April 30, 2011

ஜேம்ஸ் பாண்டுகளின் அட்டகாசமும் அமெரிக்காவின் கம்யூனிச பயமும்


உலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சி யுகம் -31



ஜேம்ஸ் பாண்டுகளின் அட்டகாசமும் அமெரிக்காவின் கம்யூனிச பயமும்




காதலியாக நடித்த காரிகை காட்டிகொடுத்துவிட்டாள். வெளியில் எதிரிகள் வரும் சத்தம். சடாரென கத்வை திறந்துகொண்டு படிகட்டில் ஏறுகிறான். பின்னால் துப்பாக்கீயுடன் துரத்தும் எதிரிகள் . கதவை திறந்தால் மொட்டை மாடி....சுற்றிலும் பெருநகரம்.. பெரும் காற்று தப்பிக்க வழியே இல்லை . .கண்ணிமைக்கும் நேரத்தில் முதுகு பின்னால் துப்பாக்கியுடன் எதிரிகள் வளைத்துவிட்டனர். கீழே அதளபாதாளம்

கைகளை விரித்த்படி அவர்களைநோக்கி திரும்புகிறார் ஜேம்ஸ் பாண்ட் . சரணடையும் தொனியில்

அடியாட்களை விலக்கிகொண்டு வரும் மைய வில்லன் முகத்தில் அனாயசமான சிரிப்பு

பாண்ட் ஜேம்ஸ் பாண்ட் ..

நீ இப்போது வசமாக மாட்டிக்கொண்டய் .. உன் இறுதி பிரார்த்தனைக்கு ஒரு நிமிடம் எடுத்துக்கொள்

ஒரு நொடி ஜேம்ஸ்பாண்ட் அந்த வில்லனை பார்ப்பார்

அடுத்து என்ன நடக்க போகிறது என தியேட்டரில் அனைவரும் கண்ணை விரித்துக்கொண்டு சீட்டின் நுனியில் அமர்ந்திருப்பார்கள் .


உலகம் முழுக்க வெற்றிபெற்ற ஹேம்ஸ் பாண்ட் படங்களின் பின்னிருந்த வெற்றி ரகசியம் இதுதான் .

பார்வையாளனை முழுதாய் கட்டிபோடும் த்ரில்லான சம்பவங்கள் விறுவிறுப்பான திரைக்கதை. பிரம்மாண்டமான காட்சிகள்.வியக்கவைக்கும் தொழில் நுட்பம் இவைதான் அவற்றின் சூத்திரம் .இவற்றோடு இன்னொன்றும் அது ஜெம்ஸ் பாண்ட் கதாபாத்திர சித்தரிப்பு .

அவர் துணிச்சலும் புத்திசாலித்தனமும் நிறைந்த்வர். அவர் அசகாய சூரர்.சுலபத்தில் பெண்களிடம் மயங்காதவர். எதையும் செய்வார் எப்படியும் செய்வர்.

ஆனால் உண்மையில் யார் இந்த ஜேம்ஸ் பாண்ட் என ஆராய்ந்தால் நமக்கு கிடைக்கும் தகவல்கள் அதற்கு தலைகீழ்

ஆம் கோழைத்த்னம் பயம் இவற்றின் காரணமாக உருவாக்கம்
கொண்டவர்தான் இந்த அசகாய வீரர் ஜேம்ஸ்பாண்ட்.

ஜேம்ஸ் பண்ட் என்பவர் தனி நபர் அல்லர்.அவர் ஒருநாட்டின் சமூகத்தின் பிரஜை .

அமெரிக்காவோடு எந்த நாடு எப்போதெல்லாம் முரண் கொள்கிறதோ ஜேம்ஸ் பாண்டின் அடுத்தவில்லன் அவராகத்தான் இருப்பார்

இப்படியாக துவக்கத்தில் ரஷ்யா அடுத்து கியூபா ஈராக் என தன் வில்லன்களின் பட்டியலை அது தன் எதிரி நாடுகளிடமே இனம் கண்டது


இதைபற்றி இன்னும் விரிவாக தெரிவதற்குமுன் இந்த ஜேம்ஸ் பாண்ட் படங்களைபற்றி மேலோட்டமாக தெரிந்துகொள்வோம்


Ian Lancaster Fleming (28 May 1908 – 12 August 1964)

இயான் பிளமிங் லண்டனை சேர்ந்தவர்.
இவர்தான் ஜேம்ஸ்பாண்ட் படங்களின் கதைகளை முதலில் நாவலாக உருவாக்கியவர்.
அப்பா வாலண்டைன் பிளமிங் இங்கிலாந்து மாநிலங்களவை உறுப்பினர்.தாயார் எவ்லின் . துவக்கத்தில் பத்திரிக்கையாளராக பணியற்றிய ப்ளமிங் இரண்டாம் உலகப்போரின் போது
ராணுவ வீரராகவும் பின் லெப்டினட் கமாண்டராகவும் அதன் பின் கமான்டராகவும் பதவி உயர்வு பெற்று களத்தில் பேர் கண்டவர்.. ஹிட்லரது நாஜிபடைகளின் கப்பல் படைகளை கண்டறிந்து அவற்றை நிர்மூலமாக்குவதர்ற்காக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவில் பங்கேற்று வெற்றிகரமாக நடத்திக்கட்டியவர் . குறிப்பாக உளவு வேலைகளில் அவர் காட்டிய புத்திசாலித்தனம்தான் அவரது அடுத்தடுத்த உயர்வுகளுக்கு மிக முக்கிய காரணமாக விளங்கியது போருக்குபிறகு இந்த அனுபவங்களை வைத்து நவலாக எழுத முடிவு செய்த ப்ளமிங் அதற்காக அமர்ந்து எழுத நிம்மதியான ஒரு இடம் தேடினார் . அப்ப்பொது அவரது நண்பரும் பறவைகள் கவனிப்பாளரும் எழுத்தாளருமான பாண்ட் என்பவர் ஜமைக்காவில் இருந்த தன் தோட்டத்தில் இடம் தந்தார். ஆனால் அந்த இடத்தைகாட்டிலும் அவரது மகனின் பெயர் பிளமிங்கை வசீகரித்தது. ஜேம்ஸ்பாண்ட் .அடிக்கடி முணூமுணுத்து பார்த்தார். பிடித்துபோக அப்போது உருவான பெயர்தான் ஜேம்ஸ்பாண்ட். காஸினோ ராயல் எனும் அவரது அந்த முதல் நாவலில்தான் 007 என்ற எண்ணோடு சேர்த்து ஜேம்ஸ்பாண்டை பிளமிங் அரிமுகம் செய்வித்தார்.அந்த புத்த்கம் வெற்றிபெற வெற்றிபெற அடுத்த பத்து வருடத்தில் பன்னிரண்டு ஜேம்ஸ் பாண்ட் நாவல்களை எழுதிமுடித்து வீடுபேறையும் பெற்ருக்கொண்டார்

உண்மையில் இன்று பாண்ட் படங்களுக்குபின்பாக பேசப்படும் அமெரிக்க அரசியலுக்கும் பிளமிங்கும் நேரடி தொடர்பில்லை . ஆனால் அவரது இரண்டாவது நாவல் ரஷ்யாவை களனாக கொண்டு எழுதப்பட அதை வாசித்த அப்போதைய ஜனாதிபதியான ஜான் எப் கென்னடிக்கு அது மிகவும் பிடித்து போனது .காரணம் அன்று அமெரிக்கா முழுவதும் இருந்த கம்யூனிஸ்ட் பயம். குறிப்பாக ஸ்டாலின் கலத்திய ரஷ்யாவின் அபரிதமான வளர்ச்சி காரணமாக அமெரிக்காவுக்கு ஒரு பயம் இருந்தது. மேலும் இரண்டாம் உலக்போருக்குபின் முதலாளித்துவ நாடுகள் கம்யூனிஸ நாடுகள் என்ற இரண்டுபிரிவாகத்தான் உல்கமே அணிதிரண்டது .

இவற்றில் அணிசேராநாடுகள் மூன்றாம் உலகநாடுகள் என்றும் அணிசேரா நாடுகள் என்றும் தன்னை அறிவித்துக்கொண்டன.இந்தபின்னணி காரணமாக த்ன்னுடைய முதாளித்துவ கொள்கைக்கு எங்கே ஆபத்து நேருமோ என பயந்த அமெரிக்க அரசு நாட்டில் கம்யூனிச ஆதர்வாளர்களை ஒற்று உளவறிந்து தீவிர வேட்டையடிவந்தது. இச்சூழலில் மக்களுக்கு த்ங்களின் தேசத்திடம் இருந்த அபிமானத்தை அதிகரிக்கவும் உலக நாடுகளிடம் குறிப்பாக கம்யுனிச நாடுகளிடம் ஒரு போலியான பிம்பத்தை தோற்றுவிக்கவும் விரும்பியது அமெரிக்க அரசாங்கம் அதற்கான
தக்க சமயத்தில் வந்து சேர்ந்தவர்தான் இந்த ஜேம்ஸ்பாண்ட் . அச்சமயம் அமெரிக்காவின் ஜனதிபதியாக இருந்த கென்னடிக்கு ஜேம்ஸ்பாண்ட் நாவல்கள் பற்றிய விவரம் தெரியவந்தது. குறிப்பாக ரஷ்ய எதிர்ப்பு நாவலான ரஷ்யா இன் லவ் எனும் நாவலைபடித்த கென்னடி த்னக்கு பிடித்த நாவல் என வெளிப்படையாக கூற அப்போதுதான் அமெரிக்க மக்கள் ஜேம்ஸ்பாண்ட் நாவலை தேடிபிடிக்க துவங்கினர்.

இப்படியாக தந்திரமாக மக்களிடம் அதன் மீதான மோகத்தை அதிகரித்த கென்னடி பிற்பாடு 1960ல் மரியன் ஓட்ஸ் என்பவர் மூலம் பிளமிங்கை லண்டனிலிருந்து வரவழைத்து பொதுவிருந்தில் சந்தித்தார். அன்று இரவே பிளமிங்கின் நாவல்கள் படமாக்கும் இரகசிய ஒப்பந்தங்களும் முடிவானது.அமெரிக்க அரசாங்கத்தின் எதிரி நாடுகளை பிரதான எதிரியாக சித்தரித்து மேலும் நாவல்கள் எழுதவேண்டும் என்பதும் அதில் எழுதப்படாத ஒப்பந்தம்
அதன்படி பிளமிங்கின் நாவல்களின் படமாக்கும் உரிமைகள் ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் சிலருக்கு வழங்கப்பட்டன .ஹாலிவுட்டுக்கும் அமெரிக்க அரசாங்கத்துக்கும் இப்படிப்பட்ட ரகசிய உறவுகள் காலம்காலமாக இருந்து வருவது பலரும் அறியாதது.

ஜேம்ஸ் பாண்ட் படங்கள் தயாரிக்க முடிவுசெய்தபின் அந்த படத்தை இயக்க பலரது பெயர் ஆலோசிக்க பட்டது அதில் ஹிட்ச்காக்கும் ஒருவர்.
ஆனால் முதல் படமான டாக்டர் நோ வை இயக்கிவர் டெரண்ஸ் யங்.
அதே போல் அப்படத்தில் ஜேம்ஸ் பாண்ட்வேடத்தில் நடிக்க பலரது பெயர்கள் பரீசீலிக்கபட்டன.
அதில் சூப்பர்மேனக நடித்து புகழ்பெற்ற கிறீஸ்டோபர் லீயும் ஒருவர்.. இயான் பிளமிங் தன்னுடைய உறவினராக இருந்த காரணத்தால் லீயை பரிந்துரைத்தார் ஆனால் அது நிராகரிக்கபட்டது.பிற்பாடு அதே பாண்ட் வேடத்தில் நடித்த ரோஜர் மூர் பெயரும் முதலில் பரிசீலிக்கப்ப்ட்டது ஆனால் வாய்ப்பு கிட்டியது என்னவோ நடிகர் சீன கானரிக்குத்தான். முதல் படம் உட்பட மொத்தம் ஏழு படங்களில் சீன்கானரி ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடித்தார்.
சீன்கானரியை காட்டிலும் அதிக படங்களில் பாண்ட்வேடத்தில் வந்தவர் ரோஜர் மூர்தான் . முதல் பாண்ட் வேடம் இவர் ஏற்ற போது இவருக்கு வயது 45 .. யார் சிறந்த பாண்ட் சீன்கானரியா ரோஜர் மூரா என பலரும் பட்டிமன்றமே நடத்தும் அள்விற்கு இருவருக்கும் ஆதரவு இருந்தது. இதன் பிறகு ஜார்ஜ் லெஸன்பி –ஒரு படத்திலும் ,திம்மோதி டால்டன் –இரண்டு படத்திலும்,,பியற்ஸ் பிராஸ்னன் ,-நான்கு படத்திலும்,தற்போது டேனியல் கிரேக் _இரண்டு படங்களிலும் ஜேம்ஸ் பாண்ட் வேடங்களில் நடித்துள்ளனர்.

சினிமா எனும் கவர்ச்சியான் ஊடகத்தை தன் அரசியலுக்கு லாவகமாக பயன்படுத்திய அமெரிக்க அராசங்கத்தின் இந்த தந்திரங்கள் காலத்தில் செல்லுபடியாகாமல் சரிந்து விழத்தொடங்கிவிட்டன .இந்த அசகாய சூரர்களின் நாயகத்ன்மைகள் எத்தனை போலியானவை என்பதை அமெரிக்க மக்களே இப்போது உணரதுவங்கிவிட்டனர் .

இப்போது சமீபமாக வில்லன்களுக்கான பஞ்சம் காரணமாக நாட்டையும் மக்களையும் விட்டு இயற்கைக்கும் கற்பனை மிருகங்களுக்கும் திருப்பிக்கொண்ட ஹாலிவுட்படங்கள் சமீபத்திய சுனாமிக்கு பிறகாவது எதார்த்துக்கு திரும்புமா என்பது கேள்விக்குறி

April 28, 2011

காந்தி மார்க்கட்டில் கள்ள பூனை : ஜெயமோகன் கடிதம் இரண்டு


அன்பர் இனியர் கோராளி ஜெயமோகன் அவர்களுக்கு

நான் சண்டைகளை தவிர்ப்பதற்கு காரணம் இரண்டு
படைப்பின் வலிமை மூலம் மட்டுமே கவனம் பெறுவதை விரும்புகிறேன்

இரண்டாவது நீங்கள் மாட்டடி மாங்காயடிக்காரர்..
வறட்டுத்தன வாதி. தர்க்கத்தை முன்னெடுத்து செல்ல ஒருபோதும் விரும்பாதவர். அதிகமாக பேசுவதன் மூலம் சுயத்தை பெரிதாக்க விரும்புபவர் ..

இந்த இரண்டு காரணங்களுக்காக உங்களது மன்னிப்பு கடிதத்தில் மீண்டும் பல கருத்து பிழைகள் . அத்துமீறல்கள் ஆகியவை கண்ட போதும் தவிர்த்து வந்தேன்.

மேலும் என்னைவிட பாதையில் சில அடிகள் முன்னால் நடந்திருப்பவர். நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டது எனக்கு மமதை ஏற்றிவிடாதிருக்கவும் நான் இரண்டாவது கடிதம் எழுதுவதை தவிர்த்து வந்தேன்.

ஆனால் 28-4 – 2011 அன்று உங்கள் வலைதளத்தில் ராஜேஷ் என்பவருக்கு பதில் அளிக்கும் சாக்கில் என்னை மீண்டும் திட்டமிட்டு சண்டைக்கு இழுத்துள்ளீர்கள்.

http://www.jeyamohan.in/?p=14644


ஐயா தயாபரர், பிரதாபரர் ஜெய மோகன் அவர்களே

காந்திக்கு எதிராக வாதம் செய்கிறேன் என்ற ஒரே காரணத்துக்காக என்னை குப்பை என்று விளம்பியுள்ளீர்கள் ஐயன்மீர்.மகிழ்ச்சி

நான் கேட்பது எல்லாம் என் புத்தகத்தை படித்தீர்களா
தயவு செய்து நான் ஆதாரமற்று ஏதேனுமெழுதியிருந்தால் சுட்டுங்கள். இப்படி பொத்தாம் பொதுவாக முதலில் கிறித்துவன் அப்புறம் இப்போது குப்பை ..

இதெல்லாம் என்ன சார் ..

எதற்கு உங்களுக்கு என் மேல் இத்தனை பகை வெறுப்பு வன்மம். இப்படியே நான் தொடர்ந்து எழுதினால் அகிம்சையின் பேரால் என்னை கொலை செய்யக்கூட ஆளனுப்புவீர்கள் என்றே அஞ்ச தோன்றுகிறது .

எதற்கு இந்த கொலை வெறி ...

ஆதாரம் சுட்டுங்கள் என வாய்கிழிய கத்துகிறேன். அதற்கு கொஞ்சமும் அசையாமல் உங்களுக்கு பிடிக்காத பெரியாரையும் அம்பேத்காரையும் மார்க்ஸையும் எழுதிய ஒரே காரணத்துக்காக என் மேல் தொடர்ந்து வெறுப்பை உமிழும் உங்கள் தந்திரம்தான் என்ன..

புரிகிறது.... உங்கள் கருத்துக்களுக்கு எதிராக புதியதாக ஒருவன் வளர்ந்து வருவதை தாங்கிக்கொள்ள முடியாமல் தொடர்ந்து இப்படி.கிறித்துவன் குப்பை என அடித்து எழுதுவதன் மூலம் வளர்ந்து வரும் வேளையிலேயே நசுக்கி ஒழிக்க வேண்டும் என திட்டமிடுகிறீர்கள்


நான் நாயகன் தொடரில் இதுவரை பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் மாண்டேலா போஸ்..சே குவேரா ,மார்டின் லூதர் கிங்..சார்லிசாப்ளின் . வான்கா அன்னை தெரசா உள்ளிட்ட பலரது வாழ்க்கையை எழுதியுள்ளேன் அனைத்து புத்தகங்களும் தொடர்ந்து மறுபதிப்புகள் கண்டு விற்பனையாகி வருகின்றன..ஆனால் இதுவரை எந்த ஒரு தகவல் பிழையோ மறுப்பு கடிதமோ வந்ததில்லை .எத்தனையோ பிராமண நண்பர்கள் கூட இப்போதுதான் பெரியார் மற்றும் அம்பேத்கர் அவர்களை புரிந்து கொண்டோம் என வெளிப்படையாக பாராட்டியுள்ளார்கள். உங்களை போல ஆதாரமில்லாமல் எழுதி எவர் முன்பும் மண்டியிட வேண்டிய அவசியம் எனக்கு நேர்ந்தததுமில்லை .

வடிவேலு போல மன்னிப்புக்கு மண்டியிடுவதும் அடுத்த நிமிடமே மார்தட்டுவதையும் தொடர்ந்து உங்களிடம் பார்த்து வருகிறேன். உண்மையில் ஒரு எழுத்தாளனாக உங்கள் நடவடிக்கைகள் கவலையளிக்கிறது.

தயவு செய்து இந்த வெறுப்பை விலக்குங்கள் .ஒருவேளை அதிக சூடுகாரணாமாக இந்த வெறுப்புணர்ச்சி கூடியிருக்கலாம் கன்னியாகுமரியில் வெய்யில் அதிகம் என்பதற்காக நான் என்ன செய்ய முடியும். .தயவு செய்து அருகிலிருக்கும் பெட்டி கடையில் சென்று ஒரு சோடா குடியுங்கள் பிரச்சனை தீரும் ..அதை விட்டு கம்யூட்டர் இருக்கு கை இருக்கு இருக்கவே இருக்கான் அஜயன்பாலா அப்புறம் காந்தி என நினைத்து இஷ்டத்துக்கு கிறுக்கினால் நிச்சயம் நட்டம் எனக்கில்லை

உண்மையில் காந்தியை பற்றி பேச உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது

காந்தியின் புகழ்பெற்ற தத்துவமே அகிம்சைதான். அகிம்சை பரந்த அன்பின் நீட்சி.

ஆனால் உங்கள் கடந்த காலத்தை சற்று திரும்பி பாருங்கள் ..அதில் எங்காவது அஹிம்சைக்கு இடம் உள்ளதா .. அங்கிருப்பதெல்லம் வெறும் வெறுப்பு மட்டும்தானே..
ஒரு கவி நண்பரது ஊனத்தை குற்றபடுத்தி மாற்று திறனாளிகள் கூட்டாக சேர்ந்து வழக்கு போடுமளவுக்கு அவரை பற்றி கதையிலும் கட்டுரையிலும் நீங்கள் எழுதிய வரிகளில் இருப்பதெல்லம் அன்பா இல்லை வெறுப்பா.
சக எழுத்தாளர்களை பற்றி மிக கேவலமாக வலைத்தளத்தில் எழுதி வெறுப்பையும் வன்மத்தையும் வளர்த்தீர்கள்

குப்பை யார் நீங்களா நானா

தமிழ் சூழலுக்கு உங்களால் எந்த நற்பயனும் கிட்டவில்லை.. தமிழ் கலாச்சாரத்தின் மீதும் படைப்புகள் மீதும் உங்களுக்கு வெறுப்புகள்தான் சங்க இலக்கியபடைப்புகளில் குடியும் ஒழுக்க மீறலும் தவிர ஒன்றுமில்லை என கூறியதை காலம் இன்னும் மறக்கவில்லை . தமிழ் கலாச்சார அடையாளங்களை
அழிப்பதில் எப்போதும் முனைப்பாக செயல்பட்டு வருகிறீர்கள் அதற்கு என்ன காரணம் என்றுதான் தெரியவில்லை. தான் எழுதும் மொழியின் மீது அதன் அடையாளங்கள் மீது ஒரு எழுத்தாளனுக்கு வெறுப்பு எப்படி வரும் என்றுதான் எனக்கு தெரியவில்லை..

உங்களது அரசியல் மேதாவித்தனங்களுக்காக எங்கோ உண்ணவிரதம் இருந்த அன்னா ஹாசாரேவுக்கு ஆதரவாகவும் ஐரோம் ஷர்மிளாவையும் அவரது போர்ட்டத்தையும் கொச்சை படுத்தும் நீங்கள் நம் அருகில் கண் முன் கர்ண கொடூர ஈழ படுகொலைகள் நிகழ்ந்த போது என்ன செய்துகொண்டிருந்தீர்கள்.

வெறும் காந்தி வேடத்தில் வந்து ஏமாற்றும் மனிதாபிமானமற்ற சுய மோகம் கொண்ட உங்களை தமிழகம் தாங்குவது அதன் பெருந்தன்மையினால் தான் என்பதை உணர்ந்து கொண்டு தமிழ் மண்ணிடமும் ஒரு எக்ஸ்ட்ரா மன்னிப்பு கேட்டுக்கொள்ளுங்கள் .. அது நாடகமாக இருந்தாலும் தமிழ் உங்களை மன்னிக்கும்


அதே சமயம் இதுநாள் வரை நீங்கள் எதிர்த்து வந்த அ.மார்க்ஸையும் சுந்தரராமசாமியையும் எனக்கு எழுதிய மன்னிப்பு மடலில் துணைக்கழைத்திருக்கிறீர்கள் ..

உங்களால் குருவாக அழைக்கப்பட்ட சுந்தர ரமசாமி அவர்கள் இறந்தவுடன் நீங்கள் இரண்டவது முறையாக எழுத்தின்மூலம் அவருக்கு சமாதிகட்டியது ஊரறிந்த சேதி .

இப்போது நீங்களே அழைத்தாலும் அவர் எப்படி திரும்ப வருவார்.

இறுதியாக உங்களுக்கு நான் வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்

நேரடியான சவால்.. முடிந்தால் பொது மேடையில் என் புத்தகங்களோடு வாருங்கள் நான் ஆதரமற்று எழுதியதாக சொல்வதை நிரூபியுங்கள்

அதே சமயம் உங்களது நாவல்களையும் சில புத்தகங்களையும் மலையாள திரைப்பட சிடிக்களையும் கையில் கொண்டுவருகிறேன்

யார் குப்பை என்பதை பொதுவில் தீர்மானிப்போம்

நான் தோற்றால் உங்களிடம் அல்லது மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்

நீங்கள் தோற்றால் யாரிடமும் மன்னிப்பு கேட்கவேண்டாம்

சிவாஜி எம்ஜிஆர் இருவரிடம் மட்டும் மன்னிப்பு கேட்டால் அதுவே போதும்.


பல்லாயிரம் பக்கம் எழுதலாம் ஒரு பொய் அனைத்தையும் எரித்துவிடும்.

அன்புடன்
அஜயன்பாலா

*(உண்மைக்காக போரடுபவன் போராளி பொய்க்காக போரடுபவன் கோராளி)

April 26, 2011

எஸ் ராமகிருஷ்ணனின் சில யாமங்கள் எனது அறையில் ..




..
மதுரையில் இருந்த போது நண்பர் இயக்குனர் அருண்மொழியின் அழைப்பு. குரலில் பதட்டம். கொரிய அரசாங்கமும் சாகித்ய அகாதமியும் இணைந்து சாம் சங் நிறுவனத்தின் உதவியுடன் வழங்கும் தாகூர் விருது இந்த ஆண்டு எஸ். ராமகிருஷ்ணனின் யாமம் நாவலுக்கு கிடைத்திருப்பதாகவும் முடிந்தால் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து சொல்லும்படியும் கூறினார்.

அவரிடம் எப்படி வாழ்த்தை பகிரலாம் என யோசித்துக்கொண்டே அவசரமாக விரல்கள் செல்போனில் எஸ். மற்றும் ஆர். பட்டன்களை மாற்றி மாற்றி அழுத்தி தேடியது. இல்லை தொலைபேசி மாறியதில் எப்படியோ எண் விடுபட்டுள்ளது. அருகிலிருந்த நண்பரிடம் கேட்டேன் அவரிடமும் இல்லை.யாருக்காவது போன் செய்து எண்ணை வாங்கலாமா என நினைத்து பின் வாழ்து சொல்வதின் வழமையான சம்பிரதயங்களின் காரணமாக அதனை தவிர்த்து ராமகிருஷ்ணன் குறித்து நினைவலைகளை நண்பருடன் பகிரதுவங்கினேன்.

முதன் முறையக கவுதம் சித்தார்த்தன் தான் எனக்கு எஸ்.ராமகிருஷ்ணனனை ஒரு புத்தக கண்காட்சியில் அறிமுகபடுத்தினார். பதிலுக்கு எஸ்ராவும் என்னை தெரியும் என்றார். எனக்கு ஆச்சர்யம் .பிறகு விக்ரமதித்யன என்னை பற்றி சொல்லியிருப்பதாக கூறி கைகுலுக்கினார்.அப்போது நானும் விக்கியும் ஒரு பத்திரிக்கையில் ஒன்றாக பணிபுரிந்துகொண்டிருந்தோம்.அப்போதைய இலக்கிய உலகிற்கு முகநூல் ட்விட்டர் எல்லாம் விக்கிபீடியா எல்லாமே விக்கிதான். சிறிய ஆள் பெரிய ஆள் என்றில்லை .அவர் தன்க்குள் அங்கீகரித்தால் போதும் அவ்வளவுதான் .அதன் பிறகு அவரே தவிர்த்தாலும் முடியாது. இலக்கிய முத்திரை அவர்மீது விழுந்துவிடும்.

இப்படியாக என் பெயரும் அவர் மூலம் குறுகிய காலத்தில் கோவில்பட்டி முதல் கோடம்பாக்கம் வரை சென்றுகொண்டிருந்தது.எஸ்ராவும் என்னை பற்றி முன்கூட்டியே அறிந்திருந்திருந்தார்

அந்த முதல் சந்திப்புக்கு பிறகு எஸ்ராவையும் கோணங்கியையையும் அடிக்கடி அப்போது தி நகரில் இருந்த முன்றில் புத்தக அலுவலகத்தில் மாலை நேரங்களில் பார்க்க முடிந்தது. இவர்களை போல பிரேமிள், நாகார்ஜீனன்,கோபிகிருஷ்ணன், .. லதாராமகிருஷ்ணன் ஆகியோரும் மாலை வேளைகளில் அங்கு வருவார்கள். என்றாலும் கோணங்கியும் ராமகிருஷ்ணனும் பலரிடமும் இணக்கமாகவும் இலகுவாகவும் அனைவரிடமும் பழகினர். மேலும் அப்போது இலக்கிய உலகில் அவர்கள் இருவரும் பெரும் வசீகரத்துடன் பேசப்பட்ட காலம்.

இவர்களை சந்தித்து நட்பு பேணுவதற்காக நானும் அங்கு அடிக்கடி செல்வேன். ஒரு எழுத்தாளன் ஆகிவிடும் உத்வேகத்தில் இருவரிடமும் என்னை வெளிப்படுத்த பல சந்தர்ப்பங்களில் முயன்று தோற்றுகொண்டிருந்தேன் .

முன்றில் மா அரங்கநாதன் வசித்திருந்த பழவந்தாங்கலில் அடுத்த தெருவில்தான் என் அறையும். கடை மூடியபின் இருவரும் ஒன்றாக ரயிலில் வீடு திரும்புவோம். மா. அரங்க நாதன் வீட்டு மாடியில் வரிசையாக சில அறைகள். அதில் ஒரு அறை எழுத்தாளர்களுக்கானது.வெளியூரிலிருந்து வரும் பல எழுத்தாளர்கள் அந்த அறையில் இரவு தங்குவது வழக்கம். அந்த அறையில் அமர்ந்துதான் இலக்கிய சிந்தனைக்காக என் முதல் கட்டுரையை எழுதிய ஞாபகம்.

அன்று கடை மூடியதும் எஸ்ராவும் கோணங்கியும் அந்த அறையில் தங்க முடிவெடுத்து பழவவந்தாங்கலுக்கு ரயில் மூலம் திரும்ப நானும் அவர்களுடன் வந்துகொண்டிருந்தேன். இன்று எப்படியும் என் அறைக்கு அவர்களை அழைத்து சென்று நான் அதுவரை எழுதியிருக்கும் நோட்டுகளை காட்டி நானும் ஒரு மாயக்கதைகள் எழுதுவதில் ஆர்வமிக்கவன் தான் என்பதை உணர்த்த முடிவெடுத்து மிகவும் பத்ட்டத்தில் இருந்தேன். ஆனால் என் விருப்பத்தை பேச இடமளிக்காதபடி எங்களுடன் வந்த இன்னொரு வாசகர் ..அவரும் என்னை போல சமீபமாய் இலக்கிய பூச்சியால் கடிபட்டு பதட்டமாக இருந்தார். அவர் தொடர்ந்து இருவரிடமும் தான் படித்த புத்தகங்கள் குறிப்பாக ஆங்கில கிளாசிக்குகள் பற்றியும் கார்டூன்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். எனக்கோ கொஞ்சம் கடுப்பு. சரி இன்னைக்கு நாம் நினைத்த காரியம் அவ்வளவுதான் என நொந்தபடி உள்ளூர அந்த நபரையும் அவரது ஆங்கில புத்த்க அறிவையும் சபித்தபடி அமைதியாக பயணித்தேன் . பழவந்தாங்கல் வந்தது. எஸ் ராவும் கோணங்கியும் சட்டென என் பக்கம் திரும்பி உன் அறை இங்குதான் இருக்கிறது என்றாயே அங்கு போகமலாமா என அவர்களாக கேட்க மனசிலிருந்து ஒரு நீரூற்ரு பீறிட்டு கிளம்பியது.

டேய் அவன் பேசிபேசியே கொன்னுட்டான் நேரா அறைக்கு போனா அவனும் எங்ககூட வந்துடுவான் அவங்கிட்டருந்து தப்பிக்கத்தான் உங்கிட்ட வரோம் .. பரவாயில்லை உன்னை பாத்தா நல்ல பையான தெரியுது அமைதியா இருக்க என இருவருமே கூறினர். அன்று இரவு இருவரும் சாப்பிட்டு சாவகசமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் என் நோட்டு புத்தகத்தை நைசாக அவர்கள் முன் கொண்டு வைத்தேன் .அந்த நோட்டு கிட்டத்தட்ட என் கற்பனைகளின் சிதறலான உயிரணுக்களின் எழுத்துரு. அவ்வப்போது மனதில் தோன்றும் கதைகள் மற்றும் அன்று பிலிம்சேம்பரில் பார்த்த உலகசினிமா அனுபவங்கள்.. ஆகியவற்றை அதில் கிறுக்கியிருந்தேன். அதில் நான் கிறுக்கியிருந்த தாண்டவராயன் மற்றும் முருகேசன் ஆகிய இரு கதைகளை படித்துவிட்டு இருவரும் பாராட்டினர் . மறுநாள் ஞாயிறு பகல் முழுக்க அவர்களுடன் கழிந்தது. அப்போது கோணங்கியின் பட்டுபூச்சியின் மூன்றாம் ஜாமம் தொகுப்பு உருவாக்கிக்கொண்டிருந்த நேரம் . இருவருமே அந்த கதைகளின் உலகில் இருந்தனர். அராபிய கதைகளின் ஆயிரத்தோரு இரவிலிருந்தும் விக்ரமாதித்தன் கதைகளின் உலகத்திலிருந்தும் குள்ளர்களும் கடல்கொள்ளையர்களும், அண்ரண்டா பட்சிகளும், பேசும்கிளிகளும் ,கதை சொல்லும் பொம்மைகளும் அவர்களது பேச்சின் மூலம் என் அறைக்குள் வரத்துவங்கினர். அதனால் ஒரு வினோதம் மூவரையும் சுற்றி வார்த்தைகள் மூலம் வலை பின்னியிருந்தது.

அன்று மாலை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அவர்களை வழியனுப்ப நான் காத்திருந்த அந்த கணங்கள் தான் என் வாழ்க்கையை அர்த்தபடுத்திய கணங்கள்.

அப்போது நான் எழுதவிருக்கும் ஒரு கதை பற்றி அவர்களிடமும் சொன்னேன் . முகம் எனும் அந்த கதையை கேட்ட கோணங்கி

”டேய் தம்பி இனி நீ சினிமாவை தேடி ஓடாத .. நீ எங்க கூட இருக்கவேண்டியவன்டா .. ராமகிருஷ்ணனை அடிக்கடி பாத்துக்க..”, என சொல்ல ராமகிருஷ்ணனும் அதை ஆமோதிப்பது போல சிரித்தபடி தலையசைத்தார். கிட்டதட்ட மூன்று மணிநேரம் இப்படி ரயில் நிலையத்திலேயே அமர்ந்து பெசிக்கொண்டிருந்தோம் . சட்டென நேரமாகிவிட்டதை உணர்ந்து அவர்கள் அப்போது ஸ்டேஷனுக்குள் வந்த ரயிலைபிடிக்க புறப்பட்டனர் . கையசைத்தபடி அவர்களை வழியனுப்ப ரயிலின் அருகே சென்ற என்னை .. என்னடாதம்பி ஏன் வேடிக்கை பாக்குற வா நீயும் ஏறிக்கோ
என அழைத்தனர் . நானும் யோசிக்கவில்லை சடாரென அவர்களுடன் ஏறிவிட்டேன். கையில் காசில்லை. உடுத்த மாற்று ஆடைகளில்லை ..ஆனால் எதையும் யோசிக்காமல் வழியனுப்ப வந்த நான் பயணியாகி விட்டேன் . அவர்கள் அழைத்தவுடன் தொற்றிக்கொண்ட என் சுபாவம் காரணமாக அவர்களுக்கு என்னை மிகவும் பிடித்து போனது. அதன்பிறகு மூன்றுநாட்கள் .. நானும் கோணங்கியும் ராமகிருஷ்ணனின் பரமரிப்பில் சென்னையில் சுற்றி திரிந்தோம். அப்போது ராமகிருஷ்ணன் குங்குமத்தில் வேலைசெய்து கொண்டிருந்தார். அவருக்கு கே.கே நகரில் ஒரு அறை இருந்தது. இரவில் கோணங்கியும் ஏஸ்ராவும் படுத்துக்கொண்டே பேசிக்கொண்டிருக்க அவர்களது வார்த்தைகளின் உலகம் தரை வழியாக என் உடம்பை நோக்கி ஊர்ந்து வர துவங்கியது. வெறும் சிலிட்ட சிமண்ட் தரையில் மகத்தான குளிர்ச்சியை அன்று இரவில் உணர்ந்தேன் . இரவு முழுக்க அவர்கள் பேசிக்கொண்டிருந்த்னர். நானும் கண்விழித்தபடி கேட்டுக்கொண்டிருந்தேன். தொடர்ந்து மூன்றுநாட்கள் அவர்களின் உரையாடலைகேட்டபடியே அவர்களுடன் ஒரு மாண்வனை போல திரிந்தேன். கதை எழுதுவதும் எழுத்தாளனாக மாறுவதும் உலகின் அதி உன்னத லட்சியமாக என்னுள் கடலிலிருந்து மேலெழும் மலைகளை போல உருக்கொண்டன.

கோணங்கிக்கும் எஸ் ராமகிருஷ்ணனுக்கும் அச்சமயம் நல்ல ஒத்திசைவு இருந்தது. இருவருமே ஒருவரில் ஒருவர் அதிகமாக அறிவை பகிர்ந்துகொண்டனர். பாதித்துக்கொண்டனர். எஸ்ரா வுக்கு கோணங்கி மேல் அவருடைய படைப்புகள் மேல் அபரிதமான மரியாதை இருந்தது. அதே போல கோணங்கியும் எஸ்ராவின் ஆங்கில அறிவின் வழியாக பல தகவல்களை படைப்புகளை பெற்றுக்கொண்டார். இருவரது படைப்புகளிலும் இருவரும் பங்கெடுத்துள்ளனர். இலக்கிய இரட்டையர்கள் எனுமளவிற்கு அவர்கள் இருவரும் ஒருவரில் ஒருவர் அடையாளம் கொண்டிருந்தனர். இம் மூன்றுநாட்களில் நான் அடைந்த உள எழுச்சிதான் பிற்பாடு சினிமாவை மீறி நானும் ஒரு எழுத்தாளனாக அடையாளம் பெற என்னை உந்தித்தள்ளின.



இதன் தொடர்ச்சியாக அவர்கள் விருட்சம் அழகிய சிங்கர் வீட்டுக்கு ஒருநாள் மதிய நேரம் சென்றுள்ளனர். உன் இதழுக்கு வந்த கதைகளை கொண்டுவா பார்க்கலாம் என்று அழகிய சிங்கரிடம் கூற,அவரும் அவர்கள் முன் தான் வீண் என ஒதுக்கிய கதைகளை கொண்டுவந்து வைத்தார். அவற்றை ஒவ்வொன்றாக பார்த்துவந்தவர்கள் என் முதல் கதையான் தண்டவரயன் கதையின் கையெழுத்து பிரதியை பார்த்துள்ளனர். தாண்டவரயன் எனும் அந்தபெயர் அவர்களுக்கு என்ன காரணத்தினாலோ மிகவும் பிடித்திருந்தது.அந்த பிரதியை கையிலெடுத்து சிங்கரிடம் தந்து இதை நீ அடுத்த இத்ழில் போடு.. என தந்துள்ளனர். இப்படியாகத்தான் என் முதல் கதை பிரசுரம் அச்சாக இருவரும் காரணமாக இருந்தனர்.

அதன்பிறகு அவ்வ்போது ராமகிருஷ்ணனை சந்திக்க செல்லும்போது நல்ல புத்த்கங்களை குறிப்பாக சிறுகதை தொகுப்புகளை கொடுத்து படிக்க சொல்வார். அவ்வப்போது அவரும் என் அறைக்குவருவார் .. கிராம வீடுகள் போல ஓடு கூரைவேய்ந்த அந்த வீட்டின் முன் பகுதியில்தான் யூமாவாசுகியும் வசித்து வந்தார் . என் அறைக்கும் யூமா வின் அறைக்கும் இடையில் ஒரு தென்னை மரம் கிணறு செம்பருத்தி செடிகள் ஆகியவை இருந்தன. இந்த சூழல் காரணமாக கோணங்கிக்கும் எஸ்ராவுக்கும் எனது அந்த அறை மிகவும் பிடித்திருந்தது . அவர்கள் வந்தால் இரவு நெடுநேரம் அவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டிருப்பேன். ஒருநாள் எஸ்ரா என் பழவந்தாங்கல் அறையில் எனக்கு முன் வந்திருந்து காத்திருந்தார்.. அப்போதுநான் உதவி இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருந்தேன். அறைக்கு வந்ததும் அசதி காரணமாக அவர் பெசிக்கொண்டிருக்கும்போதே தூங்கிவிட்டேன் ..மறுநாள் காலை எழுந்தவுடன் “அவர் உன்னை தேடி வந்திருக்கிறேன் நீ பாட்டுக்கு தூங்குகிறாயே உனக்கு இலக்கியத்தின் மேல் இருக்கும் அக்கறை இதுதானா என கொபத்துடன் கேட்டார் . அது ஒரு எழுத்தாளனின் கொபம் மட்டுமல்ல இலக்கியத்தை தீவிரமாக உபசிக்கும் ஒரு தபசியின் கோபம். அதன்பிறகு அவர் என் அறைக்கு வரவில்லை

அதன் பிறகு பலமுறை அவர் சென்னை வரும்போதெல்லாம் அவரை தேடி சந்தித்துள்ளேன்..படித்த கதைகள் குறித்து ஆர்வத்துடன் பகிர்ந்துகொள்வார். மணிக்கணக்கில் அவருடன் இடைவிடாமல் பேசும் வாய்ப்பும் நேரமும் எனக்கு கிட்டியுள்ளது.எனக்கு தெரிந்து தமிழின் எந்த இலக்கியவாதியும் தன்னை தேடி வருபவர்களிடம் இப்படியாக தன்னிடமிருக்கும் அறிவையும் ஞானத்தையும் பகிர்ந்துகொண்டதில்லை. ஒருமுறை அவரது அட்சரம் இதழுக்கு என்னிடம் கதை கேட்டார். எனது மோசமான கையெழுத்துடன் கூடிய காகிதங்களை அடித்தல் திருத்தலுடன் அப்படியே கொடுத்தேன் இப்படியா ஒருபத்திரிக்கைக்கு கதை தருவாய் என கடுமையாக திட்டி திருப்பி கொடுத்தார். எனது அசட்டுதனங்களை இப்போது உணர்கிறேன் .

தொடர்ந்து பல்வேறு கரணங்களுக்காக அவருடன் முரண் பட்டிருக்கிறேன்.
சண்டையும் போட்டிருகிறேன் அவரும் என்னை காயப்படுத்தியுள்ளர் . துளியளவு வன்மமும் கோபமும் அக்காலங்களில் என்னிடம் இருந்ததுண்டு. சட்டென ஒருநாள் பனித்திவலைகள் போல அவை என்னுள் மறைந்தும் போனதுண்டு அவர் மீதான விமர்சனங்கள் இன்னமும் இருக்கிறது .ஆனால் அவை மலையை அடிவாரத்தில் பார்க்கும் போது அதை மறைத்து நிற்கும் சிறு மரங்கள் போன்றவை .

நான் இப்போது விலகி வந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன் .. மரங்கள் சிறியதாக தெரிகிறது .மலை இன்னும் இன்னுமாய் பெரியதாகிக்கொண்டிருக்கிறது

அவருக்கு கிடைத்த விருது அவரது கடும் உழைப்புக்கும் அவரது இழப்புக்கும் ஈடில்லாதது பல உயரங்களை தொடவிருக்கும் அவரது அடுத்தடுத்த எழுத்து பணிக்கு என் வாழ்துக்கள் .

அவர் குறித்த இவ்வளவு அபிப்ராயம் கொண்ட நான் அவருக்கு பரிசு கிடைத்தாக தெரிந்ததும் வெறுமனே வாழ்துக்கள் என சொல்லிக்கொண்டால் அது எவ்வளவு நாடகத் தன்மை கொண்டதாக இருக்கும் என நினைத்து பாருங்கள். அதன் பொருட்டே இந்த பதிவு

April 18, 2011

ஜெயமோகன்: மதவெறியால் உண்டாகும் மனபதட்டங்கள்

ஒரு எதிர்வினை கடிதம்

ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..!
நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையில் இவ்வளவு பெரிய ஆய்வாளராக இருப்பீர்கள் என நான் கனவிலும் நினைக்கவில்லை. அடேங்கப்பா என்ன ஆராய்ச்சி! என்ன தத்துவம்!.

உங்கள் வலைத்தளத்தில் ஏப்ரல் 16ம் நாள் சுரேஷ் எனும் இனியர் ஆங்கிலத்தில் காந்தி குறித்து கேட்ட கேள்விக்கு
இணைப்பு:http://www.jeyamohan.in/?p=14191
தங்களின் பதில்
//
காந்தியைப்பற்றி திட்டமிட்டு பரப்பபடும் எல்லா அவதூறுகளுக்கு பின்னாலும் இந்தியாவைத் துண்டாடுவதற்கான ஒரு நோக்கம் இருப்பதைக் கவனித்தாலே இது யாரால் எதற்காக உருவாக்கப்படுகிறது என்பது புரியும். இந்த நாடு துண்டுகளாகச் சிதறினால் யார் லாபம் அடைவார்கள்?
இத்தகைய அவதூறுகளின் விளைவுகள் நாம் நினைப்பதைவிட கடுமையானவை. நம் சூழலில் எதையும் முறைப்படி வாசித்து, தகவல்களைத் தெரிந்துகொண்டு, முடிவுகளுக்கு வரக்கூடியவர்கள் ஒரு சதம் பேர்கூட இருக்கமாட்டார்கள். மிச்சபேர் அவர்கள் முன் வைக்கப்படும் கருத்துக்களையே அபிப்பிராயங்களாகக் கொண்டவர்கள்
சமீபத்தில் அம்பேத்கார் என்றபடம் முழுக்கமுழுக்க காந்தியைப்பற்றிய அவதூறுகளுடன் ஒரு இஸ்லாமியரால் [ஜப்பார் பட்டேல்] எடுக்கப்பட்டிருந்தது. அவர் இஸ்லாம் பற்றிய பாபாசாகேபின் கருத்தை ஒரு வரியாவது தன் படத்தில் சேர்க்கும் துணிவுடையவராக இருந்தால் அவரை நேர்மையானவராக ஏற்றுக்கொண்டிருக்க முடியும்
//

இந்த பதிலை கண்டபின் தான் என் இத்தனை மலைப்பு... ஆச்சர்யம் இத்யாதி இத்யாதி..

அதிலும் என்னை பற்றி நீங்கள் தந்துள்ள தகவல்தான்
ஸ்..ஸ்ஸ் .. எப்படி சார் இது ?!

இத்தனை நாள் பிறப்பால் நான் ஒரு இந்து என்றுதானே நினைத்துக்கொண்டிருந்தேன் . என் அப்பாவும் அம்மாவும் அப்படித்தானே சொன்னார்கள் .. ஒருவேளை என்னை ஏமாற்றி விட்டார்களோ?

இல்லை என் அப்பா அம்மாவுக்கே கூட தெரியாத என் மதம் பற்றிய ரகசியத்தை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்களா?

பலே பலே பெரிய்ய்ய்ய்ய் ஆள் சார் நீங்கள்!

இது எனக்கு முன்பே தெரிந்திருந்தால் எனக்கு பிடிக்காத என் இயற்பெயர் பாலாஜியை கூட சூசை ஜோ மார்டின் என ஸ்டைலாக வைத்திருக்க்லாம். பாலாஜி என்ற பெயர் பிடிக்காமல் .. அஜயன் பாலா என பிற்பாடு எனக்கு நானே வைத்த பெயரையாவது மாற்றிக்கொண்டிருக்கலாம் என்ன செய்யறது உங்களூடைய இந்த அறிவுஜீவித்த்னமான கண்டுபிடிப்பு நெம்பர் 2011 அப்பொது எனக்கு தெரிந்திருக்கவில்லை

அட இத்தனை நாள் எப்படி தெரியாம போயிடுச்சேன்னு
குற்ற உணர்ச்சி வேற என்னை அரிக்கிறது
என்ன செய்யலாம் சொல்லுங்கள் ..

சரி அதை விடுங்கள்

எப்படித்தான் கண்டுபிடித்தீர்கள் நான் கிறித்துவன் என்று அதை சொல்லுங்கள்

என் நண்பன் சொல்கிறான் உங்கள் வீட்டில் ஒரு மந்திர பெட்டி இருக்கிறதாம் அதில் ஆள் பெயரை சொன்னால் அவர்களது மதம் என்ன என சொல்லுமாம்

உண்மையா சார்.. உண்மையிலேயே பெரிய அறிவாளி சார் நீங்க .. உண்மையில சார் இதை நான் தாமாசுகாக கூட சொல்லல்லை உண்மையிலயே .. நம்புங்க சார் நான் உங்க்ளை பாத்து வியக்கறேன்

சரி சார் அந்த சுரேஷ் தம்பி காந்தி பத்திதான கேட்டார் அதுக்கு ஏன் சார் என் பேரை சொல்லி பெரிய ஆள வேற ஆக்கிட்டீங்க உண்மையிலேயே நான் குடுத்துவச்சவன் சார் .. ஒரே நாள்ள என்ன பெரிய ஆளா வேற மத்திட்டீங்க

ஆனா என் பிரண்டு என்ன சொல்றான் தெரியுமா சார்
டேய் அவருக்கு பொழப்பே இதுதாண்டா .. எப்பல்லாம் பப்ளிகுட்டி குறையுதோ அப்பல்லம் யாரையாவது வம்புக்கு இழுத்து அவரு இவரை திட்ட அப்ப அடிக்கடி ஜெயமொகன் ஜெயமோகன் னு ஆயிரம் தடவை இவர் பேர் பிரசுரமவும்ல்ல அதுக்காகத்தான்னு சொல்றான் . இப்படித்தன் சாருநிவேதிதா கூட அடிக்கடி வம்பு பண்ணீனார் .. இப்ப அவரும் துக்ளக்ல எழுதி அவர் ஆளாயிட்டதால அவரை வம்புக்கிழுக்க முடியலை இப்ப உன்னை புடிக்க ஆரம்பிச்சிட்டாருன்னு சொல்றான் ..

அப்படியா சார்

அப்ப உண்மையிலயே நீங்க சண்டை போடற அளவுக்கு நான் பெரிய ஆளா சார்

எப்படி சார் உங்களுக்கு இந்த கருணை வந்தது .இந்த கருணையை கூட வியக்கறேன் சார் உண்மையிலயே நான் உங்களை வச்சு காமடி கீமடி எதுவும் பண்ணல ,, சீரியஸா வியக்கிறேன் >>ச்சே என்ன பெருந்தன்மை

சரி சார் உங்களுக்கு இன்னொரு தகவல்
அந்த மக்கள் தொலைக்காட்சி தொடர் நான் எடுக்கலை
அந்த தொடருக்கு வெறும் திரைக்கதை வேலை மட்டும்தான் நம்மோளடது. டைட்டில் கார்ட் கூட இப்படித்தான் போடுவாங்க

செல்லையான்னு ஒரு நண்பர்தான் மக்கள் தொலைக்காட்சிக்காக தயாரித்தார்

நீங்க அதை பாத்துருந்தா தெரிஞ்சுருக்கும் .. யாரோ சொல்றதை கேட்டு பதட்ட பட்டுட்டீங்க ..எழுதியும் பூட்டீங்க

சரி அப்படியே உண்மையிலயே நீங்க பாத்திருந்தீங்கன்னா உங்களுக்கு அதுல எதாவது ப்ரச்னைன்னா எங்கிட்ட கேட்டு எழுதலாம் அல்லது ப்ளாக்ல அதுக்கு உரிய மறுப்பு தெரிவிக்கலாம் . இப்பவும் ஒண்ணும் கெட்டு போகலை. அந்த திரைக்கதைல எழுதுனதை தான் விகடன்ல புத்தகமாவும் வெளியிட்ருக்காங்க .வாங்கிபடிங்க. படிச்சுட்டு எழுதுங்க நான் பதில் சொல்றேன் ..

அதைவிட்டுட்டு பொத்தாம் பொதுவா ஜாபர் பட்டேல் இஸ்லாமியர் அஜயன்பாலா கிறித்துவர் அதனாலதான் தொடர்ல காந்தியை விமர்சிக்கிறர்னு சொல்றீங்களே
இது எந்தவிததுல நியாயம்?

சரி ஜாபரைத்தான் அவர் பேரைவச்சு தெரிஞ்சுகிட்டீங்க
அஜயன்பாலாவை எதைவச்சு கிறித்தவன்னு முடிவுகட்டினீங்க

இப்படி விவரமில்லாம போதிய ஆய்வில்லாம பேசறதுதான் இத்தனை நாள் நீங்க எழுதுன கட்டுரைகளின் லட்சணமா.

அப்படீன்ன நீங்க இதுவரைக்கும் எழுதுன ஒட்டுமொத்த கட்டுரைகளும் வாதமும் இப்படி பொத்தாம் பொதுவா போற போக்குல எழுதப்பட்டதுன்னு நானும் முடிவுக்கு வரேன்.. மத்தவங்களும் இனியாவது தெரிஞ்சுக்கிடட்டும்

உண்மையில் நான் எல்லாமதங்களையும் மதிக்கறவன்
மதங்களை அடிப்படையா வச்சுகிட்டு மத்த மதத்தவங்க மேல இப்படி வெறுப்பை உமிழற உங்களை மாதரி ஆளுங்க எந்த மதத்தில் இருந்தாலும் அந்த மனிதர்களை வெறுக்கறேன் .

உண்மையில என் பிரண்டு ஒருத்தர் என்ன சொல்றாருன்னா
ஜெயமோகனுக்கு காந்தி ஒரு வேஷம்.. இந்த காலத்துல நேரடியா மததை ஆதரிக்க முடியாது ..எல்லாரும் விவரமாயிட்டாங்க .. இதுவேற இல்லாம ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ் ன்னு மத்தவங்களுக்கும் தெரியும்.

அது தெரிஞ்சா தமிழ் நாட்டில நம்பளை யாரும் எழுத்தாளராவே மதிக்கமாட்டங்க அதனால காந்தி அதுக்கு பாதுகாப்பான இடம்னு நெனச்சி அதுல போயிருக்காருன்னு சொன்னான் .

அது ஓரளவுக்கு உண்மையாகத்தான் எனக்கும் படுது
ஏன்னா நீங்க இன்னும் இந்துமத வெறியரா இருக்கிறதுக்கு மேலே சொன்ன இந்த ஒரு பதிலே தக்க ஆதாராம்

ஏன்னா காந்தி எந்த எந்த இடதுலயும் மதத்தை காரணம் காட்டி இன்னொருத்த்னை வெறுக்கலை .. அல்லது அவங்க கருத்துக்கு மறுப்பு சொல்லலை ..

அவர் எல்லாமத்தையும் ஒண்ணா நெனச்சார்ங்கிற ஒண்ணுதன் அவர் மேல என்னை மாதிரி அவரை மறுக்கறவங்களும் ஏத்துக்கிற ஒரு நல்ல விடயம்

ஆனா நீங்க என்னை பண்றீங்கன்னா உங்க கருத்துக்கு எதிர் கருத்தாளர்கள்னு தெரிஞ்ச உடனே அவங்க வேறுமத்தவங்களாதன் இருக்கணும்னு கண்டுபுடிச்சு முத்திரை குத்தறீங்க

அப்படின்னா சொல்லுங்க ஜெயமோகன்
கிறித்துவன் முஸ்லீம்லாம் இந்தியவை துண்டடறங்கண்ணு சொல்றீங்களே இது யார் வாதம்
காந்திய வாதமா இல்லைவே இல்லை
இது நிச்சயமா ஒரு மதவெறியனோட குரல்தான்..
மனசாட்சியை தொட்டு சொல்லுங்க உங்க நண்பர்கள் எத்தனை பேர் முஸ்லீமா கிறித்தவரா இருக்காங்க அவங்க எல்லாரும்
இந்தியாவை துண்டாடறவங்களா?


இல்லை காந்தி மற்ற மத்துகாரர்கள்லாம் இந்தியாவை துண்டடறவங்கன்னு எங்கயாவது சொல்லியிருக்காரா அப்படி சொல்லியிருந்தா சொல்லுங்க.;

ஆனால் மாற்று மதத்தையும் மதிச்சவர்தான் காந்தி
இப்படி காந்தியவே குற்றவாளியாக்குற உங்களுக்கு காந்தியை பத்தி பேச என்னை யோக்கியதை இருக்கு

காந்திமேல நான் வைக்கிற குற்ற சாட்டெல்லாம் அவர்மேல சுமத்தப்பட்டிருக்க மகாத்மாங்கிற பிம்பம் மேல தான் .

அந்த பிம்பம் பல போராளிகளோட ரத்த சரித்தரத்தை கொச்சை படுத்தியிருக்கு.அதுக்கு அவர் காரணமா இல்லாம இருக்கலாம் அடுத்து வந்த காங்கிரஸ் கட்சி காந்தி பிம்பத்தை மூலதனமா பயன்படுத்தவேண்டி அவரை பாட புத்தகங்களில் கூடுதலா சித்தரிச்சது. அவர் மகாத்மா நாட்டுக்கு அவர்மட்டும்தான் போராடி விடுத்லை வாங்கிதந்தார்னு திரிச்சு சொல்லி பல உண்மைகளை மறைச்சு ஒரு மாய பிம்பத்தை உருவாக்கிட்டாங்க ..

இப்ப நம்ம முன்னாடி இருக்கிற ப்ரச்னை அந்த பிம்பம்தான் அந்த பிம்பத்தை தகர்க்கிறதும் அதன்மூலமா மாற்று த்லைவர்களோட முகத்தை எப்படி முன்னுக்கு கொண்டுவருவது என்பதும் தான் என் வேலை.

சுதந்திர போராட்டத்துல உயிர்விட்ட பல லட்சம் உயிர்களும் .. காந்திங்கிற உயிரும் ஒண்ணுதான்..ஆனா காந்திமட்டும் தான் அவரது அகிம்சையால மட்டும்தான் சுதந்திரம் கிடைச்சா மாதிரி ஒரு தவறான பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கு ..அதை உடைக்க வேண்டிய முக்கியமான பணி வரலாற்றாய்வாளர்கள் முன்னாடி நெறய்யவே இருக்கு.

அதே போல .அவர் மத்த எல்லாமனிதர்களையும்போல சாதாரண மனிதர்தான்.

தன்னையும் தன் கருத்தையும் பாதுகாக்க எல்லா தந்திரத்தையும் கையாளக்கூடிய சாதாரண மனிதர்தான்.

அம்பேதர் ,பெரியார், நேதாஜி மற்ரும் பகத்சிங் ஆகியோரோட வாழ்க்கைகளின் இருண்ட பக்கங்களில் காந்தியோட முகம் ஒளிஞ்சுகிடக்கு .அதில் அவர் ஏன் மகாத்மா இல்லைங்கிறதுக்கான எல்லா ஆதாரமும் அங்கயே இருக்கு

இதை வெளிக்கொண்ர வேண்டியது உண்மையான வரலாற்று ஆய்வாளனோட கடமை .

மற்றபடி காந்திங்கிற மனிதர் கிட்ட இருந்த பல நல்லவிடயங்களை நான் மறுக்கல!.
அதை பேசறதுக்கு உலகத்துல ஆயிரம் பேர் இருக்காங்க அது என்னோட வேலை இல்லை.லைப்ரரிக்கு போனா அதிகமான புத்தகம் காந்தியைபத்திதான் இருக்கு.

மேலும் உங்களை மாதிரி மதவாதிகளுக்கும் இப்ப காந்தி ஒளிஞ்சுக்கறதுக்கு பயன்படறார்ங்கிறதுதான் அவர் செஞ்ச தவறு..

ஹேராம் ங்கிற வார்த்தையோ பகவத்கிதையோ அவர் கையில எடுக்கலைன்னா இந்நேரம் உங்களால அவர் நிழலை கூட தொட முடிஞ்சிருக்காது

மத சனாதனத்தை சுருக்கமா வைணவ சனதானத்தை காப்பாத்தறதுக்கு காந்தியோட முகம் இப்ப உஙக்ளுக்கு அவசியமா இருக்கு

அதனாலதான் அம்பேத்கர் படம் எடுத்த் ஆளை முஸ்லீம்னு சொல்லி குற்றபடுத்த முடியுது.

மத்தபடி நன் உங்களுக்கு வைக்கிற கோரிக்கையெல்லாம் முழுசா காந்தியை படிங்க படிங்க .. ஆயிரம் பக்கம் காந்தியை பத்தி எழுதறது முக்கியமில்லை.

அவரை பத்தி முழுசா புரிஞ்சுகிட்டு அவரது சில நல்ல கொள்கைகளை குறிப்பா சகிப்புத்ன்மையை உள்வாங்கிட்டு அப்புறம் ஒருபக்கம் எழுதுங்க காலத்துக்கு நிக்கும். .

அப்படியில்லாம வெறும் பகவத் கீதையையும் சத்தியசோதனையையும் மட்டும் படிச்சுட்டு தண்டியா தண்டியா எழுதறதுல எந்த அர்ததமும் இல்லை.

முதல்ல மத அடிப்படை வாதத்துலர்ந்து வெளிய வாங்க.அப்புறமா உங்களை எழுத்தாள்னா மதிக்கிறேன்

அப்படியிலன்னா எலியாகஸன் மாதிரி உங்க படைப்புகளும் காலத்துல ஒரு அவபெயரை சுமந்துகிட்டு நிக்கும்.

இதுக்கு நேர்மையான பதில் எதிர்பாக்கிறேன்

அப்படி இல்லாட்டி அந்த போஸ்டிங்கையே எடுத்துடுங்க ..
நான் அதுக்கான அர்த்ததை புரிஞ்சுக்கிறேன்.

அன்புடன்
அஜயன்பாலா

April 10, 2011

பெண்ணென பெரிதாய் உளத்தக்க... . தொடர் பாகம் :2




நாளும்கிழமையும் நலிந்தோர்க்கில்லை
ஞாயிற்று கிழமையும் பெண்களுக்கில்லை
- கந்தர்வன்



மார்ச் 8 உங்களுக்கு தெரிந்திருக்கும் உலகமே கொண்டாடிவரும் தினம்.

பெண்கள் தினம்.

இது உண்மையில் ஒரு சதிதான்
பெண்களும் இதை அறியாமல் அந்நாளில் கொண்டாடிவருகின்றனர்.

சரி இதில் என்ன சதி நல்ல விடயம்தானே
என பலரும் கேட்கலாம்

அவர்களிடம் நான் கேட்கிறேன்
ஏன் அப்படியானால் ஆண்கள் தினம் என்று இல்லை

364ல் ஒருநாள் பெண்களூக்கானதென்றால்
இதர் நாட்கள் அனைத்தும் ஆண்களின் தினம் என்ற மறைமுக அர்த்தம் இயல்பாக வந்துவிடுகிறதல்லவா

ஆணும் பெண்னும் சமம் என்றால் அவர்களுக்கும் ஒரு நாள் இருப்பதுதானே இயல்பு .

நான் பேசுவது சிலருக்கு விதண்டாவதமாக தெரியலாம்
அல்லது விடாக்கொண்டன் கொடக்கண்டன் போட்டாபோட்டியாக அறியப்படாலம்.

ஆனால் சற்று சிந்தித்து பாருங்கள்

பெண்ணுக்கு எந்த நாளில் துன்பமில்லை
எல்லா நாளிலும் துன்பங்கள் பொது வாழ்வில்தொடர்கதைகள் தான்

அத்த்னை துன்பங்களுக்கும் இந்த ஒருநாள் வலிதீர்க்குமா மருந்தாகிவிடுமா

அல்லது அவர்களது கண்ணீரை துடைத்திடுமா

அப்படித்தான் இந்த ஒருநாளில் பெண்கள் யாரும் வீட்டில் வேலை செய்யாமல் இருக்க எல்லாவேலையும் ஆண்கள் செய்கிறார்களா .. இல்லையே

அப்புறம் என்ன இந்த பெண்கள் தினத்தில் விசேஷம்

ஒருவகையில் இதுவும் கூட ஏமாற்றுதான்

உண்மையில் இந்த பெண்கள் தினம் வந்ததும் கூட பெரும்போராட்டத்தின் விளைவுதான்

உங்களுக்கு ஒலிம்பியா டி காக்ஸ் என்ற பெண்மணியை தெரியுமா

தெரியாவிட்டால் தெரிந்துகொள்லுங்கள் அவர்தான் பெண்களுக்காக அவர்களது உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்த முதல் பெண்மணி

அவரது இயற்பெயர் மேரி கோஸ்
பிரான்ஸ் நாட்டில் மோண்டேபன் எனும் ஒருகுக்கிராமத்தில் 1748ம் ஆண்டு ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர்.

ஆனால் வளர்ந்த ஒரு கட்டத்தில்தான் தனக்கு உண்மையான தந்தை தாயின் கணவரல்ல இன்னொருவர் என தெரிய வந்தது

அவளதுதாய் தன் மகளுக்கு தந்தை இவர்தான் என ஊரைக்கூட்டி பகிரங்கமாக அறிவித்தார்

ஆனல் அந்த பெரிய மனிதர் ஏற்கவில்லை.
ஆனால் சமூகம் ஏற்கவில்லை

தன் குழந்தைக்கு தந்தை யார் என அடையாளம் காட்டும் அதிகாரம் ஒரு பெண்னுக்கு இல்லை . ஆனால் ஒரு ஆண் தன் தீர்மானிக்கவேண்டும்
என திட்டவட்டமாக அறிவிதத்து.

இந்த சம்பவம் மேரிக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது


1765ம் ஆண்டு லீயிஸ் என்பவருக்கு மனைவியாக வாழ்க்கை பட்டார் .

அந்த திருமணம் ஒரு கட்டாய கலயானம் .அந்த திருமணத்தில் அவருக்கு விருப்பமில்லை .ஆனாலும் சிறுபெண்ணான மேரி குடும்பவாழ்க்கையில் உழன்றாள்
அந்தவாழ்க்கைக்கு மூன்றவது வருடத்திலேயே முற்று புள்ளி வைக்கப்பட்டது

காரணம் கணவரின் திடீர் மரணம்

ஆனலும் மேரி நிலைகுழ்லையவில்லை

தன்னுடைய ஒரே ஆண்குழ்ந்தையை சுமந்தபடி பாரீஸ்நகரம் வந்தார் .

இயற்கையிலேயே கற்பனைவளமும் எழுத்தாற்ரலும் மிக்க மேரி கொஸ் தத்துவவாதிகள் கூடும் இடங்களுக்கு சென்றார் வசீகரமான முகத்தோற்றம் கொண்ட மேரிக்கு இயல்பாகவே நண்பர்கள் கூட்டம் அதிகமாக விரிந்தது. உடன்
பிரபல எழுத்தாளர்கள் கலைஞர்கள் அறிமுகமானார்கள். அப்போது அவர்கள் மன்னரட்சிக்கு எதிராக சுதந்திரம் வேண்டி புரட்சிக்கான ஆயுத்தங்களில் இருந்தனர்.
சுதந்திரம் சுதந்திரம் என்கிறீர்களே பெண்களுக்கு உங்கள் வீட்டில் என்ன சுதந்திரம் இருக்கிறது என அவர்கள் முன் கேட்டார் ?

உங்கள் மனைவியை அவளது விருப்பபடிதான் மணந்தீர்களா
அவளோடு உறவுகொள்ளும் ஒவ்வொருமுறையும் அவளது விருப்பத்தோடு தான் ஈடுபடுகிறீர்களா ?

என தொடர் கேள்விகள் மூலம் அறிஞர்களை கதிகலக்கினார்

”முதலில் பெண்களுக்கு ஆண்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று தாருங்கள்.அவளது எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் உரிமை பெற்று தாருங்கள் ”!. என முழக்கமிட்டார்

அவரது கருத்துக்களுக்கு கைதட்டல்கள் கிடைத்த்ன
தன் பெய்ரை ஒலிம்பியா டி காக்ஸ் என மாற்றிக்கொண்டார்

கற்றோர் சபையில் ஒலிம்பியாவின் பெயர் பிரபலமானது

1773ல் ஜேக்குஸ் பேட்ரிக் எனும் செல்வந்தரோடு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவரது கணவர் தொடர்ந்து ஒலிம்பியாவின் செயல்படுகளுக்கு ஊக்கமும் ஆக்கமும் தர ஒலிம்பியா அடிமை தளைகளை அறுக்கும் நாடகங்களை எழுததுவங்கினர்
அந்த நாடகங்களுக்கு ஆட்சியாளர்கள் மட்டுமல்லமல் சக புரட்சியாளர்களிடமிருந்தும் கடும் எதிர்ப்புகள் இருந்தன

எதிர்ப்புகள் இருந்தாலும் ஒலிவியா கடுகளவும் அஞ்சமல் தன் கருத்துக்களை நாடகங்கள் வாயிலாகவும் கட்டுரைகள் வாயிலாகவும் எடுத்துரைத்தார். பெண்களின் உரிமையும் குடிமக்களின் உரிமையும் எனும் அவரது நூல்தான் பெண்ணியம் தொடரபாக வெளியான ஆதாரபூர்வமான முதல் நூல்.

வெறும் எழுத்தோடு நில்லாமல் பெண்ணுரிமைக்காக பல பெண்களை ஒன்று திரட்டி சங்கங்களை உருவாக்கினார்

இவரது எழுத்துக்கள் ஆட்சியாளர்களின் கோபத்தை உண்டாக்கியது ..இதன் காரணமாக 1793ல் கைதுசெய்யப்பட்டார்.எழுத்தை விடகோரி அவரை ஆட்சியாளர்கள் எச்சரித்த்னர்

ஆனால் ஒலிவியா மறுத்தார் .அது என் பிறப்புரிமை என வாதிட்டார்

அவரது கருத்துக்கள் சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு அதற்காக அவருக்கு கோர்ட்டில்
மரண தண்டனை பரிந்துரைக்கப்ப்ட்டது

கில்லட்டின் எனும் கொடிய கருவியில் வைத்து அவரது தலை துண்டிக்கப்ட்டது

பெண் விடுத்லைக்காகவும் சுதந்திரத்துகாகவும் வீரமரணத்தை தழுவிக்கொண்டார் .

ஒலிம்பியா டி.காக்ஸ் எனும் அந்த வீர மங்கையின் வலிமையும் நெஞ்சுரமும் துணிச்சலான கருத்துக்களும் அக்காலத்தில் எடுபடவில்லை

ஆனால் வரலாற்றில் அவரது குரல் அழுத்த்மாக பதிக்கப்பட்டது

அடுத்த சில வருடங்களில் எழுத்துரிமை பேச்சுரிமைகள் வர வர ஒலிம்பியவின் கனவும் மெல்ல நனவாக துவங்கியது .

ஒலிம்பியவுக்கு பின் ப்ல பெண்கள் மகளீருக்காக போராடினாலும் பத்தொன்பதம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நடந்த ஒரு வேலை நிறுத்தம்தான் மகளிர் தினத்துக்கு அடித்தளமிட்டு தந்தது..

ஜவுளிதொழில்தான் மகளிர் வேலைக்கு வர முதல்காரணம் .

ஆனலும் அந்த வேலை பலசிரமங்களை கொண்டிருந்தது
பணியில் அதிகரிகளின் தொந்தரவு அதிகபடியன வேலை நேரம் அகியவற்றால் அப்பாவி பெண்கள் அவதியுற்றனர்.

தொடர்ந்து அனுபவித்து வந்த துயரங்கள் தாளமால் ஒரு நாள் பொங்கி எழுந்த்னர்.

அந்த நாள் 1857ம் ஆண்டு மார்ச் 8ம் நாள்

பெண்கள் அனைவரும் கோஷமிட்டபடி வீதியில்கூடினர்

ஓரணியில் திரண்டனர்

நியூயார்க் நகரமே கிடுகிடுத்தது

இத்த்னைக்கும் அக்காலத்தில் மார்க்சியம் கம்யூனிசம் எல்லாம் முழுமையாக உருவாகாத சூழல்

அப்படிபட்ட சூழலில் இப்படி ஒரு பெண்களின் மத்தியில் அறிவிப்பில்லத புரட்சி வரகாரணம்

ஒன்று கூலி இன்னொன்று அதிகாரிகளீன் அத்துமீறல்

இந்தபேரணியை த்டுத்து நிறுத்தும்விதமாக போலீஸ் ஈவு இரக்கமில்லாமல் தடியடி நட்த்தியது

இதில் சிலர் உயிரிழந்த்னர் பலபெண்கள் காயமுற்றனர்
அந்த காயங்களும் சில நாட்களில் ஆறிவிட்டன

ஆனால் வரலாற்றில் அவை வடுவாகிவிட்டது .

ஒவ்வொருவருடமும் அந்நாள் வரும்போது பெண்கள் கூட்டம் கூடினர் பேசதொடங்கினர் .கண்ணீர்விட்டனர் ,கூக்குரல் எழுப்பினர் .. ஊர்வலம் சென்றனர்

தொழிலாள வர்க்கத்தின் நாட்குறிபெட்டில் அந்நாள் பதிவாகியது .

பிற்பாடு சோவியத் ரஷ்யாவில் லெனின்மூலம் அந்நாள் பெண்கள்தினமாக ரஷ்ய கம்யூனிஸ்டுகளால் அங்கீகரிக்கப்ப்ட பின் அதுவே மெதுவாக உலகம் முழுக்க பரவ ஆரம்பித்தது



உண்மையில் இந்தநாள் பெண்கள்தினம் என்பதை விட உழைக்கும் பெண்களின் தினம் என்பதுதான் சரியாக இருக்கமுடியும்

உண்மையில் இது வலிகளுக்கான நாள்.

ஆனால் பலரோ அன்னையர்தினம் நண்பர்கள்தினம் காதலர்கள்தினம் போல பெண்கள் தினத்தையும் கேளிக்கைகளின் நாளாக கொண்டாட துவங்குகின்றனர்.

ஏதோ பெண்கள்மீது இந்த உல்கம் ஒருநாள் கருணையுடன் ந்டந்துகொள்வதாக எண்ணி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கூறுவதும் கைகுலுக்குவதுமான வேடிக்கைகள் தொடர்கிறது

அடுத்த்நாள் முதல் பெண்களும் ஆண்களின் தினத்துக்கு தயராகிவிடும் சோகமும் தொடர்கிறது
உண்மையில் அரசாங்கம் பெண்கள் தினத்த்னறு
பெண்களுக்குமட்டும் விடுமுறை அறிவிக்கவேண்டும்
அன்று ஒருநாள் மட்டுமாவது பெண்களின் வேலைகளை ஆண்கள் செய்யவேண்டும்.

அப்படி நடந்தால் அதுதான் உண்மையில் பெண்கள் தினம்..

(தொடரும்)

நன்றி :பெண்ணே நீ, ஏப்ரல் 2011 இதழ்

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...