March 18, 2010

கவிதையின் அரசியல் ;கவிதை என்பது யாதெனில் ; பாகம் 2







மொழிதான் மூலம் ;சமூகத்தின் ஆதாரம்
சொற்கள்தான் மொழியின் உடல்
பைபிளின் முதல் வாக்கியமே ஆதியில் சொற்கள் இருந்தது என்பதாகத்தான் இருக்கிறது.
ஆதலால் மனிதனை விட சொற்கள் முக்கியத்துவம் வாய்ந்தது
நம் வாய் தினமும் எத்தனையோ சொற்களை பயன்படுத்துகிறது.
மனமும் சொற்கள் உருவாக்கும் பிரதிமைகளை கொண்டுதான் சிந்திக்கிறது முடிவெடுக்கிறது
இந்த சொற்கள் அனைத்தும் பால்யத்திலிருந்து சூழல் மூலமாக நாம் உள்வாங்கிக்கொண்டவை.

இந்த சொற்கள் எப்படி தோன்றின
எந்த காலத்தில் எப்படியாக அவை நமக்குள் புழங்கிவருகின்றன என்பது குறித்தெல்லாம் நாம் யோசித்திருக்கமாட்டோம்
சரி ஒருநாள் திடீரென சொற்கள் அனைத்தும் இல்லாமல் போய்விட்டதாக ஒரு கற்பனை செய்து பார்ப்போம்
யோசித்துபாருங்கள நாம் எப்படி நமக்குள் உரையாட முடியும்
நம்மை விடுங்கள் ஒரு சமூகம் அத்ன் இதர உறுப்புகளான அரசு பள்ளி மருத்துவம் போன்றவை எப்படி இயங்க முடியும்
இப்போது சொல்லுங்லள் சொற்கள் நம்மை நம் வாழ்வை எப்படியாக தீர்மானிக்கின்றன என்று

ஓவ்வொரு காலத்திலும் மக்களின் வாழ்க்கை முறை கலாச்சாரம் ஆகியவை மாறிக்கொண்டேவரும்போது மொழியானது தடுமாறுகிறது மக்களின் பயன்பாட்டினூடே முன்னும்பின்னுமான நகர்தலில் சில சொற்கள் அழிந்தும் தேய்ந்தும் மறைந்தும் போகின்றன.
அதேசமயம் வேறு மொழி அதிகாரப்படுத்தும்போதும் அல்லது இயல்பான் கலப்பின் போதும் எந்த மொழியில் சொற்கள் வலுவாக உள்ளதோ அந்த மொழி நிலைத்தும் இதரமொழிகள் அழிந்தும் போகின்றன .
அச்சுக்கலையும் பதிப்புக்கலையும் மட்டும் தோன்றியிருக்காவிட்டால் சமஸ்கிருதம் ஆங்கிலம் உருதுவார்த்தைகளைத்தான் நாம் தமிழ் வார்த்தைகளாக நினைத்து இன்னமும் பேசிக்கொண்டிருப்போம் .

இப்படியாக சொற்களின் வளமைக்கும் அது சார்ந்த மொழிமற்றும் இனத்தின் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது

இன்னும் சொல்லப்போனால் சொற்களின் மூல்மாக மொழிதான் ஒருசமூகத்தை இயக்கிக்கொண்டிருக்கிறது


வெறும் சொற்களை வைத்துக்கொண்டு ஒருவன் எதையும் கட்டியமைக்க முடியாது

பத்துசொற்கள் ஓரிடத்தில் சேகரிக்க அதன் பின்புலனாக அர்த்தம் என்பது மிக அவசியமானது

வாரா நன்றும் பிறர் தீதும் தர

இப்படியாக தனித்தனியாக இருக்கும் போது வெறும் சொற்களாக இருக்கும் இவை நான்கும் சற்றுவரிசைமாற்றி

தீதும் நன்றும் பிறர் தர வாரா என ஒரு கவிஞன் தன் மனஎழுச்சிக்கு இசைவாக கோர்க்கும்போது அதன் பின்னணியில் உண்டாகும் அர்த்தம்தான் அந்த சொற்களுக்கு உயிரை தருகின்றன
அந்த இணைப்பு சொற்கள்மூல்மாக காலத்துக்கும் நிற்கும் அர்த்தம் மொழிக்கு ஒருபயன் என்றாலும் அதே சமயம் இரு நூறு ஆண்டுகள் அந்த சொற்கள் ஒருதேர்ந்த கவி மூலம் தன் உயிர்த்த்னமையை தக்கவைத்துக்கொள்கின்றன.
பாதுகாக்கப்படுகின்றன எனபதும் குறிப்பிடத்தகுந்த விடயமாகிறது.

இப்படியான அரசியல் முக்கியத்துவம் மிகுந்த சொற்களை உருவாக்குவதும் புத்துயிர்ப்பு செய்வதும் வளப்படுத்துவதுமான பணிகளை மேற்கொள்ளும் முக்கியமான சூத்திரதாரிதான் கவிஞன்

சமூகத்தின் மேற்பரப்பில் அரசியல்வாதிகள் சினிமாக்காரர்கள் பத்திரிக்கையாளர்கள் மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் இதர அலுவலர்கள்
செயல்படும் வேளையில் இவன் மட்டும் ஒரு ஆழ்த்தில் இருட்டில் அமர்ந்தபடி சோப்பு நீரால் சங்கிலியை கழுவும் கொல்லனை ப்போல மொழியை புதுப்பிக்கும் வேளையில் ஈடுபடுகிறான்.ஒரு தச்சனை போல மொழியை த்ன் படைப்பினூடக செதுக்கிக்கொண்டிருக்கிறான் .
சுருக்கமாக சொல்வதானால் கவிஞர்கள் மொழி எனும் கடிவாளத்தின் மூலம் சமூகத்தை இயக்கும் மாய சக்ரவர்த்திகள்

ஆனால் பொருள்சார்ந்து இயங்கும் மனிதவாழ்க்கையானது கவிஞனின்ன் முக்கியத்துவத்தை ஒரு போதும் அறிவதில்லை .

மொழிக்கும் கவிஞனுக்கும் சமூகத்துக்குமிடையிலான் இந்த செயல்பாடுகளுக்கு சரியான ஒரு உதாரணம்
புரட்சி எனும் சொல்

ருஷ்ய போரட்டத்தையும் அத்ன் விடுத்லைபற்றியும் எழுதப்போன பாரதி
அத்னை ஆஹாவென எழுந்ததுபார் ஒரு யுகப்புரட்சி என எழுதினான்
புரட்சி எனும் சொல்லே அத்ற்குமுன் இல்லை என தமிழ் ஆய்வாளர்கள் கூறுகின்ற்னர்

புரட்டு புரள் , தலைகீழாக மாற்றுதல், யுகத்தை தலைகீழாக மாற்றுதல்
யுகத்தை புரட்டுதல் என்பதுதான் பாரதியின் கவிதாவேசம் அகத்தூண்டலுடன் புரட்சி எனும் வார்த்தையை தன்னியல்பில் உருவாக்கிதந்திருக்கிறது

1925க்குமுன் அவர் வாழ்ந்த அக்காலத்தில் யாரும் இது புதியவார்த்தைஎன்றோ அல்லது இந்தவார்த்தையை கொண்டாடவேண்டுமென்றோ அறிந்திருக்கவில்லை . அன்றைய உலகம் அவரை கிட்டடதட்ட பைத்தியக்கராராகவே பார்த்தது.

பிற்பாடு வா.ரா போன்றவர்களின் கட்டுரைகள் மூலமாக பாரதி வெளியுலகிற்கு
தெரிய வந்தபோது அவர்து படிப்புகள் சமூகத்தின் மேல்தளத்துகுள் எட்டிபார்க்க துவங்கின.

ஆனால் இன்று அந்த புரட்சி எனும் வார்த்தை சமூகத்தில் படும் பாட்டை நாம் கண்கொண்டு பார்த்துக்கொண்டுதான் வருகிறோம்

இடைபட்ட காலத்தில் அந்த சொல் எப்படியெல்லம் நகர்ந்து இன்று இங்கு வந்திருக்கிறது என்பதை சமூக ஆய்வு நோக்கில் பார்க்கிற போது கவிஞனின் படைப்பு மனோ நிலைக்கும் அவனது மொழி சார்ந்த அரசியல்களுக்குமிடையிலான ஒருசம்ன்பாட்டை நம்மால் தெள்ளத்தெளிவாக உணரமுடியும்.

இது சொற்கள் எனுமளவில் மட்டுமல்லாமல் அவன் உருவாக்கும் கருத்துக்களுக்கும் இத்தகையதொரு முக்கியத்துவம் காலத்தால்
உருவாக்கப்பட்டு சமூகமாறுதல்களுகு வித்திடுவதை நாம் கடந்த இருப்பதந்து வருட இலக்கியம் மற்றும் அரசியல் செயல்பாடுகளை வைத்து கண்க்கிட முடியும்


கடந்த இதழ் கட்டுரையின் இறுதியில் கவிதையின் இறைச்சி பொருள் குறித்து எழுதியிருந்தேன். அதைப்படித்த நண்பரொருவர் இறைச்சி இறைச்சி என்கிறீர்களே அது என்ன என கேட்டார்.
அவருக்கு எப்படி இத்னை விளக்குவது என யோசித்தேன்
ஒரு கனியின் சதைப்பற்றான பாகம் போல எனலாமா?
என யோசித்தேன் ஆனால் அது முழுமையான அர்த்த்தை தருமா என்பது ஐயமே


ஆங்கிலத்தில் சப் டெக்ஸ்ட் என்பார்கள்

படைப்பில் வார்த்தைகளால் நேரடியாக சொல்லப்படாத ஒன்று
அதன் உள்ளூறை மறைந்து அந்த படைப்பை வாசிக்கும் போது நமக்குள் இன்பத்தை விளைவிக்க கூடியதாக இருக்கிறது.

இந்த திட்டமற்ற அருவமான அந்த அனுபவத்தைத்தான் இறைச்சி என்கிறார்கள்

சுலபமாக சொல்வதானால் இலக்கணங்களில் உவமம் எனக்கூறுகிறார்கள்

ஆனால் அதுவும் கூட சரியில்லை
உள்ளூறை உவமம் என வேண்டுமானால் கூறலாம்

சரி அப்படியானால் இத்னை இறைச்சி என ஏன் கூறவேண்டும்

அதுவும் நல்ல கேள்விதான் ..ஒரு வேளை இப்படியிருக்கலாம்

அசைவ உணவில் ஒரு குழல் போன்ற சிறு எலும்புத்துண்டத்தை வாயில்வைத்து உறிஞ்சுகிறபோது அத்னுள் ஒளிந்திருக்கும் சதைப்பற்றானது எப்படி நம் தொண்டைக்குள் பாய்கிறதோ அது போல கவிதை எனும் சொற்களால் ஆன குழலுக்குள் ஒளிந்திருக்கும் அனுபவம் எனும் இறைச்சியானது அத்னை வாசிக்கும் போது நம் மூளைக்குள் பாய்ந்து பெரும் இன்பத்தை தோற்றுவிக்கிறது

இப்படியாக வார்த்தைகளுக்கு பின் மறைந்திருக்கும் அந்த சதைப்பற்றான பாகத்தைத்தான் நாம் இறைச்சி என்கிறோம்

இதுதான் கவிதையின் மீதான வசீகரத்தை நமக்கு தருகிறது
அத்தகைய இறைச்சி மனதுக்குள் விளைவிக்கும் இன்பம் உலகின் வேறெந்த அனுபவத்தாலும் கிடைக்கபெறாமல் கவிதையினால் மட்டுமே சாத்தியம் பெறுவதால்தான் .அனைவரும் கால்ம்தோறும் கவிதை இன்பத்தை தீண்டி இன்புறுகின்றனர்

தொல்காப்பியரும் இந்த உள்ளூறை இறச்சியைத்தான் தன் இலக்கிய கொள்கையாக கூறுகிறார்.

இந்த உள்ளுறை உவமம் குறித்த அவரது பாடல் ஒன்று

உள்ளுறுத்த இதனொடு ஒத்த பொருள் முடிகென
உள்ளுறுத்த இறுவதை உள்ளுறை உவமம் –

எனும் அவருடைய அக்த்திணை பாடல் ஒன்றில் உள்ளுறை உவமம் கவிதையில் எப்படி கையாளப்படவேண்டும் எடுத்துரைக்கிறார்.

அவர் சொன்ன இலக்கணத்துகுட்பட்ட
நமக்கு நன்கு தெரிந்த பாரதியின் பாடல் வரிகளுக்குள் காண்ப்படும்
இறைச்சி பொருளைகாண்போம்
.
”அக்கினி குஞ்சொன்றை கண்டேன்
அதில் ஆங்கோர் காட்டிடை பொந்தொன்றில் வைத்தேன்
வெந்து தனிந்தது காடு ”

மேற்சொன்ன கவிதையில் சிறப்புக்கு காரணம் அதில் வெளிப்படுத்தப்படாத அதேச்மயம் உள்ளுறையாக்கிடக்கும் இறைச்சி

அந்த இறைச்சி எது எப்படியாக ஒளிந்திருக்கிறது என்பதை அடுத்த இஅதழில் விளக்குகிறேன்

7 comments:

மயூ மனோ (Mayoo Mano) said...

தேவையான பதிவு...தொடர்ந்து வருகிறேன்.

ஸ்ரீவி சிவா said...

நுட்பமான பார்வை. நல்லா இருக்கு அஜயன்.
'புரட்சி' - சுவாரசியமான தகவல் சொன்னது மட்டுமின்றி, சொல்ல வந்த விஷயத்தோடு கோர்வையாய் பொருந்துகிறது.
நன்றி அஜயன். தொடரட்டும் பணி.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Anonymous said...

Valuable info. Lucky me I found your site by accident, I bookmarked it.

Anonymous said...

Terrific work! This is the type of information that should be shared around the web. Shame on the search engines for not positioning this post higher!

ajayan bala baskaran said...

thanku both of u my dear anonymous

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...