December 2, 2021

காம்ரேட் தமிழனுக்கு ஒரு லால் சலாம்

    -அஜயன் பாலா 

 


இயற்கை  ஒரு கம்யூனிஸ்ட் .

 

தன்  சமூக நீதியை  அது மரணத்தின் மூலம் ஒவ்வொரு மனிதனுக்கும் சொல்லித் தந்துகொண்டேயிருக்கிறது

இதை அறிந்துதான்  ஜனா சார் தன் முதல் படத்துக்கு இயற்கை என பெயர் சூட்டினாரோ என்னவோ

 

என்ற போதும் அது  சிலருக்கு மட்டும் தன் விதிகளையு,ம் மீறி பாரபட்சம் காட்டத்தன செய்கிறது  தனக்கு பிடித்தமான  அவர்களது உடல்களை மட்டும் மண்ணில் புதைக்கவிடாமல்  காலத்தில் புதைத்து விதைகளாக மாற்ரிக்கொள்கிறது

 

ஜனா சார் என நான் அன்புடன் அழைக்கும் எஸ்பி ஜனநாதன் சாரும் அத்தகையை இயறகையின் பெறுமதி பெற்ற பெருந்தைகயாளர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை

 

ஜனா சார் இயக்கி வெளிவரவிருக்கும் லாபம் படத்துக்காக 2017ல் கும்பகோணத்தில் கதைவிவாதத்தில் கலந்துகொண்டது அவரை முழுமையாக பல் வேறு பரிணாமங்களுடன் புரிந்து கொள்ள உதவியது. முன்னதாக முதன் முதலாக என்னுடைய நாயகன் மார்க்ஸ் நூலைப்படித்துவிட்டு பார்க்கவேண்டும் என அழைத்த போதுதான் அறிமுகம்

 

 அவர் நடத்திவந்த உலகாயுதா  சினிமா கண்காட்சிக்கு ஒரு நூலை தொகுக்கும் பொருட்டு அந்த சந்திப்பு நிகழ்ந்தது. பிற்பாடு சங்க நடவடிக்கைகளின் நிமித்தம் அவரை அடிக்கடி சந்திக்க நேர்ந்தாலும் அவரது உதவியாளர் கல்யாண எடுக்கவிருக்கும் இரண்டவது ப்டத்துக்ககான கதை விவாதம் அவரது ராயப்பேட்டை இருப்பிடத்தில் நடந்த போதுதான் நெருக்கமாக பழக முடிந்தது. இதனைத் தொடர்ந்து தான் திருவண்ணாமலையில் ஒரு சில நாட்களும் கும்பகோணத்தில் இருபது நாட்களுமாக லாபம் படத்தின் கதை விவாததில்  கலந்துகொண்டேன் ,

 

இந்த நாட்களில் அவரை அணுகி பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட அவரது அனுபவங்களை இங்கு தொகுத்து தருவது இந்நாளில் அவரை கூடுதலாக புரிந்து கொள்ள உதவக்கூடும் வழக்கமாக ஜனாசாரை அனைவருக்கும் ஒரு மார்க்சிய சித்தாந்த வாதியாக மட்டுமே தெரியும். ஆனால் அவரிடம் தமிழர் வரலாறு தொன்மம் ,கலை பண்பாடு குறித்த அறிவியல் பூர்வமான தேடலும் நுண்ணறீவும் ஒரு டாக்டர் பட்டம் பெற தகுதியான புத்தகம் எழுதும் அளவுக்கு தகவல்களு,ம் இருந்தது பலருக்கும் தெரியாத விடயம்

.

ராஜ ராஜ சோழன் குறித்த திரைப்படம் ஒன்றுக்காக அவர் தஞ்சை பெரிய கோயில் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளின் போது தமிழர் கட்டிடக்கலையில் இருந்த வியக்க வைக்கும் மேதமையும் ஆற்றலும் அவரை சிலிர்க்க வைத்துள்ளது . தொடர்ந்து அவர் தமிழ் நாடு முழுக்க பயணப்பட்டு இத்துறை சார்ந்த பல அறிஞர்களை சந்தித்து அவர்களுடன் அவர் கருத்து விவாதம் செய்து தெரிந்துகொண்ட தகவல்களை அவ்வப்போது என்னுடன் பகிரும் போது எனக்கு அது புதிய ஜன்னல்களை திறந்து வைத்தது. வெறுமனே தகவல்களாக இல்லாமல் எந்த துறையாக இருந்தாலும் அதன் எண் தசம விகித கணித இலக்கணங்களுடன் உரிய வார்த்தைகளுடன் துல்லியமாக நமக்கு விளக்க முனைவது அவருடைய உரையடாலில் எனக்கு ஆச்சர்யமளித்த விடயம் .

இவ்வளவு தகவல் தெரிந்து வைத்திருந்தாலும் ஒரு புதிய சிறிய வய்து இளைஞன் அவருக்கு தெரியாத புதிய தகவல்களையோ அல்லது புத்தகத்தையோ சினிமவையோ சொல்ல ஆரம்பித்தால் ஒரு குழ்ந்தை போல அவனை வியந்தோதி என்னாபா பயமுறுத்துறியே என குழந்தையாக மாறிவிடுவார் .

 

அவருக்கு பலமே அவருடைய உதவியாளர்கள் தான் . ஒவ்வொருவரும் இருபது வருடம் இருபத்தைந்து வருடம் அவருடன் பயணிப்பவர்கள் . எனக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் இவ்வளவு காலம் ஒரே இயக்குனருடன் பயணிக்கும் உதவி இயக்குனர்கள் அவரிடம் மட்டும் தான் . காரணம் அவரிடம் இருக்கும் கம்யூன் வாழ்க்கை. அவருடைய இருப்பிடமே ஒரு கூட்டுப்பண்ணை வாழ்க்கைதான் . சீமான் அண்ணனுக்கு பிறகு ஒரே சமயத்தில் அனைவரும் வட்டமாக அமர்ந்து சமைத்த உணவை பகிர்ந்து சாப்பிடும் அழகை அவரிடம் மட்டுமே பார்த்து நெகிழ்ந்தேன் .

 

சிலர் முதல் ப்டத்தின் போது இப்படி ஒரு வாழ்க்கையில் துவங்கினாலும் பேரும் புகழும் பெற்றபின் உதவி இயக்குனர்களோடு பழகுவதில் ஒரு இடைவெளி வெற்றியின் அளவைபோல அதிகரித்துக்கொண்டே இருக்கும் . இந்த சூழலில் வைத்து பார்க்கும் போதுதான் ஜனாசார் தோற்றம் எவ்வளவு உயரம் என தெரிய வரும் . அது போல அவரிடம் எனக்கு ஆச்சர்யமளிக்கும் இன்னொரு விடயம் என்னதான் அவர் ருஷய் இலக்கியங்களின் காதலராக இருந்தாலும் அவரை இயக்குவது என்னமோ தமிழ் சினிமாவின் எம் ஜி ஆர் தான் . ஒரு பககம் தொழில் நுட்பத்தில் அபாரமன அறிவும் நவீன அணுகுமுறையும் அவர் படங்களில் இருந்தாலும் அதே அளவுக்கு எம் ஜி ஆரையும் அவரது திரைப்படங்களையும் உள்வாங்கியிருந்தார் . சார் எனக்கு சினிமாவில் குரு எம் ஜி ஆர்தான் நீங்க சீன் சொன்னா எம் ஜி ஆர் படத்துல இந்த மாதிரி சீன் வந்துருக்கா அவர் எப்படி இந்த சீனை பண்ணியிருக்கார்னு பாத்துதான் புரிஞ்சுக்குவேன் .. ஏன்னா அவரை விட இந்த மக்களை புரிஞ்சுகிட்டவங்க வேறு யாருமில்ல என்பார் . இயற்கை .. பேராண்மை போன்ற படங்களின் வெற்றிக்கும் எம் ஜி ஆர் படங்களுக்கும் இருக்கும் கணித பொருத்தப்பாடுகளை என் சினிமா அறிவை வைத்து எப்படியெல்லாமோ ஆய்வு செய்து பார்க்கிறேன் . அதுதான் ஜனாசாரின் வெற்றி .. இல்லாவிட்டால் பெரிய அறிஞர்களே விளக்க முடியாமல் தடுமாறும் மார்க்சிய தத்துவத்தை பேராண்மை படத்தில் ஜெயம் ரவி மூலம் வகுப்பறை காட்சியில் அத்துணை தெளிவாக பல கோடி மனிதர்களுக்கு கொண்டு சென்றிருக்கிறார் . தமிழ் சினிமாவின் சிறந்த காட்சிகளுள் ஒன்றாக அக்காட்சி இன்றும் பரிணிமித்து வருகிறது . அது போலத்தான் கொரோனாகாலத்துக்கு முன்பே படத்தின் மூலம் பயோவார் குறித்த தகவலை மிக எளிமையாக எடுத்துச்சொல்லியிருந்தார் .

இந்த சமூக அக்கறையும் எளிய மனிதர்களுக்கான வெளிப்பாடும் தான் ஜனாசார்

சென்று வாருங்கள் ஜனா சார் இந்த சமூகம் குறித்தும் மக்களைகுறித்தும் உங்கள் ஏக்கம் கனவுகள் அப்படியே தொஅட்ர்கின்றன . உங்களது உதவியாளர்கள் அதை ஈடுசெய்வார்கள் என நம்புகிறேன் ;

தனிப்பட்ட முறையிலும் பாலுமகேந்திரா நூலகம் சார்பாகவும் என் இதய அஞ்சலிகள்

லால் சலாம் காம்ரேட்

 மணிக்தா எனும் மாமனிதர்   : சத்யஜித்ரே 100






 கடந்த மே மாதம் 2ம் தேதி சத்யஜித் ரேவின் 100 வது பிறந்த நாளையொட்டி  பாராளுமன்றத்தில் மத்திய அரசின் தகவல் ஒளி பரப்புத்துறை அமைச்சகம்  அவரது  நூற்றாண்டை கொண்டாடப்போவதாக அறிவித்தலிருந்து உலகம் முழுக்க பல்வேறு கலைஞர்கள் எழுத்தாளர்கள்  சிந்தனையாளர்கள் சத்யஜித்ரேவின் படைப்பளுமை குறித்து பலவிதமான கட்டுரைகளை எழுதிகுவித்து வருகின்றனர்

 ரே இறந்து  முப்பதாண்டுகள்  ஓடிவிட்டன.  உலக சினிமாவின்  முகம் இன்று நிறைய மாறிவிட்டது . இந்த முப்பதாண்டில் குவாண்டி டொராண்டினோக்களும் கிம் கி டுக்குகளும்  அலக்சாண்ட்ரியோ  இன்னாரிட்டோக்களும்  தங்களின் புதிய சொல் முறையால் உலக சினிமாவை தலைகீழாக மாற்றிவிட்டனர்.\

அன்பு சகிப்புத்தன்மை  தியாக உணர்ச்சி  இதெல்லாம்  பழசாகி  கொலை கொள்ளை வன்முறை  .என புதிய கதையாடல்கள் உலக சினிமாவில்  முன்வரிசையில் இடம் பெற்றுவிட்டன

நல்லவர்களுக்கான நியாயத்தை மட்டுமே பிரதிபலித்த கதைக்கருக்கள்  போய்   கெட்டவர்களுக்கான அறத்தையும் இந்த திரைப்படங்கள் பேசுகின்றன 

,1 2 3 4 5 எனும் ஒழுங்கு வரிசையில்  கதை சொல்ல முறை போய் 3 5 ,1,4,2 கலைத்து போட்டு  பார்வையாளனோடு கண்ணாமூச்சி ஆடும்  திரைக்கதைகள் வந்துவிட்டன

இப்படியான முரட்டு மோஸ்தரில்  உலக சினிமா போக்கு  ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் சத்யஜித் ரே வின் படங்கள் அவர் குறித்து எழுதப்படும் நூற்றாண்டு கட்டுரைகள் அவர் படைப்புகளுக்கு காலத்தால் அழியாத மணிமகுடத்தை சூட்டி அதி உயந்த கலைஞனாக பறைசாற்றுகின்றன

சினிமா வரலாற்றில்  சாப்ளின் ,அகிராகுரசேவா வரிசையில் சத்யஜித்ரே  இன்று  உயர்ந்த இடத்தை அடைந்திருக்கிறார்

இது ரேவுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் பெருமை

உலக நாடுகளை பொறுத்தவரை காந்திக்கு  தாகூருக்கு பிறகு  ரே தான் இந்திய கலாச்சராத்தின் அடையாளம்

 

பதேர்  பாஞ்சலி வெளியாகி அது உலகசினிமாவில் மிகப்பெரிய அதிர்வை உண்டாகி ஐம்பதுகளிலேயே அது நிகழ்ந்துவிட்டது

.உலக இயக்குனர்கள் பலரும் தங்கள் பிதாமகனாக கருதும் ஜப்பானிய இயக்குனர் அகிராகுரசேவ சத்யஜித்ரே பற்றி இப்படி குறிப்பிடுகிறார்

சத்யஜித்ரேவின் படங்களை இதுவரை ஒருவர் பார்க்காவிட்டால் அவர்  சூரியனையும் நிலவையும் பார்க்காமல் இந்த பூமியில் வாழ்வதற்கு  ஒப்பானதாகும் என கூறியிருந்தார்

இன்னும் சொல்லப்போனால்  ரேவை  ஹொமர், மார்க்ஸ் , சாப்ளின் , ஐன்ஸ்டீன் ஆகியோருக்கு இணையான ஞானி என புகழ்கிறார் அவர் வாழ்க்கை வரலாறை எழுதிய  ஆண்ட்ரூ ராபின்சன்

கிட்டதட்ட ஏழு ஆண்டுகள் ரேவை நிழல் போல தொடர்ந்து ஆய்வு செய்து அவர் வாழ்க்கை வரலாற்றை 1984ல்  இன்னர் ஐ என்ற நூலின் மூலம்  எழுதி வெளியிட்டு உலகில் பல நாடுகளின் கவனத்தை ஈர்த்த எழுத்தாளர் அவர்

அவர் பட்டியலிட்ட  மேதைகள் அனைவரும் உலக வரலாற்றில் அவர்கள் வாழும் காலத்தில் தங்கள் படைப்புகள் மூலம் பெரும் தாக்கத்தை உண்டக்கியவர்கள் அவ்வகையில் ரேவின் படங்கள் இருபதாம் நூற்றாண்டில்   மானுட வாழ்வியலின்  சாட்சியங்கள் ..என குறிப்பிடுகிரார்

ரே சினிமாவை வெறும் கலைபடைப்பாக மட்டும் பார்க்கவில்லை அவர் கேமிரா வழியே யாருமே பார்க்க முடியாத மனித அவலங்களை  வாழ்வியலின் சிதைவுகளை காட்சி படுத்துகிரார் .அவை  ஒரு தொல்லியல் ஆய்வாலன்   பூமிக்கடியில்   மண்ணில் சிக்கிக்கிடக்கும் புதை படிவங்களை சேகரிக்க எடுத்துக்கொள்ளும் கவனம் போல  கேமிரா வழியே கவனத்துடன் அனுகுகிறார் .

அவரது படங்களில் நாம் எதிர்கொள்ளும் நிதானமும் பொறுமையும் அதன் பொருட்டாக உருவாவதான். அவரது இந்த அணுகுமுறையும் அதில் உண்டக்க முயலும் கவித்துவமும் தான் இன்று அவரது படங்களை  உலகசினிமாவின் பொக்கிஷங்களாகவும் அடையாளம் பெறுகின்றன.

அபுவின் உலகம் சார்ந்து அவர் எடுத்த பதேர் பாஞ்சாலி, அபு சன்சார் , அபராஜிதோ எனும் மூன்று படங்களுமே  உலகம் முழுக்க சினிமா மாணவர்களுக்கு பைபிளாக பரிந்துரைக்கப்படுகிறது இந்த மூன்றுபடங்களுமே      பார்வையாளல் மனதில் உண்டாக்கும் கவித்துவ சலனம்  கலையின் உன்னதம்

அரசியல் வரலாறு பொருளாதரா மாற்றங்கள் காரணமாக தலைமுறைகள் தோறும் ரசனைகள் மாறினாலும் மனித மனம் மட்டும் மாறிவிடவில்லை அவை அன்றும் இன்றும் அப்படியேதான் இருக்கின்றன என்பதை  உலகிற்கு உணர்த்துவதால் தான் இன்றும் ரேவும் பதேர் பாஞ்சாலியும் உலகம் முழுக்க கொண்டாடப்படுகின்றன.

. உலகமே கொரானவால் மிகவும் பாதிக்க பட்டு  மனிதனின் மதிப்பிடுகள் விழுமியங்கள் மறு பரீலனைக்கு உள்ளயிருக்கும்  இந்த சூழலில் பதேர் பாஞ்சாலியின் துர்காவின் மரணத்தை எதிர்கொள்ளும் ஒவ்வொருவரையும் அது உலுக்கி எடுத்துவிடுவது தவிர்க்கமுடியாதது

கடந்த ஐந்து ஆண்டுகளாக புதிதாக சினிமா கற்க வரும் மாணவர்களுக்கும் உதவி இயக்குனர்களுக்கும் உலக சினிமாக்களை திரையிட்டு உரையாடி வருகிறேன் .

துவக்கத்தில்  உச்சு கொட்டுபவர்கள்  உட்கார முடியமால் நெளிபவர்கள்  டெட் ஸ்லோ என அருகில் அமர்ந்திருப்பவன் காதில் கிசுகிசுப்பவார்கள்  பின் கொஞ்சம் கொஞ்சமாக படத்தில் வரும்  துர்கா மற்றும் அபு வின் உலகத்தில் ஆழ்ந்து போகிறார்கள்.. குறிப்பாக மழையை முன்னதாக அறிவிக்கும் குளத்தில் நகரும் தத்துப்பூச்சியின் க்ளோசப் , ,இரவில்  வரும் மிட்டாய் வண்டி பின்னால் ஓடும் சிறுவர்கள் அக்காவைத்தேடி அலையும் அபுவின் கண்கள் ,காஷ் பூக்கள் மலர்ந்த ஆளுயர பில்வெளியினூடே  புகை வண்டியை பார்க்க ஓடும் துர்காவையும் அபுவையும் துரத்தும் காமிரா  அந்த கூன் பாட்டியின் மரணம் , துர்காவின் மரணம் போன்ற காட்சிகள் அவர்களை  இன்னமும் ஆச்சர்யபடுத்திக்கொண்டேதான்  இருக்கிறது

கடைசி காட்சியில் துர்காவின் அம்மா விட்டை விட்டு கலைசெய்துகொண்டு போகும் பொது சிறுவன் அபு காணமல் போனதாக கருதப்பட்ட நெக்லைசை கண்டுபிடிப்பதும் அதை யாரும் அறியாமல் குளத்தில் வீசிவிட்டு  அதையே பார்ப்பதும் இன்று வரை உலகசினிமாவில் உன்னத தருனங்கள்

சத்யஜித்ரேவை இந்த கடைசி காட்சி பற்றி  காந்திரையிடலின் போது அந்த நகையை குளத்தில் வீசும் காட்சியின் போது அந்த சிறுவனின் க்ளோசப் காட்சியில் அவன் என்ன நினைக்கிறான்

எனகேட்க தெரியவில்லை அவன் என்ன நினைப்பான் என நான் யோசித்து அதை எடுக்கவில்லை . தங்கைதான் திருடினால் என யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதார்காக அவன் யாரும் அறியமால் குளத்தில் எரிவதற்காக காட்சியை  விளக்கினேன் பிறகு அந்த சிறுவன் அவனாக என்ன நினைத்தானோ தெரியவில்லை

என வெளிப்படியாக கூறினார்

அது போல பதேர் பாஞ்சாலியின் உன்னத கலைத்தன்மைக்கு  உதவிய இன்னொரு பாத்திரம் கூன் விழுந்த பாட்டியாக நடித்த சுனிபலா தேவி

இப்படி ஒரு பாத்திரம் என முடிவெடுத்தபின் அந்த வயதான பாத்திரத்தில் நடிக்க வைக்க  நடிப்பு அனுபவம் உள்ள பாட்டி நடிகையை   எவ்வளவோ தேடியும் யாரும் கிடைகாத சூழலில்  கடைசியில் ஒரு பழைய விடுதியில் அப்படி ஒரு பாட்டி இருப்பதாக படத்தில் பக்கத்துவீட்டு பணக்கார பெண் பாத்திரத்தில் நடித்த நடிகை சொல்ல ரேவும் தன் உதவியாளர்களை அனுப்பி  சுனிபாலாதேவியை வரவழைத்திருக்கிரார்

அப்போது அவருக்கு எண்பது வயது சிறுவயதில் மாவுனப்படங்களில் நடித்து பிஜ்ன் வாழ்க்கையின்  இடிபாடுகள் காரணமாக பாலியல் தொழிலுக்குள் சிக்கி பின் அங்கேயே தன் இறுதிநாட்களை எண்ணிக்கொண்டிருந்த சுனிபாலாவுக்கு இப்படி ஒரு அதிர்ஷடம் அவரே எதிர்பார்க்கவில்லை  பின் நாளொன்றுக்கு இருபது ரூபாய் என்ற அடிப்படையில் வரி ஒப்பந்தம் பேசப்பட்டது

படப்பிடிப்புஇன் போது ரே எதிர்பார்த்தைக்காட்டிலும் அவர் ஒத்துழைப்பு அபாரமாக இருந்தது.

குறிப்பாக அவர் இறக்கும் காட்சியின் போது அதை அவரிடம் சொல்லி விளக்க பலரும் சங்கடபட்ட சூழலில் அவரோ நடிப்புதானே என சிரித்தபடி அனாயசமாக நடித்துக்கொடுத்தாரம்

அப்படி அனாயசமாக தன் இறுதிக்காலத்தில் நடித்த பாட்டியை உலகமே வியந்து பாராட்டிகொண்டுயிருந்த  போது அவர் உயிருடன் இல்லை

படம் வெளிவருவதற்க்கு முன்பே 82ம் வயதில் காலமாகிவிட்டிருந்தார்

மணிலாவில் நடந்த திரைப்பட விழாவின் போது சிறந்த நடிகையாக அவர் தேர்வு செய்யப்பட்டதை ரசிகர்கள் கைதட்டி அங்கீகரிக்கும் போது அதை  பார்த்து மகிழ  அந்த பாட்டிக்கு  வாய்க்கவில்லை

இதில் ஆச்சரயமான ஒற்றுமை என்னவென்ரால் ரே பதேர் பாஞ்சாலி எடுக்க காரணமாக இருந்த படம் பைசைக்கிள் தீவ்ஸ் அந்த படத்திலும் சிறுவன் ரிசியின் தந்தை சைக்கிலை தொலைப்பான் கடைசியில் இன்னொரு சைக்கிலை திருடி மாட்டிக்கொள்பவனாக நடித்த நடிகர் முன்  பின் அனுபவமில்லாத ஒரு வழிப்போகர் . ஷூட்டிங்கை வேடிகை பார்க்க வந்த ஒருவரை சட்டென அந்த படத்தில்  டிசிகா நடிக்கூப்பிட்டு நாயகன் ஆக்கினார்

அவரும்படம் வெளியாகி உலகமே அவர் நடிப்பைக்கொண்டாடிய சூழலில் அவர்  உயிருடன் இல்லை

இப்படி மனிதகுலத்தின் மகத்தான ஆவணமான இரட்டை படங்களாக கருதப்படும் இந்த இரண்டு படங்களுக்குள்லும் ஒர் ஆச்சர்யமான ஒற்றுமை

சாதாரண மனிதனின் பிரதிநிதியாக அவர்கள் புகழடையும் போது மரணிப்பது வாழ்வின் புரியபடாத  வினோதங்களில் ஒன்று

 

July 3, 2021

என்னை மாற்றிய புத்தகம் -இல்லூஷன்ஸ் – ஆங்கில நாவல் – ஆசிரியர் : ரிச்சர்ட் பாஹ் -- அஜயன் பாலா

 

 

 

என் வாழ்க்கையில் எத்தனையோ நூல்கள் என்னை நெகிழ்த்தியிருந்தாலும் ஒரு புத்தகம் அதிசயம் போல என் வாழ்க்கையை  மாற்றியமைத்தது . வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியத்தை அது எனக்கு கற்றுத்தந்தது.

இன்றுவரையிலான என் ஒட்டு மொத்த வாழ்க்கைக்கான சாவியை அந்த புத்தகத்தில் தான் மனதால் கண்டுபிடித்தேன்.  அந்த ஆங்கில நூலின் பெயர்  இல்லூஷன்.  எழுதியவர் ரிச்சர்ட் பாக். 

எப்போதும் பொருளை நோக்கி திட்டமிட்டு வாழும் இந்த மூக்கணாங்கயிறு வாழ்க்கை எவ்வளவு போலித்தனமானது என்பதைச் சொல்லிக்கொடுத்த நூல் அது மேலும் இந்த நூல் எனக்கு வந்து சேர்ந்ததே ஒரு கதை  இருபது  வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் சென்னை திவுத்திடலில் இருக்கும் சிற்றரங்கம் என்னும் இடத்தில் நாடகம் ஒன்றை பார்க்க நண்பர் எழுத்தாளர் கோணங்கியின் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன் . அன்று இரவு அந்த நாடகத்தை நடத்திய அண்ணாமலை எனும் நண்பர் வீட்டில் இருவரும் தங்கினோம் . அப்போது கோணங்கி இந்த இல்லூஷன் நாவலை பார்த்துவிட்டார் . கேட்டால் படிக்க தரமாட்டார்கள் என்றெண்னி அந்த நூலை என் பைக்குள் சட்டென போட்டு அப்புறம் வாங்க்கொள்கிறேன் என்றார்.  இருவரும் மறுநாள் காலை அங்கிருந்து புறப்பட்டு அப்போது பழவந்தாங்கலில் இருந்த என் வீட்டுக்கு வந்த  போது சட்டென கோணங்கி  பயணத் திட்டத்தை மாற்றி வழியில் பேருந்தில் இறங்கி கையசைத்து போய்விட்டார் . வீட்டுக்கு வந்தபின்  எதேச்சையாக பையை திறக்க  இந்த நூல் . இல்லூஷ்ன் இருந்தது . அதுவரை பெரிதக ஆங்கில வாசிப்பு இல்லாவிட்டாலும்  முதல்முறையாக  அந்த நூலை எடுத்து படிக்க ஆரம்பித்தேன் பிற்பாடு ஐந்து வருடங்களுக்கு பின் என் வாழ்க்கையை  அது திருப்பி விட காரணமாக அமைந்தேவிட்டது . 

நூலின் ஆசிரியர் ரிச்சர்ட் பாஹ் ஒரு விமான ஓட்டி . அவரோடு பயணிக்கும் டொனால்டு எனும் சக விமான ஓட்டிக்கும் அவருக்கும் நடக்கும் உரையாடலும் அதையொட்டி நடக்கும் அதிசயம் போல சம்பவங்களும் தான் கதை. ஒரு சுயசரிதம் போல புதுமையான வடிவத்திலான நாவல் இது  

இந்த நாவலின் ஓரிடத்தில்  கதை சொல்லி நாயகனிடம்  அவரது நண்பர் டொனால்டு சொல்லுவார் ….நமக்கிருக்கும் பிரச்னைக்கெல்லாம் காரணமே நமது தேவைதான் . . அதுதான் நம்மை அலைக்கழிக்கிறது.  ஒரு நிம்மதியற்ற வாழ்க்கையை உருவாக்குகிறது .  இதிலிருந்து  தப்பிக்க ஒரே வழி எல்லா ஓட்டத்தையும் நிறுத்தி விடுங்கள்  கனவுகளை ஆசையை நிர்பந்ததை ஒழித்து விடுதலையாகுங்கள் . மனதின் ஆழத்தில் ஒரு சக்தி பிறக்கும் . அதில் திளைத்துக்கொள்ளுங்கள்  அதன் பின் வாழ்க்கையில் நீங்கள் மனதில் ஒன்று நினைத்தால் அது அதிசயம் போல நடக்கும் என சொல்லுவார் . நாவலின் மையப்பகுதியே இதுதான் .

 அது போல நாயகன் ரிச்சர்டும்  செய்தபிறகு இருவரும் ஒரு உணவு விடுதிக்கு சென்று அமர்வார்கள்  ஏதோ ஒரு உணவை  ஆர்டர் செய்து விட்டு காத்திருக்கும் போது  நாவலாசிரியர்  டொனால்டிடம் நீங்கள் சொல்வது போல செய்துவிட்டேன்  மனதில் ஒளியை கண்டுபிடிக்க முடிகிறது . ஆனாலும் நான் நினைப்பது எல்லா,ம் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்பார் . அப்போது டொனால்டு உங்களுக்கு தெரிந்த பூ எதையாவது மனதில் நினைத்து கண்ணை மூடுங்கள்  கண் திறக்கும் போது அதை   பார்க்கமுடியும்  என்பார். ரிச்சர்டும் அந்த இடத்தில் தோன்ற வாய்ப்பே இல்லாத ஒரு பூவை  மனதில் நினைத்துக்கொண்டு கண்ணை மூடி அமர்வார் . கண்னை திறக்கும் போது அவர் மனதில் நினைத்த அதே பூ கண்முன் .   உணவு மேசையில் அவர்கள் சற்றுமுன் ஆர்டர் செய்த உணவின் மேல் அழகுக்காக பொருத்தப்பட்டிருக்கும்

பிற்பாடு இந்தக்காட்சி பல ஆங்கிலபடங்களில் தமிழ் படத்திலும்  காட்சிப் படுத்தப்ப்ட்டது வேறு விஷயம் . இந்த கதையில் வரும் இது போன்ற சம்பவம் நிஜத்தில் நடக்குமா இல்லையா என்ற கேள்விகளை  விட்டுவிட்டு வெறுமனே கதையாக வாசிக்கும் போது இந்த காட்சி என் வாழ்க்கையின் பல நெருக்கடிகளுக்கு தீர்வாக அமைந்தது

திரைப்பட இயக்குனராக ஆகும் கனவோடு சில படங்களில் உதவி இயக்குனராக் பணிசெய்து விட்டு  இயக்குனராகும் வாய்ப்பு தேடி அலைந்து பல வாய்ப்புகள் நெருங்கி வந்து கைதவறிப் போன பின் மிகவும் மனக்கிலேசத்தில் இருந்த போது  இந்த நாவல் தான் எனக்கு கைகொடுத்தது .  மன நெருக்கடி மிகுந்த ஒரு நாளில் இயக்குனராகும் கனவை விட்டுவிடுவது நடக்கும் போது நடக்கட்டும் என விட்டு விட்டேன் . மனம் அமைதியானது ஆனால் அப்போதுகூட நான் எழுத்தாளானாவேன் என நினைக்கவில்லை .ஆனல் வாழ்க்கையின் பலவேறு காரணிகள் என்னை அலைக்கழித்து இன்று எழுத்தாளனாக அடையாளம் பெற்றுள்ளேன் . ஒரு வேளை அந்த நூலை நான் படிக்காஅவிட்டால் நான் இதைவிடவும் மிக உயர்ந்த நிலைக்கு சென்றிருக்கலாம்.  ஆனாலும்  என் அப்போதையை மன உளைச்சலுக்கு அந்த நூலின் தத்துவம் தான் என்னைக்



காப்பாற்றியது .


ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...