June 16, 2011

யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் : செம்மொழி சிற்பிகள் : 5


ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியில் அச்சகங்கள் பல நிறுவினாலும் அவர்கள் ஆங்கில நூல்களை மட்டுமே அச்சாக்கிக்கொண்டிருந்த சூழலில் பாழும் ஓலைச்சுவடிகளில் கரையான் அரிக்க தமிழ் அழிந்துகொண்டிருந்தது. இதனைக்கண்டு வெந்து பொதும்பி பைந்தமிழ் இலக்கண இலக்கிய செல்வங்களை நூல்களாக பதிப்பிக்க வேண்டி அதன் பொருட்டு வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.உரைநடைத்தமிழின் முன்னோடி. வசனநடை வல்லாளர் என போற்றப்பட்டவர்... யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர்.

பிறப்பு :18-12-1822

இலங்கை யாழ்ப்பாணம்,நல்லூரில் பிறந்தவர் .
தந்தை ஞானப்பிரகாசசுவாமிகள் மரபிலே வந்த கந்தசாமிபிள்ளை ,தாயார் சிவகாமி . சகோதரர் நால்வர் உட்பட பரம்பரையே தமிழ் அறிஞர் குடும்பம் சிறுவயதில் தந்தை இறந்துபட அவரது மூத்த தமையனாரின் ஆலோசனையின் பேரில் சுப்ரமணியபிள்ளை மற்றும் சேனாதிராச முத்லியார் ஆகியோரிடம் மூதுரை மற்றும் நிகண்டு ஆகியவற்றை தெளிவுற கற்று தமிழை தன் ஊனில் ஊனாக கரைத்துக்கொண்டார்.பின் இக்காலத்தில் யாழ்ப்பாணம் மெதடிஸ்ட் கல்லூரியில் ஆங்கிலபாடம் கற்று இருமொழி வித்தகனாக மாறினார். அக்கல்ல்லூரியிலேயே ஆசிரியராக பொறுப்பும் ஏற்றார். இக்காலத்தில் சைவமும் தமிழும் ஒன்றெனக்கண்டு கொண்ட நாவலர் டிஸம்பர் 31 1847ல் வண்ணார்பண்னை வைத்தீஸ்வரன் கோவிலில் தனது முதல் சொற்பொழிவை நடத்தினார்..பின் சைவ தொண்டு நிமித்தம் ஆசிரிய பணியிலிருந்து தன்னை முழுவதுமாக விடுவித்துக்கொண்டு அதே வண்ணார்பண்ணையில் பாடசாலை ஒன்றை உண்டாக்கினார். பாடசாலைகளுக்கு சைவத்தில் புத்தகங்கள் தேவையாக இருந்தது. இதனால் ஓலைச்சுவடிகளில் இருந்த இலக்கியங்களை அச்சாக்குவதன் பொருட்டு சென்னையில் ஒரு அச்சுக்கூடம் ஒன்றை வாங்கவேண்டி தமிழகம் வந்தார்.

திருவாவடுததுறை ஆதினத்தில் இவர் நிகழ்த்திய சொற்பொழிவை கண்டு வியந்து அங்கு இவருக்கு நாவலர் எனும் பட்டம் வழங்கப்பட்டது. அதன்பிறகு தமிழ்நாடு முழுக்கவும் சொற்பொழிவாற்றி தமிழையும் சைவத்தையும் செழிக்கசெய்தார்.. சென்னை தங்க சாலைதெருவிலும் யாழ்ப்பணத்திலும் தமிழுக்கென தனித்த அச்சகங்களை நிறுவி எண்ணற்ற ஓலைச்சுவடிகளை நூலாகபதிப்பிக்கதுவங்கினார்.. சூடாமணி, நிகண்டு , நன்னூல்,பெரியபுராணம், திருவாசகம் ,திருக்கோவையார்,பாலபாடம் ,ஆத்திச்சூடி,மற்றும் கொன்றைவேந்தன் போன்ற அரிய தமிழ் செல்வங்களை புத்தகமாக்கினார். சிதம்பரத்தில் ஒருபாடசாலை ஒன்றையும் தோற்றுவித்தார்.

இதேகாலகட்டத்தில் தமிழகத்தில் வள்ளலார் என அனுப்டன் அழைக்கப்பட்ட இராமலிங்க அடிகளார் இயற்றிய அருட்பா கோவில்களில் பாடப்பட அதனை எதிர்த்து அவை அருட்பாஅல்ல மருட்பா என வாதிட்டார்.ஆனால் அது வழக்காடுமன்றத்தில் தோல்வியுற்றபின் வேத்னைமிக்கவராக யாழ்ப்பாண்ம் திரும்பி தன் சைவைத்தொண்டை தொடர்ந்தார். வர்ணாசிரம தர்மத்தை அவர் ஆதரித்த காரணத்தால் காலத்தில் அவர் கருத்துக்கள் பிற்போக்குதன்மையுடையதாக கருதப்பட்டன. எனினும் தமிழுக்காக அவ்ர் ஆற்றியதொண்டுகாரணமாக வரலாற்றில் இன்னமும் அவர் பெயர் நிலைத்திருக்கிறது

இறப்பு ;05-12-1879

1 comment:

உலக சினிமா ரசிகன் said...

வரலாற்று நாயகர்களை அழகுத்தமிழில் வார்த்தெடுக்கும் உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்.
நல்லசினிமா பற்றி அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பரே...

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...