July 8, 2011

செம்மொழி சிற்பிகள் 8 காசிவத்தம்பி




கார்த்திகேசு சிவத்தம்பி



நவீன தமிழுக்கு ஈழ்த்தின் கொடை. சங்க இலக்கியத்தை அதன் பெருமையை மேற்குலகம் அறியசெய்தவர்.சங்க இலக்கியங்களுக்கும் , கிரேக்க ரோம இலக்கியக்கங்களுக்கும் இடையிலான் உறவை விவரித்துகாட்டி தமிழின் பாரம்பர்யத்தை நிலைநிறுத்தியவர்.சிறந்த ஆய்வாளர்,விமர்சகர்.

பிறப்பு: 10-05-1932

யாழ்ப்பாணத்தில் கரவெட்டி எனும் ஊரில்பிறந்தவர்.தந்தை கார்த்திகேசு . தாயார் வள்ளியம்மை. தந்தை ஒரு சிறந்த தமிழ் பண்டிதர்.அதனால் இளமையிலிருந்தே இவரது தமிழ் ஆர்வம் வயதோடு வளர துவங்கியது.கரவெட்டி விக்னேசுவரா கல்லூரியில் தொடக்க கல்வியையும்,கொழும்பு சாகிக்கிரா கல்லூரியில் இடைநிலைக்கல்வியும், இலங்கை பேராத்னை பல்கலைகழகத்தில் இளங்கலை,முதுகலை பட்டங்களும் பெற்றார்.உடன் பர்மிங்காம் பல்கலை கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். தமிழ் நாடகதுறை சார்ந்த இவரது ஆய்வேடு இதர ஆய்வுகளை போலல்லாமல் தமிழ்ர் மரபையும் கலை பண்பாட்டையும் பரந்துபட்ட தன்மையில் விரிவான ஆய்வின் பின்புலத்தில் உருவாகியிருந்தது. இக்கட்டுரைகள் பத்தாண்டுகளுக்கு பிறகு நூலாக வெளியாகி தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசையும் வென்றது. இந்நூலுக்கு பிறகு ஈழத்தில் தமிழ் நாடகத்துறை பெரும் மாறுதலை சந்தித்தது எனக்கூறலாம்

பத்தாண்டுகள் கொழும்பு சாகிரா கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்த சிவத்தம்பி அவர்கள் பிற்பாடு யாழ்ப்பண பல்கலைகழகத்தில் பதினேழு ஆண்டுகளும்,இரண்டு ஆண்டுகள் மட்டகளப்பில் கிழக்கு பல்கலைகழகத்திலும் பணிபுரிந்துள்ளார். மட்டுமல்லாமல் சென்னை உலகதமிழராய்ச்சி நிறுவனம்,மற்றும் இங்கிலாந்து ஜெர்மனி ஆகிய நாடுகளில் வருகைதரு பேராசிரியராக பணீபுரிந்துள்ளார்.

வெறும் பேராசிரியராக மட்டுமல்லாமல் மிகச்சிறந்த மார்க்சிய திறனாய்வாளராக தமிழ் உலகம் முழுமைக்கும் அறியப்பட்டிருப்பவர்.
.பின்னாளில் தோன்றிய பின் நவீனத்துவ விமர்சன மரபுக்கு இது முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றோடு இவர் நாடக நடிகரும் கூட . கைலாசபதியும் இவரும் இணைந்து விதானையார் வீட்டில் எனும் நாடகத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தகது. தானே பல நாடகங்களை எழுதி இயக்கவும் செய்துள்ளார்.


பல கல்லூரிகளில் பல்கலைகழகங்களில் பாடத்திட்டங்களை வகுத்துள்ளார்.
நாட்டார் வழக்கற்றியல் துறைக்கும் இவர் ஆற்றிய பணி குறிப்பிடத்தகுந்தது.முல்லை தீவில் நாட்டாரியல் விழா ஒன்றையும் நடத்தியுள்ளார்.தமிழ் இலக்கியம், சமயநூல்கள்,சமூகவியல்,மானிடவியல், அரசியல்,வரலாறு,கவின் கலைகள் ஆகிய துறைகளில் தேர்ச்சியும் பயிற்சியும் மிக்கவர் . மேற்கண்ட இத்துறைகளீல் இலங்கை மற்றும் தமிழ் சூழலில் இதுவரை நடைபெற்று வந்த மாறுதல்களையும் துல்லியமாக கவனித்து தன் ஆய்வுக்குபடுத்தி வந்தது ஒன்றே இவரது பெருமைகளின் சான்று.

No comments:

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...