December 30, 2010

என்னை காதலனாக்கி பிரியும் 2010


நன்றி என் இணைய தள நண்பர்களே!

இந்த வருடம் 2010என் எழுத்துலக வாழ்வில் பல நிகழ்வுகள்.
இந்த ஆண்டில் இணையதளத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மேலும் என்னை அதிக பொறுப்புள்ளவனாக மாற்றி இருக்கிறது. நதிவழிச்சாலை மற்றும் எந்திரன் விமர்சனம் தமிழ் சினிமாகட்டுரைகள் ஆகியவை இந்தவருடத்தின் சிறப்புகள். தொடர்ந்து கிடைக்கும் உங்களது ஆதரவு என்னை மேலும் பயனுள்ள மரமாக மாற்றுகிறது. பரபரப்புக்கு ஆதாராமாக விளங்கும் சர்ச்சையான பதிவுகள் எதையும் எழுதுவதில்லை என்பதை ஒருதவமாக மேற்கொண்டு இந்ததளத்தில் எழுதி வருகிறேன். அது போல கூடுமானவரை எழுத்துபிழைகள் இல்லாமல் பதிவுகள் இடுவதை இந்த ஆண்டின் சபதமாகவே எடுத்துக்கொள்கிறேன்

Ajayanbala.blogspot.ஆக இருந்த இந்த தளத்தை ajayanbala.in ஆக மற்றிதந்த நண்பர் ப்ரவீண் அவர்களுக்கு என் ப்ரத்யோக நன்றி



அதே போல ஒரு எழுத்தானாக இந்த ஆண்டின் 2010 ல் மகத்தான சாதனையாக செம்மொழி சிற்பிகள் எனும் என்னுடைய நூல் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டை ஒட்டி வெளியானது. ஆப்ரா மீடியா நெட்வொர்க் எனும் பதிப்பகத்துக்காக அந்நூலை எழுதினேன். கிட்டதட்ட ஆறுமாதங்கள் இந்நூலுக்காக நான் கடுமையாக உழைத்துள்ளேன். மொத்தம் 113 தமிழ் அறிஞர்களை பற்றி தமிழுக்கு அவர்கள் ஆற்றிய தொண்டை சிறு வரைவுக்குள் ஆட்படுத்தும் நூல் இது. அவர்களது வாழ்க்கையோடு நான் கரைந்த அனுபவம் எனக்குள் பலரது வாழ்வின் எச்சங்களை கரைத்து என் பாதையை மேலும் ஆழமுள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றியது. மாநாட்டை ஒட்டி இந்நூல் வெளியானதால் புத்தக வடிவம் திமுக கட்சி சார்பாக அமைந்தது தவிர்க்க முடியாத நிகழ்வு ஆனாலும் கடந்த் ஆண்டில் என் வாழ்வின் சாத்னையாகவே இந்நூலை கருதுகிறேன். இன்றல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் இந்த நூல் தன் முக்கியத்துவத்தை முழுமையாக அடையும் என்ற நம்பிக்கை இருகிறது.

அது போல நாயகன் தொடருக்காக எழுதப்பட்ட நூல்கள் அனைத்தும் விகடன் பிரசுரம் வாயிலாக வெளியாகி தொடர்ந்து பலபதிப்புகளை கடந்து கொண்டிருக்கின்றன.

வான்கா ஆழி பதிப்ப்கம் வெளியீடாக வந்து வரவேற்பை பெற்றது.




இந்தவருடம் இன்னும்
1.பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்
2.மார்லன் பிராண்டோ தன் சரிதம் மறுபதிப்பு
ஆகியவை புத்த்க கண் காட்சிக்கு வர உள்ளன

இன்னும் 2011ல்
1. நாயகன் சேகுவாரா
2. மயில்வாகனன்மற்றும் கதைகள் (மறுபதிப்பு )
3. டிங்கொ புராணம் , (எனது முதல் கவிதை தொகுதி)
4. உல்கசினிமா வரலாறு மவுன யுகம் (மறு பதிப்பு ),
5. உலகசினிமா வரலாறு இரண்டாம் பாகம் மறுமலர்ச்சி யுகம்
6. நதிவழிச்சாலை (கட்டுரைகள்)
7. நீரூற்று இயந்திர பொறியாளன் (நாவல்)
8 பகல் மீன்கள் (நாவல்)
9. மலைவீட்டின் பாதை (இரண்டாவது சிறுகதை தொகுப்பு)

போன்ற நூல்கள் வெளியாக உள்ளன.
ஒவ்வொரு நூல் வெளியகும் போதும் என் வாழ்வில் எழுத்தாளனாக மாற வேண்டும் என்பதை கனவாக சுற்றிதிரிந்த நாட்களை ஞாபகபடுத்துகின்றன... தொடர்ந்து இந்த வலைப்பதிவின் மூலம் உங்களொடு உரையடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். நன்றி இதோ இன்னும் பன்னிரண்டு மணி நேரத்துள் என்னை வசீகரிக்க அடுத்த காதலி வந்துகொண்டிருக்கிறாள்.இப்போதே அவளுக்கான முத்தங்களை தயாரித்தபடி காத்திருக்கிறேன்

December 25, 2010

8வது சென்னை உலக திரைப்படவிழா:. இரண்டு:












(24-12-2010 தினமணி கண்ணோட்டம் பகுதியில் வெளியான கட்டுரை)

இதற்குமுன் நடந்த 7 உலக திரைப்ப்ட விழாவுக்கும் இப்போது நடந்துகொண்டிருக்கும் 8வது உல்க திரைபடவிழாவுக்கும் பல வித்தியாசங்கள்.இதற்குமுன் 35 எம்.எம் மென்றால் இம்முறை சினிமாஸ் கோப். தமிழக அரசாங்கத்தின் 25 லட்ச நிதி உதவி மற்றும் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கும் காட்சியியல் துறை மாணவர்களுக்கும் விழா நிர்வாகம் கொடுத்திருந்த இலவச அனுமதி ஆகியவைதான் விழாவின் இந்த திடீர் பிரம்மாண்டத்துக்கு காரணம். உட்ல்ண்ட்ஸ், உட்லண்ஸ் சிம்பொனி .பிலிம்சேம்பர் மற்றும் ஐ நாக்ஸ் என நான்கு அரங்கங்களில் பத்து நாட்கள் நடந்த விழாவில் விஐபி ரெட் கார்பட் ஷோ ... தினசரி புல்லட்டின்..நட்சத்திர விடுதி காக்டெயில் (வி ஐபி க்கள் மட்டும்) பார்வையாளர்களுக்கு உதவ திரையரங்க வாசல்களில் பரபரப்பாக இயங்கும் வைஷ்ணவா கல்லூரி மாணவிகளின் பச்சை படை பவனி என விழா ஏக தடல் புடல். ஆனாலும் பங்கேற்பாளர்களில் பலரும் வழக்கமான பிலிம் சேம்பர் ஆவிகள் மற்றபடி கோடம்பாக்கம் சினிமா ஆட்கள்..மற்றும் சினிமா மாணவர்கள் தான். சாதாரண மிஸ்டர் பொதுஜனம் அல்லது மிஸ் பொது ஜனம் அவ்வளவாக கண்ணில் படவில்லை. பேருக்கு ஒன்றிரண்டு சுடிதர் சகிதம் அவ்வளவே .

என்னை பொறுத்தவரை உல்கசினிமாக்கள் நல்ல ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகட்டி. பல நாடுகள் நாம் தேடிசென்று பெற முடியாத அறிவை ஒருகூரையிலிருந்து நம்மீது அவை கொட்டுகின்றன. சில பட்ங்கள் நம்மை மிகவும் நெகிழச்செய்து ஆன்மாவை விரிவடையசெய்து வாழ்வில் ஒளிமிக்க மனிதர்களாக மாற்றுகின்றன. ஆனால் அது போன்ற படம் அத்தி பூத்தார் போலத்தான் அமையும். அத்றகாக பல சோதனை படங்களை பார்த்தாக வேண்டிய துர்பாக்கியமும் இதில் இருக்கிறது. பல படங்கள்
ஆமை வேகத்தில் நகர்ந்து நம் பொறுமையை சோதிக்கும்.இன்னும் சில படங்கள் கடைசி வரை இயக்குனர் என்ன சொல்கிறார் என தெரியாமல் மவுடிகமாக திரைக்கதையை நகர்த்தி பார்வையாளர்களை ஆளாளுக்கு தலை சொறிய வைத்துவிடும்.

அது போல இவ்விழாவில் பலர் தலையை சொறிந்து தனக்குதானெ பேச வைத்த பெருமைமிக்க படம் ழெப்ஹிர் (zebhir) எனும் துருக்கி நாட்டு படம். என்னதான் வேகம் ஆமை என்றாலும் பெண் இயக்குனர் பெல்மா பாஸ் தன் மொழி ஆளுமையால் கடைசிவரை பார்வையாளர்களை அசைய விடாமல் இறுக்கமாய் கட்டிப்போட்டு ஆச்சர்யபட்டிருந்தார்.. ழெப்ஹிர் எனும் பதினோரு வயது சிறுமி வசிக்கும் மலைக்கிராமம் கொள்ளை அழகு, ஆனாலும் அவள் பார்வையெல்லாம் கிராமத்து பாதை மேல்.காரணம் அவளை விட்டு நெடுநட்களக பிரிந்து சென்ற அம்மா .ம்மா ஒருநாள் திரும்பி வளை மகிழ்ச்சிக்குள்லக்குகிறாள். ஆனல் அவள் உடனே மீண்டும் காணமல் போகும்போதும் அதற்கான காரணங்களை அவள் சொன்ன போதும் ழெப்ஹிர் மனதில் உண்டகும் மாய மாற்றங்கள் க்ளைமாக்ஸ் தீவிரமான அரசியலை பேசும் இப்படத்தில் ஒருவரி கூட வசனத்தில் அதை வெளிப்படுத்தாதும். முழுக்க பின்ன்ணி இசை இல்லாமல் மவுன நதியாக திரைப்படம் நகர்வதும் இயக்குனரின் மேதமைக்கு உதாரணம். அத்தகைய செறிவான காட்சி மொழி. இததனைக்கும் இது இயக்குனருக்கு முதல் படம் என்பது ஆச்சர்யமான செய்தி.



இதற்கு நேர்மாறாக என்னை உலுக்கி எடுத்த படம் சைலண்ட் சவுல்ஸ். ரஷிய மொழிபடம். பார்வையாளர்களை உணர்ச்சிகளால் கட்டிப்போட்ட காதல் கவிதை என்று கூட சொல்லல்லாம். தன் மனையின் ஈம்ச்சடங்குக்காக நண்பன் ஒருவனுடன் தன் கிராமத்துக்கு மேற்கொள்ளும் பயணம்தான் இக்கதை. மத்திய ரஷியாவின் பழங்குடிமக்களின் ஈமச்சடங்கு குறித்த புதிய தகவல்கள் மீது நமக்கு பெரும் ஆர்வத்தை உண்டாகும் இப்படம் ரஷ்யா இலக்கியங்களின் உச்ச உணர்வு நிலைகளுக்கு நம்மை அழைத்து செல்கிறது.

அது போல ப்ளாக் ஹெவன் எனும் திரைப்படத்தின் திரைக்கதை அசாத்தியமானது.சமூக வலைத்தளங்களின் சீரழிவுகளை ஆபத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இக்கதையின் திருப்பங்கள் அசத்தியமானது. பேரழகியான தங்கையை வலைத்தளங்களில் பயன்படுத்தி இளைஞர்களை பெரும் காதல் வசமாக்கி பின் தங்கையின் மூலம் அவர்களாகவே தற்கொலைசெய்யவைப்பது ஒரு அண்ணனின் பொழுது போக்கு.அவர்களது வலையில் சிக்க்கும் ஒரு இளைஞன் எப்படி தன்னையும் தன் காதலையும் காப்பாற்றிக்கொள்கிறான் என்பது சவாலான பயணம் .இவ்விழாவில் என்னை பலமுறை கைதட்டவைத்தது திரைக்கதையின் அசாத்திய புத்திசாலித்தனத்துக்கு சான்று.

விழாவில் பரவாலான ஐரோப்பிய படங்கள் குடும்ப உறவுகளை பற்றியும் அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் பேசுவது என்னை மிகவும் ஆச்சர்படுத்திய விஷயம் . அதுவும் மூன்று முக்கியமான படங்கள் அண்ணன் தம்பி உறவை மையக்களனாக கொண்டிருந்து.. இதில் ஜெர்மன் படம் ”ஐ நெவர் பீன் ஹேப்பியர்” இதில் குறிப்பிடததக்க படம். நம் ஊர் தப்புதாளங்கள் போன்ற கதையம்சம். ஜெயிலிருந்து வந்த தம்பி அண்னன் உதவியுடன் பல சித்து சித்து வேலைகள் செய்து ஒரு பெண்ணை விபச்சார விடுதியிலிருந்தும் அவளது மோசமான வாழ்விலிருந்தும் எப்படி விடுவிக்கிறான் என்பது கதை. இவ்விழாஅவில் எனக்கு மிகவும் பிடித்த மூன்று படங்களூள் இதுவும் ஒன்று . இன்னொரு அண்ணன் தம்பி படம் அதே ஜெர்மனியிலிருந்து வந்த விழாவின் துவக்க படமான் புகழ்பெற்ற இயக்குனர் பெயத் அட்கினின் சவுல் கிச்சன். அண்ணன் ஓட்டல் நடத்தும் பொறுப்பாளி. தம்பி ஊதாரி.ஜெயிலிருந்து திரும்புகிறான்.பாவம் பார்த்து பாசாத்தோடு ஓட்டலில் சேர்த்துக்கொள்கிறான்.அவனை கடையில் விட்டுவிட்டு காதலியை தேடி அண்ணன் ஊருக்கு போன இடைப்பட்ட நேரத்தில் சூதட்டத்தால் கடையை இழக்கிரான் தம்பி.. இறுதியில் அண்ணனும் தம்பியும் இணைந்து எப்படி தந்திரமாக வில்லனிடமிருந்து கடையை மீண்டும் தங்கள் வசமாக்குகிறார்கள் என்பது மீதி கதை. தன் வழக்கமான பாணியிலிருந்து எளிமையாக கதை சொன்ன இயக்குனர் பெய்த் அய்ட்கின் கொஞ்சம் வித்தியாசமானவர். அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஷை நவீன ஹிட்லராக சித்தரிக்கும் டீஷர்ட்டை போட்டு துணிச்சலாக ஜெயிலுக்கும் சென்று திரும்பியவர்.அப்படிப்பட்ட கலகக்காரனிடமிருந்து வந்த பக்கா கமர்ஷியல் கவிதை சவுல் கிச்சன்.இன்னொரு பிரெஞ்சு படம் வழக்கமான அண்ணன் மனைவி தம்பி ..தம்பி மனைவி அண்ணன் எனும் டிபிக்கல் ஐரோப்பிய படம். படத்தின் பெயர் உங்களுக்கு அவசியப்படாது என்பதால் தவிர்த்து விடுகிறேன்

நடைபெற்று வந்த இவ்விழாவிலும் கடந்த சென்னை பட விழாக்களை போல இதுவும் சுமார்ரகம்தான். இத்தனைக்கும் இம்முறை சுகாசினி ரேவதி ரோஹிணி போன்றோர் நிர்வாகத்தை கையிலெடுத்துக்கொண்டு கடுமையாக உழைத்துள்ளனர். மற்ற மொழிகளீல் இது போல ஆர்வமிக்க நடிகைகள் ஈடுபாடு மற்றும் கூட்டுழைப்பு திரைப்பட விழாக்களில் இருக்குமா என்பது கேள்வியே. அந்த வகையில் அம்மூவரும் இதற்காக உழைத்த இன்னபிறரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள் . விழாவில் போட்டி பிரிவில் தமிழ் படங்களை தேர்வு செய்தது பாரட்டதக்க விஷயம். நல்ல படம் எடுப்பவர்களுக்கு இது ஒருடானிக் . அதற்காக விழா கமிட்டிக்கு என் நெஞ்சு நிறை பாராட்டு .

ஆனாலும் பலகுறைகள் மனசை முட்டுகின்றன. நிர்வாகத்தில் தெரிந்த ஆர்வமும் முழுமையும் பட தேர்வில் இல்லை. பத்து வருடங்களுக்கு முன் சென்னை திரைப்பட சங்கம் நடத்திய ஒரு திரைப்படவிழாவை நினைத்து பார்க்கிற போது இதன் பகட்டும் படோபடமும் அர்த்தமற்றதாகவே இருக்கின்றன.துவக்க விழாவன்று பார்வையாளர்கள் பெரும்பகுதி இயக்குனர்கள் நாளைய இயக்குனர்கள். ஆனால் மேடையில் ஒரு இயக்குனர் கூட அமரவைக்கப்படவில்லை. அனைவரும் நடிகர்கள் மட்டுமே. அது போல இத்துறையில் பன்னெடுங்காலமாக உழைத்தவர்கள் பலர் இருக்கின்றனர். பல திரைப்பட சங்கங்கள் இத்துறையில் பல காலம் சேவை செய்துள்ளன . பல எழுத்தளர்கள் விமர்சகர்கள் எந்த பிரதி பலனும் இல்லாமல் தங்களது உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள். சென்னையில் இப்படி ஒரு விழா நடக்கிறதென்றால் அவர்கள் அனைவரது பன்னெடுங்கால உழைப்பும் இதற்கு காரணம். அது போல இதழாளர்களுக்கும் முறையான அழைப்பு இலை. அரசாங்கம் மான்யம் தரும் இது போன்ற விழாக்களில் அவர்களுக்கு உரித்தான முறையில் அங்கீகரைக்கபடவேண்டும் இது போன்ற பல குறைகள் தவிர்க்கபட்டால் மட்டுமே .உலகதிரைப்படவிழா வரைபடத்தில் சென்னைக்கும் ஒரு இடம் கிடைக்கும். நாளை அது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அஜயன்பாலா
.

December 22, 2010

;நல்ல சினிமா பார்ப்பது சிறந்த ஆன்ம அனுபவம்



நல்ல சினிமா பார்ப்பது சிறந்த ஆன்ம அனுபவம்
-அஜயன்பாலா
( 8வது சென்னை திரைப்படவிழா தினசரி புல்லட்டினுக்காக எழுதப்பட்டது)

சில வருடங்களுக்கு முன் பர்மா பஜாருக்கு சென்ற போது அங்கு ஒரு கடைக்கார பையன் என்னை அவமானப்படுத்திவிட்டான். அதுநாள் வரை என் தலைக்கு கனம் கூட்டிய சில இயக்குனர்களின் பெயர்களையும் எனக்கு தெரியாத அவர்களின் இன்னபிற படங்களின் பட்டியலையும் அவன் சரமாரியாக ஒப்பிப்பதை கேட்டு அடப்பாவி என கலக்கமுற்றேன்.
இந்த பெயர்களை தெரிந்து கொள்ளத்தானே என் வாழ்க்கையில் பெரும்பகுதி நாட்களை தொலைத்தேன் என நொந்துகொண்டே திரும்பினேன். உண்மையில் அவனிடமிருந்ததெல்லாம் வெறும் தகவல்தான் கூகுள் இவனை விட சிறப்பாக இக்காரியத்தை செய்யும் என எனக்கு நானே சமாதானபடுத்திய பின் தான் மனம் ஆசுவாசப்பட்டது. அப்போது ஒன்று மனசில் பட்டது. இனி திரைப்படவிழாக்கள் அவ்வளவுதான்.திரைப்பட சங்களுக்கும் தாவுதீர்ந்துவிடும் என முடிவு கட்டியிருந்தேன். இனி உலக சினிமாக்கள் அரங்கம் எனும் பெருவெளியில் இருந்து அறை எனும் சிறுவெளிக்குள் திரும்பி ரிமோட் பட்டன்களால் பெருத்த அவமானத்துக்குள்ளாக போகிறது என முடிவு கட்டினேன். ஆனால் அது வெறும் கற்பனை என்பதை இன்று இப்போது நடைபெற்று வரும் சென்னை 8 வது உலக திரைப்படவிழாவையும் அரங்கங்களில் அலைமோதும் கூட்டத்தையும் பார்க்கும் போது உணர முடிகிறது.

இது போன்ற விழக்களில் சினிமா பர்ப்பது என்னை பொறுத்தவரை ஒரு ஆன்மீக அனுபவம் ஒரு படத்திற்ககாக என்னை தயர்படுத்தும் போது அப்படத்தின் கதை திரைக்கதை இதர தொழில்நுட்ப அனுபவம் இவற்றை கடந்து அந்த குறிப்பிட்ட மொழியின் நிலப்பரப்பு ,கலாச்சராம் ,மனிதர்களின் உடல் பாவம் .. சமூக மதிப்பீடு .மற்றும் வரலாறு ஆகியவற்றுக்கும் சேர்த்தே என்னை நன் தயார் படுத்திக்கொள்வேன். ஒரு தேசத்தையும் அம்மக்களது குணத்தையும் பண்பாட்டையும் அறிய அம்மொழியின் பத்து படங்களை பார்த்தாலே போதுமானது. உண்மையில் நான் பாரிசுக்கோ பெர்லினுக்கோ இதுவரை சென்றவனில்லை. ஆனால் இரண்டு தேசத்துக்குமிடையிலான் வித்தியாசத்தை பற்றியும் கலச்சாரம் மக்கள் மனோபவம் ஆகியவை குறித்து என்னால் ஒரு நூறுபக்கங்களுக்கு ஒரு ஆய்வு கட்டுரை சமர்பிக்க முடியும். எனக்கான் இந்த அறிவு முழுக்க நான் அத்தேசத்தின் படங்களிடமிருந்து மட்டுமே கைவரப்பெற்றேன். உடன் என் நூல் அறிவும் எனக்கு துணை செய்துள்ளன என்றாலும் அம்மொழியின் அற்புதமான படம் ஒன்று என் ஆழ்மனதில் செய்யும் வேலைகள் ஒரு நூலைவிடவும் பன்மடங்கு உயர்ந்தது.

இது போலத்தான் ஐரோப்பிய தேசத்தில் இருக்கும் ஒவ்வொரு மொழி படங்களிலும் அத்தேசத்தின் அடிப்படை குணம் உள்ளூற உறைந்து கிடப்பதை துல்லியமாக பகுத்துணராலம்..

ஆனல் இன்று இது போன்ற உலகசினிமாக்களின் பார்வையாளர்க்ள் பெரும்பலும் வெறுமனே அவற்றை நுகர்வு பொருளாகவும் அல்லது எதிர்கால தமிழ்சினிமாவுக்கான் கச்சா பொருளாகவுமே பார்ப்பதிலிருந்து விலகி வரவேண்டும். ஒரு சுமாரான திரைக்கதையம்சம் கொண்ட படத்தில் ஏதோ ஒரு காட்சிக்கு வரும் பின்னணி இசை நம்மை முற்றிலுமாக புதிய உலகிற்கான சிறகினை பொருத்திதர வல்லது. விழாவின் துவக்க படமான ஜெர்மன் இயக்குனர் பெய்த் அய்ட்கினின் சவுல் கிச்சன் அவரது முந்தைய படங்களிலிருந்து அளவீடும் போது சுமார்ரகம் தான்.ஆனால் அதன் இறுதி காட்சியின் பின்னணி இசை எனக்கு தந்த அனுபவம் பேரழகி ஒருவளின் புன்சிரிப்பை காட்டிலும்
பன்மடங்கு களிப்பை உருவாக்கிதந்தது.

அது போல விழா ஒருங்கிணைப்பாளர்கள் சில விடயங்களை கவனத்தில் கொள்வது விழாவின் மதிபீட்டை உலகத்தரத்திற்கு இன்னுமுயர்த்தும் அவற்றுள் முதலாவது என்னதான் வணிக பிரச்னைகளை தளர்த்துவதாக இருந்தாலும் வழக்கமான சினிமா ட்ரெயிலர்களை படத்திற்கு முன் திரையிடுவதை தவிர்க்கவேண்டும். ஒவ்வொரு படத்திற்குமுன்பும் அவற்றை பார்க்க நேரும் பார்வையாளன் பெரும் தண்டனைக்கு ஆட்படுகிறான் . மேலும் இதுபோன்ற விழாக்களின் மைய நோக்கத்திற்கு முழுவதும் எதிரான செயல் இது என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் கருதில் கொள்ள வேண்டும்.

இரண்டவது வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ கிளாசிக்குகளுக்கு முக்கியத்துவம் தரப்ப்டவேண்டும். இன்னும் டிவிடியிலும் காண்க்கிடைக்காத கறுப்பு வெள்ளை அதிசயங்கள் நிறைய்ய இருக்கின்றன. கோபயாஷி பொன்ற ஜப்பானிய இயக்குனர்கள் இன்னும் இங்கு போதிய வெளிச்சம் பெறவில்லை . அதற்கென்று இருக்கும் ரசிகர்கள்தான் உலகசினிமாவின் உண்மையான பார்வையாளர்கள் .அவர்களை கருத்தில் கொள்ளவேண்டும். அது போல புதிய பார்வையாளனிடம் கிளாசிக்குள் குறித்த ரசனையை உருவாக்க அது பெரும் உதவும்.

மூன்றாவது நேரம். நல்ல சினிமா ரசிகன் முழுபடத்தையும் பார்க்கமாட்டான் .படத்தை சுவைப்பது எனும் விடயம் தேர்ந்த ரசனையாளர்களுக்கு உரித்தானது. அவனை கட்டிபோடுவதுதான் தேர்ந்த இயக்குனருக்கு சவால். மேலும் அவன் மன அவசம் தான் பார்க்காத படங்களை நோக்கி தாவிக்கொண்டே இருக்கும் . அதனால் எப்போது வேண்டுமானலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவன் ஒரு திரையீட்டில் நுழைய நேரிடலாம் . அப்படி ஒரு பதட்டத்துடன் நுழையும் ரசிகர்களால்தான் நல்ல ரசனை இன்னும் தழைத்துக்கொண்டிருக்கிறது. அதனால் பார்வையாளர்கள் மீது விதிக்கப்படும் நேரத்தடை ஆரோக்கியமான சினிமா சூழலுக்கு உகந்ததல்ல


குறைகளை கடந்து உண்மையில் சென்னையில் இதற்கு முன் நடைபெற்ற விழாக்கள் அனைத்திலும் இது சிறப்பு வாய்ந்தது என்பது மறுக்க முடியாதது. குறிப்பாக சுகாசினி ரேவதிரோகிணி லிசி மற்றும் சிலரது ஆர்வமும் உழைப்பும்தான் விழாவின் சிறப்புக்கு முக்கிய காரணம் என்பதை பார்வையாளன் என்ற முறையில் என்னால் அனுமானிக்க முடிகிறது
தீவிரத்துடனும் அர்ப்பணிப்புடனும் விழா ஒருங்கிணைப்பில் அவர்கள் ஆர்வம் காட்டிய விதம் சூழ்லின் வளர்ச்சி மீது ஆர்வம் கொண்டவனாக என்னை பெருமிதம் கொள்ளவைக்கிறது. இந்தியவின் இதர மொழி நடிகைகளிடம் காணக்கிடைக்குமா என்பது சந்தேகமே. ஒரு உலக சினிமா பார்வையாளனாக அவர்களுக்கு என் நெஞ்சம் நிறை நன்றிகள் .

December 20, 2010

நாஞ்சில் நாயகனுக்கு என் ராயல் சல்யூட் !




அவரை எப்போது பார்க்கும் போதும் எல்லா தரவுகளும் சரியாக வைத்திருக்கும் ஒரு நேர்மையான அதிகாரி போலவே தோற்றமளிப்பார். நாஞ்சில் நாடனை நான் அணுகுவதில் என்னிடம் கூட ஒரு தலைமுறை இடைவெளி இருக்குமே ஒழிய அவர் எப்போதும் எந்த இளைஞனிடமும் அந்த இடைவெளியை கொண்டதில்லை.

தனது உலகத்தின் மீதும் த்னது கதைகளின் மீதும் தனது இலக்கியத்தின் மீதும் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர். மிதவைதான் நான் படித்த அவரது முதல் நாவல். அந்நாவலில் வைகை ஆற்றை பற்றிய அவரது வர்ணிப்பில்தான் அவரிடம் முதன் முதலாக வசீகரிக்கப்பட்டேன். அதன் பிறகு நான் படித்த அவரது அனைத்து நாவல்களிலும் ஒரு பூரணமான வடிவ அமைதியை கண்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.

எனக்கு தெரிந்தவரை அவர் அளவுக்கு கச்சிதமான நாவல்களை எழுதியவர் வேறு எவரும் இல்லை எனலாம். உள்ளுணர்வுகளை வாசகனுக்கு தூண்டசெய்வதில் தற்கால எழுத்தாளர்களில் அவரே பாண்டித்யம் மிக்கவர். மேலும் அவருக்கு கொடுக்கப்பட சாகிதய அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட சூடிய பூ சூடற்க எனும் நூலை நான் இதுவரை வாசிக்க வில்லை. ஆனால் உண்மையில் சாகிதய் அகாதமியை விட உயர்வான விருதுகளுக்கு அவர் சொந்தகாரார் .அப்படி உயர்வான விருது கொடுப்பார்களேயானால் அவர்களுக்காக நான் பரிந்துரை செய்யும் நூல் அவரது கட்டுரை தொகுப்பு. தீதும் நன்றும்.
இதில் அவர் எழுதிய சில கட்டுரைகள் உண்மையில் ஒரு எழுத்தாளனாக என் மனசாட்சியை உலுக்கி எடுத்துள்ளன. பல கட்டுரைகள் .குறிப்பாக ஒன்றை சொல்வாதானால் திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளீல் பணி செய்யும் பெண்களின் பிரசனையை பேசும் கட்டுரை.வெறுமனே படைப்பிலக்கியவாதியாக மட்டும் இல்லாமல் த்னக்கு தோன்றிய கருத்திய கருத்தை சமூகம் சார்ந்த உள கொதிப்பை வார்த்தைகளில் அவர் இறக்கி வைத்த விதம். இதுவே எழுத்தாளனை அவனது உயிர்த்ன்மையை மிகுதியாக காப்பாற்றி தரும் இடம் .அன்னாருக்கு கிடைத்த சாகித்ய அகதாமி விருது எழுத்தை உயர்வாக வேறெவற்றையும் விட உன்னதமானதாக கருதும் பலருக்கு மகிழ்ச்சியூட்டும் விடயம்
நாஞ்சிலாருக்கு என் ராயல் சல்யூட் .

December 17, 2010

ஒரு கவிதையின் மரணம்











1. இது என்ன கவிதை
- இரங்கல் கவிதை
2. மரணித்தவன் முகம் நினைவில் உள்ள்தா
- நிழற்படம் போல
3. அவன் பெயர்
-அதுவும் ஒரு பெயர்
4. எப்படி இறந்தான்
-கேமராவை இடம் மாற்றும் போது
மிக உயரத்திலிருந்து
கால் இடறி
5. வயது
-வாலிபன்
6. நீ அப்போது அங்கில்லையா
-இல்லை
செல்போனில் தகவல்
7. இப்போது என்ன செய்கிறாய்
-அவனுக்காக ஒரு கவிதை எழுத முயற்சிக்கிறேன்
8. தோற்றுவிட்டாய்
-அறிந்த தோல்வி அது
கவிதை செய்வதன் தோல்வியை விரும்புகிறேன்

9. இறுதியாக ..
இந்த வார்த்தைகள்
அவனுக்காக..
அவன் தாயாருக்காக
அவன் சகோதரிகளுக்காக


(இரண்டு நாட்களுக்குமுன் நான் நடித்துவரும் உடுமலைபெட்டையில் கிருஷ்ணவேணி பஞ்சாலை படப்பிடிப்பில் கேமராவை இடம்பெயர்த்தும் போது கூரையிலிருந்து தவறி விழுந்து மறைந்த கேமரா உதவியாளன் ஜெகதீசனுக்கு நினைவுக்கு....)

December 15, 2010

உலக சினிமா வரலாறு 26: மறுமலர்ச்சி கால உலக நட்சத்திரங்கள்





மறுமலர்ச்சி யுகம் 26

1.ஆண்டனி க்வின் (மெக்சிக்கொ)

பெலினியின் லா ஸ்ட்ராடா பட்த்தின் மூலம உல்க சினிமா ரசிகர்களுக்குள் ஆழமான இடத்தை தக்கவைத்துக்கொண்ட ஆண்டனி க்வின் ஐரிஷ் –மெக்சிகன் கலப்பினத்தில் பிறந்த மெக்சிக்கோ நாட்டை சேர்ந்தவர். ஆண்டனியோ ரொடால்போ க்வின் ஒக்சாகா Antonio Rodolfo Quinn Oaxaca என்பதுதான் இவரது அசல் பெயர். பணம் சம்ப்பாதிக்க குத்துசண்டையை தொழிலாக கொண்டிருந்த க்வின் இருபது வயதில் துண்டுதுக்கடா பாத்திரங்களில் த்லையை காட்டிக்கொண்டு சினிமாவுக்கு நுழைந்த்வர். கிட்ட்தட்ட இருபது வருட கடும் போராட்டத்துக்கு பிறகு தனது நாற்பதுகளில்தான் நாயகனாக நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். மார்லன்பிராண்டோவுடன் இவர் நடித்த விவா சபாட்டா இவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் பரிசை பெற்று தந்த்து.ஓவியர் வான்காவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வின்சண்ட் டி மென்னெளியின் லஸ்ட் பார் லைப் எனும் இத்தாலிய படம் இவருக்கு இரண்டாவது ஆஸ்கார் பரிசை நடிப்புக்காக வாங்கி கொடுத்துள்ளது.தொடரந்து பராபஸ் ,ஜோர்பா தி கிரீக்,லாரன்ஸ் ஆப் அரேபியா ,கன்ஸ் ஆப் நவரோன் ,ஒமர் முக்தார் என இவரது வரலாற்றில் பல வெற்றிபடங்கள் இவரது ஆளுமைமிக்க மிகச்சிறந்த நடிப்புக்கு உதாரணங்கள். மூன்று மனைவிகள் ஒரு காதலி பதிமூன்று குழந்தைகள் என பெருவாழ்வு வாழ்ந்த இக்கலைஞன் அடிப்படையில் மிகச்சிறந்த ஓவியர் மற்றும் சிறந்த எழுத்தாளர்.
2. மிஃபுனெ (ஜப்பான் )
அடிப்படையில் புகைப்படக்கலைஞரான் மிபுனே சினிமாவுக்குள் வந்த்தே தனிக்கதை. சீனாவில் பிறந்து பத்தொன்பது வயதுக்கு பிறகு புகைபட்துறையை தொழிலாக வரித்துக்கொண்டவர். பின் தங்களது பூர்வீகமான ஜப்பானுக்கு குடிபெயர்ந்து வந்த மிபுனெ வந்த இட்த்தில் புகைப்படகலைஞராக ராணுவத்தில் சிலகாலமும் உதவி ஒளிப்பதிவாளராக டு டோஹோ ஸ்டூடியோவில் பணிபுரிந்து வந்தார். அப்போதுதான் வேலை நிறுத்தம் ஏற்பட்டு டோஹோ ஸ்டூடியோவிலிருந்து பல நடிகர்கள் வெளியேறிபோக ஸ்டூடியோ புதிய நடிகர்களுக்கு அவசரமாக அழைப்புவிடுத்து விளம்பரம் கொடுத்த்து. மிபுனேவுக்கெ தெரியாமல் அவரது நண்பர்கள் சிலரது இவரது புகைப்பட்த்தை ஒட்டி விண்ணப்பத்தை அனுப்ப அப்போது கிடைத்தான் உலக சினிமா ரசிகர்களுக்கான புதிய நடிகன் மிபுனே.
1947ல் வெளியான ஸ்னோ ட்ரெயில் என்பதுதான் மிபுனேவுக்கு முதல் படம் என்றாலும் அவர்து மூன்றாவதுபடமான ட்ரங்கன் ஏஞ்சல்தான் அவரது கணக்குபடி முதல்படம் காரணம் அப்பட்த்தின் இயக்குனர்...அவர் அகிராகுரசேவா. உலகசினிமாவுக்கு குரசேவா வழங்கிய வழங்கிய அருட்கொடைகளில் பெரும்பாலானவற்றில் நடித்த பெருமை கொண்டவர் மிபுனே. இத்த்னைக்கும் தன் எழுபதாவது வயது வரை தொடர்ந்து 170 படங்களில் பல்வேறுபட்ட இயக்குனர்களின் படங்களில் அவர் நடித்தாலும் குரசேவாவுடன் அவர் நடித்த பதினாறு படங்கள் மட்டும்தான் அவரை உலகசினிமாரசிகர்களின் ஒப்பற்ற நடிகனாக அறிமுகம் செய்துள்ளன. இந்த பதினாறுபடங்களும் 1948 முதல் 1965 வரையிலான காலட்ட்த்தை சேர்ந்த்வை . இக்காலங்களில் இகிரு எனும் ஒரே ஒருபடம்தான் மிபுனே இல்லாமல் குரசேவா இயக்கத்தில் வெளியான திரைப்படம். தன்னுடன் துவக்க காலத்தில் நடிப்பு தேர்வில் கலந்து கொண்டு தேர்வான நாயகியையே வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்ட மிபுனே வின் நடிப்புத்திறனுக்கு ரெட்பியர்ட் ,செவன் சாமுராய், ரெட்பியர்ட் ,ஆகிய திரைப்படங்கள் மிகச்சிறந்த உதாரணங்கள்.
3. லிவ் உல்மன்
எழுபதுகளின் பெண்ணியவாதிகளின் அடையாளமாக விளங்கிய லிவ் உல்மன்
அடிப்படையில் நார்வே நாட்டை சேர்ந்த்வர்.
அதிகபட்சமாக நடித்த்து ஸ்வீடிஷ் இயக்குனர் பெர்க்மனின் திரைப்படங்களில்தான். பிறந்த்து. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில். அப்போது இவரது தந்தை ஜோஹன் உல்மன் ஏர்கிராப்ட் இஞீனியாராக பணிபுரிந்த காரணத்தால் இவர் அங்கே பிறந்தார்.பிற்பாடு கனடாவில் வளர்ந்த லிவ் உல்மன் அடிப்படையில் ஒரு நாடக நடிகையாகத்தான் தன் வாழ்க்கையை துவக்கினார். லிவ் உல்மன் இரண்டாவது பட்த்தில்தான் இயக்குனர் பெர்க்மனை சந்திக்கும் வாய்ப்பை பெற்றார். பெர்சனோ எனும் அப்பட்த்தை தொடர்ந்து அவரது இயக்கத்தில் இவர் நடித்த சீன்ஸ் ஆப் மேரேஜ் எனும் பட்த்தின் மூலமாகத்தான் பெண்ணியவாதிகளின் பிம்பம் எனும் முத்திரை அழுத்தமாக இவர்மேல் பதியதுவங்கியது. தொடர்ந்து இவர் பெர்கமனுடன் நடித்த க்ரைஸ் அண்ட் விஸ்பர்ஸ் இவரது நடிப்புக்கு இன்னுமொரு மைல்கல். தொடர்ந்து பேஸ் டு பேஸ்,ஆட்டம் சொனாட்டா போன்ற படங்கள் இவருக்கு உல்கசினிமாவிழாக்களில் சிறந்த நடிகைக்கான விருதுகளை பெற்றுதந்துள்ளன . குறிப்பாக பெண்பாத்திரங்களின் நடிப்புசாயல்கள் ஒன்றேபோல் இருக்கும்விதிகளை தகர்த்து தான் ஏற்கும் பாத்திரங்களின் உணர்ச்சிகளை தனித்துவமாகவும் அழுத்த்மாகவும் பிரதிபலிப்பதன் மூலம் உல்மன் உலகசினிமா பார்வையாளர்களின் மத்தியில் த்னக்கென அழுத்த்மான முத்திரையை தக்கவைத்துக்கொண்டவர்.குறைவான படங்களே நடித்தாலும் இன்றுவரையிலும் காலத்தின் சிறந்த நடிகையருள் ஒருவராக பேசப்படுபவர், இவர் ஒரு சிறந்த இயக்குனரும் கூட . இவரது முஇதல் படம் சோபி சிற்ந்த பட்த்துக்கான விருதை மாண்ட்ரீல் திரைப்பட விழவில் இவருக்கு பெற்று தந்த்து. தொடர்ந்து இவர் இயக்கிய மூன்று திரைப்படங்களும் பல திரைப்படவிழாக்களில் அவரை சிறந்த இயக்குனராக அடையாளம் காட்டி வருகிறது.

December 6, 2010




December 10.11.12 மூன்று நாட்கள் ஹைதராபாத்தில் muse india http://www.hyderabadliteraryfestival.com/ ஒருங்கிணைக்கவிருக்கும் இலக்கிய திருவிழாவிற்கு இந்தியா முழுக்க பல மொழிகளைசேர்ந்த 200க்குமேற்பட்ட கவிஞர்கள் த்ங்களது ஆங்கில மொழிபெயர்ப்பிலான கவிதைகளை வாசிக்க உள்ளனர் . தமிழ் நாட்டிலிருந்து பிரம்ம ராஜன் அசதா, ஸ்ரீ நேசன் மற்றும் பழனிவேல் ஆகியோருடன் எனது கவிதைகளும் வாசிக்கபட உள்ளன . அங்கு வாசிக்க விருக்கும் கவிதைகளின் ஆங்கில மொழியாக்கம் இது . இத்னை மொழிபெயர்த்து தந்த கவிஞர் எழுத்தாளர் மற்றும் நண்பர் அசதா அவர்களுக்கு என் நன்றிகள்
ajayanbala sitharth

Ajayan Bala’s Poems: eng traslations by asada

1. Shoot Down James Dean


Shoot down
The guy whose
Name is James Dean.
You don’t require a reason.
He is not good.
He was born at night to the
First wolf of doom.



Motor adventure
In drunken state
Shoot down James Dean
Fuck him off.

Shoot down the James Dean who
Throwing frothy bear mugs
Against the wall
And impishly kissing
The guitar girl
Whirring away in motorbike.
And suddenly in the rain drenched road
As bike wheels went on revolving by themselves
He was lying dead on the black road
Shoot down that James Dean.


Shoot him down
That American lumpen.
Let that guy born to a jerkin
Die for the second time.
At twenty four
As life sets everyone’s ass on fire
You can die James Dean.
Even after 50 years
Your exploits annoy me.






2. Whose Is She?

In a rainy evening
I was standing beside her
For shelter from rain.
She knew not who I was.
I never knew that
She would do that.
Sky waned.
Rain stopped.
I was completely drenched.


3. Climb Down Unafraid.

Do not get frightened
At a dead mouse.
It never will harm you.
Friends,
Come out untroubled.
It is not the mouse
You killed last night.

This sad demise was caused by
Years of repeated blows.
Seek remediation by
Placing a garland.
Or offer a place for
a tiny pit in your garden.
Don’t worry.
It will not come in
Your dream to scare you.
It won’t even
Scratch at your walls.
Men,
Climb down without hesitation.
Let your wrist-watches be safe.

November 22, 2010

க்ளாத்ஷாப்ரோல், எரிக்ரோமர் மற்றும் ழாக்ரிவெத்:பிரான்சின் புதிய அலை பகுதி : நான்கு



உலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சி யுகம் 25


இந்த ஆண்டு உலக சினிமா தன் பங்குக்கு இரண்டு நட்சத்திரங்களை மண்ணுக்குள் அனுப்பியது. அவர்கள் இருவருமே நண்பர்கள். த்ரூபோ கோதார்த்துக்கு பிறகு போற்றப்படும் புதிய அலையின் மற்ற இரு முக்கியமான தூண்கள் .

க்ளாத் ஷாப்ரோல் எரிக் ரோமர். இவர்கள்தான் அந்த இருவர்
ஷாப்ரோல் கடந்த இரண்டுமாதங்களுக்குமுன் செப்டம்பர் 12லும் எரிக்ரோமர் கடந்த ஜனவரி 11ம் நாளிலும் தங்களது வாழ்வு எனும் மிக நீண்ட திரைப்பட்த்திற்கு வணக்கம் தெரிவித்துக்கொண்டனர்.

ஷாப்ரோலுக்கும் எட்ரிக் ரோமர் இருவருமே புதி ய அலைகுழுவில் பூரண இலக்கியத்தை நம்பியவர்கள் . கோதார்த் மற்றும் த்ரூபோ ஆகிய இருவரும் கூட எழுத்திலிருந்து சினிமாவுக்கு வந்த்ருந்தாலும் அவர்களை காட்டிலும் இலக்கியத்ன்மைக்கு தமது மடங்களில் இவர்கள் இருவரும் கூடுதல் மதிப்பை தந்திருந்தனர்.

கிளாத் ஷப்ரோல்

1930ல் வசதியான குடும்பத்தில் பிறந்தவரான ஷாப்ரோல் த்ரூபோ கோதார்த் ஆகியோரின் திரைப்பட சங்கங்களில் அவர்களுடன் இணைந்து பிற்பாடு ராணு சேவைக்கு போய் சினிமாஅசை காரணாமாக் பாதியில் ஓடிவந்து மீண்டும் நண்பர்களுடன் இணைந்து அவர்களோடு கையேது சினிமாவில் விமர்சகராகவும் எழுத்தாளராகவும் பங்களித்து பின் 20 செஞ்சுரி பாக்ஸின் பிரெஞ்சு விளம்பர பிரிவில் சிலகாலம் வேலை செய்து பின் அந்த வேலையை கோதார்த்திடம் கைமாற்றிவிட்டு தன் பணக்கார மனைவியின் கடைக்கண் அசைப்புக்கிணங்க தன் முதல் படமான ஹேண்ட்செம் செர்ஜ்படத்தை தயாரித்து இயக்கினார் . 1958ல் வெளியான இந்த படம்தான் நியூவேவ் இயகுனர்களின் முதல் படமாக வரலாற்றாய்வாளர்கள் தீர்மானிக்கபடுகிறது.அதன் பிறகு தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் திரைவாழ்க்கைக்குள் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஷாப்ரோல்
ஐம்பதுக்குமேற்பட்ட திரைப்படங்களை இயக்கி பிரெஞ்சு மற்றும் உலக சினிமாவுக்கு வளம் சேர்த்துள்ளார்




ஷாப்ரோலின் படங்களை பற்றி ஒட்டுமொத்தமாக அள்வீடு செய்வதானால் சுருக்கமாக இப்படி கூறிவிடலாம் . அவர் ஹிட்ச்காக்கின் பிரெஞ்சு நிழல்
இப்படி சொல்வது அவரது படங்களை குறைத்துமதிப்பிடுவதல்ல. ஷாப்ரோலை பொறுத்தவரை இப்படி யாரேனும் சொன்னால் அதையே தனக்கு கிடைத்த சிறந்த மதிப்பீடாக கொள்வார். அந்த அள்வுக்கு ஹிட்ச்காக்கையும் அவரது படங்களையும் நேசித்தவர். அதனாலதான் எரிக் ரோமருடன் இணைந்து ஹிட்சாக்கை பற்றி ஆய்வு செய்துஒரு நூலாக எழுதினார் . சினிமாவை புரிந்துகொள்ள மிகசிறந்த நூல் என விமர்சகர்கள் பலரும் அத்னை குறிப்பிடுகின்றனர். அது போல த்ரூபோ வுடன் இணைந்து ஹிட்ச்காக்கை நேரில் சந்தித்து பேட்டிகண்டு அதனை புத்தகமாக கொண்டுவந்தார். . அதுவரை உலக சினிமாவுக்கு கமர்ஷியல் இயக்குனராக மட்டுமே அறியப்பட்ட ஹிட்ச்காக்கின் படங்கள் இந்த புத்தகம் வந்த பிறகுதான் ஒரு கலைமதிப்பீட்டை பெற்றுக்கொண்டன.

புதிய அலை இயக்குனர்களில் அதிக கமர்ஷியல் வெற்றி பெற்ற இயக்குனர் என்ற பெருமை ஷாப்ரோலையே சேரும். அதற்கு காரணம் அவர் த்னது படைப்புகளில் உள் பொதிந்து வைக்கும் குறிய்யீடுகளை அவரே நேரடியாக படத்தில் சொல்லிவிடுவதுதான் . பொதுவாக கோதார்த் போன்றவர்கள் ஒருகாட்சியில் இடையிடையே ஒரு கடிகாரத்தையோ அல்லது பூனை தன் அசையும் வாலின் நிழலை பார்ப்பது போலவோ குறீடாக காண்பித்தால் அதற்கு தனி அர்த்தம் மறைந்து இருக்கும் . ஆனால் ஷ்ப்ரால் படத்திலோ அந்த குறியீடு எதை உணர்த்துகிறது என்பதையும் விளக்கிவிடும் .. ஷாப்ரோலின் கமர்ஷியல் வெற்றிக்கு இது ஒரு முக்கிய காரணம் . மேலும் ஷாப்ரோலின் பாணி தனித்வமானது.
அவரிடம் த்ரூபோவின் அழுத்த்மான கதையாடலோ கோதார்த்தின் மிகு புனைவு மொழியோ எரிக் ரோமரின் கவித்துவமோஇல்லை. மாறாக அவர் நேரிடையான இயல்பான திரைப்படத்தையே படைப்பாக வடிவமைத்தார். மேலும் இதர மூவரை போல பல்வேறு பாணி திரைபடங்களை கையாளாமால் அவர் ஹிட்ச்காக் பணி துப்புறியும் படங்களாகவே தன் தடத்தை தீர்மானித்துக்கொண்டார் .

ஷாப்ரோலுக்கு வரலாற்றீல் இன்னொரு பெயரும் உண்டு . அது தேவதை .. பண தேவதை .. படம் எடுத்து பாதியில் நின்ற பல புதிய அலை படங்களுக்கு பண உதவி செய்தவர். அவர் கல்யாணம் செய்து கொண்ட பணகார மனைவியின் மூலமாக தான் உருவாக்கிய AJYM FILMS மூலமாக இந்த பண உதவிகளை தக்க நேரத்தில் தந்துதவினார். எரிக் ரோமர் ..ழாக் ரிவெத் போன்றோரின் துவக்ககால திரைப்படங்களுக்கு ஷாப்ரோலே தயங்காமல் பண உதவி செய்து தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவும் படம் வெளிவரவும் உதவி செய்து புதிய அலையின் வளர்ச்சிக்கு பெரும் உதவி செய்தார் .

எரிக் ரோமர்

எனது திரைப்படங்கள் ஒரு நாவலை போல .. அவர்கள் என் படத்தை பார்க்கவில்லை மாறாக நாவல் வாசிக்கும்போதான் உலகம் என்னடி அவர்கள் கற்பனையில் உருக்கொள்கிறதோ எப்படியான உணர்ச்சியில் அவர்கள் மனம் எழுச்சி கொள்கிறதோ அது போன்ற மன நிலையில்தான் என் படங்கள் பார்வையாளர்களை சென்றடைய விரும்புகிறேன்

மேலுள்ள வாசகம் எரிக் ரோமர் தன் படங்கள் பற்றி தானே கூறிக்கொண்டது. மற்ற நியூவேவ் இயக்குனர்களுக்கும் இவரும் இருக்கும் வித்தியாசம் அவர்கள் சிறுவயது தொட்டே சினிமாவை காதலைத்து வந்த்னர். ஆனால் எரிக் அப்படியில்லை அவருக்கு துவக்க காலங்களில் சினிமா ஈர்ப்பை தரவில்லை .


ஆ1920ல் பிறந்த எரிக்கின் அசல் பெயர் மோரிஸ் ஹென்றி ஜோசப் ஷேரர் என்பதாகும் பிற்பாடு நாவல் எழுத துவங்கிய போது கில்பர்ட் என பெயரை மாற்றிக்கொண்டவர். ஸ்வீடன் இயக்குனர் எரிக் வான் ஸ்ட்ரோஹிம் மினால் உண்டான பாதிப்பின் காரணமாகவும் பின் அதனுடன் த்னக்கு பிடித்த சாக்ஸ் ரோமர் எனும் எழுத்தாளின் பெயரையும் இணைத்து எரிக் ரோமர் என்ற பெயரை தனக்குதானே சூட்டிக்கொண்டார்.

துவக்க காலங்களில் ஆசிரியராக பணி புரிந்த எரிக் குக்கு அந்த பணி பிடிக்கவில்லை. காரணம் எழுத்து அவருக்குள் ஊறிக்கொண்டிருந்தது,வேலையை விட்டு பத்திரிக்கை துறைக்கு பாய்ந்தார். .எலிசபத் எனும் அவரது முதல் நாவலை எழுதி வெளியிட்டார்.

பிறகு சினிமாதொக் திரைப்பட சங்கத்தில் சேர்ந்ததும் கையெது சினிமா இதழுக்கு ஆசிரியர் பொறுப்பேற்றதும் அவரே அறியாமல் நிகழ்ந்த சம்பவங்கள்.அவரது 1958ல் அவரது முதல் படமான சைன் ஆப் லியோ வெளியானது. ஷாப்ரோல்தான் இதன் தயாரிபாளர். சிம்ம ராசியில் பிறந்தவனுக்கு குறிப்பிட்ட நாளில் பெரும் பணம் வரும் என்று யாரோ சொல்லும் ஜோசியத்தை நம்பி கையில் இருக்கும் பணத்தை எல்லாம் செலவு செய்து விடுகிறான்.ஒருகட்டத்தில் நயாபைசா கூட கையில் இல்லாமல் தெருநாயாக அலையும் அளவுக்கு வாழ்க்கை சீரழிகிறது. முட்டாளத்னமாக ஜோசியத்தை நம்பினோமே என புலம்பிதவிக்கிறான். இரவில் தங்க கூட இடமில்லை. நண்பர்களின் ப்ளாட்டுக்கு தேடி செல்ல அவமானபடுத்தப்பட்டு வெளியேறுகிறான். அது அவனை தற்கொலை எண்ணத்துக்கே அழைத்துச்செல்கிறது. சாகதுணிந்தவன் தோளில் ஒரு கை
யாரோ ஒரு சொந்த கார கிழவி மண்டையை போட பல கோடி சொத்து அவனுக்கு வந்துள்ளதாக தகவல்.
ஆனால் இப்படம் வெளியான போது த்ரூபொ கோதார்த் ஷாப்ரோல் ஆகியோர் தங்களது முதல் படத்தில் ஈட்டிய வெற்றியை ஈட்டவில்லை. அதனால் முதல் படத்திலேயே சுருங்கிப்போன எரிக் மீண்உம் எழுத்து பணிக்கே திருமினார். சமயம் கிடைத்த போதெல்லாம் குறும்படங்களாக எடுத்து தள்ளிக்கொண்டிருந்தார். கிடத்ட்ட முதல் படம் வெளிவந்து பத்து ஆண்டுகளுக்குபின் 1967ல் La Collectionneuse என்ற படம் வெளியாகி மிக பெரிய வெற்றியை ஈட்டிதந்து புதிய அலையின் சகாபத்தில் புதிய வரவாக பதிய வைத்துக்கொண்டது..அப்படம் சிறந்த படத்துக்கான பரிசான வெள்ளிகரடியை வென்றதோடு பலவேறு திரைப்பட விழாக்களிலும் பங்கேற்றது.1969ல் வெளியான அடுத்த்படம் Ma nuit chez Maud சிறந்த அந்நிய மொழி படத்துக்கான ஆஸ்கார் பரிசை பெற்றது ...தொடர்ந்து எரிக்கின் படங்கள் பிரான்சை காட்டிலும் அமெரிக்காவில் பெரும் வரவேற்பை பெற்றன .

புதிய அலையின் மற்ற இயக்குனர்களது படங்களைக்காட்டிலும் எரிக் கின் படங்களில் இலக்கியத்த்ன்மை அதிகம் இருப்பதை நம்மால் உணர முடியும்.
என்னதான் ஷாப்ரோலின் படங்கள் அக்காலத்தில் பிரான்சில் கமர்ஷியலாக வெற்றி பெற்றாலும் எரிக்கின் படங்கள் மிகதாமதமாக ஆனால் காலத்தால் அழியா புகழை சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்றுதந்தன .கென்ஸ் பெர்லின், வெனிஸ் என அனைத்து திரைப்பட விழாக்களில்லும் அவர் சிறந்த படத்துக்கான விருதை பெற்றிருக்கிறார்.

ழாக் ரிவெத்

1928ல் பிரான்சில் பிறந்தவர்.. புதிய அலை இயக்குனர்களில் மற்ற மூவரும் மறைந்தபின்னர் கோதார்த்தும் இவரும் தான் இன்னமும் உறுதியாக சினிமா வாழ்க்கையை நீட்டித்துக்கொண்டிருப்பவர்கள்.
ரிவெத்தின் முதல் படம் Paris nous appartient தான் பணி செய்த கையேது சினிமா நிறுவனத்திலேயே வட்டிக்கு பணம் வாங்கி தன் முதல் படத்தை எடுத்தார் . அப்படியும் பண் ப்ரச்னையால் அவரது சினிமா பாதியில் நின்ற போது த்ரூபோவும் ஷாப்ரோலும் அவருக்கு பண உதவி செய்து படச்சுருளை வாங்கிதந்து தொடர்ந்து படத்தை முடிக்க உதவி செய்தனர். படம் வெளியான போது எரிக் ரோமருக்கு நேர்ந்த அதே கதி நேர்ந்தது. முதல் படமே பெரும் தோல்விபடம் .எரிக்கை போலவே பத்து வருடம் கழித்து இவரது இரண்டாவது படம் L'amour fou வெளியாக அரசாங்கம் அதில் சட்டத்துக்கு புறம்பான காட்சிகள் இருப்பதாக தடை செய்ய போக அதுவே படத்துக்கு பெரிய விளம்பரமாகி பிற்பாடு பெரும் வெற்றிபடமாக மாறியது. அத்பிறகு தொடர்ந்து படங்களை இயக்கிவந்த ரிவெத்துக்கு பிற்காலத்திய படங்கள்தான் பெரும் புகழை பெற்றுதந்தன







.

November 2, 2010

டி என் ஏ ஒன்று, உருவம் இரண்டு: சச்சின் ஏ.ஆர் ரகுமான் ஒரு ஒப்பாய்வு


நதிவழிச்சாலை:5
சச்சின் டெண்டுல்கர், ஏர்.ரஹ்மான் ..
இந்தி சினிமாவின் பத்திரிக்கைகளான பிலிம் பேர்.. ஸ்க்ரீன் போன்றவற்றில் வரும் சில கட்டுரைகளின் எழுத்து நடை காமெடியாக யிருக்கும் . கவர்ச்சியாக எழுதுவதாக எண்ணிக்கொண்டு சில அபத்தமான ஒப்புமைகளைதருவர். உதாரணத்துக்கு "மணிரத்னைத்தை ஹாலிவுட்டின் ஸ்பீல்பெர்க்கு பாலிவுட்டின் பதிலடி" என்றும்,.. "ஆமீர்கானை ஹாலிவுட்டின் டாம்குரூஸூக்கு பாலிவுட்டின் பதிலடி" என்றும் "நடிகை யாரேனும் கால்மேல் கால்போட்டு அமர்ந்து போஸ் கொடுத்தால் அவரை ஷ்ரன்ஸ்டோனுக்கு பதிலடி" என்றும் கைக்கூசாமல் எழுத ஆரம்பித்துவிடுவர்!

ஆனால் அதேசமயம் நம் ஊரில் நம் காலத்தில் நம் கண்முன்னிருக்கும் இரண்டு மிகப்பெரிய நட்சத்திரங்களுக்கிடையில் அநியாயத்துக்கு காணப்படும் அபரிதமான ஒற்றுமைகளை யாரும் இதுவரை கவனிக்காமல் போனதேஆச்சரியமான ஒன்று.

நான் சொல்லும் இரண்டு பேரும் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை எடுத்து சென்றதில் குறிப்பிடத்தக்கவர்கள்.வெற்றிகளின் உயரத்துக்கு அசாத்திய வெற்றி அல்லது இமாலயவெற்றி என்ற வார்த்தைகளுக்கு பதிலாக இவர்களின் பெயரையே குறிப்பிடும் அளவிற்கு தகுதி வாய்ந்தவர்கள்
நான் சொல்வது : சச்சின் டெண்டுல்கர்....... ஏ.ஆர் ரகுமான் என்கிற இருவர் தான்.

இருவருக்குமிடையிலான டி.என்.ஏவை ஒரு பயோகெமிஸ்ட்டை வைத்து ஆராய்ந்தால் பல உண்மைகள் தெரியவரும் போல ..அந்த அளவுக்குஇருவரது உயரம் தோற்றம் சுபாவம் ஆகியவற்றில் ஆச்சரியபடும் ஒற்றுமைகள்

உண்மையில் துவக்ககாலங்களில் நான் இவர்கள் இருவரையுமே அவ்வளவாக ரசித்தவனில்லை அதற்கு காரணம் இன்னும் இருவர் ..

முதலாவதாக கிரிக்கெட்டில் துவக்க காலங்களில் சச்சின் எனக்கு பிடிக்காமல் இருந்ததற்குகாரணம் . முன்னால் கேப்டன் அசாருதீன்

அப்போது நான் அசாருதீனின் பரம விசிறி.. விளையாட்டை ஒரு கலையாக பாவித்து அதன் மரபை பூரணமாக உள்வாங்கி ஆட்ட ஒழுங்கின் அழகை கலையாக மாற்றுவதில் எனக்கு பிடித்தமான சில பேட்ஸ் மேன்கள் உண்டு. அதில் இலங்கையின் அரவிந்த் டிசில்வா மற்றும் வெஸ்ட் இண்டீசின் வில்லியம்சுக்கு பிறகு அசாருதீன் எனக்கு பிடித்தமானவராக இருந்தார் அலட்டிக்கொள்ளாமல் பேட் பிடிக்க வரும் அவரது ஸ்டைல் எனக்கு மிகவும்பிடிக்கும். வரிசையாக முன்று விக்கட்டுகள் சாய்த்திருக்கும் அடுத்துஎன்னவாகப்போகிறதோ என்ற பதட்டம் பார்வையாளர்களுக்கும் சக ஆட்டக்காரர்களுக்கும் இருக்கும்.அந்த சமயத்தில் துளி பதட்டமில்லாமல் அனாயசமாக சூயிங்கமைமென்றபடியே மட்டையுடன் வந்து.. காலரை இழுத்துவிட்டுக்கொண்டு மணிக்கட்டை ஆட்டிவிட்டு மட்டை செண்டர் ஸ்டெம்புக்கு வைத்து அம்பயரிடம் லைன் கேட்பார் .. அந்த முகத்தில் அனைவரிடமும் காணப்படும் திக்...திக்... துளியும் இருக்காது. அதே போல் சொல்லிவைத்தார் போல டீமை தன் கையில் தாங்குவார் ( நினைவுப்படுத்துகிறேன்:நான் சொல்வது அந்தகாலம்) ஒரு கேப்டன் எப்படி இருக்கவேண்டும்.அவர் ஆடுகளத்தில் எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு அவர் ஒரு சரியான உதாரணம். மன உறுதிதளராமல் சக வீரர்களை அரவணைத்து அதே சமயத்தில் இக்கட்டான தருணங்களில் தன் ஆட்டத்தின் மூலம் டீமை காப்பாற்றி என இப்படியான விடயங்களில் அவர் எனக்கு பிடித்தமானவராக இருந்தார்.
மேலும் அசாரின் சிக்சர் பாணி எனக்குமிகவும் பிடிக்கும்

அப்போது நான் மற்றும் உதவி இயக்குனர்கள் பலரும் இராமேஸ்வரம் பட இயக்குனர் செல்வம் அறையில் கூடுவோம் . பெரியார் சாலை பேருந்து நிலையத்துக்கு பின்புறம் இருந்த ஒரு தெருவில் அவரது அறை இருந்தது.
முத்துராமலிங்கம்(சினிமா பி.ஆர.ஓ வாக இப்போது பணிபுரிந்து வருபவர் ) வைரக்கண்ணு( உதவி இயக்குனராக இருந்து மாரடைபால் பிற்பாடு உயர்நிலை எய்தியவர்)இன்னும் பலரும் அங்கு கிரிக்கெட் பார்க்க கூடுவோம். அவர்களில் பலரும் அப்போது சச்சின் ஆதரவளர்கள். கேப்டனாக இருந்த அசாரை பார்த்தாலே திட்டத்துவங்குவார்கள் . அதன் காரணமாகவே நான் சச்சினுக்கு எதிரானவனாக மாறவேண்டி வந்தது.
சிலவருடகாலம் அப்படித்தான் இருந்தேன்
.
.ஆனால் ஒருமுறை சிக்ஸர் சித்து துபாயிலிருந்து பாதி டூரில் திடீரெனதிரும்பியபோது விமான நிலையத்திலேயே அழுதுகொண்டே டிவிக்கு
பேட்டிதந்தார் அதில் அசார் தன்னை வேண்டுமென்றெ ஆடவிடாமல் சதிசெய்து தன்னை தகுதியற்றவனாகசித்தரித்துவிட்டார்யென பொருமி தள்ளினார் . ஒரு ஆண் இப்படி பப்ளீக்காக அழுமளவிற்கு பாலிடிக்ஸ் செய்யும் கேப்டன் ஒருக்காலும் சிறந்த மனிதனாக இருக்க முடியாது என அப்போதைய அறிவுக்கு அரைகுறையாக முடிவெடுத்து அசார் கட்சிக்கு மானசீகமாக ராஜினாமா கடிதம் எழுதினேன்.

அதன் பிறகு நண்பர்களுடன் சேர்ந்து நானும் சச்சினுக்கு மெதுவாக கைதட்ட ஆரம்பித்தேன் . அதற்கேற்றார் போல் அசாருதீன் டவுசர் கிழியும் சத்தம் மெல்ல கேட்க துவங்கியது. ஆட்டம் சரியில்லை. சக ஆட்டகாரர்களின் புகார். என அசார் வெளுக்க துவங்கினார்..நல்ல வேளையாக அவர் மீது ஊழல் குற்றசாட்டு வருவதற்கு முன்பே நான் முழுவதுமாக மாறியிருந்தேன்.சச்சின் கேப்டனாக இருந்த போதுகூட அவர் மீது ஈர்ப்பு வரவில்லை. டீமில் கங்குலி கை ஓங்க ஓங்க நான் முழுவதும் சச்சினிடம் சரண்டர் ஆனேன் .காரணம் கங்குலியை எனக்கு பிடிக்காது.
ஏன் பிடிக்காது என யாரும் கேட்காதீர்கள் அதற்கு காரணமே தேவையில்லை.( கங்குலி ரசிகர்கள் மன்னிக்கவும்). பிறகு சச்சினின் அந்த தன்னடக்கம் பொறுமை நிதானம் எல்லாம் இப்போதுதான் முழுசாக கண்ணில் பட்டது.. அடடா திறமை ஒருபக்கம் இருக்கட்டும் என்ன பாந்தம் என்ன உறுதி.பிறகு அவரது ஒரு பிறந்த நாளின் போது மனைவியை காலரியில் அமரவைத்து செஞ்சுரி அடித்து அவருக்கு அர்ப்பணித்த அந்த ஆட்டம் அவரை நாயகனாகவே மனசுக்குள் உட்காரவைத்து மாலையிட்டது. அதன் பிறகும் அவரிடம் பசை போல ஒட்டவைத்துக்கொண்டது .

அதேபோல ஏ.ஆர் ரகுமான்

சச்சினுக்கு அசார் போல ஏ.ஆர் ரகுமான் எனக்கு நெடுநாட்களாக ஈர்க்காமல் போனதற்கு இளையராஜா ஒரு பெரிய காரணம்.
இளையராஜா என் நெஞ்சத்தில் நீக்கமற நிறைந்திருந்த காலத்தில் திரையுலகில் சட்டென அவரது புகழுக்கு பங்கம் .. ஒரு நிழல் அவரது மாஉருவை சிறிதே மறைத்தது. தன் துல்லியமான நவீன ஒலிப்பதிவு தரத்துடன் ஏ.ஆர் ரகுமான் எனும் ஒரு இளைஞனின் து(உ)ருவம் தான் அது. சின்ன சின்ன ஆசையை விட புது வெள்ளைமழை துவக்க இசை ஈர்த்தது. ஆனாலும் மனசு ஏற்க வில்லை.பிறகு ஜெண்டில்மென் சிக்குபுக்கு வந்ததும் முடிவெடுத்தேன் இல்லை இது சமூகத்துக்கு ஆரோக்கியாமான சத்தம் இல்லை என நண்பர்களிடம் உளறினேன்.

அக்காலத்தில் நகரம் முழுக்க வீடியோ கேம்ஸ். அந்த கடைகளை தாண்டும் போதெல்லாம் ஒரு வினோத சப்தம் . இளைஞர்கள் பலர் அதிகமாக அந்த விளையாட்டில் பணத்தை இழந்து வந்தனர். எப்போதெல்லாம் அந்தகடையை தாண்டுகிறோனோ உலகம் அழிவின் சப்தமிது ..என எண்ணத்துவங்கினேன். ரகுமானின் பாடல்களின் துவக்ககால இசையொலிகள் இப்படியாக இருப்பதாகநண்பர்களிடம் கூறி இவர் நிக்கமாட்டார் என பொருமினேன்.

பின் கிழக்குசீமையிலே படம் வந்தது .. அதன் வினோத இசை பாடல்கள் மெல்ல ஈர்க்க துவங்கியது. திருடா திருடாவில் வரும் ராசாத்தி பாட்டைபெரும்குரலெடுத்து ஆள் இல்லாத மொட்டை மாடியில் உச்சச்சதியில்பாடி மகிழ்ந்தேன் .ரகுமான் உணர்வுகளை சொல்லக்கூடியவர் மனசு மறுத்தாலும் அறிவு அங்கீகரித்தது. . மெல்ல மெல்ல ஏஆர் ரகுமான் ஈர்க்க துவங்கினார்.

அதே சமயம் அசாரை வெறுத்தார் போல நான் இளையராஜாவை வெறுக்கும் சந்தர்ப்பம் மட்டும் வாய்க்கவில்லை ..இன்று இந்த நிமிடம் வரை .. ஷாஜி போன்றவர்கள் கட்டுரை படிக்கும் போது அவர்களது கலாச்சார புரிதலின்மையும் கலைஞனது இயல்புக்கூறுகள் குறித்த அறிவு போதாமையும்தான் என்னுள் எழுந்ததே தவிர இளையராஜாவின் மீதான என் பார்வை எள்ளளவும் மாறவில்லை. இன்னும் சொல்லப்போனால் இதன்பிறகுதான் இளையராஜாவின் ஆழத்தையும் பலத்தையும்தேடி இன்னும் என்னால் ஆழமாக சஞ்சரிக்க முடிந்தது.

அதேசமயம் ஏ.ஆர் ரகுமான்மீதும் அவரது இசையின் மீதும் எனக்கு ஈர்ப்பு அதிகரிக்க துவங்கியது . ஜில்லுனு ஒரு காதல்கதையின் ' 'முன்பே வா' வை திரும்ப திரும்ப கேட்டு தொலைந்து போன-மறைந்து போன-கைவிட்டு போன காதலிகளின் முகத்தை நினைத்து கண்ணீர் மல்கியிருந்திருக்கிறேன் அதிலும் குறிப்பாக அவரது இந்திபட பாடல்களை நான் மிகவும் ரசித்தேன்
சொல்லப்போனால் அவருக்கு கர்நாடகத்தை விட ஹிந்துஸ்தானிதான் அட்டகாசமாக வருகிறது என்றும் கூட சொல்வேன்.
ரங்கீலா துவங்கி அவர் இசையமைத்த இந்திபாடல்கள் தமிழ் பாடல்களைவிடவும் முழுமையான வெற்றியடைந்தவை தால்,லகான் ,ரங் தே பசந்தி, தேசம், ஜோதாஅக்பர், டெல்லி 6, ஸ்லம்டாக் மில்லியனர் என அவரது பாட்ல்களை இப்போதும் ஆவலுடன்
கணிணியில் கேட்டுவருகிறேன். .
குறிப்பாக ஆஸ்கார் விழாவின் போது அவர் உச்சரித்த தமிழ் சொற்கள் தமிழனாக என்னை அவர் மேல் மிகவும் பெருமைகொள்ளச்செய்தன. இப்படியாகத்தான் இந்த மேதைகள் இருவராலும் நான் ஈர்க்கப்பட்டேன்.
ஒருவகையில் இந்த இருவர் மீதும் ஒரு பொறாமையும் கூட எனக்கு உண்டு. .. இத்தனை புகழ் அடைந்த பின்பும் அதுகுறித்த அலட்டலில்லாத அவர்கள்தன்மை என்னை சில சமயங்களில் வெட்கபடவைக்கின்றன
இவர்கள் இருவரிடமும் காணப்படும் அதிசய ஒற்றுமைகளை பட்டியல் போட்டால் அடுக்கிக்கொண்டே போகலாம்.
உயரத்திலும் உருவத்திலும் இருவரையும் ஒப்பிட்டு பாருங்கள் இருவருக்கும் இருக்கும் ஒற்றுமை அபரிதமானது என்பது உங்களுக்கு தெரியவரும் . இருவருமே வார்த்தைகளை நம்பாமல் செயல்களால் உலகத்தோடு உரையாடுபவர்கள் . இருவரும் இதுவரை மீடியாக்களில் பேசிய வார்த்தைகளை ஐந்து நிமிடத்தில் எண்ணிவிடலாம். மட்டுமல்லாமல் இருவரையும் ஒருசேர வைத்துபார்த்தால் பலவகைகளில் இருவருக்கும் அபரிதமான ஒற்றுமை இருப்பது தெரியவரும்.

ஏறக்குறைய ஒரே காலத்தில் ஓரிரு வருட இடைவெளியில் அறிமுகம். சச்சின் 89 ரஹ்மான் 91 என நினைக்கிறேன். அறிமுகமாகி தோன்றி ஒரே சமயங்களில் 94 வாக்கில் உச்சத்துக்கு சென்றவர்கள் .இன்று வரை நிலைத்து நின்று ஆடிக்கொண்டிருப்பவர்கள் . தொடர்ந்து மெகா மெகாஸ்டார்களாக இந்தியவானிலும் உலக வானிலும் ஜொலிப்பவர்கள்

இருவரது உடல் பாவத்தையும் கொஞ்சம் கவனித்து பாருங்கள் இருவருக்குமிடையே பொருத்தம் அத்தனை கனக்கச்சிதம். உயரம் பொறுமையான நடை , சின்ன கண்கள் உதடு ஒட்டியபடி சிரிக்கும் சிரிப்பு, பதில் சொல்லி மாட்டிக்கொள்ள விரும்பாத கேள்விகளுக்கு தோளைகுலுக்கிக்கொள்ளும் பாங்கு என அடுக்கிக்கொண்டே போகலாம் அவர்களது ஒற்றுமைகளை.

உலகம் அறிந்த இந்தியாவின் மிகபெரிய இரண்டு நட்சத்திரங்கள் என்று சொன்னாலும் இவர்கள் இருவர் மட்டுமே நிற்பார்கள்.
அதே போல இருவருமே திறமைகளை வெளிப்படுத்துவதில் எவரும் அருகில் நெருங்க முடியாத உச்சநிலை வெளிப்பாட்டுத்திறன் பெற்றவர்கள்

இந்தியாவின் அனைத்து பகுதி மக்களாலும் நேசிக்கப்படுபவர்கள்
வாழ்க்கை எனும் பெரும்பரப்பில் மனித பண்புகளிலிலும் துருவ நட்சத்திரமாக பிரகாசிக்கும் இவர்களிடம் காணப்படும் ஒற்றுமைகள் குறித்து யாரவாது தீவிரமாக ஆராய்ச்சி செய்து நூல் ஒன்றை எழுதினால் அது பலருக்கும் புகழ்வானுக்கு பயணிக்கும் வழித்துணையாக அமையும்


நாம் ஓடவேண்டியது எவ்வளவோ தொலைவு
ஆனால் அதற்குமுன் கற்கவேண்டியது எத்தனையோ மைல்கள்
--

October 20, 2010

உலக சினிமா வரலாறு மறுமலர்ச்சி யுகம் 24:சினிமாவுக்கு தேவை ஒரு இளம்பெண் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி



பிரான்சின் புதிய அலை பகுதி ; மூன்று

பெர்லின் திரைப்படவிழாவில் தங்கக்கரடி வாங்கிய கையோடு இயக்குனர் கோதார்த் மற்றும் படத்தில் நாயகனாக நடித்த ழீன் பால் மண்டோ ஆகியோர் ஒரே இரவில் உலக நட்சத்திரங்களாக பிரகாசிக்க துவங்கினார். ப்ரெத்லஸ் படத்தின் வெற்றி அதுவரையிலான் பிரெஞ்சு சினிமா சரித்திரத்தை தலைகீழாக மாற்றியது புதிய அலை முழுமையாக உலகசினிமாவில் வீசதுவங்கியது பத்திரிக்கைகள் விமர்சகர்களாக இருந்து இயக்குனர்களாக மாறி தாங்கள் சொல்லியதுபோல செய்துகாட்டிய புதிய இளைஞர்களை கொண்டாடதுவங்கின .

ப்ரெத்லஸ் தந்த வெற்றியை தொடர்ந்து த்ரூபோ, கொதார்த் இருவரும் அமெரிக்க க்ரைம்நவால்களுக்குள் தீவிரமாக தங்களது தேடல்களை துவங்கினர். கதை எங்களுக்கு அவசியமில்லை. அது பார்வையாளனாய் தனக்குள் மூழ்கடித்துவிடும் . அத்ற்கு புத்தகம் போதும். இது சினிமா பார்வையாளனாய் கடைசிவரை இருக்கையில் உட்கார்த்திவைத்திருக்க எங்களுக்கு ஒரு தந்திரம் தேவைப்படுகிறது. ஒரு துப்பாக்கி ஒரு இளம் பெண் இருந்தால் போதும் சினிமாவுக்கு தேவையான மூலப்பொருள் இவ்வளவே..இதைவைத்துக்கொண்டு இதுவரை யாரும் பார்க்காத காட்சிகளை கட்டமைப்பதில்தான் எங்கள் சினிமா உறங்கிகிடக்கிறது என கோதார்த் வெளீப்படையாக அறிவித்தார். த்ரூபோவுக்கும் இதே பார்வைதான் என்றாலும் கோதார்த் அள்வுக்கு தொழில்நுட்ப பரிசோத்னை முயற்சிகளில் முழுமையாக அவர் இறங்க விரும்பவில்ல்லை.
கோதார்த்தை போல முழுக்க காட்சி அனுபவத்தை கொண்டிருத்தல் மற்றும் மரபுகளை உடைத்து புதிய வற்றை உருவாக்குதல் போன்றவற்றோடு சுவாரசியமான கதைகள் மற்றும் கதாபத்திரங்களையும் த்ரூபோ நம்பினார். காரணம் அவர் தயாரிப்பாளராகாவும் இருந்தார். அவரே தயாரித்த அவரதுஇரண்டாவது படமான ஷூட் தி பியானிஸ்ட் பிளேயர் 1960 படத்தின் தோல்விக்கு பிறகுதான் த்ரூபோ இந்த முடிவுக்கு வர நேர்ந்தது. . அதனால க்ரைம் திரில்லர் ஆகியவற்றுடன் சிறந்த கதைகளையும் உள்வாங்கி அவற்றை தன் காமிராவின் மூலம் மீண்டும் எழுதினார். அதன்படி பிரெஞ்சு நாவல் ஒன்றை ஒட்டி எடுத்த ஜூல்ஸ் அட் ஜிம் 1962 வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியை ஈட்டியது. தொடர்ந்து டூ இங்கிலீஷ் வுமன்,1971 தி மேன் ஹூ லவ்டு வுமன்1977, க்ரீன் ரூம் ,1978வுமன் இன் நெக்ஸ்ட் டோர் ,1981 .. போன்ற காலத்தின் மகத்தான படைப்புகளை அவர் உருவாக்கினார். த்ரூபொவின் துவக்ககால திரைப்படங்கள் பெரிதும் அவரது சுய வரலாற்றை ஒட்டியதாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.அவரது திரைப்படங்களில் தன்னியல்புத்த்ன்மையே வரது த்னைத்தன்மை ..அவரது கதாபத்திரங்கள் அடுத்து என்ன செய்யும் என்பதை எவரும் ஊகிக்க முடியாது. திரைக்கதையின் இந்த அவரது தன்னியல்புதன்மை காட்சிக்கொணாங்கள் ,படத்தொகுப்பு என அனைத்து தொழில்நுடபகூறுகளிலும் விரவி அசாத்திய உயிர்த்தன்மையை அவரது படங்களுக்கு வழங்கியது.
அவரது திரைப்படங்களில் வுமன் இன் நெக்ஸ்ட் டோர் அவரது பாணியிலிருந்து முழுமையான விலகிய படைப்பாகும். அழுத்த்மான உணர்வெழுச்சிகள் நிரம்பிய அப்படைப்பு புதிய அலைக்கு எதிரானதாக மரபான சினிமகாளை மீண்டும் கொண்டாடுவதாக அமைந்துள்ளதாக விமர்சகர்கள் கடுமையாக தாக்கினர்.

த்ரூபோவின் திரைப்படங்களின் கலாபூர்வ வெற்றிக்கு அவரது பெரும்பானமை திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்ரிய நேஸ்டர் அல்மான்ரஸுக்கும் பெரும்பங்கு உண்டு .வெறுமனே இயக்குனராக அல்லாமல் ஒரு இயக்கத்தை முன்னெடுத்து செல்பவராகவும் அத்ன் சகலகூறுகளையும் முழுமையாக உணர்ந்து உலக சினிமாவின் வளர்ச்சிக்கு த்ன்னை அர்ப்பணித்துக்கொள்பவராகவும் செயல்பட்டதுதான் த்ரூபோவின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் . மேலும் வெறுமனெ வணிக திரைப்பட இயக்குனர் என்றுமட்டுமே உலகசினிமா விமர்சகர்களால் முத்திரை குத்தப்ப்ட்ட ஹாலிவுட் இயக்குனரை தன் நண்பர் சாப்ரோலுடன் நேரில் சந்தித்து நீண்ட பேட்டி எடுத்து அதனை நூலாக வெளியிட்டார் . அந்த நூல் வெளியான பிறகுதான் ஹிட்சாக்கின் திரைப்படங்களின் மீதான் பார்வை விமர்சகர்களிடத்தில் முழுமையாக மாற்றம் கண்டது.அழ்ந்த மனைத நேயப்பற்றும் வாழ்க்கையின் மீதான் தீராத கவர்ச்சியும் உறவுகளின் போலித்த்னமையும், சம்பிராதயங்களின் மீதான் கேள்விகளும்,பால்யத்தின் பதட்டமும்,அளவற்ற காதலும் ,,கட்டற்ர காமமுமாக காண்ப்படும் த்ரூபோவின் படங்கள் மனித மனத்தின் ஆவணகாப்பகங்களாக படைப்பு நேர்த்தியுடன் உலகசினிமாவின் அணிகலன்களாக இன்றும் விளங்குக்கின்றன.

அதேசமயம் கோதார்த் த்ரூபோவிடமிருந்து முழுமையாக தன்னை விளக்கி கொண்டவர் .கோதார்த்தின் திரைப்படங்கள் அரசியல்பேசுபவை. துவக்ககாலங்களில் தீவிரமான மார்க்சியராக விளங்கிய கோதார்த் பின் மாவோ வின் சீன கம்யுனசிககருத்துக்களால் அதிகம் ஈர்க்கப்பட்டார். அவரது திரைப்படத்தின் மீதான் ஆரவம் கூட ஒரு அரசியல் நடவடிக்கையே என அரசியலை கலையையும் பிரிக்கமுடியாத கூறுகளாக பாவித்தார்.பிற்பாடு த்ரூபோ வின் திரைப்படங்கள் வணிகவெற்றியை நோக்கி உந்திசென்றபோது தனக்கு முதல படவாய்ப்பு வாங்கி கொடுத்த நண்பர் என்றும் பாராமல் த்ரூபொவை பூர்ஷூவாவாக மாறிப்போன கம்யூனிஸ்ட் என பகிரங்கமாக விமர்சனம் செய்தார்.

அமெரிக்க இயக்குனர் ஆர்சன் வெல்ஸ் இயக்கிய எக்ஸ்போ 58 எனும் ஆவ்ணப்படத்தை பார்ததபோது தனக்கான சினிமாவின் விழிப்புணர்வை அடையப்பெற்ற கோதார்த் தனது ப்ரெத்லஸ் முதல் படத்திலேயே வழக்கமான சினிமாமொழியை முழுமையாக உடைத்து ஜம்ப்கட் எனும் புதிய உத்திமூலம் உலகசினிமாவை தன்பக்கம்திசை திருப்பிக்கொண்டார். அத்னாலதான் முதல்படத்தின் பிரம்மாணட வெற்றிக்கு பிறகு அவர் த்ரூபோவைபோல முழ்நீள படம் எடுப்பதை தவிர்த்து அல்ஜீரிய போர பற்றிய திரைப்படத்தை எடுப்பதில் முனைப்பு காட்டினார். தொடர்ந்து Woman Is a Woman (1961), Vivre sa vie (1962), Les Carabiniers (1963) மேற்சொன்ன மூன்று திரைப்படங்களும் அவரது ப்ரெத்லஸ் பொல பெரிய வெற்றியை ஈட்டவில்லை ஆனால் அடுத்து வந்த அவரது Le Mépris (1963),வணிக ரீதியாக பெரும் வெற்றியை அவருக்கு ஈட்டித்தந்தது.

கோதார்த் எந்த சமரசத்துக்கும் தன்னை ஆட்படுத்திக்கொள்ளாதவர் .நான் இவ்வுலகில் தொடர்ந்து எவரும் பார்த்திராத புதிய காட்சிகளை காமிராவின் மூலம் தேடுகிறேன்.அவற்றை எனக்குள்ளான அரசியல்மூலமாக தொகுத்து திரைப்படம் எனும் வடிவத்தில் செதுக்க முயல்கிறேன் இதுவே என் சினிமா என அறிவித்துக்கொண்ட கோதார்த் பார்வையாளனை எந்த தருணத்திலும் பொருட்டாக கருதியதில்லை. அவரது திரைப்படங்கள் கோர்வையாக இல்லை. புரியவில்லை .குழ்ப்பமாக இருக்கின்றன என தொடர்ந்து குற்றசாட்டுகள் வசையாக அவர் மீது விழுந்தவண்னமிருந்தன. ஆனால் அவற்றை சட்டைமீது விழும் இலையை விரல்களால் ஒதுக்குவதுபோல உதாசீனப்படுத்திவிட்டு தன்னுடைய படங்களில் தீவிரமாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.பார்வையாளனை அந்நியப்படுத்தி அவனது நுகர்ச்சிதனமையிலிருந்து விலகி அவனுக்கு உணர்ச்சிகளை தூண்டும் திட்டமில்லாத அதேசமயம் அவனது சிந்த்னையை துண்டக்கூடிய காட்சிகளில்புதிய அனுபவத்தை உண்டாக்க கூடியபடைப்புகளை உருவ்வாக்குவதில் முனைப்பாக இருந்தார். புகழ்பெற்ற நாடக இயக்குனர் பெத்ரோல்ட் பிரெக்தின் நாடகங்களின் பால் ஈர்ப்புகொண்டிருந்த கோதார்த் அவரது நாடகத்தின் சில கூறுகளை தன் திரைப்படத்தில் பயன்படுத்தி பார்வையாளனின் இரண்டாவது வாசிப்புக்கு அல்லது இரண்டாவது பரிணமாத்துக்கு தன் திரைப்படங்களில் வழி சமைத்து கொடுத்தார்.பிற்காலத்தில் டிசிகாவெர்தோவ் எனும் ரஷ்ய இயக்குனர் பெயரில் உருவான குழுவில் இணைந்து திரைப்படங்களை இயக்க்கி வெளியிட்டுள்ளர். எண்ணற்ற முழ்நீள திரைப்பட்ங்களுடன் குறும்படங்கள் ஆவணப்படங்கள் என மாற்று சினிமா முயற்சிகளின் மூலம் வணிக சினிமாபோக்கு எதிராக செயல்பட்டவர் . ஆனாலும் கோதார்த் உலகின் த்லைசிறந்த இயக்குனர்கள் பலரால் இப்போதும் குருவாக மதித்து போற்றபடுபவர். Quentin Tarantino,Martin Scorsese, Bernardo Bertolucci, Arthur Penn, Richard Linklater, Gregg Araki, John Woo, Mike Figgis, Robert Altman, Steven Soderbergh, Richard Lester, Jim Jarmusch,Rainer Werner Fassbinder, Brian De Palma, Wim Wenders, Oliver Stone என அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட இயக்குனர்களின் பட்டியல் நீண்டுசெல்கிறது. அவரது திரைப்படவாழ்வின் முழுமையான வெற்றிக்கு இதுவே தக்க சான்று . தன் எண்பதாவது வயதிலும் மறைந்த தன் புதிய அலை சகா எரிக் ரோமர் பற்றிய ஆவணப்படத்தை இயக்கி அவர் வெளியிட்டிருப்பது சினிமாவின் மீதான அவரது பற்றை நமக்கு நிரூபிக்கிறது

(அடுத்த இதழில் பிரெஞ்சு சினிமா அலை ..இறுதி பாகம் சாப்ரோல் ..எரிக் ரோமர் ழாக் ரிவெத் )












க்ளாத் சாப்ரோல் (24 June 1930 – 12 September 2010)
( claude chabrol photo)


சென்ற செப்டம்பர் 12ம் நாள் பிரெஞ்சு புதிய அலை சினிமாவின்மற்றுமொரு பிதாமகன் காளாத் சாப்ரோல் தன் எண்பதாவது வயதில் சினிமாவை விட்டு உயிர்பிரிந்தார். அவரது திரைப்படங்கள் மற்ரும் வாழ்க்கை குறிப்பு இத்தொடரின் அடுத்த பகுதியில் இடம் பெற உள்ளது.

அந்த உலகசினிமா மேதைக்கு புத்தகம் பேசுது சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்

- அஜயன்பாலா








.

September 18, 2010

பைட் கிளப் :

நதி வழிச்சாலை: 3 படிச்சு முடிச்சுட்டு சினிமா கனவோட சென்னைக்கு வந்த புதுசுல இரண்டு விஷயம் என்னை ரொம்பவே பயமுறுத்துச்சி. ஒண்ணு இங்கிலீஷ் அப்ப நான் வேலை செஞ்ச ஒரு டூவீலர் கம்பெனிக்காக ஒவ்வொரு ஆபீசா ஏறி மேனேஜரை கரக்ட் பண்ணி மொத்தமா பத்து பதினைஞ்சு வண்டியை அவங்க தலையில கட்டணும் .என்னோட வேலை இதுதான் . கொஞ்சம் சிரமமான வேலை ஏற்கனவே நம்ம இங்கிலீஷ் அரைகுறை . பெரிசா அப்பியரண்சும் இல்லை. ஆனாலும் தெரிஞ்வர் ரெக்கமண்டேஷ்ன் காரணமா வேலையில சேத்துக்கிட்டாங்க .மொதல்ல இந்த கார்ப்பரேட் ஆபிசுக்குள்ள போறதுன்னாலே கைகால் உதறும். ஜெய்சங்கர் படத்துல வர்ற பாஸ் ஏரியா மாதிரி கும்மிருட்டு.. குண்டு குண்டு பல்பு.அதை மீறி அங்க உக்காந்துருக்க ரிசப்ஷனிஸ்ட் .அவ பேசற இங்கில்லீஷ் . நாம ஏதாவது துணிச்சலோட இங்கிலீஷ்ல பேச ஆரம்பிச்சா உடனே பர்டன்னு ஒருவார்த்தை வரும் .. ஆண் பெண் யார்கிட்ட இங்கிலீஷ்ல பேச ஆரம்பிச்சாலும் .. உடனே ..பர்டன் .. . அது என்னவோ தெரியலை .இந்த வார்த்தைய கேட்டாலெ எனக்கு மூளை ஸ்டாப் ஆயிடும் அப்புறம் ஒரு வார்த்தையும் வாயிலர்ந்து வராது . எனக்கு ரொம்ப நாளைக்கு இந்த பர்டனுக்கு என்ன அர்த்தம்னே தெரியலை. யார்கிட்டயாவது அர்த்தம் கேக்க்லாம்னு பாத்தாலும் சின்னதயக்கம் . ம்ம் இது கூட தெரியலையா நீயெல்லாம் மெட்றாசுக்கு வந்து குப்பையை கொட்டி ன்னு கேவலப்படுத்திடு வாங்களோன்னு ஒரு சின்ன பயம். சமீபத்துல கூட ஒரு படத்துல இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாம ஒரு கதாநாயகன் அவஸ்தை படறதை பார்த்தப்ப எனக்கு என்னோட அந்த காலத்து நெலமைதான் ஞாபகத்துக்கு வந்தது. நல்ல வேளையா ரெண்டேமாசத்துல அந்த வேலையை விட்டு பத்திரிக்கைக்கு ஓடினது தனிக்கதை. இரண்டாவதா என்னை பயமுறுத்துன விஷயம் .. எழுத்தாளர்கள் அதுக்குமுன்னாடி வரைக்கும் எனக்கு எழுதுறவங்க மென்மையானவங்க.. புழு பூச்சிக்கு கூட தீங்கு நினைக்கமாட்டாங்க கடவுளுக்கு நிகரானவங்க.. நம்ம கிட்ட ஆட்சியை குடுத்தா எழுத்தாள்ர்கள் அனைவருக்கும் ஆயுசுக்கும் கஷ்டப்படாம இருக்க வீடுவசதி எல்லம் செஞ்சிகுடுத்து அவங்கள தொடர்ந்து எழுதவைக்கணும்ன்னு நெனச்சிக்கிட்டிருந்தேன். அப்ப கோபால புரத்துல காதி கிராமாத்யோக பவன்ல முன்றில் ஏற்பாட்டுல எண்பதுகளில் கலை இலக்கியம்னு ஒரு கருத்தரங்கு நடந்துகிட்டிருந்தது அதுக்குமுன்னாடி வரைக்கும் நான் ஒரு எழுத்தாளரையும் நேர்ல பாத்ததில்லை. அப்ப அதி தீவிர வாசகனா இருந்த நான் எழுத்தாள்ர்களை பாக்கறதை ஒரு தெய்வ காட்சியா நெனச்சிக்கிட்டிருந்தேன். அந்த கூட்டத்துக்கு போனா எல்லாரையும் பாக்கலாம்ன்னு சொல்லி நண்பன் ஒருத்தன் கூட்டிட்டு போனான். . ஆனா அங்க எல்லாமே தலைகீழ் . எந்த எழுத்தாளர் கிட்ட பேச போனாலும் அவனை விடக்கூடாது அவனை வெட்டணும் இவனை குத்தணும்னு ஒரே ஆளாளுக்கு கும்பல் கும்பலா நின்னு பேசிக்கிட்டிருந்தாங்க இரண்டாவது நாள் மேடையில ஒரு வயசானவர் நாவல் பத்தி பேசிக்கிட்டிருக்கும்போதே கீழேருந்து குண்டா ஒருத்தர் எழுந்து ”நீ வாட வெளிய ஒண்ணை உதைக்கிறேண்டான் ‘’னு சவால் விட்றார்.. மேடையில பேசிக்கிட்டிருந்த வயசானவர் ஞானின்னும் கீழே பேசனவர் சாரு நிவேதிதான்னும் அப்புறமா தெரிஞ்சிக்கிட்டேன். இவங்களா இப்படி எனக்கு செம அதிர்ச்சி. இவ்வளவு கேவலமா சாதரண மனுஷங்க மாதிரி சண்டையை போட்டுக்கிறாங்கன்னு அன்னைக்கு நான் யோசிச்சேன். அதுக்கப்புறம் காலம் என்னை புரட்டி புரட்டி எடுத்துச்சி.கோணங்கி எஸ்.ராமகிருஷ்ணன் எல்லாரும் என் அறைக்கே வர ஆரம்பிச்சாங்க . நானும் குட்டயில விழுந்தேன். அன்னைக்கு நடந்த சண்டைய இப்ப யோசிக்கும் போது அந்த சண்டை எனக்கு இப்ப வேற ஒண்ணா தெரியுது. அது இரண்டு எழுத்தாளர்கள் பிரச்னை யில்லை இரண்டு தத்துவங்களோட ப்ரச்னைன்னு புரிஞ்சுக்க முடிஞ்சுது நவீனத்துவத்தை அடிச்சுட்டு பின் நவீனத்துவம் மேலெழுந்த காலம் அது சாரு மட்டும் இல்லாம அன்னைக்கு அங்க கூடியிருந்த நாகார்ஜுனன், ரமேஷ் -பிரேம் மாலதி மைத்ரி.. (அக்கா அப்பல்லாம் எழுத ஆரம்பிக்கலை ..ஆனாலும் செம பைட் குடுத்தாங்க) ராஜன் குறை, பாண்டிச்சேரி .ரவிக்குமார் டி ,கண்ணன் இவங்களுக்ககெல்லாம் தலைவரா இருந்த தமிழவன் இவங்க எல்லாருமே யாரையாவது அடிக்கணும் ஒதைக்கணூம்ங்கிற வேகத்தோடதான் திரிஞ்சாங்க இந்தமாதிரி சண்டைகள்தான் சமூகத்துக்கும் இலக்கியத்துக்கும் வலுசேர்க்குது . எங்க கருத்துசண்டை அதிகமா இருக்கோ அங்க காலத்துக்கும் சமூகத்துக்கும் சண்டை நடந்துகிட்டிருக்குன்னு அர்த்தம் . இந்த மாதிரி எழுத்தாளர்கள் சண்டை உலகம் முழுக்க பிரசித்தம். பிரான்ஸில் குருவும் சிஷ்யணுமா இருந்த ஆல்பர்காம்யு ..சார்த்தர் சண்டை உலக பிரசித்தம் ..அது மனித நேயத்துக்கும் , எதேச்சதிகார அரசியலுக்கு எதிரான கலகத்துக்கும் நடந்த யுத்தம் இன்னைக்கும் அந்த சண்டைகள் குறித்துவிவாதம் தொடர்ந்துகிட்டுதான் இருக்கு . அவங்களாவது பரவாயில்லை ..ஆனா அவங்களை விட பெருசுங்களா உலகமே அண்ணாந்து பாக்குற ஒரே காலத்தில் வாழ்ந்த ரஷ்யாவின் உலகபுகழ்பெற்ற மேதைகள் டால்ஸ்டாய் தஸ்தாயேவெஸ்கி துர்கனேவுக்கிடையிலேயே நடந்த சண்டைகள் ரொம்ப ஆச்சரயபடவைக்குது டால்ஸ்டாயும் துர்கனேவும் கிட்டதட்ட பதினேழு வருஷம் ரெண்டு பேரும் காத்திரமா அடிச்சுகிட்டாங்க இத்தனைக்கும் நம்ம ஊர் காந்திக்கே அஹிம்சைய போதிச்சவர் டால்ஸ்டாய் அப்படிப்பட்ட டால்ஸ்டாயே சக எழுத்தாள்ர் இவான் துர்கனேவை .. ஒருமுறை உனக்கு தில் இருந்தா வாடா ஒண்டிக்கு ஒண்டி மோதிபாப்போம்னு பகிரங்கமா சவால் விட்டார் . இந்த ஒண்டிக்கு ஒண்டி சண்டைக்கு அவங்க சொல்ற பேர் டூயல் DUEL ஒத்தைக்கு ஒத்தியா நின்னு வாள் சண்டை போடற இந்த DUEL ரஷ்யாவில ஒரு கலாச்சாரம் . வீரனுக்கு அழகு நம்ம ஊர்ல பாறாங்கல்லை தூக்குறா மாதிரி அங்க இந்த DUEL. ஒரே பொண்ணுக்கு ரெண்டுபேர் ஆசைப்பட்டா ஆளுக்கு ஒருபக்கம் கத்தியை உருவிக்கிட்டு நிப்பாங்க ..சண்டை ஆரம்பிச்சிட்டா யாரவது ஒருத்தர் குத்துபட்டு சாவறது வரைக்கும் கடைசி வரைக்கும் நிறுத்தக்கூடாது .. இது தான் இந்த DUEL.லோட விதி உலக புகழ் பெற்ற ரஷ்ய கவிஞர் புஷ்கின் ஒருகாதலுக்காக இது மாதிரி நடந்த சண்டையிலதான் சின்ன வயசுலயே இறந்தாரு அப்படிப்பட்ட ஒண்டிஒண்டி சண்டைக்கு சக எழுத்தாளனை புத்துயிர்ப்பு மாதிரி காலத்தால் அழியாத நாவலை எழுதுன டால்ஸ்டாயே கூப்பிட்டிருக்கார்னா பாத்துக்குங்க எழுத்தாளனோட கொபத்தை.அதுக்கப்புறம் டால்ஸ்டாய் இதுக்காக துர்கனேவ் கிட்ட மன்னிப்பு கேட்டுகிட்டார்ங்கிறது தனிக்கதை. அதேபோல தஸ்தாயேவெஸ்கிக்கும் துர்கனேவுக்கும் கூட ரொம்ப ப்ரச்னை. தன்னோட The Devils நாவல்ல கர்மசோனிவ்ங்கீற ஒரு மோசமான எழுத்தாளன் பாத்திரத்துல அச்சு அசலா துர்கனேவையே அவர் சித்தரிச்சிருந்தார். கடைசியில் 1880ல் புஷ்கின் சமாதியில நடந்த ஒரு கூட்டத்துல உன்னோட படைப்புகள் உன்னதமானவை எனக்கூறி தஸ்தாவெஸ்கி கண்ணீரோட போய் துர்கனெவை கட்டியணைச்சிகிட்டது தனிக்கதை

September 14, 2010

நாயகன் பெரியார் குறித்த எனது நேர்காணல்


கலைஞர் தொலைக்காட்சியில் நாளைகாலை 8 மணிக்கு
சந்தித்த வேளை நிகழ்சியில் பெரியார் குறித்த எனது நேர்காணல் ஒளிபரப்பாக உள்ளது.

September 10, 2010

சினிமா என்பது கணத்திற்கு இருபத்தி நான்கு சட்டகங்களாக சரியும் உண்மைகள்


உலக சினிமா வரலாறு 23
பிரான்சின் புதிய அலை பகுதி ; இரண்டு


தனது சினிமா குறித்த புதிய கோட்பாடுகளை உலகிற்கு அறிவிக்கும்விதமாக 1951ல் “கையேது சினிமா” Cahiers du Cinema எனும் இதழை துவக்கிய அதன் ஆசிரியர் ஆந்த்ரே பஸின் ... இளைய எழுத்தாளர்களை ஆரம்ப இதழ்களில் உள்ளே அனுமதிக்க தயங்கினார். அவர்களிடம் காணப்பட்ட அபரிதமான துடிப்பும் வேகமும் தான் இதற்கு காரணம் . அவர்களது விமர்சனங்கள் காரசாரமாக இருந்தன .. ஆனாலும் எரிக் ரோமர்,கோடார்ட், ரிவெட் , க்ளாத் சாப்ரோல் மற்றும் த்ருபோ போன்ற இளம்படைப்பாளிகள் இதழூக்கான மற்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். .. திரைப்பட இயக்குனர்களை பேட்டி காண்பது .. திரைப்பட விழாக்கள் பற்றி குறிப்பெழுதுவது போன்ற சிறு அள்வில் அவர்களது எழுத்துக்கள் பிரசுரமாகின. ஆனாலும் அதற்கு நாளுக்குநாள் வரவேற்பு கூடிக்கொண்டே இருந்தது. ஆந்த்ரே பஸின் ஒரு தந்தையை போல அவர்களை வழி நடத்தினார். குறிப்பாக த்ரூபோ ஆந்த்ரே பஸினின் செல்லபிள்ளையாகவே வளர்ந்தார். ஒருமுறை த்ரூபோ இளம் குற்ற வாளிகளுக்கான சிறையில் காவலர்களால் பிடிபட ஆந்த்ரேபஸின் தான் அவரை அங்கிருந்து மீட்டு வந்து தன்னோடு தங்க வைத்துக்கொண்டார்.
முதன்முதலாக் 1953ல் த்ரூபோ எழுதிய "A Certain Tendency of the French Cinema எனும் கடுமையான விமர்சனம் தாங்கிய கட்டுரையை ஆந்த்ரே பஸின் துணிந்து பிரசுரித்தார் . அக்கட்டுரை எதிர்பாராத விதமாக பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது . ஒரு பக்கம் பிரெஞ்சு சினிமாவின் அக்காலத்திய இயக்குனர்கள் கொதித்தெழ இன்னொருபக்கம் வாசகர்களிடமிருந்து பலத்த வரவேற்பு . இக்கட்டுரைக்கு கிடைத்தவரவேற்பை தொடர்ந்து பஸின் கோடார்ட், சாப்ரோல் ,எரிக் ரோமர் என அனைவரையும் எழுதவைத்தார்.. இதழை இளைஞர்களின் எண்ணங்கள் முழுவதுமாக ஆகரமித்தன. சினிமா பற்றிய புதியகருத்துருவாக்கங்கள் உதித்தன. வெறுமனே நாவலில் இருப்பதை அச்சு பிறழாமல் ஸ்டூடியோவில் படம்பிடிக்கும் முறைமையை இவர்கள் கடுமையாக சாடினர்.விதிகளை உடையுங்கள் இவைதான் அவர்களின் கோஷம் சினிமா இயக்குனரின் ஊடகம் அங்கு தயாரிப்பாளனுக்கோ கதாசிரியனுக்கோ நடிகனுக்கோ முக்கியத்துவமில்லை. இயக்குனர் சர்வ சுதந்திரமாக தான் நினைத்ததை காமிராமூலமாக எழுதுகிற போதுதான் சினிமா எனும் கலை உயிர்பெறுகிறது என்பது போன்ற தங்களது கலைகோட்பாடுகளால் பிரெஞ்சு சினிமாவை அதிரவைத்த்னர்.

உலகசினிமாகளை தலைகிழாக புரட்டி தாங்கள் இயக்குனராக அங்கீகரிப்பவரது பட்டியலை வெளியிட்டனர். அமெரிக்காவின் கிரிபித், D.W. Griffith, விகட்ர் ஸ்ட்ரோஜம் ,Victor Sjostrom,பஸ்டர் கீட்டன் , Buster Keaton, சார்லி சாப்ளின்,Charlie Chaplin, எரிக் வான் ஸ்ட்ரோஹிம் Erich von Stroheim போன்றவர்களையும் பிற்காலத்தைய இயக்குனர்களில் ஆல்பிரட் ஹிட்ச்காக் Alfred Hitchcock , ஜான் போர்ட் john ford ஹாவர்ட் ஹாக்ஸ் Howard Hawks ஆர்சன் வெல்ஸ் Orson Welles ஜெர்மனியில் எர்னஸ்ட் லூபிட்ச் , Ernst Lubitsch, ப்ரிட்ஸ் லாங் Fritz Lang முர்னோ . Murnau இத்தாலியின் ரோபர்ட்டோ ரோஸலினி மற்றும் விட்டோரியா டிசிகா ஆகியோர் கொண்ட பட்டியலைமட்டுமே தாங்கள் அங்கீகரிக்கும் முழுமையான இயக்குனர்களாக அறிவித்தனர் . மற்ற்வர்கள் கதை சொல்லிகள் .அவர்கள் ஒருகதைக்குள் மக்களின் ஞாபகங்களை மூழ்கடித்தனர் . ஆனால் இவர்கள் மட்டும சினிமாவின் கலையை கதைகளையும் ரசிகணையும் கடந்து அழைத்து சென்றவர்கள் என அறிக்கை விட்ட்னர் .

எத்த்னை நாள்தான் விமர்சனம் எழுதுவது நமக்கான சினிமாவை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் என முடிவு செய்த இந்த இளைஞர்கள் அடுத்த கட்டமாக களத்தில் இறங்கினர் .அக்காலத்தில் இயக்குனராவதற்கான வழி முதலில் பிரபல இயக்குனர்களிடம் உதவியாளர்களாக சேருவது பின் குறும்படம் எடுத்து அதன் மூலம் பெரிய தயாரிப்பாளர்களை பிடிப்பது. இதுதான் . ஏற்கனவே இவர்கள் மேல் அக்கால இயக்குனர்கள் கடுங் கோபத்தில் இருந்த காரணங்களால் அவர்கள் உதவி இயக்குனராக சேருவது அத்தனை எளிதான காரியமாக இல்லை . ஆளுக்கு வெவ்வேறான துறைகளின்மூலமாகவும் உதவி இயகுனர்களாக தாங்கள் அங்கீகரித்த இயக்குனர்களிடமும் முதலில் சினிமா தொழிலுக்குள் நுழைந்தனர். அத்ன்படி களாவுத் சாப்ரொல் 20 தி செஞ்சுரி பாக்ஸில் நிர்வாக பிரிவிலும் .கோடார்ட் ஒரு திரைப்படத்தின் மக்கள் தொடர்பு பிரிவிலும் நுழைய த்ரூபோ ரோபர்டோ ரோஸலினியிடம் ரிவெட் ரெனுவாரிடமும் உதவி இயக்குனர்களாக துறைக்குள் நுழைந்தனர் . சிலகாலம் பணிபுரிந்த அனுபவத்தின் மூலம் சொந்தமாக தங்களது கைபணத்தை போட்டு படம் எடுக்க துவங்கினர் . அக்காலத்தில் அரசாங்கம குறும்படங்களுக்காக பொருளுதவி செய்தது ஆனால் அத்தகைய படங்களில் இயக்குனரின் வேலை ஸ்டார்ட் கட் சொல்வதாக மட்டுமே இருந்து வந்தது இதனால் தாங்களே சொந்த கம்பெனி துவக்கி படம் எடுத்த்னர். ஒருவருடைய படங்களில் மற்ற்வர்கள் உதவி இயக்குனராக சம்பளம் இல்லாமல் வேலை செய்தனர். அதன்படி முதலில் எரிக் ரோமர் ,மற்றும் ரிவட் ஆகியோர் படமெடுக்க கோதார்த், சாப்ரோல் ஆகியோர் திரைக்கதை எழுதினர். கோதார்த் ஸ்விட்சர்லாந்தில் இருந்த அணைக்கட்டு ஒன்றை ஆவணப்படாமாக முதலில் எடுக்க துவங்கினார். ஒரு கட்டத்தில் காசில்லாமல் படப்பிடிப்பு பாதியில் நின்று போனது. அத்ற்கு தெவையான மீத பணத்துக்காக அதே அணைக்கூட்டிலேயே கூலியாளாக வேலை செய்து அதன் மூலம் கிடைத்த வருமானத்தை கொண்டு படத்தை முடித்தார் கோதார்த்.. இடைக்காலத்தில் த்ரூபோவுக்கு திருமணம் ஆகியிருந்தது . அவரது மனைவியின் தந்தை சற்று வசதிமிக்கவராக இருந்த காரணத்தால் சொந்தமாக கம்பெனி துவக்கசெய்து அவரது பணத்தின் மூலம த்ரூபோ குறும்படமெடுக்க துவங்கினார். முதல் திரைப்படம் Les Mistons . தொடர்ந்து இரண்டாவதாக அப்போது பிரான்சில் பெய்த அடைமழையை வைத்து மற்றுமொரு குறும்படம் எடுக்க துவங்கினார். ஒருகட்டத்தில் த்ரூபோவுக்கு அப்படத்தை எடுப்பது சிரமமாக இருக்க கோதார்த்திடம் காமிராவை ஒப்படைத்தார். அப்படத்தை தொடர்ந்து இயக்கிய கோதார்த் த்ரூபோவின் திரைக்கதையை பின் தொடராமல் தன்னிச்சையான படமாக எடுத்து படத்தை முடித்தார் . நியூவேவ் எனப்படும் புதிய அலையின் முதல் படமாக வரலாற்று ஆய்வாளர்கள் இப்படத்தையே குறிப்பிடுகின்றனர்.

இச்சூழலில் அரசாங்கத்தின் சில புதிய சட்டங்களின் மூலமாக வும் புதிய தொழில் நுட்பங்களின் மூலமாக சினிமா எடுக்கும் செலவு குறைய்ய துவங்க ஆந்த்ரே பஸின் தலைமையிலான அந்த புதிய இளைஞர் படைக்கு கதவுகளை திறந்து வழிவிட்டார் போலானது. அதுவரை பிரான்சுக்குள் மட்டுமே வீசிய புதிய அலை கரைகள் உடைத்து உலக நாடுகளெங்கும் வீச துவங்கிய காலமும் வந்தது.

புதிய அலை >
அதுவரையிலான விதிகளை உடைத்தெழுந்த புதிய அலை சினிமாக்களின் காலத்தை துவக்கியவர் ரோஜர் வாதிம் .. 28 வயது இளைஞர் அவரது And God Created Woman) (1956) என்ற படம்தான் அந்த பெருமைக்குரிய திரைப்படம் . தொடர்ந்து மெல்வில்,லூயி மால் , சாப்ரோல் போன்றவர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருந்தாலும் அவை பிரான்சில் மட்டுமே அதிர்வலைகளை உண்டாக்கிக்கொண்டிருந்தன. இது குறித்து 1957ல் பிரான்சில் வெளியான நாளிதழ் ஒன்றில் புதிய இளைஞர்கலின் சினிமா பற்றி ஒருகட்டுரை பிரசுரமானது. The New Wave: Portrait of Today’s Youth எனும் தலைப்பிட்ட கட்டுரையில்தான் முதன் முறையாக நியூ வேவ் புதிய அலை எனும் பதம் பயன்படுத்தப்பட்டது . ஆனாலும் கட்டுரை புதிய இளைஞர்கள் பெரிதாக எதுவும் சாத்தித்து விடவில்லை என்றே எழுதியிருந்தது . இந்நிலையில்தான் 1959ல் பிராங்கோய்ஸ் த்ரூபோவின் (The 400 Blows) (1959).எனும் படம் வெளியானது . பெற்றோர்களின் பொறுப்பின்மையால் சிறுவர்கள் படும் அவதியும் அத்னால திசை மாறும் அவர்களது வாழ்வையும் பற்ரிய இப்படம் காட்சி அமைப்பிலும் படத்தொகுப்பிலும் அதுவரையில்லாத புதிய் அணுகுமுறை கண்டு பார்வையாளர்கலும் விமர்சகர்களும் வியந்தனர். அவ்வருட கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்தை பார்த்தவர்கள் அதிர்ந்த்னர் . சிலர் இதுதான் சினிமா என உற்சாகத்தில் இரைந்த்னர் . இது உண்மையை பேசுகிறது.இதுவரை பார்க்காத புது அனுபவத்தை உண்டாக்குகிறது என பரவசமடைந்தனர் . விழாவுக்கு வந்திருந்த் வெளிநாட்டு இயக்குனர்கள் மத்தியில் ஒரே இரவில் த்ரூபொ நாயகனாக மாறி உலக சினிமாவின் புதிய நட்சத்திரமாக பிரகாசித்தார் . இத்த்னைக்கும் அவர் எழுதிய ஒரு விமர்சனத்திற்காக முந்தைய வருட விழாவுக்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது . அதே கேனஸ் திரைப்படவிழா இந்த வருடம் அவரை சிறந்த இயக்குனராக அறிவித்து பெருமை தேடிக்கொண்டது .. உலகசினிமா அரங்குகளில் எழுதியது பொல் படமெடுத்து நிரூபித்துகாட்டிய இளஞனை பற்றிய தகவல் பரபரப்பாக பேசப்பட்டது .

படத்தை எடுத்த தயாரிப்பாளர் இப்போது த்ரூபோவிடம் அடுத்த படத்திற்காக அணுக த்ரூபோ இம்முறை தான் இயக்குவதை விட த்ன் நண்பன் இயக்குவது வரலாற்றிற்கு பெருமை சேர்க்கும் செயல் என்றார்

த்ரூபோ சொன்ன இயக்குனர் ழான் லூக் கோதார்த்
அவர் எடுத்த படம் (Breathless) (1960). அந்தபடமும் அடுத்த வருட பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான வெள்ளிக்க்கரடி விருதை வாங்க நியூவேவ் என பிரெஞ்சு நியூவேவ் என விமர்சகர்கள் ஒருமனதாக அழைக்க துவக்கினர் .
கோதார்த்தின் படங்கள் அனைத்து சம்பிரதாயங்களையும் உடைத்தது. இத்த்னைக்கும் அது வழக்கமான ஹாலிவுட் பி மூவி சஸ்பென்ஸ் வகைப்ப்டம்தான் ..ஆனாலும் காமிரா உயிரோட்ட்மாக அசைந்தது . படத்தொகுப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது. சினிமா என்பது வெறும் கதை சொல்வது மட்டுமல்ல அதை தாண்டியது என்பதை அனைவரும் ஏற்க துவங்கினர்
(தொடரும் )

September 5, 2010

எனது வணக்கத்துக்குரிய ஆசான்



இன்று ஆசிரியர்தினம். சின்ன வயசில் பள்ளிக்கூட காலங்களில் இது மற்றுமொரு விடுமுறை நாள் அவ்வளவே ஆனால் இன்று இந்ததினத்தில் என்னை வழிநடத்திய என் வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்த ஆசிரியர்களை நினைவு கூர்ந்த போது இந்த நாளின் விசேஷத்தை உணர முடிந்தது.
.


பில்லா இந்த பேரை கேட்டதுமே பலருக்கும் இரண்டு சூப்பர் ஸ்டார்களின் ஞாபகம் வரும். ஆனால் எனக்கோ என் பள்ளிக்கூட வாத்தியார் பால்ராஜ் மாஸ்டர்தான் நினைவுக்குவருவார். காரணம் நான் சந்தித்த முதல் இண்டலெக்சுவல் அவர்தான். திருக்கழுக்குன்றத்தில் புன்னமை தியாகராச .வன்னியர்சங்க நடுநிலைப்பள்ளி ..இதுதான் என் பால்யங்களை தொகுத்த இடம். வீட்டிலிருந்து பள்ளிக்கு இரண்டுகி.மீ நடக்க வேண்டும் அந்த நடை எங்களுக்கு போராடிக்காது காரணம் வழியெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் சினிமா போஸ்டர்கள்

எனது பள்ளிகாலங்களில் மிகுந்த பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கிய திரைப்படம் பில்லா. ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த அப்படத்தின் விளம்பரம் . தினத்தந்தியில் அப்போதெல்லாம் முழு பக்கத்துக்கு படத்தின் விளம்பரம் வரும். பள்ளி செல்லும் வழியில் ஒரூ முடிதிருத்தும் கடை. அக்கடையில் பள்ளிவிட்டு வரும் வழியில் தினமும் குறைந்தது அரை மணிநேரமாவது அந்த நைந்த பக்கங்களை புரட்டிக்கொண்டிருப்போம். கன்னித்தீவு மற்றும் கிரிக்கட் செய்திகளும் எங்கள் ஆர்வத்துக்கு உபரி காரணம் என்றாலும் பக்கம் பக்கமாக வரும் சினிமா விளம்பரங்கள்தான் எங்களது கனவுகளை தீர்மானித்தன. ஒரு முழு பக்க சினிமா விளம்பரத்தை பார்க்கிற போது உள்ளுக்குள் பெரும் மகிழ்ச்சி கரைபுரளும் இதற்கெல்லாம் காரணமே இல்லை. அதிலும் ரஜினி படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இப்படித்தான் பில்லா திரைப்படம் எனக்குள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. நானும் படம் எப்படா நம்ம ஊருக்கு வரும் எப்ப அதை பார்க்க போகிறோம் என எதிர்பார்த்து ஆவலுடன் காத்துகிடந்தேன். இச்சமயத்தில் எங்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் பால்ராஜ் அந்த படத்தை யாரும் பார்கக கூடாது என பள்ளியில் கட்டளை இட்டார். காரணம் அப்போது பில்லா ரங்கா என்ற இரு கொலைகாரார்கள் ஒரு சிறுவனை கடத்தி கொடூரமாக கொன்றிருந்தனர். இது அக்காலத்தில் பெரும் பரபரப்பான சேதியாக இருந்தது. வியாபராத்துக்காக சினிமா தயாரிப்பாளர்கள் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் இந்த பெயரை பயன் படுத்துகிறார்கள் . அந்த குழந்தையின் தாய்தந்தை எவ்வளவு வேத்னைப்படுவார்கள். அதனால் இந்த படத்தை யாரும் பார்க்க கூடாது என வேண்டுக்ள் விடுத்தார் அன்றைய சிறுவயது மூளைக்கு அது எட்டவில்லை. ஆனால் அவர் சொன்னது மட்டும் ஞாபகத்தில் ஒட்டிக்கொண்டது. காரணம் அது பில்லா பற்றியதகவலாக இருந்ததாலோ என்னவோ...

இப்போது இரண்டாவதுமுறையாக பில்லா வந்தபோது அப் பெயருக்கு இருந்த மதிப்பும் மக்களின் அங்கீகாரமும் அப்பெயர்காரணமே தெரியாத தலைமுறையினாரிடம் காணப்பட்ட கொண்டாட்டத்தையும் பார்த்தவுடன் பால்ராஜ் சார் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. இந்த பெயர் ப்ரச்னையை இன்று வரை யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை.



என்னை முதன் முதலாக நடிகனாக மேடையேற்றியதும் அந்த பாலராஜ் ஆசிரியர்தான். என்னை மட்டுமல்ல என்னை போல திறமையான மாண்வர்களை பார்த்தும் அவராகவே தீவிரமாய் த்ன் ஈடுபாட்டை காண்பித்து அவர்களுக்கான வழி சமைத்து தருவார் .அதேபோல பள்ளி விவகாரம்தாண்டி எங்கு கிரிக்கட் மேட்சுகள் நடந்தாலும் ஓரமாய் சைக்கிளை நிறுத்திவிட்டு அமர்ந்து வேடிக்கை பார்ப்பார். யாராவது போங்கு ஆட்டம் ஆடினால் உடனே அம்பயராக அங்கேயே இருந்தபடி விரலால் தீர்ப்பை சொலவார். பால்ராஜ் மாஸ்டருக்குமேல் முறையீடுகள் இல்லை.

வகுப்பில் நான் வழக்கமாக மூன்றாம் ரேங்க். முதல் ரேங்கில் கண்ணன். ( அவன் தங்கை சங்கரி பேரழகி. அந்த வயதிலேயே அவளுக்கு நான் கலர் மிட்டாய் வாங்கி தருவது போல கனவுகள் எல்லாம் வந்ததுண்டு ) எனும் பிராமண பையன் இரண்டாம் ரேங்கில் குமரகுருபரன். கண்ணன் படிப்பில்தான் முதல் ரேங்கே தவிர குணத்தில் அவன் கடைசி ரேங்க். யாரும் அவனை தொட்டுவிடாமல் பார்த்துக்கொள்வான். கொஞ்சம் ஏழையான அழுக்கு உடை பசங்களை கண்டால் அருவருப்பான பூச்சியை கண்டதுபோல முகத்தை சுளிப்பான். இதனாலேயே எனக்கு அவனை பிடிக்காது . இருவருமே பேசிக்கொள்ளமாட்டோம். இதர வகுப்பு நண்பர்கள் உணவு இடைவேளைகளில் இருவரையும் பிடித்து தள்ளி பேச வைக்க கடும் முயற்சி செய்தனர் .ஆனாலும் அவனை எனக்கு கடைசி வரை பிடிக்கவில்லை ... அதேசமயம் பால்ராஜ் மாஸ்டர் கண்ணனிடம் மட்டும் சற்று கூடுதலாக அக்கறைகாட்டுவார். இத்தனைக்கும் அவர் கிறித்துவர்.ஆனாலும் கண்ணன் முதல்மார்க் வாங்குகிற காரணத்தால் அவனிடம் கூடுதல் அக்கறை. சட்டென எதையும் புரிந்துகொள்கிற அவனது அறிவுத்திறனுக்கு இது போன்ற போட்டிகள் சரியான வடிகால என நினைத்தார். பேச்சு போட்டி கட்டுரை போட்டி என்றால் அவனுக்குதான் எழுதிகொடுப்பார். அவனும் அதை பேசி முதல் பரிசு வாங்கிவருவான். ஒருநாள் ஒரு போட்டிக்கு மாஸ்டர் எழுதி கொடுத்தும் அவன் போட்டியில் கலந்துகொள்ளாமல் வீட்டிலேயே இருந்துவிட்டான் மறுநாள் அவன் பள்ளி வந்ததும் பால்ராஜ் மாஸ்டர் கோபத்தில் அவனை கடுமையாக திட்டிதீர்த்தார். இனி உனக்காக இந்த பால்ராஜ் எதற்கும் எழுதிதரமாட்டான் என கோபத்துடன் கூறினார்.

ஆனாலும் அடுத்த சில நாட்களில் அனைத்து பள்ளிகள் சார்பாக பேச்சு போட்டிக்கு அழைப்பு வந்த போது பால்ராஜ் மாஸ்டர் அவனையே அழைத்து போட்டிக்கு எழுதிக்கொடுத்து அனுப்பிவைத்தார். அவர் அன்று அந்த காரியத்தை செய்த போது எங்களுக்குள் கடும் புகைச்சல் இருந்தது. நான் கூட பால்ராஜ் மாஸ்ட்ரை வெறுத்தேன்.ஆனால் அவர் ஒரு ஆசிரியராக எந்த பாரபட்சமும் இலாமல். துவேஷம் இல்லாமல் நடந்து கொண்ட விதம் இன்றும் அவர் பிம்பம் என் மனதில் நிழலாட காரணமாக இருக்கிறது. அவர் குறித்து கட்டுரை எழுதவும் அதுவே காரணமாக இருக்கிறது.

August 15, 2010

என் சமீபத்திய கவிதைகள் மூன்று

1.சுட்டுக்கொல்லுங்கள் ஜேம்ஸ் டீனை-

ஜேம்ஸ் டீன்
என பெயர் கொண்டவனை
சுட்டுக்கொல்லுங்கள் காரணமே வேண்டாம்
அவன்நல்லவனல்ல
உண்மையில்
ஊழியின் முதல் ஓநாய்க்கு இரவில்
பிறந்தவன் குடிபோதையில்
மோட்டர்சாகசம்
சுட்டுக்கொல்லுங்கள் ஜேம்ஸ் டீனை
என்ன டா ...த்தா...ப்ர்ர்ர்ர்ருப்பு
நுரைகள் நிரம்பிய
பீர் கோப்பைகளை சுவற்றில் வீசி
கிடார் மீட்டும் பெண்ணை வம்படிக்கு
முத்தமிட்டு விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென
பைக்கில் பறந்த சடக்கென
ம்ழைதுறலில் சக்கரம் மட்டும் தனியேசுழல
கருப்பு சாலையில் பிணமாக கிடந்த ஜேம்ஸ் டீனை
சுட்டுக்கொல்லுங்கள் அவனை
அமெரிக்க லும்பனை
இரண்டாம் முறையும் சாகட்டும்
அந்த ஜெர்கினுக்கு பிறந்தவன்
24வயதில் அவனவனுக்கு வாழ்க்கை
ஆசன் வாயில் நெருப்பை திணிக்கிற போது
பரவாயில்லை நீ
செத்துப்போடா ஜேம்ஸ் டீனே
50 வருடத்துக்கப்புறமும் உன் ஆட்டம்
ரொம்பத்தான் என்னை அலைக்கழிக்கிறது

2.வெட்கங்கெட்டவர்களாகிய நாம்

ஒரு கவலையுமில்லாத நான்
ஒருகவலையுமில்லாத அத்திப்பூவை பார்க்கிறேன்
ஒருகவலையுமில்லாத அத்திப்பூ
ஒருகவலையுமில்லாத நிலாவை வெறிக்கிறது
ஒருகவலையுமில்லாத நிலா
சதைபிய்ந்து உயிர்தவிக்கும் வீரனை பார்க்கிறது
ஒருகவலையுமில்லாத வானம்
அவனது அம்மணத்தை ரசிக்கிறது
ஒருகவலையுமில்லாத நாம்
இந்த கவிதையை வாசிக்கிறோம்

3.குழந்தையின் அதிகாரம்

என்னதான் குழந்தையென்றாலும்
உன் அதிகாரம் அதிகமானது
நொடிக்கொருதரம் என் தலையை
திருகுகிறாய்
காலை முறுக்குக்கிறய்
தோட்டத்தில் வீசுகிறாய்
கவ்விவரச்சொல்லி உன் வீட்டு
நாயைஏவுகிறாய்
அடுத்தவர் பிடுங்கினால்
அள்ளிக்கொள்கிறாய்
முத்தம் கொடுக்கிறாய்
விருப்பட்ட நேரத்தில் தட்டி கொடுக்கிறாய்
சாக்லெட் கிடைக்காத் கோபத்தில்
எட்டி உதைக்கிறாய்
பொட்டு வைக்கிறாய் பூச்சூடி அழகு பார்க்கிறாய்
புதிய பொம்மை வந்ததும் உதாசீனபடுத்துகிறாய்
அடுத்து என்ன செய்வாயோ பயமாய் இருக்கிறது
கதவை நெருங்கி வருகிறது உன் காலடிசத்தம்
தனிமை அறையில் நான்

August 7, 2010

நதியை தேடி நடந்த கடல் : வெர்ஜீனியா உல்ப்



நதிவழிச்சாலை :1
அஜயன்பாலா


சென்றவாரம் பார்சன் காம்பள்க்ஸில் வழக்கமாக சினிமா டிவிடிக்களை வாங்கும் கடையில் ஒவ்வொருபடமாக விரல் தேடிக்கொண்டிருந்த போது ஒருபடம் கண்ணில்பட்டு பரவசத்தை உண்டாக்கியது .படத்தின் பெயர் Who i s afraid of virjinia woolf 1966ல் ஹாலிவுட்டில் வெளியான படம் .

வெர்ஜீனியா உல்பை எத்தனை பேர் கேள்விப்பட்டிருப்பீர்களோ தெரியாது. புகழ்பெற்ற ஆங்கில பெண் எழுத்தாளினி. எண்ணற்ற சிறுகதைகள் நாவல்கள் கட்டுரைகள் மற்றும் கடிதங்களாக எழுதிக்குவித்தவர். ஆங்கில நவீன இலக்கியத்தை கட்டமைத்த டி.எஸ் எலியட். மற்றும் ஜேம்ஸ் ஜாய்சுக்கு சற்றும் சளைத்தவரில்லை என்கிறது விமர்சன வட்டாரம். ஆனால் என்ன வென்றால் எல்லா உயர்ந்த எழுத்தாள்ர்களையும் தாக்கும் ஏதாவது நோய் வர்ஜீனியாவுக்கு பை- போலர் டிஸ் ஆர்டர எனும் மன நோய் உருவில் வாய்த்தது. நன்றாகவே வாட்டி வதைத்தது. இந்த நோயில் இருப்பவர்களுக்கு தான் ஒருமனநோயாளி என்பது தெரியும் ஆனால் ஒன்றும் செய்யமுடியாது.தன்னிடம் வருபவர்களிடமும் இப்படியே அவர் புலம்பிதள்ளியிருக்கிறார். ஆனால் அவரது படைப்பு எழுச்சிக்கும் அதுவேஅடிப்படையாக இருந்தது. துயரமான வாழ்க்கைக்குள் சவாலாக நீச்சலடித்தார். அதனாலேயே மிஸஸ் டாலவே , ஆர்லோண்டோ ,போன்ற நாவல்களை அவரால் படைக்க முடிந்தது. ஒரு யூத்னை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.திருமண்ம் ஆகும் போது கண்வன் கையில் நயாபைசா கூட இல்லை என நன்கு தெரிந்தே திருமணம் செய்துகொண்டார். ஆனாலும் இறுதிவரை அவருக்குமனைவியாக வாழ்வத்ன் மூலம் தான் மிகுந்த ம்கிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளதாகவே அவர் பதிவு செய்துள்ளார். இரண்டாம் உலக்போரின் போது லண்டனில் நாஜிக்கள் போட்ட குண்டு அவரது வீட்டை தரை மட்டமாக்கியது. இது அவரை தீவிர மனநோய்க்குள் விழ வைத்தது. நோய். கடுமையாக தக்கதுவங்கியிருந்தகாலத்தில் ஒருநாள் 1941ல் தனது கோட் பாக்கெட் முழுக்க கற்களை நிரப்பிக்கொண்டு வீட்டிற்கு அருகாமையில் இருந்த ஓஸ் ஆற்றை நோக்கி மெதுவே நடந்துசென்றார். மரணத்தை நோக்கிய நிதான நடை அது. அவர் தற்கொலை செய்வதற்கு நதியை தேர்ந்தெடுத்தால் அந்த ஓஸ் நதி இலக்கிய வரலாற்றில் த்ன்னை பதியவைத்துக்கொண்டது. அவரது தற்கொலை அக்காலத்தில் ஆங்கில இலக்கிய உலகை பெரும் அதிர்ச்சியில் தள்ளியது .

மிகவும் சோகம் ததும்பிய அவரது இந்த வாழ்க்கையை எதிர்பார்த்துதான் நான் அன்று வாங்கிய டிவிடியை போட்டேன்.. குறிப்பாக அவர் ஆற்றை நோக்கி ம்ரணத்தை முன்னிட்டு நடந்து செல்லும் அந்த இறுதிக்காட்சி.. இயக்குனர் அதை எப்படி கையாண்டிருப்பார் என்பதை பார்க்க ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் படம் ஓட த்துவங்கியதும் அதிர்ச்சி..மிகவும் ஏமாற்றமாக இருந்தது. எலிசபத் டெய்லரும் ,ரிச்சர்பர்ட்டனும் நடித்தபடம் அது .



படத்தின் கதைக்கும் வெர்ஜீனியா உல்ஃபுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது ஒருகுடும்ப கதை போல வெறுமனே அதிர்ச்சிக்காக அவரது பெயரை பயன்படுத்தியிருக்கிறார்கள். இத்தனைக்கும்
உல்ப் கணவனுடன் நிறைவான மணவாழ்க்கை வாழ்ந்துமுடித்தவர். ஆனால் படமோ மண்வாழ்க்கையின் தோல்வியை பற்றிய படம் . படத்தில் நடித்த ஜோடிக்கு வேண்டுமானால் இக்கதை பொருந்தும். டைவர்ஸுக்கு பேர்போன ஜோடி . சேர்ந்து பிரிந்து மீண்டும் சேர்ந்து பிரிந்து என இரண்டுமுறை டைவரஸ் ஆன ஒரே ஜோடிகள். வேறு எந்த காரணத்திற்காக இப்படத்திற்கு வெர்ஜீனியா உல்பின் பெயரை பயன்படுத்தினார்களோ தெரியவில்லை பத்தாக வாங்கிய அவசரம் காரணமாக பின் குறிப்புகளை திருப்பி பார்க்காமல் போன தவறுக்காக நொந்துகொண்டேன் .

உல்ப் பற்றி நான் தேட காரணமாக இருந்தது அவர் எழுதவரும் பெண்களுக்காக சொன்ன புகழ்பெற்ற வாசகம் .. இதுதான்

எழுத்துறைக்கு வரும் பெண்கள் அதற்கு முன் தனக்கென தனி அறையும் கொஞ்சம் பொருளும் சேர்த்துக்கொண்டு இதில் நுழைவது அவர்களுக்கு நிம்மதியான வாழ்வைத் தரும்”


. – நன்றி
’சூரியக்கதிர்” இதழ்

August 1, 2010

பிரான்சின் புதிய அலை : ஒரு செலுலாய்ட் புரட்சியின் கதை


>


பிரான்சின் புதிய அலை


உங்களின் சினிமாக்கள் அயோக்கியத்தனம் அது மக்களை ஒரு தந்திரவலைக்குள் வீழ்த்தும் குப்பை ,அங்கு மனதை கட்டிப்போடும் மாய்மாலம் மட்டுமே எஞ்சுகிறது...இது கலை இல்லை...உண்மையான கலை இந்த வேலையை செய்யாது ...அது மக்களை ஏமாற்றாது மாறாக தனக்குள் ஒரு அழகையும் வடிவத்தையும் உருவாக்கிக்கொண்டு மக்களையும் ரசிக்க வைக்கும்


இதெல்லாம் ....அக்காலத்தில் 1959 க்கு முன்பு வரையிலான உலகசினிமாக்களின் மீதான விமர்சனங்கள்

விமர்சித்தவர்கள் யார் ?

துடிப்பான இருபது முதல் முப்பது வயதுக்குட்பட்ட நான்கைந்து இளைஞர்கள்

கையேது சினிமா என அவர்கள் நடத்திய பத்திரிக்கையில்தான் அவர்கள் இப்படி அக்கால திரைப்படங்களை தங்களது கூர் விமர்சனங்களால் கிழித்து தொங்க விட்டனர்.

இவர்களுக்கு சினிமாவை பற்றி என்ன தெரியும் ..வெறும் எழுதிவிட்டால் போச்சா வந்து ஒரு படத்தை எடுத்து பார்க்கட்டும் அப்புறம் தெரியும் ..

என இயக்குனர்களும் பதிலுக்கு இவர்களை தூற்றினர்

காலம் கனிந்தது .. ஒரு நாள் அவர்கள் சொன்னது போலவே அந்த விமர்சகர்கள் படைப்பாளிகளாக மாறினர். தங்களை புதிய அலை என அவர்களாகவே அழைத்துக்கொண்டனர். படம் எடுக்க துவங்கினர்.
படம் வெளியான போது அந்த விமர்சகர்களின் படங்கள் அதுவரையிலான உலகசினிமாவையே புரட்டி போட்டது . உலகமெங்கும் அவர்களின் சினிமாக்களுக்கு அரங்கம் எழுந்து கைதட்டியது. ஒரு சாதராண திரைப்பட சங்கத்தில் துவங்கிய அந்த இளைஞர்களின் வாழ்க்கை பத்திரிக்கையாளராக மாறி பின் படங்களை விமர்சித்து பின் உலக சினிமாக்களுக்கே வழிகாட்டியாக மாறியது தனிக்கதை
அன்று அவர்கள் தோற்றுவித்த நியூ வேவ் எனும் புதிய அலை இயக்கம் இன்று உலகசினிமா வரலாற்றின் மகத்தான திருப்பு முனையாக காலத்தால் அழுந்த பதியப்பட்டுள்ளது

ப்ராங்கோய்ஸ் ட்ரூபோ, Francois Truffaut, ழான் லுக் கொதார்த். Jean-Luc Godard, கிளாத் சாப்ரோல், Claude Chabrol, எரிக் ரோமர்Eric Rohmer.
இவரகள்தான் அந்த இளம் இயக்குனர்கள் ..அதுவரையிலான இலக்கணங்களை உடைத்து சினிமாவுக்கு புது இலக்கணம் எழுதிய உலகசினிமாவின் சிற்பிகள்


இவர்கள் எப்படி ஒன்றிணைந்தார்கள் … இவர்களின் பிதாமகன் யார்... இவர்கள் இதற்காக பட்ட சிரமங்கள்... என்ன?



புதிய அலைக்குமுன் பிரான்ஸ்

இரண்டாம் உலகப்போரில் பிரான்சை நாஜிக்கள் தன் கைக்குள் வைத்திருந்த நேரம் அதன் ஜன்னல்கள் அனைத்தும் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன. அமெரிக்க சினிமாக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததகாலம் அது. கலையின் மீதும் சுதந்திரத்தின் மீதும் அளவற்ற ஈடுபாடு கொண்ட பிரான்ஸ் தேசத்தவரை இந்த தடைகள் ரொம்பவே சங்கடப்படுத்தியது.. அதிலும் குறிப்பாக 1920 க்கும் 1930 க்கும் இடைப்பட்ட பிரான்சில் கலைச்செழுமையான காலத்தில் வாழ்ந்த ஆந்த்ரே பாஸின் , அலைன் ரெனாய்சிஸ் ,ஆஸ்ட்ரெக் ஆகிய கலைஞர்களுக்கு இது பெரும் நெருக்கடியை தோற்றுவித்தது. இதிலிருந்து தங்களை விடுவித்து கலையின் புதிய வெளிகளுக்கு தாவும் மனோ நிலையில் அவர்கள் உந்தி தள்ளப்பட்டபோது அவர்கள் அதற்கு வழியில்லாமல் அல்லலுற்றனர். போர் முடிந்தது நாஜிப்படைகள் பிரான்சிலிருந்து அகற்றப்பட்டன .. ஜன்னல்கள் திறக்கப்பட்டன புதிய காற்று புதிய வெளிச்சம் புதிய சிந்தனைகள் ...பிரான்சின் அறிவுலகத்துள் பெரும் பாய்ச்சலோடு புகுந்தது. கலைகளின்பாலும் தத்துவங்களின் பாலும் அதிக ஈடுபாடு கொண்ட ஆந்த்ரே பாஸினுக்கு சினிமாவின் மீது பார்வை குவிந்தது. இடது சாரி பார்வை கொண்ட பாஸின் அமெரிக்க படங்களின் முதலாளித்துவதன்மைகளையும் அதன் போலித்தனங்களையும் அவதானித்தார். இதில் உயிரோட்டம் இல்லை.. இவர்கள் சொல்வதில் பொய் இருக்கிறது .. ஆழ் மனங்களின் உள்ளுணர்வுகள் படைப்பாக இல்லை. ஏற்கனவே யாரோ ஒருவர் தீர்மானித்து எழுதப்பட்ட கதையை கேமரா மற்றும் படத்தொகுப்பினால் உருவாக்குவது மட்டுமே இயக்குனர் வேலை இல்லை என்றும் பத்திரிக்கைகளில் சாடினார். பாஸினுடன் அலெக்ஸாண்டர் ஆஸ்ட்ரெக் எனும் அறிஞரும் சேர்ந்தார். அவர்தான் பிற்பாடு எழவிருந்த புதிய அலை எனும் இயக்கத்துக்கு அடிநாதமாக இருந்த ”கேமரா ஒரு பேனாவை” போல எனும் முக்கியமான கருத்தாக்கத்தை வெளியிட்டவர்.



எழுத்தாளனுக்கு எப்படி பேனாவோ அது போல இயக்குனருக்கு கேமார செயல்படவேண்டும் . தன் சுயசிந்தனையுடன் தன்னியல்பாக எழுதுவது போல கேமராவால் ஒரு இயக்குனர் யாருடைய (குறிப்பாக தயரிப்பாளர்களின் ).
அதிகாரத்துக்கும் கட்டுபடாமல் உருவாக்கும் போதுதான் சினிமாவில் அசலான படைப்புத்தன்மைகள் வெளிவரும் எனக்கூறினார். உடன் ஹாலிவுட் இயக்குனர்களில் குறிப்பிடத்தக்வர்களான பிரிட்ஸ் லாங், டி டபிள்யூ கிரிபித் , ஜான் போர்ட்.. ஆகியோர் பற்றியும் அவர்களில் ஒளிந்துகொண்டிருந்த நவீன சினிமாவுக்கானகூறுகளையும் குறிப்பிட்டு ”சினிமா தி ஆர்ட் ஆப் ஸ்பேஸ்” எனும் கட்டுரை ஒன்றை எழுதினார் .

மிகச்சிறிய வட்டத்தாரால மட்டுமே படிக்கப்பட்ட இக்கட்டுரைகள் நாளடைவில் சினிமா ஆர்வலர்கள் மத்தியிலும் புதுமை விரும்பிகளிடத்தும் புதிய வரவேற்பை பெற்றது. பிரான்சில் பல இடங்களில் சினிமா சங்கங்கள் எனப்படும் சிறு சிறு குழுக்கள் உருவாக்கம் பெற்றன.ஐம்பதுக்கும் குறைவான உறுப்பினர்களை கொண்ட இக்குழுக்கள் வெவ்வேறு மொழிகளில் வெளியாகும் நல்ல சினிமாக்களை இங்கு திரையிட்டு அதன் தரம் குறித்து காரசாரமாக விவாதித்தானர் . இப்படியான குழுக்களில் ஒன்று சினிமாத்தொக் பிரான்ஸ் Cinematheque Française, எனப்படும் குழு . ஹென்றி லாங் லோயிஸ் எனப்படுபவரால் நடத்தப்பட்டு வந்தது. இக்குழுவில் ஐம்பதுக்கும் குறைவானோர் தீவிரமான உறுப்பினர்கள் . அவர்கள் பெரும்பாலும் மவுனமொழி படங்களையே அதிகம் பார்த்தனர்.அதிகமான சினிமாவை பார்ப்பதன் மூலமாக மட்டுமே சினிமாவில் பயிற்சி பெற முடியும் எனபதை இக்குழு உறுதியாக நம்பியது . கூடுமானவரை வெளிமொழி படங்களை சப் டைட்டில் எனப்படும் மொழிமாற்ற எழுத்துருக்கள் இல்லாமல பார்த்து அதன் மூலம் இன்னும் கூடுதலாக காட்சி மொழிக்கு தங்களை தயார்படுத்திக்கொண்டனர் .

இந்த குழுவுக்குள் முதன்முதலாக ஒரு சிறுவன் ..16 வயதேயான சிறுவன் ஒருவன்வந்தான் . மிகவும் துறுதுறுப்பாகவும் மற்றவர்களைக்காட்டிலும் சினிமாக்களால் அதிகம் ஈர்க்கப்பட்டவனாகவும் காணப்பட்ட அவன் தான் பிற்பாடு பிரெஞ்சு சினிமாவின் முகவரியாக மாறிப்போனான் .. அவன் பெயர் பிரான்ஸ்வா த்ரூபோ ...புதிய அலை இயக்கத்தின் மிக முக்கிய முதன்மை இயக்குனராக இன்றளவும் உலகசினிமாவால் அறியப்பட்டவன். அக்காலத்தில் சிறுவயதில் தந்தையின் கொடுமைகளிலிருந்து தப்பிக்கும் விதமாக சினிமா பார்க்க வந்த த்ரூபாவுக்கு அதுவே உணவாகவும் வேதமாகவும் வாழ்க்கையாகவும் மாறிப்போனது .

த்ரூபாவை போலவே சினிமாத்தொக் குழுவுக்கு ஒரு நாள் இன்னொரு இளைஞனும் வந்து சேர்ந்தான் . பிற்பாடு உலகசினிமாவில் தனித்தன்மை மிகுந்த இயக்குனராகவும் பல இயக்குனர்களின் மானசிக ஆசானாகவும் உருவானவன் .அவன் பெயர் கோதார்த். ழான் லூக் கோதார்த் என்பது முழுப்பெயர் . தனது தீவிரமான அரசியல் பார்வைகளாலும் மிகச்சிறந்த காட்சி கட்டமைபுக்களாலும் உலகசினிமாவுக்குள் அதிர்வலைகளை நிகழ்த்தியவன்(ர்).. சினிமா என்பது ஒரு ஒருவழிப்பதையானால் அது முடிவுறும் இடத்தில் நிற்பவர் கொதார்த். இவரது படங்களை வேதமாக கருதுபவர்களும் உண்டு ஆனால் அன்று சினிமாதொக் சங்கத்தினுள் நுழைந்த போதோ மிக சாதராணமான இளைஞன் ..இவரும் துவக்கத்தில் தந்தையாரது கொடுமையால் பாதிப்புக்கள்ளானவர். இதன் காரணமாகவே சினிமா சங்கங்களுக்கு சென்று சினிமா பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இதை பற்றி பின்னாளில் குறிப்பிடும் போது அக்காலங்களில் சினிமா திரையானது வீட்டு பிரச்சனைகளிலிருந்து தப்பித்து வேறு உலகங்களுக்கு செல்லும் சுவராக இருந்தது எனக்கூறியுள்ளார்.

இவர்களோடு அப்போது எரிக்ரோமர் Eric Rohmer. களவுத் சாப்ரோல் Claude Chabrol, போன்றவர்களும் தீவிரமாக இச்சங்கங்களில் ஈடுபட்டனர். இவர்கள் வெறுமனே திரைப்படங்களை பார்ப்பதோடுமட்டுமில்லாமல் தங்களுக்கு பிடித்த திரைப்படத்தின் புகைப்படங்கள் மற்றும் சுவரொட்டிகளை சேகரிப்பது.. மேலும் தங்களுக்கு பிடித்த இயக்குனர்களை பட்டியலிடுவது ,அவர்கள் குறித்த தகவல்களை சேகரிப்பது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டனர்.

இவரை போலவே இச்சங்கங்களில் அக்காலத்தில் ஈடுபட்ட அலைன் ரெனாய்ஸ், Alain Resnais, ழாக் ரிவெட், Jacques Rivette, , ரோஜர் வாதிம் Roger Vadim, போன்றவர்களும் பிற்பாடு குறிப்பிடத்தக்க இயக்குனர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

ஆனாலும் இவர்களுக்கும் முன் சொன்ன நால்வருக்கும் என்ன வேறுபாடு என்றால் முன்னவர்கள் இவர்களைக்காட்டிலும் கூடுதல் திறமை கொண்டவர்கள் என்பது மட்டுமில்லாமல் அடிப்படையில் எழுத்தாளர்கள்,... அதனால் இவர்கள் அக்காலத்தில் புதிய சினிமா மற்றும் கலை இலக்கியம் குறித்து கட்டுரைகள் எழுதின ஆந்த்ரே பசினுடன் தொடர்பு கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர் . உடன் தங்களது விமர்சனங்களை அவ்வப்போது வெவ்வேறு பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகளாகவும் எழுதி சிறுசிறு சலசலப்புகளை உருவாக்கினர். துவக்கத்தில் இக்கட்டுரைகளுக்கு ஆங்காங்கு வரவேற்பு கிட்டவே நமக்கென்று ஒரு இதழ் இருந்தால் இன்னும் கூடுதலாக எழுதிகுவிக்கலாமே என்ற எண்ணம் இவர்களுக்குள் தோன்றியது... இதே சமயம் இவர்களது தத்துவ குருவான பாஸினுக்கு இதற்குமுன் அவர் தொடர்ந்து எழுதிவந்த இதழ் நின்று போக ..அனைவரது ஒத்துழைப்புடன் பாஸின் அடுத்த சில நாட்களிலேயே ஒரு புதிய இதழை துவக்கினார். கையேது சினிமா . Les Cahiers du Cinema.. சினிமா வரலாற்றில் சினிமாவளர்ச்சியில் ஏதேனும் ஒரு இதழுக்கு சிறுபங்களிப்பு இருக்குமானால் அது இந்த இதழுக்கு மட்டுமே இருக்கும்.

1951 ல் இந்த இதழின் முதல் பிரதி வெளியான போது அடுத்த சில வருடங்களில் இந்த இதழ் மகத்தானசசாதனைகளை செய்யப்போகிறது என யாரும் எதிர்பார்க்கவில்லை.
(பிரான்சின் புதிய அலை.... .11தொடர்ச்சி .. அடுத்த இதழில்)
நன்றி : புத்தகம் பேசுது ஆகஸ்ட் மாத இதழ்

July 19, 2010

ஒரு இலையின் வாழ்வு

ஒரு இலையின் வாழ்வு

ராதாராஜ் எனும் ஒரு மனிதன் அல்லது பிரபலங்களை உருவாக்கும் இயந்திரம் ஒன்றின் மரணம்

இலைகள் இல்லாமல் பூக்கள் இல்லை ...ஆனால் பூக்களை ரசிக்கும் நாம் இலைகளை பற்றி கவலைப்படுவதில்லை.அப்படிப்பட்ட மறக்கப்படும் இலைகள் தான் ஒரு பத்திரிக்கையாளனின் வாழ்வு. இந்த உலகில் பிறக்கும்போதே பிரபலங்கள் உருவாகிவிடுவதில்லை.அப்படியாக திறமை கொண்ட ஒருவர் மக்களிடையே பேரும் புகழும் அடைவதற்கு காரணமாக இருப்பவர்கள் பத்திரிகையாளர்கள். ஆனால் அவர்கள் முக்கியத்துவம் பெறாமல் பூக்களை பளிச்சென பார்வையில் படவைக்கும் இலைகளாகவே வாழ்ந்து மறைகிறார்கள். பத்திரிக்கை என்றாலே நமக்கு தெரிந்தது விகடன் குமுதம் குங்கும் கல்கி பொன்ற இதழ்கள்தான் இல்லாவிட்டால் தினசரி நாளேடுகள் ..ஆனால் நான் சொல்லவரும் இலைகள் இவர்கள் மட்டுமே அல்லர் .. இவர்களல்லாத நிரந்தரமற்ற சினிமா அரசியல் மற்றும் இதர பத்திரிக்கைகளில் வாழ்பவர்கள் நூற்றுகணக்கானவர்கள் இருக்கிறார்கள்.. அவர்களும்கூடத்தான். அவர்களீல் ஒரு இலை சில நாட்களுக்குமுன் உதிர்ந்தது அவர்பெயர் ராதாராஜ். திரைத்துறை பத்திரிக்கையாளர்.குறள் தொலைக்காட்சி நிருபர்... அவர்மறைந்து இருபது நாட்கள் ஆகியிருக்கும் ஆனால் இப்போது அப்படி ஒரு மனிதன் வாழ்ந்தான் என்ற அடையாளம் எதுவுமில்லை. ஒரு படைப்பாளி இறந்தால் குறைந்தபட்சம் ஒரு படைப்புமட்டுமாவது மிஞ்சும்.ஆனால் வாழ்க்கைமுழுக்க மற்ற மனிதர்களின் பதிவுகளுக்கா வாழ்ந்து மறையும் இவர்கள் கடைசிவரை பதிவாகாமலே போவது வாழ்வின் முரண் நகை. இலைகளுக்கு கூட வாழ்ந்து மறைந்த வடு இருக்கும். ஆனால் இவர்களுக்கோ அது கூட இல்லை .இது ராதாரஜ் எனும் என் நண்பரின் சமீபத்திய மரணம் பற்றிய பதிவு .

காற்றில் அலைக்கழியும் ஒருபுத்தகத்தின் தாள்கள் போல இதை எழுதும் போது மனம் முன்னும் பின்னுமாக அலைக்கழிகிறது. சில நாட்களுக்கு முன் கோவையில் இணையதளமாநாட்டில் பங்கேற்றபோது ஒரு குறுஞ்செய்தி மனதை கனக்க செய்தது . குறள் தொலைக்காட்சி நிருபர் மற்றும் பத்திரிக்கையாளர் ராதாராஜ் எதிர்பாரா மரணம் என எங்களுக்கு பொதுவான நண்பர் ரூபன் அனுப்பியிருந்தார். சட்டென அவரது மனைவி குழந்தை இவர்களின் ஞாபகம்தான் மனதில் நிழலாடியது. ..அடுத்ததாக நானும் அவரும் இன்னும் இருவரும் பதினைந்து வருடங்களுக்குமுன் ஒரு துப்புறியும் வார இதழில் ஒன்றாக பணிபுரிந்த போது கேராளாவுக்கு உற்சாகாமாய் சுற்றுலாசென்ற ஞாபகங்கள். அதுவும் திருச்சூர் பேருந்துநிலையத்தில் இரவு நேரத்தில் கடைசி பேருந்தை பிடிக்க இருவரும் மரணவேகத்தில் ஓடி அதில் தொற்றிய காட்சி இவைதான் ஞாபகத்துக்கு வருகின்றன.


ராதாராஜ் ..நல்லசிவந்த முகம் ..த்லையில் முன்பக்கம் வழுக்கை .அதைமறைக்க அடிக்கடி அவர் முன்னுச்சிமயிரை சிறு சீப்பால் வாரிக்கொண்டே இருப்பார். இப்போது வயது ஒரு நாற்பது நாற்பத்திரண்டுதானிருக்கும். மக்கள் பிராணிகளாய் நகரும் சென்னைமாநாகரத்தில் அவர் சினிமா பத்திரிக்கையாளர். உதிரி பத்திரிக்கையாளர்... உதிரி என்றால் மாதசம்பளம் நிரந்தரமில்லாத வருமானம் .எப்போது வேண்டுமானாலும் வேலை போகும். பெரும்பாலும் தன்மான உணர்ச்சி அதிகமிருப்பவர்கள் தாங்களாக இதுதான் தங்களுக்கு ப்ருந்தும் என தேர்ந்தெடுத்துக் கொள்வர். அதே போல்

சம்பளம் என்பது அவ்வளவாக உறுதிப்பாட்டில் இல்லை. பெருமாபாலும் இது போன்ற நிருபர்கள் சினிமாகனவுகளுடன் வந்தவர்களாகவே இருப்பர் .. லட்சியத்துக்கும் நனவுலகத்துக்கும் இடப்பட்ட புள்ளியில் இரண்டையும் விட மனதில்லாமல் அலையும் இவர்கள் வாழ்வில் தவிர்க்கவே முடியாமல் மது உற்ற நண்பனாகிவிடுகிறான். இப்பொதாவது பராவயில்லை பத்துவருடங்களுக்கு முன் இந்த பத்திரிக்கைகளில் வேலை செய்வது கம்பி மேல் நடப்பது போல.

நான் சென்னைக்கு முதன் முதலாக சினிமாகனவுகளுடன் வந்திறங்கியபோது என்னையும் இதுப்ன்ற பத்திரிக்கை வேலைதான் வாரி அணைத்துக்ண்டது. காரணம் என்னை போன்ற கனவுலகவாசிகள் தான் அதற்கு ஒத்துவருவான் .சம்பளம் இல்லாவிட்டாலும் சினிமாவொடு தொடர்பில் இருக்க இயக்குனர் நடிகர்களை பார்க்க இது சரியான வாய்ப்பை உருவாக்கும் அல்லவா அதன் பொருட்டுதான்.இப்படியாக துவக்கத்தில் தளபதி எனும் அரசியல் புலனாய்வு பத்திரிகையில் ஆறுமாதங்கள் குப்பையை கொட்ட்டிவிட்டு அந்த இதழுக்கு கடைசி கணக்கு எழுதப்பட்டபின் வேறு வேலை தேடி அலைந்தேன். அப்படி அலைக்கழிந்தபோது நண்பரும் எழுத்தாளருமான கவுதமசித்தார்த்த்னை சந்திக்க போலீஸ் செய்தி எனும் கூவம் நதிக்கரை யோரம் இருந்த அதன் அலுவலகத்துக்கு பசி மிகுந்த மதிய நேரத்தில் சென்றேன். அங்குதான் கவுதம சித்தார்த்தன் ( உன்னதம்) எனக்கு ராதாராஜை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். அன்றே வேலையில் சேர்ந்தேன். நிருபர் வேலை . சிலநாட்களில் ஊருக்குபோன கவுதம சித்தார்த்தான் திரும்பி வராமல் போக காலியாக இருந்த உதவி ஆசிரியர் பதவியில் நானே அமரநேர்ந்தது.

பத்திரிக்கை உலகில் ஒருவரது எழுத்தை இன்னொருவர் மனமாரபாராட்டுவது என்பது பனைமரத்தை ஒடித்து பல் துலக்கும் காரியம். என முந்தைய பத்திரிக்கையில் இதுபோல மோசமான அனுபவங்கள் நடந்திருக்கிறது.. அப்படிபட்ட மனிதர்கள் நிறை ந்த பத்திரிக்கை சூழலில்தான் ராதாராஜை சந்தித்தேன் . அவருடன் அந்த புதிய வேலையில் நான் எழுதிய முதல்கட்டுரையை படிததும் அவர் கண்களில் மின்னல் வெட்டு .. ...அது தீபாவாளி அன்று ஜெயில்கைதிகளின் மனோநிலைபற்றிய கட்டுரை த்லைப்பை கொடுத்து எழுத சொன்னதும் ராதாராஜ்தான்..தூரத்து வானில் மத்தாப்பூ சிதறுவதை விடியற்காலை சிறு தூறல் பொழியும் ஜன்னல் வழியாக ஒருகைதி ஏக்கத்துடன் பார்ப்பதாக துவக்கியிருந்தேன்...கைகளை பற்றி பாராட்டுதல் தெரிவித்தார். ஒருநாள் ஒரு இரவு பணியின்போது இருவரும் அந்த பத்திரிக்கையின் மொட்டைமாடியில் நின்று நட்சத்திரங்களை பார்த்தபடி காதல்கதைகளை பேசிக்கொண்டிருந்தோம் . சட்டென முகம் மாறிய அவர் மிகவும் வருததுடன் தன் காதல்கதையை சொல்லத்துவங்கினார். . பள்ளிபருவம் முடிந்த காலத்தில் பத்து வருடங்களுக்கு முன் தினமும் தன் வீதி வழி குனிந்த தலை நிமிராமல் பள்ளிசெல்லும் ஒருபெண்ணை தீவிரமாக அவர் காதலிததாகவும் பலமாதங்கள் கழிந்தபின் ஒருநாள் துணிந்து துரத்திசென்று காதல் கடிதம் தர அந்த பெண் பயந்து அத்னை வீட்டில் சொல்ல இருவீட்டுக்கும் பெரும் மோதல்வந்துவிட்ட்தாகவும் அத்ன்பிறகு தான் சென்னை வந்த கதையைய்யும் சொன்ன அவர் இது நடந்து எட்டு வருடமாகிவிட்டது. என்னால் இன்னும் அந்த பெண்ணைமறக்க முடியவில்லை இத்தனைக்கும் அவளிடம் ஒருவார்த்தையும்ம் பேசினது கூட இல்லை என்றும் விசனப்பட்டு கண்கலங்கினார். இயல்பில் சற்று முரட்டுசுபாவம் கொண்ட ராதாராஜுக்குள் இப்படி இரு மென்மையான பக்கத்தை கண்ட நான் மிகவும் ஆச்சர்யபட்டேன் .

ஆனால் அடுத்த சில மாதங்களில் அவர் காதலித்த அந்த பெண்ணிடமிருந்து வந்த கடிதத்துடன் மகிழ்ச்சியில் கண்கள் பனிக உணர்ச்சிவசப்பட்டவராக என்னிடம் வந்தார் .எந்த பெண் அவரதுகடித்தை வாங்காமல் வீட்டில் சொல்லி சண்டை வர காரணமாக இருந்தாரோ அதே பெண்ணிடமிருந்து தன் அனபை தெரிவித்து முதன்முதலாக அலௌவலக முகவரிகு ஒரு க டிதம். ராதாராஜின் நண்பரதுமனைவியும் அந்த பெண்ணும் ஒரே கான்வெண்டில் டீச்சர் வேலை செய்ய்போய் அத்ன் வழியாக அப்பேண்ணுக்குள் அதுவரை இருந்த குற்ற வுணர்ச்சி காதலாகா மாறியிருக்கிறது விளைவு இக்கடிதம் .வாழ்வில் திருமண்ம் செய்தால் நீங்கள் தான் என் கணவ்ர் என கடிதம் எழுதிய அப்பெண் கையோடு ராதாரஜை ஊருக்குவரவழைத்து அவருடன் முதல்சந்திப்பே திருமணம் என்ற நிலை. இப்படியாக பலத்த எதிர்ப்புக்கிடையில் தன் மனைவியை காதல்மணத்துடன் கைபிடித்தார்.

அவ்வமயம் அவரை அடிககடிடசந்திக்க அவரும் திருவேங்கி மலை சரவணன் தற்போது குமுதம் குழுமத்தில் ப்ணி புரிபவர் ...மிகச்சிறிய வயதில் ஆசிரிய பொறுப்பிற்கு வந்துவிட்டீர்கள் என ஆச்சர்யப்படுவார் .. சரவணன் ராதராஜை அழைத்துக்கொண்டு ஒரு முக்கிய விஐபி யை அறிமுகம் செய்வதாக் அழைத்துசென்றார் .ராதாராஜ் என்னையும் நீங்களும் வாங்க என என்னையும் அழைத்துக்க்ண்டார் . அந்த விஐபி ஹாக்கி கேப்டன் பாஸ்கர். முதன் முதலாக ஒரு பிரபலத்தை அப்போதுதான் நெருங்கி பார்க்கிறேன் .என்னை ஒரு சகோதர பாங்கில் அவர் அன்று என்னை அவர் நடத்தியவிதம் இன்று வரை எனக்குள் ஆழமாக பதிய காரணமாக இருகிறது.


அதன்பிறகு இருவரும் ஒரு பத்திரிகை வழக்கு நிமித்தம் ஜெவின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு கவுரவ சிறைக்கைஅதிகளாக பத்னைந்து நாட்கள் வாசம் செய்தோம் . முதல் குழந்தை பிறந்தபொது ஒரு மனஸ்தாபத்தில் பத்திரிக்கை அலுவலகத்துக்கு வ்ராமல் இருந்தார் அவருக்கான் மருத்துவா செலவுக்கன பணத்தை முதலாளியிடமிருந்து நான் வாங்கிசென்று கொடுத்தேன் ..அத்ன் பிறகு எனது பாதை திசை திரும்பியது அவருக்கும் குடும்பம் குழந்தை என்று வந்தபின்சினிமா கனவை துறந்து சினிமா பத்திரிக்கையாளராக மாறினார் .


எப்போதாவது வழியில் சந்திப்போம்...அல்லது ஏதேனும் சினிமா ப்ரீவியூவில் .. நலமா என விசாரிப்போம் .வழக்கம் போல பாக்கெட்டில் இருக்கும் சீப்பை எடுத்து பைக் கண்னாடியில் முகம் பார்த்தவாறே வழக்கமான கேலியும் கிண்டலுமாக பேசுவார். எனது வளர்ச்சிகளை ஆர்வத்துடன் விசாரிப்பார். நாயகன் தொடர் விகடனில் எழுத துவங்கி அது வரவேற்பை பெற்ற போது என் முன்னமே பலரிடமும் அஜயன் பாலாவுக்கு நான் ஆசிரியாரா இருந்தேன் அப்பவே அட்டகாசாமா எழுதுவார் எனக்கூறி நான் கூட மறந்த செய்தி ஒன்றை நான் எழுதியவிதம் குறித்து வியந்து பேசுவார்.

படபடவென உணர்ச்சி வசப்படுவார். கோபம் வந்தால் அவரது முகம் சட்டென சிவந்து விடும். கோபமாக பேசிவிட்டு பின் வருத்தப்படுவார் இத்னால் பல நண்பர்களை இழந்திருக்கிறார். எனக்கும் அவருக்கும் கூட சித்திரம் பேசுதடி வெளியான சமயத்தில் ஒரு மனக்கசப்பு நேர்ந்தது. அப்போது ஒரு படப்ரீவியூ ஷோவில் என்னிடம் மூர்க்காமாக நடந்துகொண்டார் .வழக்கமாக அவர் முன் சிரித்து மழுப்பி நகர்ந்துவிடும் நான் தொலைபேசியில் அவரை அழைத்து கடுமையாக பேசிவிட்டேன் . மறுநாள் காலை எனக்கு தொடர்ந்து போன் செய்துகொண்டே இருந்தார் . நான் எடுக்கவே இல்லை. அத்ன் பிறகு வேறு எண்ணிலிருந்து அழைத்த ராதாராஜ் தன் அப்படி நடந்தமைக்காக குழந்தைபோல் மன்னிப்பு கேட்டார் .

அவருக்கும் எனக்குமான நட்பு அத்த்னை பிற்பாடான் எனது நட்பு வட்டத்தோடு ஒப்பிடும் போது அத்த்னை பரந்து பட்ட்தாக இல்லாவிட்டாலும் சென்னைக்கு வந்த பதட்டம் நிறைந்ததுவக்க காலங்களில் அவர் எனக்கு நல்ல ஆலோசகராகவும் நண்பனாகவும் வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.இதையெல்லாம் நான் இங்கே இப்ப்து நினைவு கூர காரணம் என்ன என உங்களுக்குள் கேள்வி எழலாம் .

சென்னையில் சினிமா கனவுகளுடன் வந்து நிரந்தரமில்லாத பத்திரிக்கைகளீல் வாழ்க்கையை துவங்கி பிற்பாடு கடைசிவரை ஒரு நிலையான அங்கீகாரத்திற்கு தவிக்கும் எத்த்னையோ பத்திரிக்கை நிருபர்களீல் அவரும் ஒருவர். குறைந்தபட்சம் அவர் பெயர் இத்ன் காரணமாகவாவது பதிவாகட்டுமே என்பதுதன் நான் இதனை எழுத காரணம் . மேலும் எனக்கு தெரிந்த ஒருவன் இந்த உலகில் கனவுகளுடன் வாழ்ந்தான் மறைந்தான் என்பதற்கான பதிவே இல்லாமல் அவன் வாழ்ந்த தடம் சுத்த்மாக இல்லாமல் மறைந்து போவது எனக்கு பெரும் அதிர்ச்சியளிக்கிறது ... குறைந்தபடசம் இந்த பதிவு அந்த குறையை பொக்கும் என்ற நம்பிக்கை காரணமாக இதை எழுதுகிறேன் .அவரை போன்றவர்களின் வாழ்க்கை சீரழிவதற்கு பிரபலங்கள் அனைவரும் குறிப்பாக திரைத்துறையினர் அனைவரும்கூட ஒருவகையில் குற்றவாளிகள்தான். தொடர்ந்து தங்களை பிரபலபடுத்திக்கொள்வதற்காக இது போன்ற பத்திரிக்கையாளர்களை பயன்படுத்தி அவர்களை தினக்குடியர்களாக மாற்றுபவர்கள் அவர்கள் வீடு போய்சேர்வதுகுறித்து இம்மியளவும் கவலைப்படுவதில்லை. இதற்காக இது போன்ற பத்திரிக்கையாளர்களுக்காக இந்த திரையுலகம் (பெப்சி) உடனடியாக ஒரு பத்திரிக்கையாளர் மறு சீரமைப்பு குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் அல்லது பெப்சியில் சினிமாபத்திரிக்கையாளர் சங்கத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும் இதுதான் இதுபோன்ற துர்மரணங்கள் தொடர்ந்து நடைபெறுவதிலிருந்து தடுக்க ஒரே வழி

அவரது மனைவி குழந்தைகள் இன்று அனாதைகளாக விடப்பட்டுள்ளனர்.... சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் அதற்குமுன் ஒருவார்த்தை கூட பேசியிராத காதலனுக்காக வீட்டைவிட்டு வெளியில் வந்து எனது நண்பனை கரம்பிடித்த அநத சகோதரி இன்று இரண்டு பெண் குழந்தைகளுடன் தனைத்துவிடப்பட்டுள்ளார். அவரது மனம் என்ன துயரப்படும் என்பதை நினைத்து பார்த்தால் வேத்னையாக இருக்கிறது.

சில பத்திரிக்கை நண்பர்கள் முயற்சியின் பேரில் அவர்களுக்கான நல நிதி திரட்டியிருக்கின்றனர். நடிகர்கள் விவேக் கஞ்சாகருப்பு உள்ளிட்ட திரைத்துறை சார்ந்தவர்கள் சிலர் இதற்கு நிதி உதவி அளித்துள்ளனர். இக்காரியத்தில் ஈடுபட்டதன் மூலம் கசடுகள் நிறைந்த இப்பெரு நகரத்தில் மனிதம் உயிர்த்திருக்கிறது என்பதை சில பத்திரிகை நண்பர்கள் நிரூபிக்கசெய்துள்ள்னர் . அவர்கள் அனைவரும் மனிதனாக பிறந்தமைக்கான பேற்றை இச்செயல் மூலம் அடைந்துவிட்டதாக உணர்கிறேன்

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...