May 30, 2011

கா.அப்பாத்துரையார்;,. செம்மொழி சிற்பிகள்-3

தமிழரின் தொன்மம் குறித்த பல ஆராய்ச்சி நூல்களை எழுதியவர் உடன் பல்வேறு மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியவர் .குறிப்பக கார்ல் மர்க்ஸ் அவர்களின் மூலதனத்தை தமிழில் முதன் முதலாக மொழிபெயர்த்தவர் காசியாபிள்ளை அப்பாத்துரை அவர்கள்.

கா.அப்பாத்துரையார்
பிறப்பு ;1907

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி காசியாபிள்ளைக்கு ஒரு வைராக்கியம் த்னனால் இயலாத ஒன்றை தன் மகன் மூலம் நிகழ்த்திக்காட்ட விரும்பினார். சுமார் நாற்பது மொழிகளை தன் மகன் அறிந்து இந்த வையகம் போற்ற வாழ்வாங்கு வாழ ஆசைப்பட்டார்.அதன் படி தன் மகனான அப்பத்துரையை சிறுவயதுமுதலே தமிழோடு சேர்த்து இதர மொழிகளையும் கற்க நெறிப்படுத்தினார்.இதன் காரணமாக அப்பாத்துரையார் தமிழ் உட்பட மலையாளம், வடமொழி, ஆங்கிலம் இந்தி ஆகியவற்றில் எழுதவும் பேசவும் படிக்கவும் அறிந்து உடன் பதினெட்டு மொழிகளில் நன்கு பயிற்சியும் பெற்றார்,மட்டுமல்லாமல் தான் படித்தவற்றில் சிறந்த விஷய்ங்களை தமிழுக்கும் மடைமாற்றம் செய்து ”பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்” எனும் பாரதி கூற்றை செயலில் காட்டும் வகையில் நடந்துகொண்டார். ஆனாலும் தந்தையின் கனவாக இருந்த 40 மொழிகளை அடையமுடியவில்லையே என்ற ஏக்கம் மட்டும் அவருள் இருந்தது

கம்யூனிஸ்டுகளின் பைபிளாக கருதப்படும் கார்ல் மார்க்ஸ் எழுதிய தாஸ்கேப்பிடல் நூலை முதன் முதலாக தமிழுக்கு மொழிபெயர்த்தவர். மலையாளத்திலிருந்து இந்து லேகா,ஜெர்மனியிலிருந்து துன்பக்கேணி போன்றவை இவரால் தமிழுக்குகொண்டுவரப்பட்ட இதர நல்ல நூல்கள்.

200க்கும் மேற்பட்ட நூல்களை படைத்த அப்பாத்துரையார் பல ஆராய்ச்சி நூல்களையும் எழுதியுள்ளார். அவ்ற்றூள் குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு எனும் இவரது ஆராய்ச்சி நூல் தமிழ்ர் தொன்மம் குறித்த பல ஆய்வுகளுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளது. இவரது தென்னாட்டு போர்க்களங்கள் மற்றும் திருக்குறள் மணி விளக்க உரை ஆகிய நூல்கள் பலராலும் பாரட்டபெற்றவை.

ஆங்கிலநாளேடான லிபரேட்டர், நீதிக்கட்சியின் திராவிடன் பெரியார் அவர்களின் விடுதலை மற்ரும் இலக்கியத்திற்கான பொன்னி ஆகிய இதழ்களில் ஆசிரிய பணிகளில் பணிபுரிந்தவர்.

இந்தி ஆசிரியராக பணிபுரிந்தபோதும் பெரியாரின் தலைமையில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தன் மனைவி அலமேலுவுடன் கலந்து கொண்டு சிறை சென்றவர்.

சென்னை பல்கலைக்கழகம் ஆங்கில தமிழ் அகராதி நூலை தமிழில் ஏ.சி செட்டியார் அவர்களை ஆசிரியராக கொண்டு பதிப்பிக்க முனைந்தபோது ஆறுஆண்டுகள் அப்பணியில் உதவி ஆசிரியராக இருந்துசெயல்பட்டவர்.

அறிஞர் அண்ணா யேல் பல்கலைக்கழகம் அளித்த டாக்டர் பட்டத்தை வாங்க சென்றபோது அவரது உரைக்கு பதினாறுபக்க குறிப்புகளை எழுதிதந்தவர்.

பன்மொழிபுலவர், திராவிட இயக்கத்தின் ஞானாசிரியர்
போன்றவை தமிழ் இவரது த்லைக்கு சூட்டிய மணிமகுடங்கள்

மறைவு 1989

May 25, 2011

தொப்பி , துப்பாக்கி, குதிரை….............அமெரிக்க கவ்பாய் (அ)வெஸ்டர்ன் திரைப்படங்களின் வினோத கவர்ச்சி .


உலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சியுகம் 32


விரிந்த வானம்.. வறண்ட பொட்டல் வெளி ...இரு பக்கமும் மரவீடுகள் கொண்ட வீதி .... வானத்தில் வட்டமிடும் கழுகு ... தெருவின் ஒரு முனையில் கைகளில் துப்பாக்கியுடன் ஒருவன். .தொலைவில் அவனுக்கு .எதிரே மறு முனையில் நிற்கும் இன்னொருவன். அவன் கையிலும் துப்பாக்கி. துப்பாக்கியின் ட்ரிக்கரில் த்யாராக இருக்கும் விரல்கள் அடுத்து அங்கு என்ன நடக்க போகிறதோ என மெதுவாய் கதவிடுக்கில் எட்டி பார்க்கும் பார்க்கும் இரு ஜோடி கண்கள் ,.சட்டென ஒரு துப்பாக்கி வெடிக்கும் சப்தம் .. விழுந்தது யாரென பார்க்க நமக்குள் ஒரு துடிப்பு ஏற்படுகிறதல்லவா.. இதுதான் வெஸ்டர்ன் எனப்படும் அமெரிக்க பாலை வகை படங்களின் வெற்றி ரகசியம்.

ஒரு புள்ளியில் காலத்தை உறைய வைத்து அதை நுணுக்கமாக பகுத்துணரசெய்யும் இத்த்கைய காட்சி மொழிதான் வெஸ்டர்ன் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கவுபாய் படங்களின் தனித்த்ன்மை.
.
வெஸ்டர்ன் என்றால் அமரிக்காவின் மேற்கு பகுதியை குறிக்கும் சொல்..அப்பகுதியின் நிலப்பரப்பையும் அம் மக்களது வாழ்வையும் ஒட்டி இப்படங்கள் எடுக்கபடுவதல் இவ்வகைபடங்கள் வெஸ்டர்ன் என்ற பெயரால அழைக்கபடுகின்றன .

இந்த வெஸ்டர்ன் கலச்சாரத்துக்கு பின்னால் இருக்கும் வரலாற்றை தெரிவது இப்படங்களை புரிந்துகொள்வதற்கு மேலும் வழிவகுக்கும்.

ஐரோப்பியர்களின் குடியேற்ற நாடான அமெரிக்காவில் பூர்வ குடிமக்களாக வசித்து வந்தவர்கள் செவ்விந்தியர்கள். வளமான கிழக்குமாகாணக்களில் முதலில் குடியேறீய ஐரோப்பியர்கள் அப்பகுதிகளில் வசித்த பூர்வகுடிமக்க்ளை விரட்டியடித்து அப்பகுதிகளை வசப்படுத்திக்கொண்டனர். .இப்படியாக அமெரிக்காவின் கிழக்கு பகுதிகளில் குடியேறிய ஐரோப்பியர்களால் வட அமெரிக்காவின் மேற்கு .பகுதிகளை கைப்பற்ற முடியவில்லை காரணம் அதன் வறண்ட பாலைத்தன்மை. மிக நீண்ட சமவெளிகளும் பள்ளதாக்குகளும் மலைகளும் கொண்ட அந்த நிலங்கள் பல அமானுஷ்யங்களை தன்னகத்தே கொண்டிருந்தன.
மேலும் இப்பகுதிகளில் செவ்விந்தியர்கள் பலம் பொருந்தியவ்ர்களாக இருந்த்னர். தனியாக இப்பகுதிகளில் செல்லும் பலர் பிணமாக குதிரைகளில் திரும்பிவந்தனர் . அதுவரை ஐரோப்பியர்களுக்கு பயனளித்து வந்த துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் இந்த நிலத்தில் பலனளிக்கவில்லை. இதனால நீண்டகாலமாக இப்பகுதிகளில் குடியேறியதை தவிர்த்து வந்த குடியேற்ற வாசிகள் 1860க்கு பிறகுதான் மெல்ல ஊடுருவ துவங்கினர்.அதற்கு காரணம் மேற்கு பகுதிகளில் குறிப்பாக கலிபோர்னியா மாகாணத்தில் தங்கம் கிடைப்பதாக வெளியான தகவல் ஐரோப்பியர்களை வெறிகொள்ள வைததது. இதன் காரணமாக துணிச்சலுடன் கூட்டம் கூட்டமாக படையெடுத்த ஐரோப்பியர்கள் இதன் பொருட்டு அங்கு வசித்த பல லட்சம் பூர்வகுடிகளை கொன்று அவர்களது நிலங்களை கையகபடுத்தி அங்கேயே வசிக்கவும் துவங்கினர். குடியேற துவங்கியபின் அவர்களது உடை உணவு கலாச்சாரம் ஆகியவை மாறத் துவங்கின. கடும் குளீரையும் வெய்யிலையும் தாங்க வீடுகளை மரத்தால் நிர்மாணித்துக்கொண்டனர் .இதே காரணங்களுக்காக முரட்டு ஆடைகளை உடுத்திக்கொண்டனர். புழுதிக்கு கவசமாக தொப்பியும் .உடன் பாம்பு தேள் மற்றும் இதர பூச்சிகளின் தொந்தரவுக்காக இறுக்கமான முரட்டு பூட்ஸும் அணிய துவங்கினர். .தொடர்ந்த காலங்களில் ரயில் கண்டுபிடிக்கப்பட்டதால் பாதைகள் தந்திக்கருவிகள் ஆகியவை இப்பகுதிக்ளுக்கு இணைக்கபட இவையே இவர்களின் வாழ்வில் முக்கிய உரிப்பொருள்காகவும் மாறின. குதிரை இவர்களது நிரந்தர வாகனமாக மாறியது. பூர்வகுடிகளை அடிமைகளாக வைத்துக்கொண்டு நிலங்களை உழுது செம்மை படுத்தி விளைநிலங்களாக மாற்றிக்கொண்டனர். வறண்ட நிலமாக இருந்த காரணத்தல் இறைச்சி உணவுக்காக காலநடைகளை குறிப்பக பசுக்களை இறக்குமதி செய்தனர். இதனால இதனை பராமரிப்பதே இவர்களது முக்கிய தொழிலாக இருந்த காரணத்தால் இவர்கள் கவ்பாய்கள் என்றும் அழைக்கப்பட்டனர். ஆனால் எல்லோராலும் இக் காரியத்தில் முழுவெற்றி ஈட்ட முடியவில்லை . குடியேறிகள் பலருக்கு திருட்டும் வழிப்பறியும் முக்கிய தொழில்களாக இருந்தன. புதியதாக நகருக்குள் வருபவர்களிடமிருந்து கொள்ளையடிப்பது அங்கு தொடர்கதையாகிப்போனது. நகரை கண்காணிக்க ஷெரீப்புகள் எனும் காவல் அதிகரிகள் நியமிக்கப்ப்ட்ட்னர். ஆனால் பல காவலதிகாரிகள் தெருக்களில் அனாதைபிணமாக விழுந்துகிடக்க நேருவதும் உண்டு .

இப்படியான மேற்குநிலத்தின் புதிய வாழ்க்கை பற்றி கேள்விபட்ட கிழ்க்கு பகுதிமக்கள் அவ் வாழ்க்கையில் ஒரு வசீகரமும் கவர்ச்சியும் ஒளிந்திருப்பதை கண்டுகொண்டனர். இதையொட்டி சுவாரஸ்யமான பல கதைகள் புனையப்பட்டன. இச்சூழலில்தான் சினிமாவும் கண்டுபிடிக்கப்பட்டது.

சினிமா கண்டுபிடிக்கப்ப்ட்டு அமெரிக்கா உருவாக்கிய முதல் முழு நீள் திரைப்படமான தி கிரேட் டிரெயின் ராபரி (1903) எனும் படமே வெஸ்டர்ன் எனப்படும் இவ்வாழ்க்கையை பிரதிபலிப்பதாகத்தான் அமைந்தது. அன்று துவங்கி இன்று வ்ரை ஆண்டுதோறும் எண்ணற்ற படங்கள் இந்த வகைப்பாட்டில் அமெரிக்காவிலும் இதர நாடுகளீலும் தயாரிக்கபட்டு வருகின்றன. இத்தனைக்கும் இந்த கலாச்சாரம் இதர நாடுகளில் இல்லாவிட்டாலும் இந்தியா உடபட பல நாடுகளில் இந்தவகையில் படங்கள் உருவாக்கப்பட்டு வருவதுதான் இந்த வெஸ்டர்ன் ப்டங்களின் வெற்றிக்கு சான்று.

நன்மைக்கும் தீமைக்குமான போர் தான் பெரும்பாலான படங்களின் கதையம்சமாக இருக்கும். தொப்பி துப்பாக்கி பூட்ஸ் என இப்படங்களுக்கென கவர்ச்சியான பிரத்யோக ஆடைகள் மக்களீடம் வெஸ்டர்ன் படங்களின் மீதான வசீகரத்தை அதிகரித்தன. வெஸ்டர்ன்படங்கள் குறிப்பிட்ட காலத்தை பிரதிபலிப்பதாக குறிப்பாக 1860லிருந்து 1900ம் வரையிலான காலத்தை பிரதிபலிக்க வேண்டும் என்பதும் எழுதப்படாத விதி. குறிப்பாக விரலால் சுழற்றும் பழைய போன்கள் மட்டுமே பயன்படுத்தவேண்டும் .அது போல தந்திகம்பங்கள் இருக்கலாம் மின்கம்பங்கள் இருக்க கூடாது. மின்சார ரயில்களும் பயன்படுத்த கூடாது. மேலும் குதிரைதான் இவர்களது வாகனம் மோட்டார்பைக்குகள் காண்பிக்க கூடது .என பல சுவாரசியமான எழுதப்படாத விதிகள்தான் வெஸ்டர்ன் படங்களின் ஈர்ப்பை தக்கவைக்கின்றன.

தொடர்ந்து எல்லா காலங்களிலும் இத்தகைய கவ்பாய் படங்கள் அமெரிக்காவில் வெளியாகிகொண்டிருந்தாலும் ..குறிப்பிட்ட இரு இயக்குன்ர்கள்தான் இவ்வகைபடங்களை அனைவரும் ரசிக்கும்படியாக வெளிக்கொணர்ந்தவர்கள்

அவர்கள் ஜான் போர்ட் மற்றும் இத்தாலிய இஅயக்குனர் . சர்ஜியோ லியோனி

இதில் ஜான் போர்ட் டின் படங்கள் கிளாசிக்கல் வெஸ்டர்ன் என்றும் சர்ஜியோ லியோனியின் படங்கள் ஸ்பாகட்டி வெஸ்டர்ன் என்று அழைக்கபடுகின்றன.


ஜான் போர்ட் February 1, 1894 – August 31, 1973)[1] கிளசிக்கல் வெஸ்டர்ன்.

அமெரிக்க சினிமாவின் தந்தையாக அறியப்படும் ஜான்போர்ட் குரசேவா பெர்க்மன் .மற்றும் ஆர்சன் வெல்ஸ் போன்றாரால் பெரிதும் கொண்டாடப்பட்டவர்.

1917 ல் இயக்குனராக அறிமுமான போர்ட் தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் தன் வாழ்க்கை பயணத்தை திரைபடங்களுக்காக்வே அர்ப்பணித்து மொத்தம் 146 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவற்றுள் 55 படங்கள் வெஸ்டர்ன் வகையை சார்ந்தவை .மவுனபட காலங்களில் ஜாக் போர்ட் என்ற பெயருடன் படங்களை இயக்கி வந்தவர் 1928லிருந்துதான் ஜான் போர்ட் என்ற பெயரை பயன்படுத்த துவங்கினார் . ஜான் போர்ட் இயக்கிய படங்களூள் Stagecoach, The Searchers, The Grapes of Wrath. and The Man Who Shot Liberty Valance, போன்ற வெஸ்டர்ன் படங்கள் குறிபிட்டத்தக்கவை . நான்குமுறை சிறந்த இயக்குனருக்காக இவர் ஆஸ்கா விருதை பெற்றிருப்பது குறிபிடத்தக்கது. பலரும் இந்த மேற்குபகுதி வாழ்க்கையைவைத்து வெறும் ஆகஷ்ன் படமாக எடுத்துக்கொண்டிருந்த காலத்தில் இவர் அந்நிலப்பரப்பின் அழகையும் மக்களது வாழ்வையும் தனது படங்களில் காட்சிபடுத்தியிருந்தார்.

அதே போல கிளசிக்கல் வெஸ்டர்ன் காலத்தில் அதிகபடங்களில் நாயகனாக நடித்த பெருமைக்குரிய நடிகர் ஜான் வாய்னே

செர்ஜியொ லியோனி (January 3, 1929 – April 30, 1989) ஸ்பாகட்டி வெஸ்டர்ன்

அமெரிக்கா அல்லாத இத்தாலிய இயக்குனர்களாலும் மற்றும் இதர ஐரோப்பிய தொழில் நுட்ப இயக்குனர்களலும் உருவாக்கப்பட்ட வெஸ்டர்ன் படங்கள் தான் . ஸ்பாகட்டி வெஸ்டர்ன் என அழைக்கப்படுகின்றன. ஐரோப்பிய நாடான இத்தாலியில் அதன் மத்திய பகுதிகள் சில இடங்கள் அமெரிக்காவின் மேற்கு பகுதியை போன்றே நிலப்பரப்புகள் அதிகமிருந்த்ன .இதன் பொருத்தபாட்டில் இத்தாலிய இயக்குனர்கள் உருவாக்கிய படங்களே ஸ்பாகட்டி வெஸ்டர்ன். என்றழைக்கப்பட்டன. இன்று உல்கம் முழுக்க அங்கீகரிக்கப்பட்டிருக்கும் வெஸ்டர்ன் படங்கள் இத்தாலியில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்பாகட்டி வெஸ்டர்ன் படங்களே.

மேலும் இன்று வெஸ்டர்ன் படங்கள் உல்கம் முழுக்க பரவலான பார்வையாளர்களையும் தனித்த ரசைகர்களையும் பெற்றிருக்கிறதென்றல் அத்ற்கு காரணமான ஒரே இயக்குனர் செர்ஜியோலியோனிதான். அவரது இயக்கத்தில் வெளியான படங்கள் மொத்தம் ஆறு மட்டுமே . A Fistful of Dollars; For a Few Dollars More; The Good, the Bad and the Ugly Once Upon a Time in the West; Duck, You Sucker!; and Once Upon a Time in America. இவை யனைத்துமே ஸ்பாகட்டி வெஸ்டர்ன் படங்கள். இவையனைத்துமே மிக பெரிய வெற்றி படங்கள் என்பதோடு மட்டுமல்லாமல் இன்றளவும் புதிய பார்வையாளர்களை தக்க வைத்துக்கொண்டிருக்கின்ற்ன என்பதும் இதில் குறிப்பிடத்தக்க விடயம்.

இத்தாலியின் த்லைநகரான ரோமில் பிறந்த லியோனின் ஒரு அதிர்ஷ்டக்காரர். காரணம் பிறக்கும்போதே சினிமா அவருக்கு ரத்தினகம்பளம் விரித்து தந்தது. தந்தை மவுன படங்களீன் இயக்குனர். தாயார் ஒரு நடிகை. மட்டுமல்லாமல் அவர் உதவி இயக்குனராக பணிபுரிந்த அனைத்து படங்களுக்கும் உல்கபுகழ்பெற்ற படங்கள்

விட்டோரியா டிசிகாவின் பைசைக்கிள் தீவ்ஸ் ப்டத்தில் பணிபுரிந்தவர் அத்னை தொடர்ந்து இத்தாலிய அமெரிக்க கூட்டுத்யாரிப்பில் உருவான பிரம்மாண்ட படங்களான குவாடிஸ் மற்றும் பென்ஹர் ஆகிய ப்டங்களீலிம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.


லியோனின் படங்களது பெரு வெற்றிக்கு காரணம் இருவர். அதில் ஒருவர் இவரது வகுப்புதோழன். அவருக்கும் இவரை போலவே திரைப்படத் துறையில் மிகுந்த ஆரவம் . அதிலும் குறிப்பாக இசைதுறையில் ...
நான் படமெடுத்தால் நீதான் இசையமைப்பாளர் என லியோனி அப்போதே நண்பனிடம் வாக்களித்தர் .அது போலவே தன் முதல் படமான பிஸ்ட் புல் ஆப் டாலர்ஸ் படம் இயக்க வாய்ப்பு வந்த போது தன் நண்பனை இசையமைக்க வாய்ப்பளித்தார்.. அவர் தான் உல்கபுகழ் இசையமைப்பாளரான எனியோ மரிக்கோன். திரை இசை வரலாற்றில் பல புதுமைகளை செய்வித்தவர். இன்று நம் ரசிக்கும் பல திரை இசை பாடல்களில் ஏதோ ஒன்று அவரது பாடலை அல்லது இசைக்கோர்வையை தழுவி உருவாக்கப்பட்தாக இருக்கும் அந்த அள்வுக்கு அவரது இசை உள்கம் முழுக்க பெரும் வசீகரத்தை உருவாக்கியிருக்கிறதென்றால் அது மிகை இல்லை .



இவரை போலவே லியோனின் படங்களது வெற்றிக்கு மிக முக்கிய காரணீகள் இன்னொருவர் ஒரு நடிகர். வெஸ்டர்ன் ப்டங்கள் என்றாலே நம் ஞபகத்துவரும் முகம் அவருடைய முகமாகத்தான் இருக்கும் அவர்
லியோனியின் மூன்று படங்களில் நாயகனாக நடித்த கிளீண் ஈஸ்ட் வுட்

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் மிகவும் சாதரண குடும்பத்தில் பிறந்த ஈஸ்ட்வுட சினிமாவில் நடிக்க மிகவும் பிரயத்தனப்பட்டார்,ஆனால் அவரது கவர்ச்சியற்ற முகம் அதற்கு வாய்பளிக்கவிலை . பின் தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் நடிக்க அந்த தொடர் பெருவெற்றி பெற்றது . இச்சமயத்தில்தான் லியோனின் தன் முதல் படமான பிஸ்ட் புல் ஆப் டாலரில் நடிக்க நாயகனைதேடிக்கொண்டிருந்தார் .அப்போது இத்தாலி தொலைக்காட்சிகளில் ஒரு அமெரிக்க சீரியல் ஓடிக்கொண்டிருந்தது. அதுதான் ஈஸ்ட்வுட் நடித்த சீரியல் .ஆனல் முதலில் சீரியலின் நாயகனைத்தன் லியோனின் தேர்ந்தெடுத்தார்.ஆனால் லியோனின் படம் இத்தாலி மற்றும் ஸ்பெயினில் படப்பிடிப்பு நடக்க விருந்ததால் அவர் நடிக்க மறுத்துவிட்டார் .அதே சமயம் என்னுடன் இன்னொருவன் நடிக்கிறான் ஆனல் அவன் முகம் சரியாக இருக்கது ஆனால் திறமையானவன் எனக்கூறி ஈஸ்ட்வுட்டை அறிமுகப்படுத்தியுள்ளர். அத்ன் மூல்மாகத்தன் கிளீண் ஈஸ்ட் வுட் தன் வெற்றி பயணத்தை துவக்கினார் .இன்று வெஸ்டர்ன் படங்கள் என்றாலே ஈஸ்ட் வுட் எனுமளவிற்கு உலகபுகழையும் அடந்துள்ளார்.

லியொனின் படங்களின் உள்ள காலபகுப்பு மிக நுணுக்கமானது . ஒரு டைட் க்ளோசப்புக்கு அடுத்து எக்ஸ்ட்ரீம் லாங்ஷாட் எனும் இவரது காட்சி பகுப்பு கணக்கு அழுத்த்மான பாதிப்பை பார்வையாள்ர்க்ளிடம் உண்டாக்கியது. வெறுமனே துப்பாக்கியை மட்டும் மையபொருளாக வைத்துக்கொண்டு அவர் பகுக்கும் காட்சி முறைமையும் காலத்தை துணிப்புகளாக காட்டும் மாயவித்தையும்தான் அவரது படங்களீன் கூடுதல் கவர்ச்சிக்கு மூல காரணம் .

May 21, 2011

இரண்டாம் பாகம் : பாப் மார்லி



மக்கள இசையின் மகத்தான கலைஞன் பாப் மார்லி : இரண்டாம் பாகம்

(ரவிக்குமார் எழுதிய பாப் மார்லி நூல் நிமித்தம் தமுஎகச MMDA 20-05-11 அன்று ஏற்பாடு செய்திருந்த மொட்டை மாடிக்கூட்டத்தில் வாசிக்க எழுதிய கட்டுரை i= இரண்டாம் பகுதி ..).



பாப் மார்லிக்கு கிடைத்த இந்த அபரிதமான டிஷர்ட் அங்கீகாரத்துக்கு மிக முக்கிய காரணம் அவரது அரசியல் உணர்வு .

ஏன் டீ ஷர்ட் அங்கீகாரத்தை நாம் பெரிதாக கருத வேண்டுமென்றால் கேசட் விற்பனை மற்றும் ஊடக மதிபீடுகள் போன்ற இதர அங்கீகாரங்கள் குறிப்பிட்ட இசைஞனது இசையை நன்கு அறிந்தவர்கள் இசை ரசனையாளர்கள் தருவது. ஆனால் சாப்ளின் சே பாப் மார்லி ஆகியோருக்கு கிடைத்திருக்கும் இந்த டி ஷர்ட் அங்கீகாரங்கள் காலத்தின் பரிசு. அவர்களை யாரென்றெ முழுவதும் அறியாத ஒரு தலைமுறையும் கூட்டமும்தான் இதனை அவர்களுக்கு வழங்குகின்றனர்.

மார்லியின் உள்ளார்ந்த விழைவு மனிதகுலத்தின் விடுதலையாகத்தான் இருந்துள்ளது. இதுதான் ஒரு கடவுள் மாதிரியான பிம்பத்தை அவர் மேல் உண்டக்கியுள்ளன. அவரது கஞ்சா புகையுடனான தோற்றம் ஒருவனுக்கு தெய்வீகத்தை உணர்த்துவதும் இதனால் தான். அவர் பற்றின சிறுதகவலும் அறியாத ஒரு இளைஞன் அந்த டீ ஷர்ட்டை அணிந்ததும் அவன் அடையும் உற்சாகம்.., ஆற்றல் பரவசம் அவனுக்கு வேறு எதிலும் கிடைப்பதில்லை .

அவனுக்கு இது எதனால கிடைக்கிறது என்றால் அது அவரது முகபாவம். அவரது அந்த பாவங்களிலிருநது, காற்றில் திரியதிரியாக அலையும் சடையிலிருந்தும் தனக்கு தேவையான உற்சாகத்தை சுதந்திரத்தை விடுத்லையை உள்வாங்கிக்கொள்கிறான்

அந்த முகபாவம் மந்திரசக்தியாலோ அல்லது அவர் நம்பும் ரஸ்தபாரியின் மத தலைவர் செல்ஸாவாலோ வந்துவிடுவதில்லை.
அது அவரது எண்ணங்களிலிருந்தே பிறக்கிறது என்பேன்.
இப்பூமியின் மீதான அனைத்து மக்களையும் பெரும் விடுதலைக்கு அனபு நிறை உலக்த்துக்கு , பணம் நிறம் வித்தியாசமில்லாத ஒரு பேரன்பான உலகத்துக்கு அழைத்தும் செல்லும் அவரது எண்ணம் ஆற்றலாக முகத்தில் வெளீப்பட்டு கண்கள் வழி துளியாய் எஞ்சி நிற்கிறது .காலத்தில் உறையும் அம்முகம் இறுதியில் அந்த் ஆற்றலாக டீஷ்ர்ட் மூலம் அதை அணிபவனுக்கு புதிய அலையை எழுச்சியை உருவாக்குகிரது.

.
இத்தனைக்கும் லெனன் மற்றும் ஜாக்சன் ஆகியோரிடமும் மனித நேயம் குறித்த இயற்கை குறித்த பாடல் வரிகள் காண்ப்பட்டன . மைக்கேலின் ப்ளாக் ஆர் வொயிட் மற்றும் எர்த் போன்ற அர்த்த பூர்வமான பாடல்கள்தான் அவருக்கு இப்பவும் பெயர் தக்க வைக்கும் பாடல்கள் .ஆனால் அத்னையும் தாண்டியதாக பாப் மார்லியின் பாடல்கள் தகுதி பெற்று விளங்க காரணம் அவர் வாழ்க்கையிலும் தன் எண்ணத்தை எவ்வாறு கடைபிடித்தார் என்பதே . இவ்விடயத்தில் ஜாக்சன் உள்ளிட்ட மற்றவர்கள் பலரும் தங்களது புகழை தங்களது சொந்த வாழ்வுக்காக பயன்படுத்தியவர்களாக இருந்தனர் என்பது எவரும் மறைக்க முடியாத உண்மை

மார்லியின் பாடல்களை புரிந்து கொள்ள வேண்டுமானால் அவனது பாடல்வரிகளை நீங்கள் சற்று கவனிக்க வேண்டும்.



தெருவில் ஆடும் குழந்தைகள்
உடைந்த பாட்டிலில் புழுதியை நிரப்பும்
தின்பத்ற்கு ஏதுமில்லை
ஏதோ ஒரு இனிப்பு
அது பல்லை கெடுக்கிற இனிப்பு
அம்மா எங்கே இருக்கிறாள்
இருட்டுக்குள் அமர்ந்த்படி
வெளிச்சத்தை தேடுகிறாள்
அல்றுகிறாள் ”கார் வருது”
மோதிய கார் போயேவிட்டது
( உயிர்மை வெளியீடான பாப் மார்லியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது)

இந்த் பாடலை சற்று உற்று கவனித்தால் அதில் மூன்றாம் உலக நாடுகளின் வீதி ஒன்று மனக்கண் முன் விரியும் . அந்த வீதி நம்முடைய வீதி .இருட்டில் வாழ்க்கையை தேடும் தாய் நம் குடிசைதாய்
வாசலில் காரில் அடிபடும் பையன் நம் வீட்டுபையன்

இப்பொது சொல்லுங்கள் இவ்வளவு துரம் நம் வாழ்க்கைகு நெருக்கமான உண்மையை வேறு எந்த இசைஞன் சொல்கிரான். உண்மையில் மேற்கிலிருந்து பிறந்த ராக் ..ரா அண்ட் ரோல் ..ஜாஸ் டிஸ்கோ உள்ளிட்ட பல இசை முறைகள் அனைத்தும் பெரும்பாலும் கற்பனையை அல்லது தனிமனித ப்ரச்னையை மட்டுமே பாடி வந்த நிலையில் தன்னோடு வாழ்ந்த மக்களுக்காக அவர்களது துயரங்களுக்காக பாடலை பாடிய ஒரே கலைஞன் பாப் மார்லி தான்

பாப் மார்லியின் பாடல்களின் அரசியல் முக்கியத்துவத்தை நீங்கள் தெரிய வேண்டுமானால் ஜமைக்கா எனும் தேசத்தையும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்


தன் சொந்த நிலத்திலிருந்து பிடுங்கப்பட்ட மக்களது ஐநூறு வருட பாடுகளையும் வலிகளையும் கப்பலில் நிர்வாணமாக கயிறுகளால் கட்டி ஏற்றப்பட்டபோது உண்டான அம்மக்களின் வலிகளும் அவன் பின்னிருந்து இயக்குகின்றன. கிதாரின் அதிர்விலிருந்து எல்லையற்ற சுதந்திரத்தை தேடும் அவரது மனம் தனது அடையாளத்தை தேடி அலைவுறும்போது காலத்தில் அழியாத பாடல்களாக பிரசவிக்கிறது .இந்த பின்னணியில் அவரது கெட் அப் ஸ்டாண்ட் அப் பாடலை கேட்டீர்களானால் அந்த வரிகளின் மகத்துவம் தெரிய வரும் .

மார்லியின் பாட்ல்கள் மூன்று விதமான அரசியல்களை பேசுகின்றன
1.முதலாவது உயர்குடி மக்களால் நசுக்கப்படும் ஒடுக்கப்ப்ட்டவர்களின் வலிகள்
2.இரண்டவது சொந்த நிலமான ஆப்ரிக்காவுக்கு திரும்புதல் குறித்த பாடல்
3.மூன்றாவது வன்முறைகளுக்கு எதிரான அஹிம்சையை வலியுறுத்தும் பாட்ல்கள்


இறுதியாக இந்த நூல்குறித்து
ரவிக்குமார் அவர்கள் கட்சி பணிகளுக்கிடையில் இத்தகைய நூலை கொண்டு வந்திருப்பது மிகவும் பாரட்டதக்கது.

அவரது மொழி நடை வாசிக்க தகுந்தது . என்றாலும் வாரத்திற்கு இரண்டு பத்திகள் எழுத வேண்டிய அவசரத்தின் காரணமாகவோ என்னவோ ஒரு சீரான வளர்ச்சி இல்லாமல் ஏறியுமிறங்கியும் செல்கிறது . அவரது பால்யம் இளமை ஆகியபருவங்களையும் ரீட்டாவுக்குமான காதலையும் பற்றி விரிவாக எடுத்து சொல்லும் இப்புத்த்கம் அவரது இசை வழ்வுக்கு குறைந்த முக்கியத்துவமே தந்திருக்கிறது . பாப் எந்த புள்ளியில் புகழின் ஏணியில் ஏற துவங்கினார் போன்ற விவரங்கள் இல்லை .


இப்புத்தகத்தில் முற்போக்கு இலக்கியம் எனகூறி தமு எச வையும் அவர்கள் நாட்டுபுற இசைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும் ரவிக்குமார் கிண்டல் பண்ணுகிறார். இது அவசியமற்ற பார்வை . இது நாட்டுபுற இசை மற்றும் சமூகம் குறித்த அவரது குறுகிய பார்வையையே இது உணர்த்துகிறது . தமுஎச வின் கலைஇரவுகளின் களவாடப்பட்ட பிரம்மாண்ட வடிவங்கள்தான் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகள், இத்தகைய கலை இரவுகள் பல குடிசை கலைஞர்களை கோபுரத்துக்கு உயர்த்தியுள்ளது என்பதை ரவிக்குமாரும் நன்கு அறிவார். மற்றபடி பாப் மார்லியை பற்றிய அறிமுகத்துக்கு இந்நூல் மிகசரியான ஒன்றே .. புத்த்கத்தை உருவாக்கிய ரவிக்குமார்.வெளியிட்ட உயிர்மை பதிப்பகம் ,இந்நிகழ்ச்சியை நடத்தும் தமுஎகச எம் எம் டி ஏ கிளையின் செந்தில்நாதன் மற்றும் உறுப்பினர்கள் .. நிகழ்ச்சியில் என்னோடு கலந்துகொண்டு உரையாற்றிய ஷாஜி எனக்காக பாப் மார்லியின் டாலருடன் பங்கேற்ற ரசிகன் வெற்றி மற்றும் வேல்கண்ணன், ராகவ் கண்னன் மற்றும் இதர நண்பர்களுக்கும் என் நன்றி.

May 20, 2011

மக்கள் இசையின் மகத்தான கலைஞன் : பாப் மார்லி




(ரவிக்குமார் எழுதிய பாப் மார்லி நூல் நிமித்தம் தமுஎகச MMDA 20-05-11 அன்று ஏற்பாடு செய்திருந்த மொட்டை மாடிக்கூட்டத்தில் வாசிக்க எழுதிய கட்டுரை ..).

பாப் மார்லியை பத்துபதினைந்து வருடங்களுக்கு முன் அவரது ”கெட் அப் ஸ்டேண்ட் அப் ” பாடல் மூல்மாக அறிமுகம் செய்து கொண்டேன். அந்த காலத்தில் ஜல்லி அடிக்கும் இல்க்கியம் இல்லை . இணையம் பேஸ் புக் இல்லாத காலம். இலக்கிய வாசிப்பின் மீது தீவிர நம்பிக்கையும் அதனை ஒரு மதமாகவும் நம்பி வாழக்கூடிய ஆட்கள் கொஞ்சமாக நகரத்துள் உயிர்த்து வந்த்னர் என் சென்னையின் துவக்க நாட்களில் ரியாஸ் ஜார்ஜ் மற்றும் ஞான சம்பந்தன் என சிறு நண்பர் வ்ட்டம் இருந்தது. சனி ஞாயிறுகளில் ஏதாவது சினிமா அல்லது இலக்கிய கூட்டங்களுக்கு சென்று திரும்பிய பின் நண்பர்களின் அறைகளில் கூடுவோம் .பெரும்பாலும் கொருக்குபேட்டையில் இருக்கும் ரியாசின் வீடு ஒரு முக்கிய களம். அப்போது அனைவரும் பேச்சிலர். அங்கேயே சமைத்து சாப்பிட்டுக்கொண்டு விசிபியில் பதேர் ப்ஞ்ச்லி போன்ற நல்ல படங்களின் கேசட்டுகளை போட்டுபார்ப்போம். வெஸ்டர்ன் கிளாசிக் சிம்பொனிஸ் என ஆங்கிலத்தில் கூறப்படும் மேற்கத்திய செவ்வியல் இசைகோர்வைகளின் ஆகசிறந்த தொகுப்பு ஒன்றை விண்டேஜ் நிறுவனம் அப்போதுவிள்ம்பரத்துக்ககாக வெளியிட்டிருந்தது . அந்த ஒலிநாடாவை நான் வெகுநாட்கள் கையில் வைத்துக்கொண்டு திரிந்தேன். செல்லும் இடங்களில் எங்கெல்லாம் டேப் ரிக்கார்டர்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் போட்டு கேட்பேன் .பீத்தோவானின் 5 மற்றும் 9வது சிம்பொனிகளையும் மோசார்டின் சிறந்த கோர்வைகளையும் மற்றும் ,விவால்டி 4 சீசன் , சாக்கோஸ்கி ,ப்ராம்ஸ்,அரைவல் ஆப் க்வீன் ஷெபா என இன்னும் பல உலகின் உன்னத இசைகள் அனைத்தையும் அந்த ஒரே ஒலிநாடாவில் கேட்டேன். அதுமுதல் நான் சாஸ்த்ரிய மேற்கத்திய இசையின் தீவிர ரசிகன்.,தொடர்ந்து சிம்பொனிகளை தேடி அலையத்துவங்கினேன். தொலைக்காட்சி விளம்பரங்களில் பயன்படுத்த்படும் சிம்பொனி யாருடையது என அடையாளம் கொள்ளும் அளவிற்கு ஆனது. அண்ணாமலையில் வரும் அண்ணாமலைஅண்ணமலை பாட்டுக்குமுன் வரும் இசைக்கோர்வை அப்படியே பித்தோவானிடமிருந்து உருவப்பட்டதை அறிந்து கிளர்ச்சி கொண்டேன். . அதே போல ரியாசின் வீட்டில்தான் கிஷோர் முகம்மது ரபியையும் கேட்க துவ்ங்கினேன் .இப்படியான என் இசை வேட்டை காலத்தில்தான் ஒருதினத்தில் நிழல் திருநாவுக்கரசு பாப்மார்லியின் கேசட் தனக்கு கிடைத்ததுள்ளது என்றார். நாங்கள் அதைகேட்க நாள் குறித்தோம்

இப்படியாகத்தான் பாப் மார்லி எனக்கு அறிமுகமானார் . முதல் சந்திப்பிலேயெ ஒரு காதலியிடம் வீழ்வது போன்ற தருணம் அது.
ரெகே இசையின் துள்ளல் இசைகட்டு .மற்றும் கிதரின் சீரான தாள அமைப்பு என்னை இயல்பாக ஒரு நடனத்துக்கு அழைத்து சென்றது .அந்த இசையில் ஒரு விடுத்லை கொண்டாட்டம் மகிழ்ச்சி ஒன்று கூடல் எல்லாமும் இருந்தது. அது அந்த ரெகே இசையின் மகத்துவமா அல்லது பாப் மார்லியின் மந்திரமா தெரியாது .

யார் இந்த பாப் மார்லி, ஏன் மார்லியை உலகம் கொண்டடுகிறது . இன்று சே வுக்கு அடுத்த்தாக அதிகமான இளைஞர்ளின் டீஷ்ர்ட் ஃநாயகனக எப்படி மாறினான் என்பது ஆச்சர்யமான கேள்வி


வெறுமனே கலகத்தின் இசை கட்டற்ற சுதந்திரம் ஆகியவை மட்டுமே இதன் காரணமல்ல .பாப் மார்லியின் சடைவிரிகோல தோற்றமும், கஞ்சா புகைக்கும் ஏகாந்த முகமும் எசுவை போன்ற கண்களின் வெளிச்சமும் கூட அதன் காரணங்களல்ல .

இதே போல முகத்தில் கவர்ச்சியும் கட்டற்ர சுதந்திரமும் கண்களில் வெளிச்சமும் கொண்ட இன்னொருவன் சே குவேரா.

சே குவெராவுக்கும் பாப் மார்லிக்கும் ஆச்சர்யமான பல ஒற்றுமைகள்.

முகத்தில் காண்ப்படும் அபரிதமான கவர்ச்சி ..சுதந்திரமான விழைவு
ஆகியவை இருவரது முகங்களிலும் காணப்படும் பொதுவான அம்சங்க்ள் அவர் கியுப சுருட்டு என்றால் இவர் ஜமைக்கா வின் கஞ்சா .
அவர் கையில் துப்பாக்கீ இவர் கையில் கிதார்
அவரது மதம் மார்க்சியம் இவரது மதம் ரஸ்தபரிசம் (ரஸ்தபாரிசம் கிறிஸ்துவர்களுகெதிராக ஆப்ரிக்க பழங்குடிகள் தங்களது கலாச்சார பின்னணியுடன் உருவாக்கிகொண்ட பிரத்யோக கிறிஸ்தவ மதம் மதம் )

இருவருமே சி ஐ ஏவுக்கு தலைவலி கொடுத்த்வர்கள். கணக்கற்ற காதலிகள் இப்படி அதிசயமான் ஒற்றுமை கொண்ட இருவரும்
இன்று இரே சமயத்தில் இளைஞர்களால் கொண்டாடப்படும் உல்கப்புகழ் டீஷ்ர்ட் நாயகர்கள்




ஆனால் சே குவெராவின் வாழ்க்கை போல பாப் மார்லியின் வாழ்க்கையில் அத்தனை சவால்கள் இல்லை . எல்லாமே போகிற பொக்கில் அவருக்கு கிடைத்தது . மத நம்பிக்கைகள் பால் தீவிர ஈடுபாடுகொண்ட அவருக்கு அவரது ரஸ்தபாரி மதத்தின் த்லைவர் செல்ஸா கனவில் மனைவியிடம் பரிசளித்த மோதிரத்தின் மூலமாக பெரும் சக்தியை ஆற்றலை தனக்குள் கண்டு கொண்டவர் . சொல்லப்பொனால் அன்று புகழின் உச்சியில் இருந்த பீட்டில்சின் இசையை போலவோ அல்லது அவருக்கு பின் வந்த போனி எம் . மற்றும் மைக்கேல் ஜாக்சன் ஆகியொரை போலவோ இவர் வர்த்த்க ரீதியாக பெரும் சாத்னைகளை படைத்தவர் அல்லர்.

அமெரிக்காவில் 50களில் எல்விஸ் பிரெஸ்லீ வந்தார் 60களில் பீட்டில்ஸ் 70 களில் பாப் மார்லி . போனி எம் .. பீஜீஸ் ..அப்பாஸ் ஆகியோர் வந்தனர் 80 களில் மைக்கெல் ஜக்சன் வந்தார்

ஆனாலும் எல்விஸூக்கோ .. பீட்டில்ஸின் ஜான் லெனனுக்கொ அல்லது மைக்கேல் ஜாக்சனுக்கொ கிடைக்கத டீஷர்ட் பெருமையும் காலத்தின் அங்கீகாரமும் பாப் மார்லிக்குதான் கிடைத்துள்ளது. இப்போதும் கெட் அப் ஸ்டேண்ட் அப் அல்லது பஃவல்லோ சோல்ஜர் ஆகிய பாட்லை கேட்டதும் உடல் நம்மை மீறி ஆடத்துவங்குகிறது

இப்படி எல்விசுக்கோ லெனன்னுக்கோ ,ஜாக்சனுக்கோ கிடைக்காத புகழ் அல்லது செவ்வியல் அந்தஸ்து பாப் மார்லிக்கு மட்டும் எப்படி கிடைத்தது

அதற்கு ஒரே காரணம் தான்

(இரண்டாம் பகுதியில் –நாளை )

May 18, 2011

செம்மொழி சிற்பிகள் : ஞானியரடிகள்

திருப்பதிரிப்புலியூர் மடத்தலைவர் .தமிழ் பற்றாளர்.மறைமலையடிகளுக்கும், குன்றக்குடிஅடிகளுக்கும் தமிழ்பற்றில் முன்னோடி. .மடாதிபதிகள் அனைவரும் வடமொழிக்கு வால் பிடித்து அலைந்துகொண்டிருந்த காலத்தில் செந்தமிழில் பேசி தன் உணர்வை வெளிப்படுத்தியவர்.1942ல் பெரியார் அவர்களின் குடிஅரசு முதன்முதலாக ஈரோட்டில் வெளியிட்டவர் ’

ஞானியாரடிகள்
பிறப்பு: 17-05-1873

திகும்பகோணத்தில் திருநாகேசுவரத்தில் பிறந்தவர்.தந்தை அண்னாமலை ஐயா,தாயர் பார்வதி அம்மையார்.ஞானியார் பிறந்தவுடன் அவர் பெற்றோர் அவருக்கிட்ட பெயர் பழனியாண்டி. திருகோவலூர் மடத்தின் நான்காவது பட்டம் ஆறுமுக சிவாச்சாரியாரின் வேண்டுகளுக்கிணங்க, பிறந்த நான்கு மாதத்திற்குள் குடும்பம் திருப்பதிரிபுலியூருக்கு குடிபெயரே அதுமுதல் அதுவே அவரது இருப்பிடமானது. சிறுவயதுமுதலே துறவுமேற்கொண்டு அனைத்தையும் துறந்தாலும் தமிழ் பற்றை மட்டும் இவரால் துறக்கவே முடியவில்லை. .திருப்பதிரி புலியூர் தூய வளனார் பள்ளியில் கல்விகற்றார். தமிழ் தவிர சென்ன கேசவ நாயுடு என்பவர் மூலம் தெலுங்கும், இராமநாத சாத்திரி மூலம் வடமொழியும் கற்று தேர்ந்தார்..

திருப்பாதிரிபுலியூருக்கு சொந்தமான திருக்கோவிலூர் மடத்தின் தலைவர் ஆனதும் தினந்தோறும் தமிழ் அறிஞர்களை மடத்திற்கு வரவழைத்து சொற்பொழிவை நிகழ்த்தினார். உடன் அவ்வப்போது இவரும் சொற்பொழிவுகள் செய்தார். சென்னையிலிருந்து திரும்பும்போது ஒருமுறை திருப்பதிரிபுலியூர் மடத்துக்கு வந்த வள்ளல் பாண்டித்துரைத்தேவர் அவர்கள் ஞானியாரடிகளின் பேச்சை கேட்டபிற்பாடுதான் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் எனும் ஒன்றை தோற்றுவித்தார்.

1900ல் ம்டத்திற்குள் வாணிவிலாச சபை எனும் ஒன்றை ஞானியாரடிகள் துவக்க அத்னை வள்ளல் பாண்டித்துரைத்தேவரே வந்து துவக்கிவைத்தார்..பின் தமிழை கற்பிக்க மடத்துக்குள்ளேயே செந்தமிழ்கல்லூரி எனும் தமிழ் கல்லூரி ஒன்றையும் துவக்கினார்.இக்கல்லூரியில் படித்தபலர் பின்னாளில் பெரும் பண்டிதர்களாக உருவெடுத்த்னர். புதுவை சுந்தர சண்முகனார்,அண்ணாமலை பலகலைகழகதலைவர் மு.இராசக்கண்ணனார்,மற்றும் பச்சையப்பன் பள்ளி தலைமை ஆசிரியர் வச்சிரவேலு முதலியார் ஆகியோர் இவரது மாணாக்கர்களே.
இதர மடத்தலைவர்களை ஒருமடத்தலைவர் சந்திக்காதசூழலில் ஞானியார் தமிழ் வளர்க்க அவரே நேரில் சென்று இதரமடத்தலைவர்களை சந்தித்துஅங்கு தமிழ் கல்லூரிகள் தொடங்க ஆலோசனை சொல்லி அதனபடி அவர்களை துவக்க வைத்தார்.

தென்னாற்காடு வழக்காடுமன்ற தலைவர் நல்லசாமி பிள்ளை என்பவருடன் இணைந்து சைவ சித்தாந்த மகாசாமசம் எனும் அமைப்பை துவக்கி அதன் மூலம் சித்தாந்த தீபிகை எனும் இதழையும் துவக்கினார். பின் அதே அமைப்பின் மூலம் திருப்பதிரிபுலியூரில் 02-09-1918 அன்று மறைமலையடிகள் தலைமையில் நடத்தப்பட்ட சைவ மாநட்டில்தான் முதன்முதலாக தமிழை உயர்தனி செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என வெளிப்படையாக கோரிக்கைகள் ஏற்படுத்தப்பட்டது. .ஞானியாரின் தமிழ் பற்றை வடமொழியை ஆதரிக்கும் கும்ப்கோணம் மடத்தினர் கடுமையாக எதிர்த்த்னர். ஆனால் ஞானியார் அவர்கள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் தமிழ் பணியை தொடர்ந்தார்.

திலகவதிஅம்மை துதி,ஞானதேசிக மாலை,திருப்பதிரிப்புலியூர் தோத்திர கொத்து,போன்ற நூல்களை எழுதியும் யும்,திருப்பதிரிபுலியூர் புராணம்,மற்றும் அவிநாசி நாதர் தொத்திர கொத்து போன்ற நூல்களையும் பதிப்பித்துள்ளார்.



இறப்பு: 31-01-1942

May 16, 2011

பாப் மார்லியுடன் ஒரு மாலைபொழுது -மொட்டைமாடி அரங்கத்துக்கான அழைப்பு


இசைப்போராளி பாப் மார்லி


ரவிக்குமார் எழுதிய இந்நூல் குறித்த மொட்டைமாடி இரவு அமர்வு சென்னையில் வரும் வெள்ளிகிழமை இரவு நடைபெற உள்ளது . விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம்

தலைமை:
-கமலாலயன்

பாப் மார்லி இசைபோராளி நூல் குறித்து விமர்சனம்
-அஜயன்பாலா

பாப்மார்லியின் இசை
-ஷாஜி

மற்றும்
சி.சுந்தரமூர்த்தி
சிவ செந்தில்நாதன்

நாள்: -20-05-2011 வெள்ளிக்கிழ்மை, மாலை_6-15 மணி

இடம்: அண்ணாமலை ஆசிரியர் இல்லம்
சர்ச் பேரூந்து நிலையம் அருகில்
எம்.எம்.டி.ஏ காலணி
அரும்பாக்கம் சென்னை -106

தொடர்புக்கு 9962910391 ,9382853646

May 14, 2011

மயில்வாகனன் மற்றும் கதைகள்- சிறுகதைதொகுப்பு விமர்சனம்




மயில்வாகனன் மற்றும் கதைகள்- சிறுகதைதொகுப்பு விமர்சனம்
எழுதியவர்- உமாசக்தி

ஜன்னலுக்கு வெளியே பெய்யும் மழையை குறிப்பெடுத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளருக்கும் மழையில் நனைந்து கொண்டே வாசிக்கும் ரசிகைக்குமிடையேயான கதைகள் இவை.


நல்ல சிறுகதைகள் அருகிப் போன இக்காலகட்டத்தில் கையில் எடுத்த புத்தகத்தை கீழே வைக்கமுடியாத வகையில் வெகு நாள் கழித்து என்னை தொடர் வாசிப்புக்குள்ளாக்கிய தொகுப்பு அஜயன் பாலாவின் 'மயில்வாகனன் மற்றும் கதைகள்' .இத்தொகுதியின் தலைப்பைப் போலவே ஒவ்வொரு கதையின் தலைப்பும் வித்யாசமாசமானவை. பதினைந்து கதைகள் அடங்கிய தொகுதியில் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளுமே முக்கியமானவை, வாசிக்கும் போது மனதிற்கு நெருக்கமாகிவிட்டவை.


'மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும்', விநோத செய்தியாளனின் ஞாபகக் குறிப்பு', டினோசர்-94 ஒரு வரலாற்றுக்கதை, 'பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள்', 'கடவுளர் சபை - இது ஒரு இரவைப் பற்றிய கதை', 'முருகேசன்', 'ஜீன்ஸ் அணிந்த பறவைகள்', 'மயில்வாகனன் மற்றும் கதைகள்', 'கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி',ஆகிய கதைகளை நான் வெகுவாக ரசித்தேன். மாய எதார்த்தவாதக் கதைகளை உள்வாங்குவது சில சமயம் சிரமமாக இருக்கும், எனக்குத் தெரிந்தவரையில் இரா.முருகன் கதையின் பாதையில் நம்மை கட்டிப்போட்டு தரதரவென்று இழுத்துச் சென்றுவிடுவார். பா.வெங்கடேசன் நாம் கனவில் கூட எதிர்ப்பார்த்திராத உலகினுள் நம்மை அதி சுதந்திரத்துடன் நடமாட வைத்து ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்து மகிழ்வார். கோணங்கி நாம் மதிப்பீடாக கொண்ட எல்லாவற்றையும் போட்டுத்தள்ளிவிட்டு கனவுக்குள் வந்து கொண்டிருக்கும் கனவுக்குள் தோன்றி மறையும் காட்சிகளை அந்தகாரத்தை விலக்கி வார்த்தைகளினூடே மின்னல் தெறிக்கச் செய்து நம்மைப் பித்தாக்கிவிடுவார். அஜயன் பாலா இவை எல்லாவற்றின் கலவையாக இக்கதையின் வாயிலாக நம் கண்முன் நிற்கிறார்.


அஜயன் பாலா சிருஷ்டி செய்திருக்கும் இவ்வுலகின் கதைபாத்திரங்கள் கண்ணாடியில் பார்த்தால் தெள்ளந்தெளிவாய் தெரிவார்கள். நம்மிடம் உள்ள குணங்கள், குறைகள், சுய எள்ளல், பச்சாதாபம், ஆற்றாமை, உணர்ச்சிகளின் அதீதங்கள் எல்லாம் பாலாவின் பேனாவினூடே கதைகளாக வழிந்தோடுகிறது. எல்லாக் கதைகளிலும் எல்லாரும் இருக்கிறோம், அவர் நம் கரம்பிடித்து அழைத்துச் செல்லும் உலகினுள் விசித்திரமான சம்பவங்கள், கற்பனைக்கெட்டாத சம்பாஷனைகள் இடம்பெறுகின்றன. ஆனால் அவர் பத்திரமாக நம்மை இறக்கிவிடும் இடம் மிகப் பாதுகாப்பானது, நம்மை ஆசுவாசப்படுத்தி, முதுகைத் தட்டி சரி சரி போ என்று அனுப்பி வைக்கிறது. நிறைந்த வாசிப்பானுபாவத்தை அள்ளக் குறையாமல் கொடுத்தன இக்கதைகள்.


'மருதா' வெளியீடான இத்தொகுப்பில் குறை என்று சொல்ல ஒரு விதயம் மட்டுமே உள்ளது. அது அச்சுப்பிழை. ஆங்காங்கே கண்ணை உறுத்தும் அளவிற்கு வாசிப்பை எரிச்சலாகும் விதத்தில் 'ர' வை 'ற'வாகவும் இன்னும் சில மன்னிக்க முடியாத வார்த்தை பிழைகளும் தொகுப்பினுள் இருக்கிறது. மறுபதிப்பு செய்யும்போதாவது பிழை நீக்கம் செய்யப்படவேண்டும். கதாசிரியர் சில விதயங்களை கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் புகுத்தியுள்ளார், அவை மஞ்சள் நிறத்தின் மீது அவருக்கு அதீத ப்ரேமை போலும், மஞ்சள் வானம், மஞ்சள் கைக்குட்டை, மஞ்சள் வெயில் என்று மங்களகரமாக மஞ்சளைத் தெளித்துள்ளார். அதோடு கதை நாயகர்கள் பெரும்பாலும் பதட்டத்துடனே காணப்படுகிறார்கள். சிலருக்கு மனப் பிறழ்வோ என்று ஐயப்படும் அளவிற்கு அவர்களின் செயல்பாடுகள் நம்மை பீதியில் ஆழ்த்துகின்றன. ஆனாலும் இவை பெரிய குறைகளன்று, கதையின் வரிகள் மிகுந்த கவித்துவத்துடனும், மொழி நம்மை மகிழ்ச்சியிலும் கதாசிரியரின் அகவுணர்வும் துல்லியமான உணர்வெழுச்சிகளும் வாசிப்பவனை முடிவில்லா அகதரிசனத்திற்குள் ஆட்படுத்துக்கின்றன. இக்கதைகள் இங்குதான் வெற்றி பெறுகின்றன.


'மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும்'' என்னும் கதையிலிருந்து எனக்குப் பிடித்த வரிகள் " 'என் உள்ளொளிக்கும் கயமைக்கும் இடையேயான தொலைவை அளவீடு செய்யும் பார்வை. அதுநாள் வரை விழுமியங்களின் மேல் நின்று கொண்டிருந்த என் வாழ்வையே கேள்விக்குள்ளாக்குவதாக இருந்தது." 'முருகேசன்' எனும் தலைப்பிட்ட கதையின் எல்லா வரிகளும் அற்புதமானவை, 'நினைப்புக்கும் நிகழ்வுக்கும் இடையில் இருப்பதெல்லாம் வெற்று மறதிதான்' உண்மைதான் இவ்வரிகளை என்னால் மறக்க இயலாது.

May 9, 2011

பெண்ணென பெரிதாய் உளத்தக்க... . தொடர் பாகம் :3


பெண்ணென பெரிதாய் உளத்தக்க... .
தொடர் பாகம் :3


சோமாலி மாம்


தன்னம்பிக்கை

இன்றைய வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு எது அவசியமான சொத்து எது என என்னைக்கேட்டால் பணமோ படிப்போ அல்லது கணவனோ குடும்பமோ அல்ல

தன்னம்பிக்கை இது ஒன்று மட்டும் இருந்தால் போதும்
உலகில் எதையும் தன் வசப்படுத்த முடியும்.

ஆனால் நம் பெண்களுக்கோ தாய்மார்களுக்கோ இதுதான் பெரிய குறை.
காரணம் எப்போதும் மனபதட்டம்
போனமாசத்தை விட இந்தமாசம் பையன் கணக்குல ரெண்டு மார்க கம்மி..


தீபாவளிக்கு வங்கிவந்த சட்டை சரியில்லை. ஓரத்தில் கிழிந்துவிட்டது . கடைக்காரன் ஏமாற்றிவிட்டான்

சம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டது ..
கேஸ் தீர்ந்துவிட்டது
பால் பொங்கிவிட்டது

இந்த மனபதடட்ங்களுக்கு பல காரணங்கள்
அவற்றுள் ஒன்று நம் தொலைக்காட்சி சீரியலகள்..அதனால்
உண்டாகும் மனசிதைவு

இன்று வரும் சீரியகளில் பெரும் பாலானவை பெண்களை எப்போதும் பதட்டத்தில் வைத்திருப்பவைகளாக்வே அமைகின்றன்

த்ன்னம்பிக்கை மிகுந்த பெண்களின் மனதையும் அது உருக்குலைத்துவிடுகிறது .

உலக்மே தீயவர்களால் ஆனது என சொல்லி சொல்லியே அது பெண்களை பெரிதும் சீரழித்து வருகிறது

இன்பமாய் வாழ்வத்ற்கும் அனைவரிடத்தும் அன்பு செலுத்துவதற்கும் பல சாத்தியங்கள் வாய்ப்புகள் இந்த உலகில் உள்ளன என்பதை ஒரு போதும் போதிபபதே இல்லை
உண்மையில் இன்றைய பெண்ணுக்கு தேவை தன்னம்பிக்கையும் மரணதைரியமும்தான்
இதற்கு சரியான உதராணமாக இருப்பவர் சோமாலி மாம்

சோமாலி மாம்
பதினானகு வயது வரை வீட்டில் சிறை வைத்து தன் தாத்தாவால் தொடர் பாலியல் பலத்காராத்துக்கு ஆட்பட்டவர் கம்போடியாவை சேர்ந்த கிராமத்து பெண்

அவர் இன்று யார் தெரியுமா உலகில்
எங்கெல்லாம் சிறுமிகள் பாலியல் பலதகாரத்துக்கு உட்படுகிறார்களோ அவர்களை பாதுகாக்கும் மிகபெரிய செவை
செய்து வருபவர்

டைம் இதழ் கடந்த வருடம் வெளியிட்ட உலகின் சிறந்த 100 பெண்களின் பட்டியலில் இடம் பிடித்தவர் . இந்த 100 பெரை தேர்ந்தெடுத்த்வர் புகழ்பெற்ற ஆங்கில நடிகை அஞ்சலினா ஜோலி

மேலும் 2006 ஒலிம்பிக் துவக்க விழாவின் போது புகழ்பெற்ற ஆறுபேர் அத்ன் கொடியை அசைத்து துவக்கி வைத்தார்க்ள் அந்த ஆறுபேரில் சோமாலிமாமும் ஒருவர்

இப்படி பதினாலுவரை பாலியல் பலாத்காரத்துக்கும் மனசிதைவுக்கும் ஆட்பட்ட ஒருபெண் இத்த்னை உயரங்களை அடைய முடிகிறதென்றால் அதற்கு ஒரே காரணம்
தன்னம்பிக்கை..

பெரும் காற்றுக்கும் சூறை புயலுக்கும் அசையாத சிறு செடியின் கம்பீரத்தை ஒத்த மன உறுதி

அவரது வழ்வில் தான் எத்தனை எத்த்னை தடைக்கற்கள்

கம்போடியவில் ஏழைகுடும்பத்தில் பிரந்த சோமாலி மாம் சிறுவயதிலேயே பசி பட்டினியால் அவதியுற்றார். வீட்டில் இருந்து பட்டினி கிடப்பதை விட சாப்படாவது கிடைக்கும் என
அவளது பெற்றோர் அவரது தாத்தா உறவுள்ள ஒருநபரின் வீட்டில் அனுப்பி வைத்த்னர் .

அங்கு சிறுவேலைகள் செய்து வந்த சோமாலியை வீட்டிலேயே சிறை வைத்த அந்த பாழும் கிழ்வன் சோமாலியை பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டான்

அதன் பிறகு பதினான்கு வயதில் அவளை பெரும் பணத்துக்கு குடிகாரன் ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்தான்

ஆனால் அதுவோ அவளை பள்ளத்திலிருந்து அதல பாதாளாத்திற்கு தள்ளிவிட்டது போலானது

அவனோ பெரும் குடிகாரன். தினமும் நரகவேத்னைகள் தொடர்ந்த்ன அவளை கொடுமைபடுத்தினான் . அடித்து துவைத்தான்.
விபச்சாரம் செய்ய தூண்டினான் . மறுத்த போது அடித்து உதைத்தான் சூடு வைத்தான் . வேறு வழியில்லாமல் பதினாலு வயதில் படிப்பறிவில்லா சிறுமி சோமாலி விபச்சாரத்தில் தள்ளபட்டாள் . ஒருநாள் மறுத்த போது குடி போதையில் துப்பாக்கியை அவள் முன் நீட்டினான் . ஒருகுண்டு த்லையை மயிரியிழையில் உரசிக்கொண்டு பொனது ..இன்னொரு குண்ர்டு கால்களுக்கிடையில் பாய்ந்தது.

இவனிடம் வாழ்வதைக்காட்டிலும் விபச்சர விடுதியே சிறந்தது என நினைத்தால் அது போலவே அவனும் அவளை பெரும் பணம் வாங்கி கொண்டு விடுதியில் விற்று விட்டான் .ஒருநாளைக்கு ஆறுபேர் வரை அவளை சித்ரவதைக்கு ஆட்படுத்தினர் . ஒருமுறை ஒருவன் வெளியில் அழைத்து செல்ல அங்கு இருபது பேர் காத்திருந்த்னர்
அன்று சோமாலிக்கு யாரையாவது கொலைசெய்யும் வெறி இருந்தது
அவளை அழைத்துசென்ற அந்த நபரை கொலைசெய்யும் வெறி அவளுக்கு உண்டானது . திட்டமிட்டு பின் த்ன்னை போல ஒரு பெண்ணாக இருக்கும் அவனது தாய் மற்றும் மனைவியின் கண்ணீரை எண்ணி அந்த எண்ணத்திலிருந்து விலகினாள்

இது போல பல சிறுமிகள் தன்னோடு பாலியல் தொழிலில் ஈடுபட்டு கொடும் சித்ரவதைகளூக்கு ஆள்வாதை கண்டு மனம் வெதும்பினார். விடுதியை நடத்துபவர்கள் இது போன்ற சிறுமிகளை சங்கலியால் கட்டி வைத்து போதிய உணவு உடைகூட தராமல் சித்ரவதை செய்யப்பட்டனர். பல சிறுமிகளை கொடூர வியாதிகள் தாக்கின.அவற்றுக்கு சிகிச்சை கூட த்ராமல் விடுதியை நடத்துபவர்கள் அவர்களை கொடுமைபடுத்தினர்.
ஒருநாள் விடுதியில் சோமாலியின் நெருங்கிய தோழியாக இருந்த ஒரு பெண் அங்கிருந்த ஏஜெண்ட் ஒருவனால் கண்ணெதிரிலேயே கொலைசெய்ய்ப்படுவதை பார்த்த சோமாலி உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பித்தார். அந்த ஓட்டம் அவரது வாழ்க்கை மட்டுமல்லாமல் பல எண்ணற்ற சிறுமிகளின் வாழ்க்கைக்கு ஒளியேற்றுவதாக இருந்தது .

யாரோ சிலரது உதவியால் மருத்துவ மனை தாதியாக வேலைசெய்த சோமாலிமாம் கொஞ்சம் கொஞ்சமாக புது மனுஷியாக வாழ்க்கை வாழதுவங்கினாள்

அச்சமயத்தில் வேறு யாராவது இருந்தால் இனி நிம்மதியாக வாழ்வே எண்ணம் நேரிடும் ஆனால் சோமலிக்கோ அப்படி ஒரு வாழ்க்கை வாழ விருப்பமில்லை. கண்உன் நேரடியாக விடுதியில் கண்ட பல சிறுமிக்ளது வாழ்க்கை அவளுக்கு கண்ணீல் நிழலாடி உறுத்திக்கொண்டே இருந்தது.

ஒரு நாள் வீதியில் தன்னை போல் விடுதியிலிருந்து தப்பித்துவந்த ஒரு பெண்ணை பார்த்தார். 9 வயதில் விடுதியில் விற்கப்பட்ட சிறுமி அவள் . இப்பொது பதினேழுவயதில் அவளை சோமலிமாம் பர்த்தார். காச நோய்காரணாமாக் அவளை விடுதியினர் விரட்டியிருந்தனர். மருத்துவ மனைகளும் அவளுக்கு சிகிச்சை செய்ய மறுத்து விரட்டியடித்தன . மோசமான நிலையில் அவளது உடலும் தோற்றம் இருந்தது. மனமும் உருக்குலைந்து காணப்பட்டது. சோமாலி அவளை கண்டதும் கட்டித்தழுவ அப்பெண் கண்ணீர் விட்டாள் .

சோமாலி மாம் அவளை வீட்டிற்கு அழைத்து சென்று குளிப்பட்டி குணப்படுத்தி நோய்களுக்கு மருந்திட்டார்.அந்த பெண் பூரண நலமடைந்து முகத்தில் எழும்பிய சிரிப்பு சோமாலிக்கு வாழ்வில் பெரும் வெளிச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது சோமலிக்கு உடனடியாக பணி நிமித்தம் பிரன்சுக்கு போக வேண்ரிய வேலை இருந்தது . ஆனால் வீட்டில் அவளது அரவணைப்பில் பாதுகாக்கப்பட்ட பெண்னுக்கோ சோமாலியை பிரிய மனமில்லை .நீங்கள் இல்லவிட்ட்டால் நான் இறந்து விடுவேன் எனகூறி அழுதாள். ஆனாலும் சோமாலிமாமுக்கு பணி நிமித்தமாக செல்ல வெண்டியது கட்டயாமாக இருந்ததால் பிரான்சுக்கு பயணமானார்.

பிரான்சுக்கு சென்ற சில நாட்களில் அந்த துக்க செய்தி அவரை தாக்கியது . அவளால் காப்பாற்ற பட்ட அந்த அபலைபெண்ணின் மரணம் சோமாலிக்கு பெரும் வேத்னையை உண்டாக்கியது . அதன் பாதிப்பில் இனி தன் வாழாள் முழுவதையும் இது போன்ற பெண்களுக்காக அர்ப்பணிக்க அந்த கணத்தில் முடிவெடுத்தார். சில காலம் பிரான்சில் பணி புரிந்தார். அவருடன் கைகோர்க்க வந்த நண்ப்ரை திருமணமும் செய்துகொண்டார்.

தன் தாயகமான கம்போடியாவுக்கு வந்த சோமாலி மாம் பிரெஞ்சு அரசாங்கத்தின் உதவியுடன் பாலியலால் துன்புறும் கம்போடிய சிறுமிகளை காப்பாற்ற ஒரு Acting for Women in Distressing Circumstances. எனும் அமைப்பை 1992ல் உருவாக்கினார் .அவரோடு சில சமூக ஆர்வலர்கள் கை கோர்த்த்னர் . சோமாலி த்லைமையில் அவர்கள் பாலியல் விடுதிதோறும் சென்றனர். சோமாலி குழந்தைகளை மீட்க அவர்களுடன் போராடினார். முதலில் அவர்கள் பணியவில்லை. சிலர் விரட்டியடித்த்னர். குண்டர்கள் மிரட்டினர் . ஒரு விடுதியிலிருந்து துப்பக்கியுடன் ஓடிவந்த ஒருவன் நேற்றியில் அதை வைத்து இங்கிருந்து ஓடு இல்லாவிட்டால் பிணமாகசரிவாய் என மிரட்டினான்

ஆனல் சோமாலி மாம் உறுதியுடன் அங்கேயே நின்றார். அவனுக்கு என்ன செய்வதென தெரியவில்லை.ஆனால் சோமாலி அவனது உறுதியை தன் தன்னம்பிக்கை விரைவில் பலவீனப்படுத்தும் என நன்கு உணர்ந்திருந்தார். அது போலத்தன் நடந்தது அவனால் சுடமுடியவில்லை . சில நிமிடங்களில் போலீசார் அவனை குண்டு கட்டாக தூக்கினர் . அத்ன் பிறகு பாதுகாவலர்கள் வைத்துக்கொள்ளும்படி பலர் அறிவுறுத்தினர் .ஆனால் சோமலி அதை தவிர்த்தார். முதல் வருடம் மொத்தம் 89 சிறுமிகள் காப்பாற்றப்பட்டனர். பல சிறுமிகளை பால்வினை நோய்கள் கடுமையாக தாக்கியிருந்த்ன. அவர்கள் முழுவதுமாக சிகிச்சை செய்யப்பட்டனர் .. அவர்களது கல்வி எதிர்கால வாழ்க்கை ஆகியவற்ரை சோமலியின் தொண்டு நிறுவனம் கவனித்துக்கொண்டது. 1996ல் சோமாலி மாம் ட்ரஸ்ட் என அந்த தொண்டு நிறுவனம் பெயர் மாற்றம்
கண்டது இன்று அவரது நிறுவனத்தால் 4000க்கும்மேற்பட்ட பெண்கள் சிறுமிகள் பாலியல் விடுதிகளிலிருந்து காப்பாற்றபட்டு சிகிச்சயளிக்கப்பட்டு அவர்களது வாழ்வில் எதிர்கால ஒளியேற்றபட்டுள்ளது

சோமாலியின் இந்த சேவை விரைவில் உல்கம் முழுக்க தெரிய வர சோமலியின் புகைப்ப்டங்கள் அனைத்து இதழ்களிலும் அச்சாக துவங்கின.
ஸ்பெயின் நாட்டு இள்வரசியிடமிருந்து 2006ல் அவருக்கு முதல் விருது தேடிவந்தது தொடர்ந்து பல விருதுகள் பாராட்டுக்கள் அவரை நோக்கி குவியதுவங்கின . ஒலிம்பிக்கின் கொடியை அசைத்து துவக்குமளவிற்கு பிரபலமானார் . பல பல்கலைகழங்கள் அவருக்கு டாகடர் பட்டங்களைதந்து பெருமைப்படுத்தின .

இப்போதும் அவருக்கு மிரட்டலகள் வருகின்றன

சேவையை நிறுத்த சொல்லி அவரது மகள் க்டத்த்ப்பட்டாள் . பின் போலிசார் அவளை மீட்டனர்.ஆனாலும் சோமாலி அஞ்சவில்லை .. இப்போதும் தொடர்ந்துதன் பணியில் அஞ்சாமல் துணிவும் தம்பிக்கையுடனும் விடுதிகளை நோக்கி செல்கிறார்.

May 6, 2011

திரு. அஜயன் பாலா அவர்களுக்கு.,


05-05-2011

வணக்கம்.வாசிப்பு ப‌ழக்கம் மறந்த நிலையில்
தங்களின் "கார்ல் மார்க்ஸ்" புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன்.நீங்கள் விகடனில் எழுதிய
நாயகன்களில் "கார்ல் மார்க்ஸ்..... அருமை...மிக அருமை!"
இதுவரை தமிழில் தாடிக்காரனின் சூரியோதயத்தை பற்றி
எத்தனையோ புத்தகங்கள் வந்த போதும்,உங்களின் எழுத்து நடை தான் "தி பெஸ்ட்!"
அதுவும் ஒரு வரலாறை, கதை பாணியில் நாவலுக்குரிய அழகான சொல்லாடல்களால்
கவிதையாக எழுதியிருந்தது அற்புதம்....! அத்துணை பெரிய மாகோன்னத
மார்க்ஸை இத்தனை அழகாக,எளிமையாக யாரும் எழுதவில்லை என
எண்ணுகிறேன்.
"இனி வரும் நூற்றாண்டெல்லாம்
மார்க்ஸ் என்றால் அஜ‌யன் பாலா
அஜயன் பாலா என்றால் மார்க்ஸ்"
என்றே விளங்கும்!
வாழ்த்துககளுடன்.,

வினோத்,
பெங்க்ளூரு






நன்றி வினோத் ..

கார்ல் மார்க்ஸ் அவர்களின் பிறந்த நாள் இரண்டு நாட்களுக்குமுன் வந்து பொன போது பதிவு எழுத நினைத்து சீஸனிசோபியா ..அல்லது ஊடககுணாம்சம் என நினைத்து தவிர்த்து விட்டேன்.. ஆனாலும்முக நூலில் சில நண்பர்களின் பதிவை படித்த பொது மகத்தான அந்த மனிதன் குறித்துசில வரிகளேனும் எழுதியிருக்கலாமோ எனும் எண்ணம் மின்னி மறைந்தது. நேற்று உங்கள் கடிதத்தை பார்த்தவுடன் அந்த மனக்குறை மறைந்தது. இந்த தொடர் எழுத மார்க்ஸ் பற்றிய நூல்களை தேடிக்கண்டுபிடித்ததுவே ஒரு தனிக்கதை . தொடரை எழுதும்போதுதான் கம்யூனிஸ்ட் கட்சிகளில் நேரடி தொடர்பில்லாமல் மார்க்ஸின் மேல் மகத்தான் மரியதை கொண்டிருக்கும் பலரை பற்றி தெரியவந்தது.ஒரு தோழர் நான் புத்த்க வேலையில் ஈடுபட்டிருந்த தென் திசை பதிப்பு அலுவலகத்துக்கே தன் மகனுடன் வந்து சிவப்பு சால்வை போர்த்தி ஆரத்தழுவிக்கொண்டது ஞாபகத்துக்கு வருகிறதும்.

சமூகத்துக்காக மனிதன் த்ன்னை அர்ப்பணித்துக்கொள்வதில் உலகைன் இதர த்லைவர்கள் அனைவரிலும் மார்க்ஸே இன்றும் முன்னோடியாகவும் முதன்மையானவராகவும் இருக்கிறார்.அத்னாலதான் வரலாற்று உலகை கி,மு.கி பி என்பதுபோல அரசியல் உல்கை மா.மு.மா.பி என அழைக்கலாம் என எழுதியிருந்தேன். யாராவது என்னிடம் கார்ல் மார்க்ஸை பற்றி சொல்லுங்கள் என்றால் என்னால் வாய் திறந்து சில நிமிடங்கள் பேச முடியாது.சில நிமிடங்களேனும் பெரும் அழுத்தம் மனத்தை சூழ்ந்து உப்பு நீரை கண்களை நோக்கி முட்டிதள்ளும். அத்ற்கு ஒரே காரணம் ஜென்னி..அவர்களது இழப்பு மற்றும் இருவருக்குமன உறவு ..

அதே சமயம் மதவாதிகள் எப்போதும் கார்ல் மார்க்ஸை தவறாகவே சித்தரித்து வருகிறார்கள்
அதற்கு ஓஷோவின் மார்க்ஸ் பற்றிய இந்த லிங்க் ஒரு சான்று.
http://www.messagefrommasters.com/Osho/osho/Osho-on-Karl-Marx-Communism.html

சிலர் ஓஷோ மதவாதி இல்லை என கூறுவார்கள்.ஆனால் அவர்களுக்கு தெரியாது இந்துமதத்தின் வசதி இதுதான்.த்ன்னை விரிவுபடுத்திக்கொள்ள அது காலத்துகேற்ப இது போன்ற சில மாடர்ன் மதவாதிகளை உருவாக்கிகொள்ளும்.

மார்க்ஸை போலவே சில விடயங்களில் நான் ஓஷோவை மதிப்பவன்.ஆனால் ஓஷோ கம்யுனிஸத்தையும் மார்க்ஸையும் எவ்வளவு தட்டையாக பார்த்துள்ளர் என்பத்ற்கு இந்த ஒரு கட்டுரையே சான்று.

அன்புடன்
அஜயன்பாலா
06-05-2011

May 5, 2011

ரோஜா -சிறு கதை


ரோஜா

ஒரு பூ எப்படி இந்த காரியம் பண்ணும் .. குழம்பியவளாக எழுந்துகொண்டு அவள் சோம்பல் முறித்தாள். ஞாபகத்தில் குத்திய முட்கள் உடலெங்கும் வலிக்கிறார் போல ஒரு குறுகுறுப்பு ..அந்த பூவை மாலையில்தான் துர்கா மந்திர் சாலையில் ஒரு துணிக்கடை அருகே பார்த்த ஞாபகம் வந்தது. மிருதுளாவின் வீட்டுக்கு வந்த போது துணீக்கடைக்கு பக்கத்துகடையில் தொட்டிசெடிகளாக வைத்து ஒருவன் விற்றுக்கொண்டிருந்தான்

குட்டையன பஞ்சாபி பையன் தான் கடையை கவனித்துகொண்டிருந்தான் .. வாசலில் இருந்த ஒரு ட்ரை சைக்கிளில் தொட்டி செடிகள் பலவற்றை ஏற்றுவதில் பஞ்சாபி மும்மரமாக இருந்தான்

துணிக்கடைவாசலில் மிருதுளாவின் பின்னால் நிற்கிற போது துப்ப்ட்டாவை எதுவோ இழுப்பது போலிருக்க திரும்பிய பொதுதான் துப்ப்ட்டா சிக்கியிருந்த முள் செடியில் அந்த பூவை பார்த்தாள் . நல்ல சிவந்து பருது பூரித்திருந்த ரோஜா அது. மிக வித்தியாசமாக இருந்தது . செக்க செவேலென மினுமினுப்பு வேறு... தாவும் குழ்ந்தைகளின் கண்களில் பிராகசிப்பது போன்ற தொரு ஒளி

சிறிது நேரம் அதையே பார்த்த்வள் மிருதுளாவிடம் அதை காண்பித்தாள்.. ரோஜா அவளையும் பார்த்து மகிழ்ச்சியுடன் தலையாட்டியது .. ஒருவேளை அப்போது காற்று பலமாக வீசியிருக்கலாம் . ஆனால் இவளுக்கு என்னவோ ரோஜா தனக்காகவே த்லையாட்டுவது போலவே பட்டது.

மிருதுளாவின் டூவீலரில் ஏறுகிறபோதுதான் அடடா அதை வாங்கியிருக்கலாமோ என எண்ணதோன்றியது. ரயிலில் பயணீக்கும் போது ஜன்னல் கண்ணாடியில் ஒட்டியபடி அந்த ரோஜா பயணிப்பதை போல அவளுக்கு கனவு வந்தது. கண்ணாடி முழுக்க அடர்ந்த பனி. இவள் எதுவோ ஒரு புத்தகத்தை வாசித்துகொண்டிருக்கிறாள்.சட்டென நிமிர்ந்தபோது பனியினூடே கண்ணாடியில் முகத்தை அழுத்தி உள்ளே பார்ப்பதுபோல அது பார்த்துகொண்டிருந்தது. அதன் காம்பில் எதிர் காற்றில் படபடக்கும் ஒரு பச்சை இலைதவிர வேறேதுவும் இல்லை. இவளுக்கு ஆச்சரயம் ..உள்ளே வா விழுந்துவிடப்போகிறய் என கெஞ்சுகிறாள்.ஆனால் ரோஜா ஒரு ஆணை போல புன்னகைகிறது. பின் தலையசைத்து கண்ணாடியில் முகத்தை அழுத்திக்கொண்டது. வண்டியினுள் பூவிற்கும் சிறு வணிகம் செய்யும் யாரோ ஒரு பெண் ரொம்பத்தான் செல்லம் கொஞ்சுகிறாய் என முறுவளித்தாள் . கூபேயின் சகபயணிகளும் ஒரு நடனகாரர்களை போல உடலை அசைத்தபடி அரைக்கண்னால் ரோஜாவின் மையல் சொட்டும் காத்லை ரசித்தனர். இவளுக்கோ வெட்கம் ஆனாலும் ஒரு தீவிரமான உணர்வு தொற்றிக்கொண்டது. கண்ணாடியில் அழுத்திக்கொண்டிருந்த ரோஜாவுக்கு கண்ணாடியினூடே முத்தமிட்டாள் உடன் உடல் முழுக்க பரவும் மென்மையை அனுமதித்தாள். கடையில் பார்த்துவிட்டு ஏன் என்னை வாங்காமல் வந்தாய் ரோஜாவின் கேள்விக்கு இவளுக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. தாகூர் கார்டன் நிறுத்தம் நெருங்கி வந்ததும் ரோஜா சட்டென பின்னோக்கி வேகமாக பறக்க இவளுக்கும் அந்த அதிர்ச்சியில் கனவு கலைய தூக்கமும் முடிவுக்கு வந்தது.

ஆனால் எழுந்ததிலிருந்து மனதுக்குள் ஒரு பாரம். மிஷினிலிருந்து துணீயை எடுத்து பால்கனி ஹேங்கரில் க்ளீப் போட விடவில்லை . பாரம் மிகவும் அழுத்தியது . சோபாவில் சென்று ஈரத்துடன் படுத்துக்கொண்டாள் கனத்த மார்புகளை த்லைய்ணைக்கு அழுந்த கொடுத்தாள் .ஆனாலும் மனசுக்குள் நிம்மதியில்லை . எதற்காகவோ அலைந்தது. கடை எப்படியும் பத்து மணிக்கு மேல்தான் திறப்பார்கள் . டிசம்பர் மாதம் பனிக்காலம் வேறு. மேலும் இதற்காக மோதி நகர் வரை சென்றுவரவேண்டும்.. மிருதுளாவுக்கு போன் செய்து காலையில் வீட்டுக்கு வருவதாக சொல்லிவிட்டாள் .காரணம் கேட்டபோது துர்காமந்திர் என சொல்லி சமாளித்தாள்

பஞ்சாபி பையன் அப்போதுதன் கடையை திறந்திருந்தான். மிருதுளாவுக்கோ ஆச்ச்ரயம் எதுக்கு இப்ப கோவிலுக்குதான வந்த என ஆச்சர்யப்பட்டாள். பஞ்சாபி பையனுக்கு அவள் என்ன கேட்கிறாள் என தெரியவில்லை ..அப்போதுதான் உள்ளேயிருந்து ஒவ்வொரு தொட்டியாக வெளியில் எடுத்து வைத்துகொண்டிருந்த்வன் அவளை உள்ளேவரசொல்லி க்டைக்குள் அவளாகவே குறிபிட்ட செடியை தேடி தேர்ந்தெடுக்க அனுமதித்தான். உள்ளே வந்து பார்வையால் துழாவினாள். அந்த பூ தெரியவில்லை . எல்லாபூக்களும் பூவை போலவே இருந்தன . மிருதுளா ஸ்கூட்டியில் ஹாரனை அழுத்திகூப்பிட்டாள். இவளோ ஒவ்வொரு செடியாக தேடிபார்த்துக்கொண்டிருந்தாள்

அவன் பஞ்சாபி பையன் அவள் அருகே வந்து எந்த செடி எந்த செடி என ஹிந்தியில் அவளை கேட்டுகொண்டிருந்தான் அவளுக்குள் ஒரு பரிதாபம் வெறுமனே ரோஜா செடி என்றாள் நேற்றுதான் முப்பது ரோஜாக்களை ஒரே ஆளுக்கு விற்றதாக அவன் சொன்னான் ..மிச்சமிருந்த சிலவற்றை அவளது முகத்தருகே எடுத்து காண்பித்தபடி இருந்தான்.

ம் இது இல்லை என த்லையசைத்துக்கொண்டிருந்தவளின் கண்களிலிருந்து தண்ணீர் சாரை சாரையாக கொட்டிக்கொண்டிருக்க. பஞ்சாபி பையன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். முழுவதுமாய் அவள் அங்கிருந்து புறப்பட்டு வாசலில் மிருதுளாவை நோக்கி செல்ல மவுனமாய் அவளது முதுகை நோக்கி புன்னகைத்த அந்த பஞ்சாபி பையன் கடையினுள் மறைத்துவைக்கப்பட்ட சில பூந்தொட்டிகளை எடுத்து வெளியில் வைத்தான். பின் அங்கு வந்த வேறொருவனுக்கு அந்த குறிப்பிட்ட செடியை காண்பித்து பேரம் பேசினன். பேரம் படிந்தது. அந்த புதிய ஆள் செடியை தொட்டியுடன் எடுத்து ஸ்கூட்டரின் முன்பக்கம் வைத்து க்கொண்டான். புது மலர்ச்சியுடன் அந்த ரோஜா நகரையே தன் வசப்படுத்தியபடி வாகனத்தில் ஆரோகணிக்க துவங்கியது.
சாலையில் பயணித்த் பலரும் வினோத்மான ஈர்ப்பால் துவண்டனர். வெளி எங்கும் பரவிக்கொண்டிருந்த வாசம் பலரது உள்ளத்திலும் காத்லை தருவித்துகொண்டது. சில வாகனங்கள் விபத்துக்குள்ளாயின. காமம் மீதுற்ற பெண்கள் சிலர் கணவனை மோகித்தனர். பின் இருக்கையில் அமர்ந்த்படி தங்களது முலைக்காம்புகளை அவர்களது தோள்பட்டையில் உரசிக்கொண்டனர் .இணையில்லதவர்கள் பெரும் துக்கத்தில் வீழ்ந்தனர் . இரண்டொரு வாகனங்கள் விபத்துக்குள்ளாகி சரிந்தன

மிருதுளாவின் வீட்டிலிருந்து புறப்பட்டு பேருந்தில் வந்து கொண்டிருந்த அவள் மனதில் யாரொ அழைப்பது போலிருந்தது. அவளது இத்ழை யாரோ கவ்விக்கொண்டு உயிரை பருகுவதை உணர்ந்தாள் .வெளியே எட்டிபார்க்க ஒரு ஸ்கூட்டர் அவளது பேருந்தை கடந்துகொண்டிருந்தது.
.

May 3, 2011

நடிப்பின் கோட்பாடு மார்லன் பிராண்டோ : தன் சரிதம்



நடிப்பின் கோட்பாடு மார்லன் பிராண்டோ : தன் சரிதம்
- காலபைரவன்


நூல்: மார்லன் பிராண்டோ : தன் சரிதம்
ஆசிரியர்: அஜயன் பாலா


போதாமைகளினால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் நமது தமிழ்ச் சூழ்லில் எப்போதாவது,யார் மூலமேனும் கலை இலக்கியம் குறித்த வெளிச்சத்தின் திறப்பைக் காலம் தொடர்ந்து நிகழ்த்தியபடியே இருக்கிறது.கலை இலக்கியம் குறித்த பார்வை உலகம் முழுக்க தொடர்ந்து மாறிக்கொண்டேயிருந்தாலும்கூட,அது எந்த வகையிலும் நமது பொது புத்தி சார்ந்த உலகை எதுவுமே செய்து விடுவதில்லை.அதற்காக நமது ஊடகக்காரர்கள் ஒரு சிறு முன்னெடுப்பைக்கூட எடுத்து வைக்க விரும்புவதில்லை.

கலை வடிவங்களில் ஆழ்ந்து புரிதல் இல்லாதவர்கள் உற்பத்தி செய்துகொண்டிருக்கும் படைப்பாக்கங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய நிர்பந்தம் வேறு. திரைப்படம் ஓர் ஊடகமாக வலுப்பெற்று ஒரு நூற்றாண்டைக் கடந்துவிட்ட பின்பும், நாம் அடையாளம் காணக்கூடிய மொன்னையான சூழலில்தான் ”மார்லன் பிராண்டோ”வின் தன் சரிதக் கட்டுரைகள் அஜயன் பாலாவின் பெருமுயற்சியால் தமிழ் வடிவ்ம் பெற்று வெளிவந்திருக்கிறது.

அலைகளையே கடல்கள் என்று நம்பும் நமது மனம்,நடிக்கிற எல்லோரும் நடிகர்கள் தான் என்று கற்பிதம் செய்து கொள்கிறது.அவ்வாறான சிந்தனையில் உள்ள குறைபாட்டையும் நமது பார்வையின் தெளிவின்மையையும் பிராண்டோவின் கட்டுரைகள் கேலி செய்கின்றன.ஒரு நடிகன் என்ற அளவிலேயே நின்றுவிட்ட பிராண்டோவின் பிம்பம்,இந்நூலின் மூலம் தகர்த்தெறியப்பட்டு சமூகம் குறித்தா ஆழ்ந்த அக்கறையும் புரிதலுங்கொண்ட ஒரு கலைஞன் என்ற பிம்பத்தை தமிழ்ச் சூழலில் கட்டமைக்கிறது.

தேடலை முன்வைத்து தொடர்ந்து நகர்ந்து கொண்டிருப்பவனே கலைஞன்.ஒழுக்கவாதிகள் கலாச்சாரத்தின் பேரால் கட்டமைக்கும் அடக்குமுறைகளை தீவிரத்துடன் எதிர்த்து இயங்க வேண்டிய கூடுதலான் பொறுப்பும் கலைஞனுக்கு இருக்கிறது. அவ்வாறு வாழ நேரிடும் ஒரு கலைஞன் சமூகத்தால் எப்படிப் புரிந்துகொள்ளப்படுகிறான் என்பதையும் இப்படித்தான் வாயிலாக உணரமுடிகிறது.தன்சரிதக்கட்டுரைகள் அதீத கவனத்துடன் ஒழுங்கு செய்யப்பட்டு தொகுக்கப்படும் இக்காலகட்டத்தில்,பிராண்டோவின் எழுத்து வெளிப்படையான நிகழ்வுகள் மூலம் தமிழ் எழுத்துப் பரப்பில் கவத்தை ஏற்படுத்தும் வகையில் கட்டமைக்கப்படுள்ளது குறிப்பிடபட வேண்டிய ஒன்று.
இந்நூலில் வெற்றியென கருதுவது,திரைத்துறையினர் மட்டுமல்லாது,அனைவராலும் வாசிக்க முடிகிற அளவில், புத்தகம் பல தளங்களில் நின்று செயல்படுவதைத்தான் “நான் மரபுகளை மீறுபவன்;அது என் தனிப்பட்டகுணம்” என்று கூறும் பிராண்டோவால்,உண்மையான அன்பும், நல்லுணர்வும், பரிவும்,நற்காரியங்களும் இவ்வுலகில் சமூக அநீதிக்கும் வன்கொலைகளுக்கும் ஏதேச்சாதிகாரங்களுக்கும் இன்ன பிற அழிவு சக்திகளுக்கும் எதிராகச் செயல்படும் என நம்புகிறேன் என்று கூறமுடிக்கிறது. மேலும் ஒரு தனிப்பட்ட நபரின் ஆளுமையைத் தாண்டி அவ்வாளுமையோடு தொடர்புடைய பன்முகத்தன்மை கொண்ட போராட்டங்கள்,கலகங்கள் ஆகியவற்றை வாசிக்க நேர்கையில் ,நமது நடிகர்களின் இயங்குதளம் பற்றிக் கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

இரண்டு மூன்று படங்கள் வெளியாகி வெற்றி பெற்றவுடனேயே தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று வலம் வரும் நம் தமிழ் மெகா நடிகர்களை ஒப்பிடும்போது பிராண்டோவின் செயல்பாடும் அயராத உழைப்பும் மெச்சத் தகுந்ததாக இருக்கிறது. ஏசுவே எதற்க்காக நான் இந்த நகரத்திற்கு வரவேண்டும் என்று தன் பாராட்டு விழாவில் ரசிகர்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்ட பிராண்டோவால் கேட்க முடிகிறது.”எது அவர்களை இப்படி ஒரு விபரீதமான மனநிலைக்குத் தள்ளுகிறது? ,என்று அவர்கள் குறித்து ஆக்கப்பூர்வமாக யோசிக்கவும் முடிகிறது. ஐந்தடி தூரத்தில் மார்ட்டின் லூதர் கிங்கை பின்தொடர முடிகிறது. பூர்வகுடி இந்தியர்களுக்காக தனக்களிக்கப்பட்ட விருதை நிராகரிக்க முடிக்கிறது. இந்தியாவின் சாதியமைப்புகள்,ஏழ்மை நிலை குறித்து எடுத்த விவரணப் படத்தை கடைசி வரை போராடியும் அவாரால் வெளியிட முடியாமல் போகிறது.

ஒரு வேளை நான் ஒரு கறுப்பினத்தவனாக பிறந்திருந்தால் என நினைத்துப் பார்க்கிறேன்.என்னை ஒருவன் விலைக்கு வாங்கியிருக்க முடியும் என்ற எண்ணத்தையே என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று கறுப்பினத்தவர்கள் மீதான தனது அக்கறையை வெளிப்படுத்தவும் முடிகிறது.பத்திரிக்கை சுதந்திரம்,தனிமனித சுதந்திரத்தை பாழ்படுத்தாத வரையில் போற்றத்தக்கதே என்று திட்டவட்டமாக நம்பும் பிராண்டோ,டைம் இங்க் பத்திரிக்கையை தனியாளாய் நின்று பணியவைக்கிறார்.

நடிகர் என்ற வகையில் அவர் ஒரு சிறந்த உழைப்பாளி.உணர்ச்சிகளை வரவழைக்க உயர்ந்த இசையையும், தரமான கவிதைகளையும் நேசிக்கின்ற ஒரு நடிகனாகவும்,நடிப்பு சிறக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ளும் ஒரு நடிகனாக இயங்குகிறார்.நடிப்பின் கோட்பாடுகளை உள்வாங்கியதோடு நின்று விடாமல் அதைப் பரிசீலிக்கவும் செய்கிறார்.ஆதனால்தான் ஸ்டெல்லா ஆட்லரையும் நுட்பமாகப் பின் தொடர முடிக்கிறது.அமெரிக்கா,பிரிட்டன் நாடக ஆக்கங்களைப் பற்றியும்,அவற்றின் போக்கில் உள்ள வேறுபாடுகள் குறித்தும் தனித்தன்மைகள் குறித்தும் பேசமுடிக்கிறது.இசை,புத்தகங்கள் மீதான இவரின் ஆழ்ந்த ஈடுபாடு இவருக்கு வேறொரு ரூபத்தைக் கொடுக்கின்றன.

சுயசரிதை என்ற வகையில் இயங்கும் ஒரு நூலின் பிராதான அம்சம் அதன் வெளிப்படைத் தன்மையே.அவ்வகையில் பிராண்டோ ஒளிவும் மறைவுமின்றி தன்னை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை வாசிக்கும்போது உணரமுடிக்கிறது.காதலிகள் மனைவிகள்,அதிகாரப்பூர்வமற்ற பிள்ளைகள்,தான் நேசித்த,தன்னை நேசித்த பெண்கள் பற்றிய விவரங்களை எல்லாம் எந்தவித பூடகமுமின்றி அவரால் எழுதமுடிக்கிறது. சாப்ளினை எப்படி மேதையாக உணருகிறாரோ அதைப்போன்று அவரை விமர்சிக்கவும் செய்கிறார்.சாப்ளின் குறித்து இவ்வாறு எழுதுகிறார்:சாப்ளின் ஒரு மேதை என்பதை நான் ஒருபோதும் மறுக்கவில்லை.என்றாலும்,மற்ற எல்லோரையும்போல எல்லா கீழ்த்தரமான குணங்களையும் கொண்ட மிகச்சாதாரண மனிதர்களுள் ஒருவர்தான் அவர்.தன்னைப் பற்றிய சுயதெளிவும்,சமூகம் குறித்த ஒரு விமர்சனப் பார்வையும் கொண்ட ஒருவரால்தான் இவ்வாறு ஒருவரை மிகத் திட்டவட்டமாக மதிப்பீடு செய்யமுடியும் எனத் தோன்றுகிறது.

”என் வாழ்க்கையின் அடுத்த புள்ளி என்ன என்பது குறித்து எனக்கும் எதுவுமே தெரியாது.வெற்றி என்பது என் வாழ்வில் அசந்தர்ப்பமாக நேர்ந்தது” எனப் பேசும் பிராண்டோ,நான் மட்டும் சரிவர நேசிக்கப்பட்டிருந்தால் என் வாழ்க்கைப் பாதை வேறெப்படியாகவோ திசை திரும்பியிருக்ககூடும்”என்று ஆதங்கப்படவும் செய்கிறார்.முடிவின்மையை நோக்கி தொடர்ந்து பயணிக்க ஆகப்பெரிய கலைஞர்களால்தான் முடியும் என்பதை நூலின் வாயிலாக அறிய முடிகிறது.

ஒர் அசாத்திய உழைப்பை அஜயன்பாலா, தமிழ்ப்படுத்து வதற்காகச் செலுத்தியிருக்கிறார் என்பதை ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும் உணரமுடிக்கிறது. அதோடு மட்டுமின்றி நெருடல்களற்ற வாசிப்பிற்காக அவர் அதிக அக்கறை எடுத்துக்கொண்டதையும் அறியமுடிகிறது.

- கால பைரவன்.. புதிய்பார்வை



- நூல் தலைப்பு: மார்லன் பிராண்டோ தன் சரிதம்
பதிப்பகம்: எதிர் வெளியீடு பொள்ளச்சி
- தொலைபேசி: +91 9865005084
- +914259226012
-

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...