February 15, 2017

முன்னுரை எனும்போதும் உனக்கு நன்றி விஷால் ராஜா சிறுகதைகள்

எனும்போதும்  உனக்கு நன்றி  விஷால் ராஜா சிறுகதைகள் 

இலக்கியம் என்பது கதையல்ல , மொழி மட்டுமே கூட அல்ல . மொழியின் துணையோடு காலத்தின் தேடல் மற்றும் பதிவு.  . காலத்தின் பிரதிநிதிகளாக மொழிக்கு  ஒரு சிறுகதையாளன் தேவைப்படுகிறான்  அதற்கு ஒப்புக்கொடுப்பவனே இலக்கியவாதியாக அறியப்படுவான். விஷால் ராஜாவின் கதைகள் சிறுகதை எனும் எல்லையை கடந்தவை. வாழ்க்கையின் வினோதங்களும் புதிர்களும் அவரது கதைகள் எங்கும் விரவிக்கிடக்கின்றன. அதிகாரத்தால் நசுக்குண்ட இதயம் அவருடையது. இந்த இதயம் பிரபஞ்சம் எனும் கூண்டுக்குள் சிக்கி தப்பிக்க அங்குமிங்கும் வழி தேடி கதைகள் முழுக்க அலைகிறது.   நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க காதலிடமும் காதலிடமிருந்து தப்பிக்க நெருக்கடிகளிடமும் சிக்கிக்கொள்வதால் இந்த கதைகளின் வழியாக அவர் கரையேறிக்கொள்கிறார்.
2010 க்கு பிறகு சிறுகதை எழுத வந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் அதில் முதல் ஐந்துக்குள் வந்து விடக்கூடிய தகுதி வாய்ந்த  தொகுப்பு இது .
விஷால் ராஜாவுக்கு கச்சிதமான மொழி கைகொடுக்கிறது அவரது நுண்ணிய மனம் கதையின் சட்டகத்திலிருந்து தப்பிக்க உதவுகிறது. இப்படியான தருணங்களின் மூலம் இக்கதைகள் படைப்பிலக்கியமாக எந்த பரிந்துரையும் அவசியப்படாமல்  அதுவாகவே தன் பீடத்தில் அமரவும் செய்கிறது.
இச் சிறுகதைகளை புத்தகமாக்க முயற்சி எடுத்து வரும் கார்த்திக் புகழேந்திக்கும் அவரது பதிப்பகத்தாருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்

அஜயன் பாலா,

ajayanbala@gmail.com

No comments:

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...