அஜயன் பாலா பாஸ்கரன்
.
April 29, 2026
பாரதிதாசன் : ஒரு பின் நவீனத்துவ முன்னோடி
பாரதிதாசன் : ஒரு பின் நவீனத்துவ முன்னோடி
தமிழ் ஒரு அழகான இளம் பெண்ணாக பூமியில் தோன்றி, அவர் முன் வரிசையாக தமிழ் கவிஞர்களை எல்லாம் நிறுத்தி, அதில் ஒருவரைத் தனது காதலனாகத் தேர்வு செய்யச் சொன்னால், அவர் நிச்சயம் தாவிச் சென்று கட்டியணைப்பாள் என்றால், அது பாரதிதாசனாகத்தான் இருக்கும்.
வள்ளுவன், கம்பன், இளங்கோ, பாரதி கூட இதில் தோற்றுப்போவார்கள். இவர்களிடம் அறம், பொருள், இன்பம் எல்லாம் இருந்தது. ஆனால் இவர்களைக் காட்டிலும் ஒரு மிளகு கூடுதலாக, அதன் அழகை, தேனூறும் சொற்சுவையை, பிற மொழிக் கலப்பில்லாத அதன் தனித்தன்மையை, தன் பாடல்களில் எளிமையாக பாமரருக்கும் கொண்டு சென்றவர் பாரதிதாசன்.
அவரிடம் பூடகம் இல்லை; புனைவு இல்லை; உருவகம், திருவகம் போன்ற மிகை அலங்காரம் எதுவும் இல்லை. இன்றைய நவீனக் கவிதை வந்து சேர்ந்திருக்கும் இடமும் இப்படியாகத்தான் இருக்கிறது.
ஆனாலும், அவரது கவிதைகளில் தமிழ் தெளிந்த நீரோடையாக அள்ளித் தெளித்து, வாசிப்போர் நெஞ்சில் அருட்சுவை கூட்டியது என்றால் மிகையில்லை.
அனைவரும் அறிந்த பின்னாளில் திரைப்பாடல்களாக உருவான “சங்கே முழங்கு”, “சித்திரச் சோலைகளே” போன்ற பாடல்களை கேட்டாலே போதும்; களிப்பும் உவகையும் இதயத்தில், எண்ணத்தில் பொங்கி பிரவகிப்பதை உணர முடியும்.
இதே சமயம், “பாரதிதாசன்” என்றாலே சில நவீனக் கவிஞர்களின் முகம் பாகற்காய் கடித்தாற்போல் ஆகிவிடுவதையும் நாம் அடிக்கடி பார்க்க முடியும்.
ஒருபக்கம் பாரதிதாசனை மரபிலக்கியவாதிகளும், திராவிட மற்றும் முற்போக்கு இலக்கிய முகாம்களும் கொண்டாடினாலும், நவீன இலக்கியக் கவிதை வரிசையில் பாரதிக்குப் பிறகு அப்படியே பிச்சமூர்த்தி, பிரமிள் என ஜம்ப் கட்டில் தாவிச்செல்லும் “கசடதபற” காலத்து இலக்கிய அளவுகோல்கள் இன்று காலாவதியாகிவிட்டன.
ஆனால் கறார் விமர்சகர் க.நா.சு பாரதிதாசனை கொண்டாடியவர் என்பது பலரும் அறியாதது.
மேலும், அவர் பலருக்கும் பரிந்துரைத்த “இருண்ட வீடு” எனும் கவிதை, இன்றைய நேரடிக் கவிதைகளுக்கு சற்றும் குறைவில்லாத வகையில் எழுதப்பட்ட நெடுங்கவிதை. ஒரு கேமராவைக் கொண்டு காட்சிப்படுத்துவதைப்போல, ஒரு வீட்டின் நிகழ்வுகளை இக் கவிதையில் அவர் அடுக்கிச் செல்லும் லாவகம் அபாரம்.
இன்றைய பின்-நவீனத்துவ உலகில், பாரதியாரை விடவும் பாரதிதாசனே அதி முக்கியத்துவம் கொண்ட கவிஞராகக் காணப்படுகிறார்.
அதனால்தான், நூற்றாண்டு கடந்தும் இன்றும் அவரது பாடல் ஏ.ஆர். ரகுமான் இசையில் “அவளும் நானும்” ஆக நம்மை ஈர்க்கிறது. வெறுமனே மொழிச்சுவையைத் தாண்டி, உலகளாவிய பிரச்சினைகளைப் பேசும் கவிதைகளாகவும் இன்றும் நமக்கு கிளர்ச்சியூட்டுகிறது.
“புதியதோர் உலகம் செய்வோம்,
கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்”
எனும் வரிகள், இன்றைய உலக அரசியல் வன்முறைகளுக்கும் பொருந்துகின்றன.
“வலியோர் சிலர் எளியோர் தமை
வதையே புரிகுவதா?”
எனும் வரியில் பொதுஉடைமை கருத்துகளையும்,
“கொலை வாளினை எட்டா
மிகு கொடியோர் செயல் அறவே”
எனும் வரிகளில் சமூக அநீதிக்கெதிரான உரத்த குரலையும் பதிவு செய்கிறார்.
அதே சமயம், அவரது “குடும்ப விளக்கு” போன்ற பாடல்கள் இன்றைய பெண்ணியக் கருத்துக்களுக்கு எதிராக இருந்தாலும், “கைம்மைப் பழி” எனும் கவிதையில், பாரதி கூட பேசாத பெண்களின் காமத்துக்கு மதிப்பும் மரியாதையும் கூட்டுவதாகப் பேசியிருக்கிறார்.
இப்படியாக இக்காலத்தின் தவிர்க்க முடியாத கவிஞராகவும், காலத்தின் தேவைக்கேற்ற முன்னுணர்வுடன் பாடியவராகவும் பாரதிதாசன், பாரதியைக் காட்டிலும் இக்காலத்தில் அதி முக்கியத்துவம் பெறுகிறார்.
பாரதியின் தமிழில் ஒட்டிக்கிடந்த வடமொழியை, பாம்பு தோலை உரிப்பது போல உரித்து, கவிதைத் துறையில் அழகுணர்ச்சிமிக்க வரிகளால் தமிழுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தவர் பாரதிதாசன் என்பதை யாரும் மறுக்க முடியாது.
1934-ம் ஆண்டிலேயே பெரியாரின் சுயமரியாதைக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அக்காலத்தில் வெளிவந்தவை பெரும்பாலும் பக்தித் திரைப்படங்கள். ஆனால் பாரதிதாசனோ திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றபோதும், சினிமாவில் எப்படியாவது நுழைந்து மக்கள் மனதில் இடம்பிடித்து அதன் பின் தன் கொள்கைகளை பரப்ப வேண்டும் என போராடினார்.
“பால்மணி” என்ற படத்தில் 1935-ம் ஆண்டு பாடல்கள் எழுதினார். தொடர்ந்து “ராமானுஜம்” எனும் பக்திப் படத்திற்கும் எழுதினார்.
இந்தப் போராட்டக் காலத்தில்தான் அவர் எழுதிய “இரணியன் அல்லது இணையற்ற வீரன்” என்ற முதல் நாடகம், சென்னை விக்டோரியா மஹாலில் அரங்கேறியது.
இந்திய விடுதலைக்குப் பிறகு, 1948-ம் ஆண்டு அன்றைய அரசு இந்த நாடகத்தைத் தடைசெய்தது. தடையை மீறி நாடகம் நடந்தது. அதனால் நடித்த கலைஞர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மூன்று மாதம் மூன்று வார சிறைவாசத்திற்குப் பிறகு, விடுதலையாகி வெளியே வந்த அவர்களை முதலில் செய்யாற்றில் வரவேற்றவர் பெரியார். அங்கிருந்து ஊர்வலமாக வந்த கலைஞர்களை காஞ்சிபுரத்தில் வரவேற்றவர் அண்ணா.
அவர் எழுதிய மொத்த நாடகங்கள் நாற்பத்தெட்டு. அவற்றில் “பிசிராந்தையார்” சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நாடகமாக குறிப்பிடத்தக்கது.
1944-ஆம் ஆண்டு அவரே “இன்ப இரவு” என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவைத் தொடங்கினார்.
அதன் மூலம் நாடகமும், சினிமாவும், கவிதையும் ஒன்றாக இணைந்த ஒரு பெரிய பண்பாட்டு இயக்கத்தை அவர் உருவாக்கினார்.
1942-ம் ஆண்டு சி. என்.அண்ணா துரை ‘திராவிட நாடு’ பத்திரிகையைத் தொடங்கியபோது,
“தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
என்ற கவிதை வரிகளை அதன் முகப்பு வரியாகப் போட்டார்.
தமிழ் சினிமாவில் திராவிட இயக்க எழுச்சி அலையின் போது, முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் ஆகியோருக்குப் பின் எழுத்தாளராக தன்னையும் “பொன்முடி” படம் மூலம் கைகோர்த்துக் கொண்டார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
அஜயன் பாலா
ajayanbala@gmail.com
நூற்றாண்டு கானும் மகத்தான திரைக்கலைஞன் – குருதத்
-அஜயன் பாலா
குருதத் எனும் மக்த்தான திரைக்கலைஞனின் பெருமைமிக்க நூற்றாண்டு இது
கடந்த வருடம் குருத்தத்தின் சம கால திரைக்கலைஞரும் பாலிவுட்டின் முதல் ஷோ மேன் என அழைக்கப்பட்டவருமான ராஜ் கபூர் அவர்களுக்கு நூற்றாணடு . இதை மிகப் பெரிய சம்பவமாக பாலிவுட் கொண்டாடியது . ஆனால் அவரினும் சிறந்த படைப்புகள் என்று மடும் அல்லாமல் இன்றும் மகத்தான காவியமாக் கருதப்படும் பியாசா காகேஸ் கெ பூல் , ஷாபி அவுர் குலாம் போன்ற படங்களைத் தந்த குருதத்தின் நூற்றாண்டை கொண்டாட யாரும் இல்லை
இது ரு கசப்பான் வாழ்க்கையின் விதி
இருவருமே காதலை தங்கள் திரைப்படங்களில் அபாரமாக கொண்டாடினர்
ஆனால் ராஜ் கபூர் சினிமாவை கவர்ச்சியான கொண்டட்டமாக மாற்றினார்
ஆனால் குருத்த அதை கலையாக நேசித்தார்
கபூரின் காதல்கள் நாடகத்த்மை மிகுந்த்வை சோகத்ட்துக்கும் துயரத்துக்கும் திரயில் விலைப் பட்டியல் உணடு என்பதை உணர்ந்து கண்ணீரை காசாக்கியவர்
ஆனால் குருதத்தின் படங்கள் கண்ணீரை வரவழைக்காது ஆனால் அது இத்யத்தை ஊடுருவிசெல்லும் . நம்மை தூங்க விடாமால் நிமதியிழக்கச்செய்துவ்டும் . மனித வாழ்வைல் த்யரங்களை காட்டி நம்மையும் பண்பட்டவனாக மாற்றும்
56 வருடங்களுக்கு முன் 1964ல் அக்டோபர் 10ம் நாள் இந்திய ஊடகங்களில் பரபரப்பான அந்த செய்தி வந்தடைந்து அனைவரது இதயத்தையும் தீயால் கருகச்செய்தது. . குருதத் எனும் மகத்தான கலைஞன் மும்பையில் தன் வாடகை வீட்டில் தற்கொலை செய்து கொண்ட தகவல் அது.ர்.
39 வயதேயான குருதத்தின் மனைவி கீதாதத் மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் . அந்த நாளில் அவரைப்பிரிந்து கீதா துயரத்தில் இருந்தனர் .
இன்று உலகமே குருத்த படங்களை கொண்டாடுகிறது . பியாசா தான் இன்றும் இந்தியாவின் சிறந்த தரமான வணிகப்படமாக கருதப்படுகிறது உன்னதமான .காதல் திரைப்படம் என்றாலே பியாஸாதான் . வெண்ணீற இரவுகள் , ரோமியோ ஜுலியட் போல இலக்கிய காதல் கதைகள் உண்டாக்கிய தாக்கத்துக்கும் சாப்ளினின் சிட்டி லைட்ஸ் திரைப்படமாக உருவாக்கிய தாக்கத்துக்கும் சற்றும் குறைவில்லாதது பியாஸா .
முதல் முறையாக் பியாஸா படத்தை பார்த்துவிட்டு மனம் என் கை நழுவிபோவதை அறிந்து பாதியிலேயே படத்தை நிறுத்திவிட்டேன் . என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை
இப்படிப்பட்ட படம் இயக்கிய இந்தியாவின் மகத்தான படைப்பாளியான் குருதத் வாழும் போது எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை .அன்று பியாசா படுதோல்விப்படம். .
துவக்கத்தில் குருதத் வாழ்க்கையும் தொடர் வெற்றிகளால் பிரகாசித்தது பாஸி, ஜால் , சிஐடி ,ஆர் பார் என வரிசையாக வெற்றிப்படங்களாக கொடுத்தார் . ஆனால் அந்த அவரது இயக்கம் பல வன்ணப்படங்களின் வருகையால் ஆட்டம் கண்டது. அழுத்தமான கதைகளுக்கும் எதார்த்த சித்தரிப்புகளுக்கும் வரவேற்பு குறைந்து பொழுது போக்கு அம்சங்கள் அதிகமுள்ள படங்கள் வரவேற்பு பெற்றன. அவரது சம காலாத்தவரும் சக போட்டியாளருமான ராஜ் கபூர் இதை அறிந்து தன் படங்களில் நாயகிக்கு ஆடைகளை குறைத்து இந்திய மனங்களின் ஏக்கத்தை பூர்த்தி செய்தார் . அவர் படங்களில் நாயகி அழும் போது கூட கவர்ச்சியாக உடை உடுத்தி அதிகமாக உடல் பாகங்களை வெளிப்படுத்தி அழுவார் . நம் ஊர் குடும்ப பாங்கான பாத்திரத்துக்கு புகழ்பெற்ற பத்மினியையே அவர் சித்தரித்த விதம் கண்டு பல தமிழ் ரசிகர்கள் இதயம் பிளவுண்டது ‘
ஆனால் ராஜ் கபூரின் இந்த சூட்சுமத்தை குருதத் செய்யத்துணீயவில்லை . அழுத்தமான காதல் கதைகளும் நேர்த்தியான தொழில் நுட்பமும் என்ற அவரது சினிமா ரசனை வியபார ரீதியாக தோல்வி கண்டது. பியாஸா வை தொடர்ந்து காகஸ் கீ பூல் ஷாகித் பீபி அவுர் குலாம் போன்ற படங்கள் சுமாரான வெற்றி பெற்ராலும் பியாஸாவால் உண்டான கடனை அடைக்கும் அளவுக்கு அவரால் பணம் ஈட்ட முடியவில்லை
இதன் நடுவே தான் அவர் வாழ்க்கையில் புயல் ஒன்று நுழைந்தது
அந்தப் புயல் வஹீதா ரஹ்மான் . நம் தமிழ்நாட்டில் செங்கல்பட்டில் பிறந்தவர். ஹேமம்மாலினிக்கு முன்பு இந்தியில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டிய முதல் நாயகி . எம் ஜி ஆரின் அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் அறிமுகமாகி பின் அப்படியே மும்பைக்கு சென்றார். . அப்போது சிஐடி படத்தை துவக்கியிருந்தார் குருதத் .அப் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு குருத்தை சந்திக்க சென்றார் . அந்த பட வாய்ப்பு வஹீதாவை நடசத்திரமக்கியது
வஹீதா அப்படி ஒன்றும் அழகில்லை .ஆனாலும் அவரிடம் ஒரு அபரிதமான் கவர்ச்சியும் அழகும் பொங்கி வழிந்தது . காமிராவுக்கும் வஹீதாவுக்கும் கெமிஸ்ட்ரி அற்புதமாக அமைந்தது . தொடர்ந்து குருதத்துடன் சேர்ந்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன குருதத்தின் இதயம் வஹிதா வசம் முழுமையாக சிறைபட்டது . கணவனின் காதல் போக்கு அறிந்த கீதாவும் வேறு வழியில்லாமல் குடும்பத்தை காப்பற்ற மீண்டும் திரையுலகில் பாட முடிவு செய்தார்
ஆர் டி பர்மன் அப்போது ஒரு புதிய பாடகியை லதா மங்கேஷருக்கு ஒரு மாற்றாக உருவாக்க நினைத்து கீதாவை அழைத்து வாய்ப்பு கொடுத்தார்
ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த கீதாவின் குரல் அன்று பர்மன் எதிர்பார்ப்பை ஈடு செய்ய முடியவில்லை .ஆனாலும் ஆர் டி பர்மன விடாமல் முயற்சித்தார் .
]
குருதத் காதலி வஹீதா ரஹ்மான் மனைவி கீதாதத் ஆகியோருடன்
இதனிடையே இதை அறிந்த லதா மங்கேஷ்கர் தன் தங்கை ஆஷாபோன்ஸ்லேவை அனுப்பி ஆர் டி பர்மனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வைத்தார்
இந்த வெறுப்புகளால் கீதா கணவனை விட்டு முழுமையாக பிரிந்தார்
ஒருபக்கம் தனக்காக தன் திறமையையே தியகம் செய்து குடும்பத்துக்காக அர்ப்பணித்த காதல் மனைவி கீதா மற்றும் குழந்தைகள் இன்னொருபக்கம் சினிமா எனும் கலை வஹீதாவின் மாயச்சிரிப்பு \
பாழும் கலைஞனுக்கு அதீத இதயத்தையும் உச்சமான ரசனையையும் கொடுக்கும் இயற்கை இன்னொருபக்கம் அவன் அதை அனுபவிக்காதபடி நடைமுறை வாழ்வின் அனைத்து விதிகளையும் அவனுக்கும் சமமாக கொடுத்து கால்களை பூட்டி விடுகிறது .
ஒருபக்கம் மனம் காதலால் இழுக்க இன்னொருபககம் குடும்ப நியமம் அவன் கால்களை இழுக்க அவன் எந்த பக்கமும் போக முடியாமல் இரண்டுக்குமிடையே குருதத் சிக்கித்தவித்தார் இதிலிருந்து தப்பிக்க அவருக்கு உதவியது மதுபோத்தல்கள் . தினமும் அதீத குடியும் சிகரட்டும் தூக்க மாத்திரையும் அவரை அலைக்கழித்தன
இப்படியான சூழலில்தான் அவர் தயாரித்த படங்கள் தொடர் தோல்வி அடைந்து நிலைமை முன்னிலும் மோசமனாது சொத்துக்கள் பறிமுதல் ஆனது . வீடுகள் இழந்து வாடகை வீட்டுக்கு வந்தனர்.
இன்னொருபககம் வஹிதா தொடர் வெற்றியால் புகழ் உச்சிக்கு சென்றார் . அவராலும் குருதத்தின் காதலை ஏற்க முடியவில்லை . காரணம் கீதாவும் அவர்களது குழந்தைகளும் அவருக்கும் நெருக்கம் . தன்னால் இன்னொரு பெண்னின் வாழ்க்கை பாழாவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை
இதனால் குருத்தை தவிர்த்தார் இப்போது குருத்துக்கு யாரும் இல்லை
மனைவியும் குழந்தைகளை பார்க்க அனுப்ப மறுத்துவிட்டார்
ஒரே ஒருவர் அவருக்கு ஆறுதலாக இருந்தவர்
அப்ரார் ஆல்வி . அவரது எல்லா படங்களுக்கும் அவர் தான் கதையாசிரியர்
அவர் மட்டும் அவ்வபோது அவர் குடியிருப்புக்கு வந்து போவார் . அன்று குருதத் அவரிடம் ராஜ் கபூர் கால்ஷீட்தந்துள்ளதாகவும் மீண்டும் படம் தயாரித்து கடனை அடைக்கப்போவதாக மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார் . பட வேலைகள் மும்முரமாக துவங்கின ஆனால் என்ன காரணத்தாலோ ராஜ் கபூர் பட்ப்பிடிப்புக்கு வரவில்லை அன்று மாலை அப்ரார் ஆல்வி அவர் குடியிருப்புக்கு சென்ற போது இன்னொரு காரணமும் அப்ரார் ஆல்விக்கு தெரிய வந்தது . தான் குழந்தைகளை பார்க்க விரும்பியபோது மனைவி அனுப்ப மறுத்துவிட்டதை சொல்லி குருதத் மீண்டும் அதிகமாக குடிக்கத்துவங்கியிருக்கிறார்
மறு நாள் கீதா குழந்தைகளுடன் குருத்தை இறந்த நிலையில் தான் பார்க்க முடிந்தது. கடைசி வரை அவர் வாய் கீதா கீதா என்றே சொல்லிக்கொண்டிருந்தாக சாகும் தருவாயில் அருகிலிருந்தவர்கள் பதிவு செய்துள்ளனர் .
குருதத் படத்தின் புகழ் பெற்ற பாடலொன்று கீதாதத் பாடியிருப்பார் .
ககஸ் கீ பூல் படத்தில் வரும் Waqt Ne Kiya Kya Haseen Sitam -
எனும் அப்பாடல் இருவருக்காகவும் எழுதப்பட்டது போலவே இருக்கும் அதன் வரிகள்
வசீகரமான அநீதியை வாழ்க்கை நம்மீது சுமத்திவிட்டது
என்னில் நான் இல்லை
உன்னிலும் நீ இல்லை
] ஒரு பாதையில் இருவரும் சந்தித்தோம்
இணைபிரியாத ஜோடிகளாய் வாழ்வை துவக்கினோம்
சில அடிகள் கடக்கும் முன்பே
ஏனோ அந்த பாதை பாதியில் அறுந்துவிட்டது
பாதியில் முடிந்துவிட்டது
பிறகு கணவனை மறக்க கீதாவும் குடியில் வீழ்ந்து 1972ல் வாழ்வை முடித்துக்கொண்டார்
ஆசிரியர்கள் ஏன் உலக சினிமாவை பார்க்க வேண்டும்?
-அஜயன் பாலா எழுத்தாளர் & இயக்குனர்
உலக சினிமா என்றால் என்ன ?
உலகில் மற்ற நாடுகளில் எடுக்கும் சினிமாக்கள் எல்லாம் உலக சினிமாக்களா?
அப்படி இல்லை ..
அப்படியானால் எது உலக சினிமா ?
இதோ இங்கே உங்களுக்காக சிறிய விளக்கம்
சினிமா என்றாலே நம் நாட்டில் பொழுது போக்கு அம்சமாக மட்டுமே பார்க்கப்படுகிறது . ஆனால் சினிமா என்ற கலை உருவானதன் நோக்கம் அதுவல்ல இசை, நடனம், ஓவியம், நாடகம் போன்றதும் இவையனைத்தும் சேர்ந்ததுமான கலைவடிவம் தான் சினிமா . எப்படி மேற் சொன்ன கலைகளுக்கெல்லாம் அதை தீர்மானிக்க கூடிய விதிகள் உள்ளனவோ அது போல சினிமா எனும் கலைக்கும் விதிகள் உண்டு.
அப்படிப்பட்ட அந்த கலைக்கான அடிப்டைகளை ஆதாராமாக் கொண்டு உருவாக்கப்ட்டதும் அதேசமயம் இது நாள் வரையிலான மனித குலத்தின் நன்மை தீமைகளை பேசுவதாகவும் எதிர் கால மனித சமூகத்தை உன்னத நிலைக்கு அழைத்துச்செல்லும் நோக்கத்தோடும் உருவாக்கப்படும் படங்களே உலக சினிமாக்கள் அது எந்த நாடு எந்தமொழியில் எடுக்கப்ட்டிருந்தாலும் உலகின் எந்த மூலையில் இருப்பவரும் பார்க்கும் விதமாக உருவாக்கம் கொண்டிருந்தால் உலகசினிமா வாக கருதப்படும்
அப்படி எடுக்கப்படும் ஒரு திரைப்படம் நூறு நல்ல நூல்களை படிப்பதற்கு சமம் என லெனின் கூறுகிறார் . அப்படிப்பட்ட சினிமாக்களை ஒருவர் பார்க்கும் போது அவரது ஞானம் விரிவடையும் எண்ணத்தில் புதிய சிந்தனைகள் தலைப்படும் . அதன் வழி அவர்கள் வாழ்க்கையும் வெளிச்சமுறும் . அதுவே ஒரு ஆசிரியர் இந்த சினிமாக்களை பார்க்கும் போது அவர்களோடு எதிர்கால சமூகமே வெளிச்சம் பெறுகிறது எப்படி சிறு மதகு ஊரையே செழிப்பாக்குகிறதோ அது போல ஆசிரியர்கள் வழியே ஒரு நாடே வெளிச்சம் பெறும்
அவ் வகையில் திரைப் பட மேதை சார்லி சாப்ளின் இயக்கிய தி கிட், சிட்டி லைட்ஸ் , சர்க்கஸ் போன்ற படங்கள் நூறு வருடங்களை கடந்தும் இன்றும் உலகம் முழுக்க கோடிக்கணக்காண குழந்தைகளுக்கு யாரும் கொடுக்க முடியாத மகிழ்ச்சியையும் நல்ல சிந்தனைகளையும் ஊட்டி வருகிறது
1917 இல் எடுக்கப்பட்ட உலக சினிமாவான பைசைக்கிள் தீவ்ஸ் என்ற இத்தாலிய திரைப்படம் ஆயிரம் இலக்கிய நூல்கள் கூட உருவாக்க முடியாத நல்லுணர்ச்சியை மனித மனங்களில் எழுப்பி இன்னமும் பல சிறந்த மனிதர்களை உருவாக்கிடும் பணியை செய்து வருகிறது
இன்று ஆசிரியர்களின் மிகப் பெரிய சவாலே கட்டுப்படுத்த முடியாத குழந்தைகள் தான் . குழந்தைகளின் அக உலகம் செயல்படும் விதம் பற்றிய இதற்கு மிக முக்கிய காரணம் . அதே சமயம் ஈரானிய சினிமாக்கள் காட்டும் குழந்தைகளின் அக உலகம் நமக்கு வியப்பூட்டுகிறது. சில்ரன் ஆப் ஹெவன் என்ற ஒரு ஈரானிய திரைப்படம் வந்த பின் தான் உலகமே குழந்தைகளின் அக உலகம் இயங்கும் விதத்தைக் கண்டு கூடுதல் அக்கறையுடன் அவர்களை கவனிக்கத்துவங்கியது இப்படியான உலக சினிமாக்களை காணும் ஒரு ஆசிரியர் நிச்சயம் மாணவர்களின் மனதில் ஒரு நாயகனாக வலம் வருவார் .
அது போல சீன திரைப்படமான நாட் ஒன் லெஸ் , மற்றும் ஈரானிய படங்களான , கலர் ஆப் பேரடைஸ் , வேர் ஈஸ் மை பிரன்ட்ஸ் ஹோம் , மற்றும் பிரெஞ்சு திரைப் படமான ரெட் பலூன் , 400 ப்ளோஸ், இத்தாலிய திரைப் படமான லைம். ஈஸ் பியூட்டிபுல் இந்தியாவில் சத்யஜித்ரே இயக்கிய பதேர் பாஞ்சாலி போன்ற திரைப் படங்கள் குழந்தைகளின் அக உலகம் சார்ந்த சில ஆகச்சிறந்த உலக் சினிமாக்கள்
இந்த படங்களை ஆசிரியர்களும் குழந்தைகளும் சேர்ந்து பார்க்க சிறந்த திரைப்படங்களாகும் .
வெறுமனே குழந்தைகளின் உலகம் மட்டுமல்லாமல் உலக நாடுகளின் வரலாறு அவற்றின் கலாச்சாரம் பண்பாடு மற்றும் மானுடவியல் போன்ற பல அம்சங்களை உலக சினிமாக்கள்: நமக்கு கற்றுத்தருகின்றன
இரண்டாம் உலகப்போர் உலகில் உண்டாக்கிய அழிவை இலக்கியங்களை விட உலக சினிமாக்களே அதிகம் பதிவு செய்துள்ளன . டேவிட் லீன் இயக்கிய லாரன்ஸ் ஆப் அரேபியா, பிரிட்ஞ் ஆன் தி ர்வர் க்வாய் மற்றும் ஸ்டீவன் ஸ்பீல் பெட்க் இயக்கிய ஷின்லர்ஸ் லிஸ்ட் சேவிங் பிரைவேட் ரயான் மற்றும் ருஷய் படமான் தி கிரேன்ஸ் ஆர் ப்ளையின் மற்றும் கம் அண்ட் சீ போன்ற படங்கள் போரினால் உண்டான அவலத்தோடு இரண்டாம் உலகபோர் நடந்த காலகட்டத்துக்கே நம்மை அழைத்துச்சென்று விடுகின்றன
இப்படி வரலாறு மட்டுமல்லாமல் ஒரு நாட்டின் பண்பாடு கலாச்சாரம் அவர்கள் உணவு உடை போன்றவற்றையும் உலகசினிமாக்கள் நமக்கு கற்றுத்தருகின்றன
உதாரணத்துக்கு சீனா பற்றியோ ஜப்பன்பற்றியோ வகுப்பில் பாடம் எடுக்கும் போது மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கூடுதலான தகவல்களுடன் அவர்களுக்கு புரியும் வகையில் பாட எடுக்க முடியும்
ஜப்பானின் புகழ்பெற்ற இயக்குனர் அகிராகுரசேவாவின் திரைப்படங்கள் அழுத்தமான மனதின் உணர்வை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்தாலும் இன்னொரு புறம் அவை ஜப்பானின் கலாச்சராத்தையும் பண்பாட்டையும் உலகம் முழுக்க கொண்டு சென்றன.
அது போல ஆஸ்கார் விருது வென்ற லாஸ்ட் எம்பரர் எனும் திரைப்படம் சீன நாட்டின் நூறு வருட வரலாற்றை மூன்று மணி நேரத்தில் நமக்கு சொல்லிவிடுகிறது
அது போல அமெரிக்க இயக்குனர் ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய காந்தி திரைப்படம் மகாத்மா காந்தி அவர்களது வாழ்க்கையோடு சேர்ந்து இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை மூன்று மணி நேரத்தில் நமக்கு உணர்த்திவிடுகிறது
என்னதான் பாடம் நடத்தி மனப்பாடம் செய்தலெல்லாம் மறந்து போகும் இத்தகைய வரலாறுகள் ஒரு மாணவன் காலம் முழுக்க அழியாமல் மனதில் பதிந்து அவனை நல்வழிப்படுத்த உதவும்
சமீபத்தில் வெளியான ஓபன் ஹெய்மர் , இண்டர் ஸ்டெல்லர் மற்றும் ஜூராசிக் பார்க் அவதார் போன்ற படங்கள் அறிவியல் உலகம் இதுவரை கண்டிராத பல புதிய விஷயங்களை மக்களுக்கு எடுத்துச் சொன்னது
12 இயர்ஸ் ஆப் ஸ்லேவ் மற்றும் கலர் பர்பிள் போன்ற திரைப் படங்கள் நிற வேற்றுமைக்கு எதிரான மிகச்சிறந்த ஆக்கங்கள் .
இது போன்ற படங்களை பார்க்கும் ஆசிரியர்கள் அவர்கள் மாணவர்களுக்கும் இத்தனை சிறு வயதிலேயே கொண்டு செல்லும் போது அவை வருங்காலத்தின் பல நல்ல விதைகளை இந்த சமூகத்துக்கு உருவாக்கி அவர்கள் எதிர்காலம் சிறக்க செய்யும் என்பதில் ஐயமில்லை
December 18, 2025
அகிராகுரசேவாவும் ஜப்பான் சினிமாவும்
வாழ்க்கையில் சில குத்துகள் மறக்க முடியாதது.
சிறுவயதுகளில் பள்ளிவிட்டு வீடுதிரும்பும்போது அதுவரை உடன் வந்த சக தோழன் தன் வீட்டிற்கு திரும்பும் இடம் வந்ததும் நாம் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் ஓங்கி முதுகில் ஒரு குத்து குத்திவிட்டு இந்த அடியை எப்பவுமே மறக்காதே என சொல்லிவிட்டு தலைதெறிக்க ஓடுவான். அந்தச் சமயங்களில் நடுமுதுகில் உண்டாகும் வலியைவிட அவன் மூலமாக கிடைத்த ஏமாற்றம், உடனடியாக அவனை பிடிக்க முடியாமல் போன இயலாமை போன்ற மன வலிகளும் சேர்ந்து கண்ணீரை வரவழைக்கும்.
அதுபோன்ற மறக்க முடியாத முதுகு குத்தல்களை உலகின் எல்லா தேசங்களுக்கும் எல்லா இனக்குழுக்களுக்கும் வரலாறு எப்போதாவாது கொடுத்து கதிகலங்க வைக்கும். அப்போழுது எழும் அம்மக்களின் வேதனை ததும்பும் கண்ணீரானது அவர்களது பிற்கால எழுச்சிகளுக்கெல்லாம் காரணமாக அமையும்.ஒன்று அது போராகவோ, பூகம்பமாகவோ, கொள்ளை நோயாகவா,பெரும் பொருளாதார வீழ்ச்சியாகவோ அல்லது சுனாமியாக வோகூட அந்த குத்து இருக்கலாம்.
அது போலத்தான் ஜப்பானியரின் எழுச்சிக்கு அடிப்படை காரணமாக இரண்டு முதுகு குத்தல்களை வரலாறு வழங்கியிருக்கிறது. ஒன்று அனைவரும் அறிந்த இரண்டாம் உலகப்போரின் இறுதியில் நிகழ்ந்த ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு சம்பவம். இன்னொன்று அதற்கும் முன்பாக 1923ல் ஏற்பட்ட பெரும் பூகம்பம். கிட்டதட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட ஜப்பானியர்களை அந்தப் பூகம்பம் பலிவாங்கியது. இந்த வரலாற்று துயரமான சம்பவம் நிகழ்ந்த இரண்டு நாட்களுக்குபின் பூகம்பம் நடந்த இடங்களை பலரும் சென்று பார்த்து தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர். சுற்றிலும் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருந்த அந்த இக்கட்டான சூழலினூடே இரண்டு சிறுவர்களும் உள்ளம் நடுங்கியபடி நடந்து சென்றனர். அதில் ஒருவர் அகிரா குரசேவா. இன்னொருவர் அவரது அண்ணன். அகிராவுக்கு அப்போது 13வயது. அண்ணன் ஹெய்கோவுக்கு 17 வயது. சுற்றிலும் உயிருக்கு போராடியபடி கேட்கும் மனிதர்களின் மிருகங்களின் அழுகுரல்களை கேட்டதும் அகிரா தலையை திருப்பி பார்க்க முயற்சிக்க அண்ணன் ஹியூகோ திரும்பாதே அவரிடம் கத்தி தலையை முன்னோக்கி திருப்புவாரம்.
பிற்காலத்தில் தன் படங்களில் அதிகமாக காணப்படும் அந்த திகிலுணர்வு மற்றும் பயமூட்டும் தன்மைகளுக்கு தன் மனதில் ஆழப்பதிந்த அந்த சிறுவயது நிகழ்ச்சிதான் காரணம் என குரசேவா பிற்பாடு கூறியிருக்கிறார். மட்டு மல்லாமல் தொடர்ந்த அவரது வாழ்வும் ஒருபயங்கரத்தை அவருக்கு முதுகில் சுமக்கவைத்த படியேதான் இருந்தது.
1910ல் இசாமு மற்றும் ஷிமா குரசேவா எனும் தம்பதியின் நான்காவது மகனாக டோக்கியாவை அடுத்த ஒரு புறநகர் ஒன்றில் பிறந்தவர் குரசேவா.
அவரது அண்ணன் ஹியூகோ தன் இளவயதில் பென்ஷியாக வேலைசெய்துவந்தவர். ஊமைப்படங்கள் ஓடும்போது பின்னாலிருந்து கதையை விவரிப்பவருக்கு பெயர் தான் பென்ஷி. ஒரு கட்டத்தில் சத்த சினிமா வந்தபிறகு பென்ஷிக்கள் வேலை இழந்து வீதிக்கு வந்தனர். ஸ்டுடியோக்களின் முன் ஒன்றுகூடி பெரும் போராட்டத்தை நிகழ்த்தினர். அகிராவின் அண்ணன் ஹியூகோதான் அதற்கு தலைமைதாங்கி போராட்டங்களை நடத்தினார். ஆனாலும் என்ன பலன்... போன வேலை போனதுதான். அந்த மன உளைச்சலில் அகிராவின் அண்ணன் ஹியூகோ தற்கொலை செய்து கொள்ள நான்குமாதங்கள் கழித்து காரணமே இல்லாமல் அவரது சகோதரர்கள் மற்ற இருவரும் ஒன்றன் பின் ஒருவராக சொல்லி வைத்தார் போல இறந்து போக அகிரகுரோசோவா திகிலுடன் தனிமரமாக நின்றார். மரணம் அவர் முதுகின் பின்னால் ஒரு கேள்வியாக நிற்க பீதி அவரது ஒவ்வொரு நிமிடத்தையுமாக ஆக்கிரமித்துக்கொண்டது.
அதன்பிறகு அவர் மெல்ல திரைப்படத்துறைக்குள் நுழைந்து அப்போது புகழ்பெற்றவராக விளங்கிய இயக்குனர் யமமோட்டொவிடம் உதவியாளராக இணைந்து பின் 1943ல் சஞ்சுரோ சுகாட்டா திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானபின் அவரது சிறுவயது பீதி, மரணத்தின் விளிம்பு, அச்சத்தின் மறு எல்லை அவரது திரைப்படங்களில் காட்சிமொழிகளில் பரிணமிக்கத் துவங்கியது. அவரது பெரும்பாண்மையான படங்கள் வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இயற்கைக்குமான போரட்டமாக இருப்பதற்கும் இதுவே காரணமாக கருதப்படுகிறது.
1950ல் அவர் இயக்கத்தில் ரோஷமான் வெளியானபிறகுதான் உலகசினிமாவுக்கு ஜப்பான் பரிச்சயமாக துவங்கியது என்றாலும் பல நல்ல இயக்குனர்கள் அவருக்கும் முன்பாக ஜப்பானிய சினிமாவையும் அதன் கலாசாரத்தையும் போற்றி பாதுகாத்து வந்துள்ளனர்.இத்தனைக்கும் சினிமா ஜப்பானுக்குள் 1896லேயே நுழைந்து மெல்ல படங்களை தயாரிக்க துவங்கியிருந்தாலும் அவை பெரும்பாலும் அவர்களது காபுகி நாடகவகை போலவே இருந்தன. கென்ஷி மிசோகுச்சி (ரிமீஸீழீவீ விவீக்ஷ்ஷீரீuநீலீவீ) மற்றும் யசுஜிரொ ஓசு (சீணீsuழீவீக்ஷீஷீ ளிக்ஷ்u) ஆகியோர்தான் ஓரளவு அதனை மவுன படங்களின் காலத்திலேயே மீட்டெடுத்தவர்கள். அதிலும் ஓசு ஜப்பானிய சினிமாவின் நியோரியலிஸ தந்தை என போற்றப்பட்டவர். அவரது திரைப்படங்களில் மனித உறவுகள் மற்றும் ஜப்பானிய கலாசாரத்தின் தொன்மங்கள் ஆகியவை அழுத்தமாகவும் எதார்த்த பாணியிலும் பின்பற்றப்பட்டு வந்தன. ஆனாலும் அவர்களது படங்கள் உலக அரங்கை அது வரை எட்டாமல்தான் இருந்தது. ரோஷமான் வெளியாகி உலக சினிமா ரசிகர்களின் பார்வை ஜப்பானிய சினிமாவின் மேல் கவனத்தை குவிக்க துவங்கியபின்தான் ஓசுவுடன் இன்னும் சில இயக்குனர்கள் அறியப்பட துவங்கினர்.
இன்றும் இந்தியாவில் எப்படி சில நல்ல சினிமா ரசிகர்கள் ரே வை ஏற்காமல் கட்டக்கை தீவிரபடைப்பாளியாக முன்னிறுத்துகிறார்களோ அது போல ஜப்பானில் இன்றும் பலர் குரோசாவை ஏற்காமல் ஓசுதான் ஜப்பானிய சினிமாவின் தந்தை என புகழ்வர். ரோஷமானின் வெற்றிக்குப் பிறகு அடுத்த பத்து வருடத்தில் மூன்று ஜப்பானிய திரைப்படங்கள் உலகசினிமாவை உலுக்கி எடுத்தன. அதில் ஒன்று அகிராகுரசேவாவின் செவன் சாமுராய் (ஷிமீஸ்மீஸீ ஷிணீனீuக்ஷீணீவீ), இன்னொன்று ஓசுவின் டோக்கியோ ஸ்டோரி (ஜிஷீளீஹ்ஷீ ஷிtஷீக்ஷீஹ்).
இன்றுவரை உலகின் தலைசிறந்த நூறுபடங்களுக்குள் இந்த இரண்டு படங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத் தகுந்தது. மூன்றாவது திரைப்படம் ஒருவணிகப்படம். அணு ஆயுத எதிர்ப்பை முன்னிறுத்தி வெளியான கோஜ்ரா (நிஷீழீவீக்ஷீணீ) எனும் இப்படம் பிற்பாடு ஹாலிவுட்டில் காட்சில்லா (நிஷீபீக்ஷ்வீறீறீணீ) எனப் பெயரிடப்பட்டு உலகம் முழுக்க பட்டி தொட்டி எங்கும் ஓடி ஜப்பானிய சினிமாவுக்கு பெரிய வணிக சந்தையையும் ஏற்படுத்திக் கொடுத்தது மட்டுமல்லாமல் ஹாலிவுட்டுக்கு நிகராக தங்களாலும் படமெடுக்க முடியும் என ஜப்பானியர்கள் இப்படத்தின் மூலம் காலரை தூக்கிவிட்டு போரின் முலம் இழந்த தன்நம்பிக்கையை மீட்டுக்கொண்டனர்.
ரோஷமான், செவன் சாமுராய், ரெட் பியர்ட் போன்ற குரசேவாவின் தலைசிறந்த படைப்புகளின் வெற்றிக்குப் பிறகு அதில் நடித்த மிபுனே எனும் கலைஞனை உலகின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக உலகசினிமா அடையாளம் கண்டு கொண்டது.
அடிப்படையில் குரசேவா இலக்கியங்களின் மிகப்பெரும் காதலராக இருந்தார். ஷேக்ஸ்பியரின் படைப்புகளிலிருந்து மட்டுமே மூன்று திரைப்படங்களை மீட்டுருவாக்கம் செய்தார். அவரது கிங்லியர் (ரிவீஸீரீ லிமீணீக்ஷீ), நாட்கம் ரான் (ஸிணீஸீ) திரைப்படமாகவும், மேக்பெத் நாடகம் (விணீநீதீமீtலீ) த்ரோன் ஆப் ப்ளட்டாகவும் (ஜிலீக்ஷீஷீஸீமீ ஷீயீ ஙிறீஷீஷீபீ), ஹேம்லட் (பிணீனீறீமீt) நாடகம், பேட்ஸ்லீப் வெல் (ஜிலீமீ ஙிணீபீ ஷிறீமீமீஜீ கீமீறீறீ) எனும் படமாகவும் உருவாக்கம் செய்தார். மட்டுமல்லாமல் தஸ்தாயெவெஸ்கியின் மற்றொரு படைப்பான இடியட் எனும் நாவலையும் மற்றும் மாக்ஸிம் கார்க்கியின் நாடகத்தை தழுவி லோயர் டெப்த்ஸ் போன்ற படைப்புகளையும் எடுத்தார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் இகிரு கூட டால்ஸ்டாயின் சிறுகதை ஒன்றை அடிப்படையாக் கொண்டு எடுக்கப்பட்டதிரைப்படம். அது போல அவரது ஓவ்வொருபடத்திலும் பருவநிலைகளில் ஏதானும் ஒன்று பிரதான பாத்திரமாக இடம் பிடிக்கும் ரோஷமானில் மழை, டெர்சு உஜாலாவில் பனிப்புயல், ஸ்ட்ரே டாக் படத்தில் வெப்பம் ஆகியவை குறியீடுகளாக படம் முழுக்க பின்புலத்தில் இயங்கும்.
குரசேவாவின் திரைப்படங்கள் ஒரு சினிமா கற்கும் மாணவனுக்கு மிகச்சிறந்த பாடம். உலகின் வேறேந்த இயக்குனரின் படங்களையும் இதற்கான முழுதகுதியுடன் ஏற்க முடியாது. கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, எடிட்டிங், கலை ஒலிப்பதிவு மற்றும் இயக்கம் என அனைத்து துறைகளுக்கும் அவரது படங்கள் மட்டுமே இலக்கணம்.அவரது திரைப்படங்கள் அனைத்துமே மனிதவாழ்வின் அவலங்களை அதன் புதிர்களை, குழப்பங்களை, மாயைகளை, கற்பனைகளை, அழுக்கை, வெளிச்சத்தை, அதன் இருட்டை மட்டுமே தொடர்ச் சியாக தேடிக்கொண்டிருந்தன.
இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை அதன் சமன்பாட்டை இடையறாமல் தேடுவதாக அவரது திரைப்படங்கள் இருந்தன. அதன் காரணமாகத் தான் உலகின் தலைசிறந்த இயக்குனர் என பலராலும் இன்றுவரை ஏகமனதாக கருதப்படுகிறார்.அவரது திரைப்படங்கள் வடிவத்தில் மேற்கையும் உள்ளடக்கத்தில் கிழக்கையும் ஒரு புள்ளியில் இணைப்பவையாக இருப்பதும் அவருக்கு கிடைத்த ஒருமித்த கைதட்டல் களுக்கு இன்னொரு காரணம்.
எல்லாக்காலத்திலும் சூரியனால் ஒளி மறைக்கப்படும். பகல் விண்மீன்கள் போல சில அதீத மேதைகளின் புகழானது பல திறமையாளர்களுக்கு சேரவேண்டிய நியாயமான புகழை தடுத்துவிடும். இது போன்ற விபத்து மொசார்ட் காலத்தில் பல இசை மேதைகளுக்கு நிகழ்ந்த தாக கூறுவர்.
அது போலத்தான் குரசேவாவின் அதீத புகழ் காரணமாக கிடைக்கவேண்டிய நியாயமான பேரும் புகழும் கிடைக்காது போன ஜப்பானிய சினிமாவின் மற்றொரு கலைஞர் கோபயாஷி. கோபாயாஷியின் படங்களும் பெரும்பாலும் சாமுராய் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படுபவை ஆனாலும் அதில் அகிராவின் படைப்பாளுமைக்கு இணையான ஒரு செறிவான காட்சிமொழி அவரது படங்களில் காணப்படும். இன்னும் சொல்லப்போனால் செறிவிலும் காட்சி அணுகு முறையிலும் கோபாயாஷியிடம் குரசேவாவைவிடவும் கூடுதலான இறுக்கம் தொனிக்கும். ஆனால் குரசேவாவிடம் இருந்த இலக்கியத்தன்மை மற்றும் உலகளாவிய பார்வைகள் ஜப்பானின் இதர இயக்குனர்களின் படங்களில் தேடிப்பார்த்தாலும் காணக்கிடைக்கவில்லை.
குரசேவாவின் காலத்தில் அவருக்குபின்னால் வந்து பரவலான கவனத்தை ஈர்த்த மற்ற சில இயக்குனர்களில் நகிஷா ஓஷியாமாவும், ஷோகை இமாமுராவும் குறிப்பிடத்தகுந்த இயக்குனர்கள். இவர்கள் ஓஷியாமவின் திரைப்படங்களின் பாலுறவுக்காட்சிகளையும் அதற்கு பின்னால் இயங்கும் மனித மனத்தின் நுண்மைகளையும் சித்தரித்தன. உலகம் காதல் வழியாக காமத்தை அடைந்த போது காமத்தின் வழியாக காதலையும் அதன் உயிர்பறிக்கும் தன்மையையும் அவரது படங்கள் விவரிப்பதாக அமைந்தன.
ஹிரோஷி டேஷிகரா என்பவர் இயக்கத்தில் வெளியான வுமன் இந்த டியூன்ஸ் (கீஷீனீணீஸீ வீஸீ tலீமீ ஞிuஸீமீs - 1964) எனும் படம் 1964ல் கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த படத்துக்கான பரிசை வென்று ஜப்பானியசினிமாவின் தரத்தை தக்கவைத்துக்கொண்டது.
இப்படியாக குரசேவாவின் காலத்திலும் அவருக்கு முன்னும் பின்னுமாக பல இயக்குனர்கள் ஜப்பானிய சினிமாவின் தரத்தை உலகுக்கு எடுத்துசென்றிருப்பினும் எவரும் குரசேவா அளவுக்கு படைப்பில் உச்சத்தை அடையவில்லை. உலகில் வடிவம் மற்றும் உள்ளடக்கத்திலும் தொடர்ந்து இலக்கியதரத்தையும் மனிதவாழ்வின் பேருண்மைகளையும் தேடிய இயக்குனர்கள் பட்டியலில் குரசேவாவுக்கே முதலிடம். அவரது திரைப்படங்கள் ஒன்றிலிருந்து ஒன்று அனைத்திலிருந்தும் முழுமையாக வேறுபட்டன. அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் உலக சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இயக்குனர்களான பெர்க்மன், தார்க்கோவ்ஸ்க்கி போன்றவர்களிடமிருந்து அவர் விலகிநிற்கும் இடம் இதுதான். மேலும் அவர்களது படங்கள் உண்மையை இயற்கையின் வழியாகவும் ஆன்மிகத்தின் வாயிலாகவும் தேடியபோது குரசேவா மட்டுமே அதனை எளிய மனிதர்களின் துயரத்தின் வாயிலாக அவர்களது வேதனையின் முனகல் வழியாக இதனை இடையறாது தேடினார்.
அது போல படைப்பொழுங்கின் மீதான அவரது காதல் அண்டசராசரத்தின் வடிவங்களுக்கு அப்பாலும் இயங்க கூடியது. அதன் காரணமாக அவர் பல துன்பங் களையும் துயரங்களையும் அவராகவே வருத்திக்கொண்டார். 1975ல் வெளியான டெர்சு உசாலாவில் அவர் எதிர்பார்த்த பனிப்புற்கள் வளர்வதற்கு ஏறக்குறைய ஓரிருவருடங்கள் வரை வெறுமனே காத்திருந்தார். 1971ல் அவர் ஒருமுறை ஜப்பானிய மரபுப்படி ஹரகிரி எனும் தற்கொலைமுயற்சிக்கு ஈடுபட்டு கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டார்.
அகிராகுரசேவாவால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்கள் அமெரிக்கர்கள். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனர்களான ஸ்பீல்பெர்க், ஜார்ஜ் லூகாஸ் மற்றும் பிரான்சிஸ் போர்ட் கொப்பாலா ஆகியோர் அகிராவை தங்களது குருவாக கருதினர்.
குரசேவாவின் படங்கள் பெரும்பாலும் அமெரிக்க இயக்குனரான ஜான் போர்டின் தீவிர பாதிப்பிலிருந்து துவங்கியவை என்பது கூட இதற்கான உளவியல் காரணமாக இருக்கலாம். தனது குருவுக்கு செய்யும் காணிக்கையாக ஸ்பீல்பெர்க் ஒருபடத்தை எடுக்க அன்பு அழைப்புவிடுத்தார். 1990ல் வெளியான குரசேவாவின் ட்ராம்ஸ் எனும் அத்திரைப்படத்தில் ஹாலிவுட்டின் இன்னொரு பிரபல இயக்குனரான மார்டின் ஸ்கோர்சி ஒரு முக்கியப்பாத்திரத்தில் பங்கேற்று தன்பங்கிற்கு குருகாணிக்கை செய்துகொண்டார்.
குரசேவா பெற்ற பரிசுகள் எதுவும் அவரது படங்களுக்கு ஈடாகாது. அவர் பற்றிய தகவல்கள் பகிர வேண்டியவை அல்லது தேடிக்கண்டடைய வேண்டியவை இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை அவரே எழுதிய sஷீனீமீ tலீவீஸீரீ றீவீளீமீ ணீஸீ ணீutஷீதீவீஷீரீக்ஷீணீஜீலீஹ் எனும் நூலை படிப்பதன் மூலம் ஓரளவு நிறைவேறும்.
வரும் ஆண்டு மார்ச் 23 லிருந்து அகிராகுரசேவின் நூற்றாண்டு துவக்கம் பெறுகிறது. இன்றும் அவர் அறிவு உலகிற்கு இளமையானவராகத்தன் காட்சியளிக்கிறார்.
July 12, 2025
ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )
ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )
மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷியாம்பெனகல். துல்லியமான காட்சிமொழி, அழுத்தமான திரைக்கதை, எதார்த்த காட்சியமைப்புகள் ஆகியவை ஷியாம்பெனகலின் பலம். ஆந்திரமாநிலம் ,செகந்திராபாத்தில் பிறந்தபெனகல், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்துவிட்டு சினிமா மீதான ஆர்வத்துடன் ஹைதராபாத் பிலிம்சொசைட்டி ஒன்றை நண்பர்களுடன் துவக்கினார்.இவரது சினிமா ஆர்வத்தைத் தூண்டிவிட்டதில் முக்கியகாரணமாக இருந்தவர், அவரது தூரத்து உறவினர் ஒருவர்.அவர்,புகழ்பெற்ற இயக்குனர்.பியாசா எனும் காவியத்தைத் தந்தகுருதத்தான். குருதத்தின் பாட்டியும் ஷியாம்பெனகலின் பாட்டியும் அக்காதங்கை ஆவர்.
பட்டப்படிப்புமுடித்தகையோடு,புனாபிலிம் இன்ஸ்டிடியூட்டில் இயக்குனர் பிரிவில் மாணவராகச் சேர்ந்தவர், துவக்கத்தில் ஆவணப்படங்கள் இயக்குவதில் ஆர்வமாக இருந்தார். 1974இல் ,இவர் இயக்கிய முதல் முழுநீளப்படம் ,ஆங்கூர். ஷப்னாஆஸ்மி-ஆனந்த் நாக் இருவரையும் அறிமுகப்படுத்திய இந்த முதல்படமே, தேசிய விருதைப்பெற்றதோடு இந்தியா சார்பாக ஆஸ்கார் விருதுக்காக அந்த வருடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. 1975இல் வெளியான மூன்றாவது படம்Nishant.இது, அந்தஆண்டுக்கான கான் விருது போட்டிப்பிரிவில்தேர்வுசெய்யப்பட்டிருந்தது.
அடுத்த படமான மாந்தன், குஜராத்தின் வெள்ளைப் புரட்சி என்றழைக்கப்படும் கிராமகூட்டுறவுபால் பண்ணைகள் பற்றியது.
ஹன்ஸாவடேகர் எனும் மராத்தி நடிகையின் வாழ்க்கையை அடி யொற்றி,ஸ்மிதாபாட்டீல் நடிக்க ,இவர் இயக்கிய பூமிகா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 1985இல்,இவர் இயக்கிய சத்யஜித்ரே குறித்த ஆவணப்படம் இவரது முக்கியமான படைப்பாகக் கருதப்படுகிறது. இதுவரை இவர் எடுத்துள்ள 25 முழுநீளப்படங்களில் மண்டி, மம்மோ, சர்தாரீபேகம்ஜுபைதா போன்ற படங்கள் குறிப்பிடத்தகுந்தவை.
1981இல்,இவர் இயக்கத்தில் வெளியான கலியுக்,மாஸ்கோதிரைப்படவிழாவில் சிறந்த படத்துக்கான தங்கம் வென்றது. இவரின் பத்துக்குக்கும் மேற்பட்ட படங்கள்,இந்தியாவின் சிறந்த படங்களுக்கான தேசிய விருதைப்பெற்றுள்ளது.வாழ்நாள் சாதனைக்காக ,இந்தியசினிமாவின் உயர்ந்த விருதான தாதாசாகிப்பால்கே விருது வழங்கி இந்திய அரசு இவரை கவுரவித்துள்ளது.
kசிறு கூழ் அளாவிய கவி ஸ்ரீநேசன்
சிறு கூழ் அளாவிய கவி
வாழ்வின் உன்னதங்களைத் தேடி மொழிக் கோடாரியுடன் அகக்காட்டில் திரியும் ஒருவன் சேகரித்த மரச்செதில்கள் இவை ,
இந்த செதில்கள் ஒவ்வொன்றொலும் ஒரு மரத்தின் வலி நிரைந்த காதை ஒளிந்து கிடக்கிறது எளிமையின் அழகுடன் ஆக்கம் பெறும் இக் கவிதைகள் உயிர்த்துக்கொள்ளும் இடம் தான் கவியின் ஆளுமை.
பெரு நதிக்கரையோரம் கூழாங்கற்களுக்கிடையில் அலையும் சிறு மீனின் அசைவு போல ஒவ்வொரு கவிதையும் உண்டாக்கும் நீர் வட்டங்கள் முடிவற்றவை
மொழியோடும் இலக்கியத்தோடும் தீவிர உள்ளுணர்வுடன் சஞ்சரிக்கும் ஸ்ரீநேசன் இச் சிறு தொகுப்பின் வழி தன் முந்தைய தொகுப்புகளுக்கும் சேர்த்து வெளிச்சமூட்டுகிறார்..
நாதன் பதிப்ப்கம்
நாதன் பதிப்பகம் வெளியிட்ட கவிஞர் ஸ்ரீ நேசன் அவர்களது குறுமுப்பத்தாறு கவிதைத் தொகுப்புக்கு எழுதப் பட்ட பதிப்புரை
சொற்கள் தானே எழுதிக்கொண்ட உள் வெளிச் சித்திரங்கள் - சீனு ராமசாமி வழி - அஜயன் பாலா பாஸ்கரன்
ஆங்கிலக்கவி வில்லியம் ப்ளேக் கவிதை பற்றி இப்படிச் சொல்கிறார் ”அது உள்ளங்கையில் எல்லைகளற்ற வெளியையும் ஒரு கணத்தில் முடிவற்ற காலத்தையும் பெயர் தெரியாத மலர் ஒன்றின் வழி பரந்த ஆகாயத்தையும் பூமியையும் உணர்த்துவதாக இருக்கவேண்டும் என்கிறார் ”
உண்மைதான் மூவாயிரம் ஆண்டுகளில் இந்த தமிழ் நிலத்தில் பல சக்ரவர்த்திகள் பல சமராஜ்யங்கள் பல கோடி மனிதர்கள் கடந்து இன்னமும் நம்மோடு உரையாடல் நிகழ்த்திக்கொண்டிருப்பது கவிதைகள் மட்டுமே
எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே …. தீதும் நன்றும் .. யாயும் யாயும் . பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
மேற் சொன்ன சொற் சேர்க்கைகள் மிக எளிமையானவையே ஆனால் இவையே காலங்களை ஊடுருவும் மகத்தான ஆற்றலை தம்முள் கொண்டு சமூகத்தை வழி நடத்தியபடி இன்னும் பல தலைமுறைகளை கடக்க வல்லதாக் இருக்கின்றன
இப்படிபட்ட பேராற்றல் மிக்க நெடிய தொடர்ச்சி கொண்ட தமிழ் என்னும் பெரு நதியின் படித்துறையில் இக்கவிதைத்தொகுப்புடன் நண்பரும் இயக்குனருமான சினு ராமாசாமியும் கால் நனைத்து iஇத் தொகுப்பின் மூலம் உடலில் ஈரம் பரப்பிக்கொண்டார் என்பது, ஒரு ஆச்சரயமான நிகழ்வு.
மொத்தம் ---- கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பின் கவிதைகளை நிலக்காட்சிக் கவிதைகள் , அகக்காட்சிக் கவிதைகள் என இரண்டாகப் பிரிக்க முடியும் நிலக்காட்சிக் கவிதைகளில் , காட்சி செதில்கள் ,வாழ்வின் துய்ப்புகள், .குணச்சித்தரிப்புகள் எனவும் அகக்காட்சி கவிதைகளில் . காம விகற்பங்கள் ,,மெய்மையின் தீண்டல்கள் எனவுமாக கலவையாக இக்கவிதைத் தொகுப்பு தன்னை வடிவமைத்துக்கொண்டிருக்கிறது
என்ற போதும் . ஒவ்வொரு கவிதையையும் வாசிக்கும் போது ஒரு மயிலிறகு நம் முகத்தை வருடிச்செல்வதை உணர முடிகிறது
தொகுப்பின் இரண்டாவது கவிதையான “அவர்கள்” கவிதையை வாசிக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட கணத்தில் சத்தமெழுப்பாத .. சிறு சலனம் கூட காட்டாத மனிதர்கள் பற்றி வியந்து பின் அவர்கள் பார்வையற்றோர் என காண்பிக்கும் அக்கவிதையின் காட்சிப் படிமம் நம்மை திடுக்கிட வைக்கிறது
அது போல “அருள்” கவிதையில் அகாலத்தில் மரணமடைந்த மகனின் வெற்று உடலுக்கு அவன் அப்பாவும் அம்மாவும் தலைவழியே கண்ணீருடன் கலந்து தண்ணீர் ஊற்றும்போது கல்லூரி நாட்களின் போது காதல் தோல்வியில் செத்துப்போன பக்கத்து வீட்டு நண்பனின் மரணம் வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை
பெரும்பாலான கவிதைகளில் தான் வாழ்ந்த மதுரையை ஒட்டிய புறநகரின் நிலக்காட்சிகளும் வெம்மை போர்த்திய மனிதர்களும் அவர்களது வாழ்வியலும் உறைந்துகிடைக்கின்றன தலைப்புகவிதையான மாசி வீதியின் கல் சந்துகள் வாசிக்கும் போது சந்தை கடக்கும் சிறுவனாக நாமே மாறிப்போவது விந்தைதான் . அதில் எதிர்கொள்ளும் மனிதர்களின் வியர்வை வாசம் அவர்கள் நிழல்;களுடன் நம்மை நம் மனதில் கடப்பது விந்தை .
“அடிகுழாயில்” எனத்துவங்கும் “வெயில் தாய்” எனத்தலைபிட்ட கவிதையில் கவிஞர் பொன்னாங்கன்னி கீரைக்கட்டுகளை விற்கும் வயதான பெண் அந்த கீரைக்கட்டுகளை அடிக்குழாயில் அடித்த தண்ணீர் மூலம் கீரைக்கட்டுகளில் தண்ணீர் தெளிப்பதை காண்பிக்கிறார். அப்போது அந்த வயதான தாய்க்கு பருவத்தில் தன் தந்தை தன் தலைக்கு நீரூற்றிய காட்சி நொடிப்பொழுதில் வந்து போகிறது . இதை திரை மொழியில் “இண்டர்கட் ஷாட்” என்பார்கள் . அந்த ஒரு கணம் இக்கவிதைக்குள் பல கதைகளை நம் முன் காட்டிவிட்டுச் செல்கிறது. தொடர்ந்து இக்கவிதையின் கடைசி வரியில் செருப்பு அணியாத் பாதங்களுடன் நடந்துசெல்லும் பொன்னாங்கன்னி கீரை விற்கும் அந்த தாய் கீரையை கூவி விற்பனை செய்துகொண்டு செல்வதாக காட்டும் சித்திரம் ,ஓர் காவியச்சித்திரம் என்றால் மிகையில்லை
நற்றிணையில் “விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,” எனத்துவங்கும் சங்கப் பாடல் ஒன்றில் புன்னை மரத்தை ஒரு தலைவி தன் தங்கை என விவரித்து தலைவனுக்கு சொல்லும் ஒரு கவிதையைபோல இதில் வயதான பெண் தன் பருவமெய்தி தன் தந்தை தன் தலையில் ஊற்றிய காலத்தை நினைத்துப் பார்க்கிறார்
ஒரு கவிதை வாசகனுக்குள் எவ்விதமான அகப்பயணத்தை தூண்டவேண்டும் என்பதற்கு இக்கவிதை ஒரு சிறந்த சான்று
இது போல இத்தொகுப்பு முழுக்க பல கவிதைகள் எளிய மக்களின் பாடுகளை வார்தைகளை வலிகளை நோயை விவரித்து ஆங்காங்கே அதிர்வலைகளை உண்டாக்குக்கிறது.
இப்படியெல்லாம் யோசிக்கும் ஒருவன் நான் பார்த்து பழகிய நண்பன் சீனு ராமசாமிக்குள் எங்கே இருந்தான் என யோசிக்க வைக்கும் அளவுக்கு பல இடங்களில் சமூகத்தின் மீதான கோபம் கூரான வார்த்தைகளுடன் கவிதையாக தெறிக்கிறது .
இது போன்ற பாடு பொருள் பிரதானமாகவும் உருவகம், உத்தி ஆகியவை இரண்டாம் நிலையிலும் கொண்அ பிலேயின் பொயட்ரி வகை சார்ந்த கவிதைகள் இத் தொகுப்பில் அதிகம் இருந்தாலும் உருவகம் உல்லுறை இறைச்சி படிமம் ஆகியகூறுகளைக் கொண்ட அடர்த்தியான கவிதைகளும் கவிஞரின் கவிச் செழுமைக்கு சான்றாக இருக்கின்றன.. அவற்றுள் கடபாரையை உருவகமாக் பயன்படுத்தி அவர் எழுதியிருக்கும் கூலி ஆள் எனும் கவிதை கன்க்கச்சிதம் . கேலிச்சுத்திரம் போல உருவாக்கப்பட்டிருக்கும் இக்கவிதை கவிஞர் கண்டராதித்தனின் கால் மேல் கால் போட்டு கடந்து போனான் என முடியும் சிறந்த கவிதை ஒன்றின் வரியை ஞாபகப்படுத்தி நம்முள் நகைப்பை உருவாக்க்வதில் கவிஞர் முழு வெற்றி பெற்றுவிடுகிறார்
அதே போல சீனுராமசாமியை சிறந்த கவிஞன் என உரக்க சொல்லி அழைக்கும் கவிதைகளில் ஒன்று புகைப்படம் .இதில் நாம் எடுக்கும் எந்த புகைப்படம் நம் அஞ்சலிக்கு தேர்வாகும் எனற கேள்வி சட்டென ஒரு மின்னலை உருவாக்கி விட்டு நம்மை அந்தகாரத்தில் ஆழ்த்திவிடுகிறது . இப்படி எடுத்துச்சொல்லி ஆச்சரயப்டும் படி பல கவிதைகள் மிக சிறப்பாக வடிவம் கொண்டிருக்கின்றன
தொகுப்பின் ஆகச்சிறந்த கவிதையாக வெயில் தாய் , புகைப்படம் கூலி ஆள் போன்ற கவிதைகள் என் தேர்வில் இருந்தாலும்” உண்மை” எனும் தலைப்பில் சீனு ராமசாமி எழுதியிருக்கும் ஒரு கவிதையை என்னால் அத்தனை சுலபத்தில் கடக்க முடியவில்லை
பட்டினத்தார் பாணியில் உற்றவர் கை விடுதல் அல்ல எனத்துவங்கி வரிசையாக கை விடுதல் அல்ல வற்றை பட்டியலிட்டுக்கொண்டே வருபவர் இறுதி வரியில்
ஏழையின் உடலை
அவன்
உறுப்புகள் கைவிடுதல்
மகா துயரம்.
என முடிக்கும் போது மிகபெரிய வலி நம் இதயத்தை கவ்விக்கொள்வதை தவிர்க்க முடியவில்லை அகிராகுரோசாவின் “ரெட் பியர்ட்” படத்தில் நோயுற்ற உடல்கள் வாதையில் புலம்பும் அந்த மரண ஓலங்கள் சட்டென கண் முன் தோன்றுகின்ரன
இந்த மொத்த தொகுப்புமே இந்த ஒரு கவிதைக்குத்தானோ என எண்ணத் தோன்றும் அளவுக்கு இக்கவிதையின் வழி நம்மை மனித அவலத்தை உணர்த்தி பெரும் தியானத்துள் அழைத்துச்செல்கிறார்
மொழியின் பயணத்தில் இந்தக் கவிதைகள் என்ன இடம் கொள்ளும் என என்னால் சொல்ல முடியவில்லை
ஆனால் வாசிப்பவன் மனதில் இத்தொகுப்பு பெரும் வெளிச்சத்தையும் உயர்வையும் மேன்மையையும் கற்றுத்தந்து ஒரு அங்குலமேனும் அவனை உயர்த்தி நவீன உலகத்துக்கு அவசியம் தேவைப்படும் புதிய மனிதனாக மாற்றும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை
இத்தொகுப்பு இல்க்கிய வாதிகளை விடவும் கவிஞர்களை விடவும் இன்னபிற சமூகத்தை இயக்கும் முக்கிய கர்த்தாக்களை விடவும் ,
நம் காலத்தின் புதிய தலைமுறையினரின் கைகளில் தவழவேண்டும்
ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் இக் கவிதைகளை வாசிக்க வேண்டும்
சக மனிதன் மீதும் சக உயிரின் மீதும் அன்பையும், நேசத்தையும் இக்கவிதைகள் விதைக்கட்டும்
அதுவே நம் காலத்தின் தேவையும் கூட
23-02-2024 ஞாயிறு காலை 10. மணி
சாலிக்கிராமம்
சென்னை
Subscribe to:
Posts (Atom)
பாரதிதாசன் : ஒரு பின் நவீனத்துவ முன்னோடி
பாரதிதாசன் : ஒரு பின் நவீனத்துவ முன்னோடி தமிழ் ஒரு அழகான இளம் பெண்ணாக பூமியில் தோன்றி, அவர் முன் வரிசையாக தமிழ் கவிஞர்களை எல்லாம் நிறுத்தி...




