July 12, 2025

kசிறு கூழ் அளாவிய கவி ஸ்ரீநேசன்

சிறு கூழ் அளாவிய கவி வாழ்வின் உன்னதங்களைத் தேடி மொழிக் கோடாரியுடன் அகக்காட்டில் திரியும் ஒருவன் சேகரித்த மரச்செதில்கள் இவை , இந்த செதில்கள் ஒவ்வொன்றொலும் ஒரு மரத்தின் வலி நிரைந்த காதை ஒளிந்து கிடக்கிறது எளிமையின் அழகுடன் ஆக்கம் பெறும் இக் கவிதைகள் உயிர்த்துக்கொள்ளும் இடம் தான் கவியின் ஆளுமை. பெரு நதிக்கரையோரம் கூழாங்கற்களுக்கிடையில் அலையும் சிறு மீனின் அசைவு போல ஒவ்வொரு கவிதையும் உண்டாக்கும் நீர் வட்டங்கள் முடிவற்றவை மொழியோடும் இலக்கியத்தோடும் தீவிர உள்ளுணர்வுடன் சஞ்சரிக்கும் ஸ்ரீநேசன் இச் சிறு தொகுப்பின் வழி தன் முந்தைய தொகுப்புகளுக்கும் சேர்த்து வெளிச்சமூட்டுகிறார்.. நாதன் பதிப்ப்கம் நாதன் பதிப்பகம் வெளியிட்ட கவிஞர் ஸ்ரீ நேசன் அவர்களது குறுமுப்பத்தாறு கவிதைத் தொகுப்புக்கு எழுதப் பட்ட பதிப்புரை

No comments:

அகிராகுரசேவாவும் ஜப்பான் சினிமாவும்

வாழ்க்கையில் சில குத்துகள் மறக்க முடியாதது. சிறுவயதுகளில் பள்ளிவிட்டு வீடுதிரும்பும்போது அதுவரை உடன் வந்த சக தோழன் தன் வீட்டிற்கு திரும்ப...