Showing posts with label செம்மொழி சிற்பிகள். Show all posts
Showing posts with label செம்மொழி சிற்பிகள். Show all posts

June 16, 2021

செம்மொழி சிற்பிகள் - என் எழுத்துல வாழ்வின் பெருமைமிக்க தருணம்

 


2010ஆம் ஆண்டு கோவை செம்மொழி மாநாட்டையொட்டி ஏதாவது புதியதாக செய்யவேண்டும் என அப்போதைய திமுக ஆட்சியின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்த திரு. பரிதி இளம் வழுதி விரும்பி அவரது தனிச்செயலராக பதவி வகித்த திரு. நாச்சி முத்து அவர்களிடம் கூற திரு நாச்சிமுத்து என்னை தொடர்புகொண்டு ஆலோசித்தார். எங்களுடன் மறைந்த பெரியார் சாக்ரடீஸு அவர்களும் கலந்துகொள்ள நால்வரும் ஆலோசனை செய்து தமிழுக்காக தொண்டாற்றி மறைந்த அறியப்படாத அறிஞர்கள் நூறு பேரை தொகுத்து அதை உயர்தரத்தில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிடலாம் என முடிவு செய்தோம். அதன் பேரில் ஆறு மாத கடும் உழைப்பின் பலனாக செம்மொழி சிற்பிகள் நூல் உருவாக்கம் பெற்றது. முதலில் நூறுபேரை தேர்வு செய்வதில் துவங்கி அவர்களை பற்றிய தகவல் திரட்டுவது வரை திரு. நாச்சிமுத்து மற்றும் பெரியார் சாகரடீசு அவர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்கள் திரட்டிய செய்திகளை படித்து தொகுப்பதுதான் என் வேலை . ஒவ்வொரு அறிஞர் குறித்தும் அனைத்து புத்தகங்களையும் படித்து சாரமாக எடுத்து அதை ஒருபக்க அளவில் எழுதுவது கடுமையான பணி. காரணம் தகவல்கள் மிக்க பழமையான நூல்களில் படிக்கவே முடியாத நிலையில் இருந்தன. ஒவ்வொருவர் பற்றியும் முழுமையாக படித்து எழுதுவது ஒவ்வொரு பாறாங்கல்லாக சுமந்து மலையேற்றி இறக்கி வைக்கும் காரியமானது. இப்படியாக நூறுபேரையும் எழுதிமுடிக்க 6 மாதகாலம் ஆனது. பின் நான் எழுதியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க யாரை பணியமர்த்தலாம் என முயற்சித்த போது ரமேஷ் சக்ரபாணி முன் வந்தார். பின் ஒவ்வொரு அறிஞரையும் ஓவியமாக வரைந்து கட்டுரைகளின் முகப்பிலிடலாம் என முடிவுசெய்தபோது ஓவியர் பச்சை முத்து எங்களுடன் கைகோர்த்தார். ஒருவழியாக பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் புத்தகத்தை விஜயன் அழகான முறையில் வடிவமைத்து கொடுத்தார். புத்தகத்தை அச்சாக்கி முழுமையாக்கும் பணியில் பெரியார் சாக்ரடீசு மற்றும் நாச்சிமுத்து ஆகியோர் பொறுபேற்று சிறப்பான முறையில் வடிவமைத்து கொடுத்தனர் .

செம்மொழி மாநாட்டையொட்டி மேடையில் கலைஞர் கையால் இந்நூலை வெளியிடலாம் என முடிவு செய்தோம். ஆனால் ஏற்கனவே நிகழ்ச்சி நிரல் முழுமையாக திட்டமிட்ட படியால் மேடையில் வெளியிடமுடியாமல் தனிப்பட்ட முறை நிகழ்வில் கலைஞர் கையால் வெளியீடு செய்தோம். புத்தகம் சிறப்பாக உருவாக்கம் பெற்றாலும் இதை சந்தைப்படுத்துவது என்பது சிரமமாக இருந்தது. காரணம் 130 ஜி எஸெம் டிராயிங் பேப்பரில் ஒருகிலோ எடையுள்ள கார்ட் பவுண்டாக மெகாசைசில் புத்தகம் இருந்தபடியால் விற்பனைக்காக அங்காடிகளில் வைப்பதும் வெகு சிரமமாக இருந்தது. மேலும் தொடர்ந்து அதிமுக ஆட்சி காரணமாக எதிர்பார்த்தபடி நூலக ஆர்டரும் இல்லாமல் போக புத்தகம் வெறுமனே குறுகிய வட்டங்களில் புத்தக கண்காட்சிகளில் மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது. கடந்த எட்டு வருடமாக இப்படியாக இந்த எங்களின் கடுமையான உழைப்பு பயனில்லாமல் முடங்கிக் கிடந்த நிலையில் கடந்த திங்களன்று இந்த நூலுக்கு கிடைத்த முக்கியத்துவம் எங்களை பேரதிர்ச்சியிலும் இன்பத்திலும் ஆழ்த்தியது. திமுக தலைவர் திரு.மு..ஸ்டாலின் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து அவருக்கு பிறந்தநாள் பரிசாக எதையாவது கொடுக்க விரும்பியபோது அப்போது அவர்கண்ணுக்கு நண்பர்கள் முன் வைத்த புத்தகம் எங்களுடைய செம்மொழி சிற்பிகள். இவ்வளவு அருமையான புத்தகம் எப்படி இத்தனை நாள் எங்களுக்கு தெரியாமல் போனது என திரு. ஸ்டாலின் அவர்கள் நெகிழ்ந்து உடனே எனக்கு மூன்று நூல்கள் வேண்டும் என கட்டளையிட திரு.செந்தில் மூலமாக என்னை தொடர்பு கொண்டனர். நான் அப்போது சென்னையில் இல்லை. மனைவியும் இல்லாத சூழலில் உதவியாளர் மூலமாக அலுவலகத்தில் யாருக்கோ பார்சலில் அனுப்ப காத்திருந்த இரண்டு பிரதிகள் மற்றும் நண்பர் மீரா கதிரவன் கைவசம் வீட்டிலிருந்த புத்தகம் என நூல்களை உதவியாளர் ஜேம்ஸ் மூலம் பெற்று அறிவாலயத்தில் ஒப்படைத்தோம் .

அப்போதுகூட நான் எதிர்பார்க்கவில்லை.மறுநாள் தினத்தந்தி நாளிதழில் முதல் பக்க கொட்டை எழுத்து செய்தியாக திரு. ஸ்டாலின் அவர்கள் சோனியா காந்தியை சந்தித்து கைகுலுக்கிய செய்தியுடன் எங்கள் புத்தகம் பரிசளித்த செய்தியும் இடம்பெற்றதை அறிந்தபோதுதான் மகிழ்ச்சி கடலில் திளைத்தேன். எட்டு ஆண்டுகளுக்கு முன் கடுமையாக உழைத்த உழைப்பு இன்று முக்கியத்தும் பெற்ற சம்பவம் ஒரு தேசிய விருது கிடைக்கப் பெற்றதற்கு ஈடான மகிழ்ச்சியை எனக்கும் எங்கள் குழுவுக்கும் உண்டாக்கியது.

உண்மையான உழைப்பு என்றும் வீணாகாது, ஒருநாள் அது மாலை சூடும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு என்பதற்காக இதை பதிவு செய்கிறேன்.

இந்த புத்தக உருவாக்கதில் என்னோடு பங்களித்த திரு. நாச்சிமுத்து அவர்களுக்கு நன்றி. மேலும் இப்புத்தகம் உருவாக மூல காரணமான முன்னாள் அமைச்சர். திரு.பரிதி இளம்வழுதி மற்றும் புத்தகப் பணியில் கடுமையாக உழைத்த பெரியார் சாக்ரடீஸ் ஆகியோர் இன்று நம்மிடம் இல்லை. அவர்களை கண்ணீர் மல்க நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். மேலும் எனது எழுத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த Chakrapani Ramesh மற்றும் ஓவியங்கள் வரைந்து தந்த Thillaikkannu Pachaimuthu ஆகியோருக்கும் வடிவமைத்த Vijayan Masilamani ஆகியோருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.


அஜயன் பாலா

இந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க

 

February 15, 2017

செம்மொழி சிற்பிகள் -எல்லீஸ்

எல்லீஸ் 


பிறப்பு: 1796

திருக்குறளுக்கு முதன் முதலில் ஆங்கிலத்தில் உரை எழுதியவர்.  வெளிநாட்டவர். கால்டுவெல் பாதிரிக்கு முன்பாக திராவிடமொழிக்குடும்பத்தின் தாய்மொழி தமிழ் என்பது குறித்து ஆய்வு குறிப்புகளை தந்துள்ளவர்.

பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ்


இங்கிலாந்து நாட்டைசேர்ந்த எல்லீஸ் அவர்கள் சென்னை நிலவரி வாரியத்தின் செயலராக பணிபுரிய சென்னை வந்தவர் எட்டு ஆண்டுகள் அவர் அக்காரியத்தில் சிறப்பினை அடைந்தபைன் சென்னைகலக்டாராக பத்வி உயர்த்தப்பட்டு பத்தாண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

இக்காலங்களில் தமிழ் மொழியின் செம்மை அவரைகவர்ந்த காரணத்தால் சாமிநாதபிள்ளை, இராமச்சந்திர கவிராயர் ஆகியோரிடம் ஏட்டு சுவடிகளில் தமிழினை கற்றார். தொடர்ந்து அவருக்குள் ஊறிய ஆர்வம் காரணமாக  பழந்தமிழ் இலக்கண நூல்களையும் இலக்கியங்களையும் தேடிப்பிடித்து கற்க துவங்கினார். தொடர்ந்து தன்னைப்போல வெளிநாட்டவர் பலரும்  தமிழ் கற்கவேண்டும் என அவாவுற்று அதற்கான கல்விச் சங்கம் ஒன்றை உருவாக்க முனைப்புடன் செயல்பட்டார். தனக்கு முன் இப்பணியில் ஈடுபட்ட வெளிநாட்டவரான வீராமாமுனிவரது தமிழ்ப்பற்றையும் தமிழ்பணிகளை பற்றியும்ம் கேள்வியுற்று அவர்மேல் பெரும் அனபுகொண்டார்.அவரது வாழ்க்கை வரலாற்ரை எழுத வந்த முத்துசாமி பிள்ளைக்கு வேண்டிய உதவிகள் செய்து ஊக்குவித்தார் 

திருக்குறளின் முதல் பதிமூன்று அதிகாரங்களுக்கு பண்டைத்தமிழ் நூல்களை மேற்கோள்காட்டி ஆங்கிலத்தில் அரிய உரை ஒன்றை எழுதியுள்ளார். மட்டுமல்லாமல் அவ்வுரைகளுக்கு பழந்தமிழ் இல்லக்கியத்திலிருந்தே அவர் மேற்கோள்காட்டியிருந்தவிதம் இவரது தமிழ்பற்றுக்கு சான்றாக விளங்குகிறது . தமிழை பாடமாக கல்லூரிகளில் வைக்கவேண்டும் என ஆட்சியாளர்களிடம் போராடினார். 1818-ல் சென்னையில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் வந்தபோது சென்னையில் 27 கிணறுகள் வெட்டி வைத்தார். அவற்றுள் ஒன்று சென்னை இராயப்பேட்டையில் பெரியபாளையத்தம்மன் கோயிலில் உள்ளது. அக்கிணற்றில் எல்லீஸ் திருப்பணிபற்றி அருமையான நீண்ட பாடல் கல்வெட்டு ஒன்று உள்ளது. திருக்குறள் படித்ததன் பயனாகத்தான் 27கிணறுகள் வெட்டியதாகக் கூறுவது மிகவும் அரிய செய்தியாகும். கல்வெட்டு மெய்க்கீர்த்திபோல் அப்பாடல் கல்வெட்டு உள்ளது.இவர் தமிழ்செய்யுளும் இயற்றியுள்ளார்.அவற்றுள் நமச்சிவாயபாட்டு ஒன்றே நமக்கு கிடைத்துள்ளது.

பின் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை பற்றி கேள்விப்பட்டு
அந்நகரைக்காணசென்றார். தமிழுக்கு தொண்டுசெய்ட்ய்ஹ அவ்வீதிகளை நெஞ்சுருக வலம் வந்தார். பின் இராமாநாதபுரம் எனும் மூதூரைகாணசென்றார். அங்கு தாயுமானவர் சாமாதியில் கண்ணீர்மலகிநின்றார். அன்று நண்பகலில் தன் இருப்பிடம் வந்த அவர் உணவில் இருந்த நஞ்சுகாரணமாக மருத்துவர் அருகிலில்லாமல் துடித்து இறந்தார்.

சென்னையில் அவரது உடமைகள் அனைத்தும் ஏலமிடப்பட்டன. அனைத்து பொருட்களையும் வாங்க் ஆள்வந்த்னர். ஆனால் அவர் எழுதிய தமிழ் செய்யுள்கள் மற்றும் குறிப்புகளை வாங்க எவரும் வரவில்லை. நெடுநாட்கள் அவைகுப்பையாக அங்கேயே ஒருமூலையில் கிடந்ததாக பிற்பாடு தெரியவந்துள்ளன
                                                                   மறைவு: 1879




.

February 11, 2017

ஆர்.கே.சண்முகம் செட்டியார் செம்மொழி சிற்பிகள்

ஆர்.கே.சண்முகம் செட்டியார்
செம்மொழி சிற்பிகள்


பிறப்பு: 17-10-1892

தமிழிசை வளர்த்த செம்மல் என அறிஞர்களால் பாரட்டப்படுபவர். தமிழிசைக்காக முதன் முதலில் சங்கம் தோற்றுவித்தவரும் இவரே.அரசாங்கம் தமிழில் நடக்கவேண்டும் , சட்டசபையில் நாம் தமிழில் பேசவேண்டும்,பொருளாதாரத்தை தமிழில் ஆராயவேண்டும், விஞ்ஞானத்தை தமிழில் கற்கவேண்டும்  என வாழ்நாள் இறுதிவரை தமிழுக்காக குரல் கொடுத்தவர்.

இராமசாமி கந்தசாமி சண்முகம் செட்டியார்.

கோயம்பத்தூரில் பிறந்தவர். தந்தை கந்தசாமிசெட்டியார். தாயார் ரெங்கம்மாள் . கோவை லண்டன் மிஷன் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக்கல்விகற்ற சண்முகம் அவர்கள் பின் சென்னை கிருத்துவக்கல்லூரியில் பட்டபடிப்புடன்  சட்டமும் பயின்றார். வழக்கறிஞராக சிலகாலம் பயிற்சி எடுத்துக்கொண்ட சண்முகம் அவர்கல் பின் கோவைக்கு வந்து துணி வியாபாரத்தில் கவனம் செலுத்த துவங்கினார்.

கோவை நகராண்மைக் கழக உறுப்பினராக பதவிவகித்த சண்முகம் அவர்கள் பின் நகராண்மை  துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் சட்டசபையிலும் போட்டியிட்டு உறுப்பினராக  வென்றார். 1923ல் இந்திய சட்டசபையின் உறுப்பினாராக உயர்நிலை எய்திய சண்முகம் அவர்களின்  பொருளாதார அறிவைக்கண்டு வியந்து  இந்திய அரசு இவரை  பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்தது.. கொச்சி திவானாக சிலகாலம் இவர் பணியமர்த்தப்பட்டபோது இவரது பணியைகண்டு அங்குள்ள ஒரு சாலைக்கு இவரது பெயரையே அம் மக்கள் சூட்டிமகிழ்ந்தனர். பின் ஜவகர்லால் நேரு பிரதமராக பதவியேற்ற போது சண்முகம் அவர்களை நிதிஅமைச்சராக நேரு பதவியேற்க வைத்தார். பிற்பாடு அண்ணாமலை பல்கலைகழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றி அப்பபதவிக்கு பெருமை  உண்டாக்கினார்.

இவ்வளவு உயர் பதவிகளை அடைந்த சண்முகத்திற்கு தமிழுணர்வை தூண்டியது யார் தெரியுமா? .. ஒரு அந்நியர். ஜி,யூ .போப் அவர்கள்.

 ஒருபயணத்தின்போது போப் அவர்கள் எழுதிய திருவாசக உரையைக்கண்டு வியந்து  கண்ணீருகி சண்முகம் அவர்கள் அதன் பின்னே தமிழின் பால் ஆர்வம் உந்தப்பெற்று ஒரு ஆசிரியர் துணையுடன் தமிழ் இலக்கிய இலக்கணங்களை முழுமையாக  கற்கத் துவங்கினார். சிக நாட்களிலேயே தமிழில் புலமையும் பெற்று சிலப்பதிகாரம் மற்றும் குறிஞ்சிப்பாட்டுஆகியவற்றுக்கு உரை எழுதி பதிப்பித்தார்.

தொடர்ந்து தமிழிசை மேல் ஆர்வம் மேலிட தமிழிசைக்கா சங்கம் ஒன்றையும் துவக்கினார். தமிழின் பண் குறித்து ஆய்வை மேற்கொண்டு அதற்காக தனிப்பட்ட குழு ஒன்றையும் உருவாக்கினார்.

                                                       மறைவு: 5-5-1953






ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...