January 17, 2009
அன்பான என் நெஞ்சனைய வாசகர்களுக்கு, இந்த எனது கூட்ஸ் வண்டி இன்று முதல் இந்த தடத்தில் தன் பயணத்தை துவங்க இருக்கிறது.இதில் சரக்குகளின் விசேஷம் குறித்து இப்போதைக்கு என்னால் எதுவும் கூறமுடியாது.இதை எழுதுவதற்கு காரணமே எழுதுவதைதவிர வேறு ஒன்றுக்கும் இல்லை.அசந்தர்ப்பமாக வேணும் என் தலைமேல் ஒரு இலை விழுந்துவிடாதா என்ற ஏக்கமும் உள்ளூர தன்னை உயிர்ப்பித்துக்க்கொண்டிருக்கிறது.ஒரு கவிதை எழுதுபவனின் மனோநிலையுடன் தான் இந்தபயணம் இப்போது பிளாட்பாரத்தை கடந்து தடதடக்கதுவங்கியிருக்கிறது.ஒரு கதை எழுதுபவனாக,இலக்க்கியவாதியாக எப்போதுமே நான் போத்னைகளை வெறுப்பவனாக இருக்கிறேன்.யாருக்கும் தத்துவ பிச்சைகளை இடும் அபிப்ராயமும் எனக்கில்லை. கைகள் இரண்டால் தண்ணீரை விலக்கி ஆழத்தில் பயணிப்பது போல மனதை மேலும் மேலுமாக விரித்தபடி நீந்திக்கொண்டிருக்கும் இந்த எனது பயணம் முற்று முழுக்க அகவயமானது.அவ்வப்போது உங்களுக்காக நான் எடுத்துப்போடும் சிப்பிகளில் முத்துக்கள் இருந்துவிட்டால் கொஞ்சம் மன்னியுங்கள்.நானும் அப்போது அதிர்ஷ்டம் நிறைந்தவனாக நினைத்துக்கொள்கிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
புதை படிவங்கள் வ
ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
சமீபத்தில் இணையத்தில் ஒரு காணொளி அனைவரையும். நெகிழ்ச்சியூட்டியது. .வெள்ளை வேட்டியும் வெற்றுடம்புமாக சைவ அடியார் கோலம் தரித்து ஒருவர் ...
2 comments:
வாழ்த்துக்கள் அஜயன். கூட்ஸ் வண்டி அருமையாக உள்ளது. ஆரம்பமே மிதம்...கூட்ஸ் வண்டியின் இயல்பைப் போலவே. தொடர்ந்து எழுதுங்கள்!
endru than ungal goods vandeyai parthom. maleum ungal payanam todara valltukkal ajai sir.
Post a Comment