February 5, 2016

திரைக்கதைகளின் காட்பாதர்

  ராஜ் மோகன் எழுதி நாதன் பதிப்பக்ம் மூலமாக வெளியான தமிழ் மொழிபெயர்ப்பு காட்பாதர் திரைக்கதைக்கு நான் எழுதிய முன்னுரை                            

                                                                                       நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போலத்தான் நன்மையும் தீமையும் உல்கத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறது.  ஆனால் இவை இரண்டுமே அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களை பொறுத்தே மாறுபடுகிறது.
தங்களுக்கு சாதகமாக இருப்பவை நன்மை என்றும்  சாதகமற்றவை தீமை என்றும் கருத்தக்கம் கொண்டு அதிகாரவர்க்கத்தினர் இயங்குவதால் அத்னால் நசுக்கப்படும் எளிய மனிதர்கள் , சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்ப்வர்கள் .. தங்களை வாழ்வித்துக்கொள்ள அதிகார வர்க்கத்தினருக்கு எதிரான மாற்று சக்திகளை உருவாக்க் முயல்கிறபோது ..வன்முறையும் களவும் கொள்ளையும் தவிர்க்கமுடியாத காரியாங்களாகிப்போகிறது.
அதிகாரத்தை அதிகாரத்தால் எதிர்கொள்ளும் இவர்கள் சிலர் இந்த சிந்தாந்தங்கள் குறித்து எதுவும் தெரியாமாலேயே கொலைகாரர்களாகவும் கொள்ளைகாரர்களாகவும் திருடர்களாகவும் இயங்கி கடைசி வரை நிழல் உலக வாழ்க்கையை வாழ்ந்து மடிந்து போகின்ற்னர். இவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களும் இறுதிவரை நிம்மதியிழந்து வாழ்வின் ஜீவ சாரத்தை முழுமையாக அனுபவிக்க  முடியாமல்  காவல் நிலையம் சிறை நீதிமன்ற்ம் எனற வட்ட்த்துக்குள் சிக்கி குற்றச்வுணர்ச்சியை பரிசாக பெற்று வாழ்வை முடித்துக்கொள்கின்ற்ணர்.
உலகில் இவர்க்ளுக்கான அறத்தை பேசி அதை இலக்கியமாக்கியவர் நீட்ஷே அத்னாலேயே கடவுள் இறந்துவிட்டார் எனும் அவருடைய கூற்று புகழ்மிக்கதாக இருந்த்து. நீட்ஷே வுக்கு பிறகு ஜெனெ இலக்கியரீதியாக் இந்த கருத்தாக்கத்துக்கு மதிப்புகூட்டினாலும் காட்பாதர் உல்க அளவில் இதை அங்கீகாரப்படுத்தியது.
காட்பாதருக்கு பிறகுதான் கெட்டவர்களுக்கான அறம் சமூகத்தில் ஒரு மதிப்பீட்டை  பெற்றது. நாயகன் கெட்டவ்னாக இருக்கும் ப்டங்கள் அங்கீகாரம் பெற்றன . அமிதாப்பும் ரஜினியும் இவர்களது பிரதிநிதிகளாக உருவெடுத்தார்கள் .ஏழ்மைதான் இவர்களை இப்படி ஆக்குகிறது என்பதை மக்களும் இதன்பிறகுதான் புரிந்துகொள்ள துவங்கினர் .
 
காட்பாதர் செய்த மகத்தான் சாதனை இதுதான் . என்னதான் அது சினிமா எனும் கலையை மேம்படுத்தினாலும் அது த்துவார்த்த ரீதியாக தீமையின் பிறப்பிட்த்தை பற்றிய நியாயத்தை பேசி அத்ற்கு கலைக்கான அந்தஸ்தை உலகம் முழுக்க  உருவாக்கியதும் அடையாளப்படுத்தியதும்தான் அத்ன் உலக சாத்னை .
இன்றும் உலகின் மிகச்சிறந்த படங்களின் பட்டியலில் குரசேவா பெலினி கோதார்ட் பெர்க்மன் படங்களைபோல  கமர்ஷியல் படமான காட்பாதருக்கும் ஒரு இடம் கிடைத்துள்ளது என்றால் அத்ற்கான் முழுமுதல் காரணமும் மேற் சொன்ன காரணங்கள் தான்

காட்பாதர் மரியாபூசோ நாவலாக எழுதியபோது ச்வாதாரண த்ரிலராகத்தான் இருந்த்து. ஆனால் அது இலக்கியமானது அத்ன் திரைக்கதை மூலமாக்த்தன்
அத்த்கைய திரைக்கதையை தம்ழில் நாதன் பதிப்பகம் மூலமாக் கொண்டுவருவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வெகுநாளாக நான் முயற்சித்து நேரமின்மை காரணமாக முடியாது போன காரியத்தை நண்பர் ராஜ்மோகன் மிக குறைந்த அவகாசத்தில் திற்மையாகவும் முழுமையாகவும் நிறை வேற்றியிருக்கிறார்.
இந்த நூலை வாசிப்பது மக்கத்தான் இலக்கியத்தை வாசிப்பது போன்றது. ஒரு திரைப்பட நூல் என்பதை தாண்டி இத்திரைக்கதை மனித வாழ்வின் சூட்சுமங்களை கண்டறிய உதவும் கையேடாகவும் நமக்கு வாய்ப்புள்ளது.
திரைக்கதையின் நேர்த்தி கலையம்சம் என சில வார்த்தைகளை முழுமையான் அர்த்தம் இந்நூலை வாசிக்கும்போது நமக்கு விளங்கும்
மேலும் சிலர் இப்பட்த்தை நூறுமுறை பார்த்திருக்க்க்கூடும் .ஆனால் அப்போதும் புல்ப்ப்டாத ப்ட்த்தின் சில முக்கிய அம்சங்கள் இந்நூலை வாசிக்கும் போது புலப்ப்டக்கூடும்
த்மிழ் திரைப்ப்ட சூழலும், திரைக்கதை பயில்பவர்களுக்கும் , உல்க சினிமா ரசிகர்களுக்கும் , இலக்கியவாதிகளுக்கும்  நாதன் பதிப்பகத்தின்  மகத்தான் பரிசு  இந்நூல்
ராஜ் மோக்ன் கடும் உழைப்பாளி, இலக்கிய ஆர்வமும் திரைப்ப்ட்த்தின் மீதான் காதலும் கொண்டவர் . எதற்குமே மறுப்பு சொல்லாமல் முடியும் முடித்துவிடலாம் என நம்பிக்கையுடன் பேசுபவர். அதுபோலவே முடிக்கவும் கூடிய்வர் .
இரவு 9மணிக்கு மேல் நகரின் மால் தியேட்டரில் சென்று படம் பார்ப்பதிலும் திரும்பும் வழியில் சைக்கிளில் தேநீர் விற்பவனிடம் தேநீரை வாங்கி பருகியபடி சென்னையின் பின்னிரவை ரசித்த்படி வீடு திரும்புவதிலும் பெரு விருப்பம் கொண்டவர்.
அவரிடம் இவ்விஷ்யம் குறித்து நான் சொன்னதுமே உடனடியாக ஒப்புக்கொண்டு துரிதமாக காரியத்தை செம்மையாக நிறைவேற்றி தந்துள்ளார்
அவருக்கு இது முதல் நூல். அவருக்கு இந்நூல் பெருமை சேர்க்கும்
என் அன்பான வாழ்த்துக்கள் 

அஜயன் பாலா
ajayanbala@gmail.com
எழுத்தாளர் & பதிப்பாசிரியர்
நாதன் பதிப்பகம்
காட் பாதர் திரைக்கதை தமிழில் 
விலை : 200
நாதன் பதிப்பகம்
43/72 , கேப்டன் காம்ப்ளக்ஸ் 
காவேரி தெரு 
சாலிக்கிராமம் 
சென்னை 13  




No comments:

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...