November 30, 2009

நீரூற்று இயந்திர பொறியாளன்...நாவல்

www.thadagam.com இணைய இதழில் வெளியாகிவரும் எனது நாவல் தொடரிலிருந்து ஒரு பகுதி
-அஜயன்பாலா


chapter :11

கோவிலுக்கு போய் பாருங்கள் கடவுள்கூட பணத்துக்காக அலைகிறார்.


உலகின் பல திசைகளில் இதுபோன்று யாரோ ஒருவன் எதையோ தன்னலமற்று செய்து கொண்டிருப்பதால்தான் தினமும் ஆறுமணிக்கு சூரியன் ”டக்” கென வந்துவிடுகிறான். கமிஷனருக்கு முதன் முத்லாக நீரூற்று இயந்திர பொறியாளனை பார்த்ததும் அப்படித்தான் தோன்றியது.அதுவும் அவர் ஞாபகத்தில் சூரியன் தோன்ற காரணம் அவனது பரந்த வடிவான் நெற்றியும்,புருவமும் அத்ன் கீழே ஒளிர்ந்த இரு கண்களும். அந்த் கண்கள் தலைசிறந்த ஞானிக்கான தகுதியை கொண்டிருந்தன. அதன் பிரகாசமும் குளுமையும் அளப்பரியது.கிரேக்க சிற்பங்களில் வடிக்கப்படிருப்பது போன்ற செதுக்கப்பட்ட நாசி.பென்சிலால் அள்வெடுத்து வரைந்தது போன்ற உதடுகள்.அனைத்தையும் விட தோள்வரை சுருள் சுருளாக கருகருவென அடர்த்தியாய் தொங்கும் அந்த முடிதான் அவனது இத்தனை வசீகரத்துக்கும் காரணம் என்பதை கமிஷ்னர் அறிந்து கொண்டார்.மொத்தமாக சொல்வதானல் ஆண்களின்முகம் கூட இத்த்னை அழகாய் தேஜஸாய் இருக்குமா என கமிஷனருக்கே கூட சந்தேகம் வந்துவிட்டது.மட்டுமலாமல் நடையில் இருந்த கம்பீரம் அமரும்போது அவனிடம் காண்ப்பட்ட மிடுக்கு என பலவகைகளில் வசீகரமானவனாக இருந்தான் .அதே சமயம் அழுக்கு உடையும் தோளில் தொங்கிய துணிமூட்டையை போன்ற பையும் முகத்து தாடியும்தான் சற்று உறுத்தல். சரவணன் சொல்லியிருந்தது போலவே அவன் கோடு போட்ட கால்சராய் அணிந்திருந்தான். ஆனால் அவை அவர் கற்பனையில் நினைத்திருந்தது போல பளிச்சென இல்லை. அழுக்காக இருந்தன. அவன் அணிந்திருந்த கோடுகளால் ஆன அதேநிற கோட்டும் அழுக்ககத்தான் இருந்தது.சில இடங்களில் நூல்பிரிந்தும் ஒட்டு போடப்பட்டு கைகளால் தைக்கப்பட்டும் இருந்தது அந்த கோட்டு.

அவன் அறைக்குள் நுழைந்ததிலிருந்தே ஒரு வீசேஷ காந்தசக்திஅவரை சுற்றி சூழ்ந்திருப்பதாக ஒரு பிரமை.

அவன் சிரிப்பு கூட இயல்பாக ஆர்ப்பட்டமில்லமல் ஒளிர்ந்தது.

கமிஷ்னர் அவன் அதிகம் பெச விரும்பவிலை என்பதை அறிந்து கொண்டதும் துரிதமாக அவனிடம் தயாராக வைத்திருந்த அரசு முத்திரையிடப்பட்ட பழுப்பு நிற பணி உத்தரவு நமூனாவை அவனிடம் நீட்டினர்.நகராட்சியின் சட்டதிட்டங்கள் ஒழுங்கு மற்றும் பணிக்காலம் திட்டமதிப்பீடு போன்றவற்றை வாய்வழியாக துரிதமாக பேச துவங்கிய அவர் இறுதியாக மூன்று பூங்காக்களின் இருப்பிடங்களையும் அவன் தங்குமிடம் மற்றும் தங்கும் காலத்து உணவு களுக்கான வழக்கங்கள் குறித்தும் அவன் விருப்பபடி ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறி பஸ்சரை அழுத்தினார்.

ஏகாம் பரம் பதட்டத்துடன் கதவை திறந்து எட்டிபார்க்க

-சரவணனை வரச்சொல்”.

சரவணனை நீரூற்று இயந்திர பொறியாளனிடம் அறிமுகபடுத்திய கமிஷ்னர் உடன் இவர்தான் உங்களுடைய வரவுக்கான கர்த்தா,இனி உங்களுக்கு எந்த தேவை என்றாலும் இவரிடம் தெரிவிக்கலாம்
இவர் இன்று முழுக்க உங்களுடன் இருப்பார் .தொடர்ந்து உங்களுக்கான் தேவைகளுக்கு நீங்கள் இவரை மட்டும் தொடர்பு கொண்டால் போதுமானது.
உங்களால் இந்த நகராட்சிக்கும் மக்களுக்கும் பெரிய நண்மை வரப்போவதாக எங்கள் நகராட்சி மனற த்லைவர் ம.நா. பெரியசாமி நம்புகிறார்.உங்களை வரவழைக்க அவர் தான் தீவிர முனைப்பு காட்டினார். இன்றில்லாவிட்டாலும் பணிகள் துவங்கிய பிறகாவது ஒரு முறை அவரை நீங்கள் சந்திக்க வேண்டும்.

கமிழ்னர் இப்படியாக நகராட்சி மற்றும் அவனது பணிகள் குறித்து தீவிரமாக் பேசிக்கொண்டிருந்த அதேநேரம் சரவணன் சற்று விலகி வந்து நின்று முழுவதுமாய் நீரூற்று இயந்திர பொறியாளனை பார்த்தான். வெறுமனே குமரேசன் சொன்ன த்கவல்களின் மூலமாக மட்டுமே த்ன்னுடைய நாயகனாக வரித்திருந்த அவனது கனவு மனிதனை முதல் முறையாக முழுவதுமாக உள்வாங்கினான். .சிலகணங்களுக்கு முன் ஜன்னல்வழியாக பொறியாளனை பார்த்த போது கூட அவனால முழுமையாக பார்க்க முடியவில்லை ஆனால் அந்த கணம் பேரற்புதமானது. அந்த் கணம் அவன் உச்சி மண்டையில் ஓராயிரம் நட்சத்திரங்கள் பூத்து குலுங்கின. ஆனல் அத்ற்கு உண்மையான காரணம் அங்கையற்கண்ணி.அங்கயற்கண்ணீயின் வள்ப்பமான இரண்டு தாமரை போன்ற மார்பகங்கள் அவன் முதுகை முழுவதுமாக அழுந்தியது மட்டுமல்லாமல் அவ்ளது உடல் உருவாக்கிய வெப்பம் காரண்மாக அவனது ஆணுடலில் எழுந்த உணர்ச்சிகொந்தளிப்புகள் அவனது ஆண்குறியிலிருந்து தன்னியல்பாக உயிரணுக்களை உதிரவைத்துவிட்டிருந்தன.

அதன்பிறகு அங்கைக்கயற்கண்ணி எங்கு போனால் என்றே தெரியவில்லை.அவனது மனதில் இப்போது அவன் ஆவலுடன் எதிர்பார்த்துகிடந்த நீரூற்று இயந்திர பொறியாளன் குறித்த எண்ணங்கள் முழுவதுமாக விலகி முதுகில் அழுந்தி விலகிய அங்கயற்கண்ணியின் மென் முலைகளும் அதன் ஸ்பரிசமுமே வியாபித்திருந்தன. அதேசமயம் ஒரு பயம் குற்ற உணர்ச்சி பலஹினம் இவையும் அப்போது அவ்ன் உடலை முழுவதுமாக புரட்டி ஒரு கலவையான அசதியில் அவன் நாற்காலியில் சாய்ந்துகிடந்த நேரத்தில்தான் ஏகாம்பரம் வந்து கமிஷனர் அழைப்பதாக கூறி கவனத்தை கலைத்தான்.கமிஷ்னர் அறைக்குள் நுழையும் போதே பெரும் குற்ற வுணர்ச்சி அவனை தடுமாற வைத்தன.

சரவணனுக்கு பொறியாளனை இப்போது நேருக்கு நேராக பார்த்தபோது தன் உடல் அழுக்குதான் முதலில் யோசனையில்பட்டது. தான் அங்கு பொறியாளன் முன் நிற்பதற்கு எந்த தகுதியும் அற்றவன் என்பதாக உணர்ந்தான்.ஆனால் மாறாக பொறியாளன் சரவணனை பார்த்துமே தனது வலக்கையை குலுக்கலுக்கு த்யாரக நீட்ட ஒரு நிமிடம் சரவணன் தயங்கினான்.

கமிஷ்னருக்கோ ஆச்சர்யம்.

சரவணன் தயங்குவதற்கான காரணம் அவருக்கு தெரியாதல்லவா

ஆனால் பொறியளனோ அதுபற்றி எந்த விசனமும் கொள்ளாமல் சட்டென எழுந்து கொண்டு

உடலே அழுக்கிலிருந்து பிறந்ததுதான்
அதை அணுதினமும் உணரவே
இப்படியான் அழுக்கான உடைகளை அணிகிறேன்

இப்படி அவன் கூறியதும் சரவணனுக்கு உடல் உள்ளூக்குள் ஒருமின்வெட்டை சந்தித்தது.

சடாரென சரவணனின் வலக்கை தன்னை மீறி நீள பொறியாளன் அத்னை ஆதூரமாக பற்றி குலுக்கினான்.

அதுவரை பின்னால் மறைந்திருந்த நகரத்து மக்கள் இப்போது அலுவலகத்தின் வாசல் முன் கூடியிருந்தனர். அலுவலகத்தினுள்ளும் ஊழியர்கள் தத்தமது இருக்கைகளில் அமர்ந்தபடி ஆவலுடன் கமிஷ்னரின் அறைக்கதவையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தனர்.

ஒருகணத்தில் சட்டென கதவு திறக்க யாரும் உத்தரவிடாமல் சடசடவென இருக்கைகளை கால்களை பின்னுக்கு நகர்த்தி அனைவரும் எழுந்துகொண்டனர். திறந்தகதவிலிருந்து அந்த அலகு நீண்ட வினோத பற்வை முதல் ஆளாக வராந்தாவை கடந்து வாசலை நோக்கி பறக்க நீரூற்று பொறியாளனும் அவன்பின்னால் சரவணனும் பறவையை பின் தொடர்ந்து வராந்தாவுக்குள் பிரவேசித்தனர்.

வெளியே கூடியிருந்த கூட்ட்டத்தில் பெரும் பரபரப்பு.
வராந்தாவில் இருந்த அலுவலக ஊழியர்கள் அனைவரையும் பார்த்து பொறியாளன் கண்களில் ஒளி மின்னும் விதமாக கைகூப்பி வணங்க
ஒவ்வொருவரும் அத்னை ஒவ்வொருவிதமாக உள்வாங்கிக்கொண்டனர்.

சிலர் அவனது அழுக்கு உடைய்யை பார்த்து முகம் சுளித்தனர். யாரோ பிச்சைக்காரனை கூட்டிவந்து ஏமாற்றுகிறார்கள் என டைப்பிஸ்ட் ஜானகி மனதில் நினைத்தாள்.ஹெட் கிளார்க் கோவிந்தன் தனக்கருகில் இருந்த செங்கல்வராயனின் தொடையை த்டவி “ இவந்தான் அந்த பைத்தியக்காரனா நல்லா சோளகொல்லை பொம்மை மாதிரி இருக்கான்யா உன் வீட்லருந்து ஒரு கரிசட்டியை எடுத்தார்ந்திருந்தா த்லையில கவுத்து நம்ம கயனில நிக்கவைச்சா நல்லாருந்துருக்கும் என கிசுகிசுத்தான். சரவணன் ஒவ்வொருவர் பெயராக சொல்லி அறிமுகபடுத்த நீரூற்று பொறியாளன் அனைவருக்கும் கைகூப்பி வணக்கம் தெரிவித்தான்

பின் பொறியாளனும் சரவணனும் வெளியேவர சண்முகம் ஆவலுடன் தன் டீக்கடையிலிருந்து எட்டிபார்த்தான்.ஒட்டு மொத்த கூட்டமும் பரவசத்தோடு கை தட்டியது.அவர்களை ஆச்சர்யத்துடன் பார்த்த பொறியாளன் சரவணனிடம் எனக்காகவா இவர்கள் கூடியிருக்கின்றனர் என ஆச்சர்யத்துடன் கேட்டான்.
பின் அவர்கள் கூச்சல் எழுப்பியதை தொடர்ந்து பொறியாளன் இங்கிருந்தபடியே அவர்களிடம்

’நான் கீழினும் கீழானவன் ,என்னிடம் எதுவும் இல்லை என்னை இப்படி பார்க்காதீர்கள் .நான் உங்களின் விரோதியும் கூடத்தான். ஒருநாள் என்னை நீங்கள் கல்லால் அடிப்பீர்கள்,மோசமானவன் என தூற்றுவீர்கள் ,அன்று உங்களின் இந்த நிமிடங்கள் வீணானதாக தோன்றும் த்யவு செய்து விலகுங்கள் ...எனது அழுக்கு உடலின் துர்நாற்றம் இன்னும் சற்று நேரத்தில் உங்களை இங்கிருந்து விரட்டிவிடும்”

அவன் இப்ப்டிகூறியதை ஆச்சர்யத்துடன் பார்த்த நகரத்து மக்கள் சிலர் உற்சாகமிழந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சிலர் இவன் குரல் வார்த்தைகள் அனைத்தும் விசேஷமானதாக இருக்கின்றன .உண்மையிலயே இவனிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது.

இல்லாவிட்டால் கூலியே இல்லாமல் வெறுமனே சேவை செய்ய அவன் பைத்தியக்காரனாகத்தன் இருக்கவேண்டும்

உண்மைதான் கோவிலுக்கு போய் பாருங்கள் கடவுள்கூட பணத்துக்காக அலைகிறார்.இப்படியாக பேசிக்கொண்டிருந்த நெசவளர்கள் இருவருடன் இன்னும் சிலரும் அவன் அடுத்து செய்யபோவதை காண ஆவலுடன் காத்திருந்தனர். இதே சமயம் த்ந்தயோடு அதுவரை உரையாடிக்கொண்டிருந்த அங்க்கையற்கண்ணி ஆர்வம் தாளாமல் அலுவலக வாசலுக்கு ஓடிவந்தாள்
வாழ்வின் தீராதுயரம் தன் பின்னால் அங்குவந்து நிற்பதை அறியாத நீரூற்ரு இயந்திர பொறியாளன் சரவணனுடன் வாசலை நோக்கி புறப்பட்டான் .
பொறியாளன் தங்கப்போகும் காக்கா மலைப்பூங்காவுக்கு புறப்படுவதற்காக இருவரும் வெளியேவந்த சமயம் அங்கையற்கண்ணி வாசலுக்குவிரைந்தாள். வாசலில் கூடியிருந்த கூட்டத்தில் ஒதுங்கி நின்ற பிச்சு மணி வேகமாக கூட்டத்தை விலக்கியபடி பொறியாளனை நோக்கி முன்னேறினான்.அதே சமயம் அவனது வலக்கை துரிதமாக இடுப்பில் மறைத்து வைத்திருந்த சிறிய கறுப்பு பிடி போட்ட கத்தியை எடுத்த்துக்கொண்டிருக்க ..சரவணனை பார்த்து கை அசைத்த அங்கயற்கண்ணி பொறியாள்னை தனக்கு அறிமுகப்படுத்தும்படி சைகையால் தெரிவித்தாள்..சரவணன் பொறியாளனை தொட்டு திரும்பக்கூறினான். அதுவரை கூட்டத்தை வில்லக்கிக்கொண்டு முன்னேறிய பொறியாளன் சரவணன் தீண்டலால் அவன்பக்கம் திரும்பினான்.பின் அவன் அலுவலக வாசல் பக்கம் திரும்பி அங்கயற்கண்ணியை முதல் முறையாக பார்க்கும் அதே தருணத்தில் பிச்சுமணியின் கத்தி பொறியாளனின் உடலுக்குள் பாய்ந்தது.
தொடரும்

No comments:

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...