திருப்பதிரிப்புலியூர் மடத்தலைவர் .தமிழ் பற்றாளர்.மறைமலையடிகளுக்கும், குன்றக்குடிஅடிகளுக்கும் தமிழ்பற்றில் முன்னோடி. .மடாதிபதிகள் அனைவரும் வடமொழிக்கு வால் பிடித்து அலைந்துகொண்டிருந்த காலத்தில் செந்தமிழில் பேசி தன் உணர்வை வெளிப்படுத்தியவர்.1942ல் பெரியார் அவர்களின் குடிஅரசு முதன்முதலாக ஈரோட்டில் வெளியிட்டவர் ’
ஞானியாரடிகள்
பிறப்பு: 17-05-1873
திகும்பகோணத்தில் திருநாகேசுவரத்தில் பிறந்தவர்.தந்தை அண்னாமலை ஐயா,தாயர் பார்வதி அம்மையார்.ஞானியார் பிறந்தவுடன் அவர் பெற்றோர் அவருக்கிட்ட பெயர் பழனியாண்டி. திருகோவலூர் மடத்தின் நான்காவது பட்டம் ஆறுமுக சிவாச்சாரியாரின் வேண்டுகளுக்கிணங்க, பிறந்த நான்கு மாதத்திற்குள் குடும்பம் திருப்பதிரிபுலியூருக்கு குடிபெயரே அதுமுதல் அதுவே அவரது இருப்பிடமானது. சிறுவயதுமுதலே துறவுமேற்கொண்டு அனைத்தையும் துறந்தாலும் தமிழ் பற்றை மட்டும் இவரால் துறக்கவே முடியவில்லை. .திருப்பதிரி புலியூர் தூய வளனார் பள்ளியில் கல்விகற்றார். தமிழ் தவிர சென்ன கேசவ நாயுடு என்பவர் மூலம் தெலுங்கும், இராமநாத சாத்திரி மூலம் வடமொழியும் கற்று தேர்ந்தார்..
திருப்பாதிரிபுலியூருக்கு சொந்தமான திருக்கோவிலூர் மடத்தின் தலைவர் ஆனதும் தினந்தோறும் தமிழ் அறிஞர்களை மடத்திற்கு வரவழைத்து சொற்பொழிவை நிகழ்த்தினார். உடன் அவ்வப்போது இவரும் சொற்பொழிவுகள் செய்தார். சென்னையிலிருந்து திரும்பும்போது ஒருமுறை திருப்பதிரிபுலியூர் மடத்துக்கு வந்த வள்ளல் பாண்டித்துரைத்தேவர் அவர்கள் ஞானியாரடிகளின் பேச்சை கேட்டபிற்பாடுதான் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் எனும் ஒன்றை தோற்றுவித்தார்.
1900ல் ம்டத்திற்குள் வாணிவிலாச சபை எனும் ஒன்றை ஞானியாரடிகள் துவக்க அத்னை வள்ளல் பாண்டித்துரைத்தேவரே வந்து துவக்கிவைத்தார்..பின் தமிழை கற்பிக்க மடத்துக்குள்ளேயே செந்தமிழ்கல்லூரி எனும் தமிழ் கல்லூரி ஒன்றையும் துவக்கினார்.இக்கல்லூரியில் படித்தபலர் பின்னாளில் பெரும் பண்டிதர்களாக உருவெடுத்த்னர். புதுவை சுந்தர சண்முகனார்,அண்ணாமலை பலகலைகழகதலைவர் மு.இராசக்கண்ணனார்,மற்றும் பச்சையப்பன் பள்ளி தலைமை ஆசிரியர் வச்சிரவேலு முதலியார் ஆகியோர் இவரது மாணாக்கர்களே.
இதர மடத்தலைவர்களை ஒருமடத்தலைவர் சந்திக்காதசூழலில் ஞானியார் தமிழ் வளர்க்க அவரே நேரில் சென்று இதரமடத்தலைவர்களை சந்தித்துஅங்கு தமிழ் கல்லூரிகள் தொடங்க ஆலோசனை சொல்லி அதனபடி அவர்களை துவக்க வைத்தார்.
தென்னாற்காடு வழக்காடுமன்ற தலைவர் நல்லசாமி பிள்ளை என்பவருடன் இணைந்து சைவ சித்தாந்த மகாசாமசம் எனும் அமைப்பை துவக்கி அதன் மூலம் சித்தாந்த தீபிகை எனும் இதழையும் துவக்கினார். பின் அதே அமைப்பின் மூலம் திருப்பதிரிபுலியூரில் 02-09-1918 அன்று மறைமலையடிகள் தலைமையில் நடத்தப்பட்ட சைவ மாநட்டில்தான் முதன்முதலாக தமிழை உயர்தனி செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என வெளிப்படையாக கோரிக்கைகள் ஏற்படுத்தப்பட்டது. .ஞானியாரின் தமிழ் பற்றை வடமொழியை ஆதரிக்கும் கும்ப்கோணம் மடத்தினர் கடுமையாக எதிர்த்த்னர். ஆனால் ஞானியார் அவர்கள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் தமிழ் பணியை தொடர்ந்தார்.
திலகவதிஅம்மை துதி,ஞானதேசிக மாலை,திருப்பதிரிப்புலியூர் தோத்திர கொத்து,போன்ற நூல்களை எழுதியும் யும்,திருப்பதிரிபுலியூர் புராணம்,மற்றும் அவிநாசி நாதர் தொத்திர கொத்து போன்ற நூல்களையும் பதிப்பித்துள்ளார்.
இறப்பு: 31-01-1942
May 18, 2011
May 16, 2011
பாப் மார்லியுடன் ஒரு மாலைபொழுது -மொட்டைமாடி அரங்கத்துக்கான அழைப்பு

இசைப்போராளி பாப் மார்லி
ரவிக்குமார் எழுதிய இந்நூல் குறித்த மொட்டைமாடி இரவு அமர்வு சென்னையில் வரும் வெள்ளிகிழமை இரவு நடைபெற உள்ளது . விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம்
தலைமை:
-கமலாலயன்
பாப் மார்லி இசைபோராளி நூல் குறித்து விமர்சனம்
-அஜயன்பாலா
பாப்மார்லியின் இசை
-ஷாஜி
மற்றும்
சி.சுந்தரமூர்த்தி
சிவ செந்தில்நாதன்
நாள்: -20-05-2011 வெள்ளிக்கிழ்மை, மாலை_6-15 மணி
இடம்: அண்ணாமலை ஆசிரியர் இல்லம்
சர்ச் பேரூந்து நிலையம் அருகில்
எம்.எம்.டி.ஏ காலணி
அரும்பாக்கம் சென்னை -106
தொடர்புக்கு 9962910391 ,9382853646
May 14, 2011
மயில்வாகனன் மற்றும் கதைகள்- சிறுகதைதொகுப்பு விமர்சனம்

மயில்வாகனன் மற்றும் கதைகள்- சிறுகதைதொகுப்பு விமர்சனம்
எழுதியவர்- உமாசக்தி
ஜன்னலுக்கு வெளியே பெய்யும் மழையை குறிப்பெடுத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளருக்கும் மழையில் நனைந்து கொண்டே வாசிக்கும் ரசிகைக்குமிடையேயான கதைகள் இவை.
நல்ல சிறுகதைகள் அருகிப் போன இக்காலகட்டத்தில் கையில் எடுத்த புத்தகத்தை கீழே வைக்கமுடியாத வகையில் வெகு நாள் கழித்து என்னை தொடர் வாசிப்புக்குள்ளாக்கிய தொகுப்பு அஜயன் பாலாவின் 'மயில்வாகனன் மற்றும் கதைகள்' .இத்தொகுதியின் தலைப்பைப் போலவே ஒவ்வொரு கதையின் தலைப்பும் வித்யாசமாசமானவை. பதினைந்து கதைகள் அடங்கிய தொகுதியில் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளுமே முக்கியமானவை, வாசிக்கும் போது மனதிற்கு நெருக்கமாகிவிட்டவை.
'மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும்', விநோத செய்தியாளனின் ஞாபகக் குறிப்பு', டினோசர்-94 ஒரு வரலாற்றுக்கதை, 'பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள்', 'கடவுளர் சபை - இது ஒரு இரவைப் பற்றிய கதை', 'முருகேசன்', 'ஜீன்ஸ் அணிந்த பறவைகள்', 'மயில்வாகனன் மற்றும் கதைகள்', 'கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி',ஆகிய கதைகளை நான் வெகுவாக ரசித்தேன். மாய எதார்த்தவாதக் கதைகளை உள்வாங்குவது சில சமயம் சிரமமாக இருக்கும், எனக்குத் தெரிந்தவரையில் இரா.முருகன் கதையின் பாதையில் நம்மை கட்டிப்போட்டு தரதரவென்று இழுத்துச் சென்றுவிடுவார். பா.வெங்கடேசன் நாம் கனவில் கூட எதிர்ப்பார்த்திராத உலகினுள் நம்மை அதி சுதந்திரத்துடன் நடமாட வைத்து ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்து மகிழ்வார். கோணங்கி நாம் மதிப்பீடாக கொண்ட எல்லாவற்றையும் போட்டுத்தள்ளிவிட்டு கனவுக்குள் வந்து கொண்டிருக்கும் கனவுக்குள் தோன்றி மறையும் காட்சிகளை அந்தகாரத்தை விலக்கி வார்த்தைகளினூடே மின்னல் தெறிக்கச் செய்து நம்மைப் பித்தாக்கிவிடுவார். அஜயன் பாலா இவை எல்லாவற்றின் கலவையாக இக்கதையின் வாயிலாக நம் கண்முன் நிற்கிறார்.
அஜயன் பாலா சிருஷ்டி செய்திருக்கும் இவ்வுலகின் கதைபாத்திரங்கள் கண்ணாடியில் பார்த்தால் தெள்ளந்தெளிவாய் தெரிவார்கள். நம்மிடம் உள்ள குணங்கள், குறைகள், சுய எள்ளல், பச்சாதாபம், ஆற்றாமை, உணர்ச்சிகளின் அதீதங்கள் எல்லாம் பாலாவின் பேனாவினூடே கதைகளாக வழிந்தோடுகிறது. எல்லாக் கதைகளிலும் எல்லாரும் இருக்கிறோம், அவர் நம் கரம்பிடித்து அழைத்துச் செல்லும் உலகினுள் விசித்திரமான சம்பவங்கள், கற்பனைக்கெட்டாத சம்பாஷனைகள் இடம்பெறுகின்றன. ஆனால் அவர் பத்திரமாக நம்மை இறக்கிவிடும் இடம் மிகப் பாதுகாப்பானது, நம்மை ஆசுவாசப்படுத்தி, முதுகைத் தட்டி சரி சரி போ என்று அனுப்பி வைக்கிறது. நிறைந்த வாசிப்பானுபாவத்தை அள்ளக் குறையாமல் கொடுத்தன இக்கதைகள்.
'மருதா' வெளியீடான இத்தொகுப்பில் குறை என்று சொல்ல ஒரு விதயம் மட்டுமே உள்ளது. அது அச்சுப்பிழை. ஆங்காங்கே கண்ணை உறுத்தும் அளவிற்கு வாசிப்பை எரிச்சலாகும் விதத்தில் 'ர' வை 'ற'வாகவும் இன்னும் சில மன்னிக்க முடியாத வார்த்தை பிழைகளும் தொகுப்பினுள் இருக்கிறது. மறுபதிப்பு செய்யும்போதாவது பிழை நீக்கம் செய்யப்படவேண்டும். கதாசிரியர் சில விதயங்களை கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் புகுத்தியுள்ளார், அவை மஞ்சள் நிறத்தின் மீது அவருக்கு அதீத ப்ரேமை போலும், மஞ்சள் வானம், மஞ்சள் கைக்குட்டை, மஞ்சள் வெயில் என்று மங்களகரமாக மஞ்சளைத் தெளித்துள்ளார். அதோடு கதை நாயகர்கள் பெரும்பாலும் பதட்டத்துடனே காணப்படுகிறார்கள். சிலருக்கு மனப் பிறழ்வோ என்று ஐயப்படும் அளவிற்கு அவர்களின் செயல்பாடுகள் நம்மை பீதியில் ஆழ்த்துகின்றன. ஆனாலும் இவை பெரிய குறைகளன்று, கதையின் வரிகள் மிகுந்த கவித்துவத்துடனும், மொழி நம்மை மகிழ்ச்சியிலும் கதாசிரியரின் அகவுணர்வும் துல்லியமான உணர்வெழுச்சிகளும் வாசிப்பவனை முடிவில்லா அகதரிசனத்திற்குள் ஆட்படுத்துக்கின்றன. இக்கதைகள் இங்குதான் வெற்றி பெறுகின்றன.
'மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும்'' என்னும் கதையிலிருந்து எனக்குப் பிடித்த வரிகள் " 'என் உள்ளொளிக்கும் கயமைக்கும் இடையேயான தொலைவை அளவீடு செய்யும் பார்வை. அதுநாள் வரை விழுமியங்களின் மேல் நின்று கொண்டிருந்த என் வாழ்வையே கேள்விக்குள்ளாக்குவதாக இருந்தது." 'முருகேசன்' எனும் தலைப்பிட்ட கதையின் எல்லா வரிகளும் அற்புதமானவை, 'நினைப்புக்கும் நிகழ்வுக்கும் இடையில் இருப்பதெல்லாம் வெற்று மறதிதான்' உண்மைதான் இவ்வரிகளை என்னால் மறக்க இயலாது.
May 9, 2011
பெண்ணென பெரிதாய் உளத்தக்க... . தொடர் பாகம் :3

பெண்ணென பெரிதாய் உளத்தக்க... .
தொடர் பாகம் :3
சோமாலி மாம்
தன்னம்பிக்கை
இன்றைய வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு எது அவசியமான சொத்து எது என என்னைக்கேட்டால் பணமோ படிப்போ அல்லது கணவனோ குடும்பமோ அல்ல
தன்னம்பிக்கை இது ஒன்று மட்டும் இருந்தால் போதும்
உலகில் எதையும் தன் வசப்படுத்த முடியும்.
ஆனால் நம் பெண்களுக்கோ தாய்மார்களுக்கோ இதுதான் பெரிய குறை.
காரணம் எப்போதும் மனபதட்டம்
போனமாசத்தை விட இந்தமாசம் பையன் கணக்குல ரெண்டு மார்க கம்மி..
தீபாவளிக்கு வங்கிவந்த சட்டை சரியில்லை. ஓரத்தில் கிழிந்துவிட்டது . கடைக்காரன் ஏமாற்றிவிட்டான்
சம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டது ..
கேஸ் தீர்ந்துவிட்டது
பால் பொங்கிவிட்டது
இந்த மனபதடட்ங்களுக்கு பல காரணங்கள்
அவற்றுள் ஒன்று நம் தொலைக்காட்சி சீரியலகள்..அதனால்
உண்டாகும் மனசிதைவு
இன்று வரும் சீரியகளில் பெரும் பாலானவை பெண்களை எப்போதும் பதட்டத்தில் வைத்திருப்பவைகளாக்வே அமைகின்றன்
த்ன்னம்பிக்கை மிகுந்த பெண்களின் மனதையும் அது உருக்குலைத்துவிடுகிறது .
உலக்மே தீயவர்களால் ஆனது என சொல்லி சொல்லியே அது பெண்களை பெரிதும் சீரழித்து வருகிறது
இன்பமாய் வாழ்வத்ற்கும் அனைவரிடத்தும் அன்பு செலுத்துவதற்கும் பல சாத்தியங்கள் வாய்ப்புகள் இந்த உலகில் உள்ளன என்பதை ஒரு போதும் போதிபபதே இல்லை
உண்மையில் இன்றைய பெண்ணுக்கு தேவை தன்னம்பிக்கையும் மரணதைரியமும்தான்
இதற்கு சரியான உதராணமாக இருப்பவர் சோமாலி மாம்
சோமாலி மாம்
பதினானகு வயது வரை வீட்டில் சிறை வைத்து தன் தாத்தாவால் தொடர் பாலியல் பலத்காராத்துக்கு ஆட்பட்டவர் கம்போடியாவை சேர்ந்த கிராமத்து பெண்
அவர் இன்று யார் தெரியுமா உலகில்
எங்கெல்லாம் சிறுமிகள் பாலியல் பலதகாரத்துக்கு உட்படுகிறார்களோ அவர்களை பாதுகாக்கும் மிகபெரிய செவை
செய்து வருபவர்
டைம் இதழ் கடந்த வருடம் வெளியிட்ட உலகின் சிறந்த 100 பெண்களின் பட்டியலில் இடம் பிடித்தவர் . இந்த 100 பெரை தேர்ந்தெடுத்த்வர் புகழ்பெற்ற ஆங்கில நடிகை அஞ்சலினா ஜோலி
மேலும் 2006 ஒலிம்பிக் துவக்க விழாவின் போது புகழ்பெற்ற ஆறுபேர் அத்ன் கொடியை அசைத்து துவக்கி வைத்தார்க்ள் அந்த ஆறுபேரில் சோமாலிமாமும் ஒருவர்
இப்படி பதினாலுவரை பாலியல் பலாத்காரத்துக்கும் மனசிதைவுக்கும் ஆட்பட்ட ஒருபெண் இத்த்னை உயரங்களை அடைய முடிகிறதென்றால் அதற்கு ஒரே காரணம்
தன்னம்பிக்கை..
பெரும் காற்றுக்கும் சூறை புயலுக்கும் அசையாத சிறு செடியின் கம்பீரத்தை ஒத்த மன உறுதி
அவரது வழ்வில் தான் எத்தனை எத்த்னை தடைக்கற்கள்
கம்போடியவில் ஏழைகுடும்பத்தில் பிரந்த சோமாலி மாம் சிறுவயதிலேயே பசி பட்டினியால் அவதியுற்றார். வீட்டில் இருந்து பட்டினி கிடப்பதை விட சாப்படாவது கிடைக்கும் என
அவளது பெற்றோர் அவரது தாத்தா உறவுள்ள ஒருநபரின் வீட்டில் அனுப்பி வைத்த்னர் .
அங்கு சிறுவேலைகள் செய்து வந்த சோமாலியை வீட்டிலேயே சிறை வைத்த அந்த பாழும் கிழ்வன் சோமாலியை பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டான்
அதன் பிறகு பதினான்கு வயதில் அவளை பெரும் பணத்துக்கு குடிகாரன் ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்தான்
ஆனால் அதுவோ அவளை பள்ளத்திலிருந்து அதல பாதாளாத்திற்கு தள்ளிவிட்டது போலானது
அவனோ பெரும் குடிகாரன். தினமும் நரகவேத்னைகள் தொடர்ந்த்ன அவளை கொடுமைபடுத்தினான் . அடித்து துவைத்தான்.
விபச்சாரம் செய்ய தூண்டினான் . மறுத்த போது அடித்து உதைத்தான் சூடு வைத்தான் . வேறு வழியில்லாமல் பதினாலு வயதில் படிப்பறிவில்லா சிறுமி சோமாலி விபச்சாரத்தில் தள்ளபட்டாள் . ஒருநாள் மறுத்த போது குடி போதையில் துப்பாக்கியை அவள் முன் நீட்டினான் . ஒருகுண்டு த்லையை மயிரியிழையில் உரசிக்கொண்டு பொனது ..இன்னொரு குண்ர்டு கால்களுக்கிடையில் பாய்ந்தது.
இவனிடம் வாழ்வதைக்காட்டிலும் விபச்சர விடுதியே சிறந்தது என நினைத்தால் அது போலவே அவனும் அவளை பெரும் பணம் வாங்கி கொண்டு விடுதியில் விற்று விட்டான் .ஒருநாளைக்கு ஆறுபேர் வரை அவளை சித்ரவதைக்கு ஆட்படுத்தினர் . ஒருமுறை ஒருவன் வெளியில் அழைத்து செல்ல அங்கு இருபது பேர் காத்திருந்த்னர்
அன்று சோமாலிக்கு யாரையாவது கொலைசெய்யும் வெறி இருந்தது
அவளை அழைத்துசென்ற அந்த நபரை கொலைசெய்யும் வெறி அவளுக்கு உண்டானது . திட்டமிட்டு பின் த்ன்னை போல ஒரு பெண்ணாக இருக்கும் அவனது தாய் மற்றும் மனைவியின் கண்ணீரை எண்ணி அந்த எண்ணத்திலிருந்து விலகினாள்
இது போல பல சிறுமிகள் தன்னோடு பாலியல் தொழிலில் ஈடுபட்டு கொடும் சித்ரவதைகளூக்கு ஆள்வாதை கண்டு மனம் வெதும்பினார். விடுதியை நடத்துபவர்கள் இது போன்ற சிறுமிகளை சங்கலியால் கட்டி வைத்து போதிய உணவு உடைகூட தராமல் சித்ரவதை செய்யப்பட்டனர். பல சிறுமிகளை கொடூர வியாதிகள் தாக்கின.அவற்றுக்கு சிகிச்சை கூட த்ராமல் விடுதியை நடத்துபவர்கள் அவர்களை கொடுமைபடுத்தினர்.
ஒருநாள் விடுதியில் சோமாலியின் நெருங்கிய தோழியாக இருந்த ஒரு பெண் அங்கிருந்த ஏஜெண்ட் ஒருவனால் கண்ணெதிரிலேயே கொலைசெய்ய்ப்படுவதை பார்த்த சோமாலி உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பித்தார். அந்த ஓட்டம் அவரது வாழ்க்கை மட்டுமல்லாமல் பல எண்ணற்ற சிறுமிகளின் வாழ்க்கைக்கு ஒளியேற்றுவதாக இருந்தது .
யாரோ சிலரது உதவியால் மருத்துவ மனை தாதியாக வேலைசெய்த சோமாலிமாம் கொஞ்சம் கொஞ்சமாக புது மனுஷியாக வாழ்க்கை வாழதுவங்கினாள்
அச்சமயத்தில் வேறு யாராவது இருந்தால் இனி நிம்மதியாக வாழ்வே எண்ணம் நேரிடும் ஆனால் சோமலிக்கோ அப்படி ஒரு வாழ்க்கை வாழ விருப்பமில்லை. கண்உன் நேரடியாக விடுதியில் கண்ட பல சிறுமிக்ளது வாழ்க்கை அவளுக்கு கண்ணீல் நிழலாடி உறுத்திக்கொண்டே இருந்தது.
ஒரு நாள் வீதியில் தன்னை போல் விடுதியிலிருந்து தப்பித்துவந்த ஒரு பெண்ணை பார்த்தார். 9 வயதில் விடுதியில் விற்கப்பட்ட சிறுமி அவள் . இப்பொது பதினேழுவயதில் அவளை சோமலிமாம் பர்த்தார். காச நோய்காரணாமாக் அவளை விடுதியினர் விரட்டியிருந்தனர். மருத்துவ மனைகளும் அவளுக்கு சிகிச்சை செய்ய மறுத்து விரட்டியடித்தன . மோசமான நிலையில் அவளது உடலும் தோற்றம் இருந்தது. மனமும் உருக்குலைந்து காணப்பட்டது. சோமாலி அவளை கண்டதும் கட்டித்தழுவ அப்பெண் கண்ணீர் விட்டாள் .
சோமாலி மாம் அவளை வீட்டிற்கு அழைத்து சென்று குளிப்பட்டி குணப்படுத்தி நோய்களுக்கு மருந்திட்டார்.அந்த பெண் பூரண நலமடைந்து முகத்தில் எழும்பிய சிரிப்பு சோமாலிக்கு வாழ்வில் பெரும் வெளிச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது சோமலிக்கு உடனடியாக பணி நிமித்தம் பிரன்சுக்கு போக வேண்ரிய வேலை இருந்தது . ஆனால் வீட்டில் அவளது அரவணைப்பில் பாதுகாக்கப்பட்ட பெண்னுக்கோ சோமாலியை பிரிய மனமில்லை .நீங்கள் இல்லவிட்ட்டால் நான் இறந்து விடுவேன் எனகூறி அழுதாள். ஆனாலும் சோமாலிமாமுக்கு பணி நிமித்தமாக செல்ல வெண்டியது கட்டயாமாக இருந்ததால் பிரான்சுக்கு பயணமானார்.
பிரான்சுக்கு சென்ற சில நாட்களில் அந்த துக்க செய்தி அவரை தாக்கியது . அவளால் காப்பாற்ற பட்ட அந்த அபலைபெண்ணின் மரணம் சோமாலிக்கு பெரும் வேத்னையை உண்டாக்கியது . அதன் பாதிப்பில் இனி தன் வாழாள் முழுவதையும் இது போன்ற பெண்களுக்காக அர்ப்பணிக்க அந்த கணத்தில் முடிவெடுத்தார். சில காலம் பிரான்சில் பணி புரிந்தார். அவருடன் கைகோர்க்க வந்த நண்ப்ரை திருமணமும் செய்துகொண்டார்.
தன் தாயகமான கம்போடியாவுக்கு வந்த சோமாலி மாம் பிரெஞ்சு அரசாங்கத்தின் உதவியுடன் பாலியலால் துன்புறும் கம்போடிய சிறுமிகளை காப்பாற்ற ஒரு Acting for Women in Distressing Circumstances. எனும் அமைப்பை 1992ல் உருவாக்கினார் .அவரோடு சில சமூக ஆர்வலர்கள் கை கோர்த்த்னர் . சோமாலி த்லைமையில் அவர்கள் பாலியல் விடுதிதோறும் சென்றனர். சோமாலி குழந்தைகளை மீட்க அவர்களுடன் போராடினார். முதலில் அவர்கள் பணியவில்லை. சிலர் விரட்டியடித்த்னர். குண்டர்கள் மிரட்டினர் . ஒரு விடுதியிலிருந்து துப்பக்கியுடன் ஓடிவந்த ஒருவன் நேற்றியில் அதை வைத்து இங்கிருந்து ஓடு இல்லாவிட்டால் பிணமாகசரிவாய் என மிரட்டினான்
ஆனல் சோமாலி மாம் உறுதியுடன் அங்கேயே நின்றார். அவனுக்கு என்ன செய்வதென தெரியவில்லை.ஆனால் சோமாலி அவனது உறுதியை தன் தன்னம்பிக்கை விரைவில் பலவீனப்படுத்தும் என நன்கு உணர்ந்திருந்தார். அது போலத்தன் நடந்தது அவனால் சுடமுடியவில்லை . சில நிமிடங்களில் போலீசார் அவனை குண்டு கட்டாக தூக்கினர் . அத்ன் பிறகு பாதுகாவலர்கள் வைத்துக்கொள்ளும்படி பலர் அறிவுறுத்தினர் .ஆனால் சோமலி அதை தவிர்த்தார். முதல் வருடம் மொத்தம் 89 சிறுமிகள் காப்பாற்றப்பட்டனர். பல சிறுமிகளை பால்வினை நோய்கள் கடுமையாக தாக்கியிருந்த்ன. அவர்கள் முழுவதுமாக சிகிச்சை செய்யப்பட்டனர் .. அவர்களது கல்வி எதிர்கால வாழ்க்கை ஆகியவற்ரை சோமலியின் தொண்டு நிறுவனம் கவனித்துக்கொண்டது. 1996ல் சோமாலி மாம் ட்ரஸ்ட் என அந்த தொண்டு நிறுவனம் பெயர் மாற்றம்
கண்டது இன்று அவரது நிறுவனத்தால் 4000க்கும்மேற்பட்ட பெண்கள் சிறுமிகள் பாலியல் விடுதிகளிலிருந்து காப்பாற்றபட்டு சிகிச்சயளிக்கப்பட்டு அவர்களது வாழ்வில் எதிர்கால ஒளியேற்றபட்டுள்ளது
சோமாலியின் இந்த சேவை விரைவில் உல்கம் முழுக்க தெரிய வர சோமலியின் புகைப்ப்டங்கள் அனைத்து இதழ்களிலும் அச்சாக துவங்கின.
ஸ்பெயின் நாட்டு இள்வரசியிடமிருந்து 2006ல் அவருக்கு முதல் விருது தேடிவந்தது தொடர்ந்து பல விருதுகள் பாராட்டுக்கள் அவரை நோக்கி குவியதுவங்கின . ஒலிம்பிக்கின் கொடியை அசைத்து துவக்குமளவிற்கு பிரபலமானார் . பல பல்கலைகழங்கள் அவருக்கு டாகடர் பட்டங்களைதந்து பெருமைப்படுத்தின .
இப்போதும் அவருக்கு மிரட்டலகள் வருகின்றன
சேவையை நிறுத்த சொல்லி அவரது மகள் க்டத்த்ப்பட்டாள் . பின் போலிசார் அவளை மீட்டனர்.ஆனாலும் சோமாலி அஞ்சவில்லை .. இப்போதும் தொடர்ந்துதன் பணியில் அஞ்சாமல் துணிவும் தம்பிக்கையுடனும் விடுதிகளை நோக்கி செல்கிறார்.
May 6, 2011
திரு. அஜயன் பாலா அவர்களுக்கு.,

05-05-2011
வணக்கம்.வாசிப்பு பழக்கம் மறந்த நிலையில்
தங்களின் "கார்ல் மார்க்ஸ்" புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன்.நீங்கள் விகடனில் எழுதிய
நாயகன்களில் "கார்ல் மார்க்ஸ்..... அருமை...மிக அருமை!"
இதுவரை தமிழில் தாடிக்காரனின் சூரியோதயத்தை பற்றி
எத்தனையோ புத்தகங்கள் வந்த போதும்,உங்களின் எழுத்து நடை தான் "தி பெஸ்ட்!"
அதுவும் ஒரு வரலாறை, கதை பாணியில் நாவலுக்குரிய அழகான சொல்லாடல்களால்
கவிதையாக எழுதியிருந்தது அற்புதம்....! அத்துணை பெரிய மாகோன்னத
மார்க்ஸை இத்தனை அழகாக,எளிமையாக யாரும் எழுதவில்லை என
எண்ணுகிறேன்.
"இனி வரும் நூற்றாண்டெல்லாம்
மார்க்ஸ் என்றால் அஜயன் பாலா
அஜயன் பாலா என்றால் மார்க்ஸ்"
என்றே விளங்கும்!
வாழ்த்துககளுடன்.,
வினோத்,
பெங்க்ளூரு
நன்றி வினோத் ..
கார்ல் மார்க்ஸ் அவர்களின் பிறந்த நாள் இரண்டு நாட்களுக்குமுன் வந்து பொன போது பதிவு எழுத நினைத்து சீஸனிசோபியா ..அல்லது ஊடககுணாம்சம் என நினைத்து தவிர்த்து விட்டேன்.. ஆனாலும்முக நூலில் சில நண்பர்களின் பதிவை படித்த பொது மகத்தான அந்த மனிதன் குறித்துசில வரிகளேனும் எழுதியிருக்கலாமோ எனும் எண்ணம் மின்னி மறைந்தது. நேற்று உங்கள் கடிதத்தை பார்த்தவுடன் அந்த மனக்குறை மறைந்தது. இந்த தொடர் எழுத மார்க்ஸ் பற்றிய நூல்களை தேடிக்கண்டுபிடித்ததுவே ஒரு தனிக்கதை . தொடரை எழுதும்போதுதான் கம்யூனிஸ்ட் கட்சிகளில் நேரடி தொடர்பில்லாமல் மார்க்ஸின் மேல் மகத்தான் மரியதை கொண்டிருக்கும் பலரை பற்றி தெரியவந்தது.ஒரு தோழர் நான் புத்த்க வேலையில் ஈடுபட்டிருந்த தென் திசை பதிப்பு அலுவலகத்துக்கே தன் மகனுடன் வந்து சிவப்பு சால்வை போர்த்தி ஆரத்தழுவிக்கொண்டது ஞாபகத்துக்கு வருகிறதும்.
சமூகத்துக்காக மனிதன் த்ன்னை அர்ப்பணித்துக்கொள்வதில் உலகைன் இதர த்லைவர்கள் அனைவரிலும் மார்க்ஸே இன்றும் முன்னோடியாகவும் முதன்மையானவராகவும் இருக்கிறார்.அத்னாலதான் வரலாற்று உலகை கி,மு.கி பி என்பதுபோல அரசியல் உல்கை மா.மு.மா.பி என அழைக்கலாம் என எழுதியிருந்தேன். யாராவது என்னிடம் கார்ல் மார்க்ஸை பற்றி சொல்லுங்கள் என்றால் என்னால் வாய் திறந்து சில நிமிடங்கள் பேச முடியாது.சில நிமிடங்களேனும் பெரும் அழுத்தம் மனத்தை சூழ்ந்து உப்பு நீரை கண்களை நோக்கி முட்டிதள்ளும். அத்ற்கு ஒரே காரணம் ஜென்னி..அவர்களது இழப்பு மற்றும் இருவருக்குமன உறவு ..
அதே சமயம் மதவாதிகள் எப்போதும் கார்ல் மார்க்ஸை தவறாகவே சித்தரித்து வருகிறார்கள்
அதற்கு ஓஷோவின் மார்க்ஸ் பற்றிய இந்த லிங்க் ஒரு சான்று.
http://www.messagefrommasters.com/Osho/osho/Osho-on-Karl-Marx-Communism.html
சிலர் ஓஷோ மதவாதி இல்லை என கூறுவார்கள்.ஆனால் அவர்களுக்கு தெரியாது இந்துமதத்தின் வசதி இதுதான்.த்ன்னை விரிவுபடுத்திக்கொள்ள அது காலத்துகேற்ப இது போன்ற சில மாடர்ன் மதவாதிகளை உருவாக்கிகொள்ளும்.
மார்க்ஸை போலவே சில விடயங்களில் நான் ஓஷோவை மதிப்பவன்.ஆனால் ஓஷோ கம்யுனிஸத்தையும் மார்க்ஸையும் எவ்வளவு தட்டையாக பார்த்துள்ளர் என்பத்ற்கு இந்த ஒரு கட்டுரையே சான்று.
அன்புடன்
அஜயன்பாலா
06-05-2011
May 5, 2011
ரோஜா -சிறு கதை

ரோஜா
ஒரு பூ எப்படி இந்த காரியம் பண்ணும் .. குழம்பியவளாக எழுந்துகொண்டு அவள் சோம்பல் முறித்தாள். ஞாபகத்தில் குத்திய முட்கள் உடலெங்கும் வலிக்கிறார் போல ஒரு குறுகுறுப்பு ..அந்த பூவை மாலையில்தான் துர்கா மந்திர் சாலையில் ஒரு துணிக்கடை அருகே பார்த்த ஞாபகம் வந்தது. மிருதுளாவின் வீட்டுக்கு வந்த போது துணீக்கடைக்கு பக்கத்துகடையில் தொட்டிசெடிகளாக வைத்து ஒருவன் விற்றுக்கொண்டிருந்தான்
குட்டையன பஞ்சாபி பையன் தான் கடையை கவனித்துகொண்டிருந்தான் .. வாசலில் இருந்த ஒரு ட்ரை சைக்கிளில் தொட்டி செடிகள் பலவற்றை ஏற்றுவதில் பஞ்சாபி மும்மரமாக இருந்தான்
துணிக்கடைவாசலில் மிருதுளாவின் பின்னால் நிற்கிற போது துப்ப்ட்டாவை எதுவோ இழுப்பது போலிருக்க திரும்பிய பொதுதான் துப்ப்ட்டா சிக்கியிருந்த முள் செடியில் அந்த பூவை பார்த்தாள் . நல்ல சிவந்து பருது பூரித்திருந்த ரோஜா அது. மிக வித்தியாசமாக இருந்தது . செக்க செவேலென மினுமினுப்பு வேறு... தாவும் குழ்ந்தைகளின் கண்களில் பிராகசிப்பது போன்ற தொரு ஒளி
சிறிது நேரம் அதையே பார்த்த்வள் மிருதுளாவிடம் அதை காண்பித்தாள்.. ரோஜா அவளையும் பார்த்து மகிழ்ச்சியுடன் தலையாட்டியது .. ஒருவேளை அப்போது காற்று பலமாக வீசியிருக்கலாம் . ஆனால் இவளுக்கு என்னவோ ரோஜா தனக்காகவே த்லையாட்டுவது போலவே பட்டது.
மிருதுளாவின் டூவீலரில் ஏறுகிறபோதுதான் அடடா அதை வாங்கியிருக்கலாமோ என எண்ணதோன்றியது. ரயிலில் பயணீக்கும் போது ஜன்னல் கண்ணாடியில் ஒட்டியபடி அந்த ரோஜா பயணிப்பதை போல அவளுக்கு கனவு வந்தது. கண்ணாடி முழுக்க அடர்ந்த பனி. இவள் எதுவோ ஒரு புத்தகத்தை வாசித்துகொண்டிருக்கிறாள்.சட்டென நிமிர்ந்தபோது பனியினூடே கண்ணாடியில் முகத்தை அழுத்தி உள்ளே பார்ப்பதுபோல அது பார்த்துகொண்டிருந்தது. அதன் காம்பில் எதிர் காற்றில் படபடக்கும் ஒரு பச்சை இலைதவிர வேறேதுவும் இல்லை. இவளுக்கு ஆச்சரயம் ..உள்ளே வா விழுந்துவிடப்போகிறய் என கெஞ்சுகிறாள்.ஆனால் ரோஜா ஒரு ஆணை போல புன்னகைகிறது. பின் தலையசைத்து கண்ணாடியில் முகத்தை அழுத்திக்கொண்டது. வண்டியினுள் பூவிற்கும் சிறு வணிகம் செய்யும் யாரோ ஒரு பெண் ரொம்பத்தான் செல்லம் கொஞ்சுகிறாய் என முறுவளித்தாள் . கூபேயின் சகபயணிகளும் ஒரு நடனகாரர்களை போல உடலை அசைத்தபடி அரைக்கண்னால் ரோஜாவின் மையல் சொட்டும் காத்லை ரசித்தனர். இவளுக்கோ வெட்கம் ஆனாலும் ஒரு தீவிரமான உணர்வு தொற்றிக்கொண்டது. கண்ணாடியில் அழுத்திக்கொண்டிருந்த ரோஜாவுக்கு கண்ணாடியினூடே முத்தமிட்டாள் உடன் உடல் முழுக்க பரவும் மென்மையை அனுமதித்தாள். கடையில் பார்த்துவிட்டு ஏன் என்னை வாங்காமல் வந்தாய் ரோஜாவின் கேள்விக்கு இவளுக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. தாகூர் கார்டன் நிறுத்தம் நெருங்கி வந்ததும் ரோஜா சட்டென பின்னோக்கி வேகமாக பறக்க இவளுக்கும் அந்த அதிர்ச்சியில் கனவு கலைய தூக்கமும் முடிவுக்கு வந்தது.
ஆனால் எழுந்ததிலிருந்து மனதுக்குள் ஒரு பாரம். மிஷினிலிருந்து துணீயை எடுத்து பால்கனி ஹேங்கரில் க்ளீப் போட விடவில்லை . பாரம் மிகவும் அழுத்தியது . சோபாவில் சென்று ஈரத்துடன் படுத்துக்கொண்டாள் கனத்த மார்புகளை த்லைய்ணைக்கு அழுந்த கொடுத்தாள் .ஆனாலும் மனசுக்குள் நிம்மதியில்லை . எதற்காகவோ அலைந்தது. கடை எப்படியும் பத்து மணிக்கு மேல்தான் திறப்பார்கள் . டிசம்பர் மாதம் பனிக்காலம் வேறு. மேலும் இதற்காக மோதி நகர் வரை சென்றுவரவேண்டும்.. மிருதுளாவுக்கு போன் செய்து காலையில் வீட்டுக்கு வருவதாக சொல்லிவிட்டாள் .காரணம் கேட்டபோது துர்காமந்திர் என சொல்லி சமாளித்தாள்
பஞ்சாபி பையன் அப்போதுதன் கடையை திறந்திருந்தான். மிருதுளாவுக்கோ ஆச்ச்ரயம் எதுக்கு இப்ப கோவிலுக்குதான வந்த என ஆச்சர்யப்பட்டாள். பஞ்சாபி பையனுக்கு அவள் என்ன கேட்கிறாள் என தெரியவில்லை ..அப்போதுதான் உள்ளேயிருந்து ஒவ்வொரு தொட்டியாக வெளியில் எடுத்து வைத்துகொண்டிருந்த்வன் அவளை உள்ளேவரசொல்லி க்டைக்குள் அவளாகவே குறிபிட்ட செடியை தேடி தேர்ந்தெடுக்க அனுமதித்தான். உள்ளே வந்து பார்வையால் துழாவினாள். அந்த பூ தெரியவில்லை . எல்லாபூக்களும் பூவை போலவே இருந்தன . மிருதுளா ஸ்கூட்டியில் ஹாரனை அழுத்திகூப்பிட்டாள். இவளோ ஒவ்வொரு செடியாக தேடிபார்த்துக்கொண்டிருந்தாள்
அவன் பஞ்சாபி பையன் அவள் அருகே வந்து எந்த செடி எந்த செடி என ஹிந்தியில் அவளை கேட்டுகொண்டிருந்தான் அவளுக்குள் ஒரு பரிதாபம் வெறுமனே ரோஜா செடி என்றாள் நேற்றுதான் முப்பது ரோஜாக்களை ஒரே ஆளுக்கு விற்றதாக அவன் சொன்னான் ..மிச்சமிருந்த சிலவற்றை அவளது முகத்தருகே எடுத்து காண்பித்தபடி இருந்தான்.
ம் இது இல்லை என த்லையசைத்துக்கொண்டிருந்தவளின் கண்களிலிருந்து தண்ணீர் சாரை சாரையாக கொட்டிக்கொண்டிருக்க. பஞ்சாபி பையன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். முழுவதுமாய் அவள் அங்கிருந்து புறப்பட்டு வாசலில் மிருதுளாவை நோக்கி செல்ல மவுனமாய் அவளது முதுகை நோக்கி புன்னகைத்த அந்த பஞ்சாபி பையன் கடையினுள் மறைத்துவைக்கப்பட்ட சில பூந்தொட்டிகளை எடுத்து வெளியில் வைத்தான். பின் அங்கு வந்த வேறொருவனுக்கு அந்த குறிப்பிட்ட செடியை காண்பித்து பேரம் பேசினன். பேரம் படிந்தது. அந்த புதிய ஆள் செடியை தொட்டியுடன் எடுத்து ஸ்கூட்டரின் முன்பக்கம் வைத்து க்கொண்டான். புது மலர்ச்சியுடன் அந்த ரோஜா நகரையே தன் வசப்படுத்தியபடி வாகனத்தில் ஆரோகணிக்க துவங்கியது.
சாலையில் பயணித்த் பலரும் வினோத்மான ஈர்ப்பால் துவண்டனர். வெளி எங்கும் பரவிக்கொண்டிருந்த வாசம் பலரது உள்ளத்திலும் காத்லை தருவித்துகொண்டது. சில வாகனங்கள் விபத்துக்குள்ளாயின. காமம் மீதுற்ற பெண்கள் சிலர் கணவனை மோகித்தனர். பின் இருக்கையில் அமர்ந்த்படி தங்களது முலைக்காம்புகளை அவர்களது தோள்பட்டையில் உரசிக்கொண்டனர் .இணையில்லதவர்கள் பெரும் துக்கத்தில் வீழ்ந்தனர் . இரண்டொரு வாகனங்கள் விபத்துக்குள்ளாகி சரிந்தன
மிருதுளாவின் வீட்டிலிருந்து புறப்பட்டு பேருந்தில் வந்து கொண்டிருந்த அவள் மனதில் யாரொ அழைப்பது போலிருந்தது. அவளது இத்ழை யாரோ கவ்விக்கொண்டு உயிரை பருகுவதை உணர்ந்தாள் .வெளியே எட்டிபார்க்க ஒரு ஸ்கூட்டர் அவளது பேருந்தை கடந்துகொண்டிருந்தது.
.
May 3, 2011
நடிப்பின் கோட்பாடு மார்லன் பிராண்டோ : தன் சரிதம்

நடிப்பின் கோட்பாடு மார்லன் பிராண்டோ : தன் சரிதம்
- காலபைரவன்
நூல்: மார்லன் பிராண்டோ : தன் சரிதம்
ஆசிரியர்: அஜயன் பாலா
போதாமைகளினால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் நமது தமிழ்ச் சூழ்லில் எப்போதாவது,யார் மூலமேனும் கலை இலக்கியம் குறித்த வெளிச்சத்தின் திறப்பைக் காலம் தொடர்ந்து நிகழ்த்தியபடியே இருக்கிறது.கலை இலக்கியம் குறித்த பார்வை உலகம் முழுக்க தொடர்ந்து மாறிக்கொண்டேயிருந்தாலும்கூட,அது எந்த வகையிலும் நமது பொது புத்தி சார்ந்த உலகை எதுவுமே செய்து விடுவதில்லை.அதற்காக நமது ஊடகக்காரர்கள் ஒரு சிறு முன்னெடுப்பைக்கூட எடுத்து வைக்க விரும்புவதில்லை.
கலை வடிவங்களில் ஆழ்ந்து புரிதல் இல்லாதவர்கள் உற்பத்தி செய்துகொண்டிருக்கும் படைப்பாக்கங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய நிர்பந்தம் வேறு. திரைப்படம் ஓர் ஊடகமாக வலுப்பெற்று ஒரு நூற்றாண்டைக் கடந்துவிட்ட பின்பும், நாம் அடையாளம் காணக்கூடிய மொன்னையான சூழலில்தான் ”மார்லன் பிராண்டோ”வின் தன் சரிதக் கட்டுரைகள் அஜயன் பாலாவின் பெருமுயற்சியால் தமிழ் வடிவ்ம் பெற்று வெளிவந்திருக்கிறது.
அலைகளையே கடல்கள் என்று நம்பும் நமது மனம்,நடிக்கிற எல்லோரும் நடிகர்கள் தான் என்று கற்பிதம் செய்து கொள்கிறது.அவ்வாறான சிந்தனையில் உள்ள குறைபாட்டையும் நமது பார்வையின் தெளிவின்மையையும் பிராண்டோவின் கட்டுரைகள் கேலி செய்கின்றன.ஒரு நடிகன் என்ற அளவிலேயே நின்றுவிட்ட பிராண்டோவின் பிம்பம்,இந்நூலின் மூலம் தகர்த்தெறியப்பட்டு சமூகம் குறித்தா ஆழ்ந்த அக்கறையும் புரிதலுங்கொண்ட ஒரு கலைஞன் என்ற பிம்பத்தை தமிழ்ச் சூழலில் கட்டமைக்கிறது.
தேடலை முன்வைத்து தொடர்ந்து நகர்ந்து கொண்டிருப்பவனே கலைஞன்.ஒழுக்கவாதிகள் கலாச்சாரத்தின் பேரால் கட்டமைக்கும் அடக்குமுறைகளை தீவிரத்துடன் எதிர்த்து இயங்க வேண்டிய கூடுதலான் பொறுப்பும் கலைஞனுக்கு இருக்கிறது. அவ்வாறு வாழ நேரிடும் ஒரு கலைஞன் சமூகத்தால் எப்படிப் புரிந்துகொள்ளப்படுகிறான் என்பதையும் இப்படித்தான் வாயிலாக உணரமுடிகிறது.தன்சரிதக்கட்டுரைகள் அதீத கவனத்துடன் ஒழுங்கு செய்யப்பட்டு தொகுக்கப்படும் இக்காலகட்டத்தில்,பிராண்டோவின் எழுத்து வெளிப்படையான நிகழ்வுகள் மூலம் தமிழ் எழுத்துப் பரப்பில் கவத்தை ஏற்படுத்தும் வகையில் கட்டமைக்கப்படுள்ளது குறிப்பிடபட வேண்டிய ஒன்று.
இந்நூலில் வெற்றியென கருதுவது,திரைத்துறையினர் மட்டுமல்லாது,அனைவராலும் வாசிக்க முடிகிற அளவில், புத்தகம் பல தளங்களில் நின்று செயல்படுவதைத்தான் “நான் மரபுகளை மீறுபவன்;அது என் தனிப்பட்டகுணம்” என்று கூறும் பிராண்டோவால்,உண்மையான அன்பும், நல்லுணர்வும், பரிவும்,நற்காரியங்களும் இவ்வுலகில் சமூக அநீதிக்கும் வன்கொலைகளுக்கும் ஏதேச்சாதிகாரங்களுக்கும் இன்ன பிற அழிவு சக்திகளுக்கும் எதிராகச் செயல்படும் என நம்புகிறேன் என்று கூறமுடிக்கிறது. மேலும் ஒரு தனிப்பட்ட நபரின் ஆளுமையைத் தாண்டி அவ்வாளுமையோடு தொடர்புடைய பன்முகத்தன்மை கொண்ட போராட்டங்கள்,கலகங்கள் ஆகியவற்றை வாசிக்க நேர்கையில் ,நமது நடிகர்களின் இயங்குதளம் பற்றிக் கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
இரண்டு மூன்று படங்கள் வெளியாகி வெற்றி பெற்றவுடனேயே தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று வலம் வரும் நம் தமிழ் மெகா நடிகர்களை ஒப்பிடும்போது பிராண்டோவின் செயல்பாடும் அயராத உழைப்பும் மெச்சத் தகுந்ததாக இருக்கிறது. ஏசுவே எதற்க்காக நான் இந்த நகரத்திற்கு வரவேண்டும் என்று தன் பாராட்டு விழாவில் ரசிகர்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்ட பிராண்டோவால் கேட்க முடிகிறது.”எது அவர்களை இப்படி ஒரு விபரீதமான மனநிலைக்குத் தள்ளுகிறது? ,என்று அவர்கள் குறித்து ஆக்கப்பூர்வமாக யோசிக்கவும் முடிகிறது. ஐந்தடி தூரத்தில் மார்ட்டின் லூதர் கிங்கை பின்தொடர முடிகிறது. பூர்வகுடி இந்தியர்களுக்காக தனக்களிக்கப்பட்ட விருதை நிராகரிக்க முடிக்கிறது. இந்தியாவின் சாதியமைப்புகள்,ஏழ்மை நிலை குறித்து எடுத்த விவரணப் படத்தை கடைசி வரை போராடியும் அவாரால் வெளியிட முடியாமல் போகிறது.
ஒரு வேளை நான் ஒரு கறுப்பினத்தவனாக பிறந்திருந்தால் என நினைத்துப் பார்க்கிறேன்.என்னை ஒருவன் விலைக்கு வாங்கியிருக்க முடியும் என்ற எண்ணத்தையே என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று கறுப்பினத்தவர்கள் மீதான தனது அக்கறையை வெளிப்படுத்தவும் முடிகிறது.பத்திரிக்கை சுதந்திரம்,தனிமனித சுதந்திரத்தை பாழ்படுத்தாத வரையில் போற்றத்தக்கதே என்று திட்டவட்டமாக நம்பும் பிராண்டோ,டைம் இங்க் பத்திரிக்கையை தனியாளாய் நின்று பணியவைக்கிறார்.
நடிகர் என்ற வகையில் அவர் ஒரு சிறந்த உழைப்பாளி.உணர்ச்சிகளை வரவழைக்க உயர்ந்த இசையையும், தரமான கவிதைகளையும் நேசிக்கின்ற ஒரு நடிகனாகவும்,நடிப்பு சிறக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ளும் ஒரு நடிகனாக இயங்குகிறார்.நடிப்பின் கோட்பாடுகளை உள்வாங்கியதோடு நின்று விடாமல் அதைப் பரிசீலிக்கவும் செய்கிறார்.ஆதனால்தான் ஸ்டெல்லா ஆட்லரையும் நுட்பமாகப் பின் தொடர முடிக்கிறது.அமெரிக்கா,பிரிட்டன் நாடக ஆக்கங்களைப் பற்றியும்,அவற்றின் போக்கில் உள்ள வேறுபாடுகள் குறித்தும் தனித்தன்மைகள் குறித்தும் பேசமுடிக்கிறது.இசை,புத்தகங்கள் மீதான இவரின் ஆழ்ந்த ஈடுபாடு இவருக்கு வேறொரு ரூபத்தைக் கொடுக்கின்றன.
சுயசரிதை என்ற வகையில் இயங்கும் ஒரு நூலின் பிராதான அம்சம் அதன் வெளிப்படைத் தன்மையே.அவ்வகையில் பிராண்டோ ஒளிவும் மறைவுமின்றி தன்னை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை வாசிக்கும்போது உணரமுடிக்கிறது.காதலிகள் மனைவிகள்,அதிகாரப்பூர்வமற்ற பிள்ளைகள்,தான் நேசித்த,தன்னை நேசித்த பெண்கள் பற்றிய விவரங்களை எல்லாம் எந்தவித பூடகமுமின்றி அவரால் எழுதமுடிக்கிறது. சாப்ளினை எப்படி மேதையாக உணருகிறாரோ அதைப்போன்று அவரை விமர்சிக்கவும் செய்கிறார்.சாப்ளின் குறித்து இவ்வாறு எழுதுகிறார்:சாப்ளின் ஒரு மேதை என்பதை நான் ஒருபோதும் மறுக்கவில்லை.என்றாலும்,மற்ற எல்லோரையும்போல எல்லா கீழ்த்தரமான குணங்களையும் கொண்ட மிகச்சாதாரண மனிதர்களுள் ஒருவர்தான் அவர்.தன்னைப் பற்றிய சுயதெளிவும்,சமூகம் குறித்த ஒரு விமர்சனப் பார்வையும் கொண்ட ஒருவரால்தான் இவ்வாறு ஒருவரை மிகத் திட்டவட்டமாக மதிப்பீடு செய்யமுடியும் எனத் தோன்றுகிறது.
”என் வாழ்க்கையின் அடுத்த புள்ளி என்ன என்பது குறித்து எனக்கும் எதுவுமே தெரியாது.வெற்றி என்பது என் வாழ்வில் அசந்தர்ப்பமாக நேர்ந்தது” எனப் பேசும் பிராண்டோ,நான் மட்டும் சரிவர நேசிக்கப்பட்டிருந்தால் என் வாழ்க்கைப் பாதை வேறெப்படியாகவோ திசை திரும்பியிருக்ககூடும்”என்று ஆதங்கப்படவும் செய்கிறார்.முடிவின்மையை நோக்கி தொடர்ந்து பயணிக்க ஆகப்பெரிய கலைஞர்களால்தான் முடியும் என்பதை நூலின் வாயிலாக அறிய முடிகிறது.
ஒர் அசாத்திய உழைப்பை அஜயன்பாலா, தமிழ்ப்படுத்து வதற்காகச் செலுத்தியிருக்கிறார் என்பதை ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும் உணரமுடிக்கிறது. அதோடு மட்டுமின்றி நெருடல்களற்ற வாசிப்பிற்காக அவர் அதிக அக்கறை எடுத்துக்கொண்டதையும் அறியமுடிகிறது.
- கால பைரவன்.. புதிய்பார்வை
- நூல் தலைப்பு: மார்லன் பிராண்டோ தன் சரிதம்
பதிப்பகம்: எதிர் வெளியீடு பொள்ளச்சி
- தொலைபேசி: +91 9865005084
- +914259226012
-
Subscribe to:
Posts (Atom)
ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )
ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான நாங்கள் அப்போது பச்சைவெளியில் விளையாடிக் கொண்டிருந்தோம். நாங்கள் விளையா டிக்கொண்டிருந்த்த இடத்தில் மட்டு...
-
இவை எல்லாம் நடக்கும் என திட்டங்களில்லை இதுதான் பாதை என்ற எண்ணமும் இல்லை இதற்குமுன் வாழ்க்கையும் இப்படி இல்லை ஆனாலும் என் உடல் இரண்டாக கிழிக்...