Showing posts with label பெண்ணென பெரிதாய் வுளத்தக்க..தொடர் .. Show all posts
Showing posts with label பெண்ணென பெரிதாய் வுளத்தக்க..தொடர் .. Show all posts

June 10, 2011

பெண்ணென பெரிதாய் உளத்தக்க... 4. ; - மேரி க்யூரி


பெண்ணென பெரிதாய் உளத்தக்க... .
தொடர் பாகம் :4


தனி மனிதன் வளராமல் சமூகம் வளர்வதில்லை . அதேசமயம் சமூகத்துக்காக பாடுபடும் தனி மனிதர்தான் வரலாற்றில் இடம்பிடிக்கிறார்
- மேரி க்யூரி


நம் பெண்கள் பலருக்கு காதல் ஒரு முக்கிய ப்ரச்னை
காதலில் தோற்று போனாலோ அல்லது நினைத்த நபரை திருமண்ம் செய்ய முடியாது போனாலோ அவ்வளவுதான்...
இனி முடிந்து விட்டது வாழ்க்கை. இனி எல்லாமே அவ்வளவுதான் என செக்கில் மாட்டிய சிவலிங்கமாக தங்களை நினைத்துக்கொண்டு எண்ணங்களை குறுக்கி சுருங்கி போய்விடுகின்றனர்

ஆனால் மேரிக்யூரி அப்படி திரும்பவில்லை,.அவரும் காதலில் தோல்வியுற்றார்.ஆனால் தோல்வியை பாடமாக மனதில் ஏற்றார். அன்று அவர் அப்படி செய்யாவிட்டால் நோபல் பரிசு பெற்று உலகின் ஒப்பற்ற பெண்மணியாக விளங்கியிருக்க வாய்ப்பே இல்லை.

மேரி க்யூரி .. ரேடியத்தை கண்டுபிடித்த்வர்.
இன்று மார்பில் வலி என ஆஸ்பத்தரிக்கு ஓடுகிறோம் டாக்டருக்கு தெரியவில்லை .. உடனே எக்ஸ்ரெ எடுத்துக்கொண்டு வாருங்கள் என்கிறார்.

ஓடிப்போய் எக்ஸ் ரே எடுக்கிறோம் பார்க்கிறோம் ..மருத்துவர்களால் துல்லியமாக ப்ரச்னை கண்டறியப்படுகிறது நோய் தீர்க்கப்படுகிறது

ஆனால் என்றாவது நம் மருத்துவ ப்ரச்னைகளை தீர்க்கும் உற்ற நண்பனான எக்ஸ் ரே எனும் அற்புத சாதனத்தையும் அதற்கு காரணமானவரையும் பற்றி யோசித்திருப்போமா ?

நிச்சயம் யோசித்திருக்க மாட்டீர்கள்
பரவாயில்லை அந்த பாவத்துக்கு பரிகாரமாக அதை கண்டுபிடிக்க மூல காரணமாக இருந்த மேரி க்யூரியின் இந்த கட்டுரையை படித்து தெரிந்துகொள்ளுங்கள்

யார் இந்த மேரி க்யூரி ..போலந்து நாட்டில் வார்சா எனும் ஊரை சேர்ந்த தேசப்பற்று மிகுந்த தம்பதிக்கு மகளாக நவம்பர் 7ம் நாள் 1867ம் ஆண்டு பிறந்தவர். அடிப்படை கல்வியை உள்ளூர் ஜிம்னாசியத்தில் முடித்தார் . அந்த ஊரில் ஆரம்ப பள்ளிகூடத்துக்கு ஜிம்னாசியம் என்றுதான் பெயர்.
மேல்படிப்பை உள்ளூரில் படிக்க வாய்ப்பில்லை. அப்போது ருஷ்யாவை ஆண்ட ஜார் அரசாங்கம் பெண்கள் உயர்கல்விகள் படிக்க தடை விதித்திருந்தது . ஆனால் மேரிக்கோ அறிவியலில் மேற்படிப்பு படித்து விஞ்ஞானியாக பெரும் விருப்பம் . அப்படியானால் அதற்கு ஒரே வ்ழி அண்டை நாடான பிரான்சுக்கு சென்று படிப்பதுதான். ஆனால் அதற்கோ பெரும் தொகை தேவைப்படும் .

உண்மையில் மேரியின் அப்பாவுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். பரம்பரை பணக்காரர். ஆனால் போலந்து மண்ணீன் விடுத்லை இயக்கத்துக்காக தன் முழு சொத்தையும் இழந்துவிட்டார்.
மேரியை பிரான்சுக்கு போய் படிக்க வைக்க இப்போது அவரிடம் தம்படி காசு கூட இல்லை.

இதனால் மேரி ஒரு முடிவு செய்தார் . அவளது அப்பாவின் உறவுக்காரர்கள் கிராமங்களில் பெரும் பண்ணைகாரர்களாக இருந்தனர். அவர்களது குழந்தைகளுக்கு படிப்பு சொல்லி கொடுத்து அதன் மூலம் கல்விக்கான தொகை சேர்ப்பது என முடிவு செய்தார்

ஆனால் அங்கு போன பின் மேரி வெறும் பணக்கர பிள்ளைகளுக்கு மட்டும் சொல்லித்தராமல் ஓய்வு நேரங்களில் கிராமத்திலிருக்கும் ஏழை குழந்தைகளுக்கும் ஒரு மரநிழலில் அமரவைத்து சொல்லிகொடுத்தார்..
ஒரு நாள் இதை பார்த்தான் கரீஸ்மிஸ் ச்ரோவ்ஸ்கி

யார் இந்த கரீஸ் மிஸ் இவன் தான் நாயகனோ என அவசரப்பட்டுவிடவேண்டாம் .. இவன் வில்லன்
மேரி வேலை செய்த அவளது பண்ணை வீட்டு முதாளியின் ஒரே மகன். பட்டணத்தில் படித்து கொண்டிருந்த அவன் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த போதுதான் மேரியை பார்த்தான். மயங்கிவிட்டான்.மேரியை மயக்க வீட்டுக்குள் வளைய வந்தான்.

வீட்டில் மேரிக்கு ஒரு சின்ன அறை .படிப்பு சொல்லிதரும் நேரம் போக மீத நேரத்தில் அறிவியல் புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டு தனக்கு கொடுக்கப்ட்ட அந்த சின்ன அறையில் மேரி படிப்பாள். அந்நேரம் பூனை போல அறையை சுற்றி வந்து ஜன்னல் கதவை திறந்து நோட்டமிட்டு கள்ள சிரிப்பு காண்பித்தான் கரீஸ் மிஸ்.. சின்ன பெண் தானே அவளும் எத்தனை முறைதான் ஓடி ஒளிவாள்

அடிக்கடி அறையின் ஜன்னல் கதவை அவன் திறக்க ஒருநாள் இவள் மனக்கதவும் திறந்துகொண்டது.

என்னதான் வெள்ளைத்தோலாக இருந்தாலும் அந்த நாட்டிலும் அந்தஸ்து வித்யாசம் பார்த்தனர். பண்ணை வீட்டு முதலாளியும் வீட்டில் வேலை செய்பவர்களும் வேறு வேறு. ஒட்டவே முடியாது..?
மகனிடம் இந்த கல்யாணம் நடக்கவே நடக்காது என உறுதியாக சொல்லிவிட்டாள்..அந்த பண்க்கார அம்மா . அத்தோடு மேரிக்கு வேலையும் போனது. ஊருக்கு திரும்பினாள்.மகளது மன வாட்டத்தை புரிந்துகொண்டார் அப்பா கடன் பட்டாவது பணம் தருகிறேன் பிரான்சுக்கு படிக்க போ என கட்டளையிட்டார். ஆனால் மேரி கேட்கவில்லை .காரணம் அவள் தன் காதலனை உறுதியாக நம்பினாள். எப்படியும் காதலன் திரும்ப வருவான் கைபிடிப்பான் என காத்திருந்தாள்

ஆனால் சினிமாக்களில் நடப்பது போலத்தான் மேரி வாழ்விலும் நடந்தது . அவன் இப்படி ஏமாற்றுவான் என அவள் எதிர்பார்க்கவில்லை. மேரி நொறுங்கிபோனார்.. ஆனால் அடுத்த நிமிடமே வாழ்க்கை இதுவல்ல இந்த தோல்விகளுக்கெல்லாம் பதில் சொல்கிறார்போல தன் பணக்கார அத்தையும் அவளது மகனும் மனம் நொந்து தன்னை இழந்தமைக்காக வேதனை படுவதை காண விரும்பினார். அதற்கு அவர் முன் இருந்த ஒரே ஆயுதம் படிப்பு . அறிவியல் மீதான் ஈடுபாடு .அடுத்த நிமிடமே தன் அப்பாவிடம் பிரான்சுக்கு போக ஏற்பாடு செய்ய சொன்னார்

1893ல் பவுதீகத்திலும் , 1894ல் கணிதத்திலும் பட்டம் வென்றார்.
இச் சமயத்தில்தான் தன்னை போலவே அறிவியல் துறையில் ஈடுபாட்டுடன் இருந்த பியர் க்யூரியை மேரி சந்தித்தார். இம்முறை இதயம் கலப்பதற்குமுன் அறிவு கலந்தது.மூன்று வருடம் பரிசோதனை கூடத்தில் இருந்த போது இல்லாத காதல் பிரியநேர்ந்த முதல் கணத்தில் முளைத்துக்கொண்டது . காதலை உணர்ந்த கணமே கல்யாணமும் செய்துகொண்டார்கள் .


அதன் பிறகு கண்வன் மனைவி இருவரது முழு வாழ்க்கையும். அறிவியலுக்காக அர்ப்பணிப்பு செய்யப்ட்டது. தங்களது கண்டுபிடிப்புகள் மூலம மனித வாழ்க்கைக்கு பெரும்பேற்றை உயர்வினை உண்டாக்க இருவரும் முழு மூச்சாக ஈடுபட்டனர் உடல் பரிசோதனைக்கு ஊடுருவும் கதிர் வீச்சுகளையும் அதற்கான தனிமத்தையும் கண்டுபிடிக்க அவர்கள் தங்களை சோத்னை கூடத்திலேயெ வதைத்துகொண்டனர் .அதன் பலனாக அவர்கள் உடல் பெரும் பாதிப்புக்குள்ளானது.

1898 ம் ஆண்டு ஜூலை அவர்கள் கடும் உழைப்புக்கு வெளிச்சம் உண்டானது .கணவன் மனைவி இருவரும் பல்வேறு ஆய்வாளர்கள் அறிஞர்கள் மருத்துவர்கள் மத்தியில் த்ங்களது கண்டுபிடிப்பை வாசித்தனர்.
போலந்து எனும் தாய்நட்டின் பெய்ர் குறிப்பிடும் வகையில் அவர்கள் கண்டுபிடித்த தனிமத்துக்கு வைத்த பெயர் போலோனியம் . இதை சொன்ன அடுத்த நிமிடம் அறிஞர்கள் பெரும் கரவொலி எழுப்பி இருவரையும் கவுரவபடுத்தினர் இதனை தொடர்ந்து அவர்கள் இருவ்ரும் இணைந்து ரேடியம் எனும் த்னிம்த்தை கண்டுபிடித்த்னர், இந்த தனிமத்திலிருந்து பிரித்தெருக்க்ப்டும் கதிர் வீச்சுக்ள் மருத்துவத்துறையில் எக்ஸ்ரே கருவிக்கு பயன்படுத்தபட்டு வருகின்றன.

1903ம் ஆண்டு ஸ்வீடிஷ் அரசாங்கம் பவுதிகத்துறைக்கான இவர்களுக்கான கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசை வழங்கியது. வாழ்க்கை முழுக்க ஆராய்ச்சிக்காக அவர்கள் அர்ப்பணித்த காரணத்தால் இந்த பரிசை வாங்க ஸ்டாக்ஹொம் நகருக்கு செல்வத்ற்கான பணம் கூட அவர்களிடம் இல்லை. மாண்வர்கள் ஒன்றிணைந்து அவர்களாக பணம் திரட்டி அனுப்பி வைத்தனர். அடுத்த சில நாட்களில் கணவர் பியர் க்யூரி சாலையில் ஒரு குதிரை வண்டி ஏறி மரணமடைந்தார்.இதனால் பெரும் துயர் மேரியை சூழ்ந்தது.

எட்டு வருடங்களுக்கு பிறகு 1911ம் ஆண்டு வேதியியல் துறையில் ரேடியத்தை கண்டுபிடித்த்மைக்காக இரண்டவது முறையாக நோபல் ப்ரிசை பெற்றார். இம்முறை தனியாளாக அந்த பரிசை வாங்கி இறந்த கணவருக்கு
சமர்ப்பணம் செய்தார் .மட்டுமல்லாமல் நோபல் பரிசை பெற்ற முதல் பெண்மணி என்ற பெயரும் பெற்றார்.உலகம் முழுக்க மேரியின் பெயர் எதிரொலிதது . எந்த ரேடியத்தை க்ண்டுபிடிக்க அவர் பாடுபட்டாரோ அதுவே அவரது உயிருக்கும் உலை வைத்தது .1934ம் ஆண்டு ஜூலை 4ம் நாள் இறந்து அந்த நாளுக்கு பெருமை சேர்த்தார்.

அவர் இறந்தபின் அவர் ரேடியத்துக்காக நிறுவிய பல்கலைகழகத்தின் முன் அவரது பிரம்மாண்ட உருவச்சிலை ஒரு பெண்னின் போரட்டத்தையும் அர்ப்பணிப்பையும் உயிர்தியாகத்தையும் பெருமை படுத்தும் விதமாக நிறுவப்பட்டது .

அந்த சிலையருகே ஒருநாள் வயதானவர் ஒருவர் வந்து கண்ணீர்மல்க கையில் ரோஜா பூவுடன் வந்தார் .. அவர் வேறு யாருமல்ல அந்தஸ்து காரணமாக திருமணம் செய்ய மறுத்த மேரியின் தன்னெழுச்சிக்கு வித்திட்ட மேரியின் முன்னாள் காதலர். க்ரீஸ்மிஸ் ச்ரோவ்ஸ்கி

May 9, 2011

பெண்ணென பெரிதாய் உளத்தக்க... . தொடர் பாகம் :3


பெண்ணென பெரிதாய் உளத்தக்க... .
தொடர் பாகம் :3


சோமாலி மாம்


தன்னம்பிக்கை

இன்றைய வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு எது அவசியமான சொத்து எது என என்னைக்கேட்டால் பணமோ படிப்போ அல்லது கணவனோ குடும்பமோ அல்ல

தன்னம்பிக்கை இது ஒன்று மட்டும் இருந்தால் போதும்
உலகில் எதையும் தன் வசப்படுத்த முடியும்.

ஆனால் நம் பெண்களுக்கோ தாய்மார்களுக்கோ இதுதான் பெரிய குறை.
காரணம் எப்போதும் மனபதட்டம்
போனமாசத்தை விட இந்தமாசம் பையன் கணக்குல ரெண்டு மார்க கம்மி..


தீபாவளிக்கு வங்கிவந்த சட்டை சரியில்லை. ஓரத்தில் கிழிந்துவிட்டது . கடைக்காரன் ஏமாற்றிவிட்டான்

சம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டது ..
கேஸ் தீர்ந்துவிட்டது
பால் பொங்கிவிட்டது

இந்த மனபதடட்ங்களுக்கு பல காரணங்கள்
அவற்றுள் ஒன்று நம் தொலைக்காட்சி சீரியலகள்..அதனால்
உண்டாகும் மனசிதைவு

இன்று வரும் சீரியகளில் பெரும் பாலானவை பெண்களை எப்போதும் பதட்டத்தில் வைத்திருப்பவைகளாக்வே அமைகின்றன்

த்ன்னம்பிக்கை மிகுந்த பெண்களின் மனதையும் அது உருக்குலைத்துவிடுகிறது .

உலக்மே தீயவர்களால் ஆனது என சொல்லி சொல்லியே அது பெண்களை பெரிதும் சீரழித்து வருகிறது

இன்பமாய் வாழ்வத்ற்கும் அனைவரிடத்தும் அன்பு செலுத்துவதற்கும் பல சாத்தியங்கள் வாய்ப்புகள் இந்த உலகில் உள்ளன என்பதை ஒரு போதும் போதிபபதே இல்லை
உண்மையில் இன்றைய பெண்ணுக்கு தேவை தன்னம்பிக்கையும் மரணதைரியமும்தான்
இதற்கு சரியான உதராணமாக இருப்பவர் சோமாலி மாம்

சோமாலி மாம்
பதினானகு வயது வரை வீட்டில் சிறை வைத்து தன் தாத்தாவால் தொடர் பாலியல் பலத்காராத்துக்கு ஆட்பட்டவர் கம்போடியாவை சேர்ந்த கிராமத்து பெண்

அவர் இன்று யார் தெரியுமா உலகில்
எங்கெல்லாம் சிறுமிகள் பாலியல் பலதகாரத்துக்கு உட்படுகிறார்களோ அவர்களை பாதுகாக்கும் மிகபெரிய செவை
செய்து வருபவர்

டைம் இதழ் கடந்த வருடம் வெளியிட்ட உலகின் சிறந்த 100 பெண்களின் பட்டியலில் இடம் பிடித்தவர் . இந்த 100 பெரை தேர்ந்தெடுத்த்வர் புகழ்பெற்ற ஆங்கில நடிகை அஞ்சலினா ஜோலி

மேலும் 2006 ஒலிம்பிக் துவக்க விழாவின் போது புகழ்பெற்ற ஆறுபேர் அத்ன் கொடியை அசைத்து துவக்கி வைத்தார்க்ள் அந்த ஆறுபேரில் சோமாலிமாமும் ஒருவர்

இப்படி பதினாலுவரை பாலியல் பலாத்காரத்துக்கும் மனசிதைவுக்கும் ஆட்பட்ட ஒருபெண் இத்த்னை உயரங்களை அடைய முடிகிறதென்றால் அதற்கு ஒரே காரணம்
தன்னம்பிக்கை..

பெரும் காற்றுக்கும் சூறை புயலுக்கும் அசையாத சிறு செடியின் கம்பீரத்தை ஒத்த மன உறுதி

அவரது வழ்வில் தான் எத்தனை எத்த்னை தடைக்கற்கள்

கம்போடியவில் ஏழைகுடும்பத்தில் பிரந்த சோமாலி மாம் சிறுவயதிலேயே பசி பட்டினியால் அவதியுற்றார். வீட்டில் இருந்து பட்டினி கிடப்பதை விட சாப்படாவது கிடைக்கும் என
அவளது பெற்றோர் அவரது தாத்தா உறவுள்ள ஒருநபரின் வீட்டில் அனுப்பி வைத்த்னர் .

அங்கு சிறுவேலைகள் செய்து வந்த சோமாலியை வீட்டிலேயே சிறை வைத்த அந்த பாழும் கிழ்வன் சோமாலியை பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டான்

அதன் பிறகு பதினான்கு வயதில் அவளை பெரும் பணத்துக்கு குடிகாரன் ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்தான்

ஆனால் அதுவோ அவளை பள்ளத்திலிருந்து அதல பாதாளாத்திற்கு தள்ளிவிட்டது போலானது

அவனோ பெரும் குடிகாரன். தினமும் நரகவேத்னைகள் தொடர்ந்த்ன அவளை கொடுமைபடுத்தினான் . அடித்து துவைத்தான்.
விபச்சாரம் செய்ய தூண்டினான் . மறுத்த போது அடித்து உதைத்தான் சூடு வைத்தான் . வேறு வழியில்லாமல் பதினாலு வயதில் படிப்பறிவில்லா சிறுமி சோமாலி விபச்சாரத்தில் தள்ளபட்டாள் . ஒருநாள் மறுத்த போது குடி போதையில் துப்பாக்கியை அவள் முன் நீட்டினான் . ஒருகுண்டு த்லையை மயிரியிழையில் உரசிக்கொண்டு பொனது ..இன்னொரு குண்ர்டு கால்களுக்கிடையில் பாய்ந்தது.

இவனிடம் வாழ்வதைக்காட்டிலும் விபச்சர விடுதியே சிறந்தது என நினைத்தால் அது போலவே அவனும் அவளை பெரும் பணம் வாங்கி கொண்டு விடுதியில் விற்று விட்டான் .ஒருநாளைக்கு ஆறுபேர் வரை அவளை சித்ரவதைக்கு ஆட்படுத்தினர் . ஒருமுறை ஒருவன் வெளியில் அழைத்து செல்ல அங்கு இருபது பேர் காத்திருந்த்னர்
அன்று சோமாலிக்கு யாரையாவது கொலைசெய்யும் வெறி இருந்தது
அவளை அழைத்துசென்ற அந்த நபரை கொலைசெய்யும் வெறி அவளுக்கு உண்டானது . திட்டமிட்டு பின் த்ன்னை போல ஒரு பெண்ணாக இருக்கும் அவனது தாய் மற்றும் மனைவியின் கண்ணீரை எண்ணி அந்த எண்ணத்திலிருந்து விலகினாள்

இது போல பல சிறுமிகள் தன்னோடு பாலியல் தொழிலில் ஈடுபட்டு கொடும் சித்ரவதைகளூக்கு ஆள்வாதை கண்டு மனம் வெதும்பினார். விடுதியை நடத்துபவர்கள் இது போன்ற சிறுமிகளை சங்கலியால் கட்டி வைத்து போதிய உணவு உடைகூட தராமல் சித்ரவதை செய்யப்பட்டனர். பல சிறுமிகளை கொடூர வியாதிகள் தாக்கின.அவற்றுக்கு சிகிச்சை கூட த்ராமல் விடுதியை நடத்துபவர்கள் அவர்களை கொடுமைபடுத்தினர்.
ஒருநாள் விடுதியில் சோமாலியின் நெருங்கிய தோழியாக இருந்த ஒரு பெண் அங்கிருந்த ஏஜெண்ட் ஒருவனால் கண்ணெதிரிலேயே கொலைசெய்ய்ப்படுவதை பார்த்த சோமாலி உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பித்தார். அந்த ஓட்டம் அவரது வாழ்க்கை மட்டுமல்லாமல் பல எண்ணற்ற சிறுமிகளின் வாழ்க்கைக்கு ஒளியேற்றுவதாக இருந்தது .

யாரோ சிலரது உதவியால் மருத்துவ மனை தாதியாக வேலைசெய்த சோமாலிமாம் கொஞ்சம் கொஞ்சமாக புது மனுஷியாக வாழ்க்கை வாழதுவங்கினாள்

அச்சமயத்தில் வேறு யாராவது இருந்தால் இனி நிம்மதியாக வாழ்வே எண்ணம் நேரிடும் ஆனால் சோமலிக்கோ அப்படி ஒரு வாழ்க்கை வாழ விருப்பமில்லை. கண்உன் நேரடியாக விடுதியில் கண்ட பல சிறுமிக்ளது வாழ்க்கை அவளுக்கு கண்ணீல் நிழலாடி உறுத்திக்கொண்டே இருந்தது.

ஒரு நாள் வீதியில் தன்னை போல் விடுதியிலிருந்து தப்பித்துவந்த ஒரு பெண்ணை பார்த்தார். 9 வயதில் விடுதியில் விற்கப்பட்ட சிறுமி அவள் . இப்பொது பதினேழுவயதில் அவளை சோமலிமாம் பர்த்தார். காச நோய்காரணாமாக் அவளை விடுதியினர் விரட்டியிருந்தனர். மருத்துவ மனைகளும் அவளுக்கு சிகிச்சை செய்ய மறுத்து விரட்டியடித்தன . மோசமான நிலையில் அவளது உடலும் தோற்றம் இருந்தது. மனமும் உருக்குலைந்து காணப்பட்டது. சோமாலி அவளை கண்டதும் கட்டித்தழுவ அப்பெண் கண்ணீர் விட்டாள் .

சோமாலி மாம் அவளை வீட்டிற்கு அழைத்து சென்று குளிப்பட்டி குணப்படுத்தி நோய்களுக்கு மருந்திட்டார்.அந்த பெண் பூரண நலமடைந்து முகத்தில் எழும்பிய சிரிப்பு சோமாலிக்கு வாழ்வில் பெரும் வெளிச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது சோமலிக்கு உடனடியாக பணி நிமித்தம் பிரன்சுக்கு போக வேண்ரிய வேலை இருந்தது . ஆனால் வீட்டில் அவளது அரவணைப்பில் பாதுகாக்கப்பட்ட பெண்னுக்கோ சோமாலியை பிரிய மனமில்லை .நீங்கள் இல்லவிட்ட்டால் நான் இறந்து விடுவேன் எனகூறி அழுதாள். ஆனாலும் சோமாலிமாமுக்கு பணி நிமித்தமாக செல்ல வெண்டியது கட்டயாமாக இருந்ததால் பிரான்சுக்கு பயணமானார்.

பிரான்சுக்கு சென்ற சில நாட்களில் அந்த துக்க செய்தி அவரை தாக்கியது . அவளால் காப்பாற்ற பட்ட அந்த அபலைபெண்ணின் மரணம் சோமாலிக்கு பெரும் வேத்னையை உண்டாக்கியது . அதன் பாதிப்பில் இனி தன் வாழாள் முழுவதையும் இது போன்ற பெண்களுக்காக அர்ப்பணிக்க அந்த கணத்தில் முடிவெடுத்தார். சில காலம் பிரான்சில் பணி புரிந்தார். அவருடன் கைகோர்க்க வந்த நண்ப்ரை திருமணமும் செய்துகொண்டார்.

தன் தாயகமான கம்போடியாவுக்கு வந்த சோமாலி மாம் பிரெஞ்சு அரசாங்கத்தின் உதவியுடன் பாலியலால் துன்புறும் கம்போடிய சிறுமிகளை காப்பாற்ற ஒரு Acting for Women in Distressing Circumstances. எனும் அமைப்பை 1992ல் உருவாக்கினார் .அவரோடு சில சமூக ஆர்வலர்கள் கை கோர்த்த்னர் . சோமாலி த்லைமையில் அவர்கள் பாலியல் விடுதிதோறும் சென்றனர். சோமாலி குழந்தைகளை மீட்க அவர்களுடன் போராடினார். முதலில் அவர்கள் பணியவில்லை. சிலர் விரட்டியடித்த்னர். குண்டர்கள் மிரட்டினர் . ஒரு விடுதியிலிருந்து துப்பக்கியுடன் ஓடிவந்த ஒருவன் நேற்றியில் அதை வைத்து இங்கிருந்து ஓடு இல்லாவிட்டால் பிணமாகசரிவாய் என மிரட்டினான்

ஆனல் சோமாலி மாம் உறுதியுடன் அங்கேயே நின்றார். அவனுக்கு என்ன செய்வதென தெரியவில்லை.ஆனால் சோமாலி அவனது உறுதியை தன் தன்னம்பிக்கை விரைவில் பலவீனப்படுத்தும் என நன்கு உணர்ந்திருந்தார். அது போலத்தன் நடந்தது அவனால் சுடமுடியவில்லை . சில நிமிடங்களில் போலீசார் அவனை குண்டு கட்டாக தூக்கினர் . அத்ன் பிறகு பாதுகாவலர்கள் வைத்துக்கொள்ளும்படி பலர் அறிவுறுத்தினர் .ஆனால் சோமலி அதை தவிர்த்தார். முதல் வருடம் மொத்தம் 89 சிறுமிகள் காப்பாற்றப்பட்டனர். பல சிறுமிகளை பால்வினை நோய்கள் கடுமையாக தாக்கியிருந்த்ன. அவர்கள் முழுவதுமாக சிகிச்சை செய்யப்பட்டனர் .. அவர்களது கல்வி எதிர்கால வாழ்க்கை ஆகியவற்ரை சோமலியின் தொண்டு நிறுவனம் கவனித்துக்கொண்டது. 1996ல் சோமாலி மாம் ட்ரஸ்ட் என அந்த தொண்டு நிறுவனம் பெயர் மாற்றம்
கண்டது இன்று அவரது நிறுவனத்தால் 4000க்கும்மேற்பட்ட பெண்கள் சிறுமிகள் பாலியல் விடுதிகளிலிருந்து காப்பாற்றபட்டு சிகிச்சயளிக்கப்பட்டு அவர்களது வாழ்வில் எதிர்கால ஒளியேற்றபட்டுள்ளது

சோமாலியின் இந்த சேவை விரைவில் உல்கம் முழுக்க தெரிய வர சோமலியின் புகைப்ப்டங்கள் அனைத்து இதழ்களிலும் அச்சாக துவங்கின.
ஸ்பெயின் நாட்டு இள்வரசியிடமிருந்து 2006ல் அவருக்கு முதல் விருது தேடிவந்தது தொடர்ந்து பல விருதுகள் பாராட்டுக்கள் அவரை நோக்கி குவியதுவங்கின . ஒலிம்பிக்கின் கொடியை அசைத்து துவக்குமளவிற்கு பிரபலமானார் . பல பல்கலைகழங்கள் அவருக்கு டாகடர் பட்டங்களைதந்து பெருமைப்படுத்தின .

இப்போதும் அவருக்கு மிரட்டலகள் வருகின்றன

சேவையை நிறுத்த சொல்லி அவரது மகள் க்டத்த்ப்பட்டாள் . பின் போலிசார் அவளை மீட்டனர்.ஆனாலும் சோமாலி அஞ்சவில்லை .. இப்போதும் தொடர்ந்துதன் பணியில் அஞ்சாமல் துணிவும் தம்பிக்கையுடனும் விடுதிகளை நோக்கி செல்கிறார்.

April 10, 2011

பெண்ணென பெரிதாய் உளத்தக்க... . தொடர் பாகம் :2




நாளும்கிழமையும் நலிந்தோர்க்கில்லை
ஞாயிற்று கிழமையும் பெண்களுக்கில்லை
- கந்தர்வன்



மார்ச் 8 உங்களுக்கு தெரிந்திருக்கும் உலகமே கொண்டாடிவரும் தினம்.

பெண்கள் தினம்.

இது உண்மையில் ஒரு சதிதான்
பெண்களும் இதை அறியாமல் அந்நாளில் கொண்டாடிவருகின்றனர்.

சரி இதில் என்ன சதி நல்ல விடயம்தானே
என பலரும் கேட்கலாம்

அவர்களிடம் நான் கேட்கிறேன்
ஏன் அப்படியானால் ஆண்கள் தினம் என்று இல்லை

364ல் ஒருநாள் பெண்களூக்கானதென்றால்
இதர் நாட்கள் அனைத்தும் ஆண்களின் தினம் என்ற மறைமுக அர்த்தம் இயல்பாக வந்துவிடுகிறதல்லவா

ஆணும் பெண்னும் சமம் என்றால் அவர்களுக்கும் ஒரு நாள் இருப்பதுதானே இயல்பு .

நான் பேசுவது சிலருக்கு விதண்டாவதமாக தெரியலாம்
அல்லது விடாக்கொண்டன் கொடக்கண்டன் போட்டாபோட்டியாக அறியப்படாலம்.

ஆனால் சற்று சிந்தித்து பாருங்கள்

பெண்ணுக்கு எந்த நாளில் துன்பமில்லை
எல்லா நாளிலும் துன்பங்கள் பொது வாழ்வில்தொடர்கதைகள் தான்

அத்த்னை துன்பங்களுக்கும் இந்த ஒருநாள் வலிதீர்க்குமா மருந்தாகிவிடுமா

அல்லது அவர்களது கண்ணீரை துடைத்திடுமா

அப்படித்தான் இந்த ஒருநாளில் பெண்கள் யாரும் வீட்டில் வேலை செய்யாமல் இருக்க எல்லாவேலையும் ஆண்கள் செய்கிறார்களா .. இல்லையே

அப்புறம் என்ன இந்த பெண்கள் தினத்தில் விசேஷம்

ஒருவகையில் இதுவும் கூட ஏமாற்றுதான்

உண்மையில் இந்த பெண்கள் தினம் வந்ததும் கூட பெரும்போராட்டத்தின் விளைவுதான்

உங்களுக்கு ஒலிம்பியா டி காக்ஸ் என்ற பெண்மணியை தெரியுமா

தெரியாவிட்டால் தெரிந்துகொள்லுங்கள் அவர்தான் பெண்களுக்காக அவர்களது உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்த முதல் பெண்மணி

அவரது இயற்பெயர் மேரி கோஸ்
பிரான்ஸ் நாட்டில் மோண்டேபன் எனும் ஒருகுக்கிராமத்தில் 1748ம் ஆண்டு ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர்.

ஆனால் வளர்ந்த ஒரு கட்டத்தில்தான் தனக்கு உண்மையான தந்தை தாயின் கணவரல்ல இன்னொருவர் என தெரிய வந்தது

அவளதுதாய் தன் மகளுக்கு தந்தை இவர்தான் என ஊரைக்கூட்டி பகிரங்கமாக அறிவித்தார்

ஆனல் அந்த பெரிய மனிதர் ஏற்கவில்லை.
ஆனால் சமூகம் ஏற்கவில்லை

தன் குழந்தைக்கு தந்தை யார் என அடையாளம் காட்டும் அதிகாரம் ஒரு பெண்னுக்கு இல்லை . ஆனால் ஒரு ஆண் தன் தீர்மானிக்கவேண்டும்
என திட்டவட்டமாக அறிவிதத்து.

இந்த சம்பவம் மேரிக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது


1765ம் ஆண்டு லீயிஸ் என்பவருக்கு மனைவியாக வாழ்க்கை பட்டார் .

அந்த திருமணம் ஒரு கட்டாய கலயானம் .அந்த திருமணத்தில் அவருக்கு விருப்பமில்லை .ஆனாலும் சிறுபெண்ணான மேரி குடும்பவாழ்க்கையில் உழன்றாள்
அந்தவாழ்க்கைக்கு மூன்றவது வருடத்திலேயே முற்று புள்ளி வைக்கப்பட்டது

காரணம் கணவரின் திடீர் மரணம்

ஆனலும் மேரி நிலைகுழ்லையவில்லை

தன்னுடைய ஒரே ஆண்குழ்ந்தையை சுமந்தபடி பாரீஸ்நகரம் வந்தார் .

இயற்கையிலேயே கற்பனைவளமும் எழுத்தாற்ரலும் மிக்க மேரி கொஸ் தத்துவவாதிகள் கூடும் இடங்களுக்கு சென்றார் வசீகரமான முகத்தோற்றம் கொண்ட மேரிக்கு இயல்பாகவே நண்பர்கள் கூட்டம் அதிகமாக விரிந்தது. உடன்
பிரபல எழுத்தாளர்கள் கலைஞர்கள் அறிமுகமானார்கள். அப்போது அவர்கள் மன்னரட்சிக்கு எதிராக சுதந்திரம் வேண்டி புரட்சிக்கான ஆயுத்தங்களில் இருந்தனர்.
சுதந்திரம் சுதந்திரம் என்கிறீர்களே பெண்களுக்கு உங்கள் வீட்டில் என்ன சுதந்திரம் இருக்கிறது என அவர்கள் முன் கேட்டார் ?

உங்கள் மனைவியை அவளது விருப்பபடிதான் மணந்தீர்களா
அவளோடு உறவுகொள்ளும் ஒவ்வொருமுறையும் அவளது விருப்பத்தோடு தான் ஈடுபடுகிறீர்களா ?

என தொடர் கேள்விகள் மூலம் அறிஞர்களை கதிகலக்கினார்

”முதலில் பெண்களுக்கு ஆண்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று தாருங்கள்.அவளது எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் உரிமை பெற்று தாருங்கள் ”!. என முழக்கமிட்டார்

அவரது கருத்துக்களுக்கு கைதட்டல்கள் கிடைத்த்ன
தன் பெய்ரை ஒலிம்பியா டி காக்ஸ் என மாற்றிக்கொண்டார்

கற்றோர் சபையில் ஒலிம்பியாவின் பெயர் பிரபலமானது

1773ல் ஜேக்குஸ் பேட்ரிக் எனும் செல்வந்தரோடு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவரது கணவர் தொடர்ந்து ஒலிம்பியாவின் செயல்படுகளுக்கு ஊக்கமும் ஆக்கமும் தர ஒலிம்பியா அடிமை தளைகளை அறுக்கும் நாடகங்களை எழுததுவங்கினர்
அந்த நாடகங்களுக்கு ஆட்சியாளர்கள் மட்டுமல்லமல் சக புரட்சியாளர்களிடமிருந்தும் கடும் எதிர்ப்புகள் இருந்தன

எதிர்ப்புகள் இருந்தாலும் ஒலிவியா கடுகளவும் அஞ்சமல் தன் கருத்துக்களை நாடகங்கள் வாயிலாகவும் கட்டுரைகள் வாயிலாகவும் எடுத்துரைத்தார். பெண்களின் உரிமையும் குடிமக்களின் உரிமையும் எனும் அவரது நூல்தான் பெண்ணியம் தொடரபாக வெளியான ஆதாரபூர்வமான முதல் நூல்.

வெறும் எழுத்தோடு நில்லாமல் பெண்ணுரிமைக்காக பல பெண்களை ஒன்று திரட்டி சங்கங்களை உருவாக்கினார்

இவரது எழுத்துக்கள் ஆட்சியாளர்களின் கோபத்தை உண்டாக்கியது ..இதன் காரணமாக 1793ல் கைதுசெய்யப்பட்டார்.எழுத்தை விடகோரி அவரை ஆட்சியாளர்கள் எச்சரித்த்னர்

ஆனால் ஒலிவியா மறுத்தார் .அது என் பிறப்புரிமை என வாதிட்டார்

அவரது கருத்துக்கள் சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு அதற்காக அவருக்கு கோர்ட்டில்
மரண தண்டனை பரிந்துரைக்கப்ப்ட்டது

கில்லட்டின் எனும் கொடிய கருவியில் வைத்து அவரது தலை துண்டிக்கப்ட்டது

பெண் விடுத்லைக்காகவும் சுதந்திரத்துகாகவும் வீரமரணத்தை தழுவிக்கொண்டார் .

ஒலிம்பியா டி.காக்ஸ் எனும் அந்த வீர மங்கையின் வலிமையும் நெஞ்சுரமும் துணிச்சலான கருத்துக்களும் அக்காலத்தில் எடுபடவில்லை

ஆனால் வரலாற்றில் அவரது குரல் அழுத்த்மாக பதிக்கப்பட்டது

அடுத்த சில வருடங்களில் எழுத்துரிமை பேச்சுரிமைகள் வர வர ஒலிம்பியவின் கனவும் மெல்ல நனவாக துவங்கியது .

ஒலிம்பியவுக்கு பின் ப்ல பெண்கள் மகளீருக்காக போராடினாலும் பத்தொன்பதம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நடந்த ஒரு வேலை நிறுத்தம்தான் மகளிர் தினத்துக்கு அடித்தளமிட்டு தந்தது..

ஜவுளிதொழில்தான் மகளிர் வேலைக்கு வர முதல்காரணம் .

ஆனலும் அந்த வேலை பலசிரமங்களை கொண்டிருந்தது
பணியில் அதிகரிகளின் தொந்தரவு அதிகபடியன வேலை நேரம் அகியவற்றால் அப்பாவி பெண்கள் அவதியுற்றனர்.

தொடர்ந்து அனுபவித்து வந்த துயரங்கள் தாளமால் ஒரு நாள் பொங்கி எழுந்த்னர்.

அந்த நாள் 1857ம் ஆண்டு மார்ச் 8ம் நாள்

பெண்கள் அனைவரும் கோஷமிட்டபடி வீதியில்கூடினர்

ஓரணியில் திரண்டனர்

நியூயார்க் நகரமே கிடுகிடுத்தது

இத்த்னைக்கும் அக்காலத்தில் மார்க்சியம் கம்யூனிசம் எல்லாம் முழுமையாக உருவாகாத சூழல்

அப்படிபட்ட சூழலில் இப்படி ஒரு பெண்களின் மத்தியில் அறிவிப்பில்லத புரட்சி வரகாரணம்

ஒன்று கூலி இன்னொன்று அதிகாரிகளீன் அத்துமீறல்

இந்தபேரணியை த்டுத்து நிறுத்தும்விதமாக போலீஸ் ஈவு இரக்கமில்லாமல் தடியடி நட்த்தியது

இதில் சிலர் உயிரிழந்த்னர் பலபெண்கள் காயமுற்றனர்
அந்த காயங்களும் சில நாட்களில் ஆறிவிட்டன

ஆனால் வரலாற்றில் அவை வடுவாகிவிட்டது .

ஒவ்வொருவருடமும் அந்நாள் வரும்போது பெண்கள் கூட்டம் கூடினர் பேசதொடங்கினர் .கண்ணீர்விட்டனர் ,கூக்குரல் எழுப்பினர் .. ஊர்வலம் சென்றனர்

தொழிலாள வர்க்கத்தின் நாட்குறிபெட்டில் அந்நாள் பதிவாகியது .

பிற்பாடு சோவியத் ரஷ்யாவில் லெனின்மூலம் அந்நாள் பெண்கள்தினமாக ரஷ்ய கம்யூனிஸ்டுகளால் அங்கீகரிக்கப்ப்ட பின் அதுவே மெதுவாக உலகம் முழுக்க பரவ ஆரம்பித்தது



உண்மையில் இந்தநாள் பெண்கள்தினம் என்பதை விட உழைக்கும் பெண்களின் தினம் என்பதுதான் சரியாக இருக்கமுடியும்

உண்மையில் இது வலிகளுக்கான நாள்.

ஆனால் பலரோ அன்னையர்தினம் நண்பர்கள்தினம் காதலர்கள்தினம் போல பெண்கள் தினத்தையும் கேளிக்கைகளின் நாளாக கொண்டாட துவங்குகின்றனர்.

ஏதோ பெண்கள்மீது இந்த உல்கம் ஒருநாள் கருணையுடன் ந்டந்துகொள்வதாக எண்ணி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கூறுவதும் கைகுலுக்குவதுமான வேடிக்கைகள் தொடர்கிறது

அடுத்த்நாள் முதல் பெண்களும் ஆண்களின் தினத்துக்கு தயராகிவிடும் சோகமும் தொடர்கிறது
உண்மையில் அரசாங்கம் பெண்கள் தினத்த்னறு
பெண்களுக்குமட்டும் விடுமுறை அறிவிக்கவேண்டும்
அன்று ஒருநாள் மட்டுமாவது பெண்களின் வேலைகளை ஆண்கள் செய்யவேண்டும்.

அப்படி நடந்தால் அதுதான் உண்மையில் பெண்கள் தினம்..

(தொடரும்)

நன்றி :பெண்ணே நீ, ஏப்ரல் 2011 இதழ்

March 6, 2011

பெண்ணென பெரிதாய் வுளத்தக்க...


பெண்ணென பெரிதாய் வுளத்தக்க...

1

வாழ்க்கை எனும் நதி நீர் ஓடிக்கொண்டேயிருக்கிறது
தினமும் எத்தனை எத்தனை முகங்களை பார்த்துக்கொண்டேயிருக்கிறோம்

இத்தனை முகமும் நம் நினைவில் நிற்கிறதா என்ன !

ஆனாலும் சில முகங்கள் கல்வெட்டுகளாக நம் மனதில் ஆழபதிந்துவிடுகின்றன.

அவற்றுள் மூன்று தோழிகளின் முகங்களை என்னால் மறக்க முடியாது ..

பதினைந்து வருடங்களுக்குமுன் பாண்டிபஜாரில் கூட்டமாக வழிந்து செல்லும் நெரிசலுக்கிடையே அந்த முகங்களில் காணப்பட்ட மகிழ்ச்சியும் வெட்கமும் இன்னமும் எனக்குள் பசுமையான நினைவில் பதிந்துள்ளன.


ஜெமிமா பங்கஜம் ராதா

மூவர்தான் அந்த பெண்கள்

கல்லூரி படிப்பு முடிந்த கையோடு ஒரு சமூக சேவை நிறுவனத்தில் பணி புரிய நேர்ந்தபோது கிடைத்த தோழிகள் இவர்கள்

இதில் ஜெமி காஞ்சீபுரத்தை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவள். அதே போல
ராதா மீஞ்சூர் ,பங்கஜம் கும்முடிப்பூண்டி என அனைவரும் சென்னைக்கு அருகிலிருந்த போதும் கிராம பின்னணியிலிருந்து வருபவர்கள்



நாங்கள் பணிசெய்த அலவலகம் சென்னையில் இருந்த காரணத்தால் வாரத்தில் ஒருமுறை சென்னை அலுவலகத்திற்கு வருவோம் .

இதர நாட்களில் எங்களது கிராமபுறங்களில் நாங்கள் செய்த களப்பணிகள் குறித்து அதிகாரியிடம் அறிக்கை சமர்ப்பிக்க
வேண்டி அங்கு கூடுவோம்

ஐந்து ஆண்கள் ஐந்து பெண்கள் என மொத்தம் பத்து பேர் குழு அது ஆனாலும் அதில் எங்கள் நால்வருக்குள்ளும் நல்ல ஒத்திசைவு

இதர மூவரது வீட்டிலுள்ளவர்களுக்கும் என்னை நன்குதெரியும்
காலம் கடந்து அவர்கள் விட்டிற்கு திரும்ப நேரிடும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நானே அவர்களுடன் வீட்டிற்கு ஒரு பாதுகாப்புக்காக உடன் செல்வேன்

ஒருமுறை அலுவலக வேலை முடிந்து ஜெமிமா வீட்டிற்கு திரும்ப நேரமாகிவிட்டது. காஞ்சிபுரத்தை அடுத்த அவளது கிராமம் பேருந்து நிறுத்ததிலிருந்து ஏறக்குறைய ஒரு கிமீ தூரம் இருட்டில் நடக்க வேண்டும் . அதன் பொருட்டு நான் ஜெமிமாவுடன் உடன் சென்றேன் வீட்டிற்கு சென்ற போது நேரம் பதினொன்றரை , வீட்டிற்கு சென்றதும் அவர்கள் குடும்பத்தார் என் மேல் மிகுந்த அனபை செலுத்தினர்.அந்த நேரத்தில் கூட்டை திறந்து ஒரு கோழியை பிடித்து இரவு
பனிரண்டு மணிக்கு எனக்கு அவள் விருந்து படைத்தாள்.
நாங்கள் இருவரும் சாப்பிடும்போது எங்களை சுற்றி குறட்டை சத்தம். ஜெமி மட்டும் இல்லை மற்ற இருவரிடமும் இதே மாதிரியான நெருக்கமான நட்பு எனகு இருந்தது



ஒருநாள் அவர்கள் மூவருக்கும் ஒரு ஆசை

அதுநாள்வரை தாவணியில் மட்டுமே அலுவலகம் வரும் அவர்களுக்கு நகரத்து பெண்களை போல ஜீன்ஸ் டாப்ஸ் அணீய ஆசை

அன்று ஒருநாள் மூன்றுமாதமாக வராத சம்பள பாக்கிஒரே நாளில் கிடைத்தது

பணம் வாங்கிய கையோடு மூவரும் என்னை பாண்டிபஜாருக்கு அழைத்து செல்லும்படி வேண்டிக்கொள்ள நானும் அவர்களுடன் பஸ் பிடித்து திநகர் வந்து இறங்கினொம்

அவர்கள் முகத்தில் அதுவரையிலன் மகிழ்ச்சியும் சந்தோஷமும் எங்கே ஒளிந்திருந்ததோ

ஒரு ஷோரூமுக்குள் அனைவரும் நுழைந்தோம்

வெளியே வரும்போது மூவரும் ஜீன்ஸ் டீஷர்டில் மாறீயிருந்தனர்

அவர்களது பின்னலும் பொட்டும் மூக்குத்தியும் அணிந்த உடைக்கு சற்றும்பொருத்தமில்லாவிட்டாலும் அவர்கள் முகத்தில் பொங்கி வழிந்த அடக்கமுடியாத வெட்கமும் மகிழ்ச்சியும் ஒரு அதிசயமான அழகை அவர்கல் முகத்தில் தோற்றுவித்தது.

அண்று அந்த முகங்களீல் ஒளீர்விட்ட அழ்கை இன்று வரை நான் எந்த உலகசினிமக்களீலும் கண்டதில்லை

அடுத்தசில மணீதுளிகளில் எங்கள் கால்களை கடலைலைகள் உற்சாகமாக நனைத்தன

மகிழ்ச்சியின் நுரைகளை கைகளில் அள்ளீ
ஒருவர் மீது ஒருவர் வீசியபடி அவர்கள் சொல்ல முடியாத மகிழ்ச்சிகளை பகிர்ந்துகொண்டனர்

பகல் மாலையாக மயங்க துவங்கியதும் மகிழ்ச்சியும் வடிய துவங்கியது.

பேருந்து பிடித்து அவசரமாக அலுவலகம் திரும்பினோம்
அனைவரும் வெளியே வந்தபோது மீண்டும் தாவணிக்கு மாறீவிட்டிருந்தனர்

அந்த ஒருநாளில் அவர்கள் அடைந்த மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் வாழ்நாள் முழுக்க திரும்ப அனுபவித்திருப்பார்களா என்பது சந்தேகமே

அவர்கள் அந்த உடைகளை வீட்டிற்கு எடுத்து செல்ல முடியாமல் வெளியே வீசவும் மனமில்லாமல்
பட்ட அவஸ்தை இன்னமும் என் மனக்கண்ணில் நிழலாடுகிறது

அதில் ஒருபெண் மட்டும் தன் தோழி வீட்டில் அந்த உடைகளை நெடுநாள் ஒளித்து வைக்க மற்ற இருவரும்
பயத்தில் ரயில் ஜன்னல் வழியாக பையுடன் அந்த உடைகளை
வெளியே வீசியெறிந்துவிட்டதாக பிற்பாடு தகவலறிந்த போது என் மனம் பெரும் சங்கடத்தில் ஆழ்ந்தது

தெரிந்திருந்தால் நாமாவாது வாங்கி வீட்டில் பத்திரமாக வைத்திருந்திருக்கலம் . என்றும் பிற்பாடு பிரயோஜமனமற்று யோசித்துக்கொண்டேன்

இது நடந்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன

அந்த மூவரும் இன்று எங்கிருக்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள் எதுவும் எனக்கு தெரியது
ஆனால் அந்த நாளை மூவரும் மறக்க வாய்ப்பே இல்லை


வீசியெறிப்பட்ட் ஆடைகள் யாருக்கு பயன்பட்டனவோ

ஆனால் அதன் துயரம் இக்கட்டுரையை இன்று எழுதும் போது
மனதை பிசையத்தான் செய்கிறது

உடை என்பது அடையாளம்தான்

இன்னும் விரும்பிய உணவு விரும்பிபார்க்கவேண்டிய இடங்கள் விரும்பிய வாழ்க்கை என பலவிடயங்களில் அவர்களது தேர்வுகள் அவர்களால் தீர்மானிக்க முடியாமால்தான் வாழ்க்கையை வாந்துகொண்டிருந்த்னர்.


இன்று இந்த சூழல் சிறிதளவு மாறியிருக்கலாம்
யாரோ சில பெண்கள் சுதந்திரமாக த்ளைகளற்று தன் மகிழ்ச்சியைய்யும் சுதந்திரத்தையும் தீர்மனிக்க வாய்ப்புக்ள் கிடைக்கலாம்

ஆனால் இன்னமும் பல பங்கஜம் ராதா ஜெமிமாக்கள்
நம் கிராமங்க்ளில் கோடுகளின் எல்லை தாண்டாமால்
மனதுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் பெரும் இடைவெளிகளூம் ஏக்கமுமாக வாழ்ந்து வருவதை கண்கூடாக பார்க்க முடியும் .




தன் தேர்வுகளை தன் சுதந்திரங்களை தீர்மானிக்க முடியாமல் ஒரு பெண்ணை சுற்றி பல லட்சுமண கோடுகள் வரையப்பட்டிருக்கின்றன என்பதுதான் நிஜம்

இத்த்னைக்கும் நம் சமூகத்தில் பெண்ணுக்கு இருக்கும் மதிப்புகள் இருக்கிறதே அது வேறெங்கும் இல்லை





பெண்
அவள்தான் ஆதி
அவளே மூத்த்வள் முதல்வி

பேருரு பெரும் சக்தி
இப்படி காலம் காலமாக போற்றபடும் இந்த மகாசக்திகள்
பலரது நிலை மிகவும் பரிதபகரமனது

அதிலும் குறிப்பாக வேலைக்கு செல்லும் மகா சக்திகளது காலை நேர பாடுகள் இருக்கிறதே அது மிகவும் பரிதாபம்
பள்ளி புறப்படும் குழ்ந்தைகளது தொலைந்து போன காலுறைகள் அல்லது ரிப்பனை தேடுவத்ற்கும் சமயலறையின் குக்கர் சப்ததுக்குமிடையில் அவர்கள் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது


கீராமங்க்ளில் நாத்துநட்டு களை பறித்து கூலி வேலை செய்து வீடு திரும்பும் மகாசக்திகளுக்கோ வேறு ரூபத்தில் ப்ரச்னை

இரவு குடிகார கணவனை எப்படி சமாளிப்பது என

மகாசக்திகள் தினமும் தங்களது பெரும்பாலும் தங்க்ளுக்காக செலவழிப்ப்தில்லை

அவை பெரும்பாலும் கணவனுக்கோ குழந்தைகளுக்கோ மாம்னார் மாமியாருக்கோ அப்பா அம்மவுக்கோ சகோதர்ர்களுக்க்கோ தான் பெரும் பாலும் இருக்கும்

இப்படியே மற்றவர்களுக்காகவே தம் சக்திகளை செலவழித்து செலவழித்து இறுதியில் தோல் சுருங்கி கூன் விழுந்து மகாசக்திகள் மண்ணில் வீழ்ந்தும் போகின்றன

வாழ்க்கை முழுவதும் இப்படியே தன்னை கரைத்துக்கொள்ளும் மகா சக்திகள் என்று தனக்காக வாழபோகின்றன .

த்னக்கான் ஒருகணம்
முழுவதுமாக த்ன் மனம் தன் உடலுக்காக..
இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களை போல
பிரபஞ்சத்தின் அனைத்தோடும் தொடர்புடைய ஒரு மனிதபிறவியாக அவள் என்று உணரபோகிறாள்



வெறும் வீடு குழந்தைகள் கணவன் எனும் உலகத்துக்கு அப்பால் இந்த பூமியின் இதர மகிழ்ச்சியான அனைத்தையும்
சுவாசிக்க அனுபவிக்க முழு தகுதியுடையவள் என்பதை
என்றாவது அவள் உணர்ந்திருக்கிறீர்களா?

ஒரு ஆண் எத்த்னை வயதானவனாக இருந்தாலும் அவனது நேரம் செயல் முழுவதும் அவனுக்காக முழுமையாக செயல்படுத்தப்ப்டுகிறது

ஆனல் ஒரு பெண் அவள் எந்தவயதானலும் கோடுகளுக்குட்பட்டே செயல்படவேண்டியிருக்கிறது .

இதோ இதை படிக்கும் இந்த நேரத்தில்கூட எத்த்னையோ மகாசக்திகள் அடிக்கடி வீட்டை பற்றியோ வேறு வேலை பற்றியோ அடிக்கடி யோசித்துக்கொண்டுதான்
படிப்பார்கள் என்பதில் துளீயும் ஐயமில்லை

அப்படியானால் ஒரு பெண் எப்போது இந்ததளைகளை அறுக்க முடியும்

அப்படி அறுப்பது சரியா

இயற்கை தனக்கு கொடுத்த க்ருத்தரிக்கும் அற்புத் வாய்ப்பை இழ்ப்பதும் அத்ன் பொருட்டு உடலோடு கட்டப்படும் உறவ்களும் வாழ்க்கையின் இதர தொடர் முடிச்சுகளீலிருந்தும் விலகுவது முறையா

இது போன்ற கேள்விகள் எழலாம்

சில நவீன் பெண் சிந்த்னையாளர்கள் சொல்வதைபோல்
ஒரு பெண் குடும்ப பந்தங்களை துறப்பதால் மட்டுமே விடுத்லை கிடைத்துவிடும் என்பதில் எல்லாம் எனக்கு உடன் பாடில்லை

அதுதான் பெண் என்பவளின் மிகபெரிய பலம் .
பெண் என்பதன் அடிப்படை இலக்கணமும் இதுதான்


ஆனால் பலத்தோடு அவள் முழுதும் த்ன்னை கரைத்துக்கொள்ளாமல் தன்க்கென சில உணர்வுகளையும் கனவுகளையும் சில லட்சியங்களையுக்ம் வளர்த்துக்கொள்கிற போதுதான் ஒரு பெண் முழுமையான பெண்ணாக மாற முடியும்.அல்லாதவர்கள் இந்த பூமியில் பிறக்க்கும் எத்தனையோ பிள்ளை பெற்றுதரும் பாதுகாக்கும் இயந்திரங்களில் ஒன்றாகத்தான் மாற வேண்டிய துர்பாக்கியம் நிகழும்

தன்னை சுற்றி இறுகிகிடக்கும் கட்டுகளை தகர்த்துக்கொண்டு ஒரு சராசரி பெண் எப்படி உயிர்த்திருக்க முடியும்
என்பதற்கான சிறு வழிகாட்டுதல்தான் இத்தொடர்

இன்றைய பெண்ணுக்கு தேவையான அடிப்படையானது
உல்க அறிவும் பரந்துபட்ட பார்வையும் நுண்ணுணர்வும் மனித நேயமும் எதனையும் எதிர்த்து போராடும் வல்லமையும் ஆற்றலும் ஆகும்

இத்தொடர் மூல்ம நவீன பெண்களுக்கு மேற் சொன்ன நான் கருத்துக்களை வெவ்வேறான அனுபவங்கள் மற்றும்
உதாரண பெண்களின் வாழ்க்கை வரலாறுகள் , உலக சினிமக்களில் .நாவல்களில் சித்திரிக்கபட்ட நான் மிகவும் ரசித்து வியந்த பெண் பத்திரங்கள் அவற்றின் மூலம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

இதில் என் அனுபவம் வியக்க பெரும் சக்தியாகவும் மகா சக்தியாகவும் நான் உணர்ந்த சில பெண்களை அறிமுகபடுத்துகிறேன்


நமக்கான விடுத்லைக்காக் நாம் எங்கும் தேடத்தேவையில்லை

மனம் அது ஒன்றை சரியாக முழுமையாக உணர்ந்து உங்களது ஓர்மையுடனும் கவனத்துடனும் பயன்படுத்தினாலே போதும் உங்களுக்காக வாழ்ந்த மகிழ்ச்சியை சந்தோஷத்தை உங்களால் முழுமையாக அடைய முடியும் .

( தொடரும் )

இந்த மாதம் முதல் பெண்ணே நீ இதழில் தொடராக வெளிவரவிருக்கும் என் கட்டுரையின் முதல் பகுதி

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...