February 15, 2017

செம்மொழி சிற்பிகள் -எல்லீஸ்

எல்லீஸ் 


பிறப்பு: 1796

திருக்குறளுக்கு முதன் முதலில் ஆங்கிலத்தில் உரை எழுதியவர்.  வெளிநாட்டவர். கால்டுவெல் பாதிரிக்கு முன்பாக திராவிடமொழிக்குடும்பத்தின் தாய்மொழி தமிழ் என்பது குறித்து ஆய்வு குறிப்புகளை தந்துள்ளவர்.

பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ்


இங்கிலாந்து நாட்டைசேர்ந்த எல்லீஸ் அவர்கள் சென்னை நிலவரி வாரியத்தின் செயலராக பணிபுரிய சென்னை வந்தவர் எட்டு ஆண்டுகள் அவர் அக்காரியத்தில் சிறப்பினை அடைந்தபைன் சென்னைகலக்டாராக பத்வி உயர்த்தப்பட்டு பத்தாண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

இக்காலங்களில் தமிழ் மொழியின் செம்மை அவரைகவர்ந்த காரணத்தால் சாமிநாதபிள்ளை, இராமச்சந்திர கவிராயர் ஆகியோரிடம் ஏட்டு சுவடிகளில் தமிழினை கற்றார். தொடர்ந்து அவருக்குள் ஊறிய ஆர்வம் காரணமாக  பழந்தமிழ் இலக்கண நூல்களையும் இலக்கியங்களையும் தேடிப்பிடித்து கற்க துவங்கினார். தொடர்ந்து தன்னைப்போல வெளிநாட்டவர் பலரும்  தமிழ் கற்கவேண்டும் என அவாவுற்று அதற்கான கல்விச் சங்கம் ஒன்றை உருவாக்க முனைப்புடன் செயல்பட்டார். தனக்கு முன் இப்பணியில் ஈடுபட்ட வெளிநாட்டவரான வீராமாமுனிவரது தமிழ்ப்பற்றையும் தமிழ்பணிகளை பற்றியும்ம் கேள்வியுற்று அவர்மேல் பெரும் அனபுகொண்டார்.அவரது வாழ்க்கை வரலாற்ரை எழுத வந்த முத்துசாமி பிள்ளைக்கு வேண்டிய உதவிகள் செய்து ஊக்குவித்தார் 

திருக்குறளின் முதல் பதிமூன்று அதிகாரங்களுக்கு பண்டைத்தமிழ் நூல்களை மேற்கோள்காட்டி ஆங்கிலத்தில் அரிய உரை ஒன்றை எழுதியுள்ளார். மட்டுமல்லாமல் அவ்வுரைகளுக்கு பழந்தமிழ் இல்லக்கியத்திலிருந்தே அவர் மேற்கோள்காட்டியிருந்தவிதம் இவரது தமிழ்பற்றுக்கு சான்றாக விளங்குகிறது . தமிழை பாடமாக கல்லூரிகளில் வைக்கவேண்டும் என ஆட்சியாளர்களிடம் போராடினார். 1818-ல் சென்னையில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் வந்தபோது சென்னையில் 27 கிணறுகள் வெட்டி வைத்தார். அவற்றுள் ஒன்று சென்னை இராயப்பேட்டையில் பெரியபாளையத்தம்மன் கோயிலில் உள்ளது. அக்கிணற்றில் எல்லீஸ் திருப்பணிபற்றி அருமையான நீண்ட பாடல் கல்வெட்டு ஒன்று உள்ளது. திருக்குறள் படித்ததன் பயனாகத்தான் 27கிணறுகள் வெட்டியதாகக் கூறுவது மிகவும் அரிய செய்தியாகும். கல்வெட்டு மெய்க்கீர்த்திபோல் அப்பாடல் கல்வெட்டு உள்ளது.இவர் தமிழ்செய்யுளும் இயற்றியுள்ளார்.அவற்றுள் நமச்சிவாயபாட்டு ஒன்றே நமக்கு கிடைத்துள்ளது.

பின் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை பற்றி கேள்விப்பட்டு
அந்நகரைக்காணசென்றார். தமிழுக்கு தொண்டுசெய்ட்ய்ஹ அவ்வீதிகளை நெஞ்சுருக வலம் வந்தார். பின் இராமாநாதபுரம் எனும் மூதூரைகாணசென்றார். அங்கு தாயுமானவர் சாமாதியில் கண்ணீர்மலகிநின்றார். அன்று நண்பகலில் தன் இருப்பிடம் வந்த அவர் உணவில் இருந்த நஞ்சுகாரணமாக மருத்துவர் அருகிலில்லாமல் துடித்து இறந்தார்.

சென்னையில் அவரது உடமைகள் அனைத்தும் ஏலமிடப்பட்டன. அனைத்து பொருட்களையும் வாங்க் ஆள்வந்த்னர். ஆனால் அவர் எழுதிய தமிழ் செய்யுள்கள் மற்றும் குறிப்புகளை வாங்க எவரும் வரவில்லை. நெடுநாட்கள் அவைகுப்பையாக அங்கேயே ஒருமூலையில் கிடந்ததாக பிற்பாடு தெரியவந்துள்ளன
                                                                   மறைவு: 1879




.

No comments:

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...