July 27, 2016

கைக்கூப்பு., பணிவு.,விடையாற்றி ,வழியனுப்பு..ஞானக்கூத்தன் அஞ்சலி . ;





ஞானக்கூததன் நவீன கவிதைக்குள் மரபை இறுக்கி பிடித்தவ்ர்
அவர் அணிந்திருக்கும் கண்னாடி கூட அவர் மரபின் செறிவான் குருத்து என்பதை சொல்லும் பற்றாகுறைக்கு ஜிப்பா வேறு . இலக்கியத்துள் அப்போதுதான் ஜீன்ஸ் பேண்ட் நுழைய ஆரமப காலம். ஆனாலும் ஜிப்பா ஆசாமிகள் எண்ணிக்கையே அதிகமிருந்தது. அவர்களிடம் நெருங்கவே முடியாது . இப்படியாகத்தான் ஞானக்கூத்தன் ஜிப்பா இலக்கியவாதியாக எனக்கு அறிமுமானார் .

இப்படி மரபான் ஆசாமியாக இருந்தாலும் கவிதைக்குள் ஒரு புதிய வெளியை புதிய ஜன்னலை காண்பிப்பவராகவும்  தமிழ் நவீன்  இலக்கியத்தின் அழுத்த்மான  அடையாளங்களூல் ஒருவராகவும் விளங்கினார். இந்த இரண்டு எல்லைகள் தான்  ஞானக்கூத்தன் கவிதைகளும் .
. வசன கவிதையில்  பாரதி புதுமை பித்தனுக்கு பிறகு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியவர் . இருண்மை இறுக்கம் மிகுந்த நகுலன் பிரமிளுக்கு பிறகு எளிமையான வரிகளில் நவீன தமிழ் இலக்கியத்தை கவிதை மூலமாக உயரத்துக்கு கொண்டு சென்றவர்.  .அன்று வேறு கிழமை , சூரியனுக்குப் பின் பக்கம் , கடற்கரையில் சில மரங்கள். மூன்று தொகுப்புகள் வெளி வந்துள்ளன. கசடதபற காலத்தில் அவர் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது..பாடைக்கு கீழே  தூக்கிச்செல்லும் கால்களுக்கு நடுவே சிக்கி உதைபடும் நாய் போன்ற  வலுவான காடசி படிமங்கள் அவரது பலம்.  பல வருடங்களாக அவரை கூட்டத்தில் சந்தித்த போதும் நெருங்கி பழகியதில்லை . 2003ல் சாகிதய் அகாதமி சார்பில் காதி பவனில் பாலச்சந்நிரன் சுள்ளிக்காடு பங்கேற்ற நிகழ்வில் வெங்கட் சுவாமிநாதன்தான்  என்னை  ஞானக்கூத்தனுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.  அச்சமயம் ஆங்கில தேசிய வார ஏடான வீக் இந்தியாவின் சிறந்த வளரும் எழுத்தாளர்கள் 20 பேர்களில் என்னையும் ஓருவராக தேர்வு செய்து புகைப்படத்துடன் சிறு கட்டுரையுமா வெளியிட்டிருந்தது.  அதைச்சொல்லி பின்னால பெரியாளாவப்போறார்னு வீக்லயே சொல்லிட்டான்  இப்பவே அறிமுகம்  செஞ்சிக்கோங்க  என நக்கலாக  கூற அதன் பிறகு ஞானக்கூத்தனும் என்னை விசாரித்து அறிந்து கொண்டு பிறகு காணும் போதெல்லாம் சினிமா பணிகள் குறித்து விசாரிப்பார். பாரதிருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில்  பத்து வருடங்களுக்கு முன் அவருக்கு விளக்கு விருது வழங்கப்பட்ட நிகழ்வில் ஆற்றிய ஏற்புரை நெடு நாள் என் நினைவில் நின்றது. சங்கம் என்ற பெயரில் நண்பர்களுடன் கேர்ந்து இலக்கியகூட்டங்களை அய்யப்ப மாதவனின் கோடம்பாக்கஸ்டுடியாவில்  நடத்திக்கொண்டிருந்தோம். அப்போது பெண் கவிகள் அதிகமாய் எழுத துவங்கிய நேரம். ஏழு பெண்கவிஞர்களின் நால்களுக்கான விமர்சனகூட்டத்திற்கு தலைமை ஏற்க அழைத்திருந்தேன் வந்து சிறப்புரை  ஆற்றினார். பல வருடங்களுக்கு பிறகு  கடைசியாக இந்த புத்தககண்காட்சியில் விருட்சம் அரங்கில் பார்த்தபோது சினிமா வாழ்க்கை குறித்து விசாரித்தார்.. தமிழ்×சமஸ்கிருதம் சார்ந்து அவர் நிலைப்பாடுகள் மேல் பல விமர்சனங்கள் உண்டு .. காலத்தின் சாட்சியாக கீழ்வெண்மணி ஆகிய கவிதைகளும் எழுதியவர் என்பதையும் நினைவில்கொள்ளவேண்டும்.
இன்றைய  வெளிப்படை கவிதைகளின் முன்னாடி அவர். அன்னாருக்கு  கைக்கூப்பு., பணிவு.,விடையாற்றி ,வழியனுப்பு... கீழே அவரது புகழ் பெற்ற கீழ் வெண்மணி கவிதை.

கீழ்வெண்மணி

மல்லாந்த மண்ணின் கர்ப்ப
வயிறெனத் தெரிந்த கீற்றுக்
குடிசைகள் சாம்பற் காடாய்ப்
போயின

புகையோடு விடிந்த போதில்
ஊர்க்காரர் திரண்டு வந்தார்

குருவிகள் இவைகள் என்றார்
குழந்தைகள் இவைகள் என்றார்
பெண்களோ இவைகள்? காலி
கன்றுகள் இவைகள் என்றார்

இரவிலே பொசுக்கப்பட்ட
அனைத்துக்கும் அஸ்தி கண்டார்
நாகரிகம் ஒன்று நீங்க

_ ஞானக்கூத்தன்

No comments:

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...