July 27, 2011

டிங்கோ புராணம் 2– கவிதை தொடர்


இரண்டாம் சந்திப்பு



இம்முறை
இரண்டு நாட்களுக்கு பின்
டிங்கோவை
கடைவீதியொன்றில் பார்த்தேன்

பின்னால் ஒரு பெண் துரத்த
சிக்னலில் தடுமாறிக்கொண்டிருந்தான்

கைகளில் ஒரு ஜோடி செருப்பு
தலையில் வட்ட குல்லாய்
அவன் கண்கள் அங்குமிங்குமாய்
மிகவும் பதட்டமாக இருந்தான்


வண்டியில் நகர்ந்து கொண்டே
கையசைத்தேன்
டிங்கோ நீ ஒரு கவிஞன்
என உரக்க கூவினேன்

டிங்கோ அதிர்ச்சியில் உறைந்து நின்றான்
காலம் கடந்து செல்லும்
ஒரு சிலை போல

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

காலம் கடந்து செல்லும்
ஒரு சிலை.....

எர்னஸ்ட் ஹெமிங்க்வே — ஆறு சொற்களில் ஒரு உலகம்’

  ‘‘ ’  அஜயன் பாலா அமெரிக்க எழுத்தாளர் ‘‘ எர்னஸ்ட் ஹெமிங்க்வே (Ernest Hemingway)’’ உலக இலக்கியத்தில் சிறந்த  எழுத்தாளர்களில்   ...