June 20, 2021

அகிரா குரசேவாவின் ஆகச்சிறந்த நான்கு திரைப்படங்கள்

 


உலக சினிமாவில் நீங்கள் எத்தனை படம் வேண்டுமானாலும்  பார்க்கலாம் ஆனால் அத்தனை படங்களும் சொல்ல வருவதை குரசேவாவின் நான்கே படங்கள் மொத்தமாய் உங்களுக்கு கற்றுக்கொடுத்துவிடும்

குரசேவா இயக்கிய அவரது 29 திரைப்படங்களுள் காலத்தால் அழியாத மகத்தான காவியங்களாக ஐந்து  திரைப்படங்களை விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். மிகச்சிறந்த பத்துபடங்கள் என உலக சினிமாவின் எந்த ரசிகர் பட்டியலிட்டாலும் அவரது இந்த ஐந்து  படங்களில் ஏதவாது ஒன்று திரும்ப திரும்ப இடம்பெறும். அவை ரோஷ்மான் , செவன் சாமுராய் , இகிரு , ரெட் பியர்ட். டெர்ஜு உசாலா

இந்த ஐந்து தனித்தன்மை வாய்ந்த படங்களும் ஒன்றோடு ஒன்று முற்றிலும் மாறுபட்ட வகைப்பாட்டைச் சார்ந்தவை. இவற்றில் ரோஷ்மான், செவன் சாமுராய் இரண்டும் தொழில் நுட்பத்தின் அசாத்திய மேதமைகளை  உள்ளடக்கியவை. ரோஷ்மானின் விரிந்து அகன்ற காமிரா கோணங்களில் ஜப்பானிய நிலவெளிகள் நமக்குள் கற்பனைக் கெட்டாத  அமானுஷ்யத்தை முன்னிறுத்துபவை. மனித மனங்களின் இருண்மையை மட்டும் அவை போதிக்கவில்லை. காலமும் வெளியும் துண்டு துண்டாக சிதைக்கப்படும் போது உண்மையின் விசுவரூபத்தை வேறு வடிவத்தில் அனுபவமாக நம்  கண்முன் நிறுத்துகிறது . இந்த பிரம்மாண்டம் பேரிலக்கியங்களில் கூட காணப்பெறாதது. சினிமாவின் உச்ச பட்ச சாத்தியம் இதுதான். ரோஷமானில் பார்வையாளனும் ஒரு பாத்திரம் அவன்  உடல் இருக்கையில் இருந்தாலும் அவனும் படத்தின் ஒரு பாத்திரமாக  வெவ்வேறு காலத்தில் நுழைந்து உண்மைகளை அவனே  உள்வாங்குகிறான்/. பாத்திரங்கள் உளவியல் அவை பேசும் உண்மை ஒருபுறமிக்க  இயற்கை நம்மோடு பேசும் உண்மை வேறு ஒரு பிரம்மாண்டம் .  மரவெட்டி காட்டில் நடக்கும் போது மரங்களுக்கு நடுவே பயணிக்கும் சூரியனும் முதல் காட்சியிலும் இறுதிக்காட்சியிலும்  பிரம்மாண்ட வாயிலில் கொட்டும் மழையும் சொல்லும் உண்மைபேரிலக்கியங்களை தோற்கச்செய்ய வல்லது . சினிமா எனும் கலை ஏன் அனைத்து கலைகளினும் உயர்ந்தது என்பதற்கு ரோஷமானைவிட   சாட்சி வேறு எதுவும் இல்லை

 அதே போல செவன் சாமுராயில் பல காமிராக்களை கொண்டு படம்பிடிக்கப்பட்ட அதன் இறுதிக்காட்சியின்  படத்தொகுப்பு காலத்தை நம் முன் உறைவைத்து வெறும் கண்கள் முன் முப்பரிமாணத்தை திரையில் நிகழ்த்திக்காட்டுபவை. குதிரைகள் திரையிலிருந்து நம் கண்களை கடந்து மூளைகளுக்கப்பால் தடதடக்கும் பிரமிப்பை உண்டாக்குபவை.

 


அதே போல இகிருவும் ரெட் பியர்டும் உணர்வு ரீதியாக பெரு இலக்கியங்களின் சாதனையை அகத்தே கொண்டவை. ரெட் பியர்டில் பாலியல் தொழிலுக்கு பலியான சிறுமியை இளம் மருத்துவன் மீட்கும் காட்சி உலக சினிமாவின் அழுத்தமான தடம். சினிமா இலக்கியத்தை காட்டிலும் உண்னதமானது என்று சொல்லவைக்கும் தருணம். படத்தில்  உடல்கள் படும் வேதனைகளின் முனகல்கள் மனித இருப்பின் அவலத்தை நம்மிடம் முறையிடுகின்றன. அவற்றுக்கு சிகிச்சை செய்வது என்பது இறைவனை கடந்து செல்வது அல்லது இறைத்தன்மையை கடந்து செல்வது என்பதை மூத்த மருத்துவரான மிபுனே இளைய மருத்துவனுக்கு  விளக்கும் காட்சியில் வாழ்வின் மறுபக்கத்தை நமக்கு குரசேவா உணர்த்திவிடுகிறார். இதே போலத்தான் இகிருவில்   இறப்பதற்கு முன் இந்த உலகத்திற்கு  எதையாவது செய்துவிட வேண்டும் என விரும்பும் Kanji Watanabe பாத்திரமும் வாழ்க்கையில் நாம் செய்ய மறந்த காரியங்களை நமக்கு எச்சரித்து செல்கிறது.

இந்த நான்கு திரைப்படங்களையும் ஒரு சேர பார்க்கும் ஒருவன் இரண்டு விஷயங்களில் ஒரு சேர உயரத்தை அடைய முடியும். ஒன்று வாழ்வின் சகல உண்மைகளையும் அறியும் மேதமை, இரண்டு திரைப்படம் எனும் கலையின் உயர்ந்த கலா தரிசனம்.

இலக்கியம் கலை , தத்துவம் , உறவுகள் , ஆண்மீகம், காதல் என வாழ்க்கையின் அனைத்து பருண்மைகளிலும்  அவரது இந்த நானகு  திரைப்படங்கள் நமக்கு வாழ்வின் அனுபவத்தை உன்னத நிலைக்கு உணர்த்துகின்றன்  


ajayan bala

 

 

No comments:

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...