October 27, 2009

பதேர் பாஞ்சாலி : சத்யஜித்ரே


இதயங்களை ஊடறுத்து செல்லும் காட்சி ரயில் :

உலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சி யுகம் 16


நியோரியலிசங்களின் ஊற்றுக்கண்ணாகவும், முதன் முதலாக திரையில் மவுனத்தின் ஆழத்தில் கேமராவை பயணிக்க செய்தவரும் ஐரொப்பிய சினிமாவுக்கான அடையாளத்தை முதலில் நிறுவியவருமான ழான் ரெனுவார் தனது ரிவர் படத்தை எடுக்கும் திட்டத்தோடு 1948ல் இந்தியாவில் கல்கத்தா வந்து இறங்கினார். அப்போது தனக்கு ஆதரவாக சினிமாவின் காதலர்கள் அங்கே உலவிக்கொண்டிருப்பார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை. கல்கத்தாவில் திரைப்படச்சங்கத்தை நிறுவி வழிநடத்தி வந்த இளைஞர்கள் சிலர் ரெனுவாரை சந்தித்து ஆச்சர்யபடுத்தினர். இளைஞர்களுக்கோ திரைப்பட் சங்கம் மூலமாக கண்டுரசித்த ஒருபடத்தின் இயக்குனரை நேரில் சந்தித்த மகிழ்ச்சி, ரெனுவாருக்கோ தன் படப்பிடிப்புக்கான இடத்தேர்வுக்கு இனி கவலைப்ப்டவேண்டியதில்லை என்ற மகிழ்ச்சி. வந்தவர்களில் சற்று உயரமாக மூக்கு நீளமாக இருந்த அதிகம் பேசாத ஒரு இளைஞனின் ஆர்வம் ரெனுவாரை வசீகரித்திருக்கும் போல . படப்பிடிப்புகளுக்கு தவறாமல் ஆஜாரான அந்த இளைஞன் தனக்கும் இயக்குனராகும் ஆசை இருப்பதாக கூறி தான் அப்போது அட்டைப்படம் வடிவமைத்துக்கொண்டிருந்த ஒரு நாவலின் கதையை கூறினான்.

அந்த இளைஞன் கூறிய கதையை கேட்டு ரெனுவார் அப்போதைக்கு அந்த இளைஞனை தட்டி கொடுத்து உற்சாகபடுத்தினாலும் அவரே கூட அந்த கதை ஐந்தாறுவருடங்களுக்கு பிறகு உலகமே வியக்கும் அழியாக காவியமாக பதேர் பாஞ்சாலி எனும் பெயரில் படமாக வெளியாகி கேன்ஸ் திரைப்ப்டவிழாவில் பலரையும் வியக்கவைக்க போகிறது என்பதை எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்.

. இக்காலக்ட்டத்தில் உலகின் முக்கிய நாடுகள் அனைத்துமே சினிமா எனும் புதிய மொழிக்கு தங்களாலான அணிகலனை புதுபுது இயக்குனர்கள் மூலம் அழகு பூட்டிக்கொண்டிருந்த சமயத்தில் இந்தியசினிமா மட்டும் ராஜாக்களையும் அவர்களது பிரம்மாண்ட செட்டுகளையும் விட்டு வெளியே வரவில்லை..இல்லாவிட்டால் மேடைநாடகத்தை ஒத்த நீளமான வசனம் மிகுந்த சமூகப்படங்களாகவே இருந்தன. இச்சூழலில். பிமல்ராய்,ரித்விக்கட்டக்,சேத்தன் ஆனந்த் போன்ற சில இயக்குனர்கள் மட்டும் சற்று வித்தியாசமான படங்களை எடுத்துவந்தாலும் அவர்களும் கூட இந்தியாவை விட்டு வெளியில் தாண்ட முடியாத சூழ்நிலை.இந்த நேரத்தில் 1950 ல் கல்கத்தவில் ரே அப்போது பணிசெய்துகொண்டிருந்த விளம்பர நிறுவனத்தின் உரிமையாளரான டி.ஜே கெய்மர் அவரை தொழில் நிமித்தமாக லண்டனுக்கு அனுப்பி வைத்தார். கிட்டதட்ட ஆறு மாதங்கள் அங்கு தங்கியிருந்த சத்யஜித்ரே லண்டனைவிட்டு புறப்படும்போது முழுக்க வேறு ஆளாக மாறியிருந்தார்.மனம் மிகுந்தபதட்டத்தில் இருந்தது அதற்கு காரணம் கிடைத்த குறைந்த அவகாசத்தில் அங்கு அவர் பார்க்க நேர்ந்த 90 திரைப்படங்கள். அதில் சிலகுறிப்பிட்ட படங்கள் அவரது உலகைமுற்றிலுமாக மாற்றின.அப்படி அவருக்குள் பாதித்த படங்கள் எவை தெரியுமா இத்தாலியின் நியோ ரியலிஸ அலையில் உருவான திரைப்படங்கள் அதிலும் குறிப்பாக ஒரு திரைப்படம்.விட்டோரியா டிசிகா வின் பை சைக்கிள் தீஃப் தான் அந்த அந்தபடம். படத்தின் அச்சு அசலான எதார்த்த்தை கடந்து படத்தில் சித்தரிக்கப்பட்ட சிறுவன் ரிசியின் அக உலகம் ரே வை வெகுவாக கவர்ந்திருந்தது.இப்போது ரிசி இருந்த இடத்தில் தான் எடுக்கவிருந்த நாவலின்கதையில் வரும் அபு இருந்தான் .

.சிறுவயது முதலே ரேவுக்கு குழந்தைகளின் உலகத்தோடு ஒருவித தீவிர ஈடுபாடு இருந்துகொண்டே இருந்தது..உண்மையில் வாழ்க்கை பெரியவர்களுக்கானது மட்டுமல்ல அங்கு குழந்தைகளும் சிறுவர்களும் வயதான பாட்டிகளும் இருக்கிறார்கள்.அவர்களின் உலகங்கள் பொதுபுத்தியில் இயங்கும் பெரியவர்களின் (இளைஞர்கள் மற்றும் நடுத்தரவயதுடையோரின்)
உலகங்களிலிருந்து வேறானவை.இதை உணர்ந்ததாலோ என்னவோ ரேவின் கேமராபார்வை எப்போதும் சிறுவர்களை குறிவைத்தே சுழன்று வந்தது, ஆனால் அன்றைய திரைப்படங்கள் உலகம் முழுக்கவும் அவரது பார்வைக்கு தலைகீழாகத்தான் சுழன்றன. இதனால்தான் முதல் முறையாக குழந்தைகளின் உலகத்தை ஓரளவுக்காவது அங்கீகரித்த பைசைக்கிள் தீஃப் அவரை மிகவும் தொந்தரவு செய்திருந்தது,லண்டனிலிருந்து கப்பலில் இந்தியாவுக்கு புறப்படும்போது இத்தகைய மனஅவசத்துடன் புறப்பட்டவர் கல்கத்தா வந்து இறங்குவதற்குள் முழு திரைக்கதைய்யையும் எழுதி முடித்திருந்தார்.படம் எடுக்க பல தயாரிப்பாளர்களை தேடி அலைந்தார் இறுதியில் வேறு வழியேஇல்லாமல் அவரது மனைவியின் நகைகள் அவரது கழுத்தைவிட்டு இறங்கி அடகு கடைக்குள் ஓட அடுத்த நாள் காமிரா சுழலத்துவங்கியது. ரே தானே இப்படத்தை தயாரிக்க துவங்கினார். ஒளிப்பதிவாளராக சுப்ரதோ மித்ரா வை நியமித்தார் ரேவை போலவே சுப்ரதோ மித்ராவுக்கும் முன்பின் எந்த திரைப்பட அனுபவமும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அதற்கு முன்வரை சினிமா கேமராவை தொட்டது கூட கிடையாது. ரெனுவாரின் ரிவர் படப்பிடிப்பின் போது வேடிக்கை பார்க்க அனுமதிக்கப்பட்ட ரேவை போலத்தான் மித்ராவும் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள மட்டும் அனுமதிக்க பட்டார். அப்போது இருவருக்குள்ளும் அறிமுகம் ஏற்பட கைக்குலுக்கிக்கொண்டு நண்பர்கள் ஆயினர் இருவரும். மித்ராவின் புகைப்படங்களை பார்த்த ரே தான் படம் எடுக்கும் போது நிச்சயம் உதவி கேமராமேனா சேர்த்துக்கொள்கிறேன் என்றுதான் சொல்லியிருந்தார். ஆனால் படம் துவங்கும்போது ரே சொன்ன தொகை கட்டுபடியாகாத காரணத்தால் பலரும் வர மறுக்க இறுதியில் வாய்ப்பு 21 வயதே ஆன சுப்ரதோமித்ரா ஒளிப்பதிவாளராகவே நியமிக்கப்பட்டார். அதே போல கலை இயக்குனரையும் ரிவர் படத்தில் பணி புரிந்த பன்சிதாஸ் குப்தாவை ஒப்பந்தம் செய்துகொண்டார். படத்தில் முற்றிலும் புதுமுகங்களை மட்டுமே நடிக்க வைப்பது என முடிவு செய்த ரேவுக்கு அபுவின் தந்தை பாத்திரத்துக்கு மட்டும் தவிர்க்க முடியாமல் வங்காள படங்களில் ஏற்கனவே நடித்து அனுபவம் பெற்ற நடிகரான கானு பாணர்ஜிய்யை ஓப்பந்தம் செய்ய வேண்டியதாகிப்போனது. அவரது மனைவி சரபோஜியாவாக நடிக்க ரேவின் மனைவி தன்னுடைய தோழி ஒருவரை கொண்டுவந்து அறிமுகப்படுத்தினார்.அவருக்கு முன்பே நாடகத்தில் நடித்த அனுபவம் இருக்கவே அவரை தேர்வு செய்து கொண்டார்.சிறுமி துர்காவாக நடிக்க நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. உமா தாஸ் குப்தா எனும் சிறுமி தேர்ந்தெடுக்கப்பட்டாள். ஆனால் அபு பாத்திரத்திற்கு மட்டும் சரியான சிறுவன் கிடைக்காதபோது அப்போதும் ரேவின் மனைவி வீட்டின் அருகில் இருந்த சிறுவன் ஒருவனை கொண்டு வந்தார்.
இறுதியில் பாட்டி இந்திர் பாத்திரத்துக்குத்தான் ஆளே கிடைக்கவில்லை. பின் ஒரு விப்ச்சார விடுதி ஒன்றில் அவர் எதிர்பார்ப்புக்குய் ஏற்றார் போல ஒரு வயது முதிர்ந்த கூன் விழுந்த பெண் இருப்பதை கேள்விப்பட்டு அவரை சென்று பார்த்த ரேவுக்கு அவரை பிடித்து போக அதன் பிறகுதான் படப்பிடிப்பு தளத்துக்கே ரே புறப்பட்டார்.

27 அக்டோபர் 1952ல் துவங்கிய படப்பிடிப்பு பல பொருளாதார தடைகளால் அடிக்கடி நின்று போனது வருடங்கள் ஓடின. மீதிபடப்பிடிப்புக்கு தேவையான போதியபணம் கிடைக்காத சூழலில் ரே கைய்யை பிசைந்து கொண்டு நின்றபோது அவரது தாயார் ஒரு ஆலோசனை தந்தார். அதன்படி அப்போதைய வங்காள முதல்வர் பி.சி.ராய்க்கு தாயரின் வேண்டுதலுக்கிணங்க போட்டுகாண்பித்தார்.படத்தை பார்த்த முதல்வர் அதன் கவித்துவமான அழகியல்வசம் ஈர்க்கப்பட்டு மீதபடத்தை வங்காள அரசாங்கத்தின் போக்குவரத்து அமைச்சகத்தின் மூலம் எடுக்க முடிவு செய்து அதற்குண்டான பொருளுதவிக்கு ஒத்துழைத்தார்.இறுதியில் 1952ல் துவங்கிய படப்பிடிப்பு பின் மீண்டும் இரண்டுவருடங்களுக்கு பின் தொடரப்பட்டு முழுமையாக முடிந்தது. இது குறித்து ஒரு முறை பேட்டி ஒன்றில் பேசிய ரே உண்மையில் இடைப்பட்ட காலங்களில் மூன்று அதிசயங்கள் நிகழ்ந்தன. ஒன்று அபு வளரவில்லை, இரண்டு துர்காவும் வளரவில்லை, மூன்று இந்திர்பாட்டி இறக்கவில்லை.இந்த மூன்றில் ஒன்றுநடந்திருந்தாலும் இன்று பதேர் பாஞ்சாலிக்கு கிடைத்திருக்கும் பெயரும் புகழும் கிட்டியிருக்குமா என்பது சந்தேகமே. நல்ல கலை என்பது திறமையுடன் சேர்ந்து சில அசந்தர்ப்பங்களாலும் ஆனதுதானோ என பதேர் பாஞ்சாலிகுறித்து ரே சொன்ன மேற்சொன்ன கூற்று நம்மை யோசிக்க வைக்கிறது.



படத்தின்கதை அபு எனும் சிறுவனின் பால்ய காலத்தை அவனது வாழ்நிலத்தை,சூழலை,அவனோடு வளர்ந்த புல் பூச்சி மரம் செடி கொடிகளை,அவனால் உட்கிரக்கிக்க முடியாத குடும்ப அவலத்தை வறுமையை விவரிக்க கூடியதாக இருந்தது. அபுவின் தந்தை ஹரிஹர ரெ காலம் காலமாக நிஷிந்பூர் கிராமத்தில் மத சடங்குகளை நிகழ்த்தி பிழைப்பு நடத்துபவர். வருமானம் மிக குறைவு ஆனாலும் அதைபற்றி கவலைப்படாமல் எப்போதும் பாட்டு கவிதைகள் என எழுதி என்றாவது ஒருநாள் அதன் மூலம் பெரிய பணம் ஈட்டிவிடமுடியும் என கனவு காண்பவர். இதனாலேயே குடும்பம் போதியவருமானம் இல்லாமல் கடன் வறுமை ஆகியவற்றில் சிக்கி தத்தளிக்க துவங்குக்கிறது. கணவன் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறாரே என மனைவி சரபோஜாயா விசனப்படுகிறாள் காரணம் அவர்களது மூத்தமகள் துர்கா. பத்துவயது நிரம்பியசிறுமிதான் என்றாலும் பெண் அல்லவா. துர்காவின் தம்பிதான் அபு .இருவருக்கும் நெருக்கமான இன்னொருவர் வயதான கண்தெரியாத இந்திர் எனும் பாட்டி . இந்திர்பாட்டிக்கு கூன் முதுகு பொக்கைவாய். பாட்டியின் மேல் ப்ரியம் கொண்ட துர்கா அடிக்கடி அடுத்தவீட்டுக்காரர்களின் மரங்களிலிருந்து கொய்யாபழங்களை திருடிக்கொண்டுவந்து தருவாள். இதனால் அந்த வீட்டு உரிமையாளர்கள் துர்காவை அடக்கி ஒடுக்கும்படி சர்பாஞ்சாவிடம் அடிக்கடி சண்டைக்கு வருவது வழக்கம்.ஒருமுறை மணி மாலை ஒன்றை துர்கா திருடிவிட்டதாக புகார் வருகிறது .ஆனால் துர்கா அதை அப்போதைக்கு மறுத்துவிடுகிறாள்..

எப்போதாவது சர்போஜயா கோபத்தில் திட்டும்போதெல்லாம் இந்திர்பாட்டி கூன் விழுந்த முதுகுடன் பக்கத்து வீடுகளில் சென்று தஞ்சம் புகுவாள். இதுதவிர துர்காவின் உலகம் முழுக்க தம்பி அபுவை சார்ந்தது. அது போலத்தான் அபுவுக்கும் அக்காவைத் தவிர வேறு உலகம் இல்லை. அவர்களது உலகத்தில் அந்த சிறுகிராமத்தின் வயல்வெளி ,குளம் அங்குவசிக்கும் உயிரினங்கள் மற்றும் எப்போதாவது மாலை நேரங்களில் மணி அடித்தபடி வரும் மிட்டாய்காரன் கிராமத்தின் இதர பணக்கார சிறுவர்கள் இவைகளால ஆனது. அவர்கள் இருவரும் தங்களது வயல்வெளிகளில் விளையாடும் போதெல்லாம் எப்போதாவது தொலைவில் ரயிலின் ஓசை கேட்கும் . ஒரு நாள் அக்கா தம்பி இருவரும் ரயிலின் ஓசையை கேட்டு அதனை பார்க்க வயல் மற்றும் தோப்புகளின் வழியே ஓடுகின்றனர். ஓரிடத்தில் அவர்களின் எதிரே சற்று தொலைவில் புகைவிட்டபடி ரயில் போய்க்கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கின்றனர்.
வறுமை காரணமாக ஹரிஹரபாபு வெளியூருக்கு சென்று பஞ்சம் பிழைக்க புறப்படுகிறார். திரும்ப வரும் போது கைநிறைய பணத்துடன் வருவதாக மனைவியுடன் கூறுகிறார். எப்போதுமே குடும்பகவலையால் வருத்தமுற்றிருக்கும் மனைவி சரபோஜயாவுக்கு கணவனின் வார்த்தைகள் சிறிதளவு மகிழ்ச்சி யூட்டுவதாக இருக்கிறது. ஆனால் கணவன் சென்ற பின் தான் குடும்பசூழல் மேலும் வறுமைக்கு ஆளாகிறது. ஓருபக்கம் தனிமை இன்னொருபக்கம் வறுமை இதனால் சரபோஜயாவின் வாழ்க்கை மிகுந்ததுயரத்தை பாரமாக சுமக்கிறது. ஒருநாள் விளையாட போகும் துர்காவும் அபுவும் திரும்பும் வழியில் தங்களது இந்திர்பாட்டி பிணமாக வழியில் இறந்துகிடப்பதை பார்க்கின்றனர்.
இதனிடையே பருவம் மாறுகிறது. மழைக்காலம் துவங்குகிறது. துர்கா மழையில் நீண்டநேரம் நனைகிறாள். விளைவு மறுநாள் அவள் படுத்த படுக்கையாகக்கிடக்கிறாள். வறுமையில் அவதிப்படும் சரபோஜாயா தனக்கு தெரிந்த வைத்தியங்களையெல்லாம் செய்து பார்க்கிறாள். இறுதியில் காலத்தின் சதியின் முன் தோற்றுபோகிறாள். இச்சூழலில் பணம் சம்பாதிக்க வீட்டைவிட்டு வெளியூர் போன கணவன் ஹரிஹரரே மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகிறான். ஆவலுடன் வீட்டுக்குள் நுழைபவன் மனைவி சிலைபோல அமைதியாக இருப்பதை பார்க்கிறான் அடுத்த நொடிஅவனது காலில் விழுந்த மனைவி வீறிட்டழுவதை பார்த்தபின்தான் மகள் துர்கா தன்னை விட்டு போய்விட்டதை ஹரிஹர பாபு உணர்கிறான்.

இறுதியில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த ஊரை விட்டு வெளியேற ஹரிஹரரே முடிவு செய்கிறார். பொருட்கள் மூட்டைகட்டப்படுகின்றன. அப்போது அபு வின் கைகளில் துர்கா தான் திருடவில்லை என மறுத்த மணிமாலை கிடைக்கிறது. அதனை தானும் துர்காவும் அடிக்கடி சுற்றி விளையாடிய குளத்தில் அபு எறிகிறான். அது மூழுகுவதையே பார்க்கிறான். திரைப்படம் இத்தோடு முடிகிறது.

-அஜயன் பாலா

( அடுத்த வாரம் ரே... இந்திய சலனத்திரையின் முடிவுறாத அழகியல் )

.

October 21, 2009

தமிழ் சினிமா , இந்தியசினிமா, உலகசினிமா




Cinema express article
தமிழ் சினிமா , இந்தியசினிமா, உலகசினிமா
அஜயன் பாலா சித்தார்த்


ரொம்பநாள் கழித்து நேற்று மளிகை கடைக்கு சென்றிருந்தேன் சக்கரைவிலை அநியாய்த்துக்கு அதிகமானது பற்றி கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது நபர் சட்டென கைவசம் வைத்திருந்த இரண்டொரு டி.வி.டிக்களை கடைக்காரரிடம் தந்துவிட்டு படம் பின்னி எடுத்துருப்பான் பாத்துட்டு கொடுத்துடுங்க என கூறினார். ஆச்சர்யாமாக் இருந்தது அவர்கள் பரிமாறிக்கொண்டது இத்தாலியபடமான மெலினா மற்றும் சினிமா பாரடைஸோ. ஒருவேளை கொடுத்தநபர் சினிம்மாக்காராரக இருக்கலாமோ என பேச்சு கொடுத்தேன் . ஷேர் புரோக்கிங் பிஸினஸ் செய்பவராம். மலீக்கைக்கடைக்காரரும் இவரும் நண்பர்களாக இருந்ததால் அவர்களுக்குள் இப்படிபரிமாற்றம் அடிக்கடிநடக்குமாம். வெளிநாட்டில் வேலை செய்யும் அவரது மகன் ஒருமுறை வாங்கிவந்ததன் மூலமாகத்தான் இது போன்ற படங்களைபார்க்க துவங்கியதாக கூறினார்.

சாதரண மனிதர்களிடம் கூட எப்படியெல்லாம் உலக படங்களின் மீதான் ரசனை எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்க்காகத்தான் மேற்சொன்ன சம்பவத்தை குறிப்பிட்டேன். மட்டுமல்லாமல் இன்று உலகசினிமா எனும் பேச்சு தமிழ் வெகுஜன ஊடகங்களில் பரவலாக விரவிவருகிறது. பர்மாபஜாரில் உலகசினிமா சி.டிக்களின் வியாபாரம் செம ஜோராக களைகட்டுகிறது. முதல்முறையாக பர்மா பஜார் சிடி கடைகளுக்கு செல்லும் அறிவு ஜீவிகள் யாருக்கும் கடைக்காரர்களது உலகசினிமா குறித்த ஞானம் அவர்கள் சொல்லும் குறிப்பிட்ட படங்களின் பெயர்கள்,மற்றும் டைரக்டர்களின் இதர படங்கள் குறித்த அவர்களது அபார அறிவு போன்ற்வை பிரமிக்கவைக்கும்.கூடவே நமக்கு கூட இவ்வளவு விவரம் தெரியவில்லையே என்ற குற்ற வுணர்ச்சிய்யைய்யும் ஏற்படுத்தும்.அந்த அளவுக்கு உலகசினிமாக்கள் உள்ளூரில் மவுசு கூடிக்கொண்டுவருகிறது. இன்று ஓரளவு பொது அறிவின்மேல் ஈடுபாடுகொண்ட பலருக்கும் உலகசினிமா ஒரு பழக்கமான சொல். மேலும் ஒரு தமிழ்படம் கொஞ்சம் எதார்த்த்மாக இருந்துவிட்டாலே தமிழின் முதல் உலகசினிமா என போஸ்டர்கள் கொட்டை எழுத்தில் அச்சிட்டு சாதரண மக்களிடம் கூட அந்த வார்த்தையை கொண்டுபோய் சேர்த்துவிட்டன.மட்டுமல்லால் தொலைக்காட்சிகளில் விழாக்காலங்களில் கூட ஆங்கிலபடங்களையே திரையிடும் அள்வுக்கு காலம் முன்னேறிவிட்டது. மேலும் ஒரு தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் உலகசினிமாக்கள் சுருங்கியவடிவத்தில் காண்பிக்கபட்டுவருகின்றன.இந்த சூழல் நான்கைந்துவருடங்களுக்கு முன்வரைகூட இல்லை.

இது ஒருபுறமிருக்க இன்று வருகிற படங்களை பாருங்கள்.வெளியான பலபடங்கள் அடுத்த ஓரிருநாளிலேயே மீண்டும் பெட்டிக்குள் தூங்க போய்விடுகின்றன.சமீபத்தில் மோசர் பீர் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் சென்னைபிரிவு நிர்வாக அதிகாரியாக இருக்கும் தனஞெயன் அவர்களை சந்தித்தபோதுமிகவும் கவலையுடன் வரும் படங்கள் அனைத்தும் வியாபாரத்தில் படுமோசமாக இருக்கின்றன.இண்டஸ்டிரியில் ஒருபெரியபடத்தின் தோல்வி பலரையும் பாதிக்கிறது. இங்குமட்டுமல்ல மலயாளம் தெலுங்குபட உலகமும் இப்படித்தான் என புலம்பினார்.

ஒருபுறம் சாதாரண மக்களுக்கு உலகசினிமாகுறித்த தேடல் இன்னொருபுறம் வழக்கமான கமர்ஷியல்படங்களின் தோல்வி இவை எதனை காட்டுகிறது, மக்களின் ரசனை மாற்றத்தைத்தான் காட்டுகிறது. சமீபத்தில் வெளியான பெரியநட்சத்திரங்களின் படங்கள் அனைத்துமே மண்னை கவ்வியிருக்கின்றன. மட்டுமல்லாமல் காமாசோமா படங்கள் பல வந்து வந்ததட்ம் தெரியாமல் காணாமல் போயிருக்கின்றன. ஓடியபடங்களை ஒரு பட்டியலிட்டுபாருங்கள்.நாடோடிகள்,வெண்ணிலாகபடிக்குழு,பசங்க சரோஜாஎன நீளும் அப்படங்களின் பட்டியலில் தொழில்நுட்பத்திலும் கதைசொல்லிலும் ஒரு புதுமை இருப்பதைகாட்டுகிறது. மேற்சொன்ன படங்கள் தரமான படங்களா என்ற பேச்சுக்குவரவில்லை.ஆனால் இவையனைத்திற்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை கதைக்களனில் இருக்கும் தனித்தன்மை மற்றும் சுவாரசியமான திரைக்கதை குழப்பமில்லாத திரைக்கதை தொழில் நுட்பத்தில் புதுமை மற்றும் நேர்த்தி.

தமிழ் சினிமா ஓவ்வொருகாலத்திலும் ஒவ்வொருடிரெண்டை பாலோ செய்து வருகிறது.இது தமிழ்சினிமாவுக்கு மட்டுமல்ல தொழில்ரீதியாக வளர்ந்த உலகின் இதர மொழியைசேர்ந்த சினிமாத்துறைகளுக்கும் பொருந்தும்.என்றாலும் நமக்கு நன்கு பரிச்சயமான தமிழ்சினிமாவைபற்றி அதுகடந்துவந்த ட்ரேண்டுகளிப்பற்றி பார்த்துவிட்டு வந்தால் இன்றைய நிலை என்ன என்பதை நம்மால் ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடியும்..

எல்லா காலத்திலும் எம் ஜி ஆர் சிவாஜி கமல் ரஜினி அஜீத் விஜய் போன்ற நடசத்திரங்களுக்காக உருவாக்கப்படும் பார்முலா படங்கள் அல்லது மசாலா படங்கள் காலத்துகேற்றபடி இருந்துவந்து கொண்டிருக்கும் இது தவைர்க்க முடியாதது. ஒருபுறம் இப்படிப்பட்ட படங்கள் வெளியாகி ஓடிக்கொண்டிருக்க ஒவ்வொருகாலத்திலும் இதற்கு இணையாக இவர்கள் அல்லாது ஓடிய படங்களித்தான் நாம் டிரெண்ட் படங்கள் என கணக்கிலெடுத்துக்கொள்ள முடியும்.

தமிழின் முதல் டிரெண்ட் சினிமா என்றால் அது பராசக்தியாகத்தான் இருக்க முடியும் ஆனால் அதற்குமுன் வரை இருந்த புராணபடங்கள் போய் சமூக படங்கள் அதிகம் வந்தாலும் பராசக்தியை போல் அவை சமூக கருத்துக்களை மக்களிடம் எடுத்துசெல்லாமல் குடும்ப நாடகங்களையே மையப்படுத்திவந்தன. பராசக்திக்கு பிறகு ஸ்ரீதரின் கல்யாணபரிசு காதல்கதைகளை தமிழ்சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார் என்றாலும் அதுகூட மிகபெரிய தாக்கத்தை மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றுதன் சொல்ல வேண்டும் . அவரது தொடர்ச்சியாக வந்த பாலச்சந்தர் பலபடங்களுக்கு பிறகுதான் அவள் ஒரு தொடர்கதை எனும் தனித்த்ன்மையான தனது முத்திரை படத்தை தரமுடிந்தது. அவரும்கூட சூழலை அதிகமாக பாதிக்கவில்லை. தொடர்ந்து அபூர்வ ராகங்கள் அவர்கள் நிழல் நிஜமாகிறது என அவரது படங்கள்தான் வித்தியாசமாக இருந்ததேதவிர இதர இயக்குனர்களிடம் மாறுதல் தெரியவில்லை. ஆனாலும் ஸ்ரீதருக்கும் பாலச்சந்தருக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது. அப்போதைய தமிழ் சினிமாவை வெகுவாக ஆக்ரமித்திருந்த எம் ஜி ஆர் சிவாஜிபடங்களுகு மாற்றான படங்களை தருவதை அவர்கள் கொள்கையாகவும் வைராக்கியமாகவும் கொண்டிருந்தனர்.

தமிழ்சினிமாவின் அசல் ட்ரெண்ட் என்று பார்த்தால் பாரதிராஜாவிடமிருந்துதாந்துவக்கம் பெற்றது. அவர் உருவாக்கிய டிரெண்ட் படத்தின் கதைக்கள்ன் கதை திரைக்கதை படப்பிடிப்பு தளம் ஒளிப்பதிவு நடிப்பு என அனைத்து துறையிலுமாக தமிழ்சூழலை பாதித்தது.மக்களின் ரசனை அடியோடுமாறத்துவங்கியது. அசலான கிராமத்துகதைகளையும் மக்கள் பார்க்கதுவங்கினர். தொடர்ந்து நடிகர்களின் முகமல்லாமல் புதுபுதுமுகங்களை பார்க்கும் ஆவல் அவர்களுக்கு இந்த காலத்தில் அதிகமாக உருவானது. மகேந்திரன் பாலுமகேந்திரா டிராஜேந்தர் பாக்கியராஜ் துரை தேவராஜ் மோகன் போன்ற பல நல்ல இயக்குனர்கள் எம். காஜா ,எஸ்.பி முத்துராமன் போன்ற கமர்ஷியல் இயக்குனர்கள் இக்காலகட்டத்தில் உதயமாகினர்.

அதன் பிறகு இக்காலகடத்தின் மூலம் நாயகர்களாகி நட்சத்திரங்களான ரஜினி கமல் ஆகியரது காலம் உத்யமாகியது. ஒருபக்கம் அவர்களின் படங்கள் வெகுவாக சூழலை ஆக்ரமிக்க வித்தியாசமான கதைக்களன் கொண்ட எதார்த்தபடங்கள் பின்னுக்கு போயின. இவற்றினுடே கொஞ்ச காலம் மோகன் கொஞ்சகாலம் ராமராஜன் கொஞ்சகாலம் டி எப்டி கல்லூரிமாண்வர்களின் படங்கள் ட்ரெண்ட் படங்களாக ரஜினிகமல் படங்களுக்கு மாற்றான படங்களாக வந்து போயின.
பின் மணிரத்னம் ,ஷங்கர், ஏர் ரகுமான், பிரபு தேவா ஆகியோர் திரைத்துறைக்குள் பிரேவிசித்ததன் பலனாக அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக படம் தயாரிக்கும் பாணி அதமிழ்ச்சூழலை கொஞ்சகாலம் நோய்க்குறாக பிடித்து ஆட்டியது இதனால் பல குட்டிதயாரிப்பாளர்களும் பெரியதாயாரிப்பாளர்களும் காணாமல் போயினர்.

இச்சூழலில் காதல்கோட்டைக்கு பிறகு லோபட்ஜெட்டில் க்ளைமாக்ஸில் மெசேஜ் சொல்லும் காதல்படங்கள் அதிகமாக வரத்துவங்கின. சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி சவுத்ரி தான் இக்காலகட்டத்தின் முக்கியநாயகன்.இக்காலகட்டத்தில்தான் விஜய் அஜீத் என இரெண்டு நாயகர்கள் இளைஞர்களின் அதிகமான கவனத்தை ஈர்த்தனர்.உடன் இதில் வித்தியாசமான காதல்கதைகளை சொன்ன சேரன் பாலா பொன்ற இயக்குனர்கள்
மக்கடையே அதிக மதிப்பீட்டை சேர்த்த்ன.

இதனைடையே வழக்கமான மெசெஜ்படங்களால் அலுத்துப்போன மக்களுக்கு புதிய 2000 க்கு பிறகு எதிர்பார்ப்புகள் வெளிக்கிளம்ப துவங்கின.. அழகி என்ற அசலான கிராமத்து எதார்த்த படம் கிளைமாக்ஸில் கருத்து சொல்லும் படங்களுக்கு முற்றுபுள்ளிவைத்தது.இதிலிருந்து தான் தமிழின் குழப்பமான டிரெண்ட் துவங்கியது. அதற்குமுன் நல்ல கதை இருந்தால்;போதும் படம் ஓடிவிடும் என்ற நிலை இங்கு மாறியது. காலம்காலமான மசாலாபடங்கள் இப்போது வேறுவடிவங்களில்வரத்துவங்கின. விக்ரம் தனது தில் தூள் படங்கள் மூலம் இந்த சூட்டை கிளப்ப அதுவரை வித்தியாசமான காதல் படங்களை மட்டுமே தந்த விஜய் அஜீத் ஆகியோரும் தீனா பகவதி போன்ற மசாலா படங்கள் பக்கம் திரும்பினர்.இக்காலகட்டத்தில் அது வரை தாக்குபிடித்துவந்த முரளி,கார்த்திக்,பிரபு சத்யராஜ் போன்றவர்கள் முழுவதுமாக முடங்கிப்போக விஜய் அஜீத் விக்ரம் சூர்யா இவர்களைத்த்விர வேறுநடிகர்கள் எவரும் இல்லாத சூழல்.இத்னால் தயரிப்பாளர்களும் குறைந்துபோய் இண்டஸ்ட்ரியே ஒரு கட்டத்தில் முடங்கிக்கிடந்ததருணத்தில்தான் ஒருபடம் வந்தது.

துள்ளுவதோ இளமை .அவ்வளவுதான் இதற்குமுன் இந்த பட்டாளம் எங்கிருந்தது என கேட்கும் வகையில் தியேட்டர்களில் புது ரசிகர்கள் வெள்ளமென பாய்ந்தனர்.தொலைக்காட்சிநிகழ்ச்சிகளை பார்த்துபார்த்து வெறுத்து போன வழக்கமான ரசிகர்களும் மீண்டும் தியேட்டர்களுக்கு படயெடுத்தனர். தனுஷ் செல்வராகவனின் வருகை இண்டஸ்ட்ரிக்குள் புதுஇளமை அலையை உருவாக்கியது.தொடர்ந்து ஜெயம் ரவி ,ஸ்ரீகாந்த்,சிம்பு போன்ற நடிகர்கள் தலையெடுக்க கோடம்பாக்கத்தில் இளமைகாற்று வீசதுவங்கியது. பல்வேறுதுறைகளில் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆதிக்கம் செலுத்ததுவங்கினர்.மீண்டும் புதுதயாரிப்பாளர்கள் லோபட்ஜெட்படங்கள் வரத்துவங்கினர்.கோடம்பாக்கம் திநகர் பகுதிகளில் பலப்ளாட்டுகளில் மீண்டும் ஏகப்பட்ட ஆபீஸ் பூஜைகள் நடக்க துவங்கின. காதல். இளமை,என்ற தலைப்பில்வெளியான இந்த படங்கள் பல வந்த வேகத்திலேயே பெட்டிக்குதிரும்பின.

இரண்டுவருடங்களுக்குபிறகு சமூகம் பலமாறுதல்களை சந்தித்தது. எல்லோர்கையிலும் செல்போன்,,புது புது எப்.எம் ரேடியோ அலைவரிசைகள்.,.டி யுகத்தின் திடீர் எழுச்சி, போன்றவை மக்களின் ரசனைய்யை பதிக்க துவங்கின.
மக்கள் திரையில் புதுமையை பார்க்க விரும்பினர். இதனால் இரண்டுமாற்றங்கள் உண்டாகின .அதில் முதலாவது காக்க,காக்க,மன்மதன் போன்ற அதிநவீன தொழில்நுட்ப படங்களின் வருகை.இரண்டாவது காதல் ஆட்டோகிராப் போன்ற நல்லபடங்களின் வரத்து.இந்த இரண்டுவிதமான படங்களில் பொது அம்சமாக தொழில்நுடபம் மற்றும் புதுமையான திரைக்கதை உத்தி பிரதானமாக இருந்தன. அதேசமயம் சாமி படத்தை தொடர்ந்த திருப்பாச்சி சிவகாசி போன்ற குத்துபாட்டு கமர்ஷியல் வகையும் இன்னொருபக்கம் உருவாக துவங்கின.
இந்த மூன்றுவிதமான படங்களின் போட்டியின் இறுதியில் கடந்த இரண்டுவருடமாக தாக்குபிடித்திருப்பது காதல் ஆட்டோகிராப் வகையிலான வித்தியாசமான கதைக்களன் புதுமையான திரைக்கதை மற்ரும் நவீன தொழில்நுடப பயன்பாடு இந்த கலவைதான் கடந்த சிலவருடங்களில் தமிழில் அசலான வெற்றிகளை பெற்றிருக்கிறது.

சித்திரம் பேசுதடி , வெயில்,பருத்திவீரன்,மொழி சென்னை 28,இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகேசி அபியும்நானும்,அஞ்சாதே,சுப்ரமணீயபுரம்,வெண்ணிலாகபடிக்குழு,
பசங்க நாடோடிகள்.
இக்காலகட்டங்களில் இவற்றோடு வெளியான நட்சத்திரங்கள் நடித்த பெரியபட்ஜெட் படங்கள் படுதோல்வியடைந்தன. வெற்றிபெற்ற கமர்ஷியல்படங்களான் சிவாஜி,போக்கிரி தசாவாதாரம் அயன் பில்லா போன்ற படங்களிலும் திரைக்கதை மற்றும் தொழில்நுட்பத்தின் பின்புலன் அழுத்தமாக இருந்ததை யாவரும் மறுக்க முடியாது.இதன் மூலம்

நடிகர்கள் நடித்தால்தான் மக்கள் பார்ப்பார்கள் என்ற தயாரிப்பாளர்களின் பழைய கருத்தாக்கத்தை மேற்சொன்ன படங்களின் வெற்றி முற்றாக நிராகரிக்கின்றன. எனவே வித்தியாசமான கதைக்களன் செறிவான புதியபாணி திரைக்கதை மற்றும் வித்தியாசமான தொழில்நுட்ப அணுகுமுறை போன்றவற்றால் மட்டுமே இன்று ஒருவெற்றிபடம் கொடுக்க முடியும் என்பது இன்று அனைவரும் அறியவேண்டிய எழுதப்படாத விதிகள்.ஆனாலும் வரும்பலபடங்கள் இன்னும் திரைக்கதைகுறித்து போதிய கவனமின்மையுடன்தான் வெளிவருகின்றன. எப்படி புதிய பாணிகாதையாடல் இல்லாமல் நட்சத்திரங்களின்படங்கள் தோல்வியடைகின்றனவோ அதுபோல நல்ல தேர்ந்த திரைக்கதைகள் இல்லாமல் சிலநல்ல முயற்சிகளும் தோல்வியடைந்திருக்கின்றன.இவற்றில்,கல்லூரி, பூ ,பொக்கிஷம் போன்ற படைப்புகளுக்கு நேர்ந்த எதிர்பாரா சரிவு திரைக்கதையின் தவறாக இருந்திருகின்றன. இந்தபட்டியலில் மிருகம் படம் ஒருமுக்கியமான ஒன்று. பல நல்ல விஷ்யங்கள் அப்படத்தில் இருந்தும் திரைக்கதையில் இயக்குனரின் பார்வை மற்றும் அணுகுமுறைகளின் காரணமாக அப்படம் தோல்வியை எதிர்கொண்டது.எனவே மாறிவரும் மக்களின் ரசனைய்யை புரிந்துகொண்டு இயக்குனர்கள் திரைக்கதையை திட்டமிட்டு உருவாக்குவதன்மூலமும் தொழில்நுட்பத்தின் புதிய அணுகுமுறையின் மூலமாகவும் வெற்றிகளை ஈட்ட முடியும் என்பது உறுதி .இத்னால் தமிழ் திரையுலகம் எதிர்கொண்டுவரும் தொடர்தொல்விகளிலிருந்து ஓரளவுக்கு மீள முடியும். மட்டுமல்லாமல் இந்த வேகம் நிச்சயம் தமிழ் சினிமவை இன்னும் சிலவருடங்களில் உண்மையிலேயே உலகசினிமாவின் உயரத்துக்கு அழைத்துச்செல்லும் என்பதும் உறுதி.

தொடரும் நன்றி; சினிமாஎக்ஸ்பிரஸ்


அக்டோபர் 09

October 9, 2009

80 to 90 அக்காலத்தில் தமிழரும் சினிமாவும், சில மசால்வடைகளும்


1980 முதல் 90 வரை தமிழ் சினிமா ஒரு பார்வை
அஜயன் பாலா சித்தார்த்
.
80க்கு முன்
1973ம் ஆண்டில் சென்னையின் ஒரு பகல் பொழுது.அதோ கைவீசி ஒரு இளைஞன் அன்றைய பாண்டிபஜார்வீதியில் நடந்து செல்கிறான். சட்டை பையில் சொற்ப சில்லறை. .வயிற்றில் பசி .கண்களில் தொலைதூர நம்பிக்கை.ஆனால் அவனது தலையிலோ பாரம் கொள்ளாத கனவு. சட்டென எதிர்வருகிறது ராஜகுமாரி திரையரங்கம்.வெறுமையை விரட்டும்விதமாக அந்த இளஞன் அந்த வளாகத்தினுள் நுழைகிறான். ஏதோ ஒருகன்னடப்படம் இயக்குனர் புட்டன்னா கனகல் என எழுதப்படிருக்கிறது.பொழுதைபொக்கவெண்டி அந்த இளைஞனின் கண்கள் முன் வாசலில் வைக்கப்படிருந்த புகைப்பட அட்டைகளின்மேல் படர்ந்து செல்கின்றன. சட்டென அவனது மூளைச்செல்கள் புத்துயிர்ப்பு கொள்கின்றன. தமிழ்ச்சினிமா தன்னுள் புதிய மறுமலர்ச்சியை கண்டுணர்ந்து கொண்ட கணம் அது என்பது அந்த இளைஞனுக்கே கூட அப்போது தெரியாது.அந்த சதுர அட்டைகளில் காட்சிக்கோணங்கள் அவனுக்குள் இதுவரை அனுபவிக்காத புது உணர்வை உண்டாக்குகின்றன.உள்ளுக்குள் ஒரு புதிய இசை, பெயர் தெரியாத இசை,மனசு படபடக்கிறது உடனே டிக்கட்வாங்கிக்கொண்டு இருட்டினுள் நுழைகிறான். நான்குவருடங்கள் கழித்து அவன் வெளியேவந்த போது எண்ணற்ற காமிராக்கள் அவனை மையமிட்டன.அன்று வெறும் சின்னச்சாமியாக இருட்டினுள் நுழைந்த அந்த இளைஞன் இப்பாது பாரதிராஜாவாக வெளிச்சத்தின் முன்னே வந்து நின்றான்.அவன் இயக்கி அந்தவருடம் வெளியான பதினாறுவயதினிலே திரைப்படம்தான் அவனுக்கான அந்த வெளிச்சத்தை உருவாக்கி தந்திருந்தது. திரையுலகம் என்பதோடு நில்லாமல் தமிழக பண்பட்டுதளத்திலும் கூட பல மாறுதல்களை உருவாக்கிய அப்படத்தின் புதிய திரை மொழிக்கும் 70 பதுகளின் துவக்கத்தில் இந்திய சமூக பொருளாதார சூழலில் ஏற்பட்ட மாற்றத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்று நான் சொன்னால் அனேகம் பேர் எப்படி என கேள்வியை எழுப்பலாம்.
தொடர் ஐந்தாண்டு திட்டங்களின் வாயிலாக நகரமயமாதல் வேலையில்லா திண்டாட்டம் நடுத்தரகுடும்பங்களின் எண்ணிக்கைபெருக்கம் ஆகியவை காரணமாக இந்தி திரைப்ப்ட உலகில் புது வகை சினிமாக்கள் தோன்றின.¢¢ சினிமாக்கள் என அடையாளமிடப்படும் இத்தகைய திரைப்படங்கள் இதற்குமுன் இருந்துவந்த கலைப்படங்களின் தீவிரத்தன்மையிலிருந்து வாழ்கையை மிகவும் நெருக்கமாக பார்த்து அதன் நுண்மைகளையும் அழகையும் பார்வையாளனோடு பகிர்ந்துகொள்ளும் விதமாக செயல்பட்டன்.ஷப்னா ஆஸ்மி,ஸ்மிதாபட்டீல்,நஸ்ருதீன்ஷா, அமோல் பலேகர் ஓம்புரி போன்ற சாதாரண முகம் கொண்ட மனிதர்கள் நாயகர்களாகவும் நாயகிகளாகவும் உருவெடுத்த்னர்.ஷியாம் பெனகல்,மிருணாள்சென்,கோவந்த் நிகலானி ரிஷிகேஷ்முகர்ஜி,மணிகவுல்,போன்ற இயக்குனர்கள் அக்காலகட்டத்தின் சிற்பிகளாக உருவெடுத்த்னர்.அந்த அலை கன்னடம் மலையாளம் என தெற்கிலும் பரவதுவங்கியது. கன்னடத்தில் கிரீஷ் காசரவள்ளி போன்ற இயக்குனர்கள் தோன்றி இந்த புதிய ரசனைக்கு தங்களது மக்களை த்யார்படுத்திக்கொண்டிருந்த வேளையில்தான் புட்டண்ணா கனகல் எனும் இயக்குனரின் வழியாக அந்த அலை பாரதிராஜாவையும் தொட்டது.
1977ல் பதினாறுவயதினிலே வெளியாவதற்கு முன்பே தேவராஜ் மோகனின் அன்னக்கிளி திரைப்படம் ஓரளவு இந்த அலையின் குணக்கூறுகளை கதைக்களம் திரைக்கதை போன்றவற்றில் கொண்டிருந்தாலும் , காட்சி மொழி மற்றும் நடிகர்தேர்வு ,கதை நகர்த்தப்பட்ட பாங்கு மற்றும் கறுப்பு வௌ¢ளையை முழுவதுமாக ஒழித்துக்கட்டியதில் அத்ன் பஙகளிப்பு ஆகியவை காரணமாக பதினாறுவயதினிலே இந்த பெருமைகளை முழுவதுமாக தன் வஸம் தக்கவைத்துக்கொண்டது.பதினாறுவயதினிலேவை தொடர்ந்து 80க்கு முன் பல திரைப்படங்கள் ஏற்க்குறைய இதேபாணியில் வெளிவரத்துவங்கின. ஆனாலும் திரைப்படக்கல்லூரி மாணவரான ருத்ரய்யா தன் எழுத்தாள நண்பர்களான வண்ணநிலவன்,மற்றும் சோமசுந்தரேஸ்வர் (இயக்குனர்¢ கே¢.ராஜேஸ்வர்)¢¢ ஆகியோருடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கிய அவ்ள் அப்படித்தான்.1978,மற்றும் வசனகர்த்தாவாக இருந்து இயக்குனராக அறிமுகமான மகேந்திரன் இயக்கத்தில் வெளியான முள்ளும் மலரும்,1978, உதிரிப்பூக்கள்1979, ஒளிப்பதிவில் அலையை உண்டாக்கி பின் இயக்குனராகவும் வடிவம் கண்ட பாலுமகேந்திராவின் அழியாத் கோலங்கள்1979,துரை இயக்கிய பசி1979,தேவராஜ் மோகனின் ரோசாப்பூ ரவிக்கைக்காரி 1979,போன்ற திரைப்படங்களும் பாரதிராஜாவின் அடுத்தடுத்த படங்களான கிழக்கே பொகும் ரயில்,1978 நிறம்மாறாத பூக்கள,புதிய வார்ப்புகள்¢¢1979 போன்ற படங்களுமேஇந்த புதிய அலையின் வெற்றி சரடை தொடர்ந்து கையெடுதத்துச் செல்லும்பணியில் ஈடுபட்டன..மேற்சொன்ன அனைத்து படங்களுமே பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பியவை என்பதுதான் கவனிக்க வேண்டிய சேதி.
இப்படியான புத்தெழுச்சியுடன் ஒரு உயர்ந்ததளத்தை நோக்கி தன் சிறகுக்களை விரித்து பறக்க துவங்கிய தமிழ்சினிமா அடுத்த பத்துவருடத்தில் தடதடவென பெரும் பாதாளத்தை நோக்கி சரிந்து உருண்டது என்று சொன்னால் கூட மிகையில்லை..¢ இந்தி சினிமாவை போலவே தமிழ்சினிமாவும் தான் தீட்டிய கத்தியாலேயே குத்துபட்டு குற்றுயிராக சரிந்தது. அதுவரையிலான் நாயகனுக்குண்டான எந்த முக அம்சம் எதுவும் இல்லாத அமிதாப் கதாநாயகனாக அங்கீகரிக்கப்பட காரணமே அங்கு எழுந்த இடைநிலைசினிமாக்களின் அலைதான்.புவன் ஷொம் ,அபிமான், குட்டி போன்ற கிட்டதட்ட இருபது இடைநிலை சினிமாக்களால் மூலமாக கதாநாயகனாக கட்டியமைக்கப்பட்ட அமிதாப் எனும் அதே நடிகர்தான் பிற்பாடு தனது .டான்,தீவார் போன்ற படங்களின்மூலமாக கடந்துவந்த பாதையை முழுவதுமாக சிதறடித்தார்.தொடர்ந்து குர்பானி,ஷான் போன்ற வெத்து பிரமாண்டங்களும் வந்து ¢ இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கி எடுத்தது தனிக்கதை. . அமிதாப் அங்கு செய்த அதேகாரியம் இங்கு கமல் மற்றும் ரஜினியால் நிகழ்த்தப்பட்டது.இதில் என்ன வேதனை என்றால் இருவருமே நல்ல சினிமாவின் மேல் ஆர்வம் கொண்டிருந்தவர்கள்.அவள் அப்படித்தான் உருவாக கமல்தன் முனைப்பாக இருந்து ரஜினியையும் ,ஸ்ரீப்ரியாவையும் வற்புறுத்தி அதில் நடிக்கவைத்தவர்.பதினாறுவயதினிலே முள்ளும் மலரும், அவளப்படித்தான் என அவ்ர்கள் உருவக்கிய பாதை முரட்டுக்காளை சகலகலா வல்லவன் போன்ற படங்களின் மூலமாக அவர்களாலேயே முடித்துவைக்கப்பட்டது.சாதாரண மனிதனை மக்கள் ஒன்றுகூடி கைகளைதட்டி அவனை நட்சத்திரமாக மாற்றி விட்டபின் வானத்தில் சென்று ஒய்யிக்கொள்வது இயல்பான ஒன்றுதான்.அமிதாப் கமல் ரஜினியின் இந்த மாற்றத்திற்கு சமூகமும் ஒரு முக்கியமான காரணம்.
80பதுகளின் துவக்கத்தில் நிகழ்ந்த இந்த முக்கிய த்டமாற்றத்தை தவிர்த்துவிட்டு 90 வரையில் வெளியான தமிழ் திரைப்படங்களை பொதுவாக பார்க்கும் போது ஆச்சர்யமூட்டக்கூடிய பல அதிசய மாற்றங்கள் திருப்பங்கள் நிகழ்ந்திருப்பதை நம்மால் கண்டுணர முடியும்.கமல் ரஜினியின் விஸ்வரூப வளர்ச்சி ஒருபுறமிருக்க இன்னொரு புறம் அவர்களையே மிரட்டும் வகையில் இயக்குனர் கம் நடிகர்களாக அவதாரமெடுத்த பாக்யராஜ், டி.ராஜேந்தர் மற்றும் மெல்லியல்பும்,பெண் தன்மைகளும் நிரம்பிய மோகன், ராமராஜன் போன்ற நாயகாகளின் திடீர்¢ எழுச்சி, ¢ இளையராஜாவின் இசை அரசாட்சி,¢ தொழில்நுட்பங்களோடு களமிறங்கிய திரைப்பட் கல்லூரி மாணவர்களின் படையெடுப்பு,குறைந்த வெளிச்சத்துடனான மணிரத்னத்தின் வருகை போன்றவை இக்காலகட்டத்தின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள. திரையுலகின் உள்ளீ¢¤டாக நிகழ்ந்த இப்படியான மாற்றங்கள் ஒருபுறமிருப்பினும் மெற்சொன்ன பத்துவருடங்களை ¢ பார்வையாளர்களின் ரசனை மாற்றத்தை அடிப்படையாக வைத்து ஒருவசதிக்காக 1. 1980--_ 1982¢, 2. 1982_1986 3. 1986_1989 இப்படி பிரித்து பார்க்கலாம்.
1..1980--_ 1982¢, பொற்காலத்தின் நீட்சி.
தமிழ் சினிமாவின் பொற்காலம் என வகைபடுத்த முடியுமானால் அத்னை 1977 லிருந்து 82க்கு இடைப்பட்ட காலமாகத்தான் கருத முடியும்.துரதிர்ஷ்ட வசமாக இக்கட்டுரை 80க்கு பிறகான படங்களை பற்றிமட்டுமே அலசவேண்டிய நிர்ப்பந்தங்களை கொண்டிருப்பதால் 80க்கும் 82க்கும் இடையிலான் காலத்தை பொற்கால்த்தின் நீட்சி என்றுகூட குறிப்பிடலாம்.முந்தய மூன்றுவருடங்களில் இருந்த எழுச்சி அலை இக்காலக்கட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தனது சரிவை நோக்கிய பயணத்திற்கு ஆட்படுத்திக்கொண்டாலும் சில குறிப்பிடும்படியான படைப்புகளும் வெளியாகின.இவற்றுள் 1980ல் வெளியான ஒரு த்லை ராகம் கிட்டதட்ட பதினாறுவயதினிலேவுக்கு சரிசமமான பாதிப்பை த்மிழ்சூழலில் உண்டாக்கி திரையுலகிலும் பார்வையாளர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அலையை உருவாக்கியது .நாயகனை புறக்கணித்த இந்த கதையிலும் உள்ளும் புறமுமாக சமூகம் அசலாக உரித்துவைக்கப்பட்டிருந்தது.பெல்பாட்டம்,பாபி காலர், அதிரும் டிரம்ஸ் வாத்தியங்கள,வேலையில்லாதிண்டட்டம்¢ என அக்காலத்திய இளஞர்களின் உல்கத்தை முதல் முறையாக இப்படம் திரையில் வெளிப்படுத்தியிருந்த காரணத்தால் அரங்குகளனைத்தும் திருவிழாபோல களைகட்ட துவங்கின.படத்தில் பாதியில் வந்து போன ஒரு தாடிக்கார இளைஞர்தான் இயக்குனர் என்பது பிற்பாடு தெரியவந்தது.அடுத்த பத்து வருடங்களில் தமிழ்சினிமாவில் அவர் குச்சி சுழற்றி கமர்ஷியல் வீடுகட்டியது தனிக்கதை..இப்ப்டத்தினை தொடர்ந்து நகரத்து இளனஞர்களின் பாடுகளை கதைக்களனாக கொண்டு பாலச்சந்தரின் இயக்கத்தில் வறுமையின் நிறம் சிகப்பு1980 ராபர்ட் ராஜசேகரின்பாலைவனச்சோலை 1981 போன்ற படங்கள் எதார்த்தத்துடன் காவிய சோகத்தை பிரதிபலித்தன.அதே சமயம் இதன் தொடர்ச்சியாக இதே ப்ரச்னையை மயமாக கொண்டுபாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் ¢ அவ்ருக்கு தோல்விபடமாக அமைந்து அதுவரையிலான அவர்து தீவிரத்தனமையிலிருந்து விலக்கி இளைஞர்களை வைத்து ஜனரஞ்சக படத்திற்கு தாவ வைத்தது.தனது குருநாதர் பாரதி ராஜாவின் மூலமாக புதியவார்ப்புகள்1979 படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான பாக்யராஜ் சுவர் இல்லாத சித்திரங்கள் 1979, ஒரு கை ஓசை 1980 பாமா ருக்மணி போன்ற தனது துவக்க கால படங்களின் மூலம் அக்காலத்தில் பலரது கவனிப்புக்கு ஆளானர்.எப்படி இந்தி பார்லேல் சினிமாவில் நாயக அம்சமே இல்லாத அமே¢£ல் பலேகர்,நஸ்ருதீன்ஷா போன்ரவர்கள் நாயகர்களாக வலம் வந்தார்களோ தமிழிலும் அது போல சந்திரசேகர்,பிரதாப் போத்தன,விஜயன்¢ போன்றவர்கள் இக்காலகட்டத்தின் பெரும்பாலான படங்களில் நாயகனாக நடித்து பெரும் வரவேற்பை பெற்ற்னர். மேலும்¢ நாயகர்களை பொலவே இக்காலத்தில நாயகிக்கும் புற அழகு இரண்டாம் பட்சமாக கருதப்பட்டது ஷோபா,சுஹாசினி யை தொடர்ந்து சரிதாபோன்றவர்களும் நாயகிகளாக அறிமுகமாகி ரசிகர்களின் இத்யங்களுக்குள்நீங்கா இடம் பிடித்தனர்.பிரதாப் நடிப்பில் வெளியாகி தேசியவிருதுகளை பெற்ற மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே, 1980 பாலுமக்ந்ந்திராவின் மூடுபனி,1980 போன்றவை தமிழ் சினிமாவின் அந்தஸ்தை உலகத்த்ரத்திற்கு அழைத்து சென்றன என்றாலும் மிகையில்லை. மேற்சொன்ன 80க்கு முந்தைய படங்களில் இருந்த சமூக எதார்த்தம் இப்ப்டங்களில் இரண்டாம் பட்சமாக்கப்பட்டு பின்னுக்கு தள்ளப்பட்டு காட்சி ரூபமான ஒருவித கவித்துவ அழகியல் இதில் பிரதானமாக கையாளப்பட்டன.பாலுமகேந்திராவால் துவக்கப்பட்ட இந்த கவித்துவ காட்சி அழகியல் அசோக்குமார்,நிவாஸ(எனக்காக காத்திரு 1981)¢ போன்ற ஒளிப்பதிவாளர்களால் தொடர்ந்து கையகப்படுத்தப்ப்ட்டன. ஒளிப்பதிவுக்கு முக்கியம் தந்து இவர்கள் உருவாக்கிய இந்த அழகியல் அலைதான் பின்னாளில் மணிரத்னம் எனும் அழகியலின் இந்திய பிரதிநிதி உருவாக தூண்டுகோளாகவும் பாலமாகவும் அமைந்தது..காட்சி அழகியலின் வரவேற்பு காதல் படங்களுக்கும் தோரணம் கட்டதுவங்கியது. பாரதி வாசு இயக்கத்தில் வெளியான .பன்னீர் புஷ்பங்கள் 1981,படம் கடசிவரை தொட்டுக்கொள்ளாத காதலர்களை காண்பித்தது.ஏறக்குறைய இப்ப்டம் வெளியான அதேகாலகட்டத்தில் வெளியான பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை 1981,அத்ற்கு நேர்மாறாக பாலியல் துடிப்பு மிக்க காட்சி அமைப்புகளுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடதகுந்தது.தொடர்ந்து பல உன்னத காதல் படங்கள் வந்தாலும் அவ்ற்றுள் துரையின் இயக்கத்தில் வெளியான கிளிஞ்சல்கள் எதார்த்த பின்புலத்துடனான காத்லை சித்தரித்து மக்கள் மனத்தை கொள்ளையடித்தது. இது போன்ற காதல்படங்களின் திடீர் வருகைக்கு பால்சந்தரின் இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி சென்னையில் சக்கைபோடு போட்ட மரோ சரித்ராவும் ஒரு காரணம். காதலை போலவே அக்காலகட்டத்தில் புரட்சிக்கும் ஒரு அதீத முக்கியத்துவம் சூழலில் வந்து சேர்ந்தது. மக்கள் ப்ரச்னைகளை பேசும் தண்ணீர் தண்ணீர்,1981,ஏழாவது மனிதன1982¢ சிவப்பு மல்லி 1982 கண்சிவந்தால் மண்சிவக்கும்1983 போன்ற படங்களுக்கு ம்க்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு தமிழ்சினிமாவில் எப்போதும் நிகழ்ந்திராத ஆச்சர்யமான ஒன்று.சட்டம் ஒரு இருட்டறை 1981மூலம் அறி¤முகமன இயக்குனர் எஸ் ஏ. சந்திரசேகர் தொடர்ந்து சட்டத்தை பின்புலனாக ஜொண்ட படங்களாக கொண்டுவந்தார்.அதே போல தொழில் நுட்பம்யையக்கம் போன்றவற்றில் ஆளுமை குறைவாக இருந்தாலும் வித்தியாசமான கதைகள் பல இக்காலத்தில் தொடர்ந்து வெர்றி தோல்வியை பொருட்படுத்தாது வந்துகொண்டிருந்தன என்பது இக்கால்த்தின் விசேஷம்.எச்சில் இரவுகள்,1982சுமை,1981போன்ற தீவிரத்த்னமை கொண்ட படங்களும்,எம்.ஏ.காஜா எனும் இயக்குனரின் லோபட்' ஜெட் ' படங்களும் இப்பங்களிப்பை செய்தன.
இப்படியாக எதார்த்தம் அழகியல்,காதல்,மற்றும் புரட்சியை பேசும் வித்தியாசமான படங்கள் முன்னூறாவது நாள் நானூறாவது நாள் என ¢தினத்தந்தியில் முழுப்பக்க விளம்பரங்களுடன் பட்டயை கிளப்பிக்கொண்டிருந்த அதே வேளையில் ரஜினி கமல் இருவரும் இதற்கு இணயாக கமர்ஷியல் வெற்றிகளை ஈட்டிவந்தனர்.1980ல் வெளியான கமலஹாசனின் குரு, மற்றும் ரஜினியின் பில்லா முரட்டுக்களகாளை போன்ற படங்கள் அபாரவெற்றியினால் தமிழ் சினிமாவில் எம்ஜி ஆருக்கு பிறகு மீண்டும் ஆக்ஷன் ஹீரோ யுகம் ஆரம்பம்மானது.மக்களை திருதிபடுத்தும் விதமான சண்டை மற்றும் கேளிக்கை நடன காட்சிகளின் திணிப்பு அதே யுகம் இப்போது வேறுவிதமான வடிவத்திற்கு மாறியிருந்தது.அழுத்தமான கதைபடங்களாக தந்து மக்கள் மனதில் நீங்காஇடம் பிடித்த நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் கூட தனது திரிசூலம்1979, அடைந்த இமாலய வெற்றிக்கு பிறகு லாரி டிரைவர் ராஜாகண்ணுவாக மாறி ஸ்ரீப்ரியாவுடன் சேர்ந்து கொண்டு வயதுக்கு மீறிய குத்தாட்டங்களை போடதுவங்கினார்கைப்படியான வணிகசினிமாக்கள் பெரும்பாலானவற்றில் ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீப்ரியா ஆகிய இருவர்மட்டும் ஜோடிகளை கைமாற்றிக்கொண்டு தொடர்ந்து நாயகிகளாகவலம் வந்தனர்.நகைச்சுவையில் சுருளிராஜனின் அங்க அசைவுகள் அர்ங்குக்களில் சிரிப்பலைகளை உருவாக்கின.புதுவரவுகளில் கார்த்திக் விஜயகாந்த் பிரபு ஆகியோர் டாக்கு பிடித்த்னர்.சண்டை முக பாவம் ஆகியவற்றில் ரஜினியை சாயலாக கொண்டு சட்டம் ஒரு இருட்டறை மூலம் பரபரப்பாக பேசப்ப்ட்ட விஜயகாந்த் கண்களில் மட்டுமல்லாது கருத்துகளிலும் சிவப்பு காட்டி பயமுறுத்தினார். .இத்துடன் 1979ல் வெளியான ஜெகன் மோகினி லஷ்மி பூஜை போன்ற டப்பிங் பேய்படங்கள்வேறு சக்கை போடு போட்டன.இப்படங்களின் பிரதான் நாயகியான ஜெயமாலினிதொடர்ந்து இரண்டுவருடங்களுக்கு தமிழ்கத்தின்மூலை முடுக்குகள்தோறும் அனைத்து சிகை அலங்கார கடைகள மற்றும் தையல் கடைகளின் ¢ சுவர்களில் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். .பின் ஒரு சுப யோக சுப தினத்தில் அவரது படம் கிழிக்கப்பட்டு அந்த இடத்தில் இன்னொரு புதிய நடிகை இடம் பிடித்தார்.அவரது போதையூட்டும் விழிகளும் உதட்டுசுழிப்பும் தமிழ்நாட்டையே ஒட்டு மொத்த்மாக தர்ம பரிபாலனம் செய்து வழிநடத்தியது. .வண்டிச்சக்கரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய சில்க் எனும் அந்த நடிகைக்கு குழந்தை மற்றும் குடும்பபெண்கள் வாலிபர்கள்,வயோதிகர்கள் மட்டுமல்லாது பராசரன் முதல் பராரி வரை வித்தியாசமெ இல்லாமல் ரசிகர்களாக இருந்தனர்.¢.அவரது காலத்தின் உச்சமாக இரண்டு படங்கள் வெளியாகின.இரண்டிலுமே நாயகன் கமலஹாசன்.1982ல் வெளியான இந்த இரண்டுபடங்களுக்கும் தெரிந்தொ தெரியாமலோ பலஒற்றுமைகள் இருந்தன.அதில் ஒன்று சகலகலாவல்லவன் ,மற்றொன்று மூன்றாம்பிறை.கமர்ஷியல் பாதி கலைபாதியாக தடுமாறிக்கொண்டிருந்த கமல்ஹாசனின் அன்றைய மனோநிலையை இப்படங்களின் ஒருசேர வெற்றி உறுதிப்படுகிறது.ராஜபர்வை1981 எனும் இக்காலத்தின் அழகான தோல்வி கமலிடம் உருவாக்கிய அழுத்தம் மூலமாக வெளிவந்த படம் சகலகலாவல்லவன்.ஒருவேளை சகலகலாவல்லவன் முன்பாக வந்து மூன்றாம்பிறை 1982அடுத்தாக வெளியாகியிருந்தால்கூட தமிழகம் ஓரளவுமாற்றத்தை அனுபவித்திருக்கும் ஆ£னால் துரதிர்ஷ்டவசமாக பிப்ரவரியில் மூன்றாம்பிறை உருவாக்கிய மகத்தான அலையை அடுத்து ஆகஸ்டில்வெளியான சகலகலாவல்லவனின் வெற்றி தவிடுபொடியாக்கியது என்பதுதான் உண்மை.கலர்கலாரன ஆடைகள்ஜிகினாசெட்டுகள் பாட்டு கூத்து பைட்டு என புதிய கமர்ஷியல் சூத்திரம் உருவாக்கப்பட்டு எதார்த்தம் அழகியல்,போன்ற வார்த்தைகள் தமிழ்திரை யுலகிலிருந்து ஓடஓட விரட்டியடிக்கப்பட்டன.
2. 1982_1986. டிஸ்கோ யுகம் 82 ஆம் ஆண்டில் வெளியான படங்களின் பட்டியலைபார்க்கும்போது தமிழ்சினிமாவின் காட்சிமாற்றத்தை நம்மால் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.கமர்ஷியல் காதல்படங்கள் என்று ஒட்டு மொத்த்னாக இக்காலகட்டத்தில்வெற்றிபெற்¢ற படங்களை அடையாளப்படுத்த முடியும்.தூறல்நின்னு போச்சு,1982,டார்லிங் டார்லிங்1982, என பாக்யராஜின் இரண்டுபடங்கள் வரிசையாக வெர்றொன.தூறல் நின்னு போச்சு வெளியானபோது அப்படத்தில் வரும் நாயகனை போல கழுத்தில் மப்ளர்சுற்¢றிக்கொள்வது இளைஞர்களிடம் பேஷ்னாக இருந்தது.பெல்ஸ்பெல்பாட்டம் போய் ¢ பின்பக்கம் நாய்காதுவைத்த பாக்கெட்டுகளுடன் நேரோ பேண்டுகளுடன் க்மலஹாசன் தன் சட்டம் சவால் பொன்ற படங்களில் உலாவந்தார்.அவரது தூக்கிவாறப்பட்ட ஹேர்ஸ்டைலுக்கு டிஸ்கோ என பெயர் சூட்டப்ப்ட்டது.அவர் சகலகலாவல்லவனில் ஆடிய ஆட்டத்தை அனைவரும் டிஸ்கோ நடனம் என அழைத்துமகிழ்ந்தனர்.இந்தகலாச்சரத்தின் மூழு பிரதிபிம்பமாக கமலஹாசன் திகழ்ந்தார்.பெண்களை போல பாதிகைகள்வெளித்தெரியும் மெகாஸ்ல¦வ்ஸ் டி.ஷர்ட்டும் ஜீன்ஸுமாக் பெரும்பாலான நாயகர்கள் வலம் வந்தனர். இயக்குனர்களான பாரதிராஜா பாக்யராஜ் போன்றவர்கள் கூட இந்த வகைஆடைகளை அணிந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து மகிழ்ந்தனர்.சொல்லி வைத்தார்போல பல்புகள் அணைந்து அணைந்து எரியும் ஜிகினாசெட்டுகளுடன் கூடிய நடன காட்சிகள் கமர்ஷியல் சூத்திரங்களில் ஒன்றாக இடம்பெற்றது.இந்தியில் வெளியான டிஸ்கோ டான்சரை தொடர்ந்து தமிழில் ஆன்ந்த்பாபுவின் ரப்பர் நடனத்துடன் பாடும்வானம்பாடி எனும் படம் மூழ்வதும் டிஸ்கோவை மையாக கொண்டு வெளியானது.ஆனந்த்பாபுவின் இந்த புதிவித நடனத்தை கமலஹாசன் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ஆனாலும் அந்தபடம் மிகப்பெரியவெற்றியை பெற்றது.சட்டம்,சவால்,வாழ்வேமாயம் தூங்காதே தம்பி தூங்காதே ¢என தொடர்வெர்றிகளைதந்துகொண்டிருந்த கமல் அவ்வப்ப்போத் இந்திபாஷைக்கும் சென்று நடனமாடிவந்தார்.ரஜினியின் வெற்¢றிகாலமாற்றங்களுக்கு அப்பாற்ப்பட்டதாக இருந்தது.பாயும் புலி தாய்வீடுதங்க மகன் அடுத்த வாரிசு என அவரும் தன் பங்குக்கு டிஸ்கோசகிதம் சண்டையும் போட்டுவந்தாலும்மூன்றுமுகம் நல்லவனுக்கு நல்லவன் எங்கேயோ கேட்ட குரல் புதுக்கவிதை நெற்றிக்கண் போன்றவித்தியாசமான கதையம்சம்கொண்ட கமர்ஷியல்சண்டைபடங்களி¢லும் நடித்து சூப்பர்ஸ்டாராக தொடர்ந்து ஜொலித்தார்.கமலஹாசன் கூட எனக்குள் ஒருவன், போன்றதோல்விபடங்களை சந்திக்கவேண்டியிருந்தது ஆனால்ரஜினியின் எந்த படத்திற்கும் தோல்வி முகம் காட்டவில்லை.ஒரு புறம் கமல் ரஜினியின் வணிகசூத்திரங்களுடனானபடங்கள் தொடர்வெற்றி பெற்றுக்கொண்டிருந்த இதே வேளையில் பாலுமகேந்திராவின் கோகிலா கன்னட படத்தின் மூலம் அறிமுகமான ஒருநடிகரின் வருகை தமிழ்ச்சூழலை ஒரு ஆச்சர்யமான பாதிப்புக்கு உள்ளாக்கியது.சொல்லிவைத்தார் போல அவர் நடித்த அனைத்துபடங்களும் தொடர்ந்து வௌ¢ளிவிழாபடங்களாகவே அமைந்தன.அவர் மேடையில் மைக் பிடித்து பாடுவதில் தமிழ் கூறும் நல்லுலகம் அப்படி என்ன அதிசயத்தை கண்டு வியந்ததோ தெரியவில்லை.சொல்லி வைத்தார் போல சிம்பாலிக்காக பயணங்கள் முடிவதில்லை1982, என்பதில் ஆரம்¢பித்த நடிகர் மோகனின் மைக் பயணம் கோபுரங்கள் சய்வதில்லை,இளமை காலங்கள்,உத்யகீதம்,இத்யகோயில்,விதி,குங்குமசிமிழ்,தென்றலே என்னை தொடு மெல்லதிறந்தது கதவு பிள்ளை நிலா என தொடர்ந்து சிக்ஸர்மழைகளாக பொழிந்துதள்ளியது.ஆர்.சுந்தர்ரராஜன் ,மணிவண்ணன்,கே.ரங்கராஜ,ம்னோபாலா¢ போன்ற இயக்குனர்கள் இவ்வகைபடங்களின் இயக்குனர்களாக பிராகாசித்த்னர்.உறுத்தாத ஒரு காதல் கதை,ப்ளஸ் கவுண்டமணி செந்தில் காமெடி ப்ளஸ் இளயராஜாவின் ஐந்து அல்லது ஆறுபாடல்கள் இது தான் இவர்களது பார்முலா.பாலுமகேந்திரா, மகேந்திரன் படங்களின் மிச்சசொச்ச மென்னுனர்வுகளின் நீட்சியாக இருந்த இவ்வகைபடங்களில் கோவைதம்பி எனும் தயாரிப்பாளர் 'கொடிகட்டி 'பிராகாசித்தார்..மேற்சொன்ன அனைத்துபடங்களின் பாடல்களுமே வெற்றி எனும்வார்த்தைகளைக்கடந்து தமிழ்ர்களின் வாழ்வோடு இரண்டறகலந்து இன்றும் பலரேடியோ சேனல்களின் மூலம் இரவு நேர தமிழக்த்தை தாலாட்டிக்கொண்டிருக்கின்றன.
இந்திய அரசின் பொருளாதாரகொள்கை யில் உண்டான மாற்றத்தின் காரணமாக தமிழ் நாட்டுக்குள் வந்த திரைப்ப்டங்களில் சுசுகி யமாகா போன்ற பைக்குகள் தமிழ் சினிமாவுக்குள்ளும் ஓடத்துவங்கின.¢ அதிலும் முதன் முதல் எனும் பெருமையை கமல் புன்னகை மன்னன் மூலம் ¢¢ தக்க வைத்துக்கொண்டார். .தொடர்ந்த அவரது விக்ரம் ஒரு தோல்விபடமானாலும் அது காலமார்றத்தை பிரதிபலிப்பதில் முக்கிய பங்காற்றியது.கமலின் காக்கிசட்டையில் த்கடுதகடு என பேசிய சத்யராஜ் எனும் வில்லன் நடிகர் ரசிகர்களிடையே மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கினார்.தூர்தர்ஷ்னில்ல் அப்போது வெளியான அவரது பேட்டி அவரை காலத்தின் பிம்பமாக மக்களிடையே உயர்த்தியது. காதல் ஓவியம்1982 படத்திற்கு பிறகு வாலிபமே வா வா1982 என தடுமாறிய பாரதிராஜா மண்வாசனை 1983முதல்மரியாதை1985 கடலோரகவிதைகள்1986 எனும் மூன்று அழகான முத்துக்களைதந்து இரண்டவதுரவுண்டிலும் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்தார். பாக்யராஜின் சிஷ்யரான பாண்டியராஜன் கன்னிராசி ஆண்பாவ்ம் என ஒரே வருடத்தில்(1985) இரண்டு ஹிட்டுகளை தந்து பரபர்ப்பை உண்டகினர்.அம்பிகா ராதா சகோதரிகளுக்குள் கனவுகன்னி யுத்தம்நடந்தது உடன் இப்போட்டியில் பிற்படு ரேவதியும் சேர்ந்துகொண்டார்.¢எப்போதும் போலராதிகா சுகாசினி ஆகியோர் தங்களுக்கேற்ற பாத்திரத்தில் முத்திரைகளை பதித்தனர். இக்காலட்டத்தில் திடுமென பெருகிய வீடியோ எனும் புதுவரவு பலரையும் பயமுறுத்தியது.முந்தானை முடிச்சு1983 இக்காலக்கட்டத்தின் மிகப்பெரிய வெற்றிபடமாக அமைந்தது.இப்படத்தில் இடம்பெற்ற முருங்கைக்காய் வைத்தியம் ம்க்களை பெருமளவுபாதித்து .பின் முருங்கைக்காய் தமிழ்நாட்டின் குழுவுக்குறி யாகவும் மாறிப்போனது பூவிலங்கு படத்தின் மூலம் தமிழுக்கு இன்னிமொரு கறுப்பு நடிகராக முரளிவந்தார். சிவக்குமார் த்ண்டிக்கப்பட்ட நியாயங்கள்,நான்பாடும் பாடல்,தீர்ப்புகள் திருத்தபடலாம்,ஒரு இந்திய கனவு போன்ற படங்களின் மூலம் தனது மூன்றாவது இன்னிங்ஸை தொடர்ந்து கொண்டிருந்தார்.கே.பாலசந்தரின் இயக்கத்தில் இக்காலகட்டத்தில் உருவான சிந்துபைரவி இசை தமிழ் இசைக்கு கவுரவம் தந்தது.சில தோல்விகளுக்கு பாலசந்தருக்கு மீண்டும் வெற்றியையும் புகழையும் தந்த படம் இது.இவைகளல்லாது நான்குவருடங்களுக்கு முன்பிருந்த எதார்த்தவகைபடங்களில் ஒன்றுகூட த்லைகாட்டவே இல்லை என்பதுதான் ஆச்சர்யபடத்தக்க நிகழ்வு. அதே போல பாரதிராஜா மகேந்திரன் பாலுமகேந்திரா போன்ற சென்றத்லைமுறையின் காட்சி மொழி அறிந்த படைப்பாளுமை மிக்க இயக்குனர்கள் அவர்களுக்கு பின் தோன்றவே இல்லை.அந்த குறை 'மவுன ராகம'¢ படத்தின்மூலமாக தீர்ந்தது,அத்தோடு தமிழ் சினிமாவில் புதியமாற்றங்களின் வரத்தும் நிகழதுவங்கியது.
03.1986-_1989 துவங்கியது தொழில்நுட்ப அலை.
அது ¢ வரை திரைப்படக்கல்லூரி என்றால் அது எங்கிருக்கிறது என்றுகூட தெரியாத் தமிழ்ர்களுக்கு அத்ன் முகவரியை சொல்லும் விதமாக 86ல் ஊமை விழிகள் வந்தது.முழுவதும் கல்லூரிமாணவர்களால் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தன் முன் அமர்திருந்த பார்வையாளர்களின் அதுவரையிலான தி¢ரை அனுபங்களையெலாம் ஒரே நாளில் ஓரங்கட்டி அவர்களை நவயுகத்தின் மனிதர்களாக புதுப்பித்தது. .தூரத்து இருட்டில் ஒரு புள்ளியாக வந்து பின் அதே ஷாட்டில் அருகாமையில் ஒரு மேட்டிலிருந்து வரிசையாக கார்களின் ஹெட்லைட் வெளிச்சம் சரமாரியாக வந்து பெரும் இரைச்சலுடன் கடந்து போகும் காட்சியின் போது தமிழ்நாடு முழுவதும் பட்டிதொட்டி அரங்குகளில் கூட கைதட்டல் அதிர்ந்தது. அது போல படத்தில் இடம்பெற்ற பரபரப்பான காட்சியொன்றில் இரும்¢புகதவு திறக்கும் க்ரீச் சத்தம்,கோச்வண்டியின் சலங்கை அதிரும் தனித்தனயான சத்தம் போன்றவற்றை அதுவரை ஆங்கிலபடங்களில் மட்டுமே அனுபவித்திருந்த மக்களுக்கு அக்ண்ட திரையில் இப்ப்டம் புது அனுபவத்தை உருவாக்கி கொடுத்தது.பாடல்களின் வரிகள் முதற்கொண்டு பாடல்பதிவு இசை என அனைத்திலுமே புதிமை அலையை ப்ரவ விட்ட இப்படத்திற்கு பின் குறை காலம் ஆபாவாணன் என்ற பெயரே தமிழர்களுக்கு மிகப்பெரிய பிரமிப்பையும் கிளர்ச்சியையும் உண்டாக்கிதந்தது...விஜயகாந்த இறுதியாக தனக்கான பாணியை இப்படத்தின் மூலம் கண்டுகொண்டார். ¢ க்கு இப்படி திடுமென மாறிய த்மிழ்மக்களின் ரசனைக்கு சரியான தீனியாக அமைந்தது அடுத்தாதாக வந்த மவுன ராகம்.படத்தின் இயக்குனரான மணிரத்னம் ஏற்கனவே பகல் நிலவு இதய கோயில்.போன்ற படங்களின்மூலம பரவலாக தமிழ்நாட்டில் தலைகாட்டியிருந்தாலும் தான் ஸ்ரீதர் பாரதிராஜா மகேந்திரன் பாலுமகேந்திரா வரிசையிலான கவித்துவ அழகியல் இயக்குனர் என்பதை இப்ப்டத்தில்தான் அழுத்தம் திருத்தமாக முத்திரையை பதித்திருந்தார்.அதிகம் பேசாத இப்ப்டத்தின் நாயகனான மோகன்,அதிகம் பேசும் நாயகி ரேவதி, இளமைதுள்ளும் கார்த்திக்க்கின் உடல் மொழி மற்றும் உரையாடல் என அனைத்துமே மேட்டிமைபாவனைகளுடன் தமிழ் ரசிகர்களுக்கு ஓருவித அன்னியத்த்ன்மையை உணர்த்தியபோதும் அத்ன் வசீகரத்தில் அனைவரும் தங்களை இழந்த்னர் என்பதுதான் உண்மை.¢ இப்பட்ம் பார்த்துவிட்டு வெளியேவரும் இளைஞர்கள் பலரும் தங்களை கார்த்திக்காக உணர்ந்து ப்டத்தில் அவர் பேசுவதை போல சந்திரமவுலி.. மிஸ்டர் சந்திரமவுலி என கையை உய்ரே தூக்கி கூவிக்கொண்டனர். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவிலிருந்த கவர்ச்சியும் பில்டரின் ஜாலமும் அனைவரையும் வசீகரித்தது.கலை இயக்குனர் என ஒருவர் திரைத்துறையில் இருக்கிறார் என்பதை இப்ப்டத்தின் மூலம் தோட்டாத்ரணி கோடம்பாக்கத்திற்கு உணர்த்தினார்.இதேகூட்டணியின்மூலம் அடுத்த ஆண்டே வெளியான நாயகன் காட்சியமைப்பு மற்றும் படப்பதிவு படத்தொகுப்பு என அனைத்து வகையிலும் ஓரளவு உலகத்தரத்தை நெருங்கியது.உடை,அலங்காரம் போன்றவையின் முக்கியத்துவம் இப்படத்தின்மூலம் அங்கீகாரம் பெற்றது.படத்தில் சிறுவயது கமலஹாசனின் தழும்பு வளர்ந்த நிலையிலும் காணப்பட்டதை கவனித்த பார்வையாளர்கள் கலைக்கு உண்மையாக இருந்த இயக்குனரின் திறமையை கண்டு வியந்தனர்.என்றாலும் பிற்பாடு இத்த்ரைப்ப்டம் பிராண்டோ நடித்து 72ல் வெளியான காட்பாதர் படத்தின் ¢ தழுவல் என தெரியவந்தபோது அதன் மீதான மயக்கங்கள் நீங்கியது என்றாலும் மணிரத்னத்தின் மிகச்சிறந்த படமாக இன்றுவரை மதிப்பிடப்படுவது நாயகன் மட்டுமே.தொடர்ந்தவரது அகனிநட்சத்த்ரம் ,இதயத்தை திருடாதே போன்றபடங்கள் இளைஞர்களை சுண்டி இழுத்தன. இப்படங்களில் அழகும் இளமையுமான நாயகிகள் சிகரட்பிடிப்பதும் 'ஓடிப்போலாமா 'என துணிச்சலாக ஒரு ஆணைபார்த்து கேட்பதும் கலாச்சா¢ர அதிர்ச்சிகளை உண்டாக்கி மதிப்பீடுகளை கலைத்துபோட்டன.அதேசமயம் தமிழகத்தின் சாதாரணமனிதனுடைய வாழ்வுக்கும் இத்திரைப்படங்களுக்குமிடையிலான இடைவெளி பாரதூரமானது¦ இப்பபடங்களை பார்ப்பதற்கு தியேட்டருக்கு கையில் மெழுவர்த்தியுடன்தான் போகவேண்டும் என பத்திரிக்கைகளும்¢¢ வெகுஜனமக்களும் தொடர்ந்து பகடி செய்தனர்.அதேசமயம் அக்னிநட்சத்திரத்தில் வரும் ஒருபாடல்காட்சியில் கடற்கரை மணலில் கன்னத்தில் ஓட்டிக்கிடக்கும் மணல் துகல்களுடன் கூலிங்கிளாஸ் அணிந்தபடிநாயகி நிரோஷா திரும்பிபடுக்கும் ஒரு க்ளோசப் ஷாட்டுக்குக்காக அரங்கமே கைதட்டி மகிழ்ந்த சம்பவங்களும் நடந்து கொண்டிருந்தன.அதேபடத்தின் இன்னொரு பாடலில் இளஞர்கள் ரயில்பெட்டிகளை தாண்டும் லோஆங்கிள் ஷாட்டுக்கும் நகர அர்ங்க்குகளில் ரசிகர்களின் விசில் பறந்ததை மறப்பதற்கில்லை.தமிழ்நாட்டில் பாலுமகேந்திராவுக்கும் பி.சி.¢¢ ஸ்ரீராமுக்கும் கிடைத்திருக்கும் இத்தகைய கைத்ட்டல் பெருமை இந்தியாவின் மற்ற மாநில ஒளிப்பதிவாளர்கள் எவருக்கும் கிடைத்திருக்காது என அடித்துக்கூறலாம்.பி.சி.ஸ்ரீராம் மணிரத்னம் பிரிந்த அடுத்தபடமான அஞ்சலி தோல்விபடமாக அமைந்த போது இதுவும் கூட ஒரு காரணமாக மக்கள் கதைக்கப்பட்டது தனிக்கதை.இப்படியான தொழில்நுடப படங்களுக்கான வரவேற்பு ஒரு புறமிருக்க இன்னொருபுறம் வழக்கமான கமர்ஷியல் மசாலா படங்கள் வெளுத்துவாங்கிக்கொண்டிருந்தன.மேற்சொன்ன படங்களுக்கு தன் கணிசமான பங்களிப்பை செலுத்தியிருந்த இளையராஜா மசாலாபடங்களுக்கும் பாரபட்சம் சுருதி பேதமில்லாமல் தன் மடை திறந்த இசைவௌ¢ளத்தை வழியவிட்டார்.இக்காலகட்ட்த்தின் முடிசூடாமன்¢னர்களாக ரஜினிகாந்த் இளையராஜா இருவருமே இருந்தனர்.படிக்காதவன்,மிஸ்டர் பாரத், மாவீரன் வேலைக்காரன் மனிதன்,குரு சிஷ்யன் தர்மத்தின் தலைவன் ராஜாதி ராஜா, ராஜாசின்னரோஜா மாப்பிள்ளை, என வெற்¢றிவரிசை ஏற ஏற ரசிகர்களி¤ன் எண்ணிக்கை படங்களின் வசூல் ஆகியவை ரஜினியின் படங்களுக்கு மழைக்கால ஏரி போல ஏறிக்கொண்டே யிருந்தன. ராஜாதிராஜா படம் வெளியான போது ஆக்ஷன் ,காமெடி போன்ற இமேஜ்களுடன் வசீகரமான கிளாமர் இமேஜும் சேர்ந்து கொண்டு இளைஞர்களை அலைக்கழித்த்து.அது நாள்வரை கமலிடம் இருந்துவந்த பேஷன் முன்னொடி என்ற இமேஜ் இப்படத்தின்மூலம் ரஜினிக்கு தாவியது. இதற்குமுன்பே மாவீரன் படத்தில் ரஜினியும் அம்மன் கோயில் கிழக்காலே,படத்தில் விஜயகாந்தும த்தமது ஹேர்ஸ்டலை நேர்வகிடு எடுத்து புதிய தோற்றத்தில் வந்து விட்டிருந்தாலும் ராஜாதிராஜா படத்தில்தான் பங் எனப்படும் இந்த புதுவித ஹேர்ஸ்டைல் மக்களிடையே தீயாக பற்றிபரவியது.ரஜினியின் இயல்பான வழுக்கை போல பலர் தாங்களாக ப்ளேடால் முன்நெற்றி மயிரை எடுத்துக்கொண்டு கிறுக்குதனமாக அலைந்தனர்.இதே படத்தில் ரஜினி அணிந்துவந்த தொளதொள பேகிபேண்டு தமிழ் இளைஞர்களின் தேசிய உடையாக மாறியது. முதன் முதலாக நடிகரின்ரசிகர்களுக்கென புதியதாக பத்திரிக்கை வந்ததும் இக்காலத்தில்தான் ராஜபாளையத்திலிருந்து வெளியான ரஜினிரசிகன் எனும் பத்திரிக்கையின் வெர்றியைகண்டு பிரபலபத்திரிக்கைகள் அத்னை அதிக விலை கொடுத்துவாங்கி தானே வெளியிடத்துவங்கியது.நடிகர்களின் போஸ்டர்களுக்கு மதிப்பு கூடியது.¢ இக்காலகத்த்தில் மக்களின்ன் வாழ்வும் சினிமாவும் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து காணப்பட்டது.¢ . அதுவரை ரஜினியோடு கமர்ஷியல் படங்களில் சரிக்குசரியாக போட்டியிட்டு வந்த கமல் நாயகன திரைப்படத்திற்கு பிறகு தனது ¢ பார்வையை பேசும்படம்1987 சத்யா 1988என பரிசோத்னைமுயற்சிகளின் பக்கம் திருப்¢பிகொண்டார்.இக்காலகட்டத்தில் தமிழ் பத்திரிக்கைகளுக்கு ஆஸ்கார் என்ற வார்த்தை புழங்க துவங்கியது.தானே எழுதிய கச்சிதமான திரைக்கதையுடன் காலத்துக்கு ஏற்ப தொழிநுடப கூட்டணியுடன் அபூர்வ ச்கோத்ர்ர்களில் மீண்டும் கமர்ஷியலில் களமிறங்கிய கமல் வெற்¢றிவாகைசூடினார்.
இவர்களை தவிர பாக்யராஜ் ,டி ராஜெந்தர்., சத்யராஜ்,பிரபு,முரளி அர்ஜுன் போன்றவர்கள் தத்தமது பாணியில் ¢ அவ்வபோது ஹிட்டுகளை கொடுத்துக்கொண்டிருந்தாலும் மவுனராகத்தின்மூலம் இரண்டாவது ரவுண்டுவந்த கார்த்திக் இக்கால்த்தின் இளவரசராகவே கவுரவிக்கப்பட்டார்.நல்ல குரல் அலட்டலான ந்டிப்பின்¢ மூலம் ரகுவரன் குண்சித்திரபாத்திரங்களில் பிரகாசித்தார்.பாக்ய்ராஜின் உதவியாளராக இருந்து பின் அதேபாணியில் இயக்கம் மற்றும் நாயகனாக அறிமுகமான பார்த்திபன் தன் ¢ புதியபாதை 1989 மூலம் தமிழுக்கு முதல் முறையாக ¢ ¢ஒரு லும்பனை நாயகனாக அறிமுகப்படுத்தினார்.இதேவருடத்தில் வெளியான பாசில் இயக்கத்தில் வெளியான வருஷம் பதினாறு, தொழில் நுடபமும் நல்ல திரைக்கதையும்¢ இணைந்த நேர்த்தியான ஒரு வணிகசினிமாக்களுக்கு பாதை போட்ட்¢து.¢ இந்த பாதையில் பிற்பாடு கிழக்குவாசல,கேளடிகண்மணி, புதுவசந்தம், போன்ற திரைப்படங்கள் ஆண்டுக்கு ஒன்றாக தொடர்ச்சியாக வந்து ஆச்சர்யத்தை உண்டாக்கின.
.இதேசமயத்தில் தமிழில் இன்னொரு அதிசயம் மெல்ல அர்ங்கேறிக்கொண்டிருந்தது. கிராமத்துவௌ¢ளந்தி மனித்னாக ஓரிரு படங்களில் நாயகனாக நடித்த ராமராஜன் எனும் நடிகரை துவக்கத்தில் அனைவரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை ஆனால்¢ மெல்ல நம்ம ஊரு நாயகன்,செண்பகமே செண்பகமே,எங்க ஊருபாட்டுக்காரன் என அவர் தொடர் வெற்¢றிகளாக குவிக்க குவிக்க ஒருபக்கம் த்யாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் மகிழ்ச்சிகடலில் திளைத்த்னர்.ஒருபக்கம் ரஜினிகமல் போன்ற நட்சத்திரங்கள் கோட்டும் சூட்டுமாக கலக்கிக்கொண்டிருக்க அதற்கு முற்றிலும் த்லைகீழாக வெறும் டவுசர்மட்டுமே அணிந்தபடி பாட்டுபாடி நயமாக மாட்டிடம் பால்கறக்கும் பாத்திரங்களில் நடித்து முன் சொன்ன் அநட்சத்திரங்களை விட அதிகமாகவும் கைதட்டல்களை ரசிகர்களிடம் பெற்று அனைவரையும் ஆச்சர்யபடுத்தினார்.ராமராஜனின் வெற்றியை கண்டு கோடம்பாக்கமே ஒட்டு மொத்தமாக மூக்கில் விரல்வைத்து வேடிக்கை பார்தத்து .மக்களின்தைந்த வினோத்ரசனை ப்த்திரிக்கையாளர்களையே ஆச்சர்யபடுத்தியது. ஒரு கட்டத்தில் அவர் அரசியலில்லும் குதிக்க ஆடுத்த்தாக வெளியாகவிருந்த படமொன்று அனைவரையும் மிகுந்த அளவில் எதிர்பார்க்க வைத்தது.இந்தபடத்தோடு இவர் காலி என அனைவரும் அந்தபடத்தின் ரீல¦சுக்காக காத்திருந்தனர். அப்போது வெளியான படம் தான் கரகாட்டக்காரன்.தமிழ் சினிமா அதுவரை இப்படி ஒரு வெற்றியை கண்டதில்லை..அதில் அதிர்ந்த ம்ரபான இசையானது தமிழ்நாட்டையே தொன்மங்களில் அதிரவைத்தது.க்ரகாட்டகாரனின் வெற்றிக்கு பிறகு ராமாராஜன் ரஜினிக்கு போட்டியா என்றுகூட சிலபத்திரிக்கைகள் எழுதுமளவிற்கு அன்று அவரது நிலை உச்சத்தில் கொடிகட்டி பறந்தது. உண்மையில் கரகாட்டக்காரனின் வெற்றி என்பதற்கு பின் பல உள்ளடுக்குகள் ஒளிந்திருப்பதை இன்றுவரை எவரும் கவனிக்கவில்லை.அவற்றுள் மிக முக்கியகாரணம் தமிழர்களின் மரபான அடையாளத்தை அது வெகுஜன ஊடகத்தின் மூலமாக மீட்டுருவாக்கம் செய்ததுதான.ஒரு சமூகத்தின் மூளை அடுக்குகளில் காலம்காலமாக படிந்திருந்த ஒரு ஓசைய்யை தன் இசையின் மூலம் தட்டி எழுப்பி அவனது உடலுக்குள் ஒரு களிப்பை ஏற்படுத்தியது.கங்கை அமரன் தெரிந்தோ தெரியாமலோ ராமராஜனுடன் சேர்ந்து இயக்குனராக பரிணமித்த இக்காலகட்ட திரைப்ப்டங்களில் தமிழ் அடையாளங்களை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தார்.கனகாவின் அசலான தமிழ் முகம் கரகாட்டகாரனில் பெருமளவு இத்னை சாத்தியபடுத்தி தந்தது.அமலா ¢ குஷ்பு,ரேகா,சீதாபோன்றவர்கள் இக்காலத்தின் டூயட்டுகளை பகிர்ந்துகொண்டனர். .பாரதிராஜாவுக்கு இக்காலக்ட்டம் ஒரு இறங்குமுகம் என்றுகூட சொல்லலாம் கமலஹாசனை வைத்து அவர் இயக்கிய கமர்ஷியல் படமான ஒரு கைதியின் டைரி வெற்றி படமாக அமைந்தாலும் அவருடைய தனித்த்னமையை அது முழுவதுமாக இழந்திருந்தது.பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் புதுபுது அர்த்தங்கள் அவருக்கு இடையில் ஏற்பட்டிருந்த தொய்வை சரிசெய்தன.எம் ஏ காஜாவின் தொடர்ச்சியாக இராம்நாராயணன் ஒரே ஆண்டில் பத்துபடங்களை மேஸ்திரி போல இயக்கி ஆச்சர்யபடுத்தினார்.இவரது சொல்லுக்கு குழந்தைகளும் பிராணிகளும் கட்டுபட்டு வேலைசெய்தன.இப்படியான சூழலில் இயக்குனர் பாலுமகேந்திரா மட்டும் வீடு1988 என்ற படு சீரியசான படத்தை இயக்கி தமிழில் வணிக சினிமாவுக்கு மா¢ற்றான ஒரு கலை முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
80 முதல் 89 வரையிலான மேற்சொன்ன இந்த மூன்று காலத்தையும் ஒன்றிணைத்து பார்த்து ஒரேவரியில் குறிப்பிடுவதாக இருந்தால் இந்த பத்துவருடங்களை இளையரஜாவின் யுகம் என ஒரே சொல்லில் அடை¢யாளப்படுத்திவிடமுடியும்.வணிக ரீதியான அவரது தொடர் வெற்றியை கடந்து திரைப்படம் எனும் ஊடகத்தின் மூலமாக அவர் உருவாக்கி பரவவிட்ட இசை அலைகள் எண்ணற்ற கோடி ¢ தமிழர்களின் மூளைக்குள் அவர்களுக்கு மட்டுமேயான நிலப்பரப்பை வரைந்து தந்திருக்கிறது.இது நாள்வரை உபரி உணவாக இருந்துவரும் சாஸ்திரிய இசை மற்றும் மேற்கத்திய இசையுடன் ¢¢,வலியோடும் வாழ்வோடும்கலந்த தொன்மங்களின் ஓசையையும் நிலப்ப்ரப்பின் இசையையும் ஒன்றிணைத்து அதனை திரைப்ப்ட பாடல்களின் வாயிலாக ஊட்டிதந்திருக்கும் அவர்து இச்சாதனை வேறெந்த மெ¢£ழியிலும் இதுவரை நடைபெறாதது.¢ இப்படியாக ஒரு மொழிசார்ந்த சமூகத்தின் ஆன்ம உணர்ச்சிகளுக்கு வடிகாலாக அவர்து இசை இருந்துவந்த காரணத்தினால்தான் இசை பற்றிய எந்த அறிவும் இல்லாத ஒருவன் கூட அவரது பெயரை திரையில்கண்டதும் கைதட்டி மகிழ்ந்தான். ஒரு நல்ல இலக்கிய படைப்பு மனித மனதினுள்¢ புகுந்து செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தையும் அவரது இக்காலத்திய திரை இசை பாடல்கள்¢ செய்து காட்டியிருக்கின்றன..அதிலும் குறிப்பாக காத்ல் ஓவியம்,சிந்துபைரவி , இத்ய கோயில்,முதல்மரியாதை,கரகாடட்க்காரன்,தாய் மூகம்பிகை போன்ற திரைப்படங்களின் ¢பாடல்கள்¢ மூலமாகவும்,நெஞ்சத்தைகிள்ளாதே,ஜானி,முதல்மரியாதை,மவுன ராகம்,நாயகன்,போன்ற படங்களின் பின்னணி இசை மூலமாகவும் அவர் செய்திருக்கும் இந்த சாத்னை ஆழமும் அடர்த்தியும் கொண்டது. இத்னை கடந்து பாரதிராஜா,மகேந்திரன்,பாலுமகேந்திரா,மணிரத்னம் ஆகியோர் தங்களது இயக்கத்தின் மூல்மாக தமிழ் சூழலுக்கு இக்காலத்தில் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்கின்றனர்.
¢1980 துவங்கி 1989 வரையிலான பத்துவருடங்களில் வெளியான ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில ¢சிலவற்றை காலமாற்றங்களுக்கு அப்பாற்ப்பட்டு விளங்கும் சிறந்த படங்களாக நான் இங்கே தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
1.நெஞ்சத்தை கிள்ளாதே,,2ஒருத்லைராகம.¢,¢3..தண்ணீர் தண்ணீர்4பாலைவன்சோலை 5பன்னீர்புஷ்பங்கள ,6கிளிஞசல்கள், 7மூன்றாம்பிறை, 8மண்வாசனை, 9மலையூர் மம்பட்டியான். 10,முதல்மரியாதை, 11கடலோரகவிதைகள. 12சிந்துபைரவி, 13வருஷம்பதினாறு, 14மவுனராகம், 15நாயகன் 16வீடு,¢ 17.புதியபாதை, 18கிழக்குவாசல்.
நன்றி : அகநாழிகை

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...