March 15, 2013

சேலம் கண்ஸ்யுமர் வாய்ஸ் விருது

என் எழுத்துலக வாழ்க்கைக்கு சேலம் கன்ஸ்யுமர் வாய்ஸ் வழங்கும் எளிய அங்கீகாரம் நாளை காலை பத்து மணிக்கு  சேலம் சண்முகா மருத்துவ மனை  கலையரங்கத்தில் நிகழவிருக்கிறது. என் எழுத்து வாழ்க்கையில் திசைகாட்டும் ஒரு நிலவாக  .நிழல் தரும் மரமாக பயணித்த அனைவருக்கும் நன்றி.

March 5, 2013

 விகடன் வெளியீடாக  வெளியான எனது அம்பேத்கார்  நூலை படித்துவிட்டு  பாராளுமன்ற மேலவை உறுப்பினரும் .மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் அகில இந்திய பொருளாளருமான திரு. அம்பேத்கார் ராஜன் . எம்.பி . அவர்கள் எனக்கு எழுதிகொடுத்த பாராட்டு கடிதம் .


March 3, 2013

ஒரு கடிதம் - உலக சினிமா வரலாறு பாகம் 2 குறித்து


murugesan sajo sundar
03-03-2013


வணக்கம் அஜயன் பாலா அவர்களே
வாழ்த்துகள்
தங்களின் உலக சினிமா வரலாறு படித்தேன், இரண்டுபாகங்களும் அருமை, இதை படித்ததன் மூலம் சினிமா மீது எனது பார்வை மாறியிருக்கிறது.உலக சினிமா, இந்திய சினிமா, தமிழ் சினிமா மீதான உண்மையான மதிப்பீடுகளை புரிந்துகொள்ளமுடிகிறது. தாங்கள் எழுதிய இப்புத்தகத்தை பற்றிய எனது உண்மையான ஆத்மார்த்தமான சில கருத்துகளை தங்களுக்கு தெரிய படுத்த விரும்புகிறேன்
முதலாவதாக தங்களின் எழுத்துநடை், படிக்கும் போது சலிப்பு ஏற்படாமல் தொடர்ந்து படிப்பதற்கான ஆர்வத்தை தருகிறது. தாங்கள் அளித்துள்ள சினிமாவை  பற்றிய தகவல்களை நிச்சயமாக அரிதிலும் அரிதாகவே கருதுகிறேன், என் பொன்ற உதவி இயக்குனர்களுக்கு அதாவது ஆங்கில சினிமா புத்தகங்களை படித்து புரிந்து கொள்ள சிரம படுகிறவர்களுக்கு இது ஒரு வர பிரசாதம். தமிழில் எழுதி வெளியிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள், 
ரோசமான் உள்ளிட்ட பல படங்கள் பற்றி தாங்கள் அளித்துள்ள தகவல்களை மிகவும் ரசித்தேன். இது சினிமா வரலாறு மட்டுமல்ல சினிமா கட்டமைத்தவர்களின் வரலாறும் கூட......
சினிமா துறையை சார்ந்தவர்கள் மட்டுமல்லால், சினிமா விமர்சகர்கள், சினிமா ரசிகர்கள், சினிமாவை எதிர்ப்பவர்கள், மற்றும் இதர துறை சார்ந்த படைப்பாளிகள் என அனைவரும் படிக்கவேண்டிய அருமையான புத்தகம், தமிழில் வெளிவந்துள்ள சினிமா புத்தகங்களில் இது  ஒரு பொக்கிசம்தான் 
வாழ்த்துகள் மீண்டும் ஒரு முறை 



murugesan sajo sundar
murugesan sajo sundar's profile photo
directorsajo@gmail.com
DUET MOVIES

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...