May 31, 2025

கைவிட்டுப்போனது தமிழ் சினிமாவின் கலைக் களஞ்சியம் , டிகர் ராஜேஷ் : அஞ்சலி .... - அஜயன் பாலா எழுத்தாளர் இயக்குனர்

நடிகர் ராஜேஷ் இறந்த செய்தி இன்று காலை நேரத்தை சட்டென இருளச்செய்து விட்டது மிகச்சிறந்த ஆய்வாளர் வெறும் சினிமா மட்டுமல்லாம்ல்லாமல் அரசியல் பண்பாடு வரலாறு என பல துறை வல்லுனர் அவர் சென்ற வாரம் தான் போனில் குறுஞ்செய்தி அனுப்பினார் . அவரது மகன் தீபக் திருமணம் வரும் ஜீன் 6ம் தேதி அணைகாட்டில் தட்டு மாற்றுதல் மற்றும் ஜூலை 27 ஆம் தேதி திருமணம் என்றும் ஆகஸ்டில் வரவேற்பு என்றும் வித்திய்சாமாக இருந்தது . நான் உடனே போன் செய்து என்ன சார் ரொம்ப சிக்கனமா இன்விடேஷன் அடிச்சிட்டீங்க என சொல்ல உடனே சிரித்த்படி அட இல்லை சார் இன்விடேஷன் ரெடியானதும் கொடுக்க்க நேர வருவேன் ஆனா முன்னாடியே சொல்லிட்டா உங்க தேதியை எனக்காக இப்பவே ஒதுக்கி வச்சிக்கவீங்க இல்லை . என சொன்னவர் நான் எப்பவுமே பரபெக்ஷனிஸ்ட் ..சார் . எல்லாத்தையும் திட்டமிட்டு செய்ஞ்சா தான் நிம்மதியா தூங்க முடியும் . என் சாவு தேதி கூட எனக்குத் தெர்யும் அந்த அளவுக்கு நான் அக்யுரசி எனச்சொல்லி சிரித்தார் . உண்மையில் இந்த தேதியை அவர் முன்கூட்டி தெரிந்துதான் அவசர்மாக மகன் திருமணத்தை திட்டமிட்டாரோ என்றும் தகவல்களை பகிர்ந்து கொண்டாரோ என்றும் எண்ணத்தோன்றுகிறது . .1998 ஆம் ஆண்டு அவரை முதன் முதலாக அவரது நநத்னம் அலுவலகத்தில் சந்தித்த போது அன்று உலக சினிமாவின் மிகச்சிறந்த நூலான 5சி இஸ் ஆப் சினிமாட்டோகிராபி எனும் 1000 ம் பக்க நூலை மொழி பெயர்த்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார் .எனது நண்பர் ஒருவர் அப்போது அவருக்கு உதவிக்கொண்டிருந்தார் அந்த நண்பரை சந்திக்க அவர் அலுவலகம் சென்ற போதுதான் நடிகர் ராஜேஷ் அவர்களை முதன் முதலில் நேரில் சந்தித்தேன் . அன்று அவரோடு பேச முடியவில்லை . நான் அப்போது சினிமாவில் முழுமையாக கால் பதிக்கவில்லை . ஆனாலும் அவருக்கு அந்த நூலை மொழி பெயர்த்து வெளியிடுவதில் ராஜேஷ் சாருக்கு வெளிப்பட்ட ஆர்வம் என்னை ஆச்சர்யப் படுத்தியது. அன்று அவரை வியப்புடன் பார்க்கத்துவங்கிய என்னை நேற்று வரை பல சந்தர்ப்பங்களில் என்னை தொடர்ந்து ஆச்சரயப்படுத்தி வந்தார் . பிற்பாடு நான் மார்லன் பிராண்டோ நூலை 2006 ஆம் ஆண்டில் எழுதி வெளியொட்டேன். இன்று அது பல பதிப்புகள் வெளி வந்தாலும் முதல் பதிப்பு வெளி வந்த இரண்டு மாதங்கள் வரை யாரும் புத்த்கம் பற்றி பேசவில்லை . நண்பர்கள் கூட பெரிதாக் ரியாக்ட் செய்யவில்லை நாம தான் சரியா எழுதலியோ என நினைத்திருந்த போதுதான் . ஒரு அழைப்பு என் தொலைபேசிக்கு வருகிறது . நான் ராஜேஷ் பெசறேன் கம்பீரமான குரல் . . தொடர்ந்து ஒரு மணி நேரம் புத்த்கத்தை பாராட்டி பேசினார் .முதன் முதலாக திரைத்துறையில் என் நூலைப் படித்துவிட்டு பார்ட்டிபேசியது அவர்தான் .என்னை பாராட்டும் விதமாக அன்று மாலையே காஸ்மோபலிட்டன் கிளப்புக்கு வரவழைத்து சிறு விருந்து கொடுத்து உபசரித்து பாராட்டி மகிழ்ந்தார் நான் செய்ய நினைச்சது நீங்க செஞ்சிட்டீங்க அதனால தான் இது என சொல்லி மகிழ்ந்தார். அவாருக்கு தெரிந்த்தை பேச அவருக்கு அன்று யாரும் கிடைக்கவில்லை அதான்ல் அடிக்கடி பேசி தன் படித்த விஷய்ங்களை என்னோடு பகிர்வார் .உலக சினிமாக்கள் குறித்தும் தமிழ் சினிமா குறித்தும் அவ்வ்ப்போது உரையாடுவார் . சீனாவுக்கு பயணம் சென்று வதவுடன் என்னை அழைத்து அந்த அனுபவத்தை குழ்ந்தை போல பகிர்ந்து கொண்டார் . பெசாம இதையெல்லாம் பயணக்ட்டுரையா எழுதுங்க சார் என்றதும் ஆமால்ல என சொல்லியவர் கையோடு தந்திக்கு போன் செய்து அதில் தொடராக எழுதி பதிவு செய்தார் . அவ்வ்போது ஹாலிவிட் நடிகர்கள் போல போனிலேயே பேசிக கான்பிப்பார் ஒரெ வசனத்தை ஷேக்ஸ்பியர் பாணியிலும் மெதட் ஆக்டிங் பாணியிலும் தமிழ் நாடக பாணிய்லும் பேசி நடித்துக்காட்டுவார் . ஹாலிவுட் படங்கள் பற்றியும் நட்சத்திரங்கள் அனைவர் பற்றியும் அவருக்கு தெளிவான பார்வையும் அறிவும் இருந்தது. அதே அளவுக்கு தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகர்கள் குறித்தும் அவர்களது வர்லாறு குறித்தும் முழுமையாக தெரிந்து வைத்திருந்தார் . குறிப்பாக பழைய நடிகர்கள் யார் பற்றிக் கேட்டாளும் அவர்கள் முழு வரலாற்றையும் வெற்றி தோல்வி களையும் அவர்கள் வாழ்வில் நடந்த சுவையான அனுபவங்களையும் குறித்து பேசி ஆச்சர்ய்பட்டுத்துவார். ஒரு முறை பி. யூ சின்னப்பா பற்றி பேசிக்கொண்டிருந்த போது எப்படி சார் உங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சது என கேட்டபோது . நான் நேரா அவங்க ஊருக்கெ போய் விசாரிப்பேன் சார் . சும்மா இருக்கும் போது வேற என்ன வேலை காரல பெட்ரோல் போட்டுகிட்டு தமிழ் நாடு புல்லா சுத்தியிருக்கேன். கிட்டத்ட்ட எல்லா நடுகர்களோட சொந்த கிராமத்து வீட்டுக்கும் போயிருக்கேன் ஏன் சார் இப்படி என்ன சார்…, மனுஷ வாழ்க்கை இவ்ளோதான் சாவ்றதுக்குள்ள எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும் சார் சினிமா நடிகன் ஏதாவது பழக்கத்துக்கு அடிமையா இருப்பான் . எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை . என் மனைவியை தவிர யாரையும் தொட்டதுமில்ல இப்படி புத்த்கம் படிக்கிறதும் பிடிச்ச நடிகர்களோட வீட்டைத் தேடி ப்போய் தகவல் சேகரிக்கறதும் தான் எனக்கு இருக்க ஒரே கெட்ட பழக்கம் எனச் சொல்லி சிரிப்பார, . வெறும் சினிமா மட்டுமல்லாம் தமிழக இந்திய உலக அரசியல் த்லைவர்கள் பற்றியும் அவர்கள் பழக்க வழ்க்கம் குணாம்சம் வர்லாறு அனைத்தும் தெரிந்து வைத்திருந்தார் ஒரு முறை வி. கே. கிருஷ்ணமேனன் பற்றி பேச்சு வந்தது கிருஷ்ண மேனன் 50களில் தேசிய ராஜாங்க அமைச்சராக பத்வி வகித்த்வர் மட்டுமல்லாமல் சிறந்த் அறிவு ஜீவி என நேருவால் பாரட்டு பெற்றவர் அவர் குறித்தும் கூட நான் அறியாத தகவல்களை சொல்லி ஆச்சர்யப் படுத்தினார். அந்த அளவுக்கு இந்திய அரசியல்வாதிகள் குறித்த பழுத்த அறிவு அவருக்கு இருந்தது . காந்தி நேரு இந்திரா ஜின்னா என அனைவரையும் குறித்து பக்கம் பக்கமாக பேசுவார் வாழ்க்கை குறித்து பழுத்த அனுபவம் அவருக்கு உண்டு . சதா மனிதர்கள் குறித்தும் சமூகம்குறித்தும் சினிமா குறித்தும் சிந்தித்துக் கொண்டிருப்பார் இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்கு தூரத்து உறவினர் . ஆனால் அதை அவர் எங்கேயும் சொல்லிக்கொண்டவரில்லை . அவரது வீட்டின் வரவேபறை போல நான் யார் வீட்டிலும் பார்த்ததில்லை எம் ஜி ஆர், சிவாஜி , எம் ஆர் ராதா, தாமஸ் ஆல்வா எடிசன், பெரியார், அண்ணா, சாவித்ரி ,சந்திரபாபு பத்மினி மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் என ஒரு இருபது விஐபிக்களீன் புகைப்படஙக்ளை கடவுளர் படங்கள் போல வரிசையாக வைத்திருப்பார் எதுக்குசார் இவங்க எல்லார் போட்டோவும் வச்சிருக்கீங்க என்றேன் இவங்க்தான் சார் எனக்கு எல்லாம் நான் வியந்து பார்த்த மனிதர்கள் . நான் வாழற வாழ்க்கையை நான் செதுக்கிக் கொள்ள எனக்கு இவங்கதான் கத்துகொடுத்துருக்காங்க இவங்களை தினசரி பாத்தாதான் மனசு நெறையும் என்றார் எனது தமிழ் சினிமா வரலாறு நூல் வெளியிட்டு விழாவுக்கு வந்து நூலை வெளியிட்டு சிறந்த உரை நிகழ்த்தினார் . அதே நூலின் இறண்டாம் பாகமான திராவிட எழுச்சி நூலுக்கும் சிறந்த அணிந்துரை வழங்கி கவுரவித்தார் . எனது திருமணத்தன்று வெளியூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் அவரால் வரமுடியவில்லை . ஆனால் மறு நாளே போன் செய்து உங்க வீட்டு வாசல்ல் இருக்கேன் எனக் கூறி ஆச்சர்யப்படுத்தினார் வாசலுக்கு ஓடி அவரை அழைக்க வீட்டுக்கு பரிசுடன் வந்து என்னையும் மனைவியையும் வாழ்த்திவிட்டுப் போனார் இவ்வ்ளவு தூரம் நடமாடும் நூலகமாக இருக்கீங்க பின்ன ஏன் சார் ஜோதிடம் லாம் என்பேன் சார் ஜோதிடம் கணக்கு சார் அறிவியில சார் அதை நான் துல்லியாம கத்துகிட்ருக்கேன் சார் . யாராவது கிறீஸ்த்வன் ஜோசியத்து பின்னாடி அலையறது பாத்ருக்கீங்களா .. நான் ஏன் இதை பாலோ செய்யறேன்னா எனக்கு மத அடையாளம் எதுவுமில்ல .. ஆனா நமக்கு தெரியாத விஷய்ம் உலகத்துல எதுவும் இருக்கக் கூடாதுன்னு தான் என்பார் ஒண்ணு சொல்லட்டுமா சார் என் சாவு தேதி கூட எனக்குதெரியும் ஆனா சொல்லமாட்டேன் . பயந்துடுவாங்க என சொல்லி சிரிப்பார் வித்தியாசமான மனிதர் அவர் இறப்பு தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பு அவர் சிரந்த நடிகராக பல படங்களில் நடித்திருந்தாலும் ஆட்டோகிராப் படத்தில் கொஞ்சமே வந்தாலும் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டு பெற்றது அச்சமில்லை அச்சமில்லை , அந்த ஏழு நாட்கள் சிறை மகாநதி விருமாண்டி போன்றவை அவரது சிறந்த நடிப்புக்கு உதாரணங்கள் நக்கிரன் தொலைக்காட்சி மூலம் இந்திய தமிழக வரலாறு தொடர்பாக எழுத்தாளர் வசனகர்த்தா ரத்னகுமார் அவருடன் பல முக்கிய நேர்காணல்களை நிகழ்த்தியிருக்கிறார் . அவை அனைத்துமே அனைவரும் பார்த்து அறியவேண்டிய வரகாற்று பொக்கிஷங்கள் திமுக அரசு தக்க சமயத்தில் அவரை தமிழ் நாடு திரைப்ப்டக்கலூரிக்கு முதல்வராக பங்கேற்க வைத்து பெருமை சேர்த்தது .மற்ர நடிகர்கள் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு இது . இப்படி பல்வெறு சிறப்புகள் கொண்ட மனித்ரை ஒரு நடமாடும் கலைக்களஞ்சியத்தை நாம் இழந்துவிட்டொம் வாழ்க்கை முழுக்க தேடிக்கொண்டே இருந்தார் இன்று ஒருநாளில் அவர் குறித்து உலகம் தேடும்படி வைத்துவிட்டார் அவருககு என் சார்பாகவும் எங்கள் பாலுமகேந்திரா நூலகம் சார்பாகவும் அஞ்சலி

கைவிட்டுப்போனது தமிழ் சினிமாவின் கலைக் களஞ்சியம் , டிகர் ராஜேஷ் : அஞ்சலி .... - அஜயன் பாலா எழுத்தாளர் இயக்குனர்

நடிகர் ராஜேஷ் இறந்த செய்தி இன்று காலை நேரத்தை சட்டென இருளச்செய்து விட்டது மிகச்சிறந்த ஆய்வாளர் வெறும் சினிமா மட்டுமல்லாம்ல்லாமல் அரசியல...