April 24, 2015

தமிழ் ஆலமரம் – ஜெயகாந்தன்





(கடந்த ஏப்ரல் 21 ம் தேதியன்று பனுவல் அரங்கத்தில் நடைபெற்ற ஜெகாந்தன் புகழஞ்சலிக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை – திருத்தப்பட்டது)






                 உலக வரலாற்றின் போக்கினை திசை திருப்பிய ஒரு சில மகத்தான புத்தகங்களுள்  மார்க்ஸின் மூலதனத்துக்கும் அடுத்தபடியாக போற்றப்படும் புத்தகம் சார்லஸ் டார்வின் அவர்கள் எழுதிய உயிரினங்களின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும் எனும்  நூல்.
இருபதாம் நூற்றாண்டின்  உயிரியல்   கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் அடிப்படையாக விளங்கிய அந்நூlல் ஆதாம் ஏவாள் கதைகளை மறுத்து கடவுளின் இருப்பையே கேள்விக்குரியதாக்கியது.
ஆனால் அப்படிப்பட்ட நூலை எழுதியவரே   மத நம்பிக்கைகளுக்கு கட்டுப்பட்டவராக பயந்து வாழ்ந்தார். கடைசி வரை அவர் தன்னை ஒரு நாத்திகன் என அறிவித்துக்கொள்ள பயந்தார். . இன்னும் சொல்லப்போனால் கார்ல் மார்க்ஸ் அவர்கள் தன் மூலதனம் நூலுக்கு அவரைத்தான் முன்னுரை எழுதி தருமாறு கேட்டுக்கொண்டார் அப்போது அதற்கு அவசரமாக மறுப்பு தெரிவித்து ஏற்கனவே மதரீதியாக பல எதிர்ப்புகளை  நானும் என் குடும்பமும் சந்தித்து வருகிறோம் . இப்போதைக்கு இந்த புத்தகத்தின் முன்னுரை மூலம் மத சம்பந்தபட்ட ப்ரச்னைகளுக்குள் மேலும் தான் சிக்க விரும்பவில்லை மன்னித்து விடுங்கள் என எழுதியிருக்கிறார்..
டார்வின் கதையே இப்படியெனும் போது ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்கள் இறுதிக்காலத்தில்  ஹர ஹர சங்கர எழுதியதைக்குறித்தோ எனக்கு சாதிகள் மீது நம்பிக்கை இருக்கிறது என ரவி சுப்ரமணியன் எடுத்த ஆவணப்படத்தில் வாக்குமூலம் கொடுத்திருப்பதையோ நாம் பெரிதாக எடுத்து விவாதிக்க வேண்டிய அவசியமில்லை.
காரணம்  மனிதன் என்பவனே முரண்பாடுகளின் மூட்டை தான்
குறைகளுடன் கூடிய மனிதனே முழுமையானவன் ஆகிறான்
ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதையும் மதிப்பீடு செய்யும் போது ஆப்பிளின் அழுகிய பாகங்களை கத்தியால் நறுக்கிவிடுவது போல  அவனது முரண்களை வெட்டி த்தள்ளிவிடவேண்டும். கையில் என்னமிஞ்சுகிறதோ அதுதான் அவன்

வாழ்க்கை முழுக்க ஒரே கருத்தை நம்பினால் அவன் எழுத்தாளன் இல்லை.அவன் அந்த கருத்தின் அடிமை .
காலம் தோறும் தன்னை சுற்றி நிகழும் சம்பவங்களுக்கேற்ப அவன் மாற வேண்டிய நிர்பந்தங்கள் அவனுக்குள் நிகழ்கிறது. அதன் தர்க்கங்கள் அவன் மட்டுமே அறிந்தவை .
ஒருவனது கருத்தை வேண்டுமானால் அவன் தீர்மானிக்கலாம்
பொது வாழ்வின் அரசியல் முகத்தை அவனுக்கு நேரும் சாதக பாதக அமசங்களும் மான அவமானங்களுமே தீர்மானிக்கின்றன.
பொதுவாழ்வில் அவரைப்பற்றி அறிந்த நாம் அவர் தனி வாழ்வில் என்ன மாதிரியான மனப் பிரச்னைகளை எதிர்கொண்டார்  அவருடைய கோபம் என்ன? அவமானங்கள் என்ன? தோல்விகள் என்ன? வருத்தங்கள் என்ன? கண்ணீர் என்ன? என்பது பற்றியெல்லாம் தேடப்போனால் ஒருவேளை இந்த முரண்களுக்கெல்லாம் விடை கிடைக்கலாம்.

கம்யூனிஸ்டாக இருந்து காங்கிரஸ்காரனாக மாறுவதும்
நாத்திகத்துக்காக இதிகாசங்களை படிக்க போய் அர்த்தமுள்ள இந்துமதம் எழுதுவதும்  எழுத்தாளன் திட்டமிட்டு நிகழ்த்துவதல்ல
ஒரு முறை அவரது தர்க்க முரண்கள் குறித்த கேள்விக்கு ஜெயகாந்தன் பதில் சொல்லும்போது
ஆமாம் அப்போது அப்படி நினைத்தேன் அப்படி எழுதினேன் .. இப்போது இப்படி நினைக்கிறேன் இப்படியாக எழுதுகிறேன்.
நான் யாரையும் போய் சட்டையை பிடித்து இழுத்து நான் சொல்வதை போல நட என உத்தரவிட்டதில்லை .. அப்படி நடக்கச்சொல்லி வற்புறுத்தியதும் இல்லை நான் நானாக இருக்கிறேன் நீங்கள் நீங்களாக இருங்கள்
என தன் நிலையை உறுதியாக தெரிவித்தார்.
இதுதான் ஜெயகாந்தன் . அவர் கடவுள் அல்ல அவரும் சாதாரண மனிதர்தான் . ஆனால் அவரைபற்றி பேசும்போது பலர் அவரை கடவுளாக ஆக்கிவிட்டார்கள் . அவருக்கிருந்த ப்ரச்னையே அவரை கடவுளாக பார்க்கும் அவரது நெருங்கிய வட்டம்தான். .

அந்த வட்டம் அவருக்கு தேவையாக இருந்தது.
அவர்கள் தான் அவரது திமிரின் ஊற்று ..
அந்த திமிர்தான் அவரது படைப்புகளின் ஊற்று

இதனால் அவர் தான் ஒரு எழுத்து கடவுள் என்பதை முழுமையாக நம்பினார்.விமர்சனங்களை அவர் ஏற்கமுடியாமல் போனதற்கும் இதுவே  காரணம்.

மனித வாழ்க்கை எப்படி அற்புதமானது .. அதை நாம் எப்படி அற்ப காரணங்களுகாக வீணாக்குகிறோம் என்பதை எழுதியும் வாழ்ந்தும் காட்டியவர்

எழுத்து கொடுத்த திமிரில் எல்லா அதிகாரங்களையும் எதிர்த்து நின்றவர்
எதற்கும் வளைந்து கொடுக்காதவர் என பெயர் பெற்றவர்
இரும்பு வளையும் ஜெயகாந்தன் வளையமாட்டான் எனும் சொல்லுக்கேற்ப வாழ்ந்து காட்டியவர் .

இந்த தனித்த குணம்தான் ஜெயகாந்தன்.

அப்படிப்பட்ட நம்மை விட்டுசென்ற ஒரு மகத்தான் எழுத்தாளனை குறித்த நினைவுகூறல் நிமித்தமாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் இந்த கூட்டம் பெருமை மிக்கது.

இந்த பெருமை மிக்க காரியத்தை நிகழ்த்தும் பனுவல் அரங்கத்திற்க்கு ஒரு எழுத்தாளனாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

அதே சமயம் என்னையும் பெருமக்களோடு சக எழுத்தாளனாக பேச அழைத்தமைக்கு என் பணிவும் வணக்கங்களும்.

இங்கு வந்திருக்கும் அய்யா நெடுமாறன் அவர்களும், பேராசிரியர் வீ அரசு  தோழர் சிகரம்  செந்தில் நாதன்   அவர்களும் என்னிலும் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள் . அவர்கள் மட்டுமே கூட இக்கூட்டத்தின் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற முடியும் .,
என்றாலும் என் தலைமுறை சார்பாகவும் இக்கால எழுத்து சார் சூழலின் பிரதிநிதித்துவமாகவும் நான் பேசுவது சரியென்றே உணருகிறேன்
ஜெயகாந்தன் என்ற பெயர் என் கல்லூரி காலத்தில் மிகவும் என்னை கோபப்படுத்தியது.

அதற்கு இரண்டு காரணங்கள்

இலங்கைத் தமிழர் ப்ரசனை கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்த சமயத்தில் கல்லூரி மாணவர்களான நாங்கள் தீவிர போராட்ட களத்தில் இருந்தபோது அவர் ஐ பி கே எப் புக்கு ஆதரவாக சோ வுடன் இணைந்து ஊர் ஊராக கூட்டம் போடு பேசியபடி கடைசியில் எங்கள் ஊரான செங்கல்பட்டுக்கும் வந்திருந்தார்.
இது ஒரு காரணம்  

அதற்கும் முன்னதாக இன்னொரு காரணம் ஒரு பெண் தொடர்பானது . உண்மையில் அந்த பெண் அந்த கேள்வியை கேட்காவிட்டால் இன்று நான் எழுத்தாளனாகவே இருந்திருக்க முடியாது

கல்லூரியில் அப்போது என் தோழியாக இருந்த பெண் . அவளோடு நான் பேச வெகுநாட்கள் முயற்சித்து கடைசியில் ஒரு  சனிக்கிழ்மை மதியம் அவள் எனக்கு பேச சம்மதித்து காத்திருந்தாள். மிகவும் பதட்டமான அந்த சந்திப்பில் அவள் கேட்ட முதல் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாமல் திணறிவிட்டேன்., ஜெயகாந்தன் கதைகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள் . அவருடைய கதைகளில் என்ன என்ன படித்திருக்கிறீர்கள்.  எனக்கு இந்த கேள்வி கொஞ்சம் அதிர்ச்சியளிக்க கூடியதாக இருந்தது. கல்லூரி இலக்கிய போட்டிகளில் நான் அடிக்கடி கலந்து கொண்டதால அவள் அந்த கேள்வியை கேட்டிருக்கவேண்டும். ஆனால் அப்போது பாலகுமாரன் இரும்புக்குதிரைகள் புகழ்பெற்ற சமயம் . சுஜாதா பட்டுக்கோட்டை பிரபாகர் ,ராஜேஷ்குமார் இவர்களை மட்டுமே படித்து வைத்திருந்த எனக்கு ஜெயகாந்தன் பெயர் அறிமுகமாயிருந்ததே தவிர எதையும் வாசிக்க நேரவில்லை. என் அம்மா மட்டும் அடிக்கடி அவரது புத்தகங்களை வாசிப்பதை பார்த்திருக்கிறேன். மேலும் அக்காலத்தில் ஊடகங்களில் அவர் பரபரப்புகள் முடிந்து சுஜாதா பால்குமாரன் பற்றிய பேச்சே அதிகமாக இருந்த நேரம்.

அதன் காரணமாகவொ என்னவோ நான் ஜெயகாந்த்னை படிப்பதற்கான சூழல் நேரவில்லை. அதன் பிறகு  அந்த சந்திப்பு முழுமையாக தொடரவில்லை. முதல் கேள்விக்கே ஒழுங்காக பதில் சொல்லாமல் பேச்சை மென்று முழுங்கிவிட்டதால் அந்த நட்பூ வலுவானதாக அமையவில்லை.
ஜெயகாந்தன் என்ற பெயரை யாராவது சொன்னால் நெடுநாட்களுக்கு அந்த பெண் என்னிடம் கேட்டதும் அவளுக்காக நான் கல்லூரியில் வகுப்புக்கே செல்லாமல் காத்திருந்த காலங்களுமே ஞாபகத்துக்கு வரும்
அதன் பிறகு ஜெயகாந்தனை நான் நூலகங்களில் தேடப்போக கூடவே ஜானகிராமன் புதுமைப்பித்தன் செல்லப்பா மவுனி மற்றும் சுந்தர்ராமாசாமி வண்ணதாசன் வண்ண நிலவன் என புதிய உல்கமே திறக்க துவங்கியது. பிற்பாடு இதுவே என் வாழ்க்கையின் திசையை தீர்மானித்து எழுத்தாளனாகும் கனவை எனக்குள் விதைத்து,

ஒருவகையில் இன்று  எழுத்தாளன் என்ற பெயர் எனக்குள் ஒட்டிக்கொண்டிருக்குமானாள் அதற்கு ஜே கே எனும் ஆளுமையும் ஒரு முழு முதற்காரணம. அவ்வகையில் இகூட்டத்தை அந்த மிகப்பெரிய ஆளுமைக்கு நான் நன்றி தெரிவிக்கும் வாய்ப்பாக பயன்படுத்த விழைகிறேன்.
துவக்க காலத்தில் அவருடைய சிறுகதைகள் எனக்கு ஈர்க்கவில்லை. நான் மட்டுமல்ல என் சார்ந்த இன்றைய தலைமுறைகள் பலருக்கு ஒரு புதுமைப்பித்தன் குபாரா போல ஜே கே வின் சிறுகதைகளில் வசீகரமில்லை என்பதே உண்மை.

ஆனால் என்னை மிகவும் ஈர்த்த புத்த்கம் ஒரு இலக்கிய வாதியின் அரசியல் அனுபவங்கள்  தொடர்ந்து அவருடைய இஅல்க்கியவாதியின் சினிமா அனுபவங்கள் நூலையும் வாசித்தேன்.

தமிழக வரலாற்றை முழுமையாக ஒருவன் புரிந்துகொள்ள வேண்டுமானால் கண்ணதாசன் எழுதிய வனவாசம் ஜே கே அவர்களின் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் இரண்டையும் வாசித்தால்தான் அவனுடைய புரிதல் முழுமையடையும் . அந்த அளவிற்கு ஜே.கே அந்த புத்த்கத்தில் என் அரசியல் புரித்லைவளர்த்தெடுத்தார்.

தொடர்ந்து அவர் பற்றிய தகவல்கள் அவர் பேசிய பேச்சுக்களின் உரைகள் ஆகியவற்றை வாசிக்க வாசிக்க அந்த பிரம்மாண ஆளுமை என்னை வசீகரித்துக்கொண்டேயிருந்தது. பிற்பாடு அவர் ஆசிரியராக பணி புரிந்த ஞான ரதம் சிற்றிதழ் தொகுப்பு வாசிக்க கிடைத்தபின்  அதில் வந்த பல கடிதங்கள் அவரது நாவல்களை விமர்சித்து எழுதப்பட்டிருக்க அத்ன் பின் தொடர்ந்து அக்னி பிரவேசம் சில நேரங்களில் சில மனிதர்கள் கங்கை எங்கே போகிறாள் என தொடர்ந்து வாசிக்க துவங்கினேன் . அவரது சிறுகதைகள் என்னை இப்போது ஈர்க்க துவங்கின .

துவக்கத்தில் என்னை வசீகரிக்காத அதே ஜெயகாந்தன் பின் துரத்திசென்று படிக்குமளவிற்கு வசீகரிக்க துவங்கினார்.  இப்போது பார்க்கும் போது அவர் கடந்தநூற்றாண்டு தமிழ் கலாச்சார வரலாற்றை தாங்கிகொண்டு நிற்கும் பிரம்மாணட துணாக  தெரிகிறார்.

ஒரு எழுத்தாளன் இருப்பு என்னது எத்தனை உயர்நத்து என தன் வாழ்க்கை மூலம் நிரூபித்துக்கட்டியவர்.

அவர் அளவுக்கு தன் மானத்துடன் வாழ்ந்த எழுத்தாளன் தமிழ் நாட்டில் எவரும் இல்லை என உரத்து சொல்ல முடியும்.

அதே போல அவர் அளவுக்கு  வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து தன் போக்கில் சுதந்திரமாக வாழ்ந்தவர் எவரும் இல்லை.

பணம் கொழித்துகிடக்கும் அம்பானிகள் கூட அவரைபோல அத்தனை ரசித்து வாழ்ந்திட முடியாது .

அவரது வாழ்க்கை பூரணமான வெற்றி என்பதற்கு இதுவே சான்று
மறைந்த சின்னகுத்தூசி அய்யா அவர்களை  அவர் அப்போது வசித்த திருவல்லிகேணி மேன்ஷன் அறையில் ஒரு கட்டுரைக்காக சந்திக்க நேர்ந்த்து.. அவரோடு முதல் சந்திப்பாக இருந்த காரணத்தால் புது எழுத்தாளர்கள் பற்றி பேச்சு துவங்கி சட்டென இப்பல்லாம் எவனையாவது எழுத்தாளர்னு சொல்லமுடியுமா என சொல்லி ஜெயகாந்தனை பற்றி பேசத் துவங்கினார்.

அப் போது ஜெயகாந்தன் பழகிய பயணம் செய்த அனுபவங்களை விலாவரியாக கூறிக்கொண்டிருந்தார். கிட்டதட்ட மூன்று மணிநேரம்  ஒரு பெரு மழை போல அவரோடு சந்தித்த தருணங்கள் பயணம் துவங்க காரணம் என ஒவ்வொரு நொடியையும் தன் ஞாபகத்திலிருந்து எங்கே இறங்கினார்கள் எங்கே குளித்தார்கள் எப்படி சாப்பிட்டார்கள் .. அவர் எப்படி பாடினார் யார் யாரிடம் எப்படி பேசினார் என விலாவாரியாக் கூறினார் . ஒரு காதலன் தன் காதலியைகூட அப்படி வர்ணிக்க மாட்டான். நான் கூட இவர் கொஞ்சம் ஓவராக பில்டப் கொடுக்கிறாரோ என அப்போது நினைத்தேன் . ஆனால் பிற்பாடு அதே போன்ற அனுபவத்தை பலரும் சொல்லகேட்டேன் . 

தற்போது தமிழ் இந்து வில் அது குறித்து அவரது ரசிகர் ஒருவர் அதே போல ஒரு தொடரையே எழுதியதை வாரா வாராம் படிக்கிற போது அன்று மேன்ஷன் அறையில் அவர்  சொல்லியது தான் என் ஞாபகத்துக்கு வருகிறது.இதை போன்ற ஒரு வசீகரம் தமிழில் எந்த எழுத்தாளருக்கும் கிடையாது.

புதுமைப்பித்தனை சொல்வார்கள் ஆனால் வாழ்க்கை முழுக்க நொந்து நூலானவர் . வெறும் கறுப்பு ஹாஸ்யம் அவருடைய வாழ்க்கை  அடுத்து ரசிக மணி டிகேசி யை குறிப்பிடுவார்கள். ஆனால் அவர்களும் கூட ஜெயகாந்தன் போல தன்னை சுற்றியிருப்பவர்களை காந்தமாக சுற்றி சுழலச்செய்திருப்பாரா என்பது சந்தேகமே.

அதே போல ஜெயகாந்தன் என்ற படைப்பாளீயின் தாக்கம் பற்றி நினைக்கும் போது இருபதாம் நூற்றாண்டை தாங்கி நிற்கும் விழுதுகள் பல நிறைந்த பிரம்மாண்ட ஆல்மரம் என்ற படிமமே வருகிறது
அவரது  பின்னால் தொங்கும் பிடறி மயிர்கள் மயிர்கள் அல்ல ஆலம் விழுதுகள். ஒரு ஐம்பது வருட தமிழ் கலாச்சார நினைவோட்டமே அந்த முடிக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

நான் சமீபத்தில் ஹைதராபாத் சென்ற போது அங்கிருந்த பல உதவி இயக்குனர்களையும் ஓவிய கலைஞர்களையும் சந்தித்து அளவளாவினேன்
அவர்கள் அனைவருமே தங்களது சமூகத்தில் சிந்தனை மரபே இல்லை வரலாறு குறித்த பிரக்ஞை இல்லை.. இலக்கியம் குறித்த ஓர்மை இல்லை என வருத்தப்பட்டனர்.

அவர்களோடு ஒப்பிடும் போது தமிழ்ர்கள் அனைவரும் இன்று பல்வேறு குழுக்களாக பிரிந்திருந்தாலும் ஒருஒரு நெடிய சிந்த்னை மரபின் தொடர்ச்சியாகவே தெரிகின்றனர்.

பாரதிக்கு பிறகான தமிழ் இலக்கிய மரபு  பாரதி தாசன் வழியிலான மரபிலக்கியமாகவும், வாரா மணிக்கொடி நவீன இலக்கியமாகவும்  இரண்டு விதமாக பிரிந்து இயங்க துவங்கிய போது முன்றாவது பிரிவாக பொதுவுடமை சார் இலக்கிய மரபாக ஜீவா, தமிழ் ஒளி ,விந்தன் என ஜெயகாந்தன் மரபாக பிரிந்து செழித்து வளர்ந்தது.

ஜெயகாந்தனின் புகழுக்கு காரணம் என்ன என்பதை ஒற்றை வரியில் சொல்வதாக இருந்தால்  எளியமக்கள் மீதான் கரிசனம்
நேரு உருவாக்கிய ஐந்தாண்டு திட்டங்களின் காரணமாக் வேளான் சமூகம் தொழில் சார்ந்த நகரங்களை உருவாக்கிய  காலத்தில் பல கிராமங்கள் நகரத்தை நோக்கி ஒன்றுசேர நகரத்தில் வேலைக்காரிகள் ரிக்‌ஷாக்கார்ர்கள் லட்டிட்தொழிலாளார்கள் ,

 உழைப்பாளிகள் பார வண்டி சுமப்பவர்கள் என புதிய உயிரினக்கள் தோன்றலாயினர் . சென்னை நகரமுமிது போன்ற உயிரின்ங்களை அதிகமாக உற்பத்தி செய்ய துவங்கியது .இவர்கள் மனிதர்களாக்வே மதிக்கப்படாத ஒரு காலத்தில் ஜெயாகந்தன் எழுத்து அவர்களை நாயகானகாகவும் நாயகையாகவுமாக்கி அவர்களது ப்ரச்னைகளை பாடுகளை பேசி இந்த சமூகத்க்தை சிந்திக்க வைத்த்து .

ஜெயகாந்தனது சிறுகதைகளின் சிறப்பு என்றால் இதுதான்

இன்று பார்க்க போனால் அவரது கதைகள் ஒற்றை பரிணாமத்தில் மட்டுமே இருப்பதாக இலக்கிய விமர்சங்கள் குறை கூறக்கூடும் \
ஆனால் இந்த ஒட்டு ,ஒத்த சமூகத்தின் மனப்போக்கை திசை திருப்பும் பணியை அவர் தன் சிறுகதைகள் மூலம் மேற்கொண்ட காரணத்தால் அவர் இலக்கியபணீ என்பதைகாட்டிலும் மக்கள் பணியாகவும் சமூகபணியாகவும் தன் கதை எழுதும் பணியை தோளில் ஏற்றிக்கொண்டார் .

இன்று தான் திருநங்கைகளின்  மேல் கொஞ்சமாவது கரிசனம்  கொள்கிது இந்த சமூகம் . ஆனால் அவர் அப்போதெ பவுனு என்ற கதையின் மூலம் தன் கரிசனத்தை  வெளிப்படுத்தினார். தற்கு அப்போது எதிர்ப்புகள் கிளம்பியபோது நான் கறுப்புத்துணிக்குள் வைரத்தை வைத்திருக்கிறேன் பலருக்கு வெறும் கறுப்புதுணி மட்டும் தெரிந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை எனகூறினார்.

அவர் போல எதிர்ப்பை சந்தித்த எழுத்து எவருடைய்தும் இல்லை
ரிஷி மூலம் நாவல் வெளியான போது அதை வெளியிட்ட வார இதழ் இனி இது போன்ற கதைகள் வராது என வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்ட்தாக வரலாறுகள் கூறுகின்றன.

அக்னி பிரவேசம் என்ற கதை ஆயிரம் ப்ரச்னைகளை கொண்ட்து \
இன்று ஒருபெண்ணிய நோக்கில் பார்க்க போனால் அது ஆணாதிக்க கதையாக கூற அதில் பல கூறுகள் உண்டு.

குற்றம் செய்த ஒருவனை பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாமல் குற்த்திற்கு ஆளாக்கப்பட்ட பெண்ணை பற்றிய அந்த கதை ஒருவகையில் பார்க்கப் போனால் ஒருதலை பட்சமானது. வெறும் காமுகன் என்ற ஒற்றைச்சொல்லோடு சந்தர்ப்பத்தை குற்றவாளியாக்கிவிட்டு ஜெயகாந்தன் பெண்னின் வீட்டுக்கு வந்த அவளது அம்மாவையும் அவர்களது அண்டைவிட்டையும் குற்றபடுத்துகிறார்.

உண்மையில் கதையின் நாயகி பாதிக்கப்பட்ட பெண்னான கங்காவின் அம்மாதான் . அவள்தான் மகளை குளிப்பாட்டி அக்னி பிரவேசம் செய்கிரார்
ஆனால் இக்கதையின் தொடர்ச்சியாக அவர் எழுதிய சில நேரங்களில் சில மனிதர்கள் கதையில். அதே மகளான கங்கா அன்று மட்டும் நீ கூச்சல் போடாவிட்டால் இன்று என் வாழ்க்கை பிரசனையே இல்லாமல் போயிருக்கும் எனக்கூறி அந்த தாயை களங்கபடுத்துகிறார்.

ஒருவேளை அக்கதை நான் சொல்வது போல குற்றவாளியின் பக்கமாக திரும்பி அவனுக்கு பிற்பாடுதான் தெரியவருகிறது தன்னால் மழை இரவில் உறவுக்குட்படுத்தப்பட்ட பெண்  எப்போதோ பிரிந்து போன தன் தம்பியின் பெண் என தெரிய வந்து அவன் பைத்தியமாகி திரிந்து சாவது போல முடித்திருக்கலாம்.

ஆனால் இப்படியாக முடித்திருந்தால் இக்கதை இவ்வளவு பேசப்பட்டு இவ்வளவு வாசிக்கப்பட்டிருக்குமா தெரியவில்லை
கதை கோரும் எந்த முடிவுகளையும் முன் வைத்து அவர் கதைகளை நகர்த்துவதில்லை.

இன்னும் சொல்லப்போனால் எதற்கும் அடங்காத அவரது திமிர் கதைகளின் வரையறைக்கும் அடங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்
அதனால்தான் பல கதைகள் தன்போக்கில் சென்று தனாக கதையை தீர்மானித்துக்கொள்வதாக அமைந்திருக்கின்றன.

அக்கதைகள் இலக்கிய மதீப்பிட்டை காட்டிலும் சமூகத்தில் புரையோடிக்கிடந்த பல அழுக்குகளை அடித்து துவைப்பதில் காரணமும் கவனமும்  கொண்டிருந்தன.அதனாலேயே அக்கதைகளில் பெரும் அதிர்ச்சியூட்டும் வெடி மருந்துகள் திணிக்கப்பட்டிருந்த்ன
ஒவ்வொரு வாரமும் அக்காலத்தில் அவரது கதைகளை  படித்த தமிழன் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினான்.

ஒரு சிறுகதை எழுத்தாளனாக இருந்து இவ்வளவுதூரம் ஒரு சமூகத்தை தன் வசப்படுத்திய பெருமை இந்திய மொழிகளில் வேறு யாருக்குமே இல்லை என்பது உறுதி. 

இந்திய எழுத்தாளர்களில் தங்களது கதைகள் மூலம் அழியாப்புகழைபெற்ற பிரேம் சந்த , யூ ஆர் அனந்த மூர்த்தி பஷீர், மற்றும் மகாஸ்வேதா தேவி ஆகியோருக்கு இணையாக வைத்து போற்றப்படவேண்டியவர் .  . ஜெயகாந்தனுக்கும் இவர்கள் நால்வருக்குமான ஒற்றுமை  அனைவருமே ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை கதைகளாக எழுதி புகழ்பெற்றவர்கள
ஆனால் அவர்களும் கூட ஜெயகாந்தனைபோல ஒரு சிங்கத்தை போன்ற துணைச்சலான வாழ்வையும் சமூகத்தின் இத்தகைய பெருமதியையும் பெற்றிருப்பார்களா என்பது சந்தேகமே .

பொதுவாக ஒரு எழுத்தாளனுக்கு அவன் இறந்தபின் மட்டுமே கிடைக்க்கூடிய அத்தனை பரிவாரங்களும் பரிவட்டங்களும் வாழும் போதெ பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளன் ஜெயகாந்தன் ஒருவராக மட்டுமே இருக்க முடியும் .
ஜெயகாந்தன் என்ற எழுத்தாளன் தமிழகத்தின் அனைத்து எழுத்தாளருக்கும் ஒரு சிவப்பு கம்பளத்தை உருவாக்கி கொடுத்தார். 

ஆனால் அதை எத்தனை பேர் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது என தெரியவில்லை எழுத்தாளன் எப்படி இருக்கவேண்டும் என்பதான் ஒரு மாய தோற்றத்தை சித்திரமாக வரையத்துவங்கினால் அந்த சித்திரம் முடியும் போது அது காட்டும் உருவம் ஜெயகாந்தன் என்ற மகத்தான் மனிதரின் உருவமாக மட்டுமே இருக்க முடியும் .

ஜெயகாந்தன் என்ற பெயரை நான் வியக்க காரணம் எல்லாம் மனதிற்கு பட்ட்தை பட்டவர்த்த்னமாக உடைத்துசொல்லும் அந்த தைரியம்

இத்தனைக்கும் நான் பெரியாரை என் உயிரினும் மேலாக மதிப்பவன்.
திருவள்ளுவருக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் நான் போற்றும் மகத்தான மனிதர்.

அன்றைய சூழலில் தமிழகத்தில் பெரியார் மீது மக்கள் கொண்டிருந்த அபிமானத்திற்கு அளவே இல்லை ,

 அவரையே ஒரு கூட்டத்தில் அவரது கருத்தை மறுத்து பேசி ஒரு எழுத்தாளனின் கட்டற்ற கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டிய பெருமை ஜெயகாந்தனுக்கு உண்டு. அவர் பேசியதில் நமக்கு மாற்று கருத்து இருக்கலாம் . . இன்னும் சொல்லப்போனால் மாற்று கருத்தாளர்களை ஜெய்காந்தன் கூட மதிப்பாரா தெரியாது ஆனால் பெரியார் மதிக்க கூடியவர்.
ஆனாலும்  ஒரு எழுத்தாளனாக தன் கருத்தை நிலையூன்றச்செய்ததில் ஜெயகாந்தன் தனித்துவமிக்கராக மிளிர்ந்தார்.


அதே போல அண்ணாவின் மறைவின் போது கண்ணதாசனின் வறுபுறுத்தலுக்கிணங்க அஞ்சலிகூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசிய பேச்சு  தமிழகத்தின்  குறிப்பிடத்தக்க மேடைபேச்சுக்களில் ஒன்றாக இன்றும் கூறப்படுகிறது. 

இப்படியெல்லாம் ஜெயகாந்தன் மறுத்து பேசிவிட்டதால் பெரியாரும் அண்ணாவும் சிறுமைப்பட்டதாக அர்த்தமில்லை.

அது அவர்கள் மேல் வெறுப்பை கொண்டவர்களுக்கு வேண்டுமானல் திருப்தியுறச்செய்யலாம் . 

ஆனால் நான் அப்படியாக பார்க்கவில்லை
ஒரு எழுத்தாளனின் கலைஞனின் மனோதர்மத்தையே அதில் பார்க்கிறேன் .

ஒருவர் இறந்துவிட்டதால் அதற்காக நேற்றுவரை நான் அவர்கள் மீது கொண்ட அபிப்ராயத்தை  ஒரே இரவில் மாற்றிக்கொள்ள முடியாது எனக்கூறும் அவரது மனோதர்மம் தான் இதில் நாம் வியக்கதக்க அம்சம்
மனித சமூகமே அண்டிபிழைப்பதிலும் இச்சி பிழைப்பதிலும் ஓடிக்கொண்டிருக்கும்போது பெரியார் கற்றுத்தந்த சுயமரியாதையும் கருத்துசுதந்திரமும் முழுமையாக பயன்படுத்திய ஒரு எழுத்தாளனின் துணிச்சலாகத்தான் அதைக்கண்டு வியக்கிறேன் .

இத்தனைக்கும் அண்ணாவின் மரணத்துக்கு கூடிய கூட்டம் கின்னஸ் சாத்னை . வரலாறு காணாத மக்கள் வெள்ளம்

அப்படியான சூழ்லில் அவரைக்குறித்து மறுத்துபேச ஜெயகாந்தனுக்கிருந்த துணிச்சல்தான் இன்று எழுத்தாளர்கள் அனைவரும் கருத்திலேற்கவேண்டியது 

ஈவு இரக்கமே இல்லாமால் கருத்துகளுக்காகவே வாழ்ந்த துணிச்சல் மிக்க இமயம் ஒத்த மகத்தான எழுத்தாளன் என ஜெயகாந்தனை நினைத்து இறுமாந்து வியக்க தோன்றுகிறது.

இப்படிபட்ட மகத்தான் எழுத்தாளனுக்கு செய்யப்படும் மரியாதை வெறும் இது போன்ற கூட்டங்கள் மட்டுமே அல்ல. மாறாக அவருக்கு இந்த மாநிலமே வியக்கும் மகத்தான் ஒரு சிலை நிறுவுவதல் வேண்டும்.

இந்த சமூகத்தில் இப்படி ஒரு எழுத்தாளன் இருந்தான் வாழ்ந்தான் இறந்தான் என்பதை மக்களுக்கு வலியுறுத்தும் வகையில் அந்த சிலை இருக்கவேண்டும்
சென்னையில் அடிமைபட்டுத்திய பல ஆங்கிலேயர்களின் சிலை இருக்கிறது
அந்த சிலைகள் எல்லாம் நாம் இன்னமும் அவர்களின் அடிமை என்பதை உணர்த்துகிறதே தவிர அதனால் ஒரு காரியமும் இல்லை.

அதில் ஏதாவது ஒன்றை தூக்கிவிட்டு அந்த இட்த்தில் ஜெயகாந்தனுக்கோர்  சிலை வைப்பதால் தமிழகத்தின் நிலை உயருமே தவிர தாழ்ந்துவிடாது

இந்த சமூகத்துக்கு சிவற்றை இப்படித்தான் உணர்த்த வேண்டியதாக இருக்கிறது காரணம் இது சுரணை கெட்ட சமூகம்.

எழுத்தார்களையும் கலைஞர்களையும் மதிக்க தெரியாத சமூகம்
அப்படி மதிக்க படவேண்டுமானால் அவன் சினிமாக்காரனாக இருக்கவேண்டும் என எதிர் பார்க்கும் சமூகம்.

 ஜெயகாந்தன் மறைவுக்கு சென்ற போது  பெசண்ட நகர் மயானத்திற்கு வந்திருந்தவர்கள் வெறும் 100 பேர் மட்டுமே.

காலம் முழுக்க அவரது தன்னிச்சையான கருத்துக்கு இந்த சமூகம் கொடுத்த பரிசு இந்த நூறு பேர் மட்டுமே.

காலத்தின் புகழ்பெற்ற  எழுத்தாளனுக்கு சமூகம் கொடுக்கும் பரிசு 100 பேர்

நல்ல வேளையாக எழுத்தாளனுக்கு அவர் எழுதியது போல சமூகம் என்பது 4 பேராக இல்லாமல் 100 பேராக இருப்பது வரை மகிழச்சிதான் .





February 21, 2015

முதல் காதல்


 முதல் காதல்
                                                அஜயன் பாலா
காதலர் தினத்தை யொட்டி சினிமாஎக்ஸ்பிரஸ்  இதழுக்காக எழுத ஆரம்பித்த போது மனம் எனும் ஸ்கேனர் தானாய் நினைவு குளத்தில் கண்டெடுத்தவள்தான் இந்த தேவ மலர்
அவள் தேவதைகளின் மலர்
பிறக்கும்போதே அன்னைதெரஸாவாய் பிறந்துவிட்டவள் எனக்கு தெரிந்து அவள் மட்டுமே
அத்த்னை அனபும் அவளுக்கு இந்த உல்கத்தின் மீது
உண்மையில் அவளுக்கு முன்பாக எனக்குநினைவில் தெரியும் முதல் அந்நிய பெண் நினைவு  மங்காவுடையது
மங்காதான் உணர்வில்  முதல் காதலி
இப்ப யோசித்தாலும் முகம் நினைவிலில்லை ஆனால் அந்த ஸ்பரிசம் இப்போதும்
அக்கா இவனை தூக்கி இடுப்புல வச்சாதான் எனக்கு இந்த நாளே விடிஞ்சாப்பல இருக்கு

என் அம்மாவிடம் சொல்லிய்படி விட்டுக்குள் வரும் மங்கா என்னை இடுப்பில் தூக்கி வைத்துக்கொள்வதில் அத்த்னை ப்ரியம்
ஆறுவயது வரை அவள்தான் என் உலகம்
அவள் திருமணத்துக்கு அம்மாவுடன் கைபிடித்து போனது இன்னும் நினைவில்
அடுத்தாக நினைவு வரிசையில் நிற்பவள் தான் நான் முன் சொன்ன தேவ மலர். அவள் முழு பெயர்  டெய்சி தமிழ்ச்செல்வி
நான் எட்டாவது  படிக்கும் போது வகுப்பில் வந்து சேர்ந்தவள்.
துறு துறு கண் , கறுப்பி ஆனாலும் பேச்சிலும் சுபாவத்திலும் அத்தனை  கவர்ச்சி . எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்பவள் .கிறிஸ்தவ பெண்களுக்கே உரிய கீச்கீச்  குரல் .
பின்னாளில் யார் யார் என்னவாகபோகிறீர்கள் என ஒரு நாள் ஆசிரியர் எல்லோரையும் எழுப்பி கேட்க  அவள் தான் ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் போல சமூக சேவை செய்யப்போவதாக  கூறியபோது பால்ராஜ் வாத்தியார் ஆச்ச்ர்யத்துடன் பாராட்டினார் .அனைவரையும் அவளுக்காக கைதட்டச்சொன்னார். நானும் உற்சாகமாக கைதட்டினேன். அன்று  அவள் அப்பழுக்கில்லாத ஒரு தேவ மலராக காட்சியளித்தாள் .அது முதல் டெய்சியை பார்க்கும் போதெல்லாம் மனசுக்குள் ஒரு வெட்க புன்னகை தானாய் மலரும் .
ஒரு மழை நாளில் வகுப்பே சோ வென இரைந்து கொண்டிருக்க டீச்சர் அனைவரையும் அமைதிப்படுத்தி டெய்சி யை எழுப்பி ஒரு பாட்டு பாடச்சொல்ல வகுப்பே  அமைதியாகிப்போனது.  ,  ராஜ நாகம் படத்தில் வரும் தேவன் கோவிலில் என்ற பாடலை   அன்று டெய்சி பாட மழையில் சிணுங்கின ஜன்னல் கதவின் கொக்கி அதற்கேற்ற  தாளமாக இசைத்தது.. ஜன்னல் கம்பிக்கப்பால் வெளியே பள்ளியை ஒட்டிய தோட்ட்த்தில் மழை கொட்டிக்கொண்டிருக்க டெய்சியின் குரல்  கருங்கல் தரையில் சர்ப்பம் போல  எனக்குள் நுழைந்து இதயத்துள் சுருண்டது.. அன்று இரவே ஒரு கனவு . யாருமற்ற குளக்கரை படிக்கட்டுகளில் டெய்சி மட்டும் பட்டு சட்டை பாவாடையுடன் பாடிக்கொண்டிருக்க ஈரத்துண்டை இடுப்பில் கட்டியிருக்கும் நான் ஒரு தூண்  மறைவில் ஒதுங்கி நின்று அவளை ரசிக்கிறேன் என்  கையில் சோப்புபெட்டி தேங்காய் நார். ஒரு வேப்பங்குச்சி
மற்றும் முறுக்கி பிழிந்த ஈரத்துணிகள். மறு நாள் காலையிலிருந்தே என்ன வெனத்தெரியாத ஜுரம் .
ஒரு நாள் பகல் வேளையில் வகுப்பில் அமர்ந்திருக்க தலையில் இளம் சூடு.உணர கைவைத்து  தடவி திரும்பி மேலே பார்க்க மேற்கூரையின் ஓடுகளின் வழியாக இரண்டு  வெளிச்ச குழல் வகுப்பில் விழுந்துகொண்டிருந்தது.  ஒன்று என் தலை மேல். விழுந்திருக்க இன்னொன்று அவள் தோளில்.. வகுப்பில் அத்த்னை பேர் அமர்ந்திருக்க எங்கள் இருவர் மீது மட்டும் விழுந்த வெளிச்ச குழல்கள் என்னை பரவசப்படுத்தியது. வெளிச்சகுழலினூடெ கைவிரல்களை குறுக்காக நீட்ட மாசு படலங்கள் என் விரல்களில் விளையாடின . யாரிடமாவது இதை சொல்ல மனசு ஏங்கியது. யாரிடம் சொல்ல . .. அவளிடமே சொன்னால் என்ன ?
அன்று அப்போது கணக்கு பாடம் கிருஷ்ணன் வாத்தியார் பலகையில் ஏதோ மும்ம\ரமாக எழுதிக்கொண்டிருக்க நான் டெய்சியை நோக்கி திரும்பினேன்
டெய்சி.. டெய்சி.. குரல் வயிற்ருக்குள்ளேயே
அவள் மும்மரமாய் எழுதிக்கொண்டிருந்தாள்
அவள் எப்போது நிமிர்வாள் என்னை பார்ப்பாள் என காத்திருந்தேன்
அவள்  மீது அதுவரையில் விழுந்த வெளிச்சகுழல் இப்போது மெல்ல அவளை விட்டிறங்கி தரைக்கு விழ துவங்கியது
அவள் நிமிரந்த ஒரு கணத்தில் நான் சைகையால்  கூரையின் வெளிச்சத்தை காண்பிக்க அவளும் நிமிர்ந்து பார்த்தாள் அதே போல் எனக்கருகேயும் வெளிச்சம் வட்டமிட்டிருப்பதை காண்பிப்பதற்குள் அது அருகிலிருந்த கேசவன் தலைக்கு நகர்ந்து விட்டிருந்தது.
அவளிடம் அசடு வழிந்த்தோடு அந்த பகல் இருளை நோக்கி நகர்ந்த்து.
அந்த நாளுக்கு பிறகு கூரையிலிருந்து கசியும் ஒளிக்குழல் எனக்கும் அவளுக்கும் ஒரு சேர விழவே இல்லை
அதன்பிறகு ஒரு நாள் பள்ளி விட்டு வரும் போது வழியிலிருந்த தீர்த்த குளத்தில் மீன் அதிகமிருப்பதாக கூறீய பள்ளி நண்பர்களுடன்  அதை பார்க்க செல்ல யாரோ என்னை முதுகில் கைவைத்து தள்ளிவிட குளத்தில் விழுந்து விட்டேன் . உடல் முழுக்க நனைந்த படி ஈரம் சொட்ட சொட்ட பயத்தில் அழுதபடி கரையில் நான் நிற்க சுற்றியிருந்த நண்பர்கள் கேலி செய்ய அந்த நேரம் பார்த்தா அங்கு டெய்சி வரவேண்டும் ..
டெய்சி என்னருகே வந்து ஏதாவது உதவி செய்யட்டுமா என கூறி வருத்தப்பட  எனக்கு அழுகை அதிகமாகியதே தவிர நிற்கவில்லை
அதன் பிறகு தாழ்வு மனப்பான்மை காரணமாகவோ என்னவோ டெய்சியிடமிருந்து வெகுதூரம் விலகிவிட்டேன்.
ஆண்டுகள் கடந்தன எட்டாம் வகுப்பிற்கு பின் அந்த பள்ளியை விட்டு அனைவரும் வெவ்வேறு பள்ளிகளுக்கு இடம் பெயர்ந்தோம் பத்தாவதில் அவள் படித்த பெண்கள் பள்ளியில் டெய்சி முதல் மாணவி என்ற செய்தி என்னை பெரிதாக ஆச்சர்யப்படுத்தவில்லை
அவ்வப்போது தியேட்டர் , கடைவீதி மற்றும் பொது இடங்களில் அவள் அப்பாவோடு அல்லது அண்ணனோடு அவளை பார்ப்பது வழக்கம் . பெரிய பெண்ணாக ஆன பிறகும் அவள் யாரோடும் வெடுக்வெடுக்கென பேசுவதை நிறுத்தவில்லை. என்னை பார்க்கும் போதும் அவள் சிரிக்க முயல நான் அவளை ஞாபகமில்லாதவனாக காட்டிக்கொள்ள முயற்சித்து விலகி நடந்தேன்.
பெரிய பெண்ணாக மாறிய பிறகு அவள் முன்னை விட மிகவும் அழகாக மாறிவிட்டிருந்ததும் ..நம்மைவிட பல மடங்கு அழகான ஒருவனை அவள் இந்நேரம் தேர்ந்தெடுத்து விட்டிருக்ககூடும் என்ற தாழ்மையுணர்வும்தான் அதற்கு காரணம் 
ப்ளஸ் டூ படிக்கும்போதே நான் நினைத்தது போலவே  அவளுக்கு காதல் கல்யாணம் என்ற செய்தியும் வந்தது.
அந்த துக்க செய்தியை வகுப்பு தோழன் சொல்லியதிலிருந்து அவள் மேல் ஏனோ ஒருவித கோபமும் வெறுப்பும் தான் அதிகமாய் வந்தது..
படிக்கும்போதே காதல்.. சே என்ன பெண் .. நல்ல வேளை தப்பிச்சோம் என சமாதான்ங்கள் சொல்லி ஆற்றாமையை தீர்க்க முயன்றேன்
ஒரு நாள் மாலைக்காட்சிக்கு தியேட்டருக்கு போனவனுக்கு அதிர்ச்சி
தியேட்டர் வாசலில் டெய்சி பூரிப்புடன் புதுப்பெண்னாய் நின்று கொண்டிருந்தாள்
சே இவளை போய் பார்க்க நேர்ந்துவிட்டதே என உள்ளுக்குள் குமைந்தபடி திரும்பியபோதுதான் அவள் கணவனை பார்த்தேன் .ஒரு கால் ஊனமான நிலையில் கால் தாங்கி கால்தாங்கி நடந்து வந்தான் .
எனக்கோ அதிர்ச்சி . அவள் மீதான் காதல் மீண்டும் துளிர்க்க துவங்கியது
அவள் உண்மையில் ஒரு தேவ மலர்தான் என நெஞ்சு உரக்க கூவியது
என்னுடன் வந்த வகுப்புத்தோழன் டெய்சியின் பக்கத்துவீட்டு வங்கியில் வேலை செய்பவன் .அவன் என்றும் வங்கி வேலை ஊனத்தை மறைத்து காதலை உண்டாக்கி விட்டது என்றும் இகழ்வாக கூறியபடி தியேட்டருக்குள் என்னை அழைத்து சென்றான்.
டெய்சி தமிழ்ச்செல்வி ஒரு கையால் கணவனைத்தாங்கி தியேட்டருக்குள்  அழைத்துசென்றபடி என்னையும் பார்த்து வழக்கம் போல சிரித்தாள்
இம்முறை வெட்கமில்லாமல் மேலும் காதல் பொங்க அவளை பார்த்து பதிலுக்கு சிரித்தேன்.





January 5, 2015

நீர்க்குமிழி வாழ்க்கையில் ஒரு எதிர் நீச்சல்


அஞ்சலி  : இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர்



ஒரு முறை ஒரு இணைய இதழ் தமிழ் சினிமாவின் சிறந்த நூறு படங்களை தொகுக்கச் சொன்னபோதுதான் அதுவரை பார்க்காத பாலச்சந்தரின் கறுப்பு வெள்ளை திரைப்படங்களை தொடர்ச்சியாக பார்க்க நேர்ந்தது.
சில கறுப்பு வெள்ளை படங்களை பார்க்கும் போது அவரது படங்கள் நாடக சினிமா என்ற பிம்பம் எனக்குள் உடையத் துவங்கியது அதன்பிறகு அந்த தொடர் நிறுத்தப்பட்டாலும் அந்த வாய்ப்பு இல்லாவிட்டால் நான் பாலச்சந்தரை கடைசி வரை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் போயிருக்க வாய்ப்புண்டு.
குறிப்பாக மூன்று முடிச்சுவின் முதல் பகுதியில் வரும் இருபது நிமிட காட்சிகள். ரஜினி கமல் ஸ்ரீதேவி ஆகிய மூவரது அறிமுகம் மற்றும் உறவு நிலை வளரும் காட்சிகளில் கதை சொல்லும் முறையில் பிரெஞ்சு நியூ வேவ் தாக்கத்தை கண்டு ஆச்சர்யப்பட்டேன்.
பல காட்சிகளில் வசனம் இரண்டாம் நிலையில் நின்று காமிரா கோணங்களும் அசைவும் முதல் நிலையில் நின்று மிஸான்சேன் பாணியில் கதை நகர்த்தப்பட்டிருந்தன. . ரோமன் பொலான்ஸ்கியின் நைப் அண்டர் தி வாட்டர் கதையை தழுவி வேறு மாதிரியாக எடுக்கப்பட்ட திரைப்படமாக இருந்த போதும், மூன்று பாத்திரங்களுக்கு இவர் தமிழ் பாணியில் மாற்றிக்கொடுத்த விவரணைகள் படத்திற்கு ஒரு தன்னியல்பான தன்மையை உருவாக்கியிருந்தன.
பி எஸ் லோக்நாத்தின் ஒளிப்பதிவில் சென்னை வீடொன்றின் மொட்டை மாடி அறையும் பகல் வெளிச்சம் நிறைந்த காட்சிகளும் நல்ல சினிமாவின் சாத்தியங்களை அதிகமாகவே கொண்டிருந்தன. பிற்பாடு இரண்டாம் பகுதியில் காட்சிகள்  நாடகத்தன்மைக்குள் விழுந்ததால் கதை நகர்த்துதல் இயல்பாக வசனத்தின் கைக்கு மாறிப்போனது

தொடர்ந்து அவள் ஒரு தொடர்கதை ,அவர்கள் அபூர்வ ராகங்கள் என அவரது சிறந்த கறுப்பு வெள்ளை படங்களை  பார்க்க  அவர் மீதான மதிப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தது.
ஆனால் நான் சினிமா பார்க்க துவங்கிய காலத்தில் அவர்  மேல் அதுவரை எனக்கு பெரிதாக ஈர்ப்பு இல்லை.
ரஜினியை அறிமுகப்படுத்தியவர் என்ற அடையாளம் மட்டுமே என்னுடைய தலைமுறையில் பெரிதாக இருந்த்து. என்னதான் தண்ணீர் தண்ணீர் ….வறுமையின் நிறம் சிகப்பு போன்ற படங்களை அவர் எடுத்துக்கொண்டிருந்தாலும்.. பாரதிராஜா பாலுமகேந்திரா மகேந்திரன் ஆகியோர்  உண்டாக்கிய தாக்கங்களை அந்த இடைப்பட்ட காலங்களில் அவரால்  உருவாக்கவில்லை. அப்போது உண்டான புதிய அலை படங்களோடு அவரால் போட்டியிட முடியவில்லை.  பிற்பாடு சிந்துபைரவி படம் வெளியான போதுதான் அவர் மீண்டும் வெற்றிக்கு பாதைக்கு திரும்ப பயணித்தார். இடைப்பட்ட காலத்தில்தான் அவர் மரோ சரித்ரா ஏக் துஜே கேலியே போன்ற படங்கள் மூலம் இந்திய அளவில் உயரங்களை தொட்டுக்கொண்டிருந்தார்.
மூன்று முடிச்சை தொடர்ந்து, வரிசையாக அவருடைய அவள் ஒரு தொடர்கதை பார்த்த போது அவர் மீதா மரியாதை பல மடங்கு உயர்ந்தது.
அதற்கு முன்வரை எனக்குள் சினிமா பற்றி சில வரையறைகள் இருந்தன. முக்கியமாக அவை காட்சி பூர்வமாக செயற்கையான நாடகத்தன்மை இல்லாமல் இது போன்ற சில வரையறைகள் உருவாகியிருந்தன.
ஆனால் அவள் ஒரு தொடர்கதையின் பாத்திரங்கள் என்னை உலுக்கி எடுத்தன.
அதற்கு முன் நான் அப்படத்தின் மூலப்படமான  ரித்விக் கட்டக்கின் மேக தக்க தாரா படத்தை இரண்டு முறை பார்த்தவன் என்றாலும் அவள் ஒரு தொடர் கதையில் அவர் காண்பித்த மனிதர்கள் அந்த கறுப்பு வெள்ளை சென்னை அதன்பிறகு பார்த்த தமிழ் சினிமாக்களை விடவும் நூறு மடங்கு வீரியமாகவும் ஆழமாகவும் ஊடுருவி உலுக்கி எடுக்க துவங்கியிருந்தன.
தமிழ் சினிமாவின் பெண் பாத்திரங்களில் சிறந்த படைப்பு எது எனக் கேட்டால் மகேந்திரனின் முள்ளும் மலரும். ஷோபாவுக்கு இணையாக நான் அவள் ஒரு தொடர் கதை கவிதாவைத்தான் சொல்வேன்.
அன்றைய கால கட்டத்தில் சென்னை நகரத்தை உரித்து சினிமாவில் வார்த்த காட்சிகளில் தோளில் கைப்பையை மாட்டிக்கொண்டு வேலைக்கு போகும் சரசாரி பெண்ணாக சுஜாதா தோன்றிய விதம் அத்தனை உயிர்ப்பு.
கடற்கரையில் பிச்சை எடுக்கும் குருட்டுத்தம்பியை வீட்டில் கண்டிக்கும் காட்சியிலாகட்டும், குடிகார அண்ணன் திருந்திவிட்டதை எண்ணி மகிழும் தருணத்திலாகட்டும், தான் காதலித்த ஒருவனை தன் விதவைத் தங்கை திருமணம் செய்ததை கேள்விப்படும் போதாகட்டும் கவிதா பாத்திரத்தின் மேல் நம்மை மீறிய ஒரு ஈர்ப்பு தவிர்க்க முடியாமல் உருவாகிறது.
 அதையும் தாண்டி பெண் என்பவளின் துயரத்தின் இருண்ட பக்கங்களையெல்லாம் வெளிச்சமிட்டு காட்டி அவளுக்கு என்னன்ன மதிரியான எண்ணங்கள் உணர்ச்சிகள் இருக்கும் என்பதை அந்த படம் வெளியாகி முப்பது வருடம் கழித்து சிடியில் பார்க்கும் என்வரை கற்று கொடுக்கும் பணியை இச்சமூகத்துக்கு உருவாக்கி கொடுத்திருப்பதுதான் அந்த படத்தின் தனிச்சிறப்பு.
படத்தில் கவிதாவின் காதலனாக வரும் விஜயக்குமார் இரண்டாவது முறையாக விட்டு போன கண்ணாடியை எடுக்க வரும்போது அவருக்கும் கவிதாவின் விதவைத் தங்கையாக வரும் ஸ்ரீ ப்ரியாவுக்கும் இடையிலான உரையாடலை காட்சி படுத்திய விதம் அவரது இயக்குனர் பாணியின்  உச்சம்
விஜயக்குமார் கேள்விகளுக்கு மறைந்து நின்று கையில் வைத்திருக்கும் கத்திரியின் சத்த்த்தில் பதில் சொல்லும் ஸ்ரீப்ரியா பிற்பாடு தான் விதவை என்பதை சொல்லாமல் சொல்லும் காட்சியில்  அடையாளமில்லாதவளாக அவள் தன்னை உணருவதை நிழலாக காண்பித்து விஜயக்குமார் நிழலோடு உரையாடுவதாக காண்பித்திருப்பார்.
திரைக்கதையில் வெறும் வசனமாக இருக்கும் காட்சி இயக்குனரின் சொல் முறையின் காரணமாக நம்முள் கூடுதல் வீரியத்துடன் இடம்.பிடித்து விடுகிறது.
இந்தவகையிலான அவரது பாணி காட்சியமைப்பு அவ்வப்போது சில படங்களில் இடம்பிடித்தாலும் முழு படமும் அவரால் இப்படி செய்ய முடியாது போனது வருத்தமே

யுடிவி தனஞ்செயன் மூலமாக பாலச்சந்தர் அவர்களை அவரது வீட்டில் நேரில் சந்தித்து சில நிமிடங்கள் பேசும் வாய்ப்பு நான்கு வருடங்களுக்கு முன் வாய்த்தபோது அவரிடம் அவள் ஒரு தொடர்கதை பற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் கிட்டியது. நான் சொல்வதை அவர் ஆச்சர்யத்துடன் கேட்டார். அதற்கு முன்பாக விகடனில் என்னுடைய கட்டுரைகள் வாசித்திருப்பதை கூறிய அவர் உங்களுக்கு அந்த படம் பிடிச்சிருந்ததா என நமப முடியாமல் ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டு ஆச்சர்யப்பட்டார். ழுபதுக்களின் துவக்கத்தில் சென்னை உள்ளும் புறமுமாக எப்படியிருந்தது என்பதன் ஒரே பதிவு என்றேன்.
உண்மையும் அதுதான். தொழில் சார்ந்த நகர வாழ்க்கை பெருக துவங்க கூட்டுகுடும்பங்கள் அதிகரித்து வந்த அக்காலத்தில் மனித உறவுகளின் அவலம் அந்த திரைப்படத்தில்தான் முழுமையாக பதிவு செய்யப்பட்டிருந்தது. சினிமா தாண்டி சமூக ஆவணமாகவும், தமிழ் சினிமாவுக்கு அப்படம் ஒரு சொத்து என கூறினேன்.
அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், அக்னி சாட்சி இந்த அ வரிசை படங்கள்தான் என்னை பொறுத்தவரை சமூகத்தை அதிகமாக பாதித்த படங்களாக இருக்க முடியும் என்பது என் அனுமானம். கூட்டி கழித்து பார்க்கும் போது பாலச்சந்தர் திரைப்படங்கள் உறவுகளின் அபத்தங்களையும், பெண்களின் உணர்வுகளையும் மையப்படுத்தியவை என சொல்ல முடியுமென்றால் அதை சிறப்பாக வெளிக்கொணர்ந்த படங்களாக மேலே உள்ள படங்களை குறிப்பிட முடியும். இந்த அ வரிசை தவிர்த்து சிந்து பைரவி, மனதில் உறுதி வேண்டும், போன்ற வெற்றி படங்களும், எங்க ஊர் கண்ணகி, போன்ற தோல்வி படங்களும் அவருடைய பாணியை ,தனித்தன்மையை அழுத்தம் திருத்தமாக வெளிக்கொணர்ந்த திரைப்படங்கள். புது புது அர்த்தங்கள் படத்தில் அதே  வெடுக் துடுக் பாத்திரம் வில்லியாகவும் அவரால் உருவாக்க முடிந்தது  ஆச்சர்யமான முரண்.
கல்கி  அந்த வரிசையில் அவருடைய கடைசிப்படம். ஆனால் கால மாற்றம் காரணமாக அந்த திரைப்படம்  மக்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது.
அரங்கேற்றம் துவங்கி ஆண் வர்க்கத்தையும் சமூகத்தையும் தன் சாட்டையடி வசனங்களால் அடித்து நொறுக்கித்தள்ளிய பாலச்சந்தரின்  பெண் பாத்திரம் கல்கி யோடு தன் சோர்வை கண்டடைந்தது
பாலச்சந்தரின் அடையாளம் என்பது இந்த வகைப்படங்கள்தான்
இதுபோன்ற படங்களை இவருக்கு முன்பும் பின்பும் தமிழ் சூழலில் யாரும் எடுக்கவே இல்லை.
இந்த  பாணியைத்தவிர, வறுமையின் நிறம் சிவப்பு, தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, உன்னால் முடியும் தம்பி போன்ற சமூகத்தின் அன்றைக்கு உயிர்ப்பான பிரச்னைகளை பேசிய திரைப்படங்கள் அவரது இன்னொரு பாணி.
நீர்க்குமிழி, எதிர் நீச்சல், பாமா விஜயம், இரு கோடுகள் போன்ற அவரது ஆரம்ப கால கறுப்பவெள்ளை நாடக பாணி படங்கள் இன்னொரு வகை.
நினைத்தாலே இனிக்கும், புன்னகை மன்னன் டூயட் போன்ற இசை நடனத்துக்கு முக்கியத்துவம் தந்த பாணி என அவர் திரைப்படங்களை பல்வேறு பாணிகளாக வகைப்படுத்தினாலும் அவரது எந்த பாணியிலும் சேராத மரோ சரித்ரா திரைப்படம் தான் அவரது திரைப்படங்களில் பெரும் சாதனை நிகழ்த்திய திரைப்படம்.
ஆனால்  பாலச்சந்தர் பற்றி நினைவு கூறும் பலரும் அந்த திரைப்படம் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. உண்மையில் அவர் மற்ற படங்களில் அல்லாத ஒரு நீரோட்டமான காட்சி மொழி அந்த படத்திலும் அதன் இந்தி பதிப்பான ஏக் துஜே கேலியே விலும் தான் உணர முடிந்தது.
இயக்குனர் பாலச்சந்தரின் பெருமைகளூள் எம்.ஜி.ஆர் , சிவாஜி காலத்தில் நாகேஷை நாயகனாக நடிக்க வைத்து அவர் ஈட்டிய வெற்றியைத்தான் அனைவரும் குறிப்பிடுவார்கள் . ஆனால் என்னை பொறுத்தவரை  முதன்  கறுப்பான ஆண்களையும் பெண்களையும் கதாநாயகர்களாக திரையில் அறிமுகப்படுத்தியதுதான் அவரது சாத்னைகளின் உச்சம்
சிவப்பானவர்கள் மட்டுமே அழகானவர்கள் ,சினிமாவிலும் அவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்கிற போலிபிம்பம் கெட்டியாய் இறுகிக்கிடந்த சமூகத்தின் படிமத்தை உடைத்தது அவருடைய சாதனை. ரஜினி, சரிதா இருவரையும் அவர் அறிமுகப்படுத்தாவிட்டால் வேறு எப்படியும் அவர்கள் அன்றைக்கிருந்த தமிழ் சூழலில் அறிமுகமாக வாய்ப்பே இல்லை.
தப்புத்தாளங்களில் திருடன் ரஜினி, பாலியல் தொழிலாளி சரிதா போன்ற விளிம்பு நிலை பாத்திரங்களை திரையில் நாயகன் நாயகியாக அறிமுகம் செய்ததும் அவருடைய சாதனைகளில் ஒன்று.
பாத்திரங்கள் எதையாவது திரும்ப திரும்ப பேசுவது அவரது பாணி
அரங்கேற்றத்தில் உன் அப்பா எனக்கு மாமனார் எனும் ஒரு குழப்பமான விடுகதை
அவள் ஒரு தொடர்கதையில்  படாபட் ஜெயலட்சுமியின் படாபட்
மற்றும்
மூன்று முடிச்சுவில் ரஜினி சிகரட்டை தூக்கி போடுவது ,கைகளை வைத்து மேனரிசம் செய்வது என துருத்தலாக பாத்திரங்கள் எதையாவது செய்வதன் மூலம் பார்வையாளனிடம் பாத்திரங்களை அழுந்த பதியவைப்பது அனைவருடைய பாணி
மோட்டர் பைக்குகளை திரையில் அறிமுகப்படுத்துவதை சமூக மாற்றங்களின் குறியீடாக அவள் ஒரு தொடர்கதையில் புல்லட்டையும் , அவர்கள் படத்தில் காற்றுகென்ன வேலி பாடலில் ராஜ் தூத் பைக்கையும்  , புன்னகை மன்னனில் இந்த் சுசூகி பைக்கையும் முதன் முதலாக திரையில் காண்பித்து இளைஞர்களை பரவசப்படுத்தினார்
பாலச்சந்தர் இறந்த செய்தி குறுந்தகவலாக எனக்கு வந்த போது அவர் மருத்துவமனையில் உயிருடன் போராடிக்கொண்டிருந்தார். பிற்பாடுதான் அது பொய்யான செய்தி என தெரிய வந்தது என்றாலும் அந்த ஐந்துநிமிட இடை வெளியில் நான் மிகவும் துயருற்று அமைதியாக ஒரு நிமிடம் காலத்தோடு உறைந்து நின்றேன்.
என் அம்மா எனை கைப்பிடித்து கடைதெருவுக்கு சிறுவயதில் சென்ற போது  ஒரு சினிமா போஸ்ட்ரை காண்பித்து டேய் இது பாலசந்தர் படம்டா ரொம்ப பெரிய டைரக்டர் அவர் படமெல்லாம் அருமையா இருக்கும் என சொன்னது இப்போதும் எனக்குள் பசுமையாக நினைவில் உள்ளது.
இப்படியாகத்தான் டைரக்டர் என்ற பதம் என் வாழ்க்கைக்குள் நுழைந்து முக்கியம் பெற துவங்கியது.
உண்மையில் இக்கட்டுரை எழுதவும் காரணமாக இருந்தது என் அம்மா. எனக்கு கை நீட்டி போஸ்ட்ரை காண்பித்த அந்த  நிகழ்வுதான்.

என் அம்மாவை போல பல பெண்களின் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்ததுதான் அவரது மிகபெரிய சாதனை.

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...