February 21, 2011

கவிதை என்பது யாதெனில்... பாகம் 3


கவிதை என்பது யாதெனில்...
பாகம் 3

அஜயன்பாலா



உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்
1229 ;பொருளதிகாரம் ; தொல்காப்பியம்


”அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்துதணிந்தது காடு –தழல்
வீரத்திற் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்”

பாரதியின் மேற்சொன்ன வரிகளை எப்படி வகைப்படுத்தலாம் ?
செய்யுளா? அல்லது பாடலா? அல்லது கவிதையா?

எதுவாக இருந்தாலும் ஒரு விஷயம் மட்டும் உண்மை
இதற்குள் கவித்துவம் அபராமாய் உறைந்திருக்கிறது.

அதே சமயம் மரபுக்குட்பட்ட எல்லா செய்யுள்களிலும் அல்லது கவிதையிலும் கவித்துவம் இருக்குமா ?

அதேபோல் கவித்துவம் என்பதற்கான அளவுகோள்கள் என்ன
பாடுபொருளை நேரடியாக சொல்லக்கூடிய கவிதைகளை அல்லது செய்யுட்களை எப்படி வகைப்படுத்துவது என்றெல்லாம் கேள்விகள் நமக்கெல்லாம் எழலாம்

ஆனால் இதற்கான பதிலை அத்தனை திட்டமாக கூறிவிடமுடியாது

காலம்தோறும் கவிதையின் முகம் மாறிக்கொண்டேயிருக்கிறது

ஆனால் எந்த செய்யுள்களில் பாடலில் அல்லது கவிதையில் கவித்துவம்
தொக்கியிருக்கிறதோ அவை காலம் தோறும் மனிதமனத்தை இன்புறசெய்து தன்னையும் தமிழையும் காப்பாற்றிக் கொண்டுவருகின்ற்ன.

இதனை எளிமையாக சொல்வோமானால் பூக்கள் எல்லாவற்றிலும் வாசம் இருப்பதில்லை

ஆனால் வாசம் மிகுந்த பூக்கள் தன்னில் ஒருகவர்ச்சியை தக்கவைத்து மனித உணர்ச்சிகளோடு நெருங்கி அமர்ந்துவிடுகின்றன.

பூக்களின் வாசனை போலத்தான் கவிதையில் கவித்துவம் உறைநிலையில் வார்த்தைகளுக்குள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் கவிதைகள் காலங்கள் கடந்தும் தம் இளமையை தக்கவைத்துக்கொள்கின்றன.


கவித்துவம் என்பதை விளக்க வார்த்தைகளில்லை அது அனுபவம் சார்ந்தது.

மனித உணர்ச்சிகளினூடே இருவேறு அறிவுலகங்களுக்குள் நடக்கும் புணர்ச்சி என அதனை கூறலாம்

ஒருவன் தனக்கு தெரிந்ததை சில வார்த்தைகள் மூலம் கொடுக்கிறான்
இன்னொருவன் அத்னை வாசிப்பதன் மூலம் எடுத்துக்கொள்கிறான்

எடுப்பவனும் கொடுப்பவனும் வேறுகாலத்தில் வேறு வேறு வெளியில் இருக்கின்றனர்

எனவே சொற்கள் மூலம கவிதை அவர்களுக்கிடையில் பாலத்தை அமைத்து உணர்ச்சியையும் அனுபவத்தையும் கருத்தையும் கடத்துகிறது.

இது எவ்வளவுக்கெவ்வளவு ஒரு படைப்பாளனுக்கும் வாசிப்பவனுக்குமிடையில் ஒரு அணுக்கமான அளவில் நடைபெறுகிறதோ அவ்வள்வுக்கவ்வளவு அந்த கவிதை காலங்களை கடந்து செல்லும் தகுதியை பெறுகிறது.

அப்படி அணுக்கமாக கவித்துவத்தை கடத்தும் பாடல்களில் ஒன்று பாரதியின் மேற்சொன்ன அக்கினி குஞ்சொன்று பாடல்


ஒரு தேசத்தின் விடுத்லை உணர்ச்சி கொழுந்துவிட்டெரிந்துகொண்டிருந்த காலத்தில் அம் மக்களிடையே தேசப்பற்றையும் போராட்ட உணர்வையும் தட்டி எழுப்ப உருவாக்கப்பட்ட பாடல்

வந்தே மாதரம் சுதந்திர பள்ளு என பாரதி இதுபொன்ற பாடல்கள் பல எழுதியிருப்பினும் இந்த நான்கு வரி பாடல் காலத்தால் மெருகேறிக்கொண்டேவருவதற்கு காரணம் அதனுள் உறைந்து நிற்கும் கவித்துவம்

தான் சொல்லவந்த கருத்தை நேரடியாக கூறாமல் வேறொன்றை கூறி அதன் மூலம் மேலும் ஆழமாக நம் மனதில் அக்கருத்தை பதிய வைப்பதன் பொருட்டு இப்பாடலில் பாரதி பயன்படுத்திய சொல் மற்றும் காட்சி படிமங்கள் ஆகியவை கவித்துவத்தின் சாரத்தை கண்டுணர ஏதுவாக இருக்கின்றன.

இந்த படிபங்களினூடேதான் பாடலின் இறைச்சி பொருளானது வார்த்தைகளுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறது.


மேற்சொன்ன பாடலில் ஒரு விடுதலைக்கான போரில் இளையோனும் மூப்போனும் வேறில்லை உணர்ச்சியின் வேகம் ஒத்தகையது தான் எனகூற வரும் பாரதி அதற்கு உவமையாக அக்னி துண்டம் ஒன்றை குறிப்பிடுகிறார்.
பொறியாக இருந்தாலும் பெரும் சுவாலையாக இருந்தாலும் அக்னியின் வேகமும் அத்தகையது என கூறுகிறார்.

இது நேரடியான காட்சி உவமை. அத்தோடு நில்லாமல் அக்னி எனும் சொல்லோடு குஞ்சு என்ற பதத்தையும் சேர்க்கிறார் .குஞ்சு என்பது பொதுவாக பறவை குஞ்சுகளை குறிக்கும் சொல்


நெருப்புதுண்டத்தை அக்கினிகுஞ்சொன்று என சொல்வதால் அதற்கு ஒருபறவையின் சித்திரம் மெல்ல நம் மனதில் உருக்கொள்கிறது மேலும் அக்கினி குஞ்சொன்றை ... கண்டேன் எனும்போது நெருப்பின் அஃக்றிணைத் தன்மை முழுவதுமாக விலகி அத்ற்கு உயிர்த்தனமை கூடுகிறது . மேலும் அதை அவர் பொந்தில் வைத்தாக கூறும்போது அந்த அக்கினிக்குள் ஒருபறவையின் இயங்குதனமை முழுமையாக சேர்ந்துவிடுகிறது . பொந்து என்பது பறவைகளின் இருப்பிடம் என்பது ஏற்கனவே நம் அறிவில் பொதிந்த சேதியாதலால் வாசிப்பனுபவத்தில் நாமறியாமல் பறவையின் சிறகடிப்பு அதன் பறக்க தவிக்கும் எத்தனிப்பு இவையும் அந்த நெருப்புதுண்டத்துக்கு சேர வரிகள் மனதில் ஒரு உயிரியக்கத்தை துவக்கிவிடுகின்றன.

இப்படியாக கவிப்பிரவாகத்தினூடே குஞ்சு மற்றும் பொந்து சொற்களின் மூலம் ஒரூ உவமானம் தொடர்ந்து அதன் பொருத்தபாடான இன்னொரு உரிப்பொருளை சில வார்த்தைகள் மூலம் சேர்த்துக்கொண்டு இரண்டும் ஒன்றுடன் ஒன்றாக இறுகி ஒரு கட்டிடக்கலைஞனுக்கான தேர்ந்த நுணுக்கத்துடன் கவிஞனின் தன்னியல்பில் வார்த்தைகூட்டங்களுடன் பீறிட்டுவெளிக்கிளம்பிவரும்போது அவை படிமமாக நமக்குள் தேங்கி உயிரியக்கம் கொள்ள துவங்குகின்றன. .

அடுத்த வரி ”வெந்து தணிந்தது காடு” எனும்போது அந்த பறவையின் இயக்கத்துடன் கூடிய தன்னை அழித்து பெரும்படையை அழிக்கவல்ல ஒரு போராளியின் பிம்பம் நம்முள் நாமறியாமல் இறங்கிவிடுகிறது. ஆனால் மனதின் இத்தனை செயல்பாடும் உணர்ச்சி அளவில் நம்முள் ஆழத்தில் செயல்படுவதால் அதன் தாக்கத்தை மட்டுமே நாம் உணருகிறோமே ஒழிய அறிவின் மேல் தளத்தில் வைத்து இது எதனால் உண்டாகிறது என யோசிப்பதில்லை..

இப்படியாக ஏற்கனவே வாசகனுக்குள் இருக்கும் ஞாபக அடுக்குகளை சில வார்த்தைகளின் மூலம் பயன்படுத்திக்கொள்கிறபோது பிரதிக்குள் கவிதை இன்பம் ஒளிந்திருந்து நம்மை மீண்டும் மீண்டுமாய் வாசிக்க தூண்டிவிடுகிறது


அதேபோல இக்கவிதையில் சொல்லப்பாடத சேதி ஒன்று காட்சி இன்பத்தின் காரணமாக இருக்கிறது .

இக்காட்சி இன்பத்தை பற்றி சுலபமாக விளக்க திரைப்பட தொழில் நுட்பத்தை பயன்படுத்தி விவரிப்பது சற்று சுவாரசியமாகவும் இருக்கும் என நம்புகிறேன்
..
அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு.


எனும் முதல் மூன்று வரிகளில் பாரதி நான்கு காட்சிகளை சுட்டுகிறா.
ர்
1.”அக்கினி குஞ்சொன்று கண்டேன்”
முத்லாவது- மிட்ஷாட் -அக்கினி குஞ்சு

2.”அதனை அங்கொரு காட்டிடை”

இரண்டாவது- ஹை –வைட் ஆங்கிள் ஷாட்- பிரம்மாண்டமான காடு

3. ”பொந்தொன்றில் வைத்தேன்”
மூன்றாவது- க்ளோசப் ஷாட்- காட்டில் ஒருமரத்தின் பொந்து .அப்பொந்தில்
அக்கினி குஞ்சை ஒரு கை அங்கு வைக்கிறது

4.”வெந்து தணிந்தது காடு””

நான்காவது –”வெந்து தனிந்தது காடு”

இப்போது காமிராபுகைமூட்டத்தின் நடுவே மெல்ல இடமிருந்துவலமாக நகர்ந்தபடி அசைகிறது அந்தபிரம்மாண்டமான காடு இருந்த இடம் இப்போது
முழுவதும் கருகி சாம்பல் காடாக அணைந்தும் அணையாமலும் புகை மண்டிக் காண்ப்படுகிறது..காமிரா இப்போது உயரஎழுந்து கருகிகிடக்கும் மூழுபரப்பையும் காண்பிக்கிறது.

ஒரு முழு காடும் எரிகிறபோது உண்டாகும் பெரும் காட்டுத்தீயின்
சுவாலை, தீயின் வெம்மை ,அது எரிந்து அணைவதற்கு உண்டாகும் காலம் ஆகிய எத்னையும் ஆசிரியர்விவரிக்க வில்லை .

ஆனால் அந்த அனுபவம் நம்முள் ஒரு ஆழ்ந்த கனபரிமானத்தை தோற்று வித்து கவிதையின் பாடுபொருளான நமக்குள் உறைந்துகிடக்கும் வீரத்தையும் தேசப்பற்றையும் அது இயல்பாகவே விசுவரூபமெடுக்கசெய்வதாக இருக்கிறது.

(தொடரும்

February 16, 2011

உலக சினிமா வரலாறு: வண்ணங்களின் வருகையும் ஹாலிவுட்டின் இசைபடங்களும்:

மறுமலர்ச்சி யுகம் : 31
gean kelly



fredastair with ginger rogers



உலக சினிமா வரலாறு
ஹாலிவுட் சினிமா

சினிமா கலையா வியாபாராமா என கேள்வி எழுந்த போது
ஐரோப்பிய நாடுகள் அது கலை உன்னதமான கலை என்றது
ஹாலிவுட் அது வியாபாரம் த்ரமான வியாபரம் என்றது
1930க்கும் 70க்குமிடைப்ப்ட்ட காலங்களில் சினிமா ஆகசிறந்த கலை எழுச்சிக்கு ஐரோப்பிய இயக்குனாரகளல் உந்தி தள்ளப்பட்டு அதன் சிகரத்துக்கு இழுத்துவரப்பட்ட அதேநேரம் ஹாலிவுட் வணிக சினிமாவில் பல பரிசோத்னை முயற்சிகளில் இறங்கியது.அதில்சில இயக்குனர்கள் மற்றும் படைப்பாளிகள் பல முத்திரைகளை பதித்து உல்கசினிமாவுக்கும் ஹலிவுட்டுக்கும் பெருமை சேர்த்தனர். அவையனைத்திலும் வியாபாரம் தான் நோக்கமாக இருந்தாலும் அந்த முயற்சிகளனைத்தும் குறிப்பிடத்தக்க படைப்புகளாக வெளிவந்த்ன . முழுவதும் இசைமற்றும் நடனத்துக்கு முக்கியத்துவம் தரப்ப்ட்ட இசைப்ப்டங்கள் , நாயகனை கொள்ளை கூட்ட ஆளாகவோ அல்லது அவர்கலீன் த்லைவனாகவோ சித்தரித்து தீமையின் அறத்தை பேசும் கேங்ஸ்டர் வ்கைப்ப்டங்கள் நகைச்சுவைபடங்கள் என பலவகையிலிருந்த்ன ..இவற்றோடு குவாடிஸ் ஸ்பார்டகஸ்,பென்ஹர் டென் கமாண்மண்ட்ஸ் பொன்ற இதிகாசம் மற்றும் புராணங்களை அடிப்ப்டையாக கொண்டு பெரும் பொருட்செலவில் உருவாக்கப்ப்ட்ட பிரம்மாண்ட படைப்புகளும் வெளியாகி உல்கசினிமாவுக்கும் தொழில் நுட்பத்துக்கும் வளம் சேர்த்த்ன இவர்களின் சாத்னை பெரும்பாலும் பொழுது போக்கு வகையை சார்ந்தவை என்றாலும் வரலாற்றில் அவை குறிப்பிடத்தகுந்த இடத்தை பெற்றுள்ளன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை

இசைப்படங்கள்

1.விகட்ர் பிளமிங்

வண்ணபடங்களின் மீதான் முயற்சி சினிமாக்ண்டுபிடிக்கப்ப்ட்ட துவக்க காலத்திலிருந்தே மிலி போன்ற மேதைகளால் பரிசோதனை செய்யப்பட்டு வெளீயிடப்பட்டு வந்தது என்றாலும் அவை வண்ண பிலிம் சுருளில் அல்லாமால் பிற்பாடான படகலவை பட்ட்றைகளில் உருவாக்கப்பட்டு வந்த்ன .ஆனாலும் முதன்முறையாக பிரத்யோகமான முழுமையான வண்ணப்படம் எனும் பெருமையை உருவாக்கிய பெருமை இயக்குனர் விக்டர் ப்ளெமிங் கையே சாரும் . 1939 ஒரே ஆண்டில் இவர் இயக்கத்தில் உருவான இரண்டுபடங்கள்தான் ஹாலிவுட்டின் முழுமையான வண்ணபடங்கள். இரண்டுமே வெவ்வெற்று விதங்களில் வரலாற்ரில் நிலைத்துநின்றபடங்கள். அதில்முத்லில் வெளியான ப்டம் wizard of oz விசார்ட் ஆப் ஓஸ் .அதிசய உலகங்களும் வினொத உருவசித்திரங்களுமாக நிரம்பியிருந்த இப்படம் முழுவதும் பாடல்களால் ஆன இசைப்ப்டம். ஹாலிவுட் வரலாற்றில் இசைபடங்கள் எனப்படும் முக்கியமான அத்தியாயத்தில் இந்த படத்துக்கென எப்போதும் ஒருமுக்கியத்துவம் உண்டு சிறந்த ஐந்து இசைப்ப்டங்கள் எண்ற பட்டியலில்லும் எல்லா காலத்திலும் இடம்பெற கூடிய படமாக இது இருந்துவருகிறது. அதே போல பிளமிங் இயக்கத்தில் தொடர்ந்து அதே ஆண்டில் வெளியான் இன்னொரு வண்ணப்படம் கான் வித்த விண்ட் . மார்கரட் மிட்செல் என்பவர் எழுதிய அமெரிக்காவின் உள் நாட்டு போரின் போது உண்டாகும் காதலை அடிப்படையாக கொண்டு எழுதப்ப்ட்ட இந்நாவல் 1936ல் வெளியாகி அவ்வாண்டின் புலிட்சர் பரிசையும் ஈட்டியிருந்தது .
இக்கதைக்கு சிட்னி ஹாவர்ட் திரைக்கதை எழுத புகழ்பெற்ற நட்சத்திரங்களான் கிளார்க் கேபிள் மற்றும் விவியன் லீ ஆகியொர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்த்னர். அந்த் ஆண்டின் ஆஸ்கார் விருத்துக்கு போட்டியிட்டு கிடத்ட்ட பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை இப்ப்டம் வென்று ஹாலிவுட்டின் எல்ல்காலத்திலும் புகழ்மிக்க காவியமாக நிலைத்து நின்றது.

இப்படியாக ஒரே ஆண்டில் த்னது அடுத்தடுத்த இரண்டு படங்களீன் மூலம் ஹாலிவுட்டில் அழுத்தமாக முத்திரைபதித்த விகடர் பிளமிங் அடிப்படையில் ஒரு சண்டைபயிற்சியாளராக சினிமாவுக்குள் நுழைந்து பின் காமராமேனாக மாறி இயக்குனராக அவதரமெடுத்த்வர்.

இந்த இரண்டுபடங்கள் வண்ணபடங்களுக்கான அலையை ஹாலிவுட்டில் துவக்கி வைத்தாலும் அதற்குண்டான பெரும் பொருட்செலவுகாரணமாக மக்கள் கறுப்பு வெள்ளை படம் எடுபபதிலேயே தொடர்ந்து கவனம் செலுத்திவந்தனர்.

2.ப்ரெட் ஆஸ்டர் & ஜிஞ்ஜர் ரோஜர்ஸ்
fred astaire and ginger rogers

இருவருமே டாப் டான்ஸ் எனும் தங்களது நடனத்தால் ஹாலிவுட் இசைப் படங்களின் மறக்க முடியாத ஜோடிகளாக கொடிகட்டி பறந்த்னர் .இருவரது நான்கு கால்களும் இணைந்து ஆடிய இசைபடங்கள் மொத்தம் பத்து. பத்து திரைப்படங்களும் இன்றும் பார்வையாளர்களை கட்டி போடும் இசை நடன காவியங்களக இன்றும் விமர்சகர்களால் வரவேற்கபடுகின்றன .இருவருமே அமெரிக்கவின் புக்ழ்பெற்ற வாடுவெல்லி நடனகுழுவில் தங்களது சிறுவயதிலிருந்து பயிற்சிபெற்று நடனமாடிவந்தவர்கள் . இவர்களூள் ப்ரெட் ஆஸ்டர் முன்னதாக திரைக்கு நடனம் ஆடவந்து புகழ்பெற்று வந்தார் தனது படங்களீன் நாயகிக்கு நடனம் கற்று தர ஒரு பெண்ணை தேடிய போதுதான் அறிமுகமானார் ஜிஞ்ஜர் ரோஜர்ஸ். தன் பதினேழாம் வயதில் திரும்ணமாகி அந்தவருடமே விவாகரத்தும் ஆகியிருந்த ஜிஞ்ஜர் ரோஜர்சின் நடனதிறமையை கண்ட ப்ரெட் ஆஸ்டர் ஆவரையே நாயகியாக நியமித்தார்,

1933ல் வெளியான Flying Down to Rio ப்ளையிங் டவுன் டு ரியோ தான் இருவரும் இணைந்துநடித்த முதல்படம் .பிறகு The Gay Divorcee , Roberta,
Top Hat என 1939வரை அடுத்த் ஆறு ஆண்டுகளில் இருவரும் ஒன்பது படங்கள் தொடர்ந்து இணைந்து ஆடி இசைப்படங்களின் அழிக்க முடியாத சகாபதமாக விளங்கினர். 39க்குபின் சரியாக பத்து வருடங்கள் கழித்து இருவரும் இணைந்து இறுதியாக ஒருபடம் ஜோடி சேர்ந்த்னர் . THE BARKLEYS OF BROADWAY (1949) . அவர்கள் இருவரும் இணைந்து நடித்த கடைசிபடமான இப்ப்டம்தான் அவர்கள் நடிப்பில் வெளியான ஒரே வண்ண படமும் ஆகும் .
3. வின்சன்ட் டி மின்னளி

Vincente Minnelli

An American in Paris (1951), Brigadoon (1954), Kismet (1955), and Gigi (1958) போன்ற புகழ்பெற்ற இசைப்ப்டங்கள் முலம் ஹாலிவுட் இசைப்டங்களுக்கு பெருமை சேர்த்தவர் வினசண்டி மின்னலி. துவக்கத்தில் நாடகங்களுக்கு நடன ஒத்திகை செய்துவந்த மின்னளியின் முத்லபடம் Cabin in the Sky (1943) இரண்டாவதுபடம் Meet Me in St. Louis இந்தபடத்தின் படப்பிடிப்பின்போதுதான் நாயகி ஜூடி கர்லண்டின் மீது காதல்வயப்பட்டு திருமண்ம் செய்துகொண்டார் இருவருக்கும் பிறந்த மகள் லிசா மின்னளி.பின்னாளீல் ஆஸ்கார்பரிசுபெற்ற புகழ்பெற்ற பாடகியாக திகழ்ந்தார்.

தனது Gigi (1958) ப்டத்துக்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் பரிசுபெற்ற இயக்குனர் மின்னளி அக்காலத்தில்புக்ழ்பெற்று விளங்கிய நடிகர்கள் Spencer Tracy, Gloria Grahame, Kirk Douglas, Anthony Quinn, Arthur Kennedy, Shirley MacLaine and Martha Hyer. என அனைவரையும் தன் இசை நடன படங்களில் நடிக்கவைத்து புகழீட்டிதந்துள்ளார். 1986ம் ஆண்டு இவர் இறப்பதற்கு ஒருவாரத்திற்குமுன் பிரெஞ்சு அரசாங்கம் இவரது திரையுலக சாத்னைக்ளை பாரட்டி , the Commander Nationale of the Legion of Honor, எனும் விருதை வழங்கி கவுரவித்துள்ளது .

4,ஜீன் கெல்லி
Jean Kelly

அமெரிக்க இசைபடங்களின் வரலாற்றில் ப்ரெட் ஆஸ்டருக்குபிறகு வந்த நடன நட்சத்திரம் ஜீன் கெல்லி. துவக்கத்தில் ப்ரெட் ஆஸ்டரின் ரசிகனாக இருந்த கெல்லி பிற்பாடுதானும் அதுபோல ஹாலிவுட்டின் நடன நட்சத்திரமாக மாற விரும்பி திரைப்படதுறைக்குள் வாய்ப்புதேடிஅலைந்தார். 1942. For Me and My Gal
இவரது முதல்படம் . ஆனால் இப்ப்டம் சரியாக போகவில்லை. துவக்கத்தில் நடித்த மற்ற சில படங்களும் படு தோல்வியை தழுவின. இரண்டுவருடம் ராணுவசேவைக்கு சென்று திரும்பினார் .1951ல் வெளியான் அமெரிக்கன் இன் பாரீஸ் An American in Parisஎனும் ஒரேபடம் இவரை உச்ச நட்சத்திரமாக மாற்றியது . இதுநாள் வரையிலுமான அமெரிக்காவின் முழுவதுமான இசை வகைப்பாட்டு படங்களில் மிகசிறந்தபடமாக இரண்டு ப்டங்கள் கருதப்படுகின்றன. அவற்றில் அமெரிக்கன் இன் பாரீஸ் ஒன்று இரண்டாவதாக கருதப்படும் படமும் ஜின்கெல்லி நடித்த படமே .அது அடுத்த வருடமே வெளியாகி அமெரிக்க பட்ங்களின் வசூல் வரிசையில் பெரும் சாத்னை நிகழ்த்தியது அத்திரைப்ப்டம் சிங்கிங் இன் தி ரைன் (1952) Singin' in the Rain. மவுனபட காலங்களில் பின்னணி இசைக்கலைஞர்கள் தியேட்ட்ரகளீல் பாத்திரங்க்ளுக்கு வாய் அசைப்பதும் அவ்வப்போது பாடல் பாடுவதுமாக தொழிலில் கொடிகட்டிபறந்த்னர். சத்தசினிமா வந்ததும் நடிகர்களே பாட துவங்கியபின் இந்த திரைமறைவு கலைஞர்கள் வேலைவாய்ப்பு இழந்து வீதிக்கு வந்த்னர் .அப்படி வீதிக்கு வந்த கலைஞர்கள் சத்த சினிமாவில் நடிகர்களாக மாறி எப்படி சாத்னைசெய்தார்கள் என்பதுதான் கதை .முழுவதும் பாடலிம் நடனமுமாக இருந்த இப்ப்டத்தில் ஜீன்கெல்லி இணை இயக்குனராகவும் பணிபுரிந்தார்.
இப்ப்டத்தில் இவரது அபாரமான கலைசேவையை பாராட்டி ஆஸ்கார் இவருக்கு சிறப்பு விருது தந்து கவுரவப்ப்டுத்தியது. 1996.ன் ஒரு நாளில் உறங்கிக்கொண்டிருக்கும்பொது இறந்து காலத்தில் உறைந்து போனார் ஜீன்கெல்லி





5.ராபர்ட் வைஸ்

ஜீன் கெல்லிக்கு பிறகு அமெரிக்க இசை படவரலாற்றின் முக்கிய நட்சத்திரம் ராபர்ட் வைஸ் .திரைப்பட த்யாரிப்பாளர் இயக்குனர்
திரைப்ப்ட மொழி ஆளுமையில் தனித்த்ன்மை கொண்டவரான ராபர்ட் வைஸ் இயக்கிய இரண்டு படங்கள் இசை மற்றும் நடன ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் திரைப்ப்ட மொழி மற்றும் புதிய உத்திகளின் மேல் ஆர்வம் கொண்ட பலருக்கும் மிகசிறந்த பாடபுத்தகமாய் விளங்குபவை
1961ல் வெளியான் வெஸ்ட் சைட் ஸ்டோரி West Side Story (1961)
மற்றும் 1965ல் வெளியான் சவுண்ட் அப் மியூசிக் The Sound of Music
இவைதான் அந்த இரண்டுபடங்கள் இரண்டும் இவரே இயக்குனர் இவரே தயாரிப்பாளர். இவற்றூள் வெஸ்ட் சைட் ஸ்டோரி ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் கதையை 60களின் இளைஞர்க்ளின் உலகுக்கு ஏற்றார் போல் மாற்றி உருவாக்கப்ப்ட்ட திரைக்கதை. தொழில் நுடபத்தில் இன்றைய நவீன படங்களுக்கும் சவால் விடும் உயந்த தொழில் நுட்பம். பெரும்பாலும் இரவில் எடுக்கப்ப்ட்ட இப்ப்டம் ஒளிப்பதிவாளர்களுக்கு ஒருநல்ல கையேடு என்று கூட சொல்லலாம். அந்தவருட ஆஸ்கார் போட்டியில் இப்ப்டம் மொத்தம் பத்து விருதுகளை வென்று சரித்திர சாத்னை படைத்தது . ஜெர்மி ராபிண்ஸ் Jerome Robbins எனும் நண்பரோடு சேர்ந்து இப்படத்தை அவர் இயக்கியிருந்த காரணத்தால் சிரந்த இயக்குனருக்கான் விருதை தன் நண்பருடன் சேர்ந்து பகிர்ந்துகொண்டார்.

அதுபோல 1965ல் வெளியன் சவுண்ட் ஆப் மியூசிக்கின் பாடல்கள் இன்றளவும் பிரசித்தம் .இந்தபடமும் அந்தவருடத்துக்கான் ஆஸ்கார் போட்டியில் கலந்துகொண்டு ஐந்து விருதுகளை வென்று சாத்னை படைத்தது. மட்டுமல்லாமல் இப்படம் வசூலில் ஏற்படுத்திய மகத்தான சாத்னையை அடுத்த பத்துவருடங்கள்ளுபிறகு வந்த ஸ்டார் வார்ஸ் எனும் படத்தால் மட்டுமேமுறியடிக்க முடிந்தது.

(தொடரும்)

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...