December 18, 2025

அகிராகுரசேவாவும் ஜப்பான் சினிமாவும்

வாழ்க்கையில் சில குத்துகள் மறக்க முடியாதது. சிறுவயதுகளில் பள்ளிவிட்டு வீடுதிரும்பும்போது அதுவரை உடன் வந்த சக தோழன் தன் வீட்டிற்கு திரும்பும் இடம் வந்ததும் நாம் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் ஓங்கி முதுகில் ஒரு குத்து குத்திவிட்டு இந்த அடியை எப்பவுமே மறக்காதே என சொல்லிவிட்டு தலைதெறிக்க ஓடுவான். அந்தச் சமயங்களில் நடுமுதுகில் உண்டாகும் வலியைவிட அவன் மூலமாக கிடைத்த ஏமாற்றம், உடனடியாக அவனை பிடிக்க முடியாமல் போன இயலாமை போன்ற மன வலிகளும் சேர்ந்து கண்ணீரை வரவழைக்கும். அதுபோன்ற மறக்க முடியாத முதுகு குத்தல்களை உலகின் எல்லா தேசங்களுக்கும் எல்லா இனக்குழுக்களுக்கும் வரலாறு எப்போதாவாது கொடுத்து கதிகலங்க வைக்கும். அப்போழுது எழும் அம்மக்களின் வேதனை ததும்பும் கண்ணீரானது அவர்களது பிற்கால எழுச்சிகளுக்கெல்லாம் காரணமாக அமையும்.ஒன்று அது போராகவோ, பூகம்பமாகவோ, கொள்ளை நோயாகவா,பெரும் பொருளாதார வீழ்ச்சியாகவோ அல்லது சுனாமியாக வோகூட அந்த குத்து இருக்கலாம். அது போலத்தான் ஜப்பானியரின் எழுச்சிக்கு அடிப்படை காரணமாக இரண்டு முதுகு குத்தல்களை வரலாறு வழங்கியிருக்கிறது. ஒன்று அனைவரும் அறிந்த இரண்டாம் உலகப்போரின் இறுதியில் நிகழ்ந்த ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு சம்பவம். இன்னொன்று அதற்கும் முன்பாக 1923ல் ஏற்பட்ட பெரும் பூகம்பம். கிட்டதட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட ஜப்பானியர்களை அந்தப் பூகம்பம் பலிவாங்கியது. இந்த வரலாற்று துயரமான சம்பவம் நிகழ்ந்த இரண்டு நாட்களுக்குபின் பூகம்பம் நடந்த இடங்களை பலரும் சென்று பார்த்து தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர். சுற்றிலும் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருந்த அந்த இக்கட்டான சூழலினூடே இரண்டு சிறுவர்களும் உள்ளம் நடுங்கியபடி நடந்து சென்றனர். அதில் ஒருவர் அகிரா குரசேவா. இன்னொருவர் அவரது அண்ணன். அகிராவுக்கு அப்போது 13வயது. அண்ணன் ஹெய்கோவுக்கு 17 வயது. சுற்றிலும் உயிருக்கு போராடியபடி கேட்கும் மனிதர்களின் மிருகங்களின் அழுகுரல்களை கேட்டதும் அகிரா தலையை திருப்பி பார்க்க முயற்சிக்க அண்ணன் ஹியூகோ திரும்பாதே அவரிடம் கத்தி தலையை முன்னோக்கி திருப்புவாரம். பிற்காலத்தில் தன் படங்களில் அதிகமாக காணப்படும் அந்த திகிலுணர்வு மற்றும் பயமூட்டும் தன்மைகளுக்கு தன் மனதில் ஆழப்பதிந்த அந்த சிறுவயது நிகழ்ச்சிதான் காரணம் என குரசேவா பிற்பாடு கூறியிருக்கிறார். மட்டு மல்லாமல் தொடர்ந்த அவரது வாழ்வும் ஒருபயங்கரத்தை அவருக்கு முதுகில் சுமக்கவைத்த படியேதான் இருந்தது. 1910ல் இசாமு மற்றும் ஷிமா குரசேவா எனும் தம்பதியின் நான்காவது மகனாக டோக்கியாவை அடுத்த ஒரு புறநகர் ஒன்றில் பிறந்தவர் குரசேவா. அவரது அண்ணன் ஹியூகோ தன் இளவயதில் பென்ஷியாக வேலைசெய்துவந்தவர். ஊமைப்படங்கள் ஓடும்போது பின்னாலிருந்து கதையை விவரிப்பவருக்கு பெயர் தான் பென்ஷி. ஒரு கட்டத்தில் சத்த சினிமா வந்தபிறகு பென்ஷிக்கள் வேலை இழந்து வீதிக்கு வந்தனர். ஸ்டுடியோக்களின் முன் ஒன்றுகூடி பெரும் போராட்டத்தை நிகழ்த்தினர். அகிராவின் அண்ணன் ஹியூகோதான் அதற்கு தலைமைதாங்கி போராட்டங்களை நடத்தினார். ஆனாலும் என்ன பலன்... போன வேலை போனதுதான். அந்த மன உளைச்சலில் அகிராவின் அண்ணன் ஹியூகோ தற்கொலை செய்து கொள்ள நான்குமாதங்கள் கழித்து காரணமே இல்லாமல் அவரது சகோதரர்கள் மற்ற இருவரும் ஒன்றன் பின் ஒருவராக சொல்லி வைத்தார் போல இறந்து போக அகிரகுரோசோவா திகிலுடன் தனிமரமாக நின்றார். மரணம் அவர் முதுகின் பின்னால் ஒரு கேள்வியாக நிற்க பீதி அவரது ஒவ்வொரு நிமிடத்தையுமாக ஆக்கிரமித்துக்கொண்டது. அதன்பிறகு அவர் மெல்ல திரைப்படத்துறைக்குள் நுழைந்து அப்போது புகழ்பெற்றவராக விளங்கிய இயக்குனர் யமமோட்டொவிடம் உதவியாளராக இணைந்து பின் 1943ல் சஞ்சுரோ சுகாட்டா திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானபின் அவரது சிறுவயது பீதி, மரணத்தின் விளிம்பு, அச்சத்தின் மறு எல்லை அவரது திரைப்படங்களில் காட்சிமொழிகளில் பரிணமிக்கத் துவங்கியது. அவரது பெரும்பாண்மையான படங்கள் வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இயற்கைக்குமான போரட்டமாக இருப்பதற்கும் இதுவே காரணமாக கருதப்படுகிறது. 1950ல் அவர் இயக்கத்தில் ரோஷமான் வெளியானபிறகுதான் உலகசினிமாவுக்கு ஜப்பான் பரிச்சயமாக துவங்கியது என்றாலும் பல நல்ல இயக்குனர்கள் அவருக்கும் முன்பாக ஜப்பானிய சினிமாவையும் அதன் கலாசாரத்தையும் போற்றி பாதுகாத்து வந்துள்ளனர்.இத்தனைக்கும் சினிமா ஜப்பானுக்குள் 1896லேயே நுழைந்து மெல்ல படங்களை தயாரிக்க துவங்கியிருந்தாலும் அவை பெரும்பாலும் அவர்களது காபுகி நாடகவகை போலவே இருந்தன. கென்ஷி மிசோகுச்சி (ரிமீஸீழீவீ விவீக்ஷ்ஷீரீuநீலீவீ) மற்றும் யசுஜிரொ ஓசு (சீணீsuழீவீக்ஷீஷீ ளிக்ஷ்u) ஆகியோர்தான் ஓரளவு அதனை மவுன படங்களின் காலத்திலேயே மீட்டெடுத்தவர்கள். அதிலும் ஓசு ஜப்பானிய சினிமாவின் நியோரியலிஸ தந்தை என போற்றப்பட்டவர். அவரது திரைப்படங்களில் மனித உறவுகள் மற்றும் ஜப்பானிய கலாசாரத்தின் தொன்மங்கள் ஆகியவை அழுத்தமாகவும் எதார்த்த பாணியிலும் பின்பற்றப்பட்டு வந்தன. ஆனாலும் அவர்களது படங்கள் உலக அரங்கை அது வரை எட்டாமல்தான் இருந்தது. ரோஷமான் வெளியாகி உலக சினிமா ரசிகர்களின் பார்வை ஜப்பானிய சினிமாவின் மேல் கவனத்தை குவிக்க துவங்கியபின்தான் ஓசுவுடன் இன்னும் சில இயக்குனர்கள் அறியப்பட துவங்கினர். இன்றும் இந்தியாவில் எப்படி சில நல்ல சினிமா ரசிகர்கள் ரே வை ஏற்காமல் கட்டக்கை தீவிரபடைப்பாளியாக முன்னிறுத்துகிறார்களோ அது போல ஜப்பானில் இன்றும் பலர் குரோசாவை ஏற்காமல் ஓசுதான் ஜப்பானிய சினிமாவின் தந்தை என புகழ்வர். ரோஷமானின் வெற்றிக்குப் பிறகு அடுத்த பத்து வருடத்தில் மூன்று ஜப்பானிய திரைப்படங்கள் உலகசினிமாவை உலுக்கி எடுத்தன. அதில் ஒன்று அகிராகுரசேவாவின் செவன் சாமுராய் (ஷிமீஸ்மீஸீ ஷிணீனீuக்ஷீணீவீ), இன்னொன்று ஓசுவின் டோக்கியோ ஸ்டோரி (ஜிஷீளீஹ்ஷீ ஷிtஷீக்ஷீஹ்). இன்றுவரை உலகின் தலைசிறந்த நூறுபடங்களுக்குள் இந்த இரண்டு படங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத் தகுந்தது. மூன்றாவது திரைப்படம் ஒருவணிகப்படம். அணு ஆயுத எதிர்ப்பை முன்னிறுத்தி வெளியான கோஜ்ரா (நிஷீழீவீக்ஷீணீ) எனும் இப்படம் பிற்பாடு ஹாலிவுட்டில் காட்சில்லா (நிஷீபீக்ஷ்வீறீறீணீ) எனப் பெயரிடப்பட்டு உலகம் முழுக்க பட்டி தொட்டி எங்கும் ஓடி ஜப்பானிய சினிமாவுக்கு பெரிய வணிக சந்தையையும் ஏற்படுத்திக் கொடுத்தது மட்டுமல்லாமல் ஹாலிவுட்டுக்கு நிகராக தங்களாலும் படமெடுக்க முடியும் என ஜப்பானியர்கள் இப்படத்தின் மூலம் காலரை தூக்கிவிட்டு போரின் முலம் இழந்த தன்நம்பிக்கையை மீட்டுக்கொண்டனர். ரோஷமான், செவன் சாமுராய், ரெட் பியர்ட் போன்ற குரசேவாவின் தலைசிறந்த படைப்புகளின் வெற்றிக்குப் பிறகு அதில் நடித்த மிபுனே எனும் கலைஞனை உலகின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக உலகசினிமா அடையாளம் கண்டு கொண்டது. அடிப்படையில் குரசேவா இலக்கியங்களின் மிகப்பெரும் காதலராக இருந்தார். ஷேக்ஸ்பியரின் படைப்புகளிலிருந்து மட்டுமே மூன்று திரைப்படங்களை மீட்டுருவாக்கம் செய்தார். அவரது கிங்லியர் (ரிவீஸீரீ லிமீணீக்ஷீ), நாட்கம் ரான் (ஸிணீஸீ) திரைப்படமாகவும், மேக்பெத் நாடகம் (விணீநீதீமீtலீ) த்ரோன் ஆப் ப்ளட்டாகவும் (ஜிலீக்ஷீஷீஸீமீ ஷீயீ ஙிறீஷீஷீபீ), ஹேம்லட் (பிணீனீறீமீt) நாடகம், பேட்ஸ்லீப் வெல் (ஜிலீமீ ஙிணீபீ ஷிறீமீமீஜீ கீமீறீறீ) எனும் படமாகவும் உருவாக்கம் செய்தார். மட்டுமல்லாமல் தஸ்தாயெவெஸ்கியின் மற்றொரு படைப்பான இடியட் எனும் நாவலையும் மற்றும் மாக்ஸிம் கார்க்கியின் நாடகத்தை தழுவி லோயர் டெப்த்ஸ் போன்ற படைப்புகளையும் எடுத்தார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் இகிரு கூட டால்ஸ்டாயின் சிறுகதை ஒன்றை அடிப்படையாக் கொண்டு எடுக்கப்பட்டதிரைப்படம். அது போல அவரது ஓவ்வொருபடத்திலும் பருவநிலைகளில் ஏதானும் ஒன்று பிரதான பாத்திரமாக இடம் பிடிக்கும் ரோஷமானில் மழை, டெர்சு உஜாலாவில் பனிப்புயல், ஸ்ட்ரே டாக் படத்தில் வெப்பம் ஆகியவை குறியீடுகளாக படம் முழுக்க பின்புலத்தில் இயங்கும். குரசேவாவின் திரைப்படங்கள் ஒரு சினிமா கற்கும் மாணவனுக்கு மிகச்சிறந்த பாடம். உலகின் வேறேந்த இயக்குனரின் படங்களையும் இதற்கான முழுதகுதியுடன் ஏற்க முடியாது. கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, எடிட்டிங், கலை ஒலிப்பதிவு மற்றும் இயக்கம் என அனைத்து துறைகளுக்கும் அவரது படங்கள் மட்டுமே இலக்கணம்.அவரது திரைப்படங்கள் அனைத்துமே மனிதவாழ்வின் அவலங்களை அதன் புதிர்களை, குழப்பங்களை, மாயைகளை, கற்பனைகளை, அழுக்கை, வெளிச்சத்தை, அதன் இருட்டை மட்டுமே தொடர்ச் சியாக தேடிக்கொண்டிருந்தன. இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை அதன் சமன்பாட்டை இடையறாமல் தேடுவதாக அவரது திரைப்படங்கள் இருந்தன. அதன் காரணமாகத் தான் உலகின் தலைசிறந்த இயக்குனர் என பலராலும் இன்றுவரை ஏகமனதாக கருதப்படுகிறார்.அவரது திரைப்படங்கள் வடிவத்தில் மேற்கையும் உள்ளடக்கத்தில் கிழக்கையும் ஒரு புள்ளியில் இணைப்பவையாக இருப்பதும் அவருக்கு கிடைத்த ஒருமித்த கைதட்டல் களுக்கு இன்னொரு காரணம். எல்லாக்காலத்திலும் சூரியனால் ஒளி மறைக்கப்படும். பகல் விண்மீன்கள் போல சில அதீத மேதைகளின் புகழானது பல திறமையாளர்களுக்கு சேரவேண்டிய நியாயமான புகழை தடுத்துவிடும். இது போன்ற விபத்து மொசார்ட் காலத்தில் பல இசை மேதைகளுக்கு நிகழ்ந்த தாக கூறுவர். அது போலத்தான் குரசேவாவின் அதீத புகழ் காரணமாக கிடைக்கவேண்டிய நியாயமான பேரும் புகழும் கிடைக்காது போன ஜப்பானிய சினிமாவின் மற்றொரு கலைஞர் கோபயாஷி. கோபாயாஷியின் படங்களும் பெரும்பாலும் சாமுராய் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படுபவை ஆனாலும் அதில் அகிராவின் படைப்பாளுமைக்கு இணையான ஒரு செறிவான காட்சிமொழி அவரது படங்களில் காணப்படும். இன்னும் சொல்லப்போனால் செறிவிலும் காட்சி அணுகு முறையிலும் கோபாயாஷியிடம் குரசேவாவைவிடவும் கூடுதலான இறுக்கம் தொனிக்கும். ஆனால் குரசேவாவிடம் இருந்த இலக்கியத்தன்மை மற்றும் உலகளாவிய பார்வைகள் ஜப்பானின் இதர இயக்குனர்களின் படங்களில் தேடிப்பார்த்தாலும் காணக்கிடைக்கவில்லை. குரசேவாவின் காலத்தில் அவருக்குபின்னால் வந்து பரவலான கவனத்தை ஈர்த்த மற்ற சில இயக்குனர்களில் நகிஷா ஓஷியாமாவும், ஷோகை இமாமுராவும் குறிப்பிடத்தகுந்த இயக்குனர்கள். இவர்கள் ஓஷியாமவின் திரைப்படங்களின் பாலுறவுக்காட்சிகளையும் அதற்கு பின்னால் இயங்கும் மனித மனத்தின் நுண்மைகளையும் சித்தரித்தன. உலகம் காதல் வழியாக காமத்தை அடைந்த போது காமத்தின் வழியாக காதலையும் அதன் உயிர்பறிக்கும் தன்மையையும் அவரது படங்கள் விவரிப்பதாக அமைந்தன. ஹிரோஷி டேஷிகரா என்பவர் இயக்கத்தில் வெளியான வுமன் இந்த டியூன்ஸ் (கீஷீனீணீஸீ வீஸீ tலீமீ ஞிuஸீமீs - 1964) எனும் படம் 1964ல் கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த படத்துக்கான பரிசை வென்று ஜப்பானியசினிமாவின் தரத்தை தக்கவைத்துக்கொண்டது. இப்படியாக குரசேவாவின் காலத்திலும் அவருக்கு முன்னும் பின்னுமாக பல இயக்குனர்கள் ஜப்பானிய சினிமாவின் தரத்தை உலகுக்கு எடுத்துசென்றிருப்பினும் எவரும் குரசேவா அளவுக்கு படைப்பில் உச்சத்தை அடையவில்லை. உலகில் வடிவம் மற்றும் உள்ளடக்கத்திலும் தொடர்ந்து இலக்கியதரத்தையும் மனிதவாழ்வின் பேருண்மைகளையும் தேடிய இயக்குனர்கள் பட்டியலில் குரசேவாவுக்கே முதலிடம். அவரது திரைப்படங்கள் ஒன்றிலிருந்து ஒன்று அனைத்திலிருந்தும் முழுமையாக வேறுபட்டன. அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் உலக சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இயக்குனர்களான பெர்க்மன், தார்க்கோவ்ஸ்க்கி போன்றவர்களிடமிருந்து அவர் விலகிநிற்கும் இடம் இதுதான். மேலும் அவர்களது படங்கள் உண்மையை இயற்கையின் வழியாகவும் ஆன்மிகத்தின் வாயிலாகவும் தேடியபோது குரசேவா மட்டுமே அதனை எளிய மனிதர்களின் துயரத்தின் வாயிலாக அவர்களது வேதனையின் முனகல் வழியாக இதனை இடையறாது தேடினார். அது போல படைப்பொழுங்கின் மீதான அவரது காதல் அண்டசராசரத்தின் வடிவங்களுக்கு அப்பாலும் இயங்க கூடியது. அதன் காரணமாக அவர் பல துன்பங் களையும் துயரங்களையும் அவராகவே வருத்திக்கொண்டார். 1975ல் வெளியான டெர்சு உசாலாவில் அவர் எதிர்பார்த்த பனிப்புற்கள் வளர்வதற்கு ஏறக்குறைய ஓரிருவருடங்கள் வரை வெறுமனே காத்திருந்தார். 1971ல் அவர் ஒருமுறை ஜப்பானிய மரபுப்படி ஹரகிரி எனும் தற்கொலைமுயற்சிக்கு ஈடுபட்டு கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டார். அகிராகுரசேவாவால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்கள் அமெரிக்கர்கள். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனர்களான ஸ்பீல்பெர்க், ஜார்ஜ் லூகாஸ் மற்றும் பிரான்சிஸ் போர்ட் கொப்பாலா ஆகியோர் அகிராவை தங்களது குருவாக கருதினர். குரசேவாவின் படங்கள் பெரும்பாலும் அமெரிக்க இயக்குனரான ஜான் போர்டின் தீவிர பாதிப்பிலிருந்து துவங்கியவை என்பது கூட இதற்கான உளவியல் காரணமாக இருக்கலாம். தனது குருவுக்கு செய்யும் காணிக்கையாக ஸ்பீல்பெர்க் ஒருபடத்தை எடுக்க அன்பு அழைப்புவிடுத்தார். 1990ல் வெளியான குரசேவாவின் ட்ராம்ஸ் எனும் அத்திரைப்படத்தில் ஹாலிவுட்டின் இன்னொரு பிரபல இயக்குனரான மார்டின் ஸ்கோர்சி ஒரு முக்கியப்பாத்திரத்தில் பங்கேற்று தன்பங்கிற்கு குருகாணிக்கை செய்துகொண்டார். குரசேவா பெற்ற பரிசுகள் எதுவும் அவரது படங்களுக்கு ஈடாகாது. அவர் பற்றிய தகவல்கள் பகிர வேண்டியவை அல்லது தேடிக்கண்டடைய வேண்டியவை இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை அவரே எழுதிய sஷீனீமீ tலீவீஸீரீ றீவீளீமீ ணீஸீ ணீutஷீதீவீஷீரீக்ஷீணீஜீலீஹ் எனும் நூலை படிப்பதன் மூலம் ஓரளவு நிறைவேறும். வரும் ஆண்டு மார்ச் 23 லிருந்து அகிராகுரசேவின் நூற்றாண்டு துவக்கம் பெறுகிறது. இன்றும் அவர் அறிவு உலகிற்கு இளமையானவராகத்தன் காட்சியளிக்கிறார்.

July 12, 2025

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷியாம்பெனகல். துல்லியமான காட்சிமொழி, அழுத்தமான திரைக்கதை, எதார்த்த காட்சியமைப்புகள் ஆகியவை ஷியாம்பெனகலின் பலம். ஆந்திரமாநிலம் ,செகந்திராபாத்தில் பிறந்தபெனகல், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்துவிட்டு சினிமா மீதான ஆர்வத்துடன் ஹைதராபாத் பிலிம்சொசைட்டி ஒன்றை நண்பர்களுடன் துவக்கினார்.இவரது சினிமா ஆர்வத்தைத் தூண்டிவிட்டதில் முக்கியகாரணமாக இருந்தவர், அவரது தூரத்து உறவினர் ஒருவர்.அவர்,புகழ்பெற்ற இயக்குனர்.பியாசா எனும் காவியத்தைத் தந்தகுருதத்தான். குருதத்தின் பாட்டியும் ஷியாம்பெனகலின் பாட்டியும் அக்காதங்கை ஆவர். பட்டப்படிப்புமுடித்தகையோடு,புனாபிலிம் இன்ஸ்டிடியூட்டில் இயக்குனர் பிரிவில் மாணவராகச் சேர்ந்தவர், துவக்கத்தில் ஆவணப்படங்கள் இயக்குவதில் ஆர்வமாக இருந்தார். 1974இல் ,இவர் இயக்கிய முதல் முழுநீளப்படம் ,ஆங்கூர். ஷப்னாஆஸ்மி-ஆனந்த் நாக் இருவரையும் அறிமுகப்படுத்திய இந்த முதல்படமே, தேசிய விருதைப்பெற்றதோடு இந்தியா சார்பாக ஆஸ்கார் விருதுக்காக அந்த வருடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. 1975இல் வெளியான மூன்றாவது படம்Nishant.இது, அந்தஆண்டுக்கான கான் விருது போட்டிப்பிரிவில்தேர்வுசெய்யப்பட்டிருந்தது. அடுத்த படமான மாந்தன், குஜராத்தின் வெள்ளைப் புரட்சி என்றழைக்கப்படும் கிராமகூட்டுறவுபால் பண்ணைகள் பற்றியது. ஹன்ஸாவடேகர் எனும் மராத்தி நடிகையின் வாழ்க்கையை அடி யொற்றி,ஸ்மிதாபாட்டீல் நடிக்க ,இவர் இயக்கிய பூமிகா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 1985இல்,இவர் இயக்கிய சத்யஜித்ரே குறித்த ஆவணப்படம் இவரது முக்கியமான படைப்பாகக் கருதப்படுகிறது. இதுவரை இவர் எடுத்துள்ள 25 முழுநீளப்படங்களில் மண்டி, மம்மோ, சர்தாரீபேகம்ஜுபைதா போன்ற படங்கள் குறிப்பிடத்தகுந்தவை. 1981இல்,இவர் இயக்கத்தில் வெளியான கலியுக்,மாஸ்கோதிரைப்படவிழாவில் சிறந்த படத்துக்கான தங்கம் வென்றது. இவரின் பத்துக்குக்கும் மேற்பட்ட படங்கள்,இந்தியாவின் சிறந்த படங்களுக்கான தேசிய விருதைப்பெற்றுள்ளது.வாழ்நாள் சாதனைக்காக ,இந்தியசினிமாவின் உயர்ந்த விருதான தாதாசாகிப்பால்கே விருது வழங்கி இந்திய அரசு இவரை கவுரவித்துள்ளது.

kசிறு கூழ் அளாவிய கவி ஸ்ரீநேசன்

சிறு கூழ் அளாவிய கவி வாழ்வின் உன்னதங்களைத் தேடி மொழிக் கோடாரியுடன் அகக்காட்டில் திரியும் ஒருவன் சேகரித்த மரச்செதில்கள் இவை , இந்த செதில்கள் ஒவ்வொன்றொலும் ஒரு மரத்தின் வலி நிரைந்த காதை ஒளிந்து கிடக்கிறது எளிமையின் அழகுடன் ஆக்கம் பெறும் இக் கவிதைகள் உயிர்த்துக்கொள்ளும் இடம் தான் கவியின் ஆளுமை. பெரு நதிக்கரையோரம் கூழாங்கற்களுக்கிடையில் அலையும் சிறு மீனின் அசைவு போல ஒவ்வொரு கவிதையும் உண்டாக்கும் நீர் வட்டங்கள் முடிவற்றவை மொழியோடும் இலக்கியத்தோடும் தீவிர உள்ளுணர்வுடன் சஞ்சரிக்கும் ஸ்ரீநேசன் இச் சிறு தொகுப்பின் வழி தன் முந்தைய தொகுப்புகளுக்கும் சேர்த்து வெளிச்சமூட்டுகிறார்.. நாதன் பதிப்ப்கம் நாதன் பதிப்பகம் வெளியிட்ட கவிஞர் ஸ்ரீ நேசன் அவர்களது குறுமுப்பத்தாறு கவிதைத் தொகுப்புக்கு எழுதப் பட்ட பதிப்புரை

சொற்கள் தானே எழுதிக்கொண்ட உள் வெளிச் சித்திரங்கள் - சீனு ராமசாமி வழி - அஜயன் பாலா பாஸ்கரன்

ஆங்கிலக்கவி வில்லியம் ப்ளேக் கவிதை பற்றி இப்படிச் சொல்கிறார் ”அது உள்ளங்கையில் எல்லைகளற்ற வெளியையும் ஒரு கணத்தில் முடிவற்ற காலத்தையும் பெயர் தெரியாத மலர் ஒன்றின் வழி பரந்த ஆகாயத்தையும் பூமியையும் உணர்த்துவதாக இருக்கவேண்டும் என்கிறார் ” உண்மைதான் மூவாயிரம் ஆண்டுகளில் இந்த தமிழ் நிலத்தில் பல சக்ரவர்த்திகள் பல சமராஜ்யங்கள் பல கோடி மனிதர்கள் கடந்து இன்னமும் நம்மோடு உரையாடல் நிகழ்த்திக்கொண்டிருப்பது கவிதைகள் மட்டுமே எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே …. தீதும் நன்றும் .. யாயும் யாயும் . பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் மேற் சொன்ன சொற் சேர்க்கைகள் மிக எளிமையானவையே ஆனால் இவையே காலங்களை ஊடுருவும் மகத்தான ஆற்றலை தம்முள் கொண்டு சமூகத்தை வழி நடத்தியபடி இன்னும் பல தலைமுறைகளை கடக்க வல்லதாக் இருக்கின்றன இப்படிபட்ட பேராற்றல் மிக்க நெடிய தொடர்ச்சி கொண்ட தமிழ் என்னும் பெரு நதியின் படித்துறையில் இக்கவிதைத்தொகுப்புடன் நண்பரும் இயக்குனருமான சினு ராமாசாமியும் கால் நனைத்து iஇத் தொகுப்பின் மூலம் உடலில் ஈரம் பரப்பிக்கொண்டார் என்பது, ஒரு ஆச்சரயமான நிகழ்வு. மொத்தம் ---- கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பின் கவிதைகளை நிலக்காட்சிக் கவிதைகள் , அகக்காட்சிக் கவிதைகள் என இரண்டாகப் பிரிக்க முடியும் நிலக்காட்சிக் கவிதைகளில் , காட்சி செதில்கள் ,வாழ்வின் துய்ப்புகள், .குணச்சித்தரிப்புகள் எனவும் அகக்காட்சி கவிதைகளில் . காம விகற்பங்கள் ,,மெய்மையின் தீண்டல்கள் எனவுமாக கலவையாக இக்கவிதைத் தொகுப்பு தன்னை வடிவமைத்துக்கொண்டிருக்கிறது என்ற போதும் . ஒவ்வொரு கவிதையையும் வாசிக்கும் போது ஒரு மயிலிறகு நம் முகத்தை வருடிச்செல்வதை உணர முடிகிறது தொகுப்பின் இரண்டாவது கவிதையான “அவர்கள்” கவிதையை வாசிக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட கணத்தில் சத்தமெழுப்பாத .. சிறு சலனம் கூட காட்டாத மனிதர்கள் பற்றி வியந்து பின் அவர்கள் பார்வையற்றோர் என காண்பிக்கும் அக்கவிதையின் காட்சிப் படிமம் நம்மை திடுக்கிட வைக்கிறது அது போல “அருள்” கவிதையில் அகாலத்தில் மரணமடைந்த மகனின் வெற்று உடலுக்கு அவன் அப்பாவும் அம்மாவும் தலைவழியே கண்ணீருடன் கலந்து தண்ணீர் ஊற்றும்போது கல்லூரி நாட்களின் போது காதல் தோல்வியில் செத்துப்போன பக்கத்து வீட்டு நண்பனின் மரணம் வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை பெரும்பாலான கவிதைகளில் தான் வாழ்ந்த மதுரையை ஒட்டிய புறநகரின் நிலக்காட்சிகளும் வெம்மை போர்த்திய மனிதர்களும் அவர்களது வாழ்வியலும் உறைந்துகிடைக்கின்றன தலைப்புகவிதையான மாசி வீதியின் கல் சந்துகள் வாசிக்கும் போது சந்தை கடக்கும் சிறுவனாக நாமே மாறிப்போவது விந்தைதான் . அதில் எதிர்கொள்ளும் மனிதர்களின் வியர்வை வாசம் அவர்கள் நிழல்;களுடன் நம்மை நம் மனதில் கடப்பது விந்தை . “அடிகுழாயில்” எனத்துவங்கும் “வெயில் தாய்” எனத்தலைபிட்ட கவிதையில் கவிஞர் பொன்னாங்கன்னி கீரைக்கட்டுகளை விற்கும் வயதான பெண் அந்த கீரைக்கட்டுகளை அடிக்குழாயில் அடித்த தண்ணீர் மூலம் கீரைக்கட்டுகளில் தண்ணீர் தெளிப்பதை காண்பிக்கிறார். அப்போது அந்த வயதான தாய்க்கு பருவத்தில் தன் தந்தை தன் தலைக்கு நீரூற்றிய காட்சி நொடிப்பொழுதில் வந்து போகிறது . இதை திரை மொழியில் “இண்டர்கட் ஷாட்” என்பார்கள் . அந்த ஒரு கணம் இக்கவிதைக்குள் பல கதைகளை நம் முன் காட்டிவிட்டுச் செல்கிறது. தொடர்ந்து இக்கவிதையின் கடைசி வரியில் செருப்பு அணியாத் பாதங்களுடன் நடந்துசெல்லும் பொன்னாங்கன்னி கீரை விற்கும் அந்த தாய் கீரையை கூவி விற்பனை செய்துகொண்டு செல்வதாக காட்டும் சித்திரம் ,ஓர் காவியச்சித்திரம் என்றால் மிகையில்லை நற்றிணையில் “விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,” எனத்துவங்கும் சங்கப் பாடல் ஒன்றில் புன்னை மரத்தை ஒரு தலைவி தன் தங்கை என விவரித்து தலைவனுக்கு சொல்லும் ஒரு கவிதையைபோல இதில் வயதான பெண் தன் பருவமெய்தி தன் தந்தை தன் தலையில் ஊற்றிய காலத்தை நினைத்துப் பார்க்கிறார் ஒரு கவிதை வாசகனுக்குள் எவ்விதமான அகப்பயணத்தை தூண்டவேண்டும் என்பதற்கு இக்கவிதை ஒரு சிறந்த சான்று இது போல இத்தொகுப்பு முழுக்க பல கவிதைகள் எளிய மக்களின் பாடுகளை வார்தைகளை வலிகளை நோயை விவரித்து ஆங்காங்கே அதிர்வலைகளை உண்டாக்குக்கிறது. இப்படியெல்லாம் யோசிக்கும் ஒருவன் நான் பார்த்து பழகிய நண்பன் சீனு ராமசாமிக்குள் எங்கே இருந்தான் என யோசிக்க வைக்கும் அளவுக்கு பல இடங்களில் சமூகத்தின் மீதான கோபம் கூரான வார்த்தைகளுடன் கவிதையாக தெறிக்கிறது . இது போன்ற பாடு பொருள் பிரதானமாகவும் உருவகம், உத்தி ஆகியவை இரண்டாம் நிலையிலும் கொண்அ பிலேயின் பொயட்ரி வகை சார்ந்த கவிதைகள் இத் தொகுப்பில் அதிகம் இருந்தாலும் உருவகம் உல்லுறை இறைச்சி படிமம் ஆகியகூறுகளைக் கொண்ட அடர்த்தியான கவிதைகளும் கவிஞரின் கவிச் செழுமைக்கு சான்றாக இருக்கின்றன.. அவற்றுள் கடபாரையை உருவகமாக் பயன்படுத்தி அவர் எழுதியிருக்கும் கூலி ஆள் எனும் கவிதை கன்க்கச்சிதம் . கேலிச்சுத்திரம் போல உருவாக்கப்பட்டிருக்கும் இக்கவிதை கவிஞர் கண்டராதித்தனின் கால் மேல் கால் போட்டு கடந்து போனான் என முடியும் சிறந்த கவிதை ஒன்றின் வரியை ஞாபகப்படுத்தி நம்முள் நகைப்பை உருவாக்க்வதில் கவிஞர் முழு வெற்றி பெற்றுவிடுகிறார் அதே போல சீனுராமசாமியை சிறந்த கவிஞன் என உரக்க சொல்லி அழைக்கும் கவிதைகளில் ஒன்று புகைப்படம் .இதில் நாம் எடுக்கும் எந்த புகைப்படம் நம் அஞ்சலிக்கு தேர்வாகும் எனற கேள்வி சட்டென ஒரு மின்னலை உருவாக்கி விட்டு நம்மை அந்தகாரத்தில் ஆழ்த்திவிடுகிறது . இப்படி எடுத்துச்சொல்லி ஆச்சரயப்டும் படி பல கவிதைகள் மிக சிறப்பாக வடிவம் கொண்டிருக்கின்றன தொகுப்பின் ஆகச்சிறந்த கவிதையாக வெயில் தாய் , புகைப்படம் கூலி ஆள் போன்ற கவிதைகள் என் தேர்வில் இருந்தாலும்” உண்மை” எனும் தலைப்பில் சீனு ராமசாமி எழுதியிருக்கும் ஒரு கவிதையை என்னால் அத்தனை சுலபத்தில் கடக்க முடியவில்லை பட்டினத்தார் பாணியில் உற்றவர் கை விடுதல் அல்ல எனத்துவங்கி வரிசையாக கை விடுதல் அல்ல வற்றை பட்டியலிட்டுக்கொண்டே வருபவர் இறுதி வரியில் ஏழையின் உடலை அவன் உறுப்புகள் கைவிடுதல் மகா துயரம். என முடிக்கும் போது மிகபெரிய வலி நம் இதயத்தை கவ்விக்கொள்வதை தவிர்க்க முடியவில்லை அகிராகுரோசாவின் “ரெட் பியர்ட்” படத்தில் நோயுற்ற உடல்கள் வாதையில் புலம்பும் அந்த மரண ஓலங்கள் சட்டென கண் முன் தோன்றுகின்ரன இந்த மொத்த தொகுப்புமே இந்த ஒரு கவிதைக்குத்தானோ என எண்ணத் தோன்றும் அளவுக்கு இக்கவிதையின் வழி நம்மை மனித அவலத்தை உணர்த்தி பெரும் தியானத்துள் அழைத்துச்செல்கிறார் மொழியின் பயணத்தில் இந்தக் கவிதைகள் என்ன இடம் கொள்ளும் என என்னால் சொல்ல முடியவில்லை ஆனால் வாசிப்பவன் மனதில் இத்தொகுப்பு பெரும் வெளிச்சத்தையும் உயர்வையும் மேன்மையையும் கற்றுத்தந்து ஒரு அங்குலமேனும் அவனை உயர்த்தி நவீன உலகத்துக்கு அவசியம் தேவைப்படும் புதிய மனிதனாக மாற்றும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை இத்தொகுப்பு இல்க்கிய வாதிகளை விடவும் கவிஞர்களை விடவும் இன்னபிற சமூகத்தை இயக்கும் முக்கிய கர்த்தாக்களை விடவும் , நம் காலத்தின் புதிய தலைமுறையினரின் கைகளில் தவழவேண்டும் ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் இக் கவிதைகளை வாசிக்க வேண்டும் சக மனிதன் மீதும் சக உயிரின் மீதும் அன்பையும், நேசத்தையும் இக்கவிதைகள் விதைக்கட்டும் அதுவே நம் காலத்தின் தேவையும் கூட 23-02-2024 ஞாயிறு காலை 10. மணி சாலிக்கிராமம் சென்னை

May 31, 2025

கைவிட்டுப்போனது தமிழ் சினிமாவின் கலைக் களஞ்சியம் , டிகர் ராஜேஷ் : அஞ்சலி .... - அஜயன் பாலா எழுத்தாளர் இயக்குனர்

நடிகர் ராஜேஷ் இறந்த செய்தி இன்று காலை நேரத்தை சட்டென இருளச்செய்து விட்டது மிகச்சிறந்த ஆய்வாளர் வெறும் சினிமா மட்டுமல்லாம்ல்லாமல் அரசியல் பண்பாடு வரலாறு என பல துறை வல்லுனர் அவர் சென்ற வாரம் தான் போனில் குறுஞ்செய்தி அனுப்பினார் . அவரது மகன் தீபக் திருமணம் வரும் ஜீன் 6ம் தேதி அணைகாட்டில் தட்டு மாற்றுதல் மற்றும் ஜூலை 27 ஆம் தேதி திருமணம் என்றும் ஆகஸ்டில் வரவேற்பு என்றும் வித்திய்சாமாக இருந்தது . நான் உடனே போன் செய்து என்ன சார் ரொம்ப சிக்கனமா இன்விடேஷன் அடிச்சிட்டீங்க என சொல்ல உடனே சிரித்த்படி அட இல்லை சார் இன்விடேஷன் ரெடியானதும் கொடுக்க்க நேர வருவேன் ஆனா முன்னாடியே சொல்லிட்டா உங்க தேதியை எனக்காக இப்பவே ஒதுக்கி வச்சிக்கவீங்க இல்லை . என சொன்னவர் நான் எப்பவுமே பரபெக்ஷனிஸ்ட் ..சார் . எல்லாத்தையும் திட்டமிட்டு செய்ஞ்சா தான் நிம்மதியா தூங்க முடியும் . என் சாவு தேதி கூட எனக்குத் தெர்யும் அந்த அளவுக்கு நான் அக்யுரசி எனச்சொல்லி சிரித்தார் . உண்மையில் இந்த தேதியை அவர் முன்கூட்டி தெரிந்துதான் அவசர்மாக மகன் திருமணத்தை திட்டமிட்டாரோ என்றும் தகவல்களை பகிர்ந்து கொண்டாரோ என்றும் எண்ணத்தோன்றுகிறது . .1998 ஆம் ஆண்டு அவரை முதன் முதலாக அவரது நநத்னம் அலுவலகத்தில் சந்தித்த போது அன்று உலக சினிமாவின் மிகச்சிறந்த நூலான 5சி இஸ் ஆப் சினிமாட்டோகிராபி எனும் 1000 ம் பக்க நூலை மொழி பெயர்த்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார் .எனது நண்பர் ஒருவர் அப்போது அவருக்கு உதவிக்கொண்டிருந்தார் அந்த நண்பரை சந்திக்க அவர் அலுவலகம் சென்ற போதுதான் நடிகர் ராஜேஷ் அவர்களை முதன் முதலில் நேரில் சந்தித்தேன் . அன்று அவரோடு பேச முடியவில்லை . நான் அப்போது சினிமாவில் முழுமையாக கால் பதிக்கவில்லை . ஆனாலும் அவருக்கு அந்த நூலை மொழி பெயர்த்து வெளியிடுவதில் ராஜேஷ் சாருக்கு வெளிப்பட்ட ஆர்வம் என்னை ஆச்சர்யப் படுத்தியது. அன்று அவரை வியப்புடன் பார்க்கத்துவங்கிய என்னை நேற்று வரை பல சந்தர்ப்பங்களில் என்னை தொடர்ந்து ஆச்சரயப்படுத்தி வந்தார் . பிற்பாடு நான் மார்லன் பிராண்டோ நூலை 2006 ஆம் ஆண்டில் எழுதி வெளியொட்டேன். இன்று அது பல பதிப்புகள் வெளி வந்தாலும் முதல் பதிப்பு வெளி வந்த இரண்டு மாதங்கள் வரை யாரும் புத்த்கம் பற்றி பேசவில்லை . நண்பர்கள் கூட பெரிதாக் ரியாக்ட் செய்யவில்லை நாம தான் சரியா எழுதலியோ என நினைத்திருந்த போதுதான் . ஒரு அழைப்பு என் தொலைபேசிக்கு வருகிறது . நான் ராஜேஷ் பெசறேன் கம்பீரமான குரல் . . தொடர்ந்து ஒரு மணி நேரம் புத்த்கத்தை பாராட்டி பேசினார் .முதன் முதலாக திரைத்துறையில் என் நூலைப் படித்துவிட்டு பார்ட்டிபேசியது அவர்தான் .என்னை பாராட்டும் விதமாக அன்று மாலையே காஸ்மோபலிட்டன் கிளப்புக்கு வரவழைத்து சிறு விருந்து கொடுத்து உபசரித்து பாராட்டி மகிழ்ந்தார் நான் செய்ய நினைச்சது நீங்க செஞ்சிட்டீங்க அதனால தான் இது என சொல்லி மகிழ்ந்தார். அவாருக்கு தெரிந்த்தை பேச அவருக்கு அன்று யாரும் கிடைக்கவில்லை அதான்ல் அடிக்கடி பேசி தன் படித்த விஷய்ங்களை என்னோடு பகிர்வார் .உலக சினிமாக்கள் குறித்தும் தமிழ் சினிமா குறித்தும் அவ்வ்ப்போது உரையாடுவார் . சீனாவுக்கு பயணம் சென்று வதவுடன் என்னை அழைத்து அந்த அனுபவத்தை குழ்ந்தை போல பகிர்ந்து கொண்டார் . பெசாம இதையெல்லாம் பயணக்ட்டுரையா எழுதுங்க சார் என்றதும் ஆமால்ல என சொல்லியவர் கையோடு தந்திக்கு போன் செய்து அதில் தொடராக எழுதி பதிவு செய்தார் . அவ்வ்போது ஹாலிவிட் நடிகர்கள் போல போனிலேயே பேசிக கான்பிப்பார் ஒரெ வசனத்தை ஷேக்ஸ்பியர் பாணியிலும் மெதட் ஆக்டிங் பாணியிலும் தமிழ் நாடக பாணிய்லும் பேசி நடித்துக்காட்டுவார் . ஹாலிவுட் படங்கள் பற்றியும் நட்சத்திரங்கள் அனைவர் பற்றியும் அவருக்கு தெளிவான பார்வையும் அறிவும் இருந்தது. அதே அளவுக்கு தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகர்கள் குறித்தும் அவர்களது வர்லாறு குறித்தும் முழுமையாக தெரிந்து வைத்திருந்தார் . குறிப்பாக பழைய நடிகர்கள் யார் பற்றிக் கேட்டாளும் அவர்கள் முழு வரலாற்றையும் வெற்றி தோல்வி களையும் அவர்கள் வாழ்வில் நடந்த சுவையான அனுபவங்களையும் குறித்து பேசி ஆச்சர்ய்பட்டுத்துவார். ஒரு முறை பி. யூ சின்னப்பா பற்றி பேசிக்கொண்டிருந்த போது எப்படி சார் உங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சது என கேட்டபோது . நான் நேரா அவங்க ஊருக்கெ போய் விசாரிப்பேன் சார் . சும்மா இருக்கும் போது வேற என்ன வேலை காரல பெட்ரோல் போட்டுகிட்டு தமிழ் நாடு புல்லா சுத்தியிருக்கேன். கிட்டத்ட்ட எல்லா நடுகர்களோட சொந்த கிராமத்து வீட்டுக்கும் போயிருக்கேன் ஏன் சார் இப்படி என்ன சார்…, மனுஷ வாழ்க்கை இவ்ளோதான் சாவ்றதுக்குள்ள எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும் சார் சினிமா நடிகன் ஏதாவது பழக்கத்துக்கு அடிமையா இருப்பான் . எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை . என் மனைவியை தவிர யாரையும் தொட்டதுமில்ல இப்படி புத்த்கம் படிக்கிறதும் பிடிச்ச நடிகர்களோட வீட்டைத் தேடி ப்போய் தகவல் சேகரிக்கறதும் தான் எனக்கு இருக்க ஒரே கெட்ட பழக்கம் எனச் சொல்லி சிரிப்பார, . வெறும் சினிமா மட்டுமல்லாம் தமிழக இந்திய உலக அரசியல் த்லைவர்கள் பற்றியும் அவர்கள் பழக்க வழ்க்கம் குணாம்சம் வர்லாறு அனைத்தும் தெரிந்து வைத்திருந்தார் ஒரு முறை வி. கே. கிருஷ்ணமேனன் பற்றி பேச்சு வந்தது கிருஷ்ண மேனன் 50களில் தேசிய ராஜாங்க அமைச்சராக பத்வி வகித்த்வர் மட்டுமல்லாமல் சிறந்த் அறிவு ஜீவி என நேருவால் பாரட்டு பெற்றவர் அவர் குறித்தும் கூட நான் அறியாத தகவல்களை சொல்லி ஆச்சர்யப் படுத்தினார். அந்த அளவுக்கு இந்திய அரசியல்வாதிகள் குறித்த பழுத்த அறிவு அவருக்கு இருந்தது . காந்தி நேரு இந்திரா ஜின்னா என அனைவரையும் குறித்து பக்கம் பக்கமாக பேசுவார் வாழ்க்கை குறித்து பழுத்த அனுபவம் அவருக்கு உண்டு . சதா மனிதர்கள் குறித்தும் சமூகம்குறித்தும் சினிமா குறித்தும் சிந்தித்துக் கொண்டிருப்பார் இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்கு தூரத்து உறவினர் . ஆனால் அதை அவர் எங்கேயும் சொல்லிக்கொண்டவரில்லை . அவரது வீட்டின் வரவேபறை போல நான் யார் வீட்டிலும் பார்த்ததில்லை எம் ஜி ஆர், சிவாஜி , எம் ஆர் ராதா, தாமஸ் ஆல்வா எடிசன், பெரியார், அண்ணா, சாவித்ரி ,சந்திரபாபு பத்மினி மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் என ஒரு இருபது விஐபிக்களீன் புகைப்படஙக்ளை கடவுளர் படங்கள் போல வரிசையாக வைத்திருப்பார் எதுக்குசார் இவங்க எல்லார் போட்டோவும் வச்சிருக்கீங்க என்றேன் இவங்க்தான் சார் எனக்கு எல்லாம் நான் வியந்து பார்த்த மனிதர்கள் . நான் வாழற வாழ்க்கையை நான் செதுக்கிக் கொள்ள எனக்கு இவங்கதான் கத்துகொடுத்துருக்காங்க இவங்களை தினசரி பாத்தாதான் மனசு நெறையும் என்றார் எனது தமிழ் சினிமா வரலாறு நூல் வெளியிட்டு விழாவுக்கு வந்து நூலை வெளியிட்டு சிறந்த உரை நிகழ்த்தினார் . அதே நூலின் இறண்டாம் பாகமான திராவிட எழுச்சி நூலுக்கும் சிறந்த அணிந்துரை வழங்கி கவுரவித்தார் . எனது திருமணத்தன்று வெளியூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் அவரால் வரமுடியவில்லை . ஆனால் மறு நாளே போன் செய்து உங்க வீட்டு வாசல்ல் இருக்கேன் எனக் கூறி ஆச்சர்யப்படுத்தினார் வாசலுக்கு ஓடி அவரை அழைக்க வீட்டுக்கு பரிசுடன் வந்து என்னையும் மனைவியையும் வாழ்த்திவிட்டுப் போனார் இவ்வ்ளவு தூரம் நடமாடும் நூலகமாக இருக்கீங்க பின்ன ஏன் சார் ஜோதிடம் லாம் என்பேன் சார் ஜோதிடம் கணக்கு சார் அறிவியில சார் அதை நான் துல்லியாம கத்துகிட்ருக்கேன் சார் . யாராவது கிறீஸ்த்வன் ஜோசியத்து பின்னாடி அலையறது பாத்ருக்கீங்களா .. நான் ஏன் இதை பாலோ செய்யறேன்னா எனக்கு மத அடையாளம் எதுவுமில்ல .. ஆனா நமக்கு தெரியாத விஷய்ம் உலகத்துல எதுவும் இருக்கக் கூடாதுன்னு தான் என்பார் ஒண்ணு சொல்லட்டுமா சார் என் சாவு தேதி கூட எனக்குதெரியும் ஆனா சொல்லமாட்டேன் . பயந்துடுவாங்க என சொல்லி சிரிப்பார் வித்தியாசமான மனிதர் அவர் இறப்பு தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பு அவர் சிரந்த நடிகராக பல படங்களில் நடித்திருந்தாலும் ஆட்டோகிராப் படத்தில் கொஞ்சமே வந்தாலும் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டு பெற்றது அச்சமில்லை அச்சமில்லை , அந்த ஏழு நாட்கள் சிறை மகாநதி விருமாண்டி போன்றவை அவரது சிறந்த நடிப்புக்கு உதாரணங்கள் நக்கிரன் தொலைக்காட்சி மூலம் இந்திய தமிழக வரலாறு தொடர்பாக எழுத்தாளர் வசனகர்த்தா ரத்னகுமார் அவருடன் பல முக்கிய நேர்காணல்களை நிகழ்த்தியிருக்கிறார் . அவை அனைத்துமே அனைவரும் பார்த்து அறியவேண்டிய வரகாற்று பொக்கிஷங்கள் திமுக அரசு தக்க சமயத்தில் அவரை தமிழ் நாடு திரைப்ப்டக்கலூரிக்கு முதல்வராக பங்கேற்க வைத்து பெருமை சேர்த்தது .மற்ர நடிகர்கள் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு இது . இப்படி பல்வெறு சிறப்புகள் கொண்ட மனித்ரை ஒரு நடமாடும் கலைக்களஞ்சியத்தை நாம் இழந்துவிட்டொம் வாழ்க்கை முழுக்க தேடிக்கொண்டே இருந்தார் இன்று ஒருநாளில் அவர் குறித்து உலகம் தேடும்படி வைத்துவிட்டார் அவருககு என் சார்பாகவும் எங்கள் பாலுமகேந்திரா நூலகம் சார்பாகவும் அஞ்சலி

November 2, 2024

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் மேகங்களுக்கிடையில் ஒரு மினுக்கிடும் வெள்ளி போல சட்டென ஒன்று வது போனது அந்த வெளிச்சம் அவள் கண்ணிலிருந்தா அல்லது கன்னத்திலிருந்தா யூகிக்கமுடியவில்லை பின்னால் அவள் சொல்வதை கேட்டுக்கொண்டு தலையாட்டி நின்ற அவள் தங்கையோ தோழியோ அவள் தோடு வெளிச்சமாகவும் இருக்கலாம் அல்லது அவர்களுக்கும் பின்னால் ரேழியில் துள்ளி விளியாடிக்கொண்டிருந்த சிறு குழ்ந்தையின் கொலுசிலிருந்தோ அல்லது அதற்கும் பின்னால் இடித்துக்கொண்டிருந்த பாட்டியின் வெள்ளிக் குழவியினுடைய அசைவிலிருந்தோ வந்திருக்கலாம் ‘ ஆனாலும் அந்த மினுக் வெள்ளியூட்டம் அவள் தொடர்பானது அந்த வெளிச்சத்தில் நானும் திளைக்கிறேன். என்னால் உங்களுக்கும் அந்த வெளிச்சம் உங்கள் காதலியின் வீதிக்கு அழைத்துச் செல்லட்டும் இப்படித்தான் அவர்களால் இந்த உலகம் ஒளியூட்டம் பெறுகிறது - அஜயன்பாலா - 04-11-2024

September 11, 2024

தமிழ் ஆவணப் படங்களின் போக்கு

ajayanbala@gmail.com . இன்று அனைத்து மொழிகளிலும் ஆவணப்படம் பெரும் இயக்கமாக வளர்ந்துள்ளது. குறிப்பாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் ஆவணப்படங்களுக்கு கலை சினிமாக்களுக்கு இணையான இடத்தில் வைத்து போற்றப்படுகின்றன. மேலும் இன்று. ஒடிடி (OTT எனும் ஒற்றை சட்டகம் வழியாக கலாச்சார பரிமாற்றங்கள் துரிதமாக நடைபெறுகின்றன. ஹாட்ஸ்டாரில் ரஷ்யாவில் ஏற்பட்ட செர்னோபில் (CERNOBYL) அணு உலை விபத்து குறித்த ஆவணப்படம் நம்மை நடுங்க வைக்கிறது. . அது போல நெட்பிலிக்ஸில் ஹவுஸ் ஆப் சீக்ரெட்ஸ் (HOUSE OF SECRETS) அமோசானில் ஐயாம் நாட் யுவர் நீக்ரோ (IAM NOT YOUR NEGRO) போன்ற டாக்குமண்டரி எனும் ஆவணப்படங்கள் கதை படங்களைக்காட்டிலும் விறுவிறுப்பாகவும் அதே சமயம் உண்மைகளை போட்டு உடைத்தும் நமக்கு அதிர்ச்சியூட்டுகின்றன. இப்படி உலகம் முழுக்க ஆவணபடங்களுக்கு வரவேற்பு இருந்து வரும் நிலையில் நம் தமிழகத்தில் ஆவணப்படங்களின் போக்கு என்னவாக இருக்கிறது எனும்போது இத்துறையில் நாம் இன்னும் எவ்வளவு பின் தங்கியிருக்கிறோம் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. ஒருபக்கம் வருத்தம் என்றாலும் ஒட்டு மொத்த இந்தியாவிலும் இந்த நிலைதான் ஆனந்த் பட்வர்த்தன் போன்ற ஒருசிலர் மட்டுமே இத்துறையில் ஓரளவு ஊடகங்களால் கொண்டாடபடுகின்றவர்களாக முக்கியத்துவம் பெற்றுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் மக்களிடையே இருக்கும் வணிக சினிமா மோகம் ஒரு முக்கிய காரணம் ஆவணப்படங்கள் என்றாலே வேப்பங்காய் போல ஒரு புறக்கணிப்பு மக்கள் மன நிலையில் இருக்கிறது பொதுவாக தமிழ் நாட்டில் ஆவணப்படம் என்றாலே பொதுப் புத்தியில் அது திரையரங்குகளில் வணிக சினிமாவுக்கு முன் திரையிடப்படும் அரசாங்கத்தின் செய்திப் படங்கள் என்பதகாவே ஒரு அபிராயம் நம் சூழலில் இருந்து வந்தது .2000க்குப்பின் டிஜிட்டல் கேமராக்கலின் வருகை மற்றும் ஊடக வளர்ச்சிக்கு பின்பு தான் மக்களிடையே ஆவணப்படம் குறித்த விழிப்புணர்வு ஓரளவுக்கு வரத்துவங்கியது. ..இச்சூழலில் ஆவணப்படங்கள் இருப்பதில் அதில் போக்கு என தனியாக எதுவும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து இயங்குவதே இங்கு பெரிய சாதனையாக கருதப்படுகிரது . இச்சுழலில் தமிழகத்தில் குறிபிட்ட சிலரே இத்துறையில் போதிய அங்கீகாரமோ அல்லது வணிக சந்தையோ இல்லாமல் தொடர்ந்து இத்துறையில் அர்ப்பணிப்புடன் இயங்கி வருகின்றனர் அவ்வகையில் தமிழ்ஆவணப்படங்களின் வரலாற்றில் சில முக்கியதடம் பதித்த அந்த இயக்குனர்களையும் அவர்களது படங்களையும் சுருக்கமாக இக்கட்டுரையில் பார்ப்போம் அ. கருப்பன் எனும். ஏ.கே செட்டியார் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிறந்த ஏ.கே செட்டியாரின் முழுப்பெயர் கருப்பன் செட்டியார் சினிமாமீது கொண்ட ஆர்வத்தில் நியூயார்க் சென்று படித்துவிட்டு திரும்பிய போது காந்தி இந்தியாவின் மிகப்பெரிய பேசு பொருளாக இருந்தார். அவரது வாழ்க்கையை ஆவணப்படமாக எடுக்கும் எண்ணம் தோன்ற உடனே களமிறங்கினார் அவரது வாழ்க்கையை நூல்கள் மூலம் முழுமையாக உள்வாங்கிக்கொண்ட அவர் அதன்பின் காந்தி குறித்த ஊடகப் பதிவுகள் எத்தனை நாடுகளில் உள்ளதோ அத்தனையும் சேகரிக்க முடிவுசெய்து களமிறங்கினார். போக்குவரத்து வசதியில்லாத அக்காலத்திலேயே பத்தாயிரம் மைல்கள் மூன்று ஆண்டுகள் பயணம் செய்து பல நாடுகளில் சேகரித்து வைக்கப்படிருந்த காந்தி பற்றிய பிலிம் சுருள்களை உரியவர்களிடம் அனுமதி பெற்று சேகரித்து அதன் மூலம் ஐம்பதாயிரம் அடி நீளத்துக்கு ஆவணப்படத்தை உருவாக்கினார். ஹாலிவுட்டில் சிறந்த படத்தொகுப்பாளர் மூலமாக அதை பன்னிரண்டாயிரம் அடியாக சுருக்கி பின் இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களைப் படித்து விவரணம் எழுதி ஆங்கில எழுத்துக்களாக படத்தில் சேர்த்துக்கொண்டார் இவ்ஆவணப்படத்தை அப்போதைய பிரித்தானிய அரசுக்கு அஞ்சி திரையரங்குகள் திரையிட முன்வரவில்லை இப்படம் பின்னர் 1948 இல் சுதந்திர தினத்தன்று புது டில்லியில் 1948ல் அந்த ஆவணப்படத்தை வெளியிட்டார் . ஆனால் இந்த பெருமைமிக்க காரியத்துக்குபின் தமிழில் ஆவணப்படங்களே பெரிதாக எடுக்கப்படவில்லை குட்டி ஜப்பானின் குழந்தைகள் பல வருடங்கள் இடைவெளிக்குப்பின் 1989ல் சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணி செய்யும் குழந்தை தொழிலாளர்களை மையமாக வைத்து குட்டி ஜப்பானின் குழந்தைகள் வெளியாகி பரவலான கவனம் பெற்றது. பல விருதுகளையும் வென்றது என்றாலும் இதை இயக்கியவர் சலம் பொன்னுரக்கர் கேரளாவைச் சேர்ந்தவர் பின் இந்த படம் உருவாக்கிய தாக்கம் ஆவணப்படம் குறித்த உணர்வை தமிழ் சூழலில் சிறு சலனத்தை உண்டாக்கிவிட்டது என்றாலும் உடனடியாக எதுவும் நடந்துவிடவில்லை . தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்காக சில தனியார் நிறுவனங்கள் எடுத்த சில படங்கள் தவிர வேறெந்த முயற்சியும் இல்லை . காரணம் அன்றுசினிமா எடுப்பது என்பது பெரும் முதலீடு சார்ந்த விடயம் அப்படியே எடுத்தாலும் அதற்கு வர்த்தக சூழலும் இல்லை. இயக்குனர் எடிட்டர் லெனின் அவர்கள் இயக்கிய நாக் அவுட் குறும்படம் தேசுய விருது பெற்றதை ஒட்டி மாற்று சினிமா குறித்த விழிப்புணர்வு தமிழ் ச் சூழலில் உருவாகத்துவங்கியது . இயக்குனர் சொர்ண வேல் ஈஸ்வரன் 1996ல் சொர்ண வேல் ஈஸ்வரன் தங்கம் என்ற பெயரில் எடுத்த ஆவணப்படம் ஒன்று பரவலான கவனத்தை உண்டாக்கியது . அவரே ஐ என் ஏ : இந்திய தேசிய ராணுவம் (1997) என்ற பெயரில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் குறித்த ஆவணபடத்தையும் எடுத்தார் . தொடர்ந்து வில்லு (1997) கருகத்திருவுளமோ (1999) ,தொடர்ந்து Migrations of Islam (2013 ) nagappattinam (2016) கட்டு மரம் போன்ற படங்களை எடுத்து வருகிறார் இயக்குனர் அம்ஷன் குமார் பாரதியைபற்றிய துல்லியமான ஆய்வுகளுடன் அம்ஷன் குமார் எடுத்த சுப்ரமணிய பாரதி எனும் ஆவணப்படம் தான் தொடர்ந்து தமிழில் எடுக்கப்பட்ட பலவாழ்க்கை வரலாற்று படங்களுக்கு முன்னோடி, குறிப்பாக பாரதி , பெரியார் காமராஜர் ஆகியோர்குறித்த வணிக சினிமாக்கள் உருவாக்கம் பெற அம்ஷன் குமாரின் பாரதி படமே முன்னோடியாக அமைந்தது அம்ஷன்குமார் தொடர்ந்து அசோகமித்திரன் சி.வி.ராமன், உ.வெ. சாமிநாத ஐயர், ஆகிய ஆவணப்படங்களை எடுத்துள்ளார். . சதுப்பு நிலக்காடுகள் பற்றி இவர் எடுத்த சுற்றுச்சூழல் குறித்த படமும் கவனிக்கத் தகுந்தது . இதுவரை 25 க்கும் அதிகமான ஆவணப் படங்களை எடுத்து தமிழ் ஆவணப் பட உலகுக்கு பெருமை சேர்த்துள்ளார் 2015ல் இவர் எடுத்த யாழ்பாணம் தட்சினாமூர்த்தி பற்றிய படம் மூலம் முதன்முதலாக தேசிய விருது பெற்ற ஆவணப்பட இயக்குனர் என்ற பெருமையும் இவருக்குண்டு ஆர்.ஆர்.சீனிவாசன் ஒரு ஆவணப்பட இயக்குனரை தமிழக போலீஸ் வலை வீசி தேடிய சம்பவமும், தமிழ் ஆவணப்பட உலகில் நிகழ்ந்துள்ளது . 1997ல் ஆர் ஆர் சீனிவாசன் எடுத்த நதியின் மரணம் தமிழ் ஆவணப்பட வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை என்றும் கூட சொல்லலாம்.. அன்று அனைத்து நாளேடுகளிலும் ஆர் ஆர். சீனிவாசன் புகைப்படமும் குறிப்பிட்ட ஆவணப்படத்தின் பெயரும் பரபரப்பாக பத்திரிக்கைகளில் அச்சாகின. ஒரு வகையில் பார்த்தால் சாதாராண பாமர மக்கள் கூட தினத்தந்தியில் வந்த இந்த செய்தி மூலம் ஆவணப்படம் என்ற ஒன்று இருப்பதை அரிந்துகொண்டனர் . கூலி உயர்வு கேட்டு மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஊர்வலம் சென்ற போது காவல் துரை அவர்களை ஆற்றில் ஓட ஓட விரட்டி அடித்ததை அப்படியே நேரடியாக பதிவு செய்யபட்ட காட்சிகளுடன் இத்திரைப்படம் உருவாக்கப் பட்டது. சென்னையில் பொது அரங்கம் ஒன்றில் இப்படம் திரையிடப்பட்டதால் தமிழகஅரசு இதற்கு தடையானை பிறப்பித்தது . பின் இப்படத்தை இயக்கிய சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து தேடப்படும் குற்றவாளியாக அறிவித்ததும் இனி ஆவணப்படங்களும் சென்சார் செய்த பின்பே பொது இடங்கலில் திரையிடப்படவேண்டும் எனும் புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்ததும் இப்படம் உருவாக்கிய மிகபெரிய சாதனை ஆர்,ஆர் .சீனிவாசன் தொடர்ந்து என் பெயர் பாலாறு போன்ற சுற்றுசூழல் குறித்த முக்கிய ஆவணப்படங்களும், எழுத்தாளரும் கதை சொல்லியுமான பவா செல்லத்துரை பற்றிய பவா என்றொரு கதை சொல்லி மற்றும் புகழ் பெற்ற நாதஸ்வர வித்வான் காருக்குறிச்சி அருணாசலம் பற்றிய ஆவணப்படங்களும் இயக்கி இத்துறையில் தொடர்ந்து இயங்கி வருபவர் இயக்குனர் ஆர்.வி ரமணி . இந்த வரிசையில் இத்துறைக்காக தன்வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இயக்குனர் ஆர்.வி ரமணி . முப்பது வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து இத்துறையில் இயங்கிவரும் ரமணி இவரது படங்கள் இந்திய அளவில் பல முக்கிய திரைப்பட விழாக்களில் பங்கேற்று சிறப்பு செய்திருப்பவர். இவர் இயக்கத்தில் மறைந்து வரும் அரிய கலையான தோல்பாவைக் கூத்து ( 2003 )கலைஞர்கள் பற்றிய 150 நிமிட ஆவணப்படம் தமிழ் ஆவணப்பட வரலாற்றில் ஒரு அரிய முயற்சி. தமிழ் நாடு முழுக்க பல்வேறுபட்ட கலைஞர்களை நேரடியாக கள ஆய்வு செய்த இப்படம் தமிழ் ஆவணப்பட உலகின் இன்னுமொரு மைல் கல் எனலாம் பிற்பாடு 1999ல் ஓவியர் ஆதிமூலம் பற்றி லைன்ஸ் ஆப் காந்தி, மற்றும் 2005ல் எழுத்தாளர் சுந்தரராமசாமி பற்றிய நீ யார், போன்ற படங்கள் இவர் இயக்கத்தில் வெளியான குறிப்பிடத்தக்க படங்கள் ரமணியின் படங்கள் தனிமனிதமும் அக விசாரணையும் கவித்துவமும் கூடி வேறு திசையில் பயணித்து புதிய அனுபவங்களுக்குள் இழுத்துச் செல்பவை . இந்த பாணியின் உச்சமாக 2019 ல் இவர் இயக்கிய ஓ தட்ஸ் பானு எனும் ஆவணப்படம் அந்த ஆண்டில் இந்தியாவின் சிறந்த ஆவணப்படத்துக்கான தேசிய விருதை பெற்றது குறிப்பிடதக்கது. இயக்குனர் ஆர்.பி.அமுதன் ஒரு ஆவணப்பட இயக்குனரின் உச்ச பட்ச பொறுப்புகளை தமிழ் சூழலில் உணர்த்திய கலைஞன் ராமலிங்கம் புஷ்பலிங்கம் அமுதன் எனும் ஆர்.பி அமுதன்... மதுரையைச் சேர்ந்தவர். மதுரையில் கொல்லப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர் லீலாவதி மற்றும் தீவிரவாதிகள் போன்ற ஆவணப்படங்கள் மூலம் 1999ல் தன் பயணத்தைத்துவக்கிய அமுதன், மதுரையில் ஒரு குறிப்பிட்ட தெருவில் மலக்கழிவுகளை சுத்தம் செய்யும் மாரியம்மாள் எனும் தலித் துப்புரவு தொழிலாளியின் ஒருநாள் வாழ்க்கையைச் சோலும் பீ (2003 )எனும் இவரது ஆவணப்படம் தமிழில் மனித உரிமைகள் சார்ந்து மிகபெரிய விழிப்புணர்வை உண்டாக்கியது . தமிழ்நட்டில் நிலவும் சாதிய ஒடுக்குதல்கலின் அவலத்தை இப்படத்தில் வெட்ட வெளிச்சமாக்கினார் . தொடர்ந்து இத்துறைகாக தன் முழு வாழ்வையும் அர்ப்பணித்துவரும் அமுதனின் இயக்கத்தில் உருவான செருப்பு தைக்கும் தொழிலை செய்துவருபவர்கள் பற்றிய செருப்பு (2006) (மற்றும் அணு உலைக்கு எதிரான ரேடியேஷன் ஸ்டோரீஸ் (2008) ஆகியவையும்பரவலான கவனத்தை பெற்றவை . தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட ஆவணப்படங்கலை இயக்கியுள்ள இவரது படங்கள் இந்திய முழுக்க பல்வேறு நகரங்களில் திரையிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளன மட்டுமல்லாமல் மறுபக்கம் என்ற பெயரில் தொடந்து மதுரையிலும் சென்னையிலும் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் ஒரு ஆவணப்படத்துகென திரைப்பட விழாவை நடத்தி வருகிறார். இயக்குனர். லீனா மணிமேகலை அடிப்படையில் எழுத்தாளரும் கவிஞருமான லீனா மணிமேகலை கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஆவணபட இயக்கத்தில் ஈடுபட்டு வருபவர் சமூகத்தில் பெண் ஒடுக்குதல் குறித்த பார்வையை முன்வைக்கும் படங்களை அதிகம் இயக்கிய லீனா 2002ல் மாத்தம்மா தமிழின் முதல் இன வரைவியல் சார்ந்த ஆவணப்படம் எனலாம் தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவான மூன்று மூன்று அடித்தட்டு உழைக்கும் பெண்கள் பற்றிய ஆவணப்படம் தேவதைகள் தமிழில் விளிம்புநிலை பெண்களின் வாழ்வையும் அவர்கள் மனத்திடத்தையும் சமூக நெருக்கடிகளையும் தோலுரித்துக் காட்டியது பெண்னாடி ,பலி பீடம் பறை white van stories போன்ற குறிப்பிடத் தகுந்த படங்களை இயக்கியுள்ள இவர் தற்போது முழு நீள கதைப்படங்களை இயக்கி வருகிறார் அவ்வகையில் இவர் இயக்கிய மாடத்தி உலக முழுக்க பல திரைப்பட விழாக்களில்,பங்கேற்று விருதுகளை பெற்று வருகிறது இயக்குனர். ரவி சுப்ரமணியன் கவிஞர் எழுத்தாளர் பாடகர் என பன்முகங்கொண்ட கலைஞரான ரவி சுப்பிரமணியம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். தொலைக்காட்சி தயாரிப்பாக நூற்றுக்கும்மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியவர் எழுத்தாளர் ஜெயகாந்தன் குறித்த இவரது ஆவணப்படம் அம்ஷன் குமாரின் பாரதிக்கு பிறகு அதிகம் பாரட்டைபெற்ற குறிப்பிடத்தக்க ஆவணப்படமாக கருதப்படுகிறது. தொடர்ந்து இத்துறையில் இயங்கி வரும் இவர் இந்திராபார்த்தசாரதி ,மா,.அரங்கநாதன் திருலோக சீதாராம் போன்ற அரிய இலக்கிய ஆளுமைகள் குறித்தும் இயக்குனர் பாலச்சந்தர் குறித்தும் தொடர்ந்து ஆவணப்படங்கள் எடுத்து வருகிறார் இயக்குனர். சோமிதரன் இலங்கைத் தமிழரான சோமிதரன் 2004 முதல் சென்னையில் இயங்கி வரும் ஆவணப்பட இயக்குனர் . 2005ல் போபால் பேரழிவு குறித்து தன்முதல் ஆவணப் படத்தை இயக்கி அறிமுகமானார். இலங்கையில் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது பற்றிய எரியும் நினைவுகள் (2008 ) மிகச் சிறந்த போர் எதிர்ப்பு ஆவணமாகவும் தமிழர் பண்பாட்டு பதிவாகவும் கருதப்படுகிறது . தொடந்து இலங்கையில் நடக்கும் இனப்படுகொலை குறித்த முல்லைத்தீவுசாகா எனும் படமும் போரினால் தமிழர்கள் படும் துன்பங்களையும் அவலங்களையும் பதிவு செய்த குறிபிடதக்க ஆவணமாக கருதப்படுகிறது , தற்போது சென்னையில் முழுநீளகதை படங்களில் பணிபுரிந்து வருகிறார். இயக்குனர் .திவ்ய பாரதி மதுரையைச் சேர்ந்த வழக்கரைஞர் திவ்ய பாரதி 2017ல் வெளியான இவரது கக்கூஸ் ஆவணப்படம் மூலம் முழுமையான ஆவணப்பட இயக்குனராக தன்னை வரித்துக்கொண்டவர். கக்கூஸ் ஆவணப்படம் வெளியான மறுநாளே போலீசாரல் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் . மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படம் குறிப்பிட்ட சாதியை இழிவுபடுத்துவதாக பலத்த எதிர்ப்புகள் வர போலிசார் இவர்மீதுவழக்கு பதிவு செய்து தேடத்துவங்கினர் அடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் மீனவர் பிரச்சனை குறித்து எடுத்த ஒருத்தரும் வரலே என்ற படத்தின்மீதும் பட வெளிவருவற்கு முன்பே போலீசார் தேடும் அளவுக்கு இவரது ஆவணபட செயல்பாடுகள் காத்திரமானவை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முழு நீள படம் எடுக்கும் முயற்சியில் இருந்து வருகிறார் மேற்சொன்ன அனைவரும் தொடர்ந்து இத்துறைக்காக தங்கள் வாழ்வை முழுமையாகவோ அல்லது கணிசமாகவோ அர்ப்பனித்து செயல்படுபவர் . இவர்களின் செயல்பாடுகளால் மட்டுமே தொடர்ந்து தமிழ் ஆவணபடத்துறை இன்று தமிழில் ஓரளவு தடம் பதித்து வளர்ந்துள்ளது இவர்களைத்தவிர தங்களது அரிய முயற்சிகளின் மூலம் சிலர் இயக்கத்தில் உருவாகி வரும் ஆவணப்படங்கள் இத்துறைக்கு தொடர்ச்சியையும் வளர்ச்சியையும் கொடுத்துள்ளன அவர்களுள் பால கைலாசம் இயக்கிய வாஸ்து மரபு, கோம்பை அன்வர் இயக்கிய யாதும் ஊரே .கீதா இளங்கோவனின் மாதவிடாய் , அருள் எழிலனின் பெருங்கடல் வேட்டத்து, பாரதி கிருஷ்ணகுமார் இயக்கத்தில் கீழ்வெண்மனி பற்றிய ராமய்யாவின் குடிசை, செந்தமிழன் இயக்கிய பேசாமொழி ,கோவி லெனின் இயக்கத்தில் அண்ணா ,ப்ரேமா ரேவதியின் உங்களில் ஒருத்தி, பாலமுருகன் இயக்கிய நொய்யல், இரா.முருகவேள் மற்றும் ஒடியன் லட்சுமணன் இயக்கிய நாளி, தவமுதல்வன் இயக்கத்தில் உருவான பச்சை ரத்தம் போன்றவை தம்மளவில் சிறப்பான் ஆக்கமும் வெளியான போது சூழலில் பலரது கவனத்தை ஈர்த்து தமிழ் ஆவணப்பட உலகுக்கு பெருமையும் மதிப்பும் கூட்டிய ஆவணப் படங்கள் வணிக சினிமாக்களுக்கு கிடைக்கும் கவனத்தில் ஒரு துளியளவு கவனத்தை ஊடகங்களும் அரசாங்கமும் கொடுத்தால் இத்துறயில் இன்னும் கூடுதலாக பலர் இயங்கி சமூகத்துக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் பல அரிய சாதனைகளை நிகழ்த்தக்கூடும் பாலு மகேந்திரா நூலகம் சார்பாக இத்துறைக்கு ஒரு இணைய தளம் உருவாக்கி தமிழ் ஆவணப்படங்கள் குறித்தஆவணகப்பகம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து ஆவணப்படம் எடுப்பவர்களுக்கு இதன்மூலம் வழி வகை செய்யவிருக்கிறது என்பதை இக்கட்டுரை மூலம் தெரிவித்துக்கொள்வதில் உவகைகொள்கிறேன் -அஜயன்பாலா பாலுமகேந்திரா நூலகம்

அகிராகுரசேவாவும் ஜப்பான் சினிமாவும்

வாழ்க்கையில் சில குத்துகள் மறக்க முடியாதது. சிறுவயதுகளில் பள்ளிவிட்டு வீடுதிரும்பும்போது அதுவரை உடன் வந்த சக தோழன் தன் வீட்டிற்கு திரும்ப...