July 2, 2011

செம்மொழி சிற்பிகள் : 7 வள்ளலார் இராமலிங்க அடிகள்





வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடி நின்றேன் எனகூறி தன் தீந்தமிழால் அன்பை போதித்த மனித நேயர். எளிய தமிழை துவக்கி வைத்தவர் அருளாளர், உள்ளத்தால் ஒருவன் இறைத்தனமை அடையமுடியும் என்பதற்கு இலக்கணமாக இருந்தவர். தமிழின் மூலம் உயிர்களிடத்தில் அன்பை போதித்தவர் சடங்குகளாலும் சாதிகளாலும் புரையோடிக்கிடந்த சமூகத்தை தன் ஒளிமிகுந்த தமிழால் புரட்டிபோட்டவர்.பத்தொன்பதாம் நூற்றாண்டின் நனி சிறந்த தமிழர் வள்ளலார் என தமிழுலகமே ஏற்றுக்கொண்ட இராமலிங்க அடிகள்.

தோற்றம் :05-10-1823

சிதம்பரம் அருகே மருதூரில் பிறந்த அடிகளாரின் இயற்பெயர் இராமலிங்கம். தந்தை ராமையா பிள்ளை. தாயார் சின்னம்மாள். சிறுவயதிலேயே தந்தையை இழந்த காரணத்தால் சென்னைக்கு ஏழுகிணறு பகுதியிலிருந்த அண்ணன் சபாபதியின் வீட்டுக்கு குடும்பம் இடம்பெயர்ந்தது. சபாபதிக்கு தொழிலே பக்திதான் . கோவில் கோவிலாக சென்று சமய சொற்பொழிவுகளை நடத்திவந்தார்.அத்னால் இவருக்கும் சிறுவயதிலேயே கோவில்கள் பரிச்சயமானது .சமயம் கிடைக்கும்போதெல்லாம் கந்த கோட்டம் ,வடபழனி என முருகன் கோவில்களுக்கு சென்று தானாகவே பாடல்கள் புனைவதை இராமலிங்கம் தொழிலாக கொண்டிருந்தார்.துவக்க கல்வியின்போதே தன் புலமையால் ஆசிரியர்களை ஆச்சர்யபடுத்தினார். ஒரு முறை சென்னை முத்தியாலு பேட்டையில் நடந்த கூட்டத்திற்கு உடல் நலமின்மையினால் அண்ணன் சபாபதி சொற்பொழிவாற்ற முடியாமல் போக வேறுவழில்லாத காரணத்தால் அங்கு இராமலிங்கர் தன் முதல் சொற்பொழிவுக்கு காலத்தால் நிர்பந்தப்படுத்தப்ட்டார். அன்று அச்சொற்பொழிவைக்கேட்டவர்கள் பரவசத்துக்கு ஆளாயினர். அன்று தொட்டு இராமலிங்கர் ஊர் ஊராக திரிய ஆர்ம்பித்த்னர்.

தன் அக்காள் மகள் தன்ம் என்பவரை திருமண்ம் செய்தாலும் தமிழும் தவ வாழ்க்கையுமே இவரது இல்லறமாக இருந்தது.கவைதை எழுதுவதையும் பாடல் புனைவதையும் முழுநேர தொழிலாக கொண்ட இராமலிங்கரின் வரிகள் ஆழமாகவும் எளிமையாகவும் புதுமையாகவும் இருந்தன. தனித்திரு, பசித்திரு விழித்திரு,ஒன்றேசெய், நன்றே செய், இன்றே செய் போன்றவை அவர் கூறிய ஆகச்சிறந்த வரிகளில் சில.


முதன் முதலாக முதியோர் கல்வியை தொடங்கியவர். தமிழ் நாட்டில் முதன் முதலாக திருக்குறள் வகுப்பை துவக்கினார் போன்ற பெருமைகளும் இவருக்குண்டு.மனுமுறைகண்ட வாசகம், சீவகாருண்ய ஒழுக்கம் போன்ற சிறந்த உரைநடை நூல்களும் இவரது தமிழ்த்தொண்டின் சிறப்புகள்.

மொத்தம் 5818 பாடல்களை கொண்ட இவரது தொகுப்பு அருட்பா எனப்பட்டது
இவரது பாடல்கள் சமூக மாறுதல்களை பேசின. சடங்கு சம்பிரதயங்களை இவர் கடுமையாக எதிர்த்தார்.உயிர்பலிகூடாது என வறுபுறுத்திய இவர் சாதிமதம் குலம் கோத்திரம் போன்றவை மனிதனை சிறைப்படுத்தும் விலங்குகள். அவை உடைத்தெறியப்பட வேண்டும் என புரட்சிகருத்துக்களை கூறினார். இதனால் இவருக்கு சமூகத்தில் எதிர்ப்புகள் அதிகம் உண்டாயின .

அவற்றுள் யாழ்பாணத்தை சேர்ந்த தமிழ் அறிஞர் ஆறுமுக நாவலரின் எதிர்ப்பு இவரது பாடல்களை அருடபா இல்லை மருட்பா எனக்கூறி வழக்கு தொடுக்கும் அளவிற்கு சென்றது. தமிழகம் முழுதும் அறிஞர்கள் இரண்டு அணிகளாக பிரிந்தனர். கடலூர் வழக்கு மன்றத்தில் நடந்த இறுதிக்கட்ட உசாவலில் இராமலிங்கரின் பாடல்கள் அருட்பாதான் என தீர்ப்பாகியது.

சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை நிறுவி ஏழைமக்களின் பசிப்பிணி போக்க வடலூரில் தருமசாலை ஒன்றயும் 1870ல் நிறுவினார்.
நூறு ஆண்டுகளை கடந்தும் இன்றுவரை அந்த அடுப்பு அணையாமல் எரிந்துவருவது அவரது வாழ்வின் சிறப்புக்கு சான்று.

மறைவு :30-01-1874

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

கடலூர் வழக்கு மன்றத்தில் நடந்த இறுதிக்கட்ட உசாவலில் இராமலிங்கரின் பாடல்கள் அருட்பாதான் என தீர்ப்பாகியது. //

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Anonymous said...

அய்யா,
தாங்கள் வரலாற்றைச் சற்றே ஆய்ந்தறிந்து கடலூர் வழக்கு பற்றிப் பதிவிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வழக்கு மான நட்ட (அ) அவதூறு வழக்கு தான். அருட்பாவைப் பற்றியது அன்று.

நன்றி
அருள்.

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...