July 23, 2011

செம்மொழி சிற்பிகள் : 9 இரா. இராகவையங்கார்

இரா. இராகவையங்கார்

பிறப்பு ;20- 09- 1870

வள்ளல் பாண்டித்துரைத்தேவர் நான்காம் தமிழ்சங்கத்தை துவக்கியபோது அவருடன் அக்காரியத்தில் இயைந்து தமிழ்தொண்டு நிமித்தம் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை திரட்டிஅவற்றை நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் . மட்டுமல்லாமல் காளிதாசனின் சாகுந்தலத்தையும், வால்மீகியின் இராமாயணத்தையும் நம் தமிழுக்குதந்தவர்.

தமிழ்த்தொண்டிற்கு பேர் போன இரண்டு இராகவையாங்காரில் மூத்தவர்
இன்னொருவரான மு. இராகவையங்கார் வேறு யாருமில்லை இவரது மருமகன்தான்.

சிவகங்கை சீமையின் தென்னவராயன் புதுக்கோடையில் பிறந்தவர்
தந்தை இராமானுஜ ஐயங்கார், தாயார் பத்மாலோசனி. தாய்மாமன் முத்துசாமி ஐயங்காரால் வளர்க்கப்பட்டவர். அவரது தமிழ் பற்றும் தமிழ் ஆர்வமும்தான் இரா.இராகவையங்காரிடம் ஓட்டிக்கொண்டது. உடன் வடமொழியிலும் அவரிடமே புலமை பெற்றார்.பின் மெட்ரிகுலேசன் வரை பயின்று ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டார்.

இராமாநாதபுரத்தை ஆண்ட பாஸ்கர சேதுபதி முத்துராமலிங்க ராஜ ராஜேஸ்வர சேதுபதி,சண்முக ராஜேஸ்வர சேதுபதி ஆகியோரிடம் அரசவை புலவராக சில காலம் பணிபுரிந்தார். இக்காலத்தில் இவரது தமிழ் புலமை சமஸ்தானம் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டது.

இச்சமயத்தில்தான் வள்ளல் பாண்டித்துரை அவர்கள் இவரை தன் நான்காம் தமிழ் சங்கத்திற்கு பணிபுரியுமாறு அழைப்புவிடுக்க அங்க்கிருந்து கொண்டு செந்தமிழ் எனும் இதழை துவக்கி ஆசிரிய பொறுப்பேற்று அதில் எண்ணற்ற ஆராய்ச்சிகட்டுரைகளை எழுதிதள்ளினார். இதனை கேள்வியுற்ற இராஜா சர் அண்ணாமலைசெட்டியார் அவர்கள் இவரை தனது அண்ணமலை பல்கலைகழகத்துக்கு தமிழ்த்துறையில் விரிவுரையாளராக பொறுபேற்குமாறு அழைப்புவிடுத்தார். அப்பணியில் சேர்ந்தவுடன் அவர்களை பதிப்புத்துறைக்கு ஆர்வம் பெற வைத்து அதற்கு தானே தலைவர் பொறுப்பையும் ஏற்றார். அதன் முதல் வெளியீடாக கடை யேழுவள்ளல் களில் ஒருவனான பாரி மன்னின் கதையை செய்யுளாக இயற்றி பாரிகாதை எனும் நூலையும் எழுதினார்.தொடர்ந்து சங்க பெண் கவிஞர்களை பற்றி நல்லிசை புலமை மெல்லியளாலர்கள் எனும் தலைப்பில் அரிய நூலொன்றையும் எழுதிவெளியிட்டார்..குறுந்தொகை பட்டினப்பாலை பெரும்பாணாற்றுபடை ஆகியவற்றிற்கு விளக்க உரையும் இவர் தீட்டியுள்ளார்.

இவற்றோடு இனியவை நாற்பது,நான்மணிக்கடிகை முத்தொள்ளயிரம் மற்றும் இன்னும் சில அரிய பைந்தமிழ் ஏடுகளை தேடிக்கண்டுபிடித்து அவற்றை நூலாக பதிப்பித்துள்ளார். மீனாட்சி சுந்தரம்பிள்ளை க்கு அடுத்து தமிழ் தாத்தா உ.வே,சாவால மகாவித்துவான் என அழைக்கப்பட்ட ஒரே புலவர் நம் இரா. இரகவையங்கர் என்பது ஒன்றே போதும் அவரது தமிழ் புலமைக்கு தரச்சான்று கூற.

விவேகானந்தர் சிக்காகோ மாநாட்டுக்கு சென்று திரும்பிய போது அவருக்கு
வள்ளல் பாண்டித்துரை அவர்களின் அவையில் வரவேற்புரையும் வாழ்த்துரையும் வாசித்தவர்.

மறைவு:11-7- 1946

No comments:

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...