May 21, 2010
மீண்டும் அந்த உயரத்தை நோக்கி
வாருங்கள் புதிய நிலப்பரப்பை
நம் கைகளால் உழுது களிப்போம்
ஒரு வெளிச்சம் நிறைந்த நாளில் நமது
பழைய மகிழ்ச்சி
மிகுந்த நாட்களை மீட்டெடுப்போம்
அந்த கற்பனை எனும் தேசத்தில்
புத்தருக்கும் ஒரு கோயில் கட்டுவோம்
சிங்களர்கள் சிறுபான்மையினராக
அவர்கள் வாழ முழு உரிமையுடன்
சர்வ சுதந்திரத்துடன் வாழ
வழி செய்வோம்
கடந்த கால அவர்களது தவறுகளுக்காக
வருந்தி மிக வருந்தி
குற்றவுணர்ச்சியில் அவர்கள்
க்ளூமி சண்டே இசை கேட்பது போல
சட்டென தொடர் தற்கொலையில் வீழாது பாதுகாப்போம்
அப்படி அவர்கள் குற்றவுணர்ச்சியில்
வீழாதிருக்கவாவது
கொஞ்சம் நாடகீயமாக நம்
பகையுணர்வை குறைவாக காண்பிக்க
அனுமதிப்போம்
அவர்கள் பயன்படுத்திய வாட்களை
அவர்கள் பயன்படுத்திய குதிரைகளை
அவர்கள்: பயனபடுத்திய துப்பாக்கி முனைகளை
அநீதியின் சாட்சிகளாக
கண்ணாடிபெட்ட்கத்துக்குள் காட்சிபொருளாக்குவோம்
இதரதேசத்தவர்களை போல
அவர்களின் குழந்தைகள் குற்றவுணர்ச்சி கொள்ளதிருக்க
வயலின் வாசிக்க அனுமதிப்போம்
மற்றபடி தோழர்களே
வேறுகாலத்தில் நடக்கும் இத்னை
வெற்று கற்பனையாக எண்ணிக்கூட
நீங்கள் இத்னை ஒருபாடலாக இசைக்காலாம்
ஆனாலும் ஒன்றை மறக்கவேண்டாம்,
நாம் ஒரு கம்பிவலை சூழ்ந்த
ஒரு இருண்ட படிகட்டுகளின் வழி
ஏறிக்கொண்டிருக்கிறோம்
ஒருவரது கரங்களை இறுக
இன்னொருவர் பற்றிக்கொண்டு
மீண்டும் அந்த உயரத்தை நோக்கி
Subscribe to:
Post Comments (Atom)
புதை படிவங்கள் வ
ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
சமீபத்தில் இணையத்தில் ஒரு காணொளி அனைவரையும். நெகிழ்ச்சியூட்டியது. .வெள்ளை வேட்டியும் வெற்றுடம்புமாக சைவ அடியார் கோலம் தரித்து ஒருவர் ...
2 comments:
///ஒருவரது கரங்களை இறுக
இன்னொருவர் பற்றிக்கொண்டு
மீண்டும் அந்த உயரத்தை நோக்கி...///
அவ்வுயரத்தை மட்டுமல்ல... கொஞ்சமேனும் நகர வேண்டுமானாலும் ஒருவரது கரங்களை இறுக
இன்னொருவர் பற்றிக்கொண்டு ஏறுவோம்! நம்மிடம் இல்லாத அக்குணத்தை முதலில் கைக்கொள்வோம்!
குழு மனப்பான்மை இல்லாமலே போய்விட்டது அஜயன்.
இந்த இழப்பை ஈடு கட்டமுடியவில்லை. உங்களின் கவிதையில் நம்பிக்கை துளிர்கிறது
Post a Comment