November 30, 2009

நீரூற்று இயந்திர பொறியாளன்...நாவல்

www.thadagam.com இணைய இதழில் வெளியாகிவரும் எனது நாவல் தொடரிலிருந்து ஒரு பகுதி
-அஜயன்பாலா


chapter :11

கோவிலுக்கு போய் பாருங்கள் கடவுள்கூட பணத்துக்காக அலைகிறார்.


உலகின் பல திசைகளில் இதுபோன்று யாரோ ஒருவன் எதையோ தன்னலமற்று செய்து கொண்டிருப்பதால்தான் தினமும் ஆறுமணிக்கு சூரியன் ”டக்” கென வந்துவிடுகிறான். கமிஷனருக்கு முதன் முத்லாக நீரூற்று இயந்திர பொறியாளனை பார்த்ததும் அப்படித்தான் தோன்றியது.அதுவும் அவர் ஞாபகத்தில் சூரியன் தோன்ற காரணம் அவனது பரந்த வடிவான் நெற்றியும்,புருவமும் அத்ன் கீழே ஒளிர்ந்த இரு கண்களும். அந்த் கண்கள் தலைசிறந்த ஞானிக்கான தகுதியை கொண்டிருந்தன. அதன் பிரகாசமும் குளுமையும் அளப்பரியது.கிரேக்க சிற்பங்களில் வடிக்கப்படிருப்பது போன்ற செதுக்கப்பட்ட நாசி.பென்சிலால் அள்வெடுத்து வரைந்தது போன்ற உதடுகள்.அனைத்தையும் விட தோள்வரை சுருள் சுருளாக கருகருவென அடர்த்தியாய் தொங்கும் அந்த முடிதான் அவனது இத்தனை வசீகரத்துக்கும் காரணம் என்பதை கமிஷ்னர் அறிந்து கொண்டார்.மொத்தமாக சொல்வதானல் ஆண்களின்முகம் கூட இத்த்னை அழகாய் தேஜஸாய் இருக்குமா என கமிஷனருக்கே கூட சந்தேகம் வந்துவிட்டது.மட்டுமலாமல் நடையில் இருந்த கம்பீரம் அமரும்போது அவனிடம் காண்ப்பட்ட மிடுக்கு என பலவகைகளில் வசீகரமானவனாக இருந்தான் .அதே சமயம் அழுக்கு உடையும் தோளில் தொங்கிய துணிமூட்டையை போன்ற பையும் முகத்து தாடியும்தான் சற்று உறுத்தல். சரவணன் சொல்லியிருந்தது போலவே அவன் கோடு போட்ட கால்சராய் அணிந்திருந்தான். ஆனால் அவை அவர் கற்பனையில் நினைத்திருந்தது போல பளிச்சென இல்லை. அழுக்காக இருந்தன. அவன் அணிந்திருந்த கோடுகளால் ஆன அதேநிற கோட்டும் அழுக்ககத்தான் இருந்தது.சில இடங்களில் நூல்பிரிந்தும் ஒட்டு போடப்பட்டு கைகளால் தைக்கப்பட்டும் இருந்தது அந்த கோட்டு.

அவன் அறைக்குள் நுழைந்ததிலிருந்தே ஒரு வீசேஷ காந்தசக்திஅவரை சுற்றி சூழ்ந்திருப்பதாக ஒரு பிரமை.

அவன் சிரிப்பு கூட இயல்பாக ஆர்ப்பட்டமில்லமல் ஒளிர்ந்தது.

கமிஷ்னர் அவன் அதிகம் பெச விரும்பவிலை என்பதை அறிந்து கொண்டதும் துரிதமாக அவனிடம் தயாராக வைத்திருந்த அரசு முத்திரையிடப்பட்ட பழுப்பு நிற பணி உத்தரவு நமூனாவை அவனிடம் நீட்டினர்.நகராட்சியின் சட்டதிட்டங்கள் ஒழுங்கு மற்றும் பணிக்காலம் திட்டமதிப்பீடு போன்றவற்றை வாய்வழியாக துரிதமாக பேச துவங்கிய அவர் இறுதியாக மூன்று பூங்காக்களின் இருப்பிடங்களையும் அவன் தங்குமிடம் மற்றும் தங்கும் காலத்து உணவு களுக்கான வழக்கங்கள் குறித்தும் அவன் விருப்பபடி ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறி பஸ்சரை அழுத்தினார்.

ஏகாம் பரம் பதட்டத்துடன் கதவை திறந்து எட்டிபார்க்க

-சரவணனை வரச்சொல்”.

சரவணனை நீரூற்று இயந்திர பொறியாளனிடம் அறிமுகபடுத்திய கமிஷ்னர் உடன் இவர்தான் உங்களுடைய வரவுக்கான கர்த்தா,இனி உங்களுக்கு எந்த தேவை என்றாலும் இவரிடம் தெரிவிக்கலாம்
இவர் இன்று முழுக்க உங்களுடன் இருப்பார் .தொடர்ந்து உங்களுக்கான் தேவைகளுக்கு நீங்கள் இவரை மட்டும் தொடர்பு கொண்டால் போதுமானது.
உங்களால் இந்த நகராட்சிக்கும் மக்களுக்கும் பெரிய நண்மை வரப்போவதாக எங்கள் நகராட்சி மனற த்லைவர் ம.நா. பெரியசாமி நம்புகிறார்.உங்களை வரவழைக்க அவர் தான் தீவிர முனைப்பு காட்டினார். இன்றில்லாவிட்டாலும் பணிகள் துவங்கிய பிறகாவது ஒரு முறை அவரை நீங்கள் சந்திக்க வேண்டும்.

கமிழ்னர் இப்படியாக நகராட்சி மற்றும் அவனது பணிகள் குறித்து தீவிரமாக் பேசிக்கொண்டிருந்த அதேநேரம் சரவணன் சற்று விலகி வந்து நின்று முழுவதுமாய் நீரூற்று இயந்திர பொறியாளனை பார்த்தான். வெறுமனே குமரேசன் சொன்ன த்கவல்களின் மூலமாக மட்டுமே த்ன்னுடைய நாயகனாக வரித்திருந்த அவனது கனவு மனிதனை முதல் முறையாக முழுவதுமாக உள்வாங்கினான். .சிலகணங்களுக்கு முன் ஜன்னல்வழியாக பொறியாளனை பார்த்த போது கூட அவனால முழுமையாக பார்க்க முடியவில்லை ஆனால் அந்த கணம் பேரற்புதமானது. அந்த் கணம் அவன் உச்சி மண்டையில் ஓராயிரம் நட்சத்திரங்கள் பூத்து குலுங்கின. ஆனல் அத்ற்கு உண்மையான காரணம் அங்கையற்கண்ணி.அங்கயற்கண்ணீயின் வள்ப்பமான இரண்டு தாமரை போன்ற மார்பகங்கள் அவன் முதுகை முழுவதுமாக அழுந்தியது மட்டுமல்லாமல் அவ்ளது உடல் உருவாக்கிய வெப்பம் காரண்மாக அவனது ஆணுடலில் எழுந்த உணர்ச்சிகொந்தளிப்புகள் அவனது ஆண்குறியிலிருந்து தன்னியல்பாக உயிரணுக்களை உதிரவைத்துவிட்டிருந்தன.

அதன்பிறகு அங்கைக்கயற்கண்ணி எங்கு போனால் என்றே தெரியவில்லை.அவனது மனதில் இப்போது அவன் ஆவலுடன் எதிர்பார்த்துகிடந்த நீரூற்று இயந்திர பொறியாளன் குறித்த எண்ணங்கள் முழுவதுமாக விலகி முதுகில் அழுந்தி விலகிய அங்கயற்கண்ணியின் மென் முலைகளும் அதன் ஸ்பரிசமுமே வியாபித்திருந்தன. அதேசமயம் ஒரு பயம் குற்ற உணர்ச்சி பலஹினம் இவையும் அப்போது அவ்ன் உடலை முழுவதுமாக புரட்டி ஒரு கலவையான அசதியில் அவன் நாற்காலியில் சாய்ந்துகிடந்த நேரத்தில்தான் ஏகாம்பரம் வந்து கமிஷனர் அழைப்பதாக கூறி கவனத்தை கலைத்தான்.கமிஷ்னர் அறைக்குள் நுழையும் போதே பெரும் குற்ற வுணர்ச்சி அவனை தடுமாற வைத்தன.

சரவணனுக்கு பொறியாளனை இப்போது நேருக்கு நேராக பார்த்தபோது தன் உடல் அழுக்குதான் முதலில் யோசனையில்பட்டது. தான் அங்கு பொறியாளன் முன் நிற்பதற்கு எந்த தகுதியும் அற்றவன் என்பதாக உணர்ந்தான்.ஆனால் மாறாக பொறியாளன் சரவணனை பார்த்துமே தனது வலக்கையை குலுக்கலுக்கு த்யாரக நீட்ட ஒரு நிமிடம் சரவணன் தயங்கினான்.

கமிஷ்னருக்கோ ஆச்சர்யம்.

சரவணன் தயங்குவதற்கான காரணம் அவருக்கு தெரியாதல்லவா

ஆனால் பொறியளனோ அதுபற்றி எந்த விசனமும் கொள்ளாமல் சட்டென எழுந்து கொண்டு

உடலே அழுக்கிலிருந்து பிறந்ததுதான்
அதை அணுதினமும் உணரவே
இப்படியான் அழுக்கான உடைகளை அணிகிறேன்

இப்படி அவன் கூறியதும் சரவணனுக்கு உடல் உள்ளூக்குள் ஒருமின்வெட்டை சந்தித்தது.

சடாரென சரவணனின் வலக்கை தன்னை மீறி நீள பொறியாளன் அத்னை ஆதூரமாக பற்றி குலுக்கினான்.

அதுவரை பின்னால் மறைந்திருந்த நகரத்து மக்கள் இப்போது அலுவலகத்தின் வாசல் முன் கூடியிருந்தனர். அலுவலகத்தினுள்ளும் ஊழியர்கள் தத்தமது இருக்கைகளில் அமர்ந்தபடி ஆவலுடன் கமிஷ்னரின் அறைக்கதவையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தனர்.

ஒருகணத்தில் சட்டென கதவு திறக்க யாரும் உத்தரவிடாமல் சடசடவென இருக்கைகளை கால்களை பின்னுக்கு நகர்த்தி அனைவரும் எழுந்துகொண்டனர். திறந்தகதவிலிருந்து அந்த அலகு நீண்ட வினோத பற்வை முதல் ஆளாக வராந்தாவை கடந்து வாசலை நோக்கி பறக்க நீரூற்று பொறியாளனும் அவன்பின்னால் சரவணனும் பறவையை பின் தொடர்ந்து வராந்தாவுக்குள் பிரவேசித்தனர்.

வெளியே கூடியிருந்த கூட்ட்டத்தில் பெரும் பரபரப்பு.
வராந்தாவில் இருந்த அலுவலக ஊழியர்கள் அனைவரையும் பார்த்து பொறியாளன் கண்களில் ஒளி மின்னும் விதமாக கைகூப்பி வணங்க
ஒவ்வொருவரும் அத்னை ஒவ்வொருவிதமாக உள்வாங்கிக்கொண்டனர்.

சிலர் அவனது அழுக்கு உடைய்யை பார்த்து முகம் சுளித்தனர். யாரோ பிச்சைக்காரனை கூட்டிவந்து ஏமாற்றுகிறார்கள் என டைப்பிஸ்ட் ஜானகி மனதில் நினைத்தாள்.ஹெட் கிளார்க் கோவிந்தன் தனக்கருகில் இருந்த செங்கல்வராயனின் தொடையை த்டவி “ இவந்தான் அந்த பைத்தியக்காரனா நல்லா சோளகொல்லை பொம்மை மாதிரி இருக்கான்யா உன் வீட்லருந்து ஒரு கரிசட்டியை எடுத்தார்ந்திருந்தா த்லையில கவுத்து நம்ம கயனில நிக்கவைச்சா நல்லாருந்துருக்கும் என கிசுகிசுத்தான். சரவணன் ஒவ்வொருவர் பெயராக சொல்லி அறிமுகபடுத்த நீரூற்று பொறியாளன் அனைவருக்கும் கைகூப்பி வணக்கம் தெரிவித்தான்

பின் பொறியாளனும் சரவணனும் வெளியேவர சண்முகம் ஆவலுடன் தன் டீக்கடையிலிருந்து எட்டிபார்த்தான்.ஒட்டு மொத்த கூட்டமும் பரவசத்தோடு கை தட்டியது.அவர்களை ஆச்சர்யத்துடன் பார்த்த பொறியாளன் சரவணனிடம் எனக்காகவா இவர்கள் கூடியிருக்கின்றனர் என ஆச்சர்யத்துடன் கேட்டான்.
பின் அவர்கள் கூச்சல் எழுப்பியதை தொடர்ந்து பொறியாளன் இங்கிருந்தபடியே அவர்களிடம்

’நான் கீழினும் கீழானவன் ,என்னிடம் எதுவும் இல்லை என்னை இப்படி பார்க்காதீர்கள் .நான் உங்களின் விரோதியும் கூடத்தான். ஒருநாள் என்னை நீங்கள் கல்லால் அடிப்பீர்கள்,மோசமானவன் என தூற்றுவீர்கள் ,அன்று உங்களின் இந்த நிமிடங்கள் வீணானதாக தோன்றும் த்யவு செய்து விலகுங்கள் ...எனது அழுக்கு உடலின் துர்நாற்றம் இன்னும் சற்று நேரத்தில் உங்களை இங்கிருந்து விரட்டிவிடும்”

அவன் இப்ப்டிகூறியதை ஆச்சர்யத்துடன் பார்த்த நகரத்து மக்கள் சிலர் உற்சாகமிழந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சிலர் இவன் குரல் வார்த்தைகள் அனைத்தும் விசேஷமானதாக இருக்கின்றன .உண்மையிலயே இவனிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது.

இல்லாவிட்டால் கூலியே இல்லாமல் வெறுமனே சேவை செய்ய அவன் பைத்தியக்காரனாகத்தன் இருக்கவேண்டும்

உண்மைதான் கோவிலுக்கு போய் பாருங்கள் கடவுள்கூட பணத்துக்காக அலைகிறார்.இப்படியாக பேசிக்கொண்டிருந்த நெசவளர்கள் இருவருடன் இன்னும் சிலரும் அவன் அடுத்து செய்யபோவதை காண ஆவலுடன் காத்திருந்தனர். இதே சமயம் த்ந்தயோடு அதுவரை உரையாடிக்கொண்டிருந்த அங்க்கையற்கண்ணி ஆர்வம் தாளாமல் அலுவலக வாசலுக்கு ஓடிவந்தாள்
வாழ்வின் தீராதுயரம் தன் பின்னால் அங்குவந்து நிற்பதை அறியாத நீரூற்ரு இயந்திர பொறியாளன் சரவணனுடன் வாசலை நோக்கி புறப்பட்டான் .
பொறியாளன் தங்கப்போகும் காக்கா மலைப்பூங்காவுக்கு புறப்படுவதற்காக இருவரும் வெளியேவந்த சமயம் அங்கையற்கண்ணி வாசலுக்குவிரைந்தாள். வாசலில் கூடியிருந்த கூட்டத்தில் ஒதுங்கி நின்ற பிச்சு மணி வேகமாக கூட்டத்தை விலக்கியபடி பொறியாளனை நோக்கி முன்னேறினான்.அதே சமயம் அவனது வலக்கை துரிதமாக இடுப்பில் மறைத்து வைத்திருந்த சிறிய கறுப்பு பிடி போட்ட கத்தியை எடுத்த்துக்கொண்டிருக்க ..சரவணனை பார்த்து கை அசைத்த அங்கயற்கண்ணி பொறியாள்னை தனக்கு அறிமுகப்படுத்தும்படி சைகையால் தெரிவித்தாள்..சரவணன் பொறியாளனை தொட்டு திரும்பக்கூறினான். அதுவரை கூட்டத்தை வில்லக்கிக்கொண்டு முன்னேறிய பொறியாளன் சரவணன் தீண்டலால் அவன்பக்கம் திரும்பினான்.பின் அவன் அலுவலக வாசல் பக்கம் திரும்பி அங்கயற்கண்ணியை முதல் முறையாக பார்க்கும் அதே தருணத்தில் பிச்சுமணியின் கத்தி பொறியாளனின் உடலுக்குள் பாய்ந்தது.
தொடரும்

November 10, 2009

சத்யஜித்ரே: இந்திய சலனத்திரையின் முடிவுறாத அழகியல்

உலக சினிமா வரலாறு

17




கல்கத்தாவில் 19ம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் பிரம்ம சமாஜம் தீவிரமாக இயங்கிவந்த போது அத்ற்காக த்ன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒருவருக்கு அபாரமான கலை ஆற்றல். எழுத்துஇலக்கியம் ஓவியம் வானசாஸ்திரம் என பலதுறையில் சிறந்து விளங்கினார். ஆனாலும் அவரால் த்ன் திறமைக்கேற்ற புகழையோ அங்க்கீகாரத்தையோ அடையமுடியவில்லை. அவர் பெயர் உபெந்திரகிஷோர் தன்னால் நிறைவேற்றமுடியாமல் போன தன் கனவை மகனாவது நிறைவேற்றுவான் என எண்ணிண்னார். அவரது மகன் சுகுமார் ரே வும் தந்தைய்யை போல அபாரமான கலைஆற்றல் கொண்டவராகத்தான் இருந்தார். ஆனாலும் என்ன சாபக்கேடு அவராலும் தன் திறமைக்கேற்ற புகழை ஈட்ட முடியவில்லை. ஆனால் உபேந்திரகிஷோரின் கனவை அவரது மகன் நிறைவேற்றாவிட்டாலும் அவரது பேரன் அவர் கனவை நிறைவேற்றினான்.அந்த பேரனின் பெயர்தான் சத்யஜித் ரே. பின்னளில் புகழ்பெற்ற இயக்குனரானபோது தாத்தாவின் கதை ஒன்றையே திரைக்கதையாக்கி அத்னை படமாகவும் எடுத்து அவரது தாத்தா உபேந்திரகிஷோரின் கனவை நனவாக்கினார்.மட்டுமல்லாமல் தனது தந்தை சுகுமார் ரேவை பற்றியும் ஒரு ஆவண்ப்பட்த்தையும் எடுத்து அவருக்கு புகழஞ்சலி சேர்த்திருக்கிறார். இப்படி தாத்தா கண்ட கனவையும் அப்பா கண்ட கனவையும் ஒரு சேர ரே நனவாக்குவதற்கு முக்கிய காரணம் யார் தெரியுமா ..ஒரு பெண் ஆமாம் அவர் ரேவின் தாயார். சுகுமார் ரேவின் மனைவி சுப்ரபா ரே. இத்த்னைக்கும் 1921 மேமாதம் 2ம் தேதி இருவருக்கும் மகனாக ரே பிறந்து மூன்றே வருடத்தில் அவரது அப்பா சுகுமார்ரே இறந்துவிட்ட நிலையில் தனியாளாக மகனை ஒரு கலைஞனாக மாற்றவேண்டும் என ஒரே பிடிவாதமய் இருந்து அத்னை சாதித்து காட்டியவர்தான் சுப்ரபா ரே

சுப்ரபா ரேவுக்கு உண்மையில் கலையின் மீதான் ஈடுபாடு கணவரிடமிருந்து பற்றியதோ அல்லது இயல்பாக இவருக்குள்ளும் ஊறிக்கிடந்ததோ தெரியவில்லை. கணவர் இறந்த நிலையில் கலையும் இலக்கியமும் சுபரபாரேவுக்குள் புதியவாசல்களை திறந்தன. மகனை பின்னாளில் சிறந்த கலைஞனாக உருவாக்கவேண்டும் எண்ணம் கொண்டார். இதன் காரணமாக அன்று வங்க உலகின் பெருமைமிக்க மகாகவியான தாகூரை சந்திக்க சிறுவன் ரேவை இழுத்து சென்றார். பின்னாளில் ரே இச்சம்பவத்தை தன் வாழ்க்கை வரலாற்றில் பதியவைத்துள்ளார். தன் அன்னையின் இலக்கிய ஈடுபாடுதான் தன்னை உலகமறிந்த இயக்குனராக்கியது என அச்சம்பவத்தை குறிப்பிடும்போது கூறியுள்ளார்.

பிற்பாடு பாலிகஞ்ச் ஹைஸ்கூலில் பள்ளிபடிப்பிலும் பிரசிடென்சி கல்லூரியில் பி.ஏ.பட்டபடிப்பும் முடித்தபின் அவரது அம்மா ஓவியம் மற்றும் நுண்கலை படிக்கும்படி தாகூரின் சாந்தினிகேதனில் இயங்கும் விஸ்வ பாரதி பல்கலைகழகத்தை பரிந்துரைத்தார். ஆனால் ரேவுக்கோ சாந்தினிகேதனில் சேர விருப்பமில்லை. காலமாற்றம் அவருக்குள் உருவாக்கியிருந்த புதிய சிந்தனைகாரணமாக பழமையில் திளைத்த சாந்தினிகேதனை ரே வெறுத்தார். ஆனாலும் அன்னையின் விருப்பத்தை அவரால் தாண்டமுடியவில்லை. சாந்தினிகேதனிலேயே சேர்ந்தார். ஆனால் அவரது எதிர்பாரா அதிர்ஷ்டமாக நந்தலால் போஸ் பினோத் முகர்ஜி போன்ற நவீன பாணி ஓவியர்கள் அங்கு ஆசிரியர்களாக இருந்து அவருக்குள் ஊறிக்கொண்டிருந்த கலைஆற்றலை செழுமைப்படுத்தினர். அவர்களின் மீது கொண்ட அபிமானம் காரணமாகத்தான் பிற்பாடு ரே இவர்களை குறித்து இன்னர் ஐ எனும் ஆவணப்படத்தை இயக்கியிருந்தார்.

ஓவியபடிப்பு முடிந்தகையோடு மாதசம்பள்ம் 80 ரூபாய்க்கு டி.ஜெ கெய்மர் எனும் ஒரு பிரிட்டிஷ் விளம்பர கம்பெனியில் காட்சிபடுத்துபவர் வேலைகிடைத்தது. தொடர்ந்து D.K GUPTA என்பவர் நடத்திவந்த SIGNET PRESS எனும் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தவர் அங்கு பதிப்பிக்கப்பட்ட பல்வேறு புத்தகங்களுக்கு அட்டைபடங்களை வரைந்து தந்தார். ஜிம் கார்ப்பட்டின் குமாவும் புலிகள் ஜவஹர்லால் நேருவின் டிஸ்கவரி ஆப் இந்தியா போன்ற புத்தகங்களின் அட்டை ரேவின் கைவண்ணத்தால் மிளிர்ந்தன. இச்சமயத்தில்தான் பிபூதி பூஷன் பாந்தோபாத்யாயாவின் பதேர் பாஞ்சாலி நாவல் அவரது மேசைக்குவந்தது. அதனை படித்து அவர் லயித்துக்கொண்டிருந்த அதேநேரத்தில் அவரது வாழ்வில் இன்னொரு முக்கியமான காரியமும் நடந்தது. பிற்பாடு இயக்குனராக பரிணமித்த சித்தானந்த தாஸ் குப்தா என்பவருடன் இணைந்து கலகத்தாவில் திரைப்படசங்கமொன்றையும் ரே துவக்கியிருந்தார். இதன் வழி அவருக்கு உலகசினிமாக்களின் பரிச்சயம் தொடர்ந்து கிடைக்க துவங்கியது. இச்சமயத்தில் அவருக்கு இன்னொருபுதிய வெள்ளைக்கார நண்பர் அவருக்கு அறிமுகமானார்.அவர் ஒரு ராணுவ வீரர். அப்போது இரண்டாம் உலகபோர் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காரணத்தால் அமெரிக்கபடைபிரிவிலிருந்து அவரங்கு வந்திருந்தார். நார்மன் கிளார் எனும் நபருக்கும் ரே வுக்குமிடையில் ஒருநட்பு துளிர்க்க இருவரும் சிகரட்டை ஊதிக்கொண்டு கலகத்தா வீதிகளில் உலகசினிமாக்களை பற்றி மணிக்கனக்கில் பேசிக்கொண்டிருந்தனர். நார்மன் கிளார் ரேவுக்கு அப்போது வந்துகொண்டிருந்த அமெரிக்க சினிமாக்களை பற்றி தொடர்ந்து தகவல்களை கொடுத்து ரேவின் அறிவையும் கனவையும் ஊதிபெருக்க செய்தார்.



1949ல் ரேவுக்கு பிஜோய தாஸ் என்பவருடன் திருமணம் நிகழ்ந்தது. இருவருக்கும் சந்தீப் என்ற ஒரு மகன் பிறந்தான். மகன் பிறந்த வேளையில்தான் ரெனுவார் தன் ரிவர் படத்தின் படப்பிடிப்புக்காக கலகத்தா வர ரேவுக்கு அவரோடு பழகவும் அவரது படப்பிடிப்பை பார்க்கவும் வாய்ப்புகிடைத்தது. தொடர் நிகழ்வுகள் காரணமாக அவரது வாழ்க்கை சினிமாவை நோக்கி தீவிரமாக உந்திதள்ளப்பட்டவேளையில்தான் லண்டன் பயணமும் நிகழ்ந்தது. அங்கு பைசைக்கிள்தீவ்ஸ் படத்தை காண நேரிட்டது இந்த தொடர்நிகழ்வுகளின் இறுதி முடிச்சு அல்லது கடைசி நிகழ்வாக லண்டனிலிருந்து கப்பலில் திரும்பிக்கொண்டிருந்த ரே தன் மனதுள் சித்திரங்களாக தேங்கிக்கிடந்த பிப்பூதி பூஷனின் நாவல் பதேர் பாஞ்சாலிக்கு திரைக்கதை எழுததுவங்கினார்.

பதேர் பாஞ்சாலி 1955ல் வெளியான போது டைம்ஸ் ஆப் இந்தியா இப்படம் இதர இந்திய திரைப்படங்களில்லிருந்து முற்றிலுமாக வேறுபட்டது என புகழ்ந்து எழுதியது. இங்கிலாந்தில் உலகப்புகழ்பெற்ற பிரபல சினிமா விமர்சகரான லிண்ட்சே ஆண்டர்சன் பதேர் பாஞ்சாலியை முழுவதுமாக அதனை அக்குவேறூ ஆணிவேறாக பிரித்து ஆராய்ந்து உலகின் தலைசிறந்தபடங்களில் ஒன்று என எழுதியிருந்தார்,.அதே சமயம்
படத்துக்கு மோசமான விமர்சனங்களும் கிடைத்தன. அதிலும் குறிப்பாக பிரெஞ்சு இயக்குனர் ட்ரூபோ ..கைகளால் உண்னும் ஏழைமக்களை பற்றிய படங்களை பார்ப்பது எனக்கு அருவருப்பானதாக இருக்கிறது என கூறினார். இந்தியாவிலும் சில தகுதியற்ற பார்வையாளர்கள் இன்றுவரை பலரும் ரே ஏழ்மையை உலகநாடுகளில் காண்பித்து பணம் சம்பாதிக்கிறார் என கூறிவருகின்றனர். இப்படி பலரும் பலவிதமான கருத்துக்களை சொன்னபோதும் இன்றுவரை உலகின் மிகச்சிறந்த பத்துபடங்களில் ஒன்றாக பதேர் பாஞ்சாலி இருப்பது ஒன்றே அதன் முழுமையான வெற்றிக்கு சான்று.

பதேர் பாஞ்சாலிக்கு பிறகு அதன் தொடர்ச்சியாக ரே அபராஜிதோ மற்றும் அபுசன்சார் என இரண்டுபடங்களை இயக்கியிருந்தார். இவற்றில் அபராஜிதோ வெனிஸ் திரைப்படவிழாவில் தங்க கரடி விருதை பெற்று பெருமை சேர்த்து. ரேவின் இணை சகாக்களான மிருணாள் சென் ரித்விக்கட்டக ஆகியோர் ரேவின் படங்களில் பதேர்பஞ்சாலியயைவிடவும் அபராஜிதோவையே தங்களுக்கு பிடித்த படங்களாக குறிப்பிடுகின்றனர். அபராஜிதோ எடுத்தபின் அவருக்கு இதேவரிசையில் அடுத்த படம் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை. இடையில் இரண்டுபடங்கள் இயக்கியிருந்தார். அதன்பிறகு 1959ல்தான் அபு வரிசையின் மூன்றாவதுபடமான அபுர்சன்சார் படத்தை இயக்கி வெளியிட்டார். இதுவரை உலகில் இது போல முப்பட வரிசைகள் பலவந்திருப்பினும் ரேவின் இந்த அபு வரிசைதான் மிகச்சிறந்த ஒன்று என விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அபௌசன்சாரில் அவரால் அறிமுகப்படுத்தப்ட்ட அழகு தேவதை பின்னாளில் இந்தியாவே வியக்கும் உச்ச நட்சத்திரமாக மின்னியது. ஷர்மிளா டாகூர் என்ற பெயரே அக்காலத்தில் ரசிகர்களுக்கு பெரும் மயக்கத்தை தோற்றுவித்தது. தென்னிந்தியாவுக்கு ஆராதனாவின் மூலமாக அறிமுகமான அந்த நடிகையின் முக வாத்ஸல்யம் இன்றைக்கும் பத்திரிக்கை உலகில் மதிப்பிழக்காதது. இப்படியாக ரேவுக்கு அவரது அபு வரிசையின் மூன்றாவது படம் பல பெருமைகளை கொடுத்திருப்பினும் கலகத்தாவில் கடுமையான விமர்சனங்களையும் அது எதிர்கொண்டது.

ரே இதற்கு பிறகு அதிக விமர்சனங்களை எதிர்கொண்ட படம் சாருலதா. தான் எடுத்தவற்றுள் தலைசிறந்த படமென ரே அவர்களாலேயே குறிப்பிடப்பட்ட படம் அது. 1964ல் சாருலதா வருவதற்கு முன் தேவி, மகாபுருஷ், மகாநகர் தீன் கன்யா கஞ்சன் ஜங்கா போன்ற படங்களை அவர் இயக்கியிருந்தாலும் சாருலதா அவரது மேதமைக்கு தகுந்தசான்றாகவும் கருத்தியலாகவும் அதுதுணிசல்மிக்க படமாகவும் விளங்கியது. பொதுவாக ரேவின் திரைப்படங்களில் அவரது தனிப்பட்ட பார்வைகள் எதுவும் துருத்திக்கொண்டு வெளிவருவதில்லை. காட்சிகளை தன்னிச்சையாக நிகழவிட்டு, நுட்பங்களை கவனப்படுத்தி அதன் மூலம் பார்வையாளனின் மனதில் ஆழ்ந்த சலனங்களை உண்டாக்குவதில் மட்டுமே அவரது முழு கவனமும் இருக்கும். ஆனால் சாருலதாவில் இந்த விலகி நிற்கும் தன்மையை உடைத்துக்கொண்டு ரே தீவிரமான ஒரு கதையாடலை பார்வையாளனின் முன்வைக்க சிரத்தை எடுத்துக்கொள்வார். இதனாலேயே முந்தய படங்களில் இல்லாத வகையில் காட்சிகளில் ஒரு செயற்கைத்தன்மையும் இப்படத்தில் கூடியிருந்தது. இருப்பினும் நாயாகின் மன உணர்வுகளை ஆழமாக நாமே உணரும் வகையில் அவர் படமாக்கியிருந்தவிதம் மற்றும் நாயகியாக நடித்த மாதாபி முகர்ஜியின் முகபாவனைகள் ஆகியவை மற்றும் சுபத்ரோ மித்ராவின் அற்புதமான கறுப்புவெள்ளை ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு மிகப்பெரிய மதிப்பீட்டை உருவாக்கிதந்துள்ளன. கலாச்சாரமதிப்பீட்டில் இப்படம் கடுமையான தாக்குதல் தொடுத்திருந்ததை பலரால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. விமர்சனங்கள் கருத்தியலாக மட்டுமல்லாமல் படப்பாகத்திலும் எழுந்தன. இன்றும் பதேர்பாஞ்சாலியை ரசிக்கும் சிலர் சாருலதாவில் ரே நிறைய கீழே இறங்கிவிட்டதாகவே புலம்புவர்.


சாருலதாவுக்கு பிறகு ரே தன்படைப்பாற்றலை தக்கவைத்துக்கொள்ளும் விதமாக வெவ்வேறான கதைக்களங்களில் ஈடுபாடு கொண்டார்.
1962ல் இவர் சந்தெஷ் பத்திரிக்கையில் எழுதிய ஒரு சிறுகதையை படித்துவிட்டு கொலம்பியாபிக்சர்ஸ் திரைப்படமாக எடுக்க முன்வந்தது. Aliyen என அதற்கு தலைப்பிடப்பட்டது. பீட்டர் செல்லர்ஸ் மற்றும் மார்லன்பிராண்டோ ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். என்ன காரணத்தாலோ படம் ஆரம்ப நிலையிலேயே சுழன்றுகொண்டிருந்தது. பிற்பாடு பிராண்டோவுக்கு பதில் வேறு ஒருவர் நியமிக்கப்பட்டார். படம் அப்பொழுதும் நகரவில்லை. சத்யஜித்ரேவுக்கு பெரிதாக தொகையும் அவர்கள் தரவில்லை. இச்சூழலில் படத்திலிருந்து ரே வெளியேறினார். பிற்பாடு கொலம்பியா பிக்சர்ஸ் பலமுறை கேட்டுக்கொண்டபோதும் ரே கதையின் உரிமையை தரமறுத்துவிட்டார்.

இந்த பைசாபெறாததிட்டத்தால் ரேவுக்கு கிடைத்த ஒரே லாபம் மார்லன் பிராண்டோவின் நட்பு மட்டும்தான். பிராண்டோ பிற்பாடு யூனிசெப்பின் பிராண்ட் அம்பாசடராக இந்தியாவுக்கு வந்த போது கல்கத்தவில் ரெவைவந்து சந்தித்தார்

இது நடந்த சிலவருடங்களுக்குபிறகு ஹாலிவுட்டில் 1982ம் ஆண்டு ஸ்பீல்பெர்க்கின் ஈ.டி படம் வெளியானபோது ரே அதிர்ந்தார் காரணம். ரேவால் முன்பு எழுதப்பட்ட ஏலியன் கதையை லேசாக மாற்றி ஈ.டி படம் எடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ஸ்பீல்பெர்க்கிடம் கேட்டபோது ஸ்பீல் பெர்க் திட்டமாக மறுத்துவிட்டார். ரே மற்ரும் ஸ்பீல்பெர்க் குறித்த இப்ப்ரச்னை குறித்து ரேவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆண்ரூ ராபின்சன் மேலும் பலதகவல்களை அப்புத்தகத்தில் கூறியுள்ளார்.

இடப்பட்ட காலத்தில் ரே குறிப்பிடத்தக்க சிலபடங்களைஎடுத்திருந்தார்.அதில் ஒன்று கோபி கைனே பாகே பைனே .தனது தாத்தா உபேந்திர கிஷோர் எழுதிய கதைக்கு திரைக்கதை எழுதி ரே 1969ல் வெளியிட்டார். தொடர்ந்து பாலிவுட் நடிகையான சிமிகாரேவால் நடித்த ஆரண்யர் தீன்ராத்திரி ,பிரதிவந்தி,சீமபதா, இவை கலகத்தா நகரமக்கலீன் அவல வாழ்வை மயப்படுத்தி உருவாக்கம் பெற்றிருந்தன. 1977ல் தன் முதல் இந்திதிரைப்படமாக முன்ஷிபிரெம்சந்த் எழுதிய உருதுகதையான சத்ரன் கிக்கிலாரி படத்தை எடுத்துவெளியிட்டார். இதர்உமுன் அவர் எடுத்த அனைத்து படங்களும் வங்காள மொழியை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. 1992ல் அவர் இறப்பது வரை
கரே பாரே, கண் ஷத்ரு, ஷகபொரொஷ்கா, மற்றும் அக்ண்டுக் போன்றபடங்களை அவர் தொடர்ந்து இயக்கிவந்தாலும் அவை அனைத்தும் அவரது தரத்திலிருந்து சற்றும் குறையாமல் அவரது ரசிகர்களை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருந்தது.

ஆவ்ணப்படங்களையும் சேர்த்தால் அவர் வாழ்நாளில் இயக்கிய படங்கள் மொத்தம் 35. ரே வெறுமனே ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் சிறந்த இசையமைப்பாளராகவும் .இசையின் நுட்பங்களைனைத்தையும் அறிந்தவர்.அவரே தனது படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.மட்டுமல்லாமல் அவர் ஒரு தேர்ந்த சித்திரக்காரர்.இதுமட்டுமா அவர் எழுதியகதைகள் இலக்கியதன்மை நிரம்பியவை வங்கால்ஹ்தின் குறிப்பிடத்தக்க ஐந்து சிறுகதை எழுத்தாள்ர்களூள் குறிப்பிடும் அளவிற்கு அவரது கதைகள் இன்றும் காலத்தை கடந்து நிற்பவை.இத்த்னை திற்மைகளில் தேர்ச்சி கண்ட இயக்குனர் உலக அரங்கில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே

ஆஸ்கார், வாழ்நாள் சாதனைக்கான் விருதையும் பிரெஞ்சு அரசாங்கம் லெஜண்ட் ஆப் ஹானர் விருதையும் தந்த பிறகுதான் இந்திய அரசாங்கம் பாரத ரத்னா விருதை அவருக்கு அவசரமாக வழங்கியது நாம் அனைவரும் நினைவில் கொள்ளதக்க விஷயம் ..


பொதுவாக ரேவின் திரைப்படங்க்ளில் வைக்கும் முதன்மையான குற்றச்சாட்டு அவரது முந்தைய படங்களில் காணப்பட்டதாம் பிந்தைய படங்களினால் இல்லை என்பதுதான். அதற்கு காரணம் அவரது முந்தைய படங்களின் ஒளிப்பதிவாளரான சுபத்ரோ மித்ரா அவரை விட்டு பிரிந்தது. பிற்பாடு ரே சுபத்ரோவின் ஆளும்மையை மிகவும் புகழ்ந்துதள்ளுகிறார். செட்டில் காடாதுணியால் ஒளியை பிரதிபலிக்கசெய்யும் பவுன்ஸ் லைட்டிங் அவரது தனிச்சிறப்பு. அதே போல திரை தொழில் நுட்பத்தை பொறுத்தவரை கோடார்ட் மற்றும் ட்ரூபோ ஆகியோரின் பங்களிப்பு மகத்தானது என்றும் கூறுகிறார்

அவரது படங்கள் மிகவும் மெதுவாக நகர்கின்றன என்பது பொதுவாக ரேவின் மேல் பலரும் இன்றும் எழுப்பிவரும் குற்றச்சாட்டு. பலபிரபல விமர்சகர்கள் கூட இதனை தெரிவித்திருக்கின்றனர். ஆனால் இந்த குற்றசாட்டுக்கு ரேவின் சார்பாக அகிராகுரசேவா சொன்ன பதில் இங்கே கவனிக்கதக்கது. வாழ்வைமுழுமையாக உள்வாங்கிய அவரது படங்கள் மகாநதியை போன்றவை.அவை மெதுவாகத்தான் நகரும் .கைக்க்ட்டி கூர்ந்து கவனித்தால் அந்த ஆழமான நதி நமக்கு பல சேதிகளை சொல்லிச்செல்லும்.


அஜயன்பாலா

நன்றி; புத்தகம் பேசுது நவம்பர் இதழ்

November 2, 2009

கடவுள் எனும் நண்பன்

இவை எல்லாம் நடக்கும் என திட்டங்களில்லை

இதுதான் பாதை என்ற எண்ணமும் இல்லை

இதற்குமுன் வாழ்க்கையும் இப்படி இல்லை

ஆனாலும் என் உடல் இரண்டாக கிழிக்கபடுவதை
நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்

வாழ்வின் எதிர்பாரா திருப்பமாக
என் வாகனத்தில் அதிவேக
எஞ்சின் பொருத்தப்பட்டது அன்று

பின்னொருநாளில் எனது கண்களை யாரோ
இரு முட்கரண்டிகளால்
மிகுந்தகவனத்துடன் எடுக்கின்றனர்

என்னை மீறிய முடுக்கத்தின் பலனாக
சாலை பறக்கிறது
சக்கரங்களுக்கு கீழே

அமிலம் நிரப்பபட்ட கண்ணாடியுள்
என் கண்கள் மெதுவாக இறங்குக்கின்றன.
பறந்து கொண்டிருக்கும் ஈ ஒன்று
அத்னை வேடிக்கை பார்த்தபடி வட்டமிடுகிறது.

சடுதியில் எதிர்வரும் லாரியின் நெற்றியில்
அன்பிற்குரிய காதலியே உன்பெயர் பெயர் எழுதப்படிருக்கிறது

கையுறைகளை கழட்டிய மருத்தவ்ர்
என்னை பார்த்தபடியே
தாதி நீரேந்திநிற்கும் பாத்திரத்தினுள்
கைகளை அமிழ்துகிறார்

நான் வனாந்திரத்தில் தனிமையில் நிற்கிறேன்

தோளில் ஒரு கைவிழுகிறது

நண்பனே ..அது உன்னுடையதாக இருக்க வேண்டும்

என ஆசைப்படுகிறேன்

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...