கோபத்தை அதிகமாக பார்க்க முடிகிறது என்றார். .மேலும் கருணாநிதி ஆட்சியில் சாகித்ய அகாதமியின் தென்மண்டல அலுவலகம் பறி போவதை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம் . அதே ஜெயலலிதா ஆட்சியாக இருந்தால் இந்த கூட்டத்தை சசிகலாதலைமையில் தான் நம் நடத்த வேண்டியிருக்கும் என தன் வழக்கமான அரசியல் பேச்சை கலந்தார்

அடுத்து பேச வந்த இராசேந்திர சோழன் எழுபதுகளில் பல எழுத்தாளர்கள் பெரும் பாய்ச்சலுடன் வந்தனர் ஆனால் யாரும் அக்காரியத்தை தொடர்ந்து செய்யவில்லை. ஆனால் நாஞ்சில் ஒருவர் மட்டும்தான் இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறார். சாகித்ய அகாதமி விருது சில பல சிக்கல்களுடன் கூடிய ஒரு அழகிய பெண்ணை போன்றது.அது மற்றவர்களுடன் போகும் போது மனதில் ஒரு அங்கலாய்ப்பு உண்டாகும் .பலவாறாக அவதூறுகளை பேச தோன்றும் .ஆனால் அது நம்மருகில் வந்து அமர்ந்தவுடன் நாம் தலைகீழாக மாறிவிடுகிறோம் என பேசியது ஒருவகையில் நாஞ்சில் நாடனுக்கும் பொருந்த கூடியதாக அமைந்தது. மேலும் தமிழ் நாட்டில் பகுத்தறிவு அளவுக்கதிமாக சென்றதால் நம் நம்பழமைகளைலிருந்து விலகிவந்துவிட்டோம்
என சிக்கலான விவாதத்தை தன்பேச்சில் தூவிய போது அரங்கம் இறுக்கமாக இருந்தது. இராசேந்திர சோழன் அஸ்வகோஷ் என்ற பெயரில் பன்னெடுங்காலமாக தன்னை முற்போக்கு சிந்தனையாளரகவும் தமிழ் தெசியத்தை முன்னிறுத்தியும் தன் எழுத்துக்களை பட்டை தீட்டி வந்தவர்
என்பது கவனிக்கதக்கது

அடுத்து பேச வந்த கண்மணி குணசேகரன் பெருங்குரலெடுத்து
ஒரு கிராமிய பாட்டுடன் தன் இயல்பான பேச்சை துவக்கி முடிக்கும் வரை தொடர் கைதட்டல் மழையை அரங்கத்தில் நிறைத்தார். இப்படிபட்ட சாகித்ய அகாதமி விருதை வாங்கிய எழுத்தாளனுக்கு அதன்பிறகு விருதை தவிர எதுவும் மிஞ்சுவதில்லை. அப்படிபட்டவர்களுக்கு அரசாங்கம் அனைத்து துறைகளிலும் சலுகைகளை அறிவிக்க வேண்டும். மேலும் அவனை சட்டமன்றத்துக்கு அழைத்து அனைத்து உறுப்பினர்களுக்கு நடுவே ஒரு சிறப்புரை நிகழ்த்த அனுமதிக்க வேண்டும் என்ற போது கைதட்டல அடங்குவதற்கு நெடுநேரம் பிடித்தது.

இறுதிபேச்சாளராக பேசவந்த ஜெயமோகன் நாஞ்சில் நாடன் படைப்புகளுக்கும் அசோகமித்திரன் படைப்புகளுக்கும் ஒப்புமை ப்டுத்தி அவரது படைப்புகளின் நையாண்டித்தன்மை பற்றி பேசியவர் இந்த நையாண்டித்தன்மை மட்டும் இல்லாவிட்டால் அவர் ஒரு எளிய முற்போக்கு எழுத்தாளராக மட்டுமே கருதிவிடக்கூடிய அபயம் மிக்கவர் என்றும் குறிப்பிட்டார்.


நிகழ்ச்சி நாஞ்சில் நாடனுக்கானதாக இருந்தாலும் ஒழுங்கமைத்த விஷ்ணு புரம் வாசகர் வட்டம் ஜெயமோகன் கட்டளைக்க்கு ஆட்படும் பொம்மைகளை போலவே நடந்துகொண்டது பெரும் அசூயையாக இருந்தது,உடையில் காட்டிய நாகரீகத்தை அவர்கள் நடத்தையிலும் காட்டியிருக்கவேண்டும் எஸ் ரமகிருஷ்ணனை பேச அழைத்த போது எஸ் ராமச்சந்திரன் என அழைத்தது அச்சபையிலிருந்த பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.. கடைசிவரை அவர் அத்ற்கான மறுப்பையோ மன்னிப்பையோ சுட்டவில்லை. பொதுவாக மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளனுக்கு பாரட்டுவிழா நடக்கும் இடத்தில் .இன்னொரு எழுத்தாளனுக்கு நடந்த அவமானமாகவும்பட்டது.அதனால் தானோ என்னவோ
அதுவரை அமர்ந்து அனைவரது பேச்சையும் கேட்ட ஏஸ்ரா ஜெயமோகன் பேசும் போது அவசரமாக அரங்கத்தை விட்டு வெளியேறினார்.

முன்னதாக வாசகர் ராஜகோபலன் மற்றும் நாடக நடிகர் பாரதி மணி ஆகியோரும் நாஞ்சில் நாடனை வாழ்த்தி பேசினர்.
இறுதியாக பேச வந்தார் நாஞ்சில் நாடன்

அவன் அவன் அம்பாரமாக சோற்றை கொட்டியிருக்கிறான் நான் இன்னும் ஒரு பருக்கைகூட எழுதவில்லை என தன்னடக்கத்துடன் ஏற்புரை நிகழ்த்தினார் சினிமாவுக்கு பட்டெழுதுபவனுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் அரசாங்கம் தமிழ் நாட்டில் எழுத்தாளனை பொருட்படுத்துவதே இல்லை என தன் ஆதங்கத்தை பேசினார்.கேரளாவில் விருது வாங்கியவனை முதல்வர் வீடுதேடிவந்து பாராட்டுகிறார். தமிழ்நாட்டில் ஒருகவுன்சிலர் கூட அவனை பொருட்படுத்துவதேயில்லை. வாசகர்கள் என் மீது காட்டும் அன்பு இந்த விருதை விட முக்கியத்துவம் வாய்ந்தது என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இயக்குனர் மணிரத்னம் நிகழ்ச்சிமுடிவது வரை முதல் வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சியை நன்கு ரசித்துக்கொண்டிருந்தார்.

January 5, 2011

நன்றி விக்னேஷ்

Hi sir,
Im Ram Vignesh(aged 16), a big fan of u. I luv 2 read books.. especially ur books. I hav 9 books of urs. 'Netaji subash chandra bose' published by vikatan publishers is 1 of those 9. In dat book i hav a big doubt....

it is d initial chapter of dat book which starts in such a way dat subash was in d month of december of 1941...but when i had read d page 55, i realized dat d brutish british police force found him no where inside his house during 26th of january of 1941... how could it b possible? i think it must b january 26,1942. let it b............

i hav a lot 2 say about ur writing. i think u r d best writer of d world 4 me. please inform me when a new book is made by u... i will get it at once... i will always b aching 4 ur books.

i cherish ur unique comparisions very much. As a reader i ache 2 read more n more of such comparisions. and also................
Im sure dat i've done some good in my last birth as i hav happenned 2 read ur books which r boons of boons....

my wishes 4 ur forthcoming books...
Bye........

ramvignesh06@gmail.com

_______________________________________________________________________________

dear vignesh,

thanku for your small and wonderful letter .. i realy admired about your age and ratio of knowledge in book reading.. ya your right... actual date is janu 26 1941/ there was some mistake in initial lines .. ..ill correct it in my next edition

u said in your letter that u kept me as best writer in world ..thats great word to me .. soon ill try fit my self to this.

your's ajayanbala
ajayanbala@gmail.com

January 4, 2011

அன்புள்ள அஜயன் பாலா ...

அன்புள்ள அஜயன் பாலா அவர்களுக்கு,

தங்களின் நாயகன் தொடரை படித்து வந்தேன். இப்போது விகடன் அதை நூல்கலாக வெளியிட்ட உடன் அனைத்தாயும் வாங்கி விட்டேன். பாராட்டு ஒன்றே ஒரு கலைஞனின் மிக சிறந்த வெகுமதி என்பதால் இந்த கடிதத்தை எழுதுகிறேன். ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு நடை இருக்கும். ஆசை பட்டு வாங்கிய புத்தகத்தை பாதி படித்து கொட்டாவி விட்டதும் உண்டு. எதிர்பாராமல் ஒரு நூலை படிக்க நேர்ந்து அதற்கு அடிமை ஆனதும் உண்டு. உங்களின் நடை இரண்டாம் வகை.

புத்தகம் படிப்பது ஒரு நல்ல திரைப்படம் பார்ப்பது போன்றது என்ற உண்மையை ஏனோ இது வரை நான் படித்த புத்தகங்கள் கூறவில்லை. அதிரடி, காதல், வீரம், சோகம் என்ற அத்தனை உணர்ச்சிகளையும் உங்களின் எழுத்து சரியாக பிரதிபலித்தது.

கார்ல் மார்க்ஸ் ஜென்னி காதலை அவர்களே எழுதி இருந்தாலும் இத்தனை அழகாய் விவரிக்க முடியாது. நெல்சன் மண்டேலா சிறையில் இருந்து வெளிவரும் அந்த காட்சியும், அமெரிக்க சுதந்திர தேவி சிலையை பார்த்து சாப்ளின் "அமெரிக்காவே பத்திரமாய் இரு. உன்னை முழுவதுமாய் கொள்ளை அடிக்க ஒருவன் வந்து கொண்டு இருக்கிறான்" என கூறும் இடமும் உலகின் மிக சிறந்த ஹீரொயிஸம் காட்சிகளில் ஒன்று.

காந்தியின் உண்ணாவிரத ஆயுதத்தால் தாக்கப்பட்டு தன் மக்களுக்கு ஏதும் செய்ய முடியாமல் கலங்கி நின்ற அம்பேத்கர் நிலையை நான் சமீபமாக பார்த்த அம்பேத்கர் திரைப்படத்தை விட உங்கள் நூல் சிறப்பாக எடுத்து காட்டியது. அன்னை தெரசாவின் அன்பு, நேதாஜி வீரம் என அனைத்தும் கவிதைகளால் விவரிக்க பட்ட வாழ்க்கை வரலாறுகள். உங்களின் அடுத்த நூலுக்காக காத்திருக்கும் பல்லாயிரம் ரசிகருள் ஒருவன்.

இப்படிக்கு,

Castro Karthi

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...