January 5, 2015

நீர்க்குமிழி வாழ்க்கையில் ஒரு எதிர் நீச்சல்


அஞ்சலி  : இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர்



ஒரு முறை ஒரு இணைய இதழ் தமிழ் சினிமாவின் சிறந்த நூறு படங்களை தொகுக்கச் சொன்னபோதுதான் அதுவரை பார்க்காத பாலச்சந்தரின் கறுப்பு வெள்ளை திரைப்படங்களை தொடர்ச்சியாக பார்க்க நேர்ந்தது.
சில கறுப்பு வெள்ளை படங்களை பார்க்கும் போது அவரது படங்கள் நாடக சினிமா என்ற பிம்பம் எனக்குள் உடையத் துவங்கியது அதன்பிறகு அந்த தொடர் நிறுத்தப்பட்டாலும் அந்த வாய்ப்பு இல்லாவிட்டால் நான் பாலச்சந்தரை கடைசி வரை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் போயிருக்க வாய்ப்புண்டு.
குறிப்பாக மூன்று முடிச்சுவின் முதல் பகுதியில் வரும் இருபது நிமிட காட்சிகள். ரஜினி கமல் ஸ்ரீதேவி ஆகிய மூவரது அறிமுகம் மற்றும் உறவு நிலை வளரும் காட்சிகளில் கதை சொல்லும் முறையில் பிரெஞ்சு நியூ வேவ் தாக்கத்தை கண்டு ஆச்சர்யப்பட்டேன்.
பல காட்சிகளில் வசனம் இரண்டாம் நிலையில் நின்று காமிரா கோணங்களும் அசைவும் முதல் நிலையில் நின்று மிஸான்சேன் பாணியில் கதை நகர்த்தப்பட்டிருந்தன. . ரோமன் பொலான்ஸ்கியின் நைப் அண்டர் தி வாட்டர் கதையை தழுவி வேறு மாதிரியாக எடுக்கப்பட்ட திரைப்படமாக இருந்த போதும், மூன்று பாத்திரங்களுக்கு இவர் தமிழ் பாணியில் மாற்றிக்கொடுத்த விவரணைகள் படத்திற்கு ஒரு தன்னியல்பான தன்மையை உருவாக்கியிருந்தன.
பி எஸ் லோக்நாத்தின் ஒளிப்பதிவில் சென்னை வீடொன்றின் மொட்டை மாடி அறையும் பகல் வெளிச்சம் நிறைந்த காட்சிகளும் நல்ல சினிமாவின் சாத்தியங்களை அதிகமாகவே கொண்டிருந்தன. பிற்பாடு இரண்டாம் பகுதியில் காட்சிகள்  நாடகத்தன்மைக்குள் விழுந்ததால் கதை நகர்த்துதல் இயல்பாக வசனத்தின் கைக்கு மாறிப்போனது

தொடர்ந்து அவள் ஒரு தொடர்கதை ,அவர்கள் அபூர்வ ராகங்கள் என அவரது சிறந்த கறுப்பு வெள்ளை படங்களை  பார்க்க  அவர் மீதான மதிப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தது.
ஆனால் நான் சினிமா பார்க்க துவங்கிய காலத்தில் அவர்  மேல் அதுவரை எனக்கு பெரிதாக ஈர்ப்பு இல்லை.
ரஜினியை அறிமுகப்படுத்தியவர் என்ற அடையாளம் மட்டுமே என்னுடைய தலைமுறையில் பெரிதாக இருந்த்து. என்னதான் தண்ணீர் தண்ணீர் ….வறுமையின் நிறம் சிகப்பு போன்ற படங்களை அவர் எடுத்துக்கொண்டிருந்தாலும்.. பாரதிராஜா பாலுமகேந்திரா மகேந்திரன் ஆகியோர்  உண்டாக்கிய தாக்கங்களை அந்த இடைப்பட்ட காலங்களில் அவரால்  உருவாக்கவில்லை. அப்போது உண்டான புதிய அலை படங்களோடு அவரால் போட்டியிட முடியவில்லை.  பிற்பாடு சிந்துபைரவி படம் வெளியான போதுதான் அவர் மீண்டும் வெற்றிக்கு பாதைக்கு திரும்ப பயணித்தார். இடைப்பட்ட காலத்தில்தான் அவர் மரோ சரித்ரா ஏக் துஜே கேலியே போன்ற படங்கள் மூலம் இந்திய அளவில் உயரங்களை தொட்டுக்கொண்டிருந்தார்.
மூன்று முடிச்சை தொடர்ந்து, வரிசையாக அவருடைய அவள் ஒரு தொடர்கதை பார்த்த போது அவர் மீதா மரியாதை பல மடங்கு உயர்ந்தது.
அதற்கு முன்வரை எனக்குள் சினிமா பற்றி சில வரையறைகள் இருந்தன. முக்கியமாக அவை காட்சி பூர்வமாக செயற்கையான நாடகத்தன்மை இல்லாமல் இது போன்ற சில வரையறைகள் உருவாகியிருந்தன.
ஆனால் அவள் ஒரு தொடர்கதையின் பாத்திரங்கள் என்னை உலுக்கி எடுத்தன.
அதற்கு முன் நான் அப்படத்தின் மூலப்படமான  ரித்விக் கட்டக்கின் மேக தக்க தாரா படத்தை இரண்டு முறை பார்த்தவன் என்றாலும் அவள் ஒரு தொடர் கதையில் அவர் காண்பித்த மனிதர்கள் அந்த கறுப்பு வெள்ளை சென்னை அதன்பிறகு பார்த்த தமிழ் சினிமாக்களை விடவும் நூறு மடங்கு வீரியமாகவும் ஆழமாகவும் ஊடுருவி உலுக்கி எடுக்க துவங்கியிருந்தன.
தமிழ் சினிமாவின் பெண் பாத்திரங்களில் சிறந்த படைப்பு எது எனக் கேட்டால் மகேந்திரனின் முள்ளும் மலரும். ஷோபாவுக்கு இணையாக நான் அவள் ஒரு தொடர் கதை கவிதாவைத்தான் சொல்வேன்.
அன்றைய கால கட்டத்தில் சென்னை நகரத்தை உரித்து சினிமாவில் வார்த்த காட்சிகளில் தோளில் கைப்பையை மாட்டிக்கொண்டு வேலைக்கு போகும் சரசாரி பெண்ணாக சுஜாதா தோன்றிய விதம் அத்தனை உயிர்ப்பு.
கடற்கரையில் பிச்சை எடுக்கும் குருட்டுத்தம்பியை வீட்டில் கண்டிக்கும் காட்சியிலாகட்டும், குடிகார அண்ணன் திருந்திவிட்டதை எண்ணி மகிழும் தருணத்திலாகட்டும், தான் காதலித்த ஒருவனை தன் விதவைத் தங்கை திருமணம் செய்ததை கேள்விப்படும் போதாகட்டும் கவிதா பாத்திரத்தின் மேல் நம்மை மீறிய ஒரு ஈர்ப்பு தவிர்க்க முடியாமல் உருவாகிறது.
 அதையும் தாண்டி பெண் என்பவளின் துயரத்தின் இருண்ட பக்கங்களையெல்லாம் வெளிச்சமிட்டு காட்டி அவளுக்கு என்னன்ன மதிரியான எண்ணங்கள் உணர்ச்சிகள் இருக்கும் என்பதை அந்த படம் வெளியாகி முப்பது வருடம் கழித்து சிடியில் பார்க்கும் என்வரை கற்று கொடுக்கும் பணியை இச்சமூகத்துக்கு உருவாக்கி கொடுத்திருப்பதுதான் அந்த படத்தின் தனிச்சிறப்பு.
படத்தில் கவிதாவின் காதலனாக வரும் விஜயக்குமார் இரண்டாவது முறையாக விட்டு போன கண்ணாடியை எடுக்க வரும்போது அவருக்கும் கவிதாவின் விதவைத் தங்கையாக வரும் ஸ்ரீ ப்ரியாவுக்கும் இடையிலான உரையாடலை காட்சி படுத்திய விதம் அவரது இயக்குனர் பாணியின்  உச்சம்
விஜயக்குமார் கேள்விகளுக்கு மறைந்து நின்று கையில் வைத்திருக்கும் கத்திரியின் சத்த்த்தில் பதில் சொல்லும் ஸ்ரீப்ரியா பிற்பாடு தான் விதவை என்பதை சொல்லாமல் சொல்லும் காட்சியில்  அடையாளமில்லாதவளாக அவள் தன்னை உணருவதை நிழலாக காண்பித்து விஜயக்குமார் நிழலோடு உரையாடுவதாக காண்பித்திருப்பார்.
திரைக்கதையில் வெறும் வசனமாக இருக்கும் காட்சி இயக்குனரின் சொல் முறையின் காரணமாக நம்முள் கூடுதல் வீரியத்துடன் இடம்.பிடித்து விடுகிறது.
இந்தவகையிலான அவரது பாணி காட்சியமைப்பு அவ்வப்போது சில படங்களில் இடம்பிடித்தாலும் முழு படமும் அவரால் இப்படி செய்ய முடியாது போனது வருத்தமே

யுடிவி தனஞ்செயன் மூலமாக பாலச்சந்தர் அவர்களை அவரது வீட்டில் நேரில் சந்தித்து சில நிமிடங்கள் பேசும் வாய்ப்பு நான்கு வருடங்களுக்கு முன் வாய்த்தபோது அவரிடம் அவள் ஒரு தொடர்கதை பற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் கிட்டியது. நான் சொல்வதை அவர் ஆச்சர்யத்துடன் கேட்டார். அதற்கு முன்பாக விகடனில் என்னுடைய கட்டுரைகள் வாசித்திருப்பதை கூறிய அவர் உங்களுக்கு அந்த படம் பிடிச்சிருந்ததா என நமப முடியாமல் ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டு ஆச்சர்யப்பட்டார். ழுபதுக்களின் துவக்கத்தில் சென்னை உள்ளும் புறமுமாக எப்படியிருந்தது என்பதன் ஒரே பதிவு என்றேன்.
உண்மையும் அதுதான். தொழில் சார்ந்த நகர வாழ்க்கை பெருக துவங்க கூட்டுகுடும்பங்கள் அதிகரித்து வந்த அக்காலத்தில் மனித உறவுகளின் அவலம் அந்த திரைப்படத்தில்தான் முழுமையாக பதிவு செய்யப்பட்டிருந்தது. சினிமா தாண்டி சமூக ஆவணமாகவும், தமிழ் சினிமாவுக்கு அப்படம் ஒரு சொத்து என கூறினேன்.
அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், அக்னி சாட்சி இந்த அ வரிசை படங்கள்தான் என்னை பொறுத்தவரை சமூகத்தை அதிகமாக பாதித்த படங்களாக இருக்க முடியும் என்பது என் அனுமானம். கூட்டி கழித்து பார்க்கும் போது பாலச்சந்தர் திரைப்படங்கள் உறவுகளின் அபத்தங்களையும், பெண்களின் உணர்வுகளையும் மையப்படுத்தியவை என சொல்ல முடியுமென்றால் அதை சிறப்பாக வெளிக்கொணர்ந்த படங்களாக மேலே உள்ள படங்களை குறிப்பிட முடியும். இந்த அ வரிசை தவிர்த்து சிந்து பைரவி, மனதில் உறுதி வேண்டும், போன்ற வெற்றி படங்களும், எங்க ஊர் கண்ணகி, போன்ற தோல்வி படங்களும் அவருடைய பாணியை ,தனித்தன்மையை அழுத்தம் திருத்தமாக வெளிக்கொணர்ந்த திரைப்படங்கள். புது புது அர்த்தங்கள் படத்தில் அதே  வெடுக் துடுக் பாத்திரம் வில்லியாகவும் அவரால் உருவாக்க முடிந்தது  ஆச்சர்யமான முரண்.
கல்கி  அந்த வரிசையில் அவருடைய கடைசிப்படம். ஆனால் கால மாற்றம் காரணமாக அந்த திரைப்படம்  மக்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது.
அரங்கேற்றம் துவங்கி ஆண் வர்க்கத்தையும் சமூகத்தையும் தன் சாட்டையடி வசனங்களால் அடித்து நொறுக்கித்தள்ளிய பாலச்சந்தரின்  பெண் பாத்திரம் கல்கி யோடு தன் சோர்வை கண்டடைந்தது
பாலச்சந்தரின் அடையாளம் என்பது இந்த வகைப்படங்கள்தான்
இதுபோன்ற படங்களை இவருக்கு முன்பும் பின்பும் தமிழ் சூழலில் யாரும் எடுக்கவே இல்லை.
இந்த  பாணியைத்தவிர, வறுமையின் நிறம் சிவப்பு, தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, உன்னால் முடியும் தம்பி போன்ற சமூகத்தின் அன்றைக்கு உயிர்ப்பான பிரச்னைகளை பேசிய திரைப்படங்கள் அவரது இன்னொரு பாணி.
நீர்க்குமிழி, எதிர் நீச்சல், பாமா விஜயம், இரு கோடுகள் போன்ற அவரது ஆரம்ப கால கறுப்பவெள்ளை நாடக பாணி படங்கள் இன்னொரு வகை.
நினைத்தாலே இனிக்கும், புன்னகை மன்னன் டூயட் போன்ற இசை நடனத்துக்கு முக்கியத்துவம் தந்த பாணி என அவர் திரைப்படங்களை பல்வேறு பாணிகளாக வகைப்படுத்தினாலும் அவரது எந்த பாணியிலும் சேராத மரோ சரித்ரா திரைப்படம் தான் அவரது திரைப்படங்களில் பெரும் சாதனை நிகழ்த்திய திரைப்படம்.
ஆனால்  பாலச்சந்தர் பற்றி நினைவு கூறும் பலரும் அந்த திரைப்படம் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. உண்மையில் அவர் மற்ற படங்களில் அல்லாத ஒரு நீரோட்டமான காட்சி மொழி அந்த படத்திலும் அதன் இந்தி பதிப்பான ஏக் துஜே கேலியே விலும் தான் உணர முடிந்தது.
இயக்குனர் பாலச்சந்தரின் பெருமைகளூள் எம்.ஜி.ஆர் , சிவாஜி காலத்தில் நாகேஷை நாயகனாக நடிக்க வைத்து அவர் ஈட்டிய வெற்றியைத்தான் அனைவரும் குறிப்பிடுவார்கள் . ஆனால் என்னை பொறுத்தவரை  முதன்  கறுப்பான ஆண்களையும் பெண்களையும் கதாநாயகர்களாக திரையில் அறிமுகப்படுத்தியதுதான் அவரது சாத்னைகளின் உச்சம்
சிவப்பானவர்கள் மட்டுமே அழகானவர்கள் ,சினிமாவிலும் அவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்கிற போலிபிம்பம் கெட்டியாய் இறுகிக்கிடந்த சமூகத்தின் படிமத்தை உடைத்தது அவருடைய சாதனை. ரஜினி, சரிதா இருவரையும் அவர் அறிமுகப்படுத்தாவிட்டால் வேறு எப்படியும் அவர்கள் அன்றைக்கிருந்த தமிழ் சூழலில் அறிமுகமாக வாய்ப்பே இல்லை.
தப்புத்தாளங்களில் திருடன் ரஜினி, பாலியல் தொழிலாளி சரிதா போன்ற விளிம்பு நிலை பாத்திரங்களை திரையில் நாயகன் நாயகியாக அறிமுகம் செய்ததும் அவருடைய சாதனைகளில் ஒன்று.
பாத்திரங்கள் எதையாவது திரும்ப திரும்ப பேசுவது அவரது பாணி
அரங்கேற்றத்தில் உன் அப்பா எனக்கு மாமனார் எனும் ஒரு குழப்பமான விடுகதை
அவள் ஒரு தொடர்கதையில்  படாபட் ஜெயலட்சுமியின் படாபட்
மற்றும்
மூன்று முடிச்சுவில் ரஜினி சிகரட்டை தூக்கி போடுவது ,கைகளை வைத்து மேனரிசம் செய்வது என துருத்தலாக பாத்திரங்கள் எதையாவது செய்வதன் மூலம் பார்வையாளனிடம் பாத்திரங்களை அழுந்த பதியவைப்பது அனைவருடைய பாணி
மோட்டர் பைக்குகளை திரையில் அறிமுகப்படுத்துவதை சமூக மாற்றங்களின் குறியீடாக அவள் ஒரு தொடர்கதையில் புல்லட்டையும் , அவர்கள் படத்தில் காற்றுகென்ன வேலி பாடலில் ராஜ் தூத் பைக்கையும்  , புன்னகை மன்னனில் இந்த் சுசூகி பைக்கையும் முதன் முதலாக திரையில் காண்பித்து இளைஞர்களை பரவசப்படுத்தினார்
பாலச்சந்தர் இறந்த செய்தி குறுந்தகவலாக எனக்கு வந்த போது அவர் மருத்துவமனையில் உயிருடன் போராடிக்கொண்டிருந்தார். பிற்பாடுதான் அது பொய்யான செய்தி என தெரிய வந்தது என்றாலும் அந்த ஐந்துநிமிட இடை வெளியில் நான் மிகவும் துயருற்று அமைதியாக ஒரு நிமிடம் காலத்தோடு உறைந்து நின்றேன்.
என் அம்மா எனை கைப்பிடித்து கடைதெருவுக்கு சிறுவயதில் சென்ற போது  ஒரு சினிமா போஸ்ட்ரை காண்பித்து டேய் இது பாலசந்தர் படம்டா ரொம்ப பெரிய டைரக்டர் அவர் படமெல்லாம் அருமையா இருக்கும் என சொன்னது இப்போதும் எனக்குள் பசுமையாக நினைவில் உள்ளது.
இப்படியாகத்தான் டைரக்டர் என்ற பதம் என் வாழ்க்கைக்குள் நுழைந்து முக்கியம் பெற துவங்கியது.
உண்மையில் இக்கட்டுரை எழுதவும் காரணமாக இருந்தது என் அம்மா. எனக்கு கை நீட்டி போஸ்ட்ரை காண்பித்த அந்த  நிகழ்வுதான்.

என் அம்மாவை போல பல பெண்களின் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்ததுதான் அவரது மிகபெரிய சாதனை.

December 12, 2013

சுமார் எழுத்தாளனும், சூப்பர் ஸ்டாரும்

    

இந்தியாவுக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் சண்டை வந்தால் நிச்ச்யம் இந்தியாதான் ஜெயிக்கும்

எப்படி?

ஏன் தெரியுமா செவ்வாய் கிரகத்தில் ரஜினி இல்லை

இப்படியான் ரஜினி டைப் ஜோக்குகள் தான் பாலிவுட்டில் இப்பொது ஹாட் டாபிக்

அங்கு இரண்டுபேர் புதியதாக சந்தித்துக்கொண்டால் முதலில் பரிமாறிக்கொள்வது ரஜினி பற்றிய இப்படியான எஸ் எம் எஸ் ஜோக்குகளைத்தான்

இதுக்கு ஒருவகையில் காரணம் அவர்களுக்கு ரஜினி என்ற பெயர்  வயிற்றில் உண்டாக்கும் எரிச்சலூட்டும் அமிலம் தான் 

ரஜினி பற்றிய வாத பிரதி வாத்ங்களை கடந்து அவரது எந்திரன் எனும் பொறுப்புணர்வற்ற படங்களையும் ..அரசியல் போதாமைகளையும் ரசிகர்களை மந்தைகளாக பயன்படுத்திய குற்றசாட்டுகளை கடந்து ரஜினி தமிழர்களுக்கு அருட் கொடை


முன் மாதிரிகள் அருகிப்போன தமிழகத்தில் ரஜினி என்ற சொல் உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் ஓர் அழுத்தம் திருத்த்மான இலச்சினை .

எளிய மனைதர்கள்கூட சட்டென அடையாளப்படுத்திக்கொண்டு த்ங்களை முன்னெடுத்து செல்லக்கூடிய  முன் மாதிரி அவர்.

திருக்கழுக்குன்றம் என்ற சிறிய ஊரில் பாலாஜி என்ற பெயருடன் அவமானத்தால் சுருங்கிடந்த  என்னை அஜயன்பாலாவாக விரிவுகொள்ள வைத்ததில் அவருக்கும் முக்கிய பங்கிருப்பதால் இத்னை இங்கு தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன் .

நான் மட்டுமல்ல இம்மண்ணீண் நிறமான கறுப்பூ நிறத்தில் பிறந்த எவரும் அவரை மறுக்க முடியாது


கறுப்பான ஒருவன் இந்த உல்கத்தில் வாழவெ தகுதியவற்றவனாக கருதப்ப்ட்ட வெட்ககேடான காலம் ஒன்றும் தமிழ்கத்தில் இருந்தது.

என் குடும்பத்தில் என் அம்மா அப்பா அண்ணன் த்ங்கை எல்லோரும் சிவப்பாக இருக்க நான் மட்டும் என் அம்மாவின் அப்பாவை போல கரிய நிறத்தில் பிறந்துவிட்டேன்

அத்ற்காக நான் சிறுவயதில் எதிர்கொண்ட அவமானங்கள் இருக்கிறதே தாங்க முடியாதவை

என் அப்பாவுக்கு பூர்Vகம் கேரளாவேறு. அம்மா திருநெல்வேலி
வீட்டுக்கு  அப்பாவின் உறவினர்கள் வந்தாலே எனக்கு பயம் வரும். அவர்களுக்கும் எனக்கும் ஒத்துவராது . என்னிடம் பேச கூட மாட்டார்கள் . என் அண்ணன் த்ங்கை ஆகியோரிடம் மட்டும் பாச மழை பொழியும் . அத்ன் காரணமாகவே நான் அவர்கள் இருகும் சமயங்களில் தாமதமாக வீட்டுகு வருவேன் . என்னை ஒரு அன்னியனாக அவர்கல் பார்பார்கள் அவர்கள் மட்டுமல்ல .. அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் கூட 


உங்க வீட்ல எல்லாரும் சிவப்பா இருக்காங்க
நீ மட்டும் ஏண்டா இப்படி அட்டை கரியா இருக்கே

இந்த கேள்வியை  பலமுறை எதிர்கொண்டிருக்க்கிறேன்.
அவமானத்தால் பதில் பெசாமல் வந்துவிடுவேன்

என்ன கொடுமை என்றால் கேட்பவர்களும் கறுப்பாகத்தான் இருப்பார்கள்

ஆனாலும் கறுப்பா இருப்பது ஏதோ பிறவிக்குற்றம் என்பது சமுகத்தில் பொது புத்தி

மாப்பிள்லை கறுப்பு
பொண்ணு கறுப்பா இருக்கு அத்னாலதான்
நீ மட்டும் கொஞ்சம் சிவப்பா இருந்தேன்னு வச்சிக்கோ ராஜா மாதிரி ஒருத்தன் வந்து கொத்திகிட்டு போவான்
எம் ஜி ஆரை பாரு என்னமா கலரு

அவன் சிவப்பா இருக்கான் அதனால நல்லவ்ன் என வடிவேல் ஒருப்டத்தில் அடிப்பது காமடிமட்டுமல்ல 77 க்க்கு முன்பாக சமுகத்தின் பொதுப்புத்தியில் ஆழமாக உறைந்திருந்த கருத்து இது.

இந்த பொதுபுத்திக்கு மக்கல் தில்கம் எம் ஜி ஆரும்  ஒரு மூலகாரணம் .எம் ஜீ ஆரின் இயல்பான தயாள குணம் சிவப்பு கலருடன் முடுச்சு போடப்பட்டது

என்னமா கலரு.. கொடுத்து சிவந்த கரம் இப்படியான சொற்றொடர்கள் தமிழர்கள் மத்தியில் சிவப்பாக இருப்பவன் நல்லவன் என்பது மாதிரியான பொலி மயக்கத்தை உருவாக்கிவிட்டதும் ஒரு கொடுமை

அவரும் தன் பங்குக்கு கெட்டகாரியங்கள் செய்யும் குண்டுமணி போன்ற லுங்கி கட்டிய வில்லன்களை கறுப்பாக காட்டினார்.  நிறத்தில் வெள்ளையாக இருந்த நம்பியார் போன்றவர்களையும் கறுப்பு வண்ணம் பூசி கறுப்பு என்றாலே தீமை எனும் பொது புத்திக்கு வலுவேற்றினார்

தமிழகமாவது பரவாயில்லை வட இந்தியாவில் இன்றும் கறுப்பாக இருக்கும் ஒருவன் எந்த துறையிலும் முன்னேறிவிட முடியாது. அத்னால்தான் மராட்டியத்தை சேர்ந்த பெங்களூரில் வளர்ந்த ரஜினி தமிழக்த்தில் ஜெயிக்க முடிந்தது. அல்லாமல் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் கறுப்பாக இருக்கும் ஒருவன் அன்று நடிகனாக  அறிமுகமாயிருக்க முடியாது .

இத்த்கைய சூழலில் ரஜினியின் வருகையும் வெற்றியும் நிறம் சார்ந்த பொதுபுத்திகளை அடித்து நொறுக்கியது. அழகு என்பது உருவத்திலிருந்து சுபாவத்துக்கு மாறியது.


அதுவரை நிறத்தால் அவமானபட்ட பலருக்கு ரஜினி புதிய கத்வை திறந்தார் .குனிந்த த்லைகள் நிமிர தொடங்கின
கறுப்பானவர்கள் பரட்டை தலையுடன் சட்டை பட்டனை கழட்டி விட்டுகொண்டு ஹீரோவாக உணரதுவங்கினர்

இப்படியாகத்தான்  நிறத்தால் தினமும் அவமானத்துக்குட்பட்டு வாழ்ந்த எனக்கு போஸ்டர்களில் தெரிந்த ரஜினி எனும் பிம்பம் பரவசத்தை உண்டாக்கியது. அந்த  சமயம் பலரும் அந்த நடிகனை தவறாக சித்தரித்தார்கள். ரஜினியை ரசிப்பவர்கள் கேலிசெய்ய்ப்பட்டார்கள் .கிடத்ட்ட அப்போது அறிமுகமான இளையராஜாவுக்கும் இதேபோல கேலிபேச்சுகள் இருந்த்ன .
தகர டப்பா ம்யூசிக் என செவ்வியல் மெல்லிசை ரசனையாளர்கள் பகடி பேசினர் .அப்போது ரஜினியை போல இளையராஜாவும் என்னை பெரிதும் ஈர்த்தார். இயல்பில் அதிக உணர்ச்சி வசப்படும் சிறுவனான நான் அவர்கள் இருவரையும் கடவுள்களாகவே கருதினேன் .உடன் அப்போது ப்ரூஸ்லி கொஞ்சகாலத்துக்கு இருந்தார் . பின் அது மைக்கேல் ஜாக்ஸனாகவும் மாறிக்கொண்டிருந்தது .


அக்காலத்தில்  திரைக்கு முன்னால் ஒரு மேடை இருக்கும் பெரும்பாலும் ரஜினியின் ப்டங்களை மேடையில் படுத்துக்கொண்டே பார்த்தேன். ரஜினி படத்தின் விள்ம்ப்ரத்தை முத்ன்முத்லாக தினத்தந்தியின் கடைசி பக்கத்தில் பார்ப்பதுமுதல் , படம் பார்க்க சனிக்கிழ்மை மதியம் தியேட்டருக்கு ஓடுவது என எல்லாமே தனி அனுபவம்தான் . சில படங்களில் சிவப்பாக இருக்கும் கமலஹாசனிடம் அவர் அடிவாங்கியபோது நான் மிகவும் குமைந்தேன் .


நான் வாழவைப்பேன் பட்த்தில் சிலமணித்துளிகள்சாகும் தருவாயில் துப்பாக்கியுடன்

ஒரு போதாத காலத்தில் அவர் மனநலம் த்வறியவராக அனைவரும் கேலி பேசியபோது இவர் விரைவில் குணமடையவேண்டும் என உள்ளூர பிரார்த்தித்தேன் .

பள்ளிசெல்லும் வழியில் ஓட்டப்பட்டிருக்கும் ரஜினி காந்தின்  புதுப்பட போஸ்டர்களை நின்று நீதானித்து உற்று பார்ப்பேன் . நோட்டு புத்த்கத்தின் கடைசி ப்க்கங்களில் ரஜினியை வரைவது முக்கிய பொழுது போக்காக மாறியது . ஒருநாள் நண்பன் செய்த ஒற்று வேலை காரணமாக எல்லா நோட்டின் கடைசி பக்கத்திலும் நான் ரஜினி படமாக வரைந்திருந்ததை பார்த்த சாரதா  டீச்சர் ஸ்கேலால் எனை வெளுத்து வாங்கினார் ராகவேந்திரர் பக்தி என்னையும் அவ்வயதில் தொற்றியது. வியாழக்கிழ்மைகளில் விரதம் இருந்தேன் .
.நான் கொஞ்சம் ரசனையில்  வளர்ந்தபோது ரஜினியும் வளர்ந்தார். மூன்றுமுகம் படத்தில் அலெக்ஸ் பாண்டியன் செந்தாமரை நாற்காலியை காலால் எத்திஉதைக்கும் போதும்
இந்த் அலெக்ஸ் பாண்டியன் பேரை சொன்னா அந்த குழந்தை அவங்க அம்மா வையையும் சேத்து மூடும் என வசனம் பேசிய போது உணர்ச்சி தாங்காமால் கைவலிக்க தட்டினேன்
அந்த் ஆற்ற்லை மனதில் வாங்கி உடலுள் செலுத்தியபடி வீட்டில் வலம் வந்தேன்

புதுக்கவிதை ப்டத்தில் காதலின் தீபமொன்று பாடலில் பாக்கெட்டில் கைவிட்டபடி ரஜினி நடந்து வரும் அழகை பார்த்து மயங்கியவர்களில் நானும் ஒருவன்

அந்தா கானூன் படம் முலம்  இந்தியிலும் அவர் பெரு வெற்றி பெற்றதை கமல் ரசிக நண்பர்களிடம் அவர்கள் வெறுப்பை சம்பாதிகும் வகையில் பெருமை பட கூறியிருக்கிறேன்
ரஜினி ரசிகன் புத்தகத்தில் ராஜாதிராஜா ஆளுயர புகைப்ப்டங்களை பார்த்து பரவசத்தில் துளிர்த்தேன் . அன்று என்னை போல ரஜினியை தமிழ்கமே நேசித்தது.
அப்படத்தில்  மலையாளக்கரையோரம் முதல் பாடல்காட்சியில் வெள்ளை பேகி பேண்டும் வெள்ளை சர்ட்டுமாக பாக்கெட்டில் கைவிட்டபடி நடந்துவரும் காட்சியில் உணர்வுகளின் உச்ச நிலையை அடைந்தேன் . அந்த உணர்வுகளின் நிலை என்னை போல பலரையும் அக்காலத்தில் ஈர்தது. அண்ணா மலை பாட்ஷா படங்களீன் காலத்தில் நான் முழுவதுமாக மாறியிருந்தேன் . ஓரளவு இலக்கிய வாசிப்பும் அறிவார்ந்த விடயங்களும் என்னை தீண்டியிருந்தாலும் முதல் நாளில் முதல் ஷோ ரஜினி படம் பார்ப்பதை மட்டும் த்வறவிடுபவனில்லை 

இப்படியாக ஒவ்வொரு காலத்திலும் ரஜினியை இன்ஸ்பிரெஷ்னாக கொண்டு நாமும் அவரை போல சினிமாவில் சாதிக்க முடியும் என கண்ணாடியில் எனக்கு பதில் அவரை பார்த்தேன்

தூர்தர்ஷனில் இரண்டு வாரங்கள் வந்த அவரது முதல் தொலைக்காட்சி பேட்டி என் வாழ்வின் திருப்புமுனை என்று கூட கூறலாம்

அதில் அவரிடம் வெளிப்ப்ட்ட விஷய் ஞானம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது.அவரது பதிலில் வெளிப்ப்ட்ட நிதான்ம் எனக்கும் கைவர வேண்டினேன்

அதில் ஒரு கேள்வியின் போது த்ன் வெற்றிக்கு காரண்மாக தியானத்தை பதிலாக கூறினார்.

மறுநாள் முதல் தினமும் பத்து நிமிடம் கண்களை மூடி தியானிக்க துவங்கினேன் . முதன்முதலாக ஜே .கிருஷ்ணமூர்த்தியையும், ஆட்டோபயோகிராபி ஆப் யோகி நூலையும் வாசிப்பதற்கு அவரது பேட்டிகள் ஒரு உந்துதல். அன்று தொடங்கி இன்று இமயமலைக்கு நான் பயணிப்பது வரை ரஜினி எனக்கு முன் மாதிரி

பாட்ஷா பட வெற்றி விழாவில் அவரது துணிச்சலான பேச்சில் அரசியல் த்ன்னுணர்வை கண்டு வியந்தேன்

இவையனைத்தையும் விட அவரிடம் நான் கண்டு வியந்த பெருங்குணம் த்ன்னை எதிர்ப்ப்வ்ர்களை  மன்னித்து அரவணைக்கும் பேருள்ளம் .

அதை  என் வாழ்க்கையிலும் கடைபிடித்து அத்ன் பலனை முழுமையாக உணர்ந்திருக்கிறேன்

இவ்வளவுதூரம் அவரால் உந்தப்ட்டும் ஒரு முழு முதல் ரசிகனாக இருந்த நான் முத்ன் முறையாக அவர்மேல் அதிருப்தி கொண்டது அவரது 25 வது ஆண்டின் வெற்றி விழாவையொட்டி ரசிகர்களிடம் அந்த விழாகுழு நடந்து கொண்ட விதம் 


இமயம் அள்வுகு உயர்ந்த ரஜினியா இப்படி
அவருக்காக உயிரையும் த்ர துணிந்த பல லட்சம் பேரின் அன்பை வியாபாரமாக்கிய அந்த தந்திர மூளை நிச்ச்யம் அவருடையதாக இருக்காது என நம்பினேன்

எனக்கு அவர் மிதான  இரண்டாவது அதிர்ச்சி பாபா பட பாடல் கேசட் விநியோகத்தின் போது

இதுவரை த்மிழ் சினிமா வரலாற்றில் எந்த படத்துக்குமில்லாத எதிர்பார்ப்பு இருந்த போது.. அதனை மேலும் பணமாக்கும் வித்மாக கடையில் வாங்கவேண்டிய கேசட்டை ஒரு சிறு வியாபரியின் குறைந்த வருமானத்தையும் பிடுங்கும்விதமாக  ரசிகர்களை சினிமா கவுண்டரில் வரிசையில் முண்டியிடவைத்து அதிகபடச விலைக்கு விற்று அவர் பெய்ரை வைத்து பலர் பணம் சம்பாதிக்க  அனுமதித்தை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை .

இப்படியாக தீவிர ரஜினிரசிகனாக அவரால் மன எழுச்சிக்கு ஆட்பட்டு சுயவாழ்க்கையில் பெரும் உயரங்களை கண்டடைய அவாவுடனிருந்த  என்னை மேற்சொன்ன சம்பவங்கள் அவர் மீதான் ஈர்ப்பில் இடைவெளியை உண்டாக்கின

காவிரி மற்றும் இலங்கை ப்ரச்னைகளில் அவர் என் கருத்தோடு ஒத்துவராதவராக இருந்தாலும் பலர் அவரை முன் வைத்து அரசியல் காய் நகர்த்துவதையும் அறிந்திருந்தேன் . அத்னால அவர் சமநிலை தவற நேர்ந்ததையும் எண்ணி வருத்த முற்றேன்
எந்திரன் படத்தில் அவர் நடித்தது குறித்து மிகவும் வருத்த முற்றேன். குழந்தைகள் முதல் பெருஇயவர் வரை ரசிக்கும் மனிதர் தீமையை வலியுறுத்தும் பாத்திரத்தை தூக்கி பிடித்தது எனக்கு மிகுந்த மன வருத்தத்தையே தந்தது. உண்மையில் ரஜினிக்கு எந்திரன் கடைசி படமல்ல . அவர் இன்னும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் ப்டத்தை தரவேண்டும் வயதுகேற்ற பாத்திரத்தில் அவர் முன்னிலும் சூப்பர் ஸ்டாராக அவர் ஜொலிக்க முடியும். உள்ளத்தாலும் எண்ணத்தாலும்  உயர்ந்த நிலைகொண்ட  ரஜினி என்னை போல பல இளைஞர்கள்  உருவாக காரணமாக இருந்தவர் .இளைஞர்களுக்கு அவர் கொடுத்தநம்பிக்கையும் உத்வேகமும் ஒரு சமூகம் எளிதில் பெற முடியாதது .



March 15, 2013

சேலம் கண்ஸ்யுமர் வாய்ஸ் விருது

என் எழுத்துலக வாழ்க்கைக்கு சேலம் கன்ஸ்யுமர் வாய்ஸ் வழங்கும் எளிய அங்கீகாரம் நாளை காலை பத்து மணிக்கு  சேலம் சண்முகா மருத்துவ மனை  கலையரங்கத்தில் நிகழவிருக்கிறது. என் எழுத்து வாழ்க்கையில் திசைகாட்டும் ஒரு நிலவாக  .நிழல் தரும் மரமாக பயணித்த அனைவருக்கும் நன்றி.

March 5, 2013

 விகடன் வெளியீடாக  வெளியான எனது அம்பேத்கார்  நூலை படித்துவிட்டு  பாராளுமன்ற மேலவை உறுப்பினரும் .மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் அகில இந்திய பொருளாளருமான திரு. அம்பேத்கார் ராஜன் . எம்.பி . அவர்கள் எனக்கு எழுதிகொடுத்த பாராட்டு கடிதம் .


March 3, 2013

ஒரு கடிதம் - உலக சினிமா வரலாறு பாகம் 2 குறித்து


murugesan sajo sundar
03-03-2013


வணக்கம் அஜயன் பாலா அவர்களே
வாழ்த்துகள்
தங்களின் உலக சினிமா வரலாறு படித்தேன், இரண்டுபாகங்களும் அருமை, இதை படித்ததன் மூலம் சினிமா மீது எனது பார்வை மாறியிருக்கிறது.உலக சினிமா, இந்திய சினிமா, தமிழ் சினிமா மீதான உண்மையான மதிப்பீடுகளை புரிந்துகொள்ளமுடிகிறது. தாங்கள் எழுதிய இப்புத்தகத்தை பற்றிய எனது உண்மையான ஆத்மார்த்தமான சில கருத்துகளை தங்களுக்கு தெரிய படுத்த விரும்புகிறேன்
முதலாவதாக தங்களின் எழுத்துநடை், படிக்கும் போது சலிப்பு ஏற்படாமல் தொடர்ந்து படிப்பதற்கான ஆர்வத்தை தருகிறது. தாங்கள் அளித்துள்ள சினிமாவை  பற்றிய தகவல்களை நிச்சயமாக அரிதிலும் அரிதாகவே கருதுகிறேன், என் பொன்ற உதவி இயக்குனர்களுக்கு அதாவது ஆங்கில சினிமா புத்தகங்களை படித்து புரிந்து கொள்ள சிரம படுகிறவர்களுக்கு இது ஒரு வர பிரசாதம். தமிழில் எழுதி வெளியிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள், 
ரோசமான் உள்ளிட்ட பல படங்கள் பற்றி தாங்கள் அளித்துள்ள தகவல்களை மிகவும் ரசித்தேன். இது சினிமா வரலாறு மட்டுமல்ல சினிமா கட்டமைத்தவர்களின் வரலாறும் கூட......
சினிமா துறையை சார்ந்தவர்கள் மட்டுமல்லால், சினிமா விமர்சகர்கள், சினிமா ரசிகர்கள், சினிமாவை எதிர்ப்பவர்கள், மற்றும் இதர துறை சார்ந்த படைப்பாளிகள் என அனைவரும் படிக்கவேண்டிய அருமையான புத்தகம், தமிழில் வெளிவந்துள்ள சினிமா புத்தகங்களில் இது  ஒரு பொக்கிசம்தான் 
வாழ்த்துகள் மீண்டும் ஒரு முறை 



murugesan sajo sundar
murugesan sajo sundar's profile photo
directorsajo@gmail.com
DUET MOVIES

December 23, 2012

” குரு தத்” -உலக சினிமா வரலாறு - இரண்டாம்பாகம்


குருதத் (9 July 1925 – 10 October 1960) 

 வசந்தகுமார் சிவ சங்கர் படுகோன் எனும் பெயர் கொண்ட குருதத் இந்தியாவில் துன்பவியல் சினிமாக்களின் நாயகனாக அறியப்படுபவர்.நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞரான குருதத் இந்திய சினிமாவின் ஆர்சன் வெல்ஸாக கருதப்படுபவர் . அமெரிக்காவின் டைம்ஸ் மற்றும் சைட் அண்ட் சவுண்ட் ஆகிய இரண்டு இதழ்கள் தனித்தனியே வெளியிட்ட சிறந்த 100 படங்களின் பட்டியலிலும் இவர் இயக்கிய பியாசா மற்றும் கக்கேஸ் கி பூல் ஆகிய இரண்டு திரைப்படங்களும் இடம் பெற்றுள்ளது . பெங்களூரில் கொங்கனி பேசும் குடும்பத்தை சேர்ந்த குருதத் சிறுவயதிலேயே படிப்பதற்காக கல்கத்தாவுக்கு சென்று அங்கேயே படித்து வளர்ந்த காரணத்தால் வங்காளியாகவே அறியப்பட்டவர். வேலைக்காக மும்பை வந்த குருதத் அங்கிருந்த பிரபாத் ஸ்டூடியோவில் டெலிபோன் ஆப்ரேட்டராக இருந்து உதவி இயக்குனராகவும் நடிகராகவும், நடன இயக்குனராகவும் பணி புரிந்தார் . அச்சமயம் அதே ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்ட ஒரு புதிய படத்துக்கு ஒரு இளம் நடிகர் ஒப்பந்தம் ஆகியிருந்தார். அவர் பின்னாளில் இந்தி சினிமாவின் நிரந்தர நட்சத்திரமாக 80 வயதிலும் நாயகனாக நடித்த தேவ் ஆனந்த்.

 ஆனந்த் ஒரு நாள் லாண்டரியில் தான் கொடுத்த சட்டை தவறுதலாக யாரிடமோ மறிப்போய்விட்ட தகவலறிந்து அந்த நபரை தேடி வர அந்த சட்டையுடன் ஒருவர் படப்பிடிப்பு தளத்தில் தீவிரமாக நடனம் சொல்லி கொடுத்துக்கொண்டிருந்தார். தேவ் ஆனந்த் ஓடிசென்று குருத்தின் சட்டையை பிடித்து உடனே கழட்டும்படி படபிடிப்பின் நடுவே கேட்க .. இருவருக்கும் அந்த மோதல் ஒரு நட்பை உருவாக்கி தந்தது. அப்போதே என்றாவது ஒருநாள் குருதத் தான் இயக்குனராக ஆனால் ஆனந்தை கதாநாயகன் ஆக்குவது என்றும் தேவ் ஆனந்த் நடிகராக உயர்ந்து தயாரிப்பாளரானால் குருதத்தை இயக்குனராக ஆக்க வேண்டும் என்றும் இருவரும் எழுதப்படாத ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

தேவ் ஆனந்த் நாயகனாக உருவாக அவர் சொன்னது போலவே தன் நண்பனை அழைத்து படம் இயக்கும் வாய்ப்பு கொடுத்தார் . குருதத்தின் முதல் படமான பாஸி மிகப்பெரிய வெற்றி பெற அதை தொடர்ந்து குருதத் சொந்தமாக தன் பெயரில் கம்பெனி ஒன்றை துவக்கி அதன் மூலம் தயாரிக்கப்பட்ட "C.I.D." படத்தில் ஆனந்தை கதநாயகனாக நடிக்க வைத்தார் . இப் படத்தை இயக்கியவர் ராஜ் கோஸ்லா. பாஸியை தொடர்ந்து இருவரும் ஜால் எனும் படத்தில் இணைய அதுவும் ஹிட் ஆகியது .ஆனால் தேவ் ஆனந்தின் சகோதரர் சேத்தன் ஆனந்துக்கும் குருத்துக்குமிடையிலான மனக்கசபின் காரணமாக இருவரும் பிரிந்து அவர்வரவர் வழியில் படங்களை தந்தனர் . இதனை தொடர்ந்து குருதத்தே தன் படங்களில் நாயகனாக நடிக்கத்துவங்கினார் .

Baaz (1953) Mr. & Mrs. '55 (1955) Sailaab (1956) இந்த அவரது திரைப்பட்ங்கள் அவருக்கு வணிக ரீதியான வெற்றிகளை கொடுத்தாலும் அவர் பெயர் நிலைக்க காரணமாக இருந்த திரைப்படங்கள் அவர் கடைசியாக இயக்கிய இரண்டு படங்கள். 1957ல் வெளியான Pyaasa மற்றும்.1959ல் வெளியான Kaagaz Ke Phool . ஆகிய இரண்டு திரைப்படங்களும் இந்திய சினிமாவில் ரேவின் பதேர் பாஞ்சாலி மற்றும் கட்டக்கின் மேக தக்க தாரா ஆகிய பட்ங்களுக்கு அடுத்த நிலையில் மிகச் சிறந்த படங்களாக கருதப்படுகின்றன. புற வாழ்க்கையில் குருதத் வெற்றி பெற்றவராக இருந்தாலும் அகவாழ்வில் குருதத் எப்போதும் திருப்தியடையதவராக துயருற்ற நிலையிலேயே காணப்பட்டார் ஒரு தோல்வியுற்ற கலைஞனாகவே அவர் தன்னை எப்போதும் கருதினார் . அவர் தயாரித்த சில படங்களின் தோல்விகள் அவரை பெரிதும் பாதித்தன.

 இந்த அவரது மனோநிலை பியாசா வில் உக்கிரமாக வெளிப்பட்டது படத்தில் கவிஞனாக நடித்த குருதத் இறந்தபிறகே புகழ் அவரை வந்தடைவதாக திரைக்கதை எழுதியிருந்தார். உண்மையில் அதுதான் அவர் வாழ்விலும் நடந்தது. ரேவைப் போல அவர் வணிக சினிமாவிலிருந்து விலகி நடக்கவில்லை . வணிகம் எனும் வலையில் சிக்கிக்கொண்ட ஒரு புறாவின் மனநிலையில் அவர் தவித்தார். ஒரு பக்கம் தீவிர படைப்பு மனோபாவம் இன்னொருபக்கம் வர்த்தக சினிமா எனும் கொடூர இயந்திரம் இன்னொருபக்கம் வஹீத ரஹ்மானுடனான காதல் தோல்வி . இப்படி பல்வேறு திசைகளில் ப்ரச்னைகளீன் கரங்கள் அவரை இழுக்க அதுவே அவரது தொடர்ந்த தோல்வி மனப்பான்மைக்கு காரணமாக அமைந்த்து.

 1964 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி அவருடைய ப்ளாட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் தூக்க மாத்திரை அதிகமாக சாப்பிட்டதன் காரணமாக அந்த தற்கொலை நிகழ்ந்ததாக பிற்பாடு அறியப்பட்டது. அவரது திரைப்படங்கள் பிரான்ஸ் ஜெர்மனி ஜப்பான் ஆகிய நகரங்களில் சிறப்பு த்திரையீடாக நிகழ்த்தப் பட்டபோது அரங்கு நிறைந்த காட்சிகளாக கைதட்டல்களுடன் வரவேற்பை பெற்றன. ஆனால் இதற்காக அவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பே வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டியதாக இருந்தது என்பதுதான் அன்றைய இந்திய சினிமவின் நிலை . இன்று குருத்த் இந்திய சினிமாவின் லச்சினைகளீல் ஒன்றாகவும் எண்ணற்ற சினிமா காதலர்களுக்கு காவியத் தன்மையின் நிறைவிடமாகவும் விளங்குகிறார்.

 ( புத்தக கண்காட்சியில் வெளிவரவிருக்கும் எனது நூலான உலக சினிமா வரலாறு - இரண்டாம் பாகம் - மறுமலர்ச்சியுகம் நூலிலிருந்து )
 - அஜயன் பாலா

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...