May 4, 2017

தி கிட் (1921) சார்லி சாப்ளின் சிறுவர் சினிமா

  குழந்தை கதை கூறல் 2



1
ஒரு அம்மா ஆஸ்பத்திரியிலருந்து கைக்குழந்தையோட வெளிய வர்றாங்க  அவங்களுக்கு எஙக போறதுன்னு தெரியலை. அந்த குழந்தையோட அப்பாவுக்கோ இன்னொரு கலயாணம் ஆயிடுச்சி. இனி இந்த குழந்தைய வெச்சிருந்தா நமக்கு அவமானம்னு அந்த அம்மா நெனக்கிறாங்க. அப்ப வழியில ஒரு ஜீப் நிக்குது.. அது பணக்கார வண்டி அவங்க மனசு கேக்கலை ஆனாலும் வேற வழி தெரியலை .  பணக்கார வீட்டுல வளரட்டும்னு  தன்னோட  குழந்தைய அந்த வண்டி பின்னாடி சீட்டுல போட்டுட்டு திரும்பி பாக்காம  போயிடறாங்க .  
2
ஆனா நடக்கறதோ வேற. அந்த வழியா வர்ற ரெண்டு திருடங்க வண்டி அனாதையா நிக்குறதை பார்த்து வண்டியை திருடிக்கிட்டு  ஓட்டிகிட்டு போறாங்க . அவங்களுக்கு குழந்தை இருக்குறது தெரியலை. . வண்டியை ஓரு இடத்துல நிறுத்தனப்பறம்தான்  குழந்தை அழுவுற  சத்தம் கேக்குது .அப்படியே குழந்தைய எடுத்து ஒரு குப்பை தொட்டியில போட்டுட்டு வண்டியை மட்டும் அம்போன்னு விட்டுட்டு போயிடறாங்க.
3.
.அப்பதான் ஒரு அழுக்கு டிரெஸ்சோட ஒரு கண்னாடி ரிப்பேர் பண்றவர் அங்க வர்றாரு. அவரு வேற யாருமில்லை நம்ம சார்லி சாப்ளின்தான்.அவரே ஒரு அனாதை அவருக்குன்னு யாருமில்லை. அதனால இன்னொரு அனாதையா அந்த குழந்தை மாறிடகூடாதுன்னு அந்த குழந்தைய கையோட எடுத்துக்கிட்டு அவரு வீட்டுக்கு வந்துடறாரு.
 4
சிறு அறை அதில் கொஞ்சம் பொருட்கள் இவ்வளவுதான் சாப்ளின் வீடு  ஆனாலும் குழந்தைய நல்லா வளக்கிறாரு .. நல்லா துறுதுறுன்னு குழந்தை வளறுது. குழந்தைக்கு அஞ்சு வயசாவுது. குழந்தையா இருந்தவன் இப்ப குட்டிபையனாயிட்டான். வெளியில அடிக்கடி அடிதடி தகராறு. யாரையாவது  அடிச்சுட்டு ஒன்னும் தெரியாம வீட்டுக்க்கு வந்து ஒளிஞ்சுக்குவான் .வீட்டுமுன்னாடி அடிவாங்குன பையன் அவங்க அப்பாவோட வந்து நிப்பான்.  அப்புறம் சாப்ளினும் பையனுக்காக அவங்க அப்பா கூட சாப்ளின் சண்டைக்கு போவாரு
5
அந்த குட்டிபயனுக்கு வேலையே காலையில எழுந்ததும் அப்பா கிட்ட இன்னைக்கு எந்த தெருன்னு கேப்பான் . சாப்ளினும் அவனுக்கு ஒரு தெருவை சொல்வார் . அவன் வீட்டை விட்டு வெளிய வந்து அஞ்சாறு கல்லுங்களை கையில எடுத்து பாக்கெட்ல போட்டுக்குவான். அப்பா சென்ன தெருவுல எந்த வீட்டுல கண்னாடி பளபளன்னு இருக்குதோ அந்த கண்னாடியை குறிபாத்து கல்லால அடிச்சுட்டு ஓடியாந்துடுவான் ,வீட்டுகாரங்க வெளியில வந்து பாத்துட்டு அய்யய்யோ கண்னாடி போச்சே ன்னு வருத்தப்படுவாங்க .அந்த நேரம் பாத்து சாப்ளின் கண்னாடி ரிப்பேர் காரனா அங்க போவார் . சரியான நேரத்துல வந்தன்னு சொல்லி புது கண்ணாடிய மாட்ட சொல்வாங்க .. இவரும் மாட்டிட்டு காசு வாங்கிட்டு வருவார் . இப்படிதான் தினசரி அவங்க சம்பாதிச்சு பொழுதை ஒட்டினாங்க
6
ஒருநாள் ஒரு போலீசுக்கு இது தெரிஞ்சுது. நம்ம குட்டிபையன் ஒரு வீட்டு கண்ணடியை கல்லால அடிக்கபோறதை பாத்து  கையும் களவுமா புடிக்கிறாரு. ஆனா நம்ம குட்டிபயன்  அவர் கையில மாட்டினாத்தான . ஓரெ ஓட்டமா ஓடியாரான். குட்டிபயனை பிடிக்க போலீசும் துரத்தராரு. ஆனாலும் பையனை பிடிக்க முடியலை.. பையனுக்கு ஒண்ணுன்னா சாப்ளின் துடிச்சிடுவாரு. அவனுக்காக ஒரு ரவுடிக்கிட்ட சண்டைய போடறாரு. அதே மாதிரி சாப்ளினுக்கு உடம்பு சரியில்லன்னா குட்டிபையனே  அவருக்கு ரொட்டியெல்லாம் சுட்டுத் தரான் . வெண்ணி வச்சு குடுக்கறான் இப்படி அந்த குட்டிபையனும் சாப்ளினும் ஒருத்தருக்கொருத்தர் பாசத்தோட மகிழ்ச்சியா சந்தோஷமா வாழறாங்க
7
இதுக்கிடையில அந்த குழந்தையோட  அம்மா இப்ப பெரிய சினிமா நடிகை பணக்கார பொண்னா  ஆயிடறாங்க. ஆனாலும் அவங்களால நிம்மதியா இருக்க முடியலை.  குழந்தைய தேடறாங்க. குழந்தைய  கண்டுபிடிச்சித் தரச் சொல்லி போலீஸ்ல கம்ப்ளைண்ட் தர்றாங்க.குட்டி பையனை போலீஸ் தேடுது .பேப்பர்ல அறிவிப்பு கொடுக்கறாங்ககுட்டிபையனுக்கு ஒருநாள் உடம்பு சரியில்லாம போயிடறது.வீட்டுக்கு வந்து சிகிச்சை பாக்கற  டாக்டருக்கு குட்டி பையன் சாப்ளினோட பையன் இல்லைன்னு தெரிஞ்சு போலிசுக்கு சொல்லிடறாரு.
இதனால அரசு அதிகாரிங்க சாப்ளீன் வீட்டுக்கு தேடி வர்றாங்க . யார் இந்த பையன் . இவனுக்கு நீ அப்பா இல்லையே. பின்ன எங்கிருந்து திருடுனன்னு மிரட்டறாங்க. குட்டிபையனை கொடு நாங்க கூட்டிட்டு போறோம்னு கேக்கறாங்க. சாப்ளின் அவங்க கூட சண்டை போடறாரு பையனை கொடுக்க மாட்டேங்கிறரு. ஆனா போலீஸ் சாப்ளீன்கிட்ட இருந்து  குழ்ந்தைய பிடுங்கறங்க . பையன் அப்பா அப்பான்னு அழறான். போலீஸ் கிட்டருந்து பையனை காப்பாத்த சாப்ளின் போராடாறாரு .முடியலை. போலீஸ் வேன்ல ஏத்திகிட்டு அவங்க குழந்தையோட போக சாப்ளின் பின்னாலயே துரத்துகிட்டு ஓடுறாரு. லாரியிலருந்து பையன் அப்பா அப்பான்னு கைநீட்டி அழறான்
8
பையனோட அம்மாவான அந்த  நடிகைக்கு போலீஸ் தகவல் சொல்றாங்க  அந்த நடிகையும் ஸ்டேஷனுக்கு வந்து பையனை பாக்குறாங்க. இவந்தன் என் பையன்னு கட்டி புடிச்சு  அழறாங்க . பையனை தன்னோட பணக்கார வீட்டுக்கு கூட்டிட்டு போயிடறாங்க. சாப்ளின் திரும்பவும் அனாதை ஆயிடறாரு. வீட்டுல தனியா இருக்குற சாப்ளினை தேடி ஒரு போலீஸ் வேன் வருது. போலீஸ் சாப்ளின்கிட்ட பேசறாங்க. சாப்ளீனை வேன்ல ஏத்தி  ஒரு பணக்கார வீட்டுக்கு கூட்டிட்டு போறாங்க . அங்க சாப்ளின் கதவை திறந்தா குட்டிபையன் ஓடியாந்து சாப்ளினை கட்டிபுடிச்சுக்கிறான் . சாப்ளினும் அதுக்கப்புறம் அவங்களோடயே நடிகையோட பணக்கார வீட்ல சந்தோஷமா வாழறாரு.

கதை உங்களுக்கு புடிச்சுதா

இன்னொரு கதை அப்புறமா சொல்றேன்   



கதை உங்களுக்கு புடிச்சுதா


இன்னொரு கதை அப்புறமா சொல்றேன்  
அஜயன் பாலா 
நன்றி :தினமணி சிறுவர் மணி

No comments:

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...