March 18, 2010

கவிதையின் அரசியல் ;கவிதை என்பது யாதெனில் ; பாகம் 2







மொழிதான் மூலம் ;சமூகத்தின் ஆதாரம்
சொற்கள்தான் மொழியின் உடல்
பைபிளின் முதல் வாக்கியமே ஆதியில் சொற்கள் இருந்தது என்பதாகத்தான் இருக்கிறது.
ஆதலால் மனிதனை விட சொற்கள் முக்கியத்துவம் வாய்ந்தது
நம் வாய் தினமும் எத்தனையோ சொற்களை பயன்படுத்துகிறது.
மனமும் சொற்கள் உருவாக்கும் பிரதிமைகளை கொண்டுதான் சிந்திக்கிறது முடிவெடுக்கிறது
இந்த சொற்கள் அனைத்தும் பால்யத்திலிருந்து சூழல் மூலமாக நாம் உள்வாங்கிக்கொண்டவை.

இந்த சொற்கள் எப்படி தோன்றின
எந்த காலத்தில் எப்படியாக அவை நமக்குள் புழங்கிவருகின்றன என்பது குறித்தெல்லாம் நாம் யோசித்திருக்கமாட்டோம்
சரி ஒருநாள் திடீரென சொற்கள் அனைத்தும் இல்லாமல் போய்விட்டதாக ஒரு கற்பனை செய்து பார்ப்போம்
யோசித்துபாருங்கள நாம் எப்படி நமக்குள் உரையாட முடியும்
நம்மை விடுங்கள் ஒரு சமூகம் அத்ன் இதர உறுப்புகளான அரசு பள்ளி மருத்துவம் போன்றவை எப்படி இயங்க முடியும்
இப்போது சொல்லுங்லள் சொற்கள் நம்மை நம் வாழ்வை எப்படியாக தீர்மானிக்கின்றன என்று

ஓவ்வொரு காலத்திலும் மக்களின் வாழ்க்கை முறை கலாச்சாரம் ஆகியவை மாறிக்கொண்டேவரும்போது மொழியானது தடுமாறுகிறது மக்களின் பயன்பாட்டினூடே முன்னும்பின்னுமான நகர்தலில் சில சொற்கள் அழிந்தும் தேய்ந்தும் மறைந்தும் போகின்றன.
அதேசமயம் வேறு மொழி அதிகாரப்படுத்தும்போதும் அல்லது இயல்பான் கலப்பின் போதும் எந்த மொழியில் சொற்கள் வலுவாக உள்ளதோ அந்த மொழி நிலைத்தும் இதரமொழிகள் அழிந்தும் போகின்றன .
அச்சுக்கலையும் பதிப்புக்கலையும் மட்டும் தோன்றியிருக்காவிட்டால் சமஸ்கிருதம் ஆங்கிலம் உருதுவார்த்தைகளைத்தான் நாம் தமிழ் வார்த்தைகளாக நினைத்து இன்னமும் பேசிக்கொண்டிருப்போம் .

இப்படியாக சொற்களின் வளமைக்கும் அது சார்ந்த மொழிமற்றும் இனத்தின் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது

இன்னும் சொல்லப்போனால் சொற்களின் மூல்மாக மொழிதான் ஒருசமூகத்தை இயக்கிக்கொண்டிருக்கிறது


வெறும் சொற்களை வைத்துக்கொண்டு ஒருவன் எதையும் கட்டியமைக்க முடியாது

பத்துசொற்கள் ஓரிடத்தில் சேகரிக்க அதன் பின்புலனாக அர்த்தம் என்பது மிக அவசியமானது

வாரா நன்றும் பிறர் தீதும் தர

இப்படியாக தனித்தனியாக இருக்கும் போது வெறும் சொற்களாக இருக்கும் இவை நான்கும் சற்றுவரிசைமாற்றி

தீதும் நன்றும் பிறர் தர வாரா என ஒரு கவிஞன் தன் மனஎழுச்சிக்கு இசைவாக கோர்க்கும்போது அதன் பின்னணியில் உண்டாகும் அர்த்தம்தான் அந்த சொற்களுக்கு உயிரை தருகின்றன
அந்த இணைப்பு சொற்கள்மூல்மாக காலத்துக்கும் நிற்கும் அர்த்தம் மொழிக்கு ஒருபயன் என்றாலும் அதே சமயம் இரு நூறு ஆண்டுகள் அந்த சொற்கள் ஒருதேர்ந்த கவி மூலம் தன் உயிர்த்த்னமையை தக்கவைத்துக்கொள்கின்றன.
பாதுகாக்கப்படுகின்றன எனபதும் குறிப்பிடத்தகுந்த விடயமாகிறது.

இப்படியான அரசியல் முக்கியத்துவம் மிகுந்த சொற்களை உருவாக்குவதும் புத்துயிர்ப்பு செய்வதும் வளப்படுத்துவதுமான பணிகளை மேற்கொள்ளும் முக்கியமான சூத்திரதாரிதான் கவிஞன்

சமூகத்தின் மேற்பரப்பில் அரசியல்வாதிகள் சினிமாக்காரர்கள் பத்திரிக்கையாளர்கள் மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் இதர அலுவலர்கள்
செயல்படும் வேளையில் இவன் மட்டும் ஒரு ஆழ்த்தில் இருட்டில் அமர்ந்தபடி சோப்பு நீரால் சங்கிலியை கழுவும் கொல்லனை ப்போல மொழியை புதுப்பிக்கும் வேளையில் ஈடுபடுகிறான்.ஒரு தச்சனை போல மொழியை த்ன் படைப்பினூடக செதுக்கிக்கொண்டிருக்கிறான் .
சுருக்கமாக சொல்வதானால் கவிஞர்கள் மொழி எனும் கடிவாளத்தின் மூலம் சமூகத்தை இயக்கும் மாய சக்ரவர்த்திகள்

ஆனால் பொருள்சார்ந்து இயங்கும் மனிதவாழ்க்கையானது கவிஞனின்ன் முக்கியத்துவத்தை ஒரு போதும் அறிவதில்லை .

மொழிக்கும் கவிஞனுக்கும் சமூகத்துக்குமிடையிலான் இந்த செயல்பாடுகளுக்கு சரியான ஒரு உதாரணம்
புரட்சி எனும் சொல்

ருஷ்ய போரட்டத்தையும் அத்ன் விடுத்லைபற்றியும் எழுதப்போன பாரதி
அத்னை ஆஹாவென எழுந்ததுபார் ஒரு யுகப்புரட்சி என எழுதினான்
புரட்சி எனும் சொல்லே அத்ற்குமுன் இல்லை என தமிழ் ஆய்வாளர்கள் கூறுகின்ற்னர்

புரட்டு புரள் , தலைகீழாக மாற்றுதல், யுகத்தை தலைகீழாக மாற்றுதல்
யுகத்தை புரட்டுதல் என்பதுதான் பாரதியின் கவிதாவேசம் அகத்தூண்டலுடன் புரட்சி எனும் வார்த்தையை தன்னியல்பில் உருவாக்கிதந்திருக்கிறது

1925க்குமுன் அவர் வாழ்ந்த அக்காலத்தில் யாரும் இது புதியவார்த்தைஎன்றோ அல்லது இந்தவார்த்தையை கொண்டாடவேண்டுமென்றோ அறிந்திருக்கவில்லை . அன்றைய உலகம் அவரை கிட்டடதட்ட பைத்தியக்கராராகவே பார்த்தது.

பிற்பாடு வா.ரா போன்றவர்களின் கட்டுரைகள் மூலமாக பாரதி வெளியுலகிற்கு
தெரிய வந்தபோது அவர்து படிப்புகள் சமூகத்தின் மேல்தளத்துகுள் எட்டிபார்க்க துவங்கின.

ஆனால் இன்று அந்த புரட்சி எனும் வார்த்தை சமூகத்தில் படும் பாட்டை நாம் கண்கொண்டு பார்த்துக்கொண்டுதான் வருகிறோம்

இடைபட்ட காலத்தில் அந்த சொல் எப்படியெல்லம் நகர்ந்து இன்று இங்கு வந்திருக்கிறது என்பதை சமூக ஆய்வு நோக்கில் பார்க்கிற போது கவிஞனின் படைப்பு மனோ நிலைக்கும் அவனது மொழி சார்ந்த அரசியல்களுக்குமிடையிலான ஒருசம்ன்பாட்டை நம்மால் தெள்ளத்தெளிவாக உணரமுடியும்.

இது சொற்கள் எனுமளவில் மட்டுமல்லாமல் அவன் உருவாக்கும் கருத்துக்களுக்கும் இத்தகையதொரு முக்கியத்துவம் காலத்தால்
உருவாக்கப்பட்டு சமூகமாறுதல்களுகு வித்திடுவதை நாம் கடந்த இருப்பதந்து வருட இலக்கியம் மற்றும் அரசியல் செயல்பாடுகளை வைத்து கண்க்கிட முடியும்


கடந்த இதழ் கட்டுரையின் இறுதியில் கவிதையின் இறைச்சி பொருள் குறித்து எழுதியிருந்தேன். அதைப்படித்த நண்பரொருவர் இறைச்சி இறைச்சி என்கிறீர்களே அது என்ன என கேட்டார்.
அவருக்கு எப்படி இத்னை விளக்குவது என யோசித்தேன்
ஒரு கனியின் சதைப்பற்றான பாகம் போல எனலாமா?
என யோசித்தேன் ஆனால் அது முழுமையான அர்த்த்தை தருமா என்பது ஐயமே


ஆங்கிலத்தில் சப் டெக்ஸ்ட் என்பார்கள்

படைப்பில் வார்த்தைகளால் நேரடியாக சொல்லப்படாத ஒன்று
அதன் உள்ளூறை மறைந்து அந்த படைப்பை வாசிக்கும் போது நமக்குள் இன்பத்தை விளைவிக்க கூடியதாக இருக்கிறது.

இந்த திட்டமற்ற அருவமான அந்த அனுபவத்தைத்தான் இறைச்சி என்கிறார்கள்

சுலபமாக சொல்வதானால் இலக்கணங்களில் உவமம் எனக்கூறுகிறார்கள்

ஆனால் அதுவும் கூட சரியில்லை
உள்ளூறை உவமம் என வேண்டுமானால் கூறலாம்

சரி அப்படியானால் இத்னை இறைச்சி என ஏன் கூறவேண்டும்

அதுவும் நல்ல கேள்விதான் ..ஒரு வேளை இப்படியிருக்கலாம்

அசைவ உணவில் ஒரு குழல் போன்ற சிறு எலும்புத்துண்டத்தை வாயில்வைத்து உறிஞ்சுகிறபோது அத்னுள் ஒளிந்திருக்கும் சதைப்பற்றானது எப்படி நம் தொண்டைக்குள் பாய்கிறதோ அது போல கவிதை எனும் சொற்களால் ஆன குழலுக்குள் ஒளிந்திருக்கும் அனுபவம் எனும் இறைச்சியானது அத்னை வாசிக்கும் போது நம் மூளைக்குள் பாய்ந்து பெரும் இன்பத்தை தோற்றுவிக்கிறது

இப்படியாக வார்த்தைகளுக்கு பின் மறைந்திருக்கும் அந்த சதைப்பற்றான பாகத்தைத்தான் நாம் இறைச்சி என்கிறோம்

இதுதான் கவிதையின் மீதான வசீகரத்தை நமக்கு தருகிறது
அத்தகைய இறைச்சி மனதுக்குள் விளைவிக்கும் இன்பம் உலகின் வேறெந்த அனுபவத்தாலும் கிடைக்கபெறாமல் கவிதையினால் மட்டுமே சாத்தியம் பெறுவதால்தான் .அனைவரும் கால்ம்தோறும் கவிதை இன்பத்தை தீண்டி இன்புறுகின்றனர்

தொல்காப்பியரும் இந்த உள்ளூறை இறச்சியைத்தான் தன் இலக்கிய கொள்கையாக கூறுகிறார்.

இந்த உள்ளுறை உவமம் குறித்த அவரது பாடல் ஒன்று

உள்ளுறுத்த இதனொடு ஒத்த பொருள் முடிகென
உள்ளுறுத்த இறுவதை உள்ளுறை உவமம் –

எனும் அவருடைய அக்த்திணை பாடல் ஒன்றில் உள்ளுறை உவமம் கவிதையில் எப்படி கையாளப்படவேண்டும் எடுத்துரைக்கிறார்.

அவர் சொன்ன இலக்கணத்துகுட்பட்ட
நமக்கு நன்கு தெரிந்த பாரதியின் பாடல் வரிகளுக்குள் காண்ப்படும்
இறைச்சி பொருளைகாண்போம்
.
”அக்கினி குஞ்சொன்றை கண்டேன்
அதில் ஆங்கோர் காட்டிடை பொந்தொன்றில் வைத்தேன்
வெந்து தனிந்தது காடு ”

மேற்சொன்ன கவிதையில் சிறப்புக்கு காரணம் அதில் வெளிப்படுத்தப்படாத அதேச்மயம் உள்ளுறையாக்கிடக்கும் இறைச்சி

அந்த இறைச்சி எது எப்படியாக ஒளிந்திருக்கிறது என்பதை அடுத்த இஅதழில் விளக்குகிறேன்

March 12, 2010

இத்தாலியின் இரு இளமைக்காற்று ;பெலினி, ஆண்டோனியோனி


உலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சி யுகம் : 20

இத்தாலியின் இரு இளமைக்காற்று ; பெலினி, ஆண்டோனியோனி


கலை உலகிலும் இலக்கியத்திலும் புகழ்பெற்ற மனிதர்களை இருவகையினராக பிரிக்கலாம்

நட்சத்திரங்கள், ஆளுமைகள்

நட்சத்திரங்கள் மக்களால் அங்கீகரிக்கப்பட்டு அதன் மூலம் ஊடகங்களின் வெளிச்சம் பாய்ந்து வாழுங்காலத்திலேயே புகழையும் பெருமையையும் அடைந்துவிடுவர்.

ஆனால் ஆளுமைகள் என்பவர்கள் வேறு.
இவர்கள் தாங்கள் மேற்கொண்ட கலையை தங்களது உயிரினும் மேலாக நேசிப்பவர்கள் . அதற்காக தொடர்ந்து போராடி அதனை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்து செல்பவர்கள். அதனால் வாழும் காலத்தில் வெகுஜன ஊடகங்களின் வெளிச்சம் இவர்கள்மேல் விழுவதில்லை. அதே சமயத்தில் இவர்களும் காலத்தில் மைல்கற்களாக நிறகவே விரும்புகின்றனர். பெரும்பாலும் இவர்கள் தங்களது சமகாலத்திய ரசனைகளுக்கு எதிர்திசையிலேயே பயணிப்பர் அத்தகைய ஆளுமைகள்தான் குறிப்பிட்ட கலை தேங்கிய குட்டையாகும் ஆபத்திலிருந்து காப்பாற்றுகின்றனர். மேலும் தொடர் ஓட்டவீரர்களை போல பொறுப்பை இன்னொருவருக்கு கைமாற்றி அக்கலை வளர தொடர்ந்து பாடுபடுகின்றனர்


அப்படியாக சினிமா எனும் கலைவடிவத்தின் அதன் மொழியின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்த் ஆளுமைகளுள் எடிசன், லூமியர்.ஜார்ஜ் மிலி, டி .டபிள்யூ.கிரிபித், ஐஸன்ஸ்டைன் ஜான் போர்ட் ஆர்சன் வெல்ஸ் அகிராகுரசோவா ஆகியோர் மைல்கற்களாக இன்றும் காலங்களால் மேலும் மேலும் புகழை அடைந்துவருகின்றனர்.அவர்கள் விட்ட இடத்திலிருந்து அதனை அடுத்த்கட்டத்துக்கு எடுத்துச்சென்ற ஆளுமைகளுள் இத்தாலியின் இரு இயக்குனர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள்.அதுவும் ஒரேகால்கட்டத்தில் ஒரே இயக்குனரிடம் பணிபுரிந்த ஒரே தேசத்தைசேர்ந்த இருவர் ஒரேசமயத்தில் உலகசினிமாவை தம்பக்கம் திருப்பிபார்க்கசெய்ததும் அதிசயமான ஒன்றுதான். . அவர்கள் தங்களது கவித்துவமான சினிமாமொழியால் அழுத்தமான தடங்களை உலகசினிமாவில் பதித்துக்கொண்டனர். ஃபெட்ரிக்கோ பெலினி ,மற்றும் மைக்கேல் ஏஞ்சலோ ஆண்டோனியோனி ஆகிய இருவர்தன் அந்த குறிப்பிடதகுந்த இயக்குனர்கள் .
உலகசினிமா வரலாற்ரின் இரண்டு முக்கியகாலகட்டங்களான நியோரியலிஸம் மற்ரும் பிரெஞ்சு நியூவேவ் ஆகிய இரண்டு அலைகளுக்குமிடையே பாலமாக இருந்தவர்கள் .


பெட்ரிக்கோ பெலினி Federico Fellini


உலகசினிமாவுக்குள் கவித்துவமான வெளிப்பாட்டை கொண்டுவந்த இயக்குனர் பெலினி இத்தாலியில் ரெமினி எனும் சிற்றூரில் 1920ல் ரோமன் கத்தோலிக்க பெற்றோர்களுக்குமகனாக பிறந்தவர். பெலினியை பால்யத்தில் பெரிதும் கவர்ந்தவை கார்டூன் புத்த்கங்கள். அதில்வரும் சாகசவீரர்களும் கோமாளிகளும் தேவதைகளும் அவரது மூளையின் கற்பனைபிரதேசத்தை சிறுவயதிலேயே அபகரித்துக்கொண்டனர். தொடர்ந்து அவ்ற்றை ஓவியங்களாக தீட்டிபழகிய பெலினியின் வாழ்க்கையில் திடீர் மாற்றத்தை உருவாக்கியது அவர்கள் ஊருக்குள் திடீரென முளைத்த ஒரு சர்க்கஸ் கூடாரம்.சர்க்கஸ் அவருக்குள் புதியகதவுகளை திறந்துவிட்டது .கனவுகளில் கோமாளிகள் அவரை சுற்றீ சூழ்ந்தனர் .திடுமென ஒருநாள் அவருக்கு அதிர்ச்சி.சர்க்கஸ் ஆட்கள் கூடாரத்தை காலிசெய்துகொண்டு புறப்பட்டு வரிசையாக வண்டிகளுடன் சென்றனர். சிறுவன் பெலினிக்கு தன்கனவுகள் தன்னிடமிருந்து முழுவதுமாய் பிடுங்கப்பட்டு பாரவண்டியாக ஊர்ந்துசெல்வது போன்ற வேத்னை . அந்த சோகத்துடன் வண்டியை பின் தொடர்ந்தான். அவர்கள் சென்ற ஊரிலேயே இவனும் அவர்களுடன் இரண்டுநாட்கள் தங்கிவிட்டு வீடு திரும்பியதாக அவரை பற்றி ஒருபால்யகதை கூறுகிறது.பெலினியின்படங்களை ப்பார்ப்பவர்கள் அவரை சிறுவயதில் பாதித்த அந்த சர்க்கஸ் உலகத்தின் மிச்ச சொச்சங்களை உணரமுடியும்.அந்த சிறுவயது நிகழ்வுக்கு பின் அந்த ஏக்கத்தோடு .கோமாளிகளையும் தேவதைகளையும் சித்திரங்களாக வரையத்துவங்கிய பெலினி மெல்ல ஓவியராக மாறினார்.

பிற்பாடு பெலினி பதினாறம் வயதில் ரோம் நகருக்கு சென்றபோது அவரது வாழ்க்கையும் அகன்ற திரைக்கு மாறத்துவங்கியது.பத்திரிக்கைகளுக்கு கார்ட்டுன் களை வரைந்து கொடுத்துக்கொண்டிருந்த பெலினிக்கு நகைச்சுவை துணுக்குகள் எழுதுவதில்தான் ஆர்வம் மிகுந்திருந்தது. இச்சமயத்தில் ஒரு பத்திரிக்கை சந்திப்பு நிமித்தமாக பெலினி நியோரியலிஸத்தின் முக்கிய பிதாமகரும், மார்க்ஸிய சிந்தனையாளரும், பைசைக்கிள்தீவ்ஸ் உட்பட பல படங்களின் திரைக்கதையாசிரியருமான ஜவாட்டினியை சந்திக்க சென்ற போதுதான் பெலினியின் வாழ்க்கை சினிமாவுக்குள் நுழைய துவங்கியது. தொடர்ந்து பல படங்களுக்கு திரைக்கதைகளை எழுத துவங்கியவர் கிட்டதட்ட 20படங்களில் இணை திரைக்கதையாளாரக பணிபுரிந்தபின் முதல் நியோரியலிஸ படமாக கருதப்படும் ரோம் ஓபன் தி சிட்டி படத்தில் அதன் இயக்குனர் ரோபர்ட்டா ரோஸலினியிடம் இணைஇயக்குனராகவும் இணை திரைக்கதையாசிரியராகவும் பணிபுரிந்தார்.அவரது முதல் வெற்றி என்று சொல்லும் வகையில் இப்படம் ஆஸ்கார் விருதில் சிறந்த திரைக்கதைக்கான பிரிவில் பரிந்துரைக்ககப்பட்டது. இதே இயக்குனரிடம்தான் மைக்கேல் ஆஞ்சலோ ஆண்டோனியோனியும் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடதகுந்தது. அதன்பிறகு வேரிட்டி லைட்ஸ் Variety Lights (1950), படத்தின் மூலமாகஇயக்குனராக தன்னை தகவமைத்துக்கொண்டாலும் பெலினிக்கு இரண்டாவது படமான The White Sheik தான் அவரை இயக்கும்னராக அங்கிகரித்தது. ஆண்டோனியோனி எழுதிய கதையை வைத்துக்கொண்டு தனது நண்பர் Tullio Pinelli யுடன் சேர்ந்து திரைக்கதை எழுதியிருந்தார். ஆனால் என்ன காரணத்தாலொ ஆணடனியோனிக்கு அவர்கள் எழுதிய திரைக்கதையில் திருப்தியில்லை. அத்திரைப்ப்டம் The White Sheik பிற்பாடு வெளியாகி வெனிஸ் திரைப்படவிழாவில் சிறந்த படமாக் அங்கீகரிக்கப்பட்டு பெலினிக்கு உலக அந்தஸ்தை உருவாக்கிதந்தது.ஆனால் அதனைக்காட்டிலும் பெரும்புகழையும் அழுத்தமான அவரது முத்திரையையும் தக்கவைத்த திரைப்படம் லா ஸ்ட்ராடா.

பெலினியிடம் ஒரு திரைப்படவிழாவின்போது நிருபர் ஒருவர் இப்படிக்கேட்டார்
மனித குணங்களில் சிறந்த ஒன்றாக எதை மதிப்பிடுவீர்கள் ?
பெலினியின் பதில்
-சக மனிதனின் மீதான அவனது நேசம்
உடனடியாக அடுத்த் கேள்வியும் வந்தது

அப்படியானால் மனிதனின் ப்ரச்னையாக நீங்கள் கருதுவது
-அவனுடைய ஈகோ

லா ஸ்ட்ராடா வில இந்த இரண்டு கூறுகளும் எதிரெதிர் புள்ளியில் இருந்து கதையை நகர்த்துவதை நம்மால் சுலபமாக உணரமுடிகிறது. இந்த இரு கூறுகளை வைத்து அவரது மொத்த திரைப்படங்களையும் கூட மதிப்பிட முடியும்.ஒரு நாடோடி வித்தைக்காட்டுபவனுக்கும் ஒரு தற்குறி அபலைபெண்ணுக்குமிடையிலான் உறவை இப்படம் சித்தரித்தது. ஆண்டனி க்வின் கதாநாயகனாக நடித்த இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மாசினா. பிற்பாடு தொடர்ந்து அவரது படங்களில் நாயகியாக நடித்த மாசினா அவரது மனைவியாகவும் வாழ்க்கையில் பங்கேற்று இறுதிவரை உடனிருந்தார்.இது போலவே இப்படத்தின் இசையமைப்பாளரான நினோ ரோட்டா பெலினியின் திரைப்படங்கள் அனைத்திலும் தொடர்ந்து பங்களிப்பு செய்தார்.

சர்க்கஸை போலவே பெலினியை மிகவும் வசீகரித்த இன்னொரு விஷ்யம் அமெரிக்க சினிமாவில் அப்போது அதிகம் வந்த பரபரப்பு பத்திரிக்கையாளர்களை நாயகனாக கொண்ட படங்கள் .அதில் அவர்கள் அணியும் கோட்டு தொப்பி ஆகியவை பெலினியை மிகவும் வசீகரித்த்ன அதன் வெளிப்படுதான் 1956ல் வெளியான லா டோல்சே விட்டா La Dolce Vita (1960). இப்படத்தில் நாயகனாகநடித்தவர் பெலினியின் ஆஸ்தான நாயகனான மார்சலோ மாஸ்ட்ரியானி. Marcello Mastroianni.

நியோரியலிஸ அலையின் கடைசிபடமாககூட கூறலாம் .இப்படம் வெளியான சமயங்களில் இத்தாலியின் வறுமைநிலை முழுவதுமாக மாறி மீண்டும் தன் பகட்டான கோட்டை அணியத்துவங்கிய காலகட்டமாக இருந்ததால் மக்களின் ரசனையிலும் மாற்றம் வரத்துவங்கியது. சூழலுக்கெற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் கலைமனம் பெலினியினுள்ளும் கவித்துவ ஊற்றை அவரது அதீத கற்பனைகளை திரைப்படமாக மாற்ற முயற்சிக்க துவங்கியது. பிற்பாடு இதுவே அவரது முத்திரையுமாக மாற துவங்கியது.

தொடர்ந்து அந்த புதியபாணியில் அவர் எடுத்தபடம் 8½.
இப்படத்தின் கதை மிகவும் சுவாரசியமானது.ஒரு இயக்குனர் தனது அடுத்தபடத்திற்கு என்ன கதை என தெரியாமல் குழம்புவதுதான் கதை.
தன் படங்கள் அனைத்துமே ஒருவகையில் தன் சுய சரிதைதான் என பெலினி சொல்வதை இப்படம் அப்பட்டமாக நமக்கு நிரூபிக்கிறது. தொடர்ந்து இதே பணியில் வெளியான் படங்கள் Juliet of the Spirits (1965), Satyricon (1969), Casanova (1976), மற்றும் City of Women (1980).[33]மூலம் பெலினிபடங்கள் என்றாலே அவை கனவுத்த்னமை நிரம்பியவை எனும் அழுத்த்மன முத்திரையை அவருக்குபெற்றுதந்தன. இந்த அவரது கனவுலக பயணம் அவரது "VOICE OF THE MOON" 1990 எனும் இறுதிபடத்துடன் முடிவுக்குவந்தது.
வாழ்நாள் சாதனையாளராக அவரை அங்கீகரித்த ஆஸ்கார் விருதுகமிட்டி அவரை 1993ல் கவுரவித்தது. அடுத்த சிலநாட்களில் மரணம் அவரை அணைத்துக்கொண்டது. அவர் இறந்த ஆறவாது மாத்திலேயே இறந்து போன அவரது மனைவியும் மிக்கச்சிறந்த நடிகையுமான மாசினா தன் இறப்பின் மூலம் தங்களுக்கிடையிலான உறவை உலகிற்கு முன்னுதாரணமாக விட்டுச்சென்றார் அவர்களின் ஐம்பதாவது திருமண ஆண்டில் மறைந்த மாசினா சிறந்த நடிப்புக்காக ஆஸ்காவிருதை பெற்றவர் என்பது குறிப்பிடதகுந்தது





.

மைக்கேல் ஏஞ்சலோ ஆண்டோனியோனி Michelangelo Antonioni

நம் வாழ்வின் மிகப்பெரிய தடைகளே நமக்குநாமே போட்டுக்கொண்டிருக்கும் இந்த ஒழுக்கவிதிகள்தான். நம்மை சுற்றி அறிவியல், பொருளாதரம் அனைத்திலும் மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிற போது வாழ்க்கை மட்டும் பழைய கட்டுக்களில் உழல்வது நம்மை கோழைத்த்னத்திற்கும் அசமந்ததுக்குமே இட்டுச்செல்கிறது என கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்தஇயக்குனருக்கான உரையில் மைக்கேல் ஆஞ்சலோ ஆண்டோனியோனி தன் படங்கள் குறித்த அபிப்ராயத்தை கூறினார்.அவர் மட்டுமல்ல இந்த இருத்தலியல் ப்ரச்னைதான் இரண்டாம் உலக்போருக்குபின் ஐரோப்பாவையே உலுக்கி எடுத்துக்கொண்டிருந்தது. ஒருபக்கம் காம்யூவும் சார்த்தரும் இலக்கியத்தில் இந்தப்ரச்னைகளை அலசிக்கொண்டிருக்க தன் படங்களின் மூலம் சத்தமில்லாமல் கலையாக மாற்றிக் கொண்டிருந்தார் ஆண்டோனியோனி. இத்தாலியின் பெராரா நகரில் பணக்கார குடும்பத்தில் பிறந்த ஆண்டோனியோனிக்கு அவரது பண்காரவாழ்க்கை உருவாக்கிய தடைகள்தான் அவரை கலைஞனாக மாற்றியது. பிரம்மாண்டமான அவரதுவீட்டு இரும்பு வாயில்கதவுகள் அவரது குழந்த்மையின் ஏக்கத்தை
ஜன்னல் வழியாக ஒருபிஞ்சுக்கைபோல நீளச்செய்தன.அந்த ஏக்கம் வீட்டினுள்ளேயே விளையாட்டுபொருட்கள் மூலம் கட்டிடங்களையும் வீதிகளையும் சமைக்க வைத்து. தனக்கு பிடித்த்மான வகையில் கட்டிடங்களை மாற்றிமாற்றி கட்டியதன் மூலம் படப்பு மனோநிலை தூண்டப்பெற்ற ஆண்டோனியோனி தொடர்ந்து ஓவியத்திலும் இசையிலும் தன் கவனத்தை குவித்தார்.அது அவரை பதினோராவது வயதில் வயலின் இசைக்கலைஞராக மாற்றி தந்தது.

தொடர்ந்து 1940ல் ரோம் நகருக்கு சென்ற ஆண்டோனியோனியும் பெலினியை ப் போலவே துவக்கத்தில் பத்திரிக்கையாளராக பணிபுரிந்தார்.பின் ரோபட்டா ரோஸலினியிடம் உதவி இயக்குனராக இணைந்துகொண்ட ஆண்டோனியோனி இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட முதல் படம் Cronaca di un amore (Chronicle of a Love, 1950)
பெலினியை போலவே நியோரியலிசத்திலிருந்துதான் ஆண்டோனியோனி தன் கணக்கை துவக்கினார்.ஆனாலும் அடுத்த பத்து வருடங்கள் வரை அவருக்கு அந்த பாணி கைக்கொடுக்க வில்லை. பின் மெல்ல தடம் மாறினார் 1960ல் வெளியான் அவரது லாஅவெஞ்சுரா L'avventura (1960),கேன்ஸ் விழாவில் சிறந்தபடமாக தேர்ந்தெடுக்கப்பட்து இப்படம் எதார்த்த்த்திலிருந்து விலகி அழுத்தமான உணர்வுகளை காட்சிபடிமங்களாக மாற்றும் மிகு அழகியல் தன்மையுடன் தன் உணர்வுகளை சினிமாவாக வெளிப்படுத்தியிருந்தார். படத்தில் இடம் பெற்ற அவரது நீளமான டேக்குகள் உலகசினிமாவில் அதுவரையில்லாத ஒரு அழகை கூட்டித்தந்தன. இதன் வெற்றியைத்தொடர்ந்து தன் பாணியைகண்டுகொண்ட ஆண்டோனியோனி . La notte (1961), L'eclisse (1962),என் அடுத்தடுத்த படங்கள் மூலம் இப்பாணியை கைக்கொண்டார். இதில் மார்சிலோ மாஸ்திரியானி நடித்த லா நோட்டி படம் 11வது பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்தபடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.. லா எக்ளிஸ் திரைப்படத்தில்தன் அவர் அவர் காலத்தால் மாறாத ஒரு அழகுபெட்டகத்தை நாயகியாக கண்டெடுத்தார். மோனிகா விட்டி எனும் அந்த நடிகை தொடர்ந்து அவரது பல படங்களில் நாயகியாக நடித்தார்.
தொடர்ந்து கார்லோ புயண்டி எனும் த்யாரிப்பாளர் அவரை அவர் இஷ்டத்துக்கு பூரண சுதந்தரத்துடன் இயக்கிதருமாறு அழைப்புவிடுக்க ஆண்டோனியோனிக்கு
தன் மனதிலிருந்த இலக்கியவாதியை உசுப்பிவிட்டார். அர்ஜெண்டைன எழுத்தாளரான் ஜூலியா கொத்தஸார் எழுதிய ப்ளோ அப் எனும் சிறுகதையை அடிப்படையாகக்கொண்டு ப்ளோ அப் எனும் பெயரிலேயே ஒருபடத்தை இயக்கினார்.உண்மையில் திரைப்பட் மாக்கலுக்கு சவாலான் ஆழ்ந்த மொழிச்செறிவும் இல்லகிய புலமையும் கொண்ட கதையை முழுக்கவும் தன்பணியில் எடுத்து அறிவுலகுக்கு தன் திறமையை எடுத்துக்கூறினார்.
திரைப்பட மொழ்யில் கவித்துவம் எப்படி சாத்தியம் என்பதற்கு இப்பபடம் ஒரு நல்ல உதாரணம் . 1972ல் இவரது மார்க்ஸிய ஈடுபாடுகாரணமாக சீனா இவரைதன் நாட்டிற்கு அழைத்து தங்களது நாட்டைப்பற்றி Chung Kuo, Cina,எனும் டாக்குமண்டரி படத்தை எடுத்து தருமாறு பணித்தது. உடன் .தங்களது நாட்டில் திரைப்படத்துக்கான சரியான பாதையை போட்டுத்தருமாறு அழைத்தது.ஆனால் அந்த படத்தை பார்த்த்தும் இது சீனாவின் கம்யூனிஸ கொள்கைக்கு எதிராக இருப்பதாக கூறி அப்படத்தை முடக்கி வைத்த்து.
பிறகு 2004ல்தான் அவரது படத்தின் பெருமையை தாமதமாக உணர்ந்த சனாஇ அவருக்காக ஒரு விழாசை எடுத்து அதில் அப்படத்தை முத்ல்முறையாக காட்சிபடுத்தியது.
பிறகு ழான் காக்டோ எனும் பிரெஞ்சு நாவலாசிரியரின் The Eagle With Two Heads. எனும் கதையை அடிப்படையாக கொண்டு மோனிக்கா விட்டிநடிக்க The Mystery of Oberwald 1980ல் எனும் பட்த்தை இயக்கினார். 1985ல் பக்கவாதத்தால் மூளை பாதிக்கப்பட்டு செயலிழந்த ஆண்டோனியோனி மீண்டும் 1995ல் ஒருபடத்தை இயக்கினார் Beyond the Clouds (1995),.எனும் அப்படத்தை அவரால் தொடர்ந்து இயக்க முடியவில்லை உடல் நலம் உழைக்க மறுத்து. இத்னால ஜெர்மன் இயக்குனர் விம் வெண்டர்ஸிடம் மீதிபடத்தை இயகுமாரூ பணித்தார்.ஆனால் அவர் எடுத்த ஷாட்டுகள் பிடிக்கவில்லை என பலவற்றை எடிட்டிங்கில் ஆண்டோனியோனி வெட்டித்தள்ளினார்.வெனிஸ் திரைப்படவிழாவில் இப்படம் சிறந்த படத்துக்காக தேர்ந்தெடுத்து பரிசை இருவருக்கும் பகிர்ந்தளித்து. 1994ல் சிறந்த பஃப்ங்களிப்புக்காக அவருக்கு வாழ்நாள் சாதனை விருதை அளித்து கவுரவித்து.
ஆனாலும் அவரது திறமைக்கேற்ற அங்க்கிக்காரம் இன்னும் கிடைக்கவில்லை என சக உலகசினிமா சிற்பியான் ஸ்வீடன் இயக்குனர் பெர்க்மன் ஒரு முறை ஆதங்கப்பட்டார். ஆச்சர்யப்படும்படியாக பெர்க்மனும் ஆண்டோனியோனியும் ஒரேநாளில் 2007 ஜூலை 30ல் தங்களது உடலைவிட்டு பிரிந்து உலக் சினிமாரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினர்
தொடரும்

March 3, 2010

சொற்கப்பல் ; விமர்சன தளம் அன்புடன் அழைக்கிறது



நாள்: சனிக்கிழமை மாலை 4.மணி 6. 3 2010

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் , 6 மகாவீர் காம்பளக்ஸ் ,முனுசாமி சாலை பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில், கேகே.நகர் சென்னை 78
தொடர்பு எண் :9884060274, 9940446650
,


வரவேற்புரை :
பொன். வாசுதேவன்

சொற்கப்பல் ; ஒரு அறிமுகம் :
அஜயன்பாலா

விளக்கு பரிசு பெற்ற விக்கிரமாதித்யன் அவர்களுக்கு
சொற்கப்பல் சார்பாக பொன்னாடை போர்த்துதல்
முகுந்த் மற்றும் வேடியப்பன்

வாழ்த்துரை: விக்கிரமாதித்யன் நம்பி


நூல் விமர்சனம் :இரண்டு சிறுகதைத்தொகுப்புகள்

நூல் :1 அமிர்தம் சூர்யாவின் கடவுளை க்கண்டுபிடிப்பவன்

விமர்சகர்கள் ;
வே. எழிலரசு
பஞ்சாட்சரம் செல்வராஜ்

நூல் : 2 சந்திராவின் காட்டின் பெருங்கனவு

விமர்சகர்கள் ;
அசதா
காலபைரவன்

நன்றியுரை ;
வேடியப்பன்



தமிழ்மகன் >அகநாழிகை> தடாகம்.காம்>மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ்

March 2, 2010

; விமர்சன தளம்




இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் ,கேகே.நகர்
நாள் ; நாள்: சனிக்கிழமை மாலை 4.மணி 6. 3 2010

வரவேற்புரை : .பொன். வாசுதேவன்

சொற்கப்பல் ; ஒரு அறிமுகம் : அஜயன்பாலா

விளக்கு பரிசு பெற்ற விக்கிரமாதித்யன் அவர்களுக்கு
சொற்கப்பல் சார்பாக பொன்னாடை போர்த்துதல் முகுந்த் மற்றும் வேடியப்பன்

வாழ்த்துரை: விக்கிரமாதித்யன் நம்பி


நூல் விமர்சனம் :இரண்டு சிறுகதைத்தொகுப்புகள்
நூல் :1 அமிர்தம் சூர்யாவின் கடவுளை க்கண்டுபிடிப்பவன்
விமர்சகர்கள் ;
வே. எழிலரசு
பஞ்சாட்சரம் செல்வராஜ்
நூல் : 2 சந்திராவின் காட்டின் பெருங்கனவு
விமர்சகர்கள் ;
அசதா
காலபைரவன்

நன்றியுரை ;
வேடியப்பன்



தமிழ்மகன் >அகநாழிகை> தடாகம்.காம்>மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ்

சொற்கப்பல்; விமர்சன தளம்





இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்,no.6 முனுசாமி சாலை, கேகே.நகர்
நாள்: சனிக்கிழமை மாலை 4.மணி 6. 3 2010

வரவேற்புரை : .பொன். வாசுதேவன்

சொற்கப்பல் ; ஒரு அறிமுகம் : அஜயன்பாலா

விளக்கு பரிசு பெற்ற விக்கிரமாதித்யன் அவர்களுக்கு
சொற்கப்பல் சார்பாக பொன்னாடை போர்த்துதல்
முகுந்த் மற்றும் வேடியப்பன்

வாழ்த்துரை: விக்கிரமாதித்யன் நம்பி
நூல் விமர்சனம் :இரண்டு சிறுகதைத்தொகுப்புகள்

நூல் :1
அமிர்தம் சூர்யாவின்; கடவுளை க்கண்டுபிடிப்பவன்
விமர்சகர்கள் ;
வே. எழிலரசு
பஞ்சாட்சரம் செல்வராஜ்

நூல் : 2
சந்திராவின்; காட்டின் பெருங்கனவு
விமர்சகர்கள் ;
அசதா
காலபைரவன்

நன்றியுரை ;
வேடியப்பன்



தமிழ்மகன் >அகநாழிகை> தடாகம்.காம்>மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ்

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...