September 11, 2024

பொறுப்புணர்வுமிக்க அருமையான விழிப்புணர்வு கவிதைகள்

நீதியரசர் பாரி அவர்கள் எழுதிய சட்டமும் கவி பாடும் முன்னுரை -அஜயன்பாலா பாஸ்கரன் உலகமே இன்று மாறிவிட்டது . ஆதி காலத்தில் மனிதன் பெண்களுக்காகவும் உணவுக்காவும் வெட்டி மடிந்தான் . பிறகு பொன்னுக்காக வில் வேல் ஆயுதங்கள் கொண்டு மோதினான் . பிறகு மண்ணுக்காக கப்பல் படை விமானப்படை என உருவாக்கி சண்டை போட்டவன் எரிபொருளுக்காக ஏவுகணைகள் கொண்டு தாக்கிக்கொண்டான். இதோ இன்று அதுவும் மாறிவிட்டது . ஸ்கட் இல்லை உயிரியல் ஆயுதங்கள் இல்லை ஆனாலும் போர் நடக்கிறது. அதை செய்வது நாடுகள் அல்ல . பெரு நிறுவனங்கள் . இன்று உலக அரசியலைத் தீர்மானிக்கும் வல்லாதிக்கம் கொண்டவர்கள் அமெரிக்காவோ சீனாவோ ரஷ்யாவோ அல்ல . அவர்களையும் அடக்கி ஆளும் மகாசகதி கொண்ட கண்ணுக்கு தெரியாத இந்த பெரு முதள்ளிகள் தான். எதற்குத் தெரியுமா டேட்டா வுக்காக ஆமாம் இன்று வணிகம் தான் மிகப்பெரிய போர். யாரிடம் அதிக டேட்டா ( தனி நபர் தகவல்) இருக்கிறதோ அவர்கள் தான் ராஜா . இந்த டேட்டா யாரும் அல்ல நாம் தான் .நம் தொலைபேசி நம் இணையதள முகவரிகள் தான். இவர்களின் போட்டியில் ஒவ்வொரு நொடியும் நாம் சுரண்டப்படுகிறோம் . இதில் என்ன கூத்து என்றால் நாம் சுரண்டப்படுகிறோம் என்று தெரியாமலே ஒவ்வொருநாளும் நம் வியர்வையும் உழைப்பும் அவர்களால் சுரண்டப்படுகிறது உலகின் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு ஏசி அறையில் அமர்ந்திருக்கும் அவர்களின் பாக்கட்டுக்கு செல்கிறது . உதாரணத்துக்கு ஒரு தியேட்டருக்கு படம் பார்க்கச் செல்கிறோம் என வைத்துக் கொள்ளுங்கள் அதில் வாகன நிறுத்தம் முதற்கொண்டு அனுமதி சீட்டு தொடங்கி பாப்கார்ன் கொக்கோகோலா வரை அனைத்திலும் நாம் சுரண்டலுக்கு ஆட்படுகிறோம் .. எதுக்கு சார் பார்க்கிங் காசு இவ்ளோ வாங்கறீங்க ? என ஆரம்பத்தில் கோவப்படும் நாம் கூட இப்போது அதற்கு பழகிக்கொண்டு அவர்களின அடிமையாகி அவர்களின் சூப்பர் பணக்கார போட்டிக்கு உதவி செய்கிறோம். யோசித்துப் பார்த்தால் எல்லா விஷயத்திலும் இந்த சுரண்டல்கள் நடக்கிறது. .ஏதவாது பிரச்னை என்றால் நேரிடையாக தொடர்புகோள்ள முடியாது. மீறினால் டோல் ப்ரீ எண்னுக்கு டயல் செய்ய வேண்டும் ஆங்கிலத்தில் பேச எண் ஒன்றை அழுத்தவும் தமிழுக்கு மூன்றை அழுத்தவும் என குழப்பி ச்சீ போங்கடா என வெறுத்துப்போய் நாமும் எதிர்ப்புக்குரல் எழுப்ப வழி தெரியாமல் சோர்ந்து போகிறோம் இப்படியான அயோக்கித்த்னங்களூக்கு நாம் அடிமையாகிவிட்ட சூழலில் நம்மை நோக்கி நீளும் ஒரே கை நுகர்வோர் பாதுகாப்பு நீதிமன்றங்கள்.. நமக்கான உரிமைகளை மீட்டுத்தரும் இந்த நீதி மன்றத்தில் நீதிபதியாக இருப்பவர்கள் பணியானது இருளில் தடுமாறும் ஒருவனுக்கு விடியலின் வெளிச்சம் போன்றது. அத்தகைய நீதிபதியான பெருமதிப்புக்குரிய திரு. பாரி அவர்கள் இப்படி கவிதை வடிவில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் செயலை பாராட்ட வார்த்தைகளில்லை வெறும் அறிவுரைகள் போல் இல்லாமல் வாசிப்பவர்கள் மனதில் ஆழ பதியும்படியும் அதேசமயம் கவிதைக்குண்டன சொல் நயம் ஒலி நயம் ஆகியவற்றுடன் நறுக் நறுக்கென படைத்திருப்பதுதான் இந்த நூலின் சிறப்பு உதாரணத்துக்கு உயிலே உன்னை எழுதியவர் இறந்தால் தான் உனக்கு உயிர் எனும் போதும் . அது போல தான் எழுதிய உயிலை அவன் இறப்பதற்கு முன் தான் சாகடிக்க முடியும் என உயில் பற்றி எழுதும் போதெல்லாம் அவரது அங்கதச்சுவையும் அழகுத்தமிழோடு சேர்ந்து கொள்கிறது. இது போல நமக்கு அன்றாட வாழ்வில் பயன் தரக்கூடிய நெருப்புக்குச்சிகளாக இந் நூல் முழுக்க பல கவிதைக்ள் இருப்பது சிறப்பு முல்லைக்கு தேர் கொடுத்தான் அன்று ஒரு பாரி .. தன் கவிதையால் நுகர்வோருக்கு வெளிச்சம் தருகிறார் இன்றும் ஒரு பாரி என பாரட்டும் அளவுக்கு இந்தக் கவிதைகள் உள்ளன உங்கள் பணி போற்றத்தக்கது. ஊருக்கு உழைத்திடல் யோகம் என்றான் பாரதி அந்த யோகம் செய்யும் திரு.பாரி அவர்களின் இந்த சிறு நூல் எல்லா சிறப்புகளையும் எய்த வாழ்த்துகிறேன் -அஜயன் பாலா பாஸ்கரன் சென்னை- 93

No comments:

தமிழ் ஆவணப் படங்களின் போக்கு

ajayanbala@gmail.com . இன்று அனைத்து மொழிகளிலும் ஆவணப்படம் பெரும் இயக்கமாக வளர்ந்துள்ளது. குறிப்பாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் ஆவணப்படங்கள...