November 22, 2011

வெ.ஸ்ரீராம் : காலத்தின் மொழி தச்சன்

வெ. ஸ்ரீராமை ஒரு நாள் சாலிக்கிராமத்தில் பார்த்தேன் காலை நேரம் வாக்கிங் போய்க்கொண்டிருந்தார். சட்டென உள்ளுக்குள் ஒரு அதிர்வு. அவசரமாக அவருக்கு பதட்டத்துடன் முகமன் செய்தேன். அவருக்கு என்னை தெரிந்திருக்குமோ தெரியாது. முழுமையான் அறிமுகம் இல்லை.அவரது முகம் உதிர்த்த புன்னகையில் ஆச்சர்யம் யோசனை எதுவும் இல்லை.  என்னடா , இத்தனை காலையில் மெனக்கெட்டு நமக்கு ஒருத்தன் சலாம் போடுகிறனே யார் அவன் என்ன செய்கிறன்…துளி விசாரணை ..ம்ஹூம் ….வெறுமனே கடந்து கொண்டிருந்தார். நானாக இருந்தால் ம்ம்…. இப்ப என்ன செய்யறீங்க என தெரிந்தார் போல எதையாவது கேட்டு என் ஒளிவட்டத்தின் ஆரத்தை கணகெடுத்துவிட்டிருப்பேன் . ஆனால் அவரோ எனக்கு முதுகு காண்பித்தபடி தொலைவில் அமைதியாக சென்று கொண்டிருந்தார். ஒருவேளை என்னை அவருக்கு தெரிந்தும் தெரியாதவர் போல..பேசுவதால் எந்த பலனும் இல்லாதவராக யோசித்து கடந்து போயிருக்கலாம் உண்மைதான் .அவரது படைப்புகளை போல முழுவதும் அகவயமாக எந்த கோரிக்கையும் இல்லாமல் எழுதுவதோடு நம் பணி தீர்ந்தவராக ஸ்ரீராம் பொது வெளியில் சூழலில் இருந்து வருகிறார். . அன்று காலை உடனே வந்து முகநூலில் ஓரு நிலைசெய்தியை போட்டேன்.சிலர் விருப்பமிட்டிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் நான் எதை போட்டாலும் விருப்பக்குறியை தட்டுபவர்கள்.அதற்கு என்மீதான அன்பும் அக்கறையும் காரணம். ஒருத்தர் அவர் இனிஷியல் பிசி தானே ஏன் இப்படி தவறாக போட்டிருக்கிறீர்கள் என ஆலோசனை சொன்னார். அப்பாடா வெ. ஸ்ரீராமை இன்னமும் பலர் தெரியாமல் இருக்கிறார்கள் .அந்த மட்டுக்கு உலகம் நிதானமாகத்தான் சுற்றுகிறது என்றும் மனம் ஆசுவாசப்பட்டது. ஆனாலும் மனம் அத்தோடு நிலைகொள்ளாமல் சற்று நேரம் அவரைகுறித்து ஆழமாக யோசிக்க வைத்த்து. ஸ்ரீராமின் படைப்புகள் மொழிபெயர்ப்புகள்தான் என்றாலும் அந்த மொழிபெயர்ப்புகள் சமூகத்தில் எந்த தளத்தில் வேலை செய்கின்றன என்பது மிகவும் குறிப்பிடதகுந்தது. அதன் முக்கியத்துவம் எத்தகையது என்பதை அறிய இலக்கியவாதியை விட ஒரு ஒரு சமூகம் மற்றும் மொழியியல் அக்கறையுள்ள மாணவனாக இருந்து பார்க்கும் போது அந்த படைப்புகளின் கனபரிமானத்தை ஓரளவு புரிந்துகொள்ள முடியும். சமூகத்தின் சிந்தனா ஓட்ட்த்தை அதன் பிரக்ஞையை தீர்மானிக்கும் சக்தியாக கருதப்படும் எழுத்துமற்றும் காட்சி ஊடகம் சார்ந்த நபர்களின் ஆதார சக்தியாக விளங்குவது அம்மொழியின் இலக்கியவாதிகளும் அவர்களது படைப்புகளுமே. உள்முகமாக இயங்கும் தீவிரமான சில புத்திளைஞனின் தேடல் அதன் மூலமாக வெளிப்படும் கவிதையின் ஒரு வரி அல்லது கதையினூடாக அவன் முன் வைக்கும் புதிய பார்வை பரவலான ஊடகபிரதிநிதிகளும் இலக்கிய வாசிப்பாளர்களாலும் தூண்டப்பட்டு சமூகத்தின் சிந்தனா ஓட்டமாக ஊடகங்களால் முன்னெடுத்து செல்லப்படுகிறது. அப்படியாக சமூகத்தினது காலத்தின் சக்கரங்களாக சுழலும் ஊடகங்களின் முன்னகர்வுக்கு சமுகத்தின் அதிகம் அறியப்படாத ஒரு நவீன எழுத்துக்காரனின் படைப்புலகம் எரிசக்தியாக இருந்து இயக்கிவருகிறது . இப்படியான நவீன எழுத்துக்காரர்கள், வெகுஜன ஊடகங்களில் அறியப்ப்டாதவர்கள். பெரும்பாலும் இளைஞர்கள் .பெரும் வேட்கையுடனும் கனவுகளுடனும் அலைந்துதிரிபவர்கள். இவர்கள் புழங்கும் வெளியில் மூத்தபடைப்பாளிகளும் அதிகம் ஆனால் அவர்கள் காலத்தால் இறுகிபோனவர்க்ள்.அவர்களது படைப்புகள் பெரும்பாலும் சூழ்லின் பிரதிபலிப்பாக இல்லாமல் அறிவின் பிரதிமைகளாக மட்டுமே வெளிப்படுகின்றன இச்சூழலில் இத்தகைய நவீன் எழுதுக்காரர்களின் கவிஞர்களின் வாசிப்புலகிற்கு பெரும் தீனியாக இருப்பது கவிதைகளை கடந்து மொழிபெயர்ப்பு நூல்கள் தாம். சிறந்த மொழிபெயர்ப்புகள் காலத்தால் பழையதன்மையை ஒரு போதும் அடைவதில்லை.இத்தகைய மொழிபெயர்ப்புகள் அடங்கிய காகிதங்களை வெறும் கழுதையை போல செரிமானித்துக்கொள்ளும் இளைஞன் தனது படைப்புகளில் புதிய வாசனையை தடவுகிறான்.புதிய பார்வையுடன் அரசியலை அணுகுகிறான், வழக்கமான வார்த்தைகளை மாற்றி போட்டு வாசிப்பனுபவத்தில் புதுமையை பாய்ச்சுகிறான் . அந்த புதுமை ஊடக்க்காரனுக்கு கைமாற்று செய்யப்பட அதன்மூலம் அறிவின் மின்சாரம் பாய்ச்சபெறும் ஊடகக்காரன் பெருவாரியன வாசகர்களை நோக்கி தன் அலுவலகத்தில் புதிய பார்வைக்ளையும் வார்த்தைகளையும் எடுத்துசென்று சுவையான செய்திகளினூடே அவற்றை இட்ம் கொண்ட இடத்தில் சேர்த்துக்கொள்கிறான். சதா காலத்தில் புதுமையை எதிர்நோக்கும் சமூகம் கழுதையாக அதனை மென்று புதியவாசனையை செரிமானித்து இன்னுமொரு புதிய காலத்துக்கு தன்னை தயார்படுத்துகிறது. இந்த சுழல் சக்கரத்தில் முதல் பணீயாளனாக செயல்படும் மொழிபெயர்ப்பாளன் பெரிய வெகுமதிகளை அடையாளங்களை பெறுவதில்லை ஆனாலும் அவனது பங்கு மகத்தானது. அப்படிபட்ட மகத்தான் பங்களிப்பை செய்த முதன்மையானவர் வெ. ஸ்ரீராம் அவரை எந்த கூட்டத்திலும் பிரசங்கிக்க கேட்டதில்லை. எப்போதாவது அலையன்ஸ் பிரான்செ நடததும் பிரெஞ்சு திரைப்பட காட்சிகள் அல்லது நாடகம் மற்றும் இலக்கிய கூட்டங்களில் அறிமுகமாக சில எளிய உரைகளை அவர் நிகழ்த்த கேட்டதோடு சரி. சம்பளத்துக்கு உண்மையாக இருக்கும் ஒரு வாத்தியாரின்.... கல்லூரி பேராசிரியரின் தன்மை அதில் வெளிப்படும். சற்று கூன் விழுந்த தோற்றம்,மெதுவான குரல் பெண்மை கலந்த சுபாவம் என பல விதங்களில் சுஜாதாவை நினைபடுத்தும் ஸ்ரீராம் எப்போதும் சட்டையை இன் பண்ணி இறுக்கமான பெல்ட்டையும் அணிந்திருப்பார். அவர் அணிந்திருக்கும் பெரும்பாலான சட்டைகள் கோடுபோட்ட்வை. கோடு பொட்ட சட்டைகள் அணிபவர்கள் பெரும்பாலும் அறத்தின் பிரதிநிதிகளாகவும் கட்டம் போட்ட சட்டை அணீபவர்கள் எதிர் கலாச்சாரம் அல்லது புதுமை விரும்பிகளாக இருப்பதாகவும் நானாக ஒரு ஆய்வு செய்து கண்டுபிடித்து வைத்திருக்கிறேன் . எனது ஆய்வின் படி ஸ்ரீரம் ஒரு அறம் சார்ந்த் பண்பினர். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை தவிர வேறெதையும் செய்ய துணீயாதவர்.அவரது மொழி பெயர்ப்பு நூல்கள் கூட ஏதோ ப்ராஜக்ட் வொர்க்தானோ என எண்ணுமளவிற்கு மதிப்பீட்டை உருவக்குபவர் .ஆனாலும் அவரது நூல்களை கடந்து வரும் ஒருவன் அந்த நூல்களின் தனிசிறப்புக்கும் வெற்றிக்கும் அவரது இந்த பொறுபுணர்ச்சியும் உழைப்பும் செயல்மீதான் அளவற்ற காதலும்தான் காரணம் என்பதை உணராமல் இருக்க முடியாது . . ஆல்பர்ட் கம்யூவின் அந்நியன் தான் அவர் மொழிபெயர்ப்பில் வெளியான முதல் நூல் . 1980ல் வெளியான் இந்நூலை நான் பதினன்கு வருடங்களுக்குபிறகு 1994ல் தான் படிக்க நேர்ந்தது.அக்காலத்தில்தன் என் தலைக்குமேல் சூரியன் வெளிச்சமிட துவங்கினான் . நினைப்புக்கும் நம் செயல்களுக்குமிடையில் கடந்து போகும் எத்த்னையோ மன ஓட்டங்களை நாம் பொருட்படுத்துவதில்லை. பெரும்பாலும் நமது அகசிந்த்னைகள் நமக்குள்ளாகவே முடங்கிவிடுகின்றன . பொதுவெளிக்கு அந்நியமாக தெரியும் நமது எண்ண்ங்களை நம் செயல்படுத்துகிறபோது அவை அபத்தங்களாக அறியப்படுகின்றன, பொது வெளியின் அர்த்தங்களுகேற்ப நம் நடத்தைகளை ஒழுங்கு செய்வதில் மட்டுமே நாம் கவனம் கொள்வதால் பெரும் பாலும் நாம் நம் எண்ணங்களுக்கு துரோகமிழைப்பவர்களாகவே நடந்து கொள்கிறோம். அதிகாரமும் நெருக்கடியும் நிறைந்த ஒரு சமூகத்தில் இவை மனிதனை மிகவும் செயற்கைதன்மை மிக்கவனாகவும் அதிகாரத்தின் அடிவருடிகளாகவுமே மாற்றிவிடுகின்றன. இவற்றிலிருந்து தப்பிக்க விழைபவனே முழுமையான மனிதனாக இருக்கிறான் . அறியப்பட்ட விதிகளுக்கு புறம்பாக அவன் நிகழ்த்தும் ஒவ்வொரு காரியங்களும் இதர மனிதர்களுக்கு அபத்தமாக தெரிந்தாலும் அவன் முழு சுதந்திரமுடையவனாகவே தன்னை உணர்கிறான் . அந்நியனில் வரும் மெர்சோ இப்படியாகத்தன் நடந்துகொள்கிறான் . தன் அம்மா இறந்தால் அழாமல் இருக்கும் ஒருவனை பார்த்து இந்த சமூகம் பெரும் வியப்புடன் பார்க்கிறது. ஆனால் அவனால் அழமுடியவில்லை . அதற்கான் காரணமும் அவனிடமில்லை.இந்த நாவலை படிக்கும் போது இச்சந்தர்பத்தில் சமூகம் நம்மீது அழுத்தியுள்ள போலியான் பாவனைகள் நம்மிடமிருந்து தானாக உதிர்வதையும் மேலும் உயிருள்ளவனாக.. எண்ணங்களில் மிகபெரிய சுதந்திரம் கொண்டவனாகவும் நம்மை உணர முடியும் . காம்யூவின் வெற்றி இதுதான் என்றாலும் இந்த உணர்வையும் தத்துவத்தையும் முழுமையாக அறிந்துகொள்ளாத ஒருவரால் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டிருக்குமானால் வெறும் சாரமற்ற சக்கையான ஒரு பதிப்பாகவே வெளியாகியிருக்கும் இன்று நம்மிடம் உள்ள பல மொழி பெயர்ப்புகள் அப்படியாகத்தான் உள்ளன.இதுவரையிலான மொழிபெயர்ப்புகள் அனைத்திலும் அந்நியன் சிறந்த மொழிபெயர்ப்பு நூலாக பரிணாமம் பெறுவதற்கான காரணங்களும் இதுதான் . இதுமட்டுமல்லமல் தமிழ் சூழலில் தீவிரமான அறிவுத்தேடல் கொண்ட ஒருவன் கடைசியாக சென்றடையக் கூடிய இடமாகத்தான் அவரது இதர நூல்களும் அறிவுத்தளத்தில் மிக முக்கிய பங்களிப்பை செய்து வருகின்றன மதன கல்யாணி என்பவருடன் இணைந்து அவர் மொழிபெயர்த்த 81ல் வெளியான அந்த்வாந்த் எக்சுபரியின் குட்டி இளவரசன் எனும் சிறு நூல் அவரது மிகசிறந்தபங்களிப்பு. தமிழ் தலையணை நாவல்களை பகடிசெய்யவேண்டுமானால் அவற்றை இச்சிறுநூலின் அரூகில் வைத்து பார்த்தாலே போதுமானது. அந்த நூல் அந்த தடிமனான நாவல்களின் வண்டி வண்டியான வார்த்தைகளை மிக சுலபமாக ஓடையில் ஜம்ப் செய்வது போல ஒரு எட்டில் தாண்டிவிடுகிறது. மனிதனின் அகங்காரங்களை எல்லாம் எள்ளி நகையாடும் இந்நூல் அற்ப விடயங்களின் ரகசியத்தையும் பொருள் தேடும் மனித வாழ்வின் அர்த்தமற்ற தேடல்களையும் நம் கண்முன் நிறுத்தி குட்டி இளவரசனாக நாம் மாறிவிட பெரும் ஏக்கத்தை உண்டாக்கிவிடுகிறது. தஸ்தாயேவெஸ்கியின் வெண்ணீற இரவுகளுக்குபிறகு மிகவும் போற்றி பாதுகாக்க கூடிய நூல் இது. பலமுறை நான் குட்டி இளவரசனை வாங்குவதும் .. நண்பர்கள் என் அலமாரியிலிருந்து திருடிச்செல்வதும் , நான் வேறு நண்பர்களிடமிருந்து எடுத்துவருவதும் சில சமயங்களில் தொலைப்பதுமாக எனக்கும் இளவரசனுக்குமான உறவு இப்பவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது . இப்போது என் அலமாரியில் இந்த கட்டுரைக்காக தேடியபோது கூட அந்நூல் காணக்கிடைக்கவில்லை. மேற்சொன்ன இரண்டு நூல்களையும் விட தமிழ் சூழலுக்குள் மிக அதிகமான பாதிப்பை உண்டக்கியது வெ ஸ்ரீராமின் சிறு மொழிபெயர்ப்பு நூல். ழாக் பெரவரின் சொற்கள் எனும் அந்த மொழி பெயர்ப்பு கவிதை நூல் இன்றைய தமிழ் கவிதை சூழல் அடைந்திருக்கும் பெருமாற்றத்திற்கு மிக முக்கிய பங்களிப்பை செய்திருக்கின்றன . இதை நான் மட்டும் சொல்லவில்லை . தமிழ் சூழலின் பல முன்னணி கவிஞர்களே என்னிடம் பலமுறை இதை குறிப்பிட்டுள்ளனர். பின் நவீனத்தின் அழுத்தமான பாதிப்பில் இருந்த 2000க்குமுன்பான தமிழ் கவிதைகள் பெரும்பாலும் இருண்மையையும் அவநம்பிக்கையையும்,இருப்பின் மீதான் கேள்விகளையும்மட்டுமே உள்ளடக்கியதாக இருந்தன. ரமேஷ் பிரேம், மனுஷ்ய புத்திரன் யுவன் சந்திரசேகர் யூமா வாசுகி ,போன்றோர் மட்டுமே அதிகமாய் எழுதிவந்த காலம் அது. 2000க்குபிறகு தமிழ் சூழலில் நிகழ்ந்த பொருளாதரா மற்றங்கள் காரணமாக நகர வாழ்க்கை பெரும் பாய்ச்சலை சந்தித்துகொண்டிருந்த காலத்தில் நகரம் புதிய் ஆடைகளை அணியதுவங்கியது. உடன் இலக்கிய சூழலிலும் நகரவாழ்க்கை சம்பந்தப்பட்ட பல கவிஞர்கள் உருவாக துவங்கினர். அப்படிப்பட்டவர்களுக்கு மேலும் சுதந்திரத்தை தந்து அவர்களுக்குள் கற்பனையின் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய பெருமை சொற்கள் தொகுப்புக்கு கணீசமாக உண்டு. வானத்திற்கு கீழ் உள்ள அனைத்தையும் கவிதையாக்கும் அவர்களது திறன் தமிழ் சூழலுக்குள் பெரும் பய்ச்சலை உண்டக்கியது . இப்படியாக வெ ஸ்ரீராமின் படைப்புகள் ஒவ்வொன்றும் காலத்திற்கு தக்கன பல மறுதல்களை தமிழ் சூழலில் உருவாக்கிகியுள்ளதையும் பல படைப்புகளுக்கு உந்து சக்தியாக அது இருந்திருப்பதையும் காலத்தின் சாட்சியாளணாக என்னால் துல்லியமாக உணரமுடிகிறது இத்தனைக்கும் காரணமாக இருப்பது அவர் மூல படைப்பின் மீது கொண்டிருக்கும் கற்பு சார்ந்த மதிப்பும் ,மொழியின் மீதான ஆளுமையும். படைப்பு தொழிலின் மீதான நேர்மையும் நம்பிக்கையும் மட்டுமே ஆகும் . நன்றி : நேர் காணல் இலக்கிய இதழ்

October 29, 2011

லட்சம் பட்டாம்பூச்சிகள் பறக்கும் மனவெளி



சண்டே இண்டியன் இதழ் ரசிகன் எனும் நாயகிகள் குறித்த சிறப்பிதழுக்காக எழுதப்பபட்ட கட்டுரை,, கடைசி நேரத்திய பரபரப்பினூடே அவசரமாக எழுதப்படட்டது

கதைப்படி ஜூலியாராபர்ட்ஸ் ஒரு பாலியல் தொழிலாளி தனது வாடிக்கையாளனான ரிச்சர்ட் க்ரேவை முழுமையாக வசப்படுத்த வலுவாக ஒரு தந்திரத்தை கற்றிருந்தாள். அந்த தந்திரம்தான் அவனை தொடர்ந்து அவளுள் மயங்க வைத்துக்கொண்டிருந்தது. அந்த தந்திரம்தான் வெறும் பத்து நிமிடத்தில் முடியக்கூடிய அந்த உறவை பன்மடங்காக ஊதி பெருக்கி வைத்து படத்தின் இறுதிப்புள்ளி வரை இருவரையும் இறுக்கமாக கட்டியிருக்க வைத்தது .

அந்த திரைப்படம் ப்ரெட்டி வுமன். 1990ல் ஹாலிவுட்டில் வெளியாகி உலகம் முழுக்க ஓடி களைத்த படம். படத்தின் வெற்றிக்கு காரணமான அந்த தந்திரம் குழந்தமை கூடிய ஓரு சிரிப்பு .

காமத்தை உடலில் தேடிவிடலாம். ஆனால் அவள் கண்களுக்கும் அந்த சிரிப்புக்குமிடையிலும் ஒளிரும் அந்த குழந்தமையை அவன் எங்கு தேடுவான்?.

எண்ணற்ற வாசல்களும் கதவுகளும் அதில் திறந்துகொண்டேயிருக்க முடிவுறாத குழந்தமைதான் அவனது பயணத்தை உள்ளிழுக்கும் ஆற்றலாக பெரும் இயக்க சக்தியாக பின்னிருந்து செயல்படுகிறது. அவனை கவர்ந்திழுக்கும் உயிர்சக்திக்கு பின்னால் பல லட்சம் பட்டாம்பூச்சிகள் பறக்கும் ஒரு மனவெளி ஒரு பெண்ணிடம் தேவையாக இருக்கிறது. அந்த பட்டாம் பூச்சிகள் பறக்கும் மனவெளிக்குள் சஞ்சரிக்க முயல்வதுதான் ஆணின் தீராத வேட்கையாக காலம் காலமாக இருந்து வருகிறது.

அத்தகைய மனவெளி நிரம்பிய பெண்ணே சக்தி உமை தாய் என பல ரூபங்களில் ஆணை அலைக்கழிக்க வைப்பவளாக இருக்கிறாள். அன்றாட வாழ்வில் அத்தகைய பெண் மனவெளிகளை காண்பது அரிதாக இருக்கிறது. தஸ்தாயெவெஸ்கியின் நாஸ்தென்கா போல மோகமுள் யமுனா போல ப்ரெட்டி வுமன் ஜூலியாராபர்ட்ஸ் போல கை கொடுத்த தெய்வம் சாவித்ரி போல கதைகளிலும் கற்பனைகளிலும் மட்டுமே அது போன்ற மனவெளிகளை நம்மால் தரிசிக்க முடியும்.

ஆச்சர்யமூட்டும் வகையில் அப்படியான மனவெளிகள் சில நடிகைகளுக்கு இயல்பாகவே வாய்த்துவிடுகிறது. அல்லது ஒருவகையில் அத்தகைய மனவெளிகள் இருந்ததால்தான் அவர்கள் நடிகைகளாக பிராகாசிக்க முடிந்த்தோ என்னவோ.

.

மதுபாலா, நர்கீஸ், வைஜயந்தி மாலா, வகீத ரஹ்மான், பத்மினி, சரோஜா தேவி, ஸ்ரீதேவி மாதுரி தீட்சித் என ஒரு சில நடிகைகளின் வரிசையில் ... சிம்ரன் கண்களுக்கு பின்னால் அப்படியான லட்சம் பட்டாம்பூச்சிகளை சில படங்களில் ரசிக்க முடிந்தது..

முதன் முதலாக 1999ல் வெளியான வாலி படத்தில்தான் அவரையும் அவரது மனவெளியையும் தரிசிக்க முடிந்தது. அப்படத்தில் அண்ணன் தம்பியாக தோன்றும் இரண்டு அஜீத்களுக்கு நடுவே அவர் காட்டியது பதட்டமும் போலித்தனமும் அப்பாவித்தனமும் போன்ற ஒருவித நாடகம்தான் . சீசாவை திறந்ததும் சட்டென வந்து போகும் ஊறுகாயின் வாசம் போல தனக்குள் பொதிந்திருக்கும் குழந்தமையை லேசாக திரைவிலக்கி காண்பித்தார். கதைப்படி அண்ணன் தம்பி உறவையே மறக்கடிக்கும் கிளர்ச்சியூட்டும் அழகு அவரிடம் தேவை. உண்மையில் அவர் உடல் அப்படியானதாக சொல்லதக்கதாக இல்லை. குச்சி உடம்புதான். ஆனாலும் அவரது கண்கள் முகத்தில் காட்டும் ஒருவித காமத்தை தூண்டும் குழந்தமை இவைதான் அதனை சமன் செய்தது எனலாம்.
.


1974 ல் பஞ்சாப்பில் பிறந்து ரிஷிபாலா நவ்வாலாக வளர்ந்து அப்படியே பக்கத்துவீட்டில் அல்லது காலேஜ் போகும் போது அவர் யாரையாவது சைட் அடித்து எல்லோரையும் போல தக்க வயதில் குழந்தை பெற்று குத்துவிளக்காக மாறியிருக்க வேண்டியவர் அசந்தர்ப்பமாக ஹிந்தி பாடல்கள் போடும் தொலைகாட்சி நிகழ்ச்சியான சூப்பர்ஹிட் முகாப்லாவில் வர்ணனையாளராக வாய்ப்பு பெற்றார். அதை பார்த்த ஜெய்பாதுரி அமிதாப்பச்சன அவர்களது படமான தேரே மேரே சப்னே வில் திரையுலகத்துக்கு வரவழைத்தார். பிறகு நேருக்கு நேர் மற்றும் ஒன்ஸ் மோர் படங்கள் மூலமாக தமிழுக்கு அவர் அறிமுகமாகும் போது அவருக்கு வயது 22 ஆகிவிட்டிருந்தது. பல நாயகிகள் வீட்டுக்கு போகும் அந்த வயதில் ஒரே நாளில் இரண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான சிம்ரன் இரண்டு படங்களும் பெற்ற வெற்றியின் மூலம் தனக்கு அழுத்தமான முகவுரை எழுதிக்கொண்டார்.

தொடர்ந்து வெளியான ராசியான நடிகை என சினிமாவை தீர்மானிக்கும் மீரான் சாகிப் தெரு மனிதர்கள் திருவாய் மலர்ந்த்னர். பஞ்சாபி பெண் நலுக்கு சுலுக்காக இடுப்பை வளைக்கிறாள் என பத்திரிக்கைகளில் புகழ்ந்தனர். ஆனாலும் வாலி வந்த போதுதான் அனைவரும் அவரது அசல் திறமை கண்டு வியந்தனர். தொடர்ந்து கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும் , பார்த்தேன் ரசித்தேன், ஜோடி போன்ற படங்களில் அவர் திறமையான நடிப்பின் மூலம் தனகென ஒரு பிம்பத்தை கட்டமைத்துக்கொண்டார்.


அழகின் உச்சம் பெண்ணுடல் என்றால் அதன் மொத்த சிறப்பையும் சிம்ரனின் இடுப்பழகில் காண முடியும். இங்கே அழகு என்பது மலினமான உணர்விலிருந்து காவியத்தன்மையை நம்முள் கிளர்த்தும் மேன்மையான எழுச்சி. கஜூரோஹாவின் சிற்பங்கள் மிகைத்தன்மை கொண்டவையல்ல அவை உண்மையில் சாத்தியமானதுதான் என முதன் முதலாக என்னை நம்பவைத்த இடுப்பழகு சிம்ரனுடையது. குறிப்பாக யூத் படத்தின் ஒரே ஒரு பாட்டுக்க்கு மட்டும் அவர் ஆடிய களியாட்டம். அதை காளியாட்டம் என்றுகூட வர்ணிக்கலாம். அதில் அவரது ஒவ்வொரு உடல் அசைவும் நடனத்தின் மீதான அவரது உள்ளார்ந்த வேட்கையை
பிரதிபலிப்பவை. உடன் ஆடும் நாயகன் நடனத்துக்காக பேர் போனவர். ஆனாலும் அப்பாடல் முழுக்க சிம்ரனின் ஆதிக்கம் மட்டுமே நிலைத்திருந்தது . அதேபோல பிதாமகன் படத்தில் அவர் வந்து போன ஒரே ஒரு பாடலிலும் நடனத்தில் முழு அதிக்கத்தையும் செலுத்தியிருப்பார். உடன் நடித்த இரண்டு நாயகர்களையும் கடந்து அனைவரையும் கட்டிபோட்டது அவரது தீவிரமான நடனமே.

இந்த இரண்டு பாடலுக்குபின்னால் அவர்காட்டியிருந்த உத்வேகம் மனஎழுச்சி இவற்றை பற்றி சொல்லாமல் போனால் நிச்சயம் இக்கட்டுரை முழுமையடையாது.
அந்த அளவுக்கு தன் ஆற்றலை முழுமையாக பயன்படுத்தியிருந்தார்.

அதே சமயம் நடிப்பை பொறுத்தவரை அப்படி ஒன்றும் அவர் பிரமாதம் என சொல்ல முடியாது. சாவித்ரி, சரோஜாதேவி, பத்மினி, ஷோபா, ஸ்ரீதேவி ஆகியோர் முழுமையான நடிகைகள். நடிப்பு தொழில் அவர்களால் பெருமை கொள்ளும் வகையில் அவர்கள் தங்களது பங்களிப்பை திரைத்துறைக்கு அளித்துள்ளனர். ஆனால் சிம்ரன் அந்த வகையை சார்ந்தவர் அல்ல. அவர் நட்சத்திரம். பார்வையாளர்களை தனக்குள் முழுமையாக தக்கவைத்துக்கொள்ளும் சாகசம் அல்லது திறமை .. வாத்சல்யம் அவரிடம் நிறையவே நிரம்பி வழிந்தது. முந்திய பட்டியல் நடிகைகளை போன்ற காவியத்தன்மைகொண்ட பாத்திரங்கள் இவருக்கு வாய்க்கவில்லை. அப்படிப்பட்ட படங்களை இவர் தேடிச்செல்லவில்லை. உண்மையில் சிம்ரன் கொஞ்சம் யோசித்திருந்தால் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சில திரைக்கதைகளை அவர் தேர்ந்தெடுத்து நடித்து இன்னும் தனக்கு பெருமைகளை தேடிக்கொண்டிருக்க முடியும். ஆனால் கோவில்பட்டி வீரலட்சுமி ஒன்றே தனக்கு போதும் என் அவர் முடிவெடுத்துக்கொண்டார்.

இதுதான் சிம்ரனை அவர்களின் உயரத்துக்கு வளரவிடாமல் தடுத்துவிட்டது .

ஆனாலும் சிம்ரன் தான் ஏற்ற பாத்திரங்களுக்கு உண்மையாக இருந்தார். அதற்கு உயிர் கொடுத்தார். பாத்திரமாக மாறி பார்வையாளர்களை தன்னுடன் பதட்டபட வைத்தார். மேலும் சொல்லப்போனால் சாவித்ரியிடம் இருந்த பாத்திரங்களுக்குள் மயங்கிவிடும் தன்மை இவருக்குமிருந்தது. ஸ்ரீதேவி என்னதான் துள்ளலாக தனை மறந்த பட்டாம்பூச்சியாக நடித்தாலும் எப்போதும் அவரிடம் ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஒருவித பாதுகாப்புடன் அவர் பாத்திரங்களை பேலன்ஸ் செய்து நடித்தார். சரோஜாதேவி அவர்களிடமும் இது போன்ற நடிப்பை காண முடியும். ஆனால் சாவித்ரி, சிம்ரன் இருவரும் வேறு ரகம் சுதந்திரமாக அனாயசமாக நடிக்ககூடியவர்கள். இயல்பிலேயே அத்தகையதொரு சுபாவம் அவர்களிடம் இருந்தாலொழிய அப்படி ஒரு பாவம் அவர்களிடமிருந்து வெளிப்பட வாய்ப்பில்லை.
நடிகர்களில் ரஜினியை போல உடலில் தன்னியல்பு அதிகம் வெளிப்படும் நடிப்பு வகை.

இது போன்ற வகையினர் வெளிப்படையாக இருக்க கூடியவர்கள். தனி வாழ்வில் எதை பற்றியும் கவலைபடாதவர்கள். சிறிதளவு அன்பிலேயே பெரும் அருவியை காண்பவர்கள். துரோகத்தை தாங்க முடியாதவர்கள். இதனாலேயே பெரும் மன நெருக்கடிகளை சந்திப்பவர்கள். நல்லவேளையாக சிம்ரன் சரியான நேரத்தில் மண வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ்க்கையின் இரண்டாம் ஆட்டத்துக்கு தன்னை முழு தகுதியுடைவராக ஆக்கிக்கொண்டார்.


ஒரு முறை சமீரா டப்பிங் தியேட்டர் அருகே ப்ரியமானவளே படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த வீட்டுக்கு யாரையோ பார்க்கச் சென்றேன். அங்கு புடவையுடன் குச்சியாக நின்ற பெண்ணை பார்த்து ஆச்சர்யபட்டேன். அட இந்த பெண்ணா சிம்ரன்.

இந்த உடம்புக்கா திரையில் அத்தனை கவர்ச்சி.

அதன்பிறகு ஆச்சர்யப்பட்டேன்.

அதன் பிறகு இரண்டாவது முறையாக அவரை பார்க்கும்வாய்ப்பு சமீபத்தில் எனக்கு கிடைத்தது. உண்மையில் அது கொஞ்சம் ஆச்சர்யமானது. நான் சற்றும் எதிர்பாராத தருணத்தில் சிம்ரனை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்புக்கிட்டியது. ஆனால் அப்போது நான் நடந்து கொண்டவிதம் நான் எப்பேற்பட்ட முட்டாள் என எனக்கு நிரூபித்தது. இப்போதும் கூட அவரிடம் ஏன் அப்படி ஒரு கேள்வியை கேட்டேன் என யோசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த சந்திப்பு அதிகமில்லை இரண்டு மாதங்களுக்கு முன் பார்க் ஷெரட்டனில் நடந்தது.

தெய்வத்திருமகள் படம் வெளியாகி இரண்டு நாட்கள் கழித்து எனக்கு ஒரு போன் கால் வந்தது.


திரைக்கதை ஆலோசகராக மதராசபட்டினம் படத்தை தொடர்ந்து இயக்குனர் விஜய் யுடன் தெய்வதிருமகள் திரைப்படத்திலும் நான் பணியாற்றியிருந்தேன். அதனால் பலரும் படம் குறித்து என்னுடன் பேசிக்கொண்டிருந்தனர். அவற்றுள் ஒன்றாக இருக்கும் என நானும் எடுத்தேன்.


ஹலோ ..


வணக்கம் சார் நான் ஸ்டெபி ..
பேசறேன்


ம்ம் சொல்லுங்க ஸ்டெபி

தெய்வதிருமகள் பட திரைக்கதையில் நீங்க வொர்க் பண்ணியிருந்தீங்களா?

ஆமாம்

நாங்க ஒரு சின்ன ப்ராஜக்ட் பண்ணபோறோம் அதுல ஸ்க்ரிப்ட் சைட் வொர்க் பண்றதுக்கு ஒரு நல்ல ரைட்டர் தேவை. அதான் தெய்வதிருமகள் ஆபீசுக்கு போன் பண்ணப்போ உங்க நம்பரை தந்தாங்க. சொல்லுங்க நான் என்ன பண்ணனும்.

நாங்க புதுசா ஒரு கம்பெனி துவக்க போறோம்

நீங்க யார் டைரக்டரா ..

இல்லை இல்லை நான் அவங்க அசிஸ்டன்ட்

ஒரு ஹஸ்பண்ட் அண்ட் வொய்ப் அவங்க தான் படம் பண்ண போறாங்க
தயாரிப்பாளர் கம் டைரக்டர்.. மேடம் ஒரு கதை சொல்லுவாங்க. அதை நீங்க முழுசா டெவலப் பண்ணி ஸ்க்ரீன்பிளே டயலாக் எழுதி தரணும்.

சரி

நீங்க ஓகேன்னா நாளைக்கு காலையில் பார்க் ஷெரட்டான்ல பத்து மணிக்கு
மீட் பண்ணலாம்


மறுநாள் நான் பார்க்க போவது நான் மிகவும் ரசிக்கும் சிம்ரனை என தெரியாமல் எனது வாகனத்தை பார்க் ஷெரட்டனுக்கு செலுத்தினேன்.

லாபியில் உட்கார்ந்து ஒரு முறை அக்கம் பக்கம் பார்த்துவிட்டு ஸ்டெபிக்கு ரிங் கொடுத்தேன்.

என் எதிரே உட்கார்ந்திருந்த நால்வரில் ஒரு பெண் சட்டென தொலைபெசியுடன் திரும்பினாள். நான் பேசியதும் அவள் பார்வை என்னை பார்த்தது. கொஞ்சம் கண்னாடி சகிதம் எத்திராஜ் காலேஜ்ல படிக்கிற பெண் போல இருந்தாள் ஸ்டெபி. விரல் நீட்டி ஆமாவா என கேட்க நானும் தலையசைத்தபடி போனை அமத்தினேன்.

அந்த நால்வரில் ஸ்டெபியின் எதிரே முக்கால் ட்ரவுசரும் டீ ஷர்ட்டுமாய் ஒரு செக்கசெவேல் பெண் பூசினார் போல முகம். ஸ்டெபி அவளிடம் எதோ சொன்னதும் என்னை பார்த்து ஒரு நிமிட அவகாசம் கேட்டு சிரித்தார் ..
அந்த முகம் சட்டென எங்கோ பார்த்த ஞாபகத்தை நினைபொறியில் தட்டியது. ஆனாலும் அனுமானிக்க முடியவில்லை. அந்த நால்வரில் ஒரு பையன் எழுந்து போனதும் நான் அழைக்கப்பட்டேன். நான் அமர்ந்ததும் அந்த பணக்கார பெண்ணின் கணவர் எழுந்து வேறு நாற்காலியில் அமர நாங்கள் மூவரும் பேசத்துவங்கினோம்.

இப்போதுதான் அந்த பெண்ணின் முகம் சட்டென எனக்குள் பரவச அலைகளை உண்டாக்கியது. ஆமாம் சாட்சாத் அவளேதான் சாரி அவரேதான்
சிம்ரன் .. அதே கண்கள் .. வழக்கமாக அவர் கண்ணில் நான் பார்க்கும் ஒரு லட்சம் பட்டாம் பூச்சிகள் இப்போது எனக்குள் பறக்க துவங்கியது.

ஆனல் எப்படி கொஞ்சம் குண்டாக .. அடிப்பாவி ஸ்டெபி சொல்லவே இல்லையே ...

ஆனாலும் எதையும் நான் வெளிக்காட்டாமல் ஒரு ரைட்டர் கெத்துக்காக பல்லை கஷ்டப்பட்டு இறுக்கிக்கொண்டு ம்ம் சொல்லுங்க மேடம் என சொன்னேன் . இதற்கு முன் வேண்டுமானால் நான் ரசிகன் ஆனால் இப்போது நான் ஒரு ரைட்டர் கெத்தை விட்டுவிடக்கூடாது.

சமீபமாக அவர் பார்த்திருந்த ஒரு ஆங்கில படம் அப்புறம் ஒரு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கான இந்திபடம் இரண்டையும் பார்த்த பாதிப்பில் ஒரு படம் பண்ன ஆர்வம் இருப்பதாக சிம்ரன் சொன்னார்.

தெய்வத்திருமகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த உந்துதலில்தான் இந்த முடிவு. அதனால்தான் அந்த படத்தின் திரைக்கதையில் பங்கேற்றவர்களை வைத்து திரைக்கதை எழுத முடிவு செய்தேன் என்றார்.

பின் கொஞ்சநேரத்தில் நான் அதை வைத்து ஏற்கனவே நான் பண்ணி வைத்திருந்த ஒரு கதையை சொல்ல சிம்ரன் கண்கள் விரிந்தது. அதுவரை மிடுக்குடன் இருந்தவரிடம் சினிமாவில் பார்க்கும் அசல் சிம்ரனின் உற்சாகம் பொங்க ஆரம்பித்தது. ஒவ்வொரு திருப்பத்தின் போதும் முக்கியமான காட்சிகளின் போதும் சிம்ரன் ஒரு குழந்தையை போல ரசித்தார். அவருக்கு என் மேல் நம்பிக்கை வர தன் அம்மாவை பற்றியும் தான் உருவாக்கியிருந்த கதை பற்றியும் சொல்ல துவங்கினார் . ஆச்சர்யம் நடிகை சிம்ரனை போலவே கதாசிரியர் சிம்ரனும் என்னை மிரளவைத்தார்.

இடையில் ஒரு போன்

போனை பார்த்ததும் பதட்டமான சிம்ரன் மை மாம்
பாஸ் ஆப் மை ஹவுஸ்
என சொல்லிகொண்டு இந்தியில் அவருடன் பேசதுவங்கிகினார்
அப்போது அவர் எனக்கு நடிகையாக கதாசிரியராக தெரியவில்லை
ஒரு பாசம் மிக்க பெண்ணாக தெரிந்தார்

பின் கதை அவுட்லைன் சொல்லிமுடித்தார்

இப்படி சொல்லி முடித்ததும் நான் அவசரப்பட்டு ஒரு கேள்வியை கேட்டேன்
உண்மையில் நான் கேட்டிருக்க கூடாது பிற்பாடு அந்த கேள்விதான் என்னை ஆபத்தில் சிக்க வைத்துவிட்ட்து.

இதில் நீங்கள் தான் நடிக்க போகிறீர்களா?

ஆமாம்
சட்டென பதில் சொன்னார்

அப்படி சொன்ன போதே இவனுக்கு ஏன் இந்த சந்தேகம் அனாவசியமான கேள்வி என தோணியிருக்க வேண்டும் . முகம் அப்படித்தான் இருந்தது. பின் அவர் சொன்ன கதைகளின் பின்னணியில் நான் ஏற்கனவே செய்து வைத்திருந்த ஒரு திரைக்கதையை சொல்ல ஆரம்பித்தேன் . கதையின் முக்கியமான திருப்பத்தில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் அந்த கண்களை மீண்டும் பார்த்து அனுபவித்தேன்.

நான் சொன்ன கதை அவருக்கு மிகவும் பிடித்து போனது .

பின் படம் சம்பந்தபட்ட இதர விடயங்கள் பேச துவங்கினோம்
நானும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி அவருடன் நெருக்கமாய் பேசுவதாக நினைத்துக்கொண்டு சட்டென ஒரு கேள்விகேட்டேன் ..

உண்மையில் அப்படி ஒரு கேள்வி நான் கேட்டிருக்க கூடாதுதான்
உண்மையில் சினிமாதியேட்டருக்கு வந்துவிட்டு சினிமாவுக்கா என்பார்களே அது போலதொரு டுபாக்கூர் கேள்விதான் அது

ஆனாலும் என்ன செய்ய சில நேரங்களில் நமக்கு தலைக்கு மேல் சில கிரகங்கள் வந்து அதுவாக வந்து ஆட்டம் போடுமல்லவா அது போலத்தான்

ஆமா அது என்ன கேள்வி என கேட்கிறீங்களா

ஆமாம் நீங்க சிம்ரன்தானே?

இந்த கேள்வி கேட்ட மாத்திரத்தில் சட்டென மாறிவிட்டது சிம்ரன் முகம்

என்ன கேள்வி இது .. பொதுவாக ரைட்டர் என்றாலே கொஞ்சம்
-ஆட்காட்டி விரலை காதுக்கு மேலாக சுழற்றி- இது என்பார்களே உண்மைதானோ
என்றார்..

பின் அப்ப ஏன் நீங்களே நடிக்க போறீங்களா என கேட்டீர்கள் என்றார்

நான் கொஞ்சம் அசடு வழிந்தேன் .. சமாளித்தேன்

பின் .. அவரும் இரண்டு பிரவசம் காரணமாக உடல் சற்று குண்டாகிவிட்ட காரணத்தை கூறினாலும் உள்ளுக்குள் இன்னும் புகை அடங்கவில்லை என்பதை புரிந்துகொண்டேன்

அதன்பிறகு வெளியில் வந்த போதுதான் எனக்கு உரைத்தது.
ஆனாலும் சிம்ரனோடு கழித்த சில நிமிடங்கள் மனதுக்குள்ளிருந்த பட்டாம்பூச்சிகளை உடல் முழுக்க பறக்கவிட்டது.

அதன்பிறகு ஸ்டெபிக்கு ப்ராக்ஜட் என்னாச்சு என கேட்க மேடம் டிவி ஷோவில் பிஸி இன்னும் அது பத்தி முடிவுசெய்யவில்லை என்ற பதில் மட்டும் வந்தது.
லட்சம் பட்டாம்பூச்சிகள் பறக்கும் மனவெளி
சண்டே இண்டியன் ரசிகன் எனும்

கதைப்படி ஜூலியாராபர்ட்ஸ் ஒரு பாலியல் தொழிலாளி தனது வாடிக்கையாளனான ரிச்சர்ட் க்ரேவை முழுமையாக வசப்படுத்த வலுவாக ஒரு தந்திரத்தை கற்றிருந்தாள். அந்த தந்திரம்தான் அவனை தொடர்ந்து அவளுள் மயங்க வைத்துக்கொண்டிருந்தது. அந்த தந்திரம்தான் வெறும் பத்து நிமிடத்தில் முடியக்கூடிய அந்த உறவை பன்மடங்காக ஊதி பெருக்கி வைத்து படத்தின் இறுதிப்புள்ளி வரை இருவரையும் இறுக்கமாக கட்டியிருக்க வைத்தது .

அந்த திரைப்படம் ப்ரெட்டி வுமன். 1990ல் ஹாலிவுட்டில் வெளியாகி உலகம் முழுக்க ஓடி களைத்த படம். படத்தின் வெற்றிக்கு காரணமான அந்த தந்திரம் குழந்தமை கூடிய ஓரு சிரிப்பு .

காமத்தை உடலில் தேடிவிடலாம். ஆனால் அவள் கண்களுக்கும் அந்த சிரிப்புக்குமிடையிலும் ஒளிரும் அந்த குழந்தமையை அவன் எங்கு தேடுவான்?.

எண்ணற்ற வாசல்களும் கதவுகளும் அதில் திறந்துகொண்டேயிருக்க முடிவுறாத குழந்தமைதான் அவனது பயணத்தை உள்ளிழுக்கும் ஆற்றலாக பெரும் இயக்க சக்தியாக பின்னிருந்து செயல்படுகிறது. அவனை கவர்ந்திழுக்கும் உயிர்சக்திக்கு பின்னால் பல லட்சம் பட்டாம்பூச்சிகள் பறக்கும் ஒரு மனவெளி ஒரு பெண்ணிடம் தேவையாக இருக்கிறது. அந்த பட்டாம் பூச்சிகள் பறக்கும் மனவெளிக்குள் சஞ்சரிக்க முயல்வதுதான் ஆணின் தீராத வேட்கையாக காலம் காலமாக இருந்து வருகிறது.

அத்தகைய மனவெளி நிரம்பிய பெண்ணே சக்தி உமை தாய் என பல ரூபங்களில் ஆணை அலைக்கழிக்க வைப்பவளாக இருக்கிறாள். அன்றாட வாழ்வில் அத்தகைய பெண் மனவெளிகளை காண்பது அரிதாக இருக்கிறது. தஸ்தாயெவெஸ்கியின் நாஸ்தென்கா போல மோகமுள் யமுனா போல ப்ரெட்டி வுமன் ஜூலியாராபர்ட்ஸ் போல கை கொடுத்த தெய்வம் சாவித்ரி போல கதைகளிலும் கற்பனைகளிலும் மட்டுமே அது போன்ற மனவெளிகளை நம்மால் தரிசிக்க முடியும்.

ஆச்சர்யமூட்டும் வகையில் அப்படியான மனவெளிகள் சில நடிகைகளுக்கு இயல்பாகவே வாய்த்துவிடுகிறது. அல்லது ஒருவகையில் அத்தகைய மனவெளிகள் இருந்ததால்தான் அவர்கள் நடிகைகளாக பிராகாசிக்க முடிந்த்தோ என்னவோ.

.

மதுபாலா, நர்கீஸ், வைஜயந்தி மாலா, வகீத ரஹ்மான், பத்மினி, சரோஜா தேவி, ஸ்ரீதேவி மாதுரி தீட்சித் என ஒரு சில நடிகைகளின் வரிசையில் ... சிம்ரன் கண்களுக்கு பின்னால் அப்படியான லட்சம் பட்டாம்பூச்சிகளை சில படங்களில் ரசிக்க முடிந்தது..

முதன் முதலாக 1999ல் வெளியான வாலி படத்தில்தான் அவரையும் அவரது மனவெளியையும் தரிசிக்க முடிந்தது. அப்படத்தில் அண்ணன் தம்பியாக தோன்றும் இரண்டு அஜீத்களுக்கு நடுவே அவர் காட்டியது பதட்டமும் போலித்தனமும் அப்பாவித்தனமும் போன்ற ஒருவித நாடகம்தான் . சீசாவை திறந்ததும் சட்டென வந்து போகும் ஊறுகாயின் வாசம் போல தனக்குள் பொதிந்திருக்கும் குழந்தமையை லேசாக திரைவிலக்கி காண்பித்தார். கதைப்படி அண்ணன் தம்பி உறவையே மறக்கடிக்கும் கிளர்ச்சியூட்டும் அழகு அவரிடம் தேவை. உண்மையில் அவர் உடல் அப்படியானதாக சொல்லதக்கதாக இல்லை. குச்சி உடம்புதான். ஆனாலும் அவரது கண்கள் முகத்தில் காட்டும் ஒருவித காமத்தை தூண்டும் குழந்தமை இவைதான் அதனை சமன் செய்தது எனலாம்.
.


1974 ல் பஞ்சாப்பில் பிறந்து ரிஷிபாலா நவ்வாலாக வளர்ந்து அப்படியே பக்கத்துவீட்டில் அல்லது காலேஜ் போகும் போது அவர் யாரையாவது சைட் அடித்து எல்லோரையும் போல தக்க வயதில் குழந்தை பெற்று குத்துவிளக்காக மாறியிருக்க வேண்டியவர் அசந்தர்ப்பமாக ஹிந்தி பாடல்கள் போடும் தொலைகாட்சி நிகழ்ச்சியான சூப்பர்ஹிட் முகாப்லாவில் வர்ணனையாளராக வாய்ப்பு பெற்றார். அதை பார்த்த ஜெய்பாதுரி அமிதாப்பச்சன அவர்களது படமான தேரே மேரே சப்னே வில் திரையுலகத்துக்கு வரவழைத்தார். பிறகு நேருக்கு நேர் மற்றும் ஒன்ஸ் மோர் படங்கள் மூலமாக தமிழுக்கு அவர் அறிமுகமாகும் போது அவருக்கு வயது 22 ஆகிவிட்டிருந்தது. பல நாயகிகள் வீட்டுக்கு போகும் அந்த வயதில் ஒரே நாளில் இரண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான சிம்ரன் இரண்டு படங்களும் பெற்ற வெற்றியின் மூலம் தனக்கு அழுத்தமான முகவுரை எழுதிக்கொண்டார்.

தொடர்ந்து வெளியான ராசியான நடிகை என சினிமாவை தீர்மானிக்கும் மீரான் சாகிப் தெரு மனிதர்கள் திருவாய் மலர்ந்த்னர். பஞ்சாபி பெண் நலுக்கு சுலுக்காக இடுப்பை வளைக்கிறாள் என பத்திரிக்கைகளில் புகழ்ந்தனர். ஆனாலும் வாலி வந்த போதுதான் அனைவரும் அவரது அசல் திறமை கண்டு வியந்தனர். தொடர்ந்து கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும் , பார்த்தேன் ரசித்தேன், ஜோடி போன்ற படங்களில் அவர் திறமையான நடிப்பின் மூலம் தனகென ஒரு பிம்பத்தை கட்டமைத்துக்கொண்டார்.


அழகின் உச்சம் பெண்ணுடல் என்றால் அதன் மொத்த சிறப்பையும் சிம்ரனின் இடுப்பழகில் காண முடியும். இங்கே அழகு என்பது மலினமான உணர்விலிருந்து காவியத்தன்மையை நம்முள் கிளர்த்தும் மேன்மையான எழுச்சி. கஜூரோஹாவின் சிற்பங்கள் மிகைத்தன்மை கொண்டவையல்ல அவை உண்மையில் சாத்தியமானதுதான் என முதன் முதலாக என்னை நம்பவைத்த இடுப்பழகு சிம்ரனுடையது. குறிப்பாக யூத் படத்தின் ஒரே ஒரு பாட்டுக்க்கு மட்டும் அவர் ஆடிய களியாட்டம். அதை காளியாட்டம் என்றுகூட வர்ணிக்கலாம். அதில் அவரது ஒவ்வொரு உடல் அசைவும் நடனத்தின் மீதான அவரது உள்ளார்ந்த வேட்கையை
பிரதிபலிப்பவை. உடன் ஆடும் நாயகன் நடனத்துக்காக பேர் போனவர். ஆனாலும் அப்பாடல் முழுக்க சிம்ரனின் ஆதிக்கம் மட்டுமே நிலைத்திருந்தது . அதேபோல பிதாமகன் படத்தில் அவர் வந்து போன ஒரே ஒரு பாடலிலும் நடனத்தில் முழு அதிக்கத்தையும் செலுத்தியிருப்பார். உடன் நடித்த இரண்டு நாயகர்களையும் கடந்து அனைவரையும் கட்டிபோட்டது அவரது தீவிரமான நடனமே.

இந்த இரண்டு பாடலுக்குபின்னால் அவர்காட்டியிருந்த உத்வேகம் மனஎழுச்சி இவற்றை பற்றி சொல்லாமல் போனால் நிச்சயம் இக்கட்டுரை முழுமையடையாது.
அந்த அளவுக்கு தன் ஆற்றலை முழுமையாக பயன்படுத்தியிருந்தார்.

அதே சமயம் நடிப்பை பொறுத்தவரை அப்படி ஒன்றும் அவர் பிரமாதம் என சொல்ல முடியாது. சாவித்ரி, சரோஜாதேவி, பத்மினி, ஷோபா, ஸ்ரீதேவி ஆகியோர் முழுமையான நடிகைகள். நடிப்பு தொழில் அவர்களால் பெருமை கொள்ளும் வகையில் அவர்கள் தங்களது பங்களிப்பை திரைத்துறைக்கு அளித்துள்ளனர். ஆனால் சிம்ரன் அந்த வகையை சார்ந்தவர் அல்ல. அவர் நட்சத்திரம். பார்வையாளர்களை தனக்குள் முழுமையாக தக்கவைத்துக்கொள்ளும் சாகசம் அல்லது திறமை .. வாத்சல்யம் அவரிடம் நிறையவே நிரம்பி வழிந்தது. முந்திய பட்டியல் நடிகைகளை போன்ற காவியத்தன்மைகொண்ட பாத்திரங்கள் இவருக்கு வாய்க்கவில்லை. அப்படிப்பட்ட படங்களை இவர் தேடிச்செல்லவில்லை. உண்மையில் சிம்ரன் கொஞ்சம் யோசித்திருந்தால் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சில திரைக்கதைகளை அவர் தேர்ந்தெடுத்து நடித்து இன்னும் தனக்கு பெருமைகளை தேடிக்கொண்டிருக்க முடியும். ஆனால் கோவில்பட்டி வீரலட்சுமி ஒன்றே தனக்கு போதும் என் அவர் முடிவெடுத்துக்கொண்டார்.

இதுதான் சிம்ரனை அவர்களின் உயரத்துக்கு வளரவிடாமல் தடுத்துவிட்டது .

ஆனாலும் சிம்ரன் தான் ஏற்ற பாத்திரங்களுக்கு உண்மையாக இருந்தார். அதற்கு உயிர் கொடுத்தார். பாத்திரமாக மாறி பார்வையாளர்களை தன்னுடன் பதட்டபட வைத்தார். மேலும் சொல்லப்போனால் சாவித்ரியிடம் இருந்த பாத்திரங்களுக்குள் மயங்கிவிடும் தன்மை இவருக்குமிருந்தது. ஸ்ரீதேவி என்னதான் துள்ளலாக தனை மறந்த பட்டாம்பூச்சியாக நடித்தாலும் எப்போதும் அவரிடம் ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஒருவித பாதுகாப்புடன் அவர் பாத்திரங்களை பேலன்ஸ் செய்து நடித்தார். சரோஜாதேவி அவர்களிடமும் இது போன்ற நடிப்பை காண முடியும். ஆனால் சாவித்ரி, சிம்ரன் இருவரும் வேறு ரகம் சுதந்திரமாக அனாயசமாக நடிக்ககூடியவர்கள். இயல்பிலேயே அத்தகையதொரு சுபாவம் அவர்களிடம் இருந்தாலொழிய அப்படி ஒரு பாவம் அவர்களிடமிருந்து வெளிப்பட வாய்ப்பில்லை.
நடிகர்களில் ரஜினியை போல உடலில் தன்னியல்பு அதிகம் வெளிப்படும் நடிப்பு வகை.

இது போன்ற வகையினர் வெளிப்படையாக இருக்க கூடியவர்கள். தனி வாழ்வில் எதை பற்றியும் கவலைபடாதவர்கள். சிறிதளவு அன்பிலேயே பெரும் அருவியை காண்பவர்கள். துரோகத்தை தாங்க முடியாதவர்கள். இதனாலேயே பெரும் மன நெருக்கடிகளை சந்திப்பவர்கள். நல்லவேளையாக சிம்ரன் சரியான நேரத்தில் மண வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ்க்கையின் இரண்டாம் ஆட்டத்துக்கு தன்னை முழு தகுதியுடைவராக ஆக்கிக்கொண்டார்.


ஒரு முறை சமீரா டப்பிங் தியேட்டர் அருகே ப்ரியமானவளே படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த வீட்டுக்கு யாரையோ பார்க்கச் சென்றேன். அங்கு புடவையுடன் குச்சியாக நின்ற பெண்ணை பார்த்து ஆச்சர்யபட்டேன். அட இந்த பெண்ணா சிம்ரன்.

இந்த உடம்புக்கா திரையில் அத்தனை கவர்ச்சி.

அதன்பிறகு ஆச்சர்யப்பட்டேன்.

அதன் பிறகு இரண்டாவது முறையாக அவரை பார்க்கும்வாய்ப்பு சமீபத்தில் எனக்கு கிடைத்தது. உண்மையில் அது கொஞ்சம் ஆச்சர்யமானது. நான் சற்றும் எதிர்பாராத தருணத்தில் சிம்ரனை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்புக்கிட்டியது. ஆனால் அப்போது நான் நடந்து கொண்டவிதம் நான் எப்பேற்பட்ட முட்டாள் என எனக்கு நிரூபித்தது. இப்போதும் கூட அவரிடம் ஏன் அப்படி ஒரு கேள்வியை கேட்டேன் என யோசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த சந்திப்பு அதிகமில்லை இரண்டு மாதங்களுக்கு முன் பார்க் ஷெரட்டனில் நடந்தது.

தெய்வத்திருமகள் படம் வெளியாகி இரண்டு நாட்கள் கழித்து எனக்கு ஒரு போன் கால் வந்தது.


திரைக்கதை ஆலோசகராக மதராசபட்டினம் படத்தை தொடர்ந்து இயக்குனர் விஜய் யுடன் தெய்வதிருமகள் திரைப்படத்திலும் நான் பணியாற்றியிருந்தேன். அதனால் பலரும் படம் குறித்து என்னுடன் பேசிக்கொண்டிருந்தனர். அவற்றுள் ஒன்றாக இருக்கும் என நானும் எடுத்தேன்.


ஹலோ ..


வணக்கம் சார் நான் ஸ்டெபி ..
பேசறேன்


ம்ம் சொல்லுங்க ஸ்டெபி

தெய்வதிருமகள் பட திரைக்கதையில் நீங்க வொர்க் பண்ணியிருந்தீங்களா?

ஆமாம்

நாங்க ஒரு சின்ன ப்ராஜக்ட் பண்ணபோறோம் அதுல ஸ்க்ரிப்ட் சைட் வொர்க் பண்றதுக்கு ஒரு நல்ல ரைட்டர் தேவை. அதான் தெய்வதிருமகள் ஆபீசுக்கு போன் பண்ணப்போ உங்க நம்பரை தந்தாங்க. சொல்லுங்க நான் என்ன பண்ணனும்.

நாங்க புதுசா ஒரு கம்பெனி துவக்க போறோம்

நீங்க யார் டைரக்டரா ..

இல்லை இல்லை நான் அவங்க அசிஸ்டன்ட்

ஒரு ஹஸ்பண்ட் அண்ட் வொய்ப் அவங்க தான் படம் பண்ண போறாங்க
தயாரிப்பாளர் கம் டைரக்டர்.. மேடம் ஒரு கதை சொல்லுவாங்க. அதை நீங்க முழுசா டெவலப் பண்ணி ஸ்க்ரீன்பிளே டயலாக் எழுதி தரணும்.

சரி

நீங்க ஓகேன்னா நாளைக்கு காலையில் பார்க் ஷெரட்டான்ல பத்து மணிக்கு
மீட் பண்ணலாம்


மறுநாள் நான் பார்க்க போவது நான் மிகவும் ரசிக்கும் சிம்ரனை என தெரியாமல் எனது வாகனத்தை பார்க் ஷெரட்டனுக்கு செலுத்தினேன்.

லாபியில் உட்கார்ந்து ஒரு முறை அக்கம் பக்கம் பார்த்துவிட்டு ஸ்டெபிக்கு ரிங் கொடுத்தேன்.

என் எதிரே உட்கார்ந்திருந்த நால்வரில் ஒரு பெண் சட்டென தொலைபெசியுடன் திரும்பினாள். நான் பேசியதும் அவள் பார்வை என்னை பார்த்தது. கொஞ்சம் கண்னாடி சகிதம் எத்திராஜ் காலேஜ்ல படிக்கிற பெண் போல இருந்தாள் ஸ்டெபி. விரல் நீட்டி ஆமாவா என கேட்க நானும் தலையசைத்தபடி போனை அமத்தினேன்.

அந்த நால்வரில் ஸ்டெபியின் எதிரே முக்கால் ட்ரவுசரும் டீ ஷர்ட்டுமாய் ஒரு செக்கசெவேல் பெண் பூசினார் போல முகம். ஸ்டெபி அவளிடம் எதோ சொன்னதும் என்னை பார்த்து ஒரு நிமிட அவகாசம் கேட்டு சிரித்தார் ..
அந்த முகம் சட்டென எங்கோ பார்த்த ஞாபகத்தை நினைபொறியில் தட்டியது. ஆனாலும் அனுமானிக்க முடியவில்லை. அந்த நால்வரில் ஒரு பையன் எழுந்து போனதும் நான் அழைக்கப்பட்டேன். நான் அமர்ந்ததும் அந்த பணக்கார பெண்ணின் கணவர் எழுந்து வேறு நாற்காலியில் அமர நாங்கள் மூவரும் பேசத்துவங்கினோம்.

இப்போதுதான் அந்த பெண்ணின் முகம் சட்டென எனக்குள் பரவச அலைகளை உண்டாக்கியது. ஆமாம் சாட்சாத் அவளேதான் சாரி அவரேதான்
சிம்ரன் .. அதே கண்கள் .. வழக்கமாக அவர் கண்ணில் நான் பார்க்கும் ஒரு லட்சம் பட்டாம் பூச்சிகள் இப்போது எனக்குள் பறக்க துவங்கியது.

ஆனல் எப்படி கொஞ்சம் குண்டாக .. அடிப்பாவி ஸ்டெபி சொல்லவே இல்லையே ...

ஆனாலும் எதையும் நான் வெளிக்காட்டாமல் ஒரு ரைட்டர் கெத்துக்காக பல்லை கஷ்டப்பட்டு இறுக்கிக்கொண்டு ம்ம் சொல்லுங்க மேடம் என சொன்னேன் . இதற்கு முன் வேண்டுமானால் நான் ரசிகன் ஆனால் இப்போது நான் ஒரு ரைட்டர் கெத்தை விட்டுவிடக்கூடாது.

சமீபமாக அவர் பார்த்திருந்த ஒரு ஆங்கில படம் அப்புறம் ஒரு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கான இந்திபடம் இரண்டையும் பார்த்த பாதிப்பில் ஒரு படம் பண்ன ஆர்வம் இருப்பதாக சிம்ரன் சொன்னார்.

தெய்வத்திருமகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த உந்துதலில்தான் இந்த முடிவு. அதனால்தான் அந்த படத்தின் திரைக்கதையில் பங்கேற்றவர்களை வைத்து திரைக்கதை எழுத முடிவு செய்தேன் என்றார்.

பின் கொஞ்சநேரத்தில் நான் அதை வைத்து ஏற்கனவே நான் பண்ணி வைத்திருந்த ஒரு கதையை சொல்ல சிம்ரன் கண்கள் விரிந்தது. அதுவரை மிடுக்குடன் இருந்தவரிடம் சினிமாவில் பார்க்கும் அசல் சிம்ரனின் உற்சாகம் பொங்க ஆரம்பித்தது. ஒவ்வொரு திருப்பத்தின் போதும் முக்கியமான காட்சிகளின் போதும் சிம்ரன் ஒரு குழந்தையை போல ரசித்தார். அவருக்கு என் மேல் நம்பிக்கை வர தன் அம்மாவை பற்றியும் தான் உருவாக்கியிருந்த கதை பற்றியும் சொல்ல துவங்கினார் . ஆச்சர்யம் நடிகை சிம்ரனை போலவே கதாசிரியர் சிம்ரனும் என்னை மிரளவைத்தார்.

இடையில் ஒரு போன்

போனை பார்த்ததும் பதட்டமான சிம்ரன் மை மாம்
பாஸ் ஆப் மை ஹவுஸ்
என சொல்லிகொண்டு இந்தியில் அவருடன் பேசதுவங்கிகினார்
அப்போது அவர் எனக்கு நடிகையாக கதாசிரியராக தெரியவில்லை
ஒரு பாசம் மிக்க பெண்ணாக தெரிந்தார்

பின் கதை அவுட்லைன் சொல்லிமுடித்தார்

இப்படி சொல்லி முடித்ததும் நான் அவசரப்பட்டு ஒரு கேள்வியை கேட்டேன்
உண்மையில் நான் கேட்டிருக்க கூடாது பிற்பாடு அந்த கேள்விதான் என்னை ஆபத்தில் சிக்க வைத்துவிட்ட்து.

இதில் நீங்கள் தான் நடிக்க போகிறீர்களா?

ஆமாம்
சட்டென பதில் சொன்னார்

அப்படி சொன்ன போதே இவனுக்கு ஏன் இந்த சந்தேகம் அனாவசியமான கேள்வி என தோணியிருக்க வேண்டும் . முகம் அப்படித்தான் இருந்தது. பின் அவர் சொன்ன கதைகளின் பின்னணியில் நான் ஏற்கனவே செய்து வைத்திருந்த ஒரு திரைக்கதையை சொல்ல ஆரம்பித்தேன் . கதையின் முக்கியமான திருப்பத்தில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் அந்த கண்களை மீண்டும் பார்த்து அனுபவித்தேன்.

நான் சொன்ன கதை அவருக்கு மிகவும் பிடித்து போனது .

பின் படம் சம்பந்தபட்ட இதர விடயங்கள் பேச துவங்கினோம்
நானும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி அவருடன் நெருக்கமாய் பேசுவதாக நினைத்துக்கொண்டு சட்டென ஒரு கேள்விகேட்டேன் ..

உண்மையில் அப்படி ஒரு கேள்வி நான் கேட்டிருக்க கூடாதுதான்
உண்மையில் சினிமாதியேட்டருக்கு வந்துவிட்டு சினிமாவுக்கா என்பார்களே அது போலதொரு டுபாக்கூர் கேள்விதான் அது

ஆனாலும் என்ன செய்ய சில நேரங்களில் நமக்கு தலைக்கு மேல் சில கிரகங்கள் வந்து அதுவாக வந்து ஆட்டம் போடுமல்லவா அது போலத்தான்

ஆமா அது என்ன கேள்வி என கேட்கிறீங்களா

ஆமாம் நீங்க சிம்ரன்தானே?

இந்த கேள்வி கேட்ட மாத்திரத்தில் சட்டென மாறிவிட்டது சிம்ரன் முகம்

என்ன கேள்வி இது .. பொதுவாக ரைட்டர் என்றாலே கொஞ்சம்
-ஆட்காட்டி விரலை காதுக்கு மேலாக சுழற்றி- இது என்பார்களே உண்மைதானோ
என்றார்..

பின் அப்ப ஏன் நீங்களே நடிக்க போறீங்களா என கேட்டீர்கள் என்றார்

நான் கொஞ்சம் அசடு வழிந்தேன் .. சமாளித்தேன்

பின் .. அவரும் இரண்டு பிரவசம் காரணமாக உடல் சற்று குண்டாகிவிட்ட காரணத்தை கூறினாலும் உள்ளுக்குள் இன்னும் புகை அடங்கவில்லை என்பதை புரிந்துகொண்டேன்

அதன்பிறகு வெளியில் வந்த போதுதான் எனக்கு உரைத்தது.
ஆனாலும் சிம்ரனோடு கழித்த சில நிமிடங்கள் மனதுக்குள்ளிருந்த பட்டாம்பூச்சிகளை உடல் முழுக்க பறக்கவிட்டது.

அதன்பிறகு ஸ்டெபிக்கு ப்ராக்ஜட் என்னாச்சு என கேட்க மேடம் டிவி ஷோவில் பிஸி இன்னும் அது பத்தி முடிவுசெய்யவில்லை என்ற பதில் மட்டும் வந்தது.






September 11, 2011

”கனவுலக கட்டமைவாளன்”- பிரான்சிஸ் போர்ட் கொப்பாலா -



நவீன யுகம்
பாகம் -2


உல்கசினிமா வரலாறு


அமெரிக்க சினிமாவுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திய இயக்குனர் என்பதுதான் பிரான்சிஸ் போர்ட் கொப்பாலா எனும் பெயருக்கான சரியான பதவுரையாக இருக்கமுடியும். உலகம் முழுக்க உள்ள திரை இயக்குனர்களையும் பாதித்த இரண்டு இயக்குனர்கள் ஒருவர் அகிராகுரசெவா என்றால் இன்னொருவர் நிச்சயம் கொப்பாலாவாக்த்தன் இருக்க முடியும்.
அதிலும் ஆர்ட் பிலிம் எனப்படும் கலைப்பட இயக்குனர்கள் மட்டும் அல்லாமல் வணீக இயக்குனர்களையும் பாதித்த ஒரே இயக்குனர் கொப்பல்லாதான். உலக அளவில் வணிக சினிமாவையும் கலைசினிமாவையும் இணைத்து பேர்லல் சினிமா எனும் புதுவகை சினிமாக்களின் தந்தை என்றும் கூறலாம்.

கொப்பாலா என்பது திரை மொழியின் ஒரு கவித்துவ ஆளுமை. 1970 களில் அமெரிக்க சினிமாவில் புதிய அலை வீசியது. George Lucas, Martin Scorsese, Robert Altman, Woody Allen,William Friedkin, Peter Bogdanovich, Steven Spielberg மற்றும் Brian De Palma என பல புதிய இயக்குனர்கள் மடை திறந்த வெள்ளமென வந்தனர். அந்த அலையின் முன்னோடி மற்றும் முதன்மை இயக்குனர் என்ற பெருமையும் கொப்பல்லாவுக்கு உண்டு.

இத்தாலியை பூர்வீகமாககொண்ட இசைக்குடும்பத்தின் மூன்று குழந்தைகளில் நடுவனாக பிறந்த கொப்பல்லா பிறந்தது நியூ யார்க்கின் ஹென்றி போர்ட் மருத்துவ மனையில். பையனுக்கு என்ன பெயர் வைக்கலாம் என அவரது பெற்றோர் மண்டையை போட்டு பெரிதாக குழப்பிக்கொள்ளாமல் பையன் பிறந்த மருத்துவ மனையின் பெயரில் இருந்த ”போர்ட்” டுடன் குடும்ப பெயரையும் சேர்த்து பிரான்சிஸ் போர்ட் கொப்பலா என நீளபெயரை சூட்டிவிட்டார்கள். சிறு வயதில் தாக்கிய இளம்பிள்ளை வாதம் காரணமாக படிப்பில் சோம்பிக்கொண்டிருந்த கொப்பல்லாவின் கையில் ஒரு நாள் கிடைத்தது ஒரு புத்தகம். டென்னிஸ் விலியம்ஸ் எழுதிய ”ஸ்ட்ரீட் கார் நேம்டு டிசையர்” எனும் நாடகம் அது. அது உண்டாக்கிய தாக்கத்தில் நாடகத்தின் பக்கம் கவனம் தூண்டப்பட்ட கொப்பல்லா பின் வெகு சீக்கிரமே சினிமாபக்கம் திரும்பினார் .அதற்கு காரணமாக இருந்தது ஐஸன்ஸ்டைனின் அக்டோபர் திரைப்ப்டம் . அதன் படத்தொகுப்பு முறையால் ஈர்க்கப்பட்டு வீட்டிலேயே 8 எம் எம் காமராவில் பல குட்டி பட்ங்களை எடுத்து அவரே எடிட் செய்து அறிவை வளர்த்துகொண்டார். கல்லூரி படிப்புக்கு அவர் தயாரான போது அவரது அப்பா பொறியியல் கல்லூரி நோக்கி கை நீட்ட இவரது கால்களோ சினிமா கல்லூரி பக்கம் திரும்பியது.அமெரிக்கவின் புகழ்பெற்ற UCLA பல்கலைகழகத்தில் திரைப்பட பிரிவில் மாணவராக சேர்ந்து பயின்று வெளிவந்த கையுடன் முதல்படமாக 1962ல் Tonight for Sure எனும் படத்தை இயக்கினார். உண்மையில் அவர் எடுக்க நினைத்ததோ ஒரு கலைப்ப்டம் ஆனால் வெளியான போது அது கிட்டத்தட்ட நீலபடமாக அங்கீகாரம் பெற்று அவருக்கு ஒரு அவபெயரை வாங்கிதந்தது. அதேவேகத்தில் The Bellboy and the Playgirls. எனும் பெயரில் அடுத்த படம் எடுக்க அதுவும் ம்ண்ணை கவ்விக்கொண்டது. இனி படம் எடுப்பதை விட்டு யாரிடமாவது உருப்படியாக அசிஸ்டண்டாய் சேர்ந்து தொழிலைகற்பதுதான் உத்தமம் எனும் முடிவோடு இயக்குனர் ரோஜர் கார்மன் என்பவரிடம் உத்வியாளராக சேர்ந்தார்.

இந்த ரோஜர் கர்மன் அப்படி ஒன்றும் பெரிய இயக்குனர் இல்லை ஆனால் பிற்காலத்தில் பெரிய இயக்குனர்களாக அறியப்பட்ட அனைவரும் இவரிடம் உதவியாளராக இருந்தவர்கள் .டைட்டானிக் எடுத்த கேம்ஸ் காமரூன் , சைலன்ஸ் ஆப் தி லாம்ப் எடுத்த ஜொனதன் டம்மி ,ரேகிங் பல் , டிபார்டட் ஆகியபடங்களை எடுத்த மார்டின் ஸ்கார்சி.. தி ப்யூட்டிபுல் மைண்ட் மற்றும் தி டாவின்சி கோட் ஆகிய படங்களை இயக்கிய ரான் ஹாவர்ட் பொன்றவர்கள் இவரிடம் உதவியாளராக இருந்தவர்கள் என்பது மட்டுமெ இந்த ரோஜர் கார்மனுக்கு ஒரு சரித்திர புகழை உண்டாக்கி தந்துள்ளது .
அவருடன் Tower of London (1962) உள்ளிட்ட சில படங்களில் பணி புரிந்தபின் கொப்பல்லாவுக்கு மீண்டும் இயக்குனர் ஆசை துளிர் விட்டது . இது இரண்டாவது ஆட்டம் . முதல் முறை கண்ட தோல்விகளின் வலி இன்னமும் அவரது முதுகை அழுத்தியது. 1966 ம் ஆண்டு வெளியான You're a Big Boy Now படம் அவர் நினைத்த வெற்றியை அவருக்கு உருவாக்கிதந்தது. கணக்குபடி பார்த்தால் அது அவருக்கு ஐந்தாவது படம். அவர் எதிர்பார்புக்கு இணங்க பல விழாக்களில் இப்படம் பங்கேற்று விருது கமிட்டிகளுக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டது.

அத்ன்பிறகு அவர் இயக்கத்தில் வெளியான Finian's Rainbow, The Rain People இரண்டு படங்களும் அவருக்கு சிறந்த இயக்குனர் எனும் அடையாளத்தை உருவாக்கி தந்தன.இந்த சூழலில் அவர் த்ன்னை போலவெ புதுமைகளிலும் புதிய தொழில் நுட்பங்களிலும் ஆர்வம் கொண்ட ஒரு துறுதுறு இளைஞனை சந்தித்தார். அவர் பெயர் ஜார்ஜ் லூக்காஸ். பின்னாளில் ஸ்டார் வார்ஸ் எனும் அமெரிக்க சினிமாவின் ஆகசிறந்த அறிவியல் புனைவை உருவாக்கிய

மேதை. அவரது கற்பனைத்திறத்தால் வசிகரம் கொண்ட கொப்பல்லா நண்பன் ஜார்ஜ் லூக்காஸின் முதல் படத்துக்கு அவரே தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில்தான் பாரமவுண்ட் கம்பெனியிலிருந்து ஒரு அழைப்பு .கம்பெனி அவரை காட்பாதர் படத்துக்கு இயக்குனராக நியமித்தது

அதன் பிறகு புகழ் சூரியன் கொப்பலாவின் வீடுதேடி வந்து ஹலோ சொல்ல துவங்கியது. காட்பாதர் உலக சினிமா ரசிகர்களை புருவம் நெறிக்கசெய்தது .
காட்பாதர் இரண்டாம் பாகம் 1974ல் வெளியான பிறகு உலக சினிமாவின் மிகசிறந்த இயக்குனர்களில் ஒருவராக மாற்றியது அதே ஆண்டு வெளியான கான்வர்சேஷன் மற்றும் ஐந்துவருட த்யாரிப்பில் வியட்நாம் போரை மையமாக வைத்து உருவாக்கிய அவரது அபோகலிப்ஸ் நவ் 1979 போன்ற படங்கள் இன்றும் அவரது பெயரை நிலைத்திருக்க செய்துள்ளது .

கொப்பல்லோவின் தனித்திறமை அவரது சினிமாவின் அழகியல்.கத்தாலிக்க கிறித்துவத்தின் ஆன்மீகத்தை உள்ளடக்கிய அழகியல். அந்த் உயர்ந்தபட்ச அழகியல்த்ன்மை தன் அவரது வன்முறை படங்களையும் கூட கலைபடங்களாக மாற்றுகிறது.காட்பாதர் படத்தில் டான் பனூசியை இள வயது டான் கர்லோனாக நடிக்கும் ராபர்ட் டி நீரோ சுட்டுக்கொள்ளும் காட்சியின் போது உடன் இணையாக ஏசுவின் ஊர்வல காட்சியும் இடைவெட்டாக காண்பிக்க படுகிறது . பின்னணியில் ஆன்மிக இசையுடன் ஒரு நியாயமான கொலை நிகழ்த்தபடும் போது உண்டாகும் அழகியல் தன்மை சமூகத்தின் இருண்ட த்ன்மைகளுக்கு பின்னால் அழகியலை ஏற்றி அதற்கான நியாயத்தை நம் ஆழ் மனதில் கற்பிப்பதாக உள்ளது. இப்பத்தின் ஒளிப்பதிவு அதுவரையிலான சினிமா ஒளீப்பதிவு முறைமகளை த்லைகீழாக மாற்றியது.

கதாபத்திரங்களின் முகத்துக்கு வெளிச்சம் அதிகம் கூட்டும் விதமாக ஒளியமைப்புகளை செய்து வந்த விதம் மாற்றப்பட்டது. கார்டன் வில்லிஸ் அதிக லைட்டுகளை உபயோகப்படுத்தி அவற்றை பேக்லைட் எனப்படும் உத்தியில் பாத்திரங்களின் த்லை புருவம் பின்புலத்தில் இருக்கும் மேசை நாற்காலி திரைச்சீலை ஆகியவ்ற்றின் மீது ஒளீ விழச்செய்து புதிய தன்மையை உருவாக்கினார்.

August 5, 2011

இயக்குனர் விஜய் எனும் மாமனித்னும் ஒரு மனிதனும்





தெய்வ திருமகள் படத்தில் உங்கள் பெயரை நன்றி அறிவிப்புடன் போடுகிறார்கள் நீங்கள் என்ன பங்களித்தீர்கள் என பலரும் படம் வெளியான நாளிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். உண்மையில் என் பணி திரைக்கதையை ஒழுங்கு செய்யும் பணி. திரைக்கதை மருத்துவர். ஆங்கிலத்தில் இப்படி ஒரு பதவி இருக்கிறது . திரைக்கதையில் ஏற்படும் சிக்கல்களை தீர்த்து ச்ரி செய்வது அவர்கள் பணி. அத்னால் அந்தபெயர்.

ஏற்கனவே நான் விஜய் அவர்களின் மதராச பட்டினம் படத்தின் கதைவிவாத்தில் கலந்துகொண்டிருந்தவன். அப்படத்தில் வரலாற்று தகவல்களுக்காக நான் விவாததில் கலந்து கொண்டிருந்தாலும் உடன் திரைக்கதையை ஒழுங்கமைப்பதிலும் பங்கேற்றிருந்தேன் .வெறுமனே பத்துநாள் கதைவிவாதத்துக்காக சென்ற நான் தொடர்ந்து அப்ப்டத்தில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். அதற்கு முழுகாரணமும் இயக்குனர் விஜய் அவர்கள் என்னிடம் காட்டிய கனிவும் பரிவும் அதற்கும் மேலாக அவர் கொடுத்த சுதந்திரமும் .

கதைவிவாத்தின் போது நான் என்னை மீறி சிலசமயங்களில் கோபப்படுவேன் அது கதையில் நான் கொள்ளும் ஈடுபாட்டால் வருவது.. அச்சமயங்களில் இயக்குனர்களுக்கு என் மேல் கோபம் வரும் . திமிர்பிடித்த்வன் என நினைக்க வாய்ப்புண்டு. அதனாலேயே நான் பொதுவாக இது போன்ற கதைவிவாத அழைப்புகளை தவிர்ப்பவன். மேலும் நான் நினைப்பது சரியாக இருக்கும் என்ற உறுதி மனப்பானமை .மற்றும் இயக்குனர் சொல்வது சரியில்லையென்றால் நிர்தட்சண்யமாக மறுப்பது போன்றவை பலருக்கும் சரிப்பட்டு வராத தனிக்குணங்கள்

ஆனல் என்னுடைய இயல்பை புரிந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் என்னை அவர் நடத்திய பாங்கு எனக்குள் பெரும் நெகிழ்ச்சியையும் அன்பையும் உண்டாக்கின .

அந்த படத்தில் என்னையும் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களையும் கவுரவப்டுத்தும் விதமாக வெறும்திரைக்கதை ஆலோசனை குழு என்றெல்லாம் போடாமல் சிறப்பு நன்றியை துவக்கத்தில் தெரிவித்ததோடு அல்லாமல் அனைத்து பேட்டிகளிலும் எங்களுடைய பெயரை குறிப்பிட்டு ஒத்துழைப்பை பெருமிதத்துடன் கூறி மகிழ்ந்தார் .


அதன்பிறகு தெய்வதிருமகள் படம் துவங்கிய போது என்னை அழைத்தார்.சென்ற முறை அவர் பெரிய இயக்குனர் இல்லை. இப்போது மதராசபட்டினம் என்ற பெரிய ஹிட்டை கொடுத்திருக்கிறார். இம்முறையும் நாம் நம் இயல்போடு இருந்தால் அவர் அனுமதிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. இயல்புத்தன்மையுடன் என்னால் இருக்க முடியாத இடத்தில் என்னால் பொய்யாக ஒரு நொடியும் அமர்ந்திருக்க முடியாது .

இதனால் சற்று சந்தேகத்துடன் ப்யணப்பட்டேன் கோவையிலிருக்கும் ஒரு மலையோர நட்சத்திர விடுதிக்கு அனைவரும் கதை விவாத்திற்கு சென்றிருந்தோம் . ஆனால் விஜய் முன்னிலும் பக்குவத்துடன் என்னை ஆச்சர்யபடுத்தினார். உள்ளூணர்வுகளிலிருந்து அனைவரையும் அவதானிக்கும் அவரது பக்குவம் , மற்றும் அவரது மனித்தன்மை ஆகியவை என்னிலும் உயரமானவாராக அவரை காண்பித்துக்கொண்டிருந்தன.

சென்னையில் நான் சந்தித்த மிகசிறந்த மனிதராக என்னுள் உயர்ந்தார். பண்பில் நான் அவரை கடக்க ஒவ்வொருமுறையும் முயன்று தோற்று கொண்டிருந்தேன்

அவரது படங்களின் வெற்றிக்கு காரணம் எது எனக் கேட்டால் அது அவருடைய சுபாவம் மற்றும் அவருடைய உயர்ந்த மனித பண்புகளே. என்பதை எங்கும் உரத்து சொல்வேன்

ஒருமுறை சென்னைக்கு வந்த பின் அலுவல்த்தில் கதை விவாதம் இருப்பதாக என்னை அவரது உதவியாளர்கள் அவசரமாக அழைத்தார்கள் . நானும் அவசரமாக சென்றேன் . நான் அலுவலகத்தில் நுழைந்ததும் அனைவரும் கைதட்டி வரவேற்றார்கள் . நானும் ஆச்சர்யத்துடன் உள்ளே சென்றேன் . ஆச்சரயம் அங்கே ஒரு சிறு மேசையில் ஒரு கேக். மற்றும் மெழுகுவர்த்திகள். ஹாப்பி பர்த் டே அஜயன்பாலா என அதில் எழுதப்பட்டிருந்தது. என் வாழ்க்கையின் முதல் கேக் . . நான் வியந்து நிற்பதற்குள் உதவியாளர்கள் அலுவலக ஊழியர்கள் அனைவரும் கைதட்டி என் முதல் கேக்கை பரிமாறினர் .
அவரது உதவியாளர்களுக்கு ஆச்சர்யம் இது வரை பர்த்டே கொண்டாடியதில்லையா என ஆச்ச்சர்யத்துடன் கேட்டனர்.பிற்கலத்தில் நன் பல பெருமைகள் அடையலம் ஆனல் அந்த நாளில் விஜய் எனும் மனிதர் காட்டிய அன்பு அவையனைத்தைக்கட்டிலும் உயர்ந்தது. நான் பல இயக்குனர்களிடம் ப்ணீ புரிந்த்வன். இந்த நகர காட்டில் மிருகங்களின் முன்வராமல் மரங்களிடை ஒளிந்து வாழ்ந்தே பழ்கி வந்த்வன் . அப்படிப்ப்ட்டவனுக்கு இது போன்ற நிகழ்வு எத்துணை பெரிய மகிழ்ச்சி அளிக்க கூடியது என்ப்தற்கு வார்த்தைகள் இல்லை.


கதை விவாதம் முடிந்த கையோடு என் பணியும் முடிந்தது . விஜய் என்னை பலமுறை படப்பிடிப்புக்கு வரசொல்வார் .ஆனால் நான் அங்கு அவரை தொந்த்ரவு செய்ய விரும்பவிலை .
அவர் இப்பட்த்தில் நடிக்க வற்புறுத்தினார். ஆனால் எனகேற்ற பாத்திரம் இல்லாத காரணத்தால் மறுத்துவிட்டேன் .
மேலும் இந்த படத்தில் டைட்டிலில் எனக்கு எந்த மாதிரி கிரெடிட் கொடுப்பது என பேச்சு வந்த போது நான் அவரிடம் சென்ற படத்தில் இட்டது போல வெறும் நன்றி என போட்டால் போதும் என கூறிவிட்டேன் . திரைக்கதை உத்வி அல்லது ஆலொசனை என்பதைவிட ஒரு இயக்குனராக இந்த நன்றி என்னை கவுரவப்டுத்தும் என அறிந்திருந்தேன்

பட வேலைகள் அனைத்தும் முடிந்தபின் என்னை அழைத்து”
சார் ரீ ரெகர்டிங் எதுவும் இன்னும் செய்யவிலை. நீங்கள்தான் முதல் ஆளாக பட பார்க்க போகிறீர்கள் என்று சொன்னார் . திரைக்கதை முழுவதுமாக தெரிந்தாலும் இயக்குனர் விஜய்யை தரிசிக்க ஆவலுடன் சென்றேன் . அவரது தொழில்நுட்பத்திறன் மேல் எனக்கு அசாத்திய் நம்பிக்கை உண்டு . இந்த படம் அவ்வகையில் ஒரு மைல் கல்லாக வரும் என அவரிடம் சொன்னேன் . . அத்ற்கு அவர் இல்லை சார் இந்த்படம் என்னோட அறிவு சம்பந்தப்ட்ட படம் இல்லை சார் என்னோட இதயம் சம்பந்தப்பட்ட படம் சார் . நான் எனக்குள்ள உள்ளூணர்வுகள்ள வளர்ந்திருக்கனா இல்லையாங்க்கிறதுதான் படம் பார்த்துட்டு எனக்கு சொல்லப்போற பதில் என்றார்.

சரி என அவரது அலௌவல்கத்தில் இருந்த சிறிய அரங்கில் படம் பார்க்க துவங்கினோம். மணீ அப்போதே இரவு பதினொன்று ஆகிவிட்டது .படம் பார்த்த பத்தவாது நிமிடத்தில் சில காட்சிகள் என் இதயத்தை எம்ப வைத்தது. காட்சி கட்டமைவுகளில் அவர் கையாண்ட உள்ளூணர்வுகளின் தீண்டல் ஆச்சர்ய படுத்தியது. விவாத்தின் போது சாத்ர்ணமாக இருந்த காட்சிகளுக்கு அவர் உயிர் கொடுத்து உயரத்துக்கு அழைத்து சென்று ஆச்சர்யபடுத்தினார். . ஒருகாட்சியில் எனக்கு அவருக்கும் கடும் மோதல் உண்டாகி நட்பெ முறியுமளவுக்கு வந்தது . ஆனால் விஜய் பிடிவாதமாக கோபத்துடன் நான் உங்க்ளுக்கு படமா எடுத்து காமிக்கறன் சார் என்றார். அந்த காட்சியை திரையில் கண்டபோது என் சுய மதிப்பீடு தரை மட்டமாக நொறுங்கியது .


படம் முழுவதும் முடிந்தபோது நள்ளீரவு இரவு 2 மணியாகிவிட்டிருந்தது. கண்கள் சொறியும் கட்டுப்படுத்த முடியாத நீருடன் கட்டி யணைத்தேன். ஒரு பார்வையாளனாக என்னை பெரும் உய்ரத்துக்கு அழித்து சென்ற தருணம் அது.

இப்ப்டம் மிக பெரிய வெற்றிபடம் . இப்படத்துக்கு பிறகு தமிழின் மிக முக்கியமான மூன்று இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்து விடுவீர்கள் என்றேன் .

அது போலவெ நடந்தது . படம் வெற்றிசெதி கிட்டிய ஒவ்வொரு த்ருணத்திலும் விஜய் நீங்க்ள் சொன்னது போலவே நடக்கிறது என பகிர்ந்துகொண்டார்.

நேற்று காலை அவரது உதவியாளர் என்னை அழைத்து பட்த்தின்வெற்றி விழாவில் இயக்குனர் உங்களை அழைக்க சொன்னார் என கூப்பிட்டார். நானும் பார்வையாளராக நிகழ்ச்சி நடந்த நட்சத்திர விடுதிக்கு சென்றேன் . எனக்கும் ஒரு டீஷ்ர்ட் கொடுத்தார்கள் , அங்கு விஜய் சற்றும் எதிர்பாரா விதமாக என்னை மேடையில் அழைத்தார்.
.
ப்டத்தில் என்னோடு சண்டையிட்டு திரைக்கதையின் வெற்றிக்கு அரிய பங்களித்ததை சொல்லி அனைவர் முன்பும் கவுரவப்டுத்தி அந்த நல்லோர் சபையில் எனக்கும் ஒரு இருக்கை தந்தார் .
விக்ரம் கைகுலுக்கினார். அனுஷ்காவுக்கும் அறிமுகபடுத்தினார்
அமலாபாலும் புன்னகைத்தார்.

திரைபடத்துறையில் இயக்குனராகும் முயற்சியில் ப்ல தோல்விகள் கண்டு பின் அதை வெறுத்து எழுத்தாளனாக மாறியவன் நான் .நட்சத்திரங்களின் அருகாமை நீண்ட நாட்களுக்குபின் என்னை நெருங்கியிருக்கிறது .நானும் அந்த கணத்தில் நட்சத்திரம் ஆகிவிட்டது போல ஒரு சிறு மயக்கம்
காலம் ஒருநாள் என் காலைக்கும் சூரிய்னை பிரத்யோகமக அனுப்பிவைக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது.

இயக்குனர் விஜய் எனும் நண்பருக்கு இந்த உலகம் எல்லா நல்லனவற்ரையும் தரட்டும் என அந்த நிமிடத்தில் மனது வாழ்த்து சொல்லியது. அந்த இடத்தில் அவர் என்னை அழைக்கவேண்டும் கவுரபடுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை .ஆனாலும் அவர் அதை செய்து என்னை தோற்கடித்து மேலும் உயர்ந்துவிட்டார். நான் அவர் அளவுக்கு வளருவெனா ?
என்பது ஐயம்தான்.

August 4, 2011






வீரமாமுனிவர் 12
செம்மொழி சிற்பிகள்



மொழி பிறப்போடு அல்ல அது குணத்தோடும் உணர்வோடும் தொடர்புடையது என்பதற்கு எடுத்தகாட்டாக தமிழுக்கு தொண்டாற்றியவர். தமிழின் முதல் அகரமுதலி எனப்படும் சதுராகராதியை முதலில் வெளியிட்டவர். பரமார்த்த குருவின் கதைகள் மூலம் தமிழுக்கு இன்னுமொரு அணிகலானாய் புனைவு மற்றும் நகைச்சுவை இலக்கியத்தை படைத்து முன்னோடியாக திகழ்பவர். மட்டுமல்லாமல் தேம்பாவணி ர்னும் காவியத்தை படைத்தவர் பெஸ்கி பாதிரியார் எனும் வீரமாமுனிவர்.
பிறப்பு ; நவம்பர் 8 1680

இத்தாலியில் கேசுகிலியோன் இவர் பிறந்த ஊர். கான்ஸ்டான்ஸோ குசப்பே பெஸ்கி (Costanzo Giuseppe Beschi,) என்பது இவரது இயற்பெயர் .தந்தை கொண்டல் போ பெஸ்கி தாயார் எலிசபெத். பதினெட்டாம் வயதிலேயே கிறிஸ்தவ மத்திற்கு தொண்டூழியம் செய்யும் நிமித்தமாய் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட பெஸ்கி அதன் பொருட்டு 1710ல் முதன் முறையாக
தமிழகம் வந்து மதுரைக்குள் சேர்ந்தார்.மக்களிடம் மதத்தை பரப்ப வேண்டி தமிழைகற்றவர் அதன் வசீகரத்தில் தன்னை முழுவதுமாக இழந்து பெரும் காதலுற்றார். அதன் பொருட்டு தன் பெயரை தைரியநாதன் என வைத்துக்கொண்டார். தமிழை மேலும் அகழ்ந்தாய்வுசெய்ய ஈடுபடுகையில்தான் தைரியம் என்பது வடச்சொல் என்பதறிந்து செந்தமிழில் வீரமாமுனிவர் என திருத்திக்கொண்டார். பின் அதோடு நில்லாமல் தன் மேற்கத்திய நடை உடை மற்றும் வாழ்வியல்பண்பாடுகளை களைந்து முழுவதும் தமிழ் பண்பாட்டுக்கு ஏற்ப த்ன் தோற்றத்தையும் வாழ்க்கை முறைகளையும் மாற்றிக்கொண்டார். 1822ல் இவருடைய வரலாற்றை முதன் முதலாக தமிழில் எழுதிய முத்துசாமிப்பிள்ளை அவருடைய தோற்றம் குறித்து சொல்லும் போது நெற்றியில் சந்தனமும் தலையில் பட்டுக்குல்லாவும் இடுப்பில் காவியும் திருநெல்வேலி கம்பிச்சேர்மன் போர்வையை தலையிலிருந்து தோள்வழியாக உடம்பை மூடியபடி காலில் பாதகுறடு அணிந்து காண்ப்படுவார் என விவரிக்கிறார்.

குறைந்தகாலத்தில் கற்றாலும் தமிழ் மொழியின் தனிப்பண்புகளை உள்வாங்கி அதனை காலத்தால் அழியமாட்டாத படைப்புகளாக உருவாக்கிய இவரது புலமை மகாகவிகளுக்கு இணையானது. தொன்னூல் விளக்கம் எனும் நூல் மூலம் எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் .

திருக்குறளின் மகத்துவம் அறிந்து அதன் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் லத்தீன் மொழிக்கு மொழிபெயர்த்தவர். வேதவிளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக்கண்னாடி, செந்தமிழ் இலக்கணம் போன்ற நூல்களை இயற்றி தமிழுக்கு எண்ணற்ற அணிகலன்களை தந்து பெருமைபடுத்தியுள்ளார்.இவையனைத்திற்கும் மகுடமாக மூன்றுகாண்டங்கள், முப்பத்தியாறு படலங்கள் ,மொத்தம் 3615 விருத்தங்களுடன் அவர் இயற்றிய தேம்பாவணி எனும் பெருங்காப்பியம் முதற்கொண்டு திருக்காவல் கலம்பகம் மற்றும் கித்தேரி அம்மன் அம்மாணை போன்ற குறுங்காப்பியங்களையும் படைத்துள்ளார்.

திராவிட மொழியியல் அறிஞர்களுள் முதன்மையானவர் வீரமாமுனிவரே என ஆய்வாள்ர் கமில்சுவலபில் கூறியுள்ளார்.

இறப்பு : பிப்ரவரி 4, 1746

August 1, 2011

யூ ட்யூப் இளவரசி-ரெபேக்கா ப்ளாக்


முளைத்து மூணூ இலை விடலை அதுக்குள்ள ஆட்டம் ஆடுதுன்னு அடிக்கடி சொல்வார்கள் அதுக்கு என்ன அர்த்தமோ தெரியவில்லை. அமெரிக்காவை கலக்கும் இந்த பதினாலு வயதுபெண்ணை பார்த்தாள் அப்படி ஒரு கேள்வியை கேட்க தோணுகிறது .இவள் பெயர் ரெபெக்கா ப்ளாக் .


இரண்டு மாதங்களுக்கு முன் இது போல் துள்ளல் இசை இளவல் எனும் தலைப்பில் பாப் ஹீரோ ஜஸ்டின் பைபர் பற்றி ஒரு பதிவை இட்டிருந்தேன். அப்போதே இந்த பெண்ணை பற்றியும் சில வார்த்தைகள் குறிப்பிடவேண்டும் என நினைத்தேன். ஆனால் அப்போது ஒத்துவரவில்லை. ரஜ்னி பற்றி அவரை தெரியாதவங்களுக்கு அறிமுகபடுத்தும் போது கமலை பற்றி போற பொக்கில் சொன்னால் சரியாகுமா . அது போலத்தான் சரி இந்த குட்டி பொண்ணுக்கு தனியாக சேவை செய்யலாம என கருதி விட்டிருந்தேன் . இப்பதான் அதுக்கு நேரமும் வாய்த்தது.


ஜஸ்டினாவது பராவாயில்லை பதினேழு வயசு.. பாடல் வீடியோ காட்சிகளில் அப்படி இப்படி அத்து மீறினாலும் மீசை முளைத்துவிட்டது. போனால் போகிறது என விட்டுவிடலாம் ..ஆனால் ரெபெக்கா பதினாலு வயசு .பிறந்ததே 1997ல் தான் . அதற்குள் வெள்ளிகிழ்மை என தலைப்பிட்ட ஒரே பாட்டில் இன்று உலக பிரபலம். இத்தனைக்கும் இந்த வருட ஜனவரியில்தான் இந்தபாட்டு வெளியாகியது அந்த பாடலின் க்ருத்து என்ன தெரியுமா . அமெரிக்காவிலேயே பலர் கடுப்பாகிவிட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்
9ம் வகுப்பு படிக்கும் பெண் வெள்ளிகிழ்மை காலையில் எழுந்திருக்கிறாள். முதல் நினைப்பெ அன்று இரவு பார்ட்டிக்கு போவது பற்றித்தான் . பல் விளக்கி ஸ்கூல் பையுடன் பஸ் பிடிக்க பேருந்து நிலையத்தில் இருக்கிறாள் .அங்கு மேலே திறந்த விடப்ப்ட்ட கல்யாண ஊட்வல டைப் காருடன் வருகிறது அராத்து சில் வண்டுகள். எல்லாம் அரை டவுசர் கோஷ்டிகள் காலையிலெயே ஸ்கூலுக்கு போகாமல் பார்டிக்கு . போகலாம் என அவளையும் அழைக்கிறார்கள் . விளங்குமா (..சாலமன் பாப்பையா த்வனியில் படிக்கவும் )

இதில் பத்தாக்குறைக்கு அப்பெண்னுக்கு பெரும் குழ்ப்பம்

குழப்பம் காரில் ஏறுவதா வேண்டாமா என்பதில் இல்லை

காரில் முன் சீட்டில் அமருவதா பின் சீட்டில் அமருவதா எந்த சீட்டில் அமர்வது இதுதான் அவளுக்கு ப்ரச்னை

இதெல்லாம் தான் பாடல் வரிகள் .. ஆனால் பாருங்க்ள் இந்த பாட்டு பெரிய ஹிட் . இது பிடிக்காத ஜஸ்டின் பைபர் ரசிகர்களுக்கும் ரெபெக்கா ப்ளாக் ரசிகர்களுக்கும் யூ ட்யூபில் சோடா பாட்டில் பறக்கிறது

யூ ட்யூபில் பலபெண் பாப்பிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு அதிகமான எண்ணிக்கையில் பார்வையாளர்களை பெற்றுள்ளது அவரது ப்ரைடே எனும் பாடல்.

இப் பாடலுக்கு பெற்ற விருப்புகளின் எண்ணிக்கை ஒரு சாத்னை என்கிறார்கள் ஆனால் அதை விடவும் அதிகமான எண்னிக்கையில் வெறுப்புகளை பெற்றுள்ளது இந்தபாடல் என்பது தான் இதில் நாம் கவனிக்க வெண்டிய விடயம்

ரெபெக்காவை பாராட்டுபவர்களை விட சமூக சீரழிவின் அடையாளம் என கூக்குரலிடுபவர்கள்தான் அதிகம்

ஆனால் அமெரிக்காவில் இது போன்ற குரல்களுக்கும் ஆதரவு இருக்கிறது என்பது நமக்கும் புதிய தகவல்தான்

மேலும் எப்படி புகழை சீக்கிரம் அடைவது என்பதை சின்னவயதிலேயே இந்த பெண் தவறாக கற்றுக்கொண்டாள்
என்றும் ரெபெக்காவின் மேல் குற்றசாட்டுகள் அதிகம்

தவிர ரெபெக்காவுக்கு எண்ணற்ற கொலை மிரட்டல்கள் வேறு வந்தவண்னமிருக்கிண்றனவாம் ஆனலும் அமெரிக்க பாப்பி ரெபாக்கா இதற்கெல்லாம் கவலைபடவில்லை.

இவ்ரது புதிய பாடலன் மை மூவ்மெண்ட் வெளியான ஒரெ மாததில் ஒருகோடி பார்வையாளர்களை பெற்று விட்டது
ஒருமாத்தில் ஒரு கோடி என்றால் ஒருநாளைக்கு எத்த்னை பேர் பார்ப்பார்கள் என கண்க்கிட்டு பருங்கள் ..குறைந்தது ஒருநாளைக்கு இரண்டுலட்சம் வரும்.. .....ஆவ்வ்வ்வ்வ் வ்வ்வ்வ்வ்வ் ....வ்வ்வ்.....வ்வ்

அவரது புகழுக்கு காரணமான பரைடே எனும் பாடலை பார்த்தால் நீங்க்ளும் உணர்ச்சி வசப்ப்டாலம்

.......என எழுதிவிட்டு அப்படலை இணைக்க யூட்யூபில் தேடியபோது அதிர்ச்சி பெரும் அதிர்ச்சி ஒரிஜினல் கிடைக்கவில்லை . பலரும் அவளது ஒரிஜினல் பாடலை வைத்து ரீமிக்ஸ் செய்து பாரோடி(கிண்டல்) பண்ணுவதால் மனம் நொந்து ரெபெக்கா அப்படலை எடுத்துவிட்டதாக அறிந்தேன் வேறு சில காரணங்களுக்காவும் இதை ரெபெக்கா எடுத்திருக்கலாம் தெரியவில்லை இப்போது யூட்யூபில் கிடைப்பதெல்லாம் ரெபெக்காவை கிண்டல்(parody) செய்து எடுக்கப்பட்ட பாடல்கள்தான் .இதுவே கிட்டத்ட்ட 500க்கும் மேலாக இருக்கிறது என்றால் ரெபெக்காவிற்கு இருக்கும் எதிர்ப்பை பாருங்கள். இத்தனை எதிர்ப்பும் ஜஸ்டின் ஆதரவாளர்கள் உண்டாக்கிய சதி என்று கூட கூறுகிரார்கள் ரெபெக்கா ஆதரவாளர்கள் .இறுதியாக பதிவேற்றம் செய்த சில நிமிடங்களில் முகநூல் வழியாக தோழி ஒருவர் மூலம் இணைப்பும் கிட்டியது

http://www.youtube.com/watch?v=ip2bBjMDYog&feature=related

யூ ட்யூப் இளவரசி-ரெபேக்கா ப்ளாக்




முளைத்து மூணூ இலை விடலை அதுக்குள்ள ஆட்டம் ஆடுதுன்னு அடிக்கடி சொல்வார்கள் அதுக்கு என்ன அர்த்தமோ தெரியவில்லை. அமெரிக்காவை கலக்கும் இந்த பதினாலு வயதுபெண்ணை பார்த்தாள் அப்படி ஒரு கேள்வியை கேட்க தோணுகிறது .இவள் பெயர் ரெபெக்கா ப்ளாக் .


இரண்டு மாதங்களுக்கு முன் இது போல் துள்ளல் இசை இளவல் எனும் தலைப்பில் பாப் ஹீரோ ஜஸ்டின் பைபர் பற்றி ஒரு பதிவை இட்டிருந்தேன். அப்போதே இந்த பெண்ணை பற்றியும் சில வார்த்தைகள் குறிப்பிடவேண்டும் என நினைத்தேன். ஆனால் அப்போது ஒத்துவரவில்லை. ரஜ்னி பற்றி அவரை தெரியாதவங்களுக்கு அறிமுகபடுத்தும் போது கமலை பற்றி போற பொக்கில் சொன்னால் சரியாகுமா . அது போலத்தான் சரி இந்த குட்டி பொண்ணுக்கு தனியாக சேவை செய்யலாம என கருதி விட்டிருந்தேன் . இப்பதான் அதுக்கு நேரமும் வாய்த்தது.


ஜஸ்டினாவது பராவாயில்லை பதினேழு வயசு.. பாடல் வீடியோ காட்சிகளில் அப்படி இப்படி அத்து மீறினாலும் மீசை முளைத்துவிட்டது. போனால் போகிறது என விட்டுவிடலாம் ..ஆனால் ரெபெக்கா பதினாலு வயசு .பிறந்ததே 1997ல் தான் . அதற்குள் வெள்ளிகிழ்மை என தலைப்பிட்ட ஒரே பாட்டில் இன்று உலக பிரபலம். இத்தனைக்கும் இந்த வருட ஜனவரியில்தான் இந்தபாட்டு வெளியாகியது அந்த பாடலின் க்ருத்து என்ன தெரியுமா . அமெரிக்காவிலேயே பலர் கடுப்பாகிவிட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்
9ம் வகுப்பு படிக்கும் பெண் வெள்ளிகிழ்மை காலையில் எழுந்திருக்கிறாள். முதல் நினைப்பெ அன்று இரவு பார்ட்டிக்கு போவது பற்றித்தான் . பல் விளக்கி ஸ்கூல் பையுடன் பஸ் பிடிக்க பேருந்து நிலையத்தில் இருக்கிறாள் .அங்கு மேலே திறந்த விடப்ப்ட்ட கல்யாண ஊட்வல டைப் காருடன் வருகிறது அராத்து சில் வண்டுகள். எல்லாம் அரை டவுசர் கோஷ்டிகள் காலையிலெயே ஸ்கூலுக்கு போகாமல் பார்டிக்கு . போகலாம் என அவளையும் அழைக்கிறார்கள் . விளங்குமா (..சாலமன் பாப்பையா த்வனியில் படிக்கவும் )

இதில் பத்தாக்குறைக்கு அப்பெண்னுக்கு பெரும் குழ்ப்பம்

குழப்பம் காரில் ஏறுவதா வேண்டாமா என்பதில் இல்லை

காரில் முன் சீட்டில் அமருவதா பின் சீட்டில் அமருவதா எந்த சீட்டில் அமர்வது இதுதான் அவளுக்கு ப்ரச்னை

இதெல்லாம் தான் பாடல் வரிகள் .. ஆனால் பாருங்க்ள் இந்த பாட்டு பெரிய ஹிட் . இது பிடிக்காத ஜஸ்டின் பைபர் ரசிகர்களுக்கும் ரெபெக்கா ப்ளாக் ரசிகர்களுக்கும் யூ ட்யூபில் சோடா பாட்டில் பறக்கிறது

யூ ட்யூபில் பலபெண் பாப்பிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு அதிகமான எண்ணிக்கையில் பார்வையாளர்களை பெற்றுள்ளது அவரது ப்ரைடே எனும் பாடல்.

இப் பாடலுக்கு பெற்ற விருப்புகளின் எண்ணிக்கை ஒரு சாத்னை என்கிறார்கள் ஆனால் அதை விடவும் அதிகமான எண்னிக்கையில் வெறுப்புகளை பெற்றுள்ளது இந்தபாடல் என்பது தான் இதில் நாம் கவனிக்க வெண்டிய விடயம்

ரெபெக்காவை பாராட்டுபவர்களை விட சமூக சீரழிவின் அடையாளம் என கூக்குரலிடுபவர்கள்தான் அதிகம்

ஆனால் அமெரிக்காவில் இது போன்ற குரல்களுக்கும் ஆதரவு இருக்கிறது என்பது நமக்கும் புதிய தகவல்தான்

மேலும் எப்படி புகழை சீக்கிரம் அடைவது என்பதை சின்னவயதிலேயே இந்த பெண் தவறாக கற்றுக்கொண்டாள்
என்றும் ரெபெக்காவின் மேல் குற்றசாட்டுகள் அதிகம்

தவிர ரெபெக்காவுக்கு எண்ணற்ற கொலை மிரட்டல்கள் வேறு வந்தவண்னமிருக்கிண்றனவாம் ஆனலும் அமெரிக்க பாப்பி ரெபாக்கா இதற்கெல்லாம் கவலைபடவில்லை.

இவ்ரது புதிய பாடலன் மை மூவ்மெண்ட் வெளியான ஒரெ மாததில் ஒருகோடி பார்வையாளர்களை பெற்று விட்டது
ஒருமாத்தில் ஒரு கோடி என்றால் ஒருநாளைக்கு எத்த்னை பேர் பார்ப்பார்கள் என கண்க்கிட்டு பருங்கள் ..குறைந்தது ஒருநாளைக்கு இரண்டுலட்சம் வரும்.. .....ஆவ்வ்வ்வ்வ் வ்வ்வ்வ்வ்வ் ....வ்வ்வ்.....வ்வ்

அவர்து புகழுக்கு காரணமான பரைடே எனும் பாடலை பார்த்தால் நீங்க்ளும் உணர்ச்சி வசப்ப்டாலம்

முளைத்து மூணு இலை வுடலை என மூக்கின் நுனி சிவப்பாகலாம்

ஆனால் அதற்காக இரண்டாம் முறை பாடலைகேட்டுவிடாதீர்கள் அப்புறம் நீங்களும் என்னைப்போல இவள் அழ்குக்கும் குரலுக்கும் அடிமையாகி தொலைப்பீர்கள்

இலக்கியம் சினிமா அது இதுன்னு உருப்படியான் விஷயம எழுதறதை விட்டு இப்ப இந்த பொண்ணை இங்க நான் அறிமுகப்படுத்த காரணம் ....


முதல்ல இந்த பாட்டை நீங்களும் ஒருமுறை பாருங்க

நீங்களே புரிஞ்சுக்குவீங்க




http://www.youtube.com/watch?v=nVlY3ZTrBkw&feature=related




இதை பார்ப்பவர்கள் ரெபெக்கா ப்ளாக்கை கிண்டலடித்து செய்யப்பட்ட இந்த பாடலையும் கண்டு உற்சாகமடைந்து இந்த நாளை எனக்காக அர்ப்பணியுங்கள் ..





July 30, 2011

டிங்கோ புராணம் - 3 டிங்கோவின் புகழ்பெற்ற தொப்பி கவிதை

எல்லா குரங்குகளும் தொப்பியை
கழற்றி காற்றில் வீசுகின்றன
குரங்குகளின் மடத்தன்மை மறுத்து .
காற்றில் தடுமாறுகின்றன தொப்பிகள்
வேறிடம் செல்ல விழைந்து
தொப்பியை கழற்றி வீசுவதும்
மாட்டுவதுமாய் சிரித்துக்கொண்டிருக்கிறான் அவன்.
குரங்காய் இருப்பதைக்காட்டிலும் உன்னதம்
தொப்பிகளாய் காற்றில் நடனம் பயில்வது
------ டிங்கோ (உலக கவி )

July 27, 2011

டிங்கோ புராணம் 2– கவிதை தொடர்


இரண்டாம் சந்திப்பு



இம்முறை
இரண்டு நாட்களுக்கு பின்
டிங்கோவை
கடைவீதியொன்றில் பார்த்தேன்

பின்னால் ஒரு பெண் துரத்த
சிக்னலில் தடுமாறிக்கொண்டிருந்தான்

கைகளில் ஒரு ஜோடி செருப்பு
தலையில் வட்ட குல்லாய்
அவன் கண்கள் அங்குமிங்குமாய்
மிகவும் பதட்டமாக இருந்தான்


வண்டியில் நகர்ந்து கொண்டே
கையசைத்தேன்
டிங்கோ நீ ஒரு கவிஞன்
என உரக்க கூவினேன்

டிங்கோ அதிர்ச்சியில் உறைந்து நின்றான்
காலம் கடந்து செல்லும்
ஒரு சிலை போல

டிங்கோ புராணம் – கவிதை தொடர்


டிங்கோ புராணம் – கவிதை தொடர்

1.
செருப்பு திருடன் டிங்கோ வின் வீட்டிற்கு
காதலியுடன் மாலையில் சென்றிருந்தேன்.

முந்தின இரவு
குறி சொல்பவளின் வீட்டில்
அவளது செருப்பு தொலைந்திருந்தது.

வாசலில் இருந்த பாட்டிமார் இருவர்
டிங்கோ ஒரு அப்பாவி
அவன் மேல் வீண் பழி வேணாம்
என புலம்பிக்கொண்டிருந்தனர்

டிங்கோ வின் அம்மா
பல வண்ண காலணிகளை
எங்கள் முன் கடை பரப்பினாள்

பச்சை நீலம் சிவப்பு
மஞ்சள் ஊதா கருப்பு
குதிகால் உயர்ந்தது
பின்பக்கம் வார்வைத்தது
மற்றும்
ஏழை சிறுமிகளின்
தேய்ந்த ரப்பர் செருப்புகள்

அல்லாமல்
முழுதும் செருபுகளால் நிரம்பிய
அறையொன்றையும்
திறந்து காண்பித்தாள்

டிங்கோவின் தங்கை
மரத்தூணின் மறைவிலிருந்து
எங்களுக்கு குரங்கு காட்டினாள்

பாட்டிகளின் சாபம் பின் தொடர
ஏமாற்றத்துடன் படியிறங்கினோம்

தெருவில் டிங்கோ
ஐஸ் க்ரீம் வண்டிக்கருகே
நின்றுகொண்டிருந்தான்-அவன்
அருகிலிருந்த குருட்டு
பெண்னின் கால்களில் -என்
காதலியின் செருப்பு

நானும் காதலியும்
எதுவும் பேசாமல்
அவர்களை
கடந்து வந்தோம்

July 23, 2011

செம்மொழி சிற்பிகள் : 9 இரா. இராகவையங்கார்

இரா. இராகவையங்கார்

பிறப்பு ;20- 09- 1870

வள்ளல் பாண்டித்துரைத்தேவர் நான்காம் தமிழ்சங்கத்தை துவக்கியபோது அவருடன் அக்காரியத்தில் இயைந்து தமிழ்தொண்டு நிமித்தம் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை திரட்டிஅவற்றை நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் . மட்டுமல்லாமல் காளிதாசனின் சாகுந்தலத்தையும், வால்மீகியின் இராமாயணத்தையும் நம் தமிழுக்குதந்தவர்.

தமிழ்த்தொண்டிற்கு பேர் போன இரண்டு இராகவையாங்காரில் மூத்தவர்
இன்னொருவரான மு. இராகவையங்கார் வேறு யாருமில்லை இவரது மருமகன்தான்.

சிவகங்கை சீமையின் தென்னவராயன் புதுக்கோடையில் பிறந்தவர்
தந்தை இராமானுஜ ஐயங்கார், தாயார் பத்மாலோசனி. தாய்மாமன் முத்துசாமி ஐயங்காரால் வளர்க்கப்பட்டவர். அவரது தமிழ் பற்றும் தமிழ் ஆர்வமும்தான் இரா.இராகவையங்காரிடம் ஓட்டிக்கொண்டது. உடன் வடமொழியிலும் அவரிடமே புலமை பெற்றார்.பின் மெட்ரிகுலேசன் வரை பயின்று ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டார்.

இராமாநாதபுரத்தை ஆண்ட பாஸ்கர சேதுபதி முத்துராமலிங்க ராஜ ராஜேஸ்வர சேதுபதி,சண்முக ராஜேஸ்வர சேதுபதி ஆகியோரிடம் அரசவை புலவராக சில காலம் பணிபுரிந்தார். இக்காலத்தில் இவரது தமிழ் புலமை சமஸ்தானம் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டது.

இச்சமயத்தில்தான் வள்ளல் பாண்டித்துரை அவர்கள் இவரை தன் நான்காம் தமிழ் சங்கத்திற்கு பணிபுரியுமாறு அழைப்புவிடுக்க அங்க்கிருந்து கொண்டு செந்தமிழ் எனும் இதழை துவக்கி ஆசிரிய பொறுப்பேற்று அதில் எண்ணற்ற ஆராய்ச்சிகட்டுரைகளை எழுதிதள்ளினார். இதனை கேள்வியுற்ற இராஜா சர் அண்ணாமலைசெட்டியார் அவர்கள் இவரை தனது அண்ணமலை பல்கலைகழகத்துக்கு தமிழ்த்துறையில் விரிவுரையாளராக பொறுபேற்குமாறு அழைப்புவிடுத்தார். அப்பணியில் சேர்ந்தவுடன் அவர்களை பதிப்புத்துறைக்கு ஆர்வம் பெற வைத்து அதற்கு தானே தலைவர் பொறுப்பையும் ஏற்றார். அதன் முதல் வெளியீடாக கடை யேழுவள்ளல் களில் ஒருவனான பாரி மன்னின் கதையை செய்யுளாக இயற்றி பாரிகாதை எனும் நூலையும் எழுதினார்.தொடர்ந்து சங்க பெண் கவிஞர்களை பற்றி நல்லிசை புலமை மெல்லியளாலர்கள் எனும் தலைப்பில் அரிய நூலொன்றையும் எழுதிவெளியிட்டார்..குறுந்தொகை பட்டினப்பாலை பெரும்பாணாற்றுபடை ஆகியவற்றிற்கு விளக்க உரையும் இவர் தீட்டியுள்ளார்.

இவற்றோடு இனியவை நாற்பது,நான்மணிக்கடிகை முத்தொள்ளயிரம் மற்றும் இன்னும் சில அரிய பைந்தமிழ் ஏடுகளை தேடிக்கண்டுபிடித்து அவற்றை நூலாக பதிப்பித்துள்ளார். மீனாட்சி சுந்தரம்பிள்ளை க்கு அடுத்து தமிழ் தாத்தா உ.வே,சாவால மகாவித்துவான் என அழைக்கப்பட்ட ஒரே புலவர் நம் இரா. இரகவையங்கர் என்பது ஒன்றே போதும் அவரது தமிழ் புலமைக்கு தரச்சான்று கூற.

விவேகானந்தர் சிக்காகோ மாநாட்டுக்கு சென்று திரும்பிய போது அவருக்கு
வள்ளல் பாண்டித்துரை அவர்களின் அவையில் வரவேற்புரையும் வாழ்த்துரையும் வாசித்தவர்.

மறைவு:11-7- 1946

July 15, 2011

காட்பாதர் :கெட்டவர்களின் அறம். சினிமா அழகியலின் அகராதி


உலக சினிமா வரலாறு-மூன்றாம் பாகம் -நவீன யுகம்




முதல் பாகம்-1805முதல் 1927 வரை- மவுன யுகம்
இரண்டாம் பாகம் -1927 முதல் 1972 வரை-மறுமலர்ச்சியுகம்
இவற்றை தொடர்ந்து இந்த இதழிலிருந்து 1972 முதல் நவீன யுகம் துவங்குகிறது.

மவுன யுகத்தில் தனக்கான கலையை மொழியை வடிவம் கண்டு கொண்ட சினிமா மறுமலர்ச்சியுகத்தில் தனது கலையின் மகத்தான படைப்புகளையும் மகோன்னத கலைஞர்களையும் அடையாளம் கண்டு கொண்டது.இதுவரையிலான சினிமா வரலாற்றின் ஆகசிறந்த இயக்குனர்கள் மறுமலர்ச்சி காலத்தை சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அது போலவே படைப்புகளும்

அப்படியானால் நவீன யுகம் ?

கடவுளின் இன்மை தான் நவின யுகம் பிரதானபடுத்திய ஒற்றை கோஷம் .
கடவுள் இறந்துவிட்டார் எனற நீட்ஷே வின் புகழ்பெற்ற வாசகத்தை அந்த தத்துவத்துக்கு பின்னாலிருந்த அரசியல் காரணங்களை முன்னிறுத்துவதாக அமைந்தது நவீன யுகத்தின் ஆகசிறந்த திரைப்ப்டங்கள்.

அதுவரை கலைசினிமாவுக்கும் வணிக சினிமாவுக்கும் இடையில் இருந்த கோடு மெல்ல அழிய துவங்கியது நவீன யுகத்தின் மிக முக்கிய விளைவு.. இரண்டுக்குமிடைப்பட்ட பேர்லல் சினிமா எனும் புதிய ரசனை உலக்மெங்கும் வரவேற்பை பெற துவங்கியது. இதனால் பலன் அடைந்தது என்னவோ அமெரிக்க சினிமாக்கள்தான் இதனால வன்முறையின் மூலம் புதிய அறங்கள் அதிகம் வெளிச்சமிடப்ப்ட்டன.

அதுவரை மறுமலர்ச்சி யுகத்தில் பிரதானபடுத்தப்ட்ட மனித மனம் பின்னுக்குதள்ளப்பட்டது
வெற்று ரசனைகளை கடந்து சமூகத்தின் அவலங்கள் வன்முறை எனும் கவர்ச்சியின் மூலம் வெளிக்கொணரப்பட்டன.

..மேலும் தனி மனித இருப்பு குறித்த கேள்வி? .இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு குறித்த தேடல்,ஆகியவற்றுடன் கற்பனையின் முழு வீச்சில் அறிவியலின் சாத்தியங்களை தொழில் நுட்பத்தின் உதவியுடன் வெளிப்படுத்துவது ஆகிய அமசங்கள் இந்தப் யுகத்தை ஆக்ரமித்திருந்தன.

சுருக்கமாக சொல்வதனால் வரவேற்பறையிலிருந்த காமிரா புழக்கடைக்கும் இடம் பெயர்ந்தது




நவீன யுகம் .1

காட்பாதர் :கெட்டவர்களின் அறம். சினிமா அழகியலின் அகராதி

”காட் பாதர் உண்மையிலே ..தலைசிறந்த படங்களில் ஒன்றா”?

இன்னமும் இந்த கேள்வி உலகம் முழுக்க சினிமாவிமர்சகர்களின் மனசாட்சியை உலுக்கிக்கொண்டிருக்கிறது.

ஒரு மாபியா கும்பல் தலைவனை பற்றிய கதை எப்படி கலைபடமாக அங்கீகரிக்கப்படும் ?

மேலும் வணிக சினிமாக்களின் குணம் என அது வரை கருதப்பட்ட மிகை கூறல்.,அதீத வன்முறை பிரம்மாண்ட தயாரிப்பு. பெரிய விநியோகம் போன்ற அத்தனை இலக்கணக்களும் கொண்ட இப்ப்டம் சிறந்த உலகப்ப்டம் என்றால் இத்ர படங்கள் என்ன ?

இந்த கேள்விகளுக்கெல்லாம் இன்று வரை யாரும் சரியான பதிலை சொல்ல முடியவில்லை ஆனாலும் இன்றும் உலக சினிமா தளத்தில் காட்பாதர் எல்லா காலத்திலும் ஆகசிறந்த பத்து படங்களுக்குள் ஒன்றாகவே கருதப்படுகிறது.


சினிமா நூற்றாண்டை ஒட்டி உலகம் முழுக்க நூறு முக்கிய விமர்சகர்களிடம் அவர்களுக்கு பிடித்த பத்து படங்களை ஒரு ஆங்கில இதழ் கேட்டு வாங்கி தொகுத்து வெளியிட்டிருந்தது. அதில் பரவலாக அனைவராலும் அங்கிகரிக்கப்பட்ட முதல் படம் காட்பாதர் தான்..


இதன் மூலம் காட்பாதர் படத்தின் வெற்றி சினிமா என்றால் என்ன கேள்விக்கு புதிய அர்த்ததை எழுதியுள்ளது.

அது வரை சினிமா மொழி .என்பது ஒளிப்பதிவு எடிட்டிங் என்ற இரு பதங்கள் மட்டுமே என்ற எண்ணத்தை இத்திரைப்படம் முழுமையாக மாற்றியது . சினிமா என்ற கலையின் ரகசியங்களில் அரங்க நிர்மாணம் , ஆடை வடிவமைப்பு, மேக் அப் எனப்படும் சிகை மற்றும் முக அலங்காரம் மற்றும் சப்தங்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றின் கலை பங்களிப்பும் அதன் தரத்தை தீர்மானிக்க வல்லது என்பது இதன் மூலம் நீருபணமானது.


1972ல் முதல் பாகம் அடைந்த வெற்றி 1974ல் இரண்டாம் பாகத்தையும் 1987ல் மூன்றாம் பாகத்தையும் உருவாக்கிதந்தது. இந்த மூன்று பாகத்திற்கும் அமெரிக்க எழுத்தாளரான மரிய பூஸோ வின் காட்பாதர் எனும் நாவல்தான் அடிப்படை. . தீமையின் அறம் என்பது,பொருளாதாரத்தால் நசுக்கப்ப்ட்டவர்களின் ஒடுக்கப்ப்ட்ட வாழ்நிலை எனும் புதிய பரிணாமத்தை கவர்ச்சியான கதையாடல் மூலம் கூறிய இந்நாவலின் ஆசிரியர் மரியோ பூஸோ .அமெரிக்க வாழ் இத்தாலியர். வளர்ந்தது அமெரிக்காவில் மன்ஹாட்டனில் இருக்கும் ”நகரத்தின் சமயலைறையில்” ஆம். Hells kitchen. இதுதான் அந்த இடத்தின் பெயர்..


அமெரிக்காவில் ஹட்சன் நதியோரம் இருக்ககூடிய மன்ஹாட்டன் பகுதியின் 8 வது அவென்யூவில் 34 வது தெருவுக்கும் 54வது தெருவுக்கும் இடைப்பட்ட இந்த பகுதிதான் ஹெல்ஸ் கிச்சன் எனும் நகரத்தின் சமையலறையாக அழைக்கப்படுகிறது. எப்போதும் கொலை கொள்ளை வழிப்பறி ஆகியவற்றுக்கு ஆதிகாலம் முதலே அடைக்கலமாக இருந்த காரணத்தால் இதற்கு இந்த பெயர் வாய்த்துவிட்டிருந்தது. மஞ்சள் பத்திரிக்கையில் சிறிதுகாலம் வேலை செய்த மரியோ பூஸோ 1969ல் எழுதிய மூன்றாவது நாவல்தான் காட்பாதர். வெளீயான் நாளிலிருந்தே பெரும் வரவேற்பை பெறத்துவங்கிய இந்நாவல் ஏற்க்குறைய எட்டு பதிப்பகங்களால். நிராகரிக்கப்ப்ட்டது. பெரும் சூதாடியும் குடிகாரனுமான மரியோ பூசோவுக்கு இருந்த கடன் தான் இந்த நாவலை எழுதவும் எழுதிய பக்கங்களை தூக்கிக்கொண்டு தயரிப்பாளர்களிடம் ஓடவும் வைத்தது .

அப்போது பாரமவுண்ட் சினிமாவுக்கு பொறுப்பிலிருந்த ராபர்ட் இவான்ஸ் மரியோபூஸோவின் நாவல்மீது ஒரு கண்வைத்து கணக்கு போட்டார். காரணம் அதில் இருந்த மசாலா வாசம் . கொள்ளைகூட்ட குண்டர்கள் பின்புலம் உடன் கொஞ்சம் இத்தாலிய கவுபாய் படங்களின் சாயல். இந்த காம்பினேஷனில் வெளிவந்தால் எந்த படமும் நிச்சயம் கல்லாபெட்டி கலகலக்கும் என கணக்கு போட்டார். அந்த கணக்குக்கு காரணம் அப்பொது செர்ஜியோனி லியோணியின் கவுபாய் படங்கள் கமர்ஷியலாக உலகம் முழுக்கவும் பெரு வெற்றி கொண்டாட்டத்தை நிகழ்திக்கொடிருந்தன..

அட்வான்ஸாக ஒரு தொகை கொடுத்து கதை உரிமையை வாங்கியவர் ராபர்ட் இவான்ஸ் இயக்குனராக யாரை போடலாம் என மண்டையை போட்டு உழப்பிக்கொண்டிருந்த போது ஆர்தர் பென், கோஸ்டா காவ்ரஸ், எலியா கஸன் , பிரட் ஜின்னமன் என பல பெயர்கள் பரீசலனைக்கு வந்தன. யாராக இருந்தாலும் ஒரு இத்தாலியர் இயக்கினால்தான் அந்த மாபியா குண்டர் தன்மையை படத்தில் கொண்டுவரமுடியும் என முடிவு கட்டினார்.ஆனால் அவ்ர் அழைத்த யாரும் முன் வரவில்லை. இறுதியா கவுபாய் படங்களை இயக்கி புகழ் உச்சத்தில் இருந்த செர்ஜியோ லியோனியையே இயக்குனராக முடிவெடுத்தார். ஆனால் அவருக்கோ தன் முன் வந்திருக்கும் வாய்ப்பு உலக சினிமாவரலாற்றில் அழுத்தமான முத்திரை பதிக்க போகும் படம் என தெரியவில்லை . இச்சமயத்தில்தான் வாய்ப்பு எனும் பகடை இத்தாலியை புர்வீக மாக கொண்ட இன்னொரு புதிய இயக்குனரான கொப்பல்லா வை நோக்கி உருண்டது .

இதற்கு முன் கொப்பல்லா நான்கு படங்கள் இயக்கியிருந்தார். அதில் ஒருபடம் மிகபெரிய வெற்றி. அப்படம் Finian's Rainbow, அப்போது பல பிரச்னை அவரும் அவரது நண்பரும் இயக்குனருமான ஜார்ஜ் லூகாசும் இணைந்து உருவாக்கிய ஜியோட்ரோப் எனும் ஸ்டூடியொ அப்பொது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது. அதை சமாளிக்க உடனடியாக அவர் படம் பண்ணியாகவேண்டிய சூழல் . அதனால் ஒத்துக்கொண்டார்

சரி இயக்குனர் தேர்வாகிவிட்டது அடுத்தபிரச்சனை நடிகர் குறிப்பாக நாயகன் பாத்திரமான டான் கர்லோன் .

யாரை போடலாம் என்ற கேள்விக்கு பேரமவுண்ட் இயக்குனருக்கு சொன்ன ஒரே பதில் யாரை வேண்டுமானாலும் போடுங்கள் ஆனால் அந்த நபர் மட்டும் வேண்டாம் .. யார் அந்த நபர் .. பிராண்டோ மார்லன்பிராண்டோ . அந்த ஆள் ஒரு முசடன். எதற்கும் அடங்க மாட்டான் அவன் நடித்த சமீபத்திய படங்களும் தோல்வி வேறு. ஆனால் கெட்ட பந்தா வுக்கு மட்டும் குறைவில்லை . அவனை மட்டும் போடாதீர்கள் என திட்டவட்டமாக ஸ்டூடியோ நிர்வாகம் கொப்பலாவுக்கு சொல்லிவிட்டது.

ஆனால் எழுத்தாளரான் மரியோ பூசோவுக்கும் இயக்குனருக்கும் இந்த வேடத்தில் மார்லன் பிராண்டோ மட்டும்தான் அச்சு அசலாக பொருந்துவார் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை .

தயாரிப்பாளர்களின் வறுபுறுத்தலுக்காக பலரையும் அழைத்து வசனம் பேசி காட்டசொன்னார்கள் . இத்தாலிய நடிகர்களான லாரன்ஸ் ஓலிவர் முதல் பைசைக்கிள் தீவ்ஸ் இயக்குனர் விட்டோரியா டிசிகா வரை எத்தனையோ பேரை வரவழைத்தார்கள். ம்ம்ஹூம் கொப்பல்லோ பிடிவாதமாக இருந்தார்.
மாரல்ன் பிராண்டோ ஒருவருக்குதான் இந்த பாத்திரம் பொருந்தும் என திட்டவட்டமாக சொல்லிவிட்டார். ஆனால் பேரமவுண்ட் நிர்வாகமோ மசியவே இல்லை. நாம் கேட்க போனால் அந்த ஆள் இன்னும் கொஞ்சம் திமிர் ஏறும். பிடிவாதமாக மறுத்துவிட்டனர் . இப்படியாக இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் டான் கர்லோன் பாத்திரத்துக்கு இழுபறி நீடிக்க இன்னொருபுறம் இதரபாத்திரங்களுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கபட்டனர்
டான் கர்லோனின் இளைய மகன் மைக்கேல் கர்லோன் பாத்திரத்துக்கு அல்பாசினொவும் மூத்த மகன் பாத்திரத்துக்கு மைக்கேல் கேன் உட்பட பலரும் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இதர தொழில் நுட்பகலைஞர்களும் முடிவாகிவிட்டது .ஆனால் இன்னமும் யார் அந்த நாயகன் ? அதுமட்டும் முடிவாகவில்லை. தயாரிப்பு நிறுவனம் கையை பிசைந்தது.

திறமையின் செருக்குக்கு முன் இறுதியில் பணம் பணிந்தது.
மார்லன் பிராண்டோ வுக்கு தகவல் சொல்லப்பட்டது . மரியோ பூசோ எப்போதோ அனுப்பியிருந்த நாவலை பிராண்டோவும் அவரது உதவியாளரும் தேடி எடுத்தனர். உதவியாளர் அலிஸ் இந்தவாய்ப்பை விட்டுவிடாதீர்கள் மிக சிறந்த பாத்திரம் என அழுத்தம் கொடுக்க பிராண்டோ கண்ணாடியில் முகம் பார்த்தார். தன் மேகப் மேனிடம் ஒரு க்ளீப்பை எடுத்துவரச்சொன்னார், .தலைக்கு ஜெல் போட்டு பின்னால் இழுத்து வாரினார். அடுத்த பத்தாவது நிமிடம் எதற்கும் அசையாத இரும்புத்தலையன். டான் கர்லோன் அங்கு தயாராக அதை அப்படியே வீடியோவில் பதிவு செய்து கொப்பல்லோ வுக்கு அனுப்பி வைத்தார்.

படப்பிடிப்பு துவங்கியது. கொப்பல்லோ தன் கற்ப்னையின் அனைத்து ஜன்னல்களையும் திறந்தபடி காமிராமுன் இருந்தார். இதனால் படப்பிடிப்பில் நொடிக்கு நொடி மாற்றங்கள் தொடர்கதையாகின . இது தயரிப்பாளர்களுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியது . பாரமவுண்ட் நிறுவனம் சட்டென கொப்பலோ வை இயக்குனர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு அந்த இடத்தில் எலியாகஸானை கொண்டுவர முடிவு செய்துவிட்டது.

இளம் இயக்குனரான கொப்பல்லோவுக்கு இந்த செய்தி தெரியவந்தது. இது அவருக்கு பெரிய அவமானம் அது மட்டுமல்லாமல் எதிர்கால வாழ்க்கைகே இது முற்றுபுள்ளியாகிவிடும் ..படப்பிடிப்பில் கொப்பல்லோவின் முகத்தில் தென்பட்ட சோகரேகை பிராண்டோவின் கூரிய விழிகளுக்குதப்பவில்லை.
விஷயம் அவருக்கு தெரிய வந்தது. ஒருதாளை கொண்டுவரச்சொல்லி அவசரமாக அதில் இரண்டு வரி எழுதி தயாரிப்பு நிறுவனத்துக்கு கொடுத்தனுப்பினார்.

அதை படித்த தயாரிப்பாளர்கள் முகம் அதிர்ச்சியில் விக்கித்துக்கொண்டது.
“கொப்பல்லோ வைத்தவிர வேறு ஒரு இயக்குனர் இங்கு வந்தால் அடுத்த நிமிடம் நான் வெளியேறிவிடுவேன் ”.
.
பாரமவுண்ட் அடுத்த நாளே படப்பிடிப்பை தொடருமாறு கொப்பலோவுக்கு உத்தரவிட்டது.

கொப்பல்லோ யார் உண்மையில் சிறந்த இயக்குனரா..
பிராண்டோவே வியக்கும் அளவுக்கு அவரிடம் இருந்த திறமை என்ன..
(அடுத்த இதழில்)

July 8, 2011

செம்மொழி சிற்பிகள் 8 காசிவத்தம்பி




கார்த்திகேசு சிவத்தம்பி



நவீன தமிழுக்கு ஈழ்த்தின் கொடை. சங்க இலக்கியத்தை அதன் பெருமையை மேற்குலகம் அறியசெய்தவர்.சங்க இலக்கியங்களுக்கும் , கிரேக்க ரோம இலக்கியக்கங்களுக்கும் இடையிலான் உறவை விவரித்துகாட்டி தமிழின் பாரம்பர்யத்தை நிலைநிறுத்தியவர்.சிறந்த ஆய்வாளர்,விமர்சகர்.

பிறப்பு: 10-05-1932

யாழ்ப்பாணத்தில் கரவெட்டி எனும் ஊரில்பிறந்தவர்.தந்தை கார்த்திகேசு . தாயார் வள்ளியம்மை. தந்தை ஒரு சிறந்த தமிழ் பண்டிதர்.அதனால் இளமையிலிருந்தே இவரது தமிழ் ஆர்வம் வயதோடு வளர துவங்கியது.கரவெட்டி விக்னேசுவரா கல்லூரியில் தொடக்க கல்வியையும்,கொழும்பு சாகிக்கிரா கல்லூரியில் இடைநிலைக்கல்வியும், இலங்கை பேராத்னை பல்கலைகழகத்தில் இளங்கலை,முதுகலை பட்டங்களும் பெற்றார்.உடன் பர்மிங்காம் பல்கலை கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். தமிழ் நாடகதுறை சார்ந்த இவரது ஆய்வேடு இதர ஆய்வுகளை போலல்லாமல் தமிழ்ர் மரபையும் கலை பண்பாட்டையும் பரந்துபட்ட தன்மையில் விரிவான ஆய்வின் பின்புலத்தில் உருவாகியிருந்தது. இக்கட்டுரைகள் பத்தாண்டுகளுக்கு பிறகு நூலாக வெளியாகி தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசையும் வென்றது. இந்நூலுக்கு பிறகு ஈழத்தில் தமிழ் நாடகத்துறை பெரும் மாறுதலை சந்தித்தது எனக்கூறலாம்

பத்தாண்டுகள் கொழும்பு சாகிரா கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்த சிவத்தம்பி அவர்கள் பிற்பாடு யாழ்ப்பண பல்கலைகழகத்தில் பதினேழு ஆண்டுகளும்,இரண்டு ஆண்டுகள் மட்டகளப்பில் கிழக்கு பல்கலைகழகத்திலும் பணிபுரிந்துள்ளார். மட்டுமல்லாமல் சென்னை உலகதமிழராய்ச்சி நிறுவனம்,மற்றும் இங்கிலாந்து ஜெர்மனி ஆகிய நாடுகளில் வருகைதரு பேராசிரியராக பணீபுரிந்துள்ளார்.

வெறும் பேராசிரியராக மட்டுமல்லாமல் மிகச்சிறந்த மார்க்சிய திறனாய்வாளராக தமிழ் உலகம் முழுமைக்கும் அறியப்பட்டிருப்பவர்.
.பின்னாளில் தோன்றிய பின் நவீனத்துவ விமர்சன மரபுக்கு இது முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றோடு இவர் நாடக நடிகரும் கூட . கைலாசபதியும் இவரும் இணைந்து விதானையார் வீட்டில் எனும் நாடகத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தகது. தானே பல நாடகங்களை எழுதி இயக்கவும் செய்துள்ளார்.


பல கல்லூரிகளில் பல்கலைகழகங்களில் பாடத்திட்டங்களை வகுத்துள்ளார்.
நாட்டார் வழக்கற்றியல் துறைக்கும் இவர் ஆற்றிய பணி குறிப்பிடத்தகுந்தது.முல்லை தீவில் நாட்டாரியல் விழா ஒன்றையும் நடத்தியுள்ளார்.தமிழ் இலக்கியம், சமயநூல்கள்,சமூகவியல்,மானிடவியல், அரசியல்,வரலாறு,கவின் கலைகள் ஆகிய துறைகளில் தேர்ச்சியும் பயிற்சியும் மிக்கவர் . மேற்கண்ட இத்துறைகளீல் இலங்கை மற்றும் தமிழ் சூழலில் இதுவரை நடைபெற்று வந்த மாறுதல்களையும் துல்லியமாக கவனித்து தன் ஆய்வுக்குபடுத்தி வந்தது ஒன்றே இவரது பெருமைகளின் சான்று.

July 7, 2011

அரங்கம் அறுத்த நிகழ்த்து கலையும் நாடகக்காரன் முருகபூபதியும்



முருகபூபதி : ஒரு அதீத கலைஞனின் சமூக உடல்



சத்யஜித்ரேவின் அபு சன்ஸாரில் ஒரு காட்சி. அனேகமாக உலகசினிமாவின் அற்புத காட்சிகளூள் ஒன்றாகக்கூட அது இருக்கக்கூடும் . கல்கத்தாவில் தனியறையில் சாப்பாட்டுக்கு வழியில்லாத நிலையில் வசிக்கும் ஆரம்ப எழுத்தாளன் அபுவை நண்பன் ஒருவன் தேடி வருவான் .ஒருமாதத்துக்கு பிறகு அவன் புண்ணியத்தில் அபுவுக்கு வயிறுமுட்ட சாப்பாடு.. நண்பர்கள் இருவரும் இரவு சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பும்போது இருட்டில் இரயில்பாதையில் பேசிக்கொண்டு வருவர் . அப்போது அபு மகிழ்ச்சியால் திளைத்தபடி என்றாவது ஒருநாள் தான் மிகபெரிய எழுத்தாளனாகி கலகத்தாவில் வசதியான வீட்டில் அம்மாவுடன் வந்து வசிக்க போவதாக கைகளை விரித்து மகிழ்ச்சியுடன் தன் கனவை பேசிச்செல்வான் . அவன் பேசிக்கொண்டிருப்பதை நடைமுறை தெரிந்த நண்பன் அப்பாவியாக பார்ப்பான் . ஒரு எழுத்தாளனுக்கு இந்தக் கனவு சாத்தியப்படுமா என்பது போன்ற பார்வை அது.

உண்மையில் அபுவை போலத்தான் சென்னைக்கு வந்த புதிதில் நானும் இருந்தேன். அதே போல ரயில் பாதையோரம் பழவந்தாங்கலில் ஒரு அறையில் வசித்துவந்தேன். பொருள் பற்றி எந்த கவலையுமில்லாமல்.

கனவுகள் பெரிய பெரிய கனவுகள் . கையில் காலணா தங்காது ஆனாலும் கைகளை வீசினால் உலகமே எனக்குச் சொந்தம் என்ற மகிழ்ச்சியுடன் காலால் பூமியை அளப்பேன்.அப்படி அளந்து கொண்டிருந்த ஒருநாள்
மாலையில் என் அறைக்கு நான் இப்பவும் மதிக்கும் எழுத்தாளர் கோணங்கி வந்திருந்தார். கோணங்கி என்னைத்தேடி அறைக்கு வருவது பிரபலமான திரை நட்சத்திரம் ஒரு ரசிகனின் வீட்டுக்கு வருவதுபோல எனக்கு அப்படி ஒரு பரவசத்தை தரக்கூடியது .

அன்று அவருடன் அவரை போலவே இன்னொருவரும் வந்தார்.. பாலா இவன் என் தம்பி முருக பூபதி சீக்கிரம் தஞ்சாவூர்ல நாடகம் படிக்கப் போறான் .நாடகம்தான் அவன் உலகம் பாத்துக்க “ அதே போல் பூபதியிடம் திரும்பி ”டேய் பூபதி பாலா நம்மளைப் போல பாத்துக்க . நீ எப்ப வந்தாலும் ஃப்ரியா இங்க தங்கலாம் எனக்கூறி என் சிறிய அறையை மேலும் பெரிதாக்கினார் . அதுமுதல் பூபதி எனக்கு இன்னொருநண்பன்.

கோவில்பட்டியில் கோணங்கியின் வீட்டுக்குப் போகும் சமயங்களில் பூபதியும் நானும் நல்ல இணை. கோவில்பட்டியில் அவர்களது இந்திராநகர் வீட்டை அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது. அதுவே ஒரு புதிர்த்தன்மை. அந்த வீட்டை தனியாக ஒருவன் தேடி கண்டுபிடித்தாலே அவன் தமிழின் புதிர்க்கதைகள் எழுதத் தகுதியானவன். அங்கு சென்று திரும்பாத நவீன படைப்பாளிகளை விரல் விட்டு எண்ணலாம் . இலக்கிய உலகு அந்த வீட்டுக்கு பெரும் கடன்பட்டுள்ளது. நவீன இலக்கியத்தின் தெற்கு முகவரி என்று கூட அந்த வீட்டை சுருக்கமாக அடையாளப்படுத்தலாம்.

அந்த வீட்டிற்குச் செல்லும் சமயங்களில் சிலசம்பவங்கள் எனக்குள் ஆழமான பாதிப்பை உண்டாக்கியுள்ளன. அதில் ஒன்று கோணங்கி. ஊரிலுள்ள சில முக்கிய இடங்களை நமக்கு அறிமுகப்படுத்தும் பாங்கு .. அதிலும் ஒரு கிணறு .. அதைப் பற்றிச் சொல்லவேண்டும். நான் கோணங்கி முருகபூபதி காலைக்கடன் கழிக்க வெகுதூரம் பொட்டல்காட்டில் நடந்து செல்வோம் . வழியில் ஓரு தூர்ந்த கிணற்றை காண்பிப்பார் கோணங்கி.. அந்த இடமே பூதத்தின் காலடியால் மிதிபட்டது போல தூர்ந்து போய் ஒரு அமானுஷ்யத்தை உண்டாக்கும். இந்த கிணற்றில்தான் ஒரு பெண் விழுந்து தற்கொலை செய்துகொண்டாள் என்பார் .அது உண்மையா பொய்யா தெரியாது ஆனால் ஒரு மர்மம் அங்கு முடிச்சவிழ்ந்து நம்முடன் பயணிக்கத் துவங்கும்.

ஒருமுறை நான் சென்ற போது கோணங்கியின் அம்மா மரண படுக்கையில் இருந்தார். கோணங்கி என்னை அவரிடம் அறிமுகபடுத்த அவர் அந்த முடியாத நேரத்திலும் படுக்கையில் இருந்துகொண்டே என்னை அருகழைத்து நெற்றியில் விபூதி பூசினார்.

கோணங்கியை காட்டிலும் பேச்சுதுணைக்கு பூபதியும் நானும் நல்ல இணை .அவரது சமீபத்திய நாடகம் பற்றித்தான் எங்களது பேச்சு துவங்கும். ஆனாலும் அதன் பின் எங்களது பேச்சு தீவிர இலக்கியம் , ஓவியம் ,சென்னை நாடகச் சூழல் இவற்றைத்தாண்டி பல மீ பொருண்மை வெளிகளில் அலையும். அவர்களது மொட்டைமாடி அறையில் வினோத படங்கள் இருக்கும் .. சிறு பொம்மைகள் எங்களோடு உரையாடத்துவங்கும். செல்லரித்த பழைய புகைப்படங்களில் காணப்படும் நாடகக்காரர்கள் இரவில் தூங்கும்போது தாண்டிச்செல்வர்.... விபரீதங்களும் மர்மங்களும் நிறைந்த கோணங்கியின் மொட்டை மாடி அறையில் மார்கவெஸ் , சல்வடார் டாலி, புதுமைபித்தன், மொசார்ட் .ஜோதி விநாயகம், தஸ்தாயெவெஸ்கி என இறந்துபட்ட மனிதர்களும் அண்டரண்டா பட்சிகள், விசித்திர குள்ளர்கள் .. விக்ரமாதித்யன் பதுமைகள் , சேகுவேரா வின் கை., கர்னல் கிட்டுவின் ஷூ என இரவுகளீல் எதுவும் நம் கண்முன் வர வாய்ப்புள்ளது .அவர்கள் அனைவருக்குமான உலகம் அங்கு சித்தித்திருந்தது. பழைய ஏடுகிழிந்த புத்தகங்கள் நிறைந்த அலமாரிகளில் அவர்கள் ஒளிந்து கொண்டிருப்பதை போன்ற பிரமை எனக்குள் எப்போதுமிருக்கும் இதற்கும் பகுத்தறிவுக்கும் முடிச்சு போட்டால் பதில் இல்லை . ஆனால் இந்த தீவிர சமிக்ஞைகளை புரிந்துகொள்வதன்முலம் நாம் இன்னொரு அனுபவத்துக்கு தயாராக முடியும் மட்டுமல்லமல் பூபதியின் நாடக உடைகள் புராதன பழங்குடி இசைக்கருவிகள் முகமூடிகள் வினோதபுகைப்படங்கள் ஆகியவை அந்த மர்ம அறையில் இருந்தபடி இப்போதும் என்னோடு உரையாடிக்கொண்டிருப்பவையாக இருந்துள்ளன.


பூபதியின் அக உலகம் கோணங்கியின் அக உலகத்தோடு எளிதில் பொருந்தகூடியது ஆனாலும் கோணங்கி வெவ்வேறு உலகங்களூக்குள் சட்டென தாவிவிடுவார் .. பாய்வதிலும் கடந்து செல்வதிலும் தான் அவருக்கு விருப்பம். ஆனால் பூபதியின் உலகம் அப்படிப்பட்டதல்ல .. அது குறிப்பிட்ட ஒரு உலகத்துள் நுழைந்தால் அதன் ஆழத்தில் முங்கி இன்னொரு எல்லையை நோக்கி நீந்துபவை ..கோணங்கி பேச்சுக்கு திரும்பி விடுவார் ஆனால் பூபதி மௌனத்தோடு உரையாடுபவர் . அதனால்தான் அவரது நாடகங்களில் அழுத்தம் அதிகம். ..

பூபதியின் நாடகங்கள் பெரும்பாலும் தொன்ம சடங்குகளை அடிப்படையாகக் கொண்டவை. சடங்குகள் நம் பழங்குடி மரபு. இதில் பல சடங்குகளைத்தேடி பூபதி பல மாதங்கள் காட்டில் அலைந்து திரிந்து கண்டுபிடித்துள்ளார். இப்படியான் ஆராய்சியில் சில மாதங்கள் அவர் மூழ்கி விட்டு வீடு திரும்பியபோது நானும் அப்போது கோவில்பட்டிக்கு சென்றிருந்தேன்.
ஆளே வித்தியாசமாக இருந்தார். தேனீ கூட்டத்தில் மாட்டிக்கொண்டு வெளிவந்தவர் போல, பார்ப்பது பேசுவது எல்லாம் வித்தியாசமாக இருந்தது .. ஏதோ பெர்க்மன் படத்துக்குள் இருக்கிறார் போல ஒரு பிரமை தோன்றும் அதன் பிறகுஅவர் நாடகங்களில் வசனங்கள் மெல்ல பின் வாங்க துவங்கி உடல் அசைவுகள் அதிகம் முக்கியத்துவம் பெறத்துவங்கின .

ஒருமுறை அவரது முக்கியமான நாடகம் நடந்து முடிந்த சமயம். ஆனந்த விகடனில் அந்த நாடகம் பற்றி ஒருகட்டுரை வெளியாகியிருந்தது. வழக்கமாக பூபதியும் அவரது நண்பர்களும் மீடியாக்கலிலிருந்து விலகியிருப்பவர்கள் கோணங்கியை போல.காரணம் மீடியாக்கள் காரணமாக கலைத்த்ன்மை சாரம் இழக்கும் அபாயம் இருப்பதாக அவர்கள் நம்பினர் .ஆனால் அந்தமுறை அப்போது விகடனில் நிருபராக இருந்த அருள் எழிலனின் விருப்பத்தின்பேரில் அக்கட்டுரை வெளியாகியிருந்தது. விகடன் வெளியான சிலநாட்களில் பூபதிக்கு சக நாடகக்காரன் ஒருவனிடமிருந்து ஒரு அநாமதேய கடிதம். பூபதி மீடியாக்காரனாக மாறிவிட்டதாகவும் இனி நாடகத்தை விட்டு சினிமாவுக்கு நுழையபோவதையே இது காண்பிக்கிறது என்பதாகவும் நக்கல் செய்து எழுதப்படிருந்தது அக்கடிதம். அதை படித்த பூபதி மிகவும் விசனப்பட்டுகிடந்த நேரத்தில் அவர்கள் வீட்டுக்குச்சென்றிருந்தேன்.தகவலைகேள்விப்பட்டதும் இலக்கியம் மட்டுமல்லாமல் எல்லாத்துறையிலும் இது போன்ற ஏழரை ஆட்கள் எட்டரை வேலைகளில் ஈடுபவடுதை அறிந்து வருத்தம் கொண்டேன் . அவருக்கு ஆறுதல் எப்படிச் சொல்லலாம் என யோசித்தேன். அவரை மன அழுத்ததிலிருந்து முழுவதுமாக விடுவிக்க அவரது பாணியை கையாள்வதென முடிவு செய்தேன் .

பின் அவரிடம் நாடகம் நடத்துன நிலத்துக்கு நீ என்ன செஞ்சே எனக் கேட்டேன் ?அந்த இடம் ஒரு தேரி காடு நல்ல செக்கசெவேலென சிவந்துகிடக்கும் வளமான செம்மண் பூமி . அதில் பல பூச்சிகள் உயிரினங்கள் தாவரங்கள் செழித்த நிலம் ..அந்த இடத்தில் வெறுமனே பூமியை பயன்படுத்திவிட்டு வரலாமா அதன் சமன் குலைந்திருக்குமல்லா.. எனகேட்டேன் .உடனே ஒரு கெடா வெட்டி பொங்கல் போடு எல்லாம் சரியாகும் என்றேன். அடுத்த சில நாட்களில் அங்கு தன் குழுவினருடன் சென்று பூபதி பொங்கலிட்டு மொட்டை போட்டுக்கொண்டு திரும்பினதாக போனில் தகவல் சொன்னார் . அந்த குரலில் மகிழ்ச்சி தெறித்தது.

இது ஒரு சைக்கலாஜி அவ்வளவுதான் .அப்போதைக்கு அவரை பீடித்திருக்கும் மன அழுத்த்திலிருந்து விடுவிக்க எனக்கு தெரிந்த ஒரே மருந்து அவரை இன்னொரு கொண்ட்டாட்டத்துக்கு தயார்படுத்துவது அவ்வளவே.

இந்த விடயத்தை நான் இங்கே பகிர்வதற்கு காரணம் பூபதி தன் கலையை உணர்வு பூர்வமாகவும் சடங்காகவும் வழிபட்டு அதை எப்படி தனக்கான கலாச்சராமாக மாற்றிக்கொண்டார் என்பதுவே ஆகும். இத்தனைக்கும் அவருக்கு கடிதம் எழுதியவர் மேல் அவருக்கு சிறிதும் கோபமில்லை . ஆனால் அவருக்கிருந்த மன உளைச்சல் எல்லாம் இப்படி ஒரு எதிர்வினை வருமளவுக்கு தன் செயல் இருந்துவிட்டதோ எனும் அச்சம் காரணமாகத்தான். ஆனால் அது தேவையற்றது என்பதை நான் உணர்ந்தேன் ஆனால் சொல்லவில்லை. மாற்று வழியை காண்பித்தேன் அவ்வளவுதான்.

இந்த சம்பவத்தை நான் குறிப்பிடக் காரணம் ஒரு கலைஞனாக அவரிடம் நான் கண்ட பரிபூரண முழுமைதன்மையை உங்களுக்கு விளக்கத்தான். இத்தனை சுயநேர்மையுடன் நாடகத்துறையில் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர் இன்று தமிழ்சூழலில் ஒருவரும் இல்லை .

அவர் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு ஆய்வாளராக பல கிராமங்களுக்கு சென்று பல நாடக நடிகர்கள் மற்றும் நடிகைகளின் புகைப்படங்களை சேகரித்து ஒரு கண்காட்சியும் நிகழ்த்தியுள்ளார். இது ஒரு அரிய பணி .உண்மையில் இது ஒரு அரசாங்கத்தின் பணி .தனி மனிதனாக தன் ஆர்வத்தின் பேரில் மட்டுமே இதை செய்திருக்கிறார். இந்தபணிக்கு அவர் எந்த அங்கீகாரத்தையும் எதிர் இன்று வரை எதிர்பார்த்தவரில்லை. அரசாங்கம் விருது கொடுத்தால்கூட அது அவரை கொச்சைபடுத்துவது போலத்தான். நானும் கூட ஒரு பதிவுக்காகத்தான் இங்கே குறிப்பிடுகிறேன் .

இன்று கிட்டதட்ட நாடகம் என்ற துறையே அழிந்துவிட்டது . எல்லா பட்டறைகளும் கோடம்பாக்க குடியிருப்புகளாக சினிமாவை செழுமைபடுத்த வந்துவிட்ட சூழலில் நம் கண்முன் ஒற்றை ஆளாய் இன்னமும் உறுமிக்கொண்டிருக்கும் உடல் பூபதியினுடையது என்பதில் ஐயமில்லை . அவரது நாடகங்கள் நமக்கு நெருக்கமானதோ இல்லையோ நமது உடல்களுக்கு மிகவும் நெருக்கமானவை. அவரது உடல் அசைவுகள் நாம் மிருகமாக காட்டில் உலவிய காலங்களை மீண்டும் நமக்குள் உணர்த்துபவை. நாடகம் என்பதை தீர்மானிக்கும் சதுரவடிவ அரங்கத்தன்மையை அறுத்து நமக்குள்ளிருக்கும் வெளிகளை மேடையாக்கும் சாத்தியம் கொண்டவை . அப்படியான் ஒரு தமிழ் நாடகக்காரனின் அந்த உடல் நம் முன் மீண்டும் சென்னையில் தோன்ற உள்ளது . வரும் ஜூலை பத்தாம் தேதி பூபதியின் புதிய நாடகம் சூர்ப்பணங்கு ஸ்பெசஸ் எண்: 1, எலியட்ஸ் க்டற்கரை. பெசண்ட் நகரில் நடைபெற உள்ளது. ஒரு புதிய அனுபவத்துக்காக காத்திருப்பவர்கள் அவசியம் தவறவிடகூடாத தருணம் இது..

July 2, 2011

செம்மொழி சிற்பிகள் : 7 வள்ளலார் இராமலிங்க அடிகள்





வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடி நின்றேன் எனகூறி தன் தீந்தமிழால் அன்பை போதித்த மனித நேயர். எளிய தமிழை துவக்கி வைத்தவர் அருளாளர், உள்ளத்தால் ஒருவன் இறைத்தனமை அடையமுடியும் என்பதற்கு இலக்கணமாக இருந்தவர். தமிழின் மூலம் உயிர்களிடத்தில் அன்பை போதித்தவர் சடங்குகளாலும் சாதிகளாலும் புரையோடிக்கிடந்த சமூகத்தை தன் ஒளிமிகுந்த தமிழால் புரட்டிபோட்டவர்.பத்தொன்பதாம் நூற்றாண்டின் நனி சிறந்த தமிழர் வள்ளலார் என தமிழுலகமே ஏற்றுக்கொண்ட இராமலிங்க அடிகள்.

தோற்றம் :05-10-1823

சிதம்பரம் அருகே மருதூரில் பிறந்த அடிகளாரின் இயற்பெயர் இராமலிங்கம். தந்தை ராமையா பிள்ளை. தாயார் சின்னம்மாள். சிறுவயதிலேயே தந்தையை இழந்த காரணத்தால் சென்னைக்கு ஏழுகிணறு பகுதியிலிருந்த அண்ணன் சபாபதியின் வீட்டுக்கு குடும்பம் இடம்பெயர்ந்தது. சபாபதிக்கு தொழிலே பக்திதான் . கோவில் கோவிலாக சென்று சமய சொற்பொழிவுகளை நடத்திவந்தார்.அத்னால் இவருக்கும் சிறுவயதிலேயே கோவில்கள் பரிச்சயமானது .சமயம் கிடைக்கும்போதெல்லாம் கந்த கோட்டம் ,வடபழனி என முருகன் கோவில்களுக்கு சென்று தானாகவே பாடல்கள் புனைவதை இராமலிங்கம் தொழிலாக கொண்டிருந்தார்.துவக்க கல்வியின்போதே தன் புலமையால் ஆசிரியர்களை ஆச்சர்யபடுத்தினார். ஒரு முறை சென்னை முத்தியாலு பேட்டையில் நடந்த கூட்டத்திற்கு உடல் நலமின்மையினால் அண்ணன் சபாபதி சொற்பொழிவாற்ற முடியாமல் போக வேறுவழில்லாத காரணத்தால் அங்கு இராமலிங்கர் தன் முதல் சொற்பொழிவுக்கு காலத்தால் நிர்பந்தப்படுத்தப்ட்டார். அன்று அச்சொற்பொழிவைக்கேட்டவர்கள் பரவசத்துக்கு ஆளாயினர். அன்று தொட்டு இராமலிங்கர் ஊர் ஊராக திரிய ஆர்ம்பித்த்னர்.

தன் அக்காள் மகள் தன்ம் என்பவரை திருமண்ம் செய்தாலும் தமிழும் தவ வாழ்க்கையுமே இவரது இல்லறமாக இருந்தது.கவைதை எழுதுவதையும் பாடல் புனைவதையும் முழுநேர தொழிலாக கொண்ட இராமலிங்கரின் வரிகள் ஆழமாகவும் எளிமையாகவும் புதுமையாகவும் இருந்தன. தனித்திரு, பசித்திரு விழித்திரு,ஒன்றேசெய், நன்றே செய், இன்றே செய் போன்றவை அவர் கூறிய ஆகச்சிறந்த வரிகளில் சில.


முதன் முதலாக முதியோர் கல்வியை தொடங்கியவர். தமிழ் நாட்டில் முதன் முதலாக திருக்குறள் வகுப்பை துவக்கினார் போன்ற பெருமைகளும் இவருக்குண்டு.மனுமுறைகண்ட வாசகம், சீவகாருண்ய ஒழுக்கம் போன்ற சிறந்த உரைநடை நூல்களும் இவரது தமிழ்த்தொண்டின் சிறப்புகள்.

மொத்தம் 5818 பாடல்களை கொண்ட இவரது தொகுப்பு அருட்பா எனப்பட்டது
இவரது பாடல்கள் சமூக மாறுதல்களை பேசின. சடங்கு சம்பிரதயங்களை இவர் கடுமையாக எதிர்த்தார்.உயிர்பலிகூடாது என வறுபுறுத்திய இவர் சாதிமதம் குலம் கோத்திரம் போன்றவை மனிதனை சிறைப்படுத்தும் விலங்குகள். அவை உடைத்தெறியப்பட வேண்டும் என புரட்சிகருத்துக்களை கூறினார். இதனால் இவருக்கு சமூகத்தில் எதிர்ப்புகள் அதிகம் உண்டாயின .

அவற்றுள் யாழ்பாணத்தை சேர்ந்த தமிழ் அறிஞர் ஆறுமுக நாவலரின் எதிர்ப்பு இவரது பாடல்களை அருடபா இல்லை மருட்பா எனக்கூறி வழக்கு தொடுக்கும் அளவிற்கு சென்றது. தமிழகம் முழுதும் அறிஞர்கள் இரண்டு அணிகளாக பிரிந்தனர். கடலூர் வழக்கு மன்றத்தில் நடந்த இறுதிக்கட்ட உசாவலில் இராமலிங்கரின் பாடல்கள் அருட்பாதான் என தீர்ப்பாகியது.

சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை நிறுவி ஏழைமக்களின் பசிப்பிணி போக்க வடலூரில் தருமசாலை ஒன்றயும் 1870ல் நிறுவினார்.
நூறு ஆண்டுகளை கடந்தும் இன்றுவரை அந்த அடுப்பு அணையாமல் எரிந்துவருவது அவரது வாழ்வின் சிறப்புக்கு சான்று.

மறைவு :30-01-1874

June 30, 2011

தொலைவிலில்லை அக்காலம்



ஜூலை-2..பைசைக்கிள்தீவ்ஸ் இயக்குனர். விட்டோரியா டிசிகாவின் 108வது பிறந்த நாளின் நினைவாக....



உலகத்தில் தலைசிறந்த இயக்குநர்களை பட்டியல் போடுங்கள் என தலைசிறந்த விமர்சகர்களிடம் நாம் கேட்போமானால் பலரும் சாப்ளின்,அகிரா குரசேவா,பெர்க்மன்,ஹிட்ச்காக்,ட்ருபோ என பல பெயர்களை கூறுவார்களே தவிர அத்தனை சட்டென யாரும் டிசிக்காவின் பெயரை குறிப்பிடமாட்டார்கள்.அதே சமயம் அவர்களிடமே உலகத்தின் தலைசிறந்த படங்களை குறிப்பிட்டு சொல்லச் சொன்னால் அனைவருமே தவறாமல் சொல்லும் பெயர் பை சைக்கிள் தீவ்ஸாகத்தான் இருக்கும்.என்ன விந்தை!பை சைக்கிள் தீவ்ஸ் பெற்ற புகழை அதன் படைப்பாளி பெற முடியவில்லை.போஸ்ட் மாடர்ன் தியரி,படைப்பாளன் இறந்து விட்டான் எனக் கூறுகிறது.டிசிக்காவை பொறுத்தவரை அது முற்றிலும் சரியே.பை சைக்கிள் தீவ்ஸ் டிசிக்காவை சாகடித்துவிட்டது.இந்த திரைப்படத்திற்கு எற்பட்ட அபரிமிதமான வெள்ளிச்சம் டிசிகாவின் முகத்தை மறைத்துவிட்டது.அதற்காக டிசிகாவை குறைந்தவராகவே நாம் மதிப்பிட முடியாது.

உன்னதமான கலைப் படைப்புகள் எல்லாம் அதனை உருவாக்கிய கலைஞனை மறைத்துக்கொண்டுதான் பிரமாண்டமாக எழுகிறது.இன்னும் சொல்லப்போனால் அவற்றின் நிழலில்தான் அந்த நிழலில்தான் அந்த படைப்பாளன் தஞ்சமடைய வேண்டியதாக இருக்கிறது.டாவின்சியின் அளப்பரிய சாதனைகள் மோனலிசாவின் வசீகரமான புன்னகையின் முன் தகுதி குறைந்துபோயின.உமர்கய்யாமின் காதல் சுவை ததும்பும் வரிகள் அவரது வான சாஸ்திர கண்டுபிடிப்புகளின் மேல் மண்ணைபோட்டது.அதற்காக டாவின்சியோ,உமர்கய்யாமோ,டிசிக்காவோ அவர்களது படைப்புகளின் முன் தகுதி குறைந்தவர்களாக நாம் மதிப்பிட முடியாது.இன்னும் சொல்லப்போனால் நம்மைப் போன்ற ஆட்கள் இந்த விபத்திலிருந்து தப்பித்து, படைப்பைவிட படைப்பாளியை முக்கியமாகக் கருதி அவர்களின் மறைக்கப்பட்ட முகங்களை வெளிச்சத்தில் கொண்டுவந்து அவர்களது படைப்புகளுக்கு இணையாக கொண்டாட்டங்களை உருவாக்க வேண்டும்.

1902 ஜூலை 7-ல் இத்தாலியிலுள்ள சோவா நகரில் பிறந்தவர் விட்டோரியா டிசிகா. தனது 20 வயதிலேயே நடிகராக தன் கலை வாழ்க்கையை துவக்கியவர்.நடிக்க ஆரம்பித்த செற்ப காலங்களிலேயே காமெடியனாகவும்.கதாநாயகனாகவும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவிட்டார்.பின்னாளில் ஹாலிவுட் படங்களில் நடித்து உலகப் புகழ்பெற்ற கவர்ச்சி கன்னிகளான சோபியா லாரன்ஸ்,ஜீனாலோலோ பிரிகிடா போன்ற நடிகைகள் தங்களது ஆரம்ப கால இத்தாலிய படங்களில் டிசிகாவோடு நடித்து தங்களது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார்கள் என்பது பின்னாளில் அவர்கள் பெருமைப்பட்டுக் கொண்ட ஒரு விசயம்.

ஹெமிங்வே எழுதிய பேர்வெல்டு ஆர்ம்ஸ் திரைப்படமாக தயாரிக்கப்பட்டபோது அதில் துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அந்த வருடத்திய ஆஸ்கார் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டார் டிசிகா 1940-ல் ரோஸ் ஸ்கேர்லட் என்ற திரைப்படத்தின் மூலமாக தன்னை இயக்குனராக உயர்த்திக்கொண்டார்.இரண்டாம் உலகப்போரின் நெருக்கடியில் அப்போது இத்தாலி சிக்கிதவித்துக் கொண்டிருந்த காரணத்தால் அந்த படம் கவனிக்கப்படாமல் போனது.

1943ல் வெளியான திரைப்படம் THE CHILDREN ARE WATCHING US ...அவரை வியப்புடன் பார்க்க வைத்தது.இந்தப் படத்தில்தான் நியோ ரியலிஸத்தின் மூலகர்த்தாக்களில் ஒருவரான கதாசிரியர் ஜெவட்டினியுடன் கூட்டு சேர்ந்தார். தொடர்ந்து மூன்று படங்கள் இருவரும் இணைந்து நியோ ரியலிஸத்தின் அலையை இத்தாலி தொடங்கி உலகம் முழுவதும் ஏற்படுத்தினார்கள்.

ஒரு நடிகர் இயக்குனராக மாறும்போது துவக்கத்தில் ஏற்படும் கசப்புணர்ச்சியே ஆரம்பத்தில் அன்றைய இத்தாலிய திரைப்பட சூழலில் நிலவியது.

1946-ல் வந்த ஹுஷைன் வெற்றியை தொடர்ந்து இத்தாலிய சினிமா சஞ்சிகைகள் டிசிகாவை கொணடாடத்துவங்கின.அதற்கு முன் திரைப்படத்துரையில் சோசலிச எதார்த்த வாதமே ரியாலிசம் என்னும் பெயரில் ரஷயாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது.அது எதார்த்தத்தை அப்படியே படம் பிடித்து காட்டுவதாக இருந்தது.அந்த ரியலிஸ காலத்தில் சமுக நுண்ணுணர்வுகள் எதுமற்று வெறுமனே கதைக்குள் காட்சிகளை கூர்ந்து கவனிப்பவர்களாகவும் மன ஒட்டங்களை பதிவு செய்பவர்களாகவும் மட்டுமே இயக்குனர்கள் தங்களின் கலை திறமையை கண்டடைந்து புகழ்பெற்றுள்ளனர்.

இரண்டாம் உலகப் போர் ஏற்படுத்திய சரிவு ஐரோப்பாவையே சீர்குலைத்திருந்தது. போரில் ஏற்பட்ட அழிவு காரணமாக அச்சம்,பீதி உணர்வே மக்களிடம் அதிகமாக இருந்தது.
இந்த பின்புலன்களின் கட்டமைவோடுதான் 1947ல் வெளியானது பை சைக்கிள் தீவ்ஸ்.வெறுமனே எதார்த்தம் என்று ஏமாற்றாமல் அதற்கு பின்னாலுள்ள அரசியல் சூழலையும்,ஒரு சாதாரண மனிதன் திருடன் ஆவதற்கான அறிவியல் ரீதியான காரணிகளையும் கொண்டு இத்திரைப்ப்டம் வெளியானது. சுருக்கமாக சொல்லப்போனால் அக்காலத்தைய இத்தாலி அடிதட்டு மக்களின் ஆன்மாவின் குரலாக இருந்தது பை சைக்கிள் தீவ்ஸ்.

இந்த படங்கள் எதார்த்தமாகவே இருக்கின்றன.ஆனால் அதே சமயம் மக்களுக்கு பலவிதமான அரசியல் பின்புலன்களையும் சமூக அக்கறையுடன் எடுத்துரைக்கின்றன.இவை ரியலிஸத்தை விட நூட்பமாக கவனத்தில் எடுத்துரைக்கின்றன.இவை ரியாலிசத்தை விட நுட்பமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியவை என கருதி இந்த படங்களுக்கு புதிய அடைமொழியாக நியோ ரியலிஸம் என பெயர் சூட்டி இதன் பிரதமகர்களாக டிசிக்காவையும்,ஜெவட்னியையும்,ரோபர்டோ ரோஸலினியையும் அறிவித்து மகுடம் சூட்டினர்.இதுதான்,நியோ ரியலிஸம் தோன்றிய கதை.சுருக்கமாக சொல்வதாக இருந்தால் கதைக்கும் அந்த படத்திற்கும் உண்மையாக இருப்பது ரியலிஸம்.வாழ்க்கைக்கும் வரலாற்றுக்கும் உண்மையாக இருப்பது நியோ ரியலிஸம்.

படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ஒரு கூலித் தொழிலாளி.அதுநாள் வரை சினிமா சூட்டிங்கை பார்த்திராதவர்.தான் வேலை செய்யும் தொழிற்சாலையில் இரண்டு மாதங்கள் லீவு போட்டுவீட்டு வந்து நடித்தார்.அதேபோல முதல் நாள் சூட்டிகை வேடிக்கை பார்க்க வந்த சிறுவன்தான் படத்தில் சிறுவனாக நடித்த ப்ரூனோ.

படத்தை மேலோட்டமாக பார்க்கும் பார்வையாளனுக்கு ஒரு காவிய சோகம் நிரம்பிய கதை ஒன்று சொல்லப்பட்டிருந்தது.சைக்கிளை திருட்டு கொடுத்தவன் வேறு வழியேயில்லாமல் வேறெறொரு சைக்கிளை திருடும்போது மாட்டிக்கொண்டு திருடனாக அறியப்படுகிறான்.

இந்த கதை உலகெங்கும் எந்த மூலையிலிருப்பவருக்கும் சென்றடையக்கூடியதாக இருப்பதுதான் இந்த படத்தின் வெற்றி என்கிறார் ஆந்திரேபஸன்.அதேசமயம் உலகின் மிகசிறந்த சினிமா ரசிகன் ஒருவனுக்கும் அவனால் முழுவதும் கண்டறிய முடியாத பல நுட்பங்கள் திரைக்கதையிலும் திரைப்படமாக்கத்திலும் உருவாக்கம் பெற்றுள்ளன.பைசைக்கிள் தீவ்ஸின் தனித்தன்மை இவைதான்.

எனது கணிப்புப்படி உலகின் மிகச் சிறந்த படங்கள் இரண்டை சொல்லச் சொன்னால் ஒன்று பை சைக்கிள் தீவ்ஸையும்,அதற்கு முன்பாக சாப்ளினின் தி கிரேட் டிக்டேடரையும் சொல்வேன்.இரண்டுமே வரலாற்றை சொன்ன படங்கள்.ஒன்று போருக்கு பிந்தைய அழிவைக் காட்டியதென்றால்,மற்றொன்று போருக்கு காரணமான ஹிட்லரின் இனவெறியை நேரிடையாக இடித்துரைத்து.இரண்டுமே மனிதகுல விடுதலைக்காக தங்களது பாணியில் அழுந்தி பதியவைத்த படங்கள்.

இந்த இருவருக்கும் இடையேயிருந்த ஒப்புமையின் காரணத்தாலோ என்னவோ டிசிகா பைசைக்கிள் தீவ்ஸை சாப்ளினுக்கு தன் வழ்நாளின் கடப்பாடு என பகிரங்கமாக அறிவித்தார்.

மகத்தான் கலைஞன் தன் படைப்பின் முதுகில் வரலாற்றின் வலியை எழுதி வைப்பான்.காரணம் வரலாற்றின் ஆவணங்களைத் தேடும் எதிர்கால சமூக விஞ்ஞானிகளின் விரல்கள் இந்த சமூகத்தின் கலைப்படைப்பையே முதலில் தேடி வரும். இதை எதற்கு சொல்கிறேன் என்றால் தங்களது திறமைகளின் மூலமாக உலகம் முழுவதும் அறியப்பட்ட இயக்குனர்கள் பலர் தங்களின் வலிமையையும் சோகத்தையும் மறைத்து வந்திருக்கின்றனர்.காலம் அவர்களின் பெயரை வலக்கையால் எழுதி இடக்கையால் அழித்து வந்திருக்கின்றது.அவர்களது கலைச் செழுமைகள் அனைத்தையும் காலாவதியாக்கியது.


மேன்மையான மனிதர்கள் கொண்டாடப்படும்போது ஒரு சமூகம் தானாகவே நாகரீகமடைகிறது.ஒருவிதமான மறுமலர்ச்சி தமிழகத்தின் ஊடகம் மற்றும் அறிவு சார்ந்த சூழலில் காணப்படுகிறது.நல்ல் எழுத்துக்கள்,நல்ல படைப்பாளர்கள் ஒரளவு வல்லமை பெறுகின்றனர்.அறிவார்ந்த மக்களே நாளைய தமிழ் சமூகத்தை ஆள தகுதியுடைவராவர்.தொலைவில்லை அக்காலம்.

(2002 ல் டிசிக்காவின் நூற்றாண்டை யொட்டி நான் ஏற்பாடு செய்த சிலம்பு 2002 குறும்பட விழாவின் மலரில் வெளியான் கட்டுரை இது .. முன்னதாக தமுஎச எம் எம் டிஏ கிளை டிசிகா நூற்றாண்டை ஒட்டி ஏற்பாடு செய்த விழாவிலும் இக்கட்டுரை வாசிக்கப்ப்ட்டது )

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...