Showing posts with label இலக்கிய கட்டுரைகள். Show all posts
Showing posts with label இலக்கிய கட்டுரைகள். Show all posts

September 11, 2024

பொறுப்புணர்வுமிக்க அருமையான விழிப்புணர்வு கவிதைகள்

நீதியரசர் பாரி அவர்கள் எழுதிய சட்டமும் கவி பாடும் முன்னுரை -அஜயன்பாலா பாஸ்கரன் உலகமே இன்று மாறிவிட்டது . ஆதி காலத்தில் மனிதன் பெண்களுக்காகவும் உணவுக்காவும் வெட்டி மடிந்தான் . பிறகு பொன்னுக்காக வில் வேல் ஆயுதங்கள் கொண்டு மோதினான் . பிறகு மண்ணுக்காக கப்பல் படை விமானப்படை என உருவாக்கி சண்டை போட்டவன் எரிபொருளுக்காக ஏவுகணைகள் கொண்டு தாக்கிக்கொண்டான். இதோ இன்று அதுவும் மாறிவிட்டது . ஸ்கட் இல்லை உயிரியல் ஆயுதங்கள் இல்லை ஆனாலும் போர் நடக்கிறது. அதை செய்வது நாடுகள் அல்ல . பெரு நிறுவனங்கள் . இன்று உலக அரசியலைத் தீர்மானிக்கும் வல்லாதிக்கம் கொண்டவர்கள் அமெரிக்காவோ சீனாவோ ரஷ்யாவோ அல்ல . அவர்களையும் அடக்கி ஆளும் மகாசகதி கொண்ட கண்ணுக்கு தெரியாத இந்த பெரு முதள்ளிகள் தான். எதற்குத் தெரியுமா டேட்டா வுக்காக ஆமாம் இன்று வணிகம் தான் மிகப்பெரிய போர். யாரிடம் அதிக டேட்டா ( தனி நபர் தகவல்) இருக்கிறதோ அவர்கள் தான் ராஜா . இந்த டேட்டா யாரும் அல்ல நாம் தான் .நம் தொலைபேசி நம் இணையதள முகவரிகள் தான். இவர்களின் போட்டியில் ஒவ்வொரு நொடியும் நாம் சுரண்டப்படுகிறோம் . இதில் என்ன கூத்து என்றால் நாம் சுரண்டப்படுகிறோம் என்று தெரியாமலே ஒவ்வொருநாளும் நம் வியர்வையும் உழைப்பும் அவர்களால் சுரண்டப்படுகிறது உலகின் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு ஏசி அறையில் அமர்ந்திருக்கும் அவர்களின் பாக்கட்டுக்கு செல்கிறது . உதாரணத்துக்கு ஒரு தியேட்டருக்கு படம் பார்க்கச் செல்கிறோம் என வைத்துக் கொள்ளுங்கள் அதில் வாகன நிறுத்தம் முதற்கொண்டு அனுமதி சீட்டு தொடங்கி பாப்கார்ன் கொக்கோகோலா வரை அனைத்திலும் நாம் சுரண்டலுக்கு ஆட்படுகிறோம் .. எதுக்கு சார் பார்க்கிங் காசு இவ்ளோ வாங்கறீங்க ? என ஆரம்பத்தில் கோவப்படும் நாம் கூட இப்போது அதற்கு பழகிக்கொண்டு அவர்களின அடிமையாகி அவர்களின் சூப்பர் பணக்கார போட்டிக்கு உதவி செய்கிறோம். யோசித்துப் பார்த்தால் எல்லா விஷயத்திலும் இந்த சுரண்டல்கள் நடக்கிறது. .ஏதவாது பிரச்னை என்றால் நேரிடையாக தொடர்புகோள்ள முடியாது. மீறினால் டோல் ப்ரீ எண்னுக்கு டயல் செய்ய வேண்டும் ஆங்கிலத்தில் பேச எண் ஒன்றை அழுத்தவும் தமிழுக்கு மூன்றை அழுத்தவும் என குழப்பி ச்சீ போங்கடா என வெறுத்துப்போய் நாமும் எதிர்ப்புக்குரல் எழுப்ப வழி தெரியாமல் சோர்ந்து போகிறோம் இப்படியான அயோக்கித்த்னங்களூக்கு நாம் அடிமையாகிவிட்ட சூழலில் நம்மை நோக்கி நீளும் ஒரே கை நுகர்வோர் பாதுகாப்பு நீதிமன்றங்கள்.. நமக்கான உரிமைகளை மீட்டுத்தரும் இந்த நீதி மன்றத்தில் நீதிபதியாக இருப்பவர்கள் பணியானது இருளில் தடுமாறும் ஒருவனுக்கு விடியலின் வெளிச்சம் போன்றது. அத்தகைய நீதிபதியான பெருமதிப்புக்குரிய திரு. பாரி அவர்கள் இப்படி கவிதை வடிவில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் செயலை பாராட்ட வார்த்தைகளில்லை வெறும் அறிவுரைகள் போல் இல்லாமல் வாசிப்பவர்கள் மனதில் ஆழ பதியும்படியும் அதேசமயம் கவிதைக்குண்டன சொல் நயம் ஒலி நயம் ஆகியவற்றுடன் நறுக் நறுக்கென படைத்திருப்பதுதான் இந்த நூலின் சிறப்பு உதாரணத்துக்கு உயிலே உன்னை எழுதியவர் இறந்தால் தான் உனக்கு உயிர் எனும் போதும் . அது போல தான் எழுதிய உயிலை அவன் இறப்பதற்கு முன் தான் சாகடிக்க முடியும் என உயில் பற்றி எழுதும் போதெல்லாம் அவரது அங்கதச்சுவையும் அழகுத்தமிழோடு சேர்ந்து கொள்கிறது. இது போல நமக்கு அன்றாட வாழ்வில் பயன் தரக்கூடிய நெருப்புக்குச்சிகளாக இந் நூல் முழுக்க பல கவிதைக்ள் இருப்பது சிறப்பு முல்லைக்கு தேர் கொடுத்தான் அன்று ஒரு பாரி .. தன் கவிதையால் நுகர்வோருக்கு வெளிச்சம் தருகிறார் இன்றும் ஒரு பாரி என பாரட்டும் அளவுக்கு இந்தக் கவிதைகள் உள்ளன உங்கள் பணி போற்றத்தக்கது. ஊருக்கு உழைத்திடல் யோகம் என்றான் பாரதி அந்த யோகம் செய்யும் திரு.பாரி அவர்களின் இந்த சிறு நூல் எல்லா சிறப்புகளையும் எய்த வாழ்த்துகிறேன் -அஜயன் பாலா பாஸ்கரன் சென்னை- 93

April 19, 2023

.மா.அரங்கநாதன் படைப்புகள் : விமரசனம் -அஜயன்பாலா

மொத்தம் 90 சிறுகதைகள் இரண்டு நாவல்கள் 47 கட்டுரைகள் என ம. அரங்கநாதன் அவர்களின் படைப்புலகம் முழுவதும் ஒரே புத்தகமாய் வாசித்து முடிக்கையில் அது இருண்ட மலைக்குகையின் ரயில் பயணம் போல மிகவும் புதிர்த்தன்மையும் வினோத அனுபவத்தையும் தரக்கூடியதாக இருக்கிறது. நாவல்கள், கட்டுரைகள் ஆகியவற்றைக் காட்டிலும் சிறுகதைகளில் அவர் சற்று பலம் கூடியவராகவும் கலையம்சம் கூடிவரப்பெற்றவராகவும் காணப்படுகிறார். ஒருவேளை சிறுகதைகள் மட்டுமே மொத்தமாக தனித்தொகுப்பாக கொண்டுவந்திருக்கலாமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.என்றபோதும் ஒட்டுமொத்தமாக ஒரு எழுத்தாளனின் தார தம்மியம் எத்தகையது என மதிப்பிட பிற்பாடு ஆய்வாளர்களுக்கு வசதியான வகையில் இப்படி ஒரு தொகுப்பு நூலை கொண்டு வந்த நற்றிணை பதிப்பகத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. புத்தகத்தை முழுவதுமாக வாசித்து முடிக்கும்போது என்னையே நான் உற்றுப் பார்ப்பதை போல உணர்கிறேன். என் மனக்கிணற்றில் யாரோ எட்டிப் பார்ப்பது போல, காரணம் சில சமயங்களில் அவரை என் தந்தையாக உணர்ந்திருக்கிறேன். சென்னைக்கு வந்த புதிதில் கிட்டதட்ட மூன்று நான்கு ஆண்டுகள் தினசரி ம.அரங்கநாதனை சந்தித்து உரையாடியிருக்கிறேன். அந்த ஞாபகங்களை பகிராமல் புத்தகம் குறித்து மட்டுமே விமர்சனம் எழுத என்னால் முடியவில்லை. இத்தனைக்கும் இதற்கு முன்பே அவர் இறந்தவுடன் அவருக்காக நான் எழுதிய அஞ்சலிக் கட்டுரையில் எனக்கும் அவருக்குமான உறவு குறித்து எழுதியிருந்தாலும் இந்த கட்டுரையிலும் அந்த உணர்வு என்னை மீறி எழுத வைக்கிறது. . மாம்பலம் ரயில் நிலையம் அருகில் சாந்தி காம்ப்ளக்ஸ். இப்போது அது ஜெயச்சந்திரன் துணிக்கடையாக மாறியிருக்கிறது என நினைக்கிறேன். அதன் மூன்றாவது மாடியில்தான் முன்றில் புத்தக கடை இருந்தது. அக்காலங்களில் தினமும் என் பத்திரிக்கை வேலை முடிந்து மாலை அவர் முன்றில் புத்தகக் கடைக்கு வருவதும் உரையாடுவதும் வழக்கம். அவர் வீடும் என் அறையும் அப்போது பழவந்தாங்கலில் அடுத்தடுத்த தெருவிலிருந்த காரணத்தால் இரவு எட்டு எட்டரைக்குமேல் கடையடைத்து விட்டு மாம்பலம் ரயில் நிலையம் வந்து பழவந்தாங்கல் வரை ஒன்றாக ரயிலில் பயணிப்போம்.அப்போது அவர் தொடர்ந்து சிகரட் பிடிப்பார். சார்மினார் சிகரட். வயது வித்தியாசம் பாராமல் எனக்கும் ஒரு சிகரட்டை நீட்டுவார். நான் பல சமயங்களில் மறுத்துவிடுவேன். கடையில் விட்ட உரையாடல் ரயில் பயணத்திலும் தொடரும். உலக இலக்கியம், சினிமா, இலக்கிய அரசியல்கள் என அனைத்தும் பேசுவார். அவரது ஆங்கில இலக்கிய பரிச்சயம் மற்றும் பழைய ஹாலிவுட் சினிமாக்கள் குறித்த துல்லியமான அறிவு எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது. மார்லன் பிராண்டோ, கிரேட்டா கார்போ, பிரெட் ஆஸ்டர், ஜிஞ்சர் ரோஜர்ஸ் என பலரையும் அறிமுகப்படுத்தி அவர்களின் படங்களைப் பற்றி தான் பார்த்த அனுபவங்களையும் சொல்லுவார். எரோல் பிளின், ஜேம்ஸ் டீன் ஆகியோர் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார். இந்த மொத்த தொகுப்பின் பல கதைகள் அந்த காலத்தில் அவர் எழுதியவை பஃறுளியாற்று மாந்தர்கள் நாவலும் கூட அக்காலத்தில் எழுதப்பட்டதே. நாவல் வெளியாகும் முன்பே எனக்கு ஒரு பிரதி தந்து அதை படித்து அபிப்ராயம் சொல்லுமாறு கொடுத்தார். நான் அப்போதுதான் கல்லூரி படிப்பு முடிந்து சென்னை வாழ்க்கைக்குள் நுழைந்த காலம். ஆனாலும் அவர் என்னையும் என் எழுத்தின் மீதான ஆர்வத்தையும் மதித்து அவர் ஒவ்வொரு கதை எழுதிய பின்னும் கையெழுத்து பிரதியிலும் அச்சு பிரதியிலுமாக கொடுத்து படிக்க சொல்லி கருத்து கேட்பார். எனக்கு அவருடைய கதைகளில் அப்போது சில விமர்சனங்கள் இருந்தன. முதலாவதாக அவருடைய கதைகளில் முத்துக்கறுப்பன் என்ற ஒரே பாத்திரமே திரும்ப திரும்ப வருவது எனக்கு பிடிக்கவில்லை. அதை அவரிடம் நேரிடையாகவே சொன்னேன். இதர கதைகளின் நம்பகத்தன்மை, வாசக ஈர்ப்பு போய் முத்துக்கறுப்பன் எப்போது வருவான் என்ற எதிர்பார்ப்பும் அந்த பாத்திரத்தின் மீதான ஈர்ப்புமாக மட்டுமே கதை முடிந்து போய்விடுகிறது என்றும் கதையின் உள்ளடக்கத்தை அது பெரிதும் பாதிக்கிறது என்றும் சொல்வேன். அந்த வயதில் அவர் எனக்கு முழு சுதந்திரத்தையும் தந்தார் . ஆனால் மொத்தமாக படிக்கும் போது என் அக்கால அபிப்ராயம் தவறு என்றே எண்ணத்தோன்றுகிறது. இப்போது மொத்த கதைகளையும் வாசித்தபின் முத்துக்கறுப்பன் என்கிற பாத்திரம் நம் மனதில் ஒரு நிழலுருவமாக அழுத்தமாக பதிவதை உணர முடிகிறது. கதைகளில் எங்கும் முத்துக்கறுப்பன் தோற்றம் குறித்து விவரணைகளில்லை. ஒரு கதையில் திருமணம் செய்யப்போகும் இளைஞனாகவும் இன்னொரு கதையில் கிழவனாகவும் மற்ற கதையில் நடுத்தர வயதுடையவராகவும் வருகிறாரே தவிர்த்து எங்கேயும் விவரணைகளில்லை. மாறாக ஒரு குணச்சித்திரம் நமக்குள் அருவமாக பதிகிறது. கதைக்குள் அந்த அருவத்தின் நிழல் உண்டாக்கும் சலனங்கள்தான் அவருடைய ஒட்டுமொத்த கதைகளின் புதிர்த்தன்மைக்கு ஆதாரம். தமிழ் நவீன இலக்கிய சூழலில் மிகவும் தனித்தன்மை மிகுந்த கதையுலகம் ம.அரங்கநாதனுடையது. அவருடைய கதைகள் எளிமையானவை. மொழி இலகுவானது. வாசகனோடு நேரடியாக உரையாடக்கூடிய தன்மை கொண்ட கதைகள் . என்றபோதும் அவருடைய கதைகள் எளிதில் வசப்படாத அருவத்தன்மையும் கொண்டவை. வழக்கமான வடிவ பரிசோதனைக்கதைகள் மட்டுமே இத்தகைய அரூப உள்ளடக்கத்தை கைக்கொண்டிருக்கும். ஆனால் ம.அரங்கநாதன் கதைகள் தெளிவான எளிமையான 60,70 களின் பாணியில் கதையை சொல்லி அருவமான அல்லது நம்மை மிகவும் யோசனையில் ஆழ்த்தக்கூடிய முடிவைக் கொண்டிருப்பவை. பெரும்பாலும் அவர் எந்த கதையையும் நேரடியாக சொல்பவரில்லை, கதையை குறிப்பால் உணர்த்துகிறார். எது கதை என்பதை நீங்கள் படித்து முடிக்கும் போது ஒரு தெளிவற்ற நிலைக்குள் தள்ளப்படுவீர்கள் அதுதான் அவர் பயன்படுத்தும் உத்தி. தன்னுடைய சிறுகதைகளில் வாசகன் கதையை இதுதான் என கண்டுவிடக்கூடாது என்பதில் முழு கவனத்துடன் அவர் ஈடுபடுவதுதான் அவருடைய தனித்தன்மை. பொதுவாகவே சிறுகதைகளின் வடிவம் என்பது அதன் இறுதிவரிகளால் தீர்மானிக்கப்படுகிறது. இறுதியில் சொல்லி சொல்லாமல் நிறுத்துவது எழுத்தில் ஒரு சாகசம். சில பண்பட்ட எழுத்தாளர்களுக்கே அது சாத்தியப்படும். ஒரு வெற்றிடத்தை முடிவில் விட்டுச்செல்லும் கதைகள் நம் மனதில் ஆழத்தேங்கி விடுகின்றன. கதை அதுகாறும் எதைச்சொல்ல வருகிறதோ அதை இறுதியில் ஒன்றுமில்லமால் செய்வது அல்லது அதை கடந்து வேறொன்றைச்சொல்லி நம்மை யோசிக்க வைப்பது அல்லது அதை குறிப்பால் உணர்த்தி வாசகனுக்குள் புதிர்த்தன்மையை உருவாக்குவது அல்லது சற்றும் எதிர்பாராத அதிர்ச்சிக்குள் வாசகனை ஆழ்த்துவது போன்ற முடிவுகளை தமிழின் பெரும்பாலான நல்ல கதைகள் கைக்கொண்டு வருகின்றன. இதை சரியாக செய்பவை மட்டுமே சிறந்த கதைகள். முடிவை திறமையாக கையாள்வதில் ஓ ஹென்றி, காப்கா, சதாத ஹசன் மாண்டோ மூவருமே அதி மேதைகள். இதனாலயே சிறுகதை உலகின் முடிசூடா மன்னர்கள் என்ற பெயரையும் வரித்துக்கொண்டவர்கள். ஓ ஹென்றியின் கிப்ட் ஆப் மேகி, லாஸ்ட் லீஃப் மற்றும் க்ரீன் ரூம் போன்ற கதைகளும் காப்கா வின் பாதர் உள்ளிட்ட கதைகளும் மாண்டோவின் ஒட்டு மொத்த கதைகளையுமே சொல்ல முடியும் மூன்றும் வெவ்வேறு பாணியிலானவை. தமிழில் இவர்களைப் போல முடிவில் செறிவான தொழில் நுட்பத்தை கைக்கொள்ளும் சிறுகதை எழுத்தாளர் என்றால் அசோகமித்ரனை சொல்லமுடியும். வெறும் கதையாக இல்லாமல் செய் நேர்த்தியாக செதுக்கி வாசகனை ஓரிடத்தில் நிற்கச்செய்து விட்டு காணாமல் போகக்கூடிய எழுத்து அவருடைய பாணி. அசோகமித்ரனுக்குப் பிறகு அந்த லாவகம் முழுமையாக கைகூடப்பட்ட எழுத்து ம.அரங்கநாதனுடையது. தமிழ் சிறுகதையில் புதுமைப்பித்தன், கு.பா.ரா, மௌனி ஆகியோருக்குப் பின் ஆதவன், வண்ணநிலவன் வண்ணதாசன், கி.ராஜநாராயணன், பிரபஞ்சன் ஆகியோரிடம் சிறந்த நுணுக்கமான விவரணைகள், உள்ளுணர்வுகள், காட்சி பதிவுகள் அழுத்தமான பாத்திரங்கள், தனித்த வாழ்வனுபவங்கள் ஆகியவை சிறப்பாக கொண்டிருந்தாலும் சிறுகதையின் இறுதியில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி மீண்டும் கதையை முதலிலிருந்து வாசிக்க தூண்டும் வடிவம் ம.அரங்கநாதனுக்கு மட்டுமே வாய்க்கப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவருடைய புகழ்பெற்ற கதையான சித்தியை எடுத்துக்கொள்வோம். எதேச்சையாக ஒரு மைதானத்தில் ஓட்ட பயிற்சிக்கு வருகிறான் ஒரு இளைஞன். அங்கு காவலர் மூலமாக பெரியவர் ஒருவர் அறிமுகமாகிறார். அவர் முன்னாள் விளையாட்டு வீரர். நாடே அறிந்தவர் விளையாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.தேசத்தின்மேல் மிகுந்த பற்று வேறு. அவருக்கு இவனை கண்டதும் பிடித்துப்போகிறது. அவர் அவனுக்கு பல உத்திகள் பல பயிற்சிகள் கற்றுக்கொடுத்து மிகப்பெரிய வீரனாக உருவாக்குகிறார். அவனும் பல போட்டிகளில் கலந்து வெற்றிவாகை சூடுகிறான். நாடே அவனை திரும்பி பார்க்கிறது. கடைசியில் ஒலிம்பிக் போட்டியில் அவன் பெயர் அறிவிக்கபோவதற்கு முந்தின நாள் பத்திரிக்கையாளர்கள் அவனை சுற்றி பேட்டி எடுக்கின்றனர். அவர்கள் அவன் இந்த இடத்தை அடைய அவன் பட்ட சிரமங்களைப் பற்றி சுவாரசியமான பதில்கள் அல்லது நம்பிக்கையூட்டும் அனுபவங்கள் வரும் என எதிர்பார்க்க, அவனோ எனக்கு எதுவும் தெரியாது ஓடத்தெரியும் ஓடினேன்… ஓடிக்கொண்டிருந்தேன் என்ற தினியிலேயே பதில் சொல்கிறான். இறுதியாக ஒலிம்பிக்கில் நம் தேசத்தின் எதிர்காலம் எப்படி என்பதுபோல் கேட்க பதிலுக்கு அவனோ எனக்கு தெரியாது என்னால் சொல்ல முடியாது எனக்கு ஓடமட்டுமே தெரியும் என்பது போல சொல்ல அதுவரை உற்சாகத்துடன் அருகில் நின்ற பெரியவர் கோபத்துடன் கதவை அடைத்துவிட்டு காரில் ஏறி செல்கிறார். அதோடு கதையும் முடிகிறது. யோசித்து பாருங்கள்... இந்த கதையில் யார் நாயகன். அந்த இளைஞனா பெரியவரா... கதை இளைஞனுடையதாக இருந்தாலும் கதையை முடிப்பது பெரியவரின் செயலே… இந்த கதை மூலம் அவர் சொல்ல வருவது என்ன ? இது வாசகனுக்கு விடும் சவால். வெறுமனே இந்த கதையை பரிசோதனை முயற்சி என சொல்லிவிட்டு தப்பிக்க முடியாது. கதையின் இறுதியில் அந்த முதியவர் பாத்திரம் எதனால் அப்படி கோபப்பட வேண்டும் என்பதை யோசிக்கும் வழியில் உங்களுக்கான கதையின் இறுதி முடிச்சு உள் முகமாக சுருட்டப்பட்டு மறைந்து கிடக்கிறது. காப்காவின் ஜட்ஜ்மண்ட் கதையின் இறுதிபோல ரஷ்யாவில் வசிக்கும் நண்பனுக்கு தன் காதல் திருமண நிச்சயத்தை கடிதம் மூலமாக தெரிவிக்க போகும் முன் அப்பாவோடு உரையாடுகிறான். அப்பா அவனுக்கு தகவல் சொல்லக்கூடாது என்கிறார். இறுதியில் அவன் ஒரு பாலத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்கிறான் இறுதியில் அவன் தற்கொலை போலத்தான் சித்தி கதையில் முதியவர் கோபத்துடன் காரில் ஏறிச்செல்வதும் கதை அங்கு முடியவில்லை. ஆனால் இரண்டிலும் இறுதி சம்பவம் உண்டாக்கும் அதிர்ச்சி கதையை மீண்டும் வாசிக்க கோருகிறது. காப்கா கதையில் அப்பாவும் மகனும் எந்த இடத்தில் முரண்படுகிறார்கள் என வார்த்தையில் தேடினால் கிடைக்காது. அது போலத்தான் சித்தி கதையிலும் இளைஞனுக்கும் முதியவருக்குமான முரணுக்கு என்ன காரணம் என யோசிக்க வைக்கிறார். சித்தி கதையில் இரண்டு பார்வை கோணங்கள் ஒளிந்திருக்கின்றன. ஒரு வகையில் பார்த்தால், அந்த இளைஞன் தன் காரியத்தை கடமையை சரியாக செய்தாலே பலன் அதுவாக கிட்டும் என நினைப்பவன். அவனிடம் முஸ்தீபுகள் இல்லை, பெரிய இலட்சியங்கள் இல்லை… பார்ஸ்ட் கம்ப் பட நாயகனை போல ஓடிக்கொண்டேயிருக்கிறான், வெற்றி அவன் பின்னால் இயல்பாக வருகிறது. வாழ்வின் முழு பக்கத்தையும் அறிந்த ஒருவனுக்கு மட்டுமே இத்தகைய ஞானம் சாத்தியம். கடைசியில் அவன் பேட்டியில் பேசும்போது பெரியவர் இத்தனைக்கும் காரணமான தன்னை அவன் குறிப்பிடவில்லையே என கோபித்துக்கொண்டு போவதாக எடுத்துக்கொள்ளலாம். அதே சமயம் அவன் சுயநலம் கொண்டவனாக, பெரியவரால் தனக்கு உயர்வில்லை தன் உழைப்பு மட்டுமே தன் வெற்றிக்கு காரணம் என சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம். இது எல்லாமே நம்முடைய தேர்வு… வழக்கமாக வரும் முத்துக்கறுப்பன் இல்லாமல் இக்கதை எழுதியதும் இந்த இரட்டை தன்மைக்கு காரணம். ஒருவேளை முத்துகறுப்பன் பேர் யாருக்கு வருகிறதோ அவன் பக்கம் நியாயமாக இருக்கும். காரணம் அவர் பெரும்பாலான படைப்பாளிகளைப் போல தன்னிலையை உயர்வாக எண்ணி எழுதக்கூடியவர். பெரும்பாலும் உறவுச்சிக்கல்களை அல்லது தனிமனித ஆன்ம அனுபவங்களை சார்ந்திருக்கும் இவரது கதைகளில் கோஷங்களோ பிரச்சாரங்களோ சமூக அவலங்களோ காணப்படுவதில்லை. சொல்லப்போனால் கதைகளில் பெரிய சிக்கல்களையும் அவர் சொல்வதில் பல கதைகள் துண்டு துண்டான சம்பவங்கள் அதை நாம்தான் கோர்த்து புரிந்துகொள்ளவேண்டும். வெறுமனே அதை அப்படியே கடந்து செல்ல முடியாது. இரண்டாவது முறை கதையை மீண்டும் படிக்க வேண்டும் உதாரணத்துக்கு காடன் மலை எனும் கதை .. அதில் வரும் முத்துகறுப்பன் போளுர் வரை வந்து காணாமல் போகிறான். மலை திருவண்ணாமலை தான் என்பதை யூகித்து அறியமுடியும் அல்லது பரவத மலையாகவும் இருக்கலாம். திருவண்ணாமலை என ஏன் நான் சொல்கிறேன் என்றால் ம.அரங்கநாதன் அடிக்கடி ரமணர் பற்றி சொல்வார். திண்டிவனம் வரை வந்து அவர் திடீரென காணாமல் போய்விட்டார் என புதிர்த்தன்மையோடு கதைகளில் சொல்வது போல விவரிப்பார் ... காணாமல் போவது, தோன்றுவது, தோன்றி மறைவது போன்றவை அவர் கதைகளில் பல இடங்களில் காணக்கிடப்பவை.தென்னகம் என்றாலே அனைவரும் தெற்கு திசை தென் திசை என்றுதானே நாம் நினைத்திருப்போம் ஆனால் அவர் ஒரு கதையில் தென் என்றால் தென்படுதல் தோன்றி மறைதல்,அவன் தோன்றி மறைந்த இடம், காட்சியளித்த இடம் அதனால் தென்னகம் என புது விளக்கம் தருகிறார். இந்த மொத்த தொகுப்பில் என்னை மேற்சொன்ன இரு கதைகள் தவிர்த்து சிறிய புஷ்பத்தின் நாணம், வீடுபேறு பனை, (இதிலும் முத்துகறுப்பன் இல்லை)அஞ்சலி, போன்ற கதைகள் வடிவரீதியாகவும் உள்ளடக்கரீதியகாவும் என்னை பெரிதும் ஈர்த்தன. குறிப்பாக அஞ்சலி எனும் கதையில் இரண்டு கட்டுரைகள் மட்டுமே. அவை ஒரு விமர்சன எழுத்தாளன் இறப்பதற்கு முன்னும் பின்னுமான இரண்டு கட்டுரைகள். இரண்டிற்குமான வித்தியாசம்தான் கதை. நல்ல வேளை நான் எழுதிய இரண்டு கட்டுரைகளும் அவர் இறப்பிற்கு பின்தான்… முன்பாக எழுதியிருந்தாலும் இப்படித்தான் எழுதியிருப்பேன் .. என்ன செய்ய முத்துகறுப்பன் என்னை எழுத அனுமதிக்கவில்லை. நன்றி.. ந்ற்றிணை காலண்டிதழ் 2018

May 27, 2021

கவியின் காதல் கதை – புஷ்கினும் ருஷ்ய தேசியமும் தஸ்தாயெவெஸ்கி 200 – சிறப்புக் கட்டுரை -2

அலெக்சாண்டர் புஷ்கின் 


19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும்  இலக்கியத்துக்கு ருஷ்யா வழங்கிய அருங்கொடைகள் தான் இன்றும் உலகை  உய்வித்து வருகின்றன.. அந்த சொற்கள் உருவாக்கிய ஈரமும் பசையும்தான்  மனித நேயத்தையும் அன்பையும் கற்றுக்கொடுத்து பேரன்பால் உலகை இயங்க வைக்கின்றன.   .ஒரு வெண்ணிற இரவுக:ள்   ஒரு புத்துயிர்ப்பு ,,ஒரு தாய்  ஒரு நம் காலத்துநாயகன் , 

ஒரு ஆறாவது வார்டு .. ஒரு நாய்க்கார சீமாட்டி , ஒரு செம்மணி வளையல் ஒரு முதல் ஆசிரியர்  போன்றவை உலக இலக்கியத்தில் உருவாககிய தாக்கம் அனைவரும் அறிந்ததே  இவையெல்லாம்  இல்லாவிட்டால்  பல மொழிகளில் மிகச்சிறந்த படைப்புகள் தோன்றாமலே  போயிருக்கும் அப்படிப்ப்ட்ட இலக்கியபடைப்புகள் ருஷ்யாவில் உருவாக காரணமாக  அவற்றுக்கெல்லம் விதையாக இருந்த ஒரு மூலப் பெயர்தான் அலெக்சாந்தர் புஷ்கின். வெறும்  37 வயது வரை மட்டுமே வாழ்ந்த  புஷ்கினுக்கு  இத்தகைய பெருமை என்றால் அந்த குறுகிய வாழ்க்கையில் அவர் எழுதிய சில கவிதைகளும் நாவல்களும்  எவ்வளவு  அடர்த்தியான புலமையு,ம் செறிவும் ஊட்டப்பெற்றவை என்பதை யோசித்துப் பாருங்கள்  . \

புஷ்கின் இறக்கும் போது தஸ்தாயெவெஸ்கிக்கு வயது 16 . அன்று அவருக்கு புஷகின் யாரெனத் தெரிய வாய்ப்பில்லை. இத்த்னைக்கும் அவரும் அப்போது பீட்டர்ஸ்பர்க் நகரத்தில்தான் படித்துக்கொண்டிருந்தார்.  அன்றைய சூழலில் புஷ்கினின்  கவி ஆளுமை வெகு சொற்பமாகவே  சிறு குழு அளவில்  அறியப்பட்டது  ஆனால் 1880 ஜுன் 20ம் தேதி மாஸ்கோவில்  ஸ்ராஸ்ட்னயா ஸ்கொயர்  எனுமிடத்தில்  புஷ்கினுக்கு  ஒரு சிலை எழுப்பியபோது  இடைப்பட்ட 46 வருடங்களில் அவர் புகழ் தேசம் முழுக்க பரவியிருந்தது .  அந்த சிலை திறப்பு விழா வில் வந்து உரை நிகழ்த்துமாறு பீட்டர்ஸ் பெர்க்க்லிருந்து தஸ்தாயெவெஸ்கி  அழைக்கப்ப்ட்டார் . அப்போது அவருக்கு வயது 60  தன் 16ம் வயதில் புஷகின் மறைவு செய்தியை கேட்டவர் 60வது வய்தில் அவருடைய  சிலை திறப்பு விழாவுக்கு அழைக்கப்படுகிறார்.  

அந்த புஷ்கின் சிலை திறப்பு விழாவின் போது தஸ்தாயேவெஸ்கி ஆற்றிய நீண்ட உரை  இன்றும் ருஷ்ய இலக்கிய உலகில் மகத்தான உரைகளூல் ஒன்றாக கருதப்படுகிறது .பெரும்பாலும் அந்த உரை ருஷ்ய தேசியம் பற்றியம் அதற்கு புஷகின் தன் கவிதைகள்  மூலம் உருவககியிருக்கும் உணர்வெழுச்சிபற்றியும் இருந்தது . இன்னொரு வகையில் பார்த்தால் புஷ்கின் என்ற கவிஞன் தான் ருஷ்ய இலக்கியத்தின் ஆன்மா என்பதை நிறுவியது . அந்த நெடிய உரையில் தஸ்தாவெஸ்கி  அவரது கவித்துத்திலிருந்து வெளிப்படும் மனிதத்தன்மையை சுட்டி அந்த இடம் தான் ருஷ்யா மூலம் உலகமக்கள் பெறப்போகும் அற்புத ஊற்றுக்களின் கண் என துல்லியமாக எடுத்தியம்புகிறார் .

அப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த கவிஞனான புஷகினின் மரணத்துகு பின்புள்ள கதைகள்  இன்றுவரை ருஷ்யாவில் அவிழ்க்கப்டாத  மர்ம முடிச்சுகளுடன் இருந்து வருகிறது. அதில்  இன்னும் பலவுத சர்ச்சைகள் தொடர்கின்றன  ருஷ்யாவின் புகழ்பெற்ற பெண் கவியான் அன்னா அகமதேவா உள்ளிட்ட பலரும் புஷகினின் காதல் மனைவி நட்டாலியாவின்  பேரழகுதான் அவர் உயிரை பறித்துவிட முக்கிய காரணம் என்கின்ற்னர். .

1831 வில்புஷ்கின் தேவதை போன்ற பேரழகுகொண்ட நட்டாலியாவை திருமணம் செய்கிறார் 1836ல் புஷ்கின் இறக்கும் வரையிலான் ஐந்து வருடத்தில் அவர்களிடையிலான பேரன்பின் பரிசாக நான்கு  அற்புத குழந்தைகள் இருவரும் ஒருவருக்கொருவர் அப்படி ஒரு காதல் வலையில் பின்னி பிணைந்திருந்தும் எப்படி நடந்தது அந்த இயற்கையின் சதி ?

1799ல் பிறந்த புஷகின் தன் முதல் கவிதை நூலை வெளியிடும் போது வருக்கு 15 வயது மட்டுமே நிரம்பியிருந்தது . .இயல்பில் ருஷ்யா மக்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள்  மட்டுமல்லாமல் புஷ்கின் ஒரு மகத்தான கவிஞனும் கூட . எப்போதும் கவித்துவ மன நிலையோடு ததும்பும் அவரது மனம் பல பேரழகிகளின் பால் தொடர்ந்து வசீகரிக்கப்ப்ட்டு பல கவிதைகளை  எழுதத்தூண்டியது. ஒருபக்கம்  ஆட்சியர்களுகெதிரான டிசம்பர் இயக்க  புரட்சிகர கும்பலின் ரகசியத்தொடர்பு இன்னொருபக்கம் மன்னர் குடும்பத்து பேரழகுப் பெண்களின் பால் மையல் என புரட்சியும் காதலும் ஒரு சேர அவர் படைப்புகளை ஆகரமித்தன.

மிகையிலோவேஸ்கோவே எனும் அவரது துவகக கால  கவிதை தொகுப்பை எலிசவேட்டா  வோரோன்ஸ்டோவா எனும்  கவர்னரின் அழகு மனைவிக்கு சமர்ப்பணம் செய்தார் . அதே சமயம்  ஜார் ஆட்சிக்கு எதிராக கலகம் விளைவித்த டிசம்பர் பூரட்சிக்குழுவுக்கு ஆதரவாக அவர் எழுதிய  ஓட் டு லிபர்ட்டி ( ode to liberty) எனும்  அரசு எதிர்ப்பு கவிதைக்காக ஒரு வருடம் சைபீரிய தனிமைச்சிறைக்கு அனுப்பப்பட்டரr.  . பிற்பாடு  அவரது உறவினர்கள் நண்பர்கள் தொடர்ந்து பரிந்துரைத்ததன் பேரில் ஜார் மன்னர் நிக்கோலஸ்  அவரை விடுவித்தது மட்டுமல்லாமல் மன்னரது நேரடி கண்காணிப்பில்  தேசிய ஆவணக்காப்பகத்தில் பணியமர்த்தப்பட்டார் .

அது அரச பதவியானாலும் அவருக்கு  நட்டாலியா எனும் தேவதை அவர் வாழ்வில் மனைவியாக  அடைந்த பிறகுதான் அவருக்கு முழுமையான  அங்கீகாரம் கிட்டியது  மன்னரின் அரசவை விருந்துகளிலும் கேளிக்கைகளிலும் ரகசிய உள்வட்ட குழுக்களிலும் பங்கேற்கும் அனுமதி கிட்டியதற்கு பின்னாலிருந்த ஒரே காரணம்  நட்டாலியாவின் வசீகர முகம்.  ஜார் மன்னர் நிக்கோலஸே அவளது அழகால் மிகவும் ஈர்க்கப்ப்ட்டார்.  . புஷகினுக்கு அரசவையில் கிட்டிய திடீர் அங்கீகாரத்துக்குப்பின் இப்படியெல்லாம் ஒரு கதை இருப்பது அவருக்கு தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால்   அவளைச்சுற்றி படர்ந்திருக்கும் அதிகார ஒளிவட்டத்துக்கு அவள் அழ.கும் ஒரு கார்ணம் என்பது .நட்டாலியாவுக்கே கூட தெரிந்திருக்கவில்லை

இதனிடையே புஷ்கின் எழுதிய நாவல்களும் கவிதைகளும் அவருக்கு இலக்கியமட்டத்தில் பெரும் மதிப்பை  உருவாக்கின . அவரது சமகாலத்தவரும்   மே;ல் கோட்டு போன்ற கதைகளை எழுதியவ்ருமான நிகாலோய் கோகல் புஷ்கின் கவிதைகளின் மகத்துவத்தை பலருக்கும் எடுத்துரைக்க துவங்கினார். கவிதை ,சிறுகதை , நாவல் நாடகம்  ,கட்டுரை என இலக்கியத்தின் பல வடிவங்களிலும்  தன் தடத்தை  அழுத்தமாக  பதியவைத்தார்  .  கவிதை வடிவிலான யூஜின் ஒன்னொஜின்  ,  கேப்டன் மகள் துப்ரோவ்ஸ்கி போன்ற நாவல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றன. ,இப்படி  புஷ்கினுக்கு அதிகார மட்டத்திலும்  இலக்கியமட்டத்திலும் பெயர் கூடி வரும்போது கூடவே  சர்ச்சைகளும் அவரைச்சுற்றி சுழன்றன

அவரது ப்ரச்னையே எதுலும் உடனே உணர்ச்சி வசப்படுவது .. கோவமாயிருக்கும் போது எரிமலையும் அன்பால் நெகிழும்போது  பனிமலையுமாக  எப்போதும் ஒரு கொந்தளிப்பில் இருந்தார் . இதன் காரண்மாக  தன் கோபத்துக்கு ஆளான  எவரையும் டூயல் எனப்படும்  உயிருக்கு சவால் விடும் மரண பந்தயத்துக்கு அழைத்துவிடுவர . இந்த டூயல் என்பது ருஷ்ய கலாச்சார்த்தில் தொன்று தொட்டு  இருந்து வரும் அம்சம் . நம்மூரில் மடலேறுதல் ஜப்பானில் ஹரகிரி போல டூயல் ருஷ்யாவின் வாழ்க்கை முறையோடு கலந்துவிட்ட ஒரு அம்சம் .

ஒருவர் டூயலுக்கு அழைத்துவிட்டால் தொடர்ந்து குறிப்பிட்ட  சில முக்கியஸ்தவர்களின் முன்னிலையில்  இடத்தையும் நாளையும்  குறித்து  அறிவித்துக் கொள்ளவேண்டும் . அச்சமயம் இருவர் மட்டுமே சண்டையிட வேண்டும்  முற்காலத்தில் வாட் சண்டையாக இருந்த இந்த டூயல் பிற்பாடு துப்பாக்கியால் ஒரே நேரத்தில் சுட்டுக்கொள்வதாக மாறியது .  .  இருவரும்  குறிப்பிட்ட இடைவெளியில் நின்று சுட்டுக்கொள்ளவேண்டும்  பொதுவாக பத்து அடி  இடைவெளி இருவருக்கும் இருக்க வேண்டும் எம்னது விதி.

இப்படி டூயயாராகும் இருவரும்  இடைப்பட்ட  காலத்தில் நேரடியாக சந்திக்க கூடாது . கருத்து பரிமாற்றங்களுக்கு  தங்களின் செகண்ட்ஸ் எனும் இரண்டாம்  நிலைக்கு ஒருவரை  நியமிக்க வேண்டும்   இந்த உதவியாளர்களின் வேளையே தூதுபோய் சமாதானம் செய்து டூயலை எப்படியாவது நடக்கவிடாமல் செய்த்விடவேண்டும் என்பதுதான்.  பெரும்பலான டூயல்கள் இந்த உதவியாலர்களால் தடுத்து நிறுத்தபட்டுவிடும். ஆனால் சில தீர்க்கவே முடியாத பகைக்கு டூயல் மட்டுமே முற்றுப்புள்ளி வைக்கும் /

இப்படிப்ப்ட்ட டூயலுக்கு புஷ்கின் மிதமிஞ்சிய உணர்ச்சுயில் அழைப்பதும் பிற்பாடு பின் வாங்குவதும்  பல முறை நிகழ்ந்துள்ளன.  எந்தனை முறை யார்யாரை அவர் டூயலுக்கு அழைத்தார் அந்த விளைவு என்ன என்ன என தனிப் பட்டியலே வரலாற்றாய்வாளர்கள் சேகரித்து வைத்திருக்கின்றனர். ,  ஜார் அரசங்கம் இந்த டூயல் பந்தயத்துக்கு தடை வித்தித்திருந்த போதும் அது பல இடங்களில் நடைபெற்று பலருடைய உயிரை பலி வாங்க்கிகொண்டேதான்  இருந்து வந்தது .

இச்சமயுத்தில்தான்  அவருடைய வாழ்க்கைகுள் ஒரு விதியென வந்து நுழைந்தான் ஜார்ஜெஸ் டி ஆன்தாஸ் . ருஷ்யாவில் குடியேற வந்த பிரெஞ்சு அதிகாரி                                                                                                      ஜார்ஜெஸ்டிஆன்தாஸ்

இங்கு ருஷ்ய மக்களுக்கு பிரெஞ்சு கலாச்சாரத்தின் மீதிருந்த மோகத்தை சொல்ல வேண்டும் . ருஷ்ய மக்களின் எழுத்தளர்களின் கலைஞர்களின் பலவீனம் பிரான்ஸ்.  . அதன் மிதமான  தட்ப வெட்ப சூழலும் நிலப்ப்ரப்பும் அவர்களுக்கு என்றும் வசீகரம்  மட்டுமல்லாமல்  இலக்கியத்தில்  ருஷ்யாவின் முன்னோடியும் அவர்களே  மேலும் அரசியலில்  பிரெஞ்சு புரட்சி ருஷ்ய மக்கலிடையேயும் பல விளைவுகளை உண்டககியது

இதனூடே  1812ல்   நெப்போலியன் போனபார்ட் ருஷ்யாவின் மீது நடத்திய  போருக்குப்பின் பல பிரெஞ்சு அதிகாரிகள் ருஷ்ய ஜார் மன்னன் அனுமதி பெற்று  சர்வ வல்லமையுடன் ருஷ்யாவில் வாழத்துவங்கினர்  அப்படி வசித்த்வர்கள் மீது ருஷ்ய பெண்களுக்கும் ஒரு வசீகரம் இருந்தது . அப்படித்தான்  ஜார்ஜச் டி ஆதன்ஸ் எனும் அந்த பிரெஞ்சு அதிகாரியிடம் பல ருஷ்ய பெண்கள் வீழ்ந்தனர் .

ஆனால் அவர்கள் யாரையும் பொருட்படுத்தவில்லை  காரணம் அவனை அவனை ஈர்த்த ஒரே அழகுமுகம் புஷ்கினின் மனைவியான  நட்டாலியா  . அரசவை நிகழ்வுகளில் அவளை பார்க்க நேரிட்ட அன்றே ஆதன்ஸ் நட்டாலியாவுக்கக எதையும் செய்வது என முடிவுக்கு வந்துவிட்டான் ,. வரலாற்றில் இப்படித்தான் சில விபரீத காதல்கள் பெரும் திருப்பங்களை உண்டாக்கி  பெரும் திருப்பங்களை உருவாக்கியிருக்கின்ற்ன .   . ஒருமுறை நட்டலியாவே நான் மட்டும் புஷகினை திருமணம் செய்திராவிட்டால் டி ஆதன்ஸுடன் சென்றிருப்பேன் எனகூறியிருப்பதாகவும்  தகவல்கள் உண்டு  திருமண பந்தம் என்பது ருஷ்ய கலாச்சாரத்தில் உடைக்கவே முடியாத அழுத்தமான முடிச்சு


.

ஆனால் டி ஆதன்சோ   நட்டாலியாவை எப்படியும் அடைவது என உறுதியாக இருந்தான் . இதன் காரண்மாக லம்பூன் களை உருவாக்கி புழக்த்தில் விட்டான் / லம்பூன்கள் என்றால் நம் ஊரில் மொட்டை கடுதாசி என்பார்களே அதுபோல அநாமதேய  செய்தி.. . நட்டாலியாவுக்கும் மனனருக்கும் உறவு இருப்பதகாவும் வதந்திகளை  பரப்பினான் . இதனிடையே புஷ்கினை சுற்றி கடன் தொல்லைகளும்  நெருக்கியது .பணக்கார டி ஆதன்ஸ் நட்டாலியாவை சுலபமாக வலையில் வீழ்த்துவான் என பலரும் பேச  ஆருடம் சொல்ல ஆரம்பித்த்னர்

இந்த சேதியால் புஷ்கினின் இதயம் குமுறி கொந்தளித்தது .ஆவேசமாக டி ஆதன்ஸிடம் சென்று டூயல் எனப்படும்  ஒத்தைக்கு ஒத்தை உயிர் சண்டைக்கு அழைத்தான் . ஆனல புஷ்கின் நண்பர்கள் தலையீட்டால் இது ரத்து ஆனது .இச்சூழலில் தான்  டி ஆத்ன்ஸ் நட்டாலியாவை அடைய  அதன் இன்னொரு வழியாக அவள் தங்கை எக்டோரிணாவை   திருமணம் செய்தான்.  நட்டாலியாவின் குடும்பத்து வறுமைக்கு விழுந்தது முதல் பலி . ( பிற்பாடு ருஷ்யா 20ம் நூற்றாண்டில் சுக்குநூறாக சிதைவுற்ற பின் புகழ்பெற்ற ருஷ்ய பெண்களின் கற்பு வெறும் சிகர்ட்டுக்கு ஐரோப்பிய வீதிகளில் விற்கப்ப்ட்ட துயர சம்பவம் ஏனோ நினைவுக்கு வருகிறது )

தன் மைத்துனியை மாமனார் எதிரிக்கு பணத்தின் பொருட்டு தாரை வார்த்த இச்சம்பவம்  புஷ்கினை சுக்குநூறாக சிதைத்துவிட்டது

பலரும்  இனி டி ஆத்ன்ஸ்  நட்டாலியாவை  அடைவதை யாரலும் தடுக்க முடியாது என்பது போல புஷ்கினின் காதுபட பேச ஆரம்பித்த்னர் . நட்டாலியாவின் மனமோ  பெரும் நிம்மதியின்மைக்குள் வீழ்ந்தது . ஆனால் புஷ்கினுக்கோ மனைவி மீது மலையளவு நம்பிக்கை  அவருக்கு இது ருஷ்யாவின் தேசிய பிர்ச்னை . ஒரு பிரெஞ்சுக்காரன்  நம்மை கொக்கலிப்பதை அவரால் ஏற்கவே முடியவில்லை .அவரதூ ருஷ்ய இதயம் கொதிநிலையின் உச்சத்துக்குப் போனது  இனியும் தாமதிப்பது அழகல்ல என முடிவு செய்தார் .

26 ஜனவரி 1837 அன்று டி ஆதன்சை  கடுமையாக் கேலிசெய்து ஒரு கடிதம் அனுப்பினார் .மறைமுகமாக டூயலுக்க்கான் தூண்டுதல் .நேரடியாக் அழைப்பது அக்காலத்தில் தண்டனைக்குரிய குற்றம் .  அவரது எண்ணம் போல டி ஆதன்ஸ்  புது மனைவியும் புஷ்கினின் மைத்துனியுமான   எக்டெரினா புஷ்கின் வீட்டை நோக்கி  வந்தார்.  அவளது கையில் ஒரு கடிதம் . பிரெஞ்சு தூதரக முத்திரையிட்ட  கடிதம் . அந்த கடிதத்தில் புஷ்கினை தன்னோடு  டூயல் செய்ய டி அத்ன்ஸ்  அழைப்பு விடுத்திருந்தார்  வாங்கிப் படித்த புஷ்கினும் சவாலை  ஏற்றார்  


நாள் நேரம் இடம் குறிக்கப்ப்ட்டது \

இடம்  புனித பீட்டர்ஸ் பர்க் நகரில் கறுப்பு நதி எனப்படும் சியோரான்யா நதி

நால்  27 ஜனவ்ரி 1837 கிரிகோரியன் கலண்டர்படி

புஷ்கின் தனக்கு  உதவியாளராக  நியமனம் செய்தது ஆர்தர் மேக்னிஸ்  பீட்ட்ர்ஸ் பர்க் நகர் பிரிட்டிஷ் தூதுரக அதிகாரி/   மேக்னிஸும் முந்தின இரவு இரண்டு மணிக்கு டி ஆதன்சின் பிரெஞ்சு தூதராகத்துக்கு சென்று கதவைத்தட்டினார் ஆனால் கொடூர மனம் படைத்த டி ஆதன்ஸ் திறக்க வில்லை . அவன் கையில் துப்பாக்கி இறுகபிடிக்கப்ப்ட்டிருந்தது.

கறுப்பு நதி என அழைக்கப்படும் சோரான்யா நதி ஏற்கனவே  சில டூயல்க்ளுக்கு பெயர் பெற்றது அதனாலேயே அது கறுப்பு நதி என பெயர்பெற்றது.  அந்த கறுப்பு நதிக்கு  27 ஜனவரி காலை விடியலில் இருவரும் வந்தனர் இருவர் கைகளிலும் துப்பாக்கி

இருவரும் ஒருசேர சுட்டுக்கொள்ள புஷ்கின் இடுப்பில் குண்டு துளைத்துகொட்டியது குருதி   அதே நேரம் டி ஆத்ன்ஸின் தோல்பட்டையில் புஷ்கின்னின் துப்பாக்கி குண்டு துளைத்தது

புஷ்கின் பெரும் துயரத்துடன் கறுப்பு நதியின்கரையில் பிணமாக வீழ்ந்தார்

அன்று மாலை புனித  பீட்டர்ஸ் பர்க் நகரமே  மேக மூட்டத்தால்  இரூண்ட்து. ஃநகர மக்கள்  பெரும் துயரத்தில் ஆழ்ந்தனர்.    புஷ்கின் மரண செய்தி கேட்டு இளம் கவி லெர்மந்தோவ்  பெரும் துக்கத்தில் வீழ்ந்தார்

அப்போது அவருக்கு வயது வெறும் 22  புஷ்கின் உடல் நட்டாலியாவின் வேண்டுகோளுக்கு இணங்க அரசாங்க சீருடை தவிர்க்கப்பட்டு சாதார்ன ஆடையுடன் மரணபெட்டியில் படுக்க வைக்கப்ப்டு பீட்டஸ் பர்க் நகரத்தின் புனித ஐசக் தேவாலய்த்துக்கு கொண்டு வர்ப்ட்டது

அந்த  இரண்டு மணி நேரத்தில் லெரம்ண்டோவ் எழுதிய டெத் ஆப்  எ பொயட் (  DEATH OF A POET) எனும் கவிதை நகரம் முழுக்க வினியோக்கிக்கப்ப்ட்டது அந்த கவிதை மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஆவேசத்தையும் உண்டககியது   ஜார் அரசு உடனடியாக அந்த கவிதைக்கு தடையாணை பிறப்பித்து உத்தரவிட்டது .புழக்கத்தில் இருந்த் கவிதைகளும் கைப்பற்றப்ப்ட்டன.  அந்த கவிதையின் கடைசி  நான்கு வரிகள் ஜார் அரசை கேள்விகேட்கும் வகையில் எழுதப்பட்டிருந்ததுதான் அந்த காரணம்


ஒரு வகையில் புஷ்கின் பிரெஞ்சு அதிகாரியால் வீழ்த்த்ப்ட்டதாலோ என்னவோ அவரை ருஷ்ய தேசியத்தின் விதையாக மக்கள் கருதினர் \

ஒரு இனத்தின் மொழியின்  கவிஞனின் ரத்தம் பூமியில் வீழும்போதுதான் அந்த நிலம்  தன் அடையாளத்தை மீட்டுக்கொள்ளும் வகையில் சுவாசிக்க துவங்கிறது .  இதன் காரணமகாவே  புஷ்கின் மரணம் ஒரு சாட்சியமாக வரலாற்றின் நினைவில் இன்றும் நிலைத்து நிற்கிறது  புஷ்கின் அன்று நிலத்தில் சிந்திய சிவப்புதான் பிற்பாடு ருஷ்ய தேசம் முழுக்க பரவி 80 ஆண்டுகளில் ருஷ்யாவை ஆண்ட கம்யூனிசத்தின் கொடியாக மாறியது


 

-    அஜயன் பாலா

27-05-2021

 

May 23, 2021

- எழுத்தாளர்கள் ஈகோ சண்டை –தஸ்தாயேவெஸ்கியும் டால்ஸ்டாயும்

 





நம்மூர் எழுத்தாளர்கள் ஈகோ சண்டை பற்றி பலர் ஏதோ இது தமிழ் இலக்கியத்துக்கே பிடித்த சாபக்கேடு என   அவ்வப்போது புலம்புவதுண்டு . , உலகம் முழுக்கவே அப்படித்தான் . குறிப்பாக புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளார்களான டால்ஸ்டாய் தஸ்தாயெவெஸ்கி ஆண்டன் செகாவ் ,துர்கனேவ் . மாக்சிம் கார்க்கி இவர்கள் அனைவருக்குமே படைப்பு ரீதியான முரண்களும் உட்பகையும்  ஈகோவும்  அதிகம் இருந்திருக்கின்றன 

குறிப்பாக   இவர்கள் அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் தஸ்தாயெவெஸ்கியை உதாசீனப்படுத்தியும் அவரை ஏற்காமல் விமர்சனம் செய்தும் நிராகரித்தும் வந்திருக்கின்றனர்.  வாழும் போதும் இறந்தபின்பும் ருஷ்யாவில் அதிகம் விமர்சிக்கப்பட்ட எழுத்தாளர் என்ற பெருமை  தஸ்தாயெவெஸ்கிக்கு  மட்டுமே உண்டு   இவற்றையெல்லாம கடந்துதான் அவர் 200ம் ஆண்டில் உலகமே கொண்டாடும் மகத்தான படைப்பாளியாக  தொடர்ந்து பேசப்பட்டும் வாசிக்கப்பட்டும் வருகிறார்.

  மேற்சொன்ன ருஷ்ய எழுத்தாளர்கள்  தஸ்தாயெவெஸ்கியை விமர்சிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களை கண்டெடுத்தனர். மாக்சிம் கார்க்கி போன்ற இடதுசாரி எழுத்தாளர்களுக்காவது அவர் எழுத்துக்கள்  மீது குற்றம் சொல்ல ததுவார்த்த  காரணம் இருந்தது. ஆனால் ஆண்டன் செகாவ்,  துர்கனேவ்  நபக்கோவ் போன்றோர் . விமரசனம் என்ர பெயரில் வெளிப்படுத்தியது  எல்லாம் வசைகள் அவமானங்கள் உதாசீனங்கள் .

 இவர்களில் கடுமை குறைவாக விமரசனமாக இல்லாமல் அபிப்ராயமாக கருத்துக்கள் சொன்னவர் டால்ஸ்டாய் மட்டுமே . அதேசமயம் சமகாலத்தில் புகழ்பெற்ற இன்னொரு சக எழுத்தாளன் என தெரிந்தும் டால்ஸ்டாய் தஸ்தாயெவெஸ்கியை பார்க்கவோ பேசவோ அனுமதிக்கவில்லை 

இன்று வரை உலகின் மகத்தான இரண்டு நாவலாசிரியர்களாக கருதப்படும் டால்ஸ்டாயும் தஸ்தாயேவெஸ்கியும்  சம காலத்தில் புகழ்பெற்று விளங்கின  ருஷ்யாவின் இரண்டு நடசத்திரங்களாக இருந்தும்  பேசிக்கொள்ளவே இல்லை ,

 குறிப்பாக  புத்துயிர்ப்பு அன்னா கரீனா போரும் அமைதியும்  போன்ற காவியங்களை படைத்து நம்மூர் காந்திக்கே அன்பையும் அஹிமசையையும் போதித்த டால்ஸ் டாய்  த்ஸ்தாவெஸ்கியிடம் மட்டும்  பிடிவாதத்துடன் இருந்தார்  என்பதும் தான் ஆச்சர்யம்., இத்தனைக்கும் அவரது சமகாலத்தவ்ர்களான துரகனேவ் ஆண்டன் செகாவ் மற்றும் மாக்ஸிம் கார்க்கி ஆகியோருக்கு திறந்த  அந்த யாஸ்னயா போல்னாவா எனும் அரண்மனையின் கதவுகள் தஸ்தாயேவெஸ்கிக்கு மட்டும் திறக்கவேயில்லை . ( துரகனேவும் பிரான்சில் பேடன் பேடன் நகரில் வசிக்கும் போது ஒருமுறை தஸ்தாயேவெஸ்கி சூதாடி தோற்று கையில் நயாபைசா இல்லாமல் அவர் வீட்டு அரண்மனை வாசலில் நின்றபோது உள்ளே விடமால் அப்படியே திருப்பி அனுப்பிய கதையும் உணடு )

இப்படியாக அக்காலத்தின் ருஷய் இலக்கியத்தின் மகத்தான எழுத்தாளர்களான இருவரும் கடைசி வரை பேசிக்கொள்ளாமலேயே  இறந்து போனதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று  நிலவியல் இடைவெளி.

 இருவரும் வேறு வேறு நகரத்தின் பிரதிநிதிகள்.  டால்ஸ் டாய் மாஸ்கோ நகரம் என்றால் தஸ்தாயெவெஸ்கி  பீட்ட்ர்ஸ்பர்க் நகரம். இரண்டுமே பாரம்பர்யமான ருஷ்ய நகரங்கள் என்றாலும் மாஸ்கோ  பிரபுக்களும் அதிகார வர்க்கத்தினரும் அதிகம் வசிக்கும் நகரம் . மாஸ்கோவிலிருந்து 200கிமீ தொலைவிலிருக்கும் அவரது  யாஸ்னயா போனா எனப்படும் அரண்மனையை சுற்றி  மொத்தம் 12 கிமீ நிலப்பரப்பு எஸ்டேட்  அவருக்கு சொந்தமாக இருந்தது .

  தஸ்தாயேவெஸ்கியோ   ராணுவ வீரர்களுக்கு  மருத்துவம் செய்யும் தம்பதிகளுக்கு மகனாக்பிறந்தவர் . பரம்பரையாக மத ஊழியம் செய்துப் பிழைத்த குடும்பம் .அவர் பிறந்ததும் என்னமோ மாஸ்கோ நகரில் என்றாலும் பத்து வயதிலேயே பீட்டர்ஸ்பர்க் நகருக்கு அவரது த்ந்தையால் அனுப்பி வைக்கப்பட்டு பின் அங்கேயே நிரந்தரமாக வசிக்கத்துவங்கியவர்  குடியனாவர்கள் ஏழைகள் அதிகமாக வசிக்கும்  பீட்டர்ஸ்பர்க் . நகரின் வீதிகளைபற்றி த்ஸ்தாயேவெஸ்கி அவரது நாவல்களில் தொடர்ந்து எழுதி வந்திருப்பதை காணலாம்  இந்த இரண்டு நகரங்களுக்கும்  கிட்டத்தட்ட 700 கிமீ இடைவெளி என்பது வேறு இருவரும்  சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம் இப்படி  இருவரும் இருவிதமான முரண்பட்ட தன்மை கொண்ட  நகரங்களின் பினபுலமே அவர்களது சுபாவமாககவும் இருந்திருக்கிறது . இந்த நகரங்களின் சுபாவம் இருவரது கதைகளிலும் வெளிப்படுவதை காணமுடியும் .

 டால்ஸ்டாயின் நாயகர்கள் பெரும்பாலும் பெரும் பிரபுக்கள் அரசகுடும்பத்தைச்சேர்ந்தவர்கள் . தஸ்தயெவெஸ்கியின் நாயகர்கள் சாதாரண மனிதர்கள் சிறிய வசதி படைத்த்வர்கள்  மேலும் பெரும்பலான கதை மாந்தர்கள் குடியனாவ்ர்கள் விபச்சாரிகள் குற்றமன நிலையில் பீடிக்கப்பட்டவர்கள் நன்மைக்கும் தீமைக்கும் இடையில் ஊடாடுபவர்கள்

 இருவருக்குமிடையில் ஏழு வருடங்கள் மட்டுமே வித்தியாசம் . தஸ்தாயெவெஸ்கி 1821 லும் டால்ஸ்டாய் 1828லும் பிறந்தவர்கள் இருவருமே முதல் கதைகளை தன் 24ம் வயதில் எழுத துவங்குகின்றனர்.

தஸ்தாயேவெஸ்கியின்  குற்றமும் தண்டனையும்  டால்ஸ்டாயின் போரும் அமைதியும்   இரண்டும்  ஒரே காலத்தில்  1866 & 67 ஒரு வருட இடைவெளியில்  வெளியாகின .. 

இந்த இரண்டு நாவல்களுமே இன்று வரை உலக இலக்கியத்தின்  இரண்டு சிகரங்களாக கொண்டாடப்படுகின்றன என்பது கவனிக்கவேண்டிய விஷய்ம் போரும் அமைதியும் எனும் அவரது வார் அண்ட் பீஸ் நாவல் வெளி வந்தவுடன் அதை தஸ்தாயெவெஸ்கி படித்துவிட்டு டால்ஸ்டாயை பார்க்க ஆவலுடன் இருந்தார் , அதற்கு 9ரு வாய்ப்பும் வந்தது 

புஷகின் மறைவை யொட்டி அவருக்கு ஒரு  சிலை திறப்பு விழா   மாஸ்கோவில் நடத்ததிட்டமிட்டபோது  தஸ்தாயெவெஸ்கி அழைக்கப்பட்டார் .

 இம்முறை விழாவுக்கு ஒரு நாள் முன்பு எப்படியும் டால்ஸ்டாயை சந்திப்பது என முடிவெடுத்து அவரது இல்லத்துக்கு செல்ல அனுமதிகேட்டபோது டால்ஸ்டாய் மறுத்துவிட்டார் . தான் இப்போது தனிமையில் இருக்க விரும்புவதாக  ஏற்பாடு செய்த நண்பர்கள்  மூலமாக பதில் தஸ்தாவெஸ்கி க்கு பதில் சொல்லி அனுப்பினார் .

அந்த புஷகின்  நினைவஞ்சலி கூட்டத்தில் தஸ்தாயெவெஸ்கி  ஆற்றிய உரை தான் இன்று வரை இலக்கிய உலகின் தலைசிறந்த அஞ்சலி உரையாக கருதப்படுகிறது . இன்னும் சொல்லப்போனால் த்ஸ்தாயெவெஸ்கி யார் என ருஷ்யாவுக்கு அடையா:ளம் காட்டிய உரை என்றும் சொல்லலாம் . ருஷய் தேசிய வாத்ம் பற்றி அவர் ஆழ்த்திய உரை பிற்பாடு வந்த அரசியல் எழுச்சிகளுகெல்லாம் விதை என குறிப்பிடும் அளவுக்கு ருஷ்ய மொழியையும் இலக்கியங்களையும் புதிய திசைக்கு அந்த உரையில் நெறிப்படுத்தியிருந்தார் என பலரும் கருதுகின்ற்னர்.

பிறகு 1878 ல்  ருஷ்யாவின்புகழ்பெற்ற தத்துவ ஆசிரியாரான   விளாதிமீர் சோல்யோதேவின் உரை நிகழ்ந்தபோது இருவரும்  அந்த நிகழ்வில் கலந்துகொண்டு இருந்த போதிலும் இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்லாமலெயே பிரிந்திருக்கின்றனர்

 அதன் பிறகும் பலர் டால்ஸ்டாயிடம் தஸ்தாவெஸ்கியின் எழுத்து பற்றிகேட்ட போது அது தன்னை பெரிதாக கவரவில்லை . என்றும் பலரும் பாராட்டும் கரமசோவ் பிரதர்ஸ்என்னால் படிக்கவே முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார் .மேலும்  த்ஸ்தாயெவெஸ்கிக்கு  கதாபத்திரங்களை வடிவமைப்பதில் போதாமை உள்ளது என்றும் சொல்லியிருக்கிறார்

 இதனிடையே தஸ்தாவெஸ்கி 1881ல் இறந்த சேதி அறிந்த உடன் டால்ஸ்டாய் மிகுந்த வேதனையுடன் தன் நண்பருக்கு எழுதிய கடிதமொன்றி.   ஒர் அற்புதமான் எழுத்தாளனை தான் கடைசிவரை  சந்திக்காமலே போனமைக்கு தான் மிகவும் வேதனையுற்று கண்னீர்வடிப்பதாகவும்  இப்போதுதான் அவர் தனக்கு எவ்வளவு நெருக்கமாக இருந்திருக்கிறார் என்பதை உணர்வதாகவும் என்றவாது ஒருநாள் இருவரும் சந்திக்கப்போவது உறுதி என்றும் ் அவரது the house of the dead நாவல் ஒரு உன்னதபடைப்பு என நிகொலாய் ஸ்ட்ராகோவ் என்பவருக்கு கடிதமாகவும் எழுதியிருப்பதாக ஆதாரங்கள் கூறுகின்றன .எழுதியிருக்கிரார் .

 த்ஸ்தாயெவெஸ்கியின்மறைவுக்குப்பின்   அன்னா தஸ்தாவெஸ்கி டாக்ஸ்டாய்  மாஸ்கோ அரண்மனியன யாஸ்னயா போல்யானவுக்கு சென்று டால்ச்டாயின் மனைவியோடு நெருங்கிய உறவு பேணியதகவும் அப்போது  ஒருமுறை டால்ஸ்டாய்  தஸ்தயெவெஸ்கியை சந்திக்காமல் போனமைக்கு வருத்தம் தெரிவித்ததகாவும் பதிவு செய்திருக்கிறார் 

இறுதியாக டாலஸ்டாய் தன் யாஸ்னயா போல்யான்யா அர்ன்மனையைவிட்டு அஸ்த போவா  ரயில் நிலையத்தில் அனாதையாக் இறந்ப்பத்ற்கு முன் அவர் கடைசியாக வாசித்த புத்த்கம் கரமசோவ்  பிரதர்ஸ்

 அஜயன் பாலா \

23-05-2021

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...