February 24, 2010

விழுந்தபின் எழும் குதிரை- கவிதை








விழுந்தபின் எழும் குதிரையை
எத்த்னை பேர் பார்த்திருக்கிறீர்கள்

எழுவதற்காய் தரையைத்தேடும்
அதன் குளம்புகளின் பதட்டத்தை

தொடையின் இறுக்கத்தை

தன் முதுகை தானே புரட்டுகையில்
எலும்புகள் நொறுங்க
புடைத்து எழுவதை

தொடர்ந்து கேட்கும்
குதிரைக்காரனின் சாட்டை ஒ(வ)லியை

அதனை மூளைக்குள்
வெறும் செய்தியாக மட்டுமே ஏற்றி

எழ த்தவிக் க்கு ம்
அதன் உள்ளூறை ஆற்றலை

அவமானங்களை
வாழ்நாளின்வலிகளை
மண்ணோடு சேர்த்து

உதற தவிக்கும்
அதன் எத்தனிப்பை
விழுந்தமைக்காகஅல்லது
மீண்டெழுதலுக்காக
எவரது சிரிப்பையும்
ஆச்சர்யத்தையும்
பொருட்படுத்தாமல் எழுவதை
மட்டுமே முழு முழு
முழு லட்சியமாக் கிக்
கொண்டு
சடம் பிரதப
ம் பிரத பம்
தாடைகள் இறுக்கி

நாசிகளில் அக்னியை
பெரும் புயலாக்கி
சடம் பிரதப
ம் பிரத பம்
வாலை
ஆகாயத்தில் அலையவிட்டு

பிரளயமே போல
குளம்புகளை தரையில் மோதி உடைத்து
சடம் பிரதப
ம் பிரத பம்
எழும் அதன் அழகில்

ஒளிந்தருக்கிறது
மீண்டெழுதல் குறித்ததொரு
நமக்கான
முடிவற்ற பாடல்

February 15, 2010

கவிதை என்பது யாதெனில் ....கவிதை குறித்த புதிய தொடர்


கட்டுரை,படம்: அஜயன்பாலா



1. காலம்..கவிதை கவிஞன்

கவிதை பற்றியும் கவிதைகள் எழுதுவது பற்றியும் அதன் நோக்கம் செயல்பாடு ஆகியவை குறித்தும் காலம் தோறும் பல்வேறு கருத்துருவாக்கங்கள் உருவாகி வருகின்றன.

தமிழில் எப்படி தொல்காப்பியர் காலம் தொட்டே கவிதையின் அரசியல் மற்றும் அறிவியல்கள் பேசப்பட்டு வந்திருக்கிறதோ அது போல மேற்கிலும் கிரேக்க ,மொழியில் அரிஸ்டாட்டில் காலம் தொட்டே கவிதை குறித்து பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது.

ஒவ்வொருகாலத்திற்கும் கவிதையின் முகம் குரல் அவ்வப்போதான கலாச்சாரம் பண்பாடு பொருளதாரம் சமூக நிலைகளுக்கேற்றவாரு தன்னை உருமாற்றிக்கொண்டே வருகிறது.

இப்படியாக மாறிவருவது எல்லாம் அதன் வடிவமே தவிர
மனதின் நுகர்ச்சி இன்பம் தான் எல்லாகாலத்திலும் கவிதைக்கு ஆதார பின்புலனாக இருந்து இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது.

புலன்களின் வழியிலான துய்ப்பை கடந்து மனித மனம் அறிதலின் மூலமாக துய்க்கும் இன்பம் பெரும்பாலும் கவிதையில் மட்டுமே ஆதாரமாக்கிடைக்கிறது.

மொழி வளத்திற்கும் மனிதனுக்குமிடையிலான முக்கியமான தொடர்பு புள்ளி இதுதான்.

இதுதான் மனிதனை அவனது பொருள்சார்ந்த உடல்சார்ந்த வாழ்விலிருந்து வேறுபடுத்தி மற்றவரைக்காட்டிலும் மேன்மையுள்ளவனாக மாறுவதற்கான இச்சையை அவன் மனதுள் நிகழ்த்துகிறது.

இப்படியான மேன்மையானவர்களுக்கான போட்டியில் இலக்கியம் ஒவ்வொருநாளும் பல்வேறுவிதங்களில் வளர்ந்து மொழியையும் அதுசார்ந்த சமூகத்தையும் வளப்படுத்தி வரலாற்றையும் பண்பாட்டையும் கலாச்சார அடையாளங்களையும் காலம் காலமாக காப்பாற்றி வருகிறது.

கவிதை ஏன்?

ஒரு கவிதையை நாம் ஏன் எழுதவேண்டும்

கவிதை நாம் எழுதாவிட்டால் மொழி என்ன குடியாமுழுகிவிடும் .
அல்லது சமூகத்துக்கு அதனால் என்ன பயன்?

இது போன்ற கேள்விகளை பின் தொடர்ந்து பதிலை நாம் தேடிச்செல்கிற போதுதான் கவிதைக்கும் ஒருசாதாரண மனிதனுக்குமான தொடர்பை அது அவன் வாழ்வோடு எத்த்னை பிணைக்கப்ப்ட்டிருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

முதலில் ஒருகவிதையை நாம் ஏன் எழுதவேண்டும்

இதற்கான பதிலை ஒருவரியில் சொல்லிவிட முடியாது
அதன் பயன்பாடு பலதரப்பட்டது.

இந்த உலகம் ஒரு சினிமாநடிகனுக்கும் அரசியல்வாதிக்கும்
வங்கி ஊழியனுக்கும் , சாதாரண புடவை விற்பவருக்கும் கொடுக்கும் மரியாதையில் நூற்றில் ஒருவருக்குகூட கவிதை எழுதுபவருக்கு கொடுப்பதில்லை.

நான் பங்கெற்ற ஒருசினிமா கதை விவாதத்தின் போது அப்படத்தின் நாயகனுடைய கதாபத்திரம் குறித்து தீவிரமாக அலசப்பட்டது

அப்போது நான் ஒரு பேச்சுக்காக நாயகன் கவிதை எழுதுபனாக என சொல்லத்துவங்கியதுமே பலருடைய முகமும் மெல்ல தன் ஒளியை இழந்து சுணங்க துவங்கியது

காரணம் அவனுக்கு எந்த பொருளாதார மதிப்பீடும் இல்லை

ஒரு அரசியல்வாதி, திருடர்,இடைத்தரகர், உழைப்பை சுரண்டும் முதலாளி, ரிக்‌ஷா ஓட்டுனர், கண்டக்டர், தோட்டி ,கூலிதொழிலாளி, பால்காரர்

இப்படி ஒரு நாயகன் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இத்த்னைக்கும் ஒரு ஓவியனாக கூட இருக்கலாம் .ஆனால் கவிஞனாக இருக்க மட்டும் நம் சினிமாக்கள் அனுமதிக்க மறுக்கின்றன

இத்தனைக்கும் சிலபடங்களில் ஒரு பண்க்கார நாயகன் கவிதை எழுதுபவராகவும் கதநாயகிக்கு அதனை படித்துக்காட்டுபவராகவும் காண்பிக்கிறார்கள் ஆனால்

கவிதையையே முழுநேர தொழிலாக செய்யும் ஒருவனை நாயகனாக காட்ட
நம் சினிமாக்கள் அச்சப்படுகின்றன

இதற்கு என்ன காரணம் தெரியுமா?

கவிஞனுக்கு ஸ்தூலமான திட்டமான ஒரு பொருளாதார பிம்பம் இல்லை

கோடீஸ்வரன் , முத்லாளி, குமாஸ்தா உழைப்பாளி எனும் இந்த நாலுவகைப்பட்டுக்குள் நாயகன் அடக்கப்படுகிறான்

ஓவியனுக்கு கூட பரிதாப்படக்கூடிய வறுமையாளன் அல்லது பொருள் பற்றி அக்கறை இல்லாதவன் என்ற பிம்பம் பொருந்திவிடுகிறது.அதன் மூலமாக உண்டாகும் சோகம் நாயகன் மீதான் இரக்கத்திற்கு உதவிசெய்கிறது

ஆனால் மொழிக்காக அதன் சக்க்ரங்களில் சிக்கி கவிதை எழுதுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கும் ஒருவனுக்கு இந்த சமூகம் தரும் மதிப்பீடு என்ன தெரியுமா?.......
பூஜ்யம்தான் .


அப்படியே அவசியம் வைக்க வேண்டுமானால் சினிமாவுக்கு பாடல் எழுதுபவனாக மட்டும் சேர்த்துக்கொள்கிறார்கள்

ஏனென்றால் அங்கு வருமானம் சேர்ந்துவிடுகிறது

கவிதயின் மூலமாக சாத்தியாமாகும் ஒரே தொழில் இது ஒன்றுதான்

ஆனால் இதன் இன்னொருபக்கம் பிரம்மாண்டமானது கற்பனைகெட்டா அதிசயங்கள் நிரம்பியது. வேடிக்கையானது

சொல்லப்போனால் கவிஞர்களும் மொழி சார்ந்த செயல்பாடுகளும் இல்லாவிட்டால் சமூக இயக்கமே ஸ்தம்பித்துவிடும்.

கவிதை வெளி

ஒரு சமூகத்தில் கவிதையின் பயன்பாடு என்ன என்பதை கவனிப்பதற்குமுன்
இதர கலைகளிலிருந்து கவிதை எவ்வாறு வேறுபடுகிறது என்பதை பார்க்க்லாம்

எல்லா கலைகளுக்கும் இடமும் காலமும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற்ன. ஆடல் பாடல் சிற்பம் ஓவியம் இசை என எந்த கலைகளை எடுத்தாலும் அவற்றின் காலம் குறுகிய அளவினது மட்டுமே.

அதுவும் இருபதாம் நூற்றாண்டின் அறிவியல்மாற்றங்களின் காரணமாக ஊடகங்களில் உண்டான வளர்ச்சி காரணமாக மட்டுமே இதில் சிலமாறுதல்கள்

ஆனால் இலக்கியத்தின் காலமோ எல்லைகளற்றது

யோசித்துபாருங்கள்

நமக்கு முன்னும்பின்னுமாக அது அனந்தகோடி வருடங்களை அதன் தகுதிக்கேற்றார் போல் ஒருகவிதை அல்லது இலக்கிய படைப்பு தக்கவைத்துக்கொள்கிறது.

எத்தனையோகோடிமனிதர்கள் இம்மண்ணில் அரசனாகவும் ஆண்டியாகவும் பிறந்தும் இறந்தும் போய்விட்டார்கள்

ஆனால் இன்றும் நம் மனதில் நிலைத்திருப்பது யார்

எத்த்னையோ ஆயிரம் மன்னர்கள் நம் சூழல் கண்டிருக்கலாம்

எத்தனையோ பேரழகிகள், செல்வந்தர்கள் அதிகாரம் படைத்தவர்கள் வாழும்போது பெரும் கர்வத்துடன் வாழ்ந்து மடிந்தவர்களை
இந்த மொழியும் சமூகமும் கண்டிருக்கலாம்

ஆனால் அவர்களில் எத்தனை பேரை நம் மொழியின் ஞாபகம் தக்க வைத்திருக்கிறது.

வள்ளுவர் காலத்தில் ஆண்ட மன்னனின் பெயர் என்ன

தொல்காப்பியர் காலத்தில் பேரும் புகழும் பெருமையுமாக வாழ்ந்தவர்கள் யார்யார்


கம்பரின் காலத்தில் வாழ்ந்த பேரழகன் யார்

ஆண்டாளைகாட்டிலும் அக்காலத்தில் வனப்புமிகுந்த பேரழகிகள் எத்தனை பேர்

பாரதியின் காலத்தில் அவரோடு வாழ்ந்தவர் எத்தனை கோடி


அத்த்னை பேரில் யாருடைய பெயரையாவது புத்தகங்கள் போற்றுகிறதா

காலம் எழுதும் கலவெட்டில் யார் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இலக்கியங்களின் வெற்றி இதுதான் அது மனிதர்களையும் அவர்களது காலத்தையும் கடந்தது.

ஒருமொழி தன்னை நேசித்தவனை தன் காலத்தில் வஞ்சிக்ககூடும்

ஆனால் அவர்வர் நேசிப்புக்கும் படைப்பாக்கும் திறனுக்குமேற்ப வாழ்தலின் காலத்தை நீட்டி அவர்களையும் அவர்களது படைப்பையும் வரலாற்றின் தூண்களாக நிறுத்துகிறது.

அப்படித்தான் தொல்காப்பியனையும் ,வள்ளுவரையும் ,ஹோமரையும், ஷேக்ஸ்பியரையும் கமபனையும் , இளங்கோவடிகளையும் காளிதாசனையும் பாரதியையும் காலங்களை கடந்தும் தலைமுறைகளை கடந்தும் நூற்றாண்டுகளை கடந்தும் சரித்திரம் இன்னும் வாழவைத்துக்கொண்டிருக்க்கிறது.

இன்னும் இந்த த்லைமுறை கடந்தாலும் அடுத்ததலைமுறைகளில்லும் அவர்களே நிற்பார்கள் நாமெல்லாம் வெறும் புள்ளிவிவரப்பட்டியல்களில் மட்டுமே இடம்பெறுவோம் .

உயர்ந்த இலக்கியத்தின் காரணமாக நம்மில் சிலர் அடையும் இந்தபிரம்மாண்டம்தான் நம்மில் இன்னமும் அது தழைக்கவும் அதன் செயல்பாடு வழித்தடம் ஆகியவற்றை தீர்மானிக்கவும் காரணமாக இயங்கிவருகிறது.

ஒரு ஷேக்ஸ்பியர் ஒரு கம்பன் ஒரு வள்ளுவன் மற்றும் ஒரு பாரதி எழுதியதை போல இன்றும் நாம் அப்படியே எழுதினால் அதைவிட அபத்தம் வேறு எதுவும் இருக்க முடியாது.

ஆனால் அவர்கள் அனைவருக்குள்ளும் உள்ள பொதுமையான பண்புதான் காலம்காலமாக எல்லா இலக்கியத்துக்கும் அடிப்படை

அந்த ரகசியத்தை அதன் மையத்தை கவிதையின் ஆதாரமான இறைச்சியை இக்காலகவிதைகளின் வழி ஊடுருவிபார்ப்பதுதான் இத்தொடரின் விருப்பமும் அவாவும் .

(தொடரும்)
நன்றி :”தாமரை” பிப்ரவரி இதழ்

February 5, 2010

அகிரா குரசேவா மற்றும் ஜப்பானிய சினிமா வரலாறு

குரசோவாவும் ஜப்பானிய சினிமாவும்



வாழ்க்கையில் சில குத்து கள் மறக்க முடியாதது.
சிறுவயதுகளில் பள்ளிவிட்டு வீடுதிரும்பும்போது அதுவரை உடன் வந்த சக தோழன் தன் வீட்டிற்கு திரும்பும் இடம் வந்ததும் நாம் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் ஓங்கி முதுகில் ஒரு குத்து குத்திவிட்டு இந்த அடியை எப்பவுமே மறக்காதே என சொல்லிவிட்டு தலைதெறிக்க ஓடுவான். அந்த சமயங்களில் நடுமுதுகில் உண்டாகும் வலியைவிட அவன் மூல்மாக கிடைத்த ஏமாற்றம்,உடனடியாக அவனி பிடிக்க முடியாமல் போஒன இயலாமை போன்ற மன வலிகளும் சேர்ந்து கண்ணீரை வரவழைக்கும்

அதூபோன்ற மறக்க முடியாத முதுகு குத்தல்களை
உலகின் எல்லா தேசங்களுக்கும் எல்லா இனக்குழுக்களுக்கும் வரலாறு எப்போதாவாது கொடுத்து கதிகலங்க வைக்கும். அப்போழுது எழும் அம்மக்களின் வேத்னை ததும்பும் கண்ணீரானது அவர்களது பிற்கால எழுச்சிகளுக்கெல்லாம் காரணமாக அமையும்.ஒன்று அது போராகவோ,பூகமபமாகவோ, கொள்ளை நோயாகவா,பெரும் பொருளாதார வீழ்ச்சியாகவோ அல்லது சுனாமியாகவோகூட அந்த குத்து இருக்கலாம்

அது போலத்தான் ஜப்பானியரின் எழுச்சிக்கு அடிப்படை காரணமாக இரண்டு முதுகு குத்தல்களை வரலாறு வழங்கியிருக்கிறது. ஒன்று அனைவரும் அறிந்த இரண்டாம் உலக்போரின் இறுதியில் நிகழ்ந்த ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு சம்பவம் . இன்னொன்று அதற்கும் முன்பாக 1923 ல் ஏற்பட்ட பெரும் பூகம்பம். கிtடதட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட ஜப்பானியர்களை அந்த பூகம்பம் பலிவாங்கியது. இந்த வரலாற்று துயரமான சம்பவம் நிகழ்ந்த இரண்டு நாட்களுக்குபின் பூகம்பம் நடந்த இடங்களை பலரும் சென்று பார்த்து தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர். சுற்றிலும் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருந்த அந்த இக்கட்டான சூழலினூடே இரண்டு சிறுவர்களும் உள்ளம் நடுங்கியபடி நடந்து சென்ற்னர். அதில் ஒருவர் அகிரா குரசேவா இன்னொருவர் அவரது அண்ணன். அகிராவுக்கு அப்போது 13வயது அண்ணன் ஹெய்கோ வுக்கு 17 வயது. சுற்றிலும் உயிருக்கு போராடியபடி கேட்கும் மனிதர்களின் மிருகங்களின் அழுகுரல்களை கேட்டதும் அகிரா தலையை திருப்பி பார்க்க முயற்சிக்க அண்ணன் ஹியூகோ திரும்பாதே அவரிடம் கத்தி தலையை முன்னோக்கி திருப்புவாரம் .


பிற்காலத்தில் தன் படங்களில் அதிகமாக காணபடும் அந்த காரம் திகிலுண்ர்வு மற்றும் பயமூட்டும் தன்மைகளுக்கு தன் மனதில் ஆழப்பதிந்த அந்த சிறுவயது நிகழ்ச்சிதான் காரணம் என குரசேவா பிற்பாடு கூறியிருக்கிறார். மட்டுமல்லாமல் தொடர்ந்த அவரது வாழ்வும் ஒருபயங்கரத்தை அவருக்கு முதுகில் சுமக்கவைத்தபடியேதான் இருந்தது.

1910ல் இசாமு,மற்றும் ஷிமா குரசேவா எனும் தம்பதியின் நான்காவது மகனாக டோக்கியாவை அடுத்த ஒரு புறநகர் ஒன்றில் பிறந்தவர் குரசேவா.
அவரது அண்ணன் ஹியூகோ தன் இளவயதில் பென்ஷியாக வேலைசெய்துவந்தவர். ஊமை ப்படங்கள் ஓடும்போது பின்னாலிருந்து கதையை விவரிப்பவருக்கு பெயர் தான் பென்ஷி. ஒரு கட்டத்தில் சத்த சினிமா வந்தபிறகு பென்ஷிக்கள் வேலை இழந்து வீதிக்கு வந்தனர். ஸ்டூடியோக்களின் முன் ஒன்று கூடிபெரும் போராட்டத்தை நிகழ்த்தினர். அகிராவின் அண்ணன் ஹியூகோ தான் அதற்கு தலைமைதாங்கி போராட்டங்களை நடத்தினார்.ஆனாலும் என்ன பலன் ..போன வேலை போனதுதான் .அந்த மன உளைச்சலில் அகிராவின் அண்ணன் ஹ்யூகோ
தற்கொலை செய்து கொள்ள நான்குமாதங்கள் கழித்து காரணமே இல்லாமல் அவரது சகோதரர்கள் மற்ற இருவரும் ஒன்றன் பின் ஒருவராக சொல்லி வைத்தார் போல இறந்து போக அகிரகுரோசோவா திகிலுடன் தனிமரமாக நின்றார். மரணம் அவர் முதுகின் பின்னால் ஒரு கேள்வியாக நிற்க பீதி அவரது ஒவ்வொரு நிமிடத்தையுமாக ஆக்ரமித்துக்கொண்டது.

அதன்பிறகு அவர் மெல்ல திரைப்பட்த்துறைக்குள் நுழைந்து அப்போது புகழ்பெற்றவராக விளங்கிய இயக்குனர் யமமோட்டொ விடம் உதவியாளராக இணைந்து பின் 1943ல் சஞ்சுரோ சுகாட்டா திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானபின் அவரது சிறுவயது பீதி, மரணத்தின் விளிம்பு, அச்சத்தின் மறு எல்லை அவரது திரைப்படங்களில் காட்சிமொழிகளில் பரிணமிக்க துவங்கியது.அவரது பெரும்பானமையான படங்கள் வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இயற்கைக்குமான போரட்டமாக இருப்பதற்கும் இதுவே காரணமாக கருதப்படுகிறது.

1950 ல் அவர் இயக்கத்தில் ரோஷமான் வெளியானபிறகுதான் உலகசினிமாவுக்கு ஜப்பான் பரிச்சயமாக துவங்கியது என்றாலும் பல நல்ல இயக்குனர்கள் அவருக்கும் முன்பாக ஜப்பானிய சினிமாவையும் அத்ன் கலாச்சாரத்தையும் போற்றி பாதுகாத்து வந்துள்ளனர்.இத்த்னைக்கும் சினிமாஜப்பானுக்குள் 1896லேயே நுழைந்து மெல்ல படங்களை த்யாரிக்க துவங்கியிருந்தாலும் அவை பெரும்பாலும் அவர்களது காபுகி நாடகவகை போலவே இருந்த்ன. கென்ஷி மிசோகுச்சி Kenji Mizoguchi,
மற்றும் யசுஜிரொ ஓசு Yasujiro Ozu ஆகியோர் தான் ஓரளவு அத்னை மவுன படங்களின் காலத்திலேயே மீட்டெடுத்தவர்கள். அதிலும் ஓசு ஜப்பானிய சினிமாவின் நியோரியலிஸ தந்தை என போற்றப்பட்டவர். அவரதி திரைப்படங்களில் மனித உறவுகள் மற்றும் ஜப்பானிய கலாச்சராத்தின் தொன்மங்கள் ஆகியவை அழுத்த்மாக்வும் எதார்த்த பாணியிலும் பின்பற்றப்பட்டு வந்தன.ஆனாலும் அவர்களது படங்கள் உலக அரங்கை அது வரை எட்டாமல்தான் இருந்தது. ரோஷ்மான் வெளியாகி உலகசினிமாரசிகர்களின் பார்வை ஜப்பானியசினிமாவின் மேல் கவனத்தை குவிக்க துவங்கியபின்தான் ஓசுவுடன் இன்னும் சில இயக்குனர்கள் அறியப்பட துவங்கினர்.

இன்றும் இந்தியாவில் எப்படி சில நல்ல சினிமா ரசிகர்கள் ரே வை ஏற்காமல் கட்டக்கை தீவிரபடைப்பாளியாக முன்னிறுத்துகிறார்களோ அது போல ஜப்பானில் இன்றும் பலர் பலர் குரோசாவை ஏற்காமல் ஓசுதான் ஜப்பானிய சினிமாவின் தந்தை என புகழ்வர். ரோஷமானின் வெற்றிக்கு பிறகு அடுத்த பத்து வருடத்தில் மூன்று ஜப்பானிய திரைப்படங்கள் உலகசினிமாவை உலுக்கி எடுத்த்ன. அதில் ஒன்று அகிராகுரசேவாவின் செவன் சாமுராய் Seven Samurai, இன்னொன்று ஓசுவின் டோக்கியோ ஸ்டோரி Tokyo Story
இன்றுவரை உலகின் தலைசிறந்த நூறுபடங்களுக்குள் இந்த இரண்டு படங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மூன்றாவது திரைப்ப்டம் ஒருவணிகப்படம் .அணு ஆயுத எதிர்ப்பை முன்னிறுத்தி வெளியான கோஜ்ரா Gojira, எனும் இப்ப்டம் பிற்பாடு ஹாலிவுட்டில் காட்சில்லா Godzilla. என பெயரிடப்பட்டு உலகம் முழுக்க பட்டி தொட்டி எங்கும் ஓடி ஜப்பானிய சினிமாவுக்கு பெரிய வணிக சந்தையையும் ஏற்படுத்திக்கொடுத்தியது மட்டுமல்லாமல் ஹாலிவுட்டுக்கு நிகராக தங்களாலும் படமெடுக்க முடியும் என ஜப்பானியர்கள் இப்படத்தின் மூலம் காலரை தூக்கிவிட்டு போரின் முலம் இழந்த தன்னமபிக்கையை மீட்டுக்கொண்டனர்.

ரோஷமான், செவன் சாமுராய், ரெட் பியர்ட் போன்ற குரசேவாவின் த்லைசிறந்த படைப்புகளின் வெற்றிக்கு பிறகு அதில் நடித்த மிபுனே எனும் கலைஞனை உலகின் தலைசிறந்த நடிகர்ளூள் ஒருவராக உலகசினிமா அடையாளம் கண்டு கொண்டது.

அடிப்படையில் குரசேவா இலக்கியங்களின் மிகப்பெரும் காதலராக இருந்தார்.ஷேக்ஸ்பியரின் படைப்புகளீல்லிருந்து மட்டுமே மூன்று திரைப்பட்ங்களை மீட்டுருவாக்கம் செய்தார். அவரது கிங்லியர் King Lear, நாட்கம் ரான் Ran திரைப்படமாகவும்,மேக் பெத் நாடகம் Macbeth த்ரோன் ஆப் ப்ளட்ட்டாகவும் Throne of Blood,ஹேம்லட் Hamlet நாடகம் பேட்ஸ்லீப் வெல் The Bad Sleep Well எனும் படமாகவும் உருவாக்கம் செய்தார். மட்டுமல்லாமல்
தஸ்தாயெவெஸ்கியின் மற்றொருபடைப்பான இடியட் எனும் நாவலை யும் மற்றும் மாக்ஸிம் கார்க்கியின் நாடகத்தை தழுவி லோயர் டெப்த்ஸ் போன்ற படைப்புகளையும் எடுத்தார்.அவரது மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் இகிரு கூட டால்ஸ்டாயின் சிறுகதை ஒன்றை அடிப்படையாக் க்கொண்டு எடுக்கப்பட்டதிரைப்படம் .அது போல அவரது ஓவ்வொருபடத்திலும் பருவநிலைகளில் ஏதானும் ஒன்று பிராதான பாத்திரமாக இடம் பிடிக்கும் ரோஷ்மானில் மழை, டெர்சு உஜாலாவில் பனிப்புயல், ஸ்ட்ரே டாக் படத்தில் வெப்பம் ஆகியவை குறியீடுகளாக படம் முழுக்க பின்புலத்தில் இயங்கும்.

குரசேவாவின் திரைப்படங்கள் ஒரு சினிமாகற்கும் மாண்வனுக்கு மிகச்சிறந்த பாடம். உலகின் வேறேந்த இயக்குனரின் படங்களையும் இதற்கான முழுதகுதியுடன் ஏற்க முடியாது.கதை திரைக்கதை ஒளிப்பதிவு எடிட்டிங் கலை ஒலிப்பதிவு மற்ரும் இயக்கம் என அனைத்து துறைகளுக்கும் அவரது படங்கள் மட்டுமே இலக்கணம்.அவரது திரைப்படஙக்ள் அனைத்துமே மனிதவாழ்வின் அவலங்களை அத்ன் புதிர்களை குழப்பங்களை மாயைகளை,கற்பனைகளை அழுக்கை வெளிச்சத்தை அத்ன் இருட்டை மட்டுமே தொடர்ச்சியாக தேடிக்கொண்டிருந்தன.இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை அதன் சமன்பாட்டை இடையறாமல் தேடுவதாக அவரது திரைப்படஙக்ள் இருந்தன. அதன் காரணமாகத்தான் உலகைன் த்லைசிறந்த இயக்குனர் என பலராலும் இன்றுவரை ஏகமனதாக கருதப்படுகிறார்.அவரது திரைப்படங்கள் வடிவத்தில் மேற்கையும் உள்ளடக்கத்தில் கிழக்கையும் ஒரு புள்ளியில் இணைப்பவையாக இருப்பதும் அவருக்கு கிடைத்த ஒருமித்த கைதட்டல்களுக்கு இன்னொரு காரணம்

எல்லாகாலத்திலும் சூரியனால் ஒளி மறைக்கப்படும் பகல் விண்மீன்கள் போல சில அதீத மேதைகளின் புகழானது பல திறமையாளர்களுக்கு சேரவேண்டிய நியாயமான புகழை தடுத்துவிடும் . இது போன்ற விபத்து மொசார்ட் காலத்தில் பல இசை மேதைகளுக்கு நிகழ்ந்ததாக கூறுவர் .அது போலத்தான் குரசேவாவின் அதீத புகழ் காரணமாக கிடைக்கவேண்டிய நியாயமான பேரும் புகழும் கிடைக்காது போன ஜப்பானிய சினிமாவின் மற்றொரு கலைஞர் கோபயாஷி. கோபாயாஷியின் படங்களும் பெரும்பாலும் சாமுராய் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கபடுவை ஆனாலும் அதில் அகிராவின் படைபாளுமைக்கு இணையான ஒரு செறிவான காட்சிமொழி அவரது படங்களில் காணப்படும்.இன்னும் சொல்லப்போனால் செறிவிலும் காட்சி அணுகுமுறையிலும் கோபாயாஷியிடம் குரசேவாவைவிடவும் கூடுதலான இறுக்கம் தொனிக்கும்.ஆனால் குரசேவாவிடம் இருந்த இலக்கியத்தன்மை மற்றும் உலகளாவிய பார்வைகள் ஜப்பானின் இதர இயக்குனர்களின் படங்களில் தேடிப்பார்த்தாலும் காணக்கிடைக்கவில்லை.

குரசேவாவின் காலத்தில் அவருக்குபின்னால் வந்து பரவலான கவனத்தை ஈர்த்த மற்ற சில இயக்குனர்களில் நகிஷா ஓஷியாமாவும் ,ஷோகை இமாமுராவும் குறிப்பிடத்தகுந்த இயக்குனர்கள் .இவர்கல ஓஷியாமவின் திரைப்படங்களின் பாலுறவுகாடசிகளையும் அத்ற்கு பின்னால் இயங்கும் மனித மனத்தின் நுண்மைகளையும் சித்தரித்தன.உலகம் காதல் வழியாக காமத்தை அடைந்த போது காமத்தின் வழியாக காதலையும் அதன் உயிர்பறிக்கும் தன்மையையும் அவரது படங்கள் விவரிப்பதாக அமைந்தன.ஹிரோஷி டேஷிகரா என்பவர் இயக்கத்தில்வெளியான வுமன் இந்த டூன்ஸ் Woman in the Dunes (1964)எனும் படம் 1964ல் கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த படத்துக்கான பரிசை வென்று ஜப்பானியசினிமாவின் தரத்தை தக்கவைத்துக்கொண்டது.

இப்படியாக குரசேவாவின் காலத்திலும் அவருக்கு முன்னும் பின்னுமாக பல இயக்குனர்கள் ஜப்பானிய சினிமாவின் தரத்தை உலகுக்கு எடுத்துசென்றிருப்பினும் எவரும் குரசேவா அளவுக்கு படைப்பில் உச்சத்தை அடையவில்லை. உலகில் வடிவம் மற்றும் உள்ளடக்கத்திலும் தொடர்ந்து இலக்கியதரத்தையும் மனிதவாழ்வின் பேருண்மைகளையும் தேடிய இயக்குனர்கள் பட்டியலில் குரசேவாவுக்கே முதலிடம். அவரது திரைப்படங்கள் ஒன்றிலிருந்து ஒன்று அனைத்திலிருந்தும் முழுமையாக வேறுபட்டன.அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் உலக் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இயக்குனர்களான பெர்க்மன் ,தார்க்கோஸ்க்கி போன்றவர்களிடமிருந்து அவர் விலகிநிற்கும் இடம் இதுதான். மேலும் அவர்கலது படங்கள் உண்மையை இய்ற்கையின் வழியாகவும் ஆன்மீகத்தின் வாயிலாகவும் தேடியபோது குரசேவா மட்டுமே அதனை எளிய மனிதர்களின் துயரத்தின் வாயிலாக அவர்களது வேத்னையின் முனகல் வழியாக இத்னை இடையறாது தேடினார். அது போல படைப்பொழுங்கின் மீதான் அவரது காதல் அண்டசராசரத்தின் வடிவங்களுக்கு அப்பாலும் இயங்க கூடியது.அதன் காரணமாக அவர் பல துன்பங்களையும் துயரங்களையும் அவராகவே வருத்திக்கொண்டார்.1975ல் வெளியான டெர்சு உசாலாவில் அவர் எதிர்பார்த்த பனிப்புற்கள் வளர்வதற்கு ஏற்க்குறைய ஓரிருவருடங்கல் வரை வெறுமனே காத்திருந்தார். 1971ல் அவர் ஒருமுறை ஜப்பானிய மரபுப்படி ஹரகிரி எனும் தற்கொலைமுயற்சிக்கு ஈடுபட்டு கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டார்.

அகிராகுரசேவாவால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்கள் அமெரிக்கர்கள்.ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனரிகளான ஸ்பீல்பெர்க்,ஜார்ஜ் லூகாஸ்,மற்ரும் பிரான்சிஸ் போர்ட் கொப்பாலா ஆகியோர் அகிராவை தங்களது குருவாக கருதினர்.குரசேவாவின் படங்கள் பெரும்பாலும் அமெரிக்க இயக்குனரான ஜான் போர்டின் தீவிரபாதிப்பிலிருந்து துவங்கியவை என்பது கூட இதற்கான உளவியல் காரணமாக இருக்கலாம்.தனது குருவுக்கு செய்யும் காணிக்கையாக ஸ்பீல்பெர்க் ஒருபடத்தை எடுக்க அன்பு அழைப்புவிடுத்தார்.1990ல் வெளியான குரசேவாவின் ட்ரீம்ஸ் எனும் அத்திரைப்படத்தில் ஹாலிவுட்டின் இன்னொரு பிரபல இயக்குனரான மார்டின் ஸ்கோர்சி ஒரு முக்கிய பாத்திரத்தில் பங்கேற்று தன்பங்கிற்கு குருகாணிக்கை செய்துகொண்டார்.

குரசேவா பெற்ற பரிசுகள் எதுவும் அவரது படங்களுக்கு ஈடாகாது.அவர் பற்றிய தகவல்கள் பகிரவேண்டியவை ஆல்லது தேடிக்கண்டடைய வேண்டியவை இன்னும் எவ்வளவோ இருக்கின்றன.அவற்றை அவரே எழுதிய some thing like an autobiography எனும் நூலை படிப்பதன் மூலம் ஓரளவு நிறைவேறும்.
வரும் ஆண்டு மார்ச் 23 லிருந்து அகிராகுரசேவின் நூற்றாண்டு துவக்கம் பெறுகிறது .இன்றும் அவர் அறிவு உலகிற்கு இள்மையானவராகத்தன் காட்சியளிக்கிறார்.

அடுத்த இதழில்
(இத்தாலியின் இரண்டு இள்மை காற்று;)

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...