June 10, 2011

பெண்ணென பெரிதாய் உளத்தக்க... 4. ; - மேரி க்யூரி


பெண்ணென பெரிதாய் உளத்தக்க... .
தொடர் பாகம் :4


தனி மனிதன் வளராமல் சமூகம் வளர்வதில்லை . அதேசமயம் சமூகத்துக்காக பாடுபடும் தனி மனிதர்தான் வரலாற்றில் இடம்பிடிக்கிறார்
- மேரி க்யூரி


நம் பெண்கள் பலருக்கு காதல் ஒரு முக்கிய ப்ரச்னை
காதலில் தோற்று போனாலோ அல்லது நினைத்த நபரை திருமண்ம் செய்ய முடியாது போனாலோ அவ்வளவுதான்...
இனி முடிந்து விட்டது வாழ்க்கை. இனி எல்லாமே அவ்வளவுதான் என செக்கில் மாட்டிய சிவலிங்கமாக தங்களை நினைத்துக்கொண்டு எண்ணங்களை குறுக்கி சுருங்கி போய்விடுகின்றனர்

ஆனால் மேரிக்யூரி அப்படி திரும்பவில்லை,.அவரும் காதலில் தோல்வியுற்றார்.ஆனால் தோல்வியை பாடமாக மனதில் ஏற்றார். அன்று அவர் அப்படி செய்யாவிட்டால் நோபல் பரிசு பெற்று உலகின் ஒப்பற்ற பெண்மணியாக விளங்கியிருக்க வாய்ப்பே இல்லை.

மேரி க்யூரி .. ரேடியத்தை கண்டுபிடித்த்வர்.
இன்று மார்பில் வலி என ஆஸ்பத்தரிக்கு ஓடுகிறோம் டாக்டருக்கு தெரியவில்லை .. உடனே எக்ஸ்ரெ எடுத்துக்கொண்டு வாருங்கள் என்கிறார்.

ஓடிப்போய் எக்ஸ் ரே எடுக்கிறோம் பார்க்கிறோம் ..மருத்துவர்களால் துல்லியமாக ப்ரச்னை கண்டறியப்படுகிறது நோய் தீர்க்கப்படுகிறது

ஆனால் என்றாவது நம் மருத்துவ ப்ரச்னைகளை தீர்க்கும் உற்ற நண்பனான எக்ஸ் ரே எனும் அற்புத சாதனத்தையும் அதற்கு காரணமானவரையும் பற்றி யோசித்திருப்போமா ?

நிச்சயம் யோசித்திருக்க மாட்டீர்கள்
பரவாயில்லை அந்த பாவத்துக்கு பரிகாரமாக அதை கண்டுபிடிக்க மூல காரணமாக இருந்த மேரி க்யூரியின் இந்த கட்டுரையை படித்து தெரிந்துகொள்ளுங்கள்

யார் இந்த மேரி க்யூரி ..போலந்து நாட்டில் வார்சா எனும் ஊரை சேர்ந்த தேசப்பற்று மிகுந்த தம்பதிக்கு மகளாக நவம்பர் 7ம் நாள் 1867ம் ஆண்டு பிறந்தவர். அடிப்படை கல்வியை உள்ளூர் ஜிம்னாசியத்தில் முடித்தார் . அந்த ஊரில் ஆரம்ப பள்ளிகூடத்துக்கு ஜிம்னாசியம் என்றுதான் பெயர்.
மேல்படிப்பை உள்ளூரில் படிக்க வாய்ப்பில்லை. அப்போது ருஷ்யாவை ஆண்ட ஜார் அரசாங்கம் பெண்கள் உயர்கல்விகள் படிக்க தடை விதித்திருந்தது . ஆனால் மேரிக்கோ அறிவியலில் மேற்படிப்பு படித்து விஞ்ஞானியாக பெரும் விருப்பம் . அப்படியானால் அதற்கு ஒரே வ்ழி அண்டை நாடான பிரான்சுக்கு சென்று படிப்பதுதான். ஆனால் அதற்கோ பெரும் தொகை தேவைப்படும் .

உண்மையில் மேரியின் அப்பாவுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். பரம்பரை பணக்காரர். ஆனால் போலந்து மண்ணீன் விடுத்லை இயக்கத்துக்காக தன் முழு சொத்தையும் இழந்துவிட்டார்.
மேரியை பிரான்சுக்கு போய் படிக்க வைக்க இப்போது அவரிடம் தம்படி காசு கூட இல்லை.

இதனால் மேரி ஒரு முடிவு செய்தார் . அவளது அப்பாவின் உறவுக்காரர்கள் கிராமங்களில் பெரும் பண்ணைகாரர்களாக இருந்தனர். அவர்களது குழந்தைகளுக்கு படிப்பு சொல்லி கொடுத்து அதன் மூலம் கல்விக்கான தொகை சேர்ப்பது என முடிவு செய்தார்

ஆனால் அங்கு போன பின் மேரி வெறும் பணக்கர பிள்ளைகளுக்கு மட்டும் சொல்லித்தராமல் ஓய்வு நேரங்களில் கிராமத்திலிருக்கும் ஏழை குழந்தைகளுக்கும் ஒரு மரநிழலில் அமரவைத்து சொல்லிகொடுத்தார்..
ஒரு நாள் இதை பார்த்தான் கரீஸ்மிஸ் ச்ரோவ்ஸ்கி

யார் இந்த கரீஸ் மிஸ் இவன் தான் நாயகனோ என அவசரப்பட்டுவிடவேண்டாம் .. இவன் வில்லன்
மேரி வேலை செய்த அவளது பண்ணை வீட்டு முதாளியின் ஒரே மகன். பட்டணத்தில் படித்து கொண்டிருந்த அவன் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த போதுதான் மேரியை பார்த்தான். மயங்கிவிட்டான்.மேரியை மயக்க வீட்டுக்குள் வளைய வந்தான்.

வீட்டில் மேரிக்கு ஒரு சின்ன அறை .படிப்பு சொல்லிதரும் நேரம் போக மீத நேரத்தில் அறிவியல் புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டு தனக்கு கொடுக்கப்ட்ட அந்த சின்ன அறையில் மேரி படிப்பாள். அந்நேரம் பூனை போல அறையை சுற்றி வந்து ஜன்னல் கதவை திறந்து நோட்டமிட்டு கள்ள சிரிப்பு காண்பித்தான் கரீஸ் மிஸ்.. சின்ன பெண் தானே அவளும் எத்தனை முறைதான் ஓடி ஒளிவாள்

அடிக்கடி அறையின் ஜன்னல் கதவை அவன் திறக்க ஒருநாள் இவள் மனக்கதவும் திறந்துகொண்டது.

என்னதான் வெள்ளைத்தோலாக இருந்தாலும் அந்த நாட்டிலும் அந்தஸ்து வித்யாசம் பார்த்தனர். பண்ணை வீட்டு முதலாளியும் வீட்டில் வேலை செய்பவர்களும் வேறு வேறு. ஒட்டவே முடியாது..?
மகனிடம் இந்த கல்யாணம் நடக்கவே நடக்காது என உறுதியாக சொல்லிவிட்டாள்..அந்த பண்க்கார அம்மா . அத்தோடு மேரிக்கு வேலையும் போனது. ஊருக்கு திரும்பினாள்.மகளது மன வாட்டத்தை புரிந்துகொண்டார் அப்பா கடன் பட்டாவது பணம் தருகிறேன் பிரான்சுக்கு படிக்க போ என கட்டளையிட்டார். ஆனால் மேரி கேட்கவில்லை .காரணம் அவள் தன் காதலனை உறுதியாக நம்பினாள். எப்படியும் காதலன் திரும்ப வருவான் கைபிடிப்பான் என காத்திருந்தாள்

ஆனால் சினிமாக்களில் நடப்பது போலத்தான் மேரி வாழ்விலும் நடந்தது . அவன் இப்படி ஏமாற்றுவான் என அவள் எதிர்பார்க்கவில்லை. மேரி நொறுங்கிபோனார்.. ஆனால் அடுத்த நிமிடமே வாழ்க்கை இதுவல்ல இந்த தோல்விகளுக்கெல்லாம் பதில் சொல்கிறார்போல தன் பணக்கார அத்தையும் அவளது மகனும் மனம் நொந்து தன்னை இழந்தமைக்காக வேதனை படுவதை காண விரும்பினார். அதற்கு அவர் முன் இருந்த ஒரே ஆயுதம் படிப்பு . அறிவியல் மீதான் ஈடுபாடு .அடுத்த நிமிடமே தன் அப்பாவிடம் பிரான்சுக்கு போக ஏற்பாடு செய்ய சொன்னார்

1893ல் பவுதீகத்திலும் , 1894ல் கணிதத்திலும் பட்டம் வென்றார்.
இச் சமயத்தில்தான் தன்னை போலவே அறிவியல் துறையில் ஈடுபாட்டுடன் இருந்த பியர் க்யூரியை மேரி சந்தித்தார். இம்முறை இதயம் கலப்பதற்குமுன் அறிவு கலந்தது.மூன்று வருடம் பரிசோதனை கூடத்தில் இருந்த போது இல்லாத காதல் பிரியநேர்ந்த முதல் கணத்தில் முளைத்துக்கொண்டது . காதலை உணர்ந்த கணமே கல்யாணமும் செய்துகொண்டார்கள் .


அதன் பிறகு கண்வன் மனைவி இருவரது முழு வாழ்க்கையும். அறிவியலுக்காக அர்ப்பணிப்பு செய்யப்ட்டது. தங்களது கண்டுபிடிப்புகள் மூலம மனித வாழ்க்கைக்கு பெரும்பேற்றை உயர்வினை உண்டாக்க இருவரும் முழு மூச்சாக ஈடுபட்டனர் உடல் பரிசோதனைக்கு ஊடுருவும் கதிர் வீச்சுகளையும் அதற்கான தனிமத்தையும் கண்டுபிடிக்க அவர்கள் தங்களை சோத்னை கூடத்திலேயெ வதைத்துகொண்டனர் .அதன் பலனாக அவர்கள் உடல் பெரும் பாதிப்புக்குள்ளானது.

1898 ம் ஆண்டு ஜூலை அவர்கள் கடும் உழைப்புக்கு வெளிச்சம் உண்டானது .கணவன் மனைவி இருவரும் பல்வேறு ஆய்வாளர்கள் அறிஞர்கள் மருத்துவர்கள் மத்தியில் த்ங்களது கண்டுபிடிப்பை வாசித்தனர்.
போலந்து எனும் தாய்நட்டின் பெய்ர் குறிப்பிடும் வகையில் அவர்கள் கண்டுபிடித்த தனிமத்துக்கு வைத்த பெயர் போலோனியம் . இதை சொன்ன அடுத்த நிமிடம் அறிஞர்கள் பெரும் கரவொலி எழுப்பி இருவரையும் கவுரவபடுத்தினர் இதனை தொடர்ந்து அவர்கள் இருவ்ரும் இணைந்து ரேடியம் எனும் த்னிம்த்தை கண்டுபிடித்த்னர், இந்த தனிமத்திலிருந்து பிரித்தெருக்க்ப்டும் கதிர் வீச்சுக்ள் மருத்துவத்துறையில் எக்ஸ்ரே கருவிக்கு பயன்படுத்தபட்டு வருகின்றன.

1903ம் ஆண்டு ஸ்வீடிஷ் அரசாங்கம் பவுதிகத்துறைக்கான இவர்களுக்கான கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசை வழங்கியது. வாழ்க்கை முழுக்க ஆராய்ச்சிக்காக அவர்கள் அர்ப்பணித்த காரணத்தால் இந்த பரிசை வாங்க ஸ்டாக்ஹொம் நகருக்கு செல்வத்ற்கான பணம் கூட அவர்களிடம் இல்லை. மாண்வர்கள் ஒன்றிணைந்து அவர்களாக பணம் திரட்டி அனுப்பி வைத்தனர். அடுத்த சில நாட்களில் கணவர் பியர் க்யூரி சாலையில் ஒரு குதிரை வண்டி ஏறி மரணமடைந்தார்.இதனால் பெரும் துயர் மேரியை சூழ்ந்தது.

எட்டு வருடங்களுக்கு பிறகு 1911ம் ஆண்டு வேதியியல் துறையில் ரேடியத்தை கண்டுபிடித்த்மைக்காக இரண்டவது முறையாக நோபல் ப்ரிசை பெற்றார். இம்முறை தனியாளாக அந்த பரிசை வாங்கி இறந்த கணவருக்கு
சமர்ப்பணம் செய்தார் .மட்டுமல்லாமல் நோபல் பரிசை பெற்ற முதல் பெண்மணி என்ற பெயரும் பெற்றார்.உலகம் முழுக்க மேரியின் பெயர் எதிரொலிதது . எந்த ரேடியத்தை க்ண்டுபிடிக்க அவர் பாடுபட்டாரோ அதுவே அவரது உயிருக்கும் உலை வைத்தது .1934ம் ஆண்டு ஜூலை 4ம் நாள் இறந்து அந்த நாளுக்கு பெருமை சேர்த்தார்.

அவர் இறந்தபின் அவர் ரேடியத்துக்காக நிறுவிய பல்கலைகழகத்தின் முன் அவரது பிரம்மாண்ட உருவச்சிலை ஒரு பெண்னின் போரட்டத்தையும் அர்ப்பணிப்பையும் உயிர்தியாகத்தையும் பெருமை படுத்தும் விதமாக நிறுவப்பட்டது .

அந்த சிலையருகே ஒருநாள் வயதானவர் ஒருவர் வந்து கண்ணீர்மல்க கையில் ரோஜா பூவுடன் வந்தார் .. அவர் வேறு யாருமல்ல அந்தஸ்து காரணமாக திருமணம் செய்ய மறுத்த மேரியின் தன்னெழுச்சிக்கு வித்திட்ட மேரியின் முன்னாள் காதலர். க்ரீஸ்மிஸ் ச்ரோவ்ஸ்கி

No comments:

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...