Showing posts with label உலக சினிமா. Show all posts
Showing posts with label உலக சினிமா. Show all posts

April 5, 2023

ஜம்ப் கட்டில் ஒரு செல்லுலாய்ட் புரட்சி - ழான் லூக் கொதார்த் -அஜயன்பாலா

அஞ்சலி : உலக சினிமா இயக்குனர் ழான் லூக் கொதார்த்
நேற்று உலக சினிமாவே அதிர்ந்தது . தம் படைப்புகாளால உலகையே அதிரவைத்த பிரெஞ்சு சினிமா மேதையும்.. ஜம்ப் கட் எனும் படத்தொகுப்பு உத்தியை பயன் படுத்தி காட்சி மொழியில் கலகத்தை உண்டு பண்ணியவருமான ழான் லுக் கொத்தார்ததின் மறைவு செய்தி கொடுத்த தாக்கம் தான் அது.. பிரான்சுக்கும் சுவிட்சர்லாந்துக்குமிடையில் ஜெனிவா ஏரியின் மீதிருக்கும் ரோலி நகரில் தன் 91ம் வயதில் அமைதியாக இந்த உலக வாழ்வை தானே முறித்துக்கொண்டார் . ஆமாம் அவர் மரணம் அவரே எடுத்துக்கொண்ட முடிவு உடனே பலரும் இது தற்கொலையா என யோசிக்க்லாம் .. இல்லை அவர் அப்படிப்பட்ட , கோழையும் அல்ல இறக்கும் கடைசி நொடிவரை எந்த நோயும், அவரை நெருங்கவில்லை. . ஆனால் இயற்கை கடைசியில் அவரே மரணத்தை தேர்வு செய்து கொள்ளும் உரிமையை கொடுத்து ஆச்சரயப் படுத்தியுள்ளது. . . இந்த வாழ்க்கை போதும் என 91 வயதில் முடிவெடுத்த பின் அவர் சுவிஸ் அரசாங்கத்திடம் சொல்லி மருத்துவர் மூலம் தன் மரணத்தை தானே தீர்மானித்துக் க்கொண்டார் இப்படியான் அமைதியான் மரணக்களுக்கு . சுவிஸ் அரசாங்கம் தன் சட்ட தட்டங்களில் வழி வகை செய்திருப்பது ஆச்காரய்மான் ஒன்று . . உண்மையில் அவர் மரணம் கூட அவர் படங்கள் போல ஒரு அதீத புனைவுதான். உலகில் எத்த்னையோ மேதைகள் வாழ்ந்து மறைந்தாலும் இயற்கை வேறு யாருக்கும் கொடுகாத பரிசு இது . கொதார்த் ? சினிமாவில் அப்படி என்ன சாதனைகள் செய்தார் என சொல்ல வேண்டுமானால் அவரை மானசீக குருவாக வரித்துக்கொண்ட சில சிஷ்யர்களைச் சொன்னால் ; அவர் பெருமையை நிங்களே பரிந்து கொள்ளலாம் இன்று உலக சினிமாவின் உன்னத இயக்குனர்களாக போற்றப்படும் குவாண்டின் டோராண்டினோ, மார்டின் ஸ்கார்சிஸ், அலேக்ஜாண்டிரோ இனாரிட்டு மற்றும் நம்ம ஊர் அனுராக் காஷ்யப் ஆகியோர தன் அவரை மானசீக குருவாக வரித்துக்கொண்ட ஏகலைவன்கள் . . சுருக்கமாக சொலலப் போனால் கொதார்த் உலக இயக்குனர்களின் டான் என சொல்ல்லாம் காட்சி மொழிக்குள் கவிதையும் அரசியலும் ஒன்றிணைத்து சினிமாவை சமுக உற்பத்தியாக மாற்றிய மிகப்பெரிய வித்தகர் தான் கொதார்த் .... அறுபது வருடங்களுக்கு முன் இவர் தன் சினிமாக்களில் ஆரம்பித்த குறியீடு .. நான் லீனியர் போன்ற அம்சங்ள் தான் இன்று நம் கோலிவுட் வரை வந்து சேந்துள்ளன . அவர் சினிமாக்களில் கொண்டு வந்த உத்திகள் பார்வையாளனி அதிர வைத்த அதீகாமயம் அவனை ஆர்வத்துடன் பார்க்கவும் சிந்திக்கவும் வைத்தன. படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே சட்டென தி என்த என்ற கார்ட் அடிக்கடி வந்து போய் அதிர்ச்சியஊட்டும். அது மட்டும் அல்லாமல் காடென கொதர்த்தி சினிமாவில் தோன்றி அடுத்த் காட்சி எப்படி எடுக்கலாம் என யோசிப்பது வரும். அல்லது எடிட்டிந்ஹ டேபிளில் எடிட்டருற்றன் அவர் சண்டை ப போடும் காட்சி வரும். படம் பார்ப்பவனை விழுப்பு நிலையில் வைத்திருக்க அவர் இந்த உத்திகளை பயன் படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார் கொதார்த்த என்பர் தனி நபர் அல்ல . அவர்கள் ஒரு இயக்கும் அந்த இயக்கத்தின் பெயர் நியுவேவ் . அந்த இயக்கத்தின் முக்கியமானவர்கள் அவரைத்த்விர நான்கு பேர். அவர்கள். பிரான்சுவா த்ரூபோ, . எரிக் ரோமர் கிளாத் ஷப்ரோல் ழாக் ரெவெட் ஆகியோர் அனைவருமே அரை குறை படிப்புடன் குட்டிச சு வரில் அமர்ந்து சைட் அடிக்கும் பருவத்தினர் . அவர்கள் வயதில் அன்று பலரும் பிரான்சில் அப்படித்தான் வாழ்க்கையை கழித்து வந்தனர் . ஆனால் எழுத்தாளராகும் இயக்குனராகும் கனவுகளுடன் இவர்களோ கலைப் பைத்தியங்களாக திரைப்பட சங்கங்கள் உலக சினிமாக்கள் . இலக்கியங்கள் என திரிந்தனர் . விளைவு ..... நியூ வேவ் எனும் சினிமா புரட்சி . கொதார்த் இந்த நண்பர்களுடன் உலக சினிமாவில் செய்த புரட்சி தான் இன்றும் அவர் புகழுக்கு கார்ணம் அப்படி அவர்கள் செய்த புரட்சிஉயின் கதையை சுருக்கமக பர்ப்பொம் ஓவியங்களின் வரலாறு படித்த்ரக்ளுக்கு டாடயிஸ்டுகள் என்ற கலகக் கும்பல் பற்றித தெரியும் . இந்த டாடயிஸ்ட் கும்பல் பிரான்சில் நடக்கும் ஓவிய காட்சிகளுக்கு நுழைந்து காட்சிக்கு வைக்கப்பட்ட ஒவியங்க்களை அடித்து உடைத்து கலர் பெயிண்டுகள் ஊற்றி கலவரம் செய்தார்கள் .. காரணம் அந்த ஓவியங்கள் சரியில்லை அதில் கலை இல்லை . அவைகளில் அரசியல் இல்லை என விமரசனம் செய்தனர் . அதன்பிறகுதான் ஐரொப்பாவில் நவீன ஒவ்யங்கள் கவனம் பெறத்துவங்கின . அது போல சினிமாவில் கலகம் செய்து அந்த கலையில் களையெடுக்க இந்த ஐவரும் விரும்பினர். . அதன் மூலம் உலக சினிமாவின் போக்கைத திசை திருப்ப முடிவெடுத்த்னர். . . ஆந்த்ரே பச்ன் என்பவர் குருவாக இருந்து இவர்களை ஊக்கப்படுத்தினார் . தான் நடத்திய கையேது சினிமா எனும் பத்ரிக்கையில் இவர்களை விமரக்கன் கட்டுரைகள் எழுத வைத்தார் அவர்கள் அப்போது பிரபலமாக இருந்த இயக்குனர்களையும் அவரகளது கலை படங்களையும், குப்பை என விமர்சித்து எழுதினர். சினிமா என்பது அதுவரை ஒரு நாவலை வரிசை மாறாமல அப்படியே படம் பிடித்து கதை சொல்லும் ஊடகமாக பயன்படுத்தப் பட்டு வந்தது . இது பார்வையாளனை அவன் உணர்ச்சிகளை ஏமாற்றும் பொலி வித்தை .இது . தியேட்டரில் இருட்டறையில் நல்ல சினிமா என்ற பெயரில் பார்வையாலனுக்கு நடத்தப்படும் மூளைச் சலவை ..மாறாக சினிமா என்பது காட்சி அனுபவம் .அதன் வழியாக பார்வையாளனை சிந்திக்க வைப்பதுதான் உண்மையான் கலை என கூறினர். செட்டுகள் ஆடமபர அலங்காரங்கள் எதுவும் சினிமாவுக்கு தேவையில்லை நடிகர்களின் முகங்களை வடவும் சினிமாவுக்கு காமிரா கோணங்களும் படத்தொகுப்புமெ முக்கியம் .. வெறுமனே ஒரு இளம்பெண்ணையும் துப்பாக்கியையுமே வைத்துக்கொண்டு நல்ல சினிமா அனுப்வத்தை தங்களால் உருவாக்க முடியும் என சவால் விடுத்தனர். இவர்களின் விமர்சனத்தால் கடுப்பாகிப் போன அனறைய இயக்குனர்கள் உனகெல்லாம் பேசத்தான் தெரியும் முடிந்தல படம் எடுத்துக் காண்பி ..அபோது தெரியும் உன் யோக்கியதை என இவர்களை நோக்கி சவால் விட்ட்னர். கொதார்த்தும் அவர்களது புதிய அலை நண்பர்களும் இந்த சவாலை ஏற்றனர். கையோடு அவர்கள் தங்களுக்கன திரைக்கதையும் எழுதினர். ஆனாலும் அவ்ர்ளுக்கு தயாரிப்பாளர் கிடைக்க வேண்டுமே அதுதன் பிரச்னை . ஆளுக்கொருபக்கம் பணத்தை திரட்டவும் தயாரிப்பாளரை தேடியும் அலைந்தனர் . கொதார்த் ஒரு அணைக்கட்டில் வேலைக்குப் போனார் . த்ரூபோ தன் பணக்கார காதலியை மணம் முடித்து மாமனாரை தயாரிப்பாளர் ஆக்க திட்டம் வகுத்தார். இப்படித்தான் த்ரூபோவின் முதல் படம் 400 உதைகள் இந்த இயக்க்த்தின் முதல் படமாக 1959ல் கான் திரைப்ப்ட விழாவில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இதைப் பார்த்து பழமை வாதிகள் வாயடைத்துப் போயிருக்க அடுத்த வருடமே இரண்டவது படமாக கொதார்த்தின் பிரெத்லெஸ் 1060ல் வெளியானபோது புதிய அலை உருவாகி விட்ட்து என அனைவரும் வியந்து பாரட்டினர் . மிகப்பெரிய தக்கத்தை உண்டு பண்ணிய அந்த சினிம ஆதுரை யிலான் 66 வருட சினிமா வரலாற்றை புரட்டி போட்டது. .கொதார்த்த சொன்னது போலவே அவரது படம் சொல் புதிது சுவையும் புதியதாக இருந்த்து . வழக்கமான் மரபான் காட்சி கோணக்களை அவர் உடைத்தார் . இஷ்டப்போக்கில் காமிராவை தோளில் போட்டுக்கொண்டு பாத்திரங்களின் உடல் மொழி களை அவர் பின் தொடர்ந்து காட்சிப் படுத்தினார் . அதை கவித்துவமாக எடிட்செய்து கூடுத்ல மெருகேற்றினார் . அப்படி அவர் உருவக்கீய படத்தொகுப்பு முறையை அனைவரும் ஜம்ப் கட் என வியந்து போற்றினர. ஒரு ஊரில் ஒரு ராஜா என வரிசையாக கதை சொல்லும் சினிமாமரபை அவர் உடைத்தார் . காடக் மொழிகளில் ஒரு கலகத்தை உண்டு பண்ணி வரிசைகளை மாற்றினார் . நடுவிலிருந்து கதையை துவக்கி கதையின் துவக்கத்தையும் முடிவையும் பார்வையாலனே தீர்மானிக்க விட்டுக்கொடுத்தார். இந்த புதுமையான் முறையால் சினிமாவிலிருந்து கதை பின்னுக்கு போய் காட்சி அனுபவம் காட்சி மொழி தொழில் நுட்பம் ஆகியவை முன்னுக்கு கொண்டுவரப்பட்டது அவர் துவக்கி வைத்த இந்த வான் லீனியர் சனிமா தான இன்று உலகம் முழுக்க வணிக சினிமாவாக வும் கொண்டாடபடுகிறது அன்று தொடங்கிய அவர்து சினிமா பயணம் ஐமபதுக்கும மேற்பட்ட கலை படைபுகளாக கடந்த அறுபது ஆண்டுகளில் உற்பத்தி செய்து வந்தந. . த்றுபூ உட்பட அவரது நண்பர்கள் அனைவரும் துவக்கத்தில் காட்டிய பரிசஈத்னை முயற்சிகளிலிருந்து விலகி பின் கமர்ஷியல் படங்கள் எடுக்க பூய்வட்ட்னர். ஆனால் கொதார்த் மட்டும் துவத்தில் காட்டிய புதுமை காட்சி மொசியை கடைசி போதம் வரையிலும் சமரசம் இல்லமால் இயக்கி வந்தார் . அவர் உருவக்கிய ஒவ்வொரு பதாமும் சினிமா ரச்கர்களால் கொண்டாட்ப்பட்டன . அவர்றின் அரச்யல் தன்மை, காட்சி மொழ்யில் அவர் உருவாக்கிய தொழில் நுட்ப புதுமை ஆகியவை இப்போதும் சினிமா கற்கும் மாணவர்களுக்கு பாடங்களாக இருக்கின்றன தீவிர இட்து சாரி ஆதர்வாளரான அவர் . இந்த கருத்தாக்கத்த்லிருந்து கடைசி வரை பின் வாங்கவில்லை . வாழ்நாள் முழுக்க ஏகாதிபத்திய அரசியலுக்கு எதிரக படங்களை இயக்கி வந்த கொதார்த்துக்கு அமெரிக்காவின் ஆஸ்கார் விருது கமிட்டி சிறப்பு வாழ்நாள் சாத்னையாளர் விருது 2010ல் கொடுக்க முன் வனத போது அவர்களின் அழைப்பை அவர் நிராகரித்தார். . அப்படிப் பட்ட சமரசமற்ற படைப்பாளியாக படைப்புக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளியில்லமால் வாழ்ந்த காரணத்தால் தான் இன்று அவர் மரணம் கூட உலகம் வியக்கும் ஒன்றாக மாறியிருக்கிறது வாழ்க்கையும் சினிமாவும் வேறு வேறல்ல என அடிக்கடி சொல்லும் அவர் சிலசமயங்களில் ஒரு சினிமாவுக்குள் தன் வாழ்க்கை சிக்கிக்கொண்டதாக கூறுவார் . அப்படித்தன் அவரது மர்ணம் எனும் க்ளைமாக்ஸ் காட்சியும் அசரே எழுதிய காட்சியாக அவர் பாணியில் வியப்புட்டும் படி அமைந்துவிட்ட்து .சினிமா எனும் மாயப்புதிருக்குள் அவர் மரைந்தே போனார் என்றும் இதை சொல்ல்லாம் - அஜயன்பாலா

December 2, 2021

 மணிக்தா எனும் மாமனிதர்   : சத்யஜித்ரே 100






 கடந்த மே மாதம் 2ம் தேதி சத்யஜித் ரேவின் 100 வது பிறந்த நாளையொட்டி  பாராளுமன்றத்தில் மத்திய அரசின் தகவல் ஒளி பரப்புத்துறை அமைச்சகம்  அவரது  நூற்றாண்டை கொண்டாடப்போவதாக அறிவித்தலிருந்து உலகம் முழுக்க பல்வேறு கலைஞர்கள் எழுத்தாளர்கள்  சிந்தனையாளர்கள் சத்யஜித்ரேவின் படைப்பளுமை குறித்து பலவிதமான கட்டுரைகளை எழுதிகுவித்து வருகின்றனர்

 ரே இறந்து  முப்பதாண்டுகள்  ஓடிவிட்டன.  உலக சினிமாவின்  முகம் இன்று நிறைய மாறிவிட்டது . இந்த முப்பதாண்டில் குவாண்டி டொராண்டினோக்களும் கிம் கி டுக்குகளும்  அலக்சாண்ட்ரியோ  இன்னாரிட்டோக்களும்  தங்களின் புதிய சொல் முறையால் உலக சினிமாவை தலைகீழாக மாற்றிவிட்டனர்.\

அன்பு சகிப்புத்தன்மை  தியாக உணர்ச்சி  இதெல்லாம்  பழசாகி  கொலை கொள்ளை வன்முறை  .என புதிய கதையாடல்கள் உலக சினிமாவில்  முன்வரிசையில் இடம் பெற்றுவிட்டன

நல்லவர்களுக்கான நியாயத்தை மட்டுமே பிரதிபலித்த கதைக்கருக்கள்  போய்   கெட்டவர்களுக்கான அறத்தையும் இந்த திரைப்படங்கள் பேசுகின்றன 

,1 2 3 4 5 எனும் ஒழுங்கு வரிசையில்  கதை சொல்ல முறை போய் 3 5 ,1,4,2 கலைத்து போட்டு  பார்வையாளனோடு கண்ணாமூச்சி ஆடும்  திரைக்கதைகள் வந்துவிட்டன

இப்படியான முரட்டு மோஸ்தரில்  உலக சினிமா போக்கு  ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் சத்யஜித் ரே வின் படங்கள் அவர் குறித்து எழுதப்படும் நூற்றாண்டு கட்டுரைகள் அவர் படைப்புகளுக்கு காலத்தால் அழியாத மணிமகுடத்தை சூட்டி அதி உயந்த கலைஞனாக பறைசாற்றுகின்றன

சினிமா வரலாற்றில்  சாப்ளின் ,அகிராகுரசேவா வரிசையில் சத்யஜித்ரே  இன்று  உயர்ந்த இடத்தை அடைந்திருக்கிறார்

இது ரேவுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் பெருமை

உலக நாடுகளை பொறுத்தவரை காந்திக்கு  தாகூருக்கு பிறகு  ரே தான் இந்திய கலாச்சராத்தின் அடையாளம்

 

பதேர்  பாஞ்சலி வெளியாகி அது உலகசினிமாவில் மிகப்பெரிய அதிர்வை உண்டாகி ஐம்பதுகளிலேயே அது நிகழ்ந்துவிட்டது

.உலக இயக்குனர்கள் பலரும் தங்கள் பிதாமகனாக கருதும் ஜப்பானிய இயக்குனர் அகிராகுரசேவ சத்யஜித்ரே பற்றி இப்படி குறிப்பிடுகிறார்

சத்யஜித்ரேவின் படங்களை இதுவரை ஒருவர் பார்க்காவிட்டால் அவர்  சூரியனையும் நிலவையும் பார்க்காமல் இந்த பூமியில் வாழ்வதற்கு  ஒப்பானதாகும் என கூறியிருந்தார்

இன்னும் சொல்லப்போனால்  ரேவை  ஹொமர், மார்க்ஸ் , சாப்ளின் , ஐன்ஸ்டீன் ஆகியோருக்கு இணையான ஞானி என புகழ்கிறார் அவர் வாழ்க்கை வரலாறை எழுதிய  ஆண்ட்ரூ ராபின்சன்

கிட்டதட்ட ஏழு ஆண்டுகள் ரேவை நிழல் போல தொடர்ந்து ஆய்வு செய்து அவர் வாழ்க்கை வரலாற்றை 1984ல்  இன்னர் ஐ என்ற நூலின் மூலம்  எழுதி வெளியிட்டு உலகில் பல நாடுகளின் கவனத்தை ஈர்த்த எழுத்தாளர் அவர்

அவர் பட்டியலிட்ட  மேதைகள் அனைவரும் உலக வரலாற்றில் அவர்கள் வாழும் காலத்தில் தங்கள் படைப்புகள் மூலம் பெரும் தாக்கத்தை உண்டக்கியவர்கள் அவ்வகையில் ரேவின் படங்கள் இருபதாம் நூற்றாண்டில்   மானுட வாழ்வியலின்  சாட்சியங்கள் ..என குறிப்பிடுகிரார்

ரே சினிமாவை வெறும் கலைபடைப்பாக மட்டும் பார்க்கவில்லை அவர் கேமிரா வழியே யாருமே பார்க்க முடியாத மனித அவலங்களை  வாழ்வியலின் சிதைவுகளை காட்சி படுத்துகிரார் .அவை  ஒரு தொல்லியல் ஆய்வாலன்   பூமிக்கடியில்   மண்ணில் சிக்கிக்கிடக்கும் புதை படிவங்களை சேகரிக்க எடுத்துக்கொள்ளும் கவனம் போல  கேமிரா வழியே கவனத்துடன் அனுகுகிறார் .

அவரது படங்களில் நாம் எதிர்கொள்ளும் நிதானமும் பொறுமையும் அதன் பொருட்டாக உருவாவதான். அவரது இந்த அணுகுமுறையும் அதில் உண்டக்க முயலும் கவித்துவமும் தான் இன்று அவரது படங்களை  உலகசினிமாவின் பொக்கிஷங்களாகவும் அடையாளம் பெறுகின்றன.

அபுவின் உலகம் சார்ந்து அவர் எடுத்த பதேர் பாஞ்சாலி, அபு சன்சார் , அபராஜிதோ எனும் மூன்று படங்களுமே  உலகம் முழுக்க சினிமா மாணவர்களுக்கு பைபிளாக பரிந்துரைக்கப்படுகிறது இந்த மூன்றுபடங்களுமே      பார்வையாளல் மனதில் உண்டாக்கும் கவித்துவ சலனம்  கலையின் உன்னதம்

அரசியல் வரலாறு பொருளாதரா மாற்றங்கள் காரணமாக தலைமுறைகள் தோறும் ரசனைகள் மாறினாலும் மனித மனம் மட்டும் மாறிவிடவில்லை அவை அன்றும் இன்றும் அப்படியேதான் இருக்கின்றன என்பதை  உலகிற்கு உணர்த்துவதால் தான் இன்றும் ரேவும் பதேர் பாஞ்சாலியும் உலகம் முழுக்க கொண்டாடப்படுகின்றன.

. உலகமே கொரானவால் மிகவும் பாதிக்க பட்டு  மனிதனின் மதிப்பிடுகள் விழுமியங்கள் மறு பரீலனைக்கு உள்ளயிருக்கும்  இந்த சூழலில் பதேர் பாஞ்சாலியின் துர்காவின் மரணத்தை எதிர்கொள்ளும் ஒவ்வொருவரையும் அது உலுக்கி எடுத்துவிடுவது தவிர்க்கமுடியாதது

கடந்த ஐந்து ஆண்டுகளாக புதிதாக சினிமா கற்க வரும் மாணவர்களுக்கும் உதவி இயக்குனர்களுக்கும் உலக சினிமாக்களை திரையிட்டு உரையாடி வருகிறேன் .

துவக்கத்தில்  உச்சு கொட்டுபவர்கள்  உட்கார முடியமால் நெளிபவர்கள்  டெட் ஸ்லோ என அருகில் அமர்ந்திருப்பவன் காதில் கிசுகிசுப்பவார்கள்  பின் கொஞ்சம் கொஞ்சமாக படத்தில் வரும்  துர்கா மற்றும் அபு வின் உலகத்தில் ஆழ்ந்து போகிறார்கள்.. குறிப்பாக மழையை முன்னதாக அறிவிக்கும் குளத்தில் நகரும் தத்துப்பூச்சியின் க்ளோசப் , ,இரவில்  வரும் மிட்டாய் வண்டி பின்னால் ஓடும் சிறுவர்கள் அக்காவைத்தேடி அலையும் அபுவின் கண்கள் ,காஷ் பூக்கள் மலர்ந்த ஆளுயர பில்வெளியினூடே  புகை வண்டியை பார்க்க ஓடும் துர்காவையும் அபுவையும் துரத்தும் காமிரா  அந்த கூன் பாட்டியின் மரணம் , துர்காவின் மரணம் போன்ற காட்சிகள் அவர்களை  இன்னமும் ஆச்சர்யபடுத்திக்கொண்டேதான்  இருக்கிறது

கடைசி காட்சியில் துர்காவின் அம்மா விட்டை விட்டு கலைசெய்துகொண்டு போகும் பொது சிறுவன் அபு காணமல் போனதாக கருதப்பட்ட நெக்லைசை கண்டுபிடிப்பதும் அதை யாரும் அறியாமல் குளத்தில் வீசிவிட்டு  அதையே பார்ப்பதும் இன்று வரை உலகசினிமாவில் உன்னத தருனங்கள்

சத்யஜித்ரேவை இந்த கடைசி காட்சி பற்றி  காந்திரையிடலின் போது அந்த நகையை குளத்தில் வீசும் காட்சியின் போது அந்த சிறுவனின் க்ளோசப் காட்சியில் அவன் என்ன நினைக்கிறான்

எனகேட்க தெரியவில்லை அவன் என்ன நினைப்பான் என நான் யோசித்து அதை எடுக்கவில்லை . தங்கைதான் திருடினால் என யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதார்காக அவன் யாரும் அறியமால் குளத்தில் எரிவதற்காக காட்சியை  விளக்கினேன் பிறகு அந்த சிறுவன் அவனாக என்ன நினைத்தானோ தெரியவில்லை

என வெளிப்படியாக கூறினார்

அது போல பதேர் பாஞ்சாலியின் உன்னத கலைத்தன்மைக்கு  உதவிய இன்னொரு பாத்திரம் கூன் விழுந்த பாட்டியாக நடித்த சுனிபலா தேவி

இப்படி ஒரு பாத்திரம் என முடிவெடுத்தபின் அந்த வயதான பாத்திரத்தில் நடிக்க வைக்க  நடிப்பு அனுபவம் உள்ள பாட்டி நடிகையை   எவ்வளவோ தேடியும் யாரும் கிடைகாத சூழலில்  கடைசியில் ஒரு பழைய விடுதியில் அப்படி ஒரு பாட்டி இருப்பதாக படத்தில் பக்கத்துவீட்டு பணக்கார பெண் பாத்திரத்தில் நடித்த நடிகை சொல்ல ரேவும் தன் உதவியாளர்களை அனுப்பி  சுனிபாலாதேவியை வரவழைத்திருக்கிரார்

அப்போது அவருக்கு எண்பது வயது சிறுவயதில் மாவுனப்படங்களில் நடித்து பிஜ்ன் வாழ்க்கையின்  இடிபாடுகள் காரணமாக பாலியல் தொழிலுக்குள் சிக்கி பின் அங்கேயே தன் இறுதிநாட்களை எண்ணிக்கொண்டிருந்த சுனிபாலாவுக்கு இப்படி ஒரு அதிர்ஷடம் அவரே எதிர்பார்க்கவில்லை  பின் நாளொன்றுக்கு இருபது ரூபாய் என்ற அடிப்படையில் வரி ஒப்பந்தம் பேசப்பட்டது

படப்பிடிப்புஇன் போது ரே எதிர்பார்த்தைக்காட்டிலும் அவர் ஒத்துழைப்பு அபாரமாக இருந்தது.

குறிப்பாக அவர் இறக்கும் காட்சியின் போது அதை அவரிடம் சொல்லி விளக்க பலரும் சங்கடபட்ட சூழலில் அவரோ நடிப்புதானே என சிரித்தபடி அனாயசமாக நடித்துக்கொடுத்தாரம்

அப்படி அனாயசமாக தன் இறுதிக்காலத்தில் நடித்த பாட்டியை உலகமே வியந்து பாராட்டிகொண்டுயிருந்த  போது அவர் உயிருடன் இல்லை

படம் வெளிவருவதற்க்கு முன்பே 82ம் வயதில் காலமாகிவிட்டிருந்தார்

மணிலாவில் நடந்த திரைப்பட விழாவின் போது சிறந்த நடிகையாக அவர் தேர்வு செய்யப்பட்டதை ரசிகர்கள் கைதட்டி அங்கீகரிக்கும் போது அதை  பார்த்து மகிழ  அந்த பாட்டிக்கு  வாய்க்கவில்லை

இதில் ஆச்சரயமான ஒற்றுமை என்னவென்ரால் ரே பதேர் பாஞ்சாலி எடுக்க காரணமாக இருந்த படம் பைசைக்கிள் தீவ்ஸ் அந்த படத்திலும் சிறுவன் ரிசியின் தந்தை சைக்கிலை தொலைப்பான் கடைசியில் இன்னொரு சைக்கிலை திருடி மாட்டிக்கொள்பவனாக நடித்த நடிகர் முன்  பின் அனுபவமில்லாத ஒரு வழிப்போகர் . ஷூட்டிங்கை வேடிகை பார்க்க வந்த ஒருவரை சட்டென அந்த படத்தில்  டிசிகா நடிக்கூப்பிட்டு நாயகன் ஆக்கினார்

அவரும்படம் வெளியாகி உலகமே அவர் நடிப்பைக்கொண்டாடிய சூழலில் அவர்  உயிருடன் இல்லை

இப்படி மனிதகுலத்தின் மகத்தான ஆவணமான இரட்டை படங்களாக கருதப்படும் இந்த இரண்டு படங்களுக்குள்லும் ஒர் ஆச்சர்யமான ஒற்றுமை

சாதாரண மனிதனின் பிரதிநிதியாக அவர்கள் புகழடையும் போது மரணிப்பது வாழ்வின் புரியபடாத  வினோதங்களில் ஒன்று

 

June 20, 2021

அகிரா குரசேவாவின் ஆகச்சிறந்த நான்கு திரைப்படங்கள்

 


உலக சினிமாவில் நீங்கள் எத்தனை படம் வேண்டுமானாலும்  பார்க்கலாம் ஆனால் அத்தனை படங்களும் சொல்ல வருவதை குரசேவாவின் நான்கே படங்கள் மொத்தமாய் உங்களுக்கு கற்றுக்கொடுத்துவிடும்

குரசேவா இயக்கிய அவரது 29 திரைப்படங்களுள் காலத்தால் அழியாத மகத்தான காவியங்களாக ஐந்து  திரைப்படங்களை விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். மிகச்சிறந்த பத்துபடங்கள் என உலக சினிமாவின் எந்த ரசிகர் பட்டியலிட்டாலும் அவரது இந்த ஐந்து  படங்களில் ஏதவாது ஒன்று திரும்ப திரும்ப இடம்பெறும். அவை ரோஷ்மான் , செவன் சாமுராய் , இகிரு , ரெட் பியர்ட். டெர்ஜு உசாலா

இந்த ஐந்து தனித்தன்மை வாய்ந்த படங்களும் ஒன்றோடு ஒன்று முற்றிலும் மாறுபட்ட வகைப்பாட்டைச் சார்ந்தவை. இவற்றில் ரோஷ்மான், செவன் சாமுராய் இரண்டும் தொழில் நுட்பத்தின் அசாத்திய மேதமைகளை  உள்ளடக்கியவை. ரோஷ்மானின் விரிந்து அகன்ற காமிரா கோணங்களில் ஜப்பானிய நிலவெளிகள் நமக்குள் கற்பனைக் கெட்டாத  அமானுஷ்யத்தை முன்னிறுத்துபவை. மனித மனங்களின் இருண்மையை மட்டும் அவை போதிக்கவில்லை. காலமும் வெளியும் துண்டு துண்டாக சிதைக்கப்படும் போது உண்மையின் விசுவரூபத்தை வேறு வடிவத்தில் அனுபவமாக நம்  கண்முன் நிறுத்துகிறது . இந்த பிரம்மாண்டம் பேரிலக்கியங்களில் கூட காணப்பெறாதது. சினிமாவின் உச்ச பட்ச சாத்தியம் இதுதான். ரோஷமானில் பார்வையாளனும் ஒரு பாத்திரம் அவன்  உடல் இருக்கையில் இருந்தாலும் அவனும் படத்தின் ஒரு பாத்திரமாக  வெவ்வேறு காலத்தில் நுழைந்து உண்மைகளை அவனே  உள்வாங்குகிறான்/. பாத்திரங்கள் உளவியல் அவை பேசும் உண்மை ஒருபுறமிக்க  இயற்கை நம்மோடு பேசும் உண்மை வேறு ஒரு பிரம்மாண்டம் .  மரவெட்டி காட்டில் நடக்கும் போது மரங்களுக்கு நடுவே பயணிக்கும் சூரியனும் முதல் காட்சியிலும் இறுதிக்காட்சியிலும்  பிரம்மாண்ட வாயிலில் கொட்டும் மழையும் சொல்லும் உண்மைபேரிலக்கியங்களை தோற்கச்செய்ய வல்லது . சினிமா எனும் கலை ஏன் அனைத்து கலைகளினும் உயர்ந்தது என்பதற்கு ரோஷமானைவிட   சாட்சி வேறு எதுவும் இல்லை

 அதே போல செவன் சாமுராயில் பல காமிராக்களை கொண்டு படம்பிடிக்கப்பட்ட அதன் இறுதிக்காட்சியின்  படத்தொகுப்பு காலத்தை நம் முன் உறைவைத்து வெறும் கண்கள் முன் முப்பரிமாணத்தை திரையில் நிகழ்த்திக்காட்டுபவை. குதிரைகள் திரையிலிருந்து நம் கண்களை கடந்து மூளைகளுக்கப்பால் தடதடக்கும் பிரமிப்பை உண்டாக்குபவை.

 


அதே போல இகிருவும் ரெட் பியர்டும் உணர்வு ரீதியாக பெரு இலக்கியங்களின் சாதனையை அகத்தே கொண்டவை. ரெட் பியர்டில் பாலியல் தொழிலுக்கு பலியான சிறுமியை இளம் மருத்துவன் மீட்கும் காட்சி உலக சினிமாவின் அழுத்தமான தடம். சினிமா இலக்கியத்தை காட்டிலும் உண்னதமானது என்று சொல்லவைக்கும் தருணம். படத்தில்  உடல்கள் படும் வேதனைகளின் முனகல்கள் மனித இருப்பின் அவலத்தை நம்மிடம் முறையிடுகின்றன. அவற்றுக்கு சிகிச்சை செய்வது என்பது இறைவனை கடந்து செல்வது அல்லது இறைத்தன்மையை கடந்து செல்வது என்பதை மூத்த மருத்துவரான மிபுனே இளைய மருத்துவனுக்கு  விளக்கும் காட்சியில் வாழ்வின் மறுபக்கத்தை நமக்கு குரசேவா உணர்த்திவிடுகிறார். இதே போலத்தான் இகிருவில்   இறப்பதற்கு முன் இந்த உலகத்திற்கு  எதையாவது செய்துவிட வேண்டும் என விரும்பும் Kanji Watanabe பாத்திரமும் வாழ்க்கையில் நாம் செய்ய மறந்த காரியங்களை நமக்கு எச்சரித்து செல்கிறது.

இந்த நான்கு திரைப்படங்களையும் ஒரு சேர பார்க்கும் ஒருவன் இரண்டு விஷயங்களில் ஒரு சேர உயரத்தை அடைய முடியும். ஒன்று வாழ்வின் சகல உண்மைகளையும் அறியும் மேதமை, இரண்டு திரைப்படம் எனும் கலையின் உயர்ந்த கலா தரிசனம்.

இலக்கியம் கலை , தத்துவம் , உறவுகள் , ஆண்மீகம், காதல் என வாழ்க்கையின் அனைத்து பருண்மைகளிலும்  அவரது இந்த நானகு  திரைப்படங்கள் நமக்கு வாழ்வின் அனுபவத்தை உன்னத நிலைக்கு உணர்த்துகின்றன்  


ajayan bala

 

 

May 9, 2021

மோனிக்கா பெலுச்சி - உலகப் பேரழகி


 

நம்மூரில் நாற்பது  வயதை கடந்தாலே பெண்கள் கிருஷ்ணா கோவிந்தா என  காசிக்கு டிக்கட் வாங்க அலைவார்கள் . ஆனால்  இன்று உலகில் பலகோடி ரசிகர்களின் கனவுகன்னியாக திகழும் பேரழகி பெலுச்சிக்கு வயது 56 . மட்டுமல்லாமல் அவர் சமாபதிக்கும் பணம் எவ்வளவு தெரிய்மா  ஒரு  மணி நேரத்துக்கு 1000 டாலர் அதாவது நம்மூர் பணத்துக்கு 73,000 . .உலகம் முழுக்க  பல கோடி ரசிகர்களை கொண்ட பேர்ழகி  மொனிகா பெலுச்சி  இத்தாலி நாட்டின்   சிசிலியில் 1964ம் ஆண்டு  பிறந்தவர்.  .

பதிமூன்ற் வயதில் மாடலிங் தொழிலுக்குள் காலடி எடுத்து வைத்த பெலூச்சி சினிமாவில் அறிமுகம் ஆனபோது வயது 27 . பின் தொடர்ந்து பல  படங்களில் நடித்த பெலூச்சிக்கு அதிக புகழ் பெற்றுதந்த படம் மெலீனா

இரண்டாம் உலகப்போரில்  இத்தாலியில் ஒரு குட்டி ஊர் தான் கதைக்களம் .   ஊருக்குள்  புதிதாக ஒரு பேர்ழகி சிக்கென உடையில் தொடை தெரிய நடந்து வருகிறாள்   அதைபார்த்து  பருவ குமரன்கள் முதல்  பல் விழுந்த  பொக்கை வாய் கிழ்வர்கள் வரை  உச் கொட்ட பார்க்கிறார்கள்  . அவளுக்கு  . கணவன்  .வேறு  போருக்கு போயிருக்கிறான் . அவன் இறந்துவிட்ட்தாக தகவல் வர இவள் மட்டும் தனியே வசிக்கிறாள் . இதனால் அனைவரும் அந்த வீட்டையே கழுகு போல வட்டமிடுகின்ற்னர்.  அவளை ஒரு முறையாவது அடைந்துவிட துடிக்கின்றனர் .

 .  … இந்த  சமயத்தில் ஹிட்லரின் நாஜிப்படை ஊருக்குள் ஊடுருவுகிறது . பேர்ழகி மெலினாவை அவரகள் பார்ர்த்துவிட  அதிகாரிகள் அவளை வசப்படுத்தி  இரவுகளில் அவள் வீட்டுமுன் ராணுவ வண்டியை நிறுத்துகிறார்கள் .. அவளும் வேறு வழியில்லாமல்  உடலை விற்று உயிரை காத்துக்கொள்கிறாள் .  ஊர்  பெரிசுகளால் இதை தாங்க முடியவில்லை . கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே  என்ற வெறுப்பு .  ஒரு வழியாக போர் முடிந்து ஜெர்மன் ராணுவம்  ஊரைவிட்டு கிளமப  இப்போது ஒட்டு மொத்த ஊரின் ஆண்களும் பெண்களும்  கூடி  ஊருக்கு களங்கம்  உண்டாக்கிய மெலினாவை ஊரைவிட்டே துரத்தும் முடிவுக்கு வருகிறார்கள்  அவள் வீட்டுக்குள் புகுந்து அனாதையான மெலினாவின் முடிடை பிடித்து இழுத்து தெருவுக்கு கொண்டு வந்து சரமாரியக வெளுத்து  வாங்குகிறார்கள் .  குறிப்பாக் பெண்களுக்கு அவள் அழ்குமேலிருந்த வெறுப்பு அடி உதைமூலம் வெளிப்படுகிறது . கடைசியில் அவள் அழகான் முடியை வெட்டி சிதைத்து  மொட்டை அடித்து ஊரை விட்டே துரத்துகிறார்கள் . கொஞ்ச நால் கழித்து போரில் கொல்லப்பட்டதாக  நினைத்த கணவன் உயிரோடு மனைவியைத்தேடி வருகிறான் .  பின் அவளோடு ஊரைவிடே செல்கிறான்

சில வருடங்கள் கழித்து பெரும் கோடீஸ்வரியகா அவள் அந்த ஊருக்குள் கணவனுடன் வர ஊரே அவளை வாய்பிளந்து பார்க்கிறது . யார் அவளைஅடித்த்ஹாளோ அந்த பெண்ணே ஆவளுக்கு சேவகம் செய்வதுடன் படம் முடிகிறது .

இதில் மெலினாவாக நடித்தன் மூலமாகத்தன மொனிகாபெலுச்சி உலகின் நம்பர் ஒன் நடிகையாக ஆனார் . பல கோடிகள் சம்பாதித்து  தனியாக  ஒரு தீவையே விலைக்கு வாங்கி அதில் பங்களா கட்டி வசிக்கிறார்  இரண்டாவது கணவர் மற்றும் இரண்டு பெண்களுடன் அதில் வசித்து வருகிறார் . இன்றும்  இணையத்தில் அதிகம் பேர் தேடும் உலக அழ்கி மெலீனாதான் என கூகுள் சொல்கிறது

 

 

 

 

 

November 3, 2016

டெர்ஜு உஜாலா : இயற்கை Vs செயற்கை

டெர்சு உஜாலா :





         பெரு நகரங்களின் காலை நேர  பூங்காக்களில் வேக வேகமாக தொப்பை குலுங்க நடக்கும் மனிதன் எதை தேடுகிறான்,
தொலைத்த இயற்கையைத்தான்...
இன்றைய யுகத்தின் அதி முக்கிய பிரச்சனையே இதுதான்.
நவீன மனிதன் துவக்கத்தில் இயற்கையை தன் எதிரியாக நினைத்தான் . இயற்கையான காற்று, இயற்கையான நீர், இயற்கையான உணவு, எல்லாவற்றையும் வெறுத்து செயற்கை எனும் மாய வலையை அவனே பின்னிக்கொண்டான்.
இல்லாத நோய்கள் அனைத்தும் அவனை சூழ்ந்துகொள்ள  இப்போது அந்த செயற்கை கூண்டிலிருந்து  இயற்கையை தேடி வெளியேற முயற்சிக்கிறான். இதுதான் இன்றைய  மனிதனின் அதி முக்கியமான பிரச்சனை.
இந்த பிரச்சனையை 1975லேயே உலகுக்கு தன் அற்புதமான திரைப்படம் மூலம் உணர்த்தியவர் அகிராகுரசேவா.
டெர்ஜு உஜாலா இதுதான் அவர் இயக்கிய அந்த அதிமுக்கியமான திரைப்படம்.
ரோஷமான், செவன் சாமுராய், போன்ற படங்களின் மூலம் உலகின் தலைசிறந்த இயக்குனர் என  பெருமதி பெற்றவர் .ஜப்பானை சேர்ந்த அகிராகுரசேவா. கிழக்கு, மேற்கு, இரு தத்துவங்களும்  இணைந்து ஏற்று கொண்ட பிதாமகன் .  
1943 ல் துவங்கி 1999 வரை 57 வருடங்கள் கொண்ட அவருடைய  இடைவிடாத கலைப்பயணத்தில்  பல உச்சங்களை அவரால் அடைய  முடிந்தது.
அப்படிப்பட்டவருக்கும் ஒரு முறை தடுமாற்றம்

1970ல் அவர் உருவாக்கிய டோடெச் கா டென் (DODES KA DEN )  எனும் திரைப்படம்  வணிக ரீதியாக படு தோல்வியுற்றது. இந்த தோல்வி அவரை பாதிக்க 30 முறை தன் ரேசரால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். ஜப்பானிய மரபில் தற்கொலை என்பது ஹரகிரி என்ற பெயரால் அங்கீகரிக்கப்பட்ட விஷயம்  பிற்பாடு குணமாகி மீண்டு வந்தவர். மீண்டும் கலையோடான தன் சமரை துவக்க முடிவு செய்தார்.  இம்முறை அவர் இயக்க தேர்ந்தெடுத்த படம் தான் டெர்ஜு உஜாலா .  ஒரு ரஷ்ய நிறுவனம் தானாக முன் வந்தது. ருஷ்யாவில் புகழ்பெற்ற ஒரு ராணுவ வீரனின் அனுபவத்தை மையமாக கொண்ட நாவலை படமாக்க முடிவு செய்து குரசேவாவை உதவியாளர்கள் மூலமாக அணுகியதன் காரணமாக   இப்படத்தை இயக்க ஒத்துக்கொண்டார்.
என்னதான் குரசேவா உலக சினிமா இயக்குனராக இருந்தாலும் அவர் தன் சொந்த மண்ணான ஜப்பானின் நிலப்படைப்பை விட்டு வெளியே சென்றதேயில்லை . துவக்கத்தில் யோசித்த குரசேவா பிற்பாடு இப்படைப்பை இயக்க ஒத்துக்கொண்டு களமிறங்கினார்.
டெர்ஜு உஜாலா
கதை:
 கேப்டன் அரசீனிவ் எனும் ராணுவ உயர் அதிகாரிக்கும் காட்டில் வசிக்கும் ஒரு நாடோடிக்குமான உறவுதான் கதை.
 மூன்று வருடங்களுக்கு முன் இறந்த நண்பனின் உடல் எரிக்கப்பட்ட இடத்தை, சைபீரிய காட்டில் கேப்டன் ஆர்சினிவ் தேடுவதிலிருந்து துவங்கும் கதை.... அப்படியே ப்ளாஷ் பேக்கில் முதன் முறையாக அந்த நண்பனை சந்தித்த காலக்கட்டத்தினுள் விரிகிறது.
நகரநிர்மாணத்திற்காக காட்டை அழிக்கும் முனைப்பிலிருக்கும் அரசாங்கம், அதற்காக ராணுவ  அதிகாரியான ஆர்சினிவ்வுடன் ஒரு படையை காட்டுக்குள் அனுப்புகிறது . மர்மங்களும் புதிர்களும் நிறைந்த காட்டில் ராணுவ வீரர்கள் திக்கு தெரியாமல் சிக்கிக்கொண்டு பரிதவிக்கின்றனர் . அச்சமயம் அந்த வழியாக வருபவன்  காட்டுவாசியான டெர்ஜு உஜாலா ..வழி தவறி குழம்பிக்கிடந்த படையினருக்கு டெர்ஜு ஒரு வழிகாட்டியாக உதவிசெய்கிறான். அவனுடைய அழுக்கான தோற்றம்,கொச்சையான பேச்சு எதுவும் அந்த குழுவினருக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் அவர்களுக்கு வேறு வழியில்லை. துவக்கத்தில் கேப்டன் ஆர்சனிவுக்கும் டெர்சுவின் தோற்றமும் பேச்சும் அப்படியாகத்தானிருந்தது. ஆனால் காடு அவனுக்கு அத்துபடியாக இருந்தது, காட்டின் ஒவ்வொரு அசைவிலும் ஆயிரம் அர்த்தங்களை அவன் கண்டுபிடித்து  வைத்திருந்தான்.  பறவைகளின் ஒலிக்குறிப்புகள் மிருகங்களின் காலடித்தடங்கள் இவற்றிற்க்கெல்லாம்  வினோத சங்கேதங்களை அவன் அறிந்து வைத்திருந்தான்.  அவனது உள்ளுணர்வின் அதிசயத்தன்மை கண்டு படை வீரர்கள் பிரமிக்கின்றனர். வழியில் பாழ்பட்ட ஒரு குடிசையை சரிசெய்து அதில் உணவுக்கு தேவையான பொருட்களையும் வைத்துவிட்டு செல்கிறான், காரணம் தங்களுக்கு பின்னால் காட்டில் வரும் வழிபோக்கர்கள் இளைப்பாறுவதற்கும் பசியாற்றவும் அது உதவும் என அவன் கூறுமளவிற்கு அவனுடைய நுண்ணுணர்வும் மனித நேயமும் இருப்பதைக்கண்டு வீரர்கள் பிரமிக்கின்றனர்.
ஒருமுறை கேப்டன் ஆர்சினிவ்,டெர்ஜு உஜாலா இருவரும் ஆபத்தான பெரும் பனிப்புயலில் சிக்கிக்கொள்ள டெர்ஜு சடுதில் கையில் கிடைத்த கோரைகளை வைத்து  சிறு அரண் உருவாக்கி போராடுகிறான். புயலின் கடுமை உக்கிரமாக  ஒரு கட்டத்தில், கேப்டன்  உறைகுளிரில்  சாவை நெருங்கிச்செல்ல டெர்ஜு போராடி அவரை காப்பற்றி விடுகிறான். மறுநாள் அவர்களை தேடும் வீரர்கள் மயங்கிய நிலையில் இருக்கும் இருவரையும் காப்பாற்றி உயிர்ப்பிழைக்க வைக்கின்றனர். அதன்பிறகு ஒரு நானி பழங்குடி வீட்டில் தங்கி தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள,இப்போது டெர்ஜு கேப்டனிடம்  அடுத்து எந்த திசையில் நாம் பயணிக்கபோகிறோம், என கேட்க  மவுனமாக இருக்கும் கேப்டன் குரலில் உயிர் பயம் தொனிக்க, நகரத்திற்கு திரும்புகிறோம் என கூறுகிறான்.
தன் உயிரைக்காப்பாற்றிய  டெர்ஜுவையும்  கேப்டன் தங்களுடன் வருமாறு நகரத்திற்கு அழைக்க, டெர்ஜு மறுக்கிறான். தன்னுடைய வழக்காமன பயணத்தை காட்டில் தொடரப்போவதாக கூறி மறுநாள் ரயில்வே ட்ராக்கினூடே தனியாக காட்டுக்குள் மறைகிறான்.
இது நிகழ்ந்து ஐந்து வருடங்களுக்கு பிறகு கேப்டன் ஆர்சினிவுக்கு அரசாங்கம் மீண்டும் காட்டில், வேறு ஒரு திட்ட கள ஆய்வுக்காக படையினருடன் அனுப்பி வைக்கிறது. இது வேறு காட்டுபகுதியானாலும் கேப்டனுக்கு டெர்ஜுவின் ஞாபகம் வராமலில்லை . அந்த மனிதம் நிறைந்த நாடோடி காட்டுவாசி தன் கண்ணில் தென்பட மாட்டானா என ஏக்கம்கொள்கிறார். ஒரு வீரன் தான் அப்படிப்பட்ட ஒருவனை பார்த்ததாக கூற  கேப்டனுக்கு நம்பிக்கையில்லை . அவன் பார்த்ததாக சொன்ன இடத்துக்கு விரைந்து தேடலை துவக்குகிறார்.சட்டென அவர் கண்ணில் டெர்ஜு . உணர்ச்சி வசப்பட்டவராய் அவனை அழைக்க அவனும் திரும்ப இருவரும் அன்பு மிகுதியால் கட்டிபிடித்து உணர்ச்சிவயப்படுகின்றனர்.
கேப்டனின் வேண்டுகோளுக்கிணங்க இம்முறையும் மீண்டும் டெர்ஜூ அவர்களை காட்டில் வழி நடத்தும் பணியை ஏற்கிறான். ஒரு ஆற்றை கடக்க வேண்டிய சூழல் நிர்பந்திக்க மற்றவர்களை குதிரையில் அனுப்பிவிட்டு  சிறிதளவு வீரர்களை,  சிறிய தெப்பத்தில் ஏற்றிக்கொண்டு டெர்ஜுவும் கேப்டனும் பயணிக்கின்றனர் .
திடுமென ஆற்றில் வெள்ளம் கரைபுரள  ஒரு பாறையில் மோதி தெப்பம் உடைய சடுதியில் பெரும் அருவி வேறு சமீபிக்க ஒருவர் மட்டுமே பிழைக்க முடிந்த நெருக்கடியில், மீண்டும் கேப்டனை காப்பற்றி ஆபத்தான சூழலில் தானும் பிழைத்துக்கொள்கிறார். தொடர்ந்த பயணத்தில் டெர்ஜுவின் வயதான தன்மைகாரணமாக கண்பார்வை மங்கிவிட்டதை உணர்ந்த கேப்டன் இம்முறை பயணம் முடிந்ததும் வலுக்கட்டாயமாக தன்னோடு நகரத்துக்கு அழைத்துச்செல்கிறார்.
டெர்ஜுவுக்கு அதில் இஷ்டமில்லை என்றாலும் கேப்டன் தன் மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பு அவரை நெகிழ்த்துகிறது.
காட்டுச்செடியாக அழுக்கு உடையுடன் திரிந்த டெர்ஜுவால் கான்க்ரீட் நகரத்துக்குள் வாழமுடியவில்லை . நகரத்தில் அவருடைய தோற்றம் வேடிக்கை பொருளாக, வாழ தகுதியற்றதாக கருதப்படுகிறது. கேப்டனின் வீடு அவருக்கு சிறையாக மாறுகிறது. காட்டில் தன்னிச்சையாக வளரும் மரத்தை போன்சாயாக வீட்டில் சுருக்கிவைத்திருக்கும் மனித மனம் அவருக்கு பதட்டத்தை உருவாக்கி விடுகிறது.  என்னதான் கேப்டன் தன்னோடு அன்பாக பழகினாலும் அவர் வீட்டாரால் டெர்ஜுவை முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை.
ஒரு நாள் வீடு திரும்பும் கேப்டன் தன் அன்புக்குரிய காட்டுவாசி டெர்ஜூவை காணாமல் தேடுகிறார் . நகரத்து மனிதர்களின் செயற்கையான வாழ்க்கை பிடிக்காமல், டெர்ஜு காட்டுக்கே திரும்பிவிட்டதை அறிகிறார்.
சில காலம் கழித்து காட்டில் கண்டெடுக்கப்பட்ட பனி சடலம்  பற்றிய தகவல் கேப்டனுக்கு  வருகிறது. சடலத்தில் கேப்டனின் அழைப்பு அட்டை அதில் இருந்ததாக கூறப்படுகிறது . கேப்டன் அங்கு வந்து பார்த்தபின்தான்  அது கொலை என அறிகிறார். டெர்ஜுவை யாரோ தான் பரிசாக அவருக்கு வழங்கிய துப்பாக்கிக்காக, கொலைசெய்திருக்கக்கூடும் என  தெரிகிறபோது அவரை கொன்றது தான் மட்டுமல்ல, செயற்கையான நகரமும்தான்  என்பதாக உணர்கிறார்.
1971ல் தயாரிப்பு வேலைகள் துவக்கப்பட்டு 1975ல் ஐந்து வருட தயாரிப்புக்கு பின்னரே வெளியானது. குரசேவாவின் தயாரிப்பில் அதிக நாளை எடுத்துக்கொண்ட படம் இது . படப்பிடிப்பில் ஒரு கட்டத்தில் பனிக்காலம் காரணமாக தொடரமுடியாமல்  போய் மீண்டும் வந்த போது புற்கள் அவ்வளவாய் வளராமல் இருக்க, மீண்டும் ஆளுயரத்திற்கு கோரை புற்கள் வளர்வதற்க்காக ஒருவருடம் அவர் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தார். பலரும் அதைபோல புற்கள் நன்கு வளர்ந்த  வேறு இடத்தில் அல்லது செட் போட்டு படப்பிடிப்பை நடத்தலாம் எனக்கூற குரசேவா மறுத்துவிட்டார். ஒரு வருடத்திற்குப் பின் மீண்டும் அதே போல புற்கள் வளர்ந்த பின்தான் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது.
1975ல் வெளியான இத்திரைப்படம் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான ஆஸ்காரை வென்றது.
தோல்வியிலிருந்து எப்படி மீள்வது என்பதற்கு அகிராவின் இந்த படம் ஒவ்வொரு இயக்குனருக்கும் பாடம்  .
கலையின் மீதும் மனிதத்தின் மீதும் தீராத காதல் கொண்டவர்களை  காலம் மேலும் மேலுமான உயரத்திற்கு அழைத்து செல்லும் என்பதற்கு, அகிராவின் வாழ்க்கையும் டெர்ஜு உஜாலாவும் சிறந்த பாடம்.
ஆனால் அவருக்கோ மகத்தான படைப்பு, மனம் அடங்கா நெருப்பாய் தகித்துக்கொண்டிருக்கும் நிலை.
                                                                          - நன்றி : பல் சுவை காவியம்  நவம்பர்  22016

October 11, 2016

காலத்தை வென்ற சிறைப்பறவை - துருக்கி சினிமாவின் நாயகன் இல்மாஸ் குணே (1937-1984)


 இல்மாஸ் குணே (1937-1984)
சினிமாவை உண்மையாக நேசிக்கும் கலைஞன் மகிழ்ச்சியடைவது .. நெஞ்சி புடைத்து கன்னத்தில் சுடு நீர் உருள விம்மி பெரு மூச்சு விடுவது  எப்போது  தெரியுமா?

அவன் படைப்பு விருது பெறும் அறிவிப்பை கேட்கும் போதுதான் அதுவும் உலகின் தலை சிறந்த விருதான கான் விருது கிடைகிறதென்றால் அவன் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை

அந்த அறிவிப்பு ஒரு இயக்குனரின் காதுகளை அடையும் போது ஒருவேளை அப்போது அவர் தன்  குழந்தையுடன் வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருக்கலாம் அல்லது மனைவியியுடன் அமர்ந்து ஒரு மொக்கையான தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்து ரசித்துக்கொண்டி ருக்கலாம் .அல்லது படப்பிடிப்பில் சரியாக நடிக்கத்தெரியாத நடிகனோடு மல்லுக்கட்டலாம் அல்லது ஒரு அழகான நடிகையுடன் விடுதியில் அமர்ந்து பாலஸ்தீன இஸ்ரேல் ப்ரசனை பற்றி பேசிக்கொண்டிருக்கலாம் .

ஆனால் விருது அறிவிப்பு வரும் போது சிறையில் இருந்தால்........?.

 நாமாக இருந்தால் என்ன செய்வோம் அதை அங்கிருக்கும் சிலரோடு மகிழ்ச்சியாகவோ வேதனையாகவோ பகிர்ந்துகொண்டு எப்படி அந்த பரிசை யார் வாங்க அனுப்பலாம் என யோசிப்போம் .ஆனால் சிறைக்கதவை உடைத்துக்கோண்டு தப்பித்து வெளியேறி  தனது நாட்டிலிருந்து தப்பித்து பிரான்சுக்கு சென்று அந்த கான் விருதை பெறுகிறார் என்றால் அது எப்பேர்பட்ட சாகஸம்


.அப்படி ஒரு அசாத்தியாமன காரியத்தை செய்தவர்தான் இல்மாஸ்  குணே. உலகின் தலைசிறந்த இயக்குனர்களூள் ஒருவராக போற்றப்படுபவர்  
.. சிறைக்குள் இருக்கும் இளம் குற்றவளீகளை பற்றிய yol  திரைப்படத்தை இயக்கியதன் மூலம் உலக சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்துக்கொண்டவர் .

துருக்கியின் குர்த் இனத்தை சார்ந்த சாதாரண பஞ்சு மில தொழிலாளிகளின் மகனாக பிறந்தவர் இல்மாஸ்  குணே.

 அவரது வறுமை சூழந்த வாழ்க்கை பின்னாளில் அவருக்கு உறுதியான படைப்பு கட்டுமானத்தை உருவாக்கி தந்து சிற்ந்த கலைஞ்னாக பரிணமிக்க வகை செய்த்து. சட்டமும் பொருளாதாரமும் படித்து பட்டம் பெற்றபின் யில்மாஸை சினிமா கவர்ந்திழுத்து கொண்டது. 

அக்காலத்தில் துருக்கி சினிமா பல இளம் துருக்கியர்களை உருவாக்கீகொண்டிருந்தது. அதுவரை அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட  நாடகீயமான குடும்பக்கதைகளை மட்டுமே பார்த்து வந்த துருக்கி சமூகம் முதல் முறையாக சினிமா எனும் கலையின் முழுமையான அனுபவத்துக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டது . குறிப்பிடத்தக்க நல்ல இயக்குனர்கள் கவனம் பெற துவங்கிய காலம் அது.. அதில் ஒருவர் ஆதிப் இல்மாஸ்  ,

பல துருக்கிய இளைஞர்களை போல அக்காலத்தில் சினிமாவால் ஈர்க்கப்ட்ட இல்மாஸ்  இயக்குனர் ஆதிஃப் யில்மாசுடன் உதவி இயக்குனராக சேர்ந்துகொண்டார்.  பயிற்ச்சிகாலத்தில்   திரைக்கதையில் அவர்காட்டிய செழுமையான பங்களிப்பு அவரை நடிகராக முன்னே கொண்டு வந்த்து . ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட 20 படங்களில் நடித்து துருக்கியின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார்.

வெறுமனே நடிகராக இருப்பதை மட்டும் விரும்பாத இல்மாஸின் படைப்புலகம் அவரை இலக்கியத்தின் பாலும்  உந்தித்தள்ளியது. மார்க்சியம் வசீகரித்தது.அமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான அவரது முதல் நாவல் கம்யூனிஸ்ட் 1961 ல்வெளியானது. வெளியான அதே வேகத்தில் போலீஸ் அவரது வீட்டுக்கு வந்து சிறையிலடைத்தது. கிட்டதட்ட 18 மாதங்கள் சிறைவாசம். இனி இல்மாஸ்  அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டு ஒழுங்காக இருப்பார் இதுவே முதலும் கடைசியுமான சிறை வாசம் என அரசும் மற்றவர்களும் நினைத்த்னர். ஆனால் சிறை அவருக்கு  அதிக்ராத்தின் மீதான் கோபத்தையும் சுதந்திரத்தின் மீதான தாகத்தையும் அதிகப்படுத்தியிருந்த்து என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

 நடிப்போடு நிற்காமல் தன் கருத்துக்களையும் கற்பனைகளையும் திரைப்படத்தின் மூலம்  வெளிப்படுத்தவேண்டும் என முடிவு செய்தார். இயக்குனராக மாறினார் .1966ல் அவரது  முதல் திரைப்ப்டம் At aurat sila வெளியானது .


1968ல் சொந்தமாக திரைப்படகம்பெனி ஒன்றையும் துவக்கிய இல்மாஸ்  அத்ற்கு guney filmclick  என பெயர் வைத்துக்கொண்டார். அக்கம்பெனிமூலம் அடுத்தடுத்து  umut( jhope)1970,agit(elegy)1972, aci(pain)1971, the hopeless1971 எனும் திரைப்ப்டங்களை தயாரித்தார். இப்படங்கள் அனைத்தும் அதன் தலைப்புகள் நமக்கு உனர்த்துவதைபோல துருக்கி மக்களின் உள்ளத்தை பிரதிபலித்தன
இளைஞர்கள் பலர் இல்மாஸின் திரைப்படங்களுக்கு தீவிர ரசிகர்களாகியினர். 

அரசாங்கத்துக்கு எதிரான கொந்தளிப்புகள் அதிகமாவதை தொடர்ந்து . ..இல்மாஸ்  மீண்டும் 1972ல் சிறைக்குள் தள்ளப்பட்டார். ஆனால் அதுவரை அடுத்தடுத்த தன் திரைப்படங்களுக்கு கதை எழுத ஓய்வுகிடைக்கமல் அல்லாடிக்கொண்டிருந்த இல்மாஸ் குணேவுக்கு அந்த சிறைநாட்கள் பெரும் உதவியாக இருந்தன. . 

 துருக்கி அரசு சிறைக்கு கொண்டுசென்றபோது the miserable  எனும் திரைப்படத்துக்கான தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். பாதியில் நின்ற அத்திரைப்படத்தை அவரது உதவியாளர் செரீஃப் கோரன் என்பவர் தொடர்ந்து இயக்கி படத்தை முடித்து வெளியிட்டார்.

தொடர்ந்து செரீப் அவர் சிறையில் எழுதிய அனைத்து திரைக்கதைகளையும் ஏறக்குறைய 12 ஆண்டுகள் இயக்கி வெளியிட்டு தன் ஆசானுக்கு பெருமை சேர்த்தார்.


1974ல் மனித உரிமைகளுக்கான் அமைப்பான அம்னெஸ்டி இண்டர் நேஷனல் இவ்விவகாரத்தில் தலையிட்ட காரணத்தால் இல்மாஸ் குணே விடுத்லை செய்யப்பட்டார். ஆனால் அந்த வருடமே குணே மீண்டும் கைது செய்யப்பட்டார். ஒரு நீதிபதியை இரவு நேர மதுவிடுதியில் சுட்டுகொன்றதாக அவர்மேல் சுமத்தபட்ட வழக்கில் கிட்டத்தட்ட 19 வருட சிறைத்தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது.

இக்காலத்தில் அவர் திட்டமிட்டிருந்த் the herd 1978,the enemy 1979 இரண்டு திரைக்கதைகளையும் அவரது இன்னொரு உதவியாளரான zeki okten இயக்கி வெளியிட்டார் . இதில் தி எனிமி திரைப்படம் 1980ம் ஆண்டு நடைபெற்ற பெர்லின் திரைப்ப்ட விழாவில் சிறப்பு பரிசை பெற்றது .

1980ல் குணே சிறையிலிருக்கும்போது மீண்டும் அவரது திரைக்கதை ஒன்றை அவரது உதவியாளர் செரீஃப் கோரன் களத்தில் நின்று இயக்கியிருந்தார் yol  (the road) எனும் அப்படம் தான் 1982பிரான்சில் நடைபெற்ற கான் திரைப்ப்ட விழாவில் பங்கேற்றது .

Yol படத்தின் திரைக்கதை துருக்கி சிறயிலிருந்து வெளியேறும் மூன்று குர்திஷ் இனத்தவரை பற்றியது . மூன்றும் வெவ்வேறு கதைகள்
முதல் கதை  நாயகன் செயீத் அலி ஊருக்கு திரும்புகிறபோது அவன் மனைவி செரீப் செஷர் காமத்தொழில் செய்பவளாக அவனது குடும்பத்தாரல் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு அவனிடம் ஒப்படைக்கபடுகிறாள் .

ஊரும் குடும்பத்தாரும் சேர்ந்து அவளுக்கு தண்டனையாக அவள் கண்வன் கையாலே அவளைக்கொலை செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கின்றனர்
இருவரும் பனிப்பாலைவனத்தில் செல்கிறபோது அவன் மனைவி விபத்தில் சிக்கிக்கொள்ள அவன் அவளை காப்பாற்ற போராடுகிறான். இறுதியில் மனைவி இறந்து போகிறாள்.. இது ஒருவகையில் குடும்பத்தாரின் நிர்பந்தத்திலிருக்கும் மனைவியை  அவன் கையால் கொன்ற பாவம் கண்வனை  அண்டாமல் தன் மனைவி தன்னை காப்பற்றிவிட்டதாக அவன் மகிழ்ந்தாலும்  இறுதியில் அவனது மனசாட்சி மீண்டும் அவனை சிறைக்கு செல்லும்படி இம்சிப்பதுன் கதை முடிகிறது

இரண்டாவது கதையின் நாயகன் மெஹ்மத் சாலிஹ்   மைத்துனரோடு சேர்ந்து  போலீசை சுட்டுகொன்ற வழக்கில் தேட்ப்படும் குற்றவாளீயாகிறான்.
அவனது குடுபத்தார் இச்செயலால் அவனை வெறுக்கின்றனர் . ஒருபக்கம் போலீஸ் இன்னொருபக்கம்  மனைவியின் குடுபத்தார் இவர்களுகிடையில் தடுமாறும் நாயகன் மெஹ்மத் தன் மனைவியிடம் உண்மைகளை சொல்லி இருவரும் இந்த ஊரைவிட்டு ஓடிபோய் வெளியூரில் பிழைக்க திட்டமிடுகின்றனர். ரயிலில் தப்பிக்கும் இருவரும் நீண்ட நாட்களாக அழுத்தி வைத்திருந்த காமத்தை தீர்த்துக்கொள்ள  கழிவறையில் ஒன்றினைகின்றனர்.

  நீண்ட நேரமாகியும் வெளிவராத காரணத்தால் சக பயணிகள் கோபத்தில் கொந்தளிக்க சில ரயில் அதிகாரிகள் வந்து அவர்களை காப்பாற்றி  அடுத்து வரும் ஸ்டேஷனில் இருவரையும் ஒப்படைக்கும் பொருட்டு தனியாக அமரவைக்க படுகின்றனர்.ஆனால் அவனது மனைவியின் குடும்பத்திலிருந்து அவர்களை விரட்டி வரும் இளைஞன் ஒருவன் தன் கையில் மறைத்து வைத்த துப்பாக்கியால் இருவரையும் சுட்டு கொலை செய்வதுடன் மெஹ்மத்தின் கதை முடிகிறது .

மூன்றாவது தன் கிராமத்துக்கு திரும்பும் ஓமரின் கதை .ஓமரின் கிராமம் எல்லைப்பகுதியில் இருப்பதால் ராணுவத்துக்கு தெரியாமல் சில கைதிகள் தப்பிச்செல்ல உதவுகிறான் . ஓமரின் அண்ன் கடத்தல் தொழில் செய்து வந்தவன் . வேறு வழியில்லாமல் அதே தொழிலையே செய்ய நேரும் ஓமர் தனது அண்ணனின் மனைவி மற்றும் குடும்பத்தையும் பரம்பரை வழக்கப்படி தனதாக்கிக்கொள்கிறான்

கான் திரைப்பட விழாவில் இத்திரைப்படத்துக்கான் விருதை முன்கூட்டி அறிவிக்கப்பட விழாவில் விருதை பெற வேண்டி சிறையிலிருந்த சில அதிகாரிகளின் துணையோடு தப்பித்து பிரான்சுக்கு வந்து விழாவில் பங்கேற்று விருதை பெற்றுக்கொண்டார் இல்மாஸ்  
.
அழுக்கு அரசன் என விமர்சகரகளால் செல்லமாக கருதப்பட்ட ல்மாசின் வாழ்க்கை ஆச்சரயப்படும் வகையில் உலக சினிமாவின் இன்னொரு ஆளுமையான் இத்தாலியின் பியரோ பசோலினியோடு பல வகைகளில் ஒத்திருப்பது ஒரு ஆச்சர்யமான் பொருத்தப்பாடு
இருவருமே அதிகாரத்தை படைப்புகளின் மூலம் கடுமையாக எதிர்த்தவர்கள்
சிறைத்தண்டனைகளுக்கு அஞ்சாதவர்கள் . பலமுறை ஆட்சியாளர்களின் கைதுக்கு ஆளாக்கப்பட்டவர்கள். கம்யூனிஸ்டுகள் 

இருவருமே படைப்பாளர்கள் மற்றும் இலக்கியவாதிகள்.  திரைப்படங்களுக்கு முன்பாகவே நாவல்கள் எழுதியவர்கள் . கவிஞர்கள். கலகக்காரர்கள்
சிறையிலிருந்து தப்பித்த காரணத்தால் துருக்கி அரசாங்கம் அவருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை  அறிவித்தது  அதனால் அதன்பிறகு  பிரான்சில் தஞ்சமடைந்த இல்மாஸ் குணே  அடுத்த ஆண்டே பிரெஞ்சு அரசாங்கத்துக்காக the wall (1983) எனும் படத்தை இயக்கியிருந்தார்

. சிறையிலிருந்து தப்பிக்கும் பிஞ்சு குற்றவாளிகளை பற்றிய திரைக்கதை இது.
,இத்திரைப்படம் வெளியாகிய அடுத்தவருடமே புற்று நோய் காரணமாக பாரீசில் 1984ம் ஆண்டு தன்  வாழ்க்கை திரைக்கதைக்கு இறுதிகாட்சியை அவராக  எழுதிக்கொண்டார்.

நன்றி : பல்சுவை காவியம் இதழ் 



ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...