May 20, 2009

உலக சினிமா வரலாறு..: இரண்டாம் உலகபோரில் சினிமா


மறுமலர்ச்சி யுகம்.........12


நம் இருப்பை, மனிதனின் நாகரீகத்தை பண்பாட்டு வளர்ச்சியை கேலி செய்யும் விதமாக போரின் அவலங்களை நாள் தோறும் ஊடகங்களின் வாயிலாக காண்கிறோம்.ஒரு மனிதன் தன் கைவாளால் ஒரு நேரத்தில் ஒருவனை கொன்ற காலம் போய் அதே ஒருவனால் இன்று எத்த்னை பேரை கொன்று குவிக்க முடியும் என்ற சவாலாக மனித குலத்தின் நாகரீக வளர்ச்சி மாறிவருவது பெரும் துயரமான ,வெட்ககேடான விஷய்ம்

கொத்து குண்டுகள், ரசாயண ஆயுதங்கள் ,உயிரியல் பயங்கராயுதங்கள் என மனித முகம் நாளுக்குநாள் விகாராமாகிக்கொண்டே போகிறது. இதுவரை மனித குலம் கண்ட பேரழிவுகளில் இரண்டம் உலக போரே இன்றுவரை முதலிடம் வகிக்கிறது.

காலங்களினூடே இரண்டாம் உலகபோர் எனும் பெரும் நரக வாகனம் கடந்துசென்றதன் பலனாக அதன் ரத்தம் தோய்ந்த வழிதடத்தில் 48 மில்லியன் மனித உயிர்கள் பலியாகின.
கிட்டதட்ட 18 மில்லியன் மக்கள் தம் சொந்த பந்தங்களை இழந்து நாடற்றவர்களாகவும்.வீடற்றவர்களாகவும் மாறினர்.கிட்டதட்ட எல்லா ஐரோப்பிய நகரங்களிலும் மனிதர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளானது.குடியிருப்புகள் சிதிலமாயின.வனங்கள் பற்வைகள் மிருகங்கள்,ஆகியவற்றின் இயல்பு வாழ்க்கை தொலைந்து போயின.

சோவியத் யூனியனின் மனித புழக்கத்துக்கு ஆட்படாத மொத்த நிலப்பரப்பில் கிட்டதட்ட 40 சதவீதம் இறந்தவர்களின் முகாம்களாக மாறியது. போலந்து நாட்டின் 25 சதவீத மக்கள் வதை முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

இரண்டாம் உலகபோரின் சீரழிவுகளில் பெரும்பான்மை ஹிடலரின் நாஜிபடைகளால் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இன்று உலகசினிமாவின் சரித்திரங்களை புரட்டி பார்க்கிறபோது மனைத நேயத்தை வலியுறுத்தும் பல படங்கள் இக்காலக்ட்டத்தை சித்த்ரிப்பதாகவே இருக்கின்றன,
தி கிரேட் டிக்டேட்டர்,தி ப்ரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய்,லைப் இஸ் பியூட்டி ஃபுல்,பிளாட்டுன்,ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்,மற்றும் பியனிஸ்ட், போன்ற படங்கள் அவ்ற்றுள் சில.
உலகைன் தலைசிறந்த நூறுபடங்கள் என பட்டியலிட்டால் அவ்ற்றுள் குறைந்தது இருபது படங்கள் இந்த இரண்டாம் உலகபோரின் அவலத்தை சித்த்ரிப்பதாகவே அமையும்.

அப்படிப்பட்ட சூழலில் சினிமாவின் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதற்கு வார்த்தைகள் தேவையில்லை ஆனாலும் போருக்கு பின் இத்தாலிய சினிமாவின் எழுச்சியை கட்டியம் கூறுவதாக போர்நடக்கும்துவக்ககாலங்களிலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மாறுதல்கள் தோன்ற துவங்கின.

இந்த மாரற்றதுக்கு இத்தாலியின் சர்வாதிகாரியான் முசோலினியும் ஒரு விதத்தில் காரணம் ஆவார்.
முன்னால் சோஷலிஸ்ட்டான முசோலினி சினிமாவை மிகவும் காலதாமதமாகத்தான் புரிந்து கொண்டார்.

சினிமாவை குறித்து லெனின் சொன்ன ” மிகச்சிறந்த ஆயுதம்
‘ எனும் சொற்றொடர் தான் அவருக்கு சினிமாவின் மீதான புரிதலை வளர்த்துக்கொள்ள மிகவும் தூண்டுதலாக இருந்தது.

1924ல் முசோலினி இத்தலியை குறித்த செய்தி மற்றும் ஆவணப்படங்களை எடுப்பதற்காக லுசி எனும் சினிமாவுக்கான் அரசு பள்ளி ஒன்றை நிறுவினார்.

1935ல் இத்தாலியின் அனைத்து செயல்பாடுகளையும் தன் சர்வாதிகார குடை எனும் ஒற்றை அதிகாரத்துக்குள் கொண்டு வந்த முசோலினி சினிமாவையும் அது போல் அரசு கட்டுபாட்டிற்கு கொண்டுவந்தார்.

600.000 சதுர மீட்டர் பரப்பளவில் ஜெர்மனியின் யு .எப். ஏ வுக்கு நிகரான ஸ்டுடியோ ஒன்றை நிறுவிய முசோலினி அத்ற்கு சினி சிட்டா ஸ்டுடியோஸ் என பெயரும் சூட்டினார்.
உடன் திரைப்ப்டம் குறித்த பள்ளியையும் புண்ரமைத்தார்.

1937ல் ரோமாபுரி நகரம் உருவானதாக கருதப்படும் ரோமின் புனிதநாளான ஏப்ரல் 21ம் நாள் இந்த பிரம்மாண்ட ஸ்டுடியோவை திறந்தார்.

அடுத்த ஒருவருடத்தில் இந்த ஸ்டுடியோ மொத்தம் 81 திரைப்படங்களை த்யாரித்து வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்ய படுத்தியது.

வழக்கமாக இத்தாலியில் உருவாகும் படங்களின் எண்ணிக்கைய்யை விட இது இரண்டு மடங்கு கூடுதலாகும்.

இக்காலத்தில் அந்த பள்ளியில் சேர்ந்த சில மாணவர்கள் தங்களது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தியபடி வளர்ந்தனர்,
இளம் இயக்குனரன லூகி சியாரனி lughi chiaranni யால், சினிமா குறித்த அவரது பார்வைகளால் வசீகரம் கொண்ட அந்த இளைஞர்கள் மிகவும் உற்சாகமும் புத்தெழுச்சியும் புதுமை விரும்பிகளாகவும் இருந்தனர்.

ரோபர்ட்டோ ரோஸலினி, மைக்கேல் ஆஞ்சலோ ஆண்டனியோனி போன்ற அந்த மாணவர்களால் தான் பின்னாளில் இத்தாலி உலகசினிமாவில் மிகபெரிய மாறுதலை செய்ய போகிறது என்பதை அந்த மாணவர்களும் ,ஆசிரியரும் முசோலினியே கூட அறிந்திருக்க வில்லை.

இவர்கள் சினிமா குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும்,அறிவை பெருக்கவும் ஒரு இதழ் ஒன்றை துவக்கினர் .அதன் பெயர் ப்ளாக் அண்ட் ஒயிட்.

இக்காலத்தில் இந்த பத்திரிக்கைக்கு போட்டியாக இன்னொரு இதழ் வந்தது. சினிமா எனும் த்லைப்பில் வெளியான அந்த இதழ் ஐஸன்ஸ்டன், புடோவ்கின்,பேலா பெலஸ் ஆகியோரின் சினிமா குறித்த கட்டுரைகளை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கியது.மேலும் இத்தாலியிலேயே இன்னொரு புதிய இளைஞன் ஒருவன் சில அற்புதமான கட்டுரைகளை எழுதி வந்தான் அவனது பெயர் லூசியோனோ விஸ்கோண்டி,பின்னாளில் இத்தாலிய சினிமாவுக்கு சில ஒப்பற்ற கலைபடைப்புகளை வழங்கிய இயக்குனராக பெயரெடுத்தவர்.

இவர்கள் காலத்திலேயே இன்னொரு மார்க்சிய சிந்தனைய்யை அடிப்படையாக கொண்ட எழுத்தாளர் ஒருவர் திரைக்கதை எழுதுவதில் புலமை பெர்றிருந்தார். சிசரே சவாட்டினி எனும் இந்த திரைக்கதையாசிரியர் தான் இத்தாலியில் தொடர்ந்து வந்த நியோரியலிஸம் எனும் அலைய்யின் மிக முக்கியமான கர்த்தாக்க்களிலொருவராக இருந்தவர்.இத்தாலிய சினிமாவிற்கு மட்டும்மல்லாமல் உலக சினிமாவுக்கே நன் கொடையாக கருதப்படும் பை சைக்கிள் தீவ்ஸ் போன்ற திரைப்படகளின் திரைக்கதை ஆசிரியராக தனது பங்களிப்பை செய்தவர்.
(தொடரும்
இணைப்பு புகைப்ப்டம் ;நிக்காலோ கிட்மன்,திரைப்படம் ஆஸ்திரேலியா
இக்கட்டுரைத்தொடர் புத்த்கம் பேசுது மாத இதழில் உலகசினிமா மறுமலர்ச்சியுகம் எனும் பெயரில்வெளியாகி வந்துகொண்டிருக்கிறது

No comments:

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...