உலகின் முதன் மொழி தமிழ் மொழி எனவும், திராவிடத் தாய்மொழி எனவும்
ஆதார பூர்வமாக நிரூபிக்க.. தன் வாழ்நாளில் பெரும்பகுதியை அர்ப்பணித்துக்கொண்டவர்.அக்காலத்தில் வடமொழி உருது மற்றும் ஆங்கிலத்தால் கலப்புற்றிருந்த நடைமுறைத்தமிழை தன் வேர்ச்சொல் ஆய்வு மூலம் பிரித்தெடுத்து மொழியின் வேர்தேடி பயணித்து விடை கண்டவர்.. மறைமலையடிகளால் உருவாக்கப்பட்ட தனித்தமிழ் இயக்கம் அறுபடாமல் தொடர்ந்து இயக்கிவந்தவர். மொழி ஞாயிறு என அனைவராலும் அனபுடன் அழைக்கப்பட்ட தேவ நேய பாவாணர்
பிறப்பு ;07- 02-1902
நெல்லை மாவட்டம், சங்கர நயினார் கோவிலில் பிறந்தவர்
தந்தை ஞான முத்து, தாயார் பரிபூரணம் மிகவும் வறுமைச்சூழலில் வாழ்ந்த இத்தம்பதியினருக்கு மழலைசெல்வங்களுக்கு மட்டும் குறைவில்லை.
பத்து குழந்தைகளில் நான்காவாதாக பிறந்தவர். சிறுவயதில் ஒரு கிறித்துவ பாதிரியார் மூமாக வட ஆற்காடு மாவட்டம் ஆம்பூரில் உள்ள ஒரு கிறித்தவபள்ளியில் சேர்ந்தார். பின் அதேபாதிரியின் உதவியோடு பாளையங்கோட்டையில் கிறித்துவ விடையூழிய உயர்நிலைபள்ளியில் கலவியை தொடர்ந்தார்..பின் மதுரையில் பாண்டித்தேவர் மூலம் நடத்தப்ப்ட்டு வந்த நான்காம் தமிழ்சங்கத்தின் பண்டித தேர்வில் கலந்து கொண்டு இரண்டாவது சிறந்த மாணவராக தேர்ந்தார். அதுவரை இயற்பெயராக இருந்த தேவநேசன் என்பதில்நேசன் வடமொழியாக இருப்பதை அறிந்து தன் பெயரை தேவ நேயன் என மாற்றிக்கொண்டார்.
ஆசிரியப்பணி தேடிவந்தது. முதலில் ஆம்பூர்,பெரம்பூர் என சில காலங்கள் பணியாற்றியவர் சேலத்தில் நகராண்மை கல்லூரியில் பணியாற்றியபோதுதன் முழு நிறைவு கண்டார் . காரணம் அங்கு முதல்வராக பணியாற்றிய இராமசாமி. பவாணரின் ஆராயச்சிக்காக அவருக்கு தேவையாண நேரத்தை ஒதுக்கிதந்து சுதந்திரமாக செயல்படவைத்தவர்.இச்சுதந்திரம் மட்டுமில்லாவிட்டால் பாவாணரின் ஆய்வு பணிகள் முழுமையாக நிறைவேறியிருக்குமா எனபது ஐயமே!.
ஆங்கிலம் பிரெஞ்சு லத்தீன் கிரேக்கம் ,இந்தி உள்ளிட்ட பதினெட்டு மொழிகளை பயின்ற வித்தகரான இவர் தமிழே உலகின் மூத்த மொழி என தன் ஆய்வுகளின் மூலம் அறுதியிட்டுக்கூறியவர். கிட்டதட்ட ஐம்பது ஆண்டுகள் தமிழின் வேர்ச்சொல்தேடி பயணித்தவர். இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். உலகத்தமிழ் இயக்கம் என்பதை
நிறுவி அதன் மூலம் உலகம் முழுவதும் தமிழ் மொழியைப் பரப்ப அரும்பாடுபட்டவர். அரசின் செந்தமிழ் அகரமுதலி திட்ட இயக்கத்திலும் இயக்குநராக அவர் பணிபுரிந்துள்ளார். - இலக்கணச் செம்மல்
- தமிழ்ச் சொல் ஆய்வுத்துறை முன்னோடி, தமிழ்பெருங்காவலர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட சிறப்புப் பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார்.
தொல்காப்பிய சொல்லதிகாரம், திருக்குறள் தமிழ் மரபுரை, தமிழர் மதம், தமிழ் வரலாறு, என தமிழ் மொழியின் தொன்மை குறித்து 19க்கும் மேற்பட்ட நூல்களை,தமிழ் மற்றும் ஆங்கில த்தில் இவர் எழுதியுள்ளார்.
தமிழக அரசு இவரது தமிழ்த்தொண்டை போற்றும் வகையில் சென்னை நூலகத்திற்கு அவரது பெயரை பொருந்த சூட்டியதுமட்டுமல்லாமல் அவருக்காக மதுரையில் மணிமண்டபம் எழுப்பியிருப்பதன் மூலம் பாவாணாரின் வாழ்கையை தமிழர் தம் வழித்தடமாக்கி பெருமைபடுத்தியுள்ளது..
மறைவு ; 15-01-1981
Subscribe to:
Post Comments (Atom)
உலகம் ஒளிர்கிறது கவிதை,
கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
செம்மொழி செம்மல்கள் வ.சுப. மாணிக்கனார் . இது வாசுப மாணிக்கனார் நூற்றாண்டு அவரது தமிழ் பணிக்கு என் சிறுவணக்கம் திருக்குறள் மற்...
1 comment:
நல்ல பதிவு.
Post a Comment