August 5, 2011

இயக்குனர் விஜய் எனும் மாமனித்னும் ஒரு மனிதனும்





தெய்வ திருமகள் படத்தில் உங்கள் பெயரை நன்றி அறிவிப்புடன் போடுகிறார்கள் நீங்கள் என்ன பங்களித்தீர்கள் என பலரும் படம் வெளியான நாளிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். உண்மையில் என் பணி திரைக்கதையை ஒழுங்கு செய்யும் பணி. திரைக்கதை மருத்துவர். ஆங்கிலத்தில் இப்படி ஒரு பதவி இருக்கிறது . திரைக்கதையில் ஏற்படும் சிக்கல்களை தீர்த்து ச்ரி செய்வது அவர்கள் பணி. அத்னால் அந்தபெயர்.

ஏற்கனவே நான் விஜய் அவர்களின் மதராச பட்டினம் படத்தின் கதைவிவாத்தில் கலந்துகொண்டிருந்தவன். அப்படத்தில் வரலாற்று தகவல்களுக்காக நான் விவாததில் கலந்து கொண்டிருந்தாலும் உடன் திரைக்கதையை ஒழுங்கமைப்பதிலும் பங்கேற்றிருந்தேன் .வெறுமனே பத்துநாள் கதைவிவாதத்துக்காக சென்ற நான் தொடர்ந்து அப்ப்டத்தில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். அதற்கு முழுகாரணமும் இயக்குனர் விஜய் அவர்கள் என்னிடம் காட்டிய கனிவும் பரிவும் அதற்கும் மேலாக அவர் கொடுத்த சுதந்திரமும் .

கதைவிவாத்தின் போது நான் என்னை மீறி சிலசமயங்களில் கோபப்படுவேன் அது கதையில் நான் கொள்ளும் ஈடுபாட்டால் வருவது.. அச்சமயங்களில் இயக்குனர்களுக்கு என் மேல் கோபம் வரும் . திமிர்பிடித்த்வன் என நினைக்க வாய்ப்புண்டு. அதனாலேயே நான் பொதுவாக இது போன்ற கதைவிவாத அழைப்புகளை தவிர்ப்பவன். மேலும் நான் நினைப்பது சரியாக இருக்கும் என்ற உறுதி மனப்பானமை .மற்றும் இயக்குனர் சொல்வது சரியில்லையென்றால் நிர்தட்சண்யமாக மறுப்பது போன்றவை பலருக்கும் சரிப்பட்டு வராத தனிக்குணங்கள்

ஆனல் என்னுடைய இயல்பை புரிந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் என்னை அவர் நடத்திய பாங்கு எனக்குள் பெரும் நெகிழ்ச்சியையும் அன்பையும் உண்டாக்கின .

அந்த படத்தில் என்னையும் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களையும் கவுரவப்டுத்தும் விதமாக வெறும்திரைக்கதை ஆலோசனை குழு என்றெல்லாம் போடாமல் சிறப்பு நன்றியை துவக்கத்தில் தெரிவித்ததோடு அல்லாமல் அனைத்து பேட்டிகளிலும் எங்களுடைய பெயரை குறிப்பிட்டு ஒத்துழைப்பை பெருமிதத்துடன் கூறி மகிழ்ந்தார் .


அதன்பிறகு தெய்வதிருமகள் படம் துவங்கிய போது என்னை அழைத்தார்.சென்ற முறை அவர் பெரிய இயக்குனர் இல்லை. இப்போது மதராசபட்டினம் என்ற பெரிய ஹிட்டை கொடுத்திருக்கிறார். இம்முறையும் நாம் நம் இயல்போடு இருந்தால் அவர் அனுமதிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. இயல்புத்தன்மையுடன் என்னால் இருக்க முடியாத இடத்தில் என்னால் பொய்யாக ஒரு நொடியும் அமர்ந்திருக்க முடியாது .

இதனால் சற்று சந்தேகத்துடன் ப்யணப்பட்டேன் கோவையிலிருக்கும் ஒரு மலையோர நட்சத்திர விடுதிக்கு அனைவரும் கதை விவாத்திற்கு சென்றிருந்தோம் . ஆனால் விஜய் முன்னிலும் பக்குவத்துடன் என்னை ஆச்சர்யபடுத்தினார். உள்ளூணர்வுகளிலிருந்து அனைவரையும் அவதானிக்கும் அவரது பக்குவம் , மற்றும் அவரது மனித்தன்மை ஆகியவை என்னிலும் உயரமானவாராக அவரை காண்பித்துக்கொண்டிருந்தன.

சென்னையில் நான் சந்தித்த மிகசிறந்த மனிதராக என்னுள் உயர்ந்தார். பண்பில் நான் அவரை கடக்க ஒவ்வொருமுறையும் முயன்று தோற்று கொண்டிருந்தேன்

அவரது படங்களின் வெற்றிக்கு காரணம் எது எனக் கேட்டால் அது அவருடைய சுபாவம் மற்றும் அவருடைய உயர்ந்த மனித பண்புகளே. என்பதை எங்கும் உரத்து சொல்வேன்

ஒருமுறை சென்னைக்கு வந்த பின் அலுவல்த்தில் கதை விவாதம் இருப்பதாக என்னை அவரது உதவியாளர்கள் அவசரமாக அழைத்தார்கள் . நானும் அவசரமாக சென்றேன் . நான் அலுவலகத்தில் நுழைந்ததும் அனைவரும் கைதட்டி வரவேற்றார்கள் . நானும் ஆச்சர்யத்துடன் உள்ளே சென்றேன் . ஆச்சரயம் அங்கே ஒரு சிறு மேசையில் ஒரு கேக். மற்றும் மெழுகுவர்த்திகள். ஹாப்பி பர்த் டே அஜயன்பாலா என அதில் எழுதப்பட்டிருந்தது. என் வாழ்க்கையின் முதல் கேக் . . நான் வியந்து நிற்பதற்குள் உதவியாளர்கள் அலுவலக ஊழியர்கள் அனைவரும் கைதட்டி என் முதல் கேக்கை பரிமாறினர் .
அவரது உதவியாளர்களுக்கு ஆச்சர்யம் இது வரை பர்த்டே கொண்டாடியதில்லையா என ஆச்ச்சர்யத்துடன் கேட்டனர்.பிற்கலத்தில் நன் பல பெருமைகள் அடையலம் ஆனல் அந்த நாளில் விஜய் எனும் மனிதர் காட்டிய அன்பு அவையனைத்தைக்கட்டிலும் உயர்ந்தது. நான் பல இயக்குனர்களிடம் ப்ணீ புரிந்த்வன். இந்த நகர காட்டில் மிருகங்களின் முன்வராமல் மரங்களிடை ஒளிந்து வாழ்ந்தே பழ்கி வந்த்வன் . அப்படிப்ப்ட்டவனுக்கு இது போன்ற நிகழ்வு எத்துணை பெரிய மகிழ்ச்சி அளிக்க கூடியது என்ப்தற்கு வார்த்தைகள் இல்லை.


கதை விவாதம் முடிந்த கையோடு என் பணியும் முடிந்தது . விஜய் என்னை பலமுறை படப்பிடிப்புக்கு வரசொல்வார் .ஆனால் நான் அங்கு அவரை தொந்த்ரவு செய்ய விரும்பவிலை .
அவர் இப்பட்த்தில் நடிக்க வற்புறுத்தினார். ஆனால் எனகேற்ற பாத்திரம் இல்லாத காரணத்தால் மறுத்துவிட்டேன் .
மேலும் இந்த படத்தில் டைட்டிலில் எனக்கு எந்த மாதிரி கிரெடிட் கொடுப்பது என பேச்சு வந்த போது நான் அவரிடம் சென்ற படத்தில் இட்டது போல வெறும் நன்றி என போட்டால் போதும் என கூறிவிட்டேன் . திரைக்கதை உத்வி அல்லது ஆலொசனை என்பதைவிட ஒரு இயக்குனராக இந்த நன்றி என்னை கவுரவப்டுத்தும் என அறிந்திருந்தேன்

பட வேலைகள் அனைத்தும் முடிந்தபின் என்னை அழைத்து”
சார் ரீ ரெகர்டிங் எதுவும் இன்னும் செய்யவிலை. நீங்கள்தான் முதல் ஆளாக பட பார்க்க போகிறீர்கள் என்று சொன்னார் . திரைக்கதை முழுவதுமாக தெரிந்தாலும் இயக்குனர் விஜய்யை தரிசிக்க ஆவலுடன் சென்றேன் . அவரது தொழில்நுட்பத்திறன் மேல் எனக்கு அசாத்திய் நம்பிக்கை உண்டு . இந்த படம் அவ்வகையில் ஒரு மைல் கல்லாக வரும் என அவரிடம் சொன்னேன் . . அத்ற்கு அவர் இல்லை சார் இந்த்படம் என்னோட அறிவு சம்பந்தப்ட்ட படம் இல்லை சார் என்னோட இதயம் சம்பந்தப்பட்ட படம் சார் . நான் எனக்குள்ள உள்ளூணர்வுகள்ள வளர்ந்திருக்கனா இல்லையாங்க்கிறதுதான் படம் பார்த்துட்டு எனக்கு சொல்லப்போற பதில் என்றார்.

சரி என அவரது அலௌவல்கத்தில் இருந்த சிறிய அரங்கில் படம் பார்க்க துவங்கினோம். மணீ அப்போதே இரவு பதினொன்று ஆகிவிட்டது .படம் பார்த்த பத்தவாது நிமிடத்தில் சில காட்சிகள் என் இதயத்தை எம்ப வைத்தது. காட்சி கட்டமைவுகளில் அவர் கையாண்ட உள்ளூணர்வுகளின் தீண்டல் ஆச்சர்ய படுத்தியது. விவாத்தின் போது சாத்ர்ணமாக இருந்த காட்சிகளுக்கு அவர் உயிர் கொடுத்து உயரத்துக்கு அழைத்து சென்று ஆச்சர்யபடுத்தினார். . ஒருகாட்சியில் எனக்கு அவருக்கும் கடும் மோதல் உண்டாகி நட்பெ முறியுமளவுக்கு வந்தது . ஆனால் விஜய் பிடிவாதமாக கோபத்துடன் நான் உங்க்ளுக்கு படமா எடுத்து காமிக்கறன் சார் என்றார். அந்த காட்சியை திரையில் கண்டபோது என் சுய மதிப்பீடு தரை மட்டமாக நொறுங்கியது .


படம் முழுவதும் முடிந்தபோது நள்ளீரவு இரவு 2 மணியாகிவிட்டிருந்தது. கண்கள் சொறியும் கட்டுப்படுத்த முடியாத நீருடன் கட்டி யணைத்தேன். ஒரு பார்வையாளனாக என்னை பெரும் உய்ரத்துக்கு அழித்து சென்ற தருணம் அது.

இப்ப்டம் மிக பெரிய வெற்றிபடம் . இப்படத்துக்கு பிறகு தமிழின் மிக முக்கியமான மூன்று இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்து விடுவீர்கள் என்றேன் .

அது போலவெ நடந்தது . படம் வெற்றிசெதி கிட்டிய ஒவ்வொரு த்ருணத்திலும் விஜய் நீங்க்ள் சொன்னது போலவே நடக்கிறது என பகிர்ந்துகொண்டார்.

நேற்று காலை அவரது உதவியாளர் என்னை அழைத்து பட்த்தின்வெற்றி விழாவில் இயக்குனர் உங்களை அழைக்க சொன்னார் என கூப்பிட்டார். நானும் பார்வையாளராக நிகழ்ச்சி நடந்த நட்சத்திர விடுதிக்கு சென்றேன் . எனக்கும் ஒரு டீஷ்ர்ட் கொடுத்தார்கள் , அங்கு விஜய் சற்றும் எதிர்பாரா விதமாக என்னை மேடையில் அழைத்தார்.
.
ப்டத்தில் என்னோடு சண்டையிட்டு திரைக்கதையின் வெற்றிக்கு அரிய பங்களித்ததை சொல்லி அனைவர் முன்பும் கவுரவப்டுத்தி அந்த நல்லோர் சபையில் எனக்கும் ஒரு இருக்கை தந்தார் .
விக்ரம் கைகுலுக்கினார். அனுஷ்காவுக்கும் அறிமுகபடுத்தினார்
அமலாபாலும் புன்னகைத்தார்.

திரைபடத்துறையில் இயக்குனராகும் முயற்சியில் ப்ல தோல்விகள் கண்டு பின் அதை வெறுத்து எழுத்தாளனாக மாறியவன் நான் .நட்சத்திரங்களின் அருகாமை நீண்ட நாட்களுக்குபின் என்னை நெருங்கியிருக்கிறது .நானும் அந்த கணத்தில் நட்சத்திரம் ஆகிவிட்டது போல ஒரு சிறு மயக்கம்
காலம் ஒருநாள் என் காலைக்கும் சூரிய்னை பிரத்யோகமக அனுப்பிவைக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது.

இயக்குனர் விஜய் எனும் நண்பருக்கு இந்த உலகம் எல்லா நல்லனவற்ரையும் தரட்டும் என அந்த நிமிடத்தில் மனது வாழ்த்து சொல்லியது. அந்த இடத்தில் அவர் என்னை அழைக்கவேண்டும் கவுரபடுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை .ஆனாலும் அவர் அதை செய்து என்னை தோற்கடித்து மேலும் உயர்ந்துவிட்டார். நான் அவர் அளவுக்கு வளருவெனா ?
என்பது ஐயம்தான்.

August 4, 2011






வீரமாமுனிவர் 12
செம்மொழி சிற்பிகள்



மொழி பிறப்போடு அல்ல அது குணத்தோடும் உணர்வோடும் தொடர்புடையது என்பதற்கு எடுத்தகாட்டாக தமிழுக்கு தொண்டாற்றியவர். தமிழின் முதல் அகரமுதலி எனப்படும் சதுராகராதியை முதலில் வெளியிட்டவர். பரமார்த்த குருவின் கதைகள் மூலம் தமிழுக்கு இன்னுமொரு அணிகலானாய் புனைவு மற்றும் நகைச்சுவை இலக்கியத்தை படைத்து முன்னோடியாக திகழ்பவர். மட்டுமல்லாமல் தேம்பாவணி ர்னும் காவியத்தை படைத்தவர் பெஸ்கி பாதிரியார் எனும் வீரமாமுனிவர்.
பிறப்பு ; நவம்பர் 8 1680

இத்தாலியில் கேசுகிலியோன் இவர் பிறந்த ஊர். கான்ஸ்டான்ஸோ குசப்பே பெஸ்கி (Costanzo Giuseppe Beschi,) என்பது இவரது இயற்பெயர் .தந்தை கொண்டல் போ பெஸ்கி தாயார் எலிசபெத். பதினெட்டாம் வயதிலேயே கிறிஸ்தவ மத்திற்கு தொண்டூழியம் செய்யும் நிமித்தமாய் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட பெஸ்கி அதன் பொருட்டு 1710ல் முதன் முறையாக
தமிழகம் வந்து மதுரைக்குள் சேர்ந்தார்.மக்களிடம் மதத்தை பரப்ப வேண்டி தமிழைகற்றவர் அதன் வசீகரத்தில் தன்னை முழுவதுமாக இழந்து பெரும் காதலுற்றார். அதன் பொருட்டு தன் பெயரை தைரியநாதன் என வைத்துக்கொண்டார். தமிழை மேலும் அகழ்ந்தாய்வுசெய்ய ஈடுபடுகையில்தான் தைரியம் என்பது வடச்சொல் என்பதறிந்து செந்தமிழில் வீரமாமுனிவர் என திருத்திக்கொண்டார். பின் அதோடு நில்லாமல் தன் மேற்கத்திய நடை உடை மற்றும் வாழ்வியல்பண்பாடுகளை களைந்து முழுவதும் தமிழ் பண்பாட்டுக்கு ஏற்ப த்ன் தோற்றத்தையும் வாழ்க்கை முறைகளையும் மாற்றிக்கொண்டார். 1822ல் இவருடைய வரலாற்றை முதன் முதலாக தமிழில் எழுதிய முத்துசாமிப்பிள்ளை அவருடைய தோற்றம் குறித்து சொல்லும் போது நெற்றியில் சந்தனமும் தலையில் பட்டுக்குல்லாவும் இடுப்பில் காவியும் திருநெல்வேலி கம்பிச்சேர்மன் போர்வையை தலையிலிருந்து தோள்வழியாக உடம்பை மூடியபடி காலில் பாதகுறடு அணிந்து காண்ப்படுவார் என விவரிக்கிறார்.

குறைந்தகாலத்தில் கற்றாலும் தமிழ் மொழியின் தனிப்பண்புகளை உள்வாங்கி அதனை காலத்தால் அழியமாட்டாத படைப்புகளாக உருவாக்கிய இவரது புலமை மகாகவிகளுக்கு இணையானது. தொன்னூல் விளக்கம் எனும் நூல் மூலம் எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் .

திருக்குறளின் மகத்துவம் அறிந்து அதன் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் லத்தீன் மொழிக்கு மொழிபெயர்த்தவர். வேதவிளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக்கண்னாடி, செந்தமிழ் இலக்கணம் போன்ற நூல்களை இயற்றி தமிழுக்கு எண்ணற்ற அணிகலன்களை தந்து பெருமைபடுத்தியுள்ளார்.இவையனைத்திற்கும் மகுடமாக மூன்றுகாண்டங்கள், முப்பத்தியாறு படலங்கள் ,மொத்தம் 3615 விருத்தங்களுடன் அவர் இயற்றிய தேம்பாவணி எனும் பெருங்காப்பியம் முதற்கொண்டு திருக்காவல் கலம்பகம் மற்றும் கித்தேரி அம்மன் அம்மாணை போன்ற குறுங்காப்பியங்களையும் படைத்துள்ளார்.

திராவிட மொழியியல் அறிஞர்களுள் முதன்மையானவர் வீரமாமுனிவரே என ஆய்வாள்ர் கமில்சுவலபில் கூறியுள்ளார்.

இறப்பு : பிப்ரவரி 4, 1746

August 1, 2011

யூ ட்யூப் இளவரசி-ரெபேக்கா ப்ளாக்


முளைத்து மூணூ இலை விடலை அதுக்குள்ள ஆட்டம் ஆடுதுன்னு அடிக்கடி சொல்வார்கள் அதுக்கு என்ன அர்த்தமோ தெரியவில்லை. அமெரிக்காவை கலக்கும் இந்த பதினாலு வயதுபெண்ணை பார்த்தாள் அப்படி ஒரு கேள்வியை கேட்க தோணுகிறது .இவள் பெயர் ரெபெக்கா ப்ளாக் .


இரண்டு மாதங்களுக்கு முன் இது போல் துள்ளல் இசை இளவல் எனும் தலைப்பில் பாப் ஹீரோ ஜஸ்டின் பைபர் பற்றி ஒரு பதிவை இட்டிருந்தேன். அப்போதே இந்த பெண்ணை பற்றியும் சில வார்த்தைகள் குறிப்பிடவேண்டும் என நினைத்தேன். ஆனால் அப்போது ஒத்துவரவில்லை. ரஜ்னி பற்றி அவரை தெரியாதவங்களுக்கு அறிமுகபடுத்தும் போது கமலை பற்றி போற பொக்கில் சொன்னால் சரியாகுமா . அது போலத்தான் சரி இந்த குட்டி பொண்ணுக்கு தனியாக சேவை செய்யலாம என கருதி விட்டிருந்தேன் . இப்பதான் அதுக்கு நேரமும் வாய்த்தது.


ஜஸ்டினாவது பராவாயில்லை பதினேழு வயசு.. பாடல் வீடியோ காட்சிகளில் அப்படி இப்படி அத்து மீறினாலும் மீசை முளைத்துவிட்டது. போனால் போகிறது என விட்டுவிடலாம் ..ஆனால் ரெபெக்கா பதினாலு வயசு .பிறந்ததே 1997ல் தான் . அதற்குள் வெள்ளிகிழ்மை என தலைப்பிட்ட ஒரே பாட்டில் இன்று உலக பிரபலம். இத்தனைக்கும் இந்த வருட ஜனவரியில்தான் இந்தபாட்டு வெளியாகியது அந்த பாடலின் க்ருத்து என்ன தெரியுமா . அமெரிக்காவிலேயே பலர் கடுப்பாகிவிட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்
9ம் வகுப்பு படிக்கும் பெண் வெள்ளிகிழ்மை காலையில் எழுந்திருக்கிறாள். முதல் நினைப்பெ அன்று இரவு பார்ட்டிக்கு போவது பற்றித்தான் . பல் விளக்கி ஸ்கூல் பையுடன் பஸ் பிடிக்க பேருந்து நிலையத்தில் இருக்கிறாள் .அங்கு மேலே திறந்த விடப்ப்ட்ட கல்யாண ஊட்வல டைப் காருடன் வருகிறது அராத்து சில் வண்டுகள். எல்லாம் அரை டவுசர் கோஷ்டிகள் காலையிலெயே ஸ்கூலுக்கு போகாமல் பார்டிக்கு . போகலாம் என அவளையும் அழைக்கிறார்கள் . விளங்குமா (..சாலமன் பாப்பையா த்வனியில் படிக்கவும் )

இதில் பத்தாக்குறைக்கு அப்பெண்னுக்கு பெரும் குழ்ப்பம்

குழப்பம் காரில் ஏறுவதா வேண்டாமா என்பதில் இல்லை

காரில் முன் சீட்டில் அமருவதா பின் சீட்டில் அமருவதா எந்த சீட்டில் அமர்வது இதுதான் அவளுக்கு ப்ரச்னை

இதெல்லாம் தான் பாடல் வரிகள் .. ஆனால் பாருங்க்ள் இந்த பாட்டு பெரிய ஹிட் . இது பிடிக்காத ஜஸ்டின் பைபர் ரசிகர்களுக்கும் ரெபெக்கா ப்ளாக் ரசிகர்களுக்கும் யூ ட்யூபில் சோடா பாட்டில் பறக்கிறது

யூ ட்யூபில் பலபெண் பாப்பிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு அதிகமான எண்ணிக்கையில் பார்வையாளர்களை பெற்றுள்ளது அவரது ப்ரைடே எனும் பாடல்.

இப் பாடலுக்கு பெற்ற விருப்புகளின் எண்ணிக்கை ஒரு சாத்னை என்கிறார்கள் ஆனால் அதை விடவும் அதிகமான எண்னிக்கையில் வெறுப்புகளை பெற்றுள்ளது இந்தபாடல் என்பது தான் இதில் நாம் கவனிக்க வெண்டிய விடயம்

ரெபெக்காவை பாராட்டுபவர்களை விட சமூக சீரழிவின் அடையாளம் என கூக்குரலிடுபவர்கள்தான் அதிகம்

ஆனால் அமெரிக்காவில் இது போன்ற குரல்களுக்கும் ஆதரவு இருக்கிறது என்பது நமக்கும் புதிய தகவல்தான்

மேலும் எப்படி புகழை சீக்கிரம் அடைவது என்பதை சின்னவயதிலேயே இந்த பெண் தவறாக கற்றுக்கொண்டாள்
என்றும் ரெபெக்காவின் மேல் குற்றசாட்டுகள் அதிகம்

தவிர ரெபெக்காவுக்கு எண்ணற்ற கொலை மிரட்டல்கள் வேறு வந்தவண்னமிருக்கிண்றனவாம் ஆனலும் அமெரிக்க பாப்பி ரெபாக்கா இதற்கெல்லாம் கவலைபடவில்லை.

இவ்ரது புதிய பாடலன் மை மூவ்மெண்ட் வெளியான ஒரெ மாததில் ஒருகோடி பார்வையாளர்களை பெற்று விட்டது
ஒருமாத்தில் ஒரு கோடி என்றால் ஒருநாளைக்கு எத்த்னை பேர் பார்ப்பார்கள் என கண்க்கிட்டு பருங்கள் ..குறைந்தது ஒருநாளைக்கு இரண்டுலட்சம் வரும்.. .....ஆவ்வ்வ்வ்வ் வ்வ்வ்வ்வ்வ் ....வ்வ்வ்.....வ்வ்

அவரது புகழுக்கு காரணமான பரைடே எனும் பாடலை பார்த்தால் நீங்க்ளும் உணர்ச்சி வசப்ப்டாலம்

.......என எழுதிவிட்டு அப்படலை இணைக்க யூட்யூபில் தேடியபோது அதிர்ச்சி பெரும் அதிர்ச்சி ஒரிஜினல் கிடைக்கவில்லை . பலரும் அவளது ஒரிஜினல் பாடலை வைத்து ரீமிக்ஸ் செய்து பாரோடி(கிண்டல்) பண்ணுவதால் மனம் நொந்து ரெபெக்கா அப்படலை எடுத்துவிட்டதாக அறிந்தேன் வேறு சில காரணங்களுக்காவும் இதை ரெபெக்கா எடுத்திருக்கலாம் தெரியவில்லை இப்போது யூட்யூபில் கிடைப்பதெல்லாம் ரெபெக்காவை கிண்டல்(parody) செய்து எடுக்கப்பட்ட பாடல்கள்தான் .இதுவே கிட்டத்ட்ட 500க்கும் மேலாக இருக்கிறது என்றால் ரெபெக்காவிற்கு இருக்கும் எதிர்ப்பை பாருங்கள். இத்தனை எதிர்ப்பும் ஜஸ்டின் ஆதரவாளர்கள் உண்டாக்கிய சதி என்று கூட கூறுகிரார்கள் ரெபெக்கா ஆதரவாளர்கள் .இறுதியாக பதிவேற்றம் செய்த சில நிமிடங்களில் முகநூல் வழியாக தோழி ஒருவர் மூலம் இணைப்பும் கிட்டியது

http://www.youtube.com/watch?v=ip2bBjMDYog&feature=related

யூ ட்யூப் இளவரசி-ரெபேக்கா ப்ளாக்




முளைத்து மூணூ இலை விடலை அதுக்குள்ள ஆட்டம் ஆடுதுன்னு அடிக்கடி சொல்வார்கள் அதுக்கு என்ன அர்த்தமோ தெரியவில்லை. அமெரிக்காவை கலக்கும் இந்த பதினாலு வயதுபெண்ணை பார்த்தாள் அப்படி ஒரு கேள்வியை கேட்க தோணுகிறது .இவள் பெயர் ரெபெக்கா ப்ளாக் .


இரண்டு மாதங்களுக்கு முன் இது போல் துள்ளல் இசை இளவல் எனும் தலைப்பில் பாப் ஹீரோ ஜஸ்டின் பைபர் பற்றி ஒரு பதிவை இட்டிருந்தேன். அப்போதே இந்த பெண்ணை பற்றியும் சில வார்த்தைகள் குறிப்பிடவேண்டும் என நினைத்தேன். ஆனால் அப்போது ஒத்துவரவில்லை. ரஜ்னி பற்றி அவரை தெரியாதவங்களுக்கு அறிமுகபடுத்தும் போது கமலை பற்றி போற பொக்கில் சொன்னால் சரியாகுமா . அது போலத்தான் சரி இந்த குட்டி பொண்ணுக்கு தனியாக சேவை செய்யலாம என கருதி விட்டிருந்தேன் . இப்பதான் அதுக்கு நேரமும் வாய்த்தது.


ஜஸ்டினாவது பராவாயில்லை பதினேழு வயசு.. பாடல் வீடியோ காட்சிகளில் அப்படி இப்படி அத்து மீறினாலும் மீசை முளைத்துவிட்டது. போனால் போகிறது என விட்டுவிடலாம் ..ஆனால் ரெபெக்கா பதினாலு வயசு .பிறந்ததே 1997ல் தான் . அதற்குள் வெள்ளிகிழ்மை என தலைப்பிட்ட ஒரே பாட்டில் இன்று உலக பிரபலம். இத்தனைக்கும் இந்த வருட ஜனவரியில்தான் இந்தபாட்டு வெளியாகியது அந்த பாடலின் க்ருத்து என்ன தெரியுமா . அமெரிக்காவிலேயே பலர் கடுப்பாகிவிட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்
9ம் வகுப்பு படிக்கும் பெண் வெள்ளிகிழ்மை காலையில் எழுந்திருக்கிறாள். முதல் நினைப்பெ அன்று இரவு பார்ட்டிக்கு போவது பற்றித்தான் . பல் விளக்கி ஸ்கூல் பையுடன் பஸ் பிடிக்க பேருந்து நிலையத்தில் இருக்கிறாள் .அங்கு மேலே திறந்த விடப்ப்ட்ட கல்யாண ஊட்வல டைப் காருடன் வருகிறது அராத்து சில் வண்டுகள். எல்லாம் அரை டவுசர் கோஷ்டிகள் காலையிலெயே ஸ்கூலுக்கு போகாமல் பார்டிக்கு . போகலாம் என அவளையும் அழைக்கிறார்கள் . விளங்குமா (..சாலமன் பாப்பையா த்வனியில் படிக்கவும் )

இதில் பத்தாக்குறைக்கு அப்பெண்னுக்கு பெரும் குழ்ப்பம்

குழப்பம் காரில் ஏறுவதா வேண்டாமா என்பதில் இல்லை

காரில் முன் சீட்டில் அமருவதா பின் சீட்டில் அமருவதா எந்த சீட்டில் அமர்வது இதுதான் அவளுக்கு ப்ரச்னை

இதெல்லாம் தான் பாடல் வரிகள் .. ஆனால் பாருங்க்ள் இந்த பாட்டு பெரிய ஹிட் . இது பிடிக்காத ஜஸ்டின் பைபர் ரசிகர்களுக்கும் ரெபெக்கா ப்ளாக் ரசிகர்களுக்கும் யூ ட்யூபில் சோடா பாட்டில் பறக்கிறது

யூ ட்யூபில் பலபெண் பாப்பிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு அதிகமான எண்ணிக்கையில் பார்வையாளர்களை பெற்றுள்ளது அவரது ப்ரைடே எனும் பாடல்.

இப் பாடலுக்கு பெற்ற விருப்புகளின் எண்ணிக்கை ஒரு சாத்னை என்கிறார்கள் ஆனால் அதை விடவும் அதிகமான எண்னிக்கையில் வெறுப்புகளை பெற்றுள்ளது இந்தபாடல் என்பது தான் இதில் நாம் கவனிக்க வெண்டிய விடயம்

ரெபெக்காவை பாராட்டுபவர்களை விட சமூக சீரழிவின் அடையாளம் என கூக்குரலிடுபவர்கள்தான் அதிகம்

ஆனால் அமெரிக்காவில் இது போன்ற குரல்களுக்கும் ஆதரவு இருக்கிறது என்பது நமக்கும் புதிய தகவல்தான்

மேலும் எப்படி புகழை சீக்கிரம் அடைவது என்பதை சின்னவயதிலேயே இந்த பெண் தவறாக கற்றுக்கொண்டாள்
என்றும் ரெபெக்காவின் மேல் குற்றசாட்டுகள் அதிகம்

தவிர ரெபெக்காவுக்கு எண்ணற்ற கொலை மிரட்டல்கள் வேறு வந்தவண்னமிருக்கிண்றனவாம் ஆனலும் அமெரிக்க பாப்பி ரெபாக்கா இதற்கெல்லாம் கவலைபடவில்லை.

இவ்ரது புதிய பாடலன் மை மூவ்மெண்ட் வெளியான ஒரெ மாததில் ஒருகோடி பார்வையாளர்களை பெற்று விட்டது
ஒருமாத்தில் ஒரு கோடி என்றால் ஒருநாளைக்கு எத்த்னை பேர் பார்ப்பார்கள் என கண்க்கிட்டு பருங்கள் ..குறைந்தது ஒருநாளைக்கு இரண்டுலட்சம் வரும்.. .....ஆவ்வ்வ்வ்வ் வ்வ்வ்வ்வ்வ் ....வ்வ்வ்.....வ்வ்

அவர்து புகழுக்கு காரணமான பரைடே எனும் பாடலை பார்த்தால் நீங்க்ளும் உணர்ச்சி வசப்ப்டாலம்

முளைத்து மூணு இலை வுடலை என மூக்கின் நுனி சிவப்பாகலாம்

ஆனால் அதற்காக இரண்டாம் முறை பாடலைகேட்டுவிடாதீர்கள் அப்புறம் நீங்களும் என்னைப்போல இவள் அழ்குக்கும் குரலுக்கும் அடிமையாகி தொலைப்பீர்கள்

இலக்கியம் சினிமா அது இதுன்னு உருப்படியான் விஷயம எழுதறதை விட்டு இப்ப இந்த பொண்ணை இங்க நான் அறிமுகப்படுத்த காரணம் ....


முதல்ல இந்த பாட்டை நீங்களும் ஒருமுறை பாருங்க

நீங்களே புரிஞ்சுக்குவீங்க




http://www.youtube.com/watch?v=nVlY3ZTrBkw&feature=related




இதை பார்ப்பவர்கள் ரெபெக்கா ப்ளாக்கை கிண்டலடித்து செய்யப்பட்ட இந்த பாடலையும் கண்டு உற்சாகமடைந்து இந்த நாளை எனக்காக அர்ப்பணியுங்கள் ..





புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...