June 3, 2021

கொரோனாவுக்கு முந்திய கொள்ளை நோய்கள்- அஜயன்பாலா

 




வரலாற்றில் கொள்ளை நோய்களால்  உலகம் பலமுறை பெரும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது, குறிப்பாக ப்ளேக் காலரா போன்றவைகள் சீசனுக்கு சீசன் உலகத்தோடு சேத்து செத்து விளையாடும் கோடூர வியாதிகள் .அதிலும் ப்ளேக் பற்றி சொல்லவே வேணாம் . செத்த எலிகள் மூலம் உருவாகும் இந்த கொடூர நோய்  கிமு ஆறாம் நூற்றாண்டில் எகிப்தில் தாக்கத்துவங்கி குறிப்பிட்ட இடைவெளியில் பலமுறை உலகம் முழுக்க பெரும்  தாக்குதலை உண்டாக்கி பல உயிர்களை பலி வாங்கியிருக்கிறது

குறிப்பாக 17 ,18ம் நூற்ராண்டில் இந்த கொள்ளை நோய் உருவாக்கிய அழிவின் பெரும்  பாய்ச்சலுக்கு  பல இலட்சம் மக்கள் ஐரோப்பா முழுக்க பலியாகியிருக்கின்றனர். 19ம் நூற்ராண்டின் துவக்கத்தில்  இந்தியாவிலும் நுழைந்த  பிளேக் குஜாராத்தில் நுழைந்து இமயமலை துவங்கி ராஜஸ்தான் வழியாக வட இந்தியாவில் பல்லாயிரக்கணக்கில் கொன்று வெறித்தனம் காட்டி  . 19ம் நூற்றாண்டின் இறுதியில் மும்பை கல்கத்தா என பரவி அப்படியே சில்க் ரூட் பிடித்து  ஹாங்காங் சீனா தாய்லாந்து என பரவி  பத்து லட்சத்துக்கும் அதிகமான  உயிர்களை பலி வாங்கியிருக்கிறது.

ஆனால் இந்த பிளேக் நோய் வரலாற்றில் பலமுறை உண்டாக்கிய பேரழிவைக் காட்டிலும்  ஒரே வருடத்தில்  பத்துமடங்கு அதிகமாக ஊழிக்கூத்தாடியதுதான் ஸ்பானிஷ் ப்ளூ எனும் கொடிய நோய் .

மற்ற நோய்களுக்காவது நோய் தாக்கி கொஞ்ச நாள்  சிகிச்சைக்கு அவகாசமிருக்கும்  ஆனால் ஸ்பானிஷ் ப்ளூ  தாக்கினால் 24 மணி நேரம் தான்  இம்மிடியட் பாஸ் போர்ட் .

1918ம் ஆண்டு ஸ்பானிஷ் ப்ளூ எனும்  கொடும் கொள்ளை நோய் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்  உண்டாக்கிய பேரழிவு வரலாற்றில் இன்று வரை பெரும்  துயர நிகழ்வாக கருதப்படுகிறது

இதன் மருத்துவ பெயர் 1918 H1N1 . உலகம் முழுக்க கிட்டத்தட்ட ஐந்து கோடி மக்களை ஒரு நோய் பலி வாங்கியிருக்கிறது என்றால் அதுவும் ஆறு மாத கால இடைவெளியில் என்றால் இந்த நோயின் கொடூரத்தையும் ஊழித்தாண்டவத்தையும் நினைத்துப் பாருங்கள்  

இதைவிட வேடிக்கை என்னவென்றால் நோய் உருவாக காரணமான முதலாம் உலகப்போரில் இறந்தவர்களின்  ஒட்டுமொத்த எண்ணிக்கையை விட இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் . இது ஏதோ உலக்ப்போருக்கும் நோய்க்கும் ஈகோ சண்டை போல இருப்பது துயர வியத்தம்

சரி இந்நோய் எப்படி உருவானது ?

வழக்கமாக ஒவ்வொரு போரின் பிறகும் பெரும் கொள்ளை நோய் ஐரோப்பாவை தாக்குவது வரலாற்று வாடிக்கை . காரணம்  போரில் செத்துப்போகும் காயம்பட்ட உடலை சரியாக  அடக்கம் செய்யாமல் ஆங்காங்கே விழுந்துகிடக்கும் போது அதில் உண்டாகும்  நுண்ணுயிரிகள் காரணமாக பெரும் நோய்த்தொற்று உருவாகும் .

முதலாம் உலகப்போர் முடிந்து ஐரோப்பாவிலிருந்து தாயகம் திரும்பிய அமெரிக்கர்கள் சிலர்   முகாம்களில் மர்மமாக இறந்து கிடந்ததை மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்தபோது சட்டென கண்டுபிடிக்க முடியவில்லை   துப்பாககி முனையின் சொருகப்பட்ட கத்தியின் வழியாக என்றும்  அல்லது எலியின்  மூலமாக  இந்த நோய் துவங்கியிருக்கும்  எனவும் பிற்பாடு இரு வேறு ஆய்வுகளை நோயின் துவக்கப்புள்ளியாக வெளியிட்டனர்.

1918 மார்ச் மாதம் வெறும் இரண்டு ராணுவ வீரர்களின் இறப்பில் துவங்கி பிற்பாடு கொஞ்சம் கொஞ்சமாக  பரவி அடுத்த மாதம் 46 அடுத்து 1000ம் என அதிகரித்து அக்டோபர் மாதம் மிகப்பெரிய அளவில் பரவி அமெரிக்காவில் மட்டும் ஆறு லட்சம் பேரை மொத்தமாக பலிவாங்கி பிரம்மாண்டமாக உருவெடுத்தது

ஸ்பெயின் பிரான்சு ஜெர்மனி என ஐரோப்பிய நாடுகளுக்கு ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு நாடு திரும்பிய கப்பலில் யாரோ இரு புண்ணியவான்களுக்கு தொற்றிய இந்த ப்ளூ அனைவருக்கும் பரவி அப்படியே அவர்கள் மூலமாக பரவி ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் பங்கிறகு  லட்சக்கணக்கில் காவு வாங்கியது வரலாறு   ஒட்டுமொத்தமாக பார்த்தால் அன்றைய உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இந்நோயால் பாதிக்கப்பட்டனர்.  பாதிக்கப் பட்டவர்களில் மூன்றிலிருந்து ஆறு சதவீத்தினர்  நோய்க்கு பலியாகினர்

     . இச்சமயத்தில் இந்த நோய் பற்றின தகவலை வெளிவிடாமல் அரசாங்கம் அச்சு ஊடகங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டாலும்  முதல்முறையாக ஸ்பானிஷ் பத்ரிக்கை ஒன்றுதான் இந்நோய் பற்றியும் பேரழிவுகள் பற்றியும் வெளிக்கொணர அதன்  காரணமாக இதற்கு பெயரும் ஸ்பானிஷ் ப்ளூ என்றே சூட்டப்பட்டு வரலாற்ரில் நிலைத்துவிட்டது

இன்று உலகமே அமெரிக்க கலாச்சராம் எனச் சொல்லி வரும் பாப் கலாச்சாராம் தோன்றியதே இந்த ஸ்பானிஷ் ப்ளூ  பேரிழப்புக்குப் பின்தான். . காரணம் இந்த நோய் அமெரிக்காவில் பல குடும்பங்களை அனாதையாக்கியது .இது வயதனாவர்களை விட  35 வயதுமுதல் 45 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக  வேட்டையாடிக்கொன்றது . பல குடும்பங்களில் வயதானவர்களும் குழ்ந்தைகளும் மட்டூமே எஞ்சினர் ..அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒரே மாதத்தில் அனாதைகளாயினர் .  ஒரு குடும்பத்தில் குறைந்தது மூன்று பேர் கண்முன் அடுத்தடுத்து பிணமாகிக்கொண்டிருந்தனர்..மொத்தமாக ஆறு மாதங்களில் 6 லட்சத்து 75ஆயிரம் பேர் அமெரிக்காவில் மட்டும் இந்த கொள்ளை நோய்க்கு பலியாகியிருக்கின்றனர்

இதுதான் அம்மக்களிடையே  வாழ்க்கையின் மீது தீராத கசப்பை  உருவாக்கியது .அன்பு பாசம் நீதி நியாயம் எல்லாவற்றையும் வெறுக்க வைத்தது.  இந்த நோயின் விளைவால் உண்டான மனச்சிதைவுதான்  அடுத்த  தலைமுறையை அர்த்தமற்று  கூச்சலிடும் ராக் இசை  நோக்கி ஐம்பதுகளில் உந்தித்தள்ளியது . பணத்தை சேர்த்துவைப்பது அர்த்தமில்லை  வாழும் வரை வாழ்க்கை எனும் புதிய வாழ்க்கையை புது கலாச்சாரத்தை நோக்கி இழுத்துச்சென்றது . புதுப் புது மாஃபியாக்கள் உருவாகினர் .1000ம் துப்பககி ஏந்திய குண்டர்களுடன் அமெரிக்காவையே கண்ணில் விரல் விட்டு ஆட்டிய அல்கொப்போன் எனும் பெரும் மாபியா இக்காலத்தில்தான் உருவானான்.

இப்படிப்பட்ட கொடூர ஸ்பானிஷ் ப்ளூ காலத்தில் இல்லாமல் நாம் சாதாரண கொரானா காலத்தில் வாழ்வதை எண்ணி கொஞ்சம்  ரிலாக்சாக  இருக்கலாமே பிரண்ட்ஸ்  

 

 

No comments:

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...