May 27, 2010

கொலைக்கு பின் சில தத்துவகாரணங்கள்-சிறுகதை

அவனை வேறு கோணத்தில் முதன் முதலாக பார்த்தேன்.மிகவும் சிறியவன் அவன் .தனது தாயின் மரணத்துக்குபிறகு நிம்மதியை அவன் முழுவதுமாக இழந்திருந்தான் பெருந்துக்கம் அவனை மிகவும் அலைக்கழித்திருந்தது.கொலைக்கு அதுவும் ஒருகாரணமாக இருக்கலாம் என நான் நண்பனிடம் கூறினேன்.நண்பன் மறுத்தான் இல்லை இது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதுதான் . வீட்டுநாயை கொல்பவன் மனிதனேஅல்ல.அவனை நண்பனாக பெற்றமைகாக வெட்கப்படுகிறேன் என்றான். தேவையில்லாமல் நீஅவனுக்கு காம்யூவின் அந்நியன் முகச்சாயல் தரவேண்டாம். இதோபோலீசார் அவனைத்தேடிக்கொண்டிருப்பதாக செய்திதாள்கள் பேசுவதைபார். அவன் பிடிபட்டுவிடுவான். எல்லாகொலைகளுக்குபின்னாலூம் தத்துவகாராணங்கள் இருக்கத்தான் செய்யும் .நியாயங்களை கூறாதே எனக்கூறி நண்பன் என் வாயை அடைத்தான்.

இருவரும் அந்தவீட்டின் வெளிப்புறத்தில் தோட்ட்டத்துக்குவந்திருந்தோம். கொலைநடந்தவீடுபோல தெரியவில்லை. உள்ளே அவ்வப்போது யாரோ சிரித்துக்கொண்டிருக்கும் சப்தம் வேறு கேட்டது.நண்பனது மனைவியின் தங்கை வெளியேவந்து எங்களை பார்த்தாள்.சுமாரன அழகு .அவளை அருகேவரச்சொல்லி அழைத்தேன். ஒருபழைய சினிமாபாடல்போல நடந்துவந்தாள். அவ்ள்முகத்தில் மவுனம் . அவள் சொன்னதகவல் என் நண்பனுக்கு ஏற்புடையதாக இல்லை.

நான் எனது நண்பனுக்காக பரிதாப்பட்டேன்.கல்லூரிக்காலத்தில் கால்பந்தாடத்தில் அசுரன் அவன். நாங்கள் மூவரும் இதரகல்லூரிகளில்நடக்கும் போட்டிகளுக்கு செல்லும்போதெல்லாம் அந்தபுதியநகரத்தின் மாலப்பொழுதை உற்சாகாமாக முத்தமிட்டு மகிழ்வோம். ஒருமுறை அப்படி இளம் நகரத்துக்குசென்றபோதுதான் சாலையின் எதிர்கொண்ட பெண்ணின் ஒரே புன்னகையில் தன் எதிர்காலவாழ்வைதீர்மானித்துக்கொண்டான். அவளும் நறுவிசான பெண்தான். அவளது புன்னகைவிலைமதிப்பற்றது. தேனிலவுக்கு சென்ற போது ஒருமுறை அவள் சற்று அள்வுமிகுதியுடன் புன்னகைக்கபோய் படகுமுன் அனேக பறவைகள் கூடிவிட்டதாக நண்பன் பெருமை பேசினான். உண்மையில் அவளிடம் அத்தகையதொரு மந்திரச்க்தி குடிகொண்டிருந்தது. ஆனாலும் அவ்ளுக்குஎன்னவோ மருமகளாக வந்ததிலிருந்து வீட்டின் வளர்ப்புநாயை பிடிக்கவில்லை.உடன் நாய்க்கும் அவளை பிடிக்காமல் போய்விட்டது. நண்பனின் தாய்க்கு அவ்வப்போது மருமகள் பூசும் நறுமண திரவியங்கள் எரிச்சலைதந்திருக்கின்றன. ஆனால் அதனை நேரடியாக வெளிப்படுத்தாமல் நாயை மருமகளின் முன் அடிக்கடி உச்சி முகர்வதும் கொஞ்சிகுலவுவதுமாக இருந்திருக்கிறாள் .இதனாலேயே நண்அனின் மனைவிக்கு நாயின் மேல் தீராதவெறுப்பு. ஒரு நாள் நண்பனின் தாய் புற்றுநோய் அவதிதாளாமல் இறந்துபோக தனது தாயின்மேல் அளவற்ற பாசம் வைத்திருந்தநண்பன். நிம்மதி யற்றவனாக உழன்றுகொண்டிருந்தான். வீட்டுவாசலில் தனிமையில் கிடந்த நாய்வேறு அவனது துக்கத்தை அதிகபடுத்திக்கொண்டே இருந்தது. இதுதான் நாயை கொலைசெய்ய காரணம் என அந்த மனைவியின் தங்கையும் கூறினாள் .இரவுகளில் நாயின் ஊளை அதிகமாக இருந்ததாகவும் அதுதான் அதன் மரணத்தை நண்பனின் மூலம் தீர்மானிதது என்றும் அவள் கூறினாள்.

ஆனாலும் உடன் வந்த நண்பனுக்கு இந்த பதிலில் திருப்தியில்லை.இருவரும் வெளியே புறப்பட இருந்தசமயம் போலிசால் தேடப்பட்ட நாயை கொலைசெய்த நண்பன் அவசரமாக உள்ளே வந்தான். அவனி போலிஸ் எப்படி விட்டது என நண்பன் என்னிடம் கேட்டான். அவன் எங்களை பார்த்தும் பார்காதவனாக வேகமாக மனைவியைதேடி வீட்டிற்குள் ஓடினான். நாங்கள் மவுனமாக அங்கிருந்து வெளியேறினோம்.அங்கே நாய் கட்டிவைக்கப்பட்டிருந்த சங்கிலி மறுமுனையில் வெற்று வளையத்துடன் அனாதையாக கிடந்தது.

May 21, 2010

மீண்டும் அந்த உயரத்தை நோக்கி


வாருங்கள் புதிய நிலப்பரப்பை
நம் கைகளால் உழுது களிப்போம்
ஒரு வெளிச்சம் நிறைந்த நாளில் நமது
பழைய மகிழ்ச்சி
மிகுந்த நாட்களை மீட்டெடுப்போம்

அந்த கற்பனை எனும் தேசத்தில்
புத்தருக்கும் ஒரு கோயில் கட்டுவோம்
சிங்களர்கள் சிறுபான்மையினராக
அவர்கள் வாழ முழு உரிமையுடன்
சர்வ சுதந்திரத்துடன் வாழ
வழி செய்வோம்
கடந்த கால அவர்களது தவறுகளுக்காக
வருந்தி மிக வருந்தி
குற்றவுணர்ச்சியில் அவர்கள்
க்ளூமி சண்டே இசை கேட்பது போல
சட்டென தொடர் தற்கொலையில் வீழாது பாதுகாப்போம்
அப்படி அவர்கள் குற்றவுணர்ச்சியில்
வீழாதிருக்கவாவது
கொஞ்சம் நாடகீயமாக நம்
பகையுணர்வை குறைவாக காண்பிக்க
அனுமதிப்போம்
அவர்கள் பயன்படுத்திய வாட்களை
அவர்கள் பயன்படுத்திய குதிரைகளை
அவர்கள்: பயனபடுத்திய துப்பாக்கி முனைகளை
அநீதியின் சாட்சிகளாக
கண்ணாடிபெட்ட்கத்துக்குள் காட்சிபொருளாக்குவோம்
இதரதேசத்தவர்களை போல
அவர்களின் குழந்தைகள் குற்றவுணர்ச்சி கொள்ளதிருக்க
வயலின் வாசிக்க அனுமதிப்போம்

மற்றபடி தோழர்களே
வேறுகாலத்தில் நடக்கும் இத்னை
வெற்று கற்பனையாக எண்ணிக்கூட
நீங்கள் இத்னை ஒருபாடலாக இசைக்காலாம்
ஆனாலும் ஒன்றை மறக்கவேண்டாம்,

நாம் ஒரு கம்பிவலை சூழ்ந்த
ஒரு இருண்ட படிகட்டுகளின் வழி
ஏறிக்கொண்டிருக்கிறோம்
ஒருவரது கரங்களை இறுக
இன்னொருவர் பற்றிக்கொண்டு

மீண்டும் அந்த உயரத்தை நோக்கி

May 11, 2010

தமிழின் மிகமிக சிறந்த நாவல் - தாண்டவராயன் கதை

தக்கை மற்றும் சொற்கப்பல் இணைந்து நடத்திய
நாவல் விமர்சன அரங்கு.
- சிறுவரைவு


சொற்கப்பல் மூன்றாவது நிகழ்வான நாவல் விமர்சன அரங்கு. தக்கை இலக்கிய அமைப்புடன் இணைந்து சேலம் சிவகாமி அம்மையார் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் திறந்தவெளி நிகழ்வாக கடந்த 08 மே சனிக்கிழ்மையன்று திட்டபடி நடந்தேறியது. பங்கேற்பாளர்களிடம் தீவிரமானதொரு அகபதிவுகளுடன் சஞ்சலங்களையும் மிகுந்த மன எழுச்சியையும் உண்டாக்கியபடி நடந்தேறிய இந்நிகழ்வுக்கு .. தமிழின் குறிப்பிடத்தக இளம் படைப்பாளிகள் ஐம்பதுக்கும்மேற்படோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

வா.மு.கோமு, கண்மணிகுணசேகரன், க.மோகனரங்கன், சிபிச்செல்வன், அசதா, அய்யப்ப மாதவன் ஸ்ரீநேசன், கண்டராதித்தன், பால்நிலவன் ,மணல்வீடு மு.ஹரிகிருஷ்ணன், தமிழ்நதி, சந்திரா,ஷாராஜ் ,இசை, இளங்கோகிருஷ்ணன், சாகிப்கிரான், குலசேகரன், நீலகண்டன் ,பாக்கியம் சங்கர், ச.முத்துவேல், விஷ்ணுபுரம் சரவணன், அகச்சேரன், ராஜா, ,சக்தி அருளானந்தம், கீதாஞ்சலி ப்ரியதர்ஷிணி, சேலம் திவ்யா மற்றும் சென்னை விழுப்புரம் , வேலூர், ஆம்பூர்,தர்மபுரி,ஓசூர், பெரம்பலூர், மேட்டுபாளையம் கோவை,திருப்பூர்,பெங்களூரு என பல்வேறு இடங்களிலிருந்து வருகைதந்திருந்த எண்ணற்ற இளம் படைப்பாளிகள் பங்கேற்ற இந்நிகழ்வுக்கு சுப்ரபாரதி மணியன் தலைமை தாங்கினார். த்க்கை பாபு மற்றும் அகநாழிகை வாசுதேவன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தனர்.

சேலத்தின் மின்வெட்டு காரணமாக பள்ளிக்கூட வகுப்பறையில் நடக்கவேண்டிய நிகழ்வு எதிர்பாராமல் மரத்தடிக்கு மாற பிற்பாடு அதுவே நிகழ்ச்சியின் மற்றொருசிறப்பாகவும் மாறியது..

தக்கை பாபு அனைவரையும் வரவேற்று பேசினார். அஜயன்பாலா சொற்கப்பல் குறித்து அறிமுகம் நிகழ்த்தி பின் தொடர்ந்து நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தும் பணியும் மேற்கொண்டார்.


ஈசன் இளங்கோ வாழ்த்துரைக்கு பின் சுப்ரபாரதிமணியன் சமகால நாவல்களின் போக்கு குறித்து ஒருகட்டுரை வாசிக்க அதன்பின் பின் விமர்சன அரங்கு துவங்கியது.நாவலாசிரியர் மற்றும் விமர்சகர் இருவரைபற்றியும் இன்னொருபடைப்பாளர் அறிமுகம செய்வித்தபின் ஒவ்வொரு கட்டுரையும் வாசிக்கப்படது.
.
முதலாவதாக கண்டராதித்தன் அறிமுகத்துக்குபின் அசதா கட்டுரை வாசிக்க வந்தார். கரிகாலனின் நிலாவை வரைபவன் நாவல் குறித்து சற்று நவீனமுயற்சி என்றவகையில் தன் சாரம்சத்தை கட்டுரையில் அசதா வெளிப்படுத்தினார்..

இரண்டாவதாக கவிஞர் இசையின் அறிமுகத்துக்கு பிறகு இளங்கோகிருட்டிணன் கீரணூர் ஜாகீர்ராஜாவின் துருக்கி தொப்பி நாவல்குறித்த கட்டுரையுடன் வந்தார். நாவல்குறித்தான தன் வரலாற்று பார்வையை முதலில் விரிவாக கூறியபின் நாவல் குறித்த தன்செறிவான் கட்டுரையை வாசித்தார். ஆசிரியரது முந்தைய இருநாவல்களை காட்டிலும் இது பலவகைகளில் சிறப்பானதாக இருந்தாலும் நாவல்முழுக்க வாசகனுக்கான அமைதிக்கு எங்கும் இடமில்லாமல் இருக்கிறது என்றார். ஷாராஜ் இதர இஸ்லாமியநாவல்களில் இந்த நாவலின் இடம் என்ன என்பதை கட்டுரையாளர் குறிப்பிடவில்லை என்பதை குறையாக குறிப்பிட இளங்கோ கிருட்டிணனுக்கு முதலில் அவர் கேள்வி புரியவில்லை.பின் தோப்பில்முக்கம்மது மீரான் மற்றும் சல்மாவின் நாவல்களோடு ஒப்பிடும்போது இதனை எப்படி குறிப்பிடுகிறீர்கள் என கேட்க இளங்கோ அத்ற்கு இது அவற்றைவிட இது சிறந்த நாவல் என்றே குறிப்பிட்டார்.

தொடர்ந்து காலை அமர்வின் இறுதிகட்டுரையாளராக வாமு.கோமுவின் சாந்தாமணியும் இன்ன பிற காதல்கதைகளும் நாவல்குறித்தான கட்டுரையுடன் வந்தார் சாகிப்கிரான் அத்ற்கு முன்னதாக சாகிப்கிரானை தக்கை பாபு அறிமுகம் செய்ய வா.மு.கோமுவை மண்ல்வீடு ஹரி அறிமுகபடுத்தினார். எடுத்த எடுப்பிலேயே தன் வாத்தியார் என கோமுவை குறிப்பிட்ட ஹரிமுடிக்கும் போது அவர் இப்போது எழுதுவதை இன்னொருமுறை படித்துவிட்டு அச்சுக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் எனக்கூறி தன் வழக்கமான குத்த்லோடு முடித்தார்.



மொத்த ஆறு நாவல்களில் வா.மு. கோமுவின் சாந்தாமணியும் இன்னபிற கதைகளும் நாவலுக்கு கடும் எதிர்வினை நிகழ்ந்தது. சாகிப்கிரான் இந்தவிமர்சனகட்டுரை வாசித்து முடிப்பதற்குமுன் , கவிஞர் தமிழ்நதி எழுந்து இந்த நாவலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்க உடன் எழுத்தாள்ர் சந்திராவும் சேர்ந்துகொண்டார். இருவருமே இந்தநாவலில் அளவுக்கதிகமாக பாலியல்சித்தரிப்புகள் இருப்பது குறித்தும் பெண்களை இழிவுபடுத்துவதாக எழுதப்பட்டுள்ளது என்றும் ஆவேசத்துடன் பேசினர். அதற்கு பதில் சொல்லும் விதமாக எழுந்த செந்தில் கோமு உலகில் நடக்காத ஒன்றை எழுதவில்லை எனக்கூற பதிலுக்கு தமிழ் நதி நாவலில் இடம்பெற்ற ஒருகாட்சியை கூறி இப்படியெல்லாம் நடக்கிறதா என கேட்க உடனே சிபிச்செல்வன் எழுந்து ஆமாம் நடக்கிறது தமிழ் நாட்டின் எல்லாகிராமங்களில்லும் சர்வ சாதாரணமாக நடக்கிறது எனக்கூற தொடர்ந்து தமிழ் நதிக்கு ஆதரவாக பலரும் பேச துவங்கினர்.

கவிஞர் ஷாராஜ் கோமுவுக்கு ஆதரவாக களத்தில் குதித்தார். ஜொஸ் அண்ட்ராயினுக்கும் சிபிச்செல்வனுக்கும் வாமுகோமுவின் நாவலுடைய பின் நவீனத்துவதகுதிகள் குறித்து நேரடி வாக்குவாதம் துவங்கியது. இறுதியாக பேசவந்த வாமு.கோமு ஆமாம நான் என் புத்தக விற்பனைக்காகத்தான் அப்படி எழுதினேன் என அதிரடியாக கூறி ப்ரச்னைக்கு முற்றுபுள்ளி வைத்தார். அதுவரை கொந்தளிக்கும் கடலாக ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த தமிழ்நதி மற்றும் சந்திரா இருவரும் சற்றும் எதிர்பாரா இந்தபதிலால் அடுத்துபேச விருப்பமற்று உறைந்துவிட்டனர். அவர்களுக்குமட்டுமல்லாமல் கூட்டத்தினர் அனைவருக்கும். கோமுவின் இந்தபதில் அதிர்ச்சியாகவே இருந்தது.

உணவு இடைவேளைக்கு பிறகு மதிய அமர்வில் கண்மணிகுணசேகரனின் நாவலை ச.முத்துவேல் விமர்சனம் செய்யவந்தார். நாவலில் போதுமான அழுத்தம் இல்லை என்பதாக கூற தன்னுரையாக பேச வந்த கண்மணி தன் இயல்பான கிராமத்து பேச்சால் சூழலை கலகலப்பாக மாற்றினார்.
முத்துவேல் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தி விமரசனம் செய்திருக்கலாம் என ஆற்றாமையை வெளிப்படுத்திய கண்மணி
தன் நாவல்களை நம்பி படிக்க்லாம் அது ஒரு போதும் உங்களை ஏமாற்றாது என கூறி முடித்தார். தன்னியல்பான அவரது பேச்சை கேட்பவர்கள் தமிழின் மிகசிறந்தபடைப்பாளி இவர்தானோ என எண்ணத்தோன்றும். பேச்சினூடெ சர்வசாதரணமாக மெனகெடாமல் அந்த அளவுக்கு நகைச்சுவை உணர்வு துள்ளுகிறது


.பாவெங்கடேசன் குறித்து ஓசூரிலிருந்து வந்த சிவக்குமார் அறிமுகம் செய்ய கவிஞர் ஸ்ரீ நேசனை அஜயன் பாலா அறிமுகப்படுத்தினார் . நேசன் வாசித்த பா.வெங்கடேசனின் தாண்டவராயண் கதை பலவிவாதங்களை பெரும் புயலாக கிளப்பிவிட்டது. எடுத்த எடுப்பிலே இதுவரை வந்த தமிழ் நாவல்களில் மிக மிக சிறந்த நாவல இதுதான் என திட்டவட்டமாக கூறிவிட்டு பேசதுவங்கினார். நாவல் கதையின் போக்கு குறித்து அவர் பேசியவிதம் அனைவரையும் இறுக்கமாக ஒருமந்திரத்தில் கட்டிப்போட்டது. தாண்டவராயன் கதை மோகமுள் ,விஷ்ணுபுரம் பொன்ற நாவல்களையெல்லாம் பின்னுக்குதள்ளிவிட்டது என்றும் கூறினார். நாவலைபடித்த போது அவருக்கு ஏற்பட்ட மலைப்பு அவர்பேசியதை அங்கு கேட்ட அனைவருக்கும் தொற்றியதென்னவோ உண்மை.

தமிழ் மகன் எழுதிய வெட்டுபுலி நாவல்குறித்த தன் விமர்சனத்தை சிவராமன்(பைத்தியக்காரன்) கட்டுரையாக எழுதி அனுப்பியிருந்தார். கட்டுரையாளர் நாவலாசிரியர் இருவருமே தவிர்க்க முடியாத காரணங்களால் வரமுடியவில்லை. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தக்கை வே,.பாபு அக்கட்டுரையை வாசித்தார்.


நேச்னை தொடர்ந்து கருத்துதெரிவிக்க வந்த தூரன் குணா மிகசிறந்த நாவல் என சொல்லமுடியாது எனகூறியதோடு அல்லாமல் இந்நாவல் இதர உலகநாவல்களான நேம் ஆபத் ரோசஸ் மற்றும் மை நேம் இஸ் ரெட் ஆகிய நாவல்களின் தாக்கம் இதில் அதிகமாக இருந்தது என்றும் மறுத்துபேசினார் அதேச்மயம் தாண்டவராயன் கதை தமிழில் குறிப்பிடத்தகுந்த நாவல் என்பதை மறுப்பதற்கில்லை என்றும் கூறி முடித்தார்

தொடர்ந்து இந்நாவல் குறித்த தன் வாசிப்பனுபத்தை கீதாஞ்சலி ப்ரியதர்ஷினி கட்டுரை ஒன்றை வாசித்தார்.இத்னை தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்த எழுத்தாள்ர் பால் நிலவன் கவிஞர் குலசேகரன் ஆகியோரும் நேசன் கூற்றுக்கு ஆதரவான கருத்துக்களை கூறினர். இத்னைத்தொடர்ந்து தேர்ந்த ஐந்து விமர்சகர்களுடன் தாண்டவராயன் கதை குறித்து தனியாக ஒரு விமர்சன அமர்வை நிகழ்த்த சொற்கப்பல் முடிவுசெய்திருப்பாக நிகழ்ச்சியை தொகுத்துவழங்கிய அஜயன்பாலா அங்கேயே தெரிவித்தார், நிகழ்ச்சியின் துவக்க கட்டுரையாக திட்டமிடப்பட்ட தாண்டவராயன் கதை இறுதி கட்டுரையாக மாறிப்போனது கூட ஆச்சர்யமான நிகழ்வு..


-வெள்ளை வாரணன்

May 9, 2010

மனக்குகை ஓவியன் ; இங்மர் பெர்க்மன்




உலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சி யுகம் : 20


மனித மனத்தின் ஆழங்களை யார் அளக்கமுடியும்,ஆனால் தூய இலக்கியம் அதைத்தான் செய்கிறது என்றார் ருஷ்ய இலக்கியவாதியும் சாகாவரம் படைத்த 19ம் நூற்றாண்டு எழுத்தாளனுமான தஸ்தாயேவெஸ்கி. அவரைபோலவே திரைப்படம் எனும் அரிய கலையில் இப்பாதையில் பயணித்த மிகப்பெரும்கலைஞன் இங்மர் பெர்க்மன் . மனிதனை அழுத்தும் துன்பங்களையும் அவற்றிற்கும் கடவுளுக்குமான இடைவெளிகளும் தான் இவரது அனைத்துதிரைப்படங்களின் மையப்புள்ளி என்றாலும் அவ்ற்றை உயர்ந்த கலைபடைப்பாக மாற்றிய மேதமைதான் இவரை சினிமாவரலாற்றில் த்டம் பதிக்கவைத்துள்ளது. எவ்வள்வுக்கெவள்வு தனது தேடலைல் அவர் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டாரோ அதே தீவிரத்தையும் உழைப்பையும் தன் கலைத்த்ன்மைக்கும் செலவிட்டு தன்னை உறுதியான இடத்தில் தக்கவைத்துக்கொண்டது இவரது தனிச்சிறப்பு

1918ல் ஸ்வீடனில் ஒரு தீவிர கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த பெர்க்மன் தன் சிறுவயதில் ஒரு அழகான சிறைக்குள் வளர்ந்தார். அந்தசிறை அவரது கத்தோலிக்க மதம் .. அவரது தந்தை எரிக் ஒரு மத போதகராக இருந்த காரணத்தால் தேவாலாயங்கள்,பிரம்மாண்டமான மதில்சுவர்கள், அமைதியான உருக்கள், தாழ்ந்த விதானங்கள்,மெழுகுவர்த்திகள், மணியோசைகள் தேவ கீர்த்த்னைகள் ,தேவதைகள் ,மற்றும் சாத்தான்கள் என மதம் அவரை வேறு கவனங்களுக்கு திசை திருப்பவிடாமல் ஜன்னல்களை இறுக்க அடைத்திருந்தது. மட்டுமல்லாமல் தந்தையின் கண்டிப்பான குரல் பால்யத்தில் அவருடைய மனதில் வடுக்களாக ஆழபதிந்துபோனது. இன்று தன் திரைப்படங்களில் காண்ப்படும் சோகத்திற்கும் அழுத்தங்களுக்கும் மூலபடிமம் இங்கிருந்துதான் எடுத்தாளப்ப்ட்டது என பெர்க்மெனே பின்னாளில் தன் திரைப்பட்ங்கள் குறித்து கூறுமளவிற்கு அவரது பாதிரி தந்தையான் எரிக் மூர்க்கமான மதவெறியராகவும் கண்டிப்பான கணவனாகவும் தகப்பனாகவும் இருந்தார்.

இதன் காரணமாகவே எட்டுவயதிலேயே அவருக்கு மதத்தின் மீது வெறுப்பு தோன்ற துவங்கியது. இந்தவெறுப்பே அவருக்கு கலைகளின் மீதான
நாட்டத்தை திசை திருப்பியது. அப்போது அவருக்கு வடிகாலாக இருந்தவை பொம்மைகள்தான். விதவிதமான பொம்மைகளை செய்து அவ்ற்றை கதாபாத்திரங்களாக மாற்றி தனக்குதானே ஒரு பொம்மலாட்டம் நடத்தி பார்ப்பது அவருக்கு பிடித்த்மான பொழுது போக்கு. இந்த ஆர்வம்அவரை கொஞ்சம் கொஞ்சமாக உந்திதள்ளி நாடகக்கொட்டைகளின் வாசலில் கொண்டுபோய் நிறுத்தியது. ஸ்டாக்ஹோம் பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை முழுவதுமாக முடிக்கும் முன்பே எண்ணற்ற நாடகங்களுக்கு கதைவசனம் எழுதி, உதவி இயக்குனராகவும் பணிபுரிந்திருந்தார்.

கஸ்பரின் மரணம் Caspar's Death. இதுதான் 1942ல் இவர் இயக்கத்தில் தயாரான முதல் நாடகம்.அடுத்த இரண்டு வருடங்களில் மேலும் சில நாடகங்களை உருவாக்கிய பெர்கமனுக்கு திரையுலகம் சுலபமாக சுவீகரித்துக்கொண்டது. ஆல்ப் சோஜ் பர்க் Alf Sjöberg. எனும் இயக்குனரின் ஹெட்ஸ் எனும் படத்தில் உதவியாளராக தன் வாழ்க்கையைதுவக்கிய பெர்க்மன் படத்தின் திரைக்கதைக்கும் பொறுப்புவகித்தார். ஒரு கண்டிப்பான ஆசிரியரைப்பற்றின கதை இது இத்னாலேயே வெளிப்புற காட்சிகளின்போது பெரும்பாலும் பெர்க்மெனே இயக்கவும் நேரிட்டது.இப்படத்தின் உலகாளாவிய வெற்றி காரணமாக அடுத்தவருடமே பெர்க்மன் தன் முதல் திரைப்படத்தை இயக்க ஆரம்பித்தார்.அடுத்த பத்துவருடங்களில் அசௌரவேகத்தில்ம்கிடத்ட்ட பன்னிரண்டு திரைப்படங்களை பெர்க்மென் இயக்கியிருந்தார். அனைத்துமே தனிமை அந்நியமாதல் என இருப்பின் தீராத வலியை பற்றிபேசும் திரைப்படங்களாக அமைந்திருந்தன. இவையனைத்துமே அவரது முழுமை எனும் உயரத்திற்கு அழைத்துசெல்லும் படிக்கட்டுகளாகவே அமைந்திருந்தன.


1955ல் இவர் இயக்கத்தில் வெளியான ஸ்மைல்ஸ் ஆப் சம்மர் நைட் Smiles of a Summer Night எனும் திரைப்படம்தான் பெர்க்மனின் முழு ஆளுமையை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டியது. இந்தவெற்றியும் அங்கீகாரமும் அவரை அடுத்தடுத்த மகத்தான இரு வெற்றிகளை அடுத்தடுத்த வருஇடங்களில் உருவாக்க வைத்தது. தி செவன் த் சீல் The Seventh Seal மற்றும் Wild Strawberries வைல்டு ஸ்ட்ராபெர்ரீஸ் ஆகையவைதான் அந்த மகத்தான் இரு காவியங்கள்.

மொத்தம் முப்பத்தைந்தே நாட்களில் தயாரான செவன் த் சீல் உலகின் தலைசிற்ந்த பரிசான கேனஸ் விருதை பெர்க்மனுக்கு வாங்கி தந்தது.

வைல்ட் ஸ்ட்ராபரீஸ் ஐம்பதுகளில் வெளியான் உலகைன் தலைசிறந்தபடங்களில் ஒன்றாக கணிக்கப்பட்டது. உறவுகளின் சிறுசிறுகண்ணிகளினூடே மின்மினின்பூச்சிகளய் நம் மனதில் உண்டாகும் மாயங்களின் தொகுப்பாக இப்படத்தை சொல்லலாம்.

பெர்க்மனின் படத்தை பார்ப்பதற்கு நமக்கு மொழி அவசியமில்லை அவர்கள் என்ன பேசுகிறார்கள் கதை எங்கேநகருகிறது என்ற கேள்விகளூம் நமக்குபயன்படாது . அவரது காட்சிகளை உள்வாங்குவதற்கு இரண்டு கண்களும் அவரது உலகத்திற்குள் நம்மை விரல்பிடித்து அழைத்துசெல்லும் அந்த இசையை கேட்பதற்கு இரண்டு காதுகளும் மட்டும் நமக்கு போதுமானது. நம்மை அறியாமல் நாம் வேறு உலகத்திற்குள் மனித மனங்களின் இருண்மைக்குள் அலைவதை உணரமுடியும். வைல்ட் ஸ்ட்ராபெர்ரீஸ் அத்தகையதொருபடமாக அமைந்தது .இறப்புக்காக காத்திருக்கும் வயோதிகனின் மனதுக்குள் செல்லும் காமிரா நம்மை தனிமையின் ஆழத்துக்குள் அழைத்துசென்றுவிடுகிறது. பெர்க்மன் வாழ்க்கையில் ஒருமைல்கல்லாக நின்றது.

இதனைத்தொடர்ந்து த்ரூ த கிளஸ் டார்க்கி, தி சைலன்ஸ் , பெர்சோனா, வெர்ஜின் ஸ்பிரிங் க்ரைஸ் அண்ட் விஸ்பர்ஸ், போன்ற மகத்தான் காவியங்கள் பெர்க்மனின் கைவண்ணத்தில் உலகசினிமாவுக்கு மாபெரும் நன்கொடையாக கிடைத்தன.

பெர்க்மனின் திரைப்படங்களின் வெற்றிக்கு சரிவிகிதாமான பங்களிப்பை தந்திருப்பவர் 1953க்குபிறகான அவரது எல்லாபடங்களுக்கும் ஒளிப்பதிவு செய்த ஓளிப்பதிவாளர் சாம் நிக்விஸ்ட். நிக்ச்விஸ்டின் ஒளிப்பதிவுக்குள் பலசூத்திரங்கள் கட்டுண்டு ஒளிந்துகிடப்பதை ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளன் கண்டுணரமுடியும்.

பெர்க்மன் த்னது திரைப்படங்களுக்கு உலகமெங்கும் வரவேற்பை கண்டபோதிலும் தன் சொந்த நாடான ஸ்வீடனில் அவர் தொடர்ந்து அவமானப்படுத்துப்பட்டு வந்தார். ஸ்வீடனின் சக இயக்குனர் கள் அவர்மேல் கடும் விமரசனங்களை வைத்தனர். அவர்களுள் Bo Widerberg எனும் இயக்குனர் ஒருபடி மேலேபோய் 1962ல் ”பெர்க்மன் உன்னுடைய படங்கள் பழைய பனைமட்டையாக இருக்கின்றன,பார்க்க சகிக்கவில்லை தயவு செய்து உன் வாழ்க்கையில் ஒரு நல்ல படமாக எடுத்துவிடு ”எனும் வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரத்தை ஸ்வீடனில் விநியோகித்தார்.



இதுமட்டுமல்லாமல் 1976ல் அவரது வீட்டினுள் திடுமென புகுந்த போலிசார் அவரை கைது செய்தனர். கேட்டதற்கு அவர் வருமானவரி கட்டவில்லை என காரணத்தை சொன்னார்கள். இத்னால் பெரும் மனௌளைச்சலுக்கு ஆளான பெர்க்மன தீவிர நரம்புதளர்ச்சி நோய்க்கு ஆளானார்.பின் தனக்கிருந்த ஸ்டுடியோக்களை மூடிவிட்டு ஸ்வீடனை விட்டேவெளியேறி ம்யூனிச்சிற்கு சென்று த்னக்கன வீட்டை தேடிக்கொண்டார்.

இந்தப்ரசனைகளுக்கு பிறகு 1983ல் வர த்னது பாலயவாழ்க்கையை அடியொற்றி எடுத்த பேனி அண்ட் அலெக்ஸாண்டர் எனும் திரைப்படம் உலகாளவில் பிரம்மாண்டமான வெற்றியைபெற்றதோடு அவரது வாழ்நாளின் மிகச்சிறந்தபடமாகவும் உருக்கொண்டது. சிறுவயதில்தன் தந்தையிடம் அவர் வாங்கிய பிரம்படிகள் மிரட்சிகள் இவை உண்டாக்கிய மனவலிகளை தேர்ந்தெடுத்து பார்வையாளனுக்குள் மறக்கமுடியாத வடுக்களை நிகழ்த்தினார். நமக்குள் சிறுவயதிலிருந்து அழுத்தப்ட்ட பல்வேறு உணர்வுகளை கிளர்ந்தெழசெய்வதுதான் பெர்கமனின் வெற்றி .ஆனால் அதற்காக அவர் எப்போதும் மெனக்கெடுவதேயில்லை படத்தில் எங்கிருந்தூ அந்த உணர்வு நமக்குள் தோன்றுகிறது என்பதை நாமறியாவண்ணம் நம்மை நம் மேல் விழுந்த அடிகளை உணரசச்செய்வதுதான் பெர்க்மென் எனும் மகத்தான கலைஞனின் வெற்றியாக உலகசினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர்.

பிற்பாடு மீண்டும் ஸ்வீடனுக்குள் பெர்க்மென் திரும்பிய போது அரசாங்கம் பெரும் குற்ற வுணர்ச்சியுடன் அவரை வரவேற்று அவர்பெயரில் ஒரு திரைப்பட பயிற்சி நிறுவனத்தையும் உருவாக்கியது.

1988ல் த்னது வாழ்க்கை வரலாற்றை மேஜிக் லாண்டர்ன் எனும்பெயரில் எழுதிய பெர்க்மன் 1993ல் பெஸ்ட் இண்டென்ஷன்ஸ் எனும் பெயரில் நாவல் ஒன்றையும் எழுதினார். பிற்பாடு சினிமாவுக்கனதிரைக்கதையாகவும் இதை வடித்தார். அவரது தாய்க்கும் தாமஸ் எனும் பாதிரியாருக்குமிடையில் நடந்த ஒரு உறவை அடிப்படையாக வைத்து அவர் இந்த கதையை எழுதியிருந்தார்.

பெர்க்மனின் திரைப்படங்கள் ஆஸ்கார்,கேன்ஸ், கோல்டன் குளோப்,பாப்டா, பெர்லின் தங்க கரடி உள்ளிட்ட உலகின் பலமூலைகளில் பலவிருதுகளை அள்ளிகுவித்துள்ளன.


1995ல் தன் 77ம் வயதில் Ingrid von Rosen என்ற வித்வைபெண்ணை அவர் திருமண்ம் செய்தபோது அவருக்கு அது முறைப்படி ஐந்தாவது திருமணம். இதற்கு முன்பான நான்கு மனைவிகளையும் சேர்த்து அவரது குழந்தைகள் எண்ணிக்கைபலவாக இருந்தாலும் மொத்தம் 12 குழந்தைகளைமட்டுமே அவர் த்ன் வாரிசுகளாக் அங்கீகரித்துள்ளார்

அவரது அனேக படங்களில் நடித்த உலகபுகழ் நடிகையான் லிவ் உல்மன் தானக் விரும்பி தாய்மை அடைந்து ஒரு குழந்தைக்கு தாயானார்.


உலகசினிமாவில் ஆச்சர்யமூட்டும் ஒற்றுமையாக விமர்சகர்கள் இவரையும் மைக்கேல் ஏஞ்சலோ ஆண்டனியோவையும் கருதுகின்றனர். காரணம் இருவரது வாழ்க்கையும் ஒரே தன்மையுடையன . பலவிடயங்களில் இருவருக்குமிடையே காணப்பட்ட ஆச்சர்யமான ஒற்றுமை இவர்களது மரணத்திலும் தொடர்ந்தது..

ஜூலை 30, 2007, ஒரே நாளில் இருவரது மரணச்செய்தியும் அடுத்தடுத்து வந்து உலகசினிமா ரசிகர்களையும் பார்வையாளர்களையும் ஒருசேர அதிர்ச்சிக்குள்ளாகியது.

அமரத்துவம் வாய்ந்த பெர்க்மனின் படங்களை நாம் இன்றும் பார்க்கும் போது அவர் நம் முதுகின் பின்னால் இருப்பதை அவரது படங்களின் மூலமாக உணரமுடியும் .
(தொடரும் )

May 4, 2010

சொற்கப்பல் (விமர்சன தளம்) மற்றும் ‘தக்கை‘ இணைந்து வழங்கும்

சொற்கப்பல் (விமர்சன தளம்) மற்றும் ‘தக்கை‘ இணைந்து வழங்கும்

நாவல் விமர்சன அரங்கு

நாள் : 8.5.2010 சனிக்கிழமை காலை 9.30 – 5.00 வரை
இடம் : சிவகாமி அம்மையார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மா பேட்டை சேலம்.
தொடர்புக்கு : தக்கை வெ.பாபு – 9600953007




காலை; 9; 00

வரவேற்புரை : தக்கை வெ.பாபு

துவக்க உரை : ஈசன் இளங்கோ

தலைமையுரை : சுப்ரபாரதிமணியன்

காலை 10.00 – 1.00 மணி
அமர்வு : 1
கருத்துரையாளர்கள் : தமிழ்நதி, சந்திரா


1.
தாண்டவராயன் கதை(பா.வெங்கடேசன்)

ஸ்ரீநேசன்

2.
நிலாவை வரைபவன்(கரிகாலன்)

அசதா

3.
சாந்தாமணியும் இன்னபிற காதல்களும்( வாமு.கோமு)

சாகிப்கிரான்

பகல் 2.00 – 5.00 மணி
அமர்வு : 2
கருத்துரையாளர்கள் : தாராகணேசன், மோகனரங்கன்


4.
துருக்கி தொப்பி – கீரனூர் ஜாகிர் ராஜா
இளங்கோ கிருஷ்ணன்


5.
வெட்டுப்புலி( தமிழ்மகன்)

என்.சிவராமன் (பைத்தியக்காரன்)

6.
நெடுஞ்சாலை(கண்மணி குணசேகரன் )
ச.முத்துவேல்



நன்றியுரை அமுதரசன்

பங்கேற்பாளர்கள் : அஜயன்பாலா சித்தார்த்தன், கண்டராதித்தன், அய்யப்பமாதவன், காலபைரவன் ,
உமா சக்தி பால் நிலவன், தூரன் குணா, பாக்கியம் சங்கர், அகச்சேரல் ,மற்றும் பலர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : பொன்.வாசுதேவன் (அகநாழிகை), தக்கை வெ.பாபு

அனைவரும் வருக !
................................................................................................................................................................................................................
சொற்கப்பல் (விமர்சன தளம்) அமைப்பாளர்கள்
அகநாழிகை – தமிழ்மகன் - தடாகம்.காம் – டிஸ்கவரி புக் பேலஸ்
................................................................................................................................................................................................................

சொற்கப்பல் (விமர்சன தளம்) மற்றும் ‘தக்கை‘ இணைந்து வழங்கும்

சொற்கப்பல் (விமர்சன தளம்) மற்றும் ‘தக்கை‘ இணைந்து வழங்கும்

நாவல் விமர்சன அரங்கு

நாள் : 8.5.2010 சனிக்கிழமை காலை 9.30 – 5.00 வரை
இடம் : சிவகாமி அம்மையார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மா பேட்டை சேலம்.
தொடர்புக்கு : தக்கை வெ.பாபு – 9600953007




காலை; 9; 00

வரவேற்புரை : தக்கை வெ.பாபு

துவக்க உரை : ஈசன் இளங்கோ

தலைமையுரை : சுப்ரபாரதிமணியன்

காலை 10.00 – 1.00 மணி
அமர்வு : 1
கருத்துரையாளர்கள் : தமிழ்நதி, சந்திரா


1.
தாண்டவராயன் கதை(பா.வெங்கடேசன்)

ஸ்ரீநேசன்

2.
நிலாவை வரைபவன்(கரிகாலன்)

அசதா

3.
சாந்தாமணியும் இன்னபிற காதல்களும்( வாமு.கோமு)

சாகிப்கிரான்

பகல் 2.00 – 5.00 மணி
அமர்வு : 2
கருத்துரையாளர்கள் : தாராகணேசன், மோகனரங்கன்


4.
துருக்கி தொப்பி – கீரனூர் ஜாகிர் ராஜா
இளங்கோ கிருஷ்ணன்


5.
வெட்டுப்புலி( தமிழ்மகன்)

என்.சிவராமன் (பைத்தியக்காரன்)

6.
நெடுஞ்சாலை(கண்மணி குணசேகரன் )
ச.முத்துவேல்



நன்றியுரை அமுதரசன்

பங்கேற்பாளர்கள் : அஜயன்பாலா சித்தார்த்தன், கண்டராதித்தன், அய்யப்பமாதவன், காலபைரவன் ,
உமா சக்தி பால் நிலவன், தூரன் குணா, பாக்கியம் சங்கர், அகச்சேரல் ,மற்றும் பலர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : பொன்.வாசுதேவன் (அகநாழிகை), தக்கை வெ.பாபு

அனைவரும் வருக !
................................................................................................................................................................................................................
சொற்கப்பல் (விமர்சன தளம்) அமைப்பாளர்கள்
அகநாழிகை – தமிழ்மகன் - தடாகம்.காம் – டிஸ்கவரி புக் பேலஸ்
................................................................................................................................................................................................................

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...