June 7, 2011

செம்மொழி சிற்பிகள் 4 : மங்கலங்கிழார்

மங்கலங்கிழார்
பிறப்பு: 1895


தமிழ் வளர்க்க பதினோரு ஊர்களில் பள்ளீக்கூடங்களை கட்டி கால்நடையாகவே அந்த ஊர்களுக்கு சென்று தமிழ் கற்பித்து தந்த தமிழ் தொண்டர் .அரகோணத்தை அடுத்த புளியமங்கலம் எனும் ஊரில் பிறந்தவர். தந்தை குப்புசாமி, தாயார் பொன்னுரெங்கம் அம்மாள். பெற்றோர் இவருக்கு சூட்டிய பெயர் குப்பன்.

புளியமங்கலத்தில் திண்ணை பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்புவரை படித்த கிழார் பின்னர் சகோதரியுடன் சென்னை வந்தவர் பச்சையப்பன் உயர் நிலைப்பள்ளியில் தன் கல்வியை தொடர்ந்தார். பொருளாதார சுமை காரணமாக தொடர்ந்து கல்வி பயில வாய்ப்பில்லாத சூழல் ஏற்பட்டபோது தச்சு வேலை செய்யதுவங்கினார்.ஆனாலும் அவர் மனம் தன்னால கலவியை தொடர முடியவில்லையே என ஏங்கிட துவங்கியது. இச்சூழலில் சென்னையில் சேஷாசலம் என்பவர் மாணவர்களுக்கு இலவசமாக தமிழ் இலக்கண இலக்கியம் கற்றுத்தருவது கேள்விப்பட்டு மங்கலம்கிழார் அவரிடம்சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.அவரிடம் தமிழை கற்றதோடு மட்டுமல்லாமல் அவருடன் இணைந்து இரவு பள்ளிகளை துவக்கினார்.பகலில் தச்சு பணி இரவில் கல்விபணி இரண்டையும் செய்துவந்தார்.

கலாநிலையம் எனும் இதழை துவங்கி சிலகாலம் கட்டுரைகள் எழுதிவந்தார்.
அதேபெயரில் நாடக குழு ஒன்றும் துவங்கி நாடகங்கள்நடத்தினார். கா.ரா கோவிந்தராச முதலியார் இல்க்கண புலி என அக்காலத்தில் அனைவராலும் அழைக்கப்பட்டவர்.அவரிடம்தான் கிழாரும் இலக்கணங்களை கற்று தேர்ந்தார்.அந்த பெருமகனாரே கிழாரை பெரம்பூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராக சேர்த்துவிட்டார்.அங்கு பதினைந்து ஆண்டுகள் பணி புரிந்தபின் அப்பணியை விட்டு வெளியேவந்தவர் ஞானம் தேடி இலக்கில்லமல் அலைய துவங்கினார்./ செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின்நட்புகிடைக்க அவர்மூலம் சைவ வைணவ இலக்கியங்களை கற்றபின் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகமாக துவங்கியது.இக்காலத்தில் சின்மயானந்தர் அறிமுகம் கிடைதது. அதன்பிறகு இனிமக்கள் சேவைதான் உயர்ந்த ஆன்மீகம் என்பதை உணர்ந்து மீண்டும் தன் சொந்த கிராமம் புளியமங்கலம் திரும்பினார்.

அத்ன் பிறகுதான் அவரது வாழ்க்கையின் இரண்டாம் பகுதி துவங்கியது
ஏழைக்கு எழுத்தறிவித்தல் எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த அறம் என்பதை உணர்ந்து தெளிந்தார். அதை தன் வாழ்வில் நிகழ்த்திக் காட்ட முடிவு செய்து, குருவராயப்பேட்டை எனும் ஊரில் முதல் பள்ளிக்கூடத்தை துவங்கினார். பின் அத்னையே தலைமையிடமாகக்கோண்டு அறநெறித்தமிழ்க்கழகம் எனும் அமைப்பை உருவாக்கினார்.அத்னமூலம் பதினாறு ஊர்களில் தமிழ் பள்ளிகளை துவக்கினார்.மாணவர்கள் இலவசமாக சேர்க்கப்பட்டனர். ஒவ்வொருபள்ளிக்கும் கிழாரே நடந்து சென்று மாணவர்களுக்கு தமிழ் கற்றுதந்தார். 1946ம் ஆண்டில் குருவராயபெட்டையில் இக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்றது.பன்மொழிபுலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம், தலைமையிலும் அடுத்த ஆண்டு அறிஞர் மு.வ அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது. தன் பள்ளியில் படித்த மாண்வர்களை புலவர் தேர்வுக்கு அனுப்பி வைத்தார். அதில் தேசிய நூற்றுக்கணக்கானோர்க்கு ஆசிரியப்பணி கிடைதது.

தமிழகத்தின் வடக்கு எல்லை பிரச்னை ஏற்பட்டபோது சித்தூர் மாவட்டம் த்மிழநாட்டுக்கு தேவை என போராடி சிறைசென்றார்.இரண்டு தமிழர் மாநாடுகளை இதன்பொருட்டு கூட்டினார்..இப்பிரச்னைதொடர்பாக தமிழ்நாடும் வட எல்லையும் எனும் நூல் எழுதினார். அது மட்டுமல்லாமல் நன்னூல்,நளவெண்பா ஆகியவற்றிற்கு உரை எழுதினார்.

இறப்பு: 31-08-1953

4 comments:

ராம்ஜி_யாஹூ said...

அறிய பயனுள்ள தகவல், பகிர்ந்தமைக்கு நன்றிகள்

ajayan bala baskaran said...

nantri ranji

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

நாண் said...

அறியா மனிதனின் தெரியா பக்கம் தெளிவித்தமைக்கு நன்றி..

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...