November 2, 2024

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் மேகங்களுக்கிடையில் ஒரு மினுக்கிடும் வெள்ளி போல சட்டென ஒன்று வது போனது அந்த வெளிச்சம் அவள் கண்ணிலிருந்தா அல்லது கன்னத்திலிருந்தா யூகிக்கமுடியவில்லை பின்னால் அவள் சொல்வதை கேட்டுக்கொண்டு தலையாட்டி நின்ற அவள் தங்கையோ தோழியோ அவள் தோடு வெளிச்சமாகவும் இருக்கலாம் அல்லது அவர்களுக்கும் பின்னால் ரேழியில் துள்ளி விளியாடிக்கொண்டிருந்த சிறு குழ்ந்தையின் கொலுசிலிருந்தோ அல்லது அதற்கும் பின்னால் இடித்துக்கொண்டிருந்த பாட்டியின் வெள்ளிக் குழவியினுடைய அசைவிலிருந்தோ வந்திருக்கலாம் ‘ ஆனாலும் அந்த மினுக் வெள்ளியூட்டம் அவள் தொடர்பானது அந்த வெளிச்சத்தில் நானும் திளைக்கிறேன். என்னால் உங்களுக்கும் அந்த வெளிச்சம் உங்கள் காதலியின் வீதிக்கு அழைத்துச் செல்லட்டும் இப்படித்தான் அவர்களால் இந்த உலகம் ஒளியூட்டம் பெறுகிறது - அஜயன்பாலா - 04-11-2024

No comments:

இருபது வயதுக்குள் மகா கவி - ஆர்தர் ரைம்போ - உலக இலக்கியச் சாளரம்

பிரெஞ்சு இலக்கிய வரலாற்றில் ஒளிமண்டலமாகத் திகழும் கவிஞர் ஆர்தர் ரைம்போ (1854–1891) பற்றி மிக அசாதாரணமான உண்மை ஒன்று உள்ளது:அவர் எழுதிய அ...