May 30, 2016

தேவி



நான் ஓரு வயோதிகனாக
உன்னை பின தொடர்கிறேன்
மறக்க முடியாத அந்த
பாடலை நினைவூட்டுகிறது
பின்னல் அசைவு
சிறு வயதில்
தொலைத்த விளையாட்டு
பொருளை திருப்பி
தருவாய் நீ செல்லமே
வெகுதூரம் வந்துவிட்டேன்
இன்னும் பின்னல் மனதில்
அசைந்து கொண்டேயிருக்கிறது
எதுவுமே இல்லாவிட்டாலும்
இருப்பதுபோலவே தோற்றச்
செய்யும் என் அன்பு மாயா
என்மேல் கனிவு கொண்டு
இல்லாமல் செய்து விடு

May 15, 2016

புனைவுலகின் பிரத்யேக வாசனையும் அஜயன்பாலா வின் கதைகளும் - - _ அசதா

 புனைவுலகின் பிரத்யேக வாசனையும் அஜயன்பாலா வின் கதைகளும் - அசதா

    
    இலக்கியத்துக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டு தந்த கொடையான சிறுகதை, இலக்கிய வடிவங்களுள் மிகுந்த சவால்மிக்க வடிவமாக இரண்டரை நூற்றாண்டுகள் கடந்து இன்றும் நீடிக்கிறது. ஒரு கோணத்தில் பார்க்க மாப்பஸானையும், செக்காவையும், புதுமைப்பித்தனையும் நமக்குத் தந்தவை சிறுகதைகள் என்றுகூடச் சொல்லலாம். அடக்கம், வடிவம், மொழி இவற்றில் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்தபடி வந்திருக்கும் சிறுகதை மேற்சொன்னவற்றில் எண்ணற்ற சாத்தியப்பாடுகளையும் கண்டிருக்கிறது. சிறுகதை வாசகத் துய்ப்புக்கு அல்லது நுகர்வுக்கு உகந்ததொரு அளவில் (பக்க எண்ணிக்கை) இருந்தது அதன் பிரபல்யத்துக்கு மட்டுமல்லாமல் அதில் பல்வேறு சாத்தியங்களை, புதுமைகளை நிகழ்த்தவும் ஏதுவாயிருந்திருக்க வேண்டும். ஆனாலும் சுந்தர ராமசாமியின் உவமை ஒன்றைக் கடன்பெற்றுச் சொல்வதாயிருந்தால் சிறுகதை எழுதுவது திமிங்கிலத்தை நீச்சல் குளத்தில் நீச்சலடிக்கச் செய்வது போல. இதனாலேயே சிறுகதை சவாலான விஷயமாக இருக்கிறது.

     எனினும் மனித உணர்வுச் சிக்கல்களை, அரிதான அகதரிசனங்களை, மாபெரும் ஆனந்தமாகவும் துக்கமாகவும் அபத்தமாகவும் நிகழும் மானுட வாழ்வினை- பல நேரம் அவ்வாழ்வின் ஒரு விள்ளலை அல்லது ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை- தமக்குள் நிகழ்த்தி பெரும் வெற்றி கண்டவை சிறுகதைகள். தமிழ்ச் சிறுகதை தனக்கான பாரம்பரியத்தைக் கொண்டிருந்தபோதும் மேலைச் சிறுகதைகளிலிருந்தும் அது கடன் பெற்றிருக்கிறது, அல்லது உலகின் ஏனைய மொழி இலக்கியங்களில் போல மேலைச் சிறுகதைப் போக்குகளை அவதானித்து  தனக்கான சிறுகதையை அது உருவாக்கிக் கொண்டது என்றும் சொல்லலாம். தமிழ்ச் சிறுகதையின் நெடிய வரலாற்றைப் பேசாமல் தொண்ணூறுகளின் தமிழ்ச் சிறுகதைப் போக்குகளிலிருந்து தொடங்கலாம்.

          தொண்ணூறுகளில் யதார்த்த சிறுகதை வழக்கொழிந்துவிட்டதென்ற களிகூடிய ஒரு ரகசியப் பெருமிதம் பல தீவிர தமிழ்ச் சிறுபத்திரிக்கையாளர்களிடையே சுற்றி வந்தது. புதிய நூற்றாண்டு தொடங்கிய சில காலத்தில் யதார்த்த சிறுகதையைப் புதைத்த இடத்தில் புல் முளைத்துவிடும் என்றும் நம்பப்பட்டது. ‘யதார்த்த சிறுகதை மரணித்துவிட்டது என்ற ஒரு பிரகடனம் மட்டுமே குறையாயிருந்தது. அதேநேரம் எண்பதுகளும் தொண்னூறுகளும் தமிழ்ச்சிறுகதையில் மிகத் தீவிரமான ஆண்டுகளைக் கொண்டிருந்தன என்பதை நாம் மறுக்க முடியாது. மேலைச் சிறுகதைகளிலிருந்து விலகி லத்தீனமெரிக்க இலக்கியங்களின் பக்கம் நம் கவனம் குவிந்திருந்த காலகட்டம் அது. அப்போதுதான் தமிழில் மிகு புனைவுக் கதைகள் தீவிரமாக எழுதப்பட்டன. அவருக்கும் முன்பும் பிறகுமாக பல்வேறு ஆளுமைகள் இந்த மிகுபுனைவு காலகட்டத்தில் இயங்கினாலும் எஸ். ராமகிருஷ்ணனையும் அவரது ‘தாவரங்களின் உரையாடல் கதைத்தொகுப்பையும் இக்காலகட்டத்தின் துலக்கமான ஒரு அடையாளமாகக் காண விரும்புகிறேன். மிகு புனைவுக் கதைகளின் கதவுகளைத் திறந்து விட்டதில் இக்கதைத் தொகுப்புக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

            பிறகு வந்த வருடங்களில் யதார்த்த சிறுகதையின் பிடரியைப் பற்றி அதன்மேலேறி நின்ற மிகுபுனைவுக் கதை மெல்லக் கீழிறங்கி ஒதுங்கி நின்றது. ‘கிளர்ச்சியுற்ற சிறுவர்கள் என ஜெயமோகன் லத்தீனமெரிக்க புனைகதையாளர்களைக் குறிப்பிட்டது நிஜம்தானோவென்ற ஐயம் ஏற்பட்டது. கு.ப.ரா, புதுமைப் பித்தன், வண்ணநிலவன் கதைகளெல்லாம் ஏன் வசீகரம் மாறாமல் இன்னும் அப்படியே இருக்கின்றன என்ற கேள்வி வந்தது. மிகுபுனைவுக் கதைகள் பரீட்சார்த்தமானவை மட்டுமே என்பதான பிம்பம்  வலுவூன்றி இருந்தாலும்  இந்தக் காலகட்டத்தில் மிகுபுனைவுக் கதைகள் தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் ஒருவிதமாகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டுவிட்டன என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் மிகுபுனைவு சிறுகதைகள் பரீட்சார்த்த எல்லையைத் தாண்டியவை என வாசகத் தளத்தில் நிரூபிக்க இன்னமும்  பிரயத்தனம் நடந்தபடிதான் இருக்கிறது.  மிகுபுனைவுக் கதைகள் மீதான இந்த அவநம்பிக்கையை மிகுபுனைவு எழுதுபவர்கள்தான் போக்க முடியும்.  

         பொதுவாவே சமகாலத் தமிழ்ச் சிறுகதை வெளி சோபையற்றுப் போய் புனைவெழுத்து என்பது நாவல்கள் மட்டுமே என்றாகியிருக்கிறது. இரண்டு சிறுகதைகள் எழுதிய எழுத்தாளரையும் நீங்கள் ஏன் நாவல் எழுதக் கூடாது என பதிப்பாளர்கள் கேட்கையில் சிறுகதைக்கான சந்தை மதிப்பை நாம் அறிய முடிகிறது. போனால் போகிறதென்று இடையிடையே சிறுகதைகளும் எழுதும் நாவலாசிரியர்களாலும் சந்தைமதிப்பு போன்றவற்றின் மீது நம்பிக்கை வைக்காத சிறுகதை எழுத்தாளர்களாலும்  சிறுகதைகள் வழக்கற்றுப் போகாமல் இருந்து வருகின்றன. மிகுபுனைவைப் பொருத்தவரை இன்று சிறுகதைகள் குறைவாகவே எழுதும் தீவிர புனைவெழுத்தாளரான கோணங்கி, மிகுபுனைவு நுட்பங்களை கைக்கொண்டு கதைகளைப் படைக்கும் சுரேஷ்குமார இந்திரஜித், மாய யதார்த்த கூறுகளைத் திறம்படத் தன் கதைகளில் கையாளும் பா.வெங்கடேசன் எனச் சிலரே அதனை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர்.

     தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் மிகுபுனைவுக் கதைகள் பெற்றிருக்கும் இடத்தினை மனதிற்கொண்டு அதிகமும் மிகுபுனைவு வகையைச் சார்ந்த கதைகளை உடைய ‘அஜயன்பாலா கதைகள் சிறுகதைத் தொகுப்பை நாம் அணுகலாம். பத்து  கதைகள் கொண்ட இத்தொகுப்பில் சில கதைகள் மட்டுமே யதார்த்த வகையைச் சேர்ந்தவை. மீதமிருக்கும் கதைகளில் மிகுபுனைவு தரும் கட்டற்ற சுதந்திரத்தை பயன்படுத்திக் கொள்ளும் அஜயன்பாலா அனேக கதைகளைத் தம்மளவில் வடிவநிறைவு கொண்ட, தேர்ச்சிமிக்க  மொழியுடன்கூடிய, வாசிப்பு சுவாரஸ்யம் குன்றாத கதைகளாகத் தந்துள்ளார் என்பதை இத்தொகுப்பின் பலமாகக் கூறவேண்டும். கதை வடிவமும் கூறுமுறையும் இக்கதைகளில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன. வாழ்வின் நெருக்கடிகள் உந்தித் தள்ள விளிம்பை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இளைஞனொருவன், சுயபச்சாதாபம் கொண்டு தனிமையில் உழல்பவன், காதலியிடம் காதலைச் சொல்ல இயலாதவன் என்பதான ஒரு பாத்திரம் இக்கதைகளில் தூலமாகத் தோன்றுகிறது. இந்த எதிர்மறைகள் சூழ வாழும்போதும் இயற்கையோடு தன்னை அடையாளம் காண்பவனாகவும், கடந்துபோகையில் வசீகரிக்கும் ஒரு யுவதியின் முகத்தை ரசிக்கத் தயங்காதவனாகவும் அவன் இருக்கிறான்.

     தன் காதலியின் பிறந்தநாளுக்காக நண்பன் வாங்கிய கைக்குட்டை ஓர் இரவு இவனிடம் தங்கிவிடுகிறது, மறுநாள் பூங்காவில் சூழ்நிலை கருதி நண்பனின் காதலிக்கு இவன் காதலனாக சற்று நேரம் நடிக்கிறான். இறுதியில் நண்பன் வந்துவிட, இவனை விட்டு அவர்கள் அந்த தினத்தைக் கொண்டாடக் கிளம்புகிறார்கள். இவன் தன் மழைக்கோட்டோடு அங்கு நிற்கிறான். அது மழைபொழியும் வேளையாக இருந்தும் அந்த மூவரில் அவன் மட்டுமே மழைக்கோட்டு அணிந்திருக்கிறான். சொல்லப்போனால் அன்று இந்த உலகில் அவன் மட்டுமே மழைக்கோட்டு அணிந்தவனாக இருக்கிறான். ‘அந்த நிமிடமும் என் உணர்ச்சிகள் எதையும் வெளிக்காட்டாமல் மழைக் கோட்டிற்குள் நின்றுகொண்டிருந்தேன் எனும்போது மழைக்கோட்டு மனதின் முக்காடாக மாறுகிறது, அவனை விடவும் மழைக்கோட்டு அங்கு முக்கியமானதாகிறது. கதையின் இறுதியில் அவன் கொள்ளும் துக்கம் அல்லது ஏமாற்றத்தை அது பரிபூரணமாக்குகிறது. ஒருவன் வாங்கும் மழைக்கோட்டு உலகியல் பயன்பாட்டில் மழையினூடாக அவனது தடையற்ற இயக்கத்தை சாத்தியமாக்குவது, ஆனால் சூக்குமமான ஒரு அகநோக்கில் அது மழை என்ற அற்புதத்தையும் மனிதனையும் பிரித்து வைப்பது. இந்த அடிப்படை புரியும்போது ‘மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும்’ கதை இன்னொரு பரிமாணத்தை அடைகிறது.

    ‘முருகேசன்  இத்தொகுப்பின் முக்கியமான கதை. சமகால சமூக-அரசியல் இயங்கு நிலைகளில் நுட்பமான உபாயங்கள் மற்றும் தந்திரங்கள்வழி வெகுமக்கள் மனதில் கருத்துக்களை கட்டமைத்து அவர்தம் சிந்தனையை புறவயமாகக் கட்டுப்படுத்தும் நுண் அரசியலை பகடியுடன் விவரிக்கிறது கதை. உதாரணமாக ஊரில் பித்தளைப் பாத்திரம் காணாமல் போனால் அது நல்ல சகுனமாகப் பார்க்கப்படுவது.  பெரும் மூடர் கூட்டத்தில் நுண்ணுர்வும், சுய சிந்தனையும் கொண்டவன் தனித்து ஒதுக்கப்படும் அவலமும் இத்தகு சமூக-அரசியல் கட்டமைப்பில் எதிர்ப்பு என்பதுகூட முறைப்படுத்தப்பட்ட ஒரு ஏமாற்றுத் தந்திரமாக இருப்பதும் இக்கதையில் பதிவு செய்யப்படுகிறது. யுவான் ருல்ஃபோவின் அனாக்ளீட்டோ மோரோனஸ் கதையை வாசித்தவர்கள்  ‘முருகேசன் கதையை இன்னும் சிறப்பாக உள்வாங்கமுடியும்.

     இத்தொகுப்பில் எனக்கு மிகவும் உவப்பான கதையாக ‘சின்ன முதலாளி வர்றார் ஒளிஞ்சுக்கோ...கதையைச் சொல்வேன். சின்ன முதலாளி, உயரமான சார் ஒருவர், ஒல்லி வாத்தியார் என வழக்கமாக நாம் காணும் பொதுக் குறியீட்டுப் பெயர்களைக் கொண்டவர்கள் இதில் வருகிறார்கள். இப்பெயர்கள் இந்தக் கதையை குறிப்பிட்ட விசேஷங்கள் ஏதுமற்ற கதையாகக் காட்டுகின்றன ஆனால் உண்மையில் அது அப்படியல்ல ஒரு கார்ட்டூன் கதை போல முயல்வேட்டைக்கு வரும் சின்ன முதலாளியுடன் தொடங்கும் இக்கதை பச்சை நிலவைப் பள்ளிக்கூடப் பையில் வைத்து சிறுவன் பள்ளிக்குச் செல்வதாகத் தொடர்கிறது. பிரகாசமாகத் தெரியும் பந்தைப் பார்த்து  அது நிலாவைத் தொட்டுவிடாதே எனச் சின்ன முதலாளி கேட்குமிடம் கவனிக்கத் தக்கது. இறுதியில் சிறுவன் ஏமாற்றத்துடன் நிற்க நிலவு வானுக்கே சென்றுவிடுகிறது. முள்ளங்கித் தோட்டத்துக்குக் கடல் வந்து போயிருந்தது போன்ற வரிகளைக் கொண்டு பெரும் புனைவாக விரியும் இக்கதையில்பசிக்குது என வயிற்றைத் தடவிக் காண்பிக்கும் சிறுமி வரும் வரி வாசகனை விழுத்தாட்டி விடுவது. அர்த்தங்கள் மற்றும் குறியீடுகளுக்கப்பால்  நிற்கும் இக்கதை வியப்பையும் மனவிகசிப்பையும் ஒருங்கே தோற்றுவிக்கும் பாங்கில் ஒரு நவீன தேவதைக் கதையாகவும் இருக்கிறது.

     தமிழ் நவீன இலக்கியவாதிகள் கூட்டமாக சந்தித்து அளவளாவும் பொழுதுகள் எப்படிப்பட்டவை என அறிய விரும்பும் ஒரு வெளியாளுக்கு சில சுவாரஸ்யமான தகவல்களை வழங்குவது கடவுளர் சபை. கடவுளர் சபை என்ற தலைப்பின் மரியாதை நிஜமானதா அல்லது பகடியின்பாற்பட்டதா என்பது இக்கதையை வாசிக்கும் எழுத்தாளர்களின் சுயஅனுபவம் சார்ந்த ஊகத்துக்கு விடப்படுகிறது.

      ரயிலின் முகமான எஞ்சினைக்கூடப் பார்க்கமுடியாத கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டியில் கார்டாகப் பணிபுரியும் ஒருவன், தனிமையும் கழிவிரக்கமும் கொண்டவனாக துருவேறிய இரும்பாலான அந்தக் கடைசிப் பெட்டியின் ஒரு அங்கமாகவே மாறிவிடுகிறான். பச்சை போர்த்திய வயல்கள் ஜன்னல் வழியே தெரியும்போது மனம் விகசிப்பவன். ஆடுமேய்க்கும் பெண்ணிடம் அவன் கொடுக்க முடியாத அந்த ரொட்டித் துண்டு தனிமையாலும் இறுக்கத்தாலும் அவன் ஆழ்மனதில் இறுகிக் கிடக்கும் விண்டு தரமுடியாத அன்புதான் என நாம் அறிகிறோம். கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி என்பது இதுவரையான தமிழ்ச் சிறுகதைகளில் பயன்படுத்தப்பட்ட குறியீடுகளில் அலாதியான ஒரு குறியீடு என்பதை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
       தார்கோவெஸ்கியின்சேக்ரிஃபைஸ்படத்தின் நாயகன் போரின் அழிவிலிருந்து இந்த உலகைக் காப்பாற்றிவிட்டால் என் வீட்டை எரித்துவிடுகிறேன் என பிரதிக்ஞை கொள்வது போல ‘இரண்டாம் வெளிகதையில் அபத்தமான இந்த உலகியல் சூழலில் இருந்து தப்பிக்க ஏதாவது ஒரு அபத்தமான செயலைச் செய்ய வேண்டுமென முடிவெடுக்கிறார்கள் நாயகனும் அவனது நண்பர் ஒருவரும்.ஆனால் நாயகனின் இந்த முடிவுக்குப் பின்னால் இருப்பது  ஒரு சுயநலமே என்பதை நாம் அறிகிறோம். ஒரு பழம் நினைவை மீட்டெடுக்க முனையும் அவனது பயணம் வெறுமையை எதிர்கொள்வதில் முடிகிறது. இக்கதையில் பின்னோக்கிச் சொல்லப்படும் கதை ஈர்ப்பற்ற தன்மையாலும் முடிவின் செயற்கைத்தன்மையாலும் வசீகரம் குன்றிவிடுகிறது. வழக்கமாக ஈயடிக்கும் மியூசிக் அகாடமியில் செவ்வியல் இசைகேட்க கைகளில் பாப்கார்னும் ஐஸ்கிரீமுமாக முண்டியடிக்கும் கூட்டத்தைப் பாரத்துவிட்டு நண்பர்கள் மேற்சொன்ன அபத்த செயலுக்கான முடிவையெடுக்கும் இடம் ரசிப்புக்குரியது. 

        மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும்’கதையில் போல ஈடேறாக் காதல்களே தொகுப்பின் பிற காதல் கதைகளிலும் காணக்கிடைக்கின்றன. ‘மூன்றாவது அறை நண்பனின் காதல் கதையில் காதலில் நிராகரிக்கப்பட்டவன் தன் உயிரைவிட்ட பின்னரே தான் விரும்பிய பெண் காதலிக்கத் துவங்கியிருப்பதை அறிகிறான். ‘ரோஸ்லின் மனசில் காதல் இல்லாத தோட்டம் கதையிலும் சூசையை அதுவரை உதாசீனம் செய்துவந்த ரோஸ்லின் அவன் தற்கொலை செய்துகொண்டபின்பே அவன்மீதான காதலால் துக்கித்து அழுகிறாள். ‘மலை வீட்டின் பாதை, கதையில் பெண்களால் கதைநாயகனுக்குள் காதல் போன்ற ஒன்று உருவாகி அது ருசுப்படும் முன்பே தீர்மானமாக அழிக்கவும்படுகிறது. ஆகவே காதலின் பாலையிலேயே தன் கதை மாந்தர்களை திரிய வைக்கிறார் ஆசிரியர்.

   தாண்டவராயன்கதையிலும் இருள் ஒரு குறியீட்டுப் பின்புலமாக இருக்கிறது. தாண்டவராயன் தெருவில் மட்டும் சூரியன் உதிக்காத நிகழ்வு அத்தெருவாசிகளை பீதிக்குள்ளாக்குகிறது. இந்த இருளும் அறியாமையாகத்தான் இருக்கிறது. இக்கதையின் நிரந்தர இருள் என்ற அதீதம் தரும் புனைவு சாத்தியங்கள் சரியாக கைக்கொள்ளப்படவில்லையோ என்ற எண்ணம் ஏற்படும்படிக்கு கதை செயற்கையான ஒரு முடிவை நோக்கிச் செல்கிறது. இருளைப் போக்கும் மின்சாரத்தை விசையை இயக்கி அளிப்பவனான பண்டாரத்திடம் சட்டென்று அதிகாரம் வந்துவிடுகிறது. அவனைப் பயந்து மரியாதையுடன் அனைவரும் தள்ளி நிற்க ஒருவன் மட்டும் அருகில் செல்கிறான், அது பண்டாரத்தின் பொருத்தாமல் விட்ட சட்டைப் பித்தான்களைப் பொருத்திவிடத்தான் எனும்போது தேவைகளை முன்வைத்த மனிதரின் நைச்சியமான நடத்தை குறித்த காட்சி அங்கு கிடைக்கிறது.

      அஜயன்பாலாவின் கதைகளில் வரும் பெண்களைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். மூன்றாவது அறை நண்பனின் காதலியாக வரும் பெண் ‘என் முன் மண்டியிட்ட தூய ஆன்மாவை அதன் கம்பீரமிழந்த தன்மை காரணமாகவே மறுதலிக்க வேண்டியதாகிப்போனதுஎனும்போது தூய ஆன்மாவை விடவும் கம்பீரத்தை விரும்புகிற பெண்ணாக இருக்கிறாள்.  தனது அக்காவின் கணவனுடன் கனவில் சல்லாபிப்பது பற்றிய குற்றவுணர்வற்றவளாக இருக்கும் ரோஸலின் அதைக் கனவளவிலேயே நிறுத்திக் கொண்டவளாய் கனவில் அந்த இடத்தை நிரப்பக்கூடிய வேறொருவனைத் தேடவும் செய்கிறாள். இவ்வாறு இருவருமே தமது தெரிவுகள் பற்றிய தெளிவு கொண்ட நவீன யுகத்துப் பெண்களாக இருக்கிறார்கள்

       தேர்ந்த கதைசொல்லிக்குரிய லாவகமான மொழியும் காட்சிகளை நுட்பத்துடன் விவரிக்கும் பாங்கும் அஜயன்பாலாவை வசீகரமானதொரு கதை சொல்லியாக்கியிருக்கின்றன. புனைவு தரும் சவால்களை அவர் அதற்கான தளத்திலிருந்து எதிர்கொண்டு வெற்றிகண்டிருக்கிறார் என்பதற்கு இக் கதைத்தொகுதி சான்று. புனைவின் சுவாரஸ்யம் மட்டும் இலக்காக அன்றி மானுட வாழ்வைப் பேசும் பிரதிகளாகவும் தன் கதைகளை படைக்க முயன்றிருக்கிறார். கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் அகத்தோற்றத்தை, அவர்தம் உளச்சார்புகளை, சம்சயங்களை மொழியில் லாவகமாக வெளிப்படுத்துகிறார். பல கதைகள் குறியீடுகளாகவும் குறியீடுகளை தமக்குள் கொண்டனவாகவும் நிகழ்கின்றன. சில கதைகள் போகிற போக்கில் மாய யதார்த்தக் கூறுகளைத் தொட்டுச் செல்கின்றன.

     சம்பவங்களை புறவயமாகச் சித்தரித்து நின்றுவிடும் கதைகளிலும்கூட நுட்பமான அங்கதத்துடன் சமூக விமர்சனம் ஒளிந்திருப்பதைக் காண முடிகிறது. நுண்ணிய காட்சி விவரணைகள் கதைகளுக்கு வலுசேர்ப்பனவாக இருக்கின்றன. அதீதங்களைப் பேசும் கதைகளில் இத்தகு நுட்ப அவதானிப்புகள் அக்கதைக்குள்ளான நம்பகத்தன்மையை சாத்தியமாக்குகின்றன.

‘        ஜீன்ஸ் அணிந்த பறவைகள் கதையில் வெற்றிலை போட்டு மென்றபடியிருக்கும் ஒரு பாலியல் தொழிலாளியிடம் குடும்பத்துப் பெண் ஒருவர் தன் குறைகளைக் கூறி அழும் இடத்தினை, பாலியில் தொழிலாளியான மக்தலேனாவை கல்லடியிலிருந்து இயேசு காப்பாற்றும் சம்பவத்தின் மாற்று-எதிர் நிகழ்வாக ஒருவர் பார்க்க முடியும். தம் போக்கிலான இதுபோன்ற அற்புதங்கள் அஜயன்பாலாவின் ப் பத்துக் கதைகளுக்குள்ளும் ஆங்காங்கே காணக் கிடைக்கின்றன. மொத்தமாகக் இக்கதைகளை வாசிப்பது அஜயன்பாலாவின் புனைவுலகின் பிரத்யேக வாசனையும் ருசியும் நமக்குத் தரும் அனுபவமும் ஒரு மொழியில் விரியும் அதிபுனைவின் அற்புதத்துக்கு அருகில் நம்மை அழைத்துச் செல்லக்கூடியது.

      1. முத்துக்கள் பத்து’ என்ற தொகுப்பில் இந்தப் பத்துக்  கதைகளை வெளியிடும் அம்ருதா பதிப்பகத்துக்கும்  அஜயன் பாலாவுக்கும் வாழ்த்துக்கள்.

-அசதா. 

May 14, 2016

திரைக்கதைகளின் காட்பாதர்


                     
தமிழில்  மொழிபெயர்க்கப்பட்ட காட்பாதர் (பாகம் 1) திரைக்கதை நூலுக்கான முன்னுரை 
- அஜயன்பாலா



                                   

நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போலத்தான் நன்மையும் தீமையும்
தங்களுக்கு சாதகமாக இருப்பற்றை  நன்மை என்றும்  எதிரானவற்றை தீமை என்றும் அதிகார வர்க்கங்கள் காலம் காலமாக வகைப்படுத்தி வந்துள்ளன.. 
சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்பவர்கள் .. தங்களை வாழ்வித்துக்கொள்ள  தங்களது நியாயங்களை மீட்டெடுக்க அதிகார வர்க்கத்தினருக்கு எதிரான மாற்று சக்திகளை உருவாக்க முயல்கிறபோது  வன்முறையும் களவும் தவிர்க்கமுடியாத காரியாங்களாகிப்போகிறது.
பிற்பாடு அவர்கள் கொலைகாரர்களாகவும் கொள்ளைகாரர்களாகவும் திருடர்களாகவும் இயங்கி கடைசி வரை நிழல் உலக வாழ்க்கையை வாழ்ந்து மடிந்து போகின்ற்னர். இவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களும் இறுதிவரை நிம்மதியிழந்து வாழ்வின் ஜீவ சாரத்தை முழுமையாக அனுபவிக்க  முடியாமல்  காவல் நிலையம் சிறை நீதிமன்றம் எனற வட்டத்துக்குள் சிக்கி குற்றவுணர்ச்சியை பரிசாக பெற்று வாழ்வை முடித்துக்கொள்கின்றனர்.
உலகில் இவர்களுக்கான அறத்தை பேசி அதை தத்துவமாக்கியவர் நீட்ஷே கடவுள் இறந்துவிட்டார் எனும் அவருடைய கூற்று புகழ்மிக்கதாக இருந்தது. அதிகார வர்க்கம் எப்போதும் கடவுளையும் அதன் வழி புனிதத்தையும் மையமாக கொண்டே கட்டமைக்கப்படுவதால் நீட்ஷே கடவுளை சாகடிக்க வேண்டிய கட்டாயம் தேவையாகிப்போனது.
நீட்ஷே வுக்கு பிறகு ஜெனெ இலக்கியரீதியாக் இந்த கருத்தாக்கத்துக்கு மதிப்புகூட்டினாலும்  காட்பாதருக்கு பிறகுதான் கெட்டவர்களுக்கான அறம் சமூகத்தில் ஒரு மதிப்பீட்டை  பெற்றது. நாயகன் கெட்டவனாக இருக்கும் படங்கள் அங்கீகாரம் பெற்றன .
அமிதாப்பும் ரஜினியும் இவர்களது பிரதிநிதிகளாக உருவெடுத்தார்கள்.ஏழ்மைதான் இவர்களை இப்படி ஆக்குகிறது என்பதை மக்களும் இதன்பிறகுதான் புரிந்து கொள்ளத்துவங்கினர் .
காட்பாதர் செய்த மகத்தான சாதனை இது தான் . தத்துவார்த்த ரீதியாக சமூகத்தில் தீமையின் பிறப்பிடத்தை பற்றிய நியாயத்தை பேசி அதற்கு கலைக்கான அந்தஸ்தை உலகம் முழுக்க  உருவாக்கியதும் அடையாளப்படுத்தியது  இத்வே  காட்பாதர் திரைக்கதையின் கலாபூர்வ வெற்றிக்கு அடிப்படை .
மரியாபூசோ இதனை முதன் முதலில் நாவலாக எழுதியபோது சாதாரண த்ரில்லராகத்தான் இருந்தது. ஆனால் அது இலக்கியமானது பிரான்சிஸ் போர்ட் கொப்பல்லோ வின் திரைக்கதை மூலமாகத்தான்.
இன்றும் உலகின் மிகச்சிறந்த படங்களின் பட்டியலில் குரசேவா பெலினி கோதார்ட் பெர்க்மன் படங்களைபோல  கமர்ஷியல் படமான காட்பாதருக்கும் ஒரு இடம் கிடைத்துள்ளது என்றால் அதற்கான முழு முதல் காரணம் மேற் சொன்னவைகள்தான்
அத்தகைய திரைக்கதையை தமிழில் நாதன் பதிப்பகம் மூலமாக் கொண்டுவருவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வெகுநாளாக நான் முயற்சித்து நேரமின்மை காரணமாக முடியாது போன காரியத்தை நண்பர் ராஜ்மோகன் மிக குறைந்த அவகாசத்தில் திறமையாகவும் முழுமையாகவும் நிறை வேற்றியிருக்கிறார்.

இந்த நூலை வாசிப்பது மக்கத்தான் இலக்கியத்தை வாசிப்பது போன்றது. ஒரு திரைப்பட நூல் என்பதை தாண்டி இத்திரைக்கதை மனித வாழ்வின் சூட்சுமங்களை கண்டறிய உதவும் கையேடாகவும் நமக்கு வாய்ப்புள்ளது.
திரைக்கதையின் நேர்த்தி கலையம்சம் என சில வார்த்தைகளின்  முழுமையான் அர்த்தம் இந்நூலை வாசிக்கும்போது நமக்கு விளங்கும்
மேலும் சிலர் இப்படத்தை நூறுமுறை பார்த்திருக்கக்கூடும் .ஆனால் அப்போதும் புலப்படாத படத்தின் சில முக்கிய அம்சங்கள் இந்நூலை வாசிக்கும் போது புலப்படக்கூடும்
தமிழ் திரைப்பட சூழலுக்கும், திரைக்கதை பயில்பவர்களுக்கும் ,உலக சினிமா ரசிகர்களுக்கும் ,இலக்கியவாதிகளுக்கும் நாதன் பதிப்பகத்தின் மகத்தான் பரிசு இந்நூல்
ராஜ் மோகன் கடும் உழைப்பாளி, இலக்கிய ஆர்வமும் திரைப்படத்தின் மீதான் காதலும் கொண்டவர். எதற்குமே மறுப்பு சொல்லாமல் முடியும் முடித்துவிடலாம் என நம்பிக்கையுடன் பேசுபவர். அதுபோலவே முடிக்கவும் கூடியவர் .
அவரிடம் இவ்விஷயம் குறித்து நான் சொன்னதுமே உடனடியாக ஒப்புக்கொண்டு துரிதமாக காரியத்தை செம்மையாக நிறைவேற்றி தந்துள்ளார்
அவருக்கு இது முதல் நூல். அவருக்கு இந்நூல் பெருமை சேர்க்கும்
என் அன்பான வாழ்த்துக்கள் 

அஜயன் பாலா
எழுத்தாளர் & பதிப்பாசிரியர்
நாதன் பதிப்பகம்





May 4, 2016

முன்னுரை - பொன் ரவீந்திரனின் தனிமையை பருகும் கோப்பைகள்

முன்னுரை


முன்னுரை

பொன் ரவீந்திரனின் -
தனிமையை பருகும் கோப்பைகள்

இந்த கவிதைகள் ஆபத்பாந்தவனாக எனை அதுவே வந்தடைந்ததாக நான் கருதுகிறேன். எனது முந்தைய இலக்கிய செயல்பாடுகளை அறிந்தவர்கள் இதனை நன்கு உணர முடியும். இக்கவிதைகளை வாசிக்கும் சந்தர்ப்பத்தில்
காலத்தின் பக்கங்கள் 2002 நவம்பர் மாதத்தில் புரள்கிறபோது மையிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த என் நூதன புத்த்கவெளியீடு காட்சிகளும்   தொடர்ந்து அந்நிகழ்வில் பங்கேற்ற கவிஞர்களுடன்   பாரீஸ் பேருந்து நிலையத்தை ஒட்டிய மதுவிடுதியில் இதர எளிய பகல்நேர குடியர்கள் மத்தியில் நிகழ்த்தப்பட்ட  கவிஞர்களின் சந்திப்பும்  மனபிரிண்டரிலிருந்து சடசடவென புகைப்பட பிரதிகளாக  வெளியில்வந்து விழுகின்றன. அன்றைய நாளே கிடத்தட்ட கொண்டாட்டங்களுக்கான நாள். நானும் இதுவரை என் எத்தனையோ இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்திருக்கிறேன் எத்த்னையோ நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறேன்.ஆனாலும் அது போல களிப்பு நிறைந்ததொரு நாளை என் வாழ்வில் இதுவரை கண்டடைந்ததில்லை.அது எனக்கு மட்டுமல்ல நிகழ்வில் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் அப்படியாகத்தான் இருந்தது. பிற்பாடு இந்நிகழ்வு குறித்து பெரும் சர்ச்சைகள் மூண்டபோது அந்நிகழ்வில் கலந்து கொண்ட யூமா வாசூகி அது குறித்து ஒரு சிற்றிதழில் நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியிருந்த போது அவ்விலக்கிய நிகழ்வின் உள்லார்ந்த ஆன்மீக செயல்பாட்டை அழகாக அடிக்கொடிட்டிருந்தார்.

உண்மையில் இன்று நினைத்துபார்க்கிறபோது ஆச்சர்யமாவும் வியப்பகவும் இருக்கிறது அந்நிகழ்வு. அன்று அந்நிகழ்வில் பங்கேற்ற பலகவிஞர்கள்.சிமோகன்.,யூமாவாசூகி, சங்கரர்ராம சுப்ரமணியம், யவனிகா ஸ்ரீராம் என தமிழில் இன்று முன்னணிகவிஞர்கள் அனைவருமே அன்று அந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இப்போது நினைக்கிறபோது மன இறுக்கங்களுக்கு மாற்றாக காலம் மதுவை முன்னிறுத்த வேண்டி அல்லது அதற்கு சமூக மதிப்பீட்டை உருவாக்க வேண்டி அன்று எங்களை பகடையாக பயன்படுத்திக்கொண்டதோ என்றும் எண்னத்தோன்றுகிறது. ஏனென்றால் இரண்டுவிஷ்யங்கள் இது தொடர்பாக எனக்கு முக்கியமானதாக படுகிறது. அந்நிகழ்வு பிற்பாடு பவணிகபத்திரிக்கைகளில் திரிக்கப்பட்ட செய்தியாகி பின் தொடர் மதுவிடுதி இலக்கிய கூட்டங்களுக்கு அடிகோலியதும்
 தொடர்ந்து ஐடி யுக எழுச்சி காரணமாக நகரத்தின் மாறுதல்காரணமாக டாஸ்மாக்குகள் நிரம்பி வழிந்து பின் மது குறித்தான்ன மதிபீடுகள் சமூகத்தில் மாறத்துஅவங்கியதும் இதில் கூர்ந்து கவனிக தக்க அம்சமாக கருதுகிறேன் . காரணம் அன்று எங்களின் குடி நிகழ்வை கடுமையாக எதிர்த்த பல ஒழுக்க எழுத்தாளர்கள் பிற்பாடு குடி கலாச்சரத்தையும்  அதுகுறித்து எழுதுவதையும் தங்களின் பெருமைகளில் ஒன்றாக கருதத்துவங்கினர். நாஞ்சில் நாடன் போன்ற கலாச்சாரம் சார்ந்து அதன் மாண்பை எழுதக்கூடிய எழுத்தாளர்களே  டாஸ்மார்க் பார் கலின் செயல்பாட்டை பற்றி பெரும்பத்திரிக்கையில் எழுத வேண்டிய காலத்தின் நிர்பந்தங்கள் ஏற்பட்டன. இப்படியான செயல்பாடுகளை வைத்து பார்க்கிற போது அன்றைய எங்களின் அந்த புத்தக வெளியீட்டு நிகழ்வை பெரு மழைக்கு முன்பாக பறவைகள் இடம் பெயர்வதையும்  பஞ்சத்துக்கு முன்பாக வீதிகளில் எலிகளின் நடமாட்டத்தையும் போலவே கருதுகிறேன்.


காலச்சாரத்தில் கவிஞனின் செயல்பாடுகள் பல இடங்களில் அப்படியாகத்தான் நிகழ்ந்து வருகிறது.பெரும்பாலும் மொழியின் மூலமாக அவன் எழுதும் கவிதைகளின் வாயிலாக சில சொற்களை மாற்றி போட்டு அவன்  நிகழ்த்தும் மாயங்கள் பிற்காலங்களில் சமூகத்தின் பெரும் மாறுதல்களுக்கான அடிப்படை காரணிகளாக மாறிவிடுகின்றன.அவன் அக்கலத்தில் சொற்களின் மூலமாக உண்டாக்கும் கலகம் பலருக்கு அதிர்ச்சிகளையும் ஏற்கவியலாததன்மைகளையுமே  தோற்றுவிக்கும்.முள்ளை முள்ளால் எடுப்பது போல மனித மனதுள் சொற்களால் கட்டமைக்கப்பட்ட உலகை மாற்றியமைக்க அல்லது புணருத்தாரணம் செய்ய அல்லது  தலைகீழாக புரட்டி போட  சொற்களாலாயே செய்ய வேண்டியிருக்கிறது.

இத்தகைய சூழலில்தான் பொன் ரவீந்திரனின் தனிமையை பருகும் கோப்பைகள் எனும் இந்த கவிதை தொகுதியை நான் கவனத்தில் எடுக்கிறேன்.இதில் உள்ள கவிதைகளில் பூடகம் இல்லை.பெரும் கவித்துவ ஆளுமையோ மொழி பிரவாகமோ இல்லை.ஆனால் எளிமை இருக்கிறது.மட்டுமல்லாமல் இச்சமூகம் வெறுத்து ஒதுக்கும் அல்லது ஏற்க தயங்கும் ஒரு இருள் உலகம் இருக்கிறது. இப்படியான இருள் உலகங்கள் கவிதைகளாக உருப்பெறுவதன் மூலம் உண்டாகும் அரசியல் மாற்றங்கள் மறைமுகமானவை. முதல் பார்வைக்கு இவை வெறுமனே குடியை பற்றி அந்த உலகை பற்றி பேசுபவையாக இருந்தாலும்  இவை சமூகத்தின் நிராகரிக்கப்பட்ட விஷ்யங்களை பொதுத்தளத்துக்கு கொண்டு வந்து அவற்றிற்கு ஒரு பொது மதிப்பீட்டை உருவாக்கிதருகின்றன. மேலும் இந்த நவீன உலகம் நம்மை சுற்றி உருவாக்கிவரும் அபாயத்திற்கு நகர்சார்ந்த அறமதிப்பிடுகளும் நடுத்தர குடும்பங்களும் முழுதாக இசைந்து கொடுத்து  அழிவுக்கு கட்டியம் கூறுகிறபோது அந்த மதிப்பீடுகளை களைத்து போட்டு எதிர் ஆட்டம் ஆடுவதற்கு இது போன்ற கலக கவிதைகள் அவசியம் தேவைப்படுகின்றன.

-          அஜயன்பாலா

April 25, 2016

ஜீன்ஸ் அணிந்த பறவைகள் - சிறுகதை

நினைவில் தொலைந்த ஞாபகமொன்று பறவையாகி வானத்தினூடே சிறகசைக்காமல் தாழ்ந்து வந்து தெருக்கோடி மரத்திலமர்ந்து மெல்ல தரையிறங்கி தத்தித் தத்திச் சட்டென ஒரு பெண்ணாக மாறி ஜீன்ஸ் பேண்ட் ஷர்ட் சகிதம், தன்னை நோக்கி நடந்துவருவதாக அவளை அந்தக் கூட்டத்தினூடே நடைபாதையில் கண்டமாத்திரம் அறிந்துணர்ந்தான்.

ஞாபகங்களை சிறகிடுக்களில் ஒளித்து வைத்தவாறு வெளியினூடாக காலங்களை கடந்துவரும் தன்மை பறவைகளுக்கு மட்டுமே உண்டு என் எண்ணம் கொண்டிருப்பவன்.

பிரபஞ்சத்தின் தொலைந்துபோன அனைத்து ஞாபங்களும் ஒரு பறவையின் அசைவற்றுக் கிடக்கும் அதன் கருவிழியில் உறைந்து கிடப்பதாகவும் தேவை கிளைக்கிறபோது தனக்கிஷ்டப்பட்ட காலங்களில் இஷ்டப்பட்ட ரூபம் தரித்து மனிதர்களை சஞ்சலமுறச் செய்கின்றன. என்பதாகவும் தனக்குத்தானே கற்பனை செய்து கொள்வான். இல்லாவிடடால் ஒரு அதிசயம் போல திடுமென அவளை அங்கே காணநேர்ந்த நிகழ்வு சாத்தியமற்றதென்பதே அவன் தீர்மானம்.

ஒருவேளை தான் கனவில் கண்டபடி (இரவுகளில்) தன் பூர்த்தியடையாத கவிதைகளை பொறுக்கி எடுத்துச் செல்லும் பெண் இவளாக இருப்பாளோ; தன்னை தேடியும் விதமாகத்தான் இங்கே வந்து பின் தன்னை இவன்தான் என அடையாளம் காண முடியாமல் தத்தளிக்கிறாளோ! சட்டென தன்னுள் ஒரு பதட்டம் கூட சற்றுமுன் கடந்து சென்ற அவளின் திசைநோக்கி திரும்பினான்.

கூட்டத்தினூடே அவளைப் பின்தொடர்ந்து சென்று அவளைக் கூக்குரலிட்டு அழைத்து பேச முடிவுசெய்து வேகமாக பின் சென்றவன் வழக்கமாக தன்னை பார்க்கும் அந்த போலீசார் இருவரையும் எதிர்கண்டதும் தன் முடிவை மாற்றிக்கொண்டபடி மீண்டும் தன் பழைய இடத்தில் வந்து நின்று கிரில் கம்பிகளில் சாய்ந்து கொண்டான்.

அது ஒரு கடற்கரைச் சாலையின் நடைபாதை தினமும் சாயங்காலங்களில் கவிதை எழுதும் நிமித்தமாக அவன் அங்கே வருவது வழக்கம்.

மரபும் நுட்பமும் மிகைந்த பிரம்மாண்டமான பிரிட்டிஷ் கட்டிடங்களைக் கொண்ட அந்த கடற்கரைச் சாலையின் கட்டிடங்களுக்குக் கீழே நடைபாதையின் பாதுகாப்பு கிரில் கம்பிகளில் சாய்ந்தபடி, மாலைநேர கடற்கரை வாசிகளைக் காணவும் பர்முடாஸ் செய்து கொள்ளவும், குழந்தைகளை சந்தோஷப்படுத்தும் பலூன் வியாபாரிகளின் முகச் சுருக்கங்களையும், உடன் அவர்களது இடுங்கிய கண்களுக்கப்பால் தெரியும் போர்வை போர்த்தியபடி மறையும் கடவுளரின் நிழலுருவம் குறித்தும் தானறிந்த ஒரே காரியமான கவிதையின் மூலமாக ஆய்வு செய்யும் பொருட்டாக மாலை நேரங்களில் தினமும் அவன் இங்கே வருவது வழக்கம்.

நடைபாதை வியாபாரிகளின் கூச்சல்களுக்கும் கடலலைகளின் பேரிரைச்சல்களுக்குமிடையே அவன் அங்கே கவிதை எழுத முயற்சி செய்வதுண்டு. இதுவரை அவன் எழுதியதனைத்தும் பூர்த்தியடையாத கவிதைகள். அவன் அங்கே கசக்கி எறியும் அந்தக் கவிதைத் துண்டுகளை யாரோ எடுத்துச் செல்வதாக நினைத்துக் கொள்வான். அந்தப் பெண் சிண்ட்ரல்லாபோல் தன் கொடுமைக்கார சித்திக்கு பயந்து ட்ரங்கு பெட்டியில் இவனது கசங்கிய அந்தக் கவிதைத் துண்டுகளை ஒளித்து வைத்திருப்பதாக ஒரு நாள் கனவில் கண்டான்.

அப்படிப்பட்ட பெண்ணை தான் எப்போதேனும் நேரில் சந்திக்க வாய்ப்பு நேருமானன் தான் மிக மோசமானவனாக தன்னை அவளுக்கு அடையாளம் காட்டிக் கொள்ள நேரிடும் என் தன்னைக் குறித்து மிக நன்கு அறிந்தவனாக தனக்குள்ளே பெருமிதமும் பூரிப்பும் பொங்க சித்துக் கொண்டான்.

இப்படியாக அவன் ஒரு மாலை வேளையில் ஆவிடத்தே வழக்கம் போல் நின்று கொண்டிருந்ததுபோது ஒரு முறை இரண்டு போலீசார் அவனருகே வந்தனர். அங்கிருக்கும் சில வியாபாரிகளின் வேலையாகத் தானிருக்கும் என்பதை ஊகித்தறிந்து கொண்டான்.

ஒரு வியாபாரியாக அல்லாமல் தினசரி அவன் இந்த இடத்தில் நடைபாதையை ஆக்கிரமித்துக் கொள்வதில் ஒரு சிலருக்கு இவன் மேல் கோபமிருந்தது. சிறிய டப்பிகளில் ஆண்மைக்குறைவு லேகியம் விற்கும் வயதான கிழவரொருவர் எப்போதும் மாலைவேளைகளில் காலதாமதமாக வந்து, இவன் இங்கே நிற்பதால் முகம் சுணக்கமுற்று சக வியாபாரிகளிடம் குறைபட்டுக் கொள்வதுண்டு.

இவனது தோரணைகளை விபரீதமாக கண்டதாலோ அல்லது மிகையான பாவனைகளின் காரணமாகவோ யாரும் இவனிடம் பேச நெருங்கியதில்லை. தங்களிடமிருந்த இவன் மீதான வன்மத்தைத் தீர்க்க நெடுநாளாக காத்திருந்த வியாபாரிகளிதான் கடைசியாக போலிசாரை அணுகியிருக்கின்றனர் என்பதையும் புரிந்து கொண்டான்.

நல்லவேளையாக சிறுவயதிலிருந்தே இவன் பள்ளிக்கூடக் காலங்களில் சைக்கிளில் எதிர்ப்படும் போலீசாருக்கு முகமன் கூறுவதை வழ்க்கமாக்கிக் கொண்டிருந்தான். அந்த பழக்கத்தின் காரணமாக இந்தப் போலீசார் இருவரையும் தேனீர் கடையில் முன்னெப்போதோ பார்த்தபோது முகமன் கூறியிருந்தான். அது இப்போது வசதியாக இருந்தது. இவனைக் கண்டதுமே அவர்களது முகத்தில் தெரிந்த ஒருவித ஏமாற்றத்தை வைத்தி இவன் இதனை ஊகித்தறிந்து கொண்டான்.

தினசரி இங்கே நீ என்ன செய்கிறாய்? எதற்காக வருகிறாய்?
கவிதை எழுதுகிறேன் அல்லது எழுதுவதற்காக முயற்சி செய்கிறேன்.


இந்த பதிலைக் கேட்டதுமே தங்களது தொப்பிகளில் காற்றில் பறந்து செல்வதை போல அவர்கள் திடுக்கிட்டனர். ஒரு கவிதை எழுதுபவன் முன் தாங்கள் எப்படியான தோரணையை மேற்கொள்வதெனத் தெரியாமல் ஒரு நிமிடம் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பின் மீண்டும் தங்களை போலீசாக்கிக் கொண்ட அவர்கள் அவன் கையில் வைத்திருந்த கவிதைத் தாள்களைப் பிடுங்கி அதனை திருப்பித் திருப்பி பார்த்தவாறே ஜேப்பியில் நுழைத்துக்கொண்டு, இனி இங்க வந்து கவிதை எழுதாதே இது வியாபாரிகளுக்கு மிகவும் தொந்தரவளிக்கிறது என எச்சரித்தனர். தெரிந்த முகமாக இருப்பதால் உன்னை எச்சரிப்பதோடு நிற்கிறோம் என்று கூறிய போலிசாரிடம் இவன். கவிதை எழுதாமல் வெறுமனே நான் வந்துபோக அனுமதியுண்டா எனக் கேட்க, அதற்கு ஒருவரும் தடைசொல்ல முடியாது. ஆனால் கவிதையை நீ எங்கு சென்று எழுதினாலும் நாங்கள் அங்கு வருவோம் என்று கையில் கொண்டு வந்திருந்த இரும்பு விலங்கைக் காட்டி எச்சரித்து கவிதைகள் வியாபாரிகளையும் அரசு உத்தியோகஸ்தர்களையும் மிகவும் தொந்தரவு செய்கின்றன எனக் கூறி அங்கிருந்து நகர்ந்தனர். மெய்மையற்றுப் போன அவர்களது இருப்புதான் இதற்கு காரணம், சுதந்திரமான மனவெளியில் சங்குபோல கவிதை தானே முகிழ்வதையாராலும் தடுத்து நிறுத்த முடியாது என் அவர்களிடம் சொல்ல நினைத்து பின் தனக்குத்தானே அவன் தலையசைத்துக் கொண்டான். அதன் பிறகும் மாலைநேரங்களில் தொடர்ந்து வரும் இவன் போலீசாரை ஏமாற்றும் விதமாக எவருக்கும் தெரியாமல் தன் மனதுள் கவிதைகளை இயற்றி இருவரும் பாராத சமயங்களில் அதனை ஒரு பேப்பரில் கிறுக்கி கீழே எறிந்துவிடுவன். அவன் கீழே எறியும் அவனது பூர்த்தியடையாத கவிதைத் துண்டுகளை ஒரு போதும் அவன் மறுநாள் பார்த்ததில்லை.   

இப்படியாக அவன் கவிதைகளை அன்றும் ரகசியமாக மனதுள் தைத்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் திடுமென அவளின் முகத்தைக் கண்டு பேரதிசயம் கண்ணுற்றவனாக தடுமாறிப் போனான்.

இரவில் சரியும் எரிநட்சத்திரத்தின் வேகத்தோடும் வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் இளம்பெண் வீதிக்கு வரும்போது காணப்படும் பதட்டத்தோடும் அவசரமாக அவள் வந்து கொண்டிருந்தாள். சட்டென அவனால் அவள் குறித்த ஞாபங்களை தன்னுள் மீட்டெடுக்க முடியவில்லை. பதட்டதில் அவளது பெயர்கூட தொலைந்து போனதை எண்ணி வேதனை மிகுந்தாலும் தன்னைக் கண்டதும் உயிர்ப்புறும் அவளது கருவிழியில் ஒளிமிகுந்து தன்னை அவளோடு பழகிய காலவெளிகளுக்கு மீண்டுமொருமுறை அழைத்துச் செல்லும் என்றும் தானும் அவளிடம் மறந்து போய் விட்டதை வெளிக்காட்டாமல் பாவனைகள் செய்து அந்தச்சுவடுகளை மீட்டுகொள்லாமல் என்றும் தன் அதிமேதாவித் தனமான கர்வத்தோடு காத்திருந்தவனுக்கு அவள் கண்டும் காணாதவளைப் போல் நகர்ந்து சென்றது பெரும் அதிர்ச்சியைத் தந்தது. உதாசீனம் கொடியது, விஷத்தைக் காட்டிலும் பன்மடங்கு வேலை செய்யக்கூடியது, நிலநடுக்கத்தைப் போல பேரழிவுகளை உள்ளடக்கியது என்பதை அவன் அந்த நொடிப்பொழுதில் உணர்ந்து கொண்டான். யார் அவள், எதற்காக இங்கு அவள் வரவேண்டும் எதன் பொருட்டு அவள் தன்னை உதாசீனப்படுத்த வேண்டும் அவளைக் கண்டதும் சரம் சரமாக தன் உயிரில் எதனால் தீப்பற்றி எரிய வேண்டும் என பலவிதமாக தன்னுள் கேள்விகளை எழுப்பிக் கொண்டவன் தன்னுள்ளிருந்த அவளது பெயரைக்கூட அகழ்ந்தெடுக்கயியலாத தன் நிலைக்காக மிகவும் விசனம் கொண்டான்.


நான்கு பரிச்சயமான அவளது கருவிழிகளும் விசித்திரமான அவளது கூந்தலின் நறுமனம் சட்டென தன்னுள் வெகுநாட்களாக பழகியிருந்த அவளது உணர்வின் மிச்சமாக தங்களை அடையாளம் கண்டுகொண்டதுதான் அவனுக்கு மிகுந்த ஆச்சரியமாக இன்னமும் அதிர்வலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது. ஒளிரும் அவளது விழிகளுக்கப்பால் ஈசல் ஓராயிரம் படபடக்கும் ஈரமான ரகசியஸ்தலங்களில் தனது இருப்பை கண்டுகொண்டவன் அந்த நினைவு அணுக்களின் மூலக்கூறுகளில் ஏதோ ஒரு புள்ளி இப்போது முழுவதுமாக தன் வசத்தில் சுண்டி இழுப்பதை உணர்ந்தான். அதன் வெளிப்பாடுதான் அவனுள் ஏற்படும் இதனை பதட்டமும் படபடப்பும்.

ஆடைகளைப் படபடக்கச் செய்யும் கடற்கரையின் மாலைக்காற்றும், கார் ஜன்னல்கள் வழியே வேகமாய் உதறிச் செல்லும் சிந்தஸைஸரின் மிச்சங்களும், சற்று முன்னரே பூத்துவிட்ட கடற்கரை சாலையின் வரிசையான மஞ்சள் விளக்குகளும், சிறுவர்களின் காரணமற்ற கூக்குரக்களுக்கு பின்புலமாய் செயல்பட்டுக் கொண்டிருந்தன.

இவை எதுவுமே நிகழாதவாறு இவன் மட்டும் இன்னமும் அங்கேயே நின்று கொண்டிருந்தான். வெகுநேரமாகுயும் அவள் வராத காரணத்தால் மீண்டும் பறவையாகி பறந்து சென்றிருப்பாளோ என எண்ணிக்கொண்டான். வேவு பார்த்துக்கொண்டிருந்த போலீசார் இருவரும் தேனீர் அருந்தச் சென்றிருந்ததால் இவன் மெல்ல அவள் சென்ற திசை நோக்கி வீதியின் முடிவு வரை நடந்து சென்றன். அவன் எதிர்பார்த்தது போல அங்கே சில பறவைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தன். என்ன ஆச்சரியம் இவன் அவற்றினூடாக நடந்து சென்றபோது ஒரு பறவையும் அசையவில்லை. நினைவில் மறைந்த பிறகு எல்லா பெண்களும் பறவைகளாகத்தான் மாறிவிடுகின்றனர். திடீரென தியேட்டர் வாசலில் முற்றிலும் அந்நியமானதொரு நபருடன் எதிர்ப்படுகின்றனர். அல்லது தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகத் தோன்றி உலக நியதிகள் குறித்து விசனம் கொள்கின்றனர்.

இவன் அந்த பறவைகளின் அருகே நின்று ஒரு நிமிடம் எல்லா பறவைகளையும் கூர்ந்து கவனித்தான். இவற்றில் ஏதோ ஒன்றாகத்தான் அவளிருக்க வேண்டும். அவள் பெயர் ஞாபகத்திலிருந்தால் இங்கே அழைத்து பறவைகளினூடே அடையாளம் கண்டு பிடிக்கலம்.

சோர்வுற்றவனாக அவன் மீண்டும் தன் பழைய இடம் நோக்கி திரும்ப எத்தனித்தபோது சூழல் இருட்டிலிருந்தது. சற்று மறைவாக காணப்பட்ட இடமொன்றில் வேசிகளும் பிச்சைகாரர்களும் ஒன்றாகக் கூடி எதையோ தீவிரமாக கலந்தாலோசித்துக் கொண்டிருந்தனர். (யாரோ ஒரு உயர்ந்த நபரிடம் தங்களுக்கான கட்டளைகளைச் செவி மடுத்துக்கொண்டிருந்த அந்தக் கூட்டத்தில் திருடர்களும் ஒருவரும் அறியாதவாறு தங்களை முக்காடிட்டு மறைத்தபடி உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்தனர்) சற்று விலகி நின்று கொண்டிருந்த ஒரு தடிமனான வேசியிடம் ஒரு குடும்பத்துப் பெண்மணி தன் குறைகளைக் கூறி அழுது கொண்டிருந்தாள். வாயில் வெற்றிலை மென்றுகொண்டிருந்த வேசி அவ்வழியாக சென்ற இவனை அழைத்து பால்யத்தில் நீ தவறவிட்ட காதலன் இவனா பார்த்து சொல் என அந்த குடும்பப் பெண்மணியிடம் கேட்க, அவள் கலங்கிய விழிகளுடன் இவனைப் பார்த்து பின் மறுதலித்தவளாக மீண்டும் வேசி முன் தலைகுனிந்தாள். வழியில் ஒருவன் இவனிடம் அந்த இடத்தின் பெயரை கேட்க அப்போது தான் அவனுக்கு தனக்கே அந்த இடத்தின் பெயர் மறந்துபோனது தெரியவந்தது. ஒரு கதைக்காக தான் அடையாளங்களற்று படைக்கப்படிருப்பது ஒரு மின்னலைப் போல அவனுக்குள் பளிச்சிட்டு மறைந்தது. அதில் தீவிர கவனம் குவிப்பது பவம் என்பது போல அதிலிருந்து விடுபட்டவனாக வெறுமனே அந்த இடத்தின் பெயரைக் குறித்து யோசித்தான் எதுவுமில்லாமல் தனியாக வரும் ஒருவரிடம் பேசுவதன் மூலம் இந்த இடம்குறித்த தனது ஞாபகங்களை மீட்டுக்கொள்ளலாம். என்று நம்பியவன் அந்தத் தனியாளுக்காகக் காத்திருந்தான். நடைபாதையில் கண்ணாடிகளை சுவர்களாகக் கொண்ட ஒரு கேக் கடைமுன் தனது பிம்பங்களோடு கேக்குகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் இவன் எதிர்பார்த்த தன்மையுடன் காணப்படவே அவனிடம் சென்று நட்புறவு கொண்டவனாக இந்த இடம்குறித்து ஞாபகங்களைச் சேகரிக்க முயல, அவனோ தனக்கே வாங்கி தருமாறு கேட்டுக்கொண்டான். இரண்டு நாட்களாக பசியோடிருப்பதாகவும் வீடு திரும்ப முடியாத தன் சோகத்தையும் சொன்ன அவன் கேக்குகள் உள்ளே போனதும் இவனுக்குத் தேவையான ஞாபங்களனைத்தும் தானாக வெளிப்படும் என உறுதியளித்தான். ஆனால் அதற்கு அவசியமற்றுப் போனது இருவரும் கேக்குகளை பிய்த்து உண்டவாறு கடையிலிருந்து வெளிப்பட்ட போது அவன் எதிர்பார்த்தது போல அவள் திரும்பி வருவதை இவன் பார்த்துவிட்டான்.

நொடிப்பொழுதும் தாமதிக்காமல் சட்டென அவள் முன் ஓடிச்சென்று இவன் குறுக்காக நிற்க, அவளோ எதிர்பாராத இந்த நிகழ்வினால் அதிச்சியுற்றவளாக திகைத்து நின்றாள். இவன் சாய்ந்து கொண்டிருந்த அதே காரில் கம்பிகளில் இப்போது அந்த சிறுவன் சாய்ந்து கொண்டிருக்க இவன் அவனிடம் சற்றுமுன் அவள் தன்னை கடந்து சென்றபோது தன்னுள் நிகழ்ந்த பதட்டங்களையும் தொடர்ந்த நிகழ்வுகளைக் கூறி அவளிடம் மிச்சமிருக்கும் தனது ஞாபகங்களைத் தந்து தன் மனப்பிரயாசையைத் தீர்த்து வைக்குமாறு கேட்டு நின்றன்.

ஒரு நிமிடம் நிதானமாக அவனது விழிகளை உற்று நோக்கிய அவள் பின் தலைகுனிந்தவாறு இவன் கூறியதைப்போல இரவுகளில் வந்து இவனது கவிதைகளை பொறுக்கிச் செல்பவள் தான்தான் என்றும், பூர்வஜென்மத்தில் தொலைத்த தன் காதலன் தனக்கு அனுப்பும் ரகசிய செய்திகளாக அவற்றைச் சேகரித்து வருவதாகவும் கூறிய அவள் தனது ஜீன்ஸ் பேண்டிலிருந்து இரண்டொரு கவிதைத் துண்டுகளை வெளியில் எடுத்தாள். கடைசியில், இது தான் எதிர்பார்த்தது தான் என்றெண்ணியவன் உற்சாகமிகுதியால் கூக்குரலிட்டான். சிண்ட்ரல்லா போல நீ ஒரு ஏழைச்சிறுமி என்றல்லவா கற்பனை செய்திருந்தேன் என அவளிடம் அவன் உரக்கக் கூறிய போது அவனது குரலின் கர்வம் சர்ப்பத்தின் வாலைப் போலச் சுழன்றது. 
அவள் அதுகுறித்து சற்றும் கவலைப்படாதவளாக கவிஞர்களின் இயல்பு குறித்து முன்பே அறிந்தவளாய் இந்தக் கவிதைகள் எழுதுகிரவனை தான் முகவும் நேசிப்பதாகவும் ஆனால் அது இவன்தான் என்பதற்கு ஆதாரமாக தன்முன் ஒரே ஒரு கவிதை எழிதினால் போதும் என்று கூர, உடனே இவன் சற்று தூரத்தில் கேக்கை சாப்பிட்டபடி நின்ற சிறுவனிடம் நன்றி தெரிவிக்கும் விதமாக கையசைத்தபடி, தான் எப்போதும் தயாராக வைத்திருக்கும் காகிதத் துண்டுகளை எடுத்து கவிதை எழுதத் துவங்க, சற்று தூரத்தில் இதற்கெனவே நின்றிருந்தாற்போல் அந்த இரண்டு போலீசாரும் இவனை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இவன் அவர்களையும் அவர்களது கையில் கனமாக தொங்கும் இரும்புக் கைவிலங்களையும் பார்த்து அதைப்பற்றி சிறிதும் சட்டை செய்யாதவனாக தன் கவிதைக்கான கடைசி வரியை எதிரே நிற்கும் இவளது விழிகளில் வாசித்தபடி நின்று கொண்டிருந்தான். பின் அவளுக்காக வெகுநேரம் காத்திருந்த பறவைகளை அங்கிருந்த வியாபாரிகளின் விரட்டிக் கொண்டிருந்தனர்.

நன்றி  குமுதம் தீராநதி 

 

April 21, 2016

விமர்சனம் -கவிப்பித்தனின் ஊர்ப்பிடாரி சிறுகதை தொகுப்புகவிப்பித்தன்

 ஊர்ப்பிடாரி சிறுகதை தொகுப்பு  - 




எழுத்து வாழ்வை சமூகத்தை பிரதிபலிக்கும் அரியதொரு ஊட்கம் .
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் . காலங்கள்  மேகங்களை போல கடந்து கொண்டிருக்கின்றன. எல்லா காலத்துக்கும் சாட்சியாக பூமியை போல நிலைத்திருப்பது  நல்ல எழுத்துக்கள் மட்டுமே . காலம் சில எழுத்துக்களை கல்வெட்டுக்களாக மாற்றிவிடுகிறது. அவையே இலக்கியமாகவும் நிலைபெற்று காலம் காலமாக மனிதர்களுக்கு அம்மொழி சார்ந்த வரலாற்றை கலாச்சாரத்தை பண்பாட்டை கைமாற்றி தரும் காரியத்தை செய்கின்றன. அதே போல மொழியால செய்யப்படும்.  எல்லா படைப்புகளும் இலக்கியமாகிவிடுவதில்லை . வெண்பாக்களானாலும் .. விருத்தங்களானாலும் ஆசிரியப்பாக்களானாலும் காவியமானலும் காப்பியங்களானாலும்  அது தான் எடுத்துக்கொண்ட வடிவத்தின் முழுமை கொள்ளும்  விததால் மட்டுமே இலக்கியம் எனும் உயர்ந்த அந்தஸ்தை அடைகின்றன. பின் அவை பாடுபொருள் நிமித்தமும்  காலத்தை கையகபடுத்திய வித்த்தாலும் கற்பனை செறிவாலும் தரவேறுபாட்டை கொள்கின்றன. இதைத்தான்  தொல்காப்பியமும் நன்னூல் களும் நமக்கு பயிற்றுவித்து வந்துள்ளன்
இந்த சூத்திரங்கள் மரபிலக்கியத்தோடு முடிந்துவிட்டன.. ஆனால் மேற்கு வரவான புதுக்கவிதை சிறுகதை நாவல் போன்ற புதிய வடிவங்களுக்கு என்ன இலக்கணம் என்று யாரும் வரையறுக்கவில்லை . காலத்தின் சிறந்த சிறுகதைகளும் கவிதைகளும் நாவல்களும் அதற்கான வடிவம்குறித்து நமக்குள் திட்டமான ஒரு பிரக்ஞயை உருவாக்கி தந்திருக்கின்றன.
ஒரு வாசகனாக சிறுகதை மூலம் நான் பெறுவது ஒரு அக தரிசனம் . படைபெனும் சிறுதுளை வழியாக நான் அனுபவத்தின் சாரத்தை உள்வாங்குகிற போது பெரும்  விசாலத்தை அகம் எதிர்கொள்கிறது. புதுமைப்பித்த்னின் கதைகளை வாசிக்கிற போது என் கால்கள் சட்டென உயரமாகி ஆகாயத்திலிருந்து மக்களை அவர்களது காரணமற்ற அபத்த்மான வாழ்வை அவதானிக்க முடிகிறது . கு.பா. ராவிடம் கண்ணுக்கு புலப்படாத பெண்களின் அக உலகத்தை ஜூம் இன் செய்து பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. மவுனியை படிக்கும்போது  உடலுக்கும் வெளிக்குமான சமன்பாட்டை உணரமுடிகிறது இவைகளின் மூலமாக நான் வாழ்வின் பன்முகத்தை புரிந்து இயற்கை என்மீது வித்திருக்கும் விலங்குத்ன்மையை உடைத்து முழுமை பெற்றவனாக மாறுகிறேன்
இலக்கியத்தின் வேறெந்த வடிவத்தைகாட்டிலும் சிறுகதை படைப்பாளிக்கு சவாலான வடிவமாகத்தானிருக்கிறது . நாவல் மற்றும் கவிதைகளில் ஒரு படைப்பாளி  தவிர்க்கவே முடியாமல் வாழ்வனுபங்களை இறக்கிவைக்க அல்லது புலம்ப நேரிடுகிறபோது ....தான் அல்லாத த்ன்மையை நோக்கி செல்லவைப்ப்பது சிறுகதைகளுக்கு மட்டுமே சாத்தியப்படுகிறது . அதே சமயத்தில் அது கவர்ச்சி மிகுந்த வடிவமாகவும் எனக்கு படுகிறது . ஒரு வாளை ப்போல கச்சிதமான அத்ன் வடிவம் என்னை சதா ஈர்த்துக்கொண்டேயிருக்கிறது . என்னை போல எல்லா சிறுகதை எழுத்தாளர்களுக்கும் இருக்குமா என த்தெரியாது ஆனால் தன் அடவுகளை நேசித்த்படி ஆடிக்கொண்டிருக்கும் ஒரு கத்க் கலைஞனைப்போல நான் கதைகள் எழுதும்போது அத்ன் வடிவத்தின் மீது காதல் கொள்ளதுவங்குக்கிறேன் . இந்த காதல் வெளிப்படையானது அல்ல .. கடைசிவரை உணர்த்தாமலே போக்க்கூடிய வெளிக்க்டாத காதல் ஒரு ஆசிரியருக்கு மாணவி மேல் காதல் வரும்போது அதை வெளிப்படுத்துவது எப்படி விதிகளுக்கு புறம்ம்னாதோ அதுமாத்ரியான் காத்லை நான் கதைகளீன் வடிவங்கள் மீது கொள்கிறேன்
சிறுகதைகள் இவ்வாறாகத்தான் என்னை வளர்த்து வந்திருக்கின்றன . மட்டுமல்லாத தமிழிச்சூழலையும் வளர்த்து வந்து சாகா வரம்பெற்ற இலக்கியங்களாகவும் சிறுகதைகளின் இலக்கணங்களாகவும் உருமாற்றமடைந்திருக்கின்றன.
இந்த வரிசையிலிருந்துதான்  நான் கதைகளை மதிப்பீடு செய்கிறேன் கடந்த ஆண்டில் ஒருநாள் வேலூர் தமு எக ச சார்பாக  நட்த்தப்ப்ட்ட கவிப்பித்த்னின் முந்தைய முதல் சிறுகதை தொகுப்பான் இடுக்கி விம்ர்சன கூட்ட்த்தில் பங்கேற்றிருந்தேன்..
அத்ற்காக அவரது கதைகளை  முடித்த போது உண்மையில் இப்படியாக எழுதக்கூடிய ஒருவர் இதுநாள் வரை இலக்கிய உலகத்தால் அறியப்ப்டாது போனது எப்படி என்ற கேள்வியே என்னுள் அதிகம் எழுந்த்து. இதை அக்கூட்ட்த்திலும் வெளிப்படுத்தியிருந்தேன். அழ்கியபெரியவனின் கதைகள் மூலம் அப்பகுதி மக்கள் வாழ்வை நான் ஓரளவு உள்வாங்கியிருந்தாலும் கவிப்பித்த்னின் கதைகள் இன்னும் சற்று கூடுதலாக அம் ம்க்களது வாழ்வை நெருக்கமாக காண்பித்தது.
இக்காரணங்களால் இந்த அவரது இரண்டாவது தொகுப்பிற்கான முன்னுரைக்காக கவிப்பித்தன் தொலைபேசியில் அழைத்த போதும்  உடனடியாக சம்மதித்தேன் . வாசித்த்வுடன் சட்டென மனதில் பட்ட்து இதுதான் முந்தைய தொகுப்பிலிருந்த தீவிரத்த்ன்மை இத்தொகுப்பிலும் குறையாமல் எழுதியிருக்க்கீறார்.
குறிப்பாக ஊர்ப்பிடாரி கதை நவீன கதைத்ன்மைக்கான கூறுகளுடன் சிறப்பாக வடிவம் பெற்றிருக்கிறது . ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிய கதையாக எனும் சொலவடை பரவலாக வட மாவட்ட கிராமங்களில் பெண்கள் புறம்பு  பேசும்போது  பயன்படுத்துவார்கள் . இதர கதைகள் அனைத்தும் அனுபவத்திலிருந்து வெளிப்படுகிறபோது இக்கதை அவரது அதீத கற்பனையில் உருபெற்றிருப்பதால் சட்டென ஒரு ஈர்ப்பையும் சுவாரசியத்தையும் தன்னுள் தக்கவைத்துக்கொள்கிறது.
இக்கதை கற்பனையின் உச்சம் என்றால் அனுபவத்தின் உச்சமாக உருவாக்கம் கொண்டிருக்கும் கதை சிப்பாய் கணேசன். கிராமத்து பேச்சு மொழியின் கெச்சைத்த்ன்மையொடு அவர்களது மனோபாவத்துடன் மிக நெருக்கமாக அவர்கள் உலகத்தில் மண் திண்ணையில் அமரவைத்து நம் முன் காட்சிபடுத்தி மனதை பாரமாக்கிவிடுகிறார்..இக்கதையில் சிறுவனின் அக உல்க சித்திரிப்பு சிதையாமல் அதேசம்யம்  பெரியமனிதர்களின் அசிங்கங்களையும் வாசகர்கள் உணரும் விதமாக  கவிப்பித்தன் கோடிட்டு காட்டும் இடங்களில் நல்ல சிறுகதையாளராக அங்கீகாரம் பெறுகிறார்.
ராணுவத்திலிருந்து வீடு திரும்பும் அவனது அப்பா கணேசன்... தான் வாங்கிவந்த பிராந்திபாட்டலில் கொஞ்சம் எடுத்து  சிறுவனின் அம்மாவுக்கு  கொடுக்க ஆரம்பத்தில் வேணாம் வேணாம் என மறுத்துக்கொண்டே அவசரமாய் வாங்கிகுடித்துவிட்டு கணவனை அவள் இறுக்கி முத்தமிடும் காட்சியில் நம் மனம் பாத்திரங்களின் உலகத்தோடு ஒன்றி சங்கமித்துவிடுகிறது.
எனக்கும் மிகவும் பிடித்த தொகுப்பின் மூன்றாவது கதை சிலுவைச்சுழி
இக்கதையின் நாயகன் ஒரு சிறுவன் . கிறித்துவ கோயிலின் திருவிழா முடிந்த மறுநாள்  காலையில்  அங்கு சென்று எங்காவது காசுகிடைக்குமா என தேடும் அவனது  பாதையில் விரியும் இக்கதை ஒரு வகையில் நீதி போத்னைக்கதையாக தெரிந்தாலும் இறுதிக்காட்சியில் அது நம்மை நெகிழவைத்து பெரும் அனுபவத்துக்குள் அமிழ்த்திவிடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை
மேற்சொன்ன மூன்று கதைகள் மூலம் இத்தொகுப்பு  ஒரு சிறந்த சிறுகதைதொகுப்புக்கான் மதிப்பை பெறுகிறது .
மற்றும் திருட்டு இலுப்பை ,பாப்பராப்பூச்சி . ஐஸ் பெட்டியில் படுத்திருக்கும் உருவம் முட்களில் பூக்கும் மலர்கள்: போன்ற கதைகளும், இத்தொகுப்பில் குறிப்பிட்த்த்குந்த கதைகளாக இடம்பெற்றிருக்கின்றன . இக்கதைகள் எளீமையான மனிதர்களையும் அவர்களது  அறியப்ப்டாத துயரங்களையும்  வெக்கை மிகுந்த அவர்களது வாழ்க்கைகையையும் நமக்கு காட்டுவதில் முழு வெற்றியை பெறுகின்றன  . ஆனாலும் அதேசமயத்தில் இவையனைத்தும்  இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்திருக்கவும் வாய்ப்புள்ளதாக இருக்கிற போது இன்றைய நடைமுறை கிராம ,வாழ்க்கையின் அவலங்களிலிருந்து கவிப்பித்தன் தப்பித்து ஒரு வசதியான இட்த்திலிருந்து கிராம வாழ்க்கையை அவதானிக்கிறாரோ என்றும் ஐயம் உண்டாவதை தவிர்க்க முடியவில்லை . நூறுநாள் வேலைத்திட்டம் இலவச தொலைக்காட்சி கிரைண்டர் மிக்சிக்கள் மூலம் கிராமக்கள் வருங்காலத்தில் சந்திக்க போகும் பெரும் ஆபத்துக்கள் குறித்த சிந்த்னையை இன்றைய கிராமத்து கதைகள கோரி நிற்கின்றன .மேற்சொன்னவை அனைத்தும் கிட்ட்த்ட்ட ஒரு மயக்க ஊசிபோல  கிராமத்து மக்களை போலி உற்சாகத்துக்கு அழைத்து செல்வதாக இருக்கின்றன .. நகரமக்களின் திடீர் வசதி பெருக்கத்திற்கு விலையாகவும்  விளைநிலங்களை பிடுங்கி வருவதற்கு மாற்றாகவும்தான் இந்த சலுகைகள் என்பதை நாம் உணர்த்த வேண்டிய கட்டாயம் இன்று எழுத்தாளர்கள் அனைவருக்குமே இருக்கிறது.
இனிவரும் கதைகளில் கவிப்பித்தன் இதனையும் கணக்கிலெடுக்க வேண்டும் என விரும்புகிறேன் மற்றபடி  ராஜேந்திரசோழன் ,  ஜி. முருகன்  அழ்கிய பெரியவன் , க்ண்மணி குணசேகரன் , காலபைரவன் போன்ற வடமாவட்ட எழுத்தாளர்களின் கிராமத்து கால்களின் தட்த்தையொட்டி கவிப்பித்த்ன தன் கதைகள் மூலம் இலக்கிய உலகில் தன் த்ட்த்தையும் இத்தொகுப்பின் மூலம் அழுந்த  பதியவைக்கிறார் என்பதில் எள்ள்ளவும் ஐயமில்லை
தொடர்ந்து அவர்  த்னது கதைகளை முன்னெடுத்து செல்லும்பாதையில் வரும் காலத்தில் ஆகச்சிறந்த கதைசொல்லியாக வளரவும என் வாழ்த்துக்களை கூறுகிறேன்

கவிப்பித்தன் எழுதியிருக்கும் ஊர்ப்பிடாரி தொகுப்பின் அனைத்து கதைகளையும் ஒரு சேர வாசித்து முடிக்கிறபோது  சக படைப்பாளியாக அவருக்கு நான் சொல்ல விரும்புவதாக பட்ட்து இந்த வடிவம்குறித்த சிறு மெனக்கெடல்தான். உண்மையில் நான் வாசித்த முந்தைய தொகுப்பிலும் சரி இந்த தொகுப்பிலும் அவரது கதைகள் மீது வாழ்வனுபவங்கள்மீது ஒரு கள்ளத்த்னமான பொறாமையே உண்டாகும் அள்வீற்கு ஈர்ப்பை வசீகரத்தை உண்டாக்கி விடுகிறார். வட மாவட்டம் சார்ந்த சிறுகதைகள் எனும்போது ராஜேந்திர சோழன் அழகிய பெரியவன் ஜி முருகன்  காலபைரவன் கண்மணி குண சேகரன் சு. தமிழ்ச்செல்வி ஆகிய படைப்பாளிகள் கண்முன் வரிசைகட்டி நிற்கினறனர். அவர்கள் வரிசையில் தன் அழுத்த்மான கதைகள் முன் கவிப்பித்தன் இந்த பத்தாண்டுகளின் துவக்க படைப்பாளியாக வந்து நிற்கிறார்.

மேற் சொன்ன படைப்பாளிகளின் வரிசையை அவர்கள் அழுத்தமாக உண்டாக்கி விட்டுப்போன த்ட்த்தை கவிப்பித்தன் கடக்க வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக சிப்பாய் கணேசன் ஊர்ப்பிடாரி மற்றும் முந்தைய தொகுப்பில் உள்ள  சில சிறுகதைகளை வைத்து பார்க்கும் போது அவருக்கு அதற்கான முழு தகுத்கியும் உள்ளதை என்னால் உணரமுடிகிறது 
அஜயன் பாலா

April 20, 2016

வ.சுப. மாணிக்கனார்

செம்மொழி செம்மல்கள்
வ.சுப. மாணிக்கனார்
.
இது வாசுப மாணிக்கனார் நூற்றாண்டு
அவரது தமிழ் பணிக்கு  என் சிறுவணக்கம் 

திருக்குறள் மற்றும் தொல்காப்பியம் ஆகிய இரு நூல்களையும் நுணுகி ஆய்ந்து அவற்றின் சாரத்திலிருந்து தமிழர்களுக்கான அறத்தையும் அவர்களது வாழ்வையும் கண்டெடுத்து  நூல்களாக மாற்றிதந்த சீரிய ஆய்வாளர் வ.சுப மாணிக்கனார்.



புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரியில் பிறந்த அண்ணாமலை எனும் இயற்பெயர் கொண்ட மாணிக்கனாரின் தந்தை சுப்பையாசெட்டியார்,தாயார் தெய்வயானை. பிறப்பு 09-04-1917..மாணிக்கனாரின் சிறுவயதிலேயே தாயும் தந்தையும்  இயற்கை எய்திவிட துயுருற தனித்து நின்ற தளிராம் மாணிக்கனாரை அவரது பாட்டியார் மீனாட்சி அவர்களின்  அன்புள்ளம் அரவணைத்துக்கொண்டது.


மேலைச்சிவபுரியில் திரு. நடேச அய்யரிடம் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன்,நல்வழி, நன்னெறி,மற்றும் மூதுரை போன்ற நீதி நூல்களை கற்றார்.பள்ளி படிப்பு முடிந்ததும் வயிற்று படிப்புக்காக பிழைப்பு தேடி பர்மாவுக்கு கப்பல் ஏறினார். .அங்கு வட்டிகடையில் சிறு கணக்கராக சிலவருடங்கள் பணீயாற்றிவந்தார். பணிநிமித்த்மாக  சிறு பொய் சொல்ல நேரிட்டபோது மனம் இசைவு கொள்ள மறுத்து கப்பலேறி  தாய்மண் திரும்பினார்.ஊரில் இச்செய்தி அறிந்தவர்கள் அவரை பொய் சொல்லா மாணிக்கம் என அழைக்க அதுவேதழைக்கவும் துவங்கியது.

 தமிழார்வம்   மீண்டும் மாணிக்கனாரை அழைக்க அண்ணாமலை பல்கலைகழகத்தில் சேர்ந்து பயிலதுவங்கினார்.பயிலும் காலத்தில் இவரது தமிழ் ஆர்வத்தையும் ஆய்வு திறனையும் கண்டு வியந்த பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் அண்ணமலைபல்கலைக்கழகத்திலேயே அவருக்கு விரிவுரையாளர் பணியும் வாங்கிதந்தார். தமிழாசிரியப்பணி என்பது மாணாக்கருக்கு கற்றுதருவதோடு நிற்பதல்ல அது ஒரு தொண்டுபணி என எண்ணம் கொண்ட மாணிக்கனார் இரவுபகலாக தன் எழுத்துபணிக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார்

தொல்காப்பியம் ,திருக்குறள் ஆகிய இரண்டையும் கண்களாக கொண்டுவாழ்ந்தவர். தொல்காப்பியக்கடல், திருக்குறட் நெறி, சங்க நெறி, வள்ளுவம் ,கம்ப நெறி, காப்பிய பார்வை,தமிழ் காதல் மற்றும் இலக்கியச்ச்சாறு போன்ற ஆய்வு நூல்களை தமிழர் பண்பாட்டு கண்ணோட்டத்தோடு எழுதி வெளியிட்டார். மட்டுமல்லாமல் நாடகங்கள் கவிதை தொகுப்புகள் மொழிபெயர்ப்புகள் ஆங்கில நூல்கள் என இவர் எழுதிய நூல்கள் மட்டும் மொத்தம் இருபத்திரண்டு.

இவரது தமிழ்ப்பணிகாரணமாக மதுரை காமராசர் பல்கலைக்கழக
துணைவேந்தர் இருக்கை  இவரைத் தேடி பெருமைபடுத்தியது. . இன்றும்
சிறந்த துணைவேந்தருக்கான் முன்மாதிரியாக அவரைகுறிப்பிடுவது ஒன்றே அவர் இலக்கணமாய் வாழ்ந்த வாழ்வுக்கு சான்று.

"தமிழ் வழி கல்வி இயக்கம்" என்ற அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்று, தமிழகம் முழுவதும் தமிழ் பரப்ப, தமிழ் யாத்திரை மேற்கொண்டார் 

செம்மல், முதுபெரும் புலவர்,மற்றும் பெருந்தமிழ்க்காவாலர் ஆகியவை இவரது தமிழ் சேவைக்கு சூட்டப்ட்ட நற் பட்டங்கள் .

தமிழக அரசு இவருக்கு வள்ளுவர் விருது அறிவித்து அவரது உழைப்பை தன்னலமற்ற தியாகத்தை அங்கீகரிதது.


மறைவு: 24-4 -1989 

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...